Monday, 2 September 2013

மாங்கல்யம் தந்துனானே.. 1


வாசலில் கட்டியிருந்த வாழை மரம் கூட , சோர்ந்து போய் மேலும் தலையை தொங்கப் போட்டிருந்தது. பந்தலில் கட்டியிருந்த தோரணங்களில் பாதி உதிர்ந்து போயிருந்தன. கொட்டி வைத்த மணல் மீது ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த வாண்டுகள் எல்லாம், அறைக்குள் முடங்கி அடங்கிப் போயிருந்தன. மாலையிலிருந்து பளீரென்று எரிந்துகொண்டிருந்த குழல் விளக்குகள் கூட, மின்சாரம் நிறுத்தப்பட்டு உறங்க ஆரம்பித்திருந்தன. வீட்டின் உள்ளறைக்குள் நானும் களைத்துப் போய் அமர்ந்திருந்தேன். மேடையில் நெடுநேரம் நின்றிருந்ததால் கால்கள் சோர்வாகி கிடந்தன. அலைச்சல் ஏற்படுத்திய வியர்வையில் உடல் கசகசத்தது. மேனியில் தொங்கிய தங்க நகைகள் கொஞ்ச நேரமாய் உறுத்த ஆரம்பித்திருந்தன. இதில் இந்தப் பட்டுப் புடவை வேறு.. எப்போதடா அவிழ்த்து வீசுவோம் என்றிருந்தது..!! அப்போதுதான் அம்மா கதவு திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.நகையலாம் கழட்டி வச்சிடு பவித்ரா.. எல்லாம் பாக்ஸ்ல போட்டு வச்சிடு.. உன் மாமியார் ஏதும் செக் பண்ணனும்னா பண்ணிக்கட்டும்.." "ம்ம்.. சரிம்மா.." "குளிச்சுட்டு இந்த பொடவையை மாத்திக்கோ.."

சொன்னவள் கையிலிருந்தவைகளை கட்டிலில் வைத்தாள். மாற்றுப் புடவை.. மேட்சிங் ப்ளவுஸ்.. உள்ளாடைகள்..!! ஒருகணம் நிமிர்ந்து என் முகத்தை பார்த்து பெருமையாக புன்னகைத்தவள், என் நெற்றியில் கை வைத்து தலையை இதமாய் தடவினாள். பின்பு கதவு திறந்து வெளியேறினாள். கதவை அவள் சரியாக மூடாமல் செல்ல, அந்த கதவிடுக்கு வழியே ஹால் தெரிந்தது. ஹாலில் கிடந்த சோபாவில் அவர் தெரிந்தார். அசோக்..!!!!!!!!!! என் கணவர்.. இன்று காலை என் கழுத்தில் மாங்கல்யம் பூட்டியவர்.. தோளில் மாலை சூட்டியவர்.. நெற்றி தொட்டு பொட்டிட்டவர்..!! யாரோ ஒரு உறவினரிடம் புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தார். அழகாய் உதடுகள் விரித்து.. வெண்பற்களை வெளிக்காட்டி..அவ்வப்போது கைவிரல்களை அசைத்து..!! பேச்சு அங்கு இருந்தாலும், அவருடைய கவனம் நானிருக்கும் அறையில்தான் இருந்தது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவருடைய விழிகள் அடிக்கடி இந்தப்பக்கம் சுழன்றன. எனக்கு லேசாக சிரிப்பு வந்தது. மிகவும் ஆர்வமாக இருக்கிறாரோ என்று தோன்றியது. பால் கூட குடியாமல், பாய்வாரோ என் மேல்.. என்று பயமாய் இருந்தது. ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! இனி இவருடன்தான் தினமும் உறங்கவேண்டும். அம்மாவை அணைத்துக் கொண்டு தூங்கிய காலம் முடிந்து விட்டது. அம்மாவின் மீது கால் போடுவது மாதிரி, இவர் மீது போட்டால் திட்டுவாரோ என்று ஒருகவலை மனதில் ஓடியது. குறட்டை விடுகிறேன் என்று அம்மா திட்டுவாள். இவர் என்ன சொல்கிறாரோ..?அவ்வப்போது இந்தப்பக்கம் பார்வையால் மேயும் என் கணவர் அசோக்கை, கதவிடுக்கு வழியே நானும் பார்த்து ரசித்துக் கொண்டு, என் நகைகளை ஒவ்வொன்றாய் கழட்ட ஆரம்பித்தேன். காதில் தொங்கியவைகளில் இருந்து ஆரம்பித்தேன். அவர் அழகாய்த்தான் இருக்கிறார் என்று தோன்றியது. என்னைப் போல் நிறமில்லைதான்.. மாநிறந்தான்.. ஆனால் திருத்தமான, களையான முகம்.. ஆண்மை அழகு கொஞ்சும் முகம்.. கருப்பாய், அலை அலையாய் கேசம்.. எதிரே இருப்பவர்களை துளைத்து பார்க்கும் கண்கள்.. கூர்மையான நாசி.. சற்றே தடித்த உதடுகள்.. உதட்டின் மேலே அந்த அடர் மீசை.. மேலுதட்டை பாதி மறைத்தவாறு..!!அந்த மீசையை பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்று திடீரென ஒரு ஆசை எனக்குள் ஓடியது. என்னை பெண்பார்க்க வந்த அன்றே அவரை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வெட்கப்பட்டு வெட்கப்பட்டு ஓரக்கண்ணால் பார்த்தார். பார்த்ததுமே ஒருவித அன்னியோன்யம் தோன்றியது. எதோ பூர்வ ஜென்ம பந்தம் என்பார்களே.. அது மாதிரி..!! அவரே எனக்கு கணவராக அமைய வேண்டும் என்று அப்போதே கடவுளை வேண்டிக் கொண்டேன். இதோ.. இன்று என் வேண்டுதல் பலித்துவிட்டது. இரண்டு மாதங்கள் முன்புதான் நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த இரண்டு மாதங்களாக அவ்வப்போது என் செல்போனுக்கு கால் செய்து பேசுவார். மணமாகும் முன் ஒருவர் மனதை ஒருவர் அறிந்து கொள்ளும் முயற்சி..!!ஓரளவு அவரை பற்றி புரிந்து கொண்டிருந்தாலும், முழுமை என்று சொல்ல முடியாது. சென்னையில் உள்ள ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் டீம் லீடாக இருக்கிறார். 'வேலை விஷயத்துல நான் ரொம்ப சின்சியரா இருக்கணும்னு நெனைக்கிறவன்.. அதை நீ நல்லா புரிஞ்சுக்கணும் பவி..' என அடிக்கடி சொல்வார். "என்னம்மா.. இன்னும் ரெடியாகலையா நீ..?" கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார் என் மாமியார். "இ..இதோ.. ரெடியாயிட்டேன் அத்தை..இ..இப்போ குளிச்சுட்டு வந்துர்றேன்.." நான் படபடப்பாய் சொன்னேன். "சீக்கிரம்மா.. அவன் பத்து மணிக்குலாம் கொறட்டை விடுற ஆளு.." "ம்ம்ம்ம்.. சரித்தை.. ந..நகைலாம் இங்க இருக்கு..இ..இதை... " "நீயே பீரோ தொறந்து உள்ள வச்சிடும்மா.." புன்னகையுடன் சொல்லிவிட்டு, சாவிக்கொத்தை என் கையில் திணித்த என் மாமியாரை எனக்கு பட்டென பிடித்துப் போனது. நிச்சயத்தின் போது போடுவதாய் சொன்ன நகைகள், வீடு வந்து சேர்ந்திருக்கிறதா என எடைபோட்டுப் பார்ப்பாள் என்று எண்ணியிருந்தேன். அவளோ புது மருமகள் வீட்டுக்கு வந்த முதல் நாளே சாவிக்கொத்தை கையில் தருகிறாள். அதற்குள்ளாகவே என்னை அந்த குடும்பத்தில் ஒருத்தியாய் ஒத்துக் கொண்டாள் என்று தோன்றியது.பீரோ திறந்து நகைகளை உள்ளே வைத்தேன். கதவுக்கு தாழ் போட்டுவிட்டு குளியலறைக்குள் நுழைந்தேன். வாஷ்பேசினுக்கு மேலே இருந்த கண்ணாடி என் உருவத்தை பிரதிபலித்தது. ஒருகணம் அந்த கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை பார்த்தேன். அழகுக்கொன்றும் குறைச்சல் இல்லை என்றே தோன்றியது. மாசுமருவில்லா வட்ட முகமும்.. கரிய, பெரிய கண்களும்.. தடித்த, சிவந்த உதடுகளும்.. அழகாய்த்தான் இருக்கிறேன்..!! கண்ணாடியில் என் உருவத்தை பார்த்துக் கொண்டே, உடைகளை களைய ஆரம்பித்தேன். கசகசத்த புடவை.. ப்ளவுஸ்.. பெட்டிக்கோட்.. உள்ளாடைகள்..!! நிர்வாணமாய் நின்றிருந்தேன் இப்போது..!! எனது அந்தரங்க அங்கங்களின் அழகை பொறுமையாக பார்வையிட்டேன். சந்தன நிறத்தில் ஜொலித்த மேனியில் அங்கங்கே அழகழகாய் மேடு பள்ளங்கள். ஏற்ற இறக்கங்கள்..!! பொத்திப் பொத்தி நான் மட்டும் பார்த்ததெல்லாம் நேற்றோடு போயிற்று. இனி இந்த இரகசியம் எல்லாம் இன்னொருவனுக்கும் தெரியப் போகிறது..!! ஒரு கையால் அந்த அந்தரங்க பாகங்களை தடவிப் பார்த்தேன். சப்பாத்தி மாவை பிசைந்து, அழகாய் உருட்டி இரண்டு புறமும் ஒட்ட வைத்த மாதிரியான மார்புக் கோளங்கள். என் உடல்வாகுக்கு சற்றே பருத்த, மதர்த்த மார்புகள். வெளுத்த முலைகளின் மையத்தில் பழுப்பு நிற காம்பு கவர்ச்சியாய் தோன்றியது. குழைவான, ஆனால் சற்றே அதிகப்படியான இடுப்பு சதைகள், வயிறை லேசாக மேடிட்டு காட்டின. வயிற்றின் மையத்தில் என்னிடம் எனக்கே பிடிக்காத தொப்புள். பெரிய உப்பலான தொப்புள். 'ஜெமினி' கிரணுக்கு இருப்பது மாதிரி. இன்னும் சற்று கீழே.. பொன்னிறத்தில்.. நெட்டுவாக்கில் கீற்று மாதிரி வெடிப்புடன்.. பூரிப்பாய் என் பெண்ணுறுப்பு..!! பின்புற குடங்களும் சற்றே அளவில் பெருத்திருந்தாலும், அழகாய் புடைத்திருந்தன. ம்ம்ம்ம்ஹ்ஹ்ஹ்ம்ம்..!!!!! எல்லாம் நன்றாகத்தானிருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்து என்ன பிரயோஜனம்..?அவருக்கல்லவா பிடிக்க வேண்டும்..? பிடிக்குமா..??? 'பாக்கலாம்' என்று எனக்குள்ளேயே சொல்லிவிட்டு கண் சிமிட்டிக் கொண்டேன். ஷவர் வால்வை திருகினேன். குளித்து முடித்து வெளியே வந்தேன். மேனியை அதிகம் உறுத்தாத அந்த மாற்று புடவையை அணிந்து கொண்டேன். மூக்கை துளைக்கும் செயற்கை வாசனை திரவியங்கள் அவருக்கு பிடிக்காது. ஒருமுறை போனில் சொல்லியிருக்கிறார். அதனால் அந்த மாதிரி எதுவும் முயலவில்லை. மல்லிகைப்பூ மட்டும் தலைநிறைய அள்ளி வைத்துக் கொண்டேன். "பட்.. பட்.. பட்.. பட்.." கதவு தட்டப்பட நான் சென்று திறந்தேன். "என்னடி ரெடியாயிட்டியா..? மாப்ளை ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கார்டி.." சொல்லிக்கொண்டே அம்மா உள்ளே நுழைந்தாள். கையிலிருந்த பால் தம்ளரை என்னிடம் கொடுத்தாள். நான் அதை கையில் வாங்கிக்கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் ஒருமுறை என்னை உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை பாத்தாள். முகத்தில் புன்னகை பரவ, பெருமிதமாக சொன்னாள். "என் கண்ணே பட்ரும் போல இருக்குடி.." அம்மா நெட்டி முறிக்க, நான் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன். "ஹ்ம்ம்..புருஷன் மனசு கோணாம நடந்துக்குறதுதான் பொண்ணுக்கு லட்சணம்பவித்ரா.." "ம்ம்ம்.." "அவர் மனசுக்கு புடிச்ச மாதிரி நடந்துக்கோ.. சரியா..?" "ம்ம்ம்..சரிம்மா.." "அவரை ஏதோ புது மனுஷனா நெனைக்க கூடாது.. உன்னை தொட்டு தாலி கட்டுன புருஷன்னு நெனைப்பு இருக்கணும்.. சொல்றது புரியுதா..?" "ம்ம்ம்.." "சரி சரி.. அவர் காத்துக்கிட்டு இருப்பார்.. நீ கெளம்பு.. எந்த ரூம்னு தெரியும்ல..? அந்த எதுத்தாப்ல.." "ம்ம்ம்.. தெரியும்.."சொல்லிவிட்டு நான் அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். இருட்டாய் இருந்த ஹாலில்நுழைந்து பொறுமையாய் நடந்தேன். மற்ற அறைகள் இருட்டாய் அமைதியாய் இருக்க, ஒரே ஒரு அறையில் மட்டுந்தான் பளிச்சென விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. அந்த அறையை நெருங்கியவள், திறந்திருந்த கதவை தள்ளி உள்ளே நுழைந்தேன். மெத்தையில்அசோக் அமர்ந்திருந்தார். ஆப்பிள் கடித்துக் கொண்டிருந்தவர் என்னை பார்த்ததும், அவசர அவசரமாய் அதை விழுங்கிவிட்டு எழுந்தார். பாதி கடித்த ஆப்பிளை தட்டில் வைத்துவிட்டு, 'ஹி..ஹி..' என அவர் அசடு வழிய,நான் எழுந்த சிரிப்பை அடக்க கொஞ்சம்கஷ்டப்பட்டேன். "வா.. ப..பவி.." அவர் தட்டுத்தடுமாறி சொன்னார். நான் திரும்பி கதவை மூடி தாழிட்டேன். கையிலிருந்த பால் தம்ளரை அவரிடம் நீட்டினேன். "ம்ம்ம்ம்..இந்தாங்க.." அவர் வாங்கிக் கொண்டார். எனக்கு அதுதான் சரியான சந்தர்ப்பம் என்று தோன்றியது. படாரென அவருடைய காலில் விழுந்தேன். அவர் பதறிப் போனார். "அ..அய்யோ... என்ன பண்ற பவி நீ.. எந்திரி.." டம்ளரை அருகில் வைத்து விட்டு என் தோள் தொட்டு எழுப்ப முயன்றார். "என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க.." "அதெல்லாம் எனக்கு பண்ண தெரியாது.. நீ மொதல்ல எந்திரி.." "சும்மா.. நல்லாருன்னு சொல்லுங்க.. போதும்.." "சரி நல்லாரு..!! எந்திரி..!!" எழுந்தேன். நான் திடீரென காலில் விழுந்ததை அவர் எதிர்பார்க்கவில்லை போல. அவருடைய முகத்தில் இன்னும் அந்த பதற்றம் தெளிவாக தெரிந்தது. எனக்கு அது சந்தோஷமாக இருந்தது. 'மனைவி தன் காலில் விழுந்து கிடக்கவேண்டும் என்று நினைப்பவன் அல்ல என் கணவன்..!!' என்ற எண்ணம்தான் அந்த சந்தோஷத்திற்கு காரணம். இப்போது அவர் சற்றே சலிப்பான குரலில் கேட்டார். "என்ன பவி நீ..? கால்லலாம் விழுந்துக்கிட்டு..?" "இதெல்லாம் சம்பிரதாயம்.. கண்டிப்பா பண்ணனும்னு அம்மா சொல்லி அனுப்பிச்சா.." "ஓஹோ..? வேற என்ன சொன்னாங்க.. உன் அம்மா..?" அவருடைய குரலில் இப்போது லேசான கிண்டல் தொனித்தது. "அ..அந்த பால்..." "வேணுமா உனக்கு..?" "இல்ல.." "அப்புறம்..?" "அதை நீங்க பாதி குடிச்சுட்டு தரணுமாம்.. மீதியை நான் குடிக்கனுமாம்.." "ஓ.. இதுவும் உன் அம்மாதான் சொன்னாங்களா..?" "ம்ம்ம்.." அவர் உதட்டில் புன்னகையுடன் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். அப்புறம் குனிந்து அந்த பால் டம்ளரை எடுத்தார். வாயில் வைத்து கொஞ்சம் குடித்தவர், பின்பு என்னிடம் நீட்டினார். நான் அதை வாங்கி மீதமிருந்த பாலை குடித்தேன். குடித்து முடித்து உதட்டை துடைத்தபோது, அவர் மெல்லிய குரலில் சொன்னார். "இங்க பாரு பவி.. எனக்கு இந்த சாஸ்திரம், சம்பிரதாயம்லாம் சுத்தமா புடிக்காது.. நாம ரெண்டு பெரும் லைஃப் பார்ட்னர்ஸ்.. இனிமே வரப்போற வாழ்க்கையை ஒண்ணா வாழ போறோம்.. சந்தோஷத்தையும், துக்கத்தையும் ஷேர் பண்ணிக்க போறோம்.. அவ்ளோதான்..!! மத்தபடி யாரும் யாருக்கும் அடங்கி இருக்கணும்னு அவசியம் இல்லை.. நாம ஒரு நல்ல ப்ரண்ட்ஸ் மாதிரி இருந்தா போதும்.. புரிஞ்சதா..?" "ம்ம்ம்.. பு..புரிஞ்சது..""சரி.. வந்ததுல இருந்து நின்னுக்கிட்டே இருக்குற..இப்டி உக்காரு.." நான் மெத்தையில் அமர, அவரும் அமர்ந்தார். சற்றே நெருக்கமாக..!! அவருடைய வலது தோள் எனது இடது தோளை லேசாய் உரசியது. அவர் உடலில் இருந்து வந்த வியர்வை கலந்த ஆண்மை வாசனையை என்னால் உணர முடிந்தது. இவ்வளவு நேரம் இதமாய் துடித்துக் கொண்டிருந்த எனது இருதயம் இப்போது வேகமெடுக்க ஆரம்பித்தது. அவர் மெல்ல ஆரம்பித்தார். "அப்புறம் பவி..?" "சொ..சொல்லுங்க..." "ஒரே அலைச்சல்ல..?" "ம்..ம்ம்ம்.." "ரொம்ப நேரம் ஸ்டேஜ்ல நின்னது கால்லாம் வலிக்குது.. இல்ல..?" "ஆ..ஆமாம்.. எனக்கும்.." "ம்ம்ம்..ஏதாவது சாப்பிடுறியா..? ஜாங்கிரி.. உனக்கு பிடிக்கும்ல..?" "இ..இல்ல.. வேணாம்.." "பாரு.. எவ்ளோ ஸ்வீட் வாங்கி வச்சிருக்காங்க..? ஹ்ஹ்ஹா.. எதோ ஸ்வீட் ஸ்டால்க்குள்ள உக்காந்திருக்குற மாதிரிஇருக்கு எனக்கு.." "ஹ்ஹ்ஹா.. ம்ம்ம்.." "இந்த ஊதுவத்தி வாசனை நல்லாருக்குல..? எனக்கு பிடிச்சிருக்கு.. உனக்கு பிடிச்சிருக்கா..?" "ம்ம்ம்.. பிடிச்சிருக்கு..!!" "ம்ம்.. அப்புறம்..?" "சொ..சொல்லுங்..." நான் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவருடைய முரட்டுக்கரம் ஒன்று எனது கை மீது வந்து அமர்ந்தது. அழுத்தியது.. என் விரல்களோடு தன் விரல்களை கோர்த்துக் கொண்டது.. நெரித்தது..!! அவ்வளவுதான்...!!!!!! எனக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. நரம்புகளில் ரத்தம் புதுவேகத்துடன் பாய்வதை தெளிவாக உணர முடிந்தது. உடல் வெடவெடவென நடுங்க ஆரம்பித்தது. வேகமாய் மூச்சு விட்டதில், 'குபுக்.. குபுக்..' என என் மார்புகள் ஏறி இறங்கின. அவர் மிகவும் ஹஸ்கியான வாய்சில் கேட்டார். "உனக்கு ஒரு விஷயம் தெரியுமா பவி..?" "எ..என்ன..?" "நீ.. ரொம்ப ரொம்ப அழகா இருக்குற.." சொல்லிக்கொண்டே அவர் ஒரு கையால் என் தோளை வளைத்து தன்னோடு இறுக்கிக் கொண்டார். நான் செய்வதறியாது விரல்கள் நடுநடுங்க அமர்ந்திருக்க, அவர் தன் முகத்தை என் கழுத்துக்குள் புதைத்தார். வாசம் பிடித்தார்.குளிச்சியா பவி..?"

