Monday 24 August 2015

"ப்ளீஸ்... சொன்னா கேளுங்க,... இதையெல்லாம் படிக்காதீங்க". 9

“என்ன்ங்க போதுமா? நான் குளிச்சிட்டு வந்திட்றேனே?”

“சரி. வா. ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போம்”

இருவரும் சேர்ந்து குளித்துவிட்டு, சேர்ந்து கட்டிலில் படுத்தோம். அடித்துப் போட்டது போல அப்படியொரு தூக்கம் இருவருக்கும்.

காலையில் எழுந்து, அரக்க பரக்க வீட்டு வேலைகளை முடித்து, அவரை கடைக்கு அனுப்பி விட்டு TV பார்த்துக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சேனலில் ‘ நமக்கு நாமே பார்த்து சேர்ந்துகொள்ளும் திருமணம் சிறந்ததா? பெற்றோர், மற்றோரும் பார்த்து சேர்த்து வைக்கும் திருமணம் சிறந்ததா? என்ற பட்டி மன்ற தலைப்பில், பட்டி மன்ற தலைவராக சுகி சிவம் பேசிக்கொண்டிருக்க,...... பட்டி மன்றம் நடந்துகொண்டிருந்த ஊர் பேரைப் பார்த்தேன்,.... திருச்சி.



பட்டி மன்றப் பேச்சை பார்த்துக் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, நினைவுகள் பின்னோக்கி சுழல,.....எனக்கு நிகழ் காலச் செயல்கள் நினவிழந்தது.

என் பெயர் மீனாட்சி சரவணன். இப்பவும், அப்பவும் ....சுருக்கமா மீனா.

1990-ல் நடந்த கதையை சொன்னாதான், இப்ப எங்களைப் பத்தி நீங்க புரிஞ்சுக்க முடியும்.

திருச்சியிலே, மரக்கடை ஏரியாவிலே எங்க வீடு. அப்பா தாலுகா ஆஃபீஸ்லே கிளர்க். அம்மா ஹவுஸ் வைஃப் என் உடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன். மற்றும் ஒரு தங்கை.

அண்ணன் கம்யூட்டர் சயின்ஸ் முதல் வருஷம் படிக்க, தங்கை மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். எனக்கும் என் அண்ணனுக்கும் மூன்று வயது வித்தியாசம். தங்கைக்கும் எனக்கும் 7 வருட வித்தியாசம்.

என் கனவர் சரவணனோட அப்பா மெயின் கார்டு கேட்டுகிட்டே ஸ்டுடியோ கடை வச்சிருந்தார். சரவணனின் அம்மாவும் ஹவுஸ் வைஃப் தான். சரவணனுக்கு ஒரே ஒரு தங்கை மட்டுமே. ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள்.

1990-லே பத்தாவது வகுப்பு ரிசல்ட் வந்தன்னைக்கு, பேப்பர்ல ‘நான் பாஸ்’ன்னு பாத்துட்டு, அதை உடனே எங்க வீட்ல கூட சொல்லாம, ஆர்வத்துல. தில்லை நகர்ல இருந்த சரவணனோட வீட்டுக்குப் பின் பக்க ரோட்டில் இருந்த கொன்றை மரத்தின் அடியில் நின்று, அங்கிருந்து ஸ்கூட்டி ஹார்ன் அடிச்சு சிக்னல் கொடுத்து அவனை வரச் சொன்னேன்.

அவன் வீட்டு பின் பக்க ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, ஐந்து நிமிட்த்தில், அடிக்கடி அவன் வீட்டுப் பக்கம் திரும்பிப் பார்த்தபடியே வந்தான். அருகில் வந்த அவன் முகத்தைப் பார்த்தேன். கண்கள் கலங்கி சிவந்திருக்க, முகம் அழுது வடிந்திருக்க, முகம் இறுகிப் போய் இருந்தது. பொங்கி வந்த அழுகையையும் அடக்கி,கண்களைத் துடைத்துக் கொண்டே,....

” என்ன மீனா இந்த நேரத்துல வந்திருக்கே?”

“ஏன்,.... நான் வரக் கூடாதா?”

“இல்ல,.... நாம ரெண்டு பேரும், நீ காலைல ஸ்கூல் போறப்பதான் சந்திச்சுக்குவோம். ஆனா இன்னைக்கு சாயந்திரம் மணி 4 ஆகப் போகுது, இப்ப போய் என்னைப் பாக்க,..... அதுவும் என் வீடு இருக்கிற தெருவுக்கே வந்திருக்கியே என்ன விஷயம்?”

