Thursday 2 April 2015

சுகன்யா... 89

முதல் நாளிரவு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல், குஷ்வந்த் சிங்கின் 'தி போர்ட்ரெய்ட் ஆஃப் எ லேடி' யைப் படித்துக்கொண்டிருந்த சம்பத், பின்னிரவு மூன்று மணியளவில்தான் தூங்க ஆரம்பித்தான்.

ஜன்னல் திரையையும் மீறி அறைக்குள் சூரியவெளிச்சம், மெலிதாக வந்து கொண்டிருந்தது. பொழுது விடிந்து மணி பத்தை நெருங்கிக்கொண்டிருந்த போதிலும் சோம்பேறித்தனமும் , தூக்க கலக்கமும், அவனை விட்டு முற்றிலுமாக நீங்காததால், அரைத்தூக்கத்திலேயே படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன்.

இளம் வெயில் அவன் உடலுக்கு இதமாக இருந்ததென்றாலும் போர்வையை தன் காலிலிருந்து கழுத்துவரை இழுத்து போர்த்திக்கொண்டான். இன்னைக்கு சண்டேதானே? சீக்கிரமா எழுந்து மட்டும் என்னத்தை வெட்டி முறிக்கப்போறேன்?


அரைமணி நேரத்துக்குப்பின் படுக்கையிலிருந்தவாறே கைகளை தலைக்கு மேல் உயர்த்தி சோம்பல் முறித்தான். நீளமாக ஒரு முறை கொட்டாவி விட்டான். வயிறு கபகபவென அவனுக்குப் பசித்தது. எது தப்பினாலும் தப்பிடுது. ஆனா நேரம் தவறாம, அலாரம் வெச்ச மாதிரி, பசி மட்டும் எப்படி கரெக்டா எனக்கு வருது? அவனுக்கு இந்த விஷயம் வியப்பைக் கொடுத்தது.

சம்பத்து... ஒருத்தன் ஆரோக்கியமா இருக்கறான்னா, அதுக்கு அறிகுறியே அவனுக்கு நேரத்துக்கு வர்ற பசிதாண்டா; எப்போதும் வெள்ளையாகச் சிரிக்கும் தந்தை நல்லசிவத்தின் முகம் அவன் கண்ணுக்குள் ஒரு நொடி வந்து போனது. அப்பாவோட சிரிப்பைப்பாத்து ஒரு மாசமாச்சு. மனதுக்குள் பாசம் எட்டிப்பார்த்தது.

உன்னைப் பாத்து ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்குதுடா. நீ என் கண்ணுலேயே இருக்கடா . வாராவாரம் எதாவது வேலையா சென்னைக்கு வர்றே. மாசத்துல ஒரு தரம், அப்படியே ஒரு நடை எங்களை எட்டிப்பாத்துட்டு போவக்கூடாதா? ரெண்டு நாளைக்கு முன் அம்மா செல்லில் புலம்பியதும் அவன் நினைவுக்கு வந்தது. அப்பா தன்னோட மனசுல இருக்கறதை சட்டுன்னு வெளியில சொல்ல மாட்டார். அம்மா என் மேல தன் உயிரையே வெச்சிக்கிட்டு இருக்காங்க; அதை தெனமும் நாலு தரம் சொல்லியும் காட்டுவாங்க. அவன் முகத்தில் ஒரு புன்சிரிப்பு எழுந்தது.

வீட்டுல இருந்தா, இந்த நேரத்துக்கு அம்மா தளர தளர பசும் நெய்யை உருக்கி ஊத்தி, வெண்பொங்கல், வடை, தேங்காய் சட்னின்னு, சுட சுட அமக்களமான ஒரு டிஃபனைப் பண்ணி என் கையில குடுத்திருப்பாங்க. பல வருடங்களாக நல்லசிவத்தின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலைபொழுது பொங்கல் வடையுடன்தான் விடியும். அவன் நாக்கின் சுவை மொட்டுகள் சட்டென விழித்துக்கொண்டன. பொங்கலின் சுவை நாக்கில் எச்சிலை ஊறவிட சம்பத் போர்வையை உதறிவிட்டு விருட்டென எழுந்து கட்டிலில் உட்கார்ந்தான். 


