Friday 19 September 2014

இனிஷியல் இல்லாதவர்கள் 18


"கன்னீப்பா... வெளியிலே நிக்கறானே அவன் பேரென்னயா...? கூப்பிடுய்யா உள்ளே அவனை..." இன்ஸ்பெக்டர் நல்லத்தம்பி தன் சீட்டை விட்டு எழுந்தார். "சின்சாமி சார்... பிளேடு மன்னாரும்... கனகுவும் அவன்கூட நிக்கறாங்க... சார்.." "ஜல்தியா வரச்சொல்லுய்யா... எனக்கு அடுத்த வேலையைப் பாக்கணும்... இவங்க நாலு பேரோட வந்த மாதிரி, அவன் தனக்குன்னு மன்னாரை வக்காலத்துக்கு இழுத்துக்கிட்டு வந்திருப்பான்..." கிண்டலாகச் சிரித்தார் நல்லத்தம்பி. யார் இந்த கனகு? என் அம்மாவை காதலிச்சி, வீட்டுக்குத் தெரியாம, உறவுகளுக்குத் தெரியாம, ஊருக்குத்தெரியாம, அவங்க கழுத்துலே தாலியைக் கட்டி, நம்பி வந்தவளை ஒழுங்க வெச்சு வாழத் துப்பில்லாம, தன்னோடு குடும்பம் நடத்த வந்தவளை, அடுத்தவனுக்கு கூட்டிக்குடுத்தவனா இங்க வந்திருக்கான்?

என் அம்மா வாழ்க்கையை பாழாக்கி, நடுத்தெருவுல நிக்க வெச்சுட்டு, ஊரை விட்டே ஓடிப்போன அந்த பாவி கனகசபைதான் இப்ப இங்க வந்திருக்கறானா? கனகு என்ற பெயர் காதில் விழுந்ததும், ரமணியின் உடல் சிலிர்த்து அவன் செவிகள் விரைத்தன. இந்த பேமானியை நான் பாத்து முழுசா பத்து வருஷம் ஆயிருக்குமா? என் அருவாளுக்கு பயந்து ஊரை விட்டு ஓடிவந்த இவன், கடைசீல சென்னையிலத்தான் இருக்கானா? திரும்பவும் நாங்க ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்துத்தான் ஆகணுமா? இவன் ஏன் இந்த சின்னசாமியோட நிக்கறான்? இவனுக்கும் என்னை அடிச்சவனுங்களுக்கும் என்ன சம்பந்தம்? ரமணியின் மனசும் கைகளும் பரபரத்தன. ரமணியின் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும், அவனால் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அந்த கருப்பு மிருகம், மீண்டும் தன் தூக்கத்திலிருந்து எழுந்தது. எங்கே போனாலும் என் அப்பன் பேரை கேக்கறானுங்களே? அப்பன் பேரை ஒருத்தன் கேக்கறப்ப என் ஒடம்பு கூனிக்குறுகி நிக்கறேனே நான்? எதுக்கும் கலங்காத நான் இங்கே அவமானத்துல தலை குனிஞ்சு நிக்கறனே? இதுக்கெல்லாம் காரணமே இந்த கனகசபைதானே? என் மேல அன்பு காட்டறதுக்கு, அக்கறை காட்டறதுக்கு ஒரு பொம்பளை எனக்கு கிடைச்சிருக்கா. என்னாலேயும் வாழ்க்கையை ஒரு அர்த்தத்துடன் வாழமுடியுங்கற ஒரு சின்ன நம்பிக்கை வெளிச்சம் இப்பத்தான் என் மனசுக்குள்ள தெரியுது... என் அம்மாக்கிட்ட எனக்கு கிடைக்கமுடியாத, அவங்களால எனக்கு கொடுக்கமுடியாத, அன்பை, பாசத்தை, அரவணைப்பை, நெருக்கத்தை, எனக்கு தர்றேன்னு சொல்றா ஒருத்தி. அவ முகத்தைப் பாக்கும்போதே என் மனசுல இருக்கற கோவம், இறுக்கம், எல்லாம் தணிஞ்சு அமைதி வர்ற மாதிரி இருக்கு... இந்த நேரத்துல, திரும்பவும் என் வாழ்க்கையில, கனகசபை விளையாட வந்திருக்கானா? மனதில் குழம்பி குழம்பி உளைச்சலுக்கு உள்ளானான் ரமணி. கனகசபை என்ற தனிமனிதன் என் வாழ்க்கையில் ஒரு பிரச்சனையாக இருக்கிறான். எங்கம்மாவுக்கு தாலிகட்டினதால இவன் எனக்கு அப்பனானவன். ஒரு திருமணமான பெண்ணை திருட்டுத்தனமாக அனுபவித்து, நான் பொறக்கறதுக்கு காரணமா இருந்தவன் இப்போது எங்கே இருக்கான்? இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்? எனக்கு அவனும் ஒரு பிரச்சனை. மனதுக்குள் ஒரு வெறி எழ, தன் சட்டைக்கையை மடித்துக்கொண்டான் ரமணி. பாவி... என்னைப் பெத்துட்டு போயிட்டியேடா... போனவன் திரும்பி வந்து ஒருதரமாவது என்னைப் பாத்தியாடா? ஒரே ஒரு நாளாவது என்னைப் பத்தி நீ நினைச்சிருப்பியா? ஒரு நாள். ஒரே ஒரு நாள்... என் ஞாபகம் உனக்கு வந்திருக்குமாடா? எவனையோ, எவனுக்கு நான் பிறக்கவில்லையோ, அவனை அப்பா.. அப்பான்னு... கூப்பிட வெச்சியேடா. என்னை விடுடா... எந்த ஆதரவுமே இல்லாமல், எந்த வழியும் இல்லாமல், எந்தக்கதியுமில்லாமல், உனக்கு தன் முந்தானையை விரிச்சி, அதனால் என்னை... உன் புள்ளையை, தாலி கட்டினவன் ஜெயிலில் இருக்கும் போது, தன் வயித்துல சுமந்தாளே, அவ ஞாபகமாவது உனக்கு வந்திருக்காடா? என்னை வளக்கறதுக்கு அவ என்ன கஷ்டம் பட்டான்னு உனக்குத் தெரியுமாடா? அவளை ஒரு தரம் பாக்கணுங்கற எண்ணம் உனக்கு எப்பவாவது வந்திருக்காடா? உன்னை நான் ஒரு தரம் பாக்கணும்டா. இந்த ஒரே ஒரு கேள்வியை உன்னை நான் கேக்கணும்டா. "அப்ப்ப்பா..." தன் வலது கையை இறுக மூடி தன்னெதிரில் இருந்த டேபிளை ஒரு முறை ஓங்கிக்குத்தினான் ரமணி. டேபிளின் மேல் கண்ணாடி கிளாஸில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் ஒரு துளி சிதறியது. "மிஸ்டர் நீ என்னா பெரிய ரவுடியா...? என் எதிர்லேயே உன் சொக்கா கையை மடக்கிக் காட்டறே? டேபிளை குத்தறே...?சொல்லிகிட்டே இருக்கேன்... நான் சொல்றது உன் மண்டையில ஏறலையா? திரும்பவும் உன்னை வார்ன் பண்றேன்... இதெல்லாம் உனக்கு நல்லதுகில்லே... பெரிய எடத்துலேருந்து போன் வந்திச்சேன்னு கொஞ்சம் மரியாதை குடுத்து உக்கார வெச்சு மேட்டரை செட்டில் பண்ணப்பாத்தா ரொம்பவே ஓவரா துள்றே...?" ரமணியை முறைத்தார் நல்லத்தம்பி. இப்போது அவர் முகம் லேசாக சிவந்து போயிருந்தது. "சாரீ சார்.. அயாம் சாரீ... என்னைத் தப்பா நினைக்காதீங்க சார். கனகுன்னு இவர் சொன்னதும் எனக்குள்ள பட்டுன்னு ஒரு வெறி ஏறிடிச்சி..." கன்னியப்பன் முகத்தை நோக்கினான் ரமணி. "புரியுது... ஆனா இது நல்லது இல்லே... நீ சின்ன வயசு பையன்... இவ்வளவு ப்ளட் பிரஷர் உனக்கு கூடாது... மனசுல இருக்கற ரவுடித்தனத்தை விட்டுடு... டீசன்டான நல்லக்குடும்பத்து பொம்பளை ஒருத்தி உன் துணைக்கு வந்திருக்கா... நல்லபடியா உன் வாழ்க்கையை அமைச்சுக்கோ..." ஓரக்கண்ணால் காமாட்சியைப் பார்த்தார். "சார்...." ரமணி தன் தலையை குனிந்துகொண்டான். "வர்றது அந்த கனகுவாத்தான் இருப்பான்னு நீ ஏன் நினைக்கறே?" நல்லத்தம்பியின் கண்களில் சட்டென வெளிச்சம் ஏறியது. "ஈனப்பிறவி சார் அவன்... இந்தப் பேரைக் கேட்டாலே பத்திக்கிட்டு வருது சார்... ஆஃபிஸ் பணத்தை கையாடிட்டு, ஜெயிலுக்கு போறதுலேருந்து தப்பிக்கறதுக்காக, கட்டிக்கிட்ட தன் பொண்டாட்டியை, தன் ஆபிசரோட படுக்க வெச்சவன் இவன். அந்த சம்பந்தத்துல பொறந்தவன்தான் நான்..." ரமணி தன் தலையை மீண்டும் குனிந்துகொண்டான். "ரமணீ.. நீ இப்படி வா.. அவனுங்க வர்ற நேரத்துக்கு