“நான் சொல்ற விசயம் இருக்கட்டும். நீ ஏன் டல்லா இருக்கே? உன் வீட்டுல ஏதாவது பிரச்சினையா?”

அழுகை பொங்கி வெடிக்க,“ஆமாம் மீனா. நான் அடங்காப் பிடாறியாம், பொருக்கியாம், ஊர் சுத்தியாம், உதவாக் கரையாம், பொருக்கியாம், பொரம்போக்காம், தர்த்திரம் புடிச்சவனாம், விளங்காதவனாம்.”

கண்ணீர் தழும்பி நின்ற அவன் கண்களை என் கைகுட்டையால் துடைத்துவிட்ட நான், “அழாம சொல்லுடா. என்ன நடந்தது?”

“பணம் கட்ட பேங்குக்கு போய் இருந்த நான்,..... பைக்கை பேங்க் முன்னாடி பூட்டு போட்டு நிறுத்தி இருந்தேன்.பேங்க் முன்னாடி பூட்டி நிருத்தி இருந்த பைக் திருடு போய்டுச்சு. அதுக்காக ‘இப்படி பொருப்பில்லாத தெரு நாயா இருக்கியே. தண்டச் சோறு,....படிப்புதான் வரலை.வீட்டுக்கு அடங்குன புள்ளையா பொருப்பாவாவது இருப்பன்னு பாத்தா,..... தறுதலை இப்படி பண்ணிட்டு வந்து நிக்குதேன்னு திட்டி ஆத்திரத்துல, அப்பா பெல்டால அடிச்சு விளாசி.... இனி ஒரு நிமிஷம் இந்த சனியன் புடிச்ச நாய் இந்த வீட்டுல இருக்க்க் கூடாது அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்லு’ன்னு அம்மா கிட்டே என் காதில் கேக்கும்படியா சொல்ல,....... நானும் ஆத்திரம் வந்து, ‘இனி இந்த வீட்ல இருக்க நானும் தயார் இல்ல’ன்னு ஆத்திரமா சொல்லி,....என்ன பண்றதுன்னு தெரியாம அழுதுகிட்டு நின்னுகிட்டு இருந்தப்பதான் நீ வந்த.

“சரி...சரி.... பின்ன,..... கொஞ்சமா நஞ்சமா,.... முப்பதாயிரம் ரூபா பைக்க, ஒரு நொடியில தோலைச்சிட்டு வந்து நின்னா, வீட்டுல சும்மா இருப்பாங்களா. எங்க வீட்ல அடிச்சு தோலையெ உரிச்சிருப்பாங்க. ஆனா, உங்க வீட்ல திட்றது கொஞ்சம் ஓவர்தான். எனக்கே நாக்க புடுங்கிட்டு சாகலாமுன்னு அவமானமா இருக்கு. ஆம்புளப் புள்ள நீ உனக்கு ரோஷம் இருக்காதா? சரி...என் ஸ்கூட்டியை எடு. கல்லணை பூங்காவுக்கு போய் மத்ததை பேசிக்கலாம்.”

“பைக் மட்டும் தொலைல மீனா!”

“அப்புறம்,....”

“பைக்கோட சேர்ந்து, பைக் பின்னாடி பெட்டியில வச்சிருந்த, ஒரு லட்ச ரூபாயும் போச்சு.”

“அடப் பாவி....இப்படி தொலைச்சுப் புட்டு ஏமாந்து நிக்கிறியே. போலீஸ் ஸ்டேசன்ல கம்ளைன்ட் பண்ணலாம் வா.”

“விடு மீனா, போலீஸ் தேடி தொலைஞ்சு போன பைக்கையும், பணத்தையும் கண்டு பிடிச்சுட்டா, என்னை என் அப்பன் அடிச்ச அடியும், திட்டின திட்டும் இல்லைன்னா ஆயிடப் போகுதா? என் அப்பனுக்கு இப்படிதான் வேணும். சரியான கஞ்சன். இத்தனை வருஷத்துல எனக்கு நல்லதா ஒரு ஃபேன்ட், சர்ட் எடுத்துக் கொடுத்த்தில்லே தெரியுமா? அவரோட பத்தும் பத்தாதம இத்துப் போன பழைய ட்ரெஸ்சத்தான் நான் இப்பவும் போட்டுட்டு இருக்கேன்.”

“சரி.... திட்டின திட்டுக்கும், அடிச்ச அடிக்கும், பையன் கோவிச்சுகிட்டு எங்காவது போய்டப் போறான்னு உங்க வீட்ல தேட மாட்டாங்களா?”