நேத்து ஈவினிங் பார்ட்டிக்கு போன ரமேஷ் திரும்பி வந்தானா? நிச்சயமாத் தெரியும். விடிகாலம் மூணு மணி வரைக்கும் அவன் வரலே. ஓசியில கிடைச்சா மூச்சு முட்டற வரைக்கும் குடிப்பான். மொடாக்குடியன்; நேத்தும் கழுத்து வரைக்கும் குடிச்சுட்டு வாந்தி எடுத்து இருப்பான்; அங்கேயே கட்டையை போட்டுட்டு இருப்பான்.

முன் தினம் மாலை ஏழுமணிக்கு அவன் ரூம் மேட் ரமேஷ், மழமழவென ஷேவ் பண்ணிய முகத்துடன், இடுப்பில் ஈர டவலுடன், உடலில் சோப்பு வாசனையுடன், சம்பத்தின் எதிரில் பரபரப்பாக வந்து நின்றான்.

"மாப்பு... நீயூஸ் தெரியும்லே? கடேசீல நம்ம சொட்டை வெங்குடுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடிச்சிடா. அதுக்காக இன்னைக்கு பார்ட்டி குடுக்கறான். நேத்து உன்னை நெறைய தடவை செல்லுல டிரை பண்ணானாம். உன் லைன் கிடைக்கலயாம். உன்னையும் கண்டிப்பா அழைச்சிட்டு வரச்சொல்லியிருக்கான். கிளம்புடா?" தெத்துப்பல் தெரிய சிரித்தான்.

"ப்ச்ச்ச்... அவன் சொட்டைன்னா, உன்னை என்னடா சொல்றது?"

"மச்சான்... முப்பது வயசுலே, என் தலையில இன்னும் நாலு முடியாவது பாக்கி இருக்குதுடா? அவன் சீப்பு வாங்கியே நாலு வருஷம் ஆச்சாம்... இந்தக்கதை தெரியுமா உனக்கு? ரமேஷ் தன் ஈரத்தலைமுடியை இருகைகளாலும் கோதி விட்டுக்கொண்டான்.

"வேற யாரையெல்லாம் கூப்ட்டுருக்கான்?"

"நம்ம கேங் மட்டும்தான்... வீ ஆர் ஆல் ஸ்பெஷல் இன்வைட்டீஸ்.."

"அப்றம்.. பார்ட்டில பிகருங்க உண்டா..." சம்பத் கூகுளில் எதையோ மும்முரமாகத் தேடிக்கொண்டிருந்தான்.

"நம்ம அக்கவுண்ட்ஸ்லேருந்து அந்த ஒட்டடைக்குச்சி வசுதா வர்றாளாம்... மணியோசை முன்னாடி வந்தா... யானை பின்னாடி வந்துதானே ஆவணும்? வசுவோட ஃப்ரெண்ட் குண்டச்சி கல்பனாவும் வரமாட்டாளா? கூடவே அவளுங்க கோஷ்ட்டியும் நிச்சயமா வந்துடும்.. அந்த கல்பனாவோட சைசு என்னான்னு டேரக்டா அவகிட்டவே கேட்டுடாலாம்ன்னு இருக்கேன்... நீ என்னா சொல்றே?"

"டேய் இவளுகளையெல்லாம் பிகருன்னு சொல்றேயே அதுப்புதானே உனக்கு?" சம்பத் நக்கலாக சிரித்தான்.

"மச்சி... நம்பளைப் பொறுத்த வரைக்கும் மேல ரெண்டு சாத்துக்கொடியும், கீழே உப்பலா ஒரு ஓட்டை வடையும் இருந்தா அவ பிகருதாம்மா.." ரமேஷ் வாய் முழுவதும் பல்லானான்.

"என்னை ஏண்டா உன் கூட சேத்துக்கறே? டொச்சுங்க பின்னாடி நான் எப்பவாவது ஜொள்ளுவுட்டு அலைஞ்சதை நீ பாத்திருக்கியாடா நாயே?" சம்பத் எரிந்து விழுந்தான்.

