Saturday 16 August 2014

கனியும் ஒரு காதல்... 2


பாண்டியன் எக்ஸ்பிரஸ் களைப்புடன் மதுரை வந்து சேர்ந்தது....யாரோ.. மெல்ல தலை தடவி தன்னை எழுப்புவதாக உணர்ந்தான் மோகன்... முழித்தான்... கண் எரிந்தது... கண்ணை கசக்கி..முழிக்க தேவதையாய்... அகிலா.. "ம்ம் என்ன விடிய விடிய குடியா... இப்படி தூங்கினால்..எழுந்திருப்பா...." "இல்லை அகிலா... நான் திருச்சி வந்ததும் படுத்திட்டேன்..." "தெரியும்......நான் கவனித்தேன்..." சொன்னவள் நாக்கை கடித்துக் கொண்டு திரும்பிக்கொண்டாள்.... மோகனின் மனசில் பட்டாசு வெடித்தது... என்னை கவனிக்கிறாள்... நான் என்ன செய்கிறென் என்று கவனிக்கிறாள்.. இதற்கு பெயர் தான் காதலா... பட்டென்று எழுந்தவன்...

"என்ன செய்யனும் சொல்லு...." "முதல்ல இறங்கனும்...லக்கேஜ் செக் பன்னனனும்... ஹோட்டல் காரன் பஸ் அனுப்பி இருப்பான்...எல்லாரையும் ஏத்தனும் கொண்டு போய் அங்க சேக்கனும்... வா சீக்கிரம்...." வெளியே வந்தனர்.. எல்லா லக்கேஜ் செக் பன்னி... இரண்டு கோட் சூட் போட்ட ஆசாமிகள் வந்தனர்...அகிலாவிடம் பேசினர்....அகிலா மோகனை காட்டி ஏதோ சொல்ல...அவர்கள் அவனிடம் வந்தனர்... "வணக்கம், எங்கள் ஹோட்டல் சார்பா உங்களை எல்லாம் வரவேற்கிறோம்.. வெளிய பஸ் இருக்குது.... எல்லாரையும் நீங்க தான் ஏத்தனும்... உங்களுக்கு தான் உங்க ஆளுங்க தெரியும்....நாங்க பஸ் கிட்ட நிற்கிறோம்..." சொல்லிவிட்டு நகர்ந்தனர்.... எல்லாரையும் நான் வண்டில ஏத்தனுமா... தேர இழுக்குற மாதிரி தான்... போ... குழு குழுவாய் நின்றவர்களிடம் போய் சொல்லி ஏற்றி.. அனுப்பும் முன் உன் பாடு என் பாடு ஆகி விட்டது மோகனுக்கு....எல்லாரும் ஏறியவுடன் அவன் மட்டும் பஸ்ஸில் ஏறாமல் அகிலாவைத் தேட.. அவள் அந்த கோட் ஆசாமிகளுடன் பேசிக் கொண்டிருந்தாள்.. அவனைப்பார்த்து கைஅசைத்து அழைத்தாள்.. இரண்டு பஸ் கிளம்ப... விசில் சத்தம் பறந்தது.. ப்ஸ்ல் இருந்து... கொண்டாட்டம் ஆரம்பம்...அப்போதே... "பஸ் போகுது அகிலா... நீ வரல..." "வா நாம இவங்க கூட கார்ல முன்னாடி போயிடலாம்... ப்ரொகிராம் என்னன்னு இவங்களுக்குஸ் சொல்லனும் அவங்களுக்கு வேலை இப்ப இல்லை.. நமக்கு இப்ப இருந்து ஆரம்பம்.. திரும்ப போகிற வரை..." காரில் அவளுடன் பின் சீட்டில் ஏற.. கோட் ஆசாமி ஒருத்தன் மட்டும் முன் சீட்டில் அமர.. இன்னோருத்தன் அங்கயே நின்று கொண்டான்... இருவரும் பின் சீட்டில் அமர்ந்தவுடன்... அகிலா மோகனப் பார்த்து..." தாங்க்ஸ்.." என்றாள் "எதற்கு..." "ம்ம்ம்...குடிக்காம இருந்தற்கு..." "நான் குடிக்கலைன்னு எப்படி தெரியும்..." "தெரியும்பா.. நீ குடிக்கலை..." "எப்படி.... "அவள் கண்களைப் பார்த்தான்.... அதில் இரவு முழுவதும் தூங்காத அறிகுறியாய்... கண்ணில் ஒரு சோர்வு..சிவந்து... "ஹேய் அகி.. நீ தூங்கலையா.... ஏன்பா... நான் தான் சொன்னேன்ல... நம்பலை என்ன... அப்படித்தானே...." "இல்லை அதுக்கு இல்லை " தடுமாரினாள்... இதற்குள் முன் சீட் ஆசாமி... "சார் உங்கள் புரோகிராம் என்னன்னு சொன்னீங்கன்னா.. அதுக்கு தகுந்த மாதிரி ஏற்பாடு பண்ணிடுவேன்..." "எங்க புரோகிராம் 11.30 ஸ்டர்ட் ஆகும்... இனிடியல் மீட்டிங்க்.. அப்புறம் லஞ்ச்ஸ் அப்புறம் 3.00 மணிக்கு டீலர்ஸ் மீட்...5.00 மனி வரை.. மருபடி 6.00 மனிக்கு ஆரம்பித்து 7.30 வரை அப்புரம் டின்னர் காக்டெயில்.. இது இன்னிக்கு ப்ரொகிராம்... நாளைக்கு உள்ளத அப்புரம் சொல்லுறென்...." "உங்க ஃபார்மாலிட்டீஸ் என்ன.." மோகன் கேட்க... "சார் வெல்கம் ட்ரிங்க்ஸ் போன வுடன்... breakfast ... non payable... then puffat lunch.... cultural programme 7.00 to 9.00.... we will be ready 7.30 for dinner & cocktile.....in between tea and snacks as you require....." இதற்குள்.. கார் ஹோட்டல் வந்து விட்டது... பஸ் இன்னும் வரலை... காரை விட்டு இறங்கியதும் இரண்டு பெண்கள் வந்து பூச்செண்டு ஒரு ஒற்றை ரோஜா.. கொடுத்து வரவேற்றனர்.... ரிசப்சன்.. அருகே இருவரும் போய்... ரூம் அலாட்மண்ட்.. லிஸ்ட் எடுத்து கொடுக்க...