Thursday 12 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 36

"என்னமா?..."

"ராகவ் மாமா ஏதாவது கொடுத்தாரா உன் கிட்ட?" - சங்கீதா கேட்டவுடன் அந்த பிஞ்சு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு. உடனே ஓடிப் போய் அவளது பொம்மைகள் கூடையில் இருந்து ராகவ் குடுத்த பரிசைக் கொண்டு வந்து குடுத்தாள். gift wrap செய்யப் பட்டு இருந்தது. பிரித்துப் பார்த்தாள் சங்கீதா.

"box திறந்தவுடன் "Happy birthday to you...... Happy birthday to you...... Happy birthday to dear sara.... Happy birthday to you......" என்று மென்மையான சத்தத்தில் பாட்டு பாடியது அந்த வாழ்த்து அட்டை. - இதைப் பார்க்க பார்க்க ஆழ் மனதில் ராகவை அநியாயத்துக்கு மிஸ் பண்ணுவதை உணர்ந்தாள் சங்கீதா. கண்களில் சந்தோஷத்தில் கட்டு படுத்த முடியாத கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது. அந்த அட்டையை மீண்டும் மீண்டும் மூடியும் திறந்தும் அந்த " Happy birthday to you...... " பாடலைப் பாட வைத்து ரசித்திருந்தாள்.

நெஞ்சோடு அந்த வாழ்த்து அட்டையை அழுத்தி வைத்து கண்களை மூடி மெளனமாக மனதுக்குள் " I love you so so much da my sweet rascal, I miss you very badly.... ஸ்ஷ்.. ஸ்ஷ்" சந்தோஷமும் கண்ணீரும் கலந்து பொங்கியது சங்கீதாவுக்கு.

உடனடியாக தனது phone எடுத்து ராகவிடம் பேசலாம் என்று எண்ணியவளுக்கு ஒரு "Incoming call" வந்தது. எடுத்து அட்டென்ட் செய்தாள்..

"ஹலோ.."

"Mrs.Sangeetha தானே பேசுறது?"

"ஆமா சொல்லுங்க..."

"உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன்மா.."

"சொல்லுங்க சார்.. என்ன விஷயம்?"

"சாரி மேடம், hospitalல உங்க வீட்டுகாறரை யாரோ கொலை செஞ்சிட்டாங்க...."

நல்ல இருட்டில் அடிக்கும் காற்றுக்கு மரங்களின் இலைகள் சலசலவென அசையும் சத்தம் ஹாஸ்பிட்டலின் சுத்துபுற நிசப்தத்தை அமைதியாய் ஜெய்த்துக் கொண்டிருந்தது.

வேகமாகவே வந்தாலும் வயதான பெரியவர் இருமுவதுபோல இருந்தது ஹாஸ்பிட்டலில் போலீஸ் ஜீப் நின்றபோது.. ஒரே ஒரு கான்ஸ்டபிள் மட்டும் வார்டன் டிரஸ்ஸில் ஒருவன் காம்பெளண்ட் சுவரை ஏறுவதை கவனித்தார்..

"உய்ங்.... உய்ங்...." என்று விசில் சத்தம் குடுத்துக்கொண்டே அவனின் காலில் தனது லத்தியை விசிறி எரிய அவனது முழங்காலில் அது நல்ல அடியைக் குடுத்திருக்க வேண்டும்... சற்று சறுக்கியது அவனுக்கு.. இருப்பினும் இன்னும் முயற்சி செய்து ஏறினான்.. கான்ஸ்டபிள் அவனை நெருங்கினார்.... இன்னும் வேகமாக முயற்சி செய்தான்.... அவர் கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்... வேறு வழி ஏதும் இன்றி தன் இடுப்பில் இருந்து ஒரு சிறிய பிஸ்டலை எடுத்து கான்ஸ்டபிள் காலில் சுட்டுவிட்டு முழு பலத்தையும் போட்டு அந்த சுவரின் மீது எரி தப்பித்து விட்டான்....

உடன் இருந்த இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவர் காயம் அடைந்தவரை நோக்கி எழுப்பினார்... இன்னொருவர் ஹாஸ்ப்பிட்டல் வளாகத்துக்கு வெளியே சென்று அவனை துரத்த ஓடினார்...


IOFI வளாகத்துக்குள் பர்சனல் வி.ஐ.பி லாஞ்சின் உள்ளே "ஐ வில் ஆல்வேஸ் லவ் யூ" என்ற ஆங்கில வெஸ்டர்ன் மியூசிக் மிருதுவான சத்தத்தில் மனதை வருடும் விதம் ஓடிக்கொண்டிருக்க அதை ஹம் செய்தபடி சோஃபாவில் ஃபோனும் கையுமாக சாய்ந்திருந்தான் ராகவ்.... அவன் சற்று அயர்ந்திருந்தான் என்பது அவனது கண்களில் தெரிந்தது, இருப்பினும் சங்கீதாவின் பிறந்தநாள் பரிசாக தான் வழங்கிய க்ரீட்டிங் கார்டை சங்கீதா பார்த்திருப்பாளா என்று எண்ணி மனதுக்குள் பரவசப்பட்டான். "என்னுடைய சரா இந்நேரம் பார்த்திருப்பாளா, சந்தோஷப் பட்டிருப்பாளா, பார்த்தப்போ என்ன நினைச்சி இருப்பா?" என்று மனதுக்குள் எண்ணி அங்கும் இங்கும் வளாத்தினான். அவளுடைய அழைப்புக்காக ஏங்கினான், முகத்தில் நான்கு நாட்கள் ஷேவ் செய்யாத தாடி எட்டிப்பார்த்தது. அவனுக்காகவே செய்தது போல ஒரு கிரீம் நிற லெனின் ஷர்ட் அணிந்து அதில் முதல் மூன்று பட்டன்களை அகற்றிவிட்டு ரோமம் படர்ந்த மார்பு தெரியும்விதம் அந்த அறையின் கண்ணாடி முன்பு அவனது நெஞ்சில் "சரா" என்று பச்சை குத்திய இடத்தைப் பார்த்தபடி அவனது தலை முடியை கலைத்துவிட்டு, ஜில்லென்ற நீரை முகத்தில் அடித்தான். எப்போதும் இல்லாதது போல் இன்று அவனுக்கே அவனது முகம் இன்னும் வசீகரமாக தெரிந்தது. அவனது மணம் முழுக்க சரா தான் குடி இருந்தாள். "அவ பார்திருப்பாளா? ஏன் இவளோ நேரம் எடுக்குறா கூப்பிடுறதுக்கு" என்று எண்ணுகையில் "வேக்....வேக்...." அவனது செல் ஃபோன் சினுங்கியது.