நீ எதுக்கு இங்க நிக்கணும்...?" சட்டென அவர்கள் இருந்த அறையின் ஒரு மூலைக்கு அவனை இழுத்துக்கொண்டு நடந்தாள். நல்லத்தம்பி மனதுக்குள் சிரித்துக்கொண்டார். "நீ சொல்றது உண்மையா?" காமாட்சி அவன் முகத்தை நிமிர்த்தி தன் புறம் திருப்பினாள். "நான் ஏன் பொய் சொல்லணும்... காமூ... என் கதையை உங்கிட்ட விவரமா சொல்லணும்ன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். எங்கப்பன் பேரை இன்ஸ்பெக்டர் கேட்டதும்... என்னால என்னை கட்டுப்படுத்திக்க முடியலே..." ரமணி தன் கைகளை கோர்த்துக்கொண்டு விட்டத்தை வெறித்தான். "எதுக்கு சம்பந்தமே இல்லாத நாலு பேரு முன்னாடி நம்ம குடும்பக்கதையை நீ பேசறே?" காமாட்சி கண்களால் அவனை கெஞ்சினாள். ஆதுரமாகப் பார்த்தாள். ரமணிக்கு புல்லரித்தது. "ரொம்ப தேங்ஸ்... காமூ... என் கதையை நம்மக் குடும்பக்கதைன்னு சொல்லிட்டே... என்னை உன் குடும்பத்துல ஒருத்தனா ஏத்துக்கிட்டே; இப்ப என் மனசு குளுந்து போச்சு..." "ரமணீ... நீ எனக்கு முழுசா வேணும்... உன் குறைகள்... நிறைகள்... எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா உன்னை நான் விரும்பறேன்..." காமாட்சி மென்மையாக அவனை கண்களில் ஒரு முடிவுடன் பார்த்தாள். "தேங்க் யூ... காமூ... தேங்க் யூ வெரி மச்.. ஒரே ஒரு செகண்டு என் மனசுல இருக்கற குமுறலை நீயும் கேளு ..." ரமணி காமாட்சியின் முகத்தை மிகுந்த நம்பிக்கையுடன் பார்த்தான். "சொல்லுப்பா...." "எனக்குத் தெரிஞ்சு இந்த கனகசபை நாலு தரம் ஜெயிலுக்கு போனவன் காமாட்சி... ஒவ்வொரு தரமும் திரும்பி வந்து எங்கம்மாவை தொந்தரவு பண்ணவன்... சூதாட பணம் குடு... பணம் குடுன்னு... அவங்களை கல்யாணம் பண்ணிக்கிட்ட உரிமையில என் அம்மாவை அடிப்பான்..." "ம்ம்ம்..." "அப்ப எனக்கு பதினாறு வயசு... எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா புரிய ஆரம்பிச்ச வயசு... வீட்டுக்குள்ள வந்தே உன்னை நான் வெட்டுவேன்னு அரிவாளை தூக்கினேன்... என் அம்மா என் கால்லே விழுந்து அவனை விட்டுடுடான்னு கெஞ்சினா.." "ப்ச்ச்...ப்ச்ச்.." காமாட்சி தன் கழுத்திலிருந்த தாலியை தொட்டுப்பார்த்துக்கொண்டாள். "எங்கம்மாவும் இதைத்தான் பண்ணாங்க காமாட்சி... நீங்க பொம்பளைங்க ஏன் இப்படி இருக்கீங்க...?" "நீ மேல சொல்லு..." காமாட்சி கிசுகிசுப்பாக பேசினாள். "சுப்பு... என் ஒடம்புல இன்னும் கொஞ்சம் ரத்தம் ஓடுதுடா... என் மூஞ்சி பளபளன்னு இருக்குடா... என் கழுத்துல இவன் கட்டின மஞ்சக்கயிறு இருக்கட்டும்டா... இல்லன்னா ஊர்ல தீ வெட்டித் தடியனுங்களா அலையறவனுங்களை என்னால சமாளிக்கமுடியாது... எங்கம்மா என்கிட்ட அழுதாங்க.... எங்கம்மா சொல்றாங்களே... ஒழிஞ்சி போவட்டும்ன்னு இவனை உயிரோட விட்டேன்... அதுக்கு அப்புறம் பத்து வருஷமா கிராமத்துப்பக்கமே இவன் தலை காட்டலே; இப்ப எங்கம்மா நிம்மதியா இருக்கறாங்க..." "ம்ம்ம்ம்.." "என்ன ம்ம்ம்ம்..."

"ஒரு பொண்ணு ஒருத்தனை ஆசைப்படவே கூடாதுப்பா... எந்த ஆணையும் காதலிக்கவே கூடாது... இந்த நாட்டுல ஒவ்வொரு பொண்ணும், தான் ஆசைப்பட்டவன்கிட்டத்தான், கல்யாணம் பண்ணிக்கிட்ட அதே ஆண் பிள்ளையிடம்தான் படாத பாடு பட்டு அழியறா... அழியறதுக்குத்தான் அவ பொறந்து இருக்கா..." காமாட்சி தன் மூக்கை வருடிக்கொண்டாள். நெற்றியில் வந்து விழும் முடிக்கற்றைகளை ஒதுக்கிக்கொண்டாள். "அப்டீ சொல்லாதே காமூ... என் மேல நம்பிக்கை வெச்ச உன்னை நான் என் மார்லே வெச்சு தாங்குவேன்... என்ன வந்தாலும் உன் கண் கலங்காம உன்னைப் பாத்துக்குவேன்.." ரமணியின் குரல் குளறியது. அவள் கைகளை சட்டெனப் பற்றிக்கொண்டான் அவன். "எனக்கு உங்கம்மாவை பாக்கணும் ரமணீ..." "உன்னை என் வீட்டுக்கு அழைச்சிட்டுப்போறேன் காமூ... உன்னைப்பாத்தா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க... என் அம்மாவை என்கூட வெச்சுக்கணும்ன்னு நான் ஆசைப்படறேன்." "எனக்கு எந்தப்பிரச்சனையும் இல்லேப்பா... நானும் அவங்களை கூப்பிடறேன்.." "எங்கம்மா வாழ்க்கையை நாசாமாக்கிட்டு, கிராமத்தை விட்டு ஓடி வந்தவன், வயித்துப்பாட்டுக்காக, சென்னையில பொறுக்கிங்களோட சேர்ந்துகிட்டு, அடிதடி வேலையை, ஏன் தன் பொழைப்பா நடத்திக்கிட்டு இருக்கக்கூடாது...? அவன் என்ன வேணாலும் செய்வான்... காமூ.. அதனாலத்தான் அவன் பேரைக் கேட்டதும் எனக்கு ரத்தம் கொதிக்குது..." "ரமணீ... கன்ட்ரோல் யுவர்செல்ஃப்... என் தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். இந்த நேரத்துல ஏடாகூடமா எதுவும் நீ பண்ணிடாதே... என் வாழ்க்கையை கொஞ்சம் நிம்மதியா, சந்தோஷமா உன் கூட வாழணும்ன்னு நினைக்கிறேன் நான்..." "நிச்சயமா உன்னை நான் சந்தோஷமா வெச்சுக்குவேன்... என் மனசுல இருக்கற பயத்தை நான் சொல்றேன் காமூ... எப்பவும் எனக்கு இந்த கனகசபையோட நினைப்பு வந்தாலே, இவனை ரெண்டா வெட்டணும்ங்கற ஒரு உந்தல் வரும். இவனை வெட்டி பொலி போடுடான்னு எனக்குள்ளேருந்து ஒரு மிருகம் குரல் குடுக்குது... அதை நினைச்சுத்தான் நான் பயப்படறேன்... காமூ." "உன் கோவம்தான் அந்த விலங்கு... கோவத்தை விட்டுடு..." "நேத்து உன் மாரை தொட டிரை பண்ணவனுங்களுக்கும் இவனுக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்துட்டா இவனை நான் இன்னைக்கு நார் நாரா உரிச்சுடுவேன்..." ரமணியின் கண்கள் சிவந்து போயிருந்தன. "ரமணீ.. என் மேல ஆணை... எனக்காக... நமக்காக, உன் அம்மாவுக்காக, நீ சும்மா இருக்கணும்பா... போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள எந்த வம்பையும் நீயா வளத்துடாதே... உன் கோவத்தை கன்ட்ரோல் பண்ணிக்க... கோவம் உன்னை அழிச்சிடும்.. உன்னை நான் இழக்க விரும்பலே... "ப்ளீஸ்... நிதானமா யோசனை பண்ணு... அவனுங்கதான் என்னைத் தொடவேயில்லையே... தொடப்பாத்தானுங்க... நீ அதை தடுத்து நிறுத்திட்டே... அவ்வளவுதானே... பஸ்லே போகும் போது, தினமும், என்னை பத்து பேருக்கு குறையாம உரசறானுங்க.. அத்தனை பேரையும் நீ வெட்டப் போறியா... நார் நாரா உரிக்கப் போறியா? எதுக்கு இவ்வள கோவப்படறே?" காமாட்சி அவன் தோளை பற்றிக்கொண்டு மெல்லியக் குரலில் தெளிவாகப் பேசினாள். "காமூ... கனகசபையை நான் பாக்க விரும்பலே... வரப்போறது அவனா இருந்துடக் கூடாதேன்னு