Wednesday 7 August 2013

சங்கீதா - இடை அழகி 7


நல்ல இருட்டில் அடிக்கும் காற்றுக்கு மரங்களின் இலைகள் சலசலவென அசையும் சத்தம் ஹாஸ்பிட்டலின் சுத்துபுற நிசப்தத்தை அமைதியாய் ஜெய்த்துக் கொண்டிருந்தது. வேகமாகவே வந்தாலும் வயதான பெரியவர் இருமுவதுபோல இருந்தது ஹாஸ்பிட்டலில் போலீஸ் ஜீப் நின்றபோது.. ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் வார்டன் டிரஸ்ஸில் ஒருவன் காம்பெளண்ட் சுவரை ஏறுவதை கவனித்தார்.. “உய்ங்…. உய்ங்….” என்று விசில் சத்தம் குடுத்துக்கொண்டே அவனின் காலில் தனது லத்தியை விசிறி எரிய அவனது முழங்காலில் அது நல்ல அடியைக் குடுத்திருக்க வேண்டும்… சற்று சறுக்கியது அவனுக்கு.. இருப்பினும் இன்னும் முயற்சி செய்து ஏறினான்.. கான்ஸ்டபிள் அவனை நெருங்கினார்…. இன்னும் வேகமாக முயற்சி செய்தான்…. அவர் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்… வேறு வழி ஏதும் இன்றி தன் இடுப்பில் இருந்து ஒரு சிறிய பிஸ்டலை எடுத்து கான்ஸ்டபிள் காலில் சுட்டுவிட்டு முழு பலத்தையும் போட்டு அந்த சுவரின் மீது எரி தப்பித்து விட்டான்….

உடன் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் காயம் அடைந்தவரை நோக்கி எழுப்பினார்… இன்னொருவர் ஹாஸ்ப்பிட்டல் வளாகத்துக்கு வெளியே சென்று அவனை துரத்த ஓடினார் IOFI வளாகத்துக்குள் பர்சனல் வி.ஐ.பி லாஞ்சின் உள்ளே “ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ” என்ற ஆங்கில வெஸ்டர்ன் மியூசிக் மிருதுவான சத்தத்தில் மனதை வருடும் விதம் ஓடிக்கொண்டிருக்க அதை ஹம் செய்தபடி சோஃபாவில் ஃபோனும் கையுமாக சாய்ந்திருந்தான் ராகவ்…. அவன் சற்று அயர்ந்திருந்தான் என்பது அவனது கண்களில் தெரிந்தது, இருப்பினும் சங்கீதாவின் பிறந்தநாள் பரிசாக தான் வழங்கிய க்ரீட்டிங் கார்டை சங்கீதா பார்த்திருப்பாளா என்று எண்ணி மனதுக்குள் பரவசப்பட்டான். “என்னுடைய சரா இந்நேரம் பார்த்திருப்பாளா, சந்தோஷப் பட்டிருப்பாளா, பார்த்தப்போ என்ன நினைச்சி இருப்பா?” என்று மனதுக்குள் எண்ணி அங்கும் இங்கும் வளாத்தினான். அவளுடைய அழைப்புக்காக ஏங்கினான், முகத்தில் நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத தாடி எட்டிப்பார்த்தது. அவனுக்காகவே செய்தது போல ஒரு கிரீம் நிற லெனின் ஷர்ட் அணிந்து அதில் முதல் மூன்று பட்டன்களை அகற்றிவிட்டு ரோமம் படர்ந்த மார்பு தெரியும்விதம் அந்த அறையின் கண்ணாடி முன்பு அவனது நெஞ்சில் “சரா” என்று பச்சை குத்திய இடத்தைப் பார்த்தபடி அவனது தலை முடியை கலைத்துவிட்டு, ஜில்லென்ற நீரை முகத்தில் அடித்தான். எப்போதும் இல்லாதது போல் இன்று அவனுக்கே அவனது முகம் இன்னும் வசீகரமாக தெரிந்தது. அவனது மணம் முழுக்க சரா தான் குடி இருந்தாள். “அவ பார்திருப்பாளா? ஏன் இவளோ நேரம் எடுக்குறா கூப்பிடுறதுக்கு” என்று எண்ணுகையில் “வேக்….வேக்….” அவனது செல் ஃபோன் சினுங்கியது. “Mr.வாத்து calling” என்று ஃபோன் ஸ்கிரீனில் வந்தது. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான் ஆனால் இந்நேரம் அவன் இந்த ஃபோன் கால் எதிர் பார்க்கவில்லை. “டேய் வாத்து.. எப்படிடா இருக்கே? உனக்கு நேத்துதான் மெயில் போட்டேன் அதுக்குள்ள பார்த்துட்டு ஃபோன் பண்ணுற? அவ்வளோ சுருசுருப்பாய்டியாடா நீ? சூப்பர் டா..” – ராகவ் தன் வாழ்கையில் அதிகம் நம்பும் பள்ளி ஸ்நேகிதன் கார்த்திக்கிடம் மிகவும் உற்சாகமாய் பேசினான். “டேய் எனிமி, ஃபிரண்ட்ஸ் விஷயத்துல நான் உன்னை மாதிரி சோம்பேறி கிடையாது டா.. அப்புறம் தயவுசெய்து என்னை கார்த்திக்னு கூப்பிடுடா, அந்த வாத்தை விட்டு தொலைய மாட்டியா?….” – அப்பாவியாக பேசினான் கார்த்திக். “நீ என்னிக்குமே வாத்துதான்.. சரி எப்போ வர, அதை சொல்லு முதல்ல…” “உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு, மணசு சரி இல்ல.. அப்படின்னு சொன்னியே, என்னடா ஆச்சு?” “எல்லாம் நேர்ல சொல்லுறேன் டா, உன்னை பார்க்கணும் மச்சி.. சீக்கிரம் கிளம்பி வா.” “அடுத்த வாரம் வந்துடுறேன் டா… எனக்கும் என்னோட வர்ஸ்ட் எனிமிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு..” “ஹா ஹா… இன்னும் நீ என்னை எனிமியா தான் பார்க்குற…. இல்ல..” “கண்டிப்பாடா.. மவனே நீ செஞ்ச காரியங்களுக்கு என்னதான் நீ என் பெஸ்ட் ஃபிரண்டா இருந்தாலும் எனக்கு என்னிக்குமே நீ என் எனிமிதான்.” “ஹா ஹா…. சரி சரி சீக்கிரம் வந்து சேறு…. இந்த ஒரு நாள் ரெண்டு நாள் வேலையெல்லாம் வேணாம் ஒரு ரெண்டு மூணு வாரம் என்னோட இருந்துட்டு போ..சரியா?” “ஆமா…. அப்படியே ஒபாமா கூட ஒக்காந்து ஒப்பந்தம் பண்ணுற அளவுக்கு பிஸி பாரு… ஏண்டா நீ வேற…… நான் வெட்டி ஆபிசர் தான்… சீக்கிரம் வரேன்..” “ஹா ஹா… சரி டா நான் வெக்குறேன்…” “ஏன் ஏதாவது ஃபிகர் கூப்பிடுதா?” “பரவாயில்லையே.. டேய் வெண்ண, உனக்கு இந்த விஷயத்துல மட்டும் மூளை இருக்குடா..” “என்னதான் CEO ஆனாலும் ஃப்ரண்ட் கிட்ட பேசும்போது ஒருத்தன் ஃபோன் கட் பண்ணுறான்னா அது வேற எதுக்கு இருக்கபோகுது? நீ நடத்து, நான் வெக்குறேன். பாய்..” பலரால் ராகவைப் புரிந்துகொள்ள முடியாது. முன்கோவம், கர்வம் உடையவன், திமிர் பிடித்தவன், கெட்டவன், முரடன், என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் அவனை முதுகுக்கு பின்னால் சாடுவார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை கேட்டு உள்ளுக்குள் கஷ்டப்படுவதைக் காட்டிலும் ஒரு வித சந்தோஷத்தில் மிதப்பான்.. காரணம் மற்றவர்கள் தொடர்ந்து நம்மை ரகசியமாக திட்டுகிறார்கள் என்றால் நாம் ஏதோ தொடர்ந்து சாதித்துக் கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம். இப்படி பலரும் அவனை சுத்தி இருக்கையில், அவனை எந்த ஒரு ஈகோவும், பொறாமையும் இன்றி அவனது ஆழ் மனதை நன்கு புரிந்து அவன் குடும்பத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் அவன் மனதில் ஆதிக்கம் செலுத்தியவள் சந்கீதாதான். ஆனால் அதற்கு முன்பு அவன் மனதில் ஆழமான நம்பிக்கையை சம்பாதித்திருக்கும் ஒரே நல்ல நண்பன் கார்த்திக் மட்டும்தான். கார்த்திக் ஃபோன் வைத்தவுடன் ராகவின் விரல்கள் உடனடியாக அவனது சாராவின் ஃபோன் நம்பர்களை அழுத்தி டிஸ்கோ டான்ஸ் ஆடியது…. “ஹலோ..” – சராவின் வார்த்தைகளை நோக்கி ஆர்வமாக பேச ஆரம்பித்தான்.. “ஹலோ, யார் பேசுறது?” – ஸ்நேஹா பாவமாக சற்று பயந்த குரலில் கேட்டாள்.. “ஏய் ஸ்நேஹா, என்னடா ஆச்சு? ஏன் என்னமோ ஒரு மாதிரி பேசுற? நான் ராகவ் பேசுறேன்..” “மாமா அது வந்து….” – லேசாக விசும்பினாள் ஸ்நேஹா. அப்போது அருகில் சங்கீதா பலமாக அழும் சத்தம் ஃபோனில் கேட்டது ரகாவ்கு. “ஏய் என்னடா ஆச்சு, ஏன் அம்மா அழுவுறாங்க?” – ராகவ் பதட்டத்துடன் கேட்டான்.. “ஒரு ஃபோன் வந்துச்சி மாமா, அதுக்கப்புறம் அம்மா அப்படியே தரையில உட்கார்ந்துடாங்க, எந்திரிக்கவே இல்ல, இன்னும் அழுவுறாங்க..” “ஃபோன் குடு அம்மா கிட்ட..” “ச…சங்கீதா….அழாதடா… என்ன ஆச்சு….” – ராகவ்கு என்ன ஆச்சு என்ற பதட்டம்… ராகவ் குறள் கேட்டவுடன், மறுமுனையில் சங்கீதா பலமாக அழ தொடங்கிவிட்டாள். “ஏய்.. என்ன ஆச்சுடா? ஏன் அழுவுற? நான் இருக்கேன் ஏதுவா இருந்தாலும் சொல்லு என்ன ஆச்சு?” – பேசிக் கொண்டே காலணிகளை மாட்டி ஷர்ட் பட்டன்களை போட்டுக் கொண்டு சங்கீதாவின் வீட்டுக்கு கிளம்ப தயாரானான். “ராகவ்….” (அவளுக்கு குறள் உடைந்தது) “என… என்.. ஸ்ஷ்.. ஸ்ஷ்.. (பேச முடியாமல் விடாப்படியாக மூச்சு வாங்கி வாங்கி கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள் )எனக்கு பயமா இருக்குடா..” “ஃபர்ஸ்ட் அழுவுறதை நிறுத்து, என்ன ஆச்சு.. அதை சொல்லு..” – ராகவ் படபடப்புடன் கேட்டான். (அழுகையும், இழுத்த வார்தைகளுமாய் பேசினாள் சங்கீதா) ஸ்ஷ்…. ஹாஸ்பிடல்… ஸ்ஷ்.. கு….மார கொல பண்ணிட்டாங்களாம் ராகவ்வ் ஸ்ஷ்…ஆஹ்..மா.. ஸ்ஷ்ஆஆ…( ராகவ் பேசுவது அவளுக்கு தெம்பாக இருப்பதால் இன்னும் அழுகையின் சத்தம் உயர்ந்தது அவளுக்கு.) “என்ன சொல்லுற? உனக்கு யார் சொன்னாங்க?” “ஸ்ஷ்ஷ்… போ… போலீஸ் ஃபோன் பண்ணி சொன்னார் டா…. எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல டா..( மீண்டும் அழ தொடங்கினாள்.) குமாரை ஏன் கொலை செய்யணும்?.. அடுத்து என்னையும்….” – சங்கீதா பேசி முடிப்பதற்குள் ராகவ் தடுத்து நிறுத்தினான். “ஸ்டாப் இட் இடியட்.. பசங்க இருக்காங்க, அவங்க எதிர்க்க என்ன வேணுன்னாலும் பேசுவியா?… என்ன பேசுற நீ.. நான் சொல்லுறதை செய்.. முதல் வேலையா வீட்டை பூட்டிகிட்டு உட்கார்ந்திரு.. ஒரு கதவு ஜன்னல் கூட விட்டு வைக்காத. நான் உடனே வந்துடுறேன். அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போகலாம். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே இருப்பேன்.” – அவசரமாய் பேசி விட்டு அவனது BMWவில் சங்கீதாவின் வீட்டை நோக்கி சீறினான் ராகவ். விஷயத்தை முதலில் கேட்டபோது அப்படியே அதிர்ச்சியின் அதிர்வில் பயமும் குழப்பமும் கலந்து உறைந்திருந்தவள் குழந்தைகளைப் பார்த்தாள். ஒன்றும் புரியாமல் பதிலுக்கு அவளைப் பார்த்தது அந்த பிஞ்சு கண்கள். உடனே ராகவ் சொன்னது நியாபகத்துக்கு வந்து ஏதோ ஒரு வித பயம் உடல் முழுவதும் பரவியது சங்கீதாவுக்கு. முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அவசரமாக எழுந்து ரூம் கதவு, வீட்டின் பின் கதவு, சமையல் அறை, ஜன்னல்கள் மற்றும் வாசல் கதவு என்று அனைத்தையும் சாத்தி விட்டு லேசாக சத்தம் குடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஃபேனையும் ஆஃப் செய்து விட்டு ஹாலில் தனது செல் ஃபோனை கையில் இறுக்கமாக வைத்து குழந்தைகள் இருவரையும் நெஞ்சோடு அனைத்து பத்திரமாக அணைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு நொடியும் ராகவை மனதில் எண்ணி “சீக்கிரம் வா… சீக்கிரம் வா….” என்று மெளனமாக சொல்லிக்கொண்டே இருந்தாள். வீடு முழுவதும் நிசப்தம்.. அந்நேரம் டிங்..டிங்.. என்று காலிங் பெல் சத்தம் கேட்டது. “ஆங்” என்று ஒரு நிமிடம் பதட்டத்தில் தனக்கு தானே சொல்லிக்கொண்டு கதவை நோக்கி சென்று “டோர் ஐ” வழியாக யாரென்று பார்த்தாள். ராகவ் தலை முடியை வேகமாக கோதியபடி நின்றிருந்தான். அதைப் பார்த்ததில் அவளுக்கு பாதி உயிர் வந்தது. உடனே கதவை திறந்தவள் பயத்தில் அவனை அப்படியே அழுத்தி அனைத்துக் கொண்டாள். “இட்ஸ் ஓகே… இட்ஸ் ஓகே… நான் வந்துட்டேன் இல்ல.. பயப்படாத டா..” – மூச்சு வாங்க சங்கீதா பயத்தில் விம்மி விம்மி அழுவதை தன் நெஞ்சில் உணர்ந்தான் ராகவ். குழந்தைகள் இருவரையும் கூப்பிட்டு கார் கதவை திறந்து “உள்ளே உட்காருங்க..” என்று சொல்லிவிட்டு சங்கீதா வீட்டை பூட்டியவுடன் அவள் தோள்களை பற்றி அணைத்தபடி அவளை காரில் முன்பக்கம் தனது பக்கத்து இருக்கையில் அமரவைத்து வழக்கத்தை விட காரில் இன்னும் அதிக வேகம் குடுத்து சீறினான் .. ஹாஸ்பிடல் சில நிமிடங்களில் வந்தது… சற்று நேரத்தில் இருவரும் குமாரின் வார்டுக்கு உள்ளே நுழையும்போது போலீஸ் புகைப் படம் எடுத்துக் கொண்டு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். போலீசைப் பார்த்தவுடன் உடனே விரைந்து சென்றான் ராகவ்.. “இன்ஸ்பெக்டர்.. உங்க பேரு என்னவோ சொன்ணீங்களே…..” “ராஜேந்திரன்..” – யாரென்று பார்க்காமல் குமாரைப் பார்த்தே பேசினார் போலீஸ்.. இது எப்படி ஆச்சு? – கற்ச்சீஃப் வைத்து நெற்றியை துடைத்தபடி பேசினான் ராகவ். “நீங்க….” (ராகவைப் பார்த்து சற்று நியாபகப் படுத்திக்கொண்டு பேசினார் இன்ஸ்பெக்டர்) “ராகவ் தானே..” “ஆமாம்…”- எதைப் பத்தியும் யோசிக்காமல் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான் ராகவ். “ஆயுதம் எதுவுமே உபயோகப் படுத்தல சார், ஆனா ஆள் உயிரோட இல்ல. தலையணை வெச்சி முகத்தை மூடி அமுக்கி கொன்னு இருப்பானானு பார்த்தா அதுவும் இல்ல. உள்ள வந்தவன் எந்த பொருளையும் தொடவும் இல்ல. ரொம்ப காம்ப்லிகேட்டட். ஹாஸ்பிடல் செக்யூரிட்டி ஆளுங்க கிட்டயும் விசாரணை நடக்குது. இங்கே ஒரு செக்யூரிட்டி கேமரா கூட இல்ல சார். எங்க நிலைமை ரொம்ப கஷ்டம். – இன்ஸ்பெக்டர் சலித்துக் கொண்டார். உங்களுக்கு முதல்ல விஷயம் எப்படி தெரிஞ்சிது? யார் சொன்னாங்க? – ராகவ் இன்ஸ்பெக்டரை கூர்ந்து பார்த்துக் கேட்டான். (கண்கள் இடுங்க பேசினார் போலீஸ்) ஒரு ஃபோன் வந்துச்சி சார், இத்தினி மணிக்கி இன்னாரு இறந்துட்டாரு, நான் யாருங்குறதை அப்புறம் சொல்லுறேன், சீக்கிரம் வாங்கன்னு மட்டும் சொல்லிட்டு ஃபோன் வெச்சிட்டான். யாரு என்ன எது… அப்படின்னு.. – போலீஸ் பேசுவதற்குள் ராகவ் இடைமறித்தான்.. “உங்களால அந்த நம்பரை….” ராகவ் பேசுகையில் “நான் கொஞ்சம் பேசி முடிச்சிடுறேன் சார்..” என்றார் கரகரத்த குரலில் ராஜேந்திரன்…. “ஸ்ஸ்ஷ்… சொல்லுங்க….” – கொஞ்சம் பொறுமையை இழந்து பேசினான் ராகவ்.. “உள்ள வந்த உடனேயே ஒருத்தன் ஹாஸ்பிடல் காம்பொளண்ட் தாண்டி ஓடினான் சார்…. பிடிக்க போன கான்ஸ்டபிள் கால்ல சுட்டுட்டான்… பாருங்க.. இவர் ஆளோட உருவ அடையாளக்ளை நியாபகம் வெச்சி இருக்காரு… அவன் எங்கே ஓடினான்ன்னு பார்க்க போன இன்னொரு கான்ஸ்டபிளை இன்னும் காணும்…” ஒஹ்… மை காட்… முகம் பார்க்க முடியலையா? இல்ல சார்.. ஆனா ஒரு விஷயம் சார்.. என்ன?… அவன் இந்த ஹாஸ்பிட்டல் வார்டன் பாய் டிரஸ்தான் போட்டிருந்தான்.. என்ன சொல்லுறீங்க?… – அதிர்ச்சியுடன் கேட்டான் ராகவ்… ஆமாம் அதான் சீஃப் டாக்டர் வந்தா அவர் கிட்டயும் சில விஷயங்கள விசாரிக்கணும் னு காத்திருக்கேன்… “நீங்க ஏதோ கேட்க வந்தீங்க.. நான் நடுவுல பேசிட்டே இருந்துட்டேன்.. உக்ஹும்… சாரி சார்… ஹச்…. என்ன கேட்க வந்தீங்க?” – சற்று இருமியவாறே கரகர குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்… “இந்த நியூஸ் சொல்ல உங்களுக்கு ஒருத்தன் ஃபோன் பன்னானே அந்த நம்பரை ட்ராக் பண்ண முடியலையானு கேட்க வந்தேன்..” “பண்ணோம் சார்.. ‘நீங்கள் அழைக்கும் தொலை பேசி எண்னை சரி பார்க்கவும்’னு வந்துச்சி. ரிங் போகல” – வள வள பேச்சு ராகவிடம் இல்லை, எப்போவுமே ஸ்ட்ரைட் டு தி பாய்ண்ட்.. அவ்வப்போது நடு நடுவில் ராகவ் இப்படி கேள்வி எழுப்புவதை இன்ஸ்பெக்டர் விரும்பவில்லை என்றாலும் அவன் கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்தார். “ஹ்ம்ம்..” – கண்களை மூடி யோசித்தான் ராகவ். “சார்.. எனக்கென்னவோ அந்த இஸ்திரி பையன் சொன்ன துரை தான் செய்திருப்பானோன்னு தோணுது, உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்குதா?..” – இன்ஸ்பெக்டர் சிந்திக்க கொஞ்சம் சிரமப்பட்டு ராகவிடம் கேட்டார். கேள்விக்குறியாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தான் ராகவ். அவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. “கொஞ்சம் யோசிக்க விடுங்க..” என்று ஒரு புறம் அமர்ந்தான். ராகவ் எதிரே சீஃப் டாக்டர் வந்தார்.. அவரைப் பார்த்தவுடன் விரைந்து சென்றான். “டாக்டர்….” என்று ராகவ் நெருங்கும்போதே அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவருக்கு புரிந்திருந்தது. “குமாரை முறைப் படி போஸ்ட்மார்ட்டம் செய்து என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்ல முடியுமா டாக்டர்?” மெதுவாக அவனது கைகளைப் பிடித்து பேச தொடங்கினார் அவர்.. “அவசியம் இல்லை ராகவ்..” – சற்று லேசான பயத்தில் நெற்றி வேர்த்திருந்தது அவருக்கு. என்ன சொல்லுறீங்க? ஆப்பரேஷன் செய்யுறதுக்கு முன்னாடி வலி தெரியாம இருக்குறதுக்காக குடுக்குற அனஸ்தீஷ்யாவை ஊசியால கொஞ்சம் அளவுக்கு அதிகமா குடுத்து இருக்கான். அது ஆளையே கொன்னுடும். இப்படி செய்யுறதால எங்களுடைய கவனக் குறைவாலதான் இது நடந்துச்சின்னு ஹாஸ்பிடல் மேலயும் பழி போடலாம். யாரோ உள்ள வந்து கொலை செய்திருக்காங்கனு சுலபமா மத்தவங்களால சொல்லிட முடியாதுன்னு யோசிச்சி செய்திருக்காங்க. ஆனா இவருக்கு ஆப்பரேஷன் நேத்தே முடிஞ்சிடுச்சி. – டாக்டர் ராகவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது போலீஸ் அருகில் வந்தார். என்ன சொல்லுறீங்க டாக்டர்…. உங்க கவனக் குறைவாலதான் இது ஆச்சா? ச்சே ச்சே… ஏன் இப்படி செய்திருக்கலாம்னு நான் ரகாவ்கு எக்ஸ்ப்லைன் பண்றேன் அவளோதான்.. மத்தபடி இதுக்கும் எனக்கும், எங்க ஹாஸ்பிடலுக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது. அப்போ ஏன் உங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் ஒருத்தன் காம்பொளண்ட் சுவர் எகிறி குதிச்சி ஓடணும்.. – இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மூர்கமாகவே கேட்டார்.. சீஃப் டாக்டர் “அதுவும் எனக்கு தெரியாது… நீங்கதான் கண்டுபுடிக்கணும்.. இது எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாயிஸ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்.. மொத்தமா எத்தினி பேர் இருக்காங்களோ எல்லாருமே இன்னிக்கி வந்திருக்காங்க… கூடவே அந்த யூனிஃபார்ம் போட்டு எங்கள்ள ஒருத்தனா இருந்தாதான் குமாரை கொலை செய்ய உதவுறதுக்கு சாத்தியமாகும்.. தவிர எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் டிரஸ் எந்த டைலர் கிட்ட குடுத்தாலும் தைச்சி குடுக்க ரொம்ப நாள் ஆகாது….” என்று அவர் பங்குக்கு விறைப்பாக பேசி முடித்தார்… ராகவ் இன்ஸ்பெக்டரை நோக்கி, “இன்ஸ்பெக்டர்.. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த விஷயத்தை தயவுசெய்து மீடியாவுக்கு தெரியப் படுத்த வேணாம். கூடவே பெரிய விஷயம் ஆக்க வேணாம்.. குமார் ஒன்னும் வி.ஐ.பி கிடையாது. என் கம்பெனியில் ஒரு சாதாரண எம்ப்லாயிதான், உங்க கான்ஸ்டபில் எடுக்குற போஃடோஸ் எல்லாம் உங்க இன்வஸ்டிகேஷனுக்கு மட்டும் பயன் படுத்திக்கோங்க, வேற யார் கைக்கும் போக வேண்டாம். ஐ ஹோப் யு அண்டர்ஸ்டான்ட்” – கொஞ்சம் கண்டிப்பாக சொன்னான் ராகவ். “ஹ்ம்ம்..” – நெற்றி சுருங்க கண்களை மூடி “சரி சார்” என்றார்… பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார் “உங்க சித்தப்பா கிட்ட ஏதோ என்னை பத்தி பேசுறேன்னு சொன்னீங்களே?” – இவ்வளவு நேரம் ராகவிடம் ஒத்துழைத்து பதில் சொன்னதுக்கெல்லாம் பலன் வேண்டாமா? கஷ்டப்பட்டு செயற்கையான சிரிப்பை வரவழைத்து பேசினார் இன்ஸ்பெக்டர். “ஹ்ம்ம்.. சமயம் வரும்போது பேசுறேன்.” – என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான் ராகவ். ராகவ் அங்கிருந்து கிளம்பும்போது டாக்டர் அவனிடம் நெருங்கி வந்து “ராகவ்…. இதுல எங்க ஹாஸ்பிடல் பேரும் சம்மந்தப்பட்டிருக்கு….” என்று லேசாக இழுத்தார்.. அதன் அர்த்தம் என்னவென்று ராகவ் புரிந்துகொண்டு “கவலை படாதீங்க, விஷயம் நமக்குள்ள மட்டும்தான் இருக்கும். வெளியே வராது. உங்க ஹாஸ்பிடல் பேர் கெடாது.” என்றான். ராகவ் சற்று அமைதியாய் சங்கீதாவின் அருகினில் வந்து அமர்ந்தான். எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதிகம் உடைந்து விடமாட்டாள் சங்கீதா. ஆனால் உயிர் பயம் என்பது பாரபட்சம் இல்லாமல் யாருக்கும் வரும். இருப்பினும் அதையும் தாண்டி மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டாள். ராகவ் அங்கும் இங்கும் நீண்ட நேரம் போலீசிடமும், டாக்டரிடமும் மாறி மாறி பேசி வருவதை நீண்ட நேரம் கவனித்தாள். இப்போது அவளிடம் விசும்பல் கொஞ்சம் குறைந்திருந்தது. அருகில் ராகவின் தோள்களைப் பற்றினாள். “என்னடா….” – பரிவுடன் கேட்டான் ராகவ்.. “போதும்டா, உன்னை இன்னும் சிரமப் படுத்திக்காத..” – இந்த வார்த்தைகளை சங்கீதா சொல்லும்போது அவனுக்கு இயல்பாய் வரும் கோவம் வந்தது. “என்ன போதும்? எது சிரமம், நான் ஒன்னும் என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இதெல்லாம் செய்யல..” – கோவத்தில் திரும்பிக் கொண்டான் ராகவ்.. தன் வலது கையால் அவன் முகத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பி, “கோவப் படாதடா… என்னை சுத்தி நடக்குற விஷயமெல்லாம் எனக்கு பைத்தியம் பிடிக்க வெக்குது. உன்னை பார்த்ததுல இருந்துதான் என் மனசுக்கு ஒரு விதமான தெம்பு கிடைச்சிது. இப்போ….(சில நொடிகள் பேசவில்லை..) ஸ்ஷ்… (லேசாக அழ தொடங்கினாள்) “எல்லா சடங்கையும் செய்யணும், இதுங்க ரெண்டும் சின்ன வயசுல பார்க்கக்கூடாததை எல்லாம் பார்கும்ங்க, அதெல்லாம் எதுக்கு செய்யுறோம்னு அர்த்தம் கேட்க்கும்ங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்லுற நிலைமையில நான் இருப்பேனானு தெரியலடா..” – ராகவின் தோள்களில் சாய்ந்தவாறு மெதுவாக அழுதுகொண்டே பேசினாள் சங்கீதா.. ஏன் ஏதாவது ஒலரிகிட்டே இருக்கே? – சற்று அதட்டலுடன் சொன்னான் ராகவ்…. “எல்லாருக்கும் சொல்லி அனுப்பனும் ஸ்ஷ்…” – அவளது கண்ணீர் ரகாவின் தோள்களை ஈரமாக்கியது.. “இன்னும் என்னென்ன செய்யணும்னு கூட தெரியாது.. கூடவே உனக்கும் நிறைய கஷ்டம் குடுக்குறேன்.. ஸ்ஷ்…” – ராகவ் பேசுவது எதையும் காதில் வாங்காமல் கண்களை மூடி பேசிக்கொண்டே இருந்தாள் சங்கீதா.. “நான் ஒரு விஷயம் சொல்லவா…?” “இஸ்ஷ்… சொல்லு..” – விசும்பலுடன் பேசினாள் சங்கீதா.. “உன் வாழ்க்கைல முக்கியமானவங்கன்னு சொன்னா, நான், அப்புறம் உன் மேல அக்கறை எடுத்துக்குற நிர்மலா அக்கா, உன் பசங்க, உன் தோழி ரம்யா, அப்புறம் உன்னை அக்காவா நினைக்கிற சஞ்சனா. இவங்களை தவிர வேற யாரும் உன் வாழ்க்கைல இனி தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன்.” – ராகவ் இதை சொல்லும்போது மெளனமாக இருந்தாள் சங்கீதா…. “சாஸ்திரம் சம்ப்ரதாயம் சடங்குனு நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் செய்து இருக்காங்கன்னு சொல்லி நாமும் அந்த சாக்கடைல விழனும்னு அவசியம் இல்ல. தெரிஞ்சே உன் பசங்களுக்கும் உனக்கும் கஷ்டம் குடுக்குற ஒரு விஷயத்தை நீ செய்யனும்னு கட்டாயம் இல்ல. ஹாஸ்பிடல்ல சொல்லி நானே அடுத்து என்ன ஃப்பார்மாலிட்டி படி செய்யணுமோ அதை செய்ய சொல்லி சொல்லிடுறேன். திரும்பி காரியம் சடங்குன்னு சொல்லி கடுப்பேத்தாத….” – சங்கீதாவின் முகம் பார்த்து கோவம் கலந்த அக்கரையில் சொன்னான் ராகவ்.. “நா… நான் சொல்ல வந்தது..” – சங்கீதா ஏதோ சொல்ல வர ராகவ் நிறுத்தினான்.. “உன் வாழ்க்கைல ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்து நடந்துடுச்சி.. ஐ மீன்.. தப்பான ஆள் கூட கல்யாணம் நடந்துடுச்சி. அது உன் சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த விபத்து. அதன் விளைவா கடவுள் உனக்கு குடுத்தது ரெண்டு பொக்கிஷங்கள். அது உன் குழந்தைகள் ஸ்நேஹாவும், ரஞ்சித்தும்…. எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்குற ஆம்பளைங்களுக்கு கூட நல்ல பொண்டாட்டி அமையுறதில்ல, ஆனா எவ்வளவோ மனக்கசப்பு குடுத்தும் நீ ஒரு நல்ல மனைவியா குமாருக்கு இருந்திருக்கே. சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீ ஊரைக் கூட்டி ‘நான் துக்கத்துல இருக்கேன்’னு எதுக்கு சொல்லணும்?, அப்படி செய்துதான் ஆகணும்னு என்ன கட்டாயம்?” கோவமாக கேள்வி எழுப்பினான் ராகவ்….

