Friday 20 February 2015

சுகன்யா... 01


சுகன்யா சென்னைக்கு வந்து, அந்த அரசு அலுவலகத்தில் உதவியாளர் பதவியில் சேர்ந்து மூன்று மாதங்களாகிறது. முதல் ஒரு வாரம் தன்னுடன் சிறுவயதில் படித்த தோழியின் வீட்டில் தங்கி இருந்தாள். பின்னர் அவளுடைய தாய் மாமாவின் நண்பர் வீட்டு மாடிப் போர்ஷனுக்கு குடி வந்தாள். கீழ்ப் போர்ஷனில் வீட்டுகாரர் குடும்பம் வசித்தது. மாணிக்கம், ஓய்வு பெற்ற ஆசிரியர், தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர். இந்த மூன்று மாதத்தில் அவர் அதிர்ந்து பேசி அவள் பார்த்ததில்லை. மாணிக்கத்தின் மனைவி வசந்தி எப்போதும் சிரித்த முகம், அமைதியான பேச்சு என்று இருப்பவள். உடன் அவர்களது மகன் சங்கர் அவனுடைய மனைவி வேணி என சிறிய அளவான மகிழ்ச்சியான குடும்பம். அவர்களின் மகள் ராதாவுக்கு திருமணமாகி பெங்களூரில் வாசம். அவளுக்கு ஒரு பெண் குழந்தை. கணவன் அசோக் சாஃப்ட்வேர் எஞ்சினியர். மாடியில் ஏறியதும் சற்றே பெரிய அறை. உள்ளே நுழைந்ததும் இடப்புறத்தில் சமயலறை. எதிரில் பாத்ரூம் மற்றும் டாய்லெட். அறையின் வெளியே வந்தால் சிறிய பால்கனி. படுக்க கட்டில், உட்க்கார சிறிய டேபிள் மற்றும் சேர், துணிகளை வைத்துக்கொள்ள சுவரிலேயே பொறுத்தப்பட்ட மரத்தினாலான அலமாரி மற்றும் லாஃப்ட் என இருவர் தங்குவதற்கான எல்லா வசதிகளும் மாணிக்கம் செய்து கொடுத்து இருந்தார். தனது மகன் பெயரில் வாங்கி வைத்திருந்த காஸ் அடுப்பையும், இணைப்பையும் சுகன்யா உபயோகித்து கொள்ள அனுமதியும் கொடுத்திருந்தார். வாடைகை சிறிது அதிகம் என்றாலும், நல்ல மனிதர்களின் அரவணைப்பிலும், கண்காணிப்பிலும் தன் பெண் இருக்கவேண்டும் என்றும், மேலும் மாதத்திற்கு ஒரு முறை கன்யாவை பார்க்க வரும் போது அவளும் அங்கே அக்காடா என தங்க மிக வசதியான இடம் என்ற எண்ணத்திலும் அவள் அம்மா ஒரே காலில் நின்று அவளை அங்கே குடி வைத்துவிட்டாள்.

மாலையிலிருந்தே லேசாக தூறிக்கொண்டிருந்தது. வெளியில் சற்றே கனமாக மழை பெய்து ஓய்ந்திருந்தால் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. சுகன்யா கட்டிலில் படுத்துக்கொண்டிருந்தாள். கையில் இருந்த நாவலில் அவள் மனம் லயிக்கவில்லை. மணி பத்தை தொட்டுக் கொண்டிருந்தது. மனது ஒரிடத்தில் நில்லாமல் இங்கும் அங்குமாக அலை பாய்ந்து கொண்டிருந்தது. மாலையில் அவள் கண்ட காட்சி மனதில் மீண்டும் மீண்டும் தோன்றி அவளை அலை கழித்துக்கொண்டிருந்தது. மனம் அந்த காட்சியை திரும்பவும் ஒரு முறை அசை போடத்தொடங்கியது. அந்த காட்சியின் தாக்கம், அதனால் ஏற்பட்ட சுகம், இப்போதும் சுகன்யாவின் மார்பகங்களில் சூடு பரவியது. தன் முலை காம்புகள் மெல்ல மெல்ல விறைப்பதை உணர ஆரம்பித்ததும் அவளுக்கு அவள் மீதே வியப்பும், உணர்வுகள் தன் கட்டுப்பாட்டில் இல்லாததை உணர்ந்து சிறு கோபமும் வந்தது. என்ன செய்வாள்? அவள் வயதும், இளமையும், அவளை தூங்கவிடாமல் பாடாய் படுத்தின. அவள் முலைகளில் லேசாக தினவெடுக்க ஆரம்பித்து, இரு காம்புகளும் அவள் அணிந்திருந்த மெல்லிய காட்டன் நைட்டியை குத்தி கிழிப்பதை போல் நிமிரத் தொடங்கின. அவள் தவிக்க ஆரம்பித்தாள். அடி வயிற்றிலிருந்து பெருமூச்சு ஒன்று மேலெழுந்து ம்ம்....என்ற ஓசையுடன் வெளிப்பட்டது. அவளின் பருத்த தொடைகளிரண்டும் ஒன்றோடு ஒன்று உரசியதன் விளைவாக இனம் தெரியாத சுகத்தை அனுபவிக்கத் தொடங்கினாள். யாரவது தன்னை அழுத்தமாக கட்டிப் பிடித்துக் கொண்டால் சுகமாக இருக்கும் என அவள் மனம் ஏங்கத் தொடங்கியது. பக்கத்தில் இருந்த தலையனையை எடுத்து மார்போடு இறுக்கிக் கொண்டாள். சுகன்யா தலைவலி காரணமாக, அன்று மத்தியானமே அலுவலகத்திலிருந்து சீக்கிரமாக வீடு திரும்பினாள். சுற்று சுவரின் இரும்புக் கதவை மூடிக்கொண்டு வீட்டினுள்ளே நுழைந்தாள். மாடியிலிருந்த தன் அறையை நோக்கி படிகளில் ஏறத்தொடங்கினாள். கீழ் வீட்டின் வலப்புற அறையில் இருந்து "மெதுவாங்க.... வலிக்குது" கிசுகிசுப்பாக வந்த பெண்ணின் குரலோசை கேட்டு ஒரு நொடி திகைத்தாள்; தயங்கி அங்கேயே நின்றாள். ம்ம்ம்...ப்ச்ச்....ப்ச்ச்... முத்தமிடும் ஓசை. உடன் ம்ம்ம்ம்மாஆஆஆ முனகலுடன் மெதுவா.... மெதுவா.... என்று பெண் குரல் உள்ளே ஒலித்தது. அது வேணியின் குரல். வீட்டுச் சொந்தக்காரரின் மருமகள். கல்யாணமாகி ஒரு வருடமாகிறது. இன்னும் குழந்தை இல்லை. சுகன்யாவால் தன் அறையை நோக்கி மேலே செல்ல முடியவில்லை. உள்ளே எட்டிப்பார்க்க மனம் தூண்டியது. எட்டிப் பார்க்கலாமா வேண்டாமா? வெட்க்கத்தால் மனம் தவித்தது. யாராவது தன்னைப் பார்த்துவிட்டால் அசிங்கமாகிவிடும் என அதே மனம் அவளை எச்சரித்தது. மனதை கட்டுப்படுத்திவிட்டால் வாழ்க்கையிலே ஏது பிரச்சனைகள்? அந்த வயது... என்னதான் நடக்கிறதெனப் பார்ப்போமே என்று... மனச்சலனத்தால் அங்கேயே ஒரு நொடி நின்றாள். கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது! அறை சன்னல் சற்றே திறந்திருந்தது. சுகன்யா சுற்றுமுற்றும் தன் பார்வையை ஒரு முறை வீசினாள். தன் கால் செருப்பு ஓசை எழாமல் அடிமேல் அடிவைத்து சன்னல் அருகே சென்று உள்ளே பார்த்தாள். பொட்டுத்துணி இல்லாமல் சங்கரின் மடியில் வேணி படுத்து இருந்தாள். வரும் மே மாதத்துக்கு இருபத்தாறு வயாதாகிறது. தங்கத்தை உருக்கி வார்த்த நிறம் அவளுடையது. பார்ப்பவரை சுண்டி இழுக்கும் கண்கள், சிறிய ரோஜா நிறத்தை ஒத்த உதடுகள். கூரான மூக்கு, சற்றே பருத்த ஆனால் நிமிர்ந்த முலைகள், மாநிற முலைகளின்முடிவில் ஒரு ரூபாய் அளவில் கருத்த வளையங்கள், வளையங்களின் முனையில் ஊதா நிறத்தில் உப்பிய காம்புகள்....