இப்ப நான் ஆண்டவனை வேண்டிக்கிறேன்..." ரமணியின் முகம் சிவந்து அவன் இடது கரம் லேசாக நடுங்கிக்கொண்டிருந்தது. "ம்ம்ம்... எவ்வளவு வேதனையை உன் மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு இருக்கேடா நீ?" காமாட்சி மெல்ல முனகினாள். இவன் தன் மனசுல இருக்கற வேதனைகளை, வலிகளை எங்கிட்ட கொட்டிட்டான். ஆம்பிளைக்கு எதுலயும் அவசரம். என் மனசுல இருக்கறதையெல்லாம் இவங்கிட்ட நான் சொல்றதா, வேண்டாமா, அவள் பெண் மனது தவிக்க, நடுங்கும் அவன் கரத்தை பற்றி மெல்ல அழுத்தினாள். "மிஸ்டர் சுப்பிரமணி... வர்றது நீங்க சொல்ற அந்த கனகுங்கற கனகசபையாவே இருந்தாலும் கொஞ்சம் பொறுமையா இருங்க... உங்க குடும்பத்து சண்டை கொஞ்சம் பழைய விஷயம்... இப்ப கையில இருக்கற பிரச்சனையோட அதை ஒண்ணா சேர்த்து பெரிசாக்கிடாதீங்க..." பார்த்தசாரதி அவனை நெருங்கி வந்து அவன் காதைக்கடித்தார். என்னாச்சு இவருக்கு...? வீட்டுல பாக்கியம் புடவையை வரிஞ்சு கட்டிக்கிட்டு சாமியாடி இருப்பாளா...? கொழந்தை பார்வதியாவது இவருகிட்டே மூஞ்சு குடுத்து பேசினாளோ இல்லையோ? இவருக்கு சுத்தமா மூஞ்சே சரியில்லையே...? வாடிப்போய் கிடக்கு? ஏன் வந்ததுலேருந்தே உம்முன்னு இருக்கார்...? நாலு நாளா ஹோட்டல்லே டிஃபன் சாப்பிட்டேன்னு சொன்னார். ஊர்லே வந்தவ இன்னைக்காவது எதாவது டிஃபன் பண்ணிக் குடுத்தாளோ இல்லையோ? ஆஃபிசுக்கு வர்ற வழியிலே ஹோட்டலல... எதாவது சாப்பிட்டு வந்து இருப்பாரா? ஆம்பிளைக்கு எந்த பசி வந்தாலும்... தேவை நிறைவேறலன்னா மனுஷாளுக்கு உடனே கோபம் ஏன் வருது? கோவம் வந்ததும், மூஞ்சி தொங்கிப்போவுது... இப்ப இவர் கோவத்துல இருக்காரா என்ன? எழுந்து போய் என்ன ஏதுன்னு விசாரிக்கலாமா...? பத்து வருஷமா ஒருத்தரை ஒருத்தர் அப்பப்ப ஒடம்பால தொட்டுக்கறோம்... கட்டிக்கறோம்... ஒருத்தர் ஒடம்பு பசியை இன்னொருத்தர் தீத்து வெக்கிறோம். இவன் கையால தாலி கட்டிக்கலேன்னாலும், என்னைக்கு இவன் கூட மொதல் தரமா நான் ஒடம்புல துணியில்லாம படுத்தேனோ, அன்னையிலேருந்து இவனைத்தான் நான் என் மனசுக்குள்ள, என் புருஷனா நினைச்சுக்கிட்டு இருக்கேன். கட்டில்லே என்கூட இருக்கும் போது இவனுக்கு என்னத்தேவைங்கறது எனக்கு புரியுது... ஆனா மத்த நேரத்துல இவன் மனுஷன் எப்ப ஆசையா பேசுவான்...? எப்ப வள்ளுன்னு எரிஞ்சு விழுவான்னு என்னால புரிஞ்சுக்க முடியலேயே...? ஒவ்வொரு எடத்துல ஒவ்வொரு வேஷத்துல இவன் இருக்கான். வேஷம் போடறதுதான் வாழ்க்கையா? ராத்திரி பூரா ஆசையா என் இடுப்பைக் கட்டிக்கிட்டு கிடந்தான். என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷமா வெச்சுக்கிட்டான். வயித்துப் பசிக்கு ஒரு நாளைக்கு ஒரு தரம் திருப்தியா சாப்பிட்டா போதாதா...? மாசத்துல இரண்டு தரம் மனசுக்கு பிடிச்சவனோட திருப்தியா இருந்துட்டா போதும்... என்னை நேத்து இவன் போதும் போதுங்கற அளவுக்கு திருப்தி படுத்திட்டான். எனக்கு மனசு நெறைஞ்சு போச்சு. எனக்கு ஒடம்பு சுகம் வேணும்ன்னு மனசு அலையாது. என் உடலும் துடிக்காது. இன்னும் ஒரு மாசத்துக்கு எனக்கு அது தேவைப்படாது. இவனுக்கு மனசு நிறைஞ்சு இருக்குமோ? பாக்கியம் ஊர்லேருந்து வந்துட்டா... இன்னைக்கு இவன் தனியா படுக்க வேண்டிய அவசியமில்லே... வந்து மட்டும் என்ன கிழிக்கப்போறா அவ...? இவன் அவளை இழுப்பான்.. அவ மாட்டேன்னுவா.. ஆறு மாசத்துக்கு ஒரு தரம் சாப்பிட்டாலே போதும்ன்னு நினைக்கறவ அவ... இவனுக்கோ தினமும் கொறைஞ்சது ரெண்டு தரம் வேணும்... இவங்களுக்குள்ள இருக்கற பிரச்சனையே இதானே...? இதுக்கு என்னதான் தீர்வு? பொழுது வெடியற நேரத்துல, பொண்டாட்டி போன் வந்ததுலேருந்து ஒரே எரிச்சலா இருக்கான். என் வீட்டுல என் பக்கத்துல இவன் படுத்திருந்தான்னு தெரிஞ்சதும்... பாக்கியத்துக்கு கோவம் பொத்துக்கிட்டு வந்திடிச்சி.. இவனோட இந்த வேஷத்தை இப்ப நான் கலைக்கணுமா? வேண்டாமா? இது ஆஃபீஸ். இதுவே என் பெட்ரூமா இருந்தா நான் இவன் வேஷத்தை சிட்டிகை போடற நேரத்துல கலைச்சுடுவேன். இங்க ஆஃபீசுல இவனுக்கு என்னப் பிரச்சனையோ, இப்ப போய் நான் எதையாவது கேட்டு, எதையாவது சொல்லி, இவன் மூடு கெட்டு, இவன்கிட்டேயிருந்து எதையாவது எதுக்கு அனாவசியமா வாங்கிக் கட்டிக்குவானேன்? சுமித்ரா சஞ்சலமாக இருந்தாள். தன் ஓரக்கண்ணால் சங்கரனை பார்த்தாள். சங்கரனின் முகத்திலிருந்த தவிப்பை பார்க்கமுடியாமல் தன் கண்களை மூடிக்கொண்டாள். முதல் நாள் இரவு, சரியான நேரத்தில் தூங்கமல், அவருடன் விழித்திருந்து உடலால் சுகம் கண்டதால், மனம் நிறைந்திருந்தபோதிலும் உடல் களைத்துப் போயிருந்தாள் அவள். தூக்கம் கண்ணை சுழற்றியது. அவளையும் அறியாமல் அவள் தலை மேஜையின் மேல் கவிழ்ந்தது. சங்கரனுக்கு அலுவலக வேலையில் அன்று மனம் சுத்தமாக லயிக்கவேயில்லை. டெண்டரை பைல் பண்ணும் வேலையை பெரியவர் வேணுவிடம் ஒப்படைத்துவிட்டிருந்தால், கொஞ்சம் வேலை பளுவில்லாமல், தினசரி வேலையை கவனித்துவிட்டு, இடது கையை தலையில் வைத்தவாறு காலையில் வீட்டில் தனக்கும் பாக்கியத்துக்கும் நடுவில் நடந்த சண்டையை மனதுக்குள்ளாகவே அசை போட்டுக்கொண்டிருந்தார் அவர். அசை போடுவதில் ஐந்தறிவு கொண்ட மாடும், ஆறறிவு மனிதனும் ஒன்றுதானே!. மனுசனும் மாடும் ஒண்ணாயிடறாங்களே. இதை நினைத்ததும் அவர் முகத்தில் அவரையும் அறியாமல் புன்சிரிப்பொன்று எழுந்தது. பாக்கியம், கொஞ்சம் கூட இரக்கமேயில்லாம வீட்டை விட்டு வெளியே போடாங்கறாளே? நான் ஒரு பைத்தியக்காரன்... அன்னைக்கு சொத்துவரிக்காரனை, இன்கம்டேக்ஸ்காரனை ஏமாத்தறதுக்காக என் அப்பன் எனக்கு கொடுக்க வந்த வீட்டை இவ பேர்ல எழுதி வெக்கச் சொன்னேன். அறிவுகெட்டவன் நான் வாங்கின வீட்டையும் இவ பேர்ல வாங்கித்தொலைச்சுட்டேன. அதுக்குண்டான பலனை இப்ப நான் அனுபவிக்கறேன். சாயந்திரம் வீட்டுக்குப் போனதும் பாக்கியத்தை தாஜா பண்ணி அவ கோவத்தை கொஞ்சம் கொஞ்சமா தணிக்கணும்... பொம்பளை பொம்பளைன்னு அலையற என் ஒடம்பு அலைச்சலை, மனசு அலைச்சலை கொஞ்சம் கட்டுப்பாட்டுக்குள்ள வெச்சுக்க முயற்சி பண்ணணும். உடம்பும், மனசும், எவ்வளவு அனுபவிச்சாலும் அடங்கமாட்டேன்னுதே? என்னோட இந்த அலைச்சலை, பாக்கியம் தப்புங்கறா...! சரி... அவ கண்ணோட்டத்துல இது தப்பாகவே இருக்கட்டும்... என்னுடைய