Friday 19 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 19


"கனகு... பைத்தியம் புட்சிக்கிச்சாடா உனக்கு? ஹொங்கம்மாள... ன்னாடா சேம் சைடு கோல் அடிக்கறே?" அடிக்குரலில் முனகினான் சின்னசாமி.. "எங்காத்தாளை சும்மா சும்மா இழுக்காதே... நூறு தரம் உனக்கு சொல்லிட்டேன்... என் மண்டை காஞ்சிடிச்சி... அப்புறம் நடக்கறதே வேற?" "டேய்... இப்ப ன்னாங்கறடா நீ?" சின்னசாமிக்கு மூக்கிற்கு மேல் கோபம் கிளம்பியது. "வெளிய வந்ததும் மேட்டரு என்னான்னு வெவரமா சொல்றேன் சின்னு... இப்போதைக்கு இந்தப் பையனோட மோதற வேலை மட்டும் வேணாங்கறேன்... தெளிவா சொல்றேன்... இவனை விட்டுடுங்க... பையன் எனக்கு ரொம்ப வேண்டியவன்..." கனகு சின்னசாமியிடம் குழைவான குரலில் கெஞ்சினான். கண்களில் எப்போதும் இருக்கும் அவன் நிதானம் குறைந்து பதட்டம் மெல்ல மெல்லக் கூடிக்கொண்டிருந்தது.

"ன்னடா மாமூ... இவன் ஏன் இப்டீ பூச்சி காட்றான்? பொடியன் இவனுக்கு வேண்டப்பட்டவன்னா பிகரும் நமக்கு சொந்தமானவதானே...?'' மன்னாரு திரும்ப திரும்ப தான் காலையில் விட்டுக்கொண்ட குவார்ட்டரின் போதை இன்னும் முழுவதுமாக குறையாத நிலையில் அசிங்கமாக இளித்தான். "பூச்சி காட்லே மன்னாரு... உனக்கு கிளீனாச் சொல்றேன்... நானும் உன்னை மாதிரி ஒரு காலத்துல பொறுக்கிதான்... ஒரு காலத்துல அடியாளுதான்... யோக்கியமா பொழைக்கலைதான்." "ன்னனாடா மாமூ... இதான்டா இவங்கிட்ட பெரிய ரொஷ்ட்டு.. ஆன்னா... ஊன்ன்னா.. மகா பாரதக் கதையெல்லாம் சொல்லுவான்..." "மன்னாரூ... உன்னை மாதிரி எச்சை சோறு திங்கறவன் நான் இல்லே. இன்னயத் தேதிக்கு ஒழைச்சு பொழைக்கறேன் நான். உன்னை மாதிரி குடிகாரன் இல்லே. பீடி புடிக்கறவன் இல்லே. புழுத்துப்போன கூதியாளுங்களுங்க பின்னால சுத்தறவன் இல்லே. நல்லாக் காதைத்தொறந்து கேட்டுக்க. உன்னை மாதிரி ஆளை செகண்டுல போட்டுத்தள்ளறதுக்கு இன்னைக்கும் என் ஒடம்புல நெறையவே தெம்பு பாக்கி இருக்கு." "டேய்... ஓவரா பேசற நீ... நல்லால்லே..." மன்னாரு திரும்பி கனகசபையை முறைத்தான். தன் விரல்களின் நடுவிலிருந்த ப்ளேடை அழுத்திக்கொண்டான். "ஸ்டீரிங் புடிக்கற கைடா... ஹொங்த்தா.... ப்ளேடை காட்டறியா நீ எனக்கு? என்னைப்பத்தி உனக்கு நல்லாத் தெரியும்... எங்கூரு அருவாளை எடுத்தேன்... போட்டுத்தள்ளிடுவேன்... பீஸ் பீஸா போயிடுவே... அப்புறம் என்னைக் கெட்டவன்னு சொல்ற மாதிரி வெச்சுக்காதீங்க... ஆமாம்..." கனசபை தன் பேண்டை இறுக்கும் பாவனையில் கத்தியை உருவ நினைத்தான். "மன்னாரூ... காத்தாலேருந்து பாத்துகினு இருக்றேன்.. இந்த கனகு ஏதோ உள்சீட்டு ஆட்றான்டா... மொதல்லே இவனுக்கு இன்னைக்கு கெடா வெட்டி இவன் அக்கவுண்டை ஜப்ஜாடா செட்டில் பண்ணிட வேண்டியதுதான்..." கனகசபையை திரும்பி முறைத்தான் சின்னசாமி... * * * * * "காமூ... அவனேதான்... நான் நினைச்சது நடந்திடிச்சி... வெள்ளையில கறுப்பு கோடு போட்ட அரைக்கை சட்டை... காக்கி பேண்ட்... அவன்தான் கனகசபை... என்னோட பரம எதிரி..." மூர்க்கத்துடன் முணகினான் ரமணி. "ரமணீ... நமக்கு எதிரிகளே வேண்டாம்டா... ஒருத்தனை எதிரின்னு நினைச்சுட்டா வாழ்க்கையில நாம நிம்மதியா இருக்க முடியாதுப்பா..." ரமணியை நெருங்கி அவன் இடுப்பை உரசிக்கொண்டு நின்றாள் காமாட்சி. நிஜமாவே ஆண்டவன் ஆண்டவன்னு சொல்றாங்களே... அவன் விளையாடற விளையாட்டெல்லாம் என்னைக்கும் விசித்திரமாத்தான் இருக்கு... ரமணியின் முகத்தில் ஓடிய உணர்ச்சிகளை நல்லத்தம்பி கவனத்துடன் படித்துக்கொண்டிருந்தார். அதே நேரத்தில் தன்னெதிரில் வந்து நின்ற கனகசபையின், பார்வை ஓடியவிதத்தையும், அவன் முகத்தில் தெரிந்த உணர்வுகளையும் கவனிக்காமலில்லை. "சின்னசாமீ யாருய்யா... ராஜேந்திரன் சார் போன் பண்ணது உனக்காவத்தானே?" "ஆமா சார்... நான்தான் சின்னசாமீ... ஆனா நீங்க நடுவால நின்னு பஞ்சாயத்து பண்ணி மேட்டரை முடிக்கற மாதிரி எனக்குத் தெர்லே..." "டேய்... அடங்குடா... உன் மச்சான் ஆடியிருக்கற கூத்துக்கு கொறைஞ்சது ஏழு வருஷம் கம்பி எண்ணியே ஆகணும். இதை நல்லா ஞாபகத்துல வெச்சுக்கோ..." நல்லத்தம்பியின் முகத்தில் புன்முறுவல் இன்னும் மீதியிருந்தது. "சார்... வண்டி ஒன்றரை லட்சம் குடுத்து வாங்கினது... அப்பளமாக்கிட்டான்... கருப்பு கோட்டு ஆளுங்களோட வந்தா நான் மெர்சலாயி ஓடிடுவேனா? ஏதாவது பாத்து போட்டு குடுக்கச்சொல்லுங்க.. வம்பு தும்பு எதுவும் இல்லாம நான் பாட்டுக்கு என் வழியிலே போயிடறேன்.." "இல்லேன்னா..." பேசிக்கொண்டே மன்னாரை நெருங்கினார் நல்லத்தம்பி. இறங்காத போதையில் கோணல் சிரிப்பு சிரித்துக் கொண்டிருந்தவன் முகத்தில் பளீரென ஓங்கி ஒரு அறை விட்டார். உதட்டின் ஓரத்தில் உப்புக்கரித்தது அவனுக்கு. "நீங்க பண்றது கொஞ்சம் கூட நல்லால்லே சார்..." தன் கை கால்களை உதறிக்கொண்டு தான் உட்கார்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தான் சின்னசாமி. "இந்த பேமானி விரல்லே என்னாடா சுத்திகினு வந்துருக்கான்...? பிளேடோட வந்து நிக்கறான்டா... என்னத் தைரியம்டா இந்த நாயிக்கு... ஸ்டேஷனுக்கு யார் மூஞ்சிலே பூரான் வுடற ப்ளான்லே இவன் வந்திருக்கான்?" "த்தேவடியா மவனே.. பூரானா வுட்றே...! உன்னை உள்ளேத்தள்ளி வுட்டு ஆட்றேன்டா ராடு... மன்னாரின் தலைமுடியை பிடித்து உலுக்கி அவன் தலையை சுவற்றில் மோதினார்." சின்னசாமிக்கு வயிற்றில் இலேசாக புளி கரைத்தது. "இப்படி கிட்ட வாடா நாயே... நீ என்னடா வெச்சிருக்கே இடுப்புலே... தொட்டு தொட்டுப் பாக்கறே...? பளீரென அடுத்த அறை கனகுவின் இடது தாடையில் விழுந்தது." போலீஸ் ஸ்டேஷனின் நடைமுறையை அன்றுதான் வாழ்க்கையில் முதல் முறையாக பார்க்கும் காமாட்சி உடல் நடுங்கினாள். ரமணியின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டாள். எஜமானன் மனப்போக்கு அவனுடன் பணிபுரியும் சேவகன் அறிந்திருக்கவேண்டும். அப்போதுதான் எந்த தொழிலுமே சரியாக