பஸ் வந்து நின்றது.... எல்லரையும் கூல் டிரிங்க்ஸ் கொடுத்து சாவி கொடுத்து.. .....ப்ரெக்ஃபாஸ்ட்.. ஃப்ரிப்பா... அங்க போய் சாப்பிடுங்க... ரூம்ல சாப்பிட்டா.. உங்க கணக்கு.. சொல்லி சாவி கொடுத்தான் மோகன்..... "என்ன மோகன் அவனுக ரூம்ல சாப்பிட்டா என்ன... " "அகி.. அங்க ரெஸ்டாரண்டுல சாப்பிட்டா.. அது ஃப்ரி.. ரூம்ல ஆர்டர் பண்ணினா... தாளிச்சிடுவான்.... மெனு பாத்தேன்... பொங்கல் 250/- ரூபாய் பார்த்தேன்... நான் நினக்கிறேன் 50 ரூபா.. பொங்கல்...200 ரூபா சர்வீஸ் சார்ஜ்... பாரேன் ஒவ்வொறு ரூமும் எவ்வளவு தூரத்தில இருக்குன்னு.....அது ரூம் இல்லை வீடு... வீடு மாதிரில்ல கட்டி விட்டிருகான்....." "ரூமுக்கும் இங்க ரெஸ்டாரண்டுக்கும் 1/2 கிமீ இருக்கும் போல.. ..".சொன்னால் அகிலா... "ஆமா மலை மீது.. இருக்குற இடத்துல எல்லாம் கட்டி இருக்கிறான்... ஒன்னு கூட மாடி இல்லை எல்லாம் தனித் தனி வீடு மாதிரி..நல்லா இருக்குல்ல... நல்ல செலக்ட் பண்ணிருக்க அகிலா... " "என்ன மோகன் என்ன நினக்கிற... நீ" "இல்லை என் ஹனி மூன இங்க கொண்டாலாமான்னு நினக்கிறேன்...". பட்டென்று சொன்னான் மோகன்...அகிலாவை பார்த்தவாரு....சிறு புன்னகையுடன்... அகிலா முகம் சிவந்தாள்... மனசுக்குள் பொறுக்கி அத ஏண்டா என்ன பார்த்து சொல்லுற...ராஸ்கல்... நான் என்ன சொன்னாலும் கேப்பியாடா.. குடிக்கலை நீ சந்தோசமா இருக்குடா... கேப்பியா நான் என்ன சொன்னாலும்... ம்ம்ம்..ம்ம்ம். சொல்லு....மனதிற்குள் சொல்லி கொண்டவள்.. அந்த கடைசி வார்த்தை அவளை அறியாமல் வெளியே விழுந்தது.....

"ம்ம்.. சொல்லு ..." மோகன்.. முகத்தில் புன்னகையுடன்..." ம்ம்ம் என் காதலியுடன் இங்க ஹனி மூன கொண்டாலாம்னு நினைகிறேன்...." திருப்பி அழுத்தாமாய் சொன்னதும் தான் அகிலா இந்த உலகுக்கு வந்தாள்.... "என்ன சொன்ன....." "நீ என்ன செவுடா.... எத்தனை தடவை சொல்லுறது......" அகிலாவுக்கு அவன் சொன்னது இனித்தது... ம்ம்ம்ம்ம் படவா நீ அப்படி நினச்சி தான் இங்க வந்தியா.... நான் யார்னு தெரிஞ்சும் இன்னும் ஏண்டா சொல்லாம இருக்குற....சொல்லுவானா.... ம்ம்ம் இல்லை நான் சொல்லனுமா... நான் எப்படி அவன் கிட்ட நானா சொல்லுறது... அவன் சொல்லட்டும்... தெரியாத மாதிரி இன்னும் நடிப்போம்.. எப்ப சொல்லுரான்னு பாப்போம்..... பட்டிகாட்டுல இருந்து வந்த உனக்கு இவ்வளவுன்னா.. நான் இங்கயே பட்டனத்தில் குட்டி கரனம் போட்டவள்... ம்ம்ம் என் கிட்டயா....உனக்கு தண்ணி காட்டுறென் பார்.. அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டாள்.... மோகன்..". என்ன யோசனை.. நீயும் அப்படித்தான் நினக்கிறாயா.. அகிலா....." "சேச்சே இந்த இடத்திலயா... போடாங்க்......நான்... நான்...." அவள் சொல்லி முடிக்குமுன் செல் போன் அலறியது... எம்.டி.... செல்போனை காதில் வைத்தபடி அவனைப் பார்த்து சீக்கிரம் குளித்து சாப்பிட வா.. என்பது போல் சைகை செய்து விட்டு... அவள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்றாள்..... ஒரே வீடு மாதிரி ஆனால் நாலு வாசல்கள்... ஒவொவ்ன்றும் ஒரு திசை பார்த்து.. ஒவ்வோறு அறையும் ஒரு பெட் ரூம் ஒரு ஹால்....மற்றும் குளியல் அறை... பாத் டப்புடன்.... முன்புரம் பூச்செடிகள்.. அப்புரம் ஒரு புல் வெளி அதில் ஊஞ்ச்ல்.. மற்றும் டேபிள் மாதிரி மற்றும் நாற்காலி... ஒரு பார்ட்டி கொண்டாடும் அளவிற்கு....அந்த வீட்டில் தங்கும் அனைவரும் பங்கு கொள்ளும் விதமாக... இப்படியே ஒவ்வோறு வீடும்.... கொஞ்சம் தள்ளி நீச்சல் குளம்.... சில வெளி நாட்டினர்.. குளித்துக் கொண்டும் சன் பாத் எடுத்துக் கொண்டும் இருந்தனர்.....அகிலாவின் அடுத்த அறையே அவனுக்கும்... அவனுடன் சின்ன லெவலில் மார்கட்டிங்கில் உள்ள ஒரு அச்சிஸ்டட் சேல்ஸ் மேனஜர்...தன் டிராலி ரூமுக்கு வந்ததும் பாட்டில்களை பத்திரமாக செக் பன்னி அங்கிருந்த அலமாறியில் வைத்து பூட்டினான்.....