"Mr.வாத்து calling" என்று ஃபோன் ஸ்கிரீனில் வந்தது. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டான் ஆனால் இந்நேரம் அவன் இந்த ஃபோன் கால் எதிர் பார்க்கவில்லை.

"டேய் வாத்து.. எப்படிடா இருக்கே? உனக்கு நேத்துதான் மெயில் போட்டேன் அதுக்குள்ள பார்த்துட்டு ஃபோன் பண்ணுற? அவ்வளோ சுருசுருப்பாய்டியாடா நீ? சூப்பர் டா.." - ராகவ் தன் வாழ்கையில் அதிகம் நம்பும் பள்ளி ஸ்நேகிதன் கார்த்திக்கிடம் மிகவும் உற்சாகமாய் பேசினான்.

"டேய் எனிமி, ஃபிரண்ட்ஸ் விஷயத்துல நான் உன்னை மாதிரி சோம்பேறி கிடையாது டா.. அப்புறம் தயவுசெய்து என்னை கார்த்திக்னு கூப்பிடுடா, அந்த வாத்தை விட்டு தொலைய மாட்டியா?...." - அப்பாவியாக பேசினான் கார்த்திக்.

"நீ என்னிக்குமே வாத்துதான்.. சரி எப்போ வர, அதை சொல்லு முதல்ல..."

"உனக்கு ஏதோ பிரச்சினை இருக்கு, மணசு சரி இல்ல.. அப்படின்னு சொன்னியே, என்னடா ஆச்சு?"

"எல்லாம் நேர்ல சொல்லுறேன் டா, உன்னை பார்க்கணும் மச்சி.. சீக்கிரம் கிளம்பி வா."

"அடுத்த வாரம் வந்துடுறேன் டா... எனக்கும் என்னோட வர்ஸ்ட் எனிமிய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.."

"ஹா ஹா... இன்னும் நீ என்னை எனிமியா தான் பார்க்குற.... இல்ல.."

"கண்டிப்பாடா.. மவனே நீ செஞ்ச காரியங்களுக்கு என்னதான் நீ என் பெஸ்ட் ஃபிரண்டா இருந்தாலும் எனக்கு என்னிக்குமே நீ என் எனிமிதான்."

"ஹா ஹா.... சரி சரி சீக்கிரம் வந்து சேறு.... இந்த ஒரு நாள் ரெண்டு நாள் வேலையெல்லாம் வேணாம் ஒரு ரெண்டு மூணு வாரம் என்னோட இருந்துட்டு போ..சரியா?"

"ஆமா.... அப்படியே ஒபாமா கூட ஒக்காந்து ஒப்பந்தம் பண்ணுற அளவுக்கு பிஸி பாரு... ஏண்டா நீ வேற...... நான் வெட்டி ஆபிசர் தான்... சீக்கிரம் வரேன்.."


"ஹா ஹா... சரி டா நான் வெக்குறேன்..."

"ஏன் ஏதாவது ஃபிகர் கூப்பிடுதா?"

"பரவாயில்லையே.. டேய் வெண்ண, உனக்கு இந்த விஷயத்துல மட்டும் மூளை இருக்குடா.."

"என்னதான் CEO ஆனாலும் ஃப்ரண்ட் கிட்ட பேசும்போது ஒருத்தன் ஃபோன் கட் பண்ணுறான்னா அது வேற எதுக்கு இருக்கபோகுது? நீ நடத்து, நான் வெக்குறேன். பாய்.."

பலரால் ராகவைப் புரிந்துகொள்ள முடியாது. முன்கோவம், கர்வம் உடையவன், திமிர் பிடித்தவன், கெட்டவன், முரடன், என்று ஒவ்வொருவரும் ஒரு ஒரு விதத்தில் அவனை முதுகுக்கு பின்னால் சாடுவார்கள். ஆனால் மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதை கேட்டு உள்ளுக்குள் கஷ்டப்படுவதைக் காட்டிலும் ஒரு வித சந்தோஷத்தில் மிதப்பான்.. காரணம் மற்றவர்கள் தொடர்ந்து நம்மை ரகசியமாக திட்டுகிறார்கள் என்றால் நாம் ஏதோ தொடர்ந்து சாதித்துக் கொண்டே இருக்கிறோம் என்று அர்த்தம். இப்படி பலரும் அவனை சுத்தி இருக்கையில், அவனை எந்த ஒரு ஈகோவும், பொறாமையும் இன்றி அவனது ஆழ் மனதை நன்கு புரிந்து அவன் குடும்பத்தில் உள்ளவர்களைக் காட்டிலும் அவன் மனதில் ஆதிக்கம் செலுத்தியவள் சந்கீதாதான். ஆனால் அதற்கு முன்பு அவன் மனதில் ஆழமான நம்பிக்கையை சம்பாதித்திருக்கும் ஒரே நல்ல நண்பன் கார்த்திக் மட்டும்தான்.