நடக்கும். நல்லத்தம்பியின் குணத்தையும், அவர் ஆடும் ஆட்டத்தையும் துல்லியமாக புரிந்துகொண்டிருந்த கான்ஸ்டபிள் கன்னியப்பன், மன்னாரின் தலையை தன் வலது கையால் உலுக்கி இடது கையால் வேக வேகமாக நாலு முறை அவன் கன்னங்களில் அறைந்தான் கன்னியப்பன். முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் மன்னாரின் மீதும், கனகுவின் மீதும் இப்படி ஒரு திட்டமிட்டத் தாக்குதல் நடத்தப்படும் என சுத்தமாக எதிர்பார்த்திராத சின்னசாமி அரண்டு போய் காற்று போன பலூனாக நின்றவன் வாயிலிருந்து வார்த்தைகள் எதுவும் எழவில்லை. மன்னாருக்கு நடந்த பூஜையை கண்ட கனகசபை எந்த நேரத்திலும் தனக்கு மேலும் அடிவிழலாம் என்ற அச்சத்தில், தான் நின்ற இடத்திலிருந்து மெல்ல நழுவி தன் இடது தாடையை தடவிக்கொண்டே, சற்றே பின்னால் நகர ஆரம்பித்தான். "டேய்.. அங்கேயே நில்லுடா... உன்னை நான் போகச்சொன்னேனா...? நீதான் இவனுங்களுக்கு வண்டி ஓட்டற கனகுவா? உன்கூட பொட்டலம் போடறவன் இருப்பானே அவன் எங்கடா? பொட்டலம் கட்டற வேலையை வுட்டுடு... மவனே என் கையில நேருக்கு நேர் மாட்டினே... அப்புறம் உனக்கு ஆயுசுக்கும் புழங்க அர்சி சோறும்... கீரை கூட்டும்தான்..." "பொட்டலம் பத்தீல்லாம் எனக்கு ஒண்ணும் தெரியாது சார்... கூலி குடுக்கறவங்களுக்கு வண்டி ஓட்டற டிரைவர் சார் நான்..." கனகசபை வாய்க்குள்ளேயே முனகினான். "சட்டுபுட்டுன்னு பொட்டியைக் கட்டிக்கினு இன்னிக்கே நீ வண்டியேறிடணும்... இந்த ஏரியாவுலேயே நீ இருக்கக்கூடாது... மவனே நீ என் கண்ணுலே திரும்பவும் பட்டே... நிக்க வெச்சு கொளுத்திடுவேன்... சொல்லிட்டேன்..." நல்லத்தம்பி கனகசபையை நோக்கித் தன் கையிலிருந்த லட்டியை ஆட்டினார். "இங்க எனக்கு நியாயம் கெடைக்காது சார்.. உங்களை நான் எங்கப் பாக்கணுமோ அங்கே பாத்துக்கறேன் சார்... இன்னைக்கே இந்த மேட்டருக்கு ஒரு முடிவு கட்டறேன்..." சின்னசாமி விறுவிறுவென மன்னாரை இழுத்துக்கொண்டு ஸ்டேஷனை விட்டு வெளியில் நடந்தான்..." * * * * * "டேய்.. குடிகார நாயே... பூரான் வுடணும்ன்னா... ஸ்டேஷனுக்குள்ள சாமானை எடுத்துகினு வாடான்னா அர்த்தம்...? காரியத்தையே கெடுத்திட்டியேடா... கேணப்புண்டை..." ஸ்டேஷனுக்கு வெளியில் மன்னாருக்கு அர்ச்சனை நடத்திக்கொண்டிருந்தான் சின்னசாமி. "மன்னிச்சுடு தலை... அவன் வெளிய வரட்டும்... இன்னிக்கு சாயங்காலத்துக்குள்ளே அவனுக்கு மொத்தமா சமாதி கட்டிடலாம்..." மன்னாரு ரத்தம் வழியும் தன் உதட்டைத் துடைத்துக்கொண்டிருந்தான். "கனகு... சட்ன்னு வண்டியை எட்றா..." காரின் பின்கதவருகில் நின்ற சின்னசாமி கூவினான். ரமணி வெளியில் வருவானா என ஸ்டேஷனுக்குள் தன் பார்வையை ஓடவிட்டுக்கொண்டு கல்லாக நின்றிருந்தான் கனகசபை. "மிஸ்டர் ரமணி.. இந்தாங்க உங்க செல் போன்... ரெண்டு நாளைக்கு கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க... உங்க ஃப்ரெண்டாம்... கல்யாணம்ன்னு காலையில பேசினாரு... போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன்னு சொன்னதும் ரொம்பவே பதறிப்போயிட்டாரு..." நல்லத்தம்பி இதமாக புன்முறுவல் செய்தார். "சார்... இவங்களாலே எங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காதே?" காமாட்சியின் கண்களில் இலேசான அச்சமிருந்தது. "ஹூம்... ப்ராப்ளம் எதுவும் இருக்கக்கூடாது... ஆனாலும் பொறுக்கி பசங்க பொறுக்கி பசங்கதான்... ரவுடி ரவுடிதான்... இது என்னோட பர்சனல் செல் நம்பர்... உங்களுக்கு என்னோட உதவி எதாவது தேவைன்னா எப்ப வேணாலும் என்னை நீங்க கூப்பிடலாம்..." "தேங்க் யூ சார்... பிரச்சனை முடிஞ்சிடுச்சின்னு நான் நினைச்சேன்?" காமாட்சி தீனமாக அவரைப் பார்த்தாள். "மிஸ் காமாட்சி... பொறுக்கிங்களோட சைக்காலஜி உங்களுக்கெல்லாம் சட்டுன்னு புரியாது... இப்ப பாத்தீங்கதானே... மன்னாருங்கற ஸ்விட்சை ஆன் பண்ணதும்... சின்னசாமிங்கற லைட்டு ஆஃப் ஆயிடிச்சில்லே... பிரச்சனை முடிவுக்கு வந்திடுச்சின்னுதான் நான் நெனைக்கிறேன்..." சிரித்தார் அவர். "சார் இந்த கம்பெளெய்ண்ட்... நான் கையெழுத்து போட்டு கொடுத்திருக்கேன்..." ரமணி இழுத்தான். "டோண்ட் வொர்ரி.. அது பாட்டுல அது எங்கிட்ட இருக்கட்டும்... ஆல் த பெஸ்ட் டு யூ... உங்க கல்யாணத்துக்கு என்னை நீங்க கூப்பிடுவீங்கன்னு நினைக்கறேன்... ஐ விஷ் டு பீ வித் யூ ஆன் தட் டே..." "நிச்சயமா சார்..." காமாட்சி வெட்கத்துடன் சிரித்தாள். சிரித்தவளின் முகம் இலேசாக சிவந்திருந்தது. "சுப்பிரமணி... கனகசபையை இதுக்கு மேலயும் வெட்டணும்ன்னு நினைக்காதீங்க... அவன் கண்ணுல பாசத்தை பாத்தேன் நான்... உங்கக்கூட ஒட்டிக்க விரும்பறான் அவன்..." "என்ன சொல்றீங்க சார்...?" ரமணி திடுக்கிட்டுப் போனான். "இருவத்தஞ்சு வருஷமா பொறுக்கி... ரவுடி.. திருட்டுப்பசங்க... குடிகாரனுங்க நடுவுல இருக்கேன்... கெட்டவன் எப்போதுமே கெட்டவனா இருக்கறது இல்லே... கனகசபை கெட்டவனுங்க கூட இருக்கான்... அவனை முழுசா நல்லவனா மாத்தறதுக்கு கொஞ்சம் முயற்சி பண்ணுங்க... சமூகத்துல இருக்கற பொறுக்கிகளோட எண்ணிக்கையில ஒண்ணு கொறையட்டுமே... இதுக்கு மேல அருவாளை நீங்க கையில எடுக்கக்கூடாது... யூ மே கோ நவ்.." "தேங்க் யூ சார்..." * * * * * "மிஸ்டர் சுப்பிரமணி... நீங்க வந்த ஸ்கூட்டரை நம்பாளு எடுத்துகிட்டு வருவான்... நீங்க ரெண்டு பேரும் கார்ல உக்காருங்க..." பார்த்தசாரதி புன்னகைத்தார். "சார்... அந்த சின்னசாமிகிட்ட ஒரு விஷயத்தை சொல்லிட்டு வந்துடறேன்..." "ம்ம்ம்... ஏன் பாம்பு புத்துல கைவிடறீங்க?" பார்த்தசாரதி தன் நெற்றியை தடவிக்கொண்டார். "நீங்க பயப்படாதீங்க... அவனுங்களால என்னை ஒண்ணும் பண்ணிடமுடியாது..." ரமணியின் முகத்தில் தீர்மானம் இருந்தது. "ரமணீ... சொன்னாக் கேளு.. இது என்ன விளையாட்டுப்பா..?" காமாட்சி அவன் கையை இறுக்கிப் பிடித்தாள். "நான் ஆரம்பிச்ச விளையாட்டை நான்தானே முடிச்சு வெக்கணும்..." ரமணியின் முகத்தில் ஒரு தெளிவு வந்திருந்தது.