“செய்யலைனா நாலு பேரு தப்பா பேசுவாங்கடா..” “அந்த நாலு பேரு யாரு?…” “செப்பா.. ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்குற?..” – ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது ராகவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு சங்கீதா தள்ளப்படுவாள், அப்போது அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பு அவளுக்கு மட்டும்தான் தெரியும். இருப்பினும் அவளின் ஆழ் மனதில் அவன் காமிக்கும் அக்கறையை எண்ணி மௌன சந்தோஷம் அடைவாள்…. “எனக்கு உடனே எதுவும் சொல்ல முடியல, கொஞ்ச டைம் வேணுன்டா.” எவ்வளவு டைம் வேணுன்னாலும் எடுத்துக்கோ, உன்னை அமைதி படுத்திக்குற விஷயங்களைப் பத்தி மட்டும் யோசி. கூடவே நீ கொஞ்ச நாளைக்கு உன் வீட்டுல தனியா இருக்க வேணாம், என் கூட IOFI காம்பஸ் உள்ளேயே தங்கிக்கோ.” – ராகவ் பேசும்போது குறுக்கிட்டாள் சங்கீதா.. “வேணாம் ராகவ், நான் யாருக்கும் பயப்படல. நான் என் வீட்டிலேயே தங்கிக்குறேன். அங்கே இருந்தே வேலைக்கு போய்டு வரேன். பசங்களை ஸ்கூலுக்கும் அனுப்புவேன். நீ இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி எனக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு. அது போதும். மத்தபடி….” – சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தாள் சங்கீதா. “ஹ்ம்ம்…ஏன் நிறுத்திட்ட? சொல்லு.. மத்தபடி…” “மத்தபடி எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீ எப்போவுமே இருக்கியேடா… அதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்?” – இதை சொல்லும்போது கண்களை இருக்கி மூடி கண்ணீர் வழிய அவன் தோள்களில் சாய்ந்தாள்…. அவனுடைய சராவாக. எந்த ஒரு மண வலிக்கும் இயற்கையான மருந்து நேரம்தான். காயமான நேரங்கள் நாட்களை கடந்து மெல்ல மறைந்தது. நாட்கள் வாரங்களாகியது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேலையிலும் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு பழைய பக்குவம் அடைந்த நிலைக்கு வந்தாள் சங்கீதா. ஒவ்வொரு நாளும் காலை வேலைக்கு கிளம்பும்போது ராகவ் சடங்கு சம்பிரதாயங்களுக்கு குடுத்த விளக்கத்தை எண்ணி அவனை வியப்பாள். அவனுடைய ப்பிராக்டிகலான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் நேரத்துக்கு சாப்பிடுகிறாளா, நன்றாக தூங்குகிறாளா, குழந்தைகளுடன் பத்திரமாக இருக்கிறாளா என்று பத்து இருவது முறையாவது ஃபோன் செய்து கேட்டு விடுவான் ராகவ். இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது பேசிக் கொள்ளாமல் அவர்களது கண்கள் உறங்காது. இடையிடையே சங்கீதாவுக்கு ஆறுதலாய் அமைந்தது அலுவலகத்தில் ரம்யாவின் தோழமையான பேச்சும், நிர்மலாவின் சகோதரி பாசமும், சஞ்சனாவின் அன்பும் அரவனைப்பும்தான். அதிலும் சஞ்சனா, சம்பவம் நடந்த நாட்களில் உண்மையாகவே உடன் பிறந்த அக்காவாக எண்ணி சங்கீதாவுடன் அவளது வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளுடன் விளையாடி அவளுக்கும் ஒரு துணையாக இருந்து வந்தாள். ஒரு வாரக் கடைசியில் மாலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. சங்கீதா வீட்டின் காலிங் பெல் சிணுங்க யாரென்று பார்த்தால் சஞ்சனா நின்றிருந்தாள். “ஹாய் அக்கா” – பிரகாசமாய் சிரித்தாள் சஞ்சனா.. “ஏய்.. வா… வா… உள்ள வா…” – உற்சாகமாய் வரவேற்றாள் சங்கீதா.. “இன்னிக்கி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு வந்திருக்கேன். ரகாவ்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருக்கேன். வந்தானா இல்லையா?” – handbag கழட்டி வைத்து தலை முடியை இருபுறமும் சரி செய்தபடியே பேசினாள்…. “இல்லையே அவன் எதுவும் வரேன்னு என் கிட்ட சொல்லல, என்ன விஷயம் டி…” “அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல நீங்க எப்படி இருக்கீங்க? அதை சொல்லுங்க..” “இப்போ கொஞ்சம் பரவாயில்ல, சீக்கிரமே பழைய சந்கீதாவா மாறிடுவேன். ஹா ஹா.. நீ எப்படி இருக்கே?” “எனக்கென்ன குறைச்சல், மகாராணி மாதிரி இருக்கேன்.” “எப்படி வந்த?” “என் பாய் ஃபிரண்ட் ட்ராப் பண்ணார்கா..” “பாய் ஃபிரண்டா?” – குறும்பாய் சிரித்து கேட்டாள் சங்கீதா. ‘வேற யாரு நம்ம அர்னால்ட்தான்” – என்று சொல்ல.. “அம்மா நான் கிளம்புறேன்மா….” – என்று ஜகா வாங்கிக் கொண்டு வேகமாய் கிளம்பினார் டிரைவர் தாத்தா.. “ஹா ஹா.. பாவம் டி, அந்த மனுஷனை ஏண்டி இப்படி படுத்தி எடுக்குற?” “இதெல்லாம் ஒன்னும் இல்லக்கா, கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒருத்தன் கிட்ட ராத்திரி விளையாடினேன் பாருங்க ஒரு விளையாட்டு. பயபுள்ள அழுதுட்டான்.” – சின்ன குழந்தை அழுவது போல முகபாவனை செய்து பேசினாள் சஞ்சனா.“ஹ்ம்ம்.. என்னடி செஞ்ச? யாரு அவன்?” – மென்மையாக சிரித்துக்கொண்டே சமையலறையில் டீ தூள் தேடினாள் சங்கீதா.. “சொல்லுறேன் அதுக்குத்தானே வந்திருக்கேன், அவன் கிட்ட வாங்கின சில முக்கியமான டீடேய்ல்ஸ் பத்தி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் சொல்லணும்…. இதுக்கு முன்னாடியே சொல்லி இருப்பேன், ஆனா அதுக்கான நேரம் இப்போதான் வந்திருக்கு.”….சஞ்சனா பேசிக்கொண்டிருக்க வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்டது.. ராகவ் அலுவலகத்தில் இருந்து கழுத்தில் கட்டின டை கூட கழட்டாமல் அப்படியே அங்கே வந்தடைந்தான். சஞ்சனாவையும் ராகவையும் பார்த்ததில் குழந்தைகளுக்கு மகிழ்ச்சி. மாடியில் மஞ்சள் வெயிலில் குழந்தைகள் விளையாட மூவரும் சூடாக டீ அருந்தி கொண்டே ஜில்லென்ற காற்றில் பேச தொடங்கினார்கள். சஞ்சனா மித்துனிடம் கறந்த விஷயங்களை ராகவிடமும் சந்கீதாவிடமும் பகிர்ந்து கொண்டாள். அதாவது.. அலுவலகத்துக்குள்ளேயே, குமார் ஃபாக்ட்ரி கழிவுகளில் இருந்து சில வஸ்துக்களை மூட்டை கட்டி ஒரு லாரியில் தினமும் இரவு துரையோட லெபாரேட்ரிக்கு அனுப்பி வைப்பதும், அதற்கு அடுத்த நாள் காலை அங்கிருந்து IOFI வளாகத்துக்குள் அதே லாரியில் ஃபாக்ட்ரிக்கு தேவையான சாமானுடன் லெபாரேட்ரியில் ப்ராசஸ் செய்யப்பட்ட சில பொருட்கள் வருவதற்கு க்லியரன்ஸ் வாங்கித் தருவது மித்துனின் வேலை என்று ஒவ்வொன்றும் விலாவரியாக எடுத்து சொன்னாள். சற்று கண்களை மூடி ஆழமாக யோசித்து “எப்படி அவன் துரைக்கு வேலை செய்ய ஆரம்பிச்சான்? எப்படி அவனுக்கு துரை கான்டாக்ட் கிடைச்சிது? என்றான் ராகவ்.. “அதை… நா…. வந்து… அது…” – சஞ்சனா தயங்கினாள்.. “என்ன வந்து போயி.. சொல்லு..” – கேட்க்கும்போதே ராகவின் முகம் கொஞ்சம் சிவந்தது. அது சஞ்சனாவுக்கு லேசான பயத்தை உண்டாக்கியது. “நான் சொல்லுவேண்டா, ஆனா நீ கோவப்படக் கூடாது.. பொறுமையா கேட்கனும். சரியா? இந்த நிமிஷம் உனக்கு பொறுமை ரொம்ப முக்கியமா தேவைப் படும்… அப்போதான் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்க முடியும். புரிஞ்சிக்கோடா.. நீ பார்க்குற பார்வைய பார்த்தா எனக்கு சொல்ல பயமா இருக்கு….. அக்கா..” – என்று சொல்லி சந்கீதாவைப் பார்த்தாள் சஞ்சனா.. “நான் கோவப்படுற அளவுக்கு அப்படி என்ன இருக்குது?” – கண்களை இருக்கியவாறு கூர்ந்து பார்த்து கேட்டான் ராகவ். அப்போது சங்கீதா குறுக்கிட்டாள். “நீ சொல்லுமா, யாரும் ஒன்னும் கோவப்பட மாட்டாங்க….” – சற்று அழுத்தமாக சொல்லி, ராகவை நோக்கி ஓரக்கண்ணால் லேசாக முறைத்து “பேசாமல் இரு” என்று சொல்லாமல் சொன்னாள் சங்கீதா. அந்த பார்வைக்கு உண்மையில் கொஞ்சம் அடங்கினான் ராகவ். “அவனுக்கு துரை யாருன்னு தெரியாது, ஆனா அவன் கிட்ட இருந்து நிறைய மிரட்டல் கடிதாசி வரும்னு சொல்லி இருக்கான். ஒரு நாள் அவன் ஒரு நைட் க்லப்பில் நல்ல போதையில் சீட்டு விளையாடிட்டு இருக்கும்போது யாரோ உன்னை சம்மந்த படுத்தி அவன் கிட்ட பேசும்போது அவன் உன்னுடைய லாப கணக்குல வர பணம் அப்போ அப்போ உனக்கே தெரியாம திருடுறதும்.. அது உனக்கு தெரியாதுன்னும் சொல்லி இருக்கான்.. அப்புறம்… – மேலே சொல்ல தயங்கினாள் சஞ்சனா.. “அப்புறம்?….” – மீண்டும் ராகவின் முகம் அவளின் பதிலை கூர்ந்து கவனித்தது…. சற்று தயக்கத்துடன் பேச ஆரம்பித்தாள்.. “உன்னை பத்தியும் அக்காவைப் பத்தியும் தப்பா பேசி இருக்கான். அதை எப்படியோ துரை அவன் செல் ஃபோன்ல ரெக்கார்ட் பண்ணி அவனுக்கு அனுப்பி வெச்சி உன் கிட்ட அவனை போட்டு குடுத்துடுவேன்னு சொல்லி மிரட்டி இருக்கான், அந்த கோழையும் உனக்கு பயந்துதான் இந்த காரியத்துல இறங்கி இருக்கான்.” – என்று மூச்சு விடாமல் சீக்கிரமாக சொல்லி முடித்தாள் சஞ்சனா.. “என்ன தப்பா பேசினான்?” – ராகவின் முகம் உண்மையில் நன்றாகவே சிவந்தது. “அது.. வந்து.. இதை பாரு..” – என்று தனது செல் ஃபோனில் அன்று இரவு அவனுடய ஃபோனில் இருந்து காப்பி செய்த வீடியோவை காமித்தாள் சஞ்சனா… சங்கீதாவும் அதை ராகவுடன் சேர்ந்து பார்த்தாள். வீடியோவில் மித்துன் காமிக்கும் முகபாவனைகளும், பேச்சும் கேட்கும்போது ராகவ் அவனது இருக்கையின் கைப்பிடியை இறுகி பிடித்தான். தனது அக்கவுன்டில் இருந்து காசு திருடுவதற்கு கூட அவன் அதிகம் கோவப் படவில்லை… அதன் பிறகு அவன் சந்கீதாவைப் பற்றியும் சஞ்சனாவைப் பற்றியும் பேசிய வார்த்தைகளை கேட்க கேட்க உண்மையில் ரகாவ்கு பொருக்க முடியவில்லை.. உடனடியாக கை சட்டையை மடக்கிக் கொண்டு ஆவேசமாக எழுந்தான்.. அப்போது உடனடியாக சங்கீதா ராகவின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள். அவன் வாயலதானே என்னை மானபங்கம் பண்ணுவேன்னு சொல்லி இருக்கான்.. நிஜத்துல செய்துட்டானா? அப்படி ஒரு எண்ணத்தோட வந்தா அவனை நானே ரெண்டா வெட்டிடுவேன்.. யாருடைய உதவியும் எனக்கு தேவை படாது.. இப்போ நீ என்ன பண்ண போற? அவன கொல்ல போறியா?… அப்படியெல்லாம் பண்ணிட்டு ஜெயிலுக்கு போய் உட்காராத…. அப்புறம் என்னால உன்னை அங்க வந்து பார்க்க முடியாது.” – கோவத்தில் சீறினாள் சங்கீதா. “அக்கா.. அவன் அன்னிக்கி பேசின பேச்சுக்கு நான் ஏற்கனவே நிறைய குடுத்துட்டேன்கா” – மெதுவாக சஞ்சனா சங்கீதாவிடம் பேசியதைக் கேட்டுவிட்டு “என்ன குடுத்த?… எண்ணத்த குடுத்துட்ட?… சும்மா நாலு வார்த்தை திட்டிட்டு வந்திருப்ப.. அவளோதானே?.. அவனுக்கு அதெல்லாம் பத்தாது..” என்று ராகவ் கத்த.. அதற்கு மேல் வாய் மூடி இருந்த சஞ்சனா பொங்க ஆரம்பித்தாள். “போதும் நிறுத்துடா.. சும்மா பெரிய இவனாட்டம் கத்துற.. நான் ஒன்னும் அவளோ சொரணை கேட்ட ஜென்மன் இல்ல, உன்னால அவனுக்கு வெளி காயம் மட்டும்தான் குடுக்க முடியும், ஆனா நான் அன்னிக்கி அவனுக்கு வெளிக்காயம் மட்டும் இல்ல, உள்காயமும் குடுத்துட்டு வந்திருக்கேன். ஒரு ஆம்பளையா உன்னால குடுக்க முடியாத அளவுக்கு அன்னிக்கி நான் அவனுக்கு திருப்பி குடுத்து இருக்கேன். கிட்டத்தட்ட உரிச்ச கோழியாக்கி வேக வெச்சி அனுப்பி இருக்கேன். அவன் குணமாகி எழுந்திருக்கவே கொஞ்ச மாசமாகும்.” – சொல்லும்போது அன்று மெளனமாக உள்ளுக்குள் அனுபவித்த வேதனைகளை எண்ணி லேசாக கொஞ்சம் அழ ஆரம்பித்தாள் சஞ்சனா. “சங்கீதா மெதுவாக சஞ்சனாவின் கைகளை பிடித்து, “நிஜமாவா?” என்று பாவனை செய்வது போல கேட்க “ஆமாம் கா….” என்று மெதுவாக சொல்ல “நீதாண்டி என் தங்கச்சி” என்று சொல்லி அவளை தன் தோளில் சாய்த்தாள் சங்கீதா. “நீ அழாதடா, எவளோ பெரிய காரியம் பண்ணி இருக்கே!.. நிஜமாவே சில நேரத்துல எப்படிதான் இந்த முட்டாள் CEO ஆனான்னு எனக்கு சந்தேகம் வரும். பொறுமையே இல்லாத ஜென்மம்…. ச்ச….” – சஞ்சனாவை தோளில் சாய்த்து ராகவை பொய்க் கோவத்துடன் முறைத்தாள் அவனது சரா.. “கரெக்டா சொன்னீங்கக்கா.. எனக்கு கூட அப்போ அப்போ அது தோணும்….” – கண்களைத் துடைத்துக் கொண்டு ராகவை முறைத்தாள் சஞ்சனா…. “ஆமா, பொறுமையா இருக்குறதைப் பத்தி பேங்க் மேனேஜர் பேசுறாங்க..” என்று மெதுவாக உள்ளுக்குள் முனு முணுத்துக் கொண்டான் ராகவ்…. “என்ன சொன்ன?” – சொடக்கு போட்டு கேட்டாள் சரா.. “ஒன்னும் இல்ல…. எனக்கு பொறுமை கம்மின்னு நானே சொல்லிக்கிட்டேன்….” – சங்கீதாவின் கேள்விக்கு, ராகவ் அசடு வழிந்து அடிபணிந்து பதில் சொன்னதைப் பார்த்து “ஹா ஹா.. உனக்கு சங்கீ அக்காதான் டா கரெக்ட்….” என்று ஈர விழிகளுடன் இருக்கும்போதே குபுக்கென சிரித்தாள் சஞ்சனா.. மூவரும் பேசி முடித்து சற்று அமைதியாய் இருக்கும்போது ராகவ் செல் ஃபோனில் “வேக்.. வேக்…” என்று சத்தம் வந்தது… – வேறு யாரும் அல்ல, அவனது நண்பன் Mr.வாத்து தான்!.. அமைதியாக இருக்கும்போது அந்த வித்யாசமான சத்தம் கேட்டு சங்கீதாவும், சஞ்சனாவும் புருவம் உயர்த்தி சிரித்தார்கள்.. அவனது நண்பனின் ஃபோன் கால் எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ், அப்போது கார்த்திக் நாளை விடிகாலை வருவதாக சொல்லிவிட்டு ஃபோன் கட் செய்தான். அதைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்து “ஹ்ம்ம்… நாளைக்கு ஒரு கிறுக்கன் வரான், நாம நாலு பேரும் எங்கயாவது ஒரு ஒளடிங் போய்டு வரலாம்.” என்று உற்சாகமாய் சொன்னான் ராகவ். “கிறுக்கனா? யாரு?” – என்றாள் சஞ்சனா ஸ்வாராஸ்யமாக, அந்த ஸ்வாராஸ்யத்தை கவனிக்க தவறவில்லை சங்கீதா…. “என்னோட ஸ்கூல் ஃபிரண்ட் கார்த்திக்….” – என்று ராகவ் சொன்னதும்…. “கார்த்திக்… ஹ்ம்ம்…” – என்று புருவத்தை உயர்த்தி லேசாக சிரித்து சஞ்சனாவைப் பார்த்து கண் அடித்தாள் சங்கீதா. அதற்கு சஞ்சனாவிடம் இருந்து லேசான புன்னகை மட்டுமே வந்தது.. “சரி நான் இப்போ கிளம்புறேன்….” – என்று எழுந்த ராகவ் சஞ்சனாவைப் பார்த்தான்… அவள் மனதளவில் நிறையவே தன்னை வருத்தி பல காரியங்களை செய்திருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு…. அங்கிருந்து கிளம்பும்போது சஞ்சனாவிடம் “ஐ ம் சாரி சஞ்சனா… எனக்காக நீ நிறைய சிரமப்பட்டிருக்கே.. நீ சொன்ன விஷயம் ரொம்ப முக்கியமானது, அதை வெச்சி நம்ம காளிதாஸ் கிட்ட ஒரு ரிப்போர்ட் எடுத்து பார்த்தால் அதுல ஓவர் டைம் யார் இருந்திருக்காங்களோ கண்டிப்பா அவங்க இந்த விஷயத்துல சம்மந்தப் பட்டிருப்பங்கனு கொஞ்சமாவது உறுதியா சொல்ல முடியும்னு நினைக்கிறேன்.. நீ என்ன சொல்லுற?” – என்றான் ராகவ்.. காளிதாஸ் என்பவர் பல ஆண்டுகளாக IOFIல் விசுவாசியாக வேலை பார்த்து வரும் நம்பிக்கையான மூத்த ஊழியர். “சாரி எல்லாம் சொல்ல வேணாம்டா…. போயி உன் மைன்டுக்கு என்ன அடுத்து செய்யனும்னு தோணுதோ அதை செய்…” என்று கூலாக சொன்னாள் சஞ்சனா.. “ராகவ்… அப்படியே காளிதாஸ் குடுக்குற அந்த ரிப்போர்ட்ல யாரோட பேரு அடி படுதோ அவங்க பேரை போலீஸ் கிட்ட இம்மீடியேட்டா சொல்லி என்ன பன்றாங்கன்னு கவனிக்க சொல்லுறதுதான் இன்னும் பெஸ்ட்…” – என்றாள் சங்கீதா. “யேஸ்…. அக்கா சொல்லுறது கரெக்ட்” என்று சஞ்சனாவும் அதை ஆமோதித்தாள். “ஹ்ம்ம்… இன்னிக்கே நான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறேன்..” என்று சொல்லிவிட்டு சில நொடிகள் அமைதியாய் இருந்தான் ராகவ்.. அவனைப் பொருத்தவரை இவர்கள் மூவரையும் சுத்தி சீக்கிரமே ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என்று ஒரு இன்ட்யூஷன் இருந்தது. அப்போது “சஞ்சனா.. இஃப் யூ டோன்ட் மைன்ட்.. இன்னைக்கி நீ சங்கீதா கூட இருந்துடேன், நாளைக்கு காலைல நான் கார் அனுப்புறேன். ரெண்டு பேரும் என் இடத்துக்கு வந்துட்டா என் ஃபிரண்ட் கூட சேர்ந்து எங்கயாவது போகலாம்… சீரியஸ்லி வீ ஆல் நீட் ஏ ப்ரேக்” – என்று ராகவ் சொல்ல “ஹ்ம்ம் சவுண்ட்ஸ் குட்..” என்றாள் சஞ்சனா.. ராகவ் IOFI வளாகத்துக்கு கிளம்பினான். இரவு நேரம் நெருங்கி இருந்தது. போகும் வழி யாவும் சஞ்சனா மித்துனிடம் இருந்து கறந்த விஷயங்களை மனதில் எண்ணிக்கொண்டே சென்றான். ஃபாக்டரி கழிவுகள்.. லாரி க்லியரன்ஸ்…. மரத்துண்டுகள்…. அனஸ்தீஷ்யாவால் குமாரைக் கொன்ற விதம்…. என்று பல விஷயங்களையும் மனதில் ஓட்டிக்கொண்டிருந்தான். சிந்தித்து சிந்தித்து மிகவும் அசதியானது ராகவ்கு.. அடர்த்தியான வீதியில் கொஞ்சம் வேகமாக ஓட்டி சென்றான். வீதியில் விளக்குகள் கூட இல்லை.. ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று ரேடியோ ஆன் செய்தான்.. “எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா” என்ற பாடல் வர, அதை ஹம் செய்து கொண்டே மனதில் அவனது சாராவை கற்பனை செய்து சீட்டை கொஞ்சமாக பின் பக்கம் சாய்த்தான்…. திடீரென சற்றும் எதிர்பாராதவிதம் காரின் பின் பக்க கண்ணாடியை டமால் என்று உடைத்துக் கொண்டு ஒரு கைப்புடி அளவு கருங்கல் கார் உள்ளே விழுந்தது. தெருவில் கிறீச் என்று காதைக் கிழிக்கும் சத்தத்துடன் டயரில் புகை வரும்விதம் பிரேக் போட்டான் ராகவ். ரியர் வியூ கண்ணாடி மூலம் ஏதோ ஒரு உருவம் ஓடுவது தெரிந்தது ராகவ்கு… உடனே கார் விட்டு இறங்கி பின் பக்கம் அந்த உருவத்தை நோக்கி மிக வேகமாக ஓடினான், ஒரு கட்டத்தில் அந்த உருவம் கண்ணுக்கு தெரியவில்லை. அவனை சுத்தி முழுவதும் இருட்டும் நிசப்தமும் நிறைந்திருந்தது. சற்று நேரம் இரவு நேர பூச்சிகளின் “க்ரீச்.. க்ரீச் ..” என்ற சத்தம் மட்டும்தான் கேட்டது…. தீடீரென அந்த உருவம் ராகவின் முதுகுக்குப் பின்னால் வந்து அவனை இருக்கி பிடிக்க, அந்த ஒரு கண நொடி எதற்கும் பயப்படாமல் சற்றும் அசராமல் தன் வலது காலால் அந்த உருவத்தின் காலை ஓங்கி மிதித்து தன் தலையால் பின் பக்கம் வேகமாய் அடிக்க, அந்த அடியின் வலியை தாங்கி மீண்டும் ராகவை தாக்க முற்பட்டது அந்த உருவம்…. ஒரு கையைத் தூக்கி அவனை அடிக்க முற்படும்போது அதை கச்சிதமாக இடது கையால் பிடித்து நெஞ்ஜாங்க்கூடுக்கு நடுவில் தோள்களின் தசைகளை இருக்கி ஒட்டுமொத்த பலத்தையும் குடுத்து ஓங்கி தன் முஷ்டியை மடக்கி அடித்த அடியில் உண்மையில் மோசமான உள்காயம் ஏற்பட்டிருக்க வேண்டும்..அதற்க்கு ஆதாரமாக வலி பொருக்க முடியாமல் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அந்த இருட்டில் மீண்டும் அந்த உருவம் எங்கோ சென்று மறைந்தது. மீண்டும் அவன் கண்ணுக்கு அது தென்படவில்லை.. “எவனா இருந்தாலும் வாடா…. நான் மட்டும் தான் நிக்குறேன் வா.. எங்கே ஓடுன… வா” என்று மீண்டும் அந்த இருட்டினில் உரக்க கத்தினான் ராகவ்… சில நிமிடங்கள் சுற்றும் முற்றும் பார்த்தான்.. யாரும் தென்படவில்லை.. காரின் லைட் வெளிச்சம் தான் அவன் தெருவில் நடப்பதற்கு உதவியது. காரில் எரி அமர்ந்த பிறகு பின் சீட்டில் உள்ள அந்த கல்லை எடுத்துப் பார்த்தான், அதில் ஒரு சிறிய காகிதம் சுருட்டி கட்டப்பட்டிருந்தது. அதைப் பிரித்து படித்தான்…. அதில்.. “எங்களுடைய டார்கெட் நீ மட்டும்தான் ஆனா பாவம் உன் கூட ஒரு சின்ன கூட்டணியும் சேருது, அது அவங்களுக்கு நல்லதில்ல…. நான் வாங்கின வடு சாதாரனமானது இல்ல…. நிச்சயம் திருப்பி குடுப்பேன்..” – கஷ்ட்டப்பட்டு புரிந்து கொள்ளும் கையெழுத்துதான், இருப்பினும் ஒரு வழியாக எழுதியது என்னவென்று புரிந்துகொண்டான் ராகவ். வண்டியை மெதுவாக தனது பர்சனல் வி.ஐ.