மோகன்.. மடமடவென்று குளித்து கிளம்பி... நேராக... அகிலா தங்கியிருந்த அறைக் கதவை தட்டினான்.... அந்த குண்டு பெண் அகிலாவுடன் வந்தவள் தான் கதவை திறந்தாள்.. தலைய நீட்டி என்ன.. என்றாள்.... "அகிலா இல்லையா..... ம்ம்ம் " "இரு வராங்க...". சொன்னவள் கதவை மெள்ள மூட எத்தனிக்க... மூடும் முன் கவனித்தான்... ம்ம்ம்ம்ம்ம் அற்புதமான அருமையான காட்சி.......ம்ம்ம் அகிலா பெட்டிகோட்டுடன்.... பிரா மட்டும் போட்டு... எல்லாம் அளவாய்.. ஓன்றும் மித மிஞ்சி இல்லாமல்....அழகு பதுமையாய்... 32 28 32 ..... ம்ம்ம் மயக்கும் அழகு துவும் பிரா பெட்டிக் கோட்டில்... ஒரு வினாடி தரிசனம் .. கதவு மூடியது.... இந்த காமிரா.... இருக்குள்ள... அதனுடைய ஷ்ட்டர் திறந்து மூடுமுன்.. காட்சிகளை பதிவு செய்யுமே அது மாதிரி அந்த கோலம் அந்த நிலை... அவன் இதயத்திற்குள் அப்படியே கண் என்கிற காமிரா... மூலம்.. என்ன இமை என்ற அந்த ஷ்ட்டர் மூட மறந்தது நிஜம்....பதிவு பண்ணி உள்ளே நிரந்தரமாக பிரிண்ட் போட்டு.. படமாய்....வைத்துக் கொண்டது.... ரூமுக்குள்... அகிலா.. அவளை கேட்டாள்.. யார்பா.... உன் மோகன் தான்..... அந்த உன் அதை கொஞ்சம் அழுத்திச் சொன்னாள் அவள்..... அகிலா..". ஏண்டி அறிவு இருக்கா.. நான் கண்னாடி முன்னால இப்படி நிக்கிறேன்.. கதவ திறக்க போறியே..." "இல்லைடி அவன் பார்க்க வாய்ப்பில்லை..." அகிலா.. மனசுக்குள்... பார்த்திருப்பானோ... எனது இந்த கோலத்தை பார்திருப்பானோ.... மடச்சி நான் இப்படியா அவுத்து போட்டுக்கிட்டு மீண்டும் அங்கிருந்து அவள் வாசல் கதவைப் பார்த்தாள்.. அவள் நின்றிருந்தது அறையின் இடபுறம்... அவள் கதவு இரண்டு கதவுகள் கொண்டது..முதலில் திறப்பது இடது புற கதவு தான்.... ச்ச்ச்ச்ச்சீ... அங்கிருந்து பார்த்தால்.... கதவைப் பார்த்தாள்... உடல் ஒரு கணம் ஆடியது கதவைத் திறக்கும் போது என்ன தான் மறைத்து நின்றாலும் அவன் உயரத்திற்கு வெகு சுலப்மாக அவளை பார்த்திருப்பான்... உடல் ஒரு கணம் கூசியது... மறுகணம்... உச்சங்காலில் இருந்து ஒரு பரவச உணர்வு மெள்ள ஏறி... அவள் உச்சந்தலையில் அறைந்தது... பார்த்திருப்பான்... பார்த்திருக்கிறான்... ம்ம்ம்ம்.. பார்த்திருக்கனும்... பாக்கனும்... இதய துடிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் ஏறி அவளுக்கே கேட்டது... "என்னடி அப்படியே நிக்கிற.. ம்ம் கிளம்பு அவன் வேற வெளிய நிக்கிறான்...." மோகன் வெளியே நிற்கிறான்.. பார்த்தும் பார்காதது மாதிரி... அவன் வெளியே நிற்பதே ... அவளுக்கு உடல் முழுவதும் கூசியது...சுவற்றை கிழித்து அவன் கண்கள் அவளை பார்பது மாதிரி.....மள மளவென்று புடவை கட்டினாள்... தலையை வாரி பொட்டு வைத்து...5 நிமிட்ங்களில் ரெடியாகி... கொஞ்சம் அக்கரையாய் கண்ணாடியில் சரி பர்ர்த்து.... வெளியே வந்தவளை... கண் விழுங்க பார்த்தான்... மோகன்..... 5 நிமிடம் முன் பார்த்த அந்த அரைகுறை கோலம் அவன் கண்களில்..வந்து இப்போது இருக்கும் நிலையையும் ஒப்பிட்டு பார்த்தது... மனது..... ஒரு உஷ்ண மூச்சு விட்டான்.. மோகன்..... "வா மோகன்.." அவனை பார்த்தாள்.. அவன் விழுங்கும் பார்வையை பார்த்தாள்... புரிந்து விட்டது அவளுக்கு.. மனசு சிலிர்த்தது... உடல் ப்றப்பது போல்... பார்த்திருக்கிறான்.. திருடன்.. முழிக்கும் முழிய் பாத்தாலே நல்லா தெரியுது....படவா.. ரசிக்கிறாயா... ம்ம்ம்ம்ம்ம்ம்... என்னை அப்படி பார்த்தாயா... மனசு அவன் மனசுடன் பேசியது... நான் நல்லா இருக்கேனா.. ம்ம்ம்ம் .. சொல்லுடாஆஆ.....மனம் ஆர்பரித்தது... "வாவ்.. அகி... ம்ம்ம்ம்ம் சான்ஸே இல்லை... என்ன இப்படி... ம்ம்ம் போங்க....நீங்க தான் இன்னிக்கு ஹால் ஆப் ஃபேம் ஆக போறீங்க...." அவன் பாராட்டு சொற்கள் அவள் மனதில் புகுந்து.. வெளியே வந்தது... புன்னகையாக.... "ஈஸ்.. இட்... தாங்க்ஸ்.. மோகன்... " அவள் கண்களாலும் நன்றி சொல்ல... ரெஸ்டாரண்ட் நோக்கி இருவரும் இணையாக நடந்தனர்.... அப்சரஸ் மாதிரி அகிலா நடந்து வர அவள் அருகில் மோகன் இணையாக..... ரெஸ்டாரண்டில் நுழைந்தவுடன்... அங்கிருந்த கூட்டம் எல்லாம் அவங்க ஸ்டாஃப் தான்... ஒரு முறை அனைவரின் கண்களும் அவர்கள் மேல் பதிந்து விலகியது.... சில ம்ம்ம்ம் பெருமூச்சு... சில பொறாமை... சில பையன் மடக்கிட்டான்... சில... இவளை இப்படியே சுவத்துல சாத்தி.....