இந்தத் தப்பை நான் ஞாயப்படுத்தாம, கொஞ்ச நாளைக்கு ஊர் மேயற என் வேலையை நிறுத்தணும்... மனசால என் மனைவியை நான் எவ்வளவு நேசிக்கிறேன்னு அவளுக்கு காட்டணும்... அதுக்குப்பின்னாடி இவகிட்டேருந்து எப்படியாவது ஒரு வீட்டை என் பேருக்கு மாத்தி எழுதிக்கணும்.. இது என்னோட சுயநலம்ன்னு யார் நெனைச்சாலும் எனக்கு கவலையில்லே. என் மனைவியை நம்பி ரெண்டு வீட்டை அவ பேர்ல எழுதி வெச்சேன்... ஆனா எனக்கு என்ன நிலைமை வந்திருக்கு? பாக்கியத்தை எப்படி சமாதானப்படுத்தறது? சாயந்திரம் சேகரை வீட்டுக்கு வரச்சொல்லலாமா? சேகரை பாத்தாலும் எரிஞ்சு விழறா... இப்பல்லாம் அவன்தான் என்னை கெடுக்கறான்னு கூச்சப்போடறா.. இதுக்கு நான் என்ன சொல்லறது? * * * * * சங்கரனின் மேஜையின் மேலிருந்த தொலைபேசி கணீரென ஒலிக்க ஆரம்பித்தது. இந்த நேரத்தில் தன்னை யாருமே தொந்தரவு செய்யாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என மெல்லிய எரிச்சலுடன் நினைத்தவாறு நிமிர்ந்து பார்த்தார். என் மனசு ஒரு எடத்துல நிக்கமாட்டேங்குது. அதோட தொந்தரவு தாங்க முடியலே. அடுத்தவன் என்னை டிஸ்டர்ப் பண்ணறான்னு கொறை சொல்லி என்னப் பலன்? நிமிர்ந்து ஹாலை நோக்கினார். ரமணியை சீட்டில் காணவில்லை. கருப்பு வேட்டி கந்தசாமி வழக்கம் போல் கண்ணை மூடிக்கொண்டு சரணம் சொல்லிக்கொண்டிருந்தார். சுமித்ராவின் கண்கள் காலையிலேயே செருகிக்கிடந்தன. ரமணி எங்கே போய் தொலைச்சான்...? இன்டர்னல் போன் அடிக்குது. ஆஃபீஸ்லேருந்துதான் எவனோ கூப்பிடறான். என்ன வேலையோ? எவ்வளவுதான் அவசர வேலையா இருந்தாலும் என்னால இன்னைக்கு எதையும் சரியா செய்ய முடியாது. ஆஃபிசுல வேலை செய்துதானே ஆகணும்? எந்த வேலையை சொன்னாலும் டக்குன்னு செய்றவன் ரமணிதான். நேத்து அந்த காமாட்சி முந்தானையை பிடிச்சிக்கிட்டு போனான். அவனைக் காணோமே? ஆஃபிசுக்கு வந்திருக்கானா இல்லையா? படவா ராஸ்கல்... நேத்து காமாட்சி கையை புடிச்சிக்கிட்டு இருந்தான். எங்கே நான் அதைப் பார்த்துடப் போறேனேன்னு என்னைத் திருட்டுப்பார்வை பாத்துக்கிட்டு இருந்தான்? அவ தொடையோட தன் தொடையை உரசிக்கிட்டு உக்காந்து இருந்தான். பனாதைப்பயலை ஆரம்பத்துலேயே கொஞ்சம் மிரட்டி வெக்கணும்... என்ன ஆனாலும் சரி.. ஒருதரமாவது அந்தக் காமாட்சியை கவுத்து போட்டு ஓத்துடணும்ன்னு மனசுக்குள்ள கோட்டைக் கட்டிக்கிட்டு இருக்கேன் நான். இவன் குறுக்கே பூந்து கோலியாடறான்... இக்கட்டான அந்த நேரத்திலும் காமாட்சியின் வாளிப்பான உடல் அவர் மனசுக்குள் வந்ததும், சலிப்பிலிருந்த அவர் மனசு சற்றே குதூகலம் அடைந்தது. அவசர அவசரமாக போனை எடுத்தார். "சங்கரா... வேணு பேசறேன்..." "சொல்லுய்யா... டெண்டர் வேலை முடிஞ்சுதா...?" "ஒருவழியா முடிஞ்சுது... முக்கியமான மேட்டர் ஒண்ணு சொல்றேன்... கொஞ்சம் பொறுமையா கேளு..." "என் தலையெழுத்து இப்ப எவன் சொன்னாலும் கேட்டுக்கற நிலைமையிலத்தான் நான் இருக்கேன்... இந்த ஆஃபீசுல என் பேச்சை எவனும் கேக்கறது இல்லே..." தன்னுடைய வழக்கமான பாட்டை ஆரம்பித்தார். "பெரியவரு உன் மேல ரொம்ப கடுப்பா இருக்காரு..." "என்ன வேணு... என்னாச்சு..." சங்கரனின் சுதி சுத்தமாக அடங்கிப்போனது. "டேய் சங்கரா... பெரியவரு நேத்து காமாட்சியை ஆஃபீஸ் கார்லே அனுப்பி வெக்க சொன்னாரா இல்லையா?" "வேணு... நான் சொல்றதை கேளு... கொஞ்சம் இருடீ... லஞ்சு சொல்லியிருக்கேன்... வருது... சாப்பிடு.. அதுக்கு அப்பறம் நானே உன்னை உன் வீட்டுல டிராப் பண்ணறேன்னு அவகிட்ட சொன்னேன்டா... கொழுப்பெடுத்த கூதியா... திரும்பிப் பாக்கறதுக்குள்ள... சின்னப்பய ஒருத்தன் அவளுக்கு ஆமாம் போடாறன்னு அவனை இழுத்துக்கிட்டு ஓடிப்போய்ட்டா..." சங்கரன் தன் மனதில் இருக்கும் மண்டியிருந்த எரிச்சலில் யாரிடம் என்ன பேசுகிறோம் என்ற எண்ணமே இல்லாமல் வாய்க்கு வந்ததை உளறினார். "சங்கரா... நீ என் ஃப்ரெண்டு... உன் நல்லதுக்கு சொல்றேன்.. நீ எவ பின்னால வேணா போ... ஆனா இந்த காமாட்சி மேல உன் கண்ணை வெக்காதே... அவளை தொட்டுப்பாக்கணுங்ற ஆசையை சுத்தமா ஒழிச்சுடு. ஏற்கனவே ஒரு தரம் இவ விஷயத்துல நீ அடிபடாம தப்பிச்சிட்டே..." வேணுவின் குரல் தணிந்து வந்தது. நண்பனின் மீதான அக்கறை தொனித்தது. "வேணு.. விஷயத்துக்கு வாடா... எப்பவும் எனக்கு உபதேசம் பண்றதுதான் உன் வேலை... ஏன்டா சொந்தப் பொண்டாட்டியையாவது அப்பப்ப நீ தொடறியோல்லியோ?" சங்கரன் நக்கலடித்தார். "டேய்... என் விஷயத்தை விடு..." "சரி... விட்டுட்டேன்... எதுக்கு போன் பண்ணே நீ?" "ஆமாம்... ரமணிக்கும் காமாட்சிக்கும் நடுவுல என்னடா உறவு?" "தெர்லே வேணு.. அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஏதோ கசமுசா இருக்குன்னு... எனக்கே நேத்துதான் தெரியும்..." "ம்ம்ம்..." வேணு தன் தொண்டைக்குள் முனகினார். "வேணு.. அந்த காமாட்சி இருக்காளே.. வெளியிலே பத்தினி வேஷம் போடுவா... புருஷன் அவளை அடிச்சுத்தொரத்திட்டான்... . கற்புக்கரசி காமாட்சி அவன் கட்டினத்தாலியை கழட்டிப் போட்டுட்டு வந்துட்டா... ஊர்ல இருக்கறவனை ஏமாத்தறதுக்கு இவளே கழுத்துல ஒரு தாலியைப் போட்டுக்கிட்டு அலையறா..." சங்கரன் அன்று விஷத்தை கக்கிக்கொண்டிருந்தார். "சங்கரா?" வேணு வெறுப்புடன் தன் குரலை உயர்த்தினார்.

"இப்ப இவளுக்கு அரிப்பெடுத்தா இவ எங்கேடா போவா...? சின்னப்பசங்களைப் பாத்தா அவளுக்கு தொடைக்கு நடுவுல தண்ணி கொப்புளிச்சி ஊத்தெடுக்குதோ என்னமோ?" சங்கரனின் அடி மனதில் காமாட்சியின் கட்டான உடலின் மேல் இருந்த ஆசை வெறி பீறிக்கொண்டு வெளியில் வந்தது. "சங்கரா.. அசிங்கமா பேசாதேடா... எனக்குத் தெரிஞ்சவரைக்கும் அந்தப்பொண்ணு ரொம்ப ரொம்ப நல்லப் பொண்ணுடா... நெருப்புடா அவ... கிட்டேப் போனே சுட்டுப் பொசுக்கிடுவா... அவ உனக்கு கிடைக்கமாட்டா..." "எல்லாக்கூதியாளுக்கும் ஒரு விலை இருக்குடா வேணு... அதைக் குடுக்க நீ தயார்னா எவளையும் சிட்டிகை போடற நேரத்துல கவுத்துடலாம்... அவ கேக்கறதை நீ குடு... காமாட்சி என்னா காமாட்சி...? காமாட்சீ... மீனாட்சீ... எல்லாரும் உன் கொட்டையை கொஞ்சம் கூட தயக்கமே இல்லாம நக்குவாளுங்க...!!! எவ்வள உத்தமிகளை பாத்து இருக்கேன் என் லைப்ல.." சங்கரன் சற்றே நக்கலாகச் சிரித்தார். "சங்கரா.. அயாம் சாரி... உன் பிலாசஃபியை