“அம்மாதான் பாசக்காரி,.... அழுதுகிட்டு இருப்பா. அப்பன் எங்கே தேடப் போறான்? தொலைஞ்சது சனியன்’னு இருப்பார். என் தங்கச்சி வந்து தேடுனாதான் உண்டு.அவ என்னை தேடி வர்றதுக்குள்ளே, நாம கிளம்பிடணும். அவள பாத்துட்டா பாசத்துல என் வைராக்கியம் சுக்கு நூறா உடைஞ்சிடும்”

பேசிக் கொண்டே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து சரவணன் ஓட்ட,..... நான் பின்னால் தலைக்கு முக்காடிட்டு உட்கார,.... கால் மணி நேர பயணத்தில் இருவரும் கல்லணையை அடந்தோம்.

கல்லணைப் பூங்காவில் ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு மா மர நிழலில் போடப்பட்டு இருந்த பெஞ்சில் உட்கார்ந்து, ஸ்வீட் பெட்டியைத் திறந்து, ஒரு ஸ்வீட் எடுத்து அவன் வாயிலே ஊட்டிவிடப் போக, என் கையைத் தடுத்தவன்,....

”என்ன விஷயம் சொல்லு மீனா?”

“இன்னைக்கு என்ன நாள்?’

“புதன் கிழமை.”

“அதில்லை. மக்கு. நல்லா யோசிச்சுப் பாரு?”

“ம்....அம்மாவாசை.”

“’இத’ வச்சுகிட்டு நான் என்னதான் பண்றதோ? என்று நான் பொய்யாய் சலித்துக் கொள்ள,....

“எனக்கு ஒன்னும் தெரியலைடி மீனா. எனக்கு என்னோட பிரச்சினை. சஸ்பென்ஸ் வைக்காம நீதான் சொல்லேன்”

“இன்னைக்கு உன் லவ்வரோட ரிசல்ட் வந்த நாள்!”

நினைவு வந்தவனாக, சந்தோஷத்தை கண்களில் காட்டி,“ஆமான்டி மீனா, மறந்தே போய்ட்டேன். மாலை மலர் பேப்பர் வந்திருக்கும். நீ பாஸாயிட்டதானே?”



‘ஆமாம்’ என்று தலையாட்டிய நான், அவன் வாயிலே ஸ்வீட்டை ஊட்டி விட்டு,”உன் காதலி பரீட்சையிலே பாஸாகி இருக்கா. அதை அவ கூட செலிப்ரேட் பண்ண, நீ என்ன கிஃப்ட் வாங்கி வச்சிருக்கே?”

“ நான் என் இதயத்தையே உனக்கு கொடுத்திருக்கேன். அதை விட பெரிய கிஃப்ட எதிர்பாக்கிறியா?”

“ ச்சீய் போடா,....நான் ஸீரியசா கேக்கிறேன். நீ காமெடி பண்ணிகிட்டு,....”.

என் முகத்தைப் பார்த்துக் கொண்டே ஒரு நிமிடம் யோசித்தவன்,” சாரிடி,....உனக்கு இன்னைக்கு ‘ரிசல்ட் வர்ற நாள்’ன்னு எனக்கு நெனைப்பே இல்ல மீனா. அதுவும் இல்லாம எங்க வீட்டுல எல்லோரும் சேர்ந்து அடிச்சு, அசிங்க அசிங்கமா திட்டினதைக் கேட்டு நான் ரொம்ப மூட் அவுட்ல இருக்கேன். நாளைக்கு உனக்கு என்னோட கிஃப்ட் நீச்சயம் உண்டு”

“என்ன கிஃப்ட் சொல்லேன். சஸ்பென்ஸ் வைக்காத, என்னால காத்திருக்க முடியாது” என்று சொல்லி சிணுங்க,....

“நாளைக்குதான் அதை உன் கிட்டே நேர்ல காமிப்பேன். ஆனா, இப்ப,.... என்று என் முகத்தை சில வினாடிகல் ஆசையாகப் பார்த்தவன், நான் எதிர்பார்க்காத நேரத்தில் என் முகத்தை அவன் கைகளில் ஏந்தி, என் உதடுகளை உள்ளிழுத்து சப்பி, உறிஞ்சி முத்தம் கொடுக்க,....

