Saturday 12 December 2015

விஜயசுந்தரி 45

அடுத்த நாள், காலையில் இரண்டு ஊரு மக்களும் ஒருவருக்கொருவர் மகிழ்வுடன் நலம் விசாரித்துக் கொண்டிருக்க எல்லோர் முகத்திலும் இரண்டு ஊரார்களும் ஒன்றாக இணைந்த மகிழ்வு தெரிநத போதும் மாரியப்பனுக்கும் அவன் தம்பி கந்துவட்டி கோவிந்தன இருவரின் முகத்தில் மட்டும் கவலை தோய்ந்த சோகம் தெரிந்த்து. 

ரஞ்சித் தான் அமுதாவை திருமணம் செய்ய போகின்ற மகிழ்ச்சியிலும் அமுதா தான் காதலித்தவனையே கலயாணம் செய்து கொள்ள போவதால் தன் காதல் ஜெய்த்துவிட்ட பூரிப்பிலும் இருந்தாள். என் முகத்தில் தெரிந்த காதல் தோல்வியை அடிக்கடி கும்ரன் கவனித்துக் கொண்டிருந்தான். 

இரண்டு ஊர்களும் ஒன்றாக இணைந்ததால் கந்துவட்டி கோவிந்தன் எங்களை கண்டுகொள்ளாமல் இருந்தான். அடிக்கடி நாங்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் கூட அவன் எங்களை அசட்டை செய்யாமல் சென்றுவிடுவான். 

ஆனாலும் அவன் வேறு எதற்கோ திட்டம் போடுவதாக எனக்கு தோன்றியது. கும்ரனிடம் இதை பற்றி சொல்லுபோதெல்லாம் அவன் 


“ரெண்டு ஊரும் ஒன்னா சேர்ந்ததால் அவனே நம்மள பத்தி கண்டுக்காம இருக்கான், இதுல நீ வேற எதையாவது நோண்டிவிட்டு திரும்பவும் அடி வாங்க வெக்காதடா” என்று என்னை அடக்க்விட்டு சென்றுவிடுவான். 


அதனால் நானும் அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். அன்று மாலை பசுபதி மாரியப்பன் அமுதாவின் குடும்பம் என்று எல்லோரும் உட்கார்ந்து பேசி திருமணத்தை கூடிய சீக்கிரம் முடித்துவிடலாம் என்றும் நிச்சயதார்தத்தை அடுத்த வாரமே வைத்துக் கொள்ள்லாம் என்று முடிவு செய்ய மாரியப்பனோ நாளைக்கே நல்ல நாள் அதனால் நாளைகே நிச்ச்யதார்த்தத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அவசரப்படுத்தினான். 

பசுபதி முதலில் தயங்கினாலும் அதன் பின் சம்மதித்தார். அடுத்த நாள். அந்த ஊரு வழக்கப்படி எல்லோரும் பெரிய மலைக்கு உச்சியில் இருக்கும் அய்யனார் கோவிலுக்கு சென்று அங்கு பொங்கல் வைத்து வழிபட்டு மாலை நிச்சயதார்த்தம் செய்ய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. 

மாரியப்பன் குடும்பம் கோவிந்தன் குடும்பம் என்று எல்லோரும் பசுபதியின் வீட்டில் வந்து குவிந்தார்கள். ஏற்கனவே பசுபதியின் குடும்பம் தயாராக இருந்த்து. நானும் கும்ரனும் ரெடியாக இருக்க எல்லோரும் கோவிலுக்கு கிளமப தயாராகினார்கள்.

“என்ன் மாரியப்பா எல்லாரும் கிளம்பலாமா” என்று பசுபதி மாரியப்பனை பார்த்து கேட்க 

“இல்லைங்கய்யா, ஒரு சின்ன வேல இருக்கு நானும் தம்பியும் போய் அத முடிச்சிட்டு நேரா கோவிலுக்கு வந்திடுறோம், எங்க வீட்ல எல்லாரும் இப்ப வருவாங்க,” என்ற் மாரியப்பன் கூற 

“ஏன் வேற யாராயாவது அனுப்பலாமே இல்லனா வந்து கூட செய்ய முடியாதா” என்று பசுபதி கேட்க 

“இல்லைங்கய்யா நாங்க போனாதான் அந்த வேல முடியும்” என்று கோவிந்தன் கூறினான். 

“சரி சீக்கிரம் வந்து சேருங்க” என்று பசுபதி கிளம்ப மாரியப்பனும் கோவிந்தனும் தங்கள் மனைவி மகன் ஆகியோரை தனியாக ஒரு காரில் ஏற்றி அனுப்பினார்கள். முதல் மூன்று இன்னோவா கார்களில் பசுபதி குடும்பம் அமுதாவின் குடுமபம் விஜயாவின் குடும்பம் என்று ஏறிக்கொள்ள அடுத்த இரண்டு இன்னோவா காரில் மாரியப்பனின் குடும்பமும் கோவிந்தன் குடும்பமும் ஏறிக்கொள்ள கார்கள் அணிவகுத்து கிளம்பின. 

முதல் மூன்று கார்கள் கிளம்பி சில நிமிடங்கள் கழித்தே இரண்டு கார்களை தனியாக மாரியப்பன் கிளம்ப செய்தான் வீட்டிலிருந்து கிளம்பி ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் முன்னால் சென்ற கார் நின்றது. நானும் குமரனும் விஜயாவின் குடும்பத்துடன் காரில் இருந்தோம். எங்கள் கார் மூன்றாவதாக சென்று கொண்டிருந்த்து. 