நீயே வெச்சுக்க... எனக்கு இதெல்லாம் வேண்டாம்... உன் பேச்சைக் கேக்கவே நாராசமா இருக்கு... வாயை பினாயில் ஊத்திக் கழுவுடா..." "நீ வீட்டு சாப்பாடு சாப்பிடறவன்.. ஓரே இலையில எப்டித்தான் இத்தனை நாளா சாப்பிடறயோ? ஓட்டல் சாப்பாட்டு ருசியும், அணிலோ, கிளியோ கொத்தின மாங்காயை அடிச்சித் திங்கறதுல இருக்கற ருசியும், உனக்கு எங்கே தெரியப் போவுது...?" சங்கரன் வக்கிரமாக சிரித்தார். "வினாச காலே விபரீத புத்தி..." வேணு தன் தலையில் அடித்துக்கொண்டார். "சங்கரா... ப்ளீஸ்... ஸ்டாஃப் திஸ் நான்சென்ஸ்... விஷயம் புரியாம நீ பேசறே... நான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிடறேன்... பெரிசு உன்னை கம்பெனிலேருந்து தொலைச்சு தலைமுழுக முடிவெடுத்திடுச்சி... மேட்டரை உனக்கு அட்வான்ஸா சொல்லிட்டேன்... மூணு மாச நோட்டீஸ் இன்னைக்கே உனக்கு சர்வ் ஆகலாம்... மெண்டலி பிரிப்பர்டா இரு..." "என்னடா சொல்றே வேணு... தலையில திடுதிப்புன்னு ஏன்டா கல்லைத் தூக்கிப் போடறே?" ரீஸீவரை பிடித்திருந்த தன் விரல்கள் லேசாக ஆடுவதைப் போல சங்கரன் உணர்ந்தார். இது என்ன புதுசா பூதம் கிளம்புது... சங்கரன் நிஜமாகவே அதிர்ந்தார். அவர் முகத்திலிருந்த சிரிப்பு உறைந்து போனது. காமாட்சியின் நினைப்பு சட்டென காணாமல் போனது. "எவனோ ரெண்டு சோம்பேறிங்க நேத்து சாயந்திரம் காமாட்சியை ஈவ் டீஸிங் பண்ணியிருக்கானுங்க... கூடப்போன ரமணி அவனுங்களை அடிக்க... அவனுங்க இவனை திருப்பி அடிக்க இப்ப அவன் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கான்... காமாட்சி காலையிலே பெரிசுக்கு போன் பண்ணியிருந்தா..." "அய்யோ... நிஜமாவாடா சொல்றே வேணு... என் நேரமே சரியில்லடா.. ஏற்கனவே எனக்கு வீட்டுல பிரச்சனை... இப்ப ஆபீசுலயும் பிரச்சனையா... இப்ப நான் என்னடா பண்றது...?" "வேணு... நல்லாக் கேட்டுக்க... காமாட்சி என் பொண்ணுடா... பிரச்சனையில்லாம நீ ரமணியை வெளியே கொண்டாரணும்ன்னு காலையில பெரியவர் என் கிட்ட கிடந்து குதிச்சாரு..." "அந்தக் கொழுப்பெடுத்தவ கார்லே போயிருந்தா மட்டும் அவளை எவனும் ஈவ் டீஸிங் பண்ணியிருக்க மாட்டானா? சேலையை இறுக்கிக் கட்டிக்கிட்டு, குதிச்சி குதிச்சி நடக்கற நடையும்... அவ தன் சூத்தை ஆட்டற ஆட்டும்., கிழவனுக்கே அவளைத் தொட்டுப்பாக்க தோணும்..." "சங்கரா... இப்ப இந்த பேச்சு அவசியமாடா...?" வேணு சலித்துக்கொண்டார். "கிழவன் லாஜிக்கை கேட்டதும் எனக்கு பொறுக்கலடா... அப்புறம்...." சங்கரன் தன் முகத்தை துடைத்துக்கொண்டார். "நம்ம லாயர் பார்த்தசாரதியை ஸ்டேஷனுக்கு அனுப்பியிருக்கேன்... பெரியவரு போலீஸ் கமிஷனர் கிட்ட பர்ஸனலா பேசியிருக்காரு.. காமாட்சி மேட்டர் இன்னேரம் செட்டில் ஆயிருக்கும்..." "ப்ச்ச்ச்... அவ மேட்டரு நல்லபடியா செட்டிலாயிட்டா எனக்கும் நல்லதுதான்..." சங்கரன் சூள் கொட்டினார். "அயாம் சாரி... பட் ஐ ஹேவ் எ பேட் நியூஸ் பார் யூ... நான் சொன்னதை சங்கரன் ஏன் செய்யலேன்னு ஆகாசத்துக்கும் பூமிக்குமா பெரியவரு டேன்ஸ் ஆடினாரு... நான் என்னால முடிஞ்ச அளவுக்கு அவரை சமாதானம் பண்ணேன்... ஆனா அவரு யார் பேச்சையாவது கேக்கற ஆளா...? உனக்குத்தான் அவரைப் பத்தி நல்லாத் தெரியுமே? இப்ப உன் மேட்டரு என்ன ஆகும்ன்னு எனக்குத் தெரியலே..." வேணுவின் குரல் மந்தமாக வந்தது. "நிஜமாவே செத்தேன்டா நானு.. சத்தியமா நான் ரோட்டுக்கு வந்துட்டேன்... சின்னவரும் ஊர்லே இல்லே... வேற வழியே இல்லையா...? வேணு... நீதான்டா என்னை இந்த சிக்கலேருந்து காப்பத்தணும்..." மெத்தென்ற நாற்காலியில், ஏ.ஸி. ரூமில் உட்கார்ந்திருந்த சங்கரன் வியர்த்தார். அவரையும் அறியாமல் சேரை விட்டு எழுந்து நின்ற அவர் தொடைகள் நடுங்கின. "சங்கரா.. பெரியவரு அரை மணி நேரத்துல ஆஃபிசுக்கு வர்றாரு... வந்ததும் உன்னை கூப்பிடுவாரு.. அவரு என்ன சொன்னாலும் வாயைப் பொத்திக்கிட்டு இரு... ஒரு மாசத்துக்கு லீவு அப்ளிகேஷன் எழுதி எங்கிட்ட குடுத்துடு... என்னால முடிஞ்ச வரைக்கும் நான் உனக்காக உன் சீட்டை வேகன்டா வெக்கறேன்... அப்புறம் உன் தலையெழுத்து..." "நீ சொல்றது சரி வேணு.. இந்த வயசுல எனக்கு எவன்டா வேலை குடுப்பான்...?" "சங்கரா... இப்ப கொஞ்சம் பொறுமையா இரு; யார் கேட்டாலும் நீ லீவுலே இருக்கேன்னு நான் சொல்றேன்... சின்னவரு யு.எஸ்.லேருந்து வந்ததும் மேட்டரை காதும் காதும் வெச்சமாதிரி செட்டில் பண்ணிக்கோ... அவரோட குட் புக்ஸ்லேத்தானே நீ இருக்கே..." "இந்த கெழத்தாழி நாளைக்கேவா சாகவா போறான்... இங்கேயே இருந்துகிட்டுதானே என் கழுத்தை அறுப்பான்... என்னான்னு தெர்லே வேணு.... இப்பல்லாம் என்னைப் பாத்தாலே பெருசுக்கு ரொம்பவே எரிச்சல் வருது..." "சின்னவருக்கு நீ மாமா வேலை பண்றது அவர் காதுக்கு வந்திடிச்சி... சிம்பிளாச் சொன்னா விவகாரம் இவ்வளவுதான்... வீட்டுல வயசுக்கு வந்த பொண்ணை வெச்சுக்கிட்டு, உனக்கு ஏண்டா இந்த வேண்டாத தொழிலு...?"வேணு கசப்பாக பேசினார். "வேணு... நான் என்னடா பண்ண...? ஏதோ ஒரு தரம்... ரெண்டு தரம்... அவரு கேட்டாரேன்னு எனக்கு தெரிஞ்ச தொழில் பண்றவளுங்க நம்பரை அவருக்கு குடுத்தேன்... ஆஃப்டர் ஆல் சின்னவரு என் பாஸ்டா... டேரக்டா நான் அவருக்கு ரிப்போர்ட் பண்றேண்டா... இதை ஏன்டா அந்த கிழவன் புரிஞ்சுக்க மாட்டேங்கறான்..? வேணு... அவன் சொல்றதை நான் கேக்கலன்னா.. அவன் என் சீட்டை கிழிச்சிடமாட்டானா? "மத்தளம் இரண்டு பக்கமும் அடி வாங்கித்தான் ஆகணும்... ஆனா நான் ஆஃபிசுல நாலு பக்கம் அடிவாங்கறேன்.. என்னைக்காவது நீ பண்ற வேலையை, என்னை மாதிரி மானமுள்ள ஒருத்தன் செய்வானா?" "டேய் சந்தடி சாக்குல, எனக்கு மானம் இல்லேங்கறியா நீ? நான் என்ன மாமா வேலையாடா பண்றேன்... எனக்கு தெரிஞ்ச இன்ஃபர்மேஷனை என் பாஸுக்கு நான் பாஸ் பண்ணறேன்... அதுக்கு நீயும் ஏன்டா என்னை மாமாங்கறே?" "என்னமோப்பா... எனக்கு தோணிணதை... என மனசுல பட்டதை நான் சொன்னேன்..." "சரிடா... இப்ப என் பிரச்சனைக்கு ஒரு வழி சொல்லேன்..." "பெரியவரு அடுத்த மாசம் ஆஸ்ட்ரேலியா போறாரு.. திரும்பி வர ஆறு மாசம் ஆகும்... அந்த நேரத்துல சின்னவரு மூலம் அவருக்கு காண்டாக்ட்ஸ் இருக்கற, அவருக்கு தெரிஞ்ச கம்பெனி எதுலயாவது தொத்திக்கோ..." "இதுவும் நல்ல