ரமணி காமாட்சியின் கையை வேகமாக உதறினான். சின்னசாமியை நோக்கி மெல்ல நடந்தான். பார்த்தசாரதி கண் காட்ட அடுத்த காரின் அருகில் நின்றிருந்த இருவர் உஷாரானார்கள். தன்னை நோக்கி நிதானமாக நடந்துவரும் ரமணியைக்கண்ட சின்னசாமி ஒரு கணம் அதிர்ந்தான். இப்ப எதுக்கு எங்கிட்ட வர்றான் இவன்...? நிஜமாவே இவனுக்கு தில்லு அதிகம்தான். ரொம்ப தைரியசாலிதான். மனதுக்குள் ஒரு நொடி அதிர்ந்தவன் வியப்புடன் நின்றான். "அயாம் சாரி... சின்னசாமி சார்... வீணா எவன் வம்புக்கும் போறவன் நான் இல்லே... அந்தப்பசங்களை நான் வேணும்ன்னு அடிக்கலே... எனக்கு வேண்டியவங்களை அவங்க தப்பா பேசினானுங்க... தொடப்பாத்தானுங்க... வேணாம்ன்னு நான் சொன்னத அவனுங்க கேக்கல... ரவுடித்தனம் பண்ணாணுங்க... அவனுங்கதான் மொதல்லே என்னை அடிச்சானுங்க... நான் திருப்பி அடிச்சேன்... இத்தோட நாம நிறுத்திக்கலாம்... " "டேய்... உன் வயசுக்கு ஏத்த பேச்சை பேசுடா... பெருசா ஞாயம் பேச வந்துட்டான்..." சின்னசாமி தன் வேட்டியை மடித்துக் கட்டினான். அவன் வேட்டியை தூக்கியதும், துள்ளிக்கொண்டு ரமணியை நெருங்கிய மன்னாரின் காலை தன் காலால் கனகசபை தட்டிவிட அவன் தலைக்குப்புற மண்ணில் கவிழ்ந்து விழுந்தான். தரையில் விழுந்தவன் கழுத்தில் தன் காலை வைத்து அழுத்திக்கொண்டான் கனகசபை. "உங்களைப் பாத்து பயப்படலே நான்... உன் பூரானுக்கெல்லாம் பயப்படறவன் நான் இல்லே.. என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா உன் அடியாளு கனகசபையை கேளு... ஓரே செகண்டுல உன்னை இங்கேயே, இப்பவே, என்னால ரெண்டா கூறு போட முடியும்..." ரமணியின் கண்களில் மிருகம் எழுந்து ஆடியது. அவன் முகத்தில் இருந்த தெளிவு பறந்துவிட்டிருந்தது. ரமணியும் தன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டான். "ன்னடா... ஹோங்த்தா என்னை மிரட்டறியா நீ?" "எங்காத்தளை பத்திப் பேசாதேடா நாயே..." உறுமினான் ரமணி. "ன்னடா... நீ என்னா பெரிய மயிரா... பெருசா எனக்கு வித்தை காட்றீயா..? பொடரியிலே ஒண்ணு போட்டேன்... கீமாவா ஆயிடுவே..." சின்னசாமி, எக்குத்தப்பாக ரமணியைப் பற்றி ஒன்றும் தெரியாமல் உளறினான். கனகசபை சட்டென சின்னசாமியின் இடது கையைப் பிடித்தான். சின்னசாமி அவன் கையை உதற அவன் காரின் பேனட்டில் மோதி கீழே விழுந்தான். சின்னசாமி என்னை அடிப்போன்னு உதார் விட்டதும், கனகசபை எதுக்கு இவ்வளவு எமோஷன் ஆகிறான்? ரமணி திரும்பி கனகசபையைப் பார்த்தான். "சுப்பு... வேணாம்டா கண்ணு... உனக்கு வாழற வயசுடா... வீணா சண்டையை வளத்தாதே.. நான் சொல்றதைக் கேளுடா ராஜா..." கனகசபை மெல்ல எழுந்து அவர்களை நோக்கி வந்தான். "பொறம்போக்கு நாயே... ட்ரெய்லர் பாக்கறியாடா... " தன் இடது கையால் தன் எதிரில் நின்ற சின்னசாமியின் கழுத்தை விருட்டென வளைத்த ரமணி, அவனை தன்னை நோக்கி இழுத்தான். அவன் முகத்தில் தன் வலது கை முஷ்டியை மடக்கி ஓங்கி ஒரு குத்து விட்டான். சின்னசாமியின் மூக்கு சில்லு உடைந்தது. அவனைத் தன் மார்போடு இறுக்கி கொண்ட ரமணி அவன் கழுத்தை வலுவாக அழுத்தினான். மூச்சு திணறியது சின்னசாமிக்கு. ரமணியின் கரங்கள் இத்தனை இரும்பாக இருக்கும் என அவன் நினைத்திருக்கவில்லை. அடுத்த நொடியில் ரமணியின் வலது கையில் அரையடி நீளத்தில், உடைத்த தேங்காயை கீறி எடுக்கும் கூரான, ஸ்டீல் உளியொன்று பளபளப்பாக மின்னியது. மின்னிய உளி சின்னசாமியின் இடுப்பில் புதைந்து நின்றது. காமாட்சி ஓவென அலறினாள். ரமணியின் பின்னால் சென்றவர்கள் அவர்கள் இருவரையும் வெகு எளிதாக பிரித்து சின்னசாமியை உதறினார்கள். ரமணியை இழுத்துவந்து காருக்குள் திணித்தார்கள். ரமணி இந்த அளவுக்கு முரடனா? ஒரு கடைஞ்செடுத்த ரவுடி, பொறுக்கி மாதிரில்லா பிஹேவ் பண்றான்... சட்டு சட்டுன்னு இந்த அளவுக்கு கோவப்படற ஒரு முரடனோட எப்படி நான் குடும்பம் நடத்தப்போறேன்? தினம் தினம் இவன் வீட்டுக்குத் திரும்பி வர்ற வரைக்கும் வயித்துல நான் நெருப்பை கட்டிக்கிட்டுத்தான் உக்காந்திருக்கணுமா? முகத்தில் மிரட்சியுடன், மனதில் அதீத பயத்துடன் ரமணியை பார்த்து விழித்தாள் காமாட்சி. நெற்றியில் கழுத்தில், மார்பில், அடிவயிற்றில் என வியர்த்தவளின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. "காமூ... எதுக்குடீ இப்படி நடுங்கறே? இப்படில்லாம் பயந்தா இந்த உலகத்துல வாழமுடியாதும்மா..." ஆதரவாக தன் இடது கையை அவள் தோளில் போட்டவன், அவளைத் தன்னுடன் அணைத்துக்கொண்டான் ரமணி. இரண்டே