குறுகிய இடுப்பு, கொழுத்த பிருஷ்டங்கள். வலது புட்டத்தில் ஒரு குண்டுமணி அளவில் கருநிற மச்சம் அவள் பின்னழகுக்கு மேலும் அழகை கூட்டியது. கடந்த ஒரு வருடமாக தவறாமல் அனுபவிக்கும் தாம்பத்ய சுகத்தால் அவள் மேனியில் ஒரு பூரிப்பும், தளதளப்பும் தென்பட்டது. சங்கர், அவள் கணவன் குனிந்து, வேணியின் வலப்புற முலையை அழுத்தமாக முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவன் வலது கை அவளின் இன்னொரு முலையை வெறியொடு கசக்கிக் கொண்டிருந்தது. வேணி தன் கண்கள் செருக, கணவன் தன் மார்பில் கொள்ளும் உறவினால் உண்டான இன்ப வேதனையில் ம்ம்ம்ம்...மா... ம்ம்ம்ம்...மா...என்று முனகிக் கொண்டிருந்தாள். சுகன்யாவிற்கு குப்பென்றாகிவிட்டது. லேசாக தொடைகள் நடுங்க ஆரம்பித்தது. முகம் சிவந்து சூடாகியது, உதடுகள் துடிக்கத்தொடங்கியது. முதல் தடவை...இதுதான் முதல் தடவை...அவளின் இருபத்து மூன்று வயதில் இப்போதுதான் முழு நிர்வாணமான இரண்டு உடல்களை, தங்களை மறந்து... இந்த உலகை மறந்து...உடல் புணர்ச்சியில் ஈடுபட்டு காமத்தை சுவைக்கும் இருவரை பார்த்தது.... நடுங்கும் கால்களுடன் சுகன்யா தனது அறையை நோக்கி செல்ல ஒரு எட்டு எடுத்து வைத்தாள். பாழாய்ப்போன மனம் மீண்டும் அவளை தடுத்தது. மறுபடியும் சுகன்யா தனது பார்வையை சன்னல் வழியாக திருப்பினாள். இந்த உலகத்தின் ஓசைகள் எதுவும் அந்த தம்பதிகளுக்கு கேட்க்கவில்லை. சங்கர், வேணியை தன் மடியில் இருந்து தூக்கி தன் மார்போடு அணைத்து, அவள் செவ்வரி ஒடிய கண்களை தன் கண்களால் உற்று நோக்கினான். அந்த விழிகளில் தெரிந்த கூடலுக்கான ஏக்கம் சங்கரை அவள் அதரங்களை தேடத்தூண்டியது. தன் உதடுகளை வேணியின் உதடுகளில் அழுத்தமாக பதித்தான். அவன் மழையாய் பொழிந்த முத்தங்களால் அவளுடைய சிவந்த நிற இதழ்கள் வெளுக்க ஆரம்பித்தன. அவள் தன் கணவனை ஆரத்தழுவினாள். வேணியின் சதைப்பிடிப்பான மாங்கனிகளின் காம்புகள் சங்கரின் வெற்று மார்பை குத்திக் கிழித்துக் கொண்டிருந்தன. சங்கரின் கைகள் தன் அன்பு மனைவியின் பின்னழகை ஆசை வெறியுடன் தடவிக்கொண்டிருந்தன. சங்கரின் விரல்கள் மெதுவாக வேணியின் புட்ட பிளவில் கோலம் போடத்தொடங்கின. சுகன்யா தன் நிலை தடுமாற ஆரம்பித்தாள். அவள் மெல்லிய தேகம் காற்றிலாடும் கொடியைப் போலானது. அவள் முழு உடம்பையும் உஷ்ணம் தாக்கியது. அவள் மூச்சின் வேகம் அதிகமானது. சுகன்யாவின் அடிவயிறு அவர்களின் இன்ப விளையாட்டைக் கண்டு இறுகியது. ஜுரம் வந்தவளைப் போல சுகன்யா நின்றவாறே நெளிந்தாள். மந்திரித்து விட்ட கோழியைப் போல் செய்வதறியாது அவர்களின் காம விளையாட்டிற்கு சாக்ஷியாக அந்த ஜன்னலோரத்து இருட்டில் நின்றாள். சுகன்யா தன் தொடையிடுக்கில் பெண்மையின் பிசுபிசுப்பை உணர்ந்தாள். தன் வலது கையால் புடைவையோடு சேர்த்து தன் அந்தரங்கத்தை ஒரு முறை அழுத்தித் தேய்த்தாள். அறையின் உள்ளே, வேணி சங்கரின் முகத்தை தன் இரு கரங்களாலும் பிடித்து, அவன் உதடுகளில் தன் உதட்டைப் பதித்து, தன் நாக்கை அவன் வாய்க்குள் நுழைக்க முயன்று கொண்டு இருந்தாள். அவன் தன் உதடுகளை லேசாக இறுக்கிக் கொண்டு வேணியின் உதடுகளை திறக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான். அவர்கள், இந்த முத்தச் சண்டையில் வெறியோடு, ஒருவரை ஒருவர் தோற்கடிக்க முயன்று கொண்டு இருந்தனர். காம விளையாட்டில் யார் ஜெயித்தால் என்ன? கடைசியில் கிடைக்கப் போகும் சுகம் என்னவோ இருவருக்கும் ஒன்றுதானே... இருந்தும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் காலம் காலமாக யாரை யார் வெல்வது என்ற போட்டி இருந்து கொண்டே தான் இருக்கிறது. இதில் மன முதிர்ச்சி அடைந்தவர்கள், தோற்பது போல் நடிக்கிறார்கள். உண்மையில் தோற்பது போல் நடிப்பவரே அதிக சுகத்தை அனுபவிக்கிறார்கள். இங்கே யார் தோற்கப்போவது? வேணி தன் கணவனின் அடிவயிற்றை தடவிக் கொண்டே, விறைத்து சண்டைக்கு தயாரானது போலிருந்த, நீண்டு பருத்திருந்த அவன் ஆண்மையை பிடித்தாள். சங்கரின் உடல் ஒருமுறை சிலிர்த்து அடங்கியது. இது அவளின் முதல் வெற்றியா? தன் உள்ளங்கையால் தன் கணவனின் ஆண்மையின் சிவந்த மொட்டின் நுனியை வேணி அழுத்தத் தொடங்கினாள். இதைப் பார்த்து கொண்டிருந்த சுகன்யாவின் நிலைமை காற்றில் ஆடுகின்ற பட்டம் போலானது. அவளுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஜாகெட்டினுள் வீங்கும் தனது மார்பை ஒரு முறை குனிந்து பார்த்துக்கொண்டாள். அது விம்மி விம்மி அவளை மெய் மறக்கச்செய்து கொண்டிருந்ததது. தன் நிலை கண்டு அவள் வெட்க்கப்பட்டாள்; சுற்றுமுற்றும் ஒரு முறை பார்த்தாள், தனது வலது கையால் தன் இடது முலையை ஜாக்கெட்டோடு சேர்த்து பிடித்துக் கொண்டாள். மன்மதன் தன் அம்பை அவள் மீது எய்துவிட்டான். அவள் உடலில் சுகமும், வேதனையும் ஒரு சேர தோன்றி அவளை துன்புறுத்தின. இந்த இன்ப வேதனை எங்கிருந்து வருகிறது? அவள் இதயத்திலிருந்தா அல்லது தேகத்திலிருந்தா...