"ம்ம்ம்.." "அதான் ரொம்ப ஃப்ரெஷா வாசமா இருக்குற.. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.... நான் குளிக்கலை.. பரவாலையா..?" "ம்.. ப..பரவா.. ம்.." என் வாயிலிருந்து வார்த்தைகள் சரியாய் வந்து விழ மறுத்தன. அவர் ஒரு கையால் என் கன்னத்தை பிடித்து என் முகத்தை அவர் பக்கமாய் திருப்பினார். திருப்பிய வேகத்தில் என் உதடுகளை கவ்வினார். முதல் முத்தம்...!!!!!! நான் சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில்..!! மென்மையாக என் கீழுதட்டை கவ்வி.. லேசாகத்தான் உறிஞ்சினார். அதற்கே நான் கிறங்கிப் போனேன். ஒரு இனம் புரியாத போதை, உடலின் ஒவ்வொரு அணுவிலும் பரவியது. கண்கள் என் கட்டுப்பாடின்றி தானாக செருகின. உடம்பின் எடை முழுதும் பட்டென குறைந்து போய், பறப்பது மாதிரி இருந்தது..!! எவ்வளவு நேரம் அந்த மாதிரி சுகத்தில் பறந்தேனோ..? அவர் என் இதழ்களை விடுவித்தும் கொஞ்சநேரம் கண்களை திறக்க முடியாமல் கஷ்டப்பட்டேன். அப்படியே நெடுநேரம் அந்த சுகத்தை கண்மூடி அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது. பின்பு மெல்ல மெல்ல என் இமைகளை பிரித்தபோது, அவர் இதழ்களில் புன்னகையுடன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் வாயை 'ஓ..' வென திறந்து வைத்தபடியே, அவருடைய முகத்தை மலங்க மலங்க பார்த்தேன். "எனக்கு சீக்கிரமே சக்கரை வியாதி வந்துடும்னு நெனைக்கிறேன்பவி.." அவர் திடீரென சொன்னார். "எ..எதுக்கு அப்படி சொல்றீங்க..?" "பின்ன.. உதட்டுல நீ இவ்ளோ ஸ்வீட் வச்சிருந்தா.. வராதா..?" "ச்ச்சீய்ய்ய்...!!!!!!" "நீ வெக்கப்பட்டா இன்னும் அழகா இருக்குறதெரியுமா..?" "ம்ம்ம்..." "பவி..." "சொ..சொல்லுங்க.." "இதை ரிமூவ் பண்ணீடவா..?" சொல்லிக்கொண்டே அவர் என் புடவையில் கைவைக்க நான் பதறிப் போனேன். "ம்ஹூம்.." "ஏன்..?" "வே..வேணாம்.." "அதான் ஏன்னு கேக்குறேன்..?" "எனக்கு ஒருமாதிரி இருக்குது.." "என்ன மாதிரி இருக்குது..?" "ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்காம.. இதெல்லாம்.." "அதான் போன்லயே அவ்ளோ பேசிக்கிட்டோமே.. இன்னும் என்ன புரிஞ்சுக்கனும்..? ம்ம்ம்..?? நான் ரொம்ப ஆசையாஇருக்குறேன் பவி.." அவருடய குரலில் ஒரு மிதமிஞ்சிய ஏக்கம் கலந்திருந்தது. "எ..எனக்கு.." "ம்ம்ம்.. உனக்கு..?" "ப..பயமாஇருக்குது.." "இதுல பயப்பட என்ன இருக்குது..? கண்டிப்பா உனக்கு கஷ்டம் கொடுக்குற மாதிரி நான் நடந்துக்க மாட்டேன்.. ஐப்ராமிஸ்.." "இன்னொரு நாள் பண்ணலாமே.." "என்னைக்கா இருந்தாலும் பண்ணத்தானே போறோம்.. இன்னைக்கே பண்ணலாமே..?" அவர் இப்போது மீண்டும் தன்முகத்தை என் கழுத்தில் வைத்து தேய்த்தார்.அ..அதுக்கில்ல.." "அப்புறம்..?" "இன்னொரு நாள்.. பொறுமையா... இன்னைக்கே பண்ணனும்னு என்ன அவசியம்..?" "அவசியம் ஒன்னும் இல்ல.. ஆனா.. மெம்மரிஸ் முக்கியம் இல்லையா..?" "மெம்மரிஸா.? என்ன மெம்மரிஸ்..? புரியலை.." அவர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியாமல் கேட்டேன். "புரியிற மாதிரியே சொல்றேன்.. இப்போ.. இன்னைக்கு நம்ம மேரேஜ் எப்படி நடந்தது..?" "எப்படி நடந்தது..?" "பெரிய மேரேஜ் ஹால்ல.. தோரணம், சீரியல் லைட்டுனு டெகரேட் பண்ணி.. ஊர்ல இருக்குறவங்களை எல்லாம் இன்விடேஷன் கொடுத்து வரவச்சு.. பதினெட்டு வகை ஐட்டத்தொட பந்தி வச்சு.. லைட் ம்யூசிக் கச்சேரி வச்சு.. சாரட் வண்டில ஊர்வலம் வச்சு.. போட்டோ, வீடியொலாம் எடுத்து.. எதுக்கு இவ்வளவு ஆடம்பரம்..? ஒரு சின்ன கோயில்ல வச்சு.. நான் உன் கழுத்துல ஒரு மஞ்சைக்கயித்தை கட்டினா.. அதுக்கு பேர் கூட கல்யாணம்தான..? எதுக்கு இவ்ளோ செலவு பண்ணி அமர்க்களம் பண்ணினோம்..?" "எ..எதுக்கு..?" "மெம்மரிஸ்..!!!! இன்னும் பல வருஷம் கழிச்சு நம்ம மேரேஜ்னு நெனச்சு பாத்தா.. இதெல்லாம் ஞாபகம் வரும்..!! நெனைக்க நெனைக்க சந்தோஷமா இருக்கும்..!!" "ம்ம்ம்.." "மேரேஜ் மாதிரி ஃபர்ஸ்ட் நைட்டும் லைஃப்ல ஒரே ஒருதடவைதான் வரும்.. அதே மாதிரி நம்ம பர்ஸ்ட் நைட்னு நாம நெனச்சு பாத்தா.. அது ஒரு ஸ்வீட் மெம்மரியா இருக்க வேணாமா..? ரெண்டு பேரும் வெட்டிக்கதை பேசிட்டு.. ஆளுக்கொரு பக்கம் திரும்பி படுத்துக்கிட்டோம்னு ஞாபகம் வந்தா.. நல்லாவா இருக்கும்..? இந்தமாதிரி எதாவது கிளுகிளுப்பா நடந்தா.. ஜென்மத்துக்கும் அதை நெனச்சு நெனச்சு சந்தோஷப் படலாம் இல்லையா..?" அவர் சொலிவிட்டு கண் சிமிட்ட, நான் அயர்ந்து போனேன். எங்கே சுற்றி எங்கே வந்து நிற்கிறார்..? 'அவர் சொல்வதும் சரிதான்.. அந்த மாதிரி ஏதாவது நடந்தால் நன்றாகாத்தானே இருக்கும்..?' என்று எனக்கே இப்போது தோன்றியது. அந்த அளவிற்கு என் மனதை கிளறி விட்டிருந்தார். கில்லாடிதான்..!! அடுத்தவர் மனதை நோகாமல் மாற்றிவிடக் கூடிய திறமை படைத்தவர்தான் என் கணவர்..!! "என்ன பவி.. எதுவும் சொல்ல மாட்டேன்ற..?" அவர் ஏக்கம் குறையாத குரலில் கேட்டார். "அ..அது.." "ம்ம்ம்..?" "நீங்க சொன்னப்புறம்.. எனக்கு கூட ஆசையாத்தான் இருக்குது.." நான் சொல்லிவிட்டு பட்டென நாக்கை கடித்துக் கொண்டேன். ஒருவேளை என்னை தவறாக நினைத்துக் கொள்வாரோ..? ஆனால் அவர் அவ்வாறெல்லாம் நினைக்கவில்லை. சந்தோஷம்தான் அடைந்தார். அவருடய முகம் பட்டென பிரகாசம் ஆனது. "அப்போ.. இதை ரிமூவ் பண்ணிடலாமா..?" கண் சிமிட்டி சொல்லிக்கொண்டே மீண்டும் என் புடவையில் கை வைத்தார். நான் மீண்டும் பதறினேன். "ம்ஹூம்.. வேணாம்.." "இப்போ என்ன..?" அவர் பாவமாக கேட்டார். "எ..எனக்கு வெக்கமா இருக்கு.." "போச்சுடா..!! வெக்கமா இருக்கா..? இதை நான் யோசிக்கவே இல்லையே.. இதுக்கு நான் எதுவும் ப்ரிப்பேர் பண்ணிட்டு வரலையே.. என்ன பண்றது இப்போ..?" அவர் நொந்து போனவராய் தலையில் கை வைக்க, நான் சிரித்தேன்."ஹாஹா.. எதுவும் பண்ண வேணாம்.. லைட்டை ஆஃப் பண்ணுங்க.. போதும்..!!" நான் சொல்ல அவருடய முகம் மீண்டும் மலர்ந்தது. "கண்டிப்பா ஆஃப் பண்ணனுமா..?" "ம்ம்ம்.." "வெளிச்சத்துல உன் அழகை பாக்கணும்னு எனக்கு ஆசை பவி.." "ச்சீய்..." "ப்ளீஸ்.." "ம்ஹூம்.. இன்னொரு நாள்.." "ஹ்ஹா... ஒகே..!!" அவர் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வந்தார். என் அருகில் அமர்ந்தார். ஜீரோ வாட்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் அவருடய உருவம் மசமசப்பாக தெரிந்தது. இரண்டு கைகளாலும் என் தோளை தொட்டவர், அப்படியே என்னை மென்மையாக மெத்தையில் கிடத்தினார். அருகில் படுத்தவர், தனது உதட்டால் எனது உதட்டை தேடிப் பிடித்தார். உறிஞ்சினார். இந்த முறை சற்றே அழுத்தமாக.. சற்றே காமமாக..!! அவர் அந்த மாதிரி உறிஞ்ச உறிஞ்ச.. என் உடலெங்கும் ஒரு உன்னத சுகம் பரவியது. எனது படபடப்பை குறைத்தது. எனக்குள் இருந்த பயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் தின்றது அந்த சுகம்..!! அவருடய உதடுகள் என் உதடுகளை இதமாய் உறிஞ்சிக் கொண்டிருக்க, அவருடய வலது கையோ என் மேனியில் அங்கங்கே ஊர்ந்து என்னை இம்சை செய்து கொண்டிருந்தது. என் கன்னம்.. கழுத்து.. புஜம்.. இடுப்பு.. தொப்புள்..!! அங்கங்கே ஊர்ந்த அந்த கை இறுதியாக என் மார்புக்குவியலில் வந்து அமர்ந்தது. அழுத்தியது.. லேசாக பிசைந்து பார்த்தது..!! நான் உணர்ச்சி தாங்காமல் சத்தம் எழுப்பினேன். "ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா...!!!!!!" "நல்லா.. சாஃப்டா இருக்கு பவி.." போதையான குரலில் சொன்னவர், என் புடவையை ஒதுக்கி விட்டு, தன் முகத்தை என் நெஞ்சு உருண்டைகளில் வைத்தார். மென்மையாக தேய்த்தார். அவருடய மீசை மயிர்கள், என் மார்புச்சதைகளை கீற, எனக்கு அது இதமாக இருந்தது. அவர் விட்ட அனல் மூச்சு சூடாக என் மார்புப்பிளவில் இறங்க, சுகமாக இருந்தது. ஜாக்கெட்டுக்குள் திம்மென்று புடைத்திருந்த என் கலசங்களை ஒரு கணம் காமமாய் முறைத்தவர், பின்பு என் இரண்டு முலை உச்சிகளிலும் 'இச்.. இச்..' என இதழ் பதித்து முத்தமிட்டார். அவ்வளவுதான்..!! என் முலை நரம்புகளில் எல்லாம் காம மின்சாரம் அடிக்க, நான் வெட்கம் விட்டேன். வாய்விட்டு முனகினேன். "ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா..." என் வெக்கம் விலகிற்று என்று அவருக்கும் தெரிந்து போனது போலும்.. அடுத்த கட்டத்திற்கு முன்னேறினார். என் கழுத்தில் முகம் புதைத்து முத்தமிட்டுக் கொண்டே, அவருடய விரல்களால் என் ஜாக்கெட் பட்டன்களை தேடினார். முதல் பட்டனை எளிதில் அவர் நீக்கிவிட, அடுத்த பட்டனை நீக்க விடாமல் என் கை சென்று, அவர் கையை பிடித்துக் கொண்டது. இன்னும் என்னிடம் மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச வெட்கம் அது..!!நான்தான் அறிவில்லாமல் தடுத்தால், அவர் என்ன அப்படியே விட்டுவிடுவாரா..? விடுகிற ஆளா அது..? என் ஆடைகளை களைந்து, என் மேனியின் மென்மையை உணர்ந்தே தீர வேண்டும் என்று உறுதியாக இருந்தார். தடுத்த என் கையை லாவகமாக விலக்கி, அடுத்ததடுத்த பட்டன்களை விடுவித்தார். ப்ராவை விலக்கினார். விலக்கிய வேகத்தில் பாய்ந்தார் என் பழங்களின் மீது..!! ஒருபக்க கனியில் வாய் வைத்து சர்ரென உறிஞ்ச, நான் அவருடய தலையை பிடித்து தள்ளி விட்டேன். "என்னாச்சு பவி..?" "ம்ஹூம்.. வேணாம்.." சொல்லிக்கொண்டே நான் இரண்டு கைகளாலும் என் கொங்கைகளை மூடிக் கொண்டேன். "ஏன்..?" "ஒரு மாதிரி இருக்கு..." "நல்லாருக்கும் பவி.. நான் பண்றேன் பாரு..." "ம்ஹூம்.." "ப்ச்.. நல்லாருக்கும்னு சொல்றேன்ல..? கையை எடு.." அவர் முரட்டுத்தனமாய் என் கைகளை விலக்கி, மீண்டும் அங்கே முகம் புதைத்தார். ஒருபக்க முலையை கையால் கசக்கினார். அடுத்தபக்க கனியை வாய் வைத்து சுவைத்தார். ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா... எந்த மாதிரி சுகம் இது..? இதில் கூட இத்தனை இன்பம் உண்டா..? இரண்டு முலைகளையும் நான் அவர் வசம் இழந்திருந்தேன். இரண்டிலும் அவர் மாறி மாறி இதழ் பதித்து உறிஞ்சினார்...!! அப்படி சொல்லலாமா..? உறிஞ்சினார் என்ற சொல் சரிதானா..? உறிஞ்சினால் எனக்குள் எதாவது குறைய வேண்டும் அல்லவா..? மாறாக.. என் மேனியெங்கும் இன்ப வெள்ளம் மேலும் மேலுமல்லவா நிறைகிறது..?? உறிஞ்சினார் என்ற சொல் சரிதானா..? அவருடய நாக்கு எனது ஒரு முலைக்காம்பில் தடதடவென அடித்தது. அவரது விரல்கள் இன்னொரு காம்பை நசுக்கிப் பதம் பார்த்தது. அவரது லீலைகள் தாங்காமல் முலைக்காம்புகள் வெடித்து விடும்போல் தடித்து துடித்தன. நான் சுகத்தை தாங்கிக்கொள்ள திணறினேன். உடலை நெளித்து, வாய் விட்டு முனகினேன். “ம்ம்ம்ம்ம்ம்… ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…!!” அவரது வாய் என் மார்பை சுவை பார்க்க, அவரது ஒரு கை என் மற்ற அங்கங்களை தடவியது. அழுத்தி பிசைந்தது. எனது புஜத்தையும், இடுப்பு சதைகளையும் பிசைந்த கை, பின்பு தைரியம் பெற்று, என் புடவையை மெல்ல மெல்ல மேலே உயர்த்தியது. முழங்கால் வரை உயர்த்திவிட்டு, பிறகு அந்த புடவைக்குள்ளேயே புகுந்து கொண்டது. எனது வழவழ தொடைகளில் அவரது முரட்டுக்கை..!! இரக்கமில்லாமல் அந்த பட்டு சதைகளை பிசைந்து பார்த்தது. பின்னர் இன்னும் மேலேறியது. அடுத்து அந்த கை எங்கே செல்லும் என்று என்னால் யூகிக்க முடிந்திருந்தது. எனது ஒரு கையால் எட்டி அவருடய கையைப் பிடித்து தடுத்தேன். “ம்..ம்ஹூம்..” அவர் இந்தமுறை என் கையை தட்டி விடவில்லை. மாறாக இன்னொரு காரியம் செய்தார். அவருடய வாயை அகலமாக திறந்து, எனது வலது முலையை முடிந்த அளவு உள்ளே தள்ளிக்கொண்டு, ‘சர்ர்ர்ர்ர்ர்ர்….’ என ஒரு உறிஞ்சு உறிஞ்சினார்..!!! அவ்வளவுதான்..!!!! “ஹ்ஹ்ஹ்ஹாஹாஹா…!!” என கத்திக் கொண்டு நான் என் நெஞ்சை உயர்த்தினேன். முலைகளால் அவருடய முகத்தை முட்டினேன். ஒரே உறிஞ்சலில் உடலெங்கும் உற்சாகம் கரை புரண்டு ஓட, என் கை வலுவிழந்தது. அவரது கை நினைத்ததை சாதித்தது. எனது அந்தரங்க பள்ளத்தாக்கில் சென்று அமர்ந்தது. “வே..வேணாங்க.. ப்ளீஸ்..!!” நான் ஈனஸ்வரத்தில்தான் முனகினேன். அவர் காதில் விழுந்ததோ இல்லையோ.. இல்லை.. விழுந்தும் காட்டிக் கொள்ளவில்லையோ..? என் பெண்ணுறுப்பை தடவ ஆரம்பித்தார். மென்மையான என் அந்தரங்க சதைகளை அழுத்தி பிசைந்தார். என் மன்மத வெடிப்பை விரல் பதித்து தேய்த்தார். உச்சியில் இருந்த நீட்சியை உருட்டிக் கொடுத்தார். எனக்கு மேலும், கீழும் சுக ஊற்று பீறிட்டு அடிக்க, ஆகாயத்தில் ஆனந்தமாய் பறப்பது மாதிரி இருந்தது.சுகத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தவளுக்கு, அவர் எப்போது தன் ஆடைகளை அகற்றிக் கொண்டார் என்று கூட நினைவில்லை. என் மீது அவர் கவிழ்ந்தபோது, என்னையுமறியாமல் எனது பார்வை அவருடைய இடுப்புக்கு கீழே சென்றது. அவரது ஆணுறுப்பை பார்க்க வேண்டும் போலிருந்தது. ஆனால் இருட்டில் எதுவும் தெரியவில்லை. விளக்கை அணைக்க சொன்னதற்கு என்னை நானே கடிந்து கொண்டேன். பார்வைக்குத்தான் அது தட்டுப்படவில்லையே ஒழிய, முறுக்கேறிய அவருடய ஆயுதத்தின் முழு வடிவத்தையும், அது என் தொடைகளில் உருண்ட போது உணர்ந்து கொள்ள முடிந்தது. அது என் பெண்மையை உரசியது. என் வெடிப்பை முட்டியது. புகுந்து கொள்ள இடம் வேண்டி மோதியது. “உள்ள விடட்டுமா பவி..?” அவர் என் காதோரம் கிசுகிசுப்பாய் கேட்டார். “ம்ம்ம்…” “ஆரம்பத்துல கொஞ்சம் வலிக்கும்னு நெனைக்கிறேன்.. பொறுத்துக்கோ..!!” “ம்ம்ம்…” அவர் தன் ஆணுறுப்பின் நுனியை என் பெண்ணுறுப்பின் அடியில் வைத்தார். அழுத்தினார். வலித்தது எனக்கு..!! பற்களால் கீழுதட்டை அழுத்தி கடித்துக் கொண்டேன். அவர் ஒரு கையால் என் இடுப்பை பிடித்துக் கொண்டு, அவருடய இடுப்பை அசைக்க, அது எனக்குள் நுழைய ஆரம்பித்தது. முரட்டுத்தனமாய்.. எதைப் பற்றியும் கவலையற்றதாய்..!! “வலிக்குதா பவி..?” “இ..இல்ல..” பொய் சொன்னேன். அந்த மாதிரி நான் பொய் சொன்னது தவறோ என்று அப்புறந்தான் புரிந்தது. எனக்கு வலிக்கவில்லை என்று நினைத்ததாலோ என்னவோ, சரக்கென அவருடைய இடுப்பை அசைத்து வேகமாக ஒரு அழுத்தம் கொடுத்தார். அவ்வளவுதான்..!! எனது பெண்மைக் கோட்டைக்குள் எதை எதையோ தகர்த்துக்கொண்டு, அவரது ஆண்மை முழுமையாக உள்ளே புகுந்தது. இறுக்கமாக இருந்தது. வலித்தது..!! கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்துக் கொண்டது. தாங்க முடியாமல் கத்திவிட்டேன். "ஆஆஆஆஆஆஆஆ...!!!" "என்னாச்சு பவி.. ரொம்ப வலிக்குதா..?" அவர் பதறிப் போனவராய் கேட்டார். "இ..இல்ல.. பரவால்ல.."அவர் குனிந்து என் உதடுகளில் இதமாக முத்தமிட்டார். மென்மையாக என் உதடுகளை சுவைத்து, சுகம் கொடுத்து, என் படபடப்பையும் உடலில் பரவியிருந்த வலியையும் குறைத்தார். கொஞ்ச நேரம் அப்படியே அசைக்காமல் உள்ளே வைத்திருந்தவர், பின்பு இயங்க ஆரம்பித்தார். அவசரப் படாமல்.. நிதானமாக.. மிதமான வேகத்தில்..!! அவரது ஆண்மை எனது பெண்மை சதைகளை பிளந்து கொண்டு உள்ளே போய் வந்தது. சீரான வேகத்தில் எனது பெண்ணுறுப்பின் அடியாழம் வரை சென்று முட்டிப் பார்த்தது. ஆரம்பத்தில் இருந்த வலி போகப்போக குறைந்தது. உடலெங்கும் ஒரு உன்னத சுகம் மெல்ல மெல்ல பரவியது. ஒவ்வொரு அணுவிலும் இன்பம் நிறைந்து வழிந்தது. அவருடைய உடல் பாரம் தாங்குவது கடினமாக இருக்கவில்லை. அவருடைய அணைப்பில் சிக்கி நசுங்குவது இதமாகவே இருந்தது. அவருடைய முரட்டு ஆண்மைக்கு, எனது மென்மையான பெண்மை ஈடு கொடுத்தது எனக்கே ஆச்சரியமான விஷயமாக இருந்தது. அவருடைய உதடுகள் எனது உதடுகளை அவ்வப்போது கொத்திக் கொண்டே இருந்தன. அவரது கைவிரல்கள் என் கூந்தலுக்குள் நுழைந்து எதையோ தேடிக்கொண்டே இருந்தன. அவர் விட்ட ஆனந்த அனல் மூச்சு தீயாய் என் நெற்றி சுட்டது. அவரது திண்ணென்ற மார்பு எனது நெஞ்சுக்கனிகளை அழுத்தி நசுக்கிற்று. அவருடைய இடுப்பு மேலும் கீழும் அசைந்து என்னை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு போய் சேர்த்தது. கொஞ்ச நேரத்தில் உச்சமடைந்தார். தன் ஆண்மை ரசத்தை என் பெண்மையின் உட்புற சுவர்களில் தெளித்துவிட்டு, என் மீது கவிழ்ந்தார். இருவருமே களைத்துப் போயிருந்தோம். உடலுக்குள் உருவாகியிருந்த உச்சபட்ச சுகம், மெல்ல மெல்லத்தான் குறைந்தது. அந்த சுகம் முற்றிலும் குறைந்து சகஜ நிலையை அடையும் வரை, அப்படியே ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு கிடந்தோம். ஒருவருடைய உடலை அடுத்தவர் தடவிக் கொடுத்து, அதன் துடிப்பை குறைத்தோம். அப்புறம் அவர் இறுதியாக எனது உதடுகளில் அழுத்தி முத்தமிட்டுவிட்டு, என் மீதிருந்து எழுந்தார். அறையோடு அட்டாச் செய்யப்பட்டிருந்த பாத்ரூமுக்குள் நுழைந்தார். நான் களைந்திருந்த ஆடைகளை சரி செய்து கொண்டேன். திரும்ப வந்தவர், 'வாஷ் பண்ணிட்டு வந்து படுத்துக்கோ பவி..' என்றார். இப்போது நான் பாத்ரூம் சென்றேன். வாஷ் பண்ணிக் கொள்ளும்போது, எனது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் கசிந்து வெளிவந்ததை கவனித்தேன். லேசாக வலித்தது. ஆனால் சந்தோஷமாகத்தான் இருந்தது. உடலில் இருந்து உதிரம் வெளிப்படுவது, உள்ளத்தில் பூரிப்பை ஏற்படுத்துமா..? ஆச்சர்யமாக இருந்தது..!! நான் திரும்ப வந்தபோது அசோக் என்னை இழுத்து தன் மார்பில் போட்டுக் கொண்டார். ஒரு கையை என்னை சுற்றிப் போட்டு, தன்னோடு இறுக்கிக் கொண்டார். என் கூந்தலை இதமாக தடவிக் கொடுத்தார். என் நெற்றியில் 'இச்..' என்று ஈரமாக முத்தம் பதித்தவர், பின்பு என் காதோரமாய்.. "பவிம்மா.." என்றார். அவர் அந்த மாதிரி கொஞ்சலாக அழைத்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. "ம்ம்ம்.." "எனக்கு ரொம்ப திருப்தியா இருந்தது.. உ..உனக்கும் பிடிச்சிருந்ததா..?" "ம்ம்ம்.. நல்லாருந்தது.." "ஆக்சுவலா.. பர்ஸ்ட் டைம்ன்றதால.. கொஞ்சம் ஓவர் ஆர்வமா.. மொரட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்.. இனிமே அப்டிலாம் பண்ண மாட்டேன்.. சரியா..?" "ப..பரவால்லப்பா.. எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்ல.." "ம்ம்ம்.. ஐ லவ் யூ பவி.." சொன்னவர் என்னை மேலும் இறுக்கி அணைத்துக் கொண்டார். அவர் இந்த மாதிரி கேட்டது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஆசை தீர்ந்ததும் முதுகு காட்டி படுப்பவரல்ல என் கணவர். அன்புடன் அணைத்துக் கொண்டு, எனது அனுபவத்தையும் கேட்பவர். எனது சுகத்துக்கும் மதிப்பு கொடுப்பவர்..!!நான் அவருடைய நெஞ்சில் முகம் புதைத்துக் கிடந்தேன். அவருடைய இதயம் துடிக்கும் ஓசை இதமாய் என் செவிப்பறையில் வந்து மோதியது. அவருடைய மார்பில் இருந்து வந்த வியர்வை வாசனை நறுமணமாய் என் நாசிக்குள் புகுந்திற்று. கொஞ்ச நேரம் அந்த மாதிரி கண்கள் மூடி அவர் மார்பில் இளைப்பாறினேன். எனது முதுகை இதமாக தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தவர், திடீரென எதோ நினைவு வந்தவராய் மெல்லிய குரலில் சிரித்தார். "என்னாச்சு.. சிரிக்கிறீங்க..?" "இல்ல.. காலைல பசங்க பண்ணின கலாட்டாலாம் ஞாபகம் வந்தது.. தாலி கட்டினதும் ஸ்டேஜுக்கே வந்து செம அட்டகாசம் பண்ணிட்டாங்கல்ல..?" "ம்ம்ம்.." அவர் சொன்னதை ஆமோதித்தவளுக்கு, அப்போதுதான் அது ஞாபகம் வந்தது. காலையில் இருந்தே அவரை கேட்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். இப்போது கேட்கலாமா..? ஒருவேளை தப்பாக எடுத்துக் கொள்வாரோ..? மனம் கொஞ்சம் குழம்பியது. ஆனால் கேட்காவிட்டால் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஆரம்பித்தேன். "எ..என்னங்க.." "ம்ம்ம்.." "நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே..?" "ம்ஹூம்.. கேளு.." "இன்னைக்கு.. நம்ம மேரேஜுக்கு உங்க ஃப்ரண்ட்ஸ்லாம் வந்திருந்தாங்கல்ல.. ?" "ம்.." "அ..அதுல.. பசங்களை விட பொண்ணுங்க நெறைய இருந்தாங்கல..?" "ம்.. இன்னும் நெறைய பேர் வரலை பவி.. சென்னை போனதும் இருக்கு அவளுகளுக்குலாம்.." "உங்களுக்கு பொண்ணுக ப்ரண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தியா..?" நான் பட்டென கேட்க, அவருடைய கரத்தின் பிடி சற்று தளர்ந்தது. அவர் என்னை அணைத்திருந்த அணைப்பின் நெருக்கம் சற்று நெகிழ்ந்தது. பதிலே சொல்லாமல் அமைதியாக இருந்தார். நான் கொஞ்ச நேரம் காத்திருந்து விட்டு திரும்ப கேட்டேன். "என்னங்க.. எதுவும் சொல்ல மாட்டேன்றீங்க..? நான் ஏதும் தப்பான கேள்வியை கேட்டுட்டனா..?" "தப்பான கேள்வி இல்ல.. சொல்லப்போனா.. இதெல்லாம் ஒரு கேள்வியே இல்லை.." "ஏன் அப்டி சொல்றீங்க..?" "ஆமாம்.. எனக்கு மட்டுமா வந்திருந்தாங்க..? உனக்கு கூடத்தான் நெறைய பொண்ணுக ப்ரண்ட்ஸ் வந்திருந்தாங்க.. அதெல்லாம் நான் ஏதாவது கேட்டனா..?" அவர் கிண்டலான குரலில் சொல்ல, "ப்ச்.. வெளையாடாதீங்க..!! நீங்களும் நானும் ஒண்ணா..? நான் பொண்ணு.. அதனால நெறைய பொண்ணுங்க வந்திருந்தாங்க.." "இங்க பாரு பவி.. எனக்கு நெறைய ப்ரண்ட்ஸ் இருக்காங்க.. அதுல நெறைய பொண்ணுங்களும் இருக்காங்க.. ப்ரண்ட்ஸ்ல எனக்கு பசங்க, பொண்ணுங்கன்னு வித்தியாசம்லாம் கெடயாது.. தே ஆர் ஜஸ்ட் ப்ரண்ட்ஸ்.. அவ்ளோதான்..!!""ம்ம்.. அதுசரி.. அந்தப் பொண்ணு பேர் என்ன..?" "எந்தப் பொண்ணு..?" "அதான்.. ஜீன்ஸ், வொயிட் டி-ஷர்ட் போட்டிருந்தாளே.. உங்க காதுல கூட அடிக்கடி குசுகுசுன்னு எதோ சொல்லிட்டு.. சிரிச்சுக்கிட்டு இருந்தா.." "ம்ம்.. ஷர்மிலி.. அவளுக்கென்ன..?" "அப்டி என்ன சொன்னா.. உங்க காதுல..?" "கண்டிப்பா தெரிஞ்சுக்கனுமா..?" "ம்ம்.." "சொன்னா கோவிச்சுக்க கூடாது.." "ம்ஹூம்.. சொல்லுங்க.." "உனக்கு பொண்டாட்டியா வரப்போறவ... நல்லா ஸ்டைலா.. நுனி நாக்குல இங்க்லீஷ் பேசிக்கிட்டு.. மாடர்னா இருக்கணும்னு சொல்லுவ.. இப்போ இப்டி ஒரு பக்கா தமிழச்சிகிட்ட வகையா மாட்டிக்கிட்ட… உன் பாடு இனிமே கஷ்டந்தான்னு சொன்னா.." "ஓ.. அவ ரொம்ப மாடர்னோ..?" அவ்வளவுதான்..!! இப்போது அசோக் பொறுமையிழந்தார். சற்றே சலிப்பான குரலில் சொன்னார். "பவி.. போதும்.. வேற டாப்பிக் மாத்தலாம்..!!" "வேறன்னா..?" "ம்ம்ம்.. உனக்கு இது சாஃப்டா இருக்கு.. ஆனா சரியாம இருக்கே எப்படி..??" சொல்லிக்கொண்டே அவர் என் இடது முலையை பிடித்து பிசைய, "ச்சீய்...!!!!!!" நான் வெட்கப்பட்டவாறே அவருடைய கையை தட்டிவிட்டேன். அவர் இப்போது என் முகத்தை நிமிர்த்தி என் உதடுகளை கவ்விக் கொண்டார். சர்ரென உறிஞ்சிக்கொண்டே, என்னை புரட்டி, என் மீது கவிழ்ந்தார். அவருடைய விறைத்த ஆண்மையை என் பெண்மை மேட்டில் வைத்து மெல்ல அழுத்தினார். கொஞ்ச நேரம் வற்றிப் போயிருந்த சுக ஊற்று, இப்போது மீண்டும் எனக்குள் சுரக்க ஆரம்பித்தது. ஆனால் அதே நேரம்.. மனதின் ஒரு மூலையில் ஏதோ ஒரு நெருடல் லேசாய் உறுத்த ஆரம்பித்தது.அடுத்த நாள் காலை.. 'பட்.. பட்.. பட்..' என கதவு தட்டப்பட, நான் படக்கென விழித்துக் கொண்டேன். 'பவித்ரா.. எந்திரிம்மா..' வெளியே என் மாமியாரின் குரல் கேட்டது. நான் பரபரப்பானேன். பாதி உதிர்ந்து போயிருந்த மல்லிகையை தலையில் இருந்து தனியாய் பிரித்து எறிந்தேன்.அங்கங்கே சிதறிக் கிடந்த எனது ஆடைகளை அள்ளி, அவசர அவசரமாய் அணிந்து கொள்ள ஆரம்பித்தேன். அருகில் அசோக் ஆழ்ந்த உறக்கத்தில் அசையாமல் கிடந்தார். அவர் தூங்கும் அழகை பார்த்ததும், என் உதட்டில் ஒரு மெலிதான புன்னகை அரும்பியது. குப்புறக் கவிழ்ந்து கொண்டு.. குழந்தை மாதிரி வாயை 'ஓ..' வென திறந்து வைத்துக் கொண்டு..!! 'நைட்டு மட்டும் நாலு தடவை அந்த பாய்ச்சல் பாய்ஞ்சது.. இப்போ தூங்குறதை பாரு.. ஒன்னும் தெரியாத பச்சைப் புள்ளை மாதிரி..!!' நான் மனதுக்குள்ளேயே முனுமுனுத்தவாறு, ஆடைகளை அணிந்து முடித்தேன். எழுந்து சென்று கதவு திறந்தேன். என் மாமியார் நின்றிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் ஒரு முறை என்னை ஸ்கேன் செய்வது மாதிரி மேலும் கீழும் பார்த்தார். பின்பு தலையை லேசாய் சாய்த்து, உறங்கிக்கொண்டிருந்த தன் மகனை பார்த்தார். அடுத்த நொடியே அவருடைய முகத்தில் அவ்வளவு பூரிப்பு..!! புன்னகையுடன் என்னிடம் கேட்டார். "நீ காபி சாப்பிடுவியா.. டீ சாப்பிடுவியா.. பவித்ரா..?" "இ..இல்லத்தை.. நா..நானே வந்து போட்டுக்குறேன்.." "பரவால்லம்மா.. இன்னைக்கு ஒருநாள் நான் என் மருமகளுக்கு போட்டு எடுத்துட்டு வர்றேனே.. என்ன வேணும்னு மட்டும் சொல்லு.. காபியா..? டீயா..?" "அ..அவர் என்ன சாப்பிடுவாரு..?" "அவனுக்கு எப்பவும் காபிதான்..!!" "அப்போ.. நானும் அதையே சாப்பிடுறேன்த்தை.." நான் சொன்னதும் என் மாமியாரின் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம். வாஞ்சையுடன் ஒரு கையால் என் கன்னத்தை தாங்கிப் பிடித்தார். மெல்ல தடவினார். புன்னகையுடன் சொன்னார்.