ஐடியாதான்..." சங்கரனுக்கு இலேசாக மூச்சு வந்தது. "நான் சொல்றதை சொல்லிட்டேன்.. பெரியவர்கிட்ட இன்னைக்கு நீ மொறைச்சுக்காதே... மூணு மாச சம்பளம் மட்டுமே, சொளையா ஆறு லட்சம் உனக்கு கிடைக்க வாய்ப்பு இருக்கு... மேலே கீழே எதையாவுது கிளேய்ம் பண்ணு.. நான் ஆடிட்ல பிரச்சனை வராம பாத்துக்கறேன்... இன்னொரு இரண்டு, மூணு ரூவா, போட்டுக் குடுக்கச்சொல்றேன்... இனிமேலாவது புத்தியோட பொழச்சுக்க..." வேணு நிஜமான அக்கறையில் பேசினார். பொண்டாட்டியும் பொண்ணும் வீட்டை விட்டு துரத்தறாளுங்க... கிழவன் ஆஃபிசை விட்டுத் தொரத்தறான்... மொத்தத்துல ரோட்டுக்கு வந்தாச்சு... சங்கரன் இருகைகளையும் தன் தலையில் வைத்துக்கொண்டார். அவரையும் அறியாமல் அவர் பார்வை சுமித்ராவின் பக்கம் திரும்பியது. அவள் இரவு முழுவதும் சங்கரனுடன் ஆடிய ஆட்டத்தின் களைப்பில் கண்ணயர்ந்திருந்தாள். * * * * * சங்கரனின் செல் சிணுங்கியது. புது நம்பராக இருக்கவே காலை அக்செப்ட் செய்து ஹலோ என்றார்... "எப்டி இருக்கீங்க..." அம்சவல்லி சிருங்காரமாக சிரித்தாள். இந்த நேரத்துல இவளா? சங்கரனுக்கு சர்வாங்கமும் பற்றிக்கொண்டு வந்தது. "அம்சா... பப்பி எப்படி இருக்கா?" குரலில் இனிமையை ஏற்றிக்கொண்டார். "இப்பத்தான் தூங்கப் போனா..." "தூங்கறாளா...? ரெஸ்ட் எடுக்கட்டும்... ஆங்... ஆங்.. உன் பொண்ணுக்கு வேலையே ராத்திரிலேதானே...?" என்னை மாதிரி ஆளு அம்புட்டான்னா தொழில் பண்றவளுக்கு பகல் என்னா...? ராத்திரி என்னா...? அம்மாளும் பொண்ணும் ஒண்ணா சேந்து ஞானப்பழத்தை புழிஞ்சுட மாட்டாளுங்களா? மனதுக்குள் சிரித்தார். "என்ன கிண்டலா?" அமசவல்லி பொய்யாக கோபித்துக் கொண்டாள். "சே..சே.. தப்பா எடுத்துக்காதேடீ ஹம்சா.. நான் ஒண்ணும் உன் பொண்ணை குத்தமா எதுவும் சொல்லிடலியே...?" வழிந்தார் சங்கரன். "ராத்திரிக்கு கச்சேரியை வெச்சிக்கலாமான்னு பப்பி உங்களைக் கேக்கச்சொன்னா...?" அதானேப் பாத்தேன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா? சங்கரன் தன் தொடைகளுக்கு நடுவில் தன் பையனை அழுத்தி ஒரு முறை தடவிக்கொண்டார். சுமித்ராவுடன் முதல் நாள் இரவு முழுவது ஆடிய கபடி ஆட்டத்தின் விளைவாக இன்று பையன் இருக்கும் இடத்தையே அவரால் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவனும் தூங்கிக்கொண்டிருந்தான். "ஹம்ஸா நீ சொல்றது புரியுதுடீ... கொஞ்ச நேரத்துல நானே உன்கிட்ட பேசறேன். இப்ப கொஞ்சம் பிஸியா இருக்கேன் நான்..." பப்பியை தொட்டுத் தடவற நிலைமையிலா நான் இருக்கேன்.. இருக்கற டென்ஷன்ல.. என் பையன் எழுந்துக்கவே மாட்டான்.. மென்மையாக அம்சவல்லியிடம் சிரிக்க முயன்று தோற்றார். விருட்டென காலை கட் செய்து செல்லை மேஜையின் மேல் எறிந்தார். "மன்னாரு.... உன் பீச்சாங்கை ஜன்னலு வழியா பார்ட்டியை கண்டுக்கோ... உள்ளே ரைட்டர் ஏகாம்பரம் பக்கத்துலே வேட்டி சட்டையிலே, செவப்பா நிக்கறானே அவன்தான் ஹீரோ. அவன் கையைப் புடிச்சிக்கிட்டு தள தளன்னு ரோசாப் பூ நெறத்துல, கொழு கொழுன்னு ஊட்டி ஆப்பிள் மாதிரி, ரோஸ் கலர் புடவையில கூட நிக்கறாளே, அவதான் நம்ம மஹாபாரதத்து ஹீரோயினு பாஞ்சாலி... மேட்டரே... அவளாலேதான் நயினா..." "சின்னு... பிகரு கொஞ்சம் முத்தின மாங்காதான்... ஆனா அயிட்டம் மானாட மயிலாடன்னு ஷோக்கா கீதுப்பா... அதான் உன் மச்சான் கோயிந்துக்கு சட்டுன்னு மார்க்கெட்டுலேயே கெளப்பிக்கினு கீது..... ரோட்டுலேயே டச் பண்ணி ரேட்டு பேசிகீறான்..." "வந்த வேலையில கவனமா இருடா!... பிகரை அப்புறமா ரூட்டு வுடுவே..." "மேட்டரை நம்மக்கிட்டே வுட்டுடு.. நேரம் பாத்து புடவையை உருவிடறேன்..." மன்னாரு அசிங்கமாக கண்ணடித்தான். "அண்ணே சின்னு... ஒரு நிமிஷம் இங்கனயே நில்லு... உன்கிட்ட ஒரு மேட்டரு பேசணும்..." "ன்னாடா... காண்டு மாதிரி பேசறே? உள்ளே நுழையும் போதே பின்னாலேருந்து கொரல் குடுக்கறே...? போற காரியம் வெளங்குமாடா? ஏற்கனவே மூணு பேரா உள்ளேப் போறோம்..." சின்னசாமி எரிச்சலுடன் ஸ்டேஷன் வெராண்டாவில் ஒரு நிமிடம் நின்றான். தொண்டையில் இருந்த எச்சிலை "ப்ச்ஸ்க்" என காறி வெளியில் துப்பினான். "அண்ணே... சன்னல் வழியா பையனை நானும் நோட் பண்ணிட்டேன். ஆனா நான் சொல்றதை நீயும் கொஞ்சம் கேளு. ஆனது ஆச்சு... போனது போச்சு... நம்மப் பசங்க ஜுலும்பு பண்ணாங்க... இவன் அதுக்கு அடிச்சான்... மேட்டரு அங்கேயே கதம். இந்தப் பையனை விட்டுடுங்க... காரியம் வெளங்குதோ... இல்லையோ? எந்தப்பஞ்சாயத்தும் இல்லாம உன் மேட்டரை வெளியிலே நான் செட்டில் பண்றேன்..." கனகசபை மெல்லிய குரலில் பேசினான். சின்னசாமி சைகையால் ரமணியைக் காட்டியதும், பத்து வருடத்துக்கு முன் கடைசியாக கிராமத்தில், கண்களில் கோபம் தீயாக எரிய, கையில் அரிவாளுடன் தன்னை வெட்ட ஓடிவந்தபோது பார்த்த தன் மகனை, சென்னையில் தன்னைவிட வயதில் மூத்த ஒரு பெண்ணுடன் போலீஸ் ஸ்டேஷனில் கண்டதும், தன் கண்களை நம்ப முடியாமல் திகைப்பில் ஆழ்ந்து போயிருந்தான் கனகசபை. இன்றும், தான் அவனைப்பார்த்த அதே ஜன்னல் வழியாக, தன்னை அவன் பார்த்ததும், தன் பார்வையால் தன்னைத் துளைத்தெடுக்கும் ரமணியின் முகத்தை, மீண்டும் நேராகப் பார்க்க தைரியம் இல்லாமல், சட்டெனத் தன் தலையை தாழ்த்திக் கொண்டான் கனகசபை. சத்தியமாக ரமணியை போலீஸ் ஸ்டேஷனில் சந்திப்போமென அவன் என்றுமே நினைத்ததில்லை ரமணியைப் பார்த்த கனகசபை பாதாதிகேசம் உடலாலும், தன் மனதாலும் அதிர்ந்து போயிருந்தான். அவனைக் கண்டதும் தன் மனைவி பரிமளத்தின் அழகான முகம் அவன் நினைவில் ஊசலாட, உணர்ச்சிகளின் கொந்தளிப்பில் தான் நிற்குமிடம் மறந்து ஒரு வினாடி மலைத்துப்போய் நின்றான். அவன் மனது இங்கும் அங்கும் பழைய நினைவுகளில் சஞ்சரிக்கத் தொடங்கியது. எவனோ ஊர் பேர் தெரியாத சின்னப்பய ஒருத்தனோட ஒரசல்ன்னுதானே பொலம்பிக்கிட்டு இருந்தான் சின்னசாமீ? கடைசீல இவன் சொன்ன அந்தச் சின்னப்பையன் என் புள்ளை சுப்புதானா? சுப்புவை பத்து வருஷம் கழிச்சி பாக்கறேன். ஒரு சண்டையிலத்தான் நான் அவனையும், என் பரிமளத்தையும் விட்டு பிரிஞ்சேன்... என் தலையெழுத்து, இத்தனை வருஷம் கழிச்சும் என் புள்ளையை திரும்பவும் நான் ஒரு சண்டையிலத்தான், அதுவும் போலீஸ் ஸ்டேஷன்லேதான் சந்திக்கணுமா?