கார்த்திக் ஃபோன் வைத்தவுடன் ராகவின் விரல்கள் உடனடியாக அவனது சாராவின் ஃபோன் நம்பர்களை அழுத்தி டிஸ்கோ டான்ஸ் ஆடியது....

"ஹலோ.." - சராவின் வார்த்தைகளை நோக்கி ஆர்வமாக பேச ஆரம்பித்தான்..

"ஹலோ, யார் பேசுறது?" - ஸ்நேஹா பாவமாக சற்று பயந்த குரலில் கேட்டாள்..

"ஏய் ஸ்நேஹா, என்னடா ஆச்சு? ஏன் என்னமோ ஒரு மாதிரி பேசுற? நான் ராகவ் பேசுறேன்.."

"மாமா அது வந்து...." - லேசாக விசும்பினாள் ஸ்நேஹா. அப்போது அருகில் சங்கீதா பலமாக அழும் சத்தம் ஃபோனில் கேட்டது ரகாவ்கு.

"ஏய் என்னடா ஆச்சு, ஏன் அம்மா அழுவுறாங்க?" - ராகவ் பதட்டத்துடன் கேட்டான்..

"ஒரு ஃபோன் வந்துச்சி மாமா, அதுக்கப்புறம் அம்மா அப்படியே தரையில உட்கார்ந்துடாங்க, எந்திரிக்கவே இல்ல, இன்னும் அழுவுறாங்க.."

"ஃபோன் குடு அம்மா கிட்ட.."

"ச...சங்கீதா....அழாதடா... என்ன ஆச்சு...." - ராகவ்கு என்ன ஆச்சு என்ற பதட்டம்...

ராகவ் குறள் கேட்டவுடன், மறுமுனையில் சங்கீதா பலமாக அழ தொடங்கிவிட்டாள்.

"ஏய்.. என்ன ஆச்சுடா? ஏன் அழுவுற? நான் இருக்கேன் ஏதுவா இருந்தாலும் சொல்லு என்ன ஆச்சு?" - பேசிக் கொண்டே காலணிகளை மாட்டி ஷர்ட் பட்டன்களை போட்டுக் கொண்டு சங்கீதாவின் வீட்டுக்கு கிளம்ப தயாரானான்.

"ராகவ்...." (அவளுக்கு குறள் உடைந்தது) "என... என்.. ஸ்ஷ்.. ஸ்ஷ்.. (பேச முடியாமல் விடாப்படியாக மூச்சு வாங்கி வாங்கி கட்டுப் படுத்த முடியாமல் அழுதாள் )எனக்கு பயமா இருக்குடா.."

"ஃபர்ஸ்ட் அழுவுறதை நிறுத்து, என்ன ஆச்சு.. அதை சொல்லு.." - ராகவ் படபடப்புடன் கேட்டான்.


(அழுகையும், இழுத்த வார்தைகளுமாய் பேசினாள் சங்கீதா) ஸ்ஷ்.... ஹாஸ்பிடல்... ஸ்ஷ்.. கு....மார கொல பண்ணிட்டாங்களாம் ராகவ்வ் ஸ்ஷ்...ஆஹ்..மா.. ஸ்ஷ்ஆஆ...( ராகவ் பேசுவது அவளுக்கு தெம்பாக இருப்பதால் இன்னும் அழுகையின் சத்தம் உயர்ந்தது அவளுக்கு.)

"என்ன சொல்லுற? உனக்கு யார் சொன்னாங்க?"

"ஸ்ஷ்ஷ்... போ... போலீஸ் ஃபோன் பண்ணி சொன்னார் டா.... எனக்கு என்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியல டா..( மீண்டும் அழ தொடங்கினாள்.) குமாரை ஏன் கொலை செய்யணும்?.. அடுத்து என்னையும்...." - சங்கீதா பேசி முடிப்பதற்குள் ராகவ் தடுத்து நிறுத்தினான்.

"ஸ்டாப் இட் இடியட்.. பசங்க இருக்காங்க, அவங்க எதிர்க்க என்ன வேணுன்னாலும் பேசுவியா?... என்ன பேசுற நீ.. நான் சொல்லுறதை செய்.. முதல் வேலையா வீட்டை பூட்டிகிட்டு உட்கார்ந்திரு.. ஒரு கதவு ஜன்னல் கூட விட்டு வைக்காத. நான் உடனே வந்துடுறேன். அதுக்கப்புறம் ஹாஸ்பிடல் போகலாம். நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்கே இருப்பேன்." - அவசரமாய் பேசி விட்டு அவனது BMWவில் சங்கீதாவின் வீட்டை நோக்கி சீறினான் ராகவ்.