"அஞ்சு நிமிஷத்துல போட்டு எடுத்துட்டு வர்றேன்.." சொல்லிவிட்டு திரும்பி நடந்தவர், நான்கைந்து எட்டுகள் எடுத்துவைத்ததும், மீண்டும் எதோ ஞாபகம் வந்தவராய் என்னிடம் திரும்பி சொன்னார். "பாத்ரூம்ல கவர் பிரிக்காம ஒரு ப்ரஷ் இருக்கும் பவித்ரா.. உனக்குத்தான் அது..!!" "ம்ம்.. சரித்தை.." நான் பாத்ரூம் சென்று ப்ரஷ் செய்தேன். மனதுக்குள் என் மாமியாரின் மீதான மதிப்பு ஏறிக்கொண்டே சென்றது. மருமகளுக்கு என்னென்ன தேவை என்று யோசித்து, டூத்ப்ரஷ் முதற்கொண்டு வாங்கி வைத்திருக்கிறாள். இந்த மாதிரி மாமியார் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றே தோன்றியது. ப்ரஷ் செய்துவிட்டு, மீண்டும் கட்டிலில் வந்து அமர்ந்தேன். என் கணவர் தூங்கும் அழகை.. விட்ட இடத்தில் இருந்து ரசிக்க ஆரம்பித்தேன். முதுகு காட்டி உறங்கிக் கொண்டிருந்தவர், இப்போது மார்பு காட்டி படுத்திருந்தார். நான் அவரை நெருங்கி அவருக்கு பக்கவாட்டில் படுத்துக் கொண்டேன். அவருடைய முகத்தை நெருக்கமாக கவனித்தேன். நெற்றியில் புரண்ட கொத்து முடிக்கற்றை.. விழி மூடியிருந்த இமைகள்.. புருவங்கள்.. இரவு முழுதும் என்னை உறிஞ்சிக்குடித்த அந்த பிங்க் நிற உதடுகள்.. உதட்டுக்கு மேல் எனது பேவரிட் மீசை..!! பற்களால் கடித்து இழுக்க வேண்டும் என்ற ஆசை மனதில் மீண்டும் துளிர்விட்டது. ஆனால் கடித்து இழுத்தால் கத்துவாரோ.. எழுந்து திட்டுவாரோ என்று பயமாக இருந்தது. முத்தம் மட்டும் தரலாம் என எண்ணினேன். குனிந்து என் உதடுகளை குவித்து அந்த மீசையில் மென்மையாக முத்தமிட்டேன். உடனே அவருக்கு உடல் லேசாய் சிலிர்த்தது. ஆனால் தூக்கம் கலையவில்லை. அப்படியே புரண்டார். புரண்ட வேகத்தில் அவருடைய கை என் இடுப்பு மீது வந்து படியவும், வாசலில் என் மாமியார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.நான் பதறிப் போய் எழுந்தேன். 'வா..வாங்கத்தை..' என்று வாய் குழறினேன். அவர் எதுவும் சொல்லவில்லை. ஒரு நமுட்டு சிரிப்பை உதிர்த்தார். கையில் வைத்திருந்த காபி ட்ரேயை என்னிடம் நீட்டினார். "இது அவனுக்கு பவித்ரா.. அவனுக்கு காபி கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கணும்.." அவர் சொல்ல நான் மனதுக்குள் 'என் கணவருக்கு காபி ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும்' என்று ஏற்றிக் கொண்டேன். "சரித்தை.. நான் கொடுத்துர்றேன்.." "ம்ம்ம்.. அப்புறம்.." என்றவர் சற்று நிறுத்தினார். "எ..என்னத்தை..?" "ஸாருக்கு தூக்கத்துல இருக்குறப்போ எழுப்பினா.. பயங்கர கோவம் வரும்.. கொஞ்சம் பாத்துக்கோ.." "ம்ம்.. சரித்தை.." நான் புன்னகையுடன் சொல்ல, அவர் கிளம்பினார். நான் காபி ட்ரேயை டேபிளில் வைத்தேன். நிறம் குறைவாக இருந்த காபியை எடுத்து கொண்டேன். மீண்டும் என் கணவர் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டே, பொறுமையாக உறிஞ்சினேன். இரவு அவர் செய்த அட்டகாசங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. அவ்வளவு ஆசையையும் எத்தனை நாள் அடக்கி வைத்திருந்தாரோ..? நேற்றிரவு மொத்தமாய் கொட்டித் தீர்த்து விட்டார். இரவு முழுதும் அவருடைய ஆண்மைப்பிடியில் சிக்கி, உடல் லேசாக வலிப்பதை உணர முடிந்தது. ஆனால் அவ்வலியும் சுகமெனவே தோன்றியது. காபியை முடித்து காலி கோப்பையை ட்ரேயில் வைத்தேன். என் கணவரை எழுப்பலாம் என்று தோன்றியது.'என்னங்க..' என்று அவருடைய தோளில் கை வைத்தேன். அவரிடம் எந்த சலனமும் இல்லை. மீண்டும் ஒரு 'என்னங்க..'வோடு இந்த முறை அந்த தோளை பிடித்து அசைத்தேன். மென்மையாகத்தான்..!! அதற்கே அவர் படக்கென சிலிர்த்துக் கொண்டு விழித்தார். எழுந்த வேகத்தில் 'உச்ச்ச்ச்..!!!' என்றவாறு, கண்களை இடுக்கி உக்கிரமாக என்னை முறைக்க, நான் வெலவெலத்துப் போனேன். அழகு கொஞ்சும் அந்த முகம் இப்படி அகோரமாகவும் மாறுமா..??? "என்ன..?" என்றார் எரிச்சலாக. "கா..காபி.." நான் உடலெல்லாம் வெடவெடக்க சொன்னேன். "அங்க வச்சிடு.." "ஆ..ஆறிடும்.." "ஆறட்டும்..!!" பட்டென சொன்னவர் மீண்டும் குப்புறப்படுத்துக் கொண்டார். இமைகளை மூடி.. விட்ட இடத்தில் இருந்து தூக்கத்தை தொடர ஆரம்பித்தார். நான் உடலின் நடுக்கம் குறையாமல் உறைந்து போய் அமர்ந்திருந்தேன். அப்பா... எப்படி கோபம் வருகிறது இவருக்கு..? தூக்கத்தில் இருக்கும்போது எழுப்பினால், இவ்வளவு எரிச்சல் வருமா..? அத்தை அவ்வளவு சொல்லியும் கவனம் இல்லாமல் நடந்து கொண்டேனோ என்று தோன்றியது. நெஞ்சு படபடப்பு அடங்கும் வரை கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தேன். அப்புறம் எழுந்து குளிக்க சென்றேன். உடைகளை களைந்து நிர்வாணம் ஆகி.. நேற்றிரவு பார்த்த மாதிரி என் உடலை மீண்டும் பாத்ரூம் கண்ணாடியில் பார்த்தேன். நேற்றிரவு பார்த்ததற்கும் இன்று காலை பார்ப்பதற்கும், உடலில் நிறைய மாற்றங்கள் இருப்பதாக தோன்றிற்று. இரவு முழுவதும் அசோக்கின் ஆக்கிரமிப்பில் சிக்கியிருந்த மேனி, லேசாய் வாடிப் போயிருந்தது..!! உதடுகள் ஒரு ஆண்மகனின் ஆவேசத்தால் சற்றே வீங்கிப் போயிருந்தன..!! நாக்கு அந்த ஆண்மகனின் எச்சில் சுவையை நன்றாகவே உணர்ந்திருந்தது. பட்டுப்போன்ற என் மார்பு சதைகளில் ஆங்காங்கே அவருடைய பல் தடங்கள்..!! நாக்கினால் அவர் அவ்வளவு நேரம் தடவி தடவி ஆசுவாசப் படுத்தியிருந்தாலும், காம்புகள் ரெண்டும் தடித்துப் போயிருப்பதாகவே தோன்றியது. பின்புற மேடுகள் கன்னிச் சிவந்து போயிருந்தன. ஆணுறுப்பின் வீரியத்தை.. அது உள்ளே சென்று வருவதில் உண்டாகிற சுகத்தினை.. என் பெண்ணுறுப்பு இப்போது நன்றாக அறிந்திருந்தது. அதற்கு ஈடாக.. தனது கன்னித்தன்மையை காணிக்கையாய் கொடுத்திருந்தது..!!இரவு முழுதும் நடந்த காம விளையாட்டுக்களை நினைந்து சிரித்துக்கொண்டே, ஷவரில் நனைந்தேன். நான்கு முறை..!! இன்பத்தின் எல்லை வரை சென்று, மீண்டு வந்த நான்கு முறை..!! ஆண்மையின் முழு வேகத்தை நான் அறிந்து கொண்ட நான்கு முறை..!! அந்த ஆண்மையின் உச்ச நீரை, என் பெண்மையின் ஆழத்தில் வாங்கிக்கொண்ட நான்குமுறை..!! தூங்குவதும், பின் விழிப்பதும், விழித்ததும் பின் ஆரம்பிப்பதுமாய்.. ஓரிரவில் எங்களால் முடிந்த நான்கு முறை..!! குளித்து முடித்து, வேறு உடை அணிந்து கொண்டு, பாத்ரூம் கதவை திறந்தவள், பக்கென அதிர்ந்து போனேன். கதவுக்கு வெகு அருகே அசோக் நின்று கொண்டிருந்தார். எந்திரம் மாதிரி.. எந்த உணர்ச்சியையும் காட்டாமல்.. முகத்தை ஒருமாதிரி உர்ர்ரென வைத்துக் கொண்டு என்னையே முறைத்தார். அமைதியாயிருந்த என் மனது இப்போது மீண்டும் படபடக்க ஆரம்பித்தது. "எ..என்னங்க..?" என்றேன் நடுக்கமாய். "என்ன காபி கொடுத்த நீ..? ஷுகரே இல்லை..??" "தெ..தெரியலைங்க.. அ..அத்தைதான் போட்டு எடுத்துட்டு வந்தாங்க.." "எனக்கு அதுலாம் தெரியாது.. நீதான் எனக்கு காபி கொடுத்த.. இப்போ நீதான் ஷுகரும் கொடுக்கணும்.." சொன்னவர் பட்டென ஒரு கையால் என் இடுப்பை வளைத்து இழுத்தார். இழுத்த வேகத்தில் என் இதழ்களை தன் இதழ்களால் கவ்விக்கொண்டார். ஆவேசமாக உறிஞ்ச ஆரம்பித்தார். அவருடைய கடுகடு முகம் எப்போது காதல் கொஞ்சும் முகமானது என்று எனக்கு நினைவில்லை. உர்ரென இருந்தவர் உதடு கவ்வி உறிஞ்சுவார் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை. அவரிடம் இதழ்களை இழந்திருந்தது இதமாய் இருந்த போதும், பிடிக்காத மாதிரி அவரை தள்ளிவிட்டேன்.ஐயோ.. என்னங்க இது.. யாராவது வந்துடப் போறாங்க..?" "யாரும் வர மாட்டாங்க.. கதவை லாக் பண்ணியாச்சு.. வா பவி.." சொன்னவர் மீண்டும் என் உதடுகளில் தன் உதடுகளை பதித்தார். முத்த வன்முறை செய்தார். இந்தமுறை நான் ரொம்ப பிகு பண்ணாமல் அவருடன் ஒத்துழைத்தேன். அவருடைய இடுப்பை சுற்றி என் கையை போட்டுக் கொண்டு, அவர் உறிஞ்சி முடிக்கும் வரை என் உதடுகளை அவருக்கு விட்டுக் கொடுத்து நின்றிருந்தேன். நீண்ட நேரம் ஆசையாய் சுவைத்து விட்டு, அவர் என்னை விடுவிக்க, "என்னங்க இது.. காலங்காத்தாலேயே..?" நான் வெட்கத்தில் முகம் சிவந்து போனவளாய் கேட்டேன். "ஏய்.. என்ன.. இதுக்கே இப்படி வெட்கப் படுற..? சென்னைக்கு போனப்புறம் பாரு.. காலங்காத்தால இன்னும் என்னென்ன வேலைலாம் பண்றேன்னு.." அவர் சொல்லிவிட்டு கண்ணடிக்க, நான் "ச்ச்சீய்ய்ய்..!!!" என வெட்கமுற்றேன். கொஞ்ச நேரம் என் வெட்க முகத்தை ஆசையாக ரசித்தவர், பின்பு கனிவான குரலில் கேட்டார். "எழுப்புறப்போ.. எரிஞ்சு விழுந்துட்டேன்னு கோவமா பவிம்மா..?" "ச்சேச்சே.. அ..அதுலாம் ஒண்ணுல்ல.." "ஸாரிடா.. எங்கிட்ட ரொம்ப நாளா இருக்குற கெட்ட பழக்கம் அது.. கண்டிப்பா மாத்திக்கிறேன்.. சரியா..?" சொல்லிக்கொண்டே அவர் என் கைகள் ரெண்டையும், தன் கைகளுக்குள் வைத்து காதலாக முத்தமிட, சற்றுமுன் இருந்த ஒரு சின்ன கவலை இப்போது காலைப்பனியாய் மறைந்து போனது.இனிமே அந்த மாதிரி நான் மூஞ்சியை காட்டுனா.. என் கன்னத்துலையே ரெண்டு அறை கொடு.. ஓகேவா..?" "ஹ்ஹ்ஹாஹ்ஹா.. ம்ஹூம்.. அப்டிலாம் நான் பண்ண மாட்டேன்.." "இல்ல இல்ல.. நீ கொடுக்கணும்.." "சரி.. கொடுக்குறேன்.. ஆனா.." "ம்ம்.. ஆனா..?" "அறை இல்லை.. முத்தம்..!!" நான் வெட்கத்துடன் சொல்ல, அவர் முகம் மலர்ந்தது. "வாவ்... பரவால்லயே..?" "என்ன பரவால்ல..?" "என் பொண்டாட்டிக்கும் ரொமான்ஸ் நல்லா வருதே..?" "ச்சீய்..." "ஹ்ஹ்ஹ்ஹா... ம்ம்ம்.. அதுசரி.. பாத்ரூமுக்குள்ள போய் என்ன பண்ணிட்டு வர்ற..?" "பாத்ரூமுக்குள்ள என்ன பண்ணுவாங்க..? குளிச்சுட்டு வர்றேன்.." "குளிச்சுட்டியா..? நெஜமாவா..?" அவர் ஆச்சரியமாய் கேட்டார். "ஆமாம்.. ஏன்..?" "குளிச்ச மாதிரியே தெரியலையே..?" "அப்டியா..?" இப்போது நான் நம்ப முடியாமல் கேட்டேன். "ஆமாம்.. இப்போதான் தூங்கி எந்திரிச்ச மாதிரி இருக்கு.. வா.. இன்னொரு தடவை நல்லா குளிக்கலாம்.." அவர் குறும்பான குரலில் சொல்லியபடி என் கையைப் பற்றி உள்ளே இழுக்க, அவருடைய திட்டம் எனக்கு விளங்கிற்று. "ச்சீய்.. விடுங்கப்பா.. நான் வரலை.." "இட்ஸ் ஓகே.. கமான்.. எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.." "உங்களுக்கு என்ன ப்ராப்ளம்..? எனக்குத்தான் ப்ராப்ளம்.. விடுங்க.." சொல்லிக்கொண்டே நான் கையை உதறி பறித்துக் கொண்டேன். "ப்ளீஸ் பவி.." "ம்ஹூம்.. இன்னொரு நாள்.." அவர் சிணுங்குவது மாதிரி நடித்துக் கொண்டே பாத்ரூமுக்குள் புகுந்து கொண்டார். நான் அறைக்கதவை திறந்து வைத்துவிட்டு , மெத்தையில் அமர்ந்தேன். மனசுக்குள் மத்தாப்பு கொளுத்திப் போட்டது மாதிரி இருந்தது. என் கணவர் செய்த சில்மிஷங்கள்தான் காரணம். யப்பா....!!! செம சேட்டைதான் இது..!! எப்படி இதை சமாளிக்கப் போகிறேனோ..? ஒரு பத்து நிமிடம் ஆயிருக்கும். வாசலில் நிழலாட நிமிர்ந்து பார்த்தேன். அந்தக் குட்டிப்பெண் நின்றிருந்தாள். அசோக்குடைய அக்காவின் மகள். நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். நேற்றே அந்தக்குட்டியின் பெயர் சொன்னார்கள். கல்யாண பரபரப்பில் மறந்து போயிருந்தது. அவள் இப்போது வாசலில் நின்று கைகளை பின்னால் கட்டி , ஒருமாதிரி என்னை முறைத்துக் கொண்டிருந்தாள். நான் அவளை பார்த்து புன்னகைத்தபடி அருகில் அழைத்தேன். "ஹாய் குட்டி.. உள்ள வா.." அவள் தயங்கி தயங்கி உள்ளே வந்தாள். ஆனால் எதுவும் பேசாமல் உர்ரென்று இருந்தாள். நான்தான் அவளுடைய கன்னத்தை பிடித்து தடவியவாறு மீண்டும் கேட்டேன். "குட்டிப்பொண்ணுக்கு என்ன வேணும்..?" "எனக்கு ஒன்னும் வேணாம்.. ஆச்சி உங்களை சாப்பிட கூப்பிட்டாங்க.." அது மழலை மொழியை உதிர்த்தது.ஓ..!! அங்கிள் குளிச்சுட்டு வந்ததும் ரெண்டு பேரும் வர்றோம்.. சரியா..? ஆமாம்.. உன் பேர் என்னடா செல்லம்..?"

"சோனு..!!" "வாவ்..!! ஸ்வீட் கேர்ளுக்கு.. பேரும் ஸ்வீட்டா இருக்கே..?" சொல்லிக்கொண்டே நான் அவளுடைய கன்னத்தில் முத்தமிட செல்ல, அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள். "டோன்ட் கிஸ் மீ..!!" என்றாள் முறைப்பாக. "ஆன்ட்டி உன்னை கிஸ் பண்ண கூடாதா..? ஏன்..?" நான் புன்னகையுடன் கேட்க, "நீங்க என் எனிமி..!!" என்றாள் அவள். எனக்கு பட்டென முகம் சுருங்கிப் போனது. "எனிமியா..?" "எஸ்..!! நீங்க மட்டும் வரலைன்னா.. அசோக் அங்கிள் என்னத்தான் மேரேஜ் பண்ணிருப்பாரு.. உங்களால என் லைஃபே ஸ்பாயில் ஆயிடுச்சு..!!" அவள் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு சொல்ல, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. சத்தம் வெளியே வந்து விடக்கூடாது என, கையால் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தேன். குலுங்கி குலுங்கி..!! எனது சிரிப்பு அந்த சோனுக்குட்டிக்கு மேலும் கடுப்பை வரவழைத்திருக்க வேண்டும். மேலும் முறைத்தாள். நான் கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டேன். "அசோக் அங்கிளை மேரேஜ் பண்ணிக்கனுமா உனக்கு..?" "எஸ்..!! ஐ லவ் ஹிம்..!!" "ஹ்ஹ்ஹா.. யாரு இதுலாம் உனக்கு சொல்லிக் கொடுத்தா..?" "அசோக் அங்கிள்தான்.. அவரும் என்னை லவ் பண்றாரு..!!" அவள் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, என் பின்னால் இருந்து அசோக் கத்துவது கேட்டது. "ஹாய் பொண்டாட்டி..!!!!!!!!!!!!" நான் திரும்பி அவரை நம்ப முடியாமல் பார்த்து புன்னகைத்தேன். 'என்ன இது..? வெளியே வந்ததும் வராததுமாக.. என்னை குஷி மூடில் அழைக்கிறார்..?' நான் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, "ஹாய் புருஷா..!!!!!!!!!!!" என்று இந்த குட்டிப்பெண் அவரை நோக்கி ஓடிச்சென்றாள். அவர் அவளை அப்படியே அள்ளிக் கொள்ள, அவள் அவருடைய கழுத்தை கட்டிக்கொண்டு அவருடைய கன்னத்தில் மாறி மாறி 'இச்.. இச்.. இச்.. இச்..' என முத்தம் கொடுக்க ஆரம்பித்தாள். நான் காதில் புகை வர அவர்கள் இருவரையும் முறைத்தேன். அவர்கள் என்னை கண்டுகொள்ளவே இல்லை. "அச்சோ.. கிஸ் பண்ணிட்டனே..? நான் உன் கூட டூ..!!" என்றாள் சோனு. "ஏண்டா செல்லம்..?" "நீ என்னை விட்டுட்டு.. இந்த ஆண்ட்டியை மேரேஜ் பண்ணிக்கிட்டேல..? போ.. உன் கூட டூ..!!" "நீ குட்டிப்பொண்ணுல..? அங்கிள் எப்படி உன்னை மேரேஜ் பண்ணிக்கிறது..? நீ பெரியவ ஆனதும்.. அங்கிள் இந்த ஆண்ட்டியை டைவர்ஸ் பண்ணிட்டு.. உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்..!! ஓகேவா..?" அவர் அறிவில்லாமல் கேட்க, அந்த சோனுவின் முகத்திலோ அப்படி ஒரு ஆனந்தம்...!! "ஓகேடா புருஷா.. ஐ லவ் யூ..!!" என்றவள், மீண்டும் மாறி மாறி அவருடைய கன்னங்களை ஈரமாக்க ஆரம்பித்தாள். எனக்கு உள்ளுக்குள் ஏதோ பொசுங்குவது மாதிரி இருந்தது. ஆனால் சில விநாடிகள்தான் அந்த மாதிரி ஒரு உணர்வு நீடித்தது. 'அவள் குட்டிப்பெண்.. அவர் அந்தக் குழந்தையின் முகத்தில் சிரிப்பை வரவழைக்க அப்படி விளையாட்டுத்தனமாய் பேசுகிறார்.. அவர் சொல்வது மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை..' என்று என் மூளை எனக்கு உணர்த்தியதும், உடனடியாய் சகஜமானேன். ஆனால்.. ‘நேற்றுதான் எனக்கு அவர் கணவர் ஆனார். அதற்குள்ளாகவே என் மனதுக்குள் அவர் மீது எனக்கு இவ்வளவு உரிமை உணர்வு வர வாய்ப்பு இருக்கிறதா..?’ என்ற ஒரு எண்ணமும் என் மனதுக்குள் ஓடி அடங்கியது.ஏய்.. என்னாச்சு..? பசிக்கலையா உனக்கு..? வா.. சாப்பிட போலாம்.." என்று சகஜமாக கேட்டவாறு அசோக் என் தோளில் கை போட்டு அழைக்க, நானும் இயல்பு நிலைக்கு திரும்பி அவருடன் நடக்க ஆரம்பித்தேன். ஹாலில் அனைவரும் சாப்பிடுவதற்கு தயாராக இருந்தார்கள். அசோக்குடைய குடும்பத்தினர், சில உறவினர்கள், என் அம்மா, அப்பா, மாமா.. அனைவரும்..!! என் தம்பி நேற்று திருமணம் முடிந்ததுமே கிளம்பி விட்டான். எஞ்சினியரிங் படிக்கிறான் அவன். கல்லூரியில் ஒரு நாள்தான் அவனுக்கு விடுப்பு கிடைத்தது. செங்கல்பட்டுதான் எங்களுக்கு சொந்த ஊர். என் கணவர் அசோக்கிற்கு மதுரை. அவர் வேலை பார்ப்பது சென்னையில்..!! மேட்ரிமோனி வெப்சைட் மூலமாகத்தான் இந்த திருமணம் அமைந்தது. எங்கள் குடும்ப வழக்கத்தின்படி பெண்ணின் வீட்டில்தான் திருமணம் நடக்கும். ஆனால் எங்களுக்கு நிறைய சொந்த பந்தங்கள் இல்லாத காரணத்தினாலும், அசோக்கிற்கு இருக்கும் எக்கச்சக்க சொந்த பந்தங்கள் எல்லாம் மதுரையை சுற்றியே இருப்பதாலும், திருமணம் மதுரையில்தான் நடந்தது. இன்று இரவு செங்கல்பட்டு செல்வதாக திட்டம். சாப்பிட்டு முடித்த பிறகு, எல்லோரும் வேனில் கோயிலுக்கு கிளம்பினோம். எனது புகுந்த வீட்டின் குல தெய்வ கோயில். மதுரையிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் இருந்தது. பின்பு மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்று, புதுமணத் தம்பதி இருவரும் ஆசி பெற்றோம். இரவு அதே வேனில் செங்கல் பட்டு பயணம்..!! அடுத்தநாள் மாலை.. அங்கு ரிஷப்ஷன்..!! செங்கல்பட்டில் இரண்டு நாட்கள் இருந்தோம். பின்பு மீண்டும் மதுரை வந்து ஒருவாரம் தங்கியிருந்தோம். அந்த பத்து நாட்களில் நிறைய உறவினர்கள் வீட்டிற்கு சென்றோம். பெரும்பாலும் என் கணவருடைய உறவினர்கள். விருந்து என்ற பெயரில் எல்லோரும் எங்கள் வயிறின் கொள்ளளவு, தாங்கும் திறன், ஜீரண சக்தி எல்லாம் டெஸ்ட் செய்தார்கள். இந்த விருந்து என்ற விஷயத்தை எந்த புண்ணியவான் கண்டு பிடித்தானோ என நாங்கள் இருவரும் விழிகள் பிதுங்கும் அளவிற்கு..!! பயணம், அலைச்சல், களைப்பு.. எல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், ஒரு நொடி கூட எனக்கு சலிக்கவில்லை. என் கணவரின் அருகிலேயே இருந்ததுதான் காரணம்..!! ஒவ்வொரு கணமும் புதிது புதிதாய் அவரைப் பற்றி எதையாவது தெரிந்து கொள்ள முடிந்தது. எது பிடிக்கும்.. எது பிடிக்காது.. எதற்கு கோபம் வரும்.. எதற்கு சிரிப்பார்.. எல்லாம் என் மனதுக்குள் ஏற்றிக் கொள்ள முடிந்தது. அதே மாதிரி அவரும் என் ரசனைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வமாயிருந்தார். நிறைய விஷயங்களில் இருவருக்கும் ஒத்த ரசனைகள் என்று சொல்ல முடியாது. ஆனால்.. ஒருவர் அடுத்தவரை பற்றி அறிந்து கொள்ள.. அந்த பத்து நாட்கள் மிக உதவியாக இருந்தன. அடுத்து நாங்கள் வாழப் போகும் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட உதவிய நாட்கள்..!! ஒருபுறம் அவரைப் பற்றி அறிந்து கொள்வது சுகமான விஷயமாக இருக்க, இன்னொரு புறம் அவரது சில்மிஷங்களை சமாளிப்பது சவாலான காரியமாக இருந்தது. பகலில்.. எந்த நேரமும் நான் இருக்கும் இடத்தையே குட்டி போட்ட பூனை மாதிரி சுற்றி சுற்றி வருவார். அடுத்தவர் அறியாமல் கண்களாலேயே காதல் அம்பு விடுவார். காற்றில் முத்தம் அனுப்புவார்..!! வேறு யாரும் பார்த்து விடுவார்களோ என எனக்கோ இதயம் படபடக்கும். டைனிங் டேபிளில் அமர்ந்திருக்கும்போது, அவருடைய கட்டை விரல் எனது கணுக்கால் உரசும். கொஞ்சம் அசந்தால் போதும்.. எனது புடவையை மேலே உயர்த்த முயற்சி செய்யும்..!! அத்தை அந்தப்பக்கம் திரும்புகையில், இவருடைய கை விரல்கள் இந்தப்பக்கம் என் இடுப்பு கிள்ளும்..!! இரவிலோ.. இன்னும் தொல்லை..!! என் இளமையை அள்ளி அள்ளி பருகினார், சற்றும் சலிக்காமல்..!! நானும் ஆண்மையின் ஆக்கிரமிப்பில் கிடைக்கும் ஆனந்தத்தை அலுக்காமல் அனுபவித்தேன். இந்த பத்து நாட்களில் இன்னொரு விஷயத்தையும் என்னால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது. அது.. பெண்கள் எல்லோருக்கும் என் கணவரை பிடிக்கிறது என்பதுதான்..!! அவருடைய அக்கா பெண் அந்த சோனு குட்டி முதல்.. அவருடைய எழுபத்தைந்து வயது பாட்டி வரை..!! பக்கத்து வீட்டு மாமி முதல்.. எதிர் வீட்டு கல்லூரிப்பெண் வரை..!! வேலைக்காரி வேணியக்கா முதல், பூ கொண்டு வரும் புனிதா அக்கா வரை..!! அவரிடம் எதோ வசீகரம் இருக்கிறது என்று தோன்றியது. அது எனக்கு வயிற்றெறிச்சலை கிளப்பி விடவும் தவறவில்லை..!! புருஷன் அருகில் இல்லாமல், புகுந்த வீட்டில் தனியாக காலம் கழிப்பது எந்தப் பெண்ணுமே விரும்பாதது. எனக்கு அது திருமணம் ஆன பத்தே நாட்களில் அனுபவிக்க கிடைத்தது. சென்னையில் நானும், அசோக்கும் வாழப் போகும் வீடு பல்லாவரத்தில் இருக்கிறது. வாடகை வீடுதான். ஆனால் வீடு இப்போது காலியாக இல்லை. ஏற்கனவே இருக்கும் குடும்பம் அடுத்த வாரம்தான் காலி செய்கிறார்கள். ஆனால் என் கணவருக்கு ஆபீசில் அதுவரை லீவ் கிடைக்கவில்லை. எனவே அசோக் சென்னை கிளம்பி சென்று, அந்த ஒரு வாரம் வழக்கம் போல தன் நண்பர்களுடன் தங்கிக் கொள்வது.. நான் மதுரையில் தங்கியிருப்பது என்று முடிவானது.. அவர் கிளம்புவதற்கு முந்தய நாள் இரவு, எனக்கு மனசே சரியில்லை..!! இதயத்தை யாரோ பிசைவது மாதிரி வலித்துக் கொண்டே இருந்தது. என் அம்மா அப்பாவை பிரிந்து, புகுந்த வீடு வந்தபோது இருந்ததற்கு ஒப்பான வலி..!! என் கணவர்தான் என்னை தேற்றினார். அன்றிரவு.. ஆட்டமெல்லாம் ஆடிக் களைத்த பிறகு.. நான் அவருடைய அணைப்பில் கோழிக்குஞ்சு மாதிரி அடங்கியிருந்தேன். எங்கள் உடலில் ஒட்டுத்துணி இல்லை. அவரது ஆணுறுப்பு சற்றே சோர்ந்து போய் எனது தொடையில் தவழ்ந்து கொண்டிருந்தது. அவருடைய மார்புக்காம்புகள் எனது மார்புக்காம்பை உரசிக் கொண்டிருந்தன. அவருடைய விரல்கள் எனது கூந்தலுக்குள் நுழைந்து கோலமிட்டன. நான் மெல்லிய குரலில் ஆரம்பித்தேன்."எ..என்னங்க.." "ம்ம்ம்.." "ஒருவாரத்துல வந்துடுவீங்கல்ல..?" "கூட ரெண்டு நாள் ஆனா கூட ஆகலாம் பவி.." "ஏன்ப்பா..?" "வீடு காலியானதும்.. கிளீன் பண்ணி.. திங்ஸ்லாம் கொண்டு போய் போட்டு.. கொஞ்சம் அரேன்ச் பண்ணனும் பவி.. நீ அந்த வீட்டுக்குள்ள போறப்போ.. அது ஒரு வீடு மாதிரி இருக்கணும்..!!" "ம்ம்.. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ.. அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க.." "ஏண்டா.. நான் இல்லாம.. இங்க தனியா இருக்குறது உனக்கு பிடிக்கலையா..?" "அ..அப்டி இல்ல.." நான் இழுத்தேன். "அப்புறம்..?" "கொ..கொஞ்சம் பயமா இருக்கு.." "ஹ்ஹ்ஹா.. பயமா.. அப்டி என்ன பயம் உனக்கு..?" "இருக்காதா..? எல்லாம் புது ஆளுங்க.. அவங்களுக்கு எது புடிக்கும், புடிக்காது.. அவங்கள்ட்ட எப்படி நடந்துக்கணும்.. எதுவுமே எனக்கு தெரியாது.. நீங்க பக்கத்துல இருந்தா கூட பரவால்ல.." "இங்க பாரு பவி.. எங்க வீட்டுல எல்லாம் நல்லவங்க.. அப்பா, அம்மா, என் தங்கச்சி வீணா..!! என்ன.. பாட்டிதான் கொஞ்சம் எல்லாரையும் கரிச்சு கொட்டிட்டு இருப்பாங்க.. அவங்களை நீ கண்டுக்காத.. மத்தபடி.. உனக்கு இங்க எந்தப் பிரச்னையும் இருக்காது.." "ம்ம்.." "புது மருமக அப்படின்னு.. எங்கம்மா உன்னை ஏதும் வேலை ஏவ மாட்டாங்க.. ஆனா.. அதுக்காக நீ சும்மா இருந்திடாத.. அப்பப்போ அவங்களுக்கு கொஞ்சம் ஒத்தாசையா இரு.. காய்கறி கட் பண்ணிக்கொடு.. காஞ்ச துணிலாம் மடிச்சு வை.. ரொம்ப சந்தோஷப்படுவாங்க.."