"மாப்பு... சும்மா அப்பாடாக்கர் மாதிரி பேசாதே; உன்னை நோட் பண்ணிக்கிட்டுத்தான் இருக்கேன்; பார்ட்டின்னா நாக்கைத் தொங்கப்போட்டுக்கிட்டு நாய் மாதிரி தலை தெறிக்க என் கூட ஓடியாந்தவன்தானே நீ? மேட்டரு இன்னான்னு தெரியலே; ஒரே குன்சா இருக்குது; கொஞ்சநாளா ஏண்டா தனியா உன் வண்டியை ஓரங்கட்டி பார்க் பண்றே?"

"வெறுத்து போச்சுடா..."

"காதுல பூ சுத்தாதே நயினா... இந்த வயசுல பொம்பளை வெறுத்துப் போச்சுன்னா... டவுட்டே இல்லாம ஒம்போதுன்னு சீல் குத்திடுவானுங்க... உஷாரா இரு..."

"அமுக்குடா... பார்ட்டிக்கு வர்ற அட்டு பிகருங்க எனக்கு அலுத்துப்போச்சுன்னு சொன்னேன்."

"என்னா மச்சான்... ஒரே சுஸ்தா இருக்கே? எவகிட்டவாவது கவுந்திட்டியா?"

"யெஸ்... அயாம் இன் லவ்..." சம்பத் முகத்தில் வெட்கத்துடன் சிரித்தான்.

"யார்ரா மாப்பு... இந்த ஊர்லதான் இருக்காளா?"

"பொண்ணுன்னா இவ பொண்ணுடா... பிகருன்னா இவ பிகரு; இக்கடச் சூடு..." சம்பத் முகத்தில் பெருமிதம் பொங்கிக்கொண்டிருந்தது.. லேப்டாப்பில் சுகன்யா வெண்மையாக சிரித்துக்கொண்டிருந்தாள்.

"மச்சான்... நெஜமாவே சூப்பர் டூப்பர் பிகருடா..." ரமேஷ் வாயைப் பிளந்தான்.

"வாயைப் பொத்துடா... கொசு... கிசு பூந்துடப்போவுது... இவ என் மாமா பொண்ணு..." ரமேஷின் வழுக்கையில் கடம் வாசித்தான் சம்பத்.

"மனசுல இருக்கறதை சொல்லிட்டியா?"

"ம்ம்ம்..."

"அவளும் ஓ.கே. ன்னுட்டாளாக்கும்?" பொறாமையில் அவன் கண்கள் விரிந்து சுருங்கியது.

"அவட் ரைட்டா மாட்டேன்னுட்டா..."

"அப்புறம் என்னா மசுருக்குடா... 'இக்கடச் சூடு'? ரொம்பத்தான் துள்றே?" ரமேஷ்க்கு இப்போது நிஜமாகவே எரிச்சலும், சந்தோஷமும் ஒன்றாகக்கிளம்பியது.

"என் ஆளு... இன்னொருத்தனை டீப்பா லவ் பண்றாடா; அவங்க ரெண்டு பேருக்கும் எங்கேஜ்மென்ட்டும் முடிஞ்சிடிச்சி" சம்பத் நிதானமாக பேசினான்.

"மாப்பு... உனக்கு மண்டையில ரெண்டு ஸ்குரூ லூசாயிடிச்சின்னு நினைக்கறேன்... ஜல்தியா டைட் பண்ணிக்க... இல்லேன்னா"

"இல்லேன்னா?"

"இதுக்கு மேல இங்க நின்னா... என் தலையில இருக்கற நாலு மசுருல ரெண்டு கொட்டினாலும் கொட்டிப்போயிடும்..." ரமேஷ் தன் தலையைச் சொறிந்து கொண்டு அவசரமாக அறையை விட்டு வெளியில் ஓடினான்.

ஹோவென ஓங்காரமான குரலில் நகைத்த சம்பத்தின் முகத்தில் சிரிப்புடன் இலேசாக விரக்தியும் படர்ந்தது. என் மனசுக்கு பிடிச்ச பொண்ணை நான் லவ் பண்ணக்கூடாதா? இவன் எதுக்கு இவ்வளவு காண்டாவறன்? என்னை பைத்தியம்ன்னு சொல்லாம சொல்லிட்டுப் போறான்? என்னோட உண்மையான காதலைப்பத்தி இந்த மயிரானுக்கு இன்னா தெரியும்? 