பி லாஞ்ச் முன்னே நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.. இருட்டாக நிசப்தம் நிறைந்த அறையில் மிதமான மஞ்சள் வெளிச்சம் தரும் விளக்கை ஆன் செய்தான். மீண்டும் ஆழ்ந்து சிந்தித்தான். யார் யாரோ மனதுக்குள் நினைவில் வந்தார்கள், “இருக்காது…. அவங்களா இருக்காது” என்று யோசித்துக் கொண்டே இருந்தான்…. பிறகு காளிதாசுக்கு ஃபோன் செய்தான்.. “ஹலோ நான் ராகவ் பேசுறேன்..” – ஷர்ட் டை அவிழுத்துக்கொண்டே கண்ணாடியில் தன் முகம் பார்த்து பேசினான்…. “சொல்லுங்க தம்பி..” “சார் எனக்கு நம்ம கம்பெனியோட டைம் இன் டைம் அவுட் டிஜிட்டல் மெஷீன் ரிப்போர்ட் வேணும்… அதுவும் கடந்த ஒரு மாசத்துக்கு இருக்குற ரிப்போர்ட் வேணும்..” – சொல்லிக்கொண்டே ஏதோ சிந்தித்தான்.. “என் கிட்ட ஏற்கனவே இருக்கு சார், ஆடிட் பன்றதுக்கு ஏற்கனவே எடுத்து வெச்சி இருக்கேன்.” – என்றார் தூக்கக் கலக்கத்தில் பொறுமையாக.. “நல்லதாப் போச்சு.., யாராவது ஓவர் டைம் இருந்து இருக்காங்களான்னு கொஞ்சம் பார்த்து சொல்ல முடியுமா?” – பரபரப்புடன் கேட்டான் ராகவ்.. “இருங்க பார்குறேன்.. ஹச்..” – சற்று இரும்பியவாறு தேடினார் பெரியவர்…. மறு முனையில் அவர் பார்க்கும்போது ராகவ்கு சற்றுமுன் நடந்த தாக்குதலின் காரணமாக சிலர் மேல் சந்தேகம் இருந்தது.. ஆனால் உறுதியான காரணம் எதுவும் மனதில் தோன்றாததால் அமைதியாக மீண்டும் சிந்தித்தான்.. “சார்.. சொல்லுறேன் கேட்டுகோங்க..” – என்று ஓரிரு பெயர்களை சொன்னார் காளிதாஸ். அவர் சொன்ன பெயர்களை கேட்டபோது ராகவ்கு ஜிவ்வென்று இருந்தது. காரணம் அதில் ஒரு பெயர் அவன் சந்தேகம் கொண்ட பெயர். மற்ற பெயர்கள் பல மணி நேரம் அலுவலகத்தில் இருந்ததாய் காமிப்பதற்கு காரணம் இருக்கிறது. ஆனால் அந்த ஒரு பெயருக்கு அவ்வளவு அவசியம் இருப்பதாக தெரியவில்லை. “சார்… ஹச்.. இருக்கீங்களா?” – சத்தம் எதுவும் கேட்காததால் உரக்க பேசினார் பெரியவர்.. “ஆங்.. இருக்கேன் சார்.. தேங்க்ஸ்.. உங்களை நான் இந்த நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணதுக்கு மன்னிக்கணும்.. நீங்க படுத்துக்கோங்க….” – ஏதோ சிந்தித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. “ஹச்.. இருக்கட்டும் பரவயில்ல..” என்று மீண்டும் முடியாமல் இரும்பிக்கொண்டே கட் செய்தார் பெரியவர். உடனே சங்கீதாவுக்கு ஃபோன் செய்தான் ராகவ்…. “ஹலோ…” – குழந்தைகள் கூச்சல் போட்டு விளையாடும் சத்தமும் சங்கீதாவும் சஞ்சனாவும் சிரித்துக்கொண்டிருக்கும் சத்தமும் கேட்டது.. “ஹேய் சரா….” – கொஞ்சம் பதத்தட்டுடன் அவசரமாய் கூப்பிட்டான் ராகவ். “ஹ்ம்ம்… இருங்க சார் நான் உங்க சரா இல்ல, சஞ்சனா… ஹா ஹா..” – கிண்டலாய் சிரித்தாள் சஞ்சனா.. “ஹேய் சஞ்சனா… இட்ஸ் ஓகே நான் யாராவது ஒருத்தர் கிட்ட பேசினா கூட போதும்… உங்களுக்கு ஒன்னும் இல்லையே?.. நல்லாதானே இருக்கீங்க?” – பயத்தில் கேட்டான் ராகவ்.. “என்னடா ஆச்சு திடீர்னு ஒன்னும் இல்லையான்னு கேட்குற?” – குழம்பினாள் சஞ்சனா.. “ஐ மீன்…. அதாவது… யாரும் ஒன்னும் வீட்டுக்கு வரலையே? எவ்ரிதிங் ஆல் ரைட்?” – அவசரத்தில் வார்த்தைகளை சரிவர வரிசை படுத்திகூட பேச முடியவில்லை ராகவ்கு.. “அதெல்லாம் ஒன்னும் இல்லைடா, உனக்கென்ன ஆச்சு ஏன் இப்படி பேசுற?.. ஆர் யூ ஆல் ரைட்?” “நத்திங்… நத்திங்… ஐயம் ஆல் ரைட்.. நீங்க ரெண்டு பேரும் தனியா இருக்கீங்களே அதான்…” – நடந்ததென்ன என்று கூற விரும்பவில்லை, சமாளிக்க சற்று இழுத்தான் ராகவ்… “நாங்க ரெண்டு பேரும் இருந்தா எப்பேர்பட்ட ஆளும் சட்னி ஆயிடுவான்…. நீ ஏண்டா கவல படுற…” – என்றாள் சஞ்சனா.. அவள் பேசும்போது ஸ்நேஹா அவளது டாக்கிங் பார்பி பொம்மையை வைத்து சஞ்சனாவிடம் பேச சொல்லி அடம் பிடிப்பது கேட்டது. பின் பக்கம் ரஞ்சித் அவனது கார் பொம்மையை போட்டு தட்டி தட்டி விளையாடுவதும் கேட்டது. சங்கீதா சஞ்சனாவுக்கு தோசை சுட்டு குடுப்பதும், கூடவே “யாரு அந்த மக்கு CEO வா?..” என்று அவள் சஞ்சனாவிடம் குறும்பாக கேட்பதும்… டி.வி யில் சுட்டி டிவி சத்தமும் கேட்டது… இதெல்லாம் கேட்க அங்கே ஒரு சகஜ நிலை நிலவுகிறதென்று மனதில் அமைதி அடைந்தான் ராகவ். “அதென்னவோ கரெக்ட் தான்… அதுலயும் அவ கிட்ட மாட்டினா தக்காளி சட்னிதான்.. ஹா ஹா.. என்ன பேசிட்டு இருக்கீங்க?…” சாதாரணமாக பயமின்றி பேசினான்.. “ஹ்ம்ம்.. எங்க வாழ்க்கைல வந்த காதல் கதைகள் பத்தி பேசினோம்.. அக்கா அவங்க காதல் கதையை பத்தி சொல்லிட்டு இருக்காங்க.. ஹா ஹா..” – பின்னாடி இருந்து சங்கீதா “ஒதை வாங்குவ” என்று சிரித்துக் கொண்டே கத்தும் சத்தம் கேட்டது ராகவ்க்கு.. “ஒஹ்.. அந்த பழைய லவ்வர் ரமேஷ் பத்தி சொன்னாளா?” – எங்கே தன்னை பத்தி சொல்லி விட்டாலோ என்று எண்ணி அசடு வழிந்தான்… “டேய் ஃபிராடு… அதெல்லாம் ப்ளாக் & ஒயிட் படம் டா…. அவங்க சொல்லிட்டு இருக்கிறது லேட்டஸ்ட் டிஜிட்டல் கலர் படம் பத்தி.. எவனோ ஒரு லூசு நெஞ்சுல பச்ச குத்தி வெச்சி இருக்கானாம்மே.. சொல்லவே இல்ல….” – பின்னாடியில் இருந்து சங்கீதாவும் சஞ்சனாவும் சேர்ந்து சத்தமாக சிரிக்கும் ஒலி கேட்டது ராகவ்கு.. கண்ணாடியின் முன்பு பல்பு வாங்கி விட்டோமே என்று எண்ணி அவன் முகம் வெட்கத்தில் சிவப்பது அவனுக்கே சிரிப்பை வரவழைத்தது. “ஹ்ம்ம் சரி சரி… சீக்கிரம் படுத்து தூங்குங்க நாளைக்கு காலைல வண்டி வரும் அப்புறம்..” – ராகவ் முடிப்பதற்குள் சஞ்சனா பேசினாள்.. “உன்னோட வாத்து வருவான்.. அப்புறம் நாம நாலு பேரும் எங்கயாவது வெளியே போவோம்.. அதானே?…ஹா ஹா..” – என்று சிரித்தாள்… “சரி சரி… பேச்சை குறைடி வாயாடி….ஹா ஹா.. சீக்கிரம் படுத்து தூங்குங்க..” என்று சொல்லிவிட்டு கட்டிலில் அப்படியே அசதியில் சாய்ந்தான் ராகவ்…. “ஏய் கொஞ்சம் தள்ளுடி… நான் குளிக்க போகுறதுக்கு முன்னாடி கண்ணாடி முன்ன வந்து நின்னவ.. இன்னும் மூஞ்சிய அப்படியும் இப்படியும் திருப்பிகிட்டு இருக்கா..” – காலை வண்டி வருவதற்கு முன் இரு மங்கைகளும் ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி முன் செய்யும் கூத்து இயல்பாய் நடந்தது.. “சும்மா இருங்கக்கா.. யாரா இருந்தாலும் ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் தான் பெஸ்ட் இம்ப்ரஷன் குடுக்கும்….” என்றாள் சஞ்சனா.. “நீ ஏன் இப்படி எக்ஸ்ட்ரா கேர் எடுத்து ட்ரெஸ்ஸிங் பண்ணுறேன்னு எனக்கு தெரியும்.. ஹா ஹா..” – சங்கீதா குறும்பாக சிரித்தாள்.. “ஏனாம்?…. சொல்லுங்கோ.. கேட்கலாம்…” – வாயில் லிப் க்லாஸ் தடவி இரு உதடுகளையும் உள்ளுக்கு இழுத்து உரசி வெளிச்சத்தில் பலபலக்கிறதா என்று பார்த்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா.. “ஹ்ம்ம்.. எல்லாம் கார்த்திக் எஃபக்ட் தானே ஹா ஹா..?” – என்று சங்கீதா சிரிக்க… “ச்சே… ச்சே…” அதெல்லாம் ஒன்னும் இல்லைக்கா… போற இடத்துல நாலு பேர் நம்மள பார்பாங்களே.. நல்லா இருக்கணுமேன்னு தான்…. யு னோ சம் திங்…. லுக்கிங் குட் இஸ் ஃபீலிங்க் க்ரேட்….” – என்று சமாளித்தாள் சஞ்சனா.. “சப்… ஒஹ்ஹ்.. ஹ்ம்ம்.. நடத்து நடத்து…” – என்று சங்கீதா சொல்லும்போது என்னதான் வாய் பொய் பேசினாலும் சஞ்சனாவின் சிரிப்பு சங்கீதா சொன்னதுதான் உண்மை என்பதை நேர்மையாக ஒப்புக்கொண்டது.. பொதுவாக யாராவது ஒரு புதுப் பெண் வருகிறாள் என்றால் ஆண்கள் செய்யாத ஸ்டைலா!!?…. அந்த விஷயத்தில் பெண்களும் அப்படியே… அவர்கள் மட்டும் விதி விளக்கா என்ன!!… “வாவ்… என்னதுக்கா இது…? திஸ் இஸ் லுக்கிங் கூல்….”- சங்கீதா ஒரு டார்க் பிரவுன் நிறத்தில் கண்ணைப் பறிக்கும் விதத்தில் இடுப்பில் இருந்து கால் வரை வரக்கூடிய லாங் மிடி ஒன்றை காமித்தாள், அதில் ஒரு ஆச்சர்யம் என்னவென்றால் முட்டி அருகே சில பட்டன்கள் இருந்தது, அவற்றை எடுத்து விட்டால் அது ஸ்கர்ட் போல மாறிவிடும். இதைப் பார்த்து வியந்தாள் சஞ்சனா.. மேலே ஒரு ஒயிட் டாப்ஸ் அணிந்து அதற்கு மேட்சிங்காக வளையல், கம்மல், நெயில் பாலிஷ், மற்றும் ஒரு சிம்பிள் செயின் அணிந்து தலை முடியை கர்லி ஹேர் ஸ்டைல் செய்திருந்தாள். வெளியில் சென்றால் நிச்சயம் ஒவ்வொருவரும் அவளை ஒருமுறையாவது திரும்பி பார்ப்பார்கள் என்பது போல் பளிச்சென்று இருந்தாள். சற்று நேரத்துக்கெல்லாம் வெளியில் கார் ஹாரன் சத்தம் கேட்டது. இருவரும் உற்சாகமாய் கிளம்பினார்கள். சஞ்சனா டிரைவர் தாத்தாவை நோக்கி வம்பிழுக்கும் விதமாக “தாத்தா எங்க ரெண்டு பேருல யார் பார்க்க ரொம்ப நல்லா இருக்கோம்னு சொல்லுங்க பார்க்கலாம்?” என்று குறும்பாக கேட்டாள். “வம்பே வேணாம்மா…. ஒன்னும் பேசாதப்பவே என்னை அந்த ஓட்டு ஓட்டுற, இப்படி கேள்விய கேட்டு வலய விரிச்சி ஏதாவது சொல்ல வெச்சி அப்புறம் அதை சொல்லி சொல்லியே என்னை படுத்திடுவ தாயி….” என்று தாத்தா சொல்ல “ஹா ஹா.. ரொம்பவே பயப்படுத்தி வெச்சிருக்கடி” என்று சங்கீதா புன்னகைத்தாள். கார் கிளம்பியதும் பின் இருக்கையில் பகல் வெளிச்சத்தில் சங்கீதாவின் முகத்தைப் பார்த்தாள் சஞ்சனா.. ஒரு வித்யாசமான பொலிவும் பிரகாசமும் தெரிவதை கவனித்தாள். “அக்கா..” என்றாள் சஞ்சனா.. “என்னடா..?” – சஞ்சனாவின் தலையில் அவளது முடியை சரி செய்து கேட்டாள் சங்கீதா.. “யு ஆர் மை இன்ஸ்பிரேஷன்கா.. உங்களை ஒரு ஒரு தடவையும் பார்க்கும்போது மனசுல தைரியத்துக்கு வெத போடுறா மாதிரி இருக்குது. அன்னிக்கி ராத்திரி நான்தான் மித்துன் கிட்ட அவ்வளோ தைரியமா நடந்துகுட்டேனானு யோசிச்சி பார்த்தா நம்பவே முடியலகா…. you are the fuel for my guts” – சஞ்சனாவின் பேச்சுக்கு சங்கீதாவின் முகத்தினில் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. “நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்க கூடாது.. சரியா?…” “ஹ்ம்ம்… சொல்லு…” “அதான் ரெண்டு பேரும் லவ் பன்றீங்களே, ஏன் கல்யாணம் பன்னிக்க கூடாது?” “ஸ்ஹா..” மெளனமாக ஒரு பெருமூச்சு விட்டாள் சங்கீதா.. சில வினாடிகளுக்கு பிறகு பேச தொடங்கினாள்.. “ஐ லவ் ராகவ் லைக் எனி திங்…. அவன் என் வாழ்க்கைல கிடைச்சா அவனை விட நான்தான் பாக்யசாலி, ஏன்னா அவன் என்னை அவளோ லவ் பண்ணுறான், நானும் என் வாழ்க்கைல நிறைய ஆம்பளைங்கள பார்த்திருக்கேன், ஆனா ராகவ் மாதிரி என்னை லவ் பண்ணுற ஒருத்தனை நான் பார்த்ததில்ல, இனிமேலையும் பார்க்கபோரதில்ல.. நிச்சயம் அவனை கல்யாணம் பண்ணிப்பேன் பட் கொஞ்சம் நாள் ஆகட்டும்னு நினைக்கிறேன்..” “ஏன்?.. குமார் விஷயத்தை நினைச்சி சொல்லுறீங்களா?” என்று சஞ்சனா கேட்டதுக்கு மெதுவாக தலை ஆட்டினாள் சங்கீதா.. “எல்லாம் சரி ஆகிடும்கா…” – சங்கீதாவின் தோள்களில் சாய்ந்தவாறு கூறினாள் சஞ்சனா. கார் ராகவின் இடத்தை வந்தடைந்தது.. இருவரும் உள்ளே சென்றார்கள்… தினமும் நாம் வெளியில் செல்லும்போது பலரைப் பார்க்கிறோம், அதில் பார்த்தவுடனேயே பளிச் என்று இருக்கும் ஒரு கலையான முகம், சராசரி உயரம், ஒரு நிமிடம் யோசிக்க வைக்கும் விதமாக சிகப்பு சட்டையும் அதற்கு கொஞ்சம்கூட (கொஞ்சமாக) மேட்ச்சிங் இல்லாத பச்சை நிற பேன்ட் அணிந்து ஹாலில் அமர்ந்திருந்தான் ரகாவின் நண்பன் கார்த்திக். இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்தான், ஏன் எதற்கு என்று தெரியவில்லை ஆனால் சஞ்சனாவுக்கு அவனைப் பார்த்ததும் ஒரு விதமான சிரிப்புதான் வந்தது.. கிட்டத்தட்ட சென்னை28 படத்தில் வரும் சிவா போல இருந்தான் கார்த்திக். சங்கீதா சஞ்சனாவின் அருகில் சென்று அவள் காதில் “இதுக்குதான் காலைல ட்ரெஸ்ஸிங் டேபிள் முன்னாடி சுத்தி சுத்தி பார்த்து டிரஸ் பண்ணியோ?..” என்று கேட்க.. பரிதாபமாய் ஒரு பார்வையைக் குடுத்தாள் சஞ்சனா.. “ஹாய்.. நீங்கதான் சங்கீதா அண்ட் சஞ்சனாவா? என் எனிமி.. அதாங்க ராகவ் நீங்க வருவீங்கன்னு சொன்னான்..” – பற்கள் தெரிய சிரித்து வரவேற்றான் கார்த்திக். “யேஸ்… நீங்க கார்த்திக்கா?” – என்று சங்கீதா சொல்ல “வாவ்… எப்படிங்க கண்டுபுடிச்சீங்க…” என்று மீண்டும் வசீகரமாக (பற்கள் தெரிய) சிரித்தான். “ஆமா ரொம்ப கஷ்டமான காரியம்பா…” என்று மனதுக்குள் மெளனமாக முனு முணுத்துக் கொண்டாள் சஞ்சனா.. “இதுல யாரு சஞ்சனா, யாரு சங்கீதா?” என்று காலர் ஃபிலாப் சரி செய்து கொண்டே கேட்டான்.. “ஹா ஹா.. நீங்களே சொல்லுங்களேன்…” – மென்மையாக சிரித்துக் கொண்டே கேட்டாள் சஞ்சனா.. “நீங்கதான் சஞ்சனாவா இருக்கணும்.. கரெக்ட்?” – என்று கேள்வி கேட்டவளிடம் உடனே முகம் பார்த்து சொல்ல “எப்படி கண்டு புடுச்சீங்க?” என்று சங்கீதா ஆச்சர்யமாக கேட்டாள்.. “யு சீ… சங்கீதா இஸ் பேங்க் மேனேஜர்னு ராகவ் சொல்லி இருக்கான்… பட் உங்க முகத்தைப் பார்க்கும்போது மேனேஜரா இருப்பீங்கன்னு தோணல அதான் ஈசியா சொல்லிட்டேன்.. ஹா ஹா….” – என்று சொஃபா இருக்கையின் நுனியில் வந்து அகண்ட சிரிப்புடன் கூறினான்.. இந்த கமெண்டுக்கு சங்கீதா சஞ்சனாவைப் பார்த்து சிரித்தாள்.. சஞ்சனாவுக்கு லேசாக முகம் கடுப்பாகியது.. சற்று நேரத்துக்கெல்லாம் ராகவ் இறங்கி வந்தான்.. ஒரு வெள்ளை நிற ஷர்ட் அணிந்து முதல் இரண்டு பட்டன்கள் போடாமல் கார்கோஸ் பேன்ட்டுடன் தலை முடியை வாராமல் அப்படியே கலைத்தவாறு மிகவும் காஷ்வலாக வந்தான். சங்கீதாவுக்கு உண்மையில் அவனது தோற்றம் ஈர்த்தது ஆனாலும் அவன் பார்க்கும்போது வேறெங்கோ பார்ப்பது போல திரும்பிக் கொண்டாள். சங்கீதாவின் ஆடையைப் பார்த்து ராகவ் ஒரு நிமிடம் அப்படியே அவளைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்று எண்ணினான், ஆனால் அருகே சஞ்சனாவும் கார்த்திக்கும் இருப்பதால் கொஞ்சம் தவிர்த்தான். “ஓகே ஃபிரண்ட்ஸ் லெட்ஸ் ஸ்டார்ட்…. என்று சொல்லிக்கொண்டே முந்தைய இரவு கண்ணாடி உடைந்த காரை விட்டுவிட்டு வேறொரு BMW காரை எடுத்தான்…. அதில் நால்வரும் அமர்ந்தார்கள். யாருக்கும் எங்கே செல்கிறோம் என்று சொல்லாமல் வண்டியை ஓட்டினான் ராகவ்.. ஒரு எக்ஸ்ஹிபிஷன் உள்ளே நுழைந்தது வண்டி. வண்டியை ஓட்டும்போது ரியர் வியூ மிரர் மூலமாக சங்கீதாவின் முகத்தை அடிக்கடி பார்த்தான் ராகவ்.. அந்த கண்ணாடியிலேயே “நேரா பார்த்து வண்டிய ஓட்டு” என்று விரலை நீட்டி சொல்லாமல் சொல்லி செல்லமாய் எச்சரித்தாள் அவனுடைய சரா.. வண்டியை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு நுழைவு கட்டணம் கட்டி டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றார்கள் நால்வரும். அமைதியாய் அனைவரும் நடக்க சஞ்சனா பேச்சை ஆரம்பித்தாள். “கார்த்திக்.. எனக்கு ஒரு கேள்வி…” “சொல்லுங்க சஞ்சனா..” “எதுக்கு ராகவை எனிமின்னு கூப்பிடுற?” “ஒண்ணா ரெண்டா எத்தினி விஷயத்துக்கு என்னை பகொடாவா யூஸ் பண்ணி இருக்கான் தெரியுமா?..” பேசிக்கொண்டே ஒரு ஃபாஸ்ட் புட் சென்டர் அருகே அமர்ந்தார்கள்.. “ஒரு நாள் குவிஸ் ப்ரோக்ராம் இருக்குன்னு சொல்லி என்னை கூட்டிட்டு போனான் பாருங்க..” – அவன் சொல்ல ஆரம்பிக்கும்போது ராகவ் சிரித்தான்.. “சிரிக்காதடா எனிமி… வலி எனக்குதான் தெரியும்…” என்றான் கார்த்திக்.. “ஹா ஹா.. அப்படி என்ன ஆச்சு… சொல்லுங்க கேட்கலாம்..” – ஸ்வாராஸ்யமாக கேட்டாள் சங்கீதா.. “டி.என்.சேஷன் சீஃப் கெஸ்டா வந்தாருங்க.. நேர்ல பார்க்கும்போது இன்னும் உர்ருன்னு இருந்தாரு. அவருக்கு பக்கத்துலதான் எங்க பெஞ்ச்… அந்த ஆளு கூட ஒரு பொன்னும் வந்துச்சி. அவருக்கு கொஸ்டீன்ஸ் எடுத்துக் குடுக்க!.. முதல் ரவுண்டு முழுக்க சைன்ஸ் பத்தி இருந்துச்சி.. ஒரு கேள்விக்கு எங்க ரெண்டு பேருக்கும் பதில் தெரியும்.. ஆனா உஷாரா உடனே என்கிட்டே இருந்து மைக் வாங்கி ரொம்ப ஸ்டைலா ஆன்சர் பண்ணிட்டான். கீழ கிட்டத்தட்ட ரெண்டாயிரம் பேர் ஆடியன்ஸ் இருந்தாங்க.. எல்லாரும் ரொம்ப பலமா கைத் தட்டினாங்க.. அப்போ நான் இவனை கூப்டு அடுத்த கேள்விக்கு பதில் தெரிஞ்சா நான்தான் சொல்லுவேன்னு சொன்னேன்.. இவனும் சரின்னு சொன்னான்.. அதுக்கப்புறம் ரெண்டாவது ரவுண்டு.. மூணாவது ரவுண்டுன்னு கிட்டத்தட்ட இருவது கேள்வி இருக்கும்… எல்லாத்துக்கும் மைக்ல நானேதான் சொனேன்.. “வாவ்.. எல்லாத்துக்கும் நீங்களேதான் பதில் சொன்னீங்களா?” – சங்கீதா சாப்பிடுவதை நிறுத்தி ஆச்சர்யமாக கேட்டாள்.. “அந்த கன்றாவிய ஏங்க கேட்க்குறீங்க? எல்லா கேள்விக்கும் நான் ஒருத்தனே “பாஸ்” ன்னு சொன்னேங்க.. பாவிப்பய அதுக்கு மட்டும் என் கிட்ட மைக் குடுத்துட்டு அவன் கால் மேல கால் போட்டு ஸ்டைலா கூட்டத்துக்கு போஸ் குடுத்துக்குட்டு இருந்தான்.” சஞ்சனாவும் சங்கீதாவும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள்…. “இதை விட மோசமா இன்னொரு விஷயம் அன்னிக்கி மேடைல நடந்துச்சிங்க..” “ஹா ஹா… என்ன அது?..” – சங்கீதா சிரித்துக்கொண்டே கேட்டாள்.. “நாலாவது ரவுண்டுல முதல் கேள்வி கேட்டாங்க.. அப்போ இவங்கிட்ட காதுல மெதுவா ஒரு விஷயம் சொல்லலாம்னு வந்தேங்க.. நான் என்னமோ பதில் சொல்ல வரேன்னு நினைச்சி இவனும் சுறுசுறுப்பா என் கைல இருந்த மைக் புடிச்சிகிட்டான். அப்போ….” -சொல்ல வந்து நிறுத்தினான்… “அப்போ… என்ன ஆச்சு சொல்லு..சொல்லு..” – சஞ்சனா மிகவும் ஆர்வமாக கேட்டாள். “லாஸ்ட் மூணு ரவுண்டுக்கும் நாந்தான் ‘பாஸ்’ சொன்னேன்… இந்த ரவுண்டு ஃபுல்லா நீதான் பாஸ் சொல்லணும்னு மெதுவா அவன் காதுல சொன்னேங்க… இந்த பாவிப் பய என் வாய் கிட்ட மைக் வெச்சி இருக்கான்னு எனக்கு தெரியல.. நான் சொன்னது ஸ்பீக்கர்ல கேட்டுடுச்சி… கீழ இருந்த ரெண்டாயிரம் பேரும் எழுந்து நின்னு கை தட்டி எங்களை அசிங்கப் படுத்திட்டாங்க…” – சொல்லி முடித்தவுடன் அவன் முகத்தில் ஒரு விதமான சோகமும் மென்மையான சிரிப்பும் கலந்து சொன்னதில் சஞ்சனவுக்கும் சங்கீதாவுக்கும் குபீரென்று சிரிப்பு வந்து விட்டது… “அந்த ரவுண்டுலேயே அடுத்து ஒரு கேள்விய கேட்டாங்க.. கொஞ்சம் கஷ்டமான கேள்விதான்.. அதுக்கு எல்லா டீமும் பாஸ் சொல்லிட்டாங்க… எங்க மேஜைக்கு மைக் வரும்போது நாங்கதான் நியாயமா பாஸ் சொல்லணும்… அதுக்கு பதிலா வந்த கூட்டமே கோரஸ்ஸா சேர்ந்து சத்தமா ‘பாஸ்’ னு கத்தி க்லாப் பண்ணாங்க….” “ஹைய்யோ.. முடியல கா” என்று சங்கீதாவின் தோள்களில் சாய்ந்து சிரித்தாள் சஞ்சனா.. “சேஷன் கூட உங்கள மாதிரிதான் சிரிச்சிட்டாருங்க… அப்புறம் அவர் கூட இருந்த பொண்ணு ஒரு நிமிஷம் கூட்டத்தை அமைதி படுத்தி.. எங்களை மதிச்சி “உங்களுக்கு ஏதாவது பதில் சொல்லன்னுமா”ன்னு கேட்டுச்சி, கூட்டமும் கொஞ்சம் நாங்க ஏதோ சொல்ல போறோம்ன்னு நினைச்சி அமைதியாச்சு…. “க்லெடியேட்டர் நடு க்ரவுண்ட்ல நின்னுகுட்டு க்லைமாக்ஸ்ல கூட்டத்தை ஒரு நிமிஷம் பார்ப்பான்.. அந்த மாதிரி ஒரு நிமிஷம் அமைதியான அந்த கூட்டத்தை பார்த்துட்டு…. மனசுல வீரத்தை வர வெச்சிகுட்டு லேசா கண்ணுல தண்ணியோட இந்த துரோகி ராகவை சைடுல பார்த்தேன்…. திரும்பவும் நானே …. நானே….. கட்டபொம்மன் கைல வாள் எடுக்குறா மாதிரி அந்த மைக் எடுத்து….” “ஹா ஹா.. ‘பாஸ்’னு சொன்னீங்களா? ….ஹம்மா…”- சிரிப்புக்கு நடுவே சஞ்சனா பேச முயற்சித்தாள்.. ‘ஆமாம்….” – தலையை தொங்க வைத்து பெரும் தியாகம் செய்தது போல சொல்லி முடித்தான் கார்த்திக்.. “ஹா ஹா… கா..கார்த்திக்.. ப்ளீஸ்… கொஞ்சம் பிரேக் குடுங்க ப்ளீஸ்.. ஹம்மா..” – சங்கீதாவால் முடியவில்லை… “இதெல்லாம் கூட பரவாயில்லங்க…. அந்த கூடத்துல என்னை லவ் பண்ண பொன்னும் வந்திருந்தா… அவ எதிர்க்க என் இமேஜ் மொத்தமா டேமேஜ் ஆயிடுச்சிங்க.. அவ என் கிட்ட ஒரு நாலு நாள் பேசவே இல்ல…” – மிகவும் நொந்து சொன்னான் கார்த்திக்.. “ஒஹ் னோ….சோ சேட்..” – என்றாள் சஞ்சனா.. “அப்போ இவன் எனக்கு ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லி அந்த பொண்ணு கிட்ட ராத்திரி ஒரு நாலு மணி நேரம் ஃபோன் பண்ணி என்னவோ பேசி இருக்கான்…. காதல்னா என்ன, எப்படிப் பட்டவனை காதலிக்கணும், எப்படி எல்லாம் கஷ்டத்தைப் புரிஞ்சிக்கனும்னு ரொம்ப நேரமா அவ கிட்ட பேசி இருக்கான்… அடுத்த நாள் அவ என் கிட்ட வந்து… “வந்து…” – அவன் சொல்வதற்கு முன்பே சிரிக்க தொடங்கி விட்டாள் சஞ்சனா..“சொல்ல போனா இன்னிக்கி காலைல நானே உன் கிட்ட வந்து ஃபீல் பண்ணாத, ‘நடந்ததை மறந்துடு நான் உனக்கு இருக்கேன்’னு சொல்லலாம்னு நினைச்சேன்டா…. பட் நேத்து ராத்திரி ராகவ் என் கிட்ட பேசினதுல இருந்து எனக்கு உன் மேல இருக்கிறது லவ் இல்ல, வெறும் இன்ஃபாக்சுவேஷன் தான்னு தோணுச்சி… சாரி டா உன் மனசுல தேவை இல்லாம ஆசையா வளர்துட்டேன்… மன்னிச்சிடுடானு சொல்லிட்டா…. அது கூட பரவாயில்ல.. அதுக்கப்புறம் என் கிட்ட ஒரு லெட்டர் குடுத்து அதை இந்த துரோகி கிட்ட குடுக்க சொன்னா… நான் அவ அனுமதி இல்லாமலேயே அதை பிரிச்சி பார்த்தேன்… அதுல அந்த க்ராதாகி இவனை லவ் பண்ணுறேன்னு எழுதி இருந்தா… அதைப் பார்த்து என் பிஞ்சு மணசு எவ்வளோ கஷ்டப் பட்டிருக்கும்? – கவுண்டமணி போல அழுது புலம்பினான் கார்த்திக்.. “ஆக மொத்தத்துல பப்ளிக்கா குவிஸ் ப்ரோக்ராம்ல மானம் போக வெச்சி… காதலியை சேர்த்து வேக்குறேன்னு சொல்லி அவளை கழட்டிவிட்டுடன் இந்த எனிமி…” “ஹா ஹா… ரொம்பவே பாவம்ங்க உங்க நிலைமை.. ஹா ஹா..” – பரிதாபப்பட்டாலும் சிரித்துக்கொண்டே இருந்தாள் சங்கீதா.. “இதெல்லாம் கூட பரவாயில்ல.. ஒரு முக்கியமான எக்ஸாம்.. எப்படியோ கஷ்டப் பட்டு பிட் அடிச்சி பாஸ் பண்ணிடலாம்னு இருந்தேன்… வெற்றிகரமா காப்பி அடிச்சி எழுதியும் முடிச்சிட்டேன்.. ஆனால் நடந்த இந்த ரெண்டு சம்பவத்தையும் நினைச்சி நினைச்சி…”.. நிறுத்தினான்.. “என்ன ஆச்சு சொல்லுங்க…” என்றாள் சங்கீதா.. “வீட்டுக்கு வந்தேங்க… இந்த எனிமி ஃபோன் பன்னான்… ‘எப்படி மச்சி எழுதினன்னு கேட்டான்..’ இருடா கேள்வி எதுவும் நியாபகம் இல்ல.. கொஸ்டீன் பேப்பர் பார்த்து சொல்லுறேன்னு சொல்லி என் பையை திறந்தேன்.. அப்படியே அதிர்ச்சி ஆயிடுச்சிங்க… “ஏன்?..” – என்றாள் சஞ்சனா.. “எக்ஸாம் ஹால்ல இந்த எனிமி பண்ண துரோகத்தை நினைச்சி நினைச்சி டீச்சர் கிட்ட ஏதோ நினைப்புல கொஸ்டீன் பேப்பரை குடுத்துட்டு ஆன்சர் பேப்பரை வீட்டுக்கு எடுத்துட்டு வந்துட்டேன்… அந்த முக்கியமான எக்ஸாம்ல கஷ்டப்பட்டு பிட் அடிச்சும் கோட் அடிச்சிட்டேன்…” – கவலையாக இன்னமும் வலி குறையாதவிதம் பேசினான் கார்த்திக்.. “ஹாஹ்.. ஹம்மா ஹா..ஹா..” – சில நொடிகள் தொடர்ந்து சிரித்து முடித்துவிட்டு சஞ்சனா மெதுவாக அமைதியானாள். “எப்படி இப்படிப் பட்ட ஒரு ஆசாமிய நண்பனா வெச்சிக்குட்டு இருக்கீங்க? எனக்கென்னமோ அவன் ஆபீஸ்ல கூட இப்படி பலரை முட்டாளாக்கிதான் CEO ஆகி இருப்பான்னு தோணுது…” என்றாள் சங்கீதா.. “ஆஹா.. கரெக்டா சொன்னீங்க சங்கீதா.. கரெக்டா சொன்னீங்க…” “அப்படியா?