"ம்ம்.." "உனக்கு டைம் பாஸ் ஆகணும்னா.. என் தங்கச்சியை புடிச்சுக்கோ.. புக்ஸ், வீடியோஸ், ம்யூசிக்னு நெறைய கலக்ஷன் வச்சிருப்பா.. கேரம், கார்ட்ஸ், செஸ்னு அவகூட ஏதாவது வெளையாடு.. அவ காலேஜ்ல நடக்குற கூத்துலாம் கேளு.. டைம் போறதே தெரியாது..!!" "ம்ம்.." "பத்து நாள்.. பத்து செகண்ட் மாதிரி போயிடும் பவி.. சரியா..?" "ம்ம்.."அவர் சொன்ன மாதிரி அந்த பத்து நாட்கள், பத்து நொடிகளில் எல்லாம் செல்லவில்லை. பத்து யுகங்களாகவே கழிந்தன. எல்லா யுகமும் முடிந்து, என்னவரின் முகத்தை எப்போது காண்போம் என்றே செலவாயின. தினமும் இரவு ஒரு மணி நேரம் எனது கைபேசியில் காதல் பேசுவார். காமம் வாட்டுகிறது என்பார். அது மட்டுமே எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் அந்த பத்து நாட்களில் அவருடைய வீட்டினரைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிந்தது. என் மாமனார் காவல்த்துறையில் இருந்து ஓய்வு பெற்றவர். விறைப்பான, முறைப்பான காவலர்களுக்கு மத்தியில் என் மாமனார் ஒரு பரம சாது. அதிர்ந்து பேசக் கூட தெரியாதவர். அத்தையிடம் அடங்கிப் போகும் குணமுடையவர். அவ்வப்போது தன் காவல்த்துறை பணியின் போது ஏற்பட்ட அனுபவங்களை பேச ஆரம்பித்து, அத்தையிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார். என் மாமியார் மிகவும் அன்பான பெண்மணிதான். பிள்ளைகள் மேல் எக்கச்சக்க பாசம். அந்த பாசத்தில் பாதியையாவது தன் பதியின் மீது வைத்திருக்கலாம் என்று எனக்கு தோன்றும். அந்த அளவிற்கு ஒரு பார்வையிலேயோ.. சின்ன முறைப்பிலேயோ.. சில நேரங்களில் வெறும் மவுனத்திலேயோ.. என் மாமனாரை அடக்கி விடுவார். தனது மகனுக்கு நான் நல்ல மனைவியாய் இருப்பேன் என்ற நம்பிக்கை அவருக்கு எப்போதோ ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் என் மீது பிரியமாகவே இருப்பார். அசோக்கின் அக்கா இரண்டு நாட்களிலேயே தன் புகுந்த வீடு திரும்பியதால், அவரை பற்றி அதிகம் கணிக்க முடியவில்லை. ஆனால்.. பேசிய வரையில் நல்லவிதமாகவே பேசினார். எப்போதுமே சிரித்தமாதிரியான எல்லோருக்கும் பிடிக்கும் முகம் அவருக்கு..!! அசோக்கின் தங்கை வீணா.. கலகலப்பாக பேசுவாள்.. கல்யாண கனவில் மிதக்கும் கல்லூரிப் பெண்.. 'வசீகரா.. நிபுணா நிபுணா.. ஒன்றா ரெண்டா.. கலாதரா கண்கள் சுகமா..' என ஏதாவது ஒரு பாடலை எந்த நேரமும் அவளுடைய உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருக்கும். என் கணவர் சிறு வயதில் செய்த திருட்டுத்தனங்களை எல்லாம் அறிந்த ஒரே ஆள். அசோக்கின் பாட்டி.. அவருடைய அப்பாவின் அம்மா.. எந்த நேரமும் யாரையாவது திட்டிக் கொண்டே இருக்க வேண்டும் அவருக்கு. வீட்டில் உள்ளவர்களை திட்டி போரடித்தால், டிவி சீரியலில் வரும் வில்லன்கள் சிக்கிக் கொள்வார்கள். வீட்டில் அவரை திட்டும் ஒரே ஆள் வீணாதான். அத்தை கூட 'அதுக்கு வேற வேலை இல்ல..' என எரிச்சலை உதிர்த்துவிட்டு விலகி விடுவார். தினமும் அதிகாலையிலேயே எழுந்து விடுவேன். அத்தைக்கு கிச்சனில் உதவியாய் இருப்பேன். 'ஒரு காபி கூட போட தெரியலை.. உன்னைலாம் எப்படி பெத்து வளத்தாங்களோ..?' என பொறுமும் பாட்டியிடம் புன்னகைப்பேன். 'இதுலாம் நீ ஏன்மா பண்ற..?' என தன் சட்டையை அயர்ன் பண்ணும் என்னிடம் என் மாமனார் கேட்டால், 'இதுல என்ன இருக்கு மாமா..?' என்பேன். 'இன்னைக்கு எங்க காலேஜ்ல என்ன நடந்துச்சு தெரியுமா அண்ணி..?' என பேச ஆரம்பிக்கும் வீணாவிடம், கிழியும் வரை என் காதை விட்டுக் கொடுத்திருப்பேன். இரவில் என்னவர் கைபேசியில் அழைக்கும் வரை, ஏக்கமாய் காத்திருப்பேன். வீணாதான் என் பொழுது ஓரளவு வேகமாய் கழிய காரணமாயிருந்தாள். அடிக்கடி அவளுடைய அறைக்கு சென்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். விளையாடுவேன். அன்றும் அது மாதிரிதான். என்னுடைய கல்யாண ஆல்பம் வந்திருந்தது. அதைப் பார்த்து பேசிக் கொண்டிருந்தோம். "நீங்கதான் எல்லா போட்டோலயும் சிரிச்சுட்டு அழகா இருக்கீங்க அண்ணி.. அவனை பாருங்க.. எல்லாத்துலயும் மூஞ்சியை உர்ருன்னு வச்சுக்கிட்டு இருக்கான்.." "இல்லையே.. நல்லாத்தான இருக்காரு..?" நான் அவர் முகத்தில் இருந்து விழிகளை எடுக்காமலேயே சொல்ல, அவள் பதிலேதும் பேசவில்லை. ஒரு நமுட்டு சிரிப்பை மட்டும் உதிர்த்தாள். எல்லா போட்டோவும் பார்த்து முடித்த பிறகு திடீரென கேட்டாள். "அண்ணனோட பழைய ஆல்பம்லாம் பாக்குறீங்களா அண்ணி..?" "பழைய ஆல்பம்னா..?" "அவன் ஸ்கூல்.. காலேஜ் படிக்கிறப்போ எடுத்த போட்டோஸ்.." "வச்சிருக்கியா நீ..? எங்க இருக்கு..?" எனக்கு பட்டென ஒரு ஆர்வம் வந்து தொற்றிக் கொண்டது. "இருங்க எடுத்துட்டு வர்றேன்.. அண்ணன் அதுலலாம் இன்னும் ஸ்மார்ட்டா இருப்பான்.."

அசத்த போறது அசோக்..!! 2


அடுத்த பத்தாவது நிமிடம் நான் ஒரு பழைய பேப்பர் கடையில் இருந்தேன். பழைய குமுதம், ஆனந்த விகடன் ஒரு பத்து கிலோ வாங்கிக் கொண்டேன். மொத்தத்தையும் சுஜி ரூமில் கொண்டு போய் இறக்கினேன். அவள் அதை மிரண்டு போய் பார்த்தாள். "என்னத்தான் இது..??" "சுஜி.. எனக்கு கவிதைலாம எழுத வராது.. நீ இந்த புக்லாம் படிச்சு.. நல்ல ரொமாண்டிக் கவிதையா.. ஒரு பத்து கவிதை.. ஒரு பேப்பர்ல எழுதிக் கொடேன்..? நானே எழுதிடுவேன்.. என் ஹேன்ட் ரைட்டிங் நல்லாருக்காது.. அதான்.." சுஜி தலையில் அடித்துக் கொண்டாள். ஆரம்பத்தில் பிகு பண்ணினாள். அப்புறம் என்னை திட்டிக்கொண்டே எழுதிக் கொடுத்தாள். அவளையே கூட்டி சென்று ஒரு லவ் க்ரீடிங் கார்ட் செலக்ட் செய்து வாங்கிக் கொண்டேன். அந்த கார்டின் நடுப்பக்க பேப்பரை கிழித்துப் போட்டு, அந்த கவிதை பேப்பரை ஓட்டினேன். அடுத்த நாளுக்காக காத்திருந்தேன்.

அதே வாலாஜா ரோட்டில், வசுவிடம் அந்த கார்டை நீட்டினேன். அவளுக்கு ஆரம்பத்தில் ஆச்சரியம். பிரித்து உள்ளே எழுதியிருந்த கவிதைகளை ஒவ்வொன்றாக வாசித்தாள். அவளுடைய முகம் மலர்ந்து கொண்டே சென்றது. 'ம்ம்ம்.. நைஸ்.. குட்..' என்று ஒவ்வொரு கவிதைக்கும் கமென்ட் சொல்லிக்கொண்டே வந்தாள். நான் பெருமிதத்தில் காலரை தூக்கி விட்டுக் கொண்டேன். ஐந்தாவது கவிதையை படிக்கும் போதுதான் அவளுடைய முகம் அஷ்டகோணல் ஆனது. பட்டென நிமிர்ந்து என்னை முறைத்தாள். அந்த கார்டை கசக்கி என் முகத்தில் விட்டெறிந்தாள். ஆத்திரமும், எரிச்சலுமாக கத்தினாள். "உங்களுக்குலாம் மனசாட்சியே இல்லையாத்தான்..? என்னைய நெனச்சு உருகி உருகி எழுதிருக்கீங்கன்னு எவ்ளோ சந்தோஷப் பட்டேன் தெரியுமா..? எதோ புக்ல இருந்து சுட்டுட்டு வந்து..? ச்சே.. திருந்தவே மாட்டீங்களா நீங்க..? வழியை விடுங்க..!!" ஆக்டிவாவின் ஆக்சிலரேட்டரை ஆத்திரத்துடன் முறுக்கியபடி பறந்தாள். அப்புறம் ஒரு வாரம்..!! நானும் பத்து பதினைந்து ஐடியாக்களை, சுஜி மூலம் பெற்று, வசுவிடம் ட்ரை பண்ணி பார்த்தேன். எல்லாமே ட்ராஜடியில்தான் முடிந்தன. வசுவுக்கு என் மீது கோபம் அதிகரித்துக் கொண்டே சென்றது. கடைசியாக ஒரு நாள் பொறுமையிழந்து, "அத்தான்.. உங்க மேல இருந்த கொஞ்ச நஞ்ச நல்ல அபிப்ராயமும்.. நீங்க இப்டி லவ் பண்ண கெளம்புனதுக்கு அப்புறம் நாசமா போச்சு..!! இனிமே என் மூஞ்சிலையே முழிக்காதீங்க..!!" என்று பொரிந்து தள்ளிவிட்டு சென்றாள். நான் மறுபடியும் சுஜியிடம் வந்து நின்றேன். பரிதாபமான குரலில் சொன்னேன். "சுஜி... உன் அக்கா என்னை கன்னாபின்னான்னு திட்டிட்டா சுஜி..!!" "அதுக்கு என்னை என்ன பண்ண சொல்றீங்க..?" "நான் ஒன்னு கேட்டா தப்பா நெனைக்க மாட்டியே..?" "சொல்லுங்க.." "நீ என் மேல இருக்குற ஆசைல.. வேணும்னே.. எல்லாம் உருப்புடாத ஐடியாவா எனக்கு கொடுக்கலைல..?" நான் கேட்டதும் சுஜி கடுப்பானாள். கண்களை உருட்டி, ஆத்திரமாக என்னை முறைத்தாள். "அத்தான்.. அப்புறம் என் வாய்ல நல்லா வந்துடும்..!! உங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்னு எனக்கென்ன தலையெழுத்தா..? நானே பல்லை கடிச்சுட்டு உங்களுக்கு ஐடியா கொடுத்துக்கிட்டு இருக்கேன்.. இதுல நொட்டை வேற சொல்றீங்களே..?" "என்ன பண்றது சுஜி.. எந்த ஐடியாவும் வொர்க் அவுட் ஆகலையே..?" "எப்படி ஆகும்..? எதை பண்ணினாலும்.. அதுல ஒரு திருட்டுத்தனம்.. ஒரு மொள்ளமாறித்தனம்..!! அப்புறம் எப்படி அவளுக்கு புடிக்கும்..? உங்களுக்குலாம் அக்கா செட் ஆகமாட்டா அத்தான்.. பேசாம அவளை மறந்துடுங்க.. ஒரு ரெண்டு வருஷம் வெயிட் பண்ணுங்க.. நான்.." "ஐயோ சுஜி... இந்த ரெண்டு வாரத்துல.. ரெண்டாயிரம் தடவை சொல்லிட்ட..!! ரெண்டு வருஷத்துல நீ மேஜர் ஆயிடுவே.. மேஜர் ஆயிடுவேன்னு..!! புதுசா ஏதாவது சொல்லேன்..??" "சரி.. இன்னும் ரெண்டு நாள்ல அக்காவுக்கு என்கேஜ்மன்ட்..!! இது புதுசா இருக்கா..?" அவள் கேஷுவலாக சொல்ல, "என்ன சுஜி சொல்ற..?" நான் அதிர்ந்தேன். அம்மா உங்கள்ட்ட சொல்லலையா..?" "இல்லைடி.. என்னடி இப்படி திடீர்னு குண்டை தூக்கி போடுற..?" "நெஜமாதான்த்தான்..!! இனிமே அக்கா உங்களுக்கு கெடைக்கிறது ரொம்ப ரொம்ப கஷ்டம்..!!" "எவ்ளோ கஷ்டம்னாலும் பரவால்லை சுஜி.. ப்ளீஸ்..!! ஏதாவது ஐடியா சொல்லேன்..?" "சரி.. ஒரு ஐடியா இருக்கு..!! எதுவுமே வேலைக்காகலைன்னா.. லாஸ்டா ட்ரை பண்ணலாம்னு வச்சிருந்தேன்.. அதை பண்றீங்களா..?" "எ..என்னது..?" நான் தயக்கமாய் கேட்டேன். சுஜி கொஞ்ச நேரம் என் முகத்தையே கூர்மையாக பார்த்தாள். அப்புறம் சற்றே சன்னமான குரலில் சொன்னாள். "பேசாம அக்காவை ரேப் பண்ணிடுங்க..!!" "அடச்சீய்.. அசிங்கம் புடிச்சவளே..!! என்ன பேச்சு பேசுற நீ..?" "ஏன்த்தான் பதர்றீங்க..? இப்போதைக்கு அதை விட்டா வேற நல்ல ஐடியா எதுவுமே இல்லை..!! படம்லாம் பாக்குறது இல்ல நீங்க..? ஹீரோயினை கன்ஃபார்ம் பண்ணிக்க.. வில்லன் அதைத்தான் பண்ணுவான்..!! உங்களை மாதிரி கேரக்டருக்கு அதுதான் சரியா இருக்கும்..!! போங்க போங்க.. போய் ரேப் பண்ணுங்க..!!" "வெளையாடாத சுஜி..!!" "வெளையாடலைத்தான்.. சீரியஸாத்தான் சொல்றேன்..!! உங்க உடம்பு ஒன்னு சேந்துட்டா.. அப்புறம் உங்களை யாராலையும் பிரிக்க முடியாது..!! அக்கா ரொம்ப சென்சிடிவான ஆளு.. நீங்க மட்டும் அவளை ரேப் பண்ணிட்டா.. உடம்பை கொடுத்தவன்கிட்டத்தான்.. வாழ்க்கையையும் கொடுக்கனுன்னு நெனைப்பா..!! உங்களைத்தான் கட்டிக்கனுன்னு உறுதியா நிப்பா.. அது போதாதா உங்களுக்கு..?" "ம்ம்ம்.. கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு..!! ஆனா ரேப் நல்லபடியா நடந்து முடியணுமே..? அவ பாட்டுக்கு சத்தம் போட்டு.. ஊரை கூட்டிட்டானா..? ஏதும் பிரச்னை ஆயிடும்டி.." "இங்கதான் நீங்க பொண்ணுக சைக்காலஜியை புரிஞ்சுக்கணும்..!! அக்காவுக்கு இன்னும் உங்க மேல ஆசை இருக்குதுத்தான்.. ஆனா இல்லாத மாதிரி நடிக்கிறா..!! எந்த பொண்ணும்.. மனசுக்கு புடிச்சவன் தொடுறப்போ.. சத்தமே போடமாட்டா.. சைலன்ட் ஆயிடுவா..!!" "நெஜமாவா சொல்ற..?" "ப்ராமிஸ்த்தான்.. வேணுன்னா.. நீங்க என்னை தொட்டுப் பாருங்களேன்.. நான் சத்தமே போட மாட்டேன்.." "அடச்சீய்.. லூசு..!! அடங்கவே மாட்டியாடி நீ..?" "வேணான்னா விடுங்க.. ஐடியா ஓகே-வான்னு சொல்லுங்க..!!" "எனக்கு ஓகேதான்..!! ஆனா உன் அக்கா இதுக்கு ஒத்துக்கணுமே.. அதான் ஒரே யோசனையா இருக்கு..!!" "ஹலோ.. ஒத்துக்காம பண்றதுக்கு பேருதான் ரேப்பு..!! நல்லா கேட்டுக்கங்க.. நாளைக்கு அக்காவுக்கு காலேஜ் கிடையாது.. அம்மாவும் நாளைக்கு வெளியூர் போறா.. நைட்டுத்தான் வருவா..!! நானும் ஏதாவது ஸ்பெஷல் க்ளாஸ்னு பொய் சொல்லிட்டு.. காலைலேயே வெளில போயிர்றேன்..!! நீங்களும் அக்காவும் மட்டுந்தான் இருப்பீங்க..!! அதைவிட்டா.. நல்ல சான்ஸ் கெடைக்காது.. நாளைக்கே அக்காவை மேட்டரை முடிச்சுடுங்க..!!" "துணிஞ்சு பண்ணலாமா சுஜி..? தர்ம அடி எதுவும் விழுந்திடாதே..?" "ச்சேச்சே.. அடிலாம் விழ சான்சே இல்லைத்தான்..!! அப்டியே விழுந்தாலும் உங்களுக்குத்தான் விழும்.. நான்தான் வெளில போயிருவேன்ல..?" "அடிப்பாவி..!!"சுஜியின் ஐடியாவைத்தவிர எனக்கும் வேறு வழி இருப்பதாக தெரியவில்லை. காரியம் கைமீறி போவது போன்ற உணர்வு. முதலில் வசுவை என்பக்கம் இழுத்ததாக வேண்டும். சுஜி சொன்னமாதிரி வசு சும்மா இருப்பாளா..? இல்லை.. சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவாளா..? என்று என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் முயற்சி செய்து பார்க்கலாம் என்று தோன்றியது. வசு எனக்கு வேண்டும்..!! ஏதாவது செய்ய வேண்டும்..!! என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும்..!! அடுத்த நாள் காலை ஒன்பது மணி இருக்கும். அத்தை வெளியூர் போயிருந்தாள். சுஜி என் ரூமுக்கு வந்து, கட்டை விரலை உயர்த்தி காட்டிவிட்டு, புத்தக மூட்டையுடன், வெளியே கிளம்பி சென்றாள். நான் என் மனதை தயார் செய்து கொண்டேன், ரேப் செய்வதற்கு..!! மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தேன். வீடு அமைதியாக இருந்தது. மெல்ல நடந்து சென்று வசுவின் ரூமை அடைந்தேன். கதவிடுக்கின் வழியாக உள்ளே பார்வையை வீசினேன். வசு டேபிள் முன் அமர்ந்து, எதோ ஒரு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தாள். அப்போதுதான் குளித்திருப்பாள் போல..!! வெறும் பார்வையிலேயே அவள் ப்ரெஷாக இருப்பதை உணர முடிந்தது. பிங்க் கலரில் ஒரு டாப்சும், ப்ளாக் கலரில் முழங்காலுக்கு கீழ் வரை மறைக்கும் ஸ்கர்ட்டும் அணிந்திருந்தாள். டாப்சுக்கும், ஸ்கர்ட்டுக்கும் இடையேயான ஒன்றரை இன்ச் கேப்பில், அவளுடைய இடுப்பு சதைகள், சந்தன நிறத்தில் கவர்ச்சியாக பிதுங்கியிருந்தன. கூந்தலை முடியாமல், முன்பக்கமாக அப்டியே ஃப்ரீயாக தவழவிட்டிருந்தாள். புத்தகத்தில் இருந்து பார்வையை விலக்காமலே, கூந்தலுக்குள் விரல்களை நுழைத்து சிக்கெடுத்துக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கும்போதே, என் உடல் எங்கும் ஒரு காமச்சூடு பரவுவதை என்னால் உணர முடிந்தது. துணிந்தேன். மனதை திடமாக்கிக் கொண்டேன். கதவை மெல்ல தள்ளியவாறு அறைக்குள் நுழைந்தேன். அரவம் கேட்டு வசு திரும்பி பார்த்தாள். ஆச்சரியமும், குழப்பமுமாய் கேட்டாள். "என்னத்தான்..??" "எனக்கு வேற வழி தெரியலை வசு.." "என்ன வழி தெரியலை.. ஏன் உங்க மூஞ்சி ஒரு மாதிரி பேயறைஞ்ச மாதிரி இருக்குது..?" "எனக்கு நீ வேணும் வசு.. உனக்காக உன் அம்மா.. அந்த மில்லு ஓனரு.. யாரை வேணா எதுக்க நான் ரெடியா இருக்கேன்..!! ஆனா.. அதுக்கு முதல்ல.. உன்னை என் பக்கம் இழுக்கணும்..!!" "அ..அதுக்கு..???" அவள் இப்போது லேசாக அதிர ஆரம்பித்திருக்க, நான் பதில் பேசாமல், திரும்பி கதவை சாத்தி தாழ் போட்டேன். இப்போது வசு பட்டென்று சேரில் இருந்து எழுந்தாள். அவளுக்கு என் எண்ணம் இப்போது ஓரளவுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். சற்றே பதட்டமான குரலில் கேட்டாள். "அ..அத்தான்.. கதவை ஏன் லாக் பண்றீங்க..?" "நா..நான்.. உ..உன்னை ரேப் பண்ண போறேன் வசு.. " "என்னது.. ரேப்பா..? வெளையாடாதீங்கத்தான்.. வெளில போங்க முதல்ல..!!" அவள் கத்துவதை கண்டு கொள்ளாமல், நான் அவளை நெருங்கினேன். "இல்லை வசு.. நான் முடிவு பண்ணிட்டேன்..!! உன்னை ரேப் பண்ணாம.. வெளில போறதில்லை..!! நீ கொஞ்ச நேரம் சைலண்டா இருந்தேன்னா.. நானும் சைலண்டா.. சாஃப்டா ரேப் பண்ணிட்டு போயிடுவேன்.. நீ முரண்டு புடிச்சா.. அப்புறம் நானும் முரட்டுத்தனத்தை காட்ட வேண்டி இருக்கும்..!!" "என்னாச்சுத்தான் உங்களுக்கு..? ஏன் இப்படி லூசு மாதிரி பேசுறீங்க..?" "ஸாரி வசு.. எனக்கு இதை விட்டா வேற வழி தெரியலை.. வா..!!"ம்ஹூம்.. என்னமோ ஆயிடுச்சு உங்களுக்கு.. வழியை விடுங்க.. நான் வெளில போறேன்..!!" சொல்லிக்கொண்டே அவள் என்னை தள்ளிவிட்டு நகர முயல, நான் அவளுடைய புஜத்தை பற்றி இழுத்து நிறுத்தினேன். "சொல்றேன்ல..? ரேப் பண்ண போறேன்னு..!! ஓடுற..?" "ஐயோ.. என்னத்தான் இது..? கையலாம் புடிச்சுக்கிட்டு..? விடுங்க..!!" அவள் கையை என்னிடம் இருந்து விடுவித்துக் கொள்ள முயன்றாள். "ம்ஹூம்.. விடமாட்டேன்.. என்ன பண்ணுவ..?" இப்போது நான் அவளுடைய இன்னொரு புஜத்தையும் அழுத்தமாக பற்றினேன். அவளை அசையவிடாமல் செய்து என் முன் நிறுத்தியிருந்தேன். அவளுடைய உடம்பில் இருந்து, ஒரு ஸ்வீட் ஸ்மெல் கிளம்பி என் நாசியை நிறைத்தது. என்னை கிறங்கடித்தது என் வசுவின் வாசனை..!! நான் என் முகத்தை அவளுடைய முகத்தை நோக்கி எடுத்து சென்றேன். "அ..அத்தான்.. சொன்னா கேளுங்க.. வேணாம்.." வசு இப்போது மிரண்டு போயிருந்தாள். நிலைமையின் தீவிரத்தை நன்றாக உணர்ந்திருந்தாள். நான் அந்தமாதிரி வெறி பிடித்தவனாய் நடந்து கொள்வேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டாள் போல..!! அவளுடைய கண்களில் ஒருவித கிலி தெரிந்தது. நான் அவளை கண்டுகொள்ளாமல் என் முகத்தால் அவளுடைய முகத்தை நெருங்கினேன். என் உதடுகளை குவித்து அவளுடைய உதடுகளில் முத்தமிட போனேன். அவள் பட்டென்று முகத்தை திருப்பிக்கொள்ள, எனது உதடுகள் இச்சென்று அவளுடைய கன்னத்தில் பதிந்தன. அவ்வளவுதான்..!! வசுவுக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு பலம் வந்ததோ..? இரண்டு கையாளும் என் மார்பை தள்ளிவிட்டு, பட்டென்று தன் கைகளை ரிலீஸ் செய்து கொண்டாள். பளாரென்று என் கன்னத்தில் ஒரு அறைவிட்டாள். அதை சற்றும் எதிர்பாராத நான் கன்னத்தை பிடித்தவாறு திகைத்துக் கொண்டிருக்க, அவளோ கதவை நோக்கி ஓடினாள். தாழ்ப்பாளில் கைவைத்து திறக்க முயன்றாள். அடிவாங்கியதில் நான் ஆவேசமானேன். சுள்ளென்று வலித்த கன்னம் என்னை சூடேற்றி விட்டது. முரடனானேன். பாய்ந்து சென்று வசுவின் இடுப்பை வளைத்து பிடித்தேன். அப்படியே அவளை அலாக்காக தூக்கி, அருகில் கிடந்த கட்டில் மீது போட்டேன். ஆவேசமாய் அவள் மீது படர்ந்தேன். பூங்கொத்து மாதிரியான என் வசுவின் மெல்லிய உடலை, எனது முரட்டு ஆணுடலால் அழுத்தினேன். அவளுடைய பட்டு மார்பினை, எனது நெஞ்சினால் நசுக்கினேன் "அ..அத்தான்.. என்ன இது..? ச்சீய்.. விடுங்க.." வசு திமிறினாள். கையையும் காலையும் உதறிக்கொண்டே இருந்தாள். முழங்கால்களை உயர்த்தி என் வயிற்றில் இடித்தாள். நான் முதலில் அவளுடைய கைகள் ரெண்டையும் விரித்து பிடித்தேன். அசையாமல் செய்தேன். அப்புறம் அப்படியே அவள் மீது எனது மொத்த எடையையும் வைத்து, அழுத்தினேன். இப்போது வசுவால் ஒரு இன்ச் கூட அசைய முடியவில்லை. அந்த அளவுக்கு நான் அவளை ஆக்கிமித்திருந்தேன். வசு திணறினாள். "வேணாத்தான்.. ப்ளீஸ்.. விட்ருங்க..!!" "ம்ஹூம்.." "இதுலாம் தப்புத்தான்..!!" "ஒரு தப்பும் இல்லை.. நான் உன்னை கட்டிக்கிறதுக்காத்தான் ரேப் பண்ண போறேன்.. கைவிடுறதுக்காக இல்லை.." நான் ஒரு கையால் வசுவின் கன்னத்தை பிடித்தேன். லேசாக அழுத்தினேன். அவளது சிவந்த உதடுகள் இப்போது லேசாக பிளந்து, ஈரமாக பிதுங்கின. நான் அந்த மெல்லிய உதடுகளில் என் தடித்த உதடுகளை வைத்து பொருத்திக் கொண்டேன். உறிஞ்சினேன். வசு முகத்தை சுளித்தாள். உதடுகளை க்ளோஸ் செய்துகொள்ள முயன்றாள். நான் விடவில்லை. என்னுடைய உதடுகளாலேயே அவளுடைய உதடுகளை பிரித்து, அழகாக கவ்விக்கொண்டேன். ஆசையாக அதேநேரம் ஆவேசமாக சுவைக்க ஆரம்பித்தேன். "ம்ம்ம்ம்... ம்ம்ம்கக்ம்ம்ம்... ம்ம்ம்கக்ம்ம்ம்..." என்று வசு முக்கினாள். கையையும் காலையும் படக் படக் என்று வெட்டினாள். அவளுடைய உதடுகளை என்னுடைய உதடுகளிடம் இருந்து பறித்துக் கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். நான் வசுவின் பெண்மையை திருடிக் குடிப்பதில் உறுதியாக இருந்தேன். அவளுடைய கன்னத்தை அழுத்தி பிடித்து, அவள் முகத்தை அசையவிடாமல் செய்து, அந்த அழகு அதரங்களில் ஆனந்த ரசம் பருகினேன். இறுக்கிப் பிடித்து அவளுடைய இதழ்களில் எனது இதழ்களால் வன்முறை செய்தேன். அவளுடைய உதடுகள் சிந்திய தேனை, உற்சாகமாக உறிஞ்சிக் குடித்தேன்.வசு துள்ளிக்கொண்டே கிடந்தாள். முகத்தை அப்படியும், இப்படியுமாய் அசைக்க முயன்றாள். தன் நெஞ்சை நிமிர்த்தி, அவளது மார்புகளால் என் மார்புகளை முட்டித் தள்ளினாள். நான் அவளுடைய கன்னத்தில் இருந்த எனது வலது கையை மெல்ல கீழே இறக்கினேன். அவளது இடது மார்புக்கு கொண்டு சென்றேன். கப்பென்று ஒரு பிடி பிடித்தேன். கசக்கி ஒரு பிழி பிழிந்தேன். அவ்வளவுதான்..!! வசு 'ஆஆஆஹ்ஹ்...!!!' என்று வேதனையாய் ஒரு முனகு முனகினாள். கண்களை அகலமாய் விரித்து, என் முகத்தையே வெறித்து பார்த்தாள். அவளுடைய ஒட்டுமொத்த துள்ளலும் ஒரே வினாடியில் காணாமல் போனது. அத்தனை நேரம் அவள் காட்டிவந்த எதிர்ப்பு, எங்க போனதென்றே தெரியவில்லை. ஓயாமல் உதறிக்கொண்டே இருந்த அவளுடைய கால்கள், சோர்ந்து போய் நீண்டு கொண்டன. அவள் அமைதியானாள். நான் அவளுடைய உதடுகளில் ஆவேசமாக தேனருந்திக் கொண்டிருந்தேன். அதே நேரம் அவளது இளமை வீக்கத்தை அழுத்தி ஹாரன் அடித்தேன். கைக்கு அடக்கமாய் இருந்தன வசுவின் கனிகள். சாத்துக்குடி சைசுக்கு.. உருண்டையாய்.. திரட்சியாய்.. மென்மையாய்..!! கசக்குவது கைக்கு இதமாக இருந்தது. ஒரு இரண்டு மூன்று நிமிடத்திற்கு நாங்கள் அப்படியே கிடந்தோம். நான் அவளுடைய மார்பை பிசைந்து கொண்டே முத்தமிட, அவள் எதிர்ப்பை குறைத்துக் கொண்டு, என்னுடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்தாள். அப்புறம் நான் பிரிக்க மனமில்லாமல் என் உதடுகளை பிரித்தேன். வசுவின் முகத்தை ஏறிட்டேன். வசு இன்னும் கண்களை திறக்கவில்லை. கிறக்கமோ.. வேதனையோ..? இமைகள் நன்றாக செருகிப் போயிருந்தன. அவளுடைய ஆரஞ்சுசுளை உதடுகள் 'ஆ' வென பிளந்திருந்தன. லேசாக துடித்துக் கொண்டிருந்தன. 'ஹா.. ஹா.. ஹா..' என மூச்சிரைத்தாள். அவளது நெஞ்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. அவளது ஒரு பக்க கனி எனது கைக்குள் சிக்கி, வதைபட்டுக் கொண்டிருந்தது. எனது பருத்த தொடைகள் ரெண்டும் அவளது தொடைகளை அழுத்தி நசுக்கிக் கொண்டிருந்தன. பருந்திடம் பிடிபட்ட கோழிக்குஞ்சு மாதிரி பரிதாபமாக கிடந்தாள் என் தேவதை..!! வசு..!! எனக்கு மனதில் பட்டென்று ஒரு குற்ற உணர்ச்சி வந்து குடியேறியது. வசுவை அந்த கோலத்தில் பார்க்க பாவமாக இருந்தது. ச்சே..!! என்ன அநியாயம் இது..? பாவம் இல்லையா இவள்..? பூ மாதிரி மென்மையான பெண்.. இவளை போய் கசக்கி முகற நினைக்கிறேனே..? பட்டு மாதிரி மிருதுவானவள்.. மிருகத்தனமாய் நடந்து கொள்கிறேனே..? என்ன பாவம் செய்தாள் இவள்..? என்னை காதலித்தாள்.. என் மேல் உயிரையே வைத்திருந்தாள்..!! அறிவில்லாமல் நானே அந்த காதலை அழித்தெறிந்தேன். இப்போது இவளை வன்முறையாக ஆக்கிரமித்து, என் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கிறேனே..? தப்பில்லையா..? ஓரிரு விநாடிகள்தான் அந்த மாதிரி சிந்தனை என் மனதில் வந்து போனது. நான் பட்டென்று என் கையை அவளுடைய மார்பில் இருந்து எடுத்துக் கொண்டேன். படாரென்று அவளை விடுவித்து எழுந்து கொண்டேன். காதலாக வசுவின் கண்களையே பார்த்தேன். அவள் இமைகளை மெல்ல பிரித்து, என்னை பரிதாபமாக பார்த்தாள். நான் குற்ற உணர்ச்சி கொப்பளிக்கும் குரலில் சொன்னேன். "ஸா..ஸாரி வசு..!! நீ எனக்கு கெடைக்கணும்ன்ற வெறில.. இப்டி பண்ணிட்டேன்..!! என்னை மன்னிச்சுடு..!!" அவள் எதுவும் பேசவில்லை. அமைதியாக இருந்தாள். நான் மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினேன். வசு மெத்தையில் இருந்து எழுந்து அமர்ந்து கொண்டாள். அவ்வளவு நேரம் என்னிடம் வதைபட்ட தனது மார்பை ஒரு கையால் பிடித்துக் கொண்டாள். மெல்ல தேய்த்து விட்டுக் கொண்டாள். அவ்வளவு நேரம் என் உதடுகளுக்குள் அகப்பட்டிருந்த அவளது உதடுகளை, பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். பரிதாபமாக என்னை நிமிர்ந்து பார்த்தாள். நான் மெல்லிய குரலில் சொன்னேன். "என் புத்தி ஏன் இப்டி போச்சுன்னு தெரியலை.. நான் மெட்ராஸ் வராம இருந்திருந்தா.. இந்த பிரச்னையே வந்திருக்காது..!! நீ என்னை லவ் பண்றேன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்.. அந்த லவ்வை நானே கெடுத்துட்டேன்னு நெனைக்கும்போது... என்னால ஆசையை அடக்க முடியலை வசு..!! என்ன பண்ணியாவது உன்னை அடைஞ்சிடனும்னு வெறி.. உன்னை ரேப் பண்ணிட்டா.. நீ எப்டியும் எனக்கு கெடைச்சிடுவேன்னு நெனச்சேன்.. அதான் இப்டிலாம் பண்ணிட்டேன்..!! ஆனா.. ஆனா.. என்னால முடியலை வசு.. உன்னை இந்த மாதிரி கோலத்துல பாக்க முடியலை.. நான் பண்ணின தப்புக்கு நீ என்ன பண்ணுவ..? என்னை மன்னிச்சுடு வசு..!! நான் போறேன்.. இனிமே உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்..!!"நான் மனதில் இருந்ததை எல்லாம் படபடவென கொட்டினேன். வசு அமைதியாக என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். நானும் அவள் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்தேன். அப்புறம் பட்டென்று திரும்பினேன். நடந்தேன். கதவை அடைந்தேன். தாழ்ப்பாளில் கைவைத்தேன். கீழே இழுத்தேன். கதவை திறந்தேன். வெளியேற முயன்றபோது, பின்னால் இருந்து வசுவின் குரல் ஒலித்தது. "ஒரு நிமிஷம் இருங்கத்தான்..!!" நான் நின்றேன். திரும்பி 'என்ன..?' என்பது போல அவளை பார்த்தேன். அவள் இப்போது கட்டிலில் இருந்து இறங்கினாள். மெல்ல என்னை நோக்கி நடந்து வந்தாள். கண்களை இடுக்கி ஒருமாதிரி என்னையே பார்த்தாள். ரொம்பவே அமைதியான குரலில் கேட்டாள். "எந்த வேலையையும் உருப்படியா பண்ண மாட்டீங்களா நீங்க..?" "எ..என்ன சொல்ற..?" நான் குழப்பமாய் கேட்டேன். "பண்ண வந்ததை முழுசா பண்ணிட்டு போங்க..!!" "எ..என்னது..????" நான் அப்படியே ஷாக்காக, "புரியலையா..? ரேப் பண்ணத்தான வந்தீங்க..? ஒழுங்கா ரேப் பண்ணிட்டு போங்க..!!" அவள் சாந்தமாக சொன்னாள்.