சில நிமிட பயணத்துக்கு பின் முன்னால் சென்ற கார் நின்றுவிட அடுத்தடுத்த கார்கள் அப்ப்டியே நின்று போன. அமுதவள்ளி இரண்டாவது காரிலிருந்து இறங்கிவந்து எங்க்ள் காரிலிருந்த விஜயாவை 

“அக்கா, சாமிக்கு வெச்சி படைக்க வேண்டிய துணிய எடுத்துக்கிட்டியானு அம்மா கேட்டாங்க” என்றதும் விஜயா தன் தலையில் அடித்துக் கொண்டு 

“அட்ச்சே, அத் எடுத்து வாசல்கிட்ட இருக்க டேபில்ல வெச்சேன் ஆனா கொண்டுவர மறந்துட்டேனே” என்றதும் 

“என்ண்டீ ரெண்டு பேரும் இப்டி இருக்கீங்க” என்று விஜயாவின் அம்மா திட்ட 

“ஆண்டி ஒன்னும் பிரச்சன இல்ல எங்களுக்கு கோவில் தெரியும் நாங்க போய் கொண்டு வரோம், நீங்க போய் பூஜைய ஆரம்பிங்க”என்று கூறி நானும் கும்ரனும் காரிலிருந்து இறங்கிக் கொள்ள கந்துவட்டிக்காரன் குடும்பமும் மாரியப்பன் குடும்பமும் இதற்க்குள் எங்கள் கார்களை கடந்து முன்னால் செல்ல நானும் கும்ரனும் வீட்டுக்கு வேகமாக ஓடி வந்து அந்த டேபிள மேல் இருந்த துணிகளை எடுத்துக் கொண்டு கதவை மூட வெளியே வரும் நேரம் வீட்டின் பின்னால் பேச்சுக் குரல் கேட்ட்து.

நான் கும்ரனனை நிறுத்தி அவனை அமைதியாக இருக்க சொல்ல அவனும் பின்னால் கேட்ட குரலை கவனித்தான். அது கந்துவட்டி கேவிந்தன் மற்றும் அவன் அண்ணன் மாரியப்பனின் குரல் என்பது சந்தேகமே இல்லாமல் தெரிந்து. நானும் கும்ரனும் சத்தமின்றி அவர்கள் பேசுவதை கவனித்தோம். 

“அண்ணே அந்த பசுபதி என்னவோ ந்ம்ம புள்ளைக்கு வாழ்க்க பிச்ச போடுறமாதிரி நடந்துக்குறான். அன்னைக்கு நம்ம் வீட்டு பொண்ண இவன் கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணா அதுமட்டும் சரியாம் ஆனா இவன் வீட்டுக்கு சம்மந்தமே இல்லாத பொண்ன நம்ம பையன் கூட்டிக்கிட்டு போய் கல்யாணம் பண்ண நெனச்சா, அதுக்கு பஞ்சாயத்த கூட்டுவானா” என்று கந்துவட்டிக்காரன் கோவத்துடன் கேட்க 

“கோவிந்தா எல்லாத்தையும் விட உன்ன அன்னைக்கு ராத்திரி பூரா மரத்துல கட்டி வெச்சிருந்தானுங்கபாரு அத தாண்டா ஜீரணிக்க முடியல” என்று மாரியப்பன் புலம்பா 

“ஆதுக்குதானண்ண, அந்த பசுபதிக்கு ஒரு முடிவு கட்டப்போறோம்” என்று கோவிந்தன் கூறியதும் எனக்கு நான் முன்னர் நினைத்த்து போலவே இவர்கள் ஏதோ செய்திருப்பது புரிந்த்து. 

“கோவிந்தா திட்டமெல்லாம் சரியா நடக்குமில்ல, ஏதும் சொதப்பிடாதே” என்று மாரியப்பன் கேட்க 

“அதெல்லாம் ஒன்னும் சொதப்பாதுண்ணே, எல்லாரும் சென்னையில் இருந்து வந்தவனுங்க, அதுக்கேத்த மாதிரிதான நாமலும் அவங்கள அனுப்பி இருக்கோம், பசுபதியும் அவன் குடும்பமும் மொதல்ல இருக்குற கார்ல போறாங்க, அவன் சம்மந்தியோட தங்க்ச்சி குடும்பம், அதான் அந்த அமுதா குடும்பம் ரெண்டாவது வண்டியிலயும், மூனாவது வண்டியில அவர் சம்மந்தி குடும்பமும் போது, நமக்கு மொதல் ரெண்டு வண்டியில போறவங்க தான முக்கியம் அதனால் நம்ம ஆளுங்க கிட்ட முன்னாடி வரற ரெண்டு வண்டியையும் காலி பண்ண சொல்லிட்டேன், நம்ம குடும்பத்துக்கு ஏதும் ஆகிட கூடாதுன்னுதான் ரெண்டு வண்டிய லேட்டா கிளம்ப சொன்னேன்” என்று கூற மாரியப்பனின் முகம் கொடூரமாக மாறி 

“இன்னையோட அந்த பசுபதி ஆட்டம் முடியபோகுது” என்று ஆணவ சிரிப்பு சிரித்தான். எனக்கோ இவன் என்ன திட்டம் போட்டிருக்கிறான் என்று இன்னும் சரியாக தெரியவில்லை, அதனால் எப்படியாவது காரில் செல்பவர்களை நிறுத்தவேண்டும் என்று என் செல் போனை எடுத்தேன். 

அதில் சுத்தமாக சார்ஜ் தீர்ந்து போய் இருக்க கும்ரன் தன் செல்லை எடுத்து கொடுத்தான். ஆனால் எனக்கோ விஜயாவின் எண் மனப்பாடமாக் தெரியாது. அதனால் என் செல்லில் இருக்கும் எண்ணைத்தான் எடுத்தாக வேண்டும் கும்ரன் செல்லிலிருந்து பேட்டரியை கழட்டி என் செல்லில் போட்டு என் மொபைலை ஆன் செய்தேன். 