நிமிடங்களில் தன் இயல்புக்குத் திரும்பிவிட்டிருந்தான் அவன். குரலில் எல்லையில்லாத அன்பு விரவியிருந்தது. "அந்தத் தேங்கா கீறி எடுக்கற கத்தி உன் இடுப்புல எப்படி வந்திச்சி ரமணீ...? இவ்வளவு நேரமா இடுப்புல சொருவிக்கிட்டு இருக்கியே... தவறிப்போய் உன்னையே கீறியிருந்தா என்னடா ஆகறது?" முன் சீட்டில் உட்கார்ந்திருந்த பார்த்தசாரதி தன் காதைத் தீட்டிக்கொண்டார். "கிச்சன் மேடையில என்னைக் கட்டிக்கிட்டு கிஸ்ஸடிச்ச மயக்கத்துலயே எழுந்து போய் தெருக்கதவை தொறந்தே நீ..." அவள் காதில் கிசுகிசுத்தான் ரமணி. "ம்ம்ம்..." காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த காமாட்சி, சட்டென ரமணியை நெருங்கி, தன் உடலை அவன் உடலோடு உரசினாள். அவள் கண்கள் நட்சத்திரங்களாக மின்னிக்கொண்டிருந்தன. காது ஜிமிக்கிகள் ஒன்றைப் போல ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன. "சித்தீ.. போலீஸ்காரா வந்திருக்கான்னு தெருவுல இருந்தே கூவினே..." ரமணிக்கு அவர்கள் பாஷை இன்னும் முழுவதுமாக பரிச்சயம் ஆகியிருக்கவில்லை. "சாதாரணமா பேசேன்... ஏன் கஷ்டப்படறே?" காமாட்சி சிரித்தாள். சிரிப்பில் ஒரு ஒயில் இருந்தது. ரமணியின் கை விரல்களை வலுவாக அழுத்தி நெறித்தாள். ஒய்யாரமாக தன்னை நோக்கி சிரித்தவளை கடித்துத் தின்றுவிட வேண்டும் போலிருந்தது ரமணிக்கு. "நீ கிச்சனை விட்டு வெளியிலே போனப்ப இந்த கத்தி என் கண்ணுல பட்டுது.. ஸ்டேஷனுக்கு போய்த்தானே ஆகணும்ன்னு எனக்குத் தெரியும். எதுக்கும் கையில இருக்கட்டுமேன்னு எடுத்து இடுப்புல செருகிக்கிட்டேன்..." ரமணி ஹோவென சிரித்தான். "ப்ளேடு வெச்சிருந்ததுக்கே அந்த மன்னாருக்கு அப்படி ஒரு விழுந்திச்சி.." குரலெடுத்து சிரித்தாள் காமாட்சி. "காமூ... துணிஞ்சவனுக்கு துக்கம் இல்லே... இதுதான் என் பாலிஸி... என்னை நினைச்சு ரொம்பக் கவலைப்படாதே... நான் நடக்கறது நடக்கட்டும்ன்னு இருக்கற நல்லவன்டீ நான்..." "உன் கை போற எடத்தைப் பாத்தா நீ நல்லவன் இல்லேன்னு எனக்குத் தோணுது..." தன் தோளில் கிடந்த ரமணியின் கை லேசாக கீழே இறங்குவதை உணர்ந்ததும் அதை அழுத்திப் பற்றினாள் காமாட்சி.. பற்றிய கரத்தை திருப்பி சட்டென தன் உதட்டை பதித்தாள். ரமணி உடல் சிலிர்த்தான். "மிஸ்டர் ரமணீ... இன்ஸ்பெக்டர் அவ்வளவு தூரம் சொன்னதுக்கு அப்புறமும், எதுக்கு நீங்க சின்னசாமி இடுப்புல கத்தியை வெச்சீங்க...? பார்த்தசாரதி தன் வழுக்கை மண்டையைத் தடவிக்கொண்டார். "காமாட்சி கேட்டப்ப, நல்லத்தம்பி சார்... ப்ராப்ளம் முடிஞ்சுப்போச்சுன்னுதான் நெனைக்கிறேன்னு லேசா இழுத்தாரு... நூறு சதவீதம் பிரச்சனை முடிஞ்சுப்போச்சுன்னு காமாட்சிக்கு நம்பிக்கையூட்ட நினைச்சேன் நான்." "ரமணீ என்ன சொல்றே நீ... புரியலே எனக்கு?" காமாட்சி அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். "மன்னாரும், கனகசபையும், நல்லதம்பிகிட்ட ஒதை வாங்கினதும்... சின்னசாமி புஸ் ஆனான்... பிரச்சனையே மொத்தமா புஸ் ஆவனும்ன்னா அதுக்கு ஒரே வழிதான் இருக்குன்னு எனக்குத் தோணுச்சு... அதான் சின்னசாமிக்கு நான் சின்னதா ஒரு டிரைலர் ஓட்டிக்காமிச்சேன்... இனிமே அவன் என்னோட முழு படத்தை எப்பவுமே பாக்க வர மாட்டான்..." காமாட்சி ரமணியின் முகத்தையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். கார் ஆஃபிஸ் காம்பவுண்டுக்குள் நுழைந்தது. காமாட்சியும் ரமணியும் காரைவிட்டு இறங்கி கட்டிடத்திற்குள் நுழைந்த போது, கையில் தன் ப்ரீஃப்கேசுடன் சங்கரன் குனிந்த தலையுடன், கட்டிடத்தைவிட்டு வெளியில் இறங்கிக் கொண்டிருந்தார். "சார்... வெயில்லே, இந்த நேரத்துல, எங்கப் போறீங்க? அதுவும் நடந்து போறீங்களே...? எந்த வேலையா இருந்தாலும் எங்கிட்ட சொல்லுங்க... நான் செய்யறேன்..." ரமணி அவரிடம் அக்கறையாக ஓடினான். "எல்லாம் உன் காமாட்சியோட அருள்தான்டா..." விரக்தியாக சிரித்தார் சங்கரன். அவர் சொன்னதைக்கேட்டதும் காமாட்சியின் முகம் சட்டென மாறியது. ரமணி திகைப்புடன் அவள் முகத்தைப் பார்த்தான். "என்ன சொல்றீங்க சார்...? நான் என்னப் பண்ணேன்?" காமாட்சி பதறினாள். "காமாட்சீ... ரெண்டு நிமிஷம் இரும்மா... கார்லே உன்னை நானே உன் வீட்டுல ட்ராப் பண்ணறேன்னு நேத்து சொன்னேன்... உனக்கு என்ன அவசரமோ...? நீ என்கிட்டே சொல்லாம கொள்ளாம ரமணி கூட ஓடினே... இதுல என் தப்பு எதாவது இருக்கா?" "சார்... நடந்தது என்னன்னா...?" ரமணி