கருகருன்னு சுருட்டை முடியோட, மொகத்துல ரெண்டு நாள் தாடியோட, செவ செவன்னு சினிமாவுல வர்ற ஹீரோ மாதிரி, என்னமா வாட்ட சாட்டமா, ரேஸ் குதிரை மாதிரி வளந்து நிக்கறான் என் புள்ளை...? இவன் இங்கே சென்னையில எங்கே இருக்கான்? என்னப்பண்றான்? கோயிந்தும் காசியும் என் புள்ளையை உரசினதே சுப்புவோட நிக்கறவளுக்காகத்தானா? கூட நிக்கறவளும் அழகா, மினுமினுன்னு அரபிக்குதிரை மாதிரித்தான் இருக்கா. பாக்கற கண்ணுக்கு ஜோடிப் பொருத்தம் பக்காவா கண்ணுக்கு நெறைவா இருக்கு. நம்மப் பையனை விட கொஞ்சம் வயசானவளா தெரியறாளே...! கழுத்துல தாலி வேற தெரியுதே? இது என்ன லொள்ளு...? என் பையன் எங்கப் போய் மாட்டிக்கினான்? இவனுக்கும், இந்த பொம்பளைக்கும் என்ன தொடர்பு? "ம்ம்ம்... டேய் கனகு.. நீ உன் பரிமளாவுக்குத் தாலி கட்டினே? உன் சூழ்நிலை அவளை வுட்டுட்டு ஓடினே... உன் பரிமளா இன்னொருத்தனோட, நீ கட்டினத்தாலியோட, மனசார, சந்தோஷமா கொஞ்ச காலம் வாழலையா? அந்த கொஞ்ச காலத்துல கூட இருந்தவன் மூலமா சுப்புவை பெத்துக்கலையா? "கனகு.. அந்தப்பொம்பளை எவ்வளவு உரிமையா, உன் புள்ளைத் தோளை உரசிக்கிட்டு, கையைப்பிடிச்சிக்கிட்டு நிக்கறா? பாத்தாலே தெரியலை...? அவங்களுக்குள்ள என்ன உறவு இருக்கும்ன்னு? அக்கா தம்பி ஒறவு இல்லடா இது... ஒரு வயசு வந்த ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் நடுவுல இருக்கற உறவு... வயசுல என்னாடா இருக்கு...? இந்தக்காலத்துலதான் வயசு வித்தியாசம் எதுவும் இல்லாமே காதல் வருதே...! வயசைப்பாத்தாடா காதல் வருது? கல்யாணம் ஆனவளைத்தான் ஆன்டி ஆன்டின்னுக்கிட்டு, சின்னப்பசங்க டாவு அடிக்கறானுங்க.. வாழ்க்கைக்கு மனசுதானே பொருந்தி வரணும்...? இரண்டு பேருக்கும் மனசு பொருந்தி போயிருக்கும்... மனசு ஒத்துப்போகவேதானே என் புள்ளை கையை ரொம்ப சொந்தமா அவ புடிச்சிக்கிட்டு நிக்கறா? பாத்தா டீசண்டான, படிச்ச, ஃபேமிலி பொம்பளையாத் தெரியறா? போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் ஒரு பொம்பளை ஒரு ஆம்பிளைக்காக வந்திருக்கான்னா... அவங்க மனசு ரெண்டும் கண்டிப்பா ஒத்துப் போயிருக்கணும். வந்தவ நல்லா இருக்கட்டும். என் புள்ளைகூட சந்தோஷமா இருக்கட்டும்... கனகசபையின் மனம் பிள்ளையையும், காமாட்சியையும் உடனே வாழ்த்தியது. என் புள்ளையோட கண்ணு ரெண்டும் அப்படியே பரிமளத்தை எனக்கு ஞாபகப்படுத்துது... அவ கண்ணு அழகுல மயங்கிதானே அவளையே நான் காதலிக்க ஆரம்பிச்சேன். அவ அழகை தினம் தினம் ரசிக்கத்தான்.. அந்தக்காலத்துல புதுசா ஒரு சைக்கிளையே வாங்கினேன்.. அவளை வீட்டை விட்டு ஒட்டிக்கிட்டு வந்தேன். அவ கழுத்துல திருட்டுத்தாலி கட்டினேன். என் புள்ளைக்கும் என் பரிமளத்தோட ஜாடையில பூமாதிரி கண்ணு... அவ பார்க்கற மாதிரியே அதே பார்வையில கொஞ்சம் கோணலாத்தான் பார்க்கறான்... ஆனா இவன் ஒடம்பு நெறம் மட்டும் இவனைப் பெத்தவன் நெறத்துல இருக்கு. பெத்தவன் என்னை மாதிரி கருப்பு இல்லையே... எனக்கு இவனைப் பாத்துக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. அன்னைக்கு எனக்குன்னு கம்பெனியில ஒரு கேடு கெட்ட மேனேஜர் வந்து வாய்ச்சான். எனக்கு சீட்டாட்டத்தோட மேல இருக்கற வெறியை புரிஞ்சுக்கிட்டு, நான் கேட்டப்பல்லாம் இல்லேன்னு சொல்லாம, எனக்கு பணம் குடுத்தான். அவன் ஒரு பொம்பளை ஷோக்காளி... என் பரிமளத்தோட கண்ணு அழகுல குப்புற விழுந்ததாலத்தான் எனக்கு கடனா அவன் பணம் குடுத்தாங்கற விஷயம் கொஞ்சநாள் கழிச்சித்தான் எனக்குப் புரிஞ்சுது. தேவடியா மவன் என் வாழ்க்கையை திட்டம் போட்டு கெடுத்துட்டான் அந்தப்பாவி... அவன் கெடுத்தானா? என் புத்தியை செருப்பால அடிச்சுக்கணும். என் புத்தி குறுக்கு வழியிலே போச்சு..? இதுக்கு அவனை நொந்துகிட்டு என்னப் பிரயோசனம்? சீட்டாடறதுல எப்பவும் எனக்கு இருந்த ஆசை, வெறி; சூதாடி பிரண்டுங்களோட சகவாசம், என் பொல்லாத நேரம்... வாங்கினக் கடனை யாருக்கும் திருப்பிக் கொடுக்க முடியாம, கையாடின ஆஃபீஸ் பணத்தை கட்ட முடியாம, என்னை நம்பி வந்தவளை என் மேனேஜரோட படுக்கச்சொல்லி கஷ்டப்படுத்தின, மாட்டேன்னு சொன்னவளை வற்புறுத்தின மானம் கெட்ட கசமாலம் நான். என் புத்தியைத்தானே நான் செருப்பால அடிச்சுக்கணும்... அதை விட்டுட்டு அடுத்தவனை கொறை சொல்றேன்...! ஆனா என் புள்ளை... தன் கூட வந்தவளை ஒருத்தன் தொட வந்தான்னு, இரண்டு பேரை ஒத்தையில நின்னு வேட்டை ஆடிருக்கானே? சுப்பு நீ.. சிங்கம்டா... மானமுள்ளவன்டா... உன் உடம்புல நல்ல ரத்தம் ஓடுதுடா... கீப் இட் அப்... சத்தியமா என் ரத்தம் உன் ஒடம்புல ஓடலடா... நல்லாருடா ராஜா... என் புள்ளை நெத்தியில இவ்வளவு நீள பேண்டேஜ் போட்டிருக்கே...? நெத்தி கிழிஞ்சிப் போயிருக்கா..? அடி கொஞ்சம் பலமா பட்டிருக்குமோ...? அய்யோ பாவம்.. அடிபட்டப்ப வலியில என் புள்ளை எப்படி துடிச்சானோ? கனகசபை தன் உள்ளத்தில் ரத்தம் வடிவது போல் உணர்ந்தான். என் நிலைமை... என் நேரம் அப்படி.. காதலிச்சு கட்டிக்கிட்டவளையே, எவனுக்கோ ரெண்டு நாளைக்கு, வாங்கின கடனுக்காக, தாரத்தை தாரை வாத்து குடுக்க வேண்டியதாப் போச்சு... என் மேனஜர் கில்லாடீ... களவாடின கம்பெனி பணத்தை என்னால திருப்ப முடியாததாலே, நீ ஜெயிலுக்குப் போவேன்னு மிரட்டி மிரட்டியே என் பொண்டாட்டியை அனுபவிச்சிட்டான். அவன் மட்டுமா அனுபவிச்சான். அவனுக்கு மேல இருந்த ஒரு நாயோடவும் ஒரு நாளைக்கு படுக்க வெச்சான். சூது வாது அறியாத என் பரிமளா, நான் தூக்கு மாட்டிக்கிட்டுத்தான் சாகப்போறேன்னு நடிச்சதும்.. ரெண்டாவது ஆளோட படுக்கவும் சரின்னு ஒத்துக்கிட்டா.. ரெண்டு நாயோடவும் ரெண்டு நாள் படுத்து எழுந்தா... ஆனா என்னால ஜெயிலுக்கு போகாம இருக்க முடிஞ்சுதா...? காண்டுப்பசங்க... என் நிலைமையை அவனுங்களுக்கு சாதகமா பயன் படுத்திக்கிட்டானுங்க... நான் ஜெயிலுக்குப் போனதும், நடுத்தெருவுல நின்ன என் பொண்டாட்டிக்கு ஆறுதல் சொல்ற சாக்குல நெதமும் வீட்டுக்கு வந்து, நான் வேலை செய்த அதே கம்பெனி கேன்டீன்ல பரிமளாவுக்கு வேலை போட்டுக்குடுத்து, நைசா பேசி... சிரிச்சி, சின்னவயசு பொண்ணு மனசை கலைச்சி, ரெண்டு வருஷம் தன் சொந்தப் பொண்டாட்டியால்லா வெச்சிக்கிட்டான் என் மேனஜரு? இதையெல்லாம் நினைச்சு இப்ப யாரையும் நொந்துகிட்டு என்னப்பண்றது...? எல்லாம் என் தலையெழுத்து...? அன்னைக்கு புத்திக்கெட்டுப் போயிடிச்சி எனக்கு...? ஜெயில்ல நான் இருந்த இரண்டு வருஷம்... என் சொந்தக்காரன் எவனாவது, என் பரிமளாவை பாத்துக்கறேன்னு வந்தானா? இல்லே அவ வீட்டுலேருந்துதான் யாராவது வந்தாங்களா? பரிமளம் எங்கே போவா? பொறந்த வூட்டுக்கும் போகமுடியாம, புகுந்த வீட்டுலேயும் நுழைய முடியாம அவஸ்தை பட்டவளை, என் மேனேஜர்தானே, சொந்தமா, பந்தமா, பத்திரமா பாத்துக்கிட்டான்...? பரிமளா என்னைக் காதலிச்சா... என் கூட தன் வீட்டைவிட்டுட்டு, சொந்த பந்தம் எல்லாத்தையும் விட்டுட்டு ஓடி வந்தா... என் கையால கோவில்லே திருட்டுத்தாலி