"வெ..வெளையாடாத வசு.. அதான்.. நான் தெரியாம பண்ணிட்டேன்னு சொல்றேன்ல..?" "ஓ.. தெரியாம பண்ணிட்டீங்களா..? பரவால்லை.. இப்போ தெரிஞ்சே பண்ணுங்க..!! வாங்க..!!" சொல்லிக்கொண்டே அவள் என் ஷர்ட்டுக்குள் கைவிட்டு மார்பை தடவ, நான் பதறினேன். "ஐயோ.. என்ன பண்ற வசு..? கையை எடு.. நான்தான் பண்ணினதுக்கு ஸாரி கேட்டுட்டேன்ல..?" "ஸாரி கேட்டுட்டா.. எல்லாம் சரியா போயிடுமா..? சும்மா இருந்தவளை.. அதையும் இதையும் புடிச்சு.. சூட்டை கெளப்பி விட்டுட்டு..??? எஸ்கேப் ஆலாம்னு பாக்குறீங்களா.. வாங்க..!!" வசு என் மார்பில் சாய, நான் அவளை பிடித்து தள்ளிவிட்டேன். "ஐயோ.. உனக்கு என்னடி ஆச்சு.. இப்போ திடீர்னு..?" "ஆமாம்.. என்னமோ ஆயிடுச்சு எனக்கு.. நீங்கதான் அப்டி ஆக்கிட்டீங்க..!! இப்போ ஒழுங்கா நீங்க என்னை ரேப் பண்றீங்களா..? இல்லை.. நான் உங்களை ரேப் பண்ணவா..?" "அடச்சீய்.. அப்டியே அறைஞ்சேன்னா..??" "ஓ.. அறைவீங்களா..? எங்க அறைங்க பாப்போம்.. அறைங்கத்தான்..!! ம்ம்ம்ம்... அறைங்க.. இப்போ அறைங்க.. பாப்போம்...?? இப்போ...!!" சொல்லிக்கொண்டே வசு தன் மார்புத் திரட்சிகளாலேயே என் மார்பை முட்டித் தள்ளினாள். நான் பின்னால் நகர்ந்து கதவில் சென்று சாய, அவள் என் மீது அப்படியே சாய்ந்து அழுத்தினாள். 'ஏய்ய்ய்...!!!' என்று நான் பதறிக்கொண்டு இருக்கும்போதே, பாய்ந்து வந்து என் உதடுகளை கவ்விக்கொண்டாள். ஆவேசமாக என் உதடுகளை உறிஞ்சிக்கொண்டே, ஒரு கையை உயர்த்தி, எனக்கு பின்னால் செலுத்தி, தாழ்ப்பாள் போட்டு கதவை லாக் செய்தாள். அவளுடைய உதடுகளை வசமாக எனது உதடுகளுக்குள் வைத்து லாக் செய்தாள். எனக்கு மூச்சு திணற திணற என்னை கிஸ் அடித்தாள். வசுவிடம் இருந்து அப்படி ஒரு வேகத்தை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. பூ என்று நினைத்தவள், புயல் மாதிரி ஆவேசமானால் அப்படி இருக்கும்..? அப்படித்தான் இருந்தது..!! வெறித்தனமாக என் உதடுகளை கடித்து சுவைத்தாள். அவளது நாக்கை என் வாய்க்குள் நுழைத்து எதோ செய்தாள். எனது ஷர்ட்டுக்குள் கைவிட்டு என் மார்பை அழுத்தி பிசைந்தாள். அவளது மார்புக்கனிகளை என் நெஞ்சில் வைத்து தேய்த்து சூடேற்றினாள். சத்தியமாய் சொல்கிறேன்.. நான் மிரண்டு போனேன்..!! வேறுவழியில்லாமல் நான் அவளுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தேன். அதுகூட சுகமாகத்தான் இருந்தது. அவளது இதழ்ரசம் இனிப்பாய் என் தொண்டைக்குள் இறங்கியது. அவளது மார்புகள் மெத்தென்று ஒத்தடம் தந்தன. அவளது கைகள் என் மார்பை தடவி இதமளித்தன. அவளது விரல்கள் என் மார்புக்காம்பை தேய்த்து அனல் மூட்டின. நான் மெய்மறந்து போய் அப்படியே அவளுக்கு என் உதடுகளை காட்டிக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு நிமிடத்துக்கும் மேலாக வசு அந்தமாதிரி சூடாக என்னை முத்தமிட்டாள்.அப்புறம் என் ஷர்ட்டை இரண்டு புறமும் கொத்தாக பற்றி என்னை இழுத்தாள். அப்படியே என்னை மெத்தை மேல் தள்ளிவிட்டாள். புலி மீது பாயும் புள்ளிமானாய் என் மேல் பாய்ந்தாள். மலர்மூட்டை மாதிரியான அவளது தேகம் என் மீது படர்ந்திருந்தது இதமாக இருந்தது. அவள் மேனியில் இருந்து வீசிய மெடிமிக்ஸ் வாசனை வெறியை கிளப்பிவிட்டது. வசு என் வலது கையை பிடித்தாள். பட்டென்று தன் இடது பக்க இளமை வீக்கத்தில் வைத்துக் கொண்டாள். "ம்ம்ம்.. அப்போ பண்ணின மாதிரி பண்ணுங்கத்தான்..!!" சொல்லிவிட்டு என் பதிலுக்காக காத்திராமல் மீண்டும் என் உதடுகளை கவ்வி சுவைக்க ஆரம்பித்தாள். நான் அவளது பஞ்சு உருண்டையை பிசைய ஆரம்பித்தேன். அவளது உதடுகள் எனது உதடுகளை உறிஞ்சிக்கொண்டிருக்க, எனது கைகள் அவளது கனிகளை கசக்கி பிழிந்து கொண்டிருந்தன. அவளது ஒரு கை என் ஷர்ட்டுக்குள் சென்று என் மார்புக்காம்புகளை மாறி மாறி தேய்த்தது.. தடவியது.. கிள்ளியது.. கீறியது.. சுகமாய் இருந்தது..!! கொஞ்ச நேரம் முத்தமிட்டுவிட்டு, வசு என் ஷர்ட் பட்டன்களை அவசர அவசரமாக கழட்டினாள். பனியனை மேலே உயர்த்தி, பச்சக்கென்று என் மார்புக்காம்பை கவ்விக்கொண்டாள். ஆசையாக சுவைத்தாள். நாக்கால் தடவினாள். எனக்கு சுறுசுறுவென ஒரு சுக மின்சாரம் உடலெங்கும் ஓட ஆரம்பித்தது. 'ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா.. ஹ்ஹ்ஹா..' என்று என்னையும் அறியாமல் முனக ஆரம்பித்தேன். அதே நேரம் அவளது மார்புகளை அழுத்தி பிசைந்து கொண்டே இருந்தேன். வசு என் மார்போடு வாயால் விளையாட, நான் அவளுடைய மார்புகளோடு கையால் கதை பேசிக்கொண்டு இருந்தேன். கொஞ்ச நேரம். வசு எழுந்தாள். தன் டாப்ஸை பட்டென்று உருவிப் போட்டாள். என் முகத்தை காமமாய் பார்த்துக்கொண்டே, பின்பக்கமாக கைவிட்டு ப்ரா ஹூக்கை ரிலீஸ் செய்தாள். அந்த ப்ராவை தனியாக கழட்டி எடுத்து தன் மார்பழகை எனக்கு காட்டினாள். சுஜி சொன்ன மாதிரி ஒன்றும், குட்டி அஸ்ஸட்ஸ் கிடையாது வசுவுக்கு..!! எவ்வளவு இருக்கவேண்டுமோ அவ்வளவு இருந்தது..!! அழகாக அம்சமாக உருண்டு திரண்டிருந்தது. கோதுமை கலரில் மார்புசதைகளும், பிரவுன் கலரில் மார்புக்காம்புமாய் கவர்ச்சியாக வீங்கியிருந்தன என் காதலியின் கலசங்கள்..!! நான் அந்த கலசங்களையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, வசுவோ காமம் கொப்பளிக்கும் குரலில் சொன்னாள். "அத்தான்.. நான் பண்ணின மாதிரி.. நீங்களும் வாய் வச்சு பண்ணுங்கத்தான்.. ப்ளீஸ்..!!" சொல்லிவிட்டு அவளே தன் வலது மார்பை என் வாய்க்கருகில் கொண்டு வந்தாள். நான் சற்றும் தயங்காமல் அதை கவ்விக்கொண்டேன். சுவைக்க ஆரம்பித்தேன். 'இஷ்ஷ்... ஹ்ஹ்ஹா... இஷ்ஷ்...' என்று வசு இன்ஸ்டண்டாய் முனக ஆரம்பித்தாள். அவளது மார்புச்சதைகளை சப்பி சாறெடுக்க நினைத்தவன், அவளது மார்புக்காம்புகளை மென்மையாக கையாண்டேன். நாக்கால் மெல்ல, நிதானமாக நக்கினேன். பற்களால் அவளுக்கு வலிக்காத மாதிரி கடித்து, அவளை மேலும் உசுப்பேற்றி விட்டேன். நான் மெத்தையில் மல்லாக்க கிடக்க, வசு என் மீது படர்ந்திருந்தாள். அவளது மார்புகள் ரெண்டும் மாறி மாறி என் வாய்க்குள் சென்று வந்துகொண்டிருந்தன. அவள் கண்களை செருகி அந்த சுகத்தை அனுபவித்துக்கொண்டு இருந்தாள். ஒருகையால் என் தலைமயிரை கோதி விட்டுக் கொண்டிருந்தாள். நான் அவளது ஆப்பிள் கனிகளை ஆசையாக சுவைத்துக் கொண்டிருந்தேன். என்னுடைய இரண்டு கைகளாலும் அவளது இடுப்பை வளைத்திருந்தேன். வீணைக்குடங்கள் போல விரிந்திருந்த அவளது புட்டங்களை மென்மையாக பிசைந்து கொடுத்தேன். அவளுடைய பின்புற மேடுகளை கைகளால் தடவிக்கொண்டே, அவளது முன்புற வீக்கங்களை நாவால் தடவிக் கொடுத்தேன். கொஞ்ச நேரம் அதே நிலையில் வசுவின் மார்புகளுக்கு வாயால் சுகமளித்துவிட்டு, அப்புறம் அவளை அப்படியே புரட்டினேன். அவள் மீது படர்ந்தேன். என் மார்பால் அவளது மார்பு உருண்டைகளை நசுக்கினேன். அவளது கழுத்துக்குள் முகம் பதித்து, சூடாக முத்தமிட்டேன். அவளது பெண்மை வாசனையை ஆழமாக நுகர்ந்தேன். வசு என் ஷர்ட்டுக்குள் கைவிட்டு, என் முதுகை பிசைந்தாள். நகத்தால் பிராண்டினாள். தனது கழுத்துக்குள் காமவாசம் பிடித்துக்கொண்டிருக்கும், காதலனின் காதோரமாய் ரகசியமான குரலில் சொன்னாள். "பேன்ட்டை ரிமூவ் பண்ணிடுங்கத்தான்..!!"நான் எழுந்தேன். நான் இந்தப்பக்கம் பேன்ட்டை அவிழ்த்துக் கொண்டிருக்க, வசுவோ அந்தப்பக்கம் தன் ஸ்கர்ட்டுக்குள் கைவிட்டு தன் பேண்டீயை ரிமூவ் செய்தாள். கால்களை சற்று அகலமாக வைத்தபடி படுத்துக் கொண்டாள். நான் முழு நிர்வாணம் ஆனேன். எழுச்சி பெற்று, நேராக நின்ற என் ஆண்மையை வசு வெட்கத்துடன் பார்த்தாள். நான் புன்னகைத்தவாறே அவள் மீது பரவினேன். வசு ஒரு கையால் தன் ஸ்கர்ட்டை உயர்த்திக்கொள்ள, என் ஆண்மை சரியாக அவளது பெண்மையில் சென்று உரசியது. ஜிவ்வென்று ஒரு காமச்சூடு எங்கள் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தது. வசு தன் கால்களால் என் இடுப்பை கிடுக்கிப்பிடி போட்டு வளைத்துக் கொண்டாள். அவளாகவே தன் இடுப்பை உயர்த்தி, தனது பெண்மை மேட்டால் என் ஆண்மையை இடித்தாள். எங்களுடைய ரகசிய உறுப்புகள் உரசிக்கொள்ள, உன்னதமான ஒரு சுகம் எங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் கிளர்ந்தெழுந்தது. நாங்கள் முத்தமிட்டுக்கொண்டே, அந்த உன்னதசுகத்தை முழுமையாக அனுபவித்தோம். "உள்ள விடவா வசு..?" நான் கிறக்கமாக கேட்க, "ம்ம்ம்ம்....!!!" அவளும் கிறக்கமாகவே பதிலளித்தாள். நான் லேசாக எழுந்தேன். என் பார்வையை வசுவின் இடுப்புக்கு கீழே வீசினேன். ஸ்கர்ட் நன்றாக மேலே ஏறி இருக்க, அவளது பெண்ணுறுப்பு பளிச்சென்று காட்சியளித்தது. அளவாக புடைத்தபடி அம்சமாக இருந்தது அந்த ரகசிய பெட்டகம்..!! வெளுப்பாக நடுவில் வெட்டுப்பட்டிருந்தது அந்த பெண்மை வீக்கம்..!! சுத்தமாக முடியே இல்லாமல் மொழுமொழுவென்று இருந்தது. இத்தனை நேர காமவிளையாட்டின் காரணமாக, கொஞ்சமாய் நீர் விட்டு ஈரமாய் மின்னியது. நான் ஒரு கையால் என் ஆனாயுதத்தை பிடித்து, அவளுடைய பெண்னுறைக்குள் வைத்து திணிக்க முயன்றேன். அவசரமோ.. பதட்டமோ..? அவ்வளவு எளிதாக என்னால் திணித்துவிட முடியவில்லை. நான்கைந்து முயற்சிகள் தோல்வியில்தான் முடிந்தன. வழுக்கிக்கொண்டு வேறெங்கோ ஓடியது எனது தண்டு. அப்புறம் வசுதான் உதவினாள். அவளே என் ஆயுதத்தை பிடித்து சரியாக, அவளுடைய நுழைவாயிலில் வைத்துக் கொண்டாள். நான் என் இடுப்பை அசைக்க, ஏதேதோ தடைகளை தகர்த்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாய் நான் அவளுக்குள் இறங்கினேன். முழுவதும் இறங்கி முட்டி நின்றேன். "ஆஆஆஆ...!!!!" வசு வேதனையில் முனகினாள். "என்ன வசு.. வலிக்குதா..?" "ம்ம்.. லைட்டா..!!" "எடுத்திடவா..?" "ம்ஹூம்.. வேணாம்.. வேணாம்.. இருக்கட்டும்.. இப்போ வலிக்கலை.." வசு பதறிப்போய் என்னை தடுத்தாள். "சரி வசு..!! கொஞ்ச நேரம் அப்டியே வச்சிருக்கேன்.. அப்புறம் ஆரம்பிக்கலாம்..!!" "ரொம்ப பெருசுத்தான் உங்களுக்கு.." அவள் வெட்கத்துடன் சொன்னாள். "புடிச்சிருக்கா..?" "ம்ம்.. அதுமட்டுமில்ல.. ஒரு டவுட்டும் இப்போத்தான் எனக்கு கிளியர் ஆச்சு..!!" "என்ன..?" "நெறைய பொண்ணுகளை அனுபவிச்சுருக்கேன்னு சொன்னீங்கல்ல..? அது பொய்யின்னு.." "ஓஹோ.. இப்போதான் கிளியர் ஆச்சா..? எப்படி..?" "உங்களுக்கு... உங்களுக்கு எது எங்க இருக்குனு கூட தெரியலை.. நீங்களாவது.. அத்தனை பொண்ணுகளை.. ஆஆஆ... கிள்ளாதீங்கத்தான்..!!" "உனக்கு.. கொழுப்பு ஜாஸ்திடி..!!" "அதுக்கு..?" "உன் கொழுப்பை இப்போ அடக்க போறேன்.." "என்ன பண்ண போறீங்கலாம்..?" வசு கொஞ்சம் பயமும், நிறைய ஆர்வமுமாக கேட்டாள்."பண்ணுறேன்.. பாரு..!! காமடி பீஸ்.. காமடி பீஸ்னு.. என்னை கேலி பண்ணினல..? இப்போ காட்டுறேன்.. ஐயா காமடியனா..? இல்லை ஹீரோவான்னு..!!" "ம்ஹூம்… வேணாத்தான்.. வலிக்கும்..!!" "வலிக்கட்டும்.. எனக்கு என்ன..?" "ச்சீய்.. ப்ளீஸ்த்தான்.. சொன்னா கேளுங்க.. ஆஆஆஆ...!!!" வசு கெஞ்சிக்கொண்டு இருக்கும்போதே நான் இயங்க ஆரம்பித்திருந்தேன். உடம்பெங்கும் காமம் அனலாய் தகித்துக் கொண்டிருந்தது. வசுவுடைய கொள்ளை கொள்ளும் அழகும் என்னை பைத்தியமாக்கியிருந்தது. ஆரம்பத்திலேயே ஆவேசமாக இயங்கினேன். இடுப்பை படுவேகமாக அசைத்து, என் ஆயுதத்தை இழுத்து இழுத்து அவளுக்குள் சொருகினேன். வசு துடித்தாள். 'ஆ.. ஆ.. ஆ.. ஆ..' என்று ஆரம்பத்தில் அலறினாள். எல்லாம் கொஞ்ச நேரம்தான். அப்புறம் ஆர்வமாக என்னுடன் ஒத்துழைத்தாள். நெடு நேரம்..!!!! எங்களுடைய ஆடையற்ற உடல்கள் ஒன்றோடொன்று உரசிக்கொண்டே கிடந்தன.. எனது ஆண்மை அவளுடைய பெண்மையை துளைத்துக்கொண்டே இருந்தது.. எனது திண்ணென்ற மார்பு வசுவின் பட்டு மார்புகளை அழுத்திக்கொண்டே இருந்தது.. எனது உதடுகள் அவளது உதடுகளை கொத்திக்கொண்டே இருந்தன.. அவளது விரல் நகங்கள் என் முதுகை கீறிக்கொண்டே இருந்தன.. நாங்கள் இருவரும் சுகக்கடலில் மூழ்கி தத்தளித்துக்கொண்டே இருந்தோம்...!! அப்புறம் ஒரு அரைமணி நேரம் கழித்து, நாங்கள் ஆடி களைத்திருந்தோம். நான் கட்டிலில் சாய்ந்து படுத்திருக்க, வசு என் மார்பில் முகம் வைத்து படுத்திருந்தாள். ஒற்றை விரலால் என் மார்புக்காம்பை தேய்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவ்வப்போது 'இச்.. இச்.. இச்..' என்று தன் ஈர உதடுகளால் முத்தம் வேறு கொடுத்தாள். நான் அவளுடைய கூந்தலை மென்மையாக கோதிவிட, அவள் தன் தலையை நிமிராமலே, ஒரு மாதிரி போதையான குரலில் என்னை அழைத்தாள். "அத்தான்.." "ம்ம்..??" "நல்லாருந்ததா..?" "ம்ம்.. நல்லாருந்தது..!! உன்னை.. உன்னை..!! ம்ஹூம்..!! வேணாம்..!!" "என்ன..? சொல்லுங்கத்தான்.." "இந்த மாதிரி பண்ணிட்டே இருக்கணும் போல இருந்தது வசு.." "அதுக்கெதுக்கு வெக்கப்படுறீங்க..? எனக்குந்தான் அந்த மாதிரி இருந்தது..!! இது எப்போவும் எனக்கு வேணும்த்தான்..!!" "நெஜமா..?" "ம்ம்..!! இனிமே நாம பிரியக்கூடாது..!! இப்டியே இருக்கணும்.. என்னைக்கும்..!! எ..என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கத்தான்.. ப்ளீஸ்..!!" "வசு.. என்னோட ஒருபக்கத்தைத்தான் நீ பாத்திருக்க.. இன்னொரு பக்கத்தை நீ இன்னும் பாத்தது இல்லை.." "இல்லையே.. எல்லா பக்கத்தையும் நல்லா பாத்துட்டனே..?" அவள் குறும்பாக சொல்லிவிட்டு சிரித்தாள். "அடச்சீய்.. ஜோக்கடிக்கிற நேரமா இது..? சோழவந்தான் வந்து கேட்டுப்பாரு..!! சொல்வாங்க என்னைப்பத்தி..!! இத்தனை நாளா.. நீயே என்பக்கம் இல்லைன்னுதான்.. கம்முனு இருந்தேன்..!! இனிமே பாரு..!! அத்தைக்கு இந்த அசோக் யாருன்னு காட்டுறேன்..!!" "ம்ம்ம்.. ஐ லவ் யூ அத்தான்..!! நீங்க என்னவேனா பண்ணுங்க.. இனிமே நான் உங்க கூட இருப்பேன்..!! சரியா..?" காதலாக சொன்ன வசுவை, நான் இறுக்கி அனைத்துக் கொண்டேன். அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டேன்.அன்று இரவு ஒன்பது மணி. நான் என் ரூமில் இருந்தேன். மாலையில் தூங்க ஆரம்பித்தவன், அப்போதுதான் எழுந்தேன். முகத்தை கழுவி ப்ரெஷாகி வெளியே வர, சுஜி வாயெல்லாம் பல்லாக வெளியே நின்றிருந்தாள். உற்சாகமான குரலில் கேட்டாள். "அத்தான்.. கலக்கிட்டீங்க போல..?" "அதெப்படி உனக்கு தெரியும்..?" "வர்றப்போ அக்காவை பாத்துட்டுத்தான் வர்றேன்.. அவ மூஞ்சில அப்டி ஒரு ப்ரைட்னஸ்..!! அப்போவே எனக்கு தெரிஞ்சுடுச்சு.. அத்தான் அசத்திட்டாருன்னு..!! என்னத்தான் பண்ணுனீங்க என் அக்காவை..?" "அடச்சீய்.. போடீ லூசு..!! கொஞ்சம் கூட வெக்கமே கிடயாதுடி உனக்கு..!!" "ம்ம்.. சொல்லாட்டா போங்க.. எப்டியோ நல்லா இருந்தா சரி..!! உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்சது நாந்தான்றதை என்னைக்கும் மறந்துடாதீங்க..!! ஃபைனலா நான் கொடுத்த ஐடியா வொர்க்கவுட் ஆயிடுச்சு..!!" "ஹாஹா.. ரொம்ப பெருமைப்பட்டுக்காத..!! நீ போட்ட ப்ளான் படிலாம் அது நடக்கலை.. வேற மாதிரி நடந்துச்சு..!!" "வேறமாதிரியா..? எப்படி..?" "நான் சொல்லிருவேன்..!! ஆனா.. நம்ம அக்காவா இப்படிலாம்னு.. நீ நம்பமாட்ட..!! வழியை விடு..!!" நான் சொன்னதை கேட்டு வாயடைத்துப் போய் நின்றிருந்த சுஜியை விலக்கிவிட்டு, நான் மாடிப்படி இறங்கி கீழே வந்தேன். ஹாலில் வசுவும் அத்தையும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள். வசு டிவி பார்த்துக் கொண்டிருக்க, அத்தை எதோ ஃபைலை புரட்டிக் கொண்டிருந்தாள். என்னை காதலாக பார்த்த வசுவையே நானும் ஆசையாக பார்த்துக்கொண்டே அத்தையின் பக்கத்தில் சென்று அமர்ந்தேன். அத்தை ஃபைலில் இருந்து பார்வையை எடுத்துவிட்டு, என்னை பார்த்து கேட்டாள். "ஏன் அசோக்கு.. ஊருக்கு எப்போ கெளம்புற நீ..? வந்த வேலையும் முடிஞ்சு போச்சு.. அந்த ஹோட்டலையும் வேணான்னு சொல்லிட்ட..?" அத்தை கேள்வியாக என்னை பார்க்க, 'அந்த வில்லங்கம் புடிச்ச ஹோட்டலை நீயே வச்சுக்கோ..' என்று நான் மனதுக்குள் சொல்லிக்கொண்டேன். அவளிடம் புன்னகையுடன் சொன்னேன்.