ம்ம்ம்ம்.. பார்வைகளின் கூர்மையை தாங்க முடியாமல் ... அகிலா.. கொஞ்சம் சங்கடமாய் நெளிய.. மோகன்.. உடனே ஒரு சீட்ட புடிச்சு அவளை உட்கார வைத்தான்.. இரண்டு பேர் எதிர் எதிரே அமரக்கூடிய அதில் ஒரு வெளி நாட்டு காரன் உட்கார்ந்திருந்தான்.. ஒரு சீட் காலி... அதில் அவளை உட்கார வைத்தான்.. மற்றவர்கள் பார்வையில் அவள் படாதவாறு அவளை மறைத்து நின்று கொண்டான்.... அங்க எக்ஸ்டிரா சீட் போடுற வழக்கம் இல்லை போல.. இது என்ன சரவண பவனா... உடனே ஒரு சேரை கொண்டு வந்து போட....இருவருக்கும் சேர்த்து ஆர்டர் பன்னிட்டு சும்மா அப்படியே நின்றான்.... அகிலாக்கு அவன் செய்கை ஒவ்வொன்றும் பிடித்திருந்தது... ம்ம்ம்ம் என்னடா... என் அழக யாரும் பார்க்க கூடாதா... அவ்வளவு..பொஸசசிவ் ஆ நீ.. ம்ம்ம்... சாரி... நான் உனக்காத்தான் இந்த மாதிரி டிரஸ் போட்டேன்.... இப்படி இவனுக கார்த்திகை மாத நாய் மாதிரி பார்பாங்கன்னு தெரிஞ்சிருந்தா... கண்டிப்பா இப்படி டிரஸ் பன்னி இருக்க மாட்டேன்... சாரி டா... மனம் அவனிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டது.... எதிர் சீட்டு வெளி நாட்டுக்காரன் அப்பத்தான் இட்லி சாம்பார ருசிச்சு சாப்பிட்டு கொண்டு இருந்தான்... அதற்குள் அவன் ஆர்டர் பண்னியது வரவும்.. அகிலாவிடம் "அகிலா நீ சாப்பிடு.. நான் அப்புரம் சாப்பிடுரென்...." "வாடா நீயும் அப்படியே ..." "என்ன கையேந்தி பவன்ன்னு நினைச்சியா... இங்க ஒரு மரியாத இருக்கு... காப்பாத்திக்கனும்...நீ சாப்பிடு.. நான் வெயிட் பன்னுரெண்"....அவள் அருகில் நின்று கொண்டான்...அவள் கொஞ்சம் இட்லி எடுத்து சாப்பிட... அவன் அவளையே பார்த்துக் கொண்டு..... இருந்தான்..... அவளுக்கு கொஞ்சம் கூட பிடிக்க வில்லை சாப்பிட.. அதுவும் மோகனை விட்டு விட்டு... எனக்காக எப்படி நிக்கிறான்.. என்னை பாதுகாக்க வந்த காவலன் மாதிரி.. ம்ம்ம்ம்...அவ்வளவு பிடிக்குமா என்னை உனக்கு... ம்ம்ம்ம்.. மனசு அலை பாய.. விரல்கள் இட்லி சாம்பாரில் அலைந்து விளையாடிக் கொண்டிருந்தன.... "என்ன அகிலா சாப்பிடு.. சீக்கிரம் இன்னும் 10 நிமிசத்துல நாம அங்க இருக்கனும்... இவனுகளுக்கு முன்ன நாம அங்க இருக்கனும்... சாப்பிடு.. " அவன் வற்புருத்தலில் ஒரு இட்லியை எடுத்து சாப்பிட்டவள்.....அப்படியே வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.... "எனக்கு பிடிக்கலை மோகன்...." "என்ன பிடிக்கலை இட்லியா அப்ப பொங்கல் சாப்பிடு.. இல்ல தோசை ஆர்டர் பன்னுரென்...." எதிர் சீட்டு வெள்ளைக்காரன் இப்பத்தான் இட்லி சாம்பாரை முடித்து காபி ருசிச்சு சாப்பிட்டான்... அவன் சாப்பிடும் விதத்தை பார்த்தால்....மோகனுக்கு நெட் ல் படித்த ஓன்று ஞாபகம் வந்தது... இரண்டு பிசினஸ் மேன் இருவரும் சைனாகாரகள்... ஆளுக்கு ஒரு டீ ஆர்டர் பன்ணி விட்டு... 1மணி நேரம் பேசி முடித்து.... அந்த பிசினஸ் டீல் முடியும் மட்டும் சிப் சிப்பா அந்த ஒரு டீ ய குடிச்சு.... டீல் முடிஞ்சு கிளம்பும் போது டீ கப்பை காலி செய்வார்களாம்... அதாவது ஒரு டீ ல ஒரு பிசினஸ் பேச்சு... ( நம்ம ஆளுக அதுக்குள்ள ஒரு புல் பாட்டில முடிச்சுட்டுவான்...ரயில்ல பண்ணின மாதிரி.. பாவிகளா ..) ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ.. டீ ஒன்று தான்.... அது மாதிரி அந்த வெள்ளைக்காரன் தனது காபிய ரசிச்சு ரசிச்சு குடித்தான்....அவனுக்கு வேற வேலை இல்லை ஆனா மோகனுக்கு... அதற்குள் போன் அடிக்க.. அகிலா எடுத்தாள் எம். டி தான்.. அரெஞ்மெண்ட் ப்ற்றி விசாரித்தார்.... பட்டென்று எழுந்தவள் கை கழுவி விட்டு.". நீ சாப்பிட்டு வா மோகன் நான் மீட்டிங்க் ஹாலுக்கு போறென்..." கிளம்ப...