…. சரி நான் ஏன் இவனை வாத்துன்னு கூப்பிடுறேன்னு உங்களுக்கு கேட்கவே தோணலையா? என்று ராகவ் சிரித்துக் கொண்டே சொல்ல.. “ஆஹா…. ஆரம்ச்சிட்டியாடா” என்று முணுமுணுத்துக்கொண்டே நொந்துகொண்டான் கார்த்திக்.. சஞ்சனா “ஏண்டா அவனை வாத்துன்னு கூப்பிடுற..” என்று உற்சாகமாய் கேட்க.. “அட அதை ஏங்க கேட்க்குறீங்க?… வேணாங்க… ஃப்ரீயா விடுங்க.” – நெத்தியில் முடி ஆட சீரியஸான பார்வையில் முகத்தை ஆட்டி ஆட்டி சொன்னான் கார்த்திக்.. “இன்னுமா நீ அதை கண்டு புடிக்கல” என்று ராகவ் கேட்டதுக்கு சஞ்சனா குழம்பினாள். “ஹா ஹா.. அவன் காலைப் பாரு..” என்று காமித்தான்.. காலின் ஹீல் பகுதியில் அவனுடைய ஷூ ஒரு அறை இன்ச்க்கு லூசாக இருந்தது. அதைப்பார்த்த உடனே வாயில் கை வைத்து மெதுவாக சிரித்தாள் சஞ்சனா.. “சின்ன வயசுல இருந்தே அவன் அம்மா அவனை அப்படி பழக்க படுத்திட்டாங்க.. எதுவுமே டைட்டா இல்லாம கொஞ்சம் லூசா இருக்கணும்னு சொல்லி சொல்லி ஷூ கூட லூசா தான் போடுவான்.” பேன்ட் ஷர்ட் கூட லூசா போடலாம்.. ஆனால் ஷூவ லூசா போடுற ஒரே ஆளு இவன்தான்.. இப்படி போட்டுட்டு நடக்கும்போது அவன் காலுக்கு கீழ வர சத்தமே செம காமெடியா இருக்கும்…. அதுலயும் இந்த ஷூ போட்டு அவன் மார்ச் பாஸ்ட் பண்னான் பாரு.. ஹா ஹா.. ஒரு இண்டிபெண்டன்ஸ் டே அன்னிக்கி இவனை சஸ்பென்ட் பண்ணிட்டாங்க… ஹா ஹா..” – ராகவ் சொன்ன உடனே சங்கீதா “ஷூவுக்காக சஸ்பென்டா?….” என்றாள்.. “ஷூக்காக சஸ்பென்ட் பண்ணல, அந்த ஷூ போட்டு அவன் செஞ்ச ஒரு காரியத்துக்குதான் சஸ்பென்ட் பண்ணாங்க..”.. அதற்க்கு சங்கீதா சிரித்துக்கொண்டே “ஹா ஹா…அப்படி என்ன செஞ்சிட்டான்..” – என்று ஆர்வமாய்க் கேட்டாள். “மச்சி.. அதை சொல்லியே ஆகணுமா?… மொத்தமா டாமேஜ் ஆயிடும்டா…வேணாண்டா…” என்று கொஞ்சலாக கெஞ்சினான்.. “ஏய்.. நீ இரு…இரு… ஹ்ம்ம் சொல்லு ராகவ்.. இட்ஸ் இன்ட்ரஸ்டிங்….” என்று சஞ்சனா கார்த்திக்கை வாயடைத்து ராகவை பேசச்சொல்ல.. ராகவ் “சொல்லிடவா மச்சீ…..” என்று நக்கலாய் மெதுவாக இழுத்து சொன்னான்.. “அதான் பத்த வெச்சிட்டியே.. சொல்லித் தொல….” – என்று நெற்றியில் கை வைத்து ஒரு பக்கமாக திரும்பிக் கொண்டான் கார்த்திக்.. “ஹ்ம்ம்.. சொல்லு சொல்லு.. அதான் அவனே பர்மிஷன் குடுத்துட்டானே….” – என்று சங்கீதா வெளிப்படையாக கேட்க.. டக்கென கார்த்திக் அவளைத் திரும்பிப் பார்த்து “வாட் அன் அட்ராசிட்டி….ச்ச….” என்று சீரியஸாக(!!) ஒரு லுக்கு விட்டான்…. அதற்கும் மூவரிடமும் சிரிப்புதான் வந்தது…. “இண்டிபெண்டன்ஸ் டேக்கு எங்க ஸ்கூலுக்கு வந்திருந்த வி.ஐ.பி ஒரு பஞ்சாப் சிங்க், எங்க ஸ்கூலோட அசோசியேஷன் தலைவர்.. அவர் முன்னாடி ஒரு ஒரு ஸ்டூடன்டும் நின்னு எங்க பி.டி மாஸ்டர் ‘ஆன் யுவர் மார்க்’னு சொல்லும்போது காஷ்வலா நிக்கணும்.. அப்புறம் அட்டேன்ஷன்னு சொல்லும்போது மரியாதை செலுத்தணும்.. அப்போ தலைவர் டர்ன் வந்துது…. ஹா..ஹாப்போ..ஹா ஹா… அட்டேன்ஷன்னு எங்க மாஸ்டர் சொன்னப்போ காலை வேகமா மேல துக்கி கீழ டப்புன்னு வெக்கும்போது அவன் கால்ல சாக்ஸ் இருந்துச்சே தவிர ஷூ இல்ல… எங்கடான்னு பார்த்தா சிங்கோட பெரிய தொந்தி மேல அந்தர் பல்டி அடிச்சி எகிறி போய் விழுந்திருந்துச்சி.. ஹா ஹா ஹா..” – என்று ராகவ் சொல்லி முடிக்க சஞ்சனாவும் சங்கீதாவும் சில நொடிகள் ஒன்றும் பேச முடியாமல் குனிந்து சிரித்தார்கள்….

சஞ்சனா காஷ்வலாக “you poor guy…” என்று சிரித்துக்கொண்டே சொல்ல… “அய்யய்யோ புவர் எல்லாம் இல்லீங்க.. ஊருல நிறைய சொத்து இருக்கு..” என்று சீரியசாக..அதே சமயம் வெகுளியாக சொன்ன விதத்தைப் பார்த்து சஞ்சனா “ஹாஹ் ஹா ஹா… ஹையோ… முடியலடா ராகவ்.. எங்கிருந்துடா புடிச்ச இவன…ஹம்மா..” என்று சிரித்துக்கொண்டே கார்த்திக்கின் வெகுளித்தனத்தை ரசித்தாள் சஞ்சனா.. அப்போது “சார்….”, என்று ஒரு முதியவர் வந்து ராகவை அழைக்க.. அவரிடம் “எல்லாம் ரெடியா?” என்றான் ராகவ்.. சங்கீதா ஒன்றும் புரியாமல் “என்ன ரெடியா? யார் அவரு? தலை முடியை சுருட்டிக்கொண்டே மென்மையாய் சிரித்துக் கேட்டாள் சங்கீதா…. “ஏ ஸ்மால் சர்ப்ரைஸ்.. என் கூட வா..” கண் அடித்து சிரித்துக் கொண்டே சொன்னான் ராகவ்.. அதற்கு “சர்ப்ரைஸ் மேல சர்ப்ரைஸ் குடுக்குறடா நீ..” என்று புன்னகைத்துக்கொண்டே சங்கீதா ராகவுடன் சென்றாள்.. “நாங்கெல்லாம் வரக்கூடாதா?” என்று கார்த்திக் கேட்க…. “தனியா வெத்தல பாக்கு வெச்சி கூப்பிடனுமா…. எந்திரிச்சி வாடா வாத்து…” என்று சொல்லி விறு விறுவென நடந்தான் ராகவ்.. அந்த முதியவர், எக்ஸ்ஹிபிஷனில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கலர் பேப்பர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்த ஒரு சிறிய மேடை இருக்குமிடத்துக்கு கூட்டிசென்றார். திடீரென ஒரு குழந்தை ஒரு கையால் ஊனி வேகமாக வந்து சங்கீதாவின் கால்களை பிடித்து தேங்க்ஸ் என்று சொல்ல அதிர்ந்து போய் என்ன இது.. எழுந்திரி.. எழுந்திரி… யார் குழந்தை இது…” என்று ராகவை ஆச்சர்யமாக பதட்டத்துடன் பார்த்தாள், இன்னொரு குழந்தை பின்னடியிருந்து அவளது மிடியைப் பிடித்து ஆட்டியது.. திரும்பிப் பார்த்தால் “இந்தாங்க ஷா.. ஸா.. சாக்குலேட்டு..” என்று கஷ்டப்பட்டு தொண்டையில் இருந்து குரலை வரவழைத்து பேசியது.. சங்கீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை… “ராகவ் என்……ன நட..க்குது…” என்று ராகவிடம் கேள்வி எழுப்பும்போது அவளை சுத்தி இன்னும் பெரிய கூட்டமாக சின்ன சின்ன ஊனமுற்ற குழந்தைகள் ஓடி வந்தது.. சங்கீதாவுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை… “ராகவ் என்ன நடக்குது இங்க?…” என்று குழப்பமாய்ப் பார்க்க “ஷ்ஷ்ஷ்… பேசாம என்ன நடக்குதுன்னு பாரு….” சஞ்சனாவுன், கார்த்திக்கும் கூட ராகவ் என்ன செய்கிறான் என்று எண்ணி குழம்பி இருந்தார்கள்… அந்த பெரியவர் சங்கீதாவின் அருகில் வந்து ஒரு பெரிய சைஸ் புகைப்படம் ஒன்றைக் குடுத்தார். அதில் கிட்டத்தட்ட பதினைந்து குழந்தைகளுக்கு ஒரு வருஷத்துக்கான சாப்பாடு, படிப்பு செலவு, துணிமணி போன்ற விஷயங்களுக்கு உதவியதுக்கு நன்றி என்றும், பார்வையற்ற இரண்டு பெண்களுக்கு கண் ஆப்பரேஷனுக்கு சிகிச்சை செலவும், விபத்தில் கணவனை இழந்த ஐந்து பெண்களை மறுமணம் செய்து கொள்ள தயாராய் இருக்கும் ஐந்து வாலிபர்களுக்கும் திருமண செலவுக்கு காசு குடுத்து உதவியமைக்கு நன்றி தெரிவிக்க எங்களால் முடிந்த ஒரு சிறிய பாராட்டு என்று சொல்லி “ராஜா கைய வெச்சா… அது ராங்கா போனதில்ல…” என்ற பாடலுக்கு கை இல்லாத சில சின்ன குழந்தைகள் அவர்கள் கால்களால் சிறப்பாக நடனம் ஆடி சல்யூட் செய்து சங்கீதாவுக்கு நன்றியை தெரிவித்தனர். இவற்றை பார்க்க பார்க்க சங்கீதாவின் கண்கள் லேசாக பனிக்க ஆரம்பித்தன.. ஒரு பெரிய வட்டமாக அனைத்து குழந்தைகளும், பார்வயற்றவர்களும், மருமனமாகப் போகும் பெண்களும் சேர்ந்து மதிய உணவுக்கு ஸ்பெஷல் சாப்பாடு சாப்பிட்டார்கள். சாப்பிடுவதற்கு முன்பு “கடவுள் நேரில் அவதரிப்பதில்லை… அவர் எங்களுக்கு இந்த இனிய நாளில் அண்ணதானம் செய்ய சங்கீதா என்ற தேவதையை அனுப்பி எங்களுக்கு ஓராண்டுக்கு படிப்பும், உணவும், குடுத்து மகிழ்ச்சி அளித்தமைக்கு அவரை என்றும் எங்கள் மனதில் எண்ணி நன்றியை சொல்லுவோம்..” என்று சொல்லி முடித்ததும்.. “எப்படா பேசி முடிப்பாங்க..” என்று பார்க்க கலையாக சற்று கருப்பு நிறத்தில், தேங்காய் எண்ணை பூசி சிறிய ரெட்டை ஜடை போட்டு சிகப்பு ரிப்பன் கட்டி சாப்பாடிலேயே கண்களை குறியாக வைத்திருந்தது ஒரு இரண்டடி வளர்ந்த குழந்தை…. அது அனைவரும் சாப்பிட உட்காரும்போது சந்கீதாவைப் பார்த்து புருவங்களை உயர்த்தி அந்த ஒரு கனம் அந்தஅ சாப்பாடுதான் அதன் சந்தோஷ உலகம் என்பது போல் சோற்றில் கை வைத்தபோது சங்கீதாவின் கண்கள் அவளையும் அறியாமல் அழுதது.. குளமான கண்களுடன் ராகவை திரும்பிப் பார்த்தாள்… “நீ குடுத்ததா உன் பேரை எழுதி குடுத்து நான்தான் இதுக்கெல்லாம் செலவு பண்ணேன்…. நான் குடுத்தா என்ன.. நீ குடுத்தா என்ன?… ரெண்டும் ஒன்னுதானே?” – அவன் சாராவின் கண்களை துடைத்தபடி சொன்னான் ராகவ்…. எங்கே நிற்கிறோம், யார் இருக்கிறார்கள் என்று கூட பார்க்காமல் அவன் தோள்களில் சாய்ந்து அனைத்துக் கொண்டாள் சங்கீதா.. மறுமணம் செய்துகொள்ளும் பெண் ஒருவள் சங்கீதாவின் அருகினில் வந்தாள்… எதற்கு வருகிறாள் என்று தெரியாமல் சங்கீதா ஆச்சர்யமாக பார்த்தாள்.. திடீரென அவள் கையில் ஒரு சின்ன வெள்ளை அட்டையில் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறத்தில் ஸ்கெட்ச் பேனா வைத்து டிசைன் வரைந்து அதற்குள் ஒரு வாக்கியத்தை எழுதி இருந்தாள். அதை சங்கீதா பார்பதற்குள் ராகவ் வாங்கி பார்த்தான். என்ன எழுதி இருக்கிறதென்று படித்த பிறகு “கொஞ்சம் பொறு.. நான் ஒன்னு தரனும்.. அதை பார்த்துட்டு இதை படி… ரொம்ப பொருத்தமா உனக்காகவே எழுதி இருக்காங்க..” என்றான்… “நீ என்ன தரப்போற?….” – பணித்த கண்களில் மென்மையாக புன்னகைத்து கேட்டாள் சங்கீதா.. “இதுதான்….” என்று ஒரு சிறிய சில்கி ஷைநிங் துணியால் கிஃப்ட் ராப் செய்யப்பட்டு இருந்த ஒரு சின்ன டப்பாவைக் குடுத்தான். சங்கீதா அதைப் பிரித்தாள்…. பிரித்தவுடன் அந்த டப்பாவில் “இது நான் என் வாழ்கையில் உனக்கு குடுக்கும் உயர்மிகுந்த பரிசு… இதை எடுத்துகுட்டா நீ எனக்கு இந்த உலகத்துல வேற எதுவும் பெருசா குடுத்துட முடியாது”ன்னு எழுதி இருந்தது.. உள்ளே பார்த்தாள்.. அதில் குங்கும போட்டு வைத்து மஞ்சள் கட்டியில் கட்டிய தாலி கயிறு இருந்தது. அதைப் பார்த்ததும் உதடுகள் விம்மியது, அவள் ஆழ் மனதில் இருந்து சந்தோஷ கண்ணீர் அடங்காமல் வந்தது.., அழுவதற்கு முன்பே கண்னங்கள் சிவந்தது.. மனதில் ஏகத்துக்கும் எகுறிய சந்தோஷத்தில் மூச்சு வாங்கியது… உடனே ராகவின் நெஞ்சில் சாய்ந்து இன்னும் அழுத்தமாக கட்டிக் கொண்டாள். பின்னாடி இருந்து கார்த்திக்கும் “சூப்பர் மச்சி” என்று கைத் தட்டினான்… சஞ்சனாவுக்கும் இந்த இனிமையான தருணம் சந்தோஷத்தைக் குடுத்தது.., சங்கீதாவின் அருகே வந்து சந்தோஷத்தின் மிகுதியில் அழுது கொண்டிருந்தவளின் தோளில் தடவி நிமிர்த்தி பார்த்து “என் வாழ்க்கைல நான் இன்னொரு பொன்னைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படுறேன்னா அது இந்த நாள்தான்கா…. நீங்க ரொம்ப குடுத்து வச்சவங்க.. ராகவ் மனசுல பொண்டாடீங்ற இடம் பிடிச்சிடீங்க… சத்தியமா உங்களுக்காக நான் ரொம்ப சந்தோஷப் படுறேன்….” என்று சொல்லி விட்டு அனைவரையும் சங்கீதாவின் அருகே வரும்படி செய்து “எல்லாரும் ஜோரா நம்ம சங்கீ அக்காவுக்கு சத்தமா ஒரு ஓ போடுங்க பார்க்கலாம்…” என்று சஞ்சனா சொன்னவுடன் குழந்தைகள், பெண்கள், கார்திக், சஞ்சனா, ராகவ் மற்றும் ஸ்நேஹா ரஞ்சித் உட்பட.. ராகவின் சராவுக்காக அவள் காது “ஓய்ங்” என்று சத்தம் வரும் அளவுக்கு “ஓ” என்று கத்தினார்கள். கூட்டம் ஒரு புறம் கத்திக்கொண்டிருக்க ராகவ் அவனது சாராவை அவளது ஒப்புதலுடன் முறைப்படி உரிமையுடன் அவளது தோளில் கைப் போட்டு தனியாக ஒரு பக்கம் நகர்ந்து மெதுவாக அவளுடன் ஜோடியாக நடந்து சென்றான்…. “ஏய்ய்…. சரா…” – தோளில் அழுத்தி தன் நெஞ்சுடன் அனைத்து அவள் கன்னத்தின் அருகில் முகம் வைத்து கூர்ந்து பார்த்தான்.. “என்னடா…. பொருக்கி புருஷா..” – அவள் கண்களில் ஈரம் மெதுவாக காய ஆரம்பித்து வெட்கம் துளிர் விட ஆரம்பித்தது…. “பொருக்கி புருஷனா?.. ஹா ஹா.. இது கூட நல்ல இருக்கே..! ஏண்டி அப்படி சொல்லுற?” “பின்ன என்ன, சொல்லாம கொள்ளாம சைலண்டா இத்தினி வேலை பண்ணி இருக்கே, இதுக்கெல்லாம் உன்னை கொஞ்சுவாங்களாக்கும்… போ.. தள்ளிப் போ..?” – வெட்கமும் புன்னகையும் சேர்ந்து வந்ததில் இன்னும் அழகாக தெரிந்தாள் அவனது சரா…. ராகவ் “ஏய்… தீடீர்னு ரொம்ப அழகா தெரியுறடி….” என்றான் மெதுவாக அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன்.. “ஓஹ்ஹோ.. உனக்கு இப்போதான் கண்ணு நல்லா தெரியுதுன்னு சொல்லு….” “ஹா ஹா..ஒரு உம்மா குடேன்….” – சொல்லிக்கொண்டே ராகவ் அவனது சாராவின் கண்ணத்தில் ஒரு முத்தம் குடுத்தான். “மாட்டேன் போ..” – பொய் கோவத்தில் முறைத்தாள் சங்கீதா…. “சரி போ..” அவளே திரும்புவாள் என்று எண்ணி ராகவும் திரும்பினான்.. “ஒரு தடவ மாட்டேன்னு சொல்லிட்டா இன்னொரு தடவ கேட்கக் கூடாதா?” – மென்மையாக முறைத்தாள்.. இதை எதிர்பார்க்கவில்லை ராகவ் “ஹிஹி.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா…. நீ என் சரா…. எனக்கு குடுக்காம விட்டுடுவியா?….” என்று சற்று அசடு வழிந்து முத்தத்தை இழந்துவிடுவோமோ என்று ராகவ் ஏங்க “நான் சொன்னதுக்கப்புறம் நீ கேட்டா நான் தர மாட்டேன்.. நீயா இன்னொரு வாட்டி கேட்டிருக்கணும்..அது உன் தப்பு..” என்று மீண்டும் முறைத்தாள்.. “நீ.. கொஞ்சம் அதிகம் பேசுறடி…. இனிமே என் ஸ்டைல் தான் சரி வரும்….” என்று சொல்லி அவளின் முகத்தை திருப்பி அவள் தோள்களை தன் பக்கம் இழுத்து இருக்கி கட்டி அனைத்து அவளுடைய மென்மையான இதழ்களில் அழுத்தி ஒருவருக்கொருவர் தங்களின் ஈர நாவினை சுவைத்து மூச்சிரைக்க இச் இச் என்று முத்தமழை பொழிந்துகொண்டனர்.. “எக்ஸ்ஹிபிஷனில் அவர்கள் அமர்ந்திருக்கும் புல்வெளியில் அமைந்த ஸ்பீக்கர்களில் அவர்களுக்கு பின்னாடி ஒரு அழகிய பாடலின் நடுவில் வரும் வரிகள் ஓடியது…”நீ இல்லாமல் எது நிம்மதி… நீதான் என்றும் என் சந்நிதி…” – ராகவை எண்ணி அந்த வரிகளை மனதார உணர்ந்தாள் சரா.. அப்போது தானாகவே அவளையும் அறியாமல் அவள் ஆழ் மனதில் இருந்து இந்த வார்த்தைகள் வந்தது..”ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா….” என்று சொல்லி.. அவன் தலைக்கு பின்னால் இருக்கும் முடியை வசதியாக பிடித்து தன் உதடருகே இழுத்து அவன் உதட்டை கடித்து உறிந்திழுத்து கண்களை மூடி அவன் கரங்கள் அவளது இடுப்பை அழுத்தி லாவகமாக இருக்கி பிடித்திருப்பதை உணர்ந்து அதை ரசித்தபடி தலை முதல் கால் வரை உஷ்ண அதிர்வுகளை அனுபவித்தபடி அவன் உதடுகளை கவ்வி சாப்பிட ஆரம்பித்தாள் அவன் சரா.. “சப்” என்ற சத்தத்துடன் அவனது உதடை விடுவித்தபோது ஸ்ஸ்ஹா.. என்று மூச்சு வாங்கியது ராகவ்கு.. குழந்தைகள் ஹார்லிக்ஸ், பூஸ்ட் குடித்தபின்பு எப்படி வாயை சுத்தி நுரை இருக்குமோ அப்படி அவனது உதடுகள் சுத்தி அவனது சாராவின் நாவின் எச்சில் ஈரம் படர்ந்திருந்தது.. அதை மெதுவாக அவள் சிரிக்கும் கண்களைப் பார்த்துக்கொண்டே “ஐ லவ் மை ஒன் அண்ட் ஒன்லி சங்கீதாராகவ் சரா…. திஸ் ஹாட் கிஸ் இஸ் பஃர் ஹர்..” என்று சொல்லி தன் பங்குக்கு மீண்டும் அவளின் உதடுகளை தன் இதழ்களால் பற்றி இழுத்தான். இப்போது அந்த மறுமணம் செய்து கொள்ளும் பெண் குடுத்த சிறிய அட்டையை படிக்க குடுத்தான் ராகவ்… அதில் “Live with no excuses, love with no limits, when life gives you hundered reasons to cry, show life that you have thousand reasons to smile….” – இதைப் படித்துவிட்டு ராகவைப் பார்த்து மெதுவாக “நான் சிரிக்குறதுக்கு thousand ரீசன்ஸ் வேணாம் டா…. ஒரு ரீசனே போதும்….” என்னது?.. – அவள் நெத்தியுடன் தன் நெத்தியை வைத்து அவள் கண்களைக் கூர்ந்து பார்த்து கேட்டான்… “ஹ்ம்ம்.. புரியாத மாதிரி கேட்குறான் பாரு… ‘இட் இஸ் ராகவ்….’ மை ஒன் அண்ட் ஒன்லி ஸ்வீட் பொருக்கி புருஷா…. நீதாண்டா அந்த ரீசன்…” என்று சங்கீதா சொல்ல அவளை அப்படியே தன்னுடன் அனைத்து மீண்டும் அவளது உதடுகளை உரிய ஆரம்பித்தான்… சட்டென “ஜேம்ஸ் பாண்ட்” ட்யூனில் செல் ஃபோன் சத்தம் ஒலிக்க, “ஏண்டி நாம ரொமான்ஸ் பண்ணும்போது மட்டும் ஏதாவது ஃபோன் கால் வருது…. ச்ச” என்று அலுத்துக்கொண்டு அதை எடுத்து அட்டென்ட் செய்தான் ராகவ்.. “ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்..” – சீரியஸாக கவனித்தான்.. “சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்…” “சொல்லுங்க….” “அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்ல பொருந்துது சார்..” “ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்…. அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்…அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?..” “ஆமா சார்…” கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்..”ஹ்ம்ம்… எனக்கும் அந்த உருவம் பொருந்துது..” “நீங்க எதை சொல்லுறீங்க..” “ஒன்னும் இல்ல நேருல வந்து சொல்லுறேன்…” “சரா… சீக்கிரம் வா… ஒரு முக்கியமான முதல சிக்கி இருக்கு… போய் பிடிக்கணும்..” என்று சொல்லி சஞ்சனாவையும் கார்திக்கையும் அழைத்து அவர்களுடன் காரில் வேகமாக கிளம்பினான்.. காரில் சஞ்சனா, கார்திக் மற்றும் சங்கீதாவிடம் தன்னை முந்தைய இரவு ஒருத்தன் தாக்கினான் என்றும் அப்போதுதான் போலீசிடம் தான் சந்தேகப்பட்ட விஷயங்களை கூறியதாகவும் சொல்லிக்கொண்டே வண்டியை ஓட்டினான் ராகவ்.. “டேய் மச்சி நீ சொல்லுறதெல்லாம் நிஜமாடா?…. தனியா ராத்திரி இருட்டுல ஒருத்தன் கூட ரோட்டுல சண்டை போட்டியா?.. நீ அவளோ பெரிய அப்பாடக்கரா டா..” கார்த்திக் நம்ப முடியாமல் புலம்பினான்.. “யாருடா அவன்?… யார சந்தேகப்பட்ட?… இப்போ ஸ்டேஷன்ல இருக்கிறது யாரு….” – பதட்டத்துடன் கேட்டாள் சங்கீதா.. “இதைப்பாறு..” என்று தன் செல் ஃபோனில் அந்த ஆசாமியின் ஃபோட்டோவை காமித்தான்.. சங்கீதா அதிர்ச்சியாக பார்த்தாள்.. அது வேறு யாருமில்லை, ஒரு காலத்தில் அவளிடம் பப்ளிக்காக அறை வாங்கிய சூப்பர்வைசர் சம்பத் தான்.. “ஹேய்… இந்த ராஸ்கல் எதுக்குடா சம்மந்தபட்டிருக்கன்..” என்று சங்கீதா கேட்க.. “தெரியலையே.. எது எது எதுக்கு நடக்குது, யாரெல்லாம் சம்மந்த பட்டிருக்காங்கன்னு ஒரு ஒரு முதலையா பிடிக்க பிடிக்கத்தான் தெரியவரும்….” என்றான் ராகவ்.. அனைவரும் ஒரு விதமான சீரியஸ்னஸுடன் காரின் உள்ளே அமர்ந்திருக்க.. கார்திக் மெதுவாக “ஹாஹ்… ஹா” என்று சிரித்தான்.. “எதுக்கு சிரிக்கிற?..” – சஞ்சனா உரிமையாக முறைத்து கேட்டாள்.. “இல்ல… நம்ம பய ஏதோ யோசனையில வேகமே இல்லாம வண்டி ஓட்டிட்டு இருக்கான்.. அப்போ ஒன்னு நியாபகம் வந்துச்சி.. சிரிச்சேன்..” என்று சொல்லி சிரித்தான் ராகவ்.. “என்ன யோசிச்ச?..” – ஸ்டீரிங் பிடித்துக்கொண்டு திரும்பி பார்க்காமல் கேட்டான் ராகவ்…. ப்ச்…. அது ஒன்னும் இல்லடா.. எக்ஸ்பில யாரோ மாதவன்னு ஒருத்தன் கதை எழுதுறன்…. அவன் கூட அப்டேட் போட்டுட்டான்.. ஆனா நீ ஆக்ஸலரேட்டர் அழுத்தி வேகம் குடுக்குறதுக்குள்ள நீ புடிக்க வேண்டியவன் லேட் ட்ரெயின் பிடிச்சி கூட போய்டுவான் போல இருக்கு… நீயாடா மச்சி வண்டிய ஓட்டுற… சும்மா மிதிடா நல்லா.. ரைட் ரைட்… என்று விசில் குடுத்து நண்பனை உற்சாகப்படுதினான் கார்த்திக்…. “என்னது அது எக்ஸ்பி?…. எந்த மாதவன்?… என்ன ஒலர்ரான் இவன்..?” – என்று சஞ்சனாவும் சங்கீதாவும் ஒன்னும் புரியாமல் குழம்பினார்கள்..! “அதெல்லாம் உங்களுக்கு புரியாது…. அது எங்களுக்கு ஒரு தனி உலகம்.. ஹா ஹா..” என்று கார்த்திக் சிரிக்க…. பலவிதமான சிந்தனைகளுக்கும் டெண்ஷனுக்கும் மத்தியில் கார்த்திக் அடித்த கமெண்ட்டையும், அதை கேட்டு சஞ்சனாவும் சங்கீதாவும் குழம்புவதைப் பார்த்து கூலாக சிரித்துக் கொண்டே டாப் கியரில் ஆக்ஸலரேட்டரை மொத்தமாய் அழுத்தினான் ராகவ்.. அசுரத்தனமான வேகத்தில் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி ‘உர்ர்ர்ர்ர்ர்ர்ர்’ என்று எதிர் திசை காற்றை கிழித்துக் கொண்டு சிறுத்தையை போல் பாய்ந்தது ராகவின் BMW கார்….டிக் டிக்… என்று நேரம் பத்து மணியை தொட அந்த பழைய கடிகாரத்தின் முட்கள் சற்று சோம்பேறியாக சுத்திக்கொண்டிருந்தது…. அப்போது “உன்னை அறிந்தால்… நீ உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..” என்று அந்த இடத்தில் ரேடியோ மட்டும் உற்சாகமாக பாடிக்கொண்டிருக்க “யாராவது அத கொஞ்சம் கம்மி பண்ணுங்கயா….” என்று தலையில் கை வைத்து ஏதோ வருத்தி எடுக்கும் சிந்தனையில் ஆழ்ந்திருக்க.. “உயர்ந்தாலும் தாழ்ந்தாலும், தலை வணங்காமல் நீ வாழலாம்..” என்று மீண்டும் சத்தம் குறையாமல் பாடிக்கொண்டிருந்தது.. “யோவ்.. யாராவது நிறுத்துறீங்களா? இல்ல அந்த எழவ தூக்கி போட்டு உடைக்கட்டுமா?”