நடுவில் பேச முனைந்தான். தன் இடது கையை வீசி அவன் பேசுவதை தடுத்தார் சங்கரன். "ரமணீ... நல்லபாம்புகூட படம் விரிச்சு எழுந்து நிக்கும் போது அழகாத்தான்டா இருக்கும்... இந்த காமாட்சியும்... படம் எடுத்து நிக்கற பாம்பும் ஒரே ஜாதிடா.. இவகிட்ட நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு... இல்லே நீயும் ஒழிஞ்சு போயிடுவே..." "சார்.... நீங்க ஏதோ கோபத்துல இவங்களை தப்பு தப்பா பேசறீங்க..." ரமணியின் உதடுகள் துடித்தன. "ரமணீ.. சும்மா இருடா... எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கற தீராத ஒரு கணக்கைப் பத்தி உனக்குத் தெரியாது. சொன்னாலும் புரிஞ்சுக்கறதுக்கு உனக்கு வயசு பத்தாதுடா... இவளைப் பத்தி உனக்கு என்னடாத் தெரியும்?" "சார்... என் காமூவை, இவ... அவன்னு... மரியாதையில்லாம நீங்க பேசறது எனக்கு சுத்தமா பிடிக்கலை. இவ நீங்க நெனைக்கற மாதிரி பொம்பளை இல்லே..." ரமணியின் முகம் சிறிது சிறிதாக களையிழந்து கொண்டிருந்தது. "டேய்... நிறுத்துடா... ஒரே நாள்லே காமாட்சி மேடம்.. உனக்கு காமூவா மாறிட்டா... இந்த நிலைமை திரும்பவும் மாற எவ்வளவு நேரம் ஆகும்டா...?" "சங்கரன் சார்... அயாம் சாரி.. நான் ஒரே ஒரு நிமிஷம் பேசலாமா?" இதுவரை பேசாமல் இருந்த காமாட்சி தன் வாயைத் திறந்தாள். "ரமணீ... உன் காமூ... அந்தக் கிழவன்கிட்ட என்னைப்பத்தி கண்டதையும் சொல்லி, தன்னோட வயித்தெரிச்சலை தீத்துக்கிட்டா... அவனும் இவ பேச்சைக் கேட்டுக்கிட்டு என் வயித்துல அடிச்சுட்டான்... என்னை பேசவே விடலை... சிம்பிளா சொன்னா... பொறுமையா இருந்து, நேரம் கிடைச்சதும், என்னை இவ பழிவாங்கிட்டா... என் வேலை போயிடிச்சி... இதுக்கு மேல இவளால என்ன என்னடா பண்ண முடியும்...?" "சார்.. இப்ப நீங்க யார் பேசறதையும் கேக்கற மூடுல இல்லேன்னு எனக்குத் தோணுது... உங்கக்கிட்ட அப்புறமா நான் பேசறேன்..." ரமணி அவரை நோக்கி தன் இரு கைகளையும் சேர்த்துக்கூப்பினான். "காமாட்சீ... ஆர் யூ ஹேப்பி நவ்? காமாட்சியின் முகத்தை ஒரு நொடி கூர்ந்து நோக்கிய சங்கரன் அதற்கு மேல் ஏதும் பேசாமல் தன் தலையை குனிந்தவாறு விறுவிறுவென கேட்டை நோக்கி நடக்கத்தொடங்கினார். "சார்..." உலகில் இருக்கும் அனைவருக்கும் ஒரே நீதி என்பது என்றுமே கிடையாது என்று சொன்ன தன் தந்தையின் முகம் சட்டென மனதில் வந்து ஆட, வாயில் வார்த்தைகள் ஏதும் வராமல், கலங்கும் கண்களை முந்தானை முனையால் துடைத்துக் கொண்ட காமாட்சி தன் அலுவலக அறையை நோக்கி நடந்தாள். ட்ரெயின் செங்கல்பட்டை விட்டு கிளம்பியதும், தேன்மொழி காற்றில் பறந்து பறந்து நெற்றியிலும், முகத்திலும் வந்து விழுந்து கொண்டிருந்த முடிக்கற்றைகளை வாரி இறுக்கமாக ரப்பர் பேண்டால் முடிந்துகொண்டாள். பேப்பர் சோப்பைக் குழைத்து முகத்தை கழுவி நிதானமாகத் துடைத்தாள். டால்கம் பவுடரை தன் ஹேங்கியில் கொட்டி, முகத்தில் மிக மிக இலேசாக பூசிக்கொண்டாள். கண்ணாடியில் உதட்டை குவித்து தன் முகஅழகை தனக்குத்தானே ஒரு முறை ஆர்வத்துடன் ரசித்தாள். தேனு... உனக்கு ஏன்டீ இந்த சந்தேகம். நீ அழகாத்தான்டீ இருக்கே. 'ஐ லவ் யூ வெரி மச் தேனூ'ன்னு, நேத்து ஏறக்குறைய இதே நேரம், உன் கையைப் பிடிச்சிக்கிட்டு ஒருத்தன் நின்னானேடீ... மனதுக்குள் உற்சாகம் பொங்கி வர அந்த நேரத்தில் அவள் தன்னை மிகவும் திருப்தியாக உணர்ந்தாள். சன்னலுக்கு வெளியில் வானம் இருட்டிக்கொண்டு, மெலிதாக குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது.. மழை வருமா? வந்தா நல்லாருக்கும். எழும்பூர்ல இறங்கினதும், ஹோட்டல்லே எங்கேயாவது சூடா ஒரு பில்டர் காஃபி குடிக்கணும். இந்த வெதருக்கு காஃபி குடிச்சா வாய்க்கும், மனசுக்கும், ரொம்பவே இதமா இருக்கும்... ம்ம்ம்... வீட்டுல இருந்தா அம்மாவை கொஞ்சினா, கொழையடிச்சா, எத்தனை தடவை வேணாலும் அலுக்காம காஃபி போட்டு குடுப்பாங்க. வெராண்டாவுல பெரம்பு சேரை போட்டு உக்காந்துகிட்டு, இரண்டு காலையும் தூக்கி ஒயரமா சுவத்து மேல வெச்சிக்கிட்டு மழை பேயறதைப் பாத்துக்கிட்டே ஜம்னுன்னு காஃபியைக் குடிச்சா ஆனந்தமாயிருக்கும். இதோட திரும்பவும் பொங்கலுக்குத்தான் ஊருக்கு போக முடியும். பொங்கலுக்கு இன்னும் மூணுமாசம் முழுசா பாக்கியிருக்கே? காலையில ஊரைவிட்டு கிளம்பின நான் இன்னும் சென்னைக்கே வந்து சேரலை. அதுக்குள்ள ஊருக்கு திரும்பி போறதை யோசனை பண்றேன். சரியான லூசு நான். உதட்டில் இளம் புன்னகை மலர்ந்தது அவளுக்கு.