அவளுடன் அவனும் நடந்தான்... "என்னடா சாப்பிடலையா...." "இல்லை வா நான் அப்புரம் சாப்பிடுறென்... வா போலாம்....." "சாப்பிடுடா.. பிளீஸ்......" "வா அகி..நேரமானா... எம் டி உன்னைத்தான் திட்டுவார்.. வா.. நான் இல்லாமல் அங்க ஒரு வேலையும் ஆகாது.. வா...." மோகன் முன்னால் நடந்தான்... அவள் தயங்கி தயங்கி சங்கடமாய் அவனை பின் தொடர்ந்தாள்..... மனசு சங்கடமாய்.. நான் கொஞ்சம் முன்னால் கிளம்பிருந்தால் சாப்பிட்டிருப்பேல்ல....உனக்கு சாப்பிட நேரம் கிடைச்சிருக்கும்ல்ல....மனசு அவளை குத்தியது.. இந்த அலங்காரம்... அவனுக்காகதான்.. ஆனால் அது அவனை பட்டினி போட்டது தான் அவளுக்கு.. கசந்தது.... எம் டி என்னத்தானாடா திட்டுவார்...உனக்கு என்ன... அவர் என்ன திட்டினா நீ தாங்க மாட்டியாடா... ம்ம்ம் சொல்லு....மனம் அவனுக்காக கசிந்தது... அவள் அவனை பின் தொடர்ந்து நடந்தது அனைவரின் கண்களையும் உருத்தியது... .சில இளவட்டங்கல் மட்டும் அதை ரசித்தது... ம்ம்ம் நல்ல ஜோடி மச்சி.... பாரேன் அவன் பொண்டாட்டி மாதிரி அவன் கூப்பிட்டதும் அவன் பின்னால ஓடுறா.... ம்ம்ம்ம்ம் நடத்து மாப்பிள்ளே நடத்து.. நாங்க இருக்கோம்..... உனக்கு... வாழ்த்தியது.....அவர்கள் மனம்....அது தான் வாலிபம்.. மீட்டிங்க ஹால்... இருவரும் நுழைந்தனர்.... மோகன்... உடனே தன் வேலய ஆரம்பித்தான்.....சீட் அரஞ்ச்மெண்ட்.... மைக் அரேஞ்ச்மெண்ட்... அப்புரம் ஸ்டேஜ்.... ப்ரொஜெக்டடர்....அதனுடன் லாப் டாப்.... இணைப்பு... டெஸ்டிங்.... மணி... 9.45... ஒவ்வொருவராய் வர ஆரம்பித்தனர்..... 9.50.. எம் . டி வந்துட்டார்.. அவர் எப்பவுமே ஷார்ப்... டைம்.... 10.00 மணிக்கு மீட்டிங்க் தொடங்கியது...... இனி கொஞ்சம் ரிலாக்ஸ்... இன்னும் 1 மணி நேரம்.. பேச்சு நடக்கும்.. அப்புரம் .. ஒவ்வொருவரும் தங்கள் கருத்தை சொல்ல ஒரு நேரம்.. அப்புறம் டீ... அப்புரம் மறுபடியும்.... அப்புறம் 1.15 லன்ச்... பிரேக்... மறுபடியும் 2.30க்கு அரம்பம்.... 5.30க்க் முடியும்.... 4.30 க்கு அகிலா ஒரு ப்ரசண்டேசன் பண்ணனும்.... ஹாலில் ஹோட்டல் சூப்பர் வைசர் மோகனை அழைத்தார்... "சார் கொஞ்சம் வரீங்களா....." "என்ன...." "வாங்க ஒரு முக்கியமான விசயம்... " அகிலாவைப் பார்த்தான்.... போ.. என்பது மாதிரி கண்ணக் காட்ட... அவர் பின்னால் போனான்.... பக்கத்தில் இருந்த ஒரு ரூமை திறந்தார் ... உள்ளே அழைத்துச் சென்றார்....அது ஒரு வாடிக்கையாளர்கள் தங்கும் அறை தான்.. ஆனா இப்ப யாரும் இல்லை.. காலியாக இருந்தது... அங்கிருந்த டீப்பாயில்... இட்லி பொங்கல்.. தோசை..வடை....காபி... "என்ன சார் இது...." "நீங்க காலைல சாப்பிடலைன்னு மேடம் சொன்னாங்க.. அது தான் இங்க எடுத்திட்டு வந்திட்டோம்...அங்க சாப்பிடறத் இங்க சாப்பிடுங்க..." என்ன சார்...."" "நார்மலா இப்படி பண்ண மாட்டோம் சார்... ஆனா மேடம் எங்களுக்கு ஸ்பெசல்...... அவங்க தான் சார் கடைசில பில் செட்டில் பண்ணனும்... அது தான் அவங்க சொன்னா எதுவும் செய்ய எங்களுக்கு ஆர்டர்...." "அவங்களும் தான் சரியா சாப்பிடலை.. நேரம் ஆச்சுன்னு.. பாதிலயே கிளம்பிட்டாங்க."... "சார்.. நீங்க சாப்பிடுங்க... முதல்ல.... " "சரி எனக்கு இட்லி தோசை போதும்... பொங்கல் தனியா எடுத்து வச்சிடுங்க... மேடம் வரச் சொல்லுறென்...." சாப்பிட ஆரம்பித்தான்.. மனதில்....அகி... என்ன விரும்புராயாடி...எதுக்குடி இந்த கவனிப்பு.. நான் சாப்பிடாமல் இருந்தால் உனக்கு வலிக்குதா... அடிப் பாவி... மாசத்துல பாதி நாள் இப்படித்தானடி பேச்சுலர் லைஃப் ஓடுது... அது தெரிஞ்சா.. என்ன பண்னுவ பா... ம்ம்ம்ம் அவசரமா எந்திருச்சு.. குளிச்சு... சாப்பிட நேரம் இருந்தா டிபன்.. இல்லை மதியம் சேர்த்து வைத்து கட்டிறது.. இது தான எங்க வழக்கம்... இது என்னம்மா புதுசா..... புருசனை சாப்பிட வைக்கிற மாதிரி..... நான் அந்த அளவுக்கு கொடுத்து வைத்தவனா அகி...உன் அன்பைப் பெற......ம்ம்ம்ம்ம்ம்.... 10 நிமிடத்தில் சாப்பிட்டவன்.. காபி குடித்து எழுந்தான்....