தேகம் என்று ஒன்று இருந்தால் இதயம் என்ற ஒன்று இருக்க வேண்டும். இதயம் என்ற ஒன்று இருந்தால் சுகமும் வேதனையும் இருந்துதானே ஆகவேண்டும். இதுதானே இயற்கையின் நியதி... வேணியும், சங்கரும் தங்கள் காரியத்தில் கண்ணாயிருந்ததால், ஒரு கன்னிப் பெண் தங்களின் இன்ப நாடகத்துக்கு சாட்சியாக ஜன்னலுக்கு வெளியே நிற்கிறாள் என்று அறியாமலிருந்தார்கள். ம்ம்ம்...சங்கர் முனகினான். "கண்ணு நல்லா அழுத்துடி" "மாட்டேன், என் ராஜாவுக்கு வலிக்கும்" வேணிக்குத் தெரியும் அவள் எவ்வளவு பலமாக அவன் தடியை அழுத்துகிறாளோ அவ்வளவுக்கு அது பருத்து நீளும் என்று...ஒவ்வொரு ஆணுக்கும் உடலில் இந்த இடம் வேறுபடுகிறது. அவனை கிளர்ச்சியூடும் முறையும் மாறுபடுகிறது. "இல்லே...இல்லே..." நீ ஆட்டுடா கண்ணு, என் செல்லம்லே; என் கண்ணுல்லே; நீ ஆட்டுமா...என்று சங்கர் பிதற்றினான். பிதற்றியவாறே அவளின் மார்க்காம்பை பிடித்து திருகினான். ம்ம்ம்...."நீங்க என்ன பண்ணுவீங்க? என் ராஜாவை இரண்டு வாரமா...பட்டினி போட்டுட்டேன்..."இன்னைக்கு முழு விருந்து சாப்பாடுதான்; சாப்பிட்டுக்கோடா செல்லம்" வேணி அவன் ஆண்மையை தனது தொடைகளின் இடுக்கில் அழுத்தித் தேய்த்தாள். சங்கரின் ஆண்மையின் நீளத்தையும், பருமனையும் கண்ட சுகன்யாவிற்கு, சங்கரின் இவ்வளவு பெரிய ஆயுதத்தை, வேணி தனக்குள் எப்படி வாங்கிக் கொள்வாள் என்று யோசிக்கத் தொடங்கினாள். அவனின் திண்மையான தடியை மலைத்துப் பார்த்தாள். அவளது இடது மார்பு சன்னலின் பக்கச் சுவரில் அழுந்திக் கொண்டிருந்தது. சுகன்யா மேலும் சுவரொடு தனது உடலை அழுத்திக் கொண்டாள். அந்த நேரத்தில் அந்த அழுத்தம் அவளுக்கு தேவையாக இருந்தது. சங்கர் தனது பிடியை தளர்த்தி வேணியின் தலையை தன் அடிவயிற்றை நோக்கி இழுத்தான். பத்து நாட்களுக்கு மேலாக அலுவலக பணி காரணமாக வெளியூர் சென்று, தனியாக இரவுகளை கழித்த ஏக்கத்தில் வேணியின் முகத்தை கெஞ்சலாக பார்த்தான். வேணிக்கு அவன் தேவை என்ன என்று புரிந்தது. பெண்கள் இந்த விஷயத்தில் மிகவும் சூடிகையாக இருக்கிறார்கள்! கணவனின் பார்வை ஒன்றே போதும் அவர்களுக்கு. அன்புள்ள கணவனின் ஒரு பார்வை நூறு சொற்களுக்கு இணையான செய்தியை சொல்லுகிறது! அந்தப் பார்வையின் அர்த்தத்தை சரியாக உணர்ந்து கொள்ளும் பெண்ணுக்காக அந்த ஆண் எதையும் செய்ய துடிக்கிறான். வேணி தன் நாக்கால் கணவனின் தொப்புளை சுற்றி முத்தமிட்டாள். எப்பா....டா...அவன் மீண்டும் ஒரு முறை சிலிர்த்தான். அவளது மென்மையான உதடுகளின் சூடான அழுத்தம் சங்கரின் ஆயுதத்தை முழுமையாக்கியது. முழுமை அடைந்த அதன் முனையில் நிறமற்ற சிறிய பனித்துளி ஒன்று தோன்றியது. அந்த பனித்துளியை வேணி, தன் நுனி நாக்கால் வழித்தெடுத்தாள். வேணி, சங்கரின் முழுமையை தன் கைகளால் இறுக்கி மேலும் கீழுமாக உருவி விட்டாள். சங்கரின் மூச்சு துரிதமாகியது. "வேணி...வேணி... சீக்கிரம்டா கண்ணு" சங்கர் தவித்தான். 'என்ன வேணும்டா...சொல்லுடா பட்டு..." வேணி ஒரு குறும் சிரிப்புடன் கொஞ்சினாள். அவன் தேவையை, அவன் வாயால் கேட்க்க விரும்பினாள். சங்கர் பேசும் நிலையை கடந்துவிட்டான். அவளுக்கு பதில் ஒன்றும் சொல்லாமல் தன் ஆண்மையை அவள் உதடுகளின் மேல் தேய்த்தான். இரும்பை ஒத்த அவன் தடி, பூ போன்ற மென்மையான இதழ்களை உரசியதும் அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. அவள் பெண்மையும் சுரந்தது. ம்ம்ம்... என்ற நீளப்பெருமூச்சுடன், வேணி அவனை மேலும் தவிக்கவிடாமல், அவன் ஆண்மையை அழுத்தமாக முத்தமிட்டாள். நரம்புகள் முறுக்கேறி துடித்துக் கொண்டிருந்த அவன் தடியை அடியிலிருந்து முனைவரை முத்தமிட்டுக் கொண்டே, இரண்டு விரைகளையும் உள்ளங்கையால் பற்றி மெதுவாகக் கசக்கினாள். முள்ளை முள்ளால் எடு என்பார்கள். இங்கு கணவனின் உடல் சூட்டை தணிக்க, வேணி தன் சூடான உதடுகளை உபயோகிக்கிறாள். சூடு சூட்டைத் தணிக்குமா? ஆனால் காலம் காலமாக இதுதானே குடும்பங்களில் நடந்து வருகிறது. சன்னலுக்குப் பின்னே, மாடிப்படியின் இருட்டில், ஒரு கன்னி, இந்த இருட்டறைக்குள் அரங்கேறும் இன்ப நடகத்தை திருட்டுத்தனமாக பார்த்துக் கொண்டிருக்கிறாளே அவளின் சூட்டை யார் தணிப்பார்கள்? அவள் சூடு எப்படி தணியும்? வேணி ஆர்வத்துடனும், முழு விருப்பத்துடனும் சங்கரின் ஆண்மையை முத்தமிட்டு அவனை மகிழ்விப்பதை பார்த்த சுகன்யாவின் அங்கமெங்கும் உஷ்ணம் பரவியது. அவள் நாக்கும், உதடுகளும் சுரம் வந்தவளை போல உலர்ந்தன. அவள் பெண்மையின் அந்தரங்க நீர் முழுவதுமாக சுரந்து, அவளின் காட்டன் ஃப்பாண்டியை நனைத்தது. சுகன்யா தன் தொடை நடுவில் சூட்டையும், குளிர்ச்சியையும் ஒருங்கே அனுபவித்தாள். சங்கரின் ஆண்மை வேணியின் சூடான முத்தங்களால் வெடித்து சிதறும் நிலைக்கு வந்துவிட்டது. இரும்பு கம்பியை ஒத்திருந்த அந்த ஆயுதத்தின் மேல் தோலை வேணி கீழேத்தள்ளி, ரோஜா நிறத்தை போலிருந்த அந்த மொட்டினை தனது நுனி நாக்கால் தீண்டினாள். தன் நாக்கில் சுரந்த எச்சிலால் அம்மொட்டினை முழுவதுமாக ஈரமாக்கினாள். 