"இல்லத்தை.. எனக்கு இங்க இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு.. அதெல்லாம் முடிச்சுட்டு.. சீக்கிரமாவே கெளம்பிர்றேன்..!!" "ம்ம்.. இது உன் வீடு மாதிரிடா.. எத்தனை நாள் வேணா தங்கிருந்து.. வேலையை முடிச்சுட்டு போ..!!" "அப்புறம்த்தை.. அந்த மில்லு ஓனர் பையன் அட்ரஸ் கொஞ்சம் கெடைக்குமா..?" நான் கேஷுவலாக கேட்டேன். "எதுக்கு கேக்குற..?" "சும்மா.. அவரை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு..!!" மனதுக்குள் 'சும்மா.. அவரை பாத்து அவர் கையை காலை முறிக்கலாம்னு..!!' என்று சொல்லிக் கொண்டேன். அத்தையும் அசடு மாதிரி அந்த பையன் அட்ரஸை சொன்னாள்.

அசத்த போறது அசோக்..!! 1


நான்தான் அந்த அசோக்..!! படித்தது பி.ஏ. ஆனால் முடித்தது பி.ஏ கிடையாது. வெறும் ப்ளஸ்டூ தான். அரியர்கள் அதிகமாகிப் போக, பி.ஏவை அம்போ என்று விட்டுவிட்டேன். சொந்த ஊர் மதுரைக்கு அருகே சோழவந்தான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை. ஒரு தம்பி இருந்தான். சின்ன வயதிலேயே தவறிவிட்டான். விவசாயம்தான் தொழில். நிலபுலம் கொஞ்சம் இருக்கிறது. நெல் பயிர் செய்கிறோம். விவசாயத்தையும் நான் உருப்படியாக பார்ப்பதில்லை. அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். ஒற்றைப் பிள்ளை என்பதால் ரொம்ப செல்லம். நான் செய்வதெல்லாம், நன்றாக தின்ன வேண்டியது.. என்னுடைய பல்சரை எடுத்துக்கொண்டு, நண்பர்களுடன் சோழவந்தான் சந்து பொந்தெல்லாம் சுற்றி வர வேண்டியது.. குளத்தங்கரையில் உட்கார்ந்து கொண்டு போற வர சிட்டுகளை சைட் அடிக்க வேண்டியது.. எவனாவது ஏமாந்தவன் சிக்கினால் அடியை போடவேண்டியது.. 'ரவுடிப்பய..' என்று கடந்து செல்லும் பெண்கள் ரகசியமாக சொல்லுவதை, காது குளிர கேட்டுக் கொள்ள வேண்டியது.. காலரை தூக்கி விட்டுக்கொள்ள வேண்டியது..!! ஏதாவது பிரச்னையில் சிக்கி, இதுவரை நான்கைந்து முறை போலீஸ் பிடித்து போயிருக்கிறது. ஆனால் எஃப்.ஐ.ஆர் போடுவதற்கு முன் அப்பா வந்து ஸ்டேஷனில் ஆஜர் ஆகி விடுவார். கதை ஆரம்பிக்கின்ற இன்று மதியம், நான் அப்போதுதான் ஊர் சுற்றிவிட்டு வீட்டை அடைந்தேன். பல்சரை வெளியே விட்டுவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தேன். அப்பா ஆளை காணோம். அம்மாதான் இருந்தாள். என்னை பார்த்ததுமே பரபரப்பாக சொன்னாள். "உன் அத்தைக்காரி வந்திருக்காடா..!!"

"எந்த அத்தை..?" "எத்தனை அத்தை இருக்கா உனக்கு..?" "ம்ம்.. என்ன.. திடீர்னு வந்திருக்கா..? சொல்லாம கொள்ளாம..?" "தெரியலை.. இப்போதான் வந்தா.. உன் ரூம்லதான் உக்காந்திருக்கா.. நீ போய் பேசிட்டு இரு.. நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வர்றேன்..!!" நான் என் ரூமை நோக்கி நடந்தேன். அத்தையை பார்ப்பதற்கு முன் அவளை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். அவள் பேர் அமிர்தவல்லி. அப்பாவின் ஒரே தங்கை. சின்ன வயதிலேயே கணவனை இழந்தவள். இரண்டு பெண் பிள்ளைகள் அவளுக்கு. மூத்தவள் வசுந்தரா. இளையவள் சுஜித்ரா. மூத்தவள் டிக்ரீ படித்து முடித்துவிட்டு, காலேஜில் டீச்சராக இருக்கிறாள். இளையவள் இப்போதுதான் ப்ளஸ் டூ படிக்கிறாள். ரெண்டு பேருமே லட்டு மாதிரி இருப்பாள்கள்..!! அத்தையின் அழகு அப்படியே பிள்ளைகளுக்கும்..!! சுஜி பிறந்த கொஞ்ச நாட்களில்தான் மாமா ஆக்சிடண்டில் உயிர்விட்டார். அப்புறம் ஒரு ஐந்தாறு வருடங்கள் அத்தை இரண்டு பிள்ளைகளோடும் எங்கள் வீட்டில்தான் காலம் தள்ளினாள். எப்போதும் ஒருமாதிரி விரக்தியாகவே இருப்பாள். திடீரென்று ஒருநாள் நான் மெட்ராஸ் போகிறேன் என்றாள். ஏதாவது கடை வைத்து பிழைத்துக் கொள்கிறேன் என்று கிளம்பினாள். பத்து வருடத்திற்கு முன்பு மூலக்கடையில் ஒரு இட்லிக்கடை ஆரம்பித்தாள். இப்போது மெட்ராசில் அவளுக்கு சொந்தமாய் பத்து ரெஸ்டாரன்ட்கள் இருக்கின்றன. பலகோடி ரூபாய் சொத்து இருக்கிறது. என்னென்ன கோல்மால் வேலை எல்லாம் செய்தாளோ..? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!! "வா அத்தை.. எப்போ வந்த..?" நான் கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைய அத்தை என்னை ஏறிட்டு புன்னகைத்தாள். "இப்போதான் அசோக்கு.. நல்லாருக்கியா..?" "ம்ம்.. நல்லாருக்கேன் அத்தை.. புள்ளைகளை கூட்டிட்டு வரலையா..? தனியா வந்திருக்க..?" "புள்ளைகளுக்கு லீவ் கெடைக்கலை கண்ணு.. உங்களை பாத்து நாளாச்சேன்னு அத்தை மட்டும் கெளம்பி வந்தேன்.. ஏன் நான் மட்டும் வரக்கூடாதா..?" "இல்லை.. இந்த மாதிரி நீ திடுதிப்புன்னு கெளம்பி வந்ததில்லையே.. அதான் கேட்டேன்..!!" "நீ சொல்றதும் சரிதான்..!! ஆமாண்டா கண்ணா.. அத்தைக்கு உன்னால ஒரு வேலை ஆகணும்.. அதுக்காகத்தான் வந்திருக்கேன்..!!" "அதான பாத்தேன்..? சும்மால்லாம் நீ இந்தப்பக்கம் வரமாட்டியே..? என்ன மேட்டரு..?" நான் சற்றே ஏளனமாக சொல்ல, அத்தை அமைதியானாள். கொஞ்ச நேரம் என் முகத்தை அப்படியே குறுகுறுவென பார்த்தவள், அப்புறம் மெல்லிய குரலில் சொன்னாள். "அசோக்கு.. அத்தை ஒரு விஷயம் சொல்றேன்.. அது நம்ம ரெண்டு பேருக்குள்ளதான் இருக்கணும்..!! சரியா..?" "என்னத்தை.. பேச்சுலாம் பயங்கரமா இருக்கு.. என்ன பிரச்னை..?" "இந்த வசு சிறுக்கி இருக்கால்ல..?" "ம்ம்.." "அவ ஒருத்தனை லவ் பண்றா அசோக்கு..!!" "என்னத்தை சொல்ற..? நம்ம வசுவா..? ஹாஹா.. கொழந்தை அத்தை அவ..!! உன்கிட்ட யாராவது தப்பா சொல்லிருப்பாங்க..!!" "போடா கூறு கெட்டவனே..!! அவளே என்கிட்டே சொன்னான்றேன்..?" "அவளே சொன்னாளா..? அந்த அளவுக்கு பெரியாளாயிட்டாளா அவ..?" "ஆமாம் அசோக்கு.. சரியான அடங்காபிடாரி..!!" ‘ஆமாம்.. உன் மக உன்னை மாதிரிதான இருப்பா..?’ என நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். அத்தை தொடர்ந்தாள்."நான் அவளுக்காக ஒரு பஞ்சு மில்லு ஓனரு பையனை பாத்திருக்கேன்..!! இவ எவனோ ஒரு பரதேசிப் பயலை லவ் பண்ணிக்கிட்டு.. நான் பாத்த மாப்பிள்ளையை கட்டிக்க முடியாதுன்னு சொல்றா..!!" "ஓஹோ..?? ம்ம்.. சரி.. இப்போ அதுக்கு நான் என்ன பண்ணனும்னு சொல்ற..?" "அவ லவ் பண்றவனை கையை காலை முறிச்சு போடணும் அசோக்கு.. வசு இருக்குற பக்கமே அவன் தலை வச்சு படுக்க முடியாதபடி பண்ணனும்..!!" "பாத்தியா..? இத்தனை நாளா என் நெனப்பே இல்லாம இருந்துட்டு.. இப்போ இந்த அடிதடி வேலைக்கு மட்டும்.. என்னை கூப்பிடுற பாத்தியா..?" "ச்சேச்சே.. அப்டிலாம் இல்லடா அசோக்கு.. நம்ம குடும்பத்துலயே நீதான் என்னை மாதிரி கொஞ்சம் தைரியமான ஆளு.. அதான் அத்தை உன்கிட்ட சொல்றேன்.. மத்தபடி அத்தைக்கு எப்போவுமே உன்மேல பிரியந்தான்..!!" ‘நம்ம குடும்பத்துலயே உருப்புடாத ரவுடிப்பய நீதான்..’ அப்படித்தான் அத்தை மனதுக்குள் என்னைப் பற்றி நினைத்திருப்பாள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை. "சும்மா நடிக்காதத்தை.. எல்லாம் எனக்கு தெரியும்.. அதுசரி.. உன்கிட்டதான் இந்த அடிதடிக்குலாம் ஆளு இருக்குமே.. எல்லாத்தையும் விட்டுட்டு எங்கிட்ட வந்திருக்க..?" "மத்த விஷயம் மாதிரி இது இல்லை அசோக்கு.. நம்ம குடும்ப மேட்டரு..!! வெளில தெரிஞ்சா அசிங்கமாயிடும்.. அதான்..!!" "ம்ம்.. சரி.. நீ எங்கிட்ட இதுவரை எதுவும் ஹெல்ப் கேட்டதில்லை.. அதனால பண்றேன்..!! அந்த பையன் அட்ரஸ் கொடு..!! நான் பாத்துக்குறேன்..!!" "அந்த பையன் யாரு.. அவன் பேரு என்ன.. ஊரு என்ன.. எல்லாம் நீதான் கண்டுபுடிக்கணும்..!!" "என்னத்தை வெளையாடுரியா..? வசு அதெல்லாம் உன்கிட்ட சொல்லலையா..?" "அவ சரியான அழுத்தகாரிடா..!! சொல்ல மாட்டேன்றா..!! யாருன்னு சொன்னா.. அவனை நான் ஏதாவது பண்ணிடுவேனொன்னு பயப்படுறா..!!" "ம்ம்ம்.. அப்டியும் நீ விடமாட்டேன்ற..? பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறதுக்கு.. பொட்டியை தூக்கிட்டு மெட்ராஸ்ல இருந்து வந்துட்ட..?" "போடா அறிவு கெட்டவனே..!! நான் பாத்திருக்குற மாப்ளை கோடீஸ்வரன்டா.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சு குடுக்குறதுக்குத்தான் இப்டி பண்றேன்.. மொதல்ல அதை புரிஞ்சுக்கோ நீ..!!" "ம்ம்.. சரி.. பண்றேன்..!! எனக்கு என்ன சாலரி..?" "சாலரியா..?" "ஆமாம்.. நான் எதோ சப்பை மேட்டர்னு நெனச்சேன்.. ஆளையே நான்தான் கண்டுபுடிக்கனுன்னு சொல்றியே..? ரொம்ப வேலை இருக்கும் போல இருக்கே..? எனக்கு ஒரு அமவுண்ட் பிக்ஸ் பண்ணிடு..!!" "ம்ம்.. சரிடா.. அந்த பூந்தமல்லி ஹோட்டலை உன் பேர்ல எழுதி வச்சிடுறேன்..!! போதுமா..?" "நெஜமாவா அத்தை சொல்ற..? நம்பலாமா..?" "ஏண்டா.. அத்தை மேல நம்பிக்கை இல்லையா..?" "ஹாஹா.. உன்னல்லாம் நம்ப முடியாது அத்தை..? எத்தனை பேருக்கு நீ அல்வா கொடுத்திருப்ப..? சும்மாவா அந்த ஒத்தை இட்லிக்கடை பத்து ஹோட்டலா மாறிருக்கும்..?" "ச்சேச்சே.. அதெல்லாம் மத்தவங்களுக்கு அசோக்கு..!! நீ என் அண்ணன் புள்ளை.. உன்னை ஏமாத்துவனா..?" "ம்ம்.. சரி நம்புறேன்..!! அந்த பையன் யாருன்னு கண்டுபுடிச்சு.. அவன் கையை காலை உடைச்சு.. அவனை நம்ம வசு பக்கம் வர விடாம பாத்துக்குறேன்.. போதுமா..?" "போதுண்டா..!! அப்போ இன்னைக்கே அத்தையோட கெளம்பி மெட்ராஸ் வா.. மேட்டரை முடிச்சதும்.. ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்..!!" "இன்னைக்கே வந்தா வசுவுக்கு சந்தேகம் வரும் அத்தை.. நீ கெளம்பு.. நான் ரெண்டு நாள் கழிச்சு பொறுமையா வர்றேன்..!!" "ம்ம்.. அதுவும் சரிதான்..!!" அத்தை சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, இரண்டு கைகளிலும் காபி கப்போடு அம்மா அந்த அறைக்குள் நுழைந்தாள். சிரித்த முகத்துடன் என்னிடம் கேட்டாள். "அத்தையும் மருமகனும் குசுகுசுன்னு.. அப்டி என்ன ரகசியம் பேசுறீங்க..?" நான் தலையை லேசாக சாய்த்து, ஓரக்கண்ணால் அம்மாவை பார்த்தேன். அப்புறம் கேலியான குரலில் கேஷுவலாக சொன்னேன். "ம்ம்ம்ம்.. நானும் அத்தையும் சேர்ந்து.. ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க போறோம்.. அதுக்குத்தான் ப்ளான் போட்டுக்கிட்டு இருக்கோம்..!!" அம்மா கண்களை இடுக்கி, உக்கிரமாக என்னை முறைத்தாள். அப்புறம் வலது கையில் இருந்த காபிகப்பை டேபிளில் வைத்துவிட்டு, என்னுடைய நடு மண்டையில் 'நங்ங்ங்..!!!' என்று ஒரு குட்டு வைத்தாள். நான் வலியில் கத்த, அத்தை வடிவேலு காமடி பார்த்த மாதிரி சிரித்தாள். அப்புறம் ஒரு இரண்டு நாட்கள் கழித்து நான் சென்னையில் காலடி எடுத்து வைத்தேன். அத்தையின் வீடு அண்ணா நகரில் இருக்கிறது. வீடு என்று கூட சொல்ல முடியாது. பங்களா..!!! நான் சென்ற அதிகாலை நேரத்தில் அத்தைதான் வந்து கதவு திறந்து விட்டாள். எனக்கு மாடியில் ஒரு அறை ஒதுக்கி இருப்பதாகவும், அங்கே தங்கிக் கொள்ளுமாறும் சொன்னாள். அந்த அறைக்குள் நுழைந்ததுமே, பயணக்களைப்பில் கொஞ்ச நேரம் நன்றாக தூங்கிவிட்டேன். அப்புறம் ஒரு எட்டு மணிபோல எழுந்தேன். பாத்ரூம் சென்று ஷவரில் குளித்தேன். வெளியே வந்து வேறு உடைகள் அணிந்துகொண்டேன். டக் இன் செய்து, பெல்ட் மாட்டிக்கொண்டேன். கொண்டு வந்திருந்த பேக்கை திறந்து, கூலிங் க்ளாஸ் எடுத்து அணிந்து கொண்டபோது வசு அறைக்குள் நுழைந்தாள். டார்க் பிரவுன் நிறத்தில் ஒரு காட்டன் புடவை கட்டிக்கொண்டு, ப்ரெஷாக.. புதுமலர் போல.. தேவதை மாதிரி.. நுழைந்தாள். என்னை பார்த்ததுமே சிரிப்பை அடக்க முடியாமல், அழகாக குலுங்கி குலுங்கி சிரித்தாள். வயிற்றை ஒரு கையால் பிடித்துக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தாள். நான்தான் சற்று எரிச்சலாக கேட்டேன். "ஏய்.. ஏய்.. இரு.. இரு..!! ஏன் இப்போ இப்டி லூசு மாதிரி கனைக்கிற..?" "பின்ன..? என்ன ட்ரெஸ் அத்தான் இது..? பிங்க் கலர் ஷேர்ட்.. க்ரீன் கலர் பேன்ட்..?? இதுல கூலிங் க்ளாஸ் வேற..? நீங்க இப்டி ட்ரெஸ் போட்டா.. அவர் கோவிச்சுக்க மாட்டாரா..?" "எவரு..?" "அவர்தான்.. ராமராஜன்..!!" "ஒய்.. என்னப்பத்தி என்ன வேணா சொல்லு.. என் தலைவரை பத்தி பேசாத..!!" "ஓஹோ..? அவர்தான் உங்க தலைவரா..? ஓகே ஓகே.. உங்களை பாத்தாலே தெரியுது..!! ம்ம்ம்.. எப்போ வந்தீங்க..?" "ஜஸ்ட் இன்கமிங்..!! நவ் அவுட்கோயிங்..!!" "ஹாஹா... ம்ம்ம்ம்... அதுசரி.. என்ன திடீர்னு மெட்ராஸ் பக்கம்..?" "ஏன்.. நாங்க மெட்ராஸ் வரக்கூடாதா..? ஒரு பிசினஸ் விஷயமா வந்தேன்..!!" "ஓஹோ.. இந்த அடிதடி, ரவுடிசம்லாம்.. இப்போ பிசினஸ் லிஸ்ட்ல சேர்த்துட்டாங்களா..?" அவள் நக்கலாக கேட்க, நான் கடுப்பானேன். "உனக்கு.. கொழுப்பு ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சுடி.. உன் அம்மா சொன்னது சரிதான்..!!" நான் அப்படி சொன்னதும் வசுவின் முகம் பட்டென்று மாறியது. சிரிப்பை அப்படியே நிறுத்தினாள். என் முகத்தை கூர்மையாக பார்த்தபடி கேட்டாள். "அம்மா என்னத்தான் சொன்னா என்னை பத்தி..? சொல்லுங்கத்தான்..!!" அவள் கேட்க, நான் தடுமாறினேன். 'உளறிட்டனா.. உளறிட்டனா..' என என்னை நானே மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.அ..அவங்க ஒன்னும் சொல்லலை.. உ..உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடுச்சுனு சொன்னாங்க.. அவ்ளோதான்..!! வேற ஒன்னும் சொல்லலை..!!" நான் அப்படி சமாளித்துக்கொண்டு இருக்கும்போதே, "ஹாய் அசோக் அத்தான்..!! எப்போ வந்தீங்க..??" என்று கத்தியவாறு சுஜி துள்ளி குதித்து ஓடிவந்தாள். வொயிட் அண்ட் ரெட் ஸ்கூல் யூனிபார்மில் இருந்தாள். அவள் ஓடி வருகையில் அந்த யூனிபார்முக்குள் இருந்த எதோ ரெண்டு கிடுகிடுவென குலுங்கின. "ஏய்.. சுஜிக்குட்டி..!! எப்டிடி இருக்குற..? பாத்து ஒரு வருஷம் இருக்குமா..? அதுக்குள்ளே இவ்ளோ பெரிய பொண்ணாயிட்டியடி நீ..?" சொல்லும்போதே என் பார்வை என்னையும் அறியாமல் அப்படி என்ன குலுங்கின என்று அவளுடைய கழுத்துக்கு கீழே வெறித்தது. "பின்ன..? சீக்கிரம் பெரிய பொண்ணா ஆனாத்தான.. உங்களை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க முடியும்..?" "ஓஹோ.. அத்தானை கட்டிக்கனுமா உனக்கு..? என் மேல அவ்ளோ ஆசையா..?" "ஆமாத்தான்.. பருத்திவீரன் படம் பாத்ததுல இருந்தே.. கட்டிக்கிட்டா உங்களை மாதிரி ஒரு பட்டிக்காட்டு ரவுடிப்பயலைத்தான் கட்டிக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்..!!" அவள் சிரித்துக்கொண்டே சொல்ல, நான் கடுப்பானேன். "ஏய்.. என்னடி நெனச்சுட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்..? நான் ரவுடின்னு.. உன் அக்கா ஒரு மாதிரி சொல்லி கிண்டல் பண்ணினா.. நீ அதையே வேற மாதிரி சொல்லி லந்து பண்றியா..?" "ச்சேச்சே.. லந்துலாம் இல்லத்தான்..!! சீரியஸாதான் சொல்றேன்.. எனக்கு உங்களை கட்டிக்க ரொம்ப ஆசை..!!" "ஹாஹா.. போடீ சில்லுவண்டு..!! ஒரு புடிக்கு தாங்க மாட்ட..? நீல்லாம் எனக்கு ஜோடியா..?" "அதெல்லாம் தாங்குவேன் தாங்குவேன்.. வேணுனா புடிச்சு பாருங்க..!!" "ம்ம்.. எனக்கும் உன் மேல ஒரு கண்ணுதான் சுஜி குட்டி..!! ஆனா இதெல்லாம் நடக்கணுமே..?" "ஏன்..?" "ஏனா..? உன் அம்மா.. நமக்குலாம் உங்களை கட்டித்தருமா..? அது உங்களுக்குலாம் கோடீஸ்வர மாப்பிள்ளையாத்தான் பாக்கும்..!!" "அத்தான்.. ரெண்டே வருஷம் வெயிட் பண்ணுங்க.. நான் மேஜராயிடுவேன்..!! அப்புறம் எங்கயாவது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..!! ஓகேவா..?" சுஜி தன் குழந்தை முகத்தை மிக சீரியஸாக வைத்துக்கொண்டு அப்படி சொல்ல, எனக்கு சிரிப்பு வந்தது. "ஹாஹா.. வாடி வா..!! ஓடிப்போலாம் வா..!!" புன்னகையுடன் சொல்லிக்கொண்டே நான் சுஜியின் தோளில் கைபோட்டு, அவளை என்னோடு அணைத்துக் கொண்டேன். அதுவரை நாங்கள் பேசுவதை அமைதியாக பார்த்துக்கொண்டு நின்ற வசு, இப்போது பட்டென்று என் கையை தட்டிவிட்டாள். தங்கையை தன் பக்கமாக இழுத்துக் கொண்டாள். சற்றே எரிச்சலான குரலில் சொன்னாள். "என்னத்தான் இது..? அவ என்ன இன்னும் சின்ன கொழந்தையா..? பெரியவளாயிட்டா.. இன்னும் தொட்டு விளையாடிட்டு..?" அவள் சொன்னதை கேட்டு நான் சற்றே திகைக்க, இப்போது சுஜி தன் அக்காவை முறைத்தபடி கேட்டாள். "இப்போ எதுக்கு தேவையில்லாம கத்துற..? அத்தான்தான தொட்டாரு..?""வாயை மூடுடி.. ஆளுதான் மாடு மாதிரி வளந்திருக்க.. அறிவே கெடயாது..!!" "போடீ.. சும்மா சும்மா.. தேவையில்லாம திட்டிட்டே இருப்ப நீ..!! நான் போறேன் போ..!!" சுஜி சலிப்பாய் சொல்லிவிட்டு திரும்பி நடக்க, "ஏய்.. இருடி.. நான் ட்ராப் பண்றேன்..!!" என்று பின்னால் திரும்பி கத்தினாள் வசு. "ஒன்னும் வேணாம்.. நான் நடந்தே போயிக்கிறேன்.. போ..!!" இப்போது வசு திரும்பி என் முகத்தை ஏறிட்டாள். ஒருமாதிரி அசட்டுத்தனமாய் சிரித்தாள். அப்புறம் சற்றே சாந்தமான குரலில் சொன்னாள். "சரித்தான்.. அவ ரொம்ப கோவமா போறா..!! நான் போய் அவளை சமாதானப் படுத்துறேன்.. அப்டியே நானும் காலேஜுக்கு கெளம்புறேன்.. ஈவினிங் பாக்கலாம்..!!" "ம்ம்.. சரி வசு..!!" வசு சென்றபிறகு நான் அத்தையின் ரூமுக்கு சென்றேன். அவளும் எங்கேயோ ரெடியாக்கிக் கொண்டிருந்தாள். என்னை பார்த்ததும் பாசமாய் புன்னகைத்தாள். "அசோக்கு.. நல்லா ரெஸ்ட் எடுத்தியா..? ரூம்லாம் சவுகரியமா இருக்கா..?" "எல்லாம் சவுகரியமா இருக்கு அத்தை.. நல்லா ரெஸ்ட் எடுத்தேன்.." "ம்ம்.. இந்தா.. பைக் ஒன்னு அரேஞ் பண்ண சொன்னியே.. சாவி..!! பைக் வெளில நிக்கும்..!!" சொல்லிக்கொண்டே அத்தை தூக்கி போட்ட பைக் சாவியை, நான் கேட்ச் பிடித்துக் கொண்டேன். "தேங்க்ஸ் அத்தை.. அப்போ நான் கெளம்புறேன்..!!" "இரு இரு.. என்ன ப்ளான் இன்னைக்கு..? அந்த பையனை எப்டி கண்டுபிடிக்க போற..?" "ஏன் அத்தை இப்படி அவசரப்படுற..? பொண்ணு வாழ்க்கையை கெடுக்குறதுக்கு.. இப்படி பறக்குறியே..? இன்னைக்குலாம் எந்த ப்ளானும் இல்லை.. மெட்ராஸ்ல எனக்கு நெறைய தோஸ்த் இருக்காங்க.. அவங்களை போய் பாத்து.. இன்னைக்கு ஃபுல்லா அவங்களோடதான் சுத்த போறேன்.. நாளைல இருந்துதான் உன் வேலை..!! ஓகேவா..?" நான் வெளியே வந்தேன். அந்த பைக் நின்றிருந்தது. அதே பல்சர். அதே ரெட் கலர். நம்பர் மட்டும் வேறு. எடுத்துக்கொண்டு ஊர் சுற்ற கிளம்பினேன். அத்தையிடம் சொன்ன மாதிரி அன்று முழுவதும் எனது பழைய நண்பர்களுடன் கூத்தடித்தேன். நடுராத்திரிதான் வீடு திரும்பினேன். அடுத்த நாள்தான் வந்த வேலையை ஆரம்பித்தேன். நான் முதலில் குறிவைத்தது வசுவின் செல்போன். இந்த காலத்தில் காதலும், கைபேசியும் பிரிக்க முடியாத விஷயங்கள் என்று நான் உறுதியாக நம்பினேன். அவள் குளிக்க பாத்ரூம் சென்ற நேரம் பார்த்து அவளுடைய அறைக்குள் நுழைந்தேன். அவளுடைய செல்போனை நோண்டி, மெசேஜஸ் சென்று பார்த்தேன். பார்த்ததும் எனக்கு தோன்றிய ஒரே விஷயம்.. ஒன்று அவளுக்கு SMS அனுப்பும் பழக்கமே கிடையாது.. அல்லது ரொம்ப ஜாக்கிரதையானவள்..!! இன்பாக்சும், சென்ட் ஐட்டம்சும் சுத்தமாக துடைத்து வைக்கப்பட்டிருந்தன. எனக்கு முதல் ஏமாற்றம்..!! நான் மனம் தளரவில்லை. கான்டாக்ட்ஸ் எடுத்தேன். அதில் இருந்த ஆம்பளை பெயர்கள் உள்ள போன் நம்பரை எல்லாம் என் செல்போனுக்கு ஏற்றிக் கொண்டேன். ஒரு சில ரெண்டுங்கெட்டான் பெயர்கள் (சக்தி, பாலா, etc ) அதையும் குறித்துக் கொண்டேன். எல்லாம் முடிந்து வசுவின் செல்போனை, அது இருந்த இடத்திலேயே வைக்க போனபோது, வசு பாத்ரூமில் இருந்து வெளியே வந்துவிட்டாள். கையும் கைபேசியுமாக அவளிடம் மாட்டிக் கொண்டேன். திருதிருவென விழித்தேன். அவளும் அவளுடைய அறையில் என்னை பார்த்ததும், முதலில் அதிர்ந்து போனாள். அப்புறம் சமாளித்துக் கொண்டு குழப்பமான குரலில் கேட்டாள். "அ..அத்தான்... நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. என் ரூம்ல..? அதுவும் என் செல்போனை வச்சுக்கிட்டு..?" "அ..அது ஒன்னும் இல்லை வசு.. சு..சும்மா உன் செல் நம்பர் தெரிஞ்சுக்கத்தான்.. எடுத்து பாத்துக்கிட்டு இருந்தேன்..!!" நான் தட்டுத்தடுமாறி சொல்லவும் வசுவின் முகம் பட்டென்று மாறியது. குழப்ப ரேகைகள் மறைந்து, ஒருவித குறும்பு ரேகைகள் முகம் எங்கும் பரவின. ஒருமாதிரி கண்களை இடுக்கி என்னை பார்த்தவாறு, கேலியாக கேட்டாள். "ம்ம்ம்.. நம்பர் வேணுன்னா என்கிட்டே கேக்குறதுக்கு என்ன..? அதுல கூட என்ன திருட்டுத்தனம்..? ம்ம்ம்..? சரி சொல்றேன்.. நோட் பண்ணிக்குங்க..!! நைன்.. எயிட்.." தலையெழுத்தே என்று நான் அந்த நம்பரையும் நோட் பண்ணிக்கொண்டேன். அன்று முழுவதும் நான் அந்த வேலைதான் பார்த்தேன். ஒரு பப்ளிக் டெலிபோன் பூத்தில் சென்று உட்கார்ந்து கொண்டேன். அந்த ஆம்பளை நம்பருக்கெல்லாம் கால் செய்து, தூண்டில் போட்டு பார்த்தேன். அதில் யாராவது அவளுடைய காதலனாக இருப்பானா என்று வலைவீசி பார்த்தேன். ஒரு மீனும் சிக்கவில்லை..!! எல்லாப் பயலும் தெளிவா இருந்தாய்ங்க..!! ஒன்று எந்த மீனுமே வசுவின் காதல் மீன் இல்லை.. அல்லது அந்த காதல் மீன்.. கழுவுற மீனில் நழுவுற மீன்..!! செல்போன் ஐடியா வேலைக்காகாது என்று தோன்றியது. அடுத்த ஐடியாவை செயல் படுத்தினேன். வசுவை வண்டியில் ஃபால்லோ செய்வதுதான் அந்த ஐடியா..!! அடுத்த நாள் காலையில் வசு கிளம்புவதற்கு முன்பே நான் வீட்டை விட்டு கிளம்பினேன். அடுத்த தெரு முனையில் அவளுக்காக காத்திருந்தேன். அவளுடைய ஆக்டிவா கண்ணில் பட்டதும், ஹெல்மட் மாட்டிக்கொண்டு ஃபால்லோ செய்தேன். வசு மிதமான வேகத்தில்தான் சென்றாள். ஒரு பத்து மீட்டர் இடைவெளி விட்டு நான் ஃபால்லோ செய்தேன். பீச் ரோட்டில் இருக்கிறது வசு வேலை செய்யும் காலேஜ். அண்ணா நகரில் வண்டியை முறுக்கியவள், நூல் பிடித்த மாதிரி அந்த காலேஜை அடைந்து, காம்பவுண்டுக்குள் நுழைந்தாள். நான் அன்று முழுவதும் அந்த காலேஜையே சுற்றி சுற்றி வந்தேன். மாலை மறுபடியும் அவளை ஃபால்லோ செய்தேன். அவளும் மற்றொரு நூல் பிடித்து, அண்ணா நகர் வந்து சேர்ந்தாள். எனக்கு சப்பென்று போனது..!! சரி பரவாயில்லை.. இந்த மாதிரி ஒரு நான்கைந்து நாட்கள் ஃபால்லோ செய்தால், கண்டுபிடித்து விடலாம் என மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அடுத்த நாள் ஃபால்லோ செய்த போதே அது நடந்தது. அந்த அதிகாலை நேரத்தில், வாலாஜா ரோட்டில் ஆள் நடமாட்டம் ஜாஸ்தியாக இல்லை. எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த வசு, திடீரென்று தன் வண்டியை திருப்பி, ஒரு யு-டர்ன் போட்டாள். என்னை நோக்கி எதிர் திசையில் வந்தாள். நான் சுதாரித்துக் கொள்ளும் முன்பே, எனது வண்டிக்கு குறுக்காக அவளுடைய வண்டியை நிறுத்தி, ப்ரேக் போட்டாள். நானும் உடனடியாக என்னுடைய ப்ரேக் கட்டையை அழுத்த வேண்டி இருந்தது. வண்டியில் இருந்து இறங்கி வந்த வசு, கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியவாறு என்னையே முறைத்தாள். உக்கிரமான குரலில் சொன்னாள். "ஹெல்மட்டை கழட்டுங்கத்தான்..!!" எனக்கு வேறு வழியில்லை. கழட்டினேன். இஞ்சி தின்ன குரங்கு மாதிரி 'ஈ...' என்று இளித்தேன். "ஏன்த்தான் என்னை ஃபால்லோ பண்றீங்க..?" அவள் கோபம் குறையாமல் கேட்டாள். "ஃபால்லோவா..? நானா..? உன்னையவா..? சேச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே.." "நடிக்காதீங்கத்தான்.. எனக்கு தெரியும்..!! நேத்தும் ஃபால்லோ பண்ணுனீங்க.. இன்னைக்கும் பண்றீங்க.. என்னனு சொல்லுங்க..!!" "அதான் ஃபால்லோ பண்ணலைன்னு சொல்றேன்ல..? நான் என் பிசினஸ் விஷயமா.. இந்தப்பக்கம் போறேன்..!! நேத்தும் அதுக்காகத்தான் வந்தேன்..!!" "இந்த பக்கமா..? இந்த பக்கம் என்ன இருக்கு..?" "இந்தப்பக்கம் ஒரு 5 ஸ்டார் ஹோட்டல் இருக்குது.. அங்கதான் எங்க பிசினஸ் மீட்டிங்..!!" நான் அசராமல் சொல்லவும், ஒரு ஐந்தாறு வினாடிகள் வசு என்னையே அமைதியாக பார்த்தாள். அப்புறம் அவளுடைய உதடுகளில் லேசாக புன்னகை தவழ ஆரம்பித்தது. கையால் வாயை பொத்தி சிரிப்பை அடக்கிக் கொண்டாள். கண்களை இடுக்கி, என்னை ஒரு மாதிரியாக பார்த்தவள், அமைதியான அதே நேரம் கேலியான குரலில் சொன்னாள். "ம்ம்.. 5 ஸ்டார் ஹோட்டல்ல.. பிசினஸ் பேசுற மூஞ்சியை பாரு..!! உண்மையை சொல்லுங்க.. நான் ஒன்னும் தப்பா நெனைக்க மாட்டேன்..!!" "அப்போ இவ்ளோ நேரம் நான் என்ன பொய்யா சொல்றேன்..?" நான் அப்பாவியாக கேட்க, "ஓஹோ.. அப்டின்னா நீங்க என்னை ஃபால்லோ பண்ணலை..?" அவள் விடாமல் கேட்டாள். "பண்ணலை.. பண்ணலை.. பண்ணலை.. போதுமா...?" நான் எரிச்சலாக கத்தவும், வசு இப்போது மீண்டும் என்னை முறைத்தாள். ஓரிரு வினாடிகள் அப்படியே முறைத்தவள், அப்புறம் திரும்பி நடந்தாள். தன் ஆக்டிவாவில் ஏறி அமர்ந்து அதை ஸ்டார்ட் செய்தாள். நான் பின்னால் இருந்து அவளை அழைத்தேன்."ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!" "என்ன..?" அவள் திரும்பி எரிச்சலாக கேட்டாள். "இப்டியே நேரா போனா.. கன்னிமரா ஹோட்டல் வருமா..?" "ம்ம்ம்... இப்டியே நேரா போனா.. கடல்தான் வரும்..!! அதுல போய் விழுங்க..!!" அவள் கோபமாய் பொரிந்து தள்ளிவிட்டு, வண்டியில் பறக்க, நான் அதிர்ந்து போய் அப்படியே நின்றிருந்தேன். அப்புறம் ஒரு ஒரு வாரம் போனது. வசுவின் நடவடிக்கைகளை நான் க்ளோசாக வாட்ச் செய்தேன். இரவில் அவள் ரூம் மீது ஒரு கண் எப்போதும் வைத்திருப்பேன். நள்ளிரவில் தன் காதலனுக்கு போன் செய்து பேசுவாளோ என்று நோட்டமிட்டேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடைய அறையை அலசுவேன். ஒருவேளை அவளுடைய காதலன் அந்த கல்லூரிக்குள்ளேயே இருக்கலாமோ என்று தோன்றியது. அந்த காலேஜில் படிக்கும் ரெண்டு பசங்களை பிடித்து, அடியை போட்டு விசாரித்தேன். அவர்கள் அலறிக்கொண்டே 'அப்படியெல்லாம் எதுவும் இல்லை..' என்றார்கள். ஒன்றுமே வேலைக்காகவில்லை..!! நொந்து போனேன். அத்தை வேறு நச்சரிக்க ஆரம்பித்தாள். "என்னடா அசோக்கு.. வந்து ஒருவாரத்துக்கு மேல ஆச்சு.. என்ன பண்ணிட்டு இருக்குற நீ..? அவ எந்த நேரம் அந்த பையனோட ஓடிப்போவாளோன்னு.. எனக்கு பக்கு பக்குன்னு இருக்குது..!!" "அத்தை.. எனக்கு தெரிஞ்சு உன் பொண்ணு எவனையும் லவ் பண்ணலை..!!" "அப்புறம் ஏன் அவ அப்படி சொன்னா..?" "உன் இம்சை தாங்காம சொல்லிருப்பா..!!" "போடா அறிவு கெட்டவனே..!! பெத்தவளுக்கு தெரியாதா பொண்ணைப் பத்தி..? எனக்கு நல்லா தெரியும்.. அவ யாரையோ லவ் பண்ணுறா..!! உன்னால கண்டுபிடிக்க முடியலைன்னு சொல்லு... ம்ம்ஹ்ஹ்ம்ம்..!! உன்னை போய் அங்க இருந்து கூட்டிட்டு வந்தேன் பாரு.. என்னை சொல்லணும்..!!" அத்தையின் வார்த்தைகள் என்னை சூடாக்கின.