"டிங்க்...டிங்க்க்...டிங்க்..." வாசலில் காலிங் பெல் ஒலித்தது.

'யாராக இருக்கும்? ரமேஷ்கிட்டத்தான் வீட்டோட டூப்ளிகேட் சாவி இருக்கே? என்ன மசுருக்கு மணியடிக்கறான்..? தொறந்துகிட்டு வரவேண்டியதுதானே? இடுப்பில் லுங்கியை இறுக்கிக்கொண்டு வாசலுக்கு விரைந்தான் சம்பத். கதவைத் திறந்தவன் ஆச்சரியமானன். ராணியும் நல்லசிவமும் நின்று கொண்டிருந்தார்கள்.

"என்னம்மா? சொல்லாமா கொள்ளாமா வந்து நிக்கறீங்க?" பெற்றவர்களைக் கண்ட மகிழ்ச்சியில் மனம் கங்கை வெள்ளமாக பொங்கியது.

“ஏன்டா உன்னைப் பாக்கணும்ன்னா அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கிட்டுத்தான் வரணுமா?” பிள்ளையின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள் ராணி.



“அப்பா... எப்டி இருக்கீங்கப்பா... நீங்க வர்றீங்கன்னு தெரிஞ்சா ஸ்டேஷனுக்கு வந்திருப்பேன்ல்லா...”

“நேத்து சென்னையில ஒரு கல்யாணம்ன்னு வந்திருந்தோம்... உங்காத்தாக்காரி உன்னை பாத்தாதான் ஆச்சுன்னு ஒத்தைக்கால்லே நின்னா... தாம்பூலம் கூட வாங்கிக்கலே... கிளம்பி வந்துட்டோம்.” நல்லசிவம் பிள்ளையின் முகத்தை பாசத்துடன் பார்த்தார்.

"கொஞ்ச நேரத்துக்கு முன்னாடீ உங்க ரெண்டு பேரையும் நினைச்சுக்கிட்டேம்மா" பிள்ளை தாயின் இடுப்பைக்கட்டிக்கொண்டு கொஞ்சியது.

"சும்மா ஊத்தாதேடா நீ? நீ மொளை விட்டதுலேருந்து உன்னை நான் பாத்துக்கிட்டுத்தான் இருக்கேன்.." தாய் மகனின் கன்னத்தை வருடி ஆசையுடன் முத்தமிட்டாள்.

"நிஜம்மா சொல்றேம்மா... இன்னிக்கு ஞாயித்துக்கிழமையாச்சா? நீ பண்ற பொங்கல், வடை ஞாபகம் வந்திடிச்சிம்மா.."

"உன் புள்ளைக்கு நம்ம நினைவு வரலேடி.. நீ பொங்கற பொங்கல் ஞாபகம் வந்திச்சாம்... சந்தோஷம்தானே உனக்கு...?" நல்லசிவம் பேண்டிலிருந்து வேஷ்டிக்கு மாறிக்கொண்டிருந்தார். உள்ளத்தில் இருக்கும் நிறைவு முகத்தில் வருவதை அவரால் மறைத்துக்கொள்ள முடியவில்லை.

"பொங்கல்தானேடா வேணும்... இப்பவே நான் பண்ணிக்குடுக்கறேன்.."

"நீங்க குளிங்கம்மா... குளிச்சுட்டு ரெஸ்ட்டா உக்காருங்க; பத்தே நிமிஷத்துல நான் டிஃபன் வாங்கிட்டு வந்திடறேன்.." சம்பத் வேகமாக வெளியில் ஓடினான். 

"எங்கடா உன் ரூம் மேட் ரமேஷைக்காணோம்?" நல்லசிவம் தன் தலையின்கீழ் இரண்டு கைகளையும் செருகிக்கொண்டு, ஹாலில் வெறும் தரையில் படுத்திருந்தார்.

"நேத்து ராத்திரி எதோ பார்ட்டின்னு போனான்.. இன்னும் காணோம்..." ஒரு தலையணையை அவரிடம் நீட்டினான் சம்பத்.