எனக்கு கிறு கிறு என்று தலை சுத்தியது, யாராவது பார்த்து விட்டால் என்ன செய்வது என்று பயம் வர, வீட்டுக்கு போகலாம் வாடா,..... நான் பாஸான விசயத்தை என் வீட்ல கூட சொல்லலை. முதல்ல உன் கிட்டே சொல்லனும்னு தோனிச்சு, அதான் வந்தேன். ஃப்ரன்ட் வீட்ல ரிசல்ட் பாத்துட்டு வந்திட்றேன்னு வீட்ல சொல்லிட்டு, நான் வந்து ரொம்ப நேரமாச்சு. என் வீட்ல என்னைத் தேடப் போறாங்க.வா போகலாம் இருட்டிடப் போகுது” என்று சொல்லி அவன் கை பிடித்து இழுக்க,...

பெஞ்சை விட்டு எழுந்து, என் கை கோர்த்து என்னுடன் சேர்ந்து இருவரும் நடந்தபடியே“ நாளைக்கு நான் என்ன தர்றேன்னு தெரிஞ்சிக்க உனக்கு ஆசை இல்லையா?”

“அப்போ இருந்துச்சு!. இப்போ இல்லை!!” என்று சொல்லி தலை குனிந்தேன்.

“புரியலையேடி.”

“நீங்க ஸ்வீட் சாப்பிட்ட வாயால, அதைவிட ஸ்வீட்டா ஒரு முத்தம் கொடுத்தீங்களே,... அது மறக்க முடியாத பெரிய கிஃப்ட்.”

“நீ ஊட்டி விட்ட இனிப்பின் சுவையா? இல்ல நான் ரசிச்சு ருசிச்ச உன் உதட்டோட சுவையா, எதுன்னு தெரியலை,..... இன்னும் என் உதட்டிலேயே இருக்குடி. போனஸா இன்னொரு கிஃப்ட் தரவா?!”

“ம்....அஸ்கு...புஸ்கு. அதுக்கு வேற ஆளப் பாருங்க.!”

“ஏய்....வேற ஆளப் பாத்துடுவேண்டி. அப்புறம் உனக்குதான் அஸ்கு....புஸ்கு.”

“விட்டா இப்படிதான் பேசிகிட்டே இருப்பீங்க,.... உங்களை!!!!!”.....என்று இழுத்து சொல்லி, ஆசை உந்த, வெக்கம் தடுக்க, சரவணனின் முகத்தைப் பிடித்து, அவன் கழுத்தில் கைகளைக் கோர்த்து, அவனோடு ஒட்டி நின்று உதடுகளைக் கவ்விக் கடிக்க,....

“ஆவ்....இஸ்...கடிக்காதடி”

“இன்னொரு ஆள பாத்துடுவீங்களா? அந்த அளவுக்கு உங்களுக்கு தைரியம் இருக்கா?”

“ஏய்....விடுடுடி.... ரொம்ப வலிக்குது.....இந்த ஜென்மத்துல வேறொருத்தியை மனசுல கூட நினைக்க மாட்டேன்..”

“அப்ப,....அடுத்த ஜென்மத்துல நினைப்பீங்களா?”

“தப்பா சொல்லிட்டேன்.என்னை மன்னிச்சிடு தாயே. உனக்கு புண்ணியமா போகும். எல்லா ஜென்மத்துலயும் நீதான்”

“அப்படி வாங்க வழிக்கு” என்று சொல்லி இருவரும் சேர்ந்து சிரித்து மகிழ்ந்து ஸ்கூட்டியை நோக்கி நடந்தோம்.


ஒருவர்:-உங்கள எதுக்கு எல்லாரும் அந்த அடி அடிச்சாங்க?!

அடி வாங்கியவர்:- டீ கடையில பால் ஆர்டர் பண்ணி, சூடு ஆறட்டும்னு பால் டம்ளர டேபிள் மேலே வச்சிருந்தேன்.... வச்சிருந்தேனா?....

ஒருவர்: ம்...

அடி வாங்கியவர்:-அப்ப அங்க வந்த பொண்ணோட தாவனி பால் டம்ளர் மேலே விழுந்துடுச்சு.....விழுந்துச்சா?...

ஒருவர்: ம்...

அடி வாங்கியவர்:-அதுக்கு நான் சொன்னேன்...தாவனிய கொஞ்சம் விலக்குங்க. நான் பால் குடிக்கணும்னேன்.

ஒருவர்: ?!?!?!

அடி வாங்கியவர்:-இது தப்பாங்க....இத சொன்னதுக்குதாங்க அடிச்சாங்க. மேல கிடக்கிற தாவனிய எடுத்துப் போட்டுட்டு பாலை குடிக்ககூட இந்த நாட்டுல உரிமை இல்லையாங்க?.....என்னவோ போங்க!!. நாடு கெட்டுக் கிடக்கு. நீங்க பாத்து பத்திரமா போங்க.





No comments:

Post a Comment