…. என்று இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் அடித்தொண்டையில் இருந்து கத்தினார்…. “நல்ல பாட்டுதானே அதுக்கு ஏன் இந்த மனுஷன் இப்படி கத்துறாரு….” என்று முணுமுணுத்துக்கொண்டே ஹெட் கான்ஸ்டபிள் அந்த ரேடியோவில் சத்தத்தை திருகி குறைத்தார்.. அப்போது “ட்ரிங்…. ட்ரிங்….” என்று மேஜையின் ஓரத்தில் உள்ள ஃபோன் ஒலித்தது…. “ஹலோ” – கணீர் குரலில் பேசினார் ராஜேந்திரன்.. “ஹலோ.. போலீஸ் ஸ்டேஷன்?” – ஹாஸ்பிட்டலில் இதற்கு முன்பு கேட்ட அதே குரல் இப்போது ராஜேந்திரனுக்கு கேட்டது.. “ஆமா… போலீஸ் ஸ்டேஷன் தான்…. நீ… அன்னிக்கி…” – என்று ராஜேந்திரன் பேசும்போது குறுக்கிட்டான்.. “சார் நான் யாருங்குறதை அப்புறம் பார்த்துக்கலாம்…. அன்னிக்கி நீங்க ஹாஸ்பிட்டல்ல தப்ப விட்ட ஆளு இன்னைக்கி ரயில்வே டேஷன்ல இருக்கான்..” – படபடப்புடன் பேசினான் அவன்… “நீ யாருங்குறதை முதல்ல சொல்லு….” – இன்ஸ்பெக்டர் எரிச்சலுடன் கத்தினார்… “இப்போ உங்களுக்கு மேல விவரம் சொல்லவா இல்லை ஃபோன் வெச்சிடவா?” – பயந்த குரலில் சத்தம் குறைவாகவும் அதே சமயம் கோவமாகவும் பேசினான்.. “ஏய்.. இரு இரு… சொல்லு விஷயம் என்ன?” – ஒரு புறம் எப்படியாவது அவனை இன்னும் கொஞ்சம் பேச விட்டு அவனது குரலை டாப் செய்ய அருகே உள்ள கான்ஸ்டபிளை அவசரமாக கையசைத்து சத்தம் இல்லாமல் அமைதியாய் அழைத்து செய்கை காட்டினார்…. “அந்த ஆளு ப்லாட்ஃபார்ம் எட்டுல ஒரு எஸ்.டி.டீ பூத் கிட்ட இருக்கான். அவன் கைல ஒரு பொட்டி இருக்கு..கூடவே ஒரு கேமரா வெச்சிருக்கான்….” – பேச்சுக்கு இடையே அதிகம் மூச்சு வாங்கியது அவனுக்கு.. “முதல்ல நீ யாருங்குறது…” – இன்ஸ்பெக்டர் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டான்.. “சார்.. அதான் வேணாம்னு சொல்லுறேன்ல.. நான் வெக்குறேன்…” – இந்த முறை நன்றாகவே கத்தினான்.. “இரு இரு.. நான் கேக்கல.. கேக்கல… ஹலோ.. இருக்கியா?.. ஹலோ… ஹலோ….” – இன்ஸ்பெக்டரின் கடைசி ஹலோவுக்கு குரல் உயர்ந்தது.. “சீக்கிரம் சொல்லுங்க…” – பதட்டம் இன்னும் அதிகம் ஆனது அவன் குரலில் “நீ யாருன்னு சொல்லலைன்னா பரவாயில்ல… ஆனா நாங்க தேடுற ஆள் அவந்தான்னு எப்படி தெளிவா சொல்லுற?” – கோவத்தை அடக்கி அமைதியாக பேச முயற்சித்தார் ராஜேந்திரன்… “அவன் ஸ்டேஷன் உள்ள போறதுக்கு முன்னாடி ஒரு பப்ளிக் டாய்லட் கிட்ட ஒரு கருப்பு கவர்ல நீங்க போன தடவ ஹாஸ்பிடல்ல அவனை தப்பிக்க விட்டப்போ போட்டிருந்த வார்டன் டிரஸ்லாம் தூக்கி எறிஞ்சிட்டு போனான்… என்னால அதிகம் பேச முடியாது.. முடிஞ்சா புடிச்சிக்கோங்க…. நா கெளம்புறேன்…” “ஹலோ.. ஹலோ…” கீ.. கீ.. கீ.. கீ….- ஃபோன் துண்டிக்கப்பட்டது… “ச்ச.. என்ன எழவுயா இது…. வாங்கையா..” ராஜேந்திரன் உடனே ஹெட் கான்ஸ்டபளிடம் என்னென்ன செய்ய வேண்டுமென்று ஜீப் ஏறிக்கொண்டே கைகளை அசைத்து அசைத்து “புரிஞ்சிதாடா வெலக்கென்ன..” என்று கடித்துக்கொண்டே விளக்க “ஆங் ஆங்.. ரைட்..” என்று சுய கெளரவம் எதுவும் பார்க்காமல் அதே சமயம் ஒழுக்கம் தவறாமல் இன்ஸ்பெக்டருக்கு பதில் அளித்துக்கொண்டே பவ்யமாக உடன் சென்றார்…. ஃபோனில் ஹெட் கான்ஸ்டபிள் யார் யார் எங்கெங்கே மஃப்டியில் நிற்க வேண்டுமென்று அவசரமாக சொல்லிக்கொண்டே இருக்க ஸ்டேஷன் வந்தது.. ஒரு கான்ஸ்டபிள் சிகப்பு நிற டீ ஷர்ட் மற்றும் வேஷ்டியில் நின்றுகொண்டு சாதாரணமாக பீடி பிடித்துக்கொண்டிருந்தார்…. அவரிடம் முன்கூட்டியே தகவல் சொல்லியாகிவிட்டது.. ஸ்டேஷன் உள்ளே டூ வீலர் மற்றும் சைக்கிள் நிறுத்தும் இடத்தில் ஒரு ஐந்து அடி சுவர் தடுப்பு இருந்தது.. அங்கே குனிந்து மெதுவாக ராகவ்கு ஃபோன் செய்தார் ராஜேந்திரன்.. “ஹலோ ராஜேந்திரன்.. சொல்லுங்க..என்ன விஷயம்..” – சீரியஸாக கவனித்தான்.. ராகவ்…. “சார் நீங்க அடையாளம் சொன்ன ஆளை கண்காணிச்சோம், அவன் இப்போ ரயில்வே ஸ்டேஷனில் இருக்கான். கைல ஒரு பெட்டியும் கூடவே ஒரு சின்ன வீடியோ கேமராவும் இருக்கு. கூடவே இன்னொரு முக்கிய விஷயம் சொல்லணும்…” “சொல்லுங்க….” “அன்னிக்கி ஹாஸ்பிட்டல்ல எங்க கான்ஸ்டபிள் ஒருத்தனை சுட்டுட்டு ஓடின ஆசாமியோட உருவங்க எல்லாமே இவனோட நல்லா பொருந்துது சார்..” “ரியல்லி ஃபன்டாஸ்டிக்.. நீங்க எல்லா என்ட்ரன்ஸ்லையும் உங்க ஆளுங்கள போட்டுடுங்க.. நான் உடனே கிளம்பி அங்க வரேன்…. அவன் எனக்கு என் கஸ்டடியில வேணும். அப்புறம்…அவன் பார்க்க கொஞ்சம் வாட்டசாட்டமா இருந்தானா?..”

“ஆமா சார்…” கண்களை மூடி தீவிரமாக யோசித்தான்..”ஹ்ம்ம்… எனக்கும் அந்த உருவம் பொருந்துது..” “நீங்க எதை சொல்லுறீங்க..” “ஒன்னும் இல்ல நேர்ல வந்து சொல்லுறேன்…” அதன் பிறகு ராகவின் கார் சிறுத்தையை போல சீறிப் பாய்ந்ததெல்லாம் நமக்கு ஏற்கனவே தெரியும்.. சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் ராஜேந்திரன் ஃபோன் செய்தார்.. சொல்லுங்க ராஜேந்திரன்… நீங்க மெதுவா உள்ளே டூ வீலர் சைக்கிள் பார்கிங் இருக்குற இடத்துக்கு வந்துடுங்க…. முடிஞ்ச வரைக்கும் கூட்ட நடமாட்டத்தோட சேர்ந்து முகம் காமிச்சிகாம வந்து சேருங்க… ஒரு நாற்பது அம்பது அடி கடந்து வந்தா எங்க ஆளுங்க சத்தம் குடுக்காம நின்னுட்டு இருப்பாங்க… அங்க வந்து அடையாளம் பார்த்துக்கோங்க… சரி சரி.. நீங்க சொன்ன மாதிரியே வரேன்… தனது வண்டியை ஸ்டேஷன் உள்ளே கூட நிறுத்தாமல் வெளியே நிறுத்திவிட்டு நால்வருமே தங்களது முகங்களுக்கு தொப்பியோ துணியையோ கட்டிக்கொண்டு ஓரளவுக்கு முகம் தெரியாத விதம் நாலா பக்கமும் பிரிந்து தனித்தனியே இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்துக்கு சாதாரணமாக சத்தமோ ஆர்பாட்டமோ இன்றி வந்து சேர்ந்தனர்… பார்கிங் என்ட்ரன்ஸ் அருகே பாவமாக ஏதோ கொஞ்சம் பச்சை நிறத்தில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருக்கும் டியூப் லைட் இவர்கள் சேர்ந்தடையும் இடத்தை முக்கியமாக கருதி இருட்டாகவே வைத்திருந்தது.. அனைவரும் ராஜேந்திரனுடன் ஒன்று சேர்ந்தனர்.. “சார்..” – என்று ராகவ் மெதுவாக நெருங்க.. “ஷ்ஷ்.. மெதுவா பேசுங்க” என்று அமைதி படுத்தினார் ராஜேந்திரன்.. “நேரா போய் துப்பாக்கிய காமிச்சி சுத்தி வளைச்சி பிடிக்க வேண்டியதுதானே?….” – சத்தமின்றி ராகவ் ராஜேந்திரனுடன் கேள்வி எழுப்ப…. “எனக்கும் போலீஸ் மூளை கொஞ்சம் இருக்கு சார்….” என்று ராகவை நோக்கி தனது கோவத்தை அடக்கி அதே சமயம் பவ்யமாக பேசினார்…. இடுப்பில் சற்று லூசான பேன்டை மேலே தூக்கிவிட்டு கண்கள் சுருங்க சற்று கோவமாக…. “அதானே… நீங்க உங்க வேலைய பாருங்க சார்…” என்று சொல்லி ராகவை நோக்கி “அவர் போலீஸ் டா… சும்மா குவிஸ் ல உன் பேச்சை கேட்டு நான் அசிங்க பட்ட மாதிரி இங்கே உன் பேச்சை கேட்டு வேல செஞ்சி இங்கே இருக்குற கான்ஸ்டபிள்ஸ் முன்னாடி அவரு அவமானப்படனும்னு பார்க்குரியா?” பேசிக்கொண்டிருக்கும்போது காலில் யாரோ எத்தி உதைப்பதை உணர்ந்து “அம்மே…” என்று கத்தினான்… “சாரி சாரி…” என்றாள் சங்கீதா… வழக்கம் போல பொறுமையே இல்லாமல் போலீஸ் கிட்ட கூட வாதாடுறானேன்னு எண்ணி ராகவின் மீதுள்ள கோவத்தில் ராகவை அடிக்க போக அது கார்த்திக்கின் காலில் பட்டுவிட்டது…. மீண்டும் இடுப்பில் நறுக்கென்று ஏதோ கிள்ளியது போல உணர்ந்தான் “இஸ்… எப்பா…” என்று லேசாக அலறினான்… “அறிவு கெட்ட லூசு பின்னாடி கால் எடுத்து வெக்கும்போது ஏண்டா என் கால நசுக்குற….” என்று சஞ்சனா கொஞ்சம் கடித்தாள்…. “ஊருல இருந்து கிளம்பும்போதே வாசப்படியாண்ட பூனை குறுக்கால ஓடுச்சி… அப்போவே என் அம்மா கூட அடுத்த நாள் கெளம்பி போடான்னு சொல்லுச்சி…. கேக்கல… நான் கேக்கல… யோசிச்சி இருக்கணும்… இந்த எனிமிய நான் பார்க்க வந்திருக்ககூடாதுன்னு அப்போவே யோசிச்சி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன்..” “சார் கொஞ்சம் பேசாம இருக்கீங்களா?” – இன்ஸ்பெக்டர் கொஞ்சம் கடுப்பாகி கார்த்திக்கை நோக்கி பேச…. “உக்கும்.. வீட்டுல நாய் காணாம போச்சுன்னு கம்ப்ளைன்ட் குடுக்க வர்றவங்க கிட்ட நாய் படத்தை பேப்பர்ல விளம்பரம் குடுங்கன்னு சொல்லுற போலீசயெல்லாம் கூட்டிட்டு வந்தா இப்படிதான் டென்ஷன்ல கத்துவாங்க…. இந்நேரம் அவங்க கிட்ட இருக்குற மோப்பம் புடிக்குற நாய கூட்டியாந்திருந்தா கூட அது போய் அவன் ரெண்டு காலுக்கும் நடுவுல இருக்குற பொடலங்காவ கடிச்சி மேட்டர் முடிச்சி இருக்கும்….. இங்கே சும்மா செவுத்துக்கு பின்னாடி கூடி நின்னுக்கிட்டு சவுண்ட் உட்ராறு….” என்று மெளனமாக வானை நோக்கி முணுமுணுக்க.. “என்ன சொன்னீங்க?….” – என்று இன்ஸ்பெக்டர் ஆத்திரமாக கேட்க.. “இன்னைக்கி நீங்கதான் சார் அவனுக்கு எமன்….” என்று சத்தமாக சொடக்கு போட்டு மரியாதையாக அவரைப் பார்த்து சொல்ல.. கொஞ்சம் கார்த்திக்கை முறைத்துக்கொண்டே ராகவ் பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தார் ராஜேந்திரன்.. “சார்…. அவனை பிடிச்ச பிறகு நீங்க சொல்லுறா மாதிரி உங்க கஸ்டடியில எல்லாம் எங்களால ஃபார்மாலிட்டி படி அவனை ஒப்படைக்க முடியாது சார்…. முதல்ல ஸ்டேஷனுக்கு தான் கூட்டிட்டு போகணும்….” “அய்யோ…. முதல்ல நீங்க அவனை புடிங்க சார்….” – இன்ஸ்பெக்டரை நோக்கி கூலாக கார்த்திக் இதை சொல்ல “ஹி இஸ் ரியலி இரிடேட்டிங் மீ….” என்று தன் லத்தியை கார்த்திக் நோக்கி கான்பித்து ராகவிடம் கடித்துக்கொண்டார் ராஜேந்திரன்…. தயவு செஞ்சி கொஞ்சம் பேசாம இருடா…. என் லைஃப் டா இது – என்று ராகவ் சொல்ல கார்த்திக் கொஞ்சம் அமைதி ஆனான்.. “எட்டாவது பிளாட்ஃபார்மில் ட்ரெயின் வரும்போது எஸ்.டீ.டி பூத்துக்கு முன்னாடி “S5″ கம்பார்ட்மென்ட் நிக்கும் சார்… அப்போ அதுல எங்க ஆள் ஒருத்தன் மஃப்டியில் நிப்பான்.. சாதாரணமா இறங்குற மாதிரி நெருங்கி வந்து அவனை பிடிக்கிற ப்ளான் இருக்கு, அப்போ கீழையும் பூத் கிட்ட ஒரு ஆள் சிகப்பு டீ ஷர்ட்டில் நின்னுட்டு இருப்பான்.. பிடிக்க கஷ்டம் இருக்காது.. அப்படியே தப்பினாலும் அவனை ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் முன்னாடி பிடிக்க ரெண்டு பேரையும்…., பயணிங்க வெளியே போற எக்சிட் பக்கமும் ரெண்டு பேரையும் போட்டிருக்கேன்.. நீங்க சொல்லுறா மாதிரி எடுத்தோம் கவுத்தோம் னு சொல்லி துப்பாக்கிய தூக்கிட்டு அவன் முன்னாடி போய் நின்னு சினிமாவுல வர மாதிரியெல்லாம் பண்ண முடியாது… எப்படியும் அவன் தப்பிக்க மாட்டான் சார்… நம்புங்க….” – என்று ராஜேந்திரன் பேசும்போது அவரது பேச்சை விடவும் அவரது உடல் மொழி மிகவும் நம்பிக்கை தரும்விதம் இருந்தது ராகவ்கு…. இன்னும் பத்து நிமிடத்தில் ரயில் வருமென்று ஸ்டேஷன் ஸ்பீக்கர்கள் ஒலித்தன… நிமிடங்கள் குறைந்தது…. இன்னும் இரண்டு நிமிடங்கள்தான் பாக்கி… நேரம் வந்து விட்டது… தூரத்தில் இருந்து இன்ஜின் மீதிருக்கும் ஹெட்லைட் வெளிச்சம் தண்டவாளத்தின் மீது படர்ந்து பளபளத்தது… நெஞ்சம் படபடக்க, நெற்றி வியர்க்க… போலீசும், ராகவும், அவன் உடன் இருந்தவர்களும் அவர்களுக்கு பின்னாடி ஒரு கொலையே விழுந்தாலும் திரும்பி பார்க்கபோவதில்லை என்பது போல வைத்த கண் வாங்காமல் அந்த டெலிஃபோன் பூத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர்…. சம்பத்தும் நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு விலகவில்லை… என்ஜின் மெதுவாக நிற்க நேரும்போது ஆமை வேகத்தில் அந்த பூத்தை S1….. S2….. S3…… என்று கம்ப்பார்ட்மென்ட்ஸ் மெதுவாக கடந்து செல்ல S5…. வந்து நின்றது… ராஜேந்திரன் ராகவின் கைகளை லேசாக அழுத்திப் பிடித்தார்… “ஐ குட் சீ மை மேன் இன் தட் கம்பார்ட்மென்ட்….. ஹி வில் கெட் ஹிம்…..” என்று மெதுவாக தன்னம்பிக்கை குரலில் ராகவிடம் பேசினார்…. ராஜேந்திரன் எதிர்பார்த்தது போலவெ மஃடியில் இருக்கும் போலீஸ் சாதாரணமாக ரயிலை விட்டு இறங்கும்போது பார்ப்பவர்கள் யாவருக்கும் அவன் போலீஸ் என்று தெரியாத வண்ணம் இறங்கினான்…. சம்பத் அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்தான்… இருப்பினும் தன்னை சுத்தி என்ன நடக்கிறதென்று அந்த ரயிலில் இருந்த கூட்டம் இறங்கும்போது கண்காணிக்காமல் இல்லை…. கம்பார்ட்மெண்டில் இருந்து ம்ஃடியில் இறங்கியவன் கீழே இருக்கும்போது பீடி பிடித்துக்கொண்டிருக்கும் போலீசை பார்த்து ஒரு கண நொடி ஏதோ சின்ன செய்கை கொடுக்க… என்ன கெட்டநேரமோ.. அதை சம்பத் பார்த்துவிட்டான்… அவனுக்கும் இதைப் பார்த்ததில் தன்னை சுற்றி ஏதோ நடக்கிறதென்று ஒரு அபாய மணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது… உள்ளே ஏறலாம் என்று மெல்ல நடந்து வந்தவன் சற்று அமைதியாய் அப்படியே ஸ்டில்லில் நிற்க.. மஃடியில் இருக்கும் மீதி இருவரும் ஒரு நிமிடம் அவனை அப்படியே கூர்ந்து கவனித்தனர்.. மூவரும் அப்படியே அங்கும் இங்கும் நகராமல் சற்று நிமிடங்கள் உறைந்து நின்றனர்…. நின்றனர்… நின்றனர்…. ஒருவருக்கொருவர் பார்த்தார்கள்…. மீதி இருவரும் லேசாக அசரும் வேலையில் உடனே அதிவேகமாக அங்கிருந்து வேகம் பிடித்து ஓட ஆரம்பித்தான் சம்பத்…. உடனே மீதி இருவரும் அவனை கூட்டத்தில் பின் தொடர்ந்து ஓடிப் பிடிக்க முயற்சித்தார்கள்.. கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள்.. ராஜேந்திரனுக்கு “ச்ச எவ்வளோ சொல்லியும் சொதப்பிட்டாங்களே..” என்று கடித்துக்கொண்டார்… சம்பத்தை அவனுக்கு பின்னாடி மிகவும் நெருங்கி ஓடி வந்து பிடிக்க முயற்சித்த இருவரை யாருமே எதிர்பார்க்காத வண்ணம் அவன் கையில் இருக்கும் கேமராவில் ஒரு பட்டனை அழுத்த…. லென்ஸ் இருக்கும் வழியே அந்த இருவரின் கால்களில் புல்லெட் பாய்ந்தது… அவன் சுடும் வரை அனைவருமே அது கேமரா என்றுதான் எண்ணி இருந்தார்கள்.. ஆனால் அது கேமராவை போல தோற்றம் கொண்ட துப்பாக்கி என்பது யாருக்கும் தெரியவில்லை…. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உடனே அந்த சுவரை எகிறி குதித்துக் கொண்டு “யூ ஆல் பீ ஹியர் சேஃப்லி….” என்று கத்திக் கொண்டே சம்பத்தை நோக்கி ஓட…. ஸ்டேஷன் என்ட்ரன்ஸ் அருகே மஃடியில் நின்றிருந்த இரண்டு போலீஸ்காரர்கள் அவனை பிடிக்க நேரும்போது ஒருவனுடைய கையில் மட்டும் சம்பத் சிக்கினான்… ஆனால் பிடித்தவன் கையை தன் கேமரா போன்ற துப்பாக்கியை வைத்து பிடித்தவன் தோளில் ஓங்கி குத்தி அவன் பிடியில் இருந்து தப்பி எஸ்கேப் ஆகி விட்டான்… சில நேரம் கழித்து ராகவும் அவன் உடன் இருந்தவர்களும் ராஜேந்திரனை நோக்கி சென்று என்ன ஆனதென்று கேட்க…. “வெறி சாரி சார்…. ” என்று இன்ஸ்பெக்டர் சொல்ல “உக்கும் நான் தான் அப்போவே சொன்னேனே….” என்று கார்த்திக் முணுமுணுத்தான்.. “எப்படியும் முயற்சி பண்ணி திருப்பி அவனை பிடிக்கிறோம்….” என்று ராஜேந்திரன் சொல்ல…. ராகவ் ஒன்றுமே பேசாமல் சில நிமிடம் இன்ஸ்பெக்டரை தொடர்ந்து மெளனமாக பார்த்தான்.. “என்ன சார் யோசிக்குறீங்க?.. சொல்லுங்க” என்றார் ராஜேந்திரன்… மீண்டும் ஒன்றும் பேசாமல் அங்கிருந்து மெல்ல நகர்ந்தான்…. “மிஸ்டர் ராகவ்.. நீங்க ஏதோ சொல்ல வந்தீங்களே?…” என்று மீண்டும் இன்ஸ்பெக்டர் கேட்க ஒரு நொடி யோசித்துவிட்டு “இல்ல.. ஒண்ணுமில்ல…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து மெதுவாக விலகி சென்றான் ராகவ். அப்போது “சார்…” என்று கார்த்திக் போலீஸ் அருகே சென்று மெதுவாக அழைக்க… “என்ன?..” என்று வாயால் கேட்காமல் பார்வையால் பார்த்து கேட்டார் இன்ஸ்பெக்டர்…. “என்னோட சேர்ந்து சொல்லுங்க…. ஆல் இஸ் வெல்…. ஆல் இஸ் வெல்….” என்று அவரின் நெஞ்சில் கை வைத்து கார்த்திக் சொல்ல.. கடுப்பின் உச்சத்துக்கு சென்று “ஷட் அப்….” என்று கத்தினார்.. அப்போது “அடுத்த தடவ உங்க கிட்ட மோப்பம் பிடிக்குற நாய்ங்க ரெண்டு மூணு இருந்தா கூட்டிட்டு வாங்க சார்.. மஃப்டில இருக்குறவங்களை விட அது உங்களுக்கு அதிகமா உதவி செய்யும் சார்….” என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்து மெதுவாக இன்ஸ்பெக்டரின் முறைப்புக்கு பயந்து ஓடினான்…. “கய்ங்….கய்ங்….” என்று சதம் குடுத்துக் கொண்டே கார் கதவுகள் திறக்கப்பட்டன.. விரக்தியுடன் உள்ளே ஏறினான் ராகவ்.. நால்வரும் காரில் IOFI அலுவலகத்துக்குள் இருக்கும் வி.ஐ.பி லாஞ் செல்வதற்கு பதிலாக நேரத்தையும், தூரத்தையும் மனதில் கொண்டு அருகில் உள்ள தனது IOFI நிறுவனத்தின் வெளிநாட்டு விருந்தாளிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஐந்து நட்சதிர ஹோட்டல் வசதிகளைக் கொண்ட கெஸ்ட்ஹவுஸுக்கு சென்றார்கள். ராகவின் கோட்டா படி அவனுக்கு எப்பொழுதும் அவனுடைய சிறப்பு விருந்தாளிகளுக்கு என்று மூன்று அறை ஒதுக்கப் பட்டிருக்கும்… “ஹலோ சார், ஹவ் ஆர் யூ?…. யூ நீட் த கீஸ்?” என்று அந்த இடத்தை கண்காணிக்கும் சீனியர் மேலாளர் ராஜேஷ் ராகவிடம் முகமலர்ந்து சிரித்து கை குலுக்கி வரவேற்றார்.. அப்போது “எஸ்… ப்ளீஸ்…” என்று சொல்லி சாவியைப் பெற்றுக் பெற்றுக்கொண்டான். “டேய் மச்சி…. சாவிய ஸ்டைலா வாங்கிட்டு நீ பாட்டுக்கு போகாதடா…. பசிக்குதுடா…. முதல்ல அதுக்கு வழி பண்ணு” – என்றான் கார்த்திக்.. “ஆங்.. ராஜேஷ்… எங்களுக்கு சாப்பிட… ” என்று ராகவ் கேட்க.. “உங்க ரூமுக்கு அனுப்பிடவா சார்…” – என்றார் ராஜேஷ் “இல்ல இல்ல… புஃப்பே (buffet) இன்னும் இருக்குல்ல?” “ஒஹ் எஸ் இருக்கு….” “அது போதும் நாங்க பார்த்துக்குறோம்….” அவ்வளவாக பசி ஏதும் இன்றி வெறுமென ஒரு ஜூஸ் குடித்துவிட்டு தன் அறைக்கு சென்றான் ராகவ்.. அப்போது அவன் முகத்தில் உள்ள விரக்தியையும் பசி இல்லாமல் ஏதோ அவன் மனதை வாட்டுவதையும் கவனிக்க தவறவில்லை சங்கீதா.. மற்றொரு புறம் கார்த்திக்கும் சஞ்சனாவும் சாப்பிட தயாரானார்கள்…. கார்த்திக் சிட்டி பையன் கிடையாது. அவனுக்கு இந்த மேல்தட்டு பழக்க வழக்கங்கள் பற்றிய அறிவு சற்று கம்மிதான் என்றாலும் புஃப்பே என்றால் தானாகவே தட்டில் எது வேண்டுமோ அதை எடுத்து வைத்து சாப்பிடவேண்டுமென்ற விஷயம் அவனுக்கு தெரியும். வெளி நாட்டு விருந்தாளிகளுக்கு அவர்களின் ருசிக்கு ஏற்ப இந்திய உணவு மற்றும் சைணிஸ் வகை உணவுகளும் அங்கே வைக்கப் பட்டிருந்தன. “சாப்பாட்டுக்கு ஒரு வழி பன்னுடானா என்னை இப்படி பல வகையான சாப்பாடுக்கு மத்தில நிக்க வெச்சிட்டு ஒரு வழி பண்ணிட்டு போய்டானே…. எனிமி..எனிமி….” என்று எண்ணி ராகவை ககடிந்து கொண்டான். அவன் அருகே சஞ்சனா நின்றிருந்தாள். கொஞ்ச நேரம் அவள் எந்த உணவெல்லாம் அவளது தட்டில் எடுத்து வைக்கிறாள் என்று பார்த்து அதை எல்லாம் தானும் அப்படியே எடுத்து வைக்கலாம் என்று எண்ணி அப்படியே அவள் பின்னால் நின்றான். ஆரம்பத்தில் அவள் ஒரு சிறிய கப்பில் லெமன் கோரியாண்டர் சூப் எடுத்தாள். அவனும் அதையே எடுத்தான். கொதிக்க கொதிக்க இருந்த அந்த சூப்பில் ஒரு ஸ்பூன் சிப் செய்து அவள் குடிப்பதை கவனித்தான். இருவரும் ஒரு சிறிய மேஜையில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் அமர்ந்தார்கள். உள்ளே இருந்த இன்டீரியர் டிசைன்கள் கண்களை கொள்ளை கொண்டது… மெதுவாக சத்தம் கேட்கும் பியானோ இசை காதுகளுக்கு இதமாக இசைத்துக் கொண்டிருந்தது. மேஜையில் அவனுக்கு எதிரில் சஞ்சனா வந்தமர்ந்தாள். இருவரின் தலைக்கும் மேலே ஒரு சிறிய மஞ்சள் நிற வெளிச்சம் தரும் விளக்கு எறிந்து கொண்டிருந்தது. டார்க் பிரவுன் நிற பளபளக்கும் மர மேஜையின் மீது சஞ்சனாவின் கைகள் மிக அழகாக தெரிந்தது. மெல்லிய சில்வர் காப்பு, சிறிதளவும் ரோமம் இல்லாத பளபளப்பான கைகள். காலையில் இருந்து மாலை ஸ்டேஷனில் இருந்து கிளம்பும்வரை அவளின் முகத்தை அவன் பெரியதாய் கவனிக்கவில்லை. சங்கீதா அளவுக்கு உயரமோ நிறமோ அவளிடம் கிடையாது. இருந்தாலும் அவளைப் பார்த்தால் “ஏ ப்ரிட்டி வுமன்” என்று யாருமே சொல்லக் கூடிய தோற்றம் அவளுடையது. அவளுக்கே தெரியாமல் அவளின் முகத்தை சற்று நேரம் அயர்ந்து பார்த்துக் கொண்டு கொதிக்கும் சூப்பை அப்படியே கவனிக்காமல் வாயில் ஒரு சிப் வைத்தான். “அய்யோ..” என்று ஒரு சிறிய சத்தம் குடுத்து ஸ்பூனை மேஜை மீது தொப்பென்று போட…. “ஹா ஹா…” என்று மெதுவாக சிரித்து அவனை பார்த்தாள் சஞ்சனா.. “இல்ல கொதிக்குறதை கவனிக்கல.. அதான்.. இல்லனா…” என்று இழுத்தவனை நோக்கி “கார்த்திக் நீ என்னை இன்னும் உன் ஃபிரெண்டா பார்க்கலைன்னு நினைக்குறேன்…” என்று சொல்ல “ச்ச…. ச்ச…. அப்படியெல்லாம் இல்ல.. ஏன் அப்படி கேக்குறீங்க…” “ஃபர்ஸ்ட்… இந்த நீங்க வாங்க போங்க வேணாம்…. ஓகே?….” என்று அளவை சிரித்து சொன்னாள் சஞ்சனா…. “ஹ்ம்ம் ஓகே..” – சந்தோஷமாய் ரிப்ளை குடுத்தான் கார்த்திக்.. “நீ இதுக்கு முன்னாடி புஃப்பே ல சாப்டதில்லையா?” – இஷ் என்று சூப்பை உறிந்து கொண்டே கேட்டாள் சஞ்சனா.. “……” சில நொடிகள் மெளனமாக இருந்தான்… இல்லை என்று சொன்னால் தனக்கு ஒன்றும் தெரியவில்லை என்று எண்ணி விடுவாளோ என்கிற யோசனை ஒருபுறமிருக்க…. ஹ்ம்ம் பரவயில்ல.. உண்மையா இதெல்லாம் தெரியாதுன்னு சொல்லிடலாமா…. என்று அமைதியாய் எண்ணிக் கொண்டிருக்க… “ஹலோ கார்த்திக்…. நான் உன் கிட்டதான் பேசுறேன்..” என்றாள் சஞ்சனா.