'ஸ் ம்ம்ம்...ம்மா...ம்மா' முனகிக்கொண்டே சங்கர் தனது தடியை வேணியின் வாய்க்குள் நுழைத்தான். இதற்காகவே காத்திருந்ததைப் போல வேணி அவனுடய பாதியை உள்வாங்கி தன் நாக்கால் அழுத்தி உறிஞ்ச ஆரம்பித்தாள். உடல் நடுங்க மனைவியின் வாய் சூட்டை, நாக்கின் ஈரத்தை, இரு கண்களும் செருக, சங்கர் அனுபவித்தான். சுகன்யா ஆங்கிலப் புத்தகங்களில் வாய்ப்புணர்ச்சியைப் பற்றி படித்திருக்கிறாள். கல்லூரியில் படிக்கும் போது தன் தோழிகள் சிலர் இது பற்றி பேசி சிரித்த போதும் அவர்கள் உடன் இருந்திருக்கிறாள். ஒருத்தி தன் மொபைல் தொலைபோசியில் இது போன்ற குறும் படங்களை கொண்டு வந்து அவர்களுக்கு காட்டியதுமுண்டு. அவள் அப்போதெல்லாம் செக்ஸ் பற்றி அதிகம் சிந்தித்ததில்லை. அவள் கவனமெல்லாம் படித்து ஒரு வேலையை தேடுவதில்தான் இருந்தது. அவள் குடும்ப நிலைமை அப்படி...படித்து, வேலையில் சேர்ந்து, ஓரளவிற்கு தன் சொந்த காலில் நின்ற பின் இன்று, சன்னலுக்கு பின் நின்று கொண்டிருந்த சுகன்யா, வேணியின் வாய் வேலையை கண்டு, தன் மூச்சடங்கி ஸ்தம்பித்து நின்றாள். இந்த காட்சி அவளை ஒரு புது உலகத்தில் கொண்டு தள்ளிவிட்டது. காம உணர்ச்சி முழுவதுமாக அவளை ஆட்க்கொண்டுவிட்டது. அறையின் உள்ளே வேணி தன் கணவனின் ஆண்மை மொட்டை சுற்றி தன் நாக்கால் வட்டம் வரைவதை போல துழாவிக் கொண்டிருந்தாள். சங்கர் இன்ப வேதனையில், அந்த வேதனையை பொறுக்க முடியாமல், தன் உறுப்பை வேணியின் வாயிலிருந்து வெளியில் இழுத்து மீண்டும் அவள் வாயின் உள்ளே நுழைக்கவும், வேணியும் அவன் எண்ணத்தை புரிந்து கொண்டு தன் உதடுகளை இறுக்கமாக்கி அவனுக்கு தோதாக வாயை மேலும் கீழுமாக அசைக்கத் தொடங்கினாள். சங்கரின் ஆண்மையின் சுற்றளவு மேலும் விரிவடைந்து அவள் வாயின் உள்ளேயே துடிக்க ஆரம்பித்தது. சங்கரின் உறுப்பு விந்தை கக்கி விடுமோ என அஞ்சி வேணி தன் உதடுகளின் இறுக்கத்தை சற்றே தளர்த்தினாள். வேணிக்குத் தெரியும், சங்கரின் பலம் எனன; பலவீனம் என்னவென்று... காம கிரியைகளில் சங்கருக்கு மிகவும் பிடித்த விஷயம், அவன் ஆண்மையை அவன் மனைவி சுவைப்பது. ஆனால் அவன் மனைவி அவனை சுவைக்கும் போது, அவனுடைய உணர்ச்சி மேலீட்டால், தன் மனைவியின் பெண்மையில் உறவு கொள்ளும் நேரத்தை போல, நீண்ட நேரம் அவனால் இந்த விஷயதில் தாக்கு பிடிக்க முடிவதில்லை. வேணி, இன்று சங்கர் தன் விந்தை தன்னுடைய பெண்மையில்தான் வெளிவிடவேண்டும் என்று விரும்பினாள். உடலுறவில் வேணிக்கு இது மிகவும் விருப்பமான விஷயம். வெளியில் சுகன்யா இந்த இன்ப நாடகத்தின் கடைசி அத்தியாயத்துக்காக காத்திருந்தாள் போலும்...அவளின் ஒரு கை அவளது மார்பிலும், மறு கை தொடை நடுவிலும் அழுந்தி இருந்தது. ஒருபுறம் அவர்களின் இன்ப விளையாட்டை பார்ப்பதனால் கிடைக்கும் கிளர்ச்சியும், அந்த கிளர்ச்சியினால் கிடைக்கும், இது வரை அனுபவித்தறியாத சுகத்தின் காரணமாக அவள் தன் நிலை மயங்கி அங்கேயே நின்றிருந்தாள். இந்த விளையாட்டு எது வரை செல்லும் என்னும் எதிர்ப்பார்ப்பும் அவளை அங்கிருந்து நகரவிடவில்லை. மறுபுறம் தன் நிலை கண்டு, 'இது என்ன வேடிக்கை?' ஒரு திருடி போல் அந்த தம்பதிகளின் கலவியை பார்க்கும் நிலைக்கு தன்னை எது தள்ளியது?... மேலும் பட்டப் பகலில், நட்ட நடு வீட்டில், 'இப்படி நான் என் மார்பையும், என் அந்தரங்கத்தையும் தடவிக் கொண்டு நிற்கிறேனே' என்று அவள் வெட்கமும் வேதனையும் அடைந்தாள். உள்ளே அறையில், சங்கர் தன் ஆசை நாயகியின் எச்சில் அபிஷேகத்தால் அடிமுதல் நுனிவரை ஈரத்துடன் இருந்த தன் தடியை வேணியின் வாயிலிருந்து வெளியில் எடுத்தான். அது போருக்கு தயாரான வீரனை போல் நிமிர்ந்து நின்று தன் இலக்கு எங்கே என்று தேடியது. தன் கணவன் ஏன் இன்னும் தன்னுள் முழுவதுமாக முயங்க முயற்சிக்கவில்லை என்று எண்ணிய வேணி மல்லாந்து கட்டிலில் படுத்து தன் இரு தொடைகளையும் விரித்து, சற்றே தனது இடுப்பை மேல் நோக்கி உயர்த்தி, சுத்தமாக மழிக்கப்பட்ட தன் பெண்மையை முழுவதுமாக அவனுக்கு காட்டி தான் புணர்ச்சிக்கு தயார் என தன் கண்களாலும் அழைப்பு விடுத்தாள். வேணி, ...ம்ம்ம்...'வாப்பா... எனக்கு வேணும்பா' என்று முனகி, தனது இரு கால்களையும் சங்கரின் இடுப்பில் மாலை போல போட்டு, அவன் இடுப்பை தனது பெண்மையின் மீது அழுத்தி தேய்த்தாள். அவனை ஆசையோடு நோக்கி, தனது தொடைகளால் இறுக்கி, அவன் உடலை தன் மார்போடு சேர்த்து அணைத்தாள்.