விஷயத்தை முதலில் கேட்டபோது அப்படியே அதிர்ச்சியின் அதிர்வில் பயமும் குழப்பமும் கலந்து உறைந்திருந்தவள் குழந்தைகளைப் பார்த்தாள். ஒன்றும் புரியாமல் பதிலுக்கு அவளைப் பார்த்தது அந்த பிஞ்சு கண்கள். உடனே ராகவ் சொன்னது நியாபகத்துக்கு வந்து ஏதோ ஒரு வித பயம் உடல் முழுவதும் பரவியது சங்கீதாவுக்கு. முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு அவசரமாக எழுந்து ரூம் கதவு, வீட்டின் பின் கதவு, சமையல் அறை, ஜன்னல்கள் மற்றும் வாசல் கதவு என்று அனைத்தையும் சாத்தி விட்டு லேசாக சத்தம் குடுத்து ஓடிக்கொண்டிருக்கும் ஃபேனையும் ஆஃப் செய்து விட்டு ஹாலில் தனது செல் ஃபோனை கையில் இறுக்கமாக வைத்து குழந்தைகள் இருவரையும் நெஞ்சோடு அனைத்து பத்திரமாக அணைத்தபடி அமர்ந்திருந்தாள். ஒவ்வொரு நொடியும் ராகவை மனதில் எண்ணி "சீக்கிரம் வா... சீக்கிரம் வா...." என்று மெளனமாக சொல்லிக்கொண்டே இருந்தாள்.

வீடு முழுவதும் நிசப்தம்.. அந்நேரம் டிங்..டிங்.. என்று காலிங் பெல் சத்தம் கேட்டது. "ஆங்" என்று ஒரு நிமிடம் பதட்டத்தில் தனக்கு தானே சொல்லிக்கொண்டு கதவை நோக்கி சென்று "டோர் ஐ" வழியாக யாரென்று பார்த்தாள். ராகவ் தலை முடியை வேகமாக கோதியபடி நின்றிருந்தான். அதைப் பார்த்ததில் அவளுக்கு பாதி உயிர் வந்தது. உடனே கதவை திறந்தவள் பயத்தில் அவனை அப்படியே அழுத்தி அனைத்துக் கொண்டாள்.

"இட்ஸ் ஓகே... இட்ஸ் ஓகே... நான் வந்துட்டேன் இல்ல.. பயப்படாத டா.." - மூச்சு வாங்க சங்கீதா பயத்தில் விம்மி விம்மி அழுவதை தன் நெஞ்சில் உணர்ந்தான் ராகவ்.

குழந்தைகள் இருவரையும் கூப்பிட்டு கார் கதவை திறந்து "உள்ளே உட்காருங்க.." என்று சொல்லிவிட்டு சங்கீதா வீட்டை பூட்டியவுடன் அவள் தோள்களை பற்றி அணைத்தபடி அவளை காரில் முன்பக்கம் தனது பக்கத்து இருக்கையில் அமரவைத்து வழக்கத்தை விட காரில் இன்னும் அதிக வேகம் குடுத்து சீறினான் .. ஹாஸ்பிடல் சில நிமிடங்களில் வந்தது... சற்று நேரத்தில் இருவரும் குமாரின் வார்டுக்கு உள்ளே நுழையும்போது போலீஸ் புகைப் படம் எடுத்துக் கொண்டு ஏதாவது தடயம் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தார்கள்.

போலீசைப் பார்த்தவுடன் உடனே விரைந்து சென்றான் ராகவ்.. "இன்ஸ்பெக்டர்.. உங்க பேரு என்னவோ சொன்ணீங்களே....."

"ராஜேந்திரன்.." - யாரென்று பார்க்காமல் குமாரைப் பார்த்தே பேசினார் போலீஸ்..


இது எப்படி ஆச்சு? - கற்ச்சீஃப் வைத்து நெற்றியை துடைத்தபடி பேசினான் ராகவ்.

"நீங்க...." (ராகவைப் பார்த்து சற்று நியாபகப் படுத்திக்கொண்டு பேசினார் இன்ஸ்பெக்டர்) "ராகவ் தானே.."

"ஆமாம்..."- எதைப் பத்தியும் யோசிக்காமல் பதிலை எதிர்நோக்கி காத்திருந்தான் ராகவ்.

"ஆயுதம் எதுவுமே உபயோகப் படுத்தல சார், ஆனா ஆள் உயிரோட இல்ல. தலையணை வெச்சி முகத்தை மூடி அமுக்கி கொன்னு இருப்பானானு பார்த்தா அதுவும் இல்ல. உள்ள வந்தவன் எந்த பொருளையும் தொடவும் இல்ல. ரொம்ப காம்ப்லிகேட்டட். ஹாஸ்பிடல் செக்யூரிட்டி ஆளுங்க கிட்டயும் விசாரணை நடக்குது. இங்கே ஒரு செக்யூரிட்டி கேமரா கூட இல்ல சார். எங்க நிலைமை ரொம்ப கஷ்டம். - இன்ஸ்பெக்டர் சலித்துக் கொண்டார்.

உங்களுக்கு முதல்ல விஷயம் எப்படி தெரிஞ்சிது? யார் சொன்னாங்க? - ராகவ் இன்ஸ்பெக்டரை கூர்ந்து பார்த்துக் கேட்டான்.

(கண்கள் இடுங்க பேசினார் போலீஸ்) ஒரு ஃபோன் வந்துச்சி சார், இத்தினி மணிக்கி இன்னாரு இறந்துட்டாரு, நான் யாருங்குறதை அப்புறம் சொல்லுறேன், சீக்கிரம் வாங்கன்னு மட்டும் சொல்லிட்டு ஃபோன் வெச்சிட்டான். யாரு என்ன எது... அப்படின்னு.. - போலீஸ் பேசுவதற்குள் ராகவ் இடைமறித்தான்..

"உங்களால அந்த நம்பரை...." ராகவ் பேசுகையில் "நான் கொஞ்சம் பேசி முடிச்சிடுறேன் சார்.." என்றார் கரகரத்த குரலில் ராஜேந்திரன்....
"ஸ்ஸ்ஷ்... சொல்லுங்க...." - கொஞ்சம் பொறுமையை இழந்து பேசினான் ராகவ்..