சென்னையில யாரை நான் அதட்டறது? நான் வாயைத் திறக்கறதுக்கு முன்னாடியே, தன் கண்ணாலேயே என் ரூம் மேட் மைதிலி, எதுக்கெடுத்தாலும், சரியான லூசுடீ நீன்னு, செல்லமா என்னை அதட்டி உருட்டிடுவா. ஒண்ணாம் நம்பர் இராட்சசி. ஆனா அழகான ராட்சசி. பேச்சுலத்தான் அதட்டல். உருட்டல். மிரட்டல் அவ ஒரு சொக்கத்தங்கம்ன்னு பழகினவங்களுக்குத்தான் தெரியும். மாநிறத்துக்கும் ஒரு இழை கம்மியாத்தான் இருப்பா. இந்த ஊர்ல தும்பை பூவை தேடினாலும் கிடைக்குமா? மைதிலிக்கும் அவ மனசென்னவோ அந்தப் பூவை மாதிரி அழகான வெள்ளைதான். மைதிலி ரூமுக்கு வந்திட்டு இருப்பாளா? ஒரு கால் பண்ணிப் பாக்கலாமா? ஸ்டேஷனுக்கு வரச்சொல்லலாமா? தன் இருக்கையில் வந்தமர்ந்ததும், காலுக்கடியில் இருந்த டிராவல் பேகையும், கைப்பையையும் சரிபார்த்துக்கொண்டாள் தேன்மொழி. ஹேண்ட்பேகிலிருந்த செல்லை எடுத்து ஆன் செய்ததும், மேசேஜ் ஐகான் விட்டு விட்டு மின்ன ஆரம்பித்தது. "ஓ மை காட்..." தன்னுடைய மாதுளை நிற கீழுதட்டை அழுத்தமாக ஒரு முறை கடித்துக்கொண்டாள். பக்கத்து சீட்டு மாமியோட பேச ஆரம்பிச்சதும், கல்யாணத்துக்கு ரிப்ளை பண்ணணும்ன்னு நினைச்சதை சுத்தமா மறந்தேப் போயிட்டேனே? இப்ப ஒரு மெசேஜ்ஜை சட்டுன்னு அவனுக்கு தட்டிவிட்டுடலாமா? வலது கையைத் திருப்பி வாட்சில் மணியைப் பார்த்தாள். நேரம் ஆறைத் தொட்டுக்கொண்டிருந்தது. சே... சே... நேத்து அவன் சொன்ன குட் நைட்டுக்கும், காலையில அனுப்பிச்ச குட்மார்னிங் மேசேஜுக்கும் இப்ப நான் பதிலனுப்பினா, எவனாயிருந்தாலும் சுத்தமா எனக்கு பேசிக் மேனர்ஸே இல்லேன்னு சிரிப்பான். ஏன்..? கல்யாணத்துக்கு என் மேல கோவமும் வரலாம்... மெசேஜ் ஐகானை அழுத்தினாள். நண்பகலுக்கு மேல் இரண்டு மணிவாக்கில் வந்திருந்த அந்த குறும்செய்தியை கல்யாணம்தான் அனுப்பியிருந்தான். உதட்டில் தோன்றிய மெல்லிய புன்முறுவலுடன் படிக்க ஆரம்பித்தாள். 'மிஸ் தேன்மொழி...’ மெசேஜ்ஜை ரொம்பவே ஃபார்மலா ஆரம்பிச்சிருக்கானே? மனசின் ஒரு மூலையில் இலேசாக ஏதோ ஒரு மணியடித்தது. 'தேங்க் யூ ஃபார் எவரிதிங்... நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க... ஒருத்தர் நிஜமாவே பிஸியா இருக்கறதை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. லீவு முடிஞ்சு ட்ரெய்ன்ல ஊருக்குத் திரும்பி போற நீங்க, இந்த அளவுக்கு பிஸியா இருப்பீங்கன்னு சத்தியமா நான் நினைக்கலே. தெரியாத்தனமா, இரண்டு தரம் உங்களுக்கு மெசேஜ் அனுப்பி, உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... அயாம் சாரி...' ஓ... மை காட்... நான் நினைச்ச மாதிரியே ஆயிடிச்சே...! ப்ச்ச்..." தேன்மொழி தன் நெற்றியை ஒரு முறை அழுத்திக்கொண்டவாறே தன் உதட்டைக் கடித்துக்கொண்டாள். ‘இதுக்கு மேல உங்களை நான் எதுக்காகவும் தொந்தரவு பண்ணமாட்டேன்... யூ மே ஃபர்கெட் த ஹோல் எபிஸோட் அட் ஒன்ஸ்... ஆல் த வெரி பெஸ்ட் டூ யூ...' தட் தடக்... தடக்... தட் தடக்... தடக்... தட் தடக்... தடக்... தட் தட் தடக் தடக்... தட்... சன்னலின் வழியாக வெளியே நோக்கினாள். அசுர வேகத்தில் தாம்பரம் ப்ளாட்பாரத்தை பின்னால் தள்ளிக்கொண்டு, எழும்பூரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது ட்ரெய்ன். சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஓடும் வேகத்தில், காற்றில் பேப்பர் குப்பைகளும், காலி பிளாஸ்டிக் பைகளும், இங்குமங்கும் எகிறி எகிறி பறந்தன. கீழே விழுந்து புரண்டன. 'உங்க போட்டோவை பாத்ததுமே, உங்களை நான் லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். உங்களை நேர்ல பாத்ததும், அந்த முடிவு எனக்குள்ள இன்னும் உறுதியாயிடுச்சு... ஐ லவ் யூ தேன்மொழி... ஐ லவ் யூ வெரி மச்...' நேற்று தன்னை பெண் பார்க்க வந்தபோது, மாடியில் தாங்கள் இருவரும் தனியாக இருந்த அந்த பத்து நிமிடங்களில், தன் கையைப் பிடித்துக்கொண்டு, ஓரக்கண்ணால் தயக்கத்துடன், தன்னை கெஞ்சலாக பார்த்து, தன்னை காதலிப்பதாக சொன்ன கல்யாணத்தின் முகம் அவள் மனக்கண்ணில் வந்து நின்றது. ஒரே நாள்லே இப்படி ஒரு மெசேஜ் எனக்கு அனுப்பியிருக்கானே? தன் இதயம் வேகமாக அடித்துக்கொள்ள கல்யாணம் தனக்கு அனுப்பியிருந்த குறும்செய்தியை மீண்டும் ஒரு முறை நிதானமாக படிக்க ஆரம்பித்தாள் தேன்மொழி. 'மிஸ் தேன்மொழி... தேங்க் யூ ஃபார் எவரிதிங்... நான் எதிர்பார்த்ததுக்கு மேலேயே நீங்க ரொம்ப பிஸியா இருக்கீங்க... ஒருத்தர் நிஜமாவே பிஸியா இருக்கறதை புரிஞ்சுக்க முடியாத அளவுக்கு நான் முட்டாள் இல்லை. லீவு முடிஞ்சு ஊருக்கு ட்ரெய்ன்ல திரும்பி போற நீங்க இந்த அளவுக்கு பிஸியா இருப்பீங்கன்னு சத்தியமா நான் நினைக்கலே.