"ம்ம்ம்... நீ போகலையாடா?" பார்ட்டின்னா எதையும் யோசிக்காமா எவ்வள்வு தூரம் வேணாலும் போறவனாசசே இவன்? மனதில் ஆச்சரியத்துடன், தன் கண்களை சுருக்கிக்கொண்டு மெல்லியக்குரலில் தன் மகனை உற்று நோக்கினார்.

"இல்லேப்பா. ஒரு மாசமாச்சு. பார்ட்டிகெல்லாம் போறதை நான் நிறுத்திட்டேன்."

"கேட்டீங்களா அவன் சொல்றதை? ரொம்ப சந்தோஷமா இருக்குடா எனக்கு.” தன் கணவரை பெருமிதத்துடன் பார்த்த ராணியின் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது.

"நீ உன் புள்ளையை மெச்சிக்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்டீ; வீட்டுலேருந்து கொண்டாந்த அந்த பொண்ணு போட்டோவை இவனுக்கு காமிச்சியா?"

கடந்த ஐந்து வருடங்களில் தன் ஆசை மகன் எத்தனை முறை பார்ட்டிக்கு போவதை நிறுத்தியிருக்கிறான்? காலையில் தண்ணியடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று சொல்பவன், அதே நாளில், அதே ராத்திரியில் மீண்டும் எத்தனை முறை திரும்பவும் தன் கையில் கிளாசை எடுத்திருக்கிறான் என்பது நல்லசிவத்துக்கு நன்றாகத் தெரியும்.

"உங்க பேக்லதான் வெச்சிருந்தீங்க. எழுந்து எடுங்களேன். வந்த எடத்துல நீளமா கையை காலை விரிச்சிக்கிட்டு, அனந்த சயனத்துல போஸ் குடுக்கறீங்க? பெத்தப்புள்ளைக்கிட்ட அன்பா, பாசமா ஒரு வார்த்தை பேசுவோம்ங்கற எண்ணம் உங்களுக்கு கொஞ்சமாவது இருக்கா?"

"சும்மாரும்மா... நீ எதுக்குமா எப்பப்பாத்தாலும் அப்பாவை வெட்டியா வெரட்டிக்கிட்டு இருக்கே?"

"கேளுடா... நல்லாக் கேளுடா நாலு வார்த்தை நல்லா உறைக்கற மாதிரி கேளுடா. உங்கம்மாளுக்கு நான் ரொம்ப எடம் குடுத்துட்டேன். ஒரு நாள் நிம்மதியா இருக்கவுடமாட்டேங்கறா? தொணப்பு தாங்கலே. எங்கேயாவது ஒழியணும் போல இருக்குதுடா...".

"சும்மாயிருங்கப்பா நீங்களும்.. நச்சு நச்சுன்னு கொறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க..."

"இதோ பார்டா... ஒண்ணு பண்ணு; இவளை உன் கூடவே கொஞ்ச நாளைக்கு வெச்சுக்கோ. அப்பத்தான் தெரியும் உனக்கு உன் அம்மாவோட பெருமை. நான் கொஞ்ச நாளைக்கு தனியா இருக்கணும்ன்னு நினைக்கறேன்." பேசிக்கொண்டே தன் தோள்பையிலிருந்து, போஸ்ட்கார்ட் சைசில் ஒரு புகைப்படத்தை எடுத்து சம்பத்திடம் நீட்டினார் நல்லசிவம்.

"ஒரு கல்யாணத்தைப் பண்ணி வெச்சுட்டு...உங்க கடமை முடிஞ்சதும் எங்கே வேணாப் போங்க... உங்களை யாரும் இங்க புடிச்சி கம்பத்துல கட்டி வெச்சில்லே.."

"நீ நில்லுன்னாலும் இன்னொரு தரம் நான் நிக்கப் போறது இல்லேடீ? நான் போனதுக்கு அப்புறம்தான் புரியும்..." நல்லசிவம் முனகிக்கொண்டார். சம்பத் தன் கையில் இருந்த புகைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். போட்டோவில் குறையே இல்லாமல்தான் இருந்தாள் அந்தப்பெண்.