“ஆக்ச்சுவல்லி…அது வந்து… ” ஆரம்பத்தில் சற்று தயங்கி..”எனக்கு இது புதுசு.. இதுக்கு முன்னாடி இப்படி சாப்டதில்ல…” என்று கார்த்திக் மெதுவாய் உண்மையை சொல்ல…. சூப் ஸ்பூனை மேஜையின் ஓரத்தில் வைத்துவிட்டு கைகளை கட்டி கார்த்திக்கின் கண்களை சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள் சஞ்சனா… “சரி…. இன்னில இருந்து என்னையும் உன் நல்ல ஃபிரெண்டா ஏத்துக்கோ…. மனசுல எது பட்டாலும் ஓப்பனா பேசு… என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல? சரியா?….” என்று அவள் பேசுவதை கேட்கையில் ஒரு விதமான சந்தோஷத்தை உணர்ந்தான் கார்த்திக்…. அப்போது பதில் ஏதும் பேசாமல் அவளின் பார்வையைப் பார்த்தவன் அதில் அப்படியே பதில் ஏதும் சொல்ல முடியாமல் அமைதியாய் இருந்தான்… இதை கவனித்த சஞ்சனா மென்மையாக அவனைப் பார்த்து சிரித்து கைகளை அசைத்து மீண்டும் “ஹல்ல்லோ.. ஹால்லல்லோ” என்று தலை அசைத்து மென்மையாக சிரித்து புருவங்கள் உயர்த்தி பாட்டு பாடும் விதத்தில் சொல்ல “ஆங்… சொல்லுங்க.. சொல்லுங்க..” என்று எதுவும் பெரிதாய் கவனிக்காதவன் போல ஒரு சிறிய ஆக்ட் குடுத்தான் கார்த்திக்…. “ஹா ஹா… ஆளப்பாரு….” என்று சிரித்துக் கொண்டே “நான் உங்கிட்ட இன்னில இருந்து என்னையும் உன் நல்ல க்ளோஸ் ஃபிரெண்டா ஏத்துக்கோ…. என் கிட்ட உனக்கு எந்த தயக்கமும் தேவ இல்ல?.. அப்படின்னு சொன்னேன்.. சரியா?….” “ஹ்ம்ம்.. கண்டிப்பா…. நீங்க ரொம்பவே குடுத்து வெச்சவங்க….எங்கம்மா அடிக்கடி சொல்லும்… உன் கூட ஃபிரெண்டா இருக்குறவங்க உண்மையாவே குடுத்து வச்சவங்கடா…. உன்னை மாதிரி அவங்களுக்கு ஒரு ஆள் கிடைக்காதுன்னு….” “ஹா ஹா… ராகவ் லக்கிதான் அதான் அவனுக்காக எல்லா உதையையும் நீயே வாங்கிக்குறியே” என்று சஞ்சனா சிரிக்க கார்த்திக் பாவமாக அமைதியானான்.. “சரி என் கூட வா…. நான் ஸ்வாரஸ்யமான சிலதெல்லாம் உனக்கு சொல்லுறேன்…” உண்மையில் சஞ்சனாவின் கண்களில் ஒரு உற்சாகம் தெரிவதை கவனித்தான் கார்த்திக்.. அது அவனுக்குள் ஒரு உற்சாகத்தைக் குடுத்தது.. “எப்போவுமே புஃப்பேல முதல்ல சூப் வெச்சி இருந்தா அதை எடுத்துக்கணும்.. காரணம் எதுக்குன்னா முதல்ல ஆற அமர எல்லாரும் சூப்பை ஊதி குடிச்சி முடிச்ச பிறகு பசி நல்லா எடுக்கும்னு சொல்லித்தான் இந்த பழக்கம் இருக்கு..” “குடிக்கலைனா கூட எனக்கு நல்லாவே பசி எடுக்குமே….” என்று கார்த்திக் பதில் சொல்ல.. “சப்…. என்ன பேசி முடிக்க விடுடா வாத்து..” என்று மெதுவான கடுப்பில் ஒரு நிமிடம் லேசாக கடித்துக் கொள்ள… கார்த்திக் பாவமாக அவளைப் பார்த்து கொஞ்சம் உரிமையுடன் லேசாக முறைத்தான்.. “சரி சரி… ஐ அம் சாரி…. ஐ அம் சாரி… ஏதோ நினைப்புல சொல்லிட்டேன்… கோச்சிகாத சரியா…. ஹா ஹா… சோ ச்வீட்… இப்போ உன் மூஞ்சிய பார்க்க செம காமெடியா இருக்குடா….” “போதும் போதும் மேல சொல்லு…. சாப்புட வர்றதே பசி எடுக்குறதாலதான்…அங்க வேற வந்து சூப்பை குடிச்சி எக்ஸ்ட்ரா பசி வர வெச்சிப்பாங்கலாம்…. நல்ல கூத்து டா” என்று முணுமுணுத்தான் கார்த்திக்.. அவனிடம் புஃப்பே எதார்த்தங்களை எடுத்துக் கூறுவதை கூட ஒரு நிமிடம் மறந்து அவன் வெகுளியாக பேசும் விதத்தை அவளது ஆழ் மனதில் ரசித்தாள் சஞ்சனா… கடந்த சில ஆண்டுகளாக அவளிடம் போலியாக பேசியவர்கள் அதிகம்…. ஆனால் இப்படி யாரும் அவளிடம் மனம் விட்டு உண்மையாய் பேசியதில்லை…. அதை கார்த்திக்கிடம் உணர்ந்து ரசித்தாள் சஞ்சனா..“வித விதமா நிறைய சாப்பிடுற வரைடீஸ் வெச்சி இருப்பாங்க…. நமக்கு எது வேணுமோ அதை கொஞ்சகொஞ்சமா எடுத்து வெச்சி சாப்டுக்கலாம்…. இன்னொரு விஷயம் சொல்லவா?…. நல்லா கொட்டிகனும்னு வர்றவங்க ஒரு ஜாதி… அது கூட பரவாயில்ல.. என்ன சாப்பிடுரதுன்னே தெரியாம பேந்த பேந்த முழிச்சி கடைசியா ஏதாவது புடிச்ச்சதை சாப்டுட்டு மீதிய தட்டுல வெச்சிட்டு வேஸ்ட் பண்ணுறது இன்னொரு ஜாதி….” – இதை அவள் சொல்லும்போது கார்த்திக் ஒரு திருட்டு முழி முழித்தான்.. அதை கவனித்த சஞ்சனா.. “ஹா ஹா… ச்சீ லூசு நான் உன்னை சொல்லல…. அதான் நான் உங்கூட இருக்கேன்ல எது எது என்னன்னு உனக்கு நான் சொல்லாமலையா போய்டுவேன்….? முதல்ல நான் சொன்ன ரெண்டு தரப்பினர விடவும் எல்லாத்தையும் கொஞ்சகொஞ்சமா ஒரு ருசி பார்த்துட்டு எது ரொம்ப பிடிச்சி இருக்கோ அதை கடைசியா கொஞ்சம் தட்டுல அதிகம் வெச்சி திருப்தியா சாப்டுட்டு போறவங்களுக்குதான் இந்த புஃப்பே கரெக்ட்டா இருக்கும்….” என்றாள்…. “சரி உனக்கு எது பிடிச்சி இருக்குன்னு சொல்லு..” என்றாள் சஞ்சனா.. “ஹ்ம்ம்…. நமக்கெல்லாம் நாக்குல எது பட்டாலும் உடனே ஜிவ்வுன்னு காரமா இருக்கிறதுதான் வேணும்…. என்று கார்த்திக் சொல்ல “ஹா ஹா…. நீயும் என் ஜாதிதான்… வா..” என்று சொல்லி ஸ்பைசி சில்லி க்ரேவியும் மெத்தென்று இருக்கும் ருமாலி ரொட்டியையும் வைத்து லேசாக மூக்கிலும் கண்களிலும் தண்ணி வரும்விதம் சாப்பிடுவதைப் பார்த்து இருவரும் ஒருவருக்கொருவர் மெதுவாக சிரித்துக் கொண்டார்கள்…. சாப்பிடும்போது ஆரம்பத்தில் கார்த்திக் எப்படி சஞ்சனாவின் தோற்றத்தை ரகசியமாக ரசித்தானோ அதே போல இப்போது சாப்பாட்டில் ஆழ்திருக்கும் அவனை அவனுக்கே தெரியாமல் சஞ்சனா அவன் முகத்தில் தெரியும் ஒரு விதமான வெகுளித்தனத்தயும் வசீகரத்தையும் ரகசியமாக கவனித்து ரசித்தாள். நடுவில் அவனுக்கு சற்று பொரை ஏற…. உடனே அவளது இருக்கையில் இருந்து எழுந்து அவன் பக்கம் வந்து நின்று தலையில் தட்டும்போது அவனை நெருங்கி நின்றாள். அப்போது அவனது முகம் லேசாக அவளது இடுப்பில் உரசியது.. அந்த ஒரு நொடி ஏற்பட்டபட்ட உணர்வு என்ன உணர்வு என்று அவனாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை..ஆனால் அவளுடைய இந்த பரிவும், நட்பும், அரவணைப்பும் அவன் மனதில் ஒரு விதமான சந்தோஷத்தைக் குடுத்தது…. அவளின் கையை தன் தலை மீது பிடித்து “போதும்” என்று சொல்லவந்து அவளுடைய மென்மையான ஸ்பரிசத்தை தொட்டபோது சில நொடிகளில் பொறை தானாகவே நின்றது அவனுக்கு.. அவன் கைகள் தன் கை மீது பட்டபோது அவளும் செயலற்று நின்றாள். இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்றும் பேசாமல் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருக்க “ஹஹா.. ஆன்னு வாய திறந்துகிட்டு இருக்காத… ஈ போய்ட போது.. ஃபர்ஸ்ட் வாய க்ளோஸ் பண்ணு…” என்று லேசாக வெட்கத்தில் சிரித்து கண்களை நேராக அவனை பார்ப்பதை தவிர்த்து கீழே பார்த்து அவளது இருக்கைக்கு சென்று அமர்ந்தாள்..” அவளது சிரிப்பை சந்தோஷமாக வைத்த கண் வாங்காமல் பார்த்து வாயை மெதுவாக அசை போட்டுக்கொண்டு இருந்தான் கார்த்திக்…. சற்று நேரத்திருக்கு பின் “சரி வா டெஸர்ட்க்கு போலாம்..” என்று அவள் சொல்ல ஒன்றும் புரியாமல் முழித்தான்.. அதைப் பார்த்து “ஹா ஹா… டெஸர்ட்னா சாப்டு முடிச்ச பிறகு ஜூஸ் இல்லைனா ஐஸ்க்ரீம் போல எடுத்துக்குற வஸ்த்துங்க.. வேணாமா உனக்கு?” என்று சிரித்து கேட்க.. உடனே மடக் மடக் என்று தண்ணியை குடித்துவிட்டு “ஐ கம் யூ குய்க்லி” என்று ஏதோ இங்லீஷ்ல உளற “நீ என்ன சொல்ல வந்த….” என்று புரியாமல் சஞ்சனா கேட்க… “அய்யோ உடனே உன் கூட வரேன்னு சொன்னேன்…. கொஞ்சம் இங்லீஷ் பேசிடக்கூடாதே” என்று வாயில் துணியை வைத்துத் துடைத்துக் கொண்டே அவளுடன் ஐஸ்க்ரீம் பக்கம் சென்றான். வேண்டிய அளவுக்கு இருவரும் ஒன்றிரண்டு ஸ்கூப் வைத்துக் கொண்டு அதை ருசித்துக் கொண்டே அமரலாம் என்று மேஜைக்கு செல்லும்போது “கார்த்திக்… இங்கேயே வேணாம்.. வெளியே லான் நல்லா இருக்கும்.. அங்க போலாம் வா..” என்று சொல்லி ஒரு மிதமான வெளிச்சம் இருக்கும் இடத்தில் நல்ல ஜில்லென்ற காற்று அளவாக அடித்துக்கொண்டிருக்கும் இடத்தில் இருவரும் அருகருகே அமர்ந்தார்கள். “கார்த்திக்…. உனக்கு எப்படி ராகவ் க்ளோஸ் ஆனான்….” “அது பெரிய கதை….” “சும்மா சொல்லேன்..” அவன் பக்கம் தலை சாய்ந்து சிரித்து கேட்கையில் அவளுடைய சிரிப்பும் கண்களும் காதில் மின்னும் சிறிய அழகான கம்பல்களும் அவனை ஈர்த்தது…. “ஹலோ.. அப்போ அப்போ நீ திடீர்னு ஆஃப் ஆயிடுற.. நான் உன்னை ஆன் செஞ்சி பேச வேண்டியதா இருக்கு…போ….” – என்று சொல்லி செல்லமாய் அவனுடைய தோளில் உரிமையாய் குத்தினாள்…. அவள் நெருக்கத்தில் இருக்கும்போது அவள் மீதிருக்கும் ஒரு விதமான நறுமணம் கார்த்திக்கு பிடித்திருந்தது… “எனக்கு அவன் மணசு ரொம்ப பிடிக்கும்….” என்று சஞ்சனாவை ரகசியமாக ரசித்துக் கொண்டே பேச தொடங்கினான்…. “எதனால?…” மீண்டும் அதே அழகான சிரிப்புடன் கேட்டாள்… “எனக்கு ஒரு 7 வயசிருக்கும்…” என்று சொல்லும்போது கீழே ஒரு புல்லை எடுத்து வைத்து காற்றில் சுருள் சுருளாக சுத்தினான்.. “ஹா ஹா ஹா…. போதும் புல்லு தேஞ்சிட போது மேல சொல்லு…” என்று அவன் தோளில் தட்டினாள்… “நான் ரெண்டாங்கிளாஸ்ல இருந்தப்போ என் பெஞ்சுக்கு பின்னாடி பென்ச்சுல ராகவ் இருந்தான்… அன்னிக்கி நாங்க ரெண்டு பேரும் நல்லா ஒரு கட்டு கட்டிட்டு வந்து எங்க இடத்துல உட்கார்ந்தோம்…. எங்களுக்கு பிடிக்காத கணக்கு வாத்தியார் வந்தப்போ எனக்கு அவசரமா உச்சா வர மாதிரி இருந்துச்சி…. நானும் எழுந்து மரியாதையா “சார்.. நான் போயிட்டு வந்துடுறேன்னு சொன்னேன்..” அவரு “நான் உள்ள வந்துட்டா யாரும் வெளியே போகக் கூடாதுன்னு” சவுண்ட் உட்டாரூ…. நான் திரும்பி எழுந்து நின்னு “சார்… மோசமான நெலமைல இருக்கேன்னு சொன்னேன்… அதுக்கும் அந்த ஆளு ரொம்ப பிகூ பண்ணிகிட்டான் … அப்புறம் எண்ணத்த செய்ய ஆத்திரத்துல ஒரு மனுஷன் மிரட்ட ஆரம்பிச்சிடுவான்… அந்த மாதிரி கடைசியா நான் அவரை கூப்பிட்டு “சார் இதுக்கு மேல என்னால முடியாது…அப்புறம் இருக்குற இடம் நாறிட்டா என்ன எதுவும் சொல்லாதீங்கன்னு சொன்னேன்….. அதுக்கு என் கிட்ட வந்து ‘இன்னொரு தடவ தைரியம் இருந்த பர்மிஷன் கேளுன்னு சொன்னார்….’ இதுக்கு என்ன சார் தைரியம் வேணும்?…. வருது சார்… போயிட்டு வந்துடுறேன்னு பாவமா கெஞ்சி கேட்டேன். அதுக்கு அவர் பிரம்பை எடுத்து ஓங்கி அடிக்க வந்தாரு.. அப்போ என் ரெண்டு கண்ணையும் இறுக்கி மூடிட்டு நின்னேன்…. கொஞ்ச நேரம் எந்த சத்தத்தையும் காணும்.. அப்போ ஒரு கண்ணை மட்டும் மெதுவா திறந்து பார்த்தேன்… எல்லாரும் என்னை சுத்தி ஒரு அஞ்சு அடி டிஸ்டன்ஸ்ல நின்னாங்க…. கீழ என்னோட சொந்த அருவி ஓடிட்டு இருந்துச்சி….” என்று அவன் சொல்லி முடிக்க… “ஹா ஹாஹ் ஹா…. ச்சீ…. நாட்டி பாய்…..” என்று சில நொடிகள் சிரித்தாள் சஞ்சனா… அந்த சம்பவம் நடந்து முடிஞ்ச பிறகு என் கூட பையனுங்களும் சரி பொண்ணுங்களும் சரி ஒரு வாரத்துக்கு பேசவே இல்ல…. அப்போ ஒரு நாள் இந்த எனிமி என் கிட்ட வந்து “டேய் கார்த்தி…. எல்லாரும் சில விஷயங்கள சொல்லத்தான் டா செய்வாங்க.. ஆனா யாரும் செயல்ல காமிக்க மாட்டாங்க… ஆனா நீ அன்னிக்கி தைரியமா நம்ம வாத்தி கிட்ட சொன்னதை எல்லார் முன்னாடியும் செஞ்சி காமிச்ச வீரண்டானு சொல்லி என் மனசுல முதல் முதல்ல ஒரு உயரிய இடத்தை பிடிச்சான்…. அதுக்கப்புறம் எந்த ஒரு விஷயத்துலயும் நானும் அவனும் சேர்ந்துதான் இருப்போம்… அவனும் யார் யார் கூடவோ பழகி இருக்கான்.. ஆனால் யாருமே அவனை சரியா புரிஞ்சிக்காம விட்டுட்டு போய்டுவாங்க… நானும் பலரோட பழகி இருக்கேன்… ஆனா யாருமே என் ஆழ் மனசை ராகவ் அளவுக்கு புரிஞ்சி பழகினது இல்ல…. அதெல்லாம் விட அவன் காலேஜ் படிக்கும்போது அவனுக்கு வீட்டுல முதல் ரெண்டு வருஷம் ஃபீஸ் கூட குடுக்கல… அவனுக்கு பண கஷ்டம்னா என்னன்னு காமிக்க அவன் அப்பா அவனை முடிஞ்சா படிச்சி வெளியே வா அப்படின்னு சொல்லி சவால் விட்டாரு.. அப்போ ஹின்துஸ்த்தான் லீவர் நிறுவனத்துல ஒரு உறுப்பினரா சேர்ந்து அவங்களோட ப்ராடக்ட்ஸ் எல்லாத்தையும் ஜனங்க கிட்ட கொண்டு போய் பேசி பேசியே சூப்பரா மார்கெட்டிங் பண்ணுவான்… அதுக்கு நிறைய யுக்திகளை பயன்படுத்தினான்.. ஆன எப்படின்னு யார் கேட்டாலும் ரகசியம்னு சொல்லிட்டு கண் அடிச்சி சிரிச்சிட்டு போய்டுவான்.. “இவன் கிட்ட இருக்குற இந்த மார்கெட்டிங் திறமையை பார்த்துட்டுதான் கம்பனியில கூட இப்போ இவன் இருக்குற பதவிக்கு என்னதான் இவன் சின்ன வயசு பையன்னாலும் லாபம் கெட்டுடக் கூடாதேன்னு நினைச்சி இவனை யாரும் கேள்வி கேக்குறதில்ல.. இவனுக்கு ரெண்டு அண்ணனுங்களும் இருக்காங்க தெரியுமா?..” என்று கார்த்திக் கூலாக சொல்ல “என்ன சொல்லுற?…” என்றாள் சஞ்சனா.. ஹ்ம்ம்.. இருக்காங்க… ஆனா வெளி நாட்டுல படிக்குறாங்க.. நம்ம தலைவர் இங்க வேலை செஞ்சி செஞ்சி கம்பெனி லாபத்தை பெருக்குவாறு.. அவனுங்க படிப்பானுங்க… கூடவே செலவு செஞ்சி ஊரும் சுத்துவானுங்க.. அவங்களும் கம்பெனிக்கு போர்டு ஆஃப் மெம்பர்ஸ்.. சரி அதை விடுங்க.. நான் மேட்டருக்கு வரேன்.. ஒரு வருஷம் முழுக்க ரொம்ப திறமையா பல ஹின்துஸ்தான் லீவர் பொருள் எல்லாத்தையும் வித்து அதுல அவனுக்கு கிடைச்ச கமிஷன் வெச்சி அவன் படிப்புக்கு முதல் ரெண்டு வருஷம் அவனே செலவு செஞ்சிக்கிட்டான்.. அது போக மீதி அவன் கிட்ட ஒரு நாப்பதாயிரத்துக்கு பணம் இருந்துச்சி… அப்போ அதை வெச்சி ஒரு சூப்பரான பைக் வாங்கனும்னு ஆசை பட்டான்… அப்படி இருக்கும்போது எனக்கு வீட்டுல கொஞ்சம் பணம் தட்டுப் பாடு… காலேஜ் முடிக்குற நேரத்துல எனக்கு ஒரு செமெஸ்டர் பாக்கி இருந்துச்சி.. அதுக்கு ஃபீஸ் கட்ட பணம் இல்லாம தவிச்சப்போ தலைவர் வந்து பணத்தை நீட்டினார்… அதுலதான் இன்னிக்கி வரைக்கும் என் வாழ்க்கை சக்கரம் ஓடிட்டு இருக்கு. இல்லைனா அன்னிக்கே பஞ்சர் ஆகி இருக்கும்… சுருக்கமா சொல்லனும்னா எங்க நட்பு டயருக்கு ஏத்த வீலா அமைஞ்சி இருக்கு….” என்று படபடவென பேசி முடித்தான் “ஹா ஹா…. வாவ்…. உங்க நட்பை பார்க்கும்போது எனக்கே பொறாமையா இருக்கு…. எனக்கு அப்படி யாரும் இல்ல கார்த்திக்…” – என்று அவள் சொல்லும்போது அவளின் குரலில் ஒரு விரக்தி இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்…. “ஏன் என்ன ஆச்சு?” என்றான் பணிவாக… “அவளிடம் இருந்து ஒரு நீண்ட மௌனம்….” “சொல்ல விருப்பம் இல்லையா? இல்ல….” – என்று கார்த்திக் பேசும்போது சஞ்சனா பேச ஆரம்பித்தாள்…. “எல்லாத்தையும் சொல்லணும்னு விரும்புறேன்… என் மனசுல இருக்குற குப்பைகள கொட்டனும்னு நினைக்கிறேன்..” சொல்லும்போது அவள் கண்கள் ஒரு விதமான ஏக்கத்தில் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக். உரிமையாக அவளின் தோள்கள் மீது கை வைத்து அவளை நிமிர்த்தி உட்காரவைத்து “எல்லாத்தையும் கொட்டு… வாங்கிக்குறதுக்கு இந்த ஓனிக்ஸ் லாரி இப்போ ஓப்பனா இருக்கு… கம் ஆன்…. ஸ்டார்ட்” என்று அவன் சொல்ல.. “ஹா ஹா…” என்று கொஞ்சம் சோகம் கலந்த கண்களுடன் சிரித்தாள். பல நேரத்துல ஏன்தான் பொண்ணா பொறந்தேனொன்னு கஷ்டமா இருக்கும் கார்த்திக்…. அந்த அளவுக்கு நிறைய வலிகளை அனுபவிச்சி இருக்கேன்..சின்ன வயசுல இருந்தே எந்த காரியத்துலயும் நல்லா வெறியோட இறங்குவேன்.. எல்லாத்துலயும் ஜெயிப்பேன்… போக போக குடும்ப வறுமை, அப்புறம் எங்க மாமாதான் என்னை ஃபேஷன் டிசைனிங் படிக்க வெச்சி சம்பாதிக்குற அளவுக்கு கொண்டு வந்தாரு. அப்பாவோட நடத்தகெட்ட காரியங்களால எங்க அம்மாவுக்கு நெஞ்சழுத்தம் அதிகம் ஆச்சு… நான் ஸ்கூல் படிக்கும்போதே அந்த கஷ்டத்துல உடம்பு பாதிச்சி சரியான மருந்து மாத்திரை கூட இல்லாம கஷ்டப் பட்டாங்க… “ஹ்ம்ம்..” பேசும்போது திடீரென கொஞ்சம் அமைதியாகி கண்களில் லேசாக கண்ணீர் எட்டும்போது மீண்டும் பேசினாள்.. ஒரு நாள் காலைல நான் ஸ்கூலுக்கு கிளம்பிட்டு இருந்தேன்.. நான் அப்போ வயசுக்கு வந்து ஒரு வாரம் முடிஞ்சி இருந்துச்சி.. ஒரு ஒரு நாளும் காலைல என் அம்மா என் முகத்தைப் பார்த்து ‘இப்போதாண்டா உன்னை பெத்தெடுத்தா மாதிரி இருக்கு அதுக்குள்ள வளர்ந்துட்ட..’ அப்படின்னு சொல்லி சொல்லி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெப்பாங்க.. அப்போ எல்லாம் நேரம் ஆகுதும்மா நான் ஸ்கூலுக்கு போகனும்னு சொல்லி சலிச்சிகிட்டே அவங்க கையை ஓதரிட்டு ஓடிடுவேன்..” பேசும்போது கண்களில் வரும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியாமல் மெதுவாக அழுதாள்…. “இப்படி ஒரு நாள் காலைல நான் கிளம்பும்போது இதே மாதிரி முத்தம் குடுத்துட்டு அனுப்பி வெச்சாங்க…அப்புறம் சாயந்தரம் சாவகாசமா ரோட் சைட்ல விக்குற ஐஸ் எல்லாம் வாங்கி சாப்ட்டுட்டே எதுவும் புரியாம வீட்டுக்கு வந்துட்டே இருந்தேன்…. காலைல கிளம்புற அவசரத்துல என் அம்மாவோட முத்தத்துல கிடைக்குற அன்பை அனுபவிக்க நேரம் பார்ப்பேனே தவிர வீட்டுக்கு வந்துட்டா கிழவிங்க பேசுறா மாதிரி எல்லாத்த பத்தியும் பேசிகிட்டு அவங்க மடியிலதான் கிடப்பேன்.. அன்னிக்கி சாயந்தரம் வீட்டுக்கு வந்து பார்த்தா யாருமே இல்ல… பக்கத்துலயும் யாரும் இல்ல… கொஞ்ச நேரம் எல்லாரும் எங்கயோ வெளியே போய் இருக்காங்கன்னு நினைச்சி படுத்துட்டேன்.. அப்புறம்தான் வீட்டுக்கு எல்லாரும் கொஞ்சம் தொங்க போட்ட முகத்தோட வரும்போது ‘காலைல நெஞ்சு வலின்னு உங்கம்மா துடிச்சிதும்மா…. ஆஸ்பெத்ரிக்கு எடுத்துட்டு போனோம்… பாவிமவ இன்னும் கொஞ்ச காலம் இருக்குறதுக்கு கூட குடுத்து வெக்கல போய் சேர்ந்துட்டான்னு’ சொன்னாங்க..” சொல்லி முடித்த பிறகு ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தாள்.. அவளின் உதடுகள் விம்மியதை கவனித்தான் கார்த்திக்.. அவள் வாயில் இருந்து வார்த்தைகள் வர கஷ்டப்பட்டது. “ஏய்ய்.. சஞ்சனா.. ரிலாக்ஸ்… ப்ளீஸ் ரிலாக்ஸ்….” – என்று கார்த்திக் சொல்ல…. “சாரி டா… கொஞ்சம் எமோஷ்னல் ஆய்டேன்…” என்று தன் கர்சீஃப் வைத்து கண்களை துடைத்துகொண்டாள் உரிமையாய் மெதுவாக அவனிடம் நெருங்கி வந்து “இஃப் யூ டோன்ட் மைன்ட்” என்று சொல்லி அவனின் தோள்களில் சாய்ந்தாள் சஞ்சனா.. அவள் சாயும்போது ஒருவிதமான நெருக்கம் இவளுடன் உருவாவதை மனதுக்குள் ரகசியமாய் உணர்ந்தான் கார்த்திக். “அடுத்த நாள் காலைல எந்திரிச்சி ஸ்கூலுக்கு கிளம்பும்போது… இஸ்ஷ்” என்று மூக்கை உறிந்து கொண்டே பேசினாள்.. “கிளம்பும்போது அ.. அம்மா..