நேத்துலேருந்து ரெண்டு தரத்துக்கும் மேல மெசேஜ் அனுப்பி, உங்களை நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்... அயாம் சாரி... இதுக்கு மேல உங்களை நான் எதுக்காகவும் தொந்தரவு பண்ண மாட்டேன்... யூ மே ஃபர்கெட் த ஹோல் எபிஸோட் அட் ஒன்ஸ்... ஆல் த வெரி பெஸ்ட் டூ யூ...' தேன்மொழியின் முகம் சட்டென விழுந்துவிட்டிருந்தது. கல்யாணத்துக்குப் போன் பண்ணி, உங்க மெசேஜை வேணும்ன்னு இக்னோர் பண்ணலேன்னு சொல்லி... சாரின்னு ஒரு வார்த்தை சொல்லிடலாமா? ஃப்ரெண்ட்ஷிப் ஆரம்பிக்கறதுக்குள்ளவே பிரச்சனை ஆரம்பிச்சிடிச்சா? அவள் மனதுக்குள் இந்த எணணம் எழுந்ததும், கல்யாணத்தின் நம்பரை தேட ஆரம்பித்தாள். தேனு... சாரின்னு சொல்றதுலே தப்பே இல்லே... ஆனா கல்யாணம் இந்த மெசேஜ்ஜை ஏன் அனுப்பியிருக்கான்...? ஒரு செகண்ட் யோசனை பண்ணு... அவசரப்படாதே... அவள் மனதின் மூலையிலிருந்து விருட்டென ஒரு குரல் எழுந்தது. கல்யாணத்துக்கு நீ பதில் அனுப்பலே... உண்மைதான்... ஆனா அதை நீ திட்டமிட்டு செய்யலே. இட் ஹேப்பண்ட்... அவ்வளவுதான். தேன்மொழியின் கையிலிருந்த செல் அவள் கரத்திலிருந்து நழுவி அவள் மடியில் விழுந்தது. முதுகின் பின்னால் கிடந்த முடியை இழுத்து மார்பில் போட்டுக்கொண்டாள். முடியின் நுனியை அர்த்தமில்லாமல் முறுக்கினாள். நீவினாள். மீண்டும் முறுக்கினாள். சன்னலுக்கு வெளியில் தன் பார்வையை ஒரு முறை ஓடவிட்டாள். கோடம்பாக்கமா? மாம்பலமா...? டிரெய்ன் சீறிக்கொண்டு போனது. கல்யாணத்தின் அந்த செய்தி தேன்மொழியை சற்றே உலுக்கிவிட்டது. ஏனோ தெரியவில்லை. அவள் முகம் மெலிதாக சுருங்கிப் போனது. முகத்தில் இலேசான கலக்கத்துடன் ரயில் பெட்டிக்குள் தன் பார்வையை திருப்பினாள். பக்கத்து சீட்டில் பயணம் செய்த மாமியும் அவர் கணவரும் விழுப்புரத்தில் இறங்கிவிட்டிருந்தனர். ஏறக்குறைய பெட்டியே காலியாக இருந்தது. செருப்பை உதறிவிட்டு, ஜன்னலில் சாய்ந்து கொண்டு காலை சீட்டில் நீட்டி சவுகரியமாக உட்கார்ந்துகொண்டாள். விழிகளை மூடிக்கொண்டாள். " "ஐ லவ் யூ தேனூ..." மூடிய விழிகளுக்குப்பின்னால் கல்யாணம் வந்து நின்றான். புருவங்களுக்கு இடையில் இலேசாக வலிப்பது போலிருந்தது. வலது கை பெருவிரலால் அழுத்திவிட்டாள். ட்ரெய்ன் எழும்பூர் ஸ்டேனில் நின்றது. ஒரு முறை குலுங்கி முன்னும் பின்னும் ஆடியது. பரபரப்பில்லாமல் மற்ற பயணிகள் இறங்கும் வரை காத்திருந்துவிட்டு, தோளில் தன்னுடைய கருப்பு நிற கைப்பையை மாட்டிக்கொண்டவள், தன் ட்ராவல் பேகை இழுத்துக்கொண்டு ப்ளாட்ஃபார்மில் இறங்கியதும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள். நடக்க ஆரம்பித்ததும் செல் சிணுங்கியது. எடுத்தாள். "குட்டீ... வந்துட்டியாடீ... வண்டியோட நிக்கறேன்டீ... இறங்கினதும் நேரா வெளியே வந்துடு..." மைதிலி இனிமையாக சிரித்தாள். கல்யாணத்தையும், அவன் குறும்செய்தியையும் அந்த நொடியிலேயே மறந்தாள் தேன்மொழி. "எங்கே நிக்கறேடீ?" "அடையாறு ஆனந்தபவன் பக்கத்துல நிக்கறேன்.. கையில வெய்ட் ஒண்ணும் இல்லேயே... வந்துடுவேல்லா...?" "நோ பிராப்ளம்... நீ அங்கேயே இருடீ... நானே வந்துடறேன்.. பை..." தொலைந்து போன உற்சாகம் மீண்டும் அவளை தொற்றிக்கொண்டது. "வாடீ கல்யாணப்பொண்ணு..." தேன்மொழியை கட்டிக்கொண்டாள் மைதிலி. "சும்மாருடீ... மொக்கைப் போடாதடீ..." தோழியின் கையை தன் தோளிலிருந்து மெல்ல நகர்த்தினாள். "ஏன்டீம்மா... ஏன் என் கன்னுக்குட்டிக்கு மூஞ்சி வாடிப்போயிருக்கு...?" மைதிலி கண்ணடித்தாள். "தலை வலிக்குது... மொதல்லே காப்பி குடிக்கணும்..." சிணுங்கினாள் இவள். "பிரிஜ்லே பால் இருக்கு... நேத்து சண்டே... மாசத்துக்கு தேவையான சாமான்ல்லாம் வாங்கிட்டேன்... அரை மணி நேரத்துல ரூமுக்கு போயிடலாம்... நல்ல காஃபி போட்டுத்தரேன்... என்ன சொல்றே?" "சரிடீ... வண்டியை ஸ்டார்ட் பண்ணுடீ...?" "சிரிச்சிக்கிட்டே இருக்கற தேனு... ஏன் அலுத்துக்கறா? டயர்டா இருக்காளா? ஒழுங்கா கண்ணு தெரியறவன் எவனும் இவளை வேணாம்ன்னு சொல்லமாட்டான்... இவளுக்குப் பையனை பிடிக்கலையா?" மைதிலி தன்னுடைய வெள்ளை நிற கைனடிக் ஹோண்டாவை கிளப்பிக்கொண்டு பறக்க ஆரம்பித்தாள். * * * * * தேன்மொழி முழங்கால் வரை நீண்டிருந்த கருப்பு வண்ண ஷார்ட்ஸும், சாம்பல் நிற காட்டன் டீ ஷர்ட்டும் அணிந்துகொண்டு கட்டிலில் கிடந்தாள். கட்டப்படாத அவள் கூந்தல் தலையணையை தாண்டி தரையைத் தொட முயற்சி செய்து கொண்டிருந்தது. "டக்....டக்... டக்..." கட்டிலில் தேனின் கால் மாட்டில் உட்கார்ந்துகொண்டு, புறா போன்ற சிவந்த, மென்மையான அவள் பாதங்களின் விரல்களை சொடுக்கிக்கொண்டிருந்தாள் மைதிலி. "வலிக்குதுப்பா..." தன் காலை விருட்டென இழுத்துக்கொண்டு புரண்டுபடுத்தாள் தேன். கவிழ்ந்து படுத்தவளின் அழகான பின்புறங்கள் மெல்ல மெல்ல ஆடி அடங்குவதை பார்த்துக்கொண்டிருந்தாள் மைதிலி. "ம்ம்ம்... ஸோ... உனக்கு அவனைப் பிடிக்கலே... அவன் போட்டோவைத்தான் ஒரு தரம் காட்டேன்டீ எனக்கு... எப்படித்தான் இருக்கான்னு ஒரு தரம் நானும் பாக்கறேனே..?" தேன்மொழி ஊருக்கு கிளம்பியபோது மைதிலி சென்னையில் இல்லை. கம்பெனி வேலையாக பெங்களூர் பிளான்ட்டுக்கு போயிருந்தாள். "டேபிள் மேல இருக்க என் செல்லை எடுடீ... பாத்துக்கோடீ... இவன்தான் அந்த அழகு ராஜா..." சலிப்புடன் செல்லை அவள் புறம் எறிந்தாள். "ம்ம்ம்... தேனூ... இவனுக்கு என்னடீ கொறைச்சல்...? நல்லாத்தானேடீ இருக்கான்... என் கலர்லே இருக்கான்.. உன் உயரத்துக்கு பொருத்தமாத்தான் இருக்கான்... ரொம்ப குண்டு இல்லே... கண்ணாடீ போட்டிருக்கான் அவ்வளவுதானேடீ?" "ஹேய்... நல்லாப்பாருடீ.. அவன் கண்ணு ரெண்டும் பெரிசா இல்லே... பத்தாக்குறைக்கு இப்பவே கொஞ்சம் தொப்பை... பாத்தாலே எரிச்சலா இருக்கு... சிகரெட் வேற