நோக்கியா நிறுவனத்தின் ஸ்டார்ட் அப் டோன் பலமாக கேட்டுவிட மாரியப்பனும் கோவிந்தனும் சத்தம் வந்த திசையை நோக்கி ஓடி வர நாங்கள் இருவரும் மாட்டிக் கொண்டோம். வீட்டின் உள்ளே நாங்கள் நிற்க மாரியப்பனும் கோவிந்தனும் வாசலில் வந்து எங்களை மடக்கியபடி நின்றனர். 

“டேய் ரெண்டு பேரும் இங்க என்னடா பண்றீங்க, கோவிலுக்கு போகல” என்று கந்துவட்டிக்காரன் கேட்க கும்ரன் விக்கித்து நின்றான். நான் சமாளித்துக் கொண்டு 

“சாமிக்கான துணிய விட்டுட்டு போய்ட்டாங்க, அத எடுக்க வந்தோம்” என்று கூற கந்துவட்டிக்காரன் என்னை கவனித்தான். 

“அண்ணே இவனுங்க நாம பேசுனத கேட்டிருப்பாங்க, அத சொல்லத்தான் செல்போன வெச்சிருக்கானுங்க” என்று காட்ட 

“தம்பி இவனுங்கள புடிச்சி கட்டுடா” என்று கத்த கோவிந்தன் எங்களை நோக்கி ஓடி வந்தான். 

“அங்கிள் நாங்க சொல்றத கேளுங்க” என்று குமரன் மாரியப்பனை நோக்கி கத்த கோவிந்தன் எங்கள் இருவரின் கழுத்திலும் தன் கையை சுற்றி இறுக்க எங்கள் இருவருக்கும் தொண்டை அடைத்து கண்கள் பிதுங்க ஆரம்பித்தன. 

கந்துவட்டிக்காரன் தன் பழியை எங்கள் மேல் இப்போது தீர்த்துக் கொள்ள நினைத்து எங்கள் கழுத்தை இறுக்க ஆரம்பித்தான். நான் அவன் கையை விலக்க எவ்வளவோ முயன்றும் அவன் கைகள் உலக்கை போல் இருந்த்தால் என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எதிரில் இருந்த மாரியப்பனை பார்த்து 

“உங்க குடும்பத்துக்கு ஆபத்து” என்று சொல்ல முயன்றும் தொண்டை அடைத்த்தால் வார்த்தை வரவில்லை. கும்ரனும் அவன் கையிலிருந்த்யு விடுபட எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இருவரும் வசமாக மாட்டிக் கொள்ள கும்ரன் லேசாக தொங்க ஆரம்பித்தான். கண்கள் பிதுங்கி கண்ணீர் ஊர்றியது.

நாக்கு வெளியே தள்ளிக் கொண்டு வந்த்து, இதற்கு மேல் விட்டால் அவன் செத்துவிடுவான் என்று நினைத்து என் முழு பலத்தையும் சேர்த்து எதிரே இருந்த சுவற்றில் என் இரண்டு கால்களையும் ஓங்கி ஒரு உதை உதைக்க கந்துவட்டிக்காரனுடன் நாங்கள் இருவரும் சாய்ந்தோம். கோவிந்தன் நிலைதடுமாறி விழ நான் வேகமாக எழுந்து 

“அங்கிள் உங்க குடும்பத்துக்கு ஆபத்து” என்று சொல்ல அந்த நேரம் என்னை அடிக்க வந்த கோவிந்தன் இதை கேட்டு அப்படியே நின்றான். 

“டேய் என்ண்டா சொல்ற” என்று இருவரும் ஓரே நேரத்தில் கேட்க 

“ஆமா உங்க வீட்டு ரெண்டு காரும தான் முதல்ல போகுது” என்று சொன்ந்தும் இருவரும் பதறி அடித்துக் கொண்டு 

“டேய் என்ண்டா சொல்றீங்க” என்று எங்கள் அருகே வந்து பயத்துடன் நின்று கேட்க 

“ஆமா, துணிய மறந்து வெச்சிட்ட்த சொல்ல அமுதா கார நிறுத்தினதும் பின்னாடி வந்த ரெண்டு காரும் ஓவர்டேக் பண்ணி முன்னாடி போய்டுச்சி” என்று நான் சொல்ல 

“அண்ணா அவங்கள் நிறுத்தனும்” என்று கோவிந்தன் சொல்ல 

“அவனுங்களுக்கு போன் போடுடா” என்றான். 

“ஆவனுங்க்கிட்ட போன் இல்லயே” என்றதும் 

“அப்ப நம்ம வீட்ல யாருக்காவது போன் போடுடா” என்றதும் கோவிந்தன் தன் செல்லை எடுத்து தன் மனைவிக்கு போன செய்தான், நீண்ட நேரம் ஆகியும் லைன் கனக்ட் ஆகவில்லை 

“ஆண்ணா அந்த ஏரியாவுல் டவரே இருக்காதுண்ணா” என்றதும். இருவரும் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். நான் கும்ரனை சென்று பார்க்க அவன் மெல்ல் கண் திறந்து என்னை பார்த்தான். 

அவனுக்கு குடிக்க கொஞ்ச்ம தண்ணீர் கொடுக்க கஸ்டப்ப்பட்டு அதை குடித்துவிட்டு எழுந்து என்னுடன் வெளியே வந்தான். இருவரும் என்ன் செய்வது என்று தெரியாமல் இருக்க எனக்கு என்னிடம் இருந்த செல்போன் நியாபகம் வர நான் விஜயாவின் எண்ணை தேடி பிடித்து டயல் செய்தேன். 