"சார் வெயிட் பன்ணுங்க... அவங்களை அனுப்புறென்....." மீட்டிங்க் ஹால் போனான்....அகிலாவை சைகை காட்டி அவன் அருகில் அழைத்தான்... வந்தவளிடம்..... "என்ன நான் சாப்பிட்டா மட்டும் போதுமா.... அகிலா.... போங்க.. உங்களுக்கு பொங்கல் வச்சிருக்கேன்.. நீங்க சாப்பிட்ட லட்சனம் தெரியும்... போ போய் சாப்பிட்டு வா.. நான் பாத்துக்குறென்..... " மரியாதை ஆரம்பித்து அப்புரம் உரிமையில் குறைந்ததை அகிலா கவனித்தாள் அகிலா எதுவும் பேசாமல் அந்த ரூமில் நுழைந்தாள்.டீப்பாயில் இருந்த பொங்கலை மெல்ல எடுத்து... சாப்பிட ஆரம்பித்தாள்.... பக்கத்தில் மோகன் சாப்பிட்டு மிச்சம் வைத்த கொஞ்சம் தோசை இருந்தது... மெள்ள சுற்றும் முற்றும் பார்த்தாள்... சூப்பர் வைசர்...டிவி பார்த்துக் கொண்டிருந்தான்... மோகன் எச்சில் தட்டில் இருந்த அந்த தோசைய மெள்ள எடுத்து சாப்பிட்டாள் அகிலா...மனம் சிலிர்த்தது... எவ்வளவோ சாப்பிட்டிருக்கிறோம்... இது மட்டும்... இவ்வளவு சுவையாய்.... ஏன் அவன் எச்சில் இதில் இருப்பதாலா...இல்லை இங்க தோசை நல்லா இருக்குமா... மனம் விழித்தது.... அதே நேரம் ஏதோ கேட்க மெதுவாய் கதவு திறந்து வந்த.. மோகன்....அகி அவன் தட்டில் இருந்து எடுத்து சாப்பிடுவதை...பார்த்ததும்..அவன் மனம் ஆனந்த கூத்தாடியது.... அடி என் காதலியே அகி.... நீ நீ... என்னை என்னை.. விரும்புகிறாயா.... ம்ம்ம் நிசமா.. நான் பார்பது... இல்லை தோசை நல்லா இருக்குன்னு ச்ச்ச்சீ மடையா.. அவள் ஆர்டர் பன்ணினா... ரெஸ்டாரண்டே இங்க வரும்.... அவ...அவ... என் காதலி... என் காதலி..என் மனைவி....மனசு ஆர்பரித்தது......உடல் நடுங்க ஆரம்பித்தது... மெள்ள கதவைசாத்தியவன்... அப்படியே திரும்பினான்... மோகன்.... .............. அகிலா சாப்பிட்டுவிட்டு... சூப்பர்வைசரை அழைத்தாள்..... வந்தவன்..." மேடம் நீங்க தப்பா நினக்கலைன்னா ஒன்னு சொல்லட்டுமா...." "என்ன பரவாயில்ல சொல்லுங்க....." "எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... நீங்கள் வாழ்கையில் நினத்தது நடக்க.... "சொன்னவனை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.... "நீங்க இரண்டு பேரும் made for each other mam..... என்ன அப்படி பாக்குறீங்க .. நான் இந்த வேலைல இருக்கும் போது எத்தனையோ ஜோடிகளை பார்த்திருக்கேன்.. பல விதமா... ஆனா உங்க இருவரையும் மாதிரி நான் பாக்கலை... நல்ல ஜோடி நீங்க இருவரும்...." "ம்ம்ம் இல்லை நான்.... " "ம்ம் நீங்க இன்னும் அவர் கிட்ட ப்ரபோஸ் பன்னலன்னா.. உடன சொல்லிடுங்க.. வேற யாராவது கொத்திக்கிட்டு போயிட போறாங்க.." "எப்படி .. நீங்க...." "மேடம் உங்க ரெண்டு பேர் கண்ணிலும் காதல் நல்லாவே தெரியுது... நீங்க என் தங்கை மாதிரி இருக்கீங்க அதனால சொல்லுறென்...இங்க சாப்பிட வந்ததும் அவர் என்ன சொன்னார் தெரியுமா..." "என்ன சொன்னார்....." நீங்களும் தான் சரியா சாப்பிடல்ன்னு வருத்தப்பட்டார்....அதனால தான் பொங்கலை மட்டும் தனியா எடுத்து வச்சார்..நீங்க அவர் சாப்பிடலைன்னு என்னிடம் சொல்லி டிபன் அரேஞ் பண்ணீங்க... ஒரு கெஸ்டா நான் உங்களை பார்கலை...என் தங்கையா பாக்குறென்.... சொல்லனும்னு தோணுச்சு.. சொல்லிட்டேன்... தப்பா இருந்தா.. மன்னிச்சுக்கங்க... பிளீஸ்.....அப்புரம் தோசை நல்லா இருந்துதா... " அவன் கேட்க.... அகிலாவுக்கு வெட்கம் புடுங்கியது... எப்படி என்பது போல் அவனை பார்க்க.... "மேடம் நாங்க டி வி பார்த்தாலும் பார்ல நின்னாலும் எங்கள் கண் எப்பவும் எங்க கெஸ்ட் மேல தான் இருக்கும் அவங்க சைகக்கு தான் காத்து இருப்போம்.... நீங்க ரசிச்சு சாப்பிட்டதை நானும் பார்த்தேன்... my adavance congratulations....." சொல்லிவிட்டு நகர்ந்தான் அவன்.... அகிலா...சொல்ல முடியாத ஒரு உணர்வு அவள் உடல் முழுவதும் பரவு வதை உணர்ந்தாள்.... மொபைல் அடிக்க.. எம் டி தான் "அகிலா WHAT IS THIS THE PROJECTOR IS NOT WORKING PROPERLY WHERE ARE U NOW.... COME FAST......" கரிஜித்தார் அதிர்ந்தாள்...அடப்பாவிகளா என்ன ப்ண்ணித் தொலைச்சாங்க. இவனுக.. பர பரப்பாய் ஓடினாள்..... அங்கே...போடியம் ல் நின்று G. M Sales...