புடிப்பான் போலருக்கு..." "எனக்கொண்ணும் தெரிலேடீ... நீ சொன்னதுக்கு அப்புறம்தான் அப்டி இருக்குமோன்னு தோணுது" மைதிலி செல்லை மேலும் கீழுமாக, இடம் வலமாக, டில்ட் செய்து கல்யாணத்தின் போட்டோவை சிறிதே ஜூம் செய்து பார்த்தாள். "அவன் மன்மதராசாவாயிருந்தாலும் சரி.. இட் இஸ் ஆஃப் நவ்..." மல்லாந்து கிடந்தவள் எழுந்து மைதிலியின் மடியில் தலையை வைத்துக்கொண்டாள். புரண்டு படுத்ததில், பிரா இல்லாத டீ ஷர்ட்டுக்குள் அவளுடைய இளம் மார்புகள் குலுங்கி அடங்கின. நைட்டியில் இருந்த மைதிலியின் வளமான மார்புகள் தேன்மொழியின் முகத்துக்கருகில் ஆடின. "தேனு.. இருந்தாலும் நீ ரொம்பவே மோசம்டீ... உன்னைப் பொண்ணு பாக்க வந்தவன், உன்னைப் பாத்ததோட இல்லாம, ஐ லவ் யூன்னு உன் கையை புடிச்சிக்கிட்டு ப்ரப்போஸ் பண்ணியிருக்கான்... உன் அம்மா சொன்ன மாதிரி எல்லாமே பொருந்தி வந்திருக்கு... அவனுக்கு நீ ஒரு மெசேஜ் கூட அனுப்பலேன்னா அவனுக்கு கோவம் வராதா?..." மைதிலி அவளை கிண்டல் செய்தாள். எக்மோரிலிருந்து வீட்டுக்கு வந்ததும், கல்யாணம் தன்னை பெண் பார்க்க வந்ததையும், அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நடுவில் நடந்ததை, தன் தாய் தன்னிடம் பேசியதையெல்லாம் காபியை குடித்துக்கொண்டே தன் தோழியிடம் விவரமாக சொல்லியிருந்தாள் தேன்மொழி. "ஒரு விஷயம் மட்டும் பொருந்தலேன்னு தோணுது..." சொல்லிவிட்டு சட்டென எழுந்து மைதிலியின் கழுத்தில் தன் கையைப் போட்டுக்கொண்டாள் தேன்மொழி. "என்னது...?" "உன் கிட்ட இருக்கற சைசுல என் கிட்டே இல்லேடீ... அந்தக் கல்யாணத்தோட மூஞ்சியிலே இந்தக்குறை கடைசீவரைக்கும் இருந்திச்சி..." "என்னடீ சொல்றே?" "திரும்ப திரும்ப என் மாரையே உத்து உத்து பாத்துக்கிட்டு இருந்தான்... என்னைப் பொண்ணு பாக்கவந்தவன்... வந்ததுலேருந்து என் சைசு என்னான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தான்..." "சனியனே... அசிங்கமா பேசாதடீ... உனக்கென்னடீ கொறைச்சல்? உன்னுதைவிட எனக்கு ஒரு ரெண்டு சைஸ் பெரிசு... என்னோட ப்ளஸ் பாயிண்டே இதான்.. ரொம்ப கண்ணு போடாதடீ... உன் மாதிரி அழகாடீ நான்?" குனிந்து தன் மார்புகளை ஒரு முறை பார்த்துக்கொண்டாள் மைதிலி. "என் மனசுல பட்டதை சொன்னேன்டீ... மைதிலீ... உண்மையைச்சொல்றேன்.. நீ மட்டும் கொஞ்சம் கலரா இருந்திருந்தே... இப்ப நீ இருக்க வேண்டிய எடமே வேறடீ... உன்னைப்பாத்தாலே எனக்கு பொறாமையா இருக்குடீ...? நான் மட்டும் ஆம்பிளையா பொறந்து இருந்தேன்... உன்னை தூக்கிட்டு போய் ரேப் பண்ணியிருப்பேன்." "வெறியிலே இருக்கேடீ நீ..? "ஸோ... உன் சைசை அவன் தெரிஞ்சுக்க நினைச்சதால உனக்கு அவன் மேல கோவம் அவ்வளவுதானே?" "பின்னே... கோவம் வரக்கூடாதா?" "உன்னை பாக்க வந்தான்... உன்னை அவனுக்கு பிடிச்சி போச்சி... மேரேஜ் பண்ணிக்கப்போறோம்... தெரிஞ்சுக்க ஆசைப்பட்டான்... இதுல என்னடீ தப்பு?" "ஆமாம்டீ... என்னை ஆயிரம் பேர் ஆசைபடுவான்.. அத்தனை பேருக்கும் நான் அவுத்தாடீ காமிக்க முடியும்?" "அப்ப மாடிக்கு அவன்கூட ஏன்டீ தனியா போனே?" "என் அப்பாவே போன்னா... நான் என்னடீ பண்றது? அங்கேயும் அதே கூத்துதான்டீ... அவனால ஆன வரைக்கும் டிரை பண்ணிப் பாத்தான்... நான் பொடவையால இழுத்து போத்திக்கிட்டேன்..." "ம்ம்ம்.." "கீழே வந்து என் அம்மாவை திருட்டு முழியோட அவங்க மாரை வேற மொறைச்சான்னா பாத்துக்கோயேன்... எழுந்து போய் பளார்ன்னு ஒரு அறைவிடலாமான்னு எனக்கு ஒரு எரிச்சல் வந்திச்சி..." தேன்மொழி எழுந்து முகத்தை சுளித்துக்கொண்டு சிரித்தாள். "எல்லாப் பசங்களுக்கும் பொம்பளைங்க மாரைப்பாக்கறதுல அவனுங்களுக்கு ஒரு கிக்குதான்டீ... இந்த விஷயத்துல இவனை மட்டும் ஏன்டீ கொறை சொல்றே?" "என்னவோ போ... சனியன் புடிச்சவனுங்க..." "மணி எட்டரை ஆச்சு... எழுந்து வாடீ சாப்பிடலாம்..." இரவு சாப்பாடுக்காக தட்டுக்களை எடுத்து வைக்க ஆரம்பித்தாள் மைதிலி. * * * * * "மைதிலீ.. நான் பண்ணது தப்பாடீ...?" மெல்லிய குரலில் வினவினாள் தேன்மொழி. டின்னருக்குப் பின் காலணி சாலையில் காலார நடப்பது அவர்கள் வழக்கம். "எதைச்சொல்றே நீ?" "கல்யாணத்துக்கு மெசேஜ் அனுப்பாதது?" "தப்புன்னும் சொல்லமுடியாது... ரைட்டும்ன்னு சொல்லமுடியாது?" "இப்டி ஏன்டீ மொக்கை போடறே? நீ என் க்ளோஸ் ஃப்ரெண்டுன்னுதானே கேக்கறேன்..." "என்னை வேற என்னடீ சொல்லச்சொல்றே?" "உன் மனசுல இருக்கறதை கிளியரா சொல்லேன்.." தேன்மொழி அவள் இடுப்பைக் கிள்ளினாள். "என்னை நீ தப்பா நினைக்கலேன்னா நான் சொல்றேன்..." மைதிலியின் முகம் சற்றே சீரியஸ் ஆனது. "சீச்சீ... உன்னை போய்.... நான் தப்பா நெனைக்கறதா? என்னடிப் பேத்தறே?" தேன்மொழி அவள் கரத்தைப் பற்றிக்கொண்டாள். "இதப்பாருடீ... அவனை கண்ணாடீங்கறே... நான் கண்ணாடி போட்டுக்கலயா? அவனுக்கு தொப்பைங்கறே... தினமும் காலையில எழுந்து ஓடுடா; அப்பத்தான் உங்கிட்ட நான் பேசுவேன்னு சொல்லு... தொப்பை கொறைஞ்சுடும்..." "ம்ம்ம்..." "இவன் உனக்கு பொருத்தமா இருப்பான்னு எனக்குத் தோணுது..."

"ம்ம்ம்..." "இன்னொன்னும் சொல்றேன்... சொல்லட்டா...?" "சொல்லுடீ..." "இவன் என்னை பாக்க வந்திருந்தா... நான் ஓ.கே. ன்னு சொல்லிட்டு இருப்பேன்..." தெரு இருட்டிலும் மைதிலியின் விழிகள் சற்றே மினுமினுத்தது போல் தேன்மொழிக்கு தோன்றியது. அதற்கு பிறகு தங்கள் அறைக்கு வந்து சேரும் வரையில் அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. "குட் நைட்டீ..." "குட் நைட்..." மெல்லியப்போர்வையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உடனே தூங்கிப்போனாள் மைதிலி. மெல்லிய இரவு விளக்கொளியில் அவள் மார்புகள் சன்னமாக எழுந்து அடங்குவதை பார்த்துக்கொண்டிருந்தாள் தேன்மொழி. அவளுக்கு நேற்றைப் போல் படுத்ததும் தூக்கம் பிடிக்கவில்லை.

No comments:

Post a Comment