"உள்ள வந்த உடனேயே ஒருத்தன் ஹாஸ்பிடல் காம்பொளண்ட் தாண்டி ஓடினான் சார்.... பிடிக்க போன கான்ஸ்டபிள் கால்ல சுட்டுட்டான்... பாருங்க.. இவர் ஆளோட உருவ அடையாளக்ளை நியாபகம் வெச்சி இருக்காரு... அவன் எங்கே ஓடினான்ன்னு பார்க்க போன இன்னொரு கான்ஸ்டபிளை இன்னும் காணும்..."

ஒஹ்... மை காட்... முகம் பார்க்க முடியலையா?

இல்ல சார்.. ஆனா ஒரு விஷயம் சார்..

என்ன?...

அவன் இந்த ஹாஸ்பிட்டல் வார்டன் பாய் டிரஸ்தான் போட்டிருந்தான்..

என்ன சொல்லுறீங்க?... - அதிர்ச்சியுடன் கேட்டான் ராகவ்...

ஆமாம் அதான் சீஃப் டாக்டர் வந்தா அவர் கிட்டயும் சில விஷயங்கள விசாரிக்கணும் னு காத்திருக்கேன்...

"நீங்க ஏதோ கேட்க வந்தீங்க.. நான் நடுவுல பேசிட்டே இருந்துட்டேன்.. உக்ஹும்... சாரி சார்... ஹச்.... என்ன கேட்க வந்தீங்க?" - சற்று இருமியவாறே கரகர குரலில் பேசினார் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன்...

"இந்த நியூஸ் சொல்ல உங்களுக்கு ஒருத்தன் ஃபோன் பன்னானே அந்த நம்பரை ட்ராக் பண்ண முடியலையானு கேட்க வந்தேன்.."

"பண்ணோம் சார்.. 'நீங்கள் அழைக்கும் தொலை பேசி எண்னை சரி பார்க்கவும்'னு வந்துச்சி. ரிங் போகல" - வள வள பேச்சு ராகவிடம் இல்லை, எப்போவுமே ஸ்ட்ரைட் டு தி பாய்ண்ட்.. அவ்வப்போது நடு நடுவில் ராகவ் இப்படி கேள்வி எழுப்புவதை இன்ஸ்பெக்டர் விரும்பவில்லை என்றாலும் அவன் கேள்விக்கு சலிக்காமல் பதில் அளித்தார்.


"ஹ்ம்ம்.." - கண்களை மூடி யோசித்தான் ராகவ்.

"சார்.. எனக்கென்னவோ அந்த இஸ்திரி பையன் சொன்ன துரை தான் செய்திருப்பானோன்னு தோணுது, உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்குதா?.." - இன்ஸ்பெக்டர் சிந்திக்க கொஞ்சம் சிரமப்பட்டு ராகவிடம் கேட்டார்.

கேள்விக்குறியாக இன்ஸ்பெக்டரைப் பார்த்தான் ராகவ். அவனிடம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. "கொஞ்சம் யோசிக்க விடுங்க.." என்று ஒரு புறம் அமர்ந்தான்.

ராகவ் எதிரே சீஃப் டாக்டர் வந்தார்.. அவரைப் பார்த்தவுடன் விரைந்து சென்றான்.

"டாக்டர்...." என்று ராகவ் நெருங்கும்போதே அவன் என்ன கேட்கப் போகிறான் என்று அவருக்கு புரிந்திருந்தது.

"குமாரை முறைப் படி போஸ்ட்மார்ட்டம் செய்து என்ன ஆச்சுன்னு தெளிவா சொல்ல முடியுமா டாக்டர்?"

மெதுவாக அவனது கைகளைப் பிடித்து பேச தொடங்கினார் அவர்.. "அவசியம் இல்லை ராகவ்.." - சற்று லேசான பயத்தில் நெற்றி வேர்த்திருந்தது அவருக்கு.

என்ன சொல்லுறீங்க?

ஆப்பரேஷன் செய்யுறதுக்கு முன்னாடி வலி தெரியாம இருக்குறதுக்காக குடுக்குற அனஸ்தீஷ்யாவை ஊசியால கொஞ்சம் அளவுக்கு அதிகமா குடுத்து இருக்கான். அது ஆளையே கொன்னுடும். இப்படி செய்யுறதால எங்களுடைய கவனக் குறைவாலதான் இது நடந்துச்சின்னு ஹாஸ்பிடல் மேலயும் பழி போடலாம். யாரோ உள்ள வந்து கொலை செய்திருக்காங்கனு சுலபமா மத்தவங்களால சொல்லிட முடியாதுன்னு யோசிச்சி செய்திருக்காங்க. ஆனா இவருக்கு ஆப்பரேஷன் நேத்தே முடிஞ்சிடுச்சி. - டாக்டர் ராகவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது போலீஸ் அருகில் வந்தார்.

என்ன சொல்லுறீங்க டாக்டர்.... உங்க கவனக் குறைவாலதான் இது ஆச்சா?

ச்சே ச்சே... ஏன் இப்படி செய்திருக்கலாம்னு நான் ரகாவ்கு எக்ஸ்ப்லைன் பண்றேன் அவளோதான்.. மத்தபடி இதுக்கும் எனக்கும், எங்க ஹாஸ்பிடலுக்கும் ஒரு சம்மந்தமும் கிடையாது.