ஆனால் எனக்கும் லைன் கனக்ட் ஆகவில்லை 


”என்னடா ரிங் போதா” என்று கும்ரன் கேட்க 

“இல்லடா டவர் இல்ல போல, நாட் ரீச்சபல் வருது” என்று நான் சொல்ல 

“என்ண்டா லிஃப்ட்டுக்குள்ள பாத்ரூமுக்குள்ளகூட டவர் கிடைக்கும்னு போடுறானுங்க, கடைசியில் ஊருக்குள்ளயே டவர் இல்லயா”என்று கூற 

“டேய் இந்த ரணகளத்துலையும் உனக்கு காமடியா” என்று நான் அவனை தட்டிவிட்டு அங்கு வந்த ஒரு பைக் காரனை நிறுத்தினோம்.



“என்னபா வேணும்” என்று அந்த பைக்காரன் கேட்க 

“அண்ணே மலைக்கோவிலுக்கு போக ஏதாவது ஷாட்கட் இருக்கா” என்று நான் கேட்க

“இருக்குபா, நம்ம ஊருக்கு மேக்கால போனா ஒரு ஓத்தயடி பாத வரும் அதுல நடந்தா சீக்கிரம் போய்டலாம்” என்று கூற நானு கும்ரனும் ஆர்வக்கோளாறில் வேகமாக ஓட சற்று தூரம் சென்றதும் நான்கு சாலைகள் சந்திக்கும் ஒரு சந்திப்பு வர 

“டேய் இதுல எதுடா மேக்கால” என்று கும்ரன் கேட்க 

“அதான்டா எனக்கும் தெரியல மேக்கால தெக்காலனு நம்மல தொங்கல்ல விட்டானே” என்று ஆள் நடமாட்டம் இல்லாத அந்த இடத்தில் நின்று விழித்துக் கொண்டிருக்க அதே பைக் காரன் மீண்டும் அந்த இடத்திற்கு வந்தான். 

“என்னபா ஏதோ அவசரம்னு வழி கேட்டுட்டு இங்கயே இருக்கீங்க” என்று நக்கலடிக்க 

“அண்ணே இதுல எந்த பக்கம் போகனும்” என்று நான் கேட்க 

“இதோ இந்த பாதையிலதான் போகனும், அது சரி ஏன் ரெண்டு பேரும் இவ்ளோ பதட்டமா இருக்கீங்க” என்று அவனே கேட்க 

“நம்ம பசுபதி அய்யா உயிருக்கு ஆபத்துண்ணே” என்றதும் அவன் பதறி அடித்து 

என்னது நம்ம ஐயா உயிருக்கு ஆபத்தா, யாரால” என்று கேட்டான்.

“அதான் அந்த கோவிந்தன் அவன் அண்ணம் மாரியப்பன் ரெண்டு பேராலையும் தான்” என்று கும்ரன் உண்மையை போட்டு உடைக்க அவன் கடுப்பாகி

“நான் அப்பவே நெனச்சேன், அந்த ரெண்டு நாய்ங்களும் திருந்தர மாதிரி நடிச்சிதான் நம்மள ஏமாத்திட்டானுங்க, அவனுங்கள் சும்மா விடக்கூடாது” என்று ஆவேசப்பட 

“அண்ணே அதுக்குலாம் நேரம் இல்ல சீக்கிரம் மலை கோயிலுக்கு போகனும்” என்று நான் சொல்ல

“இரு தம்பி” என்று தன் செல்போனை எடுத்து யாருக்கோ போன் செய்து நாங்கள் கூறியதை கூறிவிட்டு எங்களை பார்த்து 

“தம்பி வண்டியில ஏறுங்க” என்று கூறிவிட்டு வேகமாக பைக்கை ஓட்டினான். வலதுபக்கம் திரும்பி புழுதிச்சாலையில் பைக் வேகமாக சென்று கொண்டிருக்க எங்களுக்கு பின்னால் மிகப்பெரிய புழுதி பறப்பது தெரிந்து திரும்பி பார்க்க ஊரு இளைஞர்கள் ஏகப்பட்டவர்கள் எங்கள் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்தார்கள். 

நாங்கள் இருந்த பைக்கார்ரும் வண்டியை கன்னாபின்னாவென்று அசுர வேகத்தில் ஓட்டிக் கொண்டிருந்தான். ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் அந்த பாதை மீண்டும் வலது பக்கமாக கொஞ்ச்ம கொஞ்ச்மாக வளைந்து கொண்டே சென்றது. சாலை போக போக சிறியதாக ஆனது இரண்டு பக்கமும் வயல்களுக்கு நடுவே அது ஒரு பெரிய வரப்பு போன்றுதான் இருந்த்து. 

ஆனால் இவனோ அந்த சிறிய பாதையில் பயங்கர வேகத்தில் வண்டியை ஓட்டிக் கொண்டிருக்க எங்கள் பின்னால் கிட்ட்தட்ட் ஒரு 20 பைக்குகள் வந்து கொண்டிருந்து. ஒவ்வொன்றிலும் இர்ண்டு பேர்கள் கையில் உருட்டுக்கட்டைகளுடன் வந்து கொண்டிருந்தனர். அந்த சாலை கிட்ட்தட்ட் 5 கிலோ மீட்டர் தூரம் சென்றிருக்கும். 

தூரத்தில் ஒரு பெரிய மலை தெரிந்த்து. அதை நோக்கி பைக் சென்று கொண்டிருக்க நாங்கள் சென்ற சாலை ஒரு பெரிய தார்சாலையில் சென்று இணைந்த்து. எல்லா பைக்குகளும் அங்கு சென்று நின்றது. நாங்கள் இருந்த பைக்காரன் மற்றவர்களை பார்த்து 

“ஏலே மக்கா, நம்ம ஐயாவ கொல்ல நெனச்சவன் எப்டியும் அந்த ரெண்டு ஊருங்களும் தாண்டி இருக்குற ஏரிக்கரையிலதான் வேலய முடிக்க நெனச்சிருப்ப்பான்லே, அதனால் அங்க போவோம்” என்றதும் மீண்டும் பைக்குகள் மலைக்கோவில் இருந்த திசைக்கு எதிர் திசையில் ஓட் ஆரம்பித்த்து. 