உன் முத்தத்த குடுமா …. எனக்கு ஸ்கூலுக்கு எவ்வளோ லேட் ஆனாலும் பரவாலமானு சொல்லி சொல்லி தனியா உட்கார்ந்து அழுது தேம்பி புலம்பி இருக்கேன்…. அந்த இழப்பு என் உயிர்ல பாதி போனா மாதிரி இருந்துச்சி. அப்புறம் தான் என் வாழ்க்கைல ஒரு தருத்திரம் வந்துச்சி” என்று ஆரம்பித்து மித்துனை சந்தித்ததையும் அவனால் ஆரம்பத்தில் எப்படி அவள் தன் பெண்மையை இழந்தாள் என்பதையும், அதன் பிறகு எப்படி சங்கீதாவை தன் சொந்த அக்காவாக பார்த்தாள் என்பதையும், எப்படி ராகவ் அவளுக்கு வாழ்க்கையில் ஒரு ப்ரேக் குடுத்தான் என்பதையும் சொல்லி முடிக்கும்போது அவள் கண்களில் இருந்த கண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக காய ஆரம்பித்து மீண்டும் பழைய சஞ்சனாவாக சகஜ நிலைக்கு திரும்பினாள். “கார்த்திக்…” “ஹ்ம்ம்.. சொல்லு சஞ்சனா..” என்றான்… மிதுன் விஷயங்கள் அனைத்தையும் சொன்னதை எண்ணி மெதுவாக பேச ஆரம்பித்தாள் சஞ்சனா…. “ஒரு பொண்ணா நான் சில விஷயங்களை உன் கிட்ட இப்படி வெளிப்படையா வெட்கத்தை விட்டு சொல்லி இருக்க கூடாது… இருந்தாலும் உன் கிட்ட எனக்கு கிடைச்ச நட்புல எல்லாத்தையும் போட்டு உடைச்சிட்டேன்.. என் மனசுல நிஜமாவே கொஞ்சம் பாரம் இறக்கி வெச்ச உணர்வு இருக்குடா..” என்று சொல்லி அவன் கைகளை இன்னும் கொஞ்சம் இருக்கி பிடித்து அவன் தோள்களில் சாயும்போது “அந்த மிதுன் உன் கிட்ட நடந்த விதத்தை கேட்டப்போ அவன் மேல நிஜமாவே எனக்கு கொலவெறி வந்தது… ஆனா அதுக்கப்புறம் நீ அவனுக்கு திருப்பி குடுத்ததை கேட்டப்போ…” என்று கொஞ்சம் என்று நிறுத்தினான்.. “கேட்டப்போ?” என்று சொல்லி அவனை சஞ்சனா நிமிர்ந்து பார்த்தாள்.. “உன் மேல பயம் வந்தது…” என்று மெதுவாய் சொல்ல “ஹாஹ் ஹா….” என்று சிரித்து அவன் தோள்களில் குறும்பாய் குத்தினாள் சஞ்சனா. அவன் முகம் சட்டென்று ஏதோ எண்ணிக்கொண்டிருக்கிறது என்று சஞ்சனாவுக்கு தெரிந்தது… “சஞ்சனா..” “சொல்லுடா..” அவன் கொஞ்சம் சொல்ல தயங்கினான்…. அதை புரிந்துகொண்டு “ஹ்ம்ம் சொல்லு என்ன கேக்க வந்த..” ஒன்னும் இல்ல… ரெண்டு தடவ அந்த மிதுன் கூட உனக்கு ஏற்பட்ட சமபவத்தப்போ.. உ… உனக்கு.. கார்த்திக் கைகள் மீது இருக்கி பிடித்த தன் கைகளை தளர்த்திக் கொண்டாள்.. காரணம் இதற்கு முன் சஞ்சனா தன்னிடம் பழகும் உண்மையான ஓரிரு நண்பர்களிடம் இதை சொன்னபோது இவளின் ஆழ் மனதை புரிந்துகொள்ளாமல் மேலோட்டமாக கேட்டுவிட்டு இவளை எளிதில் சீஃப்பாக நினைத்து விடுவார்கள். அதே போல இவனும் ஏதாவது சொல்ல வருகிறானோ என்று எண்ணி மனதை கல்லாக்கிக் கொண்டு பேசினாள்.. “பரவயில்ல கார்த்திக் சொல்லு….” உன் ஒடம்பு அப்போ ரொம்ப வலிச்சிதா? ஏதாவது ரொம்ப ஓவரா பிஹேவ் பண்ணி உனக்கு காயம் உண்டு பன்னானா? நான் இப்படி கேக்குறது தப்பா சரியான்னு தெரியாது…. தோணுச்சி அதான் கேட்டேன்…. தப்புன்னா மன்னிச்சிடு…. இதற்கு முன்பு எந்த ஒரு ஃபிரன்டும்…. அதிலும் குறிப்பாக ஒரு ஆண், மிதுன் சம்பவத்தை கேட்ட பிறகு இப்படி ஒரு கேள்வியை சஞ்சனாவிடம் கேட்டதில்லை. பொதுவாக “மொத்தமா முடிஞ்சிடுச்சா?…. அபார்ஷன் பணிட்டியா?…. அல்லது சோ சாட்.. காட் ப்ளஸ் யூ…. என்று கொஞ்சம் நாகரீகமாக சொல்லிவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடன் பேசுவதை குறைத்து ஒரு கட்டத்தில் காணாமல் போய் விடுவார்கள். ஆனால் கார்த்திக்கின் இந்த கேள்வியில் அவளால் உணர முடிந்ததெல்லாம் அவனுடைய உண்மையான அக்கறையான உணர்வைத்தான்.

“கார்த்திக்.. ” “ஹ்ம்ம்.. சொல்லு…” “மீதுன் பத்தி நான் சொன்னப்போ நீ என்னை கொஞ்சம் கூட தப்பா நினைக்கல?” “வெகுளியா எல்லா பசங்களையும் நம்புற புள்ளையா இருக்காளேன்னு பாவப்பட்டேன்..” என்றான்…. “கோவம் வரல?…. எப்படி இவ்வளோ அஜாக்ரதயா ஒரு பையனோட போய் டிஸ்கோ ஆடினா அப்படின்னு தோணல?” ஆச்சர்யம் குறையாமல் கேட்டாள் சஞ்சனா.. “வெறும் டிஸ்கோவுக்கு போய் ஒரு பையன் கூட அந்த சுகத்தை மட்டும் அனுபவிக்குற பொண்ணுங்க இருக்காங்க…. ஆனா உன் கிட்ட அந்த குணாதிசயத்த பார்க்க முடியல.. எப்படி சொல்லுற? காலைல எக்ஸிபிஷன்ல நீ என் கூட பேசின விதம், அப்புறம் புஃப்பேல நான் சாப்பிடும்போது கஷ்ட்டப் பட்டப்போ எனக்கு உதவின விதம், உன் இயல்பான பேச்சு, அப்புறம் எனக்கு பொறை ஏரினப்போ அக்கறையா தலையில தடவினது, அதெல்லாத்தையும் விட உன் மனசுல இருக்குற எல்லாத்தையும் ஒளிவுமறைவில்லாம உண்மையா ஷேர் பண்ண விதம்…. அதுலயும் ரொம்ப முக்கியமா உன் தன்மானம் சம்மந்த பட்ட விஷயத்தையும் கூட ரொம்ப உண்மையா என் கிட்ட பகிர்ந்தப்போ என் கிட்ட இப்படி உண்மையா பழகுறதுக்கு ஒருத்தி கிடைச்சிருக்காளேன்னு எனக்குள்ள நினைச்சேனே தவிர உன் மேல கோவம் வரல…. என்று கார்த்திக் பேசும்போது அவன் பேச்சில் உள்ள உண்மையை அவன் கண்களில் பார்த்து தெரிந்து கொண்டாள் சஞ்சனா.. இப்போது கார்த்திக்கின் கைகளில் இருந்து தளர்த்தி வைத்திருந்த தன் கைகளை மீண்டும் இருக்கி அணைத்துக் கொண்டு “கார்த்திக்…” என்று அவன் தோள்களில் சாய்ந்து மெதுவாக சொல்ல.. சொல்லு சஞ்சனா.. என்றான்.. ரொம்ப நாளுக்கு பிறகு.. இன்னைக்கிதான் என் வாழ்க்கைல பெஸ்ட் டே னு சொல்ல தோணுது.. ஒஹ்… ஏன்னு கேக்க மாட்டியா? ஏன்? உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பண்ணதில்லடா… ஐ அம் சோ ஹாப்பி…. என்று சொல்லிவிட்டு அவன் முகத்தைப் பார்த்தப்போது அவனின் கண்கள் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தது… எண்ணத்த அப்படி பார்க்குரான்னு சஞ்சனா திரும்பி பார்க்கையில அங்கே ஒரு வெளிநாட்டு பெண் நீச்சல் உடையில் நீந்துவதற்கு தாயார் நிலையில் இருந்தாள்.. நம் தலைவர் வாத்தின் காதுகள் சஞ்சனா பேசுவதைக் கேக்கையில் கண்கள் அந்த பெண்ணின் மீது ஓட்டி இருந்திருக்கிறது.. அதைப் பார்த்த சஞ்சனா.. வெடுக்கென உரிமையில் கோவித்துக் கொண்டு அவன் தலையில் செல்லமாக தட்டிவிட்டு அங்கிருந்து விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். அப்போது கார்த்திக் சற்று முன் சஞ்சனா சொன்ன வார்த்தைகளை சொன்னான்.. உன்ன பார்த்ததுல ரொம்ப சந்தோஷப் படுறேன்.. அதே வேகத்துடன்..நடந்தாள் இன்னைக்கி வரைக்கும் இவ்வளோ வித்யாசமா நான் ஃபீல் பன்னதில்ல…. கொஞ்சம் வேகம் குறைவாக நடந்தாள்…. ஐ அம் சோ ஹாப்பி…. – என்று கத்தினான்…. இப்போது சாதாரணமாக நடக்க ஆரம்பித்தாள்… “ஏய்ய் சஞ்சு….” என்று கடைசியாய் அவன் கத்திய குரலைக் கேட்டு சடன் ப்ரேக் போட்டு நின்றாள். அவள் பெயரை சுருக்கி செல்லமாக சஞ்சு என்று கார்த்திக் அழைத்தது அவள் மனதில் ஒரு விதமான கிச்சி கிச்சு கலந்த சந்தோஷத்தை குடுத்தது… அவனை திரும்பி பார்த்து நின்றாள்… “நமக்கு கூட வெட்கம் வருதே…..”ன்னு மனதில் ரகசியமாக எண்ணி அதை முடிந்த வறை காட்டிக் கொள்ளாமல் வேகமாக அவனை நோக்கி நடந்து வந்தாள்…. அவள் வேகத்துக்கு ஏற்ப அவன் பின்னாடி நகர்ந்து சென்றான்… ஒரு கட்டத்தில் நின்றான் கார்த்திக்… “கோவமா?.. ” என்று அவன் கேட்க… “இல்ல…” என்று சிரித்து சொல்லி அவனை அப்படியே பின்னாடி இருக்கும் நீச்சல் குளத்தில் தள்ளிவிட்டு “அவ கிட்ட உட்கார்ந்து பேசு…” என்று சொல்லி மெதுவாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து வேகமாக நடந்து தன் அறைக்கு சென்றாள்…. இப்போது ரகாவின் அறையில்…. தனியாக தனது அறையில் மேஜையின் முன் அமர்ந்து ஒரு காயின் வைத்து டாஸ் போட்டு போட்டு காற்றில் சுழலவிட்டு கையில் பிடித்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கி இருந்தான் ராகவ்.. மீண்டும் காய்ன் காற்றில் மேலே சுழன்றது…. திடீரென ஏதோ ஒரு சிந்தனை அவனைப் பிடித்து அப்படியே நிறுத்தியது… உடனே தனது செல்ஃபோன் எடுத்தான். அதில் ராஜேந்திரனுக்கு ஃபோன் போட்டான்.. ஹலோ சார்.. சொல்லுங்க என்ன இந்த நேரத்துக்கு.. உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்.. சொல்லுங்க ராகவ்…. அமைதியாய் இருந்தான் ராகவ்…. என்ன கேக்க போறீங்க? – கொஞ்சம் பதட்டத்துடன் கேட்டார் இன்ஸ்பெக்டர்.. மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ்.. அதான் அவனை எப்படியும் பிடிச்சிடலாம்னு சொன்னேனே சார்.. நீங்க கவலைய விடுங்க.. – என்று நம்பிக்கை தரும்விதம் பேச முயற்சித்தார் இன்ஸ்பெக்டர்… இப்போதும் அமைதியாய் இருந்தான் ராகவ்…. சார்…. இருக்கீங்களா?… யார் கிட்ட எவ்வளோ காசு வாங்கின?…. – சற்று மெதுவான குரலில் கையில் இருக்கும் காய்னை மீண்டும் காற்றில் டாஸ் போட்டுக் கொண்டே பேசினான்.. என்ன காசு…. என்ன பேசுறீங்க?…. சப்…. ஒழுங்க உண்மைய சொல்லு…. யார் கிட்ட எவ்வளோ காசு வாங்குன? என்ன நீ வா போ னு மரியாதை தேயுது… கோவத்தில் மீண்டும் அமைதியாய் இருந்தான் ராகவ் ஹலோ…. வாட் இஸ் யுவர் இன்டென்ஷன் ராகவ்?…. மரியாதையா யார் கிட்ட எவ்வளோ வாங்குனன்னு சொல்லுடா…. ஹலோ.. என்ன டா போட்டு பேசுற?… ராகவ் ஒன்றும் பேசவில்லை இன்ஸ்பெக்டர் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு “சரி.. எதுக்கு இப்போ மரியாத குறைவா பேசுறீங்க?” என்று அவர் கொஞ்சம் மரியாதையாக(பயத்தில்) பேசினார்…. என்னை கடுப்பேத்தி பாக்காத… ஒழுங்கா உண்மைய சொல்லு… என்னை யாரும் முதுகுல குத்தினா பிடிக்காது. இன்ஸ்பெக்டர் அமைதியா இருந்தார்… நீ ஒன்னும் பேசாம இருக்குறதுலையே தெரியுது நீ தப்பு பண்ணி இருக்கேன்னு… ஒழுங்கா உண்மைய சொல்லு… எதை வெச்சி நாங்க என்னமோ வேணும்னே அவனை தப்பிக்க விட்ட மாதிரி பேசுறீங்க? என்ட்ரன்ஸ்ல உன்னோட ஆளுங்க மஃப்டியில ரெண்டு பெர் அவனை பிடிக்க முயற்சி செஞ்சப்போ ஒருத்தன் பிடிக்கிறா மாதிரி பிடிச்சி தப்பிகிறவன் கையால அடி வாங்குற மாதிரி வாங்கி ரொம்ப எதார்த்தமா வலிக்கிற மாதிரி நடிச்சி அவனை ஓட விட்டத நான் கவனிச்சேன்… இன்ஸ்பெக்டர் அமைதியாய் இருந்தார்… சார்… வ.. வந்து…. நான் உனக்கு ஒன்னும் ஆகாம பார்த்துப்பேன்… என் மேல நம்பிக்க வெச்சி உண்மைய சொல்லு.. காசு வாங்கல சார்…. ஆனா ரயில்வே டேஷனுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு கடுதாசி வந்துச்சி… அதுல ராகவ் இழுக்குற இழுப்புக்கெல்லாம் நீ ஆட்டம் போட்டா காலேஜ்ல படிக்குற உன் பொண்ணயும் ஸ்கூல் போற உன் பையனையும், அம்மா வீட்டுல தங்கி இருக்குற உன் பொஞ்சாதியையும் ஒரே நேரத்துல பொணமா பார்ப்ப… எப்படின்னு கேக்காத எனக்கு ஆளுங்க இருக்காங்க.. தைரியம் இருந்தா சோதிச்சி பாருன்னு போட்டிருந்துச்சி சார்.. அப்படியே கீழ துரை கையெழுத்து போட்டிருந்துச்சி… உண்மைய ஒத்துக்குறேன் அந்த கடுதாசிய மீறி உங்களுக்கு உதவி செய்ய எனக்கு தைரியம் வரல சார்.. என்னை விட்டுடுங்க சார்.. உங்களுக்கு இல்லாத ஆளுங்க இல்ல வேற யாரையாவது வெச்சி பார்த்துக்கோங்க… என்னை விட்டுடுங்க என்று சொல்லிவிட்டு ராகவின் பதில் என்னவென்று கூட கேட்காமல் உடனே லைன் கட் செய்தார் ராஜேந்திரன்…. தன்னை சுற்றி நடப்பதெல்லாம் ஏமாற்று வேலையாகவே இருக்கிறதென்று எண்ணி கோவத்தில் கையில் இருந்த செல்ஃபோனை அருகே இருந்த குப்பை தொட்டியில் விசிறி அடித்தான்…. கண்ணாடியின் முன்பு தனது வெள்ளை நிற ஷர்டை அவிழ்த்து பக்கத்தில் உள்ள ஸ்டாண்டில் தூக்கி எரிய அதுவும் பவ்யமாக தொங்கியது. மனதில் உள்ள கோவமும் வெறியும் கண்ணாடியில் தெரியும் அவனது தோள்கள் மற்றும் நெஞ்சில் உள்ள தசை முறுக்குகளில் தெரிந்தது.. கண்களை மூடி நன்றாக மூச்சு வாங்கி தரையில் முப்பது நாற்பது வரை தொடர்ந்து தண்டால் எடுத்தான். உடல் சற்று குளிரான அறையிலும் நன்றாக வியர்த்திருந்தது…. நிமிர்ந்து நின்று மீண்டும் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருக்கும்போது அனைத்தையும் மறந்து “நானே எல்லாத்தையும் பார்த்துக்குறேன்” என்று மனதில் எண்ணிக்கொண்டு அருகே உள்ள இருக்கையில் அமர்ந்தான்.. கண்களை மூடியவுடன் அவன் நினைவுக்கு வந்தது அவன் சரா தான்… அன்று காலை அவள் ஒயிட் டாப்ஸ் மற்றும் பிறவுன் நிற மிடியில் இருந்தது நியாபகம் வந்தது… போன் எடுத்து அவளுடன் பேசலாம் என்று செல்ஃபோன் தேடினான்… குப்பை தொட்டியில் விசிறி அடித்தது அவன் நினைவுக்கு வரவில்லை… தேடிக் கொண்டிருக்கும்போது “டிங்.. டிங்..” என்று பெல் சத்தம் கேட்டு ஏதோ அவசரத்தில் கதவை திறந்தவனுக்கு ஆச்சர்யம்.. அவன் கண்கள் முன்னே சற்று முன் அவன் கணவு கண்ட சரா அவன் முன் நின்றாள். சங்கீதாவுக்கு ராகவை சட்டை இல்லாமல் பார்த்தது கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது.. இருப்பினும் அவனுடைய வலிமையான அந்த உடல்வாகு சங்கீதாவை ரொம்பவே ஈர்த்தது.. அவளும் பெண்தானே!!… சங்கீதா சங்கோஜப்டுவதை உணர்ந்து உடனே அருகில் உள்ள ஒரு டவல் ஒன்றை எடுத்து மேல போட்டுக் கொண்டான்.. “வா….வா உள்ள வா சரா..” என்று மென்மையாக சிரித்து அழைக்க.. அவன் முகத்தில் அவளைப் பார்த்ததும் எழுந்த மகிழ்ச்சியை பார்த்து அவளும் சற்று வெட்கத்தில் நாணி குனிந்து உள்ளே வந்தாள். கதவு ஆட்டோமடிக் டோர் என்பதால் தானாகவே மெதுவாக ‘டக்’ என்று கதவின் மேற்புறத்தில் மேக்னட் ஓட்டும் சத்தம் கேட்டு சாத்திக் கொண்டது.. ராகவ் அந்த அறையில் உள்ள மேஜையின் முன் இருக்கும் இருக்கையில் அமர, சரா அவள் வசதிக்கு ஏற்ப அந்த மேஜையின் மீது அமர்ந்தபோது அவளுடைய இரு கால் முட்டிகள் தொடங்கி முழங்கால் நன்றாக அந்த அறையை நிரம்பி இருந்த மிதமான மஞ்சள் வெளிச்சத்தில் மிகவும் அழகாக தெரிந்தது. அவளது நீளமான மிடியில் முட்டிக்கு அருகே இருக்கும் எக்ஸ்டிரா ஃபிட்டிங்குடன் பாதம் வரை இருந்த பகுதியை அங்கிருக்கும் பட்டன்களை நீக்கி எடுத்துவிட்டாள். இடுப்பிலிருந்து முட்டி வரை வரும் ஸ்கர்டாக அது மாறி இருந்தது. அவளது கால் விரல் நகங்களில் டார்க் மரூன் நிற நைல் பாலிஷ் மின்னியது, மற்றும் சத்தம் அதிகம் குடுக்காத நூல் போன்ற கொலுசும் அதில் ஒவ்வொரு சீரான இடைவெளிகளுக்கும் இடையே தொங்கி அழகாய் ஆடும் வெள்ளி குண்டுகளும் அவன் கண்ணைப் பறித்தன. பாதங்கள் இரண்டையும் சேர்த்தவாறு கால்களை வைத்திருந்தாள். அப்போது மெதுவாக முன்னும் பின்னும் பாதங்களை ஆட்டும்போது அவள் கொலுசு தரும் மிதமான சத்தம் ராகவ்கு அவன் மனதில் உணர்ச்சிகளை சற்று லேசாக தூண்டியது. அதை கவனிக்க தவறவில்லை அவனுடைய சரா.. ஏதேனும் பேச்சை ஆரம்பிக்க “என்ன ஆச்சு? உன்னோட மிடி முட்டி வரைக்கும் தான் இருக்கு.. காலைல ஃபுல் லென்த்துக்கு இருந்துச்சே?….” என்று கேட்டுவிட்டு மெதுவாக அவள் முகம் பார்த்து சிரித்தான்.. க்ஹ்ம்ம் (மெதுவாக சிரித்து தன் கால்களை பார்த்து பேச ஆரம்பித்தாள்) கம்ஃபர்டபிலா இல்லடா…. நடக்கும்போது பாதத்துல தடுக்கிட்டே இருந்துச்சி… அதான் எடுத்துட்டேன்… ஏன் கேக்குற?…. நல்லா இல்லையா? ராகவின் பார்வை அவளது வழு வழுப்பான முழங்காலை ஓட்டி வைத்து பார்ப்பதை அவள் கவனிக்க தவறவில்லை. அப்போது அதே கால்களை கொஞ்சம் வேகமாக ஆட்டி மேஜையில் டக் டக் என்று சத்தம் குடுத்து அவன் பார்வையை தன் கண்களுக்கு திருப்பினாள்… “ஹலோ மிஸ்டர் CEO.. என் முகம் மேல இருக்கு கீழ இல்ல… என்னைப் பார்த்து பதில் சொல்லு” என்று அவள் சொல்ல…. “என் சாராவுக்கு எதுதான் நல்லா இல்ல?…. யூ லுக் வெரி செக்ஸி..” என்று சொல்லிவிட்டு அவளைப் பார்த்து அவனுக்கே உரிய வசீகர சிரிப்புடன் மென்மையாக கண் அடித்தான். ஓரளவுக்கு குனிந்த தலையுடன் மெதுவாக நிமிர்ந்தவாறு அவளின் கண்கள் காதல் கலந்த சிரிப்புடன் அவனைப் பார்த்தது. ஏய்.. – என்று ராகவை அழைக்க.. அவளைப் பார்த்து புருவங்களை உயர்த்தி “என்ன?” என்று வாயால் கேட்காமல் பார்வையால் கேட்டான்.. அதற்கு அவளும் தன் பதிலை “ஆள் காட்டி” விரலால் “என் கிட்ட வா” என்று மெதுவாக சிரித்து அழைக்க.. தலையில் வியர்வை கலந்த தலைமுடியுடன் நெத்தியில் இரண்டு முடிகள் ஃப்ரீயாக தொங்கி அங்கும் இங்கும் மெதுவாக ஆட அவனது கூர்மையான விழிகளுக்கு அவைகள் இன்னும் அவனுடைய முகத்தில் அழகு சேர்த்தது சராவின் பார்வைக்கு. அருகே வந்தான் ராகவ்… சரா அவளுக்கு முன் இருக்கும் இருக்கையில் அவன் தோள்களில் இருக்கும் டவல் மீது கை வைத்து அமரவைத்து அவன் தலை முடிகளை தன் கை விரல்களால் அதிகமான காதலுடன் கோதி விட்டாள். அவள் கண்கள் ராகவின் பார்வையை தவறவில்லை, ராகவின் பார்வை எங்கிருக்கும் என்று சொல்ல தேவை இல்லை.. இருவரும் ஒருவருக்கொருவர் ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது மெதுவாக அவன் தலையை பிடித்து தன் மடியில் சாய வைத்தாள் அவன் சரா.. முதன் முதலில் தன் காதலியின் மடியில் சாயும்போது அவள் காட்டும் அன்பையும் காதலையும் சந்தோஷமாய் அனுபவித்தான் ராகவ்.. மடியில் சாய்ந்த போது வசதியாய் இருக்க அவளுடைய இடுப்பை தன் கைகளால் சுத்தி அனைத்துக் கொண்டான். ஏண்டா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி இருந்த? கீழ நீ சரியா சாப்ட கூட இல்ல…. வெறும் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு மேல வந்துட்ட… ஆனா இப்போ இந்த முகத்துல ஒரு சின்ன ரிலாக்சேஷன் தெரியுது… கொஞ்சம் சிரிப்பும் கூட தெரியுது…” சொல்லும்போது அவன் கன்னத்தில் தன் உள்ளங்கையை வைத்து பேசினாள்.. உன்ன பார்துட்டேன்ல அதான் எந்த வலியும் நியாபகம் வர மாட்டேங்குது” என்று சொல்லி மடியில் படுத்தவாறே அவளைப் பார்த்து மீண்டும் கண் அடித்து சிரித்தான்.. “இந்த மூஞ்சியதாண்டா நான் பார்க்க ஆசை படுறேன்.. எந்த ஒரு விஷயத்துக்கும் கஷ்ட படாதடா… நான் இனி என்னிக்கும் உன் கூடதான்டா இருக்க போறேன்…. மொத்தமா நான் உனக்கு மட்டும்தாண்டா” என்று அவள் சொல்லி முடிக்கும்போது அவள் கண்கள் லேசாக பணித்தன.. அப்போது அவளுடைய ஒரு சொட்டு கண்ணீர் அவன் கன்னத்தில் விழ அதை தொட்டு பார்த்துவிட்டு அவள் மடியில் இருந்து எழுந்து நிமிர்ந்து நின்று அவள் கண்களைப் பார்த்தான்.. “எனக்கு இனி எல்லாமே நீதான்” அப்படின்னு வார்த்தையால சொல்லாம அந்த பார்வையில் தெரியும் ஏக்கத்தில் அவளின் உணர்வை புரிந்துகொண்டு அவள் முகத்தை பிடித்து தன் பக்கம் மெதுவாக இழுத்தான்…. எப்பொழுதுமே ஒரு போதை போல் சுண்டி இழுக்கும் அவளின் உதடுகளை உரிமையுடன் மீண்டும் தன் இதழ்களால் மென்மையாக சப்பி சுவைத்து இழுத்து மெதுவாக கடித்து “உம்ம்..” என்று கடிக்கையில் அவள் மெதுவாக சத்தம் குடுக்க அவள் தலையில் இருந்து தன் கைகளை எடுத்து அவளின் இடுப்பை சுத்தி இறுக்கி கட்டி அணைத்து தன் உடலுடன் இறுக்கி அழுத்திக்கொண்டான். சரா தன் இரு கைகளால் ராகவின் முதுகுப்பகுதியில் இருந்து அவன் தோள்களைப் பற்ற…. ராகவின் தோள் மீது போர்த்தி இருந்த டவல் தானாக கீழே விழுந்தது…. அவனுடைய உருண்டு திரண்ட தோள்களையும் வியர்வை படிந்த தேகத்தையும் தன் மென்மையான விரல்களால் தடவிக்கொண்டே அவனுடைய காதலும் அதே சமயம் மிருதுவான முரட்டுத்தனம் கலந்த இதழ் முத்தத்தையும் சேர்த்து அனுபவிக்கும்போது தன் முழு வாழ்வில் உண்மையாக இப்படி ஒரு ஆண்மையை அவள் ரசித்து அனுபவித்ததில்லை என்பதை தன் ஆழ் மனதில் உணர்ந்தாள்.. ராகவின் இறுக்கமான அணைப்பில் அவளுடைய மார்பகங்கள் அவனுடைய நெஞ்சில் அழுந்துவதையும் அவன் உடல் முழுதும் அவளுடைய உடலில் உரசுவதையும் அவனுடைய தேகத்தின் வாசமும் அவளை அளவுக்கு அதிகமாகவே சுண்டி இழுத்தது.. லேசாக ராகவை கொஞ்சம் பின்னுக்கு தள்ளி தானும் மேஜையில் இருந்து இறங்கி அவனுடன் சேர்ந்து ஓட்டி நின்று “இச்….இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ டா மை பொருக்கி புருஷா…. இச்….இச்.. இச்.. ஐ லவ் யூ…. இச் இச் இச்…. ஐ நீட் யூ வெரி மச் டா…. இச் இச் ஐ லவ் யூ சோ சோ மச்…. ஐ கான்ட் லீவ் ஈவன் எ செகண்ட் வித் அவுட் யூ டா… இச் இச் இச்….” என்று அவன் கன்னங்களிலும் உதடுகளிலும் கழுத்திலும் மாறி மாறி மூச்சு வாங்க முத்தம் குடுத்துக் கொண்டிருக்க சற்று முன் அவள் இதழில் ஓரளவுக்கு தெரிந்த மரூன் லிப்ஸ்டிக் இப்போது கொஞ்சமும் தெரியவில்லை… லேசாக கண்ணாடியை எட்டிப் பார்த்தான் ராகவ்.. அவன் முகத்தில் அந்த லிப்ஸ்டிக் சாயத்தை மொத்தமாக தாரை வார்த்து குடுத்துவிட்டாள் அவன் சரா.. அதைப் பார்த்து மெதுவாக சிரித்துக் கொண்டே மேஜையின் அருகே சென்றான் ராகவ்.. அவனுக்கு சற்று தாகமாக இருக்க அங்கே இருந்த ஒரு லெமனேட் எடுத்து ஒரு தம்ளரில் ஊத்தி குடிக்கலாம் என்று எண்ணி வாய் அருகே எடுத்து செல்லும்போது “இப்போ என்ன குடிக்குற?” என்று கேட்டுக்கொண்டே தன் தலையை நிமிர்தியபோது அவள் தலை பட்டு ஜில்லென்ற அந்த லெமனேட் அவள் நெஞ்சுக்கு நடுவில் உள்ள மென்மையான மெத்தை போல் இருக்கும் அவளது முலைப்பிளவின் மீது கொட்டியது…. கொட்டியவுடன் முதலில் ஒரு சின்ன குளமாக இருந்த அந்த லெமனேட் மெது மெதுவாக அவளுடைய முலைப்பிளவின் இடுக்கில் மெல்ல மெல்ல இறங்கி கடைசியாக மொத்தமும் இறங்கியபோது இரண்டு சிறிய முட்டைகள் பட் பட் என்று நிசப்தமான அந்த அறையில் சின்னதாக சத்தம் குடுத்தது…. கிட்டத்தட்ட மண்ணில் தண்ணீர் கொட்டினால் எப்படி உள்ளே உரிந்துகொள்ளுமோ அதுபோல்..!! ராகவ் அதைப் பார்த்து மெதுவாக சிரிக்க அவன் சாராவுக்கு வெட்கம் அதிகமானது.. “ச்சீசீ…. சிரிக்கிறத பாரு…. போ நான் போய் கொஞ்சம் டிரஸ் சரி பண்ணிட்டு வரேன்….தள்ளு…” என்று ராகவின் பிடியில் இருந்து கஷ்டப்பட்டு வெளியே வர முயற்சித்தாள்… முடியவில்லை…”கொஞ்சம் விடுடா கசகசன்னு இருக்கு… கொஞ்சம் சரி பண்ணிட்டு வந்துடுறேன்….” என்று சொல்ல ஒரு மென்மையான சிரிப்பை மட்டும் பதிலாய் குடுத்தான் ராகவ்.. அப்போது அவன் வாயில் செல்லமாக குத்தி “..உக்கும்…இந்த சிரிப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல” என்று சொல்லிவிட்டு அவன் கைகளை சற்று தளர்த்திவிட்டு வாஷ்ரூம் சென்றாள்… ராகவ் கட்டிலில் அமர்ந்து இருக்கும் இடத்தில் இருந்து வாஷ்ரூம் நுழைவாயில் நன்றாக தெரிந்தது…. அதை அவன் சரா கவனிக்கவில்லை… மேலே போட்டிருந்த ஒயிட் டாப்சை இடுப்பில் இருந்து மேல் நோக்கி இழுத்து தலை வழியாக எடுத்து கழட்டி அருகே உள்ள ஸ்டான்டில் போட்டாள். அவள் உள்ளே ஒரு ஷிம்மி அணிந்திருப்பது தெரிந்தது… அவளின் வெண்மையான தோள்கள் வாஷ்ரூம் உள்ளே எரியும் விளக்கில் மின்னியது. சுருள் சுருளாக இருந்த கர்லி ஹேர் ஸ்டைலில்…. அகண்ட புருவம், மை வைத்த கண்கள்…. அவனிடம் முத்தம் என்கிற பெயரில் லேசாக கடி வாங்கி அவனது எச்சிலின் ஈரம் படர்ந்த உதடுகள்….. ஷிம்மியின் டீப் யூ கட் இடத்தில் திமிறிக்கொண்டு அமுங்கி இருக்கும் இரு முலைகளுக்கும், அப்பட்டமாக தெரியும் அதன் வளைவு நெளிவுகளும், அதன் இடையே தெரியும் முலைப்பிளவும் அங்கே படர்ந்து இருக்கும் ஈரமும், அதை ஒரு டிஷ்யு பேப்பர் வைத்து அவள் ஒத்தி எடுப்பதையும், அப்படி எடுக்கையில் அவளது கையில் உள்ள வளையல்கள் குடுக்கும் ஓசையையும் கேட்டு அனைத்தையும் உத்து பார்த்துக் கொண்டிருக்கும் ராகவின் கண்களுக்கு அவனுடைய உணர்ச்சிகள் கொந்தளித்தது… மெதுவாக படுக்கையில் இருந்து எழுந்து சென்று வாஷ்ரூம் கதவை நகர்த்தி அவளைப் பார்த்தான்…. தன் முன் இருக்கும் கண்ணாடியில் ராகவ் நிற்பதைப் பார்த்த போது “போ… வெளியே போ…” என்று குறும்பாக கண்களை இருக்கி வெட்கத்தில் சிரித்து முகத்தை ஆட்டி சொல்ல…. அவன் மேலும் அவள் அருகில் நெருங்கினான்.. “போக மாட்டியாடா?….” என்று கிறங்கும் பார்வையில் தன் முகத்தை சாய்த்து வைத்து தன் நெஞ்சின் மீது கைகளை வைத்து மூடி கண்களாலேயே கேட்டாள்… அவள் கேட்க கேட்க அவள் பின்னாடியே மெதுவாக நெருங்கி வந்து நின்று கண்ணாடியில் அவள் பார்வைக்கு படும்படி இடுப்பருகே அவளது ஷிமியின் அடியில் இருந்து தன் இரு கைகளையும் லேசாக உள்ளே செலுத்தி அவளது இடுப்பின் இரு ஓரங்களிலும் மென்மையாக தன் விரலால் தடவினான்… “இஸ்ஸ்ஸ்…. ஹ்…. ஹேய்…. ஹென்னது இது போ…. நீ போய் உட்காரு நான் வரேன்….” என்று அவள் சொல்ல சொல்ல எதையும் காதில் வாங்காமல் அப்படியே அவளின் தோள்கள் மீது தன் கை வைத்து அவளை வெளியே அழைத்து வந்தான்…. படுக்கையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அவளை தன் மடியில் அமரவைத்து அவளை இருக்கி அனைத்து “இச்.. இச்.. இச்.. .. ஐ லவ் மை புஸ்கி பொண்டாட்டி…. ஐ லவ் யூ டி… இச்.. இச்.. இச்.. இச்.. ஐ லவ் யூ சோ மச்….” என்று சொல்லி அவளின் கன்னத்திலும், காதிலும், உதடிலும் மாறி மாறி முத்தம் குடுத்து ஒரு கட்டத்தில் அவளின் கழுத்தில் முத்தம் குடுக்க வரும்போது “ப்ளீஸ் டா….. அங்க மட்டும் வேண்டாம்….” என்று அவள் சொல்ல “ஏன்?…” என்று ஒன்றும் தெரியாமல் கேட்டான்….”எனக்கு அங்க ரொம்ப சென்சிடிவ் டா…. அங்க மட்டும் முத்தம் குடுத்துட்டா என்னால என்னை கட்டு படுத்திக்க முடியாது.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ… ப்ளீஸ்…” என்று சொல்ல “அதானா விஷயம்.. அப்போ கண்டிப்பா அங்க குடுத்தே ஆகணுமே..” என்று சொல்லி அவன் நெருங்க… “ப்ளீஸ் டா…. நான் உனக்கு என்னை இப்படி தரனும்னு ஆசை படல….” “வேற எப்படி தரணும்னு ஆசை படுற?” “கட்டில் முழுக்க பூ…. தக தகன்னு பட்டு புடவைல நான் உனக்கு பால் சொம்போட நக நட்டு எல்லாம் போட்டு மஞ்சள் குங்குமத்தோட உன் எதிர்ல வந்து நின்னு தலவாழை இலை போட்டு மொத்தமா உனக்கு விருந்து வெக்கணும்னு ஆச படுறேண்டா…. இப்படி அவசரத்துல இல்லடா…. புரிஞ்சிக்கோடா.. என் செல்லம் இல்ல..” அவள் சொன்னதைக் கேட்டு கற்பனைசெய்து பார்க்கும்போது ராகவின் ஆழ் மனது உண்மையில் அளவுக்கு அதிகமாக கிரங்கியது…. அவள் மீதான காதலும் அளவுக்கு மீறி அதிகமானது …. அதே சமயம் அவளின் உணர்வுக்கு மதிப்பலித்து “என் சரா எனக்கு மட்டுமே…” என்று சொல்லி அவளை தன் நெஞ்சோடு கட்டி அணைக்கும்போது அவள் தன் கையை அவன் தலையை சுற்றி போட்டுக்கொண்டாள்…. அப்போது அவளின் வழுவழுப்பான அக்குள் பகுதியில் உள்ள டியோட்ரன்ட் வாசமும், மென்மையான கன்னத்தின் ஸ்பரிசத்தயும் கண்களை மூடி இச் இச் என்று அவள் தேகத்தில் சரமாரியாக முத்த மழை பொழிந்து அனுபவித்தான்…. “இஸ்… ஹா… ஹம்ம. இஸ்.. ஆ… யூ ஆர் க்ரேட் டா…. இச் இச் இச்” என்று பதிலுக்கு அவன் சாராவும் இந்த காதல் விளையாட்டில் இறங்கி அவன் உதட்டை கடிக்க ஆரம்பித்தாள். ராகவின் மடியில் சரா சாய்ந்து இருக்கும் போது அவனுடைய வலது கை அவளுடைய முழங்காலை தடவிக்கொண்டிருக்க அவனது இடது கை அவளுடைய ஷிமியின் அடிப்பகுதியில் இருந்து உள்ளே சென்று அவளது மென்மையான இடுப்பின் ஓரத்தை சற்று அழுத்தமாக அமுக்க “இஸ்ஸ்ஸ்….வலிக்குதுடா” என்று முனகினாள்…. அப்போது ராகவ் அவளது ஷிமியை லேசாக தூக்கி பார்த்தான்.. அங்கே அவளுடைய வெண்மையான இடுப்பில் தன் விரல்களால் அதிகப்படியாக அழுத்திய இடத்தில் சிகப்பாக மூன்று கோடுகள் தெரிந்தன… அதைப் பார்த்து “ஏய்.. ஹாஹ் ஹா.. தொடற இடத்துல எல்லாம் மார்க் ஃபார்ம் பன்னுறடா நீ பொருக்கி புருஷா….” என்று சொல்லி “இங்க வா… உனக்கு ஒன்னு சொல்லுறேன்….” என்று அவன் மடியில் இருந்து எழுந்து நின்று அவன் கை பிடித்து கண்ணாடியின் முன் நின்றுகொண்டாள்…. ராகவ் அவளின் பின்னல் நின்றான். கண்ணாடியில் அவளின் தலைக்கு மேலே அவன் தலை தெரிந்தது…. பின்னடியிலிருந்து ராகவின் இரு கைகளையும் எடுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டாள்…. இப்போது காலையில் அவன் பரிசாக குடுத்த சிறிய டப்பாவில் ஒரு குங்கும சிமிழும் கூடவே இருந்தது…. அதை அவன் முன் கண்ணாடியில் காமித்து “எனக்கு இத அழகா வெச்சி விடு பார்ப்போம்….” என்று பொம்மை போல சிரித்து முகபாவனை செய்து அந்த குங்குமத்தைக் குடுத்தாள்…. ராகவ் அந்த குங்குமத்தை எடுப்பதற்கு முன் அவளின் மென்மையான தோள்களை மெதுவாக அழுத்தி தடவி முத்தம் குடுக்கையில் “ஹஹ்ஹா இஸ்.. கூசுது டா…. குங்குமத்த வெக்க சொன்னா திரும்பி உன் கை விளையாடுது பாரு…. ஒழுங்கா வெய்…” என்று சொல்லி அவள் மார்பறுகே நெருங்கிய அவன் கைகளை பிடித்து குங்கும டப்பா அருகே கொண்டு வந்தாள்…. இப்போது ராகவ் அவனது நடு விரல் நுனியில் மிக அழகாக கொஞ்சம் குங்குமம் எடுத்து கண்ணாடியைப் பார்த்தவாறு அவளின் நெத்திக்கு நடுவில் சிறிய அளவில் பொட்டு வைத்தான்.. ராகவின் கண்கள் கண்ணாடியைப் பார்க்க சராவின் கண்கள் அவன் தன் நெத்தியில் வைக்கும் குங்குமத்தையே பார்த்துக் கொண்டிருந்தது…. ஏற்கனவே சற்று வேர்த்திருந்த அவளின் நெத்தியின் ஈரத்தில் ராகவின் விரல் நுனியில் உள்ள குங்குமம் அதனுடன் கலந்து மிகவும் அழகாய் தெரிந்தது.. கண்ணாடியில் சராவின் கண்களில் கண்ணீர் வருவதை கவனித்த ராகவ் அவளை உடனே தன் பக்கம் திருப்பினான்.. “ஏய்ய்.. சரா… என்ன ஆச்சு?….எதுக்கு..” என்று அவன் ஏதோ சொல்லவந்து பேசி முடிப்பதற்குள் சடாரென ராகவின் நெஞ்சில் தன் முகம் புதைத்து அவனை அழுத்தி கட்டிப்பிடித்துக் கொண்டாள்…. “ஐ லவ் யூ சோ மச்டா பொறுக்கி புருஷா….” என்று அவனை மேலும் இறுக்கிக்கொண்டாள்…. ராகவ் அவளது நெத்தியில் குங்குமம் வைத்த போது அவளுக்கு தன் ஆழ் மனதில் தோன்றிய சந்தோஷம் இன்று வரை அவள் வாழ்வில் அனுபவித்திடாத ஒன்று…. கொஞ்சம் எமோஷனல் ஆகி அழுபவளை சிரிக்க வைக்க ராகவ் மெதுவாக அவனது விரலால் அவளது இடுப்பின் ஓரத்தில் இருந்து தடவிக்கொண்டே வர, ஒரு கட்டத்தில் சராவின் தொப்புள் சிக்கியது… “இறுக்கிக் கட்டிகொண்டிருக்கும்போதே “இஸ்.. ஏய்.. வேணாண்டா கூசுதுடா ஹஹ்ஹா… ஹேய்… இஸ்.. ஹா..” என்று சினுங்கியவளை அப்படியே இடுப்பை சுத்தி கட்டிப்பிடித்து கட்டில் அருகே தூக்கி சென்று மெதுவாக படுக்க வைத்து அவளின் ஷிமியை இடுப்பில் இருந்து லேசாக மேலே தூக்கினான்… அப்போது அவளுடைய அகண்ட இடுப்பையும், இரு முனையில் உள்ள வளைவுகளையும் நடுவே செக்ஸியாய் சிறிதாய் உள்ள தொப்புளையும் பார்த்து “ப்பா…. என்ன ஒரு இடுப்புடி உனக்கு….” என்று இரு முனையில் உள்ள இடுப்பின் வளைவுகளை விரல் நுனியால் தடவி கூசியபடி அவன் சொல்லும்போது முகத்தை வெட்கத்தில் மூடிக்கொண்டாள் அவனுடைய சரா… இப்போது மென்மையான அவள் தொப்புளின் மீது மெதுவாக “இச் இச் இச்….” என்று ஸாஃப்ட் முத்த மழையை பொழியும்போது ராகவின் சிறிய ஊசி போன்ற மீசை முடிகள் குத்தியது…. அப்போது சாராவுக்கு இடுப்பில் உள்ள கண்ணுக்கு தெரியாத மிகச்சிறிய பூனை மயிர்கள் அனைத்தும் புல்லரித்து எழுந்து நின்றது…. மேலே ஒரு புறம் அவளுக்கு “இஸ்ஹா…. இஸ்ஹா…..” என்று மூச்சு வாங்கிக் கொண்டிருக்க, ராகவ் மேலும் அவளது ஷிமியை சற்று மேலே தூக்கினான்…. அப்போது “வேணாண்டா… என் செல்லம் இல்ல… நான் என்னோட ஆச என்னென்னு சொல்லி இருக்கேன்ல…. புரிஞ்சிக்கோடா…. ப்ளீஸ் டா….” என்று அவள் சொல்ல “சப்….” என்று சலித்துக் கொண்டு கட்டில் மீது ஏறி ஒரு மூலையில் முகத்தை தொங்கப்போட்டு சாய்ந்துகொண்டான் ராகவ்…. மெதுவாக அவன் அருகில் வந்தாள் சரா.. “கோவமா….” என்று அவள் கேட்டதற்கு “இல்லை” என்று விரக்தியுடன் தலை அசைத்தான்…. அப்போது செல்லமாக அவன் தலையை தன் நெஞ்சின் நடுவில் சாய வைத்து தலையில் தடவி தானும் தூங்கி அவனையும் தூங்க வைத்தாள் சரா..

“You are watching NDTV news Live coverage…” என்று டிவியில் சத்தம் கொஞ்சம் அலற பாதி தூக்கத்தில் எழுந்தான் ராகவ்… அப்போது வாஷ்ரூம் உள்ளே சங்கீதா குளிக்கும் சத்தம் கேட்டது அவனுக்கு.. சற்று நேரத்துக்கெல்லாம் முழுவதுமாய் தயாராகி ஒரு டார்க் ஸ்கை ப்ளு நிறத்தில் சேலை அணிந்து ஈரமான கூந்தலை துடைத்துக் கொண்டே வெளியில் வந்து நின்று ஜன்னல் அருகே உள்ள ஸ்க்ரீனை தள்ளி வெளிச்சத்தில் நின்று ராகவைப் பார்த்தாள்… “யூ ஆர் சோ பியுட்டிஃபுல் மை செக்ஸி புஸ்கி…” என்று அவன் சொல்ல “ஹா ஹா.. நான் நேத்தே கேக்கணும்னு இருந்தேன்…. என்னடா அப்பப்போ புஸ்கி புஸ்கினு சொல்லுற?..” என்றாள்… அப்போது வெளிச்சத்தில் பளீரென பளிங்கு போல் பளபளவென இருந்த அவளது முகத்தில் அவளுடைய ஈரமான கூந்தல் நெத்தியிலும் கண்களிலும் விழுந்து இன்னும் அழகு சேர்த்தது…. முந்தானை ஒரு புறம் சரியாக மூடாமல் இருந்ததை ராகவின் கண்கள் கடித்து சாப்பிடுவதை கண்டு அதை உடனே “வேவ்வேவே…. பாக்குற பார்வைய பாரு….ஹாஹ்ஹா” என்று அவள் சொல்லும்போது அவள் சிரிப்பையும் அவளின் நெத்தியில் உள்ள பொட்டையும், அவளது வெட்கத்தையும்…. பால்கனி வெளிச்சத்தில் பிரகாசமாய் தெரியும் அவளது அழகான தோற்றத்தையும், ஒன்றும் பேசாமல் மௌனமாய் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ராகவ். அப்போது அவள் அருகே மெதுவாய் நெருங்க…. அவளும் அதை கவனித்து வெட்கத்தில் மீண்டும் சிணுங்கி தலை குநிந்திருந்தாள்… மெதுவாக அவள் முகத்தை நிமிர்த்தி அவள் பார்வையை நோக்கி இன்னும் அருகே நெருங்கி அவளுடைய இதழில் முத்தம் குடுக்கும்போது “வேக்…. வேக்…. Mr.வாத்து காலிங்…. வேக்…. வேக்…. ” என்று ராகவின் செல்ஃபோன் சின்னுங்க “ஹா ஹா ஹா… ஹஹ்ஹா….போய் அட்டன்ட் பண்ணு போ….” என்று சிரித்து ராகவை தள்ளிவிட்டு அங்கிருந்து மீண்டும் வாஷ்ரூம் சென்றாள் சரா… “சப்…. என்னடா..?” – ஸ்பீக்கர் ஆன் செய்தான் ராகவ்… “டேய் மச்சி… வெளியில “do not disturb” னு சீட்டு தொங்கிட்டு இருந்துது….. அதான் பெல் அடிக்குறதுக்கு பதிலா ஃபோன் பண்ணேன்… கொஞ்சம் கதவ தொறக்குரியா?” – என்று கார்த்திக் சொல்ல ராகவ்கு அவன் கழுத்தை நெரிக்கலாமா என்று யோசிக்கும் அளவுக்கு கோவம் வந்தது…. கதவைத் திறந்தான்… “டேய் மச்சி…. இந்த கெஸ்டவுஸ்ல ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாமே காம்ப்லிமென்ட்ரிடா….. புரியலையா…. ஃப்ரீயாம்…. வா போய் சாப்டு வரலாம்….” – என்று கை சட்டையை வேகமாக மடக்கிக்கொண்டு தலை முடியை சரி செய்துகொண்டு “வாடா…. என்ன முழிச்சிக்கிட்டே இருக்குற….” என்று மீண்டும் சத்தம் உயர்த்த…. ராகவ் முறைத்துக் கொண்டே மெதுவாக சொன்னான்….”இந்த கெஸ்டவ்சே என்னுடையதுடா… இங்க உனக்கு ப்ரேக்ஃபாஸ்ட் மட்டுமில்ல…. எல்லாமே ஃப்ரீதான்….” என்று சொல்லும்போது சங்கீதா வாஷ்ரூம் விட்டு முழுவதுமாய் ரெடி ஆகி வெளியே வந்தாள்…. “ஹாய் அண்ணி” என்று ஸ்டைலாக சொன்னான் கார்த்திக்…. “வா கார்த்திக் உட்காரு…. குட் மார்னிங்….சாப்டாச்சா?” என்று சங்கீதா கேட்க..”அதுக்குதான் ஒருத்தன கூப்பிட வந்தேன் அதுக்கு ஓவரா மொரச்சிக்குறான்” என்று கார்த்திக் சொல்லி முடிக்க…. ராகவின் செல்ஃபோன் மீண்டும் சினுங்கியது…. அதை எடுத்து அட்டன்ட் செய்தான்… ஹலோ.. ஹலோ.. ராகவ் தம்பியா?… – என்றார் காளிதாஸ் மறுமுனையில்… ஆமா சார் சொல்லுங்க…. இந்த வருஷ ஃபைனன்ஷியல் கணக்கு வழக்கெல்லாம் ஆடிட் செஞ்சி முடிச்சாச்சு…. உன் கையெழுத்துக்கு வெய்டிங்…. சரி சரி நான் கிளம்பி வரேன்… என்று சொல்லிவிட்டு கட் செய்தான்.. என்னது ராகவ்?.. என்றாள் சங்கீதா.. ஒன்னும் இல்ல ரெண்டு CFO (Chief Finance Officers) எல்லா கணக்கு வழக்குகளையும் பார்த்து முடிச்சிட்டு ஃபார்மாலிட்டிக்கு என் பார்வைக்கு அந்த ஃபைல்ஸ் அனுப்பி வைப்பாங்க அதை பார்க்கணும்… அப்போ அவங்களுக்குதான் மித்துன் காசு குடுத்து கரெக்ட் பண்ணி வெச்சி இருக்கானா? – என்று சங்கீதா கேட்கும்வரை சாதாரணமாக இருந்த ராகவ் திடீரென யோசித்தான்…

No comments:

Post a Comment