அப்போ ஏன் உங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் ஒருத்தன் காம்பொளண்ட் சுவர் எகிறி குதிச்சி ஓடணும்.. - இன்ஸ்பெக்டர் கொஞ்சம் மூர்கமாகவே கேட்டார்..

சீஃப் டாக்டர் "அதுவும் எனக்கு தெரியாது... நீங்கதான் கண்டுபுடிக்கணும்.. இது எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாயிஸ் அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர்.. மொத்தமா எத்தினி பேர் இருக்காங்களோ எல்லாருமே இன்னிக்கி வந்திருக்காங்க... கூடவே அந்த யூனிஃபார்ம் போட்டு எங்கள்ள ஒருத்தனா இருந்தாதான் குமாரை கொலை செய்ய உதவுறதுக்கு சாத்தியமாகும்.. தவிர எங்க ஹாஸ்பிடல் வார்டன் பாய் டிரஸ் எந்த டைலர் கிட்ட குடுத்தாலும் தைச்சி குடுக்க ரொம்ப நாள் ஆகாது...." என்று அவர் பங்குக்கு விறைப்பாக பேசி முடித்தார்...

ராகவ் இன்ஸ்பெக்டரை நோக்கி, "இன்ஸ்பெக்டர்.. நான் ஏற்கனவே சொன்னது மாதிரி இந்த விஷயத்தை தயவுசெய்து மீடியாவுக்கு தெரியப் படுத்த வேணாம். கூடவே பெரிய விஷயம் ஆக்க வேணாம்.. குமார் ஒன்னும் வி.ஐ.பி கிடையாது. என் கம்பெனியில் ஒரு சாதாரண எம்ப்லாயிதான், உங்க கான்ஸ்டபில் எடுக்குற போஃடோஸ் எல்லாம் உங்க இன்வஸ்டிகேஷனுக்கு மட்டும் பயன் படுத்திக்கோங்க, வேற யார் கைக்கும் போக வேண்டாம். ஐ ஹோப் யு அண்டர்ஸ்டான்ட்" - கொஞ்சம் கண்டிப்பாக சொன்னான் ராகவ்.


"ஹ்ம்ம்.." - நெற்றி சுருங்க கண்களை மூடி "சரி சார்" என்றார்... பிறகு மெல்ல பேச ஆரம்பித்தார் "உங்க சித்தப்பா கிட்ட ஏதோ என்னை பத்தி பேசுறேன்னு சொன்னீங்களே?" - இவ்வளவு நேரம் ராகவிடம் ஒத்துழைத்து பதில் சொன்னதுக்கெல்லாம் பலன் வேண்டாமா? கஷ்டப்பட்டு செயற்கையான சிரிப்பை வரவழைத்து பேசினார் இன்ஸ்பெக்டர்.

"ஹ்ம்ம்.. சமயம் வரும்போது பேசுறேன்." - என்று சுருக்கமாக முடித்துக் கொண்டான் ராகவ்.

ராகவ் அங்கிருந்து கிளம்பும்போது டாக்டர் அவனிடம் நெருங்கி வந்து "ராகவ்.... இதுல எங்க ஹாஸ்பிடல் பேரும் சம்மந்தப்பட்டிருக்கு...." என்று லேசாக இழுத்தார்.. அதன் அர்த்தம் என்னவென்று ராகவ் புரிந்துகொண்டு "கவலை படாதீங்க, விஷயம் நமக்குள்ள மட்டும்தான் இருக்கும். வெளியே வராது. உங்க ஹாஸ்பிடல் பேர் கெடாது." என்றான்.

ராகவ் சற்று அமைதியாய் சங்கீதாவின் அருகினில் வந்து அமர்ந்தான்.

எந்த ஒரு கஷ்டம் வந்தாலும் அதிகம் உடைந்து விடமாட்டாள் சங்கீதா. ஆனால் உயிர் பயம் என்பது பாரபட்சம் இல்லாமல் யாருக்கும் வரும். இருப்பினும் அதையும் தாண்டி மனதில் தைரியம் வரவழைத்துக் கொண்டாள். ராகவ் அங்கும் இங்கும் நீண்ட நேரம் போலீசிடமும், டாக்டரிடமும் மாறி மாறி பேசி வருவதை நீண்ட நேரம் கவனித்தாள். இப்போது அவளிடம் விசும்பல் கொஞ்சம் குறைந்திருந்தது. அருகில் ராகவின் தோள்களைப் பற்றினாள்.

"என்னடா...." - பரிவுடன் கேட்டான் ராகவ்..

"போதும்டா, உன்னை இன்னும் சிரமப் படுத்திக்காத.." - இந்த வார்த்தைகளை சங்கீதா சொல்லும்போது அவனுக்கு இயல்பாய் வரும் கோவம் வந்தது.

"என்ன போதும்? எது சிரமம், நான் ஒன்னும் என் பக்கத்து வீட்டுக்காரிக்கு இதெல்லாம் செய்யல.." - கோவத்தில் திரும்பிக் கொண்டான் ராகவ்..

தன் வலது கையால் அவன் முகத்தை மீண்டும் தன் பக்கம் திருப்பி, "கோவப் படாதடா... என்னை சுத்தி நடக்குற விஷயமெல்லாம் எனக்கு பைத்தியம் பிடிக்க வெக்குது. உன்னை பார்த்ததுல இருந்துதான் என் மனசுக்கு ஒரு விதமான தெம்பு கிடைச்சிது. இப்போ....(சில நொடிகள் பேசவில்லை..) ஸ்ஷ்... (லேசாக அழ தொடங்கினாள்) "எல்லா சடங்கையும் செய்யணும், இதுங்க ரெண்டும் சின்ன வயசுல பார்க்கக்கூடாததை எல்லாம் பார்கும்ங்க, அதெல்லாம் எதுக்கு செய்யுறோம்னு அர்த்தம் கேட்க்கும்ங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்லுற நிலைமையில நான் இருப்பேனானு தெரியலடா.." - ராகவின் தோள்களில் சாய்ந்தவாறு மெதுவாக அழுதுகொண்டே பேசினாள் சங்கீதா..