"சம்பத்து இவளைப் புடிச்சிருக்காடா:? நமக்கு தூரத்து சொந்தம். நீர் நிலம்ன்னு ஒரு குறையும் இல்லே. வசதியா வளர்ந்த பொண்ணு. நாம மட்டும் என்னக்குறை வெக்கப்போறோம்? அண்ணன் அமெரிக்காவுல இருக்கானாம். இவளும் படிச்சிட்டு சென்னையில வேலை பாக்கறாளாம்." ராணியின் குரலில் ஆவலும் ஆர்வமுமாகப் பேசினாள்.

"இப்ப எனக்கு கல்யாணம் வேண்டாம்மா..." சம்பத் தன் தாயின் முகத்தைப் பார்க்காமல் சொன்னான். கையிலிருந்த புகைப்படத்தை தந்தையின் பக்கம் நகர்த்தினான்.

"சொல்றதைக் கேளுப்பா. சுந்தரி உன் பயோடாட்டவை அவ புருஷனுக்கு அனுப்ப சொன்னா. குமாரசுவாமி மேனேஜரா இருக்கற கம்பெனில நாலு எடம் காலியா இருக்காம். நீ வாங்கற சம்பளத்தை கரெக்டா மென்ஷன் பண்ணுன்னு சொன்னா. ஒரு போஸ்ட்டை உனக்கு வாங்கிடலாம்ன்னு சொல்றா."

"யார் தயவுலேயும் நான் இல்லே? சென்னைக்கு நான் வர்றதா இல்லே?"

"இப்படி மொரட்டுத்தனமா பேசினா எப்டீடா கண்ணு?"

"பின்னே எப்படி பேசணுங்கறே?" சலித்துக்கொண்டான் அவன்.

"எல்லாம் கூடி வர்ற மாதிரி இருக்கு. பெண்ணுக்குன்னு அவ பேருலேயே வீடு வாங்கி வெச்சிருக்காங்க. இப்போதைக்கு வாடகைக்கு விட்டு இருக்காங்களாம்."

"என்னை எவ்வளவுக்கு வெலை பேசியிருக்கே நீ?"

"டேய்... பெரிய அறிவாளி மாதிரி நீ பேசாதே.. கேட்டக்கேள்விக்கு நேரா பதில் சொல்லு... பொண்ணை புடிச்சிருக்கா இல்லையா?"

"நேரா சொன்னாலும் அதான்... கோணலாச்சொன்னாலும் அதான். எனக்கு இப்ப கல்யாணம் வேணாம்."

"ஏன்டீ... நீ மல்லுக்கு நிக்கறே? அவன் பொண்ணை பிடிக்கல்லேன்னா சொல்றான்.. கல்யாணம் இப்ப வேணாங்கறான்?" ஓய்வு பெற்ற சட்ட அறிஞர் நல்லசிவம் அவர்கள் பேச்சில் நுழைந்தார்.

"சரிடா இவளைப் பிடிக்கலைன்னா விடு. உனக்கு எவளையாவது பிடிச்சிருந்தா சொல்லு. நம்ம ஜாதியா இல்லேன்னாலும் பரவாயில்லே. அவளைப் பண்ணி வெச்சிடறோம்..." ராணியின் குரல் கரகரப்புடன் வந்தது.

"ஆமாம்டா... இப்பத்தான் நம்ம குடும்பத்துலேயே ஜாதி, மொறை, ஊரு, உறவுன்னு பாக்காம வெளியே போக ஆரம்பிச்சாச்சே?" நல்லசிவம் சம்பத்தை நெருங்கி உட்கார்ந்து கொண்டார்.

"யாரை சொல்றீங்கப்பா?"

"வேற யாரைப்பத்தி சொல்றாரு. உன் மொறைப்பொண்ணு சுகன்யாவை, ஊர் பேர் தெரியாத ஒரு ஓட்டாண்டிக்கு தாரை வாத்து குடுங்கறாங்களே... அந்தக்கூத்தைப் பத்தித்தான் சொல்றாரு."

"ப்ச்ச்ச்... முடிஞ்ச கதைக்கு மோளமும் தாளமும் எதுக்கு?" ஒரேயடியாக அலுத்துக்கொண்டான் சம்பத்.