பேசிக் கொண்டிருந்தார்.. முன்னால் இருந்த டேபிளில் புரஜக்டர்.. வேலை செய்யாமல்.. ஸ்கிரீன் ஒயிட் ஆக ... மோகன் அங்க வயர செக் பண்ணிக் கொண்டுருந்தான்... ஒரு நிமிடம் இரண்டு நிமிடம்.. இரண்டு வயர்களை புடுங்கினான்.. தன் கையில் கொண்டு வந்திருந்த தோள் பைய எடுத்தான்.. அதிலிருந்து புதுசா ஒரு கேபிள் எடுத்தான்.... பவர் கேபிளை மாத்தினான்.. மறு நிமிடம் சர்ர்ர்ர்ர் என்ற சத்ததுடன் இயங்க தொடங்கியது..... "ம்ம்ம் லூஸ்ஸ் காண்டாக்ட்... சாரி சார் இப்ப சரியாயிடுச்சு..." அவள் உள்ளே நுழையவும்.. ப்ரொஜக்டர் ப்ளீரென ஸ்க்ரீனில் படம் விழவும் சரியாக இருந்தது.. எம்..டி... அவளைப் பார்த்தார்.... "தாங்க்ஸ் அகிலா... நான் என்னமோன்னு நினச்சேன்.. நீ மோகனும் வரனும் சொன்னப்ப... கரெட் சாய்ஸ்... உஷார் பேர் வழி போல...அவனுக்கு தேவை இல்லாதது இது ஆனாலும் முன் ஜாக்கிறத்தையா.. ஆர்டினரி பவர் கேபிள் இதுக்கு செட் ஆகாது.. இது வேற மாதிரி இருக்கும்.. 1% இந்த மாதிரி ஆகலாம்... அத கூட எடுத்திட்டு வந்திருக்கான்... நைஸ் கைய்.. " சொல்லி விட்டு நகர்ந்தார் எம் டி அங்கிருந்த வாரு மோகன் அவளைப்பார்க்க.. அவள் கண்களால் நன்றி சொன்னாள்...அவன் அங்கிருந்து ஹேய் சும்மா இருடின்னு இதுக்குப் போய் ஏன் பதட்டப்படுற..... சொல்லுரமாதிரி மெல்ல கையசைத்தான்.....அப்படித்தான் சொல்லி இருப்பானோ...மனசு தவித்தது.... அதன் பிறகு ஏதும் நடக்காமல்.. லஞ்ச்பிரேக்...எல்லோரும் ஒரே கூட்டமாக... மொய்க்க... மோகன் தனியாக ஒரு தட்டில் எடுத்து கொண்டிருந்தான்... அகிலா பதறி விட்டாள்.. பாவி கெடுத்தானே... அவனுக்காக எடுத்தாலும் சரி.. இல்லை தனக்காக எடுத்தாலும் சரி யாராவது பார்த்தால் என்ன நினைபார்கள்... எப்பவும் அவர்கள் கடைசியாகத்தான் சாப்பிடுவார்கள் ஆர்கனைசர்கள்... அவர்கள் வேலை மற்றவர்களுக்கு எல்லாம் ஒழுங்காக கிடைக்கிறதா.... அதாவது கொடுக்குற காசுக்கு ஹோட்டல் காரன் ஒழுங்கா சப்ளை பண்ணுரானா...எல்லோரும் சாப்பிடுராங்களா... இதையும் கவனிக்கனும்.. இப்ப இவன் சாப்பிட்டான்.. நான் செத்தேன்... பாவி.. சத்தம் போட்டு சொல்ல கூட முடியாது இவ்வள்வு சத்ததில கேக்கவும் செய்யாது... என்ன பண்ண.... மொபைல எடுத்தாள் அவன் நம்பர் டயல் செய்தாள்.... பெல் அடித்தது அவன் எடுக்கவில்லை.. கூட்டத்தில் அவனை தேடினாள் அகிலா...அதோ பார்த்து விட்டாள் அவனை.. இரண்டு கைகளில் இரண்டு தட்டை எடுத்துக் கொண்டு அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான்.. முகத்தில் ஒரு புன்னகையுடன்....அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்... அவள் அருகில் வந்தவன்... "ம்ம்ம்ம் கூப்பிட்டாயா அகி... இரு இதை எம் டி கிட்ட கொடுத்திட்டு வந்திடுறேன்..." சொன்னவன் மெல்ல அவளைக்கடந்து சென்றவன்...அவள் பின்னால் கொஞ்சம் தள்ளி ஓரமாய் ஒரு டேபிளில் எம் டி மற்றும் ஜி எம் இருவரும் அமர்திருந்த டேபிளில் போய் வைத்தான் மோகன்... எம். டி அவனைப் பார்த்தார்.. தட்டை பார்த்தார்... "ம்ம்ம்ம்ம் குட்....எனக்குப் பிடித்த அயிட்டங்கள் எடுத்து வந்திருக்க... ஆமா மோகன் நீ எப்பப்பா இந்த் ஹோட்டல்ல வேலைக்கு சேர்ந்த.... "சொல்லி விட்டு சிரித்தார்.... "இல்லை சார் அங்க நிறைய கூட்டமா இருக்கு இப்ப... நீங்க பசி தாங்க மாட்டீங்கன்னு அகிலா சொன்னாங்க... அது தான்.....சார்...நானே......." சொல்லிவிட்டு எம் டி கிட்ட ஒரு தட்டையும்... ஜி எம் கிட்ட ஒரு தட்டையும் நீட்டினான்... மோகன்.... "ம்ம் நல்ல ஹாஸ்பிட்டாலிட்டி அப்படியே எல்லாரும் நல்லா சாப்பிடுராங்களான்னு பாருப்பா... ஆமா நீ சாப்பிடலையா..." "இல்லை சார் நாங்க அப்புறம் கடைசில சாப்பிட்டுகிடுறோம்.... அகிலா சொல்லி இருக்காங்க....". சொல்லி விட்டு மற்றவர்களை கவனிக்க தொடங்கினான்....