கட்டிக்கிட்டா... பரிமளாவுக்கு நான் பண்ணது தப்புதான். சொந்தப் பொண்டாட்டியை பணத்துக்காக இன்னொருத்தனுக்கு கூட்டிக்குடுத்தது மகா பெரியத் தப்புதான்... இப்ப என் எதிர்ல நின்னு என்னை வெறுப்போட, எரிச்சுடற மாதிரி பாக்கற இந்த சுப்பு எனக்கு பொறந்தவன் இல்லேதான்... என் கம்பெனி மேனஜருக்குப் பொறந்தவன்தான். இதுல எனக்கு எந்த சந்தேகமும் இல்லே... ஆனா என் பொண்டாட்டி மனசும் கொஞ்சம் கொஞ்சமா என் மேனேஜர் பக்கம் திரும்பிடிச்சே... அவனைத் தன் புருஷனா நெனக்க ஆரம்பிச்சிட்டாளே.. அத நினைச்சாத்தான் என் வயிறு இன்னைக்கும் பத்திக்கிட்டு எரியுது... இன்னொருத்தனுக்கு கூட்டிக்குடுத்த நீ என் புருஷனே இல்லே... அந்த மேனேஜர்தான் என் புருஷன்... எவன் கிட்ட என் மனசு விரும்பி படுத்தேனோ... எவன் கிட்ட என் புள்ளையைப் பெத்துக்கிட்டேனோ... அவன்தான் என் புருஷன்... எனக்கு சோறு போட்டவன் அவன்... எனக்கு துணி குடுத்தவன் அவன். என்னை பாதுகாத்தவன் அவன்... நீ என் வீட்டுக்குள்ளே நுழையாதேடான்னு என்னை வெரட்டினாளே? இதை மட்டும் என்னால இன்னைக்கும் தாங்கவே முடியலே.. நானும்தானே என் வீட்டை, என் பூமி, வயலு, வாய்க்கா... சொந்தம், பந்தம், எல்லாத்தையும் இவளுக்காக விட்டுட்டு ஓடி வந்தேன்... ஆனா என்னை போடான்னு காறித் துப்பினாளே, தாலி கட்டின ஆம்பிளையை என் கிட்ட வராதே, என்னைத் தொடாதேன்னு, போடான்னு வீட்டை விட்டுத் தொரத்தினாளே, இது எவ்வளவு பெரிய கொடுமை...? அதான் நான் கட்டினத்தாலியை கழட்டிக்குடுடீன்னு அவளை அடிச்சேன்... தொந்தரவு பண்ணேன்.. எத்தனை நாள்தான் இது நடக்கும்...? தோளுக்கு மேல வளந்துட்ட என் புள்ளைக்கு என் வெட்டி அதிகாரம் புடிக்கல. அவன் சொல்லிப்பாத்தான். நான் கேக்கலை. பொறுத்து பொறுத்து பாத்துட்டு, ஒரு நாள் என்னை வெட்டறதுக்கு, அரிவாளை ஓங்கிட்டான். என் பரிமளாவே இவன் உன் பிள்ளை இல்லடா நாயே... இவன்கிட்ட எந்த சொந்தமும் உனக்கு இல்லே... மவனே... மவனேன்னு... சொந்தம் கொண்டாடிக்கிட்டு நீ என் வீட்டுக்குள்ளே வராதே.. உன் எச்சை புத்தி இவனுக்கும் வந்துடக்கூடாது... உன் நிழல்கூட என் புள்ளை மேல படறதை நான் விரும்பலேன்னு எத்தனை தரம் சொல்லியிருக்கா... ஆனா மனசுன்னு ஒண்ணு இருக்குதே அது நாம சொல்றதை அது எப்பவாவது கேக்குதா...?? அதுக்கு மானம் வெக்கம் சூடு சொரணை எதுவும் கிடையாது. சின்ன வயசுல அப்படியே பரிமளத்தை உரிச்சி வெச்சிக்கிட்டு இருந்தான் இந்த சுப்பு... நான் உயிருக்கு உயிரா காதலிச்சவ ஜாடையில இருந்த இந்த அழகான புள்ளையை என்னால பாக்காம இருக்க முடியுமா? பரிமளா என்னை எவ்வளவுக்கு எவ்வளவு விரட்டி அடிச்சாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு, நான் மானங்கெட்டவனா, வெக்கம் கெட்டவனா, திரும்ப திரும்ப அவ வீட்டு முன்னாடி போய் நின்னேன்... நான் மட்டும் இவங்களை விட்டுட்டு எங்கே போவேன்...? எல்லாம் என் தலையெழுத்து. சுப்புவை பெத்தவன், இவனுக்கு ரெண்டு வயசா இருக்கும் போதே, வேற கம்பெனிக்கு மாறி ஊரை விட்டேப் போயிட்டான்.. அவன் இப்ப எங்கே இருப்பான்? அவனை ஒரு தரம் பாக்கணும்... அவனை ஒரு தரம் மனசாரக் கையெடுத்து கும்பிடணும்... நான் ஜெயில்லே இருந்தப்ப, எந்த ஆதரவும் இல்லாம இருந்த என் பரிமளாவை கண்ட தெரு நாய்களும் கடிச்சுக் கொதறிடாம, அவளை ஒரு தொழில் பண்ற வேசியா ஆக்கவிடாம, தன்னோட பாதுகாப்புலே வெச்சிக்கிட்டானே, அதுக்காக ஒரு தரம் அவனை கையெடுத்து கும்பிடணும். சுப்புவை பெத்தவன் எவனோங்கறதுக்காக இன்னைக்கு இவன் என் புள்ளை இல்லேன்னு ஆயிடுவானா? புத்தி தெரியாத வயசுல இவனே என்னை அப்பா.. அப்பான்னு.. கூப்பிட்டிருக்கான்... என் மடியிலே விழுந்து புரண்டு விளையாடி இருக்கான். என் மடியிலே விழுந்து பொரண்டு வளர்ந்த என் புள்ளை சுப்பு மூஞ்சியிலா பூரான் வுடப்போறானுங்க...? என் புள்ளை ரத்தம் ஒழுவிகிட்டு ரோட்டுல நிக்கறதை நான் பாத்துக்கிட்டு சும்மாருப்பனா? என் புள்ளையைப் பத்தி இந்த நாயுங்களுக்கு என்னாத்தெரியும்? கிராமத்துல அந்த வயசுலேயே அம்பது மூட்டை நெல்லை ஒருத்தனா லாரியிலேருந்து எறக்கி ஏத்தறவன் என் புள்ளை... இப்ப இங்கே வுட்டா நிச்சயமா நாலு பேரை ஒத்தையில நின்னு அடிப்பான்... என் தப்புதான்... என் பொண்டாட்டியை இன்னொருத்தனுக்கு விட்டுக் கொடுத்தேன்... ஆனா நான் எப்பவும் எனக்கு பொறக்காத இவனை என் புள்ளையாத்தான் நினைச்சேன். எப்படி இருந்தாலும் இவனை பெத்து... தன் பாலை ஊட்டி வளத்தவ, நான் காதலிச்சு, கல்யாணம் பண்ணிக்கிட்ட என் பரிமளாதானே...! இதே சுப்பு கொழந்தையா இருந்தப்ப... கொஞ்ச நாளாயிருந்தாலும், இவனை என் ராஜா... என் சுப்பு... என் சுப்புன்னு, ஆசையா தூக்கி, என் தோள்லேபோட்டு, மனசார கொஞ்சியிருக்கேனே? அந்தப்பாசம் எத்தனை நாளானாலும், என்னை விட்டுப் போயிடுமா? எங்களுக்குள்ள ஆயிரம் லஃப்டா இருக்கும்...! ஆனா இவன் என் புள்ளை...! என்னைக்கும் இவன் என் புள்ளைதான்...!! நான் செத்தாலும் இவன்தான் எனக்கு கொள்ளி போடணும்... என் எதிர்லே இவன் மேல ஒருத்தன் கை வெச்சுடுவானா? என் புள்ளை மூஞ்சையா பிளேடால கீறி பூரான் வுடணும்ன்னு காத்தாலேருந்து துடிச்சிக்கிட்டு இருக்கான் இந்த சின்னசாமி...? இவன் அம்மாளுக்கு நான் பண்ண அநியாயத்துக்கு என்னை வெட்டறதுக்கு இவன் அரிவாளைத் தூக்கினான். நான் என் உயிருக்கு பயந்து ஊரை விட்டே ஓடியாந்தேன்..

பிச்சை எடுத்தேன். சாராயம் வித்தேன்.. பொட்டலம் போட்டேன். பலான பொண்ணுங்களுக்கு ஆள் புடிச்சிக்குடுத்தேன். கூலி வாங்கிக்கிட்டு கையை காட்டினவனுங்களை அடிச்சேன்... அடிபட்டேன். ஜெயிலுக்குப் போனேன். திரும்பி வந்தேன். வயசு அம்பதுக்கு மேல ஆவுது... கொஞ்சம் கொஞ்சமா திருந்தி, இப்ப தெனக்கூலிக்கு டிரைவர் வேலை செய்யறேன்... என்னா... இன்னையத் தேதிக்கு என்னைக்குமே உருப்படாத இந்த பொறுக்கிங்க கிட்ட மாரடிக்கறேன்... இன்னைக்கு எனக்குத் தெரிஞ்ச ஒரே தொழில் கார் ஓட்டறது... சொந்தமா நான் எங்க கார் வாங்கறது? ஊர் பேர் தெரியாத என்னை எவன் டிரைவரா வெச்சிக்கிறேங்கறான்... அதான் இவனுங்கக்கூட அல்லாடிக்கிட்டு இருக்கேன்.. ஒரு நல்ல எடம் கிடைக்கட்டும். இவனுங்க சங்காத்தமே வேணாம்ன்னு இவனுங்களையும் விட்டுடத்தான் போறேன்... என் புள்ளை இன்னைக்கும் என்னை வெறுக்கறான்னு அவன் என்னைப்பாக்கற பார்வையிலேயே எனக்கு நல்லாத் தெரியுது... ஆனா... என் எதிர்லேயே இவன் மூஞ்சிலே மன்னாரு ப்ளேடு போட்டுறுவானா? இவனுங்க ப்ளேடு போடுவானுங்க... என் புள்ளை மூஞ்சிலே ரத்தம் ஒழுவறதை பாத்துக்கிட்டு சும்மா நிக்கறதுக்கு நான் என்ன ஒம்போதா...? அப்படி எதாவது நடந்துட்டா இவனுங்களை நான் சும்மா விட்டுறுவேனா? தாயோளிங்களை ஒட ஒட தொரத்தி தொரத்தி... ரோட்டுலேயே வவுந்தடமாட்டேன்... தன் இடுப்பில் எப்போதும் செருகி இருக்கும் சைனீஷ் மேக் பட்டன் கத்தியை ஒரு முறை ஜாக்கிரதையாக தடவிப் பார்த்துக்கொண்டான் கனகசபை.

No comments:

Post a Comment