"நீ சொல்றே முடிஞ்சிப்போச்சுன்னு. போன வாரம் உங்கம்மா அந்த சுந்தரியை உண்டு இல்லேன்னு ஒரு சண்டை வலிச்சிட்டு வந்திருக்காடா; அந்தக்கதை தெரியுமடா உனக்கு?"

"ஏம்மா இப்படி பண்ணே? சுகன்யாவுக்கு தெரிஞ்சா அவ நம்பளைப்பத்தி என்ன நினைப்பா?"

"பொத்திக்கிட்டு கிடடா? அவ கிடக்கறா நேத்து பொறந்தவ... என் ஒறவு அறுந்து போச்சேன்னு நான் கவலைப்படறேன்... நீ என்னடான்னா சுகன்யா உன்னைப்பத்தி என்ன நினைப்பான்னு கவலைப்படறே? என்னைக்காவது, அப்பனுக்கோ இல்லே புள்ளைக்கோ என் மேல ஒரு உண்மையான அக்கறை இருந்தாத்தானே? என் மனசுல இருக்கறது உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சமாவது புரிஞ்சாத்தானே?"

தன் கைகளை ஆட்டிப்பேசியவளின் தலை முடி அவிழந்து அவள் தோளிலும் மார்பிலும் விழுந்தது. ராணி வேக வேகமாக கைகளை உயர்த்தி தன் கூந்தலை அழுத்தி முடிந்துகொண்டாள். புடவை முந்தானை விலகியது. இடுப்பின் வெண்மையும், குழைவான தொப்புள் குழியும், அடிவயிறும் மின்னலாகப் பளிச்சிட்டன. ராணியின் எதிரில் உட்கார்ந்திருந்த சம்பத்தால், தன் தாயின் பளிச்சிட்ட இடுப்பை பார்க்க முடியாமல் சட்டெனத் தன் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்

அம்மாவுக்கு அம்பத்தஞ்சு வயசுன்னு சொன்னா நம்பமுடியுமா? இந்த வயசுலேயும் எவ்வளவு இளமையா, அழகா இருக்காங்க? அப்பாவுக்கு என்ன புத்தி கெட்டுப்போச்சா? அப்பாவுக்கு அறுபது வயசு ஆயிடிச்சே? இவங்களுக்குள்ள இன்னும் தாம்பத்ய உறவு நீடிச்சுக்கிட்டு இருக்குமா? அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நடுவுல உடலுறவுல எதாவது பிரச்சனை இருக்குமா? எப்பவும் இவங்களை விட்டுட்டு ஓடத்துடிக்கறாரே மனுஷன்?

அப்பாவுக்கு என்னக்கேடு? இன்னும் வாட்ட சாட்டமாத்தனே இருக்கார்? தலை மொத்தமா நரைச்சுப்போச்சு... முடி நரைச்சா பொம்பளை ஓடம்பு மேல இருக்கற ஆசை விட்டுப்போயிடுமா என்ன? அறுவது வயசு ஆனா ஒரு ஆம்பளை தன் குஞ்சை அறுத்து போட்டுடணுமா என்ன? மனதுக்குள் திடீரென இந்தக்கேள்வி எழுந்ததும், கூடவே அவன் முகத்தில் ஒரு நமட்டு சிரிப்பும் எழுந்தது.

டேய்... சம்பத்.. உனக்கு ஏண்டா இந்த வம்பெல்லாம்? எங்க கதையில நீ உள்ளே வராதேன்னு உன் அம்மாதான் உன் மூஞ்சியிலே அடிச்சாளே?

நான் சந்தோஷமா இருக்கணும்ன்னு அவங்க நினைக்கறப்ப, என்னைப் பெத்தவங்க சந்தோஷம இருக்கணும்ன்னு நான் நினைக்கக்கூடாதா? அடுத்தக் கேள்வியும் அவன் மனதில் எழுந்தது.

தாய் அறியாத சூல் எங்கேயாவது இருக்கிறாதா? தன் மகனின் பார்வை போன இடத்தையும், சட்டென அவன் தன் விழிகளை திருப்பிக்கொண்டதையும், தன் கேள்விக்கு பதிலளிக்காமல் எதையோ மனதில் குருட்டுத்தனமாக யோசித்துக் கொண்டிருப்பதையும், முடிவில் அவன் உதட்டில் மலர்ந்த புன்னகையையும் கண்ட ராணிக்கு எரிச்சல் வந்தது.