இந்த சாலையில் 1 மணி நேரம் பயணம் செய்தால் நாங்கள் புறப்பட்ட ஊர் அதாவது பசுபதியின் கிராம்ம் வரும் ஆனால் நாங்கள் குறுக்கு பாதையில் 10 நிமிட்த்தில் வந்துவிட்டோம்,. நாங்கள் வந்த பாதையில் சைக்கிள் பைக் மட்டும்தான் வரமுடியும், கார் லாரி போன்ற பெரிய வாகன்ங்கள் வரமுடியாது என்பதால்தான் பசுபதியின் குடும்பம் ஊரை சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் இப்போது சென்று கொண்டிருப்பது நல்ல் தார் சாலை என்பதால் பைக்கை 80 கி,மீ வேகத்திற்க்கும் அதிகமாக ஓட்டிக் கொண்டு சென்றார்கள். அந்த சாலை கொஞ்ச்ம கொஞ்ச்மாக மேடாகிக் கொண்டே போனது தரையிலிருந்து சில அடி உய்ரத்தில் சாலை சென்றுகொண்டிருந்த்து. அது ஒரு ஏரிக் கரையின் மேல் அமைந்திருந்த சாலை என்பதால் உயரத்தில் பயணிக்க வேண்டி இருந்த்து. 

சாலை கொஞ்ச் தூரத்தில் மெல்ல கீழெ இறங்கி சமதள பரப்பான பகுதியில் சென்று கொண்டிருப்பதும் தெளிவாக தெரிந்தது. கீழெ சென்ற சாலையின் ஒரு பக்கம் அடர்ந்த காடு போன்ற பகுதியும் இன்னொரு பக்கம் விசாலமாக ஏரியும் தெரிந்த்து. அந்த சாலையில் சில கார்கள் வரிசையாக அணிவகுத்துக் கொண்டு வருவது தெரிந்த்து. 

“ஏலே அதோ அய்யாவோட வண்டிங்க வருதுடா, அப்டினா அந்த மூதேவிக்ங்க இங்க எங்கயாவதுதான் பதுங்கி இருக்கனும், போய் தேடுங்கடா” என்றதும் பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு எல்ல்லோரும் ஏரியை ஒட்டி இருந்த இட்த்திலும் சாலை கீழெ செல்லும் காட்டு பகுதியிலும் தேட தொடங்கினார்கள். கார்கள் வேகமாக வந்து கொண்டிருந்தன. நானும் கும்ரனும் உயரமான சாலை பகுதியிலிருந்தே நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தோம். 

கும்ரன் தன் செல்போனை எடுத்து கார்கள் அணிவகுத்து வரும் காட்சியை வீடியோவில் பதிவு செய்து கொண்டிருக்க எங்களுடன் வந்தவர்கள் எல்லா இடங்களிலும் வலைவீசாமல் தேடிக் கொண்டிருந்தார்கள். 

இந்த நிகழ்வை கோவிந்தன் மாரியப்பன் தரப்பிலிருந்து பார்க்கலாம். கோவிந்தனின் வாக்குமூலத்தின் அடிப்படையில்.................

வீட்டுக்குள் இருந்து வெளியே வந்த கோவிந்தனும் மாரியப்பனும் பசுபதிக்கு சொந்தமாக டாட்டா சுமோவை எடுத்துக் கொண்டு தங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேகமாக சென்றனர். காரை கந்துவட்டி கோவிந்தன் ஓட்ட மாரியப்பன் அருகே பதற்றத்துடன் உட்கார்ந்திருந்தான். 

“டேய் தம்பி நம்ம குடும்பத்துக்கு ஏதாவது ஆகிட போகுதுடா” என்று கண்கள் கலங்க தன் தம்பியை பார்த்து சொன்னான். 

“அண்ணே அதெல்லாம் ஒன்னும் ஆகாதுண்ணே” என்று தன் மொபைலை எடுத்து தன் மனைவி எண்ணை போட்டு கால் செய்ய முயன்றான். ஆனால் சிக்னல் இல்லாத காரணத்தால் கால் கனக்ட் ஆகவில்லை. மாரியப்பன் கோவிந்தனிடம்

“டேய் தம்பி மெய்ன் ரோட்ல போனா அவங்கள புடிக்க முடியாதுடா, காட்டு பாதையில் வண்டிய திருப்புடா” என்றான். 

“அண்னே அந்த வழியெல்லாம் எனக்கு தெரியாதேண்ண” என்று கோவிந்தன் கூற 

“என்னடா கொஞ்ச நாள் சென்னையில் இருந்ததும் உனக்கு எல்லாம் மறந்து போச்சா, நீ பின்னாடி போ நான் ஓட்றேன்” என்று அவனை பின்னால் அனுப்பிவிட்டு மாரியப்பன் காரை ஓட்ட கோவிந்தன் பின் சீட்டில் உட்கார்ந்தான். மாரியப்பன் டாப் கியரை போட்டு வண்டியை முழுவேகத்துடன் காட்டு வழியில் திருப்பினான். 