ஏன் ஏதாவது ஒலரிகிட்டே இருக்கே? - சற்று அதட்டலுடன் சொன்னான் ராகவ்....

"எல்லாருக்கும் சொல்லி அனுப்பனும் ஸ்ஷ்..." - அவளது கண்ணீர் ரகாவின் தோள்களை ஈரமாக்கியது.. "இன்னும் என்னென்ன செய்யணும்னு கூட தெரியாது.. கூடவே உனக்கும் நிறைய கஷ்டம் குடுக்குறேன்.. ஸ்ஷ்..." - ராகவ் பேசுவது எதையும் காதில் வாங்காமல் கண்களை மூடி பேசிக்கொண்டே இருந்தாள் சங்கீதா..

"நான் ஒரு விஷயம் சொல்லவா...?"

"இஸ்ஷ்... சொல்லு.." - விசும்பலுடன் பேசினாள் சங்கீதா.. 


"உன் வாழ்க்கைல முக்கியமானவங்கன்னு சொன்னா, நான், அப்புறம் உன் மேல அக்கறை எடுத்துக்குற நிர்மலா அக்கா, உன் பசங்க, உன் தோழி ரம்யா, அப்புறம் உன்னை அக்காவா நினைக்கிற சஞ்சனா. இவங்களை தவிர வேற யாரும் உன் வாழ்க்கைல இனி தேவை இல்லைன்னு நான் நினைக்கிறேன்." - ராகவ் இதை சொல்லும்போது மெளனமாக இருந்தாள் சங்கீதா....

"சாஸ்திரம் சம்ப்ரதாயம் சடங்குனு நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் செய்து இருக்காங்கன்னு சொல்லி நாமும் அந்த சாக்கடைல விழனும்னு அவசியம் இல்ல. தெரிஞ்சே உன் பசங்களுக்கும் உனக்கும் கஷ்டம் குடுக்குற ஒரு விஷயத்தை நீ செய்யனும்னு கட்டாயம் இல்ல. ஹாஸ்பிடல்ல சொல்லி நானே அடுத்து என்ன ஃப்பார்மாலிட்டி படி செய்யணுமோ அதை செய்ய சொல்லி சொல்லிடுறேன். திரும்பி காரியம் சடங்குன்னு சொல்லி கடுப்பேத்தாத...." - சங்கீதாவின் முகம் பார்த்து கோவம் கலந்த அக்கரையில் சொன்னான் ராகவ்..

"நா... நான் சொல்ல வந்தது.." - சங்கீதா ஏதோ சொல்ல வர ராகவ் நிறுத்தினான்..

"உன் வாழ்க்கைல ஏழு வருஷத்துக்கு முன்னாடி ஒரு விபத்து நடந்துடுச்சி.. ஐ மீன்.. தப்பான ஆள் கூட கல்யாணம் நடந்துடுச்சி. அது உன் சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த விபத்து. அதன் விளைவா கடவுள் உனக்கு குடுத்தது ரெண்டு பொக்கிஷங்கள். அது உன் குழந்தைகள் ஸ்நேஹாவும், ரஞ்சித்தும்.... எவ்வளவோ நல்ல குணங்கள் இருக்குற ஆம்பளைங்களுக்கு கூட நல்ல பொண்டாட்டி அமையுறதில்ல, ஆனா எவ்வளவோ மனக்கசப்பு குடுத்தும் நீ ஒரு நல்ல மனைவியா குமாருக்கு இருந்திருக்கே. சீரியஸ்லி ஸ்பீக்கிங் நீ ஊரைக் கூட்டி 'நான் துக்கத்துல இருக்கேன்'னு எதுக்கு சொல்லணும்?, அப்படி செய்துதான் ஆகணும்னு என்ன கட்டாயம்?" கோவமாக கேள்வி எழுப்பினான் ராகவ்....

"செய்யலைனா நாலு பேரு தப்பா பேசுவாங்கடா.."

"அந்த நாலு பேரு யாரு?..."

"செப்பா.. ஏண்டா புரிஞ்சிக்க மாட்டேங்குற?.." - ஒவ்வொரு முறையும் இப்படி ஏதாவது ராகவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலைக்கு சங்கீதா தள்ளப்படுவாள், அப்போது அவனை ஒன்றும் சொல்ல முடியாமல் அவள் தவிக்கும் தவிப்பு அவளுக்கு மட்டும்தான் தெரியும். இருப்பினும் அவளின் ஆழ் மனதில் அவன் காமிக்கும் அக்கறையை எண்ணி மௌன சந்தோஷம் அடைவாள்....

"எனக்கு உடனே எதுவும் சொல்ல முடியல, கொஞ்ச டைம் வேணுன்டா."

எவ்வளவு டைம் வேணுன்னாலும் எடுத்துக்கோ, உன்னை அமைதி படுத்திக்குற விஷயங்களைப் பத்தி மட்டும் யோசி. கூடவே நீ கொஞ்ச நாளைக்கு உன் வீட்டுல தனியா இருக்க வேணாம், என் கூட IOFI காம்பஸ் உள்ளேயே தங்கிக்கோ." - ராகவ் பேசும்போது குறுக்கிட்டாள் சங்கீதா..