"அத்தை.. ரொம்ப கேவலமா பேசுற நீ..!! எனக்கு இன்னும் ரெண்டு நாள் டைம் கொடு.. அதுக்குள்ளே வந்த வேலையை முடிச்சு காட்டுறேன்..!! நீ ரெஜிஸ்ட்ரேஷனுக்கு எல்லாம் ரெடி பண்ணிக்கோ..!!" நான் உண்மையிலேயே பயங்கர எரிச்சலானேன். சப்பை மேட்டர் இது. எதற்கு தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும் என்று தோன்றியது. வசுவிடமே நைசாக பேசி மேட்டரை கறந்துவிடலாம் என முடிவு செய்தேன். அன்று இரவு சாப்பிட்டுவிட்டு, அவள் மொட்டை மாடியில் உலாத்திக்கொண்டு இருந்தபோது, அவளை பிடித்தேன். வானத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளை பின்னால் இருந்து அழைத்தேன். "ஹலோ.. எச்சூஸ்மி.. மிஸ் வசு..!!" "ம்ம்.. வாங்கத்தான்.. சாப்பிட்டீங்களா..?" "ம்ம்.. ஆச்சு ஆச்சு..!! உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணுமே.. வந்ததுல இருந்தே பேசனுன்னு நெனச்சுக்கிட்டு இருக்கேன்.." நான் சொன்னதும் வசு, கண்களை இடுக்கி என்னை கூர்மையாக பார்த்தாள். உதட்டில் ஒருமாதிரி குறும்பு புன்னகையுடன் சொன்னாள். "அப்டி என்ன பேசணும்.. இப்போ பேசலாமே..?" "அ..அது.. அது.. நீ யாரையோ லவ் பண்றியாமே.. அப்டியா..?" "யார் சொன்னது உங்களுக்கு..?" "அத்தைதான் சொன்னாங்க..!!" "ஓஹோ..? ம்ம்ம்ம்.... ஆமாம்.. லவ் பண்றேன்..!! அதுக்கு என்ன இப்போ..?" "ஒன்னும் இல்லை.. அவரு அட்ரெஸ் கொஞ்சம் சொல்ல முடியுமா..?" "எதுக்கு..?"" "சும்மா.. அவரை பாத்து ஒரு ஹாய் சொல்லலாம்னு..!!" மனதுக்குள் 'சும்மா.. அவரை பாத்து அவர் கையை காலை முறிக்கலாம்னு..!!' என்று சொல்லிக் கொண்டேன். "போங்கத்தான்.. அதெல்லாம் சொல்ல முடியாது.. சீக்ரட்..!!" அவள் ஒரு மாதிரி சலிப்பாக சொன்னாள். "இங்க பாரு வசு.. நீ எதுக்கு தயங்குறேன்னு எனக்கு புரியுது.. அத்தை அந்த பையனை ஏதாவது பண்ணிடுவாங்கன்னுதான..? அத்தான் நான் இருக்கேன் வசு..!! நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறேன்..!!" "யாரு..?? நீங்களா..?? போங்கத்தான்.. போய் வேற வேலை ஏதாவது இருந்தா பாருங்க..!!" எரிச்சலாக சொல்லிவிட்டு நகர முயன்றவளை, நான் கை நீட்டி மறித்தேன். "அப்போ... சொல்ல மாட்ட..?" "சொல்ல மாட்டேன்.. என்ன பண்ணுவீங்க..? உங்களுக்கு வேணுன்னா நீங்களே கண்டு பிடிச்சுக்குங்க..!!" "ஏன்..? என்னால கண்டு முடியாதுன்னு நெனைக்கிறியா..?" "சத்தியமா முடியாது..!!" அவள் பட்டென்று சொன்னாள். "ஏன் அப்டி சொல்ற..?" "ஏன்னா.. நீங்க ஒரு ட்யூப் லைட்டு..!! பொண்ணுகளை பத்தி உங்களுக்கு ஒரு எழவும் தெரியாது..!!" அவள் கிண்டலாக சொல்ல, எனக்கு கடுப்பாக வந்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் இவள் என்னை பற்றி..? ஒன்னும் தெரியாத மக்கு என்றா..? என்னைப் பற்றிய அவளுடைய எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது. இன்ஸ்டண்டாய் பொய் சொல்ல ஆரம்பித்தேன். "யாரு..? எனக்கு பொண்ணுகளை பத்தி தெரியாதா..? சோழவந்தான் வந்து கேட்டுப் பாரும்மா..!! எல்லா பொட்டை சிறுக்கிகளும் ஐயாவோட பெருமையை எடுத்து சொல்லுவாங்க..!!" "எ..என்னத்தான் சொல்றீங்க..?" வசு ஒரு மாதிரி அதிர்ச்சியாய் கேட்டாள். "உண்மையை சொல்லிட்டு இருக்குறேன்..!! எத்தனை பொண்ணுகளை இதுவரை மயக்கிருக்கேன் தெரியுமா..?" "எ..எத்தனை..????" "அது இருக்கும்.. எக்கச்சக்கமா..!! எண்ணிட்டுலாம் இருக்குறது இல்லை.. மாசத்துக்கு ஒருத்தி..!! நாங்கல்லாம் பல்சரை எடுத்துட்டு.. அப்டியே ஒரு ரவுண்டு வந்தோம்னா.. பத்து பொண்ணுகளுக்கு ரூட்டு போடுவோம்..!! என்னைப் பாத்து நா கூசாம.. ட்யூப் லைட்டுன்னு சொல்ற..!!" "ஓஹோ..? தெரியாம சொல்லிட்டேன்..!! அத்தனை பொண்ணுகளை மயக்கிருக்கீங்களா..?" "பின்ன..?" "ம்ம்.. அப்புறம்..?" "அப்புறம் என்ன..? மாசத்துக்கு ஒருத்தியை மயக்க வேண்டியது.. மேட்டரை முடிச்சுட்டு.. போ போ.. போயிட்டே இருன்னு.. டாடா காட்டிட வேண்டியதுதான்..!! எவன் அதுகளைலாம் கட்டிட்டு மாரடிக்கிறது..? ஹெஹே.. ஹெஹே..!! எத்தனை பொண்ணுகளை தொட்டுருக்கேன்.. என்னை போய்.. பொண்ணுகளை பத்தி ஒரு எழுவும் தெரியாதுன்னு சொல்ற..? ஹையோ.. ஹையோ..!!" "அத்தான்... நீ..நீங்க சொல்றதுலாம் உண்மைதானா..?" வசு ஒருமாதிரி உடைந்து போன குரலில் கேட்டாள். "அப்போ.. இவ்ளோ நேரம் நான் என்ன பொய்யா சொல்லிட்டு இருக்கேன்..? இன்னும் நம்பிக்கை இல்லையா என்மேல..? நான் சொல்வதெல்லாம் உண்மை.. உண்மை.. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை..!! போதுமா..? இல்லை.. இன்னும் என்னைப் பத்தி ஏதாவது தெரிஞ்சுக்கனுமா..?"அவ்வளவுதான்..!! வசு தன் கண்களை விரித்து, என்னையே அசையாமல் பார்த்தாள். அதிர்ச்சி நிறைந்த, நம்ப முடியாத, ரொம்பவே மருட்சியான பார்வை..!! எனக்கு அவளுடைய பார்வையின் அர்த்தம் புரியவில்லை. ஏன் அப்படி பார்க்கிறாள்..? வசுவின் உதடுகள் படபடவென துடித்தன. அதை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டாள். உள்ளுக்குள் எழுந்த சோகத்தை, அடக்க முடியாமல் கஷ்டப்படுபவள் போல காட்சியளித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு ஐந்தாறு விநாடிகள்தான் அந்த மாதிரி என்னை பார்த்திருப்பாள். அப்புறம் ஒரு மாதிரி அழுதுவிடும் குரலில் சொன்னாள். "தெரிஞ்சு போச்சுத்தான்..!! உங்களை பத்தி நல்லா தெரிஞ்சு போச்சு..!! தேங்க்ஸ்..!!" சொல்லிக்கொண்டே வசு என்னை கையெடுத்து கும்பிட்டாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று ஒருதுளி கண்ணீர் எட்டிப் பார்த்தது. அதை பட்டென்று புறங்கையால் துடைத்துக் கொண்டாள். படக்கென்று திரும்பி ஓடினாள். 'ஏய்.. வசு..' என்று நான் அழைத்ததை பொருட்படுத்தாமல், படபடவென படியிறங்கி கீழே சென்றாள். என்ன ஆயிற்று இவளுக்கு..? நன்றாக பேசிக்கொண்டு இருந்தாள்.. திடீரென லூசு மாதிரி அழுதுகொண்டே ஓடுகிறாளே..? யோசித்துப் பார்த்தால் எதுவும் விளங்கவில்லை..!! நான் கொஞ்ச நேரம் அங்கேயே தலையை சொறிந்தவாறு நின்றிருந்தேன். அப்புறம் என் ரூமுக்கு சென்று, போர்வையை இழுத்திப் போர்த்திக்கொண்டு தூங்கிவிட்டேன். அன்று என்னவோ.. அடித்துப் போட்டது மாதிரி அப்படி ஒரு தூக்கம்..!! எழுந்திருக்க பத்து மணியாயிற்று. குளித்துவிட்டு கீழே சென்றேன். வசுவும், சுஜியும் கிளம்பி போயிருந்தார்கள். அத்தை மட்டும்தான் இருந்தாள். நான் உள்ளே நுழைந்ததுமே, அல்வாவை என் வாயில் திணித்தாள். "ஐயோ.. என்னத்தை இது..?" "அல்வாடா.. சாப்பிடு..!!" "நான் உன் அண்ணன் புள்ளை.. அல்வாலாம் கொடுக்க மாட்டேன்னு சொன்ன..?" "அடச்சீய்.. லூசு..!! இது சந்தோஷத்தை ஷேர் பண்ணிக்கிறதுக்கு கொடுக்குற இனிப்புடா..!!" "அப்டி என்ன சந்தோஷம் உனக்கு.. காலங்காத்தால..?" "நான் கூட உன்னை என்னமோ நெனச்சேன் அசோக்கு.. நீ என் அண்ணன் மகன்னு நிரூபிச்சுட்ட..!! சொன்னா.. சொன்ன மாதிரியே செஞ்சிட்டியே..?" "என்னத்தை சொல்ற..? எனக்கு ஒரு எழவும் புரியலை..!!" "அந்த பஞ்சு மில் ஓனர் பையனை கட்டிக்கிறதுக்கு.. வசு ஓகே சொல்லிட்டாடா..!!" "அத்தை.. நெஜமாவா சொல்ற..? என்னால நம்பவே முடியலை அத்தை..!!" "என்னாலயுந்தான் நம்பவே முடியலை.. அவ்ளோ சந்தோஷமா இருக்குது..!! அதான் காலைலேயே அல்வா கிண்டி எல்லாத்துக்கும் கொடுத்துக்கிட்டு இருக்குறேன்..!! அதுசரி.. என்ன பண்ணி அவளை சம்மதிக்க வச்ச அசோக்கு கண்ணா..? அத்தைக்கு அந்த ரகசியத்தை கொஞ்சம் சொல்லேன்..?" அத்தை அந்த மாதிரி கேட்டதும், அல்வாவை அசைபோட்ட வாயை நான் அப்படியே நிறுத்தினேன். ஆமாம்..!! அப்படி என்ன நான் செய்துவிட்டேன்..? ஒன்றுமே செய்யவில்லையே..? இரவு கூட வசு அவளுடைய முடிவில் உறுதியாக இருந்தாளே..? அதற்குள் என்ன ஆயிற்று அவளுக்கு..? ஆமாம்.. நேற்று இரவு நான் ஒரு பொம்பளை பொறுக்கி என்று பொய் சொன்னபோது அப்டி அழுதாளே..? ஏன்..? நைட்டு அழுதிருக்கிறாள்.. காலையில் வந்து சம்மதம் சொல்லியிருக்கிறாள்..? ரெண்டுக்கும் என்ன கனெக்ஷன்..? யோசிக்க யோசிக்க, எனக்கு மூளையில் பட்டென்று ஒரு ஸ்பார்க் தோன்றியது..!! கொஞ்ச நேரத்தில் அந்த ஸ்பார்க், மூளை முழுவதும் பற்றி எரிந்தது..!! நடந்தவைகளை எல்லாம் ஒவ்வொன்றாக ரீவைண்ட் செய்து பார்க்க... மை காட்..!! ஒருவேளை வசு காதலித்தது என்னைத்தானோ..? அதனால்த்தான் அப்படி மருகி மருகி என்னை பார்த்தாளா..? ஒருவேளை அவள் என்னை காதலித்து இருந்தால்..??? ஐயோ..!! கடவுளே..!! என்ன ஒரு மடத்தனமான காரியம் செய்துவிட்டேன்..? நானே அந்த காதலை நசுக்கி எறிந்து விட்டேனே..? அவள் மாதிரி ஒரு பெண் எனக்கு ஏழேழு ஜென்மத்துக்கும் கிடைப்பாளா..? இப்போது மட்டும் இவ்வளவு யோசனை வருகிறது எனக்கு.. அப்போது எங்கு போனது எல்லாம்..? இதற்குத்தான் ட்யூப்லைட் என்று திட்டினாளா..? நான் அல்வா அடைத்த வாயுடன், அப்படியே சோபாவில் பொத்தென்று அமர்ந்தேன்.என்னால் ரொம்ப நேரம் அந்த மாதிரி உட்கார்ந்திருக்க முடியவில்லை. உள்ளத்தில் வசுவின் மீதான காதல் ஊற்று, சரசரவென ஊற ஆரம்பித்தது. உடைப்பெடுத்து பொங்க ஆரம்பித்தது. உட்கார விடாமல் என்னை உந்தி தள்ளியது. உடனே நான் வண்டியை எடுத்துக்கொண்டு அவளுடைய காலேஜுக்கு பறந்தேன். வாட்ச்மேனிடம் வசுவை பார்க்கவேண்டும் என்று சொன்னேன். வசுவும் வந்தாள். வந்ததுமே எரிச்சலாக கேட்டாள். "என்ன..????" "உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வசு..!!" "என்ன பேசணும்..? அதான் நேத்தே எல்லாத்தையும் பேசி தள்ளிட்டீங்களே..?" "இல்லை இது வேற.. கொஞ்ச நேரம் உன்கிட்ட தனியா பேசணும் வசு.. அதோ.. அந்த பொட்டிக்கடைல போய்.. ஒரு தம் அடிச்சுக்கிட்டே பேசலாமா..? ம்ம்..?" "என்னது..????" வசு உக்கிரமாக முறைத்தாள். "அப்போ நீயே ஒரு நல்ல எடம் சொல்லு.." நான் அப்பாவியாய் சொல்ல, அவள் கொஞ்ச நேரம் என்னையே முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம், "வாங்க..!!" என்று கோபமாக சொல்லிவிட்டு முன்னால் நடந்தாள். நான் அவளை பின்தொடர்ந்தேன். காலேஜை ஒட்டியிருந்த அந்த பார்க்குக்கு வசு என்னை அழைத்து சென்றாள். ஆள் அரவம் இல்லாமல் அமைதியாக இருந்தது அந்த பார்க். ஓரமாய் கிடந்த ஒரு மரபெஞ்சில் அவள் அமர்ந்து கொள்ள, நான் அவளுக்கு அருகே அமர்ந்து கொண்டேன். தொண்டையை லேசாக கனைத்துவிட்டு ஆரம்பித்தேன். "அந்த பையனை கட்டிக்க.. நீ ஓகே சொல்லிட்டியாமே.. அத்தை சொன்னாங்க..!!" "ஆமாம்.. அதுக்கு என்ன இப்போ..?" அவள் சூடாக கேட்டாள். "அப்போ.. உன் லவ்வு என்னாச்சு..?" "ம்ம்... லவ்வு.. மசுரைப்.. என்னமாத்தான் வருது..??" வசு ரொம்ப கோபமாக இருக்கிறாள் என்று புரிந்தது. "வசு.." நான் சாந்தமான குரலில் அவளை அழைத்தேன். "ம்ம்ம்ம்...?" அவள் சூடு கொஞ்சமும் குறையாமல் கேட்டாள். "எ..எனக்கு ஒரு டவுட்டு.. கேட்டா கோவிச்சுக்க மாட்டியே..?" "என்ன டவுட்டு.. கேளுங்க..!! இனிமே கோவிச்சுக்க என்ன இருக்கு..?" "நீ.. நீ.. லவ் பண்ணினது என்னையா..?" நான் கேட்டதும் வசு பட்டென்று என்னை திரும்பி முறைத்தாள். ஒரு மாதிரி ஏளனமாய் என்னை ஏற இறங்க பார்த்தாள். எள்ளல் கொப்பளிக்கும் குரலில் சொன்னாள். "அய்யோடா.. ஒரு வழியா புரிஞ்சுடுச்சுடா.. ஒரு மரமண்டைக்கு..!!" "ஓ.. அப்போ நெஜமாவே நீ என்னைத்தான் லவ் பண்ணினியா..?" நான் சந்தோஷத்தை அடக்க முடியாமல் கேட்க, "ஓ.. அப்போ இன்னும் முழுசா புரியலையா உங்களுக்கு..? சரியான.. ட்யூப்லைட்டு.. ட்யூப்லைட்டு..!!" அவள் திட்டினாள். "என்ன வசு நீ..? என்னை லவ் பண்றேன்னா.. அதை நேரா என்கிட்டே வந்து சொல்றதுக்கு என்ன..?" "எதுக்கு..? என்னையும் மேட்டர் பண்ணிட்டு.. டாட்டா காட்டுறதுக்கா..?" "ஐயோ.. அதெல்லாம் நான் சும்மா சொன்னே வசு.. எல்லாமே பொய்..!! நானாவது.. பொண்ணை மயக்குறதாவது..? என் மூஞ்சியலாம் எவளுக்காவது புடிக்குமா..? அப்டியே எதுக்காவது புடிச்சாலும்.. அது ஏதாவது லூசாத்தான் இருக்கும்..!!" "என்னது..???" வசு ஆத்திரத்துடன் என்னை எரித்துவிடுவது போல பார்க்க, நான் நாக்கை கடித்துக் கொண்டேன். "ஸாரி வசு.. உனக்கு என்னை புடிக்கும்ல..? ஸாரி.. ஸாரி.. தெரியாம சொல்லிட்டேன்..!!" "ம்ம்ம்.. அப்புறம் எதுக்கு பொம்பளை பொறுக்கின்னு.. பொய் சொன்னீங்க..?" "நீ யாரை லவ் பண்றேன்னு தெரிஞ்சுக்கத்தான்.." "நான் உங்களைத்தான லவ் பண்றேன்..? அதை தெரிஞ்சுக்க எதுக்கு.. நீங்களே பொறுக்கின்னு பொய் சொன்னீங்க..?" "ஐயோ.. உனக்கு புரியலை வசு..!! நீ லவ் பண்றவனை கண்டுபுடிச்சு.. அவன் கையை காலை முறிக்கிறதுக்கு..? அதுக்காகத்தான் நான் மெட்ராஸே வந்தேன்..!!" "என்னத்தான் லூசு மாதிரி பேசுறீங்க..? நீங்களே எப்படி உங்க கையை காலை முறிச்சுக்க முடியும்..?" "யாரு..? நான் லூசு மாதிரி பேசுறனா..? நீதாண்டி லூசு மாதிரி பேசுற..!! இரு.. உனக்கு ஆரம்பத்துல இருந்து சொல்றேன்..!!" நான் வசுவிடம் ஒவ்வொன்றாக சொன்னேன். போனவாரம் அத்தை ஊருக்கு வந்தது.. வசுவின் காதலை பிரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டது.. நான் மெட்ராஸ் வந்து.. அவளுடைய காதலனை கண்டுபிடிக்க எடுத்துக்கொண்ட முயற்சிகள்.. எல்லாம் சொன்னேன்..!! வசு எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டாள். அப்புறம் அமைதியாக கேட்டாள். "ஸோ.. உங்க கையை காலை முறிக்கிறதுக்கு.. நீங்களே சோழ வந்தான்ல இருந்து கெளம்பி வந்துருக்கீங்க..??" "ஆமாம் வசு.. நீ என்னைத்தான் லவ் பண்றேன்னு எனக்கு தெரியாது.. இல்லன்னா வந்திருக்க மாட்டேன்.." நான் மூஞ்சியை பாவமாக வைத்துக்கொண்டு சொன்னேன். "சரி.. இவ்வளவும் செய்றதுக்கு.. அம்மாகிட்ட என்ன டீல் பேசுனீங்க..?" "ஒரு ஹோட்டலை என் பேர்ல எழுதி வைக்கிறதா சொன்னாங்க..!!" "ஹோட்டலா..?" "ஆமாம்.. அந்த பூந்தமல்லி ஹோட்டலை..!!" நான் சொன்னதும் வசுவுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. எளிறுகள் எல்லாம் தெரிய, வயிற்றை பிடித்துக்கொண்டு, விழுந்து விழுந்து சிரித்தாள். எனக்கு எதுவும் புரியவில்லை..!! "என்னாச்சு வசு.. ஏன் இப்படி சிரிக்கிற..?" "அந்த ஹோட்டலா..? அதான பாத்தேன்.. அம்மா அம்பது காசு செலவு பண்ண கூட அவ்வளவு யோசிப்பாளே..? அவ எப்படி உங்களுக்கு ஹோட்டல் கொடுப்பான்னு நெனச்சேன்.. சரியாத்தான் இருக்கு..!!" "ஏன்.. அந்த ஹோட்டலுக்கு என்ன..?" "ஹோட்டல் என்னவோ அம்மா பேர்லதான் இருக்கு.. ஆனா பீடா பீட்டர்னு ஒரு ரவுடிதான்.. அந்த ஹோட்டலை நடத்திக்கிட்டு இருக்குறான்.. அந்த ஹோட்டல் அவனுக்குத்தான் சொந்தம்னு சொல்றான்.. ‘யாராவது சொந்தம் கொண்டாடிட்டு அந்தப்பக்கம் வந்தீங்க.. தலை இல்லாம முண்டமாத்தான் திரும்புவீங்க’ன்னு சொல்லிருக்கான்..!! அந்த ஹோட்டலை அம்மா உங்க தலைல கட்டிட்டாளா..? பேஷ்.. பேஷ்..!! போங்க.. அந்த பீட்டர் நல்லா அருவாளை தீட்டி வச்சிருக்கான்.. உங்க கழுத்துலையே போடுவான்..!!" அத்தை எவ்வளவு பெரிய தில்லாலங்கடி பொம்பளை என்று இப்போது எனக்கு தெளிவாக புரிந்தது. கொலைகார பாதகத்தி..!! எவ்வளவு கேஷுவலாக, என் உயிரை பறிக்கும் உயில் எழுத திட்டமிட்டிருக்கிறாள்..? நான் பதட்டத்துடன் வசுவிடம் கேட்டேன். "நெஜமாத்தான் சொல்றியா வசு..? அவ்ளோ பெரிய ரவுடியா அவன்..? வெட்டிடுவானா..?" "ம்ம்.. கண்டிப்பா வெட்டுவான்..!! அவன் ஒன்னும் உங்களை மாதிரி டுபாக்கூர் ரவுடி இல்லை.. ஒரிஜினல் ரவுடி..!!" "ஒய்.. என்ன சைடுல என்னை நக்கலடிக்கிற..? நான் டுபாக்கூரா..?"பின்ன..? ஏன்த்தான்.. உங்க ஊர்ல ஒருத்தனுக்கும் அறிவே இல்லையா..?" "ஏன்..?" "உங்களைலாம் எப்படி ரவுடின்னு ஒத்துக்கிடானுக..? அமுல்பேபி மாதிரி மூஞ்சியை வச்சுக்கிட்டு.. உங்களை பாத்தா பயமாவே இல்லைத்தான்..!! சிரிப்புத்தான் வருது..!!" "ஏய்.. எல்லாம் நேரம்டி.. சரி.. சரி.. சொல்லிட்டுபோ..!! நீ எவ்ளோ கேவலமா வேணா என்னை திட்டிக்கோ.. எனக்கு கவலை இல்லை..!! எனக்கு அந்த பீடா பீட்டர், அவன் அருவா, அந்த பூந்தமல்லி ஹோட்டலு.. எதுவும் வேணாம்..!! நீ என்னை லவ் பண்ற பாத்தியா..? அது ஒன்னு போதும்..!!" "என்ன லவ் பண்றனா..? பண்ணினேன்..!! பாஸ்ட் டென்ஸ்..!! லவ்லாம் நேத்தோட கேன்சல் பண்ணியாச்சு..!!" "என்னது..??? கேன்சல் பண்ணிட்டியா..? என்னவோ ரிசர்வேஷன் பண்ணின டிக்கட்டை கேன்சல் பண்ணின மாதிரி சொல்ற..? லவ்வும்மா..!!" "அத்தான்.. எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம்..!! நான் சின்ன வயசுல இருந்து.. உங்களை சின்ஸியரா லவ் பண்ணினேன்.. நேத்துவரை உங்க மேல உயிரையே வச்சிருந்தேன்.. நேத்து நீங்க பேசுனிங்களே ஒரு டயலாக்கு.. அதுலயே எல்லாம் நாசமா போயிடுச்சு..!!" "என்ன வசு நீ..? நான்தான் அதுலாம் பொய்ன்னு சொல்றேன்ல..?" "எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை.. நேத்து நீங்க பொறுக்கி மாதிரி பேசுனிங்களே.. அதுதான் ரியலா இருந்தது..!! இப்போ நல்லவன் மாதிரி பேசுறது ரியலாவே இல்லை..!! கேன்சல் பண்ணினது கேன்சல் பண்ணினதுதான்..!! நீங்க கெளம்பலாம்..!!" அவள் கேஷுவலாக சொல்ல, எனக்கு கோபம் வந்தது. கத்தினேன். "என்னடி.. சும்மா சும்மா.. கேன்சல் பண்ணிட்டேன்.. கேன்சல் பண்ணிட்டேன்னு.. கெடந்து குதிக்கிற..? நீயா லவ் பண்ணுவ..!! அப்புறம் நீயா அதை கேன்சல் பண்ணிடுவியா..? நடுவுல நான் ஒருத்தன் இருக்குறேன்டி.. என்னைக்காவது என்கிட்டே வந்து ஐ லவ் யூ அத்தான்னு சொல்லிருக்கியா..?" "அறிவில்லாம பேசாதீங்கத்தான்.. ஒரு பொண்ணு கொஞ்சம் கூட வெக்கமில்லாம.. உங்ககிட்ட வந்து அப்டி சொல்வாளா..? சாடைமாடையாத்தான் சொல்வா..!! நீங்கதான் புரிஞ்சுக்கணும்..!!" "சரி.. சாடைமாடையா என்னத்த சொல்லிட்ட நீ..?" "நெறைய சொல்லலாம்..!! இப்போ ரீசண்டா நடந்ததை சொல்றேன்.. அன்னைக்கு நீங்க ஊர்ல இருந்து வந்தப்போ.. சுஜி மேல கை போட்டீங்களே..? நான் தட்டிவிட்டனே..? ஏன்..? அவ என் தங்கச்சின்ற பாசமா..? இல்லவே இல்லை..!! நான் விரும்புற ஆளு.. இன்னொரு பொண்ணு மேல கை போடுறான்னு ஆத்திரம்..!! அன்னைக்கு என் ரூமுக்கு வந்து என் செல்நம்பர் என்னனு கேட்டப்போ.. எவ்ளோ சந்தோஷப்பட்டேன் நான்..?? அதை புரிஞ்சுக்க முடியலை உங்களுக்கு..? என்னை ஃபால்லோ பண்ணி மாட்டுனிங்களே..? 'எதுவா இருந்தாலும் சொல்லுங்கத்தான்.. நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்னு..' எவ்ளோ ஏக்கமா சொன்னேன்..? அந்த ஏக்கம் உங்களுக்கு புரியலை..? நேத்து..!! நேத்து நீங்க வந்து தனியா பேசணும்னு சொன்னப்போ.. உங்க லவ்வைத்தான் சொல்லப் போறீங்கன்னு.. என் மூஞ்சிலாம் எப்டி ப்ரைட் ஆச்சு..? அதுகூடவா உங்களுக்கு புரியலை..?" "இப்போ எனக்கு புரியுது வசு.. அப்போ அதுலாம் புரியவே இல்லை..!! இதெல்லாம் வச்சு.. நீ என்னை லவ் பண்றேன்னு.. நானா எப்டி ஒரு முடிவுக்கு வர்றது..? எல்லாமே நீ கேஷுவலா கூட பண்ணிருக்கலாம்ல..?" "சரித்தான்..!! எல்லாத்தையும் விடுங்க..!! சின்ன வயசுல இருந்தே.. உங்களை பாக்குறப்போலாம்.. அவ்ளோ ஆசையா.. அவ்ளோ ஏக்கமா பார்ப்பனே..? அந்த பார்வைக்கு கூட உங்களுக்கு அர்த்தம் புரியலையாத்தான்..?" "எது...? ஷகீலா மாதிரி கண்ணை சொருகிட்டு.. ஒரு பார்வை பாப்பியே.. அதா..? சரக்கடிச்சா கூடத்தான்.. கண்ணு அந்த மாதிரி சொருகிக்கும்.. அதெல்லாம் நான் எப்டி லவ்வுன்னு கண்டுபிடிக்கிறது..?" அவ்வளவுதான்..!! வசு பயங்கர கடுப்பானாள்..!! பட்டென்று பெஞ்சில் இருந்து எழுந்து கொண்டாள். கை ரெண்டையும் நீட்டி, என் கழுத்தை நெரிப்பது மாதிரி கொண்டு வந்தாள். கோபமும் எரிச்சலும் கொப்பளிக்கும் குரலில் கத்தினாள். "உங்களை…????? உங்களைலாம் என்ன பண்றதுன்னே தெரியலைத்தான்..!! உங்களை போய் லவ் பண்ணினேன் பாருங்க.. என் புத்தியை செருப்பால அடிக்கணும்..!! உங்களுக்கு ஒரு எழவும் புரிய வேணாம்..!! அப்டியே கெளம்புங்க.. இனிமே இந்த மாதிரி வந்து என்னை டார்ச்சர் பண்ணாதீங்க..!!" சொல்லிவிட்டு அவள் விடுவிடுவென நடையை கட்ட, நான் பதறிப்போய் அவளை ஃபால்லோ செய்தேன்.வசு.. வசு.. நில்லு வசு..!! நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன் வசு..!! சின்ன வயசுல இருந்தே.. எனக்கும் உன்மேல கொள்ளை ஆசை..!! கட்டிக்கிட்டா உன்னைத்தான் கட்டிக்கனுன்னு நெனப்பேன்..!! அப்புறம் நீங்க மெட்ராஸ் வந்து.. கார், பங்களான்னு வசதியாயிட்டீங்க..!! உனக்குலாம் என்னை புடிக்காதுன்னு..." "யார் சொன்னா..?" வசு திரும்பி கோபமாக கேட்டாள்.