'என்னடா கண்ணு அவசரம்'... கொஞ்சம் பொறு...சங்கர் அவளது கால்களை தனது இடுப்பில் இருந்து பிரித்து, சற்றே கீழ் இறங்கி அவள் தொப்புளில் தனது நாக்கால் கோலம் போட துவங்கினான். பின் சற்றே நிமிர்ந்து அவளை நோக்கி, தனது நாக்கை வெளியே நீட்டி, மேலும் கீழுமாக ஆட்டினான்... உன் பெண்மையை நான் சுவைக்கட்டுமா என்று. அந்த சைகைக்கு அர்த்தம் வேணிக்குத் தெரியும், தெரிந்தபோதிலும், வேணியால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. அவள் உடல் முழுவதுமாக குழைந்து, பெண்மையில் மதன நீர் சுரந்து, புணர்ச்சிக்கு முழுவதுமாக ஆயத்தமாகி இருந்தாள். வேணியின் பெண்மை மொட்டும் தினவெடுத்து துடித்துக் கொண்டிருந்தது. சங்கர் தன் மனைவியின் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. சற்றே குனிந்து அவளின் திண்மையான தொடைகளில் மெதுவாக முத்தமிட்டான். அவள் தொடைகளின் உட்ப்புறங்களில் லேசாக வரி வரியாக படர்ந்திருந்த மெல்லிய ரோமங்கள் சிலிர்த்தெழுந்ததை பார்த்த அவன் மேலும் கீழிறங்கி வேணியின் தொடைகளை விரித்து, அவளின் பெண்மை மொட்டில் மெண்மையாக முத்தமிட்டான். வேணி துடித்து அவனை தன் மீது இழுத்து இறுக்கினாள். ம்ம்ம்...'உள்ளே விடுங்க' தன் உதடுகளை மெதுவாக கடித்த, வேணி அவன் தடியைப் பிடித்து தன் பெண்மையின் உதடுகளின் நடுவில் வைத்துத் தேய்த்தாள். சங்கரின் ஆண்மை மொட்டு வேணியின் அந்தரங்க வாசனையை நுகர்ந்து அவளுள் முழுவதுமாக நுழையத் துடித்தது. சங்கர் தனது இடுப்பை மேலும் கீழுமாக அசைத்து தனது லிங்கத்தை அவளின் புழை வாசலில் சரியாக பொருத்தி, மூச்சை முழுவதுமாக உள்ளிழுத்து தனது ஆண்மையை வேகமாக அவள் தேனடைக்குள் இறக்கினான். ப்ப்ப்பா...ப்ப்ப்பா...என்று குரலெழுப்பி, வேணி தன் உடல் சிலிர்த்து, அவனை முழுவதுமாக தன்னுள் வாங்கிக் கொண்டாள். சங்கர் மெதுவாக அவள் பெண்மையின் உள்ளிருந்த தனது உறுப்பை உறுவியெடுத்து, மீண்டும் அவள் பெண்மையின் உள்ளே குத்த ஆரம்பித்தான். தன் கணவனின் இயக்கத்திற்கு ஏற்ப வேணியும் தனது இடுப்பை மேலும் கீழுமாக அசைக்க ஆரம்பிக்க, அவளது பருத்த முலைகள் லயத்துடன் அசைய தொடங்கின. உடல்களின் உராய்வின் காரணமாக இருவரின் காது மடல்களும் சூடேறி சிவந்தன. உராய்வின் விளைவே சக்தி. 'இரண்டு' 'ஒன்றாகும்' போதுதான் சக்தி பிறக்கிறது. சங்கரின் பருத்த தடி சீரான வேகத்தில் அவளை உழுது கொண்டிருந்தது. வேணி கண்கள் செருக....என் ராஜா...என் தங்கம்...என் பட்டு...என பிதற்றியவாறு அவன் இடுப்பை இறுகப் பற்றி தன்னை நோக்கி இழுத்தாள். அவளின் ஈரப்பெண்மையில் சங்கரின் ஆண்மை ச்வ்க்...ச்வ்க்... என்ற சத்தத்துடன் ரயிலின் பிஸ்டன் போல் இயங்கிக் கொண்டிருந்தது. சங்கர் சீரான கதியில் தன் மனைவியை புணர்ந்து கொண்டிருந்தான். இருவரின் உடலிலும் மெலிதாக வியர்வையின் வாசம் அரும்பத்தொடங்கியது. ஒருவர் அடுத்தவரின் வாசத்தை நுகர்ந்து கிறங்கிக் கொண்டிருந்தார்கள். அறைக்குள் அவர்களுக்கிடையே அமைதி நிலவிக் கொண்டிருந்தது. இயல்பான, சீரான இயக்கத்தில், எந்த விதமான அவசரமுமின்றி, அவர்கள் இருவரும் தங்களை மறந்து, மனமொன்றி தங்களை, காமத்தில் கரைத்துக் கொண்டதனால், காலம், தேசம், பாத்திரம் என்ற தடைகள் எதுவும் அங்கு அவர்களுக்கு இல்லை. வேறு எந்த தேவையும் இல்லாமல் அவர்கள் கணங்களை சுகித்துக் கொண்டிருந்தனர். அடுத்தடுத்து வந்த நொடியில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்ததனால் அங்கு துக்கமும் இல்லை; மகிழ்ச்சியும் இல்லை. அவர்கள் காமமாகவே மாறி இருந்தார்கள். ஒருவேளை, இதுதான் வாழ்க்கையை வாழும் விதமோ? சன்னலுக்கு வெளியே சுகன்யா பதட்டத்துடன் நின்று தன் வளர்ப்பையும், தான் வளர்ந்த விதத்தையும், அவள் செய்கின்ற காரியத்தையும், அதை யாராவது பார்த்துவிட்டால் அதனால் உண்டாகக்கூடிய விளைவுகளையும் யோசித்துக்கொண்டு, தன்னை மூன்று காலங்களுடனும் முன்னுக்குப்பின்னாக இனைத்துக் கொண்டதனால், அவளால் தொடர்ந்து தன்னுள் ஒன்றியிருக்க முடியவில்லை. தன்னுள் ஒன்றாதவனுக்கு சுகமில்லை. வினாடிகள் கரைய கரைய, இயல்பாக வேணியின் புட்டங்கள் இறுக்கமடைந்து, அவளுடைய பெண்மையின் சுவர்களும் சுருங்க ஆரம்பித்தது. சங்கரின் ஆண்மையை அவள் இறுக்கி பிடித்ததன் விளைவாக அவனுடைய இயக்கத்தின் வேகம் சற்றே மட்டுப்பட்டது. சங்கர் மீண்டும் நிகழ் காலத்திற்கு வந்தான். அந்த வேகக் குறைவை ஈடுகட்ட தனது இரு கரங்களையும் வேணியின் பிருஷ்டங்களுக்கு கீழே நுழைத்து சிறிதே அவைகளை உயர்த்திக்கொண்டு, மூச்சை இழுத்துப் பிடித்து அவளை மேலும் வலுவாக குத்த ஆரம்பித்தான். மூச்சுப்பயிற்சியினால் விந்து வெளிப்படும் நேரத்தை தள்ளிப்போடலாம். அந்த வித்தை இயல்பாகவே அவனுக்கு வாய்த்திருந்தது. வேணியின் மூச்சுக்காற்று அனலாகி அவன் மார்பை சுட்டது. அவளுடைய முலைக்காம்புகள் கனத்து, குத்தீட்டியாகியது. ம்ம்ம்...ஹையோ..