"வேணாம் ராகவ், நான் யாருக்கும் பயப்படல. நான் என் வீட்டிலேயே தங்கிக்குறேன். அங்கே இருந்தே வேலைக்கு போய்டு வரேன். பசங்களை ஸ்கூலுக்கும் அனுப்புவேன். நீ இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி எனக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு பண்ணு. அது போதும். மத்தபடி...." - சில நொடிகள் எதுவும் பேசாமல் இருந்தாள் சங்கீதா.

"ஹ்ம்ம்...ஏன் நிறுத்திட்ட? சொல்லு.. மத்தபடி..."

"மத்தபடி எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா நீ எப்போவுமே இருக்கியேடா... அதுக்கு மேல எனக்கு வேற என்ன வேணும்?" - இதை சொல்லும்போது கண்களை இருக்கி மூடி கண்ணீர் வழிய அவன் தோள்களில் சாய்ந்தாள்.... அவனுடைய சராவாக.


எந்த ஒரு மண வலிக்கும் இயற்கையான மருந்து நேரம்தான். காயமான நேரங்கள் நாட்களை கடந்து மெல்ல மறைந்தது. நாட்கள் வாரங்களாகியது. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு வேலையிலும் வாழ்க்கையிலும் ஓரளவுக்கு பழைய பக்குவம் அடைந்த நிலைக்கு வந்தாள் சங்கீதா. ஒவ்வொரு நாளும் காலை வேலைக்கு கிளம்பும்போது ராகவ் சடங்கு சம்பிரதாயங்களுக்கு குடுத்த விளக்கத்தை எண்ணி அவனை வியப்பாள். அவனுடைய ப்பிராக்டிகலான பேச்சு அவளுக்கு பிடித்திருந்தது. ஒவ்வொரு நாளும் அவள் நேரத்துக்கு சாப்பிடுகிறாளா, நன்றாக தூங்குகிறாளா, குழந்தைகளுடன் பத்திரமாக இருக்கிறாளா என்று பத்து இருவது முறையாவது ஃபோன் செய்து கேட்டு விடுவான் ராகவ். இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது பேசிக் கொள்ளாமல் அவர்களது கண்கள் உறங்காது.

இடையிடையே சங்கீதாவுக்கு ஆறுதலாய் அமைந்தது அலுவலகத்தில் ரம்யாவின் தோழமையான பேச்சும், நிர்மலாவின் சகோதரி பாசமும், சஞ்சனாவின் அன்பும் அரவனைப்பும்தான். அதிலும் சஞ்சனா, சம்பவம் நடந்த நாட்களில் உண்மையாகவே உடன் பிறந்த அக்காவாக எண்ணி சங்கீதாவுடன் அவளது வீட்டில் தங்கி இருந்து குழந்தைகளுடன் விளையாடி அவளுக்கும் ஒரு துணையாக இருந்து வந்தாள்.

ஒரு வாரக் கடைசியில் மாலை நேரம் மிகவும் அழகாக இருந்தது. சங்கீதா வீட்டின் காலிங் பெல் சிணுங்க யாரென்று பார்த்தால் சஞ்சனா நின்றிருந்தாள்.

"ஹாய் அக்கா" - பிரகாசமாய் சிரித்தாள் சஞ்சனா..

"ஏய்.. வா... வா... உள்ள வா..." - உற்சாகமாய் வரவேற்றாள் சங்கீதா..

"இன்னிக்கி உங்க கிட்டயும் ராகவ் கிட்டயும் முக்கியமா ஒரு விஷயம் பேசணும்னு வந்திருக்கேன். ரகாவ்கும் ஃபோன் பண்ணி வர சொல்லி இருக்கேன். வந்தானா இல்லையா?" - handbag கழட்டி வைத்து தலை முடியை இருபுறமும் சரி செய்தபடியே பேசினாள்....

"இல்லையே அவன் எதுவும் வரேன்னு என் கிட்ட சொல்லல, என்ன விஷயம் டி..."

"அதெல்லாம் இருக்கட்டும்.. முதல்ல நீங்க எப்படி இருக்கீங்க? அதை சொல்லுங்க.."

"இப்போ கொஞ்சம் பரவாயில்ல, சீக்கிரமே பழைய சந்கீதாவா மாறிடுவேன். ஹா ஹா.. நீ எப்படி இருக்கே?"

"எனக்கென்ன குறைச்சல், மகாராணி மாதிரி இருக்கேன்."

"எப்படி வந்த?"

"என் பாய் ஃபிரண்ட் ட்ராப் பண்ணார்கா.."

"பாய் ஃபிரண்டா?" - குறும்பாய் சிரித்து கேட்டாள் சங்கீதா.

'வேற யாரு நம்ம அர்னால்ட்தான்" - என்று சொல்ல..

"அம்மா நான் கிளம்புறேன்மா...." - என்று ஜகா வாங்கிக் கொண்டு வேகமாய் கிளம்பினார் டிரைவர் தாத்தா..

"ஹா ஹா.. பாவம் டி, அந்த மனுஷனை ஏண்டி இப்படி படுத்தி எடுக்குற?"

"இதெல்லாம் ஒன்னும் இல்லக்கா, கொஞ்ச நாளைக்கி முன்னாடி ஒருத்தன் கிட்ட ராத்திரி விளையாடினேன் பாருங்க ஒரு விளையாட்டு. பயபுள்ள அழுதுட்டான்." - சின்ன குழந்தை அழுவது போல முகபாவனை செய்து பேசினாள் சஞ்சனா.



No comments:

Post a Comment