கவனித்திக் கொண்டிருந்த அகிலா அப்படியே உறைந்து நின்றாள்.. ஒரு பொம்பளை தனக்கு கூட தோனாதது... அவனுக்கு தோணியிருக்கு.. மெல்ல ஒரு புன் சிரிப்பு வெட்கம் கலந்த புன் சிரிப்பு நின்றது அவள் இதழ்களில்.. எம். டி கையசைத்து அகிலாவை கூப்பிட்டார்.... அகிலா அவர் அருகில் வந்தாள் "சார்... சொல்லுங்க சார்...." "அகிலா.. ம்ம்ம் பையன் நல்ல செலக்ட் பன்னியிருக்க....." "என்ன சார் சொல்லுரீங்க....." "இல்லைம்மா.. பையன் பயங்கர சுமார்ட்... ம்ம்ம் உன் செலக்சன் பிரமாதம் அகிலா.... நல்லா வருவான்...one of the assest of the company...keep him with you..... நான் பசி தாங்க மாட்டேன்னு கூட அவன் கிட்ட சொல்லி வச்சிருக்கிறா.. குட் குட்...". சொல்லி சிரித்தார்..... ஜி எம் மும் அவர் சொன்னதுக்கு தலை அசைத்தார்..... ""தாங்க்ஸ் சார்.. மெல்ல நகர்ந்தாள் அவரிடமிருந்து.. நான் எப்படா உன் கிட்ட சொன்னேன்... எப்பவோ ஒரு முறை பேச்சு வாக்கில் சொன்னது... இன்னும் என்ன இருக்குடா உன்னிடம்... என்னப் படுத்திருயே படுவா....இப்பவே உன் கிட்ட சொல்லனும் போல இருக்குடா.... என்ன சொல்ல....பிடிச்சிருக்குன்னா... ச்ச்சி... நீயா செய்யிர எல்லாத்தையும் நான் தான் செய்யச் சொன்னேன்னு...சொல்ல.. மனசு வேனும்டா.. செல்லம்... அது உன் கிட்ட நிறைய இருக்குடா...இல்லை என்னை இம்பிரஸ் பண்ண இதை எல்லாம் செய்யிரியா... நான் தான் எப்பவோ உன் கிட்ட மயங்கி கிடக்கிறேனே... இன்னும் என்ன இருக்கு இம்பிரஸ் பண்ண்.. மனசு அலறியது.. அவளுக்கு கேட்டது.... லஞ்ச் நல்ல முறையில் முடிந்தது... கடைசியில்... தான் அகிலாவும்...மோகனும் சாப்பிட்டனர்....அப்புரம்... டீ பிரேக்... அது முடிந்ததும்... அகிலா மோகனிடம்... "மோகன் நான் ரூமுக்கு போய்ட்டு அப்படியே அட்மின்ல கொஞ்சம் வேலை இருக்கு அத முடிச்சுட்டு வந்துடுரேன்... நீ பாத்துக்கடா சொல்லி விட்டு நகர்ந்தாள்.... அவள் போய் 10 நிமிடம் கூட இருக்காது எம். டி... போடியத்தில் இருந்து மைக்ல " இப்போது கமர்சியலில் இருந்து அவங்க தரப்ப விளக்குவாங்க " "சார் அகிலா.. கீழ போயிருக்காங்க.. சார்..." அதனால் என்ன நீ பேசு தயாராதான வந்திரிப்பீங்க " சிரித்தபடி அவனைப் பார்த்தார். மோகன் தடுமாறிய படி... "ஒகே சார்...." பட்டென்று பேக் எடுத்தான் பென் டிரவ் எடுத்து லாப் டாபில் சொருகினான்... மைக் அருகில் வந்தான்.... அவன் பேசியதின் சமாசாரம் இது தான்.....

நமது சேல்ஸ் நண்பர்கள் கடுமையாக உழைத்து... விற்வனை செய்து.. அத காசாக்கி... கம்பனிக்கு லாபம் சம்பாதிது கொடுகின்றனர்...அவர்கள் வேலை விற்பனை அப்புறம் பண வரவு... இத்துடன் முடித்து விடுகிறார்கள்.. நம் கம்பனியின் விற்பனை முக்கால் வாசி..அடுத்த மாநில விற்பனை தான்... அதிலும் முழுவதும் concessional rate of tax விற்பனை செய்கிரோம்.. ஆனால் அதற்குண்டான படிவம் ( declaration forms ) இன்னும் இரண்டு வருடங்களாக நமக்கு வரவில்லை.... அதன் மொத்த மதிப்பு 10 கோடி ஆகும்... இவைகளை நாம் அவர்களிடம் இருந்து பெறா விட்டால்.. நாம் 20 கோடி மற்றும் அபராதம், வட்டி என்று கம்பனி கட்ட வேண்டியது இருக்கும்....எனவே அனைத்து சேல்ஸ் நண்பர்களும்... இதை முழு மூச்சாக எடுத்து இன்னும் ஒரு மாத்ததில் அனைத்து ப்டிவங்களையும் வாங்கி கொடுத்தால் இந்த வருடம் நாம் 10 கோடி உண்மையிலேய லாபம் சம்பாதிப்பதற்கு சமம்.....உங்கள் அன்பான ஒத்துழைப்பு அவசியம் வேனும்.. அவன் பேசி முடித்ததும் முதலில் கை தட்டியவர் எம்.டி தான் எழுந்து வந்து அவனிடம் கை குலுக்கியவர்.... "ம்ம்ம் கரைட்டான பாய்ண்ட் புடிச்ச , பாரு நான் கூட இது பத்தி யோசிக்கல.. குட் ஷோ". சொன்னவர் உடனே மைக் பிடித்தார்..." ம்ம்ம் இன்னில இருந்து இன்னும் 30 நாட்களுகுள்ள எல்லாம் படிவங்களும் வரவழைக்க வேண்டியது விற்பனையின் பொறும்ப்பு.... " அறிவித்து விட்டு போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டார்..... ஜி. எம். , டி.ஜி எம். சேல்ஸ் முகத்தில் ஈ ஆட வில்லை... அடப்பாவி.. இது வரை யாரும் தொடாத இடத்தில் கைய வச்சிட்டான்.....இனி சேல்ஸ் எங்க பாக்க...இரவு டின்னரிலேயே வந்திருக்கும் டீலரகளிடம் பேச ஆரம்பித்து விட வேண்டியது தான்... அவனவன் மனசுக்குள்ள ஓடியது. அப்போது தான் நுழைதாள் அகிலா...எம்.டி.. மோகனிடம் கை குலுக்குவதும்... அறிவித்ததும்.. கேட்டு அப்படியே நின்று விட்டாள்....நமக்கு இன்னிக்கு கிடையாதே.. நாளைக்