"யாரும் சொல்லலை.. நானா மனசுக்குள்ள அந்த மாதிரி நெனச்சுக்கிட்டேன்..!! இப்போ சொல்றேன் வசு..!! எனக்கு கல்யாணம்னு ஒன்னு நடந்தா.. அது உன் கூடத்தான்..!!" "மறந்துடுங்கத்தான்.. இனிமே அதெல்லாம் நடக்காது..!!" "ஏன் நடக்காது..? நான் போய் அத்தைட்ட பேசுறேன்.." "போங்க.. போய் பேசுங்க.. கூலிப்படையை செட் பண்ணி.. உங்களை போட்டுத் தள்ளுராளா இல்லையான்னு பாருங்க..!! இத்தனை நாளா நீங்க உயிரோட இருந்ததுக்கு காரணமே நான்தான்..!! இவ்ளோ நாளா அம்மா மட்டுந்தான்.. இப்போ போய் சொன்னீங்கன்னா.. அந்த மில்லு ஓனரும் அம்மா கூட சேந்துக்குவான்..!!" "எனக்கு எவன் வந்தாலும் கவலை இல்லை.. ரெண்டுல ஒன்னு பாக்க நான் ரெடியா இருக்கேன்..!! நீ மட்டும் என்பக்கம் இருந்தா போதும் வசு..!!" நான் அந்தமாதிரி பரிதாபமாக சொன்னதும் வசு நின்றாள். என் முகத்தை ஒரு கணம் காதலாய் ஒரு பார்வை பார்த்தாள். அப்புறம் அமைதியாக சொன்னாள். "சொன்னா கேளுங்கத்தான்..!! நான் வேற இப்போ.. கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்.. இனிமே அவங்க நம்மளை சேர விடமாட்டாங்க..!! எல்லாம் முடிஞ்சு போச்சு..!! நீங்க ஊருக்கு கெளம்புங்க..!!" "அப்போ.. நீ என்னை லவ் பண்ணினது..?" "அதான் எல்லாம் முடிஞ்சு போச்சுன்னு சொல்றன்ல..?" "ஓஹோ..? முடிஞ்சு போச்சா..? முடிஞ்சு போனதை.. மறுபடியும் எப்டி ஆரம்பிக்க வைக்கிறதுன்னு எனக்கு தெரியும்..!!" நான் சீரியஸாக சொல்ல, "ஓ.. என்ன பண்ண போறீங்க..?" அவள் கிண்டலாக கேட்டாள். "உன்னை மறுபடியும் என்னை லவ் பண்ண வைக்க போறேன்..!!" "ஹாஹாஹா..!! காமடி பண்ணாதீங்கத்தான்.. ஊருக்கு போய் சேர்ற வழியை பாருங்க..!!" அவள் நக்கலாக சொல்லிவிட்டு, விடுவிடுவென நடந்து கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்துகொண்டாள். நான் ரொம்ப நேரம் நடுரோட்டில் பித்துப்பிடித்தவன் மாதிரி நின்றிருந்தேன். சவால் விட்டாயிற்று..!! இப்போது அவளை காதலிக்க வைக்க வேண்டும். நமக்குத்தான் அந்த கருமாந்திரத்தை பற்றி ஒரு எழவும் தெரியாதே..?? என்ன செய்வது..?? பட்டென்று என் மூளையில் ஒரு மின்னல். சுஜி..!!!! நான் உடனே சுஜியிடம் ஓடினேன். மொத்த மேட்டரையும் அவளிடம் கொட்டினேன். அவளும் எரிச்சலை அடக்கிக்கொண்டு எல்லாவற்றையும் கேட்டாள். கேட்டு முடித்து கொஞ்ச நேரம் அமைதியாகவே இருந்தாள். அப்புறம் மெல்ல ஆரம்பித்தாள். "ஸோ.. நீங்க அக்காவை லவ் பண்றீங்க..?" "ஆமாம் சுஜி..!!" "ஆனா அக்கா உங்களை லவ் பண்ணலை..??" "இல்லை.. அவளும் லவ் பண்றா.. ஆனா எல்லாத்தையும் மறந்துட்டேன்னு.. பொய் சொல்றா..!!" "ஓகே.. இப்போ.. என்னை என்ன பண்ண சொல்றீங்க..?" "நீதான் உன் அக்காவை கரெக்ட் பண்ண.. எனக்கு ஐடியா சொல்லணும்..!!" நான் சொல்ல, சுஜி பயங்கர டென்ஷன் ஆனாள். "என்னைப் பாத்தா எப்டி தெரியுது உங்களுக்கு..? என் நெத்தில என்ன கேனைச்சிறுக்கினு எழுதி ஒட்டிருக்கா..?" "அப்டிலாம் ஒன்னும் எழுதலையே..? ஏன் சுஜி அப்படி சொல்ற..?" "பின்ன..? நான் உங்களை கட்டிக்க ஆசைப்படுறேன்.. நீங்க என் அக்காவை கரெக்ட் பண்ண.. என்கிட்டயே ஐடியா கேக்குறீங்களே..?" "ப்ச்.. வெளயாடாத சுஜி.. நீ வேற.." நான் சலிப்பாக சொன்னேன். "வெளையாடலைத்தான்.. சீரியஸாத்தான் சொல்றேன்..!! ஒரு ரெண்டு வருஷம் அத்தான்.. நான் மேஜராயிடுவேன்.. அப்புறம் எங்கயாவது ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம்..!!" "இங்க பாரு சுஜி.. உன் அக்காவுக்காக.. ரெண்டு வருஷம் இல்லை.. இருவது வருஷம் கூட வெயிட் பண்ண நான் ரெடியா இருக்கேன்.. உனக்காகலாம் ரெண்டு நிமிஷம் கூட என்னால வெயிட் பண்ண முடியாது..!! புரிஞ்சுக்கோ..!!" "அப்டி என்னத்தான் இருக்கு அவகிட்ட..? எதோ.. அவ மூஞ்சி என்னை விட.. கொஞ்சம் சார்மிங்கா.. அழகா இருக்கு..!! மத்தபடி அஸ்ஸட்ஸ்லாம் என் அளவு கூட அவகிட்ட கிடையாது..!!" "அஸ்ஸட்ஸா..?? அப்டின்னா..??" நான் புரியாமல் திருதிருவென விழித்தபடி கேட்டேன். "ஓ.. அஸ்ஸட்ஸ்னா என்னனு தெரியாதா உங்களுக்கு..?" "ம்ஹூம்..!!" "இப்போ.. இது இருக்குல.. இது ரெண்டும் எனக்கு ஒரு அஸ்ஸட்ஸ்..!!" அவள் சொல்லிக்கொண்டே, இரண்டு கையாளும் தன் மார்புகளை தொட்டுக்காட்ட, நான் முகத்தை சுளித்தேன். தலையை சிலுப்பி கத்தினேன். "அடச்சீய்... கருமம் புடிச்சவளே..!! நான் எதைப்பத்தி பேசிட்டு இருக்குறேன்.. நீ எதைப்பத்தி சொல்லிட்டு இருக்குற..? பொண்ணாடி நீ..?? அப்டியே உன் அக்காவுக்கு ஆப்போசிட்-டி நீ..!!" "அதைத்தான் நானும் சொல்றேன்..!! அக்கா ரொம்ப சென்சிடிவான ஆளு.. உங்க கேரக்டருக்குலாம் அவ செட் ஆக மாட்டா..!! நான்தான் உங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் லாயக்கு..!!" "சுஜி.. நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்.. நீ வேற நோகடிக்காத..!!" "ம்ம்ஹ்ஹ்ம்ம்.. சரித்தான்..!! நான் உங்களுக்கு ஒரு ஈஸி ஆப்ஷன் சொன்னேன்.. அதையும் மீறி நீங்க பாழுங்கெணத்துலதான் போய் விழுவீங்கன்னா.. அப்புறம் உங்க இஷ்டம்..!! சொல்லுங்க.. நான் என்ன பண்ணனும்..? உங்க மேல ஆசைப்பட்ட பாவத்துக்காக பண்ணி தொலைக்கிறேன்..!!" "உன் அக்காவுக்கு என்னலாம் புடிக்கும்னு சொல்லு.. அதை வச்சு அவளை ஏதாவது அட்ராக்ட் பண்ணமுடியுமான்னு பாப்போம்..!!" "அவளுக்கு என்னன்னவோ புடிக்கும்.. மழைல நனையுறது புடிக்கும்.. வெயில்ல நடக்குறது புடிக்கும்.. SPB வாய்ஸ் புடிக்கும்.. ARR ம்யூஸிக் புடிக்கும்.. பெயின்ட் வாசனை புடிக்கும்.. பெட்ரோல் வாசனை புடிக்கும்.." அவள் சொல்லிக்கொண்டே போக, நான் எரிச்சலானேன். "ஏய்.. ஏய்.. இரு.. இரு.. இப்போ என்ன..? என்னை பெயின்ட் அள்ளி மூஞ்சில பூசிக்க சொல்றியா..? இல்லை.. பெட்ரோலை அள்ளி குடிக்க சொல்றியா..? நீ உன் அக்காவுக்கு மேல இருக்குறடி..!! அவளுக்கு புடிச்சதுல நான் எதையாவது பண்ணி.. அவளை அசத்தணும்.. அந்த மாதிரி ஏதாவது சொல்லுடி.. லூசு..!!" "ம்ம்ம்ம்... ஓகே.. அவளுக்கு ரோஸ்னா ரொம்ப புடிக்கும்.. வேணா.. அதை கொடுத்து ஒரு ட்ரை விட்டு பாருங்களேன்..??" "ரொம்ப ரொம்ப புடிக்கும்த்தான் அவளுக்கு..!! நம்ம பக்கத்து வீட்டுல ஒரு குட்டி ரோஸ் கார்டன் இருக்குது.. யெல்லோ ரோசஸ்..!! அக்கா மொட்டை மாடில நின்னுக்கிட்டு.. அந்த கார்டனையே வெறிச்சு வெறிச்சு பார்ப்பா..!! 'எவ்ளோ அழகா இருக்குல்லடி சுஜி.. நாமும் வளக்கனும்டி'னு ஆசையா சொல்லுவா..!!" அவ்வளவுதான்..!! அடுத்த நாள் காலை.. சூரியன், சேவல், காக்கா, ஈ, எறும்பு, கொசு எல்லாம் விழிப்பதற்கு முன் நான் விழித்துவிட்டேன். கஷ்டப்பட்டு காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தேன். அடுத்த வீட்டு காம்பவுண்டு..!! அந்த மஞ்சள் ரோஜா தோட்டத்திற்குள் நுழைந்து ஐந்தே ஐந்து ரோஸ் பறித்துக்கொண்டேன். என் அறைக்கு வந்தேன். டேபிளில் பரப்பி, ஐந்தில் எது அழகாக இருக்கிறது என்று பார்த்தேன். ஐந்துமே அழகாக இருப்பது மாதிரி தோன்ற, கண்ணை மூடி தொட்டு, ஒன்று செலக்ட் செய்தேன். அதை பாலீத்தீன் பேப்பரில் வைத்து அழகாக சுருட்டினேன். அன்று காலை வசுவை வாலாஜா ரோட்டில் வைத்து வளைத்து பிடித்தேன். அந்த மஞ்சள் ரோஜாவை நீட்டினேன். அவளும் ஆசையாக வாங்கினாள். ஆனால் அடுத்த நிமிடமே அந்த ரோஜாவை என் முகத்தில் விட்டெறிந்தாள். நான் மறுபடியும் சுஜியிடம் ஓடிவந்தேன். "சுஜி.. அந்த ரோஸ் ஐடியா ஊத்திக்கிச்சு..!!" "ஏன்த்தான்..? என்னாச்சு..?" "அவளுக்கு கடைல வாங்குன ரோஸ்தான் புடிக்குமாம் சுஜி..!! பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்காதாம்.. ஓரமா மண்ணு ஒட்டிட்டு இருந்திருக்கு.. கண்டுபுடிச்சுட்டா..!!" "என்னத்தான் சொல்றீங்க..? பக்கத்து வீட்டு ரோஸா..?" அவள் அதிர்ச்சியாய் கேட்டாள். "ஆமாம்.. நீதான சொன்ன.. உன் அக்காவுக்கு பக்கத்து வீட்டு ரோஸ் புடிக்கும்னு.. அதான் கஷ்டப்பட்டு சுவரேறி குதிச்சு.." "அடத்தூ..!! யாராவது லவ்வருக்கு குடுக்குற ரோஸை.. திருடிக்கொண்டு போய் கொடுப்பாங்களா..?" "என்ன சுஜி.. நீதான அது அவளுக்கு புடிக்கும்னு சொன்ன..?" "அதுக்காக.. அதையேவா திருடி கொடுப்பீங்க..? நாளைக்கு உங்களுக்கு கல்யாணம் ஆனப்புறம்.. அக்கா வேற ஏதாவது பொம்பளையை பாத்து.. 'அவ கட்டிருக்குற ஸாரி நல்லாருக்குங்கனு சொன்னா..' அந்த பொம்பளை ஸாரியை அப்டியே உருவி அக்காட்ட கொடுத்துடுவீங்களா..?" "ஆமால்ல..? தப்புல..?" "இப்போதான் தப்புன்னு புரியுதா உங்களுக்கு..? வெளங்குன மாதிரிதான்..!! ஈசியான மேட்டரு.. இதைப்போய் சொதப்பிட்டு வந்துருக்கீங்களே..? அந்த ரோஸை கடைல போய் வாங்குனா.. மிஞ்சிமிஞ்சி போனா பத்து ரூபா இருக்குமாத்தான்..? காதலிக்காக அதுகூட செலவு பண்ண மாட்டீங்களா..?" அவள் கடுப்புடன் சொல்ல, "ஓ.. பத்து ரூபா இருக்குமா.. அந்த ஒத்தை ரோஸ்..?" நான் நம்பமுடியாமல் கேட்டேன். "ஆமாம்.. நீங்க என்ன நெனச்சீங்க..?" "இல்லை சுஜி.. உன் அக்கா என்மேல சந்தேகப்பட்டு.. அந்த ரோஸ் என்ன ரேட்டுன்னு கேட்டா..!!" "ம்ம்.. என்ன சொன்னீங்க..?"

"ஒரு ரூபா.. அம்பது காசு சொன்னேன்..!!" "உதைச்சாளா இல்லையா உங்களை..?" "இல்லையே..? ஏன் கேக்குற..?" "நானா இருந்தா உதைச்சுருப்பேன்..!!" "என்ன சுஜி.." என்று நான் அவளை கொஞ்ச, "என்ன நொன்ன சுஜி..?? போங்கத்தான்.. உங்களுக்கு இதுலாம் செட் ஆவாது..!! பேசாம நீங்க என்னை.." அவள் எரிச்சலாக சொன்னாள். "வெளையாடத சுஜி.. வேற ஏதாவது நல்ல ஐடியா இருந்தா சொல்லேன்...?" "வேற என்ன..?? ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம்... ஆங்..!! அவளுக்கு கவிதைன்னா.. ரொம்ப புடிக்கும்.. உங்களுக்கு கவிதை எழுத தெரியுமா..?" "ம்ம்.. இது யோசனை..!! நெஜமாவே உன் அக்காவுக்கு ரோஸ்னா இஷ்டமா..?"