ம்ம்மா... என வேணி முனகத் தொடங்கியதால், அந்த முனகல்கள் சங்கரின் உணர்ச்சிகளை பெருக்கி, அவன் வேணியின் புழை ஆழத்தை அளந்தே தீருவது என்ற வெறியோடு இயங்கினான். அந்த வலுவான ஆண்மையின் தாக்குதல்களை சமாளித்த வேணியின் உடல் முறுக்கேறி, மகிழ்ச்சியில் திளைத்த அவள், தன் கைகளால் கணவனின் உடலை மேலும் இறுக்கினாள். துடிக்கும் அவள் மேல் உதட்டில், கலவியினால் தோன்றிய மெல்லிய வியர்வைத் துளிகள், சங்கரின் வெறியை மேலும் தூண்டியது. ம்ம்ம்...என்று முனகிக் கொண்டே, சற்றே திறந்து, விலகியிருந்த இரண்டு உதடுகளையும் தன் வாயால் கவ்வி அவள் செவ்விதழ்களில் ஊறிய எச்சிலை உறிந்தான். வேணியின் உடம்பு காற்றில் பறக்கும் சறுகாகி, ம்ம்ம்...ம்ம்மா...என கூவியபடி தன் இன்பத்தின் உச்சத்தை அனுபவித்தாள். அவள் தேனடையில் வெள்ளம் பெருக்கெடுத்து சங்கரின் ஆண்மையை குளிப்பாட்டியது. அவள் முகம் குங்குமமாக மாறி, தான் பெற்ற அந்த கலவியின் சுகத்தை தன் கணவனுக்கு வழங்க தன் புட்டத்தை வேக வேகமாக மேலே தூக்கிக் கொடுத்தாள். வேணியின் உடல் அசைவுகளில் இருந்து அவள் அடைந்த சந்தோஷத்தையும், உச்சத்தையுமுணர்ந்த சங்கர் தன் குத்தும் வேகத்தை கூட்டி, அவளை இறுக்கியணைத்து தன் ஆண்மையால் அவள் தேனடயை கிழிக்க ஆரம்பித்தான். சொத சொதவென இருந்த வேணியின் குழியில் துடிப்போடு அவன் தண்டு வெகு வேகமாக சென்று வர தொடங்கியது. தன் முழுமூச்சையும் இழுத்துப் பிடித்து அவள் பெண்மையை அவன் தாக்க, சங்கரின் தொடைகளும் இடுப்பும் இறுகி, வேணியின் பெண்மையில் அவன் ஆண்மை தன் நிலை இழந்து துடித்து, அந்த கடைசிக் குத்தில் அவன் தடி இளகியது, இளகிய அவன் தண்டிலிருந்து பத்து நாட்களாக அவன் சொம்பில் தேங்கியிருந்த விந்து கங்கை வெள்ளமாக பாய்ந்து வேணியின் உப்பிய ஆப்பக்குழியை நிறைத்தது. சங்கரின் துடிக்கும் குஞ்சியிலிருந்து வெளியேறிய வெண் கஞ்சி வேணியின் ஆழக் குகையில் பாய்ந்ததும், அவள் தன் உடல் முறுக்கேறி மீண்டும் ஒரு முறை தன் உச்சத்தை தொட்டாள். சங்கர் மூச்சிரைக்க அவள் மேல் சரிந்து, அவள் இதழ்களை தன் வாயால் கவ்விக் கொண்டு, பொங்கும் அவள் சுவாசத்தின் வாசனையை நுகர ஆரம்பித்தான். துடிப்பான இன்ப விளையாட்டுக்குப் பின்னர், சங்கரும் வேணியும், ஒருவர் மற்றவரை மெலிதாக அணைத்துக் கொண்டு, இதுவரை இறுகியிருந்த உடல்கள் மெல்ல மெல்ல தளரத் தொடங்க, இமைகள் மூடிக்கிடக்க, மூடிய கண்களுக்குப் பின்னால், வெகு தூரத்தில் தோன்றிய ஊதா நிற வெளிச்சத்தில், எல்லையில்லா அகன்றப் பெருவெளியில், சிறு சிறு மஞ்சள் நட்ச்சத்திரங்கள் உதிர, மனம் ஒரிடத்தில் குவிந்து, தங்கள் மெய் மறந்து, அந்த உச்சக்கட்ட இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்த இன்ப நாடகத்திற்கு அது வரை சாட்சியாக சன்னலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்த சுகன்யா, கால்கள் தளர, தன் சூடான உடல் நடுங்க, மனம் இலக்கின்றிப் பறக்க, அந்த தம்பதியினரின் தனிமையை மேலும் கலைக்க விருப்பமின்றி, இந்த நாள் அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பத்தை கொண்டு வரப்போகிறது என்றறியாமல், மாடியிலிருந்த தன் அறையை நோக்கி மெதுவாக படியேறினாள். சங்கரும் வேணியும், துடிப்பான அந்த இன்ப விளையாட்டுக்கு பின்னர், பரஸ்பரம் தங்கள் உச்சத்தை அனுபவித்தப்பின், ஒருவர் மற்றவரை மெலிதாக முத்தமிட்டு கண் மூடி களைத்து கிடந்தார்கள். இவ்வளவு நேரம் ஒருவர் அடுத்தவரின் அணைப்பில், உடல் தளர இளைப்பாறிக் கொண்டு இருந்தவர்களில் முதலில் கண் விழித்தது சங்கர்தான். ஓரக்கண்ணால் தன் மனைவியை அன்போடு பார்த்தான். அவள் கண் மூடி இன்னும் தளர்ந்து கொண்டிருந்தாள். அவள் வலது காலை, அவன் தன் வயிற்றின் மேலிருந்து நகர்த்தி, சற்றே ஒருக்களித்து படுத்த சங்கரின் வலது கை, இயல்பாக வேணியின் இடது மார்பை வருடத் தொடங்கியது. ம்ம்ம்...மெலிதாக அவள் முனகினாள். "இவ்வளவு நேரம் ஆடினது பத்தலையா?" "அப்ப உனக்கு போதும்...ம்..?புன்முறுவலுடன் அவளை தன் மார்போடு அணைத்துக் கொண்டவன் அவள் பின்புற மேடுகளில் மெண்மையாக தன் விரல்களால் கோலமிட ஆரம்பித்தான். "முதல்ல கேட்டது நான்" அதுக்குப் பதிலைக் காணோம்... வேணி தன் கணவனின் மார்பில் முளைத்திருந்த சுருட்டை முடிகளில் தன் விரல்களை ஓடவிட்டாள். பதிலை அவன் சொல்லவில்லை..அவன் தடித்த உதடுகள் சொல்ல ஆரம்பித்தன. சங்கர் வேணியின் ஈரம் மின்னிய கீழ் உதட்டை முத்தமிட்டான். "போதும்ம்ம்...விடுங்கன்னா... திருப்பியும் மொதல்லேருந்தா...என்னால முடியாதுப்பா" சிணுங்கினாள் அவள். சிணுங்கிய அவளின் உதடுகளில் மீண்டும் ஒரு முறை அவன் முத்தமிட்டான். "சொன்னா கேட்டாதானே...என் உதடெல்லாம் எரியுதுங்க...இந்த ஆம்பளைங்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் பசி அடங்கறதே இல்ல" தன் முகத்தை வேணி சங்கரின் மார்பில் புதைத்துக் கொண்டாள். "அப்ப இதுவரைக்கும் எத்தனை ஆம்பளைங்களை பாத்து இருக்கே?" கள்ளக்குரலில் போலியான கோபத்துடன் அவள் முகத்தை தன் மார்பிலிருந்து சற்றே விலக்கி சங்கர் அவள் கண்களோடு தன் கண்களை ஓடவிட்டான். "ஆமாம்...ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதமுன்னு எங்க அம்மா சொல்லுவாங்க? மெலிதாக சிரித்தவள், வேணி அவன் மார்பில் தன் கைகளால் மெல்ல குத்தினாள். "சரிதாண்டி...உங்கம்மா சொன்னது சரிதான்...நானும் சோத்தை பதம் பாத்துட்டேன்"...கிண்டலாக அவன் சிரித்தான். "என்ன சொல்றீங்க...புரியற மாதிரி சொல்லுங்க" அவனை வேணி விழித்துப் பார்த்தாள். அவள் கைகள் அவன் அடி வயிற்றை தடவிக்கொண்டிருந்தது. "புரியல...உனக்கு...ம்ம்ம்...நீ ஆடற ஆட்டத்தைதான் ஒரு வருஷமா பார்க்கறேனே...உன் பதம் என்னன்னு? அவன் வாய்விட்டு சிரித்தான். இப்போது வேணிக்கு புரிந்தது அவன் என்ன சொல்ல வருகிறானென்று...அவளும் வாய் விட்டு சிரித்தாள், உடலும் மனமும் நிறைந்த திருப்தியுடன். மெல்ல நகர்ந்து அவன் முகத்தை இழுத்து அவன் உதடுகளில் தன் உதட்டைப் பதித்து அழுத்தி ஓசையுடன் முத்தமிட்டாள். அவன் அவளை வளைத்து இறுக்கினான். போதும்...போதும்...விடுங்க அவன் பிடியிலிருந்து, வேணி தன்னை விலக்கிக் கொண்டு கட்டிலில் இருந்து இறங்கி இரு கைகளையும் தூக்கி விரிந்து கிடந்த கூந்தலை முடிந்து கொண்டாள். அவள் பருத்த முலைகள் மேலும் கீழும் ஆடின. ஆடும் அவள் முலைகளை கண்ட சங்கரின் தண்டு லேசாக எழ ஆரம்பித்தது. "ஆமாம்...கேக்க மறந்துட்டேன்.. ஒரு சோறு பதம்ன்னு...உங்கம்மா...உங்கப்பா ஆடின ஆட்டத்தை பாத்து சொன்னாங்களா? தன் எழும் தண்டை ஆட்டிக்கொண்டே சிரித்தான். "எங்கம்மாவையும் அப்பாவையும் இப்ப எதுக்கு இதுல இழுக்கிறீங்க...எனக்கு கெட்ட கோவம் வரும்...சொல்லிட்டேன்...ஆமாம்" வேணியின் முகம் சிவந்தது. "என்னாடி...எழுந்துட்ட..நிஜமாவே போதுமா" சங்கர் இன்னும் தாபத்துடன் அவளைப் பார்த்தான். "நேரமாச்சுங்க...அத்தையும் மாமாவும் வந்துடுவாங்க...பால் காய்ச்சணும்...வந்தவுடன் காஃபி குடிக்கணும்பாங்க...மீதியை ராத்திரிக்கு வச்சுக்கலாம்...கிணத்து தண்ணி எங்க போகுது" தன் ப்ராவையும், பேண்ட்டியையும் எடுத்து போட்டுக்கொண்டாள். நைட்டியை அவன் முதுகுக்கு கீழ் இருந்து உருவி அணிந்தாள். சங்கரின் தோளில் ஒட்டிக்கிடந்த ஸ்டிக்கர் பொட்டை எடுத்து தன் புருவங்களுக்கு மத்தியில் அழுத்திக்கொண்டாள். விறுவிறுவென்று சமையலறையை நோக்கி நடந்தாள். சங்கரும் மனநிறைவுடன் எழுந்து, கைலியை உடுத்திக்கொண்டு குளியலறையை நோக்கி நடந்தான். கட்டில் இரவுக்காக காத்திருந்தது. சமையலறையில் நுழைந்த வேணி யந்திரமாக சுழல ஆரம்பித்தாள். மறுநாள் இட்லிக்கு வேண்டிய உளுத்தம்பருப்பை கழுவி கிரைண்டரில் போட்டுவிட்டு, பாலை குக்கரில் ஊற்றி இண்டக்ஃஷன் ஸ்டவ்வை ஆன் செய்தாள். தனக்கும் தன் கணவனுக்குமென இரண்டு கோப்பைகளில் சர்க்கரையையும், இன்ஸ்டண்ட் காஃபியையும் போட்டு சிறிது சுடு நீரை ஊற்றி கலக்கும் போது, சங்கர் சமையலறையில் நுழைந்தான். சர்க்கரையை கலக்கும் அவளின் பின்புறமாக நெருங்கி நின்று தனது இரு கைகளையும் அவள் இடுப்பில் சுற்றி, தூக்கி கட்டியிருந்த அவளது முடிகளின் கீழ், பின்னங்கழுத்தில் மென்மையாக முத்தமிட்டான். அவள் வேர்வை வாசம் அவனை கிறங்கடித்தது. அவனது விரல்கள் அவளது அடி வயிற்றில் கோலம் போட ஆரம்பித்தது. அவனது தண்டு அவளின் புட்டப் பிளவுகளின் இடையில் அழுந்தியது. "ஆரம்பிச்சாச்சா...வந்ததுலேருந்து பாக்கறேன்... இது என்ன அலைச்சலோ"...கப்பில் சூடான பாலை ஊற்றிக்கொண்டே அலுத்துக்கொண்டாள் வேணி. "எனக்கு அலுக்கலடீ வேணிக்குட்டி...அலுத்துப்போற வயசா நமக்கு?" அவளது காது மடலை மெதுவாக கடித்தான் சங்கர். 'ச்ச்சும்மா இருங்க... பால் கொட்டிடப்போகுது" உடல் சிலிர்த்த அவள் முனகினாள். அவளுக்கு சற்று கர்வமாகவும் இருந்தது. தன் கணவன், தன் மீது கொண்டுள்ள மோகத்தைக் கண்டு. ஆண்டவா! இவன் இப்படியே எப்போதும் இருக்கவேண்டும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள். புடைத்த அவன் தண்டு அவள் பின்புறத்தில் உரசியதனால் அவள் உடல் பரவசமடைவதைக் கண்டு, தன் உடலும் தான் ஏன் இப்படி அலைகிறது என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டாள். "சரி...சரி... காஃபியை பிடிங்க...போய் நிம்மதியா ஹாலில் உட்கார்ந்து குடிங்க...நீங்களும் டயர்டா இருப்பீங்கல்ல" உங்கம்மவும் அப்பாவும் வர நேரமாச்சு எனக்கூறியவாறே அவன் பிடியிலிருந்து நகர முயன்றாள். பத்து நாளாக பட்டினி கிடந்த அவன் அவளை விடுவானா என்ன? அவன் காய்ஞ்ச மாடு...கம்பில் பாய்ந்து தானே ஆக வேண்டும்! அவன் மீண்டும் அவளின் பின்புறத்தில் தன் ஆண்மையை உரசினான். அவன் சின்னத் தம்பியும் மெல்ல மெல்ல அவன் கைலிக்குள் நெட்டுக்கொள்ள தொடங்கியது. "பிளீஸ் ...லேசா தலை வலிக்குதுங்க...காபி குடிக்க விடுங்க... நான்தான் சொன்னேன்ல்லா... ராத்திரிக்கு வெச்சுக்கலாம்ன்னு....பிளீஸ்டா செல்லம்..." வேணி புன்னகைத்தாள் அவன் கைலியில் கூடாரம் அடித்துக் கொண்டிருந்த கோவிந்தனைப் பார்த்து. "சரி...