அந்த பாதை அந்த ஊர் மக்களுக்கே சரியாக தெரியாது. திருட்டுத்தனமாக மரம் வெட்டி கடத்துபவர்களுக்குதான் அந்த பாதை தெரியும், ஒரு லாரியே செல்லும் அளவுக்கு பாதை இருக்கும். அந்த பாதையில் மாரியப்பன் சர்வ சாதாரணமாக காரை ஓட்டி செல்ல கோவிந்தன் தன் மனைவியின் எண்ணுக்கும் அண்ணியின் எண்ணுக்குமாக முயன்று கொண்டிருந்தான். 

“என்ண்டா யாராவது போன எடுத்தாங்களா” என்று தன் தம்பியிடம் ,மாரியப்பன் கேட்க 

“இல்ல்ன்னா அவங்க ரெண்டு ஊரு எல்லையையும் தாண்டியிருப்பாங்க போல் சிகனலே கிடைக்கல” என்று அழுதுகொண்டே சொன்னான். 

“கவலப்படாதடா, நீ சொன்ன எடத்துக்கு பக்கததுல வந்திட்டோம், அவங்கள எங்க இருக்க சொன்னே” என்றான் மாரியப்பன். 

“ஊர்ர தாண்டி ஒரு பழைய கோவில் இருக்கும் அந்த கோவிலுக்கு அடுத்து ஏரிக்கரை மேல ஒரு மறைவான எடம் இருக்கு அங்க இருந்து வேலைய செய்ய சொல்லியிருக்கேன்” என்றான் கோவிந்தன். 

“மாரியப்பன் தாறுமாறாக காரை போட்டி ஒரு இடத்தில் ஒடித்து திருப்பினான். திரும்பும் இடத்தில் காரின் டயரில் ஏதோ குத்தி டயர் கிழிந்து காற்று போய்க் கொண்டிருந்து. ஆனாலும் காரை நிறுத்தாமல் அந்த வேகத்தில் அப்படியே திருப்பினான். 



ஏரிக்கரையின் மேலே நாங்கள் நின்று பார்த்துக் கொண்டிருக்க கீழெ இருக்கும் சாலையில் ஒரு பக்கத்தில் ஒரு பழைய கோவில் இருந்த்து. எனக்கு அதை பார்த்த்தும் ஒரு சந்தேகம் வர எங்களுடன் வந்தவர் ஒருவரை கூப்பிட்டு 

“அண்ணே அந்த கோவில்ல பார்க்க சொல்லுங்க” என்றதும் அவன் கீழெ தேடிக் கொண்டிருந்தவனை பார்த்து 

“டேய் அந்த கோவில்ல பாருங்கடா” என்று சொல்ல உடனே இருவர் அந்த கோவிலை நோக்கி ஓட ஐந்து கார்களும் வரிசையாக அந்த கோவிலுக்கு சில அடி தூரத்தில் வந்து கொண்டிருக்க ஊரு ஆள் அந்த கோவிலை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான். 

காரும் நெருங்கிவந்துவிட கிராமத்து ஆள் ஓடி வ்ருவதை பார்த்து முன்னால் வந்த கார் வேகத்தை குறைக்க அந்த நேரம் யாரும் எதிர்பார்க்காத காட்டுக்குள்ளிருந்து ஒரு டாட்டா சுமோ வேகமாக் வெளியே வந்து ஐந்து காருக்கும் முன்னால் ஓட, ஓடி வந்தவர்கள் ஸ்தம்பித்து நிற்க அடுத்த வினாடி கோவிலுக்குள் இருந்து சிலர் கையில் பெட்ரோல் நிரப்ப்ப்பட்ட பெரிய பாட்டிலின் முனையில் இருந்த திரியில் நெருப்பை வைத்துக் கொண்டு வெளியே ஓடிவந்து முன்னால் வந்த காரை குறி பார்த்தார்கள்.

ஊர்க்காரன் அவனை நோக்கி ஓட மற்றவர்களும் அவனை தடுப்பதற்க்காக அந்த இடத்துக்கு ஓடினார்கள். நானும் கும்ரனும் ஏரிக்கரையின் மேலிருந்து கீழெ இறங்கி ஓடினோம். அணைவரின் முகத்திலும் அதிர்ச்சி. முகமூடி கட்டிய அவர்கள் கார்கள் வருவதை பார்த்துக் கொண்டிருந்தனர். 


முன்னால் வந்த டாட்டா சுமோவை ஓட்டிவந்த மாரியப்பன் எதிரில் நிற்பவர்கள் கோவிந்தனின் ஆட்கள் என்பதை உணர்ந்து காரை ஓரமாக நிறுத்த முயல காட்டு வழியில் வந்ததால் காரின் டயர்கள் ஏற்கனவே பஞ்சர் ஆகி இருந்ததால் நிலை தடுமாறி முன்னால் இருந்தவன் மேலேயே இடிக்க செல்ல அவன் கையில் இருந்த பாட்டிலை காரின் மேல் வீச அது காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்த்துக் கொண்டு நேராக மாரியப்பனின் மடியில் சென்று விழுந்து வெடித்தது. 

கார் சில நொடிகளில் முழுவதுமாக எரிய தொடங்கிவிட்டது, நடப்பதை எதிர்பாராமலும் நடப்பது என்னவென்றே புரியாத பசுபதி அவன் குடும்பம் மற்றும் மாரியப்பன் கோவிந்தன் குடும்பத்தினர் கார்களிலிருந்து வெளியே ஓடி வந்து பார்க்க காருக்குள் இருப்பது யார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது. 

இதற்க்குள் பெட்ரோல் குண்டு வீசியவர்களை ஊர் மக்கள் துரத்தி செல்ல அவர்கள் காட்டுப்பகுதிக்குள் ஓடி மறைந்தார்கள். ஆனாலும் விடாமல் சிலர் அவர்களை துரத்திக் கொண்டு செல்ல, சிலர் பசுபதியின் அருகே சென்று 

“அய்யா உங்களுக்கு ஒன்னுமிலலயே” என்று கேட்க பசுபதி காரில் இருப்பது யார் என்று தெரிந்து கொள்ள காரை நோக்கி அலறி ஓட கார் கதவு எரிந்தபடி திறக்க உள்ளே இருந்து கோவிந்தன் உடலில் தீயுடன் வெளியே ஓடிவந்தான். அவன் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. 