"டேய்... உங்கப்பாவுக்கும் எனக்கும் நடுவுல எந்தப்பிரச்சனையும் இல்லே.. ஒடம்புல இன்னும் தெம்பு நிறைய இருக்குது... இன்னைக்கும் நாங்க மனசார சந்தோஷமாத்தான் இருக்கோம். உன் மனசுல இருக்கறதை சொல்லுடான்னா... எங்களைப்பத்தி நீ ஏண்டா கவலைப்படறே?"

"அம்மா..." தன் தாய் எவ்வளவு புத்திசாலி... என் மனசுல ஓடறதை அப்படியே படம் படிச்சுட்டாளே? சம்பத் மிக அழகாக வெட்கப்பட்டான். அவன் முகம் சிவந்து போனது.

"சொல்லுடா கண்ணு... உன் மனசுக்குள்ள யாரையாவது நெனைச்சிக்கிட்டு இருக்கியா?"

"என் மனசுல இருக்கறவளும் நம்ம ஜாதிதான்... நீரு நெலம், ஊரு ஒறவு எல்லாம் அவளுக்கும் இருக்குது. ஆனா அவளை உன்னால உன் மருமவளா ஆக்கிக்கமுடியாதும்மா" சம்பத் தன் தலையை குனிந்து கொண்டான்.

"டேய்.. உன் அம்மாவைப் பத்தி உனக்குத் தெரியாதுடா? எந்த விஷயத்துலேயும் கடைசீ வரைக்கும் முட்டிப்பாக்கறவடா நான்."

"உன்னைப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்..." மகன் சிரித்தான்.

"என்னடா தெரியும் உனக்கு என்னப்பத்தி?" சிடுசிடுத்தாள் தாய்.



"பின்னே... சுந்தரி மாமிகிட்ட சுகன்யாவை எனக்கு ஏன் கட்டிக்குடுக்கலேன்னு சண்டையும் போட்டுட்டு... அவங்க ஹஸ்பெண்ட் கம்பெனியிலேயே எனக்கு வேலையும் ஏற்பாடு பண்ணறயே? சம்பத் தன் தாயை ஆசையுடன் கட்டிபிடித்துக்கொண்டான்.

"இதுதாண்டா உறவு... அதை நீ நல்லாப் புரிஞ்சுக்கோ. பெத்தவளை நக்கலடிக்கறியா நீ? அவளுக்கு உறவு மொறை எதுவும் மறந்து போயிடல. நான் உரிமையா சண்டைப்போட்டதை சுந்தரி தப்பாவே எடுத்துக்கலே."

"அப்புறம்..."

"அக்கா.. என் பொண்ணு என் கையை மீறி போயிட்டா. எனக்கு புடிச்சவனை நான் கட்டிக்கிட்டேன்.. இப்ப எந்த மூஞ்சை வெச்சிக்கிட்டு அவ வழியிலே நான் குறுக்கே நிக்கறதுன்னு என் கையை பிடிச்சிக்கிட்டா.."

"சரிம்மா நான் சும்மா கலாய்ச்சேம்ம்மா... கோச்சிக்காதேம்மா?"

"நீ என்னை கொஞ்ச வேணாம்... முடிவா என்ன சொல்றே?"

"என்னைத்தப்பா நினைக்காதம்மா. நான்... நான் நம்ம சுகன்யாவைத்தான் லவ் பண்றேம்மா. கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளைத்தான் பண்ணிக்குவேன். இல்லேன்னா கடைசிவரைக்கும் இப்படியே இருந்துடறேம்மா."

சம்பத்தின் குரல் தழுதழுத்தது. விருட்டென நகர்ந்து
தன் தாயின் மடியில் தன் தலையை புதைத்துக்கொண்டான். அவன் உடல் இலேசாக குலுங்கியது.

வேதாளம் திரும்பவும் முருங்கை மரம் ஏறிடிச்சி... நல்லசிவம் தன் இரு கைகளையும் தலையில் வைத்துக்கொண்டார். 


No comments:

Post a Comment