இப்போதைக்கு ஒரு எச்ச முத்தம் குடுடி... மீதியை அப்புறம் பாக்கலாம்" நல்ல பிள்ளை போல அவன் சிரித்தான். இதற்காகவே காத்திருந்தது போல், அவள் அவனை தன்னோடு இறுக்கிக் கொண்டாள்; தன் வாயால் அவன் வாயை கவ்விக்கொண்டு, தன் நாக்கால் அவன் உதடுகளை தன் உமிழ் நீரால் நனைத்தாள், அவன் தன் பங்கிற்கு அவள் வாயினுள் தன் நாக்கை நுழைத்து துழாவினான். அவன் தம்பி மேலும் தடித்து அவள் தொடைகளில் இடிக்கத் தொடங்கினான். அவள் உடல் சிலிர்க்கத் தொடங்கியது. டிங்..டிங்..டிடிடிங்ங்..டிங்.. வாசலில் காலிங் பெல் ஒலித்தது. வேணி அவனை, அவன் மார்பில் கையை வைத்து தன்னிடமிருந்து தள்ளினாள். "பாத்தீங்ளா நான் சொல்லிகிட்டே இருக்கேன்ல்லா... கேட்டாத்தானே...அவங்களாத்தான் இருக்கும்; போய் கதவைத் திறங்க; முதல்ல உங்க லுங்கியை சரி பண்ணுங்க; அப்படியே போய் என் மானத்தை வாங்காதீங்க" அவள் அவனை எச்சரித்தாள். சங்கர் வாசலுக்கு விரைந்து கதவைத் திறந்தான். தோளில் பை மாட்டியிருக்க மற்றொரு கையில் சிறிய தோல்பையுடன் அவன் அப்பா நின்றிருந்தார். அவன் அம்மா போர்ட்டிகோவின் படியில் உட்கார்ந்திருந்தாள். இருவரும் ஒரு வாரமாக பெங்களூரில் தங்கி பெண் ராதாவையும், பேத்தியையும் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள். "நீ எப்படா வந்தே" கேட்ட மாணிக்கம் அவன் பதிலை எதிர்பார்க்காமல் உள்ளே நுழைந்தார். "இரண்டு மணி நேரம் ஆச்சு...ராதாவும் மாப்பிள்ளையும் எப்படி இருக்காங்க ப்பா...?" சங்கர் அவர் கையில் இருந்த பையை வாங்கிக்கொண்டே அவர் பின்னே நுழைந்தான். "வாங்க மாமா... அத்தை எங்கே? "வெய்யில் அதிகமாப் போச்சு... இவர் எப்ப ஊர்லேருந்து வரார்ன்னு மதியம் வரை தெரியலை... இல்லன்னா இவரே ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருப்பார். அத்தே நீங்க பேனுக்கு கீழே உக்காருங்க... கூலா தண்ணியை கொஞ்சம் குடிங்க... பால் தயாராக இருக்கு, உங்களுக்கு காபி கொண்டுவரேன்" கையில் குளிர்ந்த நீருடன் வந்த வேணி அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள். பேசிக்கொண்டே காபி கொண்டு வர வேணி மீண்டும் கிச்சனுக்குள் நுழைந்தாள். "குடும்மா காபியை முதல்ல...நீ எப்படி இருக்க... சங்கர் ஊர்ல இருந்து வந்து சாப்டாச்சா... நீயும் காபியை குடிக்கறதுதானே... மணி அஞ்சாச்சே" காபியுடன் வந்த வேணியை நிமிர்ந்து பார்த்த வசந்தி கேள்விகளை வீசினாள். "குடிக்க ஆரம்பிச்சேன்...நீங்க வந்துட்டீங்க...பெங்களூரில் அக்கா எப்படி இருக்காங்க? மாமா நல்லா இருக்காரா? வேணி நலம் விசாரித்தாள். "நல்லா இருக்காங்க எல்லோரும்...உன்னை விசாரிச்சாங்க... விசேஷம் எதுவும் உண்டான்னு?" வேணியின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தாள். வேணிக்கு அவள் தன் மகளுக்கும் மேலான இடத்தை தன் மனதில் கொடுத்திருந்தாள். வேணியின் முகம் சிவந்தது. வெட்கத்தினால் தலையை குனிந்து கொண்டாள். ஓரக்கண்ணால் தன் கணவனைப் பார்த்தாள், சங்கர் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அவளுடைய மாமனார் இமைகளை மூடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தார். "மாமா...டிபன் ஏதாவது செய்யட்டுமா, சூடா சாப்பிடறீங்களா"? தன் தலையை கோதிக் கொண்டே வேணி எழுந்தாள்." "வேண்டாம்மா.. ஒரு வழியா ராத்திரிக்குத்தான் சாப்பிடப்போறேன். ஒரு கை சாதமும் மிள்கு ரசமும் வேணும், முடிந்தால்...தேங்காய் தொகையல் அரைச்சுடு...அது போதும் எனக்கு" சொல்லியவாறு எழுந்து பின்புறம் நோக்கிச் சென்றார். நாளின் பாதியை அவர் வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில்தான் செலவிடுவார். "என்னம்மா செய்யற... நான் வேணா ரசம் கூட்டிடவா" வசந்தியும் எழுந்தாள். "இல்லம்மா... ஒரு வேலையும் இப்ப இல்ல.. ஏற்கனவே நீங்க வருவீங்கன்னு வடிச்ச சாதம் அப்படியே இருக்கு... ரசமும் மதியானம் வெச்சு இருக்கேன். தொகையல்தான் அரைக்கணும்...தேங்காய் திருகிட்டா நிமிழத்துல ஆயிடும்...நான் பாத்துக்கிறேன்...நீங்க செத்த நேரம் படுங்களேன்" வேணி தன் மாமியாரை ஆதுரத்துடன் பார்த்தாள்.

"வேணி...சொல்ல மறந்துட்டேன், சமையல் கடையை நான் பாத்துக்கிறேன். அவனும் வீட்டுல இருக்கான்... முகத்தை கழுவிக்கோ... அந்த துணிப்பையில் நாலு முழம் கிட்ட மல்லிப்பூ இருக்கு... கொஞ்சம் கிள்ளி பிள்ளையார் படத்துக்குப் போட்டுட்டு மீதியை நீ வெச்சுக்கம்மா... இரண்டு பேருமா கோயிலுக்கு போயிட்டு வாங்க" எழுந்து குளியலறை நோக்கி நடந்தாள். "என்னம்மா விசேஷம் இன்னைக்கு" வேணியின் நெஞ்சம் சந்தோஷத்தால் துள்ளியது. தன் மாமியாரின் அருகில் சென்று அவள் கையை தன் கையால் பற்றிக் கொண்டாள். "ஒன்ணுமில்லேம்மா... இன்னைக்கு வெள்ளிக்கிழமை ... கூடவே கிருத்திகை வேற...நல்ல நாளும் அதுவுமா, போய் அந்த முருகனை கும்பிட்டுட்டு வாம்மா, சின்னஞ்சிறுசுங்க நீங்க...அவனும் பத்து நாளா சரியா சோறு தண்ணி இல்லாம ஊரு விட்டு ஊரு சுத்திட்டு வந்திருக்கான்...கொஞ்ச நேரம் சந்தோஷமா அவன் கூட வெளியே போய் வாம்மா" அவள் கண்கள் பாசத்தினால் கனிந்திருந்தன. "சரிம்மா...ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்ம்மா" வேணி தன் அறையை நோக்கி துள்ளி ஓடினாள்.

No comments:

Post a Comment