கீழெ விழுந்து உருண்டவன் முகத்தை எல்லோரும் பார்க்க பசுபதி அந்த நேரத்தில் “கோவிந்தா” என்று அலறிக்கொண்டு அவனை நோக்கி ஓட அவன் குடும்பத்தினர் எல்லோரும் கதறி துடித்து அழுதனர். சிலர் ஓடிவந்து அவன் மேல் இருந்த தீயை அணைக்க முயல தீ அவன் உடல் முழுவதும் பரவியது. 

இதற்க்குள் ஊரு முழுக்க இந்த செய்தி பரவிட எல்லோரும் அந்த இடத்தில் குவிந்தனர். கார் முழுவதும் எரிந்து எலும்புக் கூடானது. கோவிந்தன் தீக்காயப் பட்டு கதறி துடித்தபடி ஆம்புலன்சில் ஏற்றப்பட்டான். தீயணைப்பு வாகனம் வந்து தீ முழுவதையும் அணைத்த பின் மாரியப்பனின் கரிக்கட்டையான உடல் உள்ளிருந்து எடுக்கப்பட்டது. 

சத்தமின்றி காரியம் முடிக்க நினைத்தவன் சத்தமின்றி சடலமாகி கிடந்தான். முன் இருக்கையில் உட்கர்ந்து கர்ர் ஓட்டி வந்ததால் தீ நேராக அவன் மேல் விழுந்து வெடித்ததில் சத்தமிடகூட அவகாசமின்றி சில நொடிகளில் அடங்கிவிட்டிருந்தான்.



மருத்துவமனையில் அவசரசிகிச்சை பிரிவின் வாசலில் மாரியப்பனின் குடும்பம் பசுபதியின் குடும்பம் , பசுபதி, மற்றும் விஜயாவின் குடும்பம், நானும் கும்ரனும் நின்றிருக்க கோவிந்தனின் மனைவியும் பெண்ணும் கதறி அழுதுகொண்டிருந்தார்கள். உள்ளிருந்து டாக்டர் வெளியே வர எல்லோரும் ஆவலுடன் அவர் அருகே சென்றார்கள். 

“டாக்டர் கோவிந்தனுக்கு எப்டி இருக்கு” என்று பசுபதி துக்கம் தொண்டையை அடைக்க கேட்டார். டாக்டர் சோகமான முகத்துடன் 

“எவ்ளவோ ட்ரை பண்ணோம். ஆனா உடம்பு முழுசும் எரிஞ்சதால்” என்று நிறுத்திவிட்டு 

“கடைசியா உங்ககிட்ட பேசனும்னு சொல்றாரு” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார். நான் கும்ரன் பசுபதி ரஞ்சித் ஆகியோர் மட்டும் உள்ளே சென்றோம். பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. உள்ளே இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தனிடம் மரண வாக்குமூலம் வாங்கிவிட்டு வெளியே வர பசுபதியை பார்த்து ஒரு சலாம் போட்டுவிட்டு எங்களுக்கு வழிவிட நாங்கள் உள்ளே சென்றோம். 

உடல் முழுவதும் க்ரிக்கட்டையாக கிடக்க கந்துவட்டி கோவிந்தன் வாழை இலை மீது படுக்க வைக்கப்பட்டிருந்தான். உடல் தூக்கி தூக்கிப் போட்டது. பசுபதியை பார்த்ததும் கையை மட்டும் கூப்பி 

“மன்னிச்சிடுங்க அய்யா” என்று ஒரு வார்த்தை மட்டும்தான் சொன்னான். அந்த ஒரு வார்த்தைக்காகத்தான் இவ்வளவு நேரம் உயிர் இருந்த்து போல், சொல்லி முடித்ததும் அவன் கைகள் கீழெ சரிய ரஞ்சித் ஓடி “சித்தப்பா” என்று கதறி அழுதான். 

அவன் குரல் வெளியே கேட்டுவிட வெளியில் இருந்த அவன் குடும்பத்தினர்களும் கதறி அழுதபடி உள்ளே ஓடி வந்து அழ தொடங்கினார்கள். எல்லாம் முடிந்தது. ஓரே நேரத்தில் இரண்டு குடும்பத்தில் மரணம், ஓலம், சோகம் என்று ஸ்தம்பித்து போனது. மாரியப்பன் கோவிந்தன் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. 

கோவிந்தனுக்கு மகன் இல்லை என்பதால் ரஞ்சித்தே இருவரின் காரியங்களையும் முன் நின்று செய்தான். எல்லாம் முடிந்த பின் முதலில் பசுபதியின் ஊர் மக்கள் கோவிந்தன் மற்றும் அவன் அண்ணன் மாரியப்பனின் குடும்பத்தினர் யாரும் இந்த ஊரில் இருக்க கூடாது என்றும் அமுதாவை ரஞ்சித்துக்கு கட்டிக்கொடுக்க கூடாது என்றும் முரண்டு பிடித்தனர். 

ஆனால் பசுபதி இந்த திருமணத்துக்கும் மாரியப்பனின் திட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை, இவர்கள் காதலை பயன்படுத்தி மாரியப்பன் தன் பகையை தீர்த்துக் கொள்ள பார்த்தான். என்பதால் இவர்களின் உண்மையான காதலை யாரும் வெறுக்க வேண்டாம் என்று எடுத்து சொன்ன பின ஊர் மக்கள் அமைதியானார்கல். 

தற்போதைக்கு இருவரின் திருமணத்தை பற்றியும் எந்த முடிவும் எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டார்கள். ஒரு வாரம் கழிந்த பின் நானும் கும்ரனும் ஊருக்கு புறப்பட்டோம். பசுபதி என்னையும் கும்ரனையும் அழைத்து 

“தம்பி எனக்கு ஒரு ஆபத்துனு தெரிஞ்ச்தும் உங்க உசுர கூட பத்தி கவலபடாம என்ன காப்பாத்த முயற்சி பண்ணியிருக்கீங்க, அதுக்காக நான் எப்படி நன்றி சொல்றதுனு எனக்கே தெரியல” என்று கண்கலங்க 

“ஐயா இதுல நாங்க செஞ்சது ஒன்னுமே இல்ல, உங்கள கொல்லனும்னு நெனச்சவங்க அவங்களே அழியனும்னு விதி இருக்கும்போது அதான நடக்கும்” என்று நான் சொன்னதும். 

“ஆமா தம்பி நான் யாருக்கும் எந்த கெடுதலும் செஞ்சதில்ல, சின்ன் வயசுல மாரியப்பனோட தங்க்க்சி என்ன் உசுருக்குசுரா காதலிச்சா, ஆனா எங்க அப்பாவுக்குனு ஊருக்குள்ள ஒரு கௌரவம் இருந்துச்சி, அதனால அவ காதல நான் ஏத்துக்கல, ஆனா நான் இல்லனா செத்துடுவேனு அவ சொன்னதால யாருக்கும் தெரியாம மலக்கோவில்ல அய்யனார சாட்ச்யா வெச்சி மாரியப்பன் தங்க்ச்சிய கட்டிக்கிட்டேன். அதுல இருந்தே ரெண்டு ஒர்ருக்கும் நடுவுல சண்ட ச்ச்சரவு, எப்ப பார்த்தாலும் எனக்கு போட்டியா ஏதாவது செய்யுறதுனு அண்ணனும் தம்பியுமா சுத்திக்கிட்டு இருந்தானுங்க, கல்யாணம் ஆன ரெண்டாவது வருஷமே என்ன கொல்ல அவனுங்க செஞ்ச சதியில் அவனுங்க தங்க்ச்சிய அதான் என் பொண்டாட்டி செத்துப்போட்டா, அதுக்கப்புறமும் இவனுங்க பகை மட்டும் ஓயவே இல்ல, அதுக்கப்புறம் எங்க அப்பா அம்மா வற்புறுத்தலுக்காக இதோ இவள கட்டிக்கிட்டேன்” என்று தன் மனைவியை காட்ட அவர் தமிழ் பட்த்தில் வரும் சுஜாதாவை போல் எல்லாத்தையும் பார்த்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். 

“ஐயா இதெல்லாம் எங்களுக்கு தெரியனும்னு அவசியம் இல்லையே” என்று கும்ரன் சொல்ல 

‘இல்லபா இவ்ளோத்த்துக்கு அப்புறம் ஏன் இதெல்லாம் நடக்குதுனு நீங்க தெரிஞ்சிக்கனும், அதான் நான் சொன்னேன், சரி நீங்க பார்த்து போய்ட்டு வாங்க” என்று எங்களை வழி அனுப்பி வைத்தார். நானும் குமரனும் கனத்த இதயத்தோடு அங்கிருந்து கிளம்பி பஸ் ஸ்டாண்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த நேரம் எங்கள் எதிரே அமுதவள்ளி வந்தாள்.

“என்ன அமுதா எதாவது மிச்சம் இருக்கா” என்று கும்ரன் பொருள் பொதிந்த வார்த்தையில் கேட்க அவளுக்கும் அதன் அர்த்தம் புரிந்திருக்கும் போல, 


“சாரி முத்து உன்னோட காதல் நான் ஏத்துக்காத்தாலதான் இவ்ளோவும் நடந்துச்சோனு என் மனசு அடிச்சிக்குது, ஒருவேல நான் உன் காதல் ஏத்துக்கிட்டிருந்தா ரெண்டு உயிர் போகமாலாவது இருந்திருக்கும்னு தோனுது” என்று சொல்ல 


“என்ன் இப்டிலாம் பேசுறீங்க, எது நடக்கனும்னு இருக்குதோ அதுதான் நடந்துச்சி, இதுக்காக ஏன் உங்க மனச போட்டு கஸ்டப்ப்டுத்திக்கிறீங்க” என்று நான் சொன்னதும் கும்ரன் என்னை பார்த்து 

“ஆமாங்க இவன் இப்டித்தான் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான் ஆனா வேற யாராவது கஸ்டப்பட்டா இவருக்கு தாங்க முடியாது, நீங்க பீல் பண்ணாம போய் உங்க லைஃப எஞ்சாய் பண்ணுங்க” என்றதும் அமுதா சொகமான் முகத்துடன் அங்கிருந்து கிளம்பி செனறாள். 

“டேய் என்ண்டா இப்டி பேசிட்ட” என்று நான் கும்ரனை கடிந்துகொள்ள 

“பின்ன என்ண்டா பண்றதெல்லாம் பண்னுவாளுங்களாம் அப்புறம் இன்னொருத்தன் கூட போய்ட்டு நடந்த்துக்கெல்லாம் நான் உங்க காதல ஏத்துக்காத்துதான் காரணம்னு சொல்லுவாளுங்களாம், வாடா அவ கெடக்குறா” என்று என்னை இழுத்துக் கொண்டு நடந்தான். தூரத்தில் அமுதவள்ளி என்னை திரும்பி பார்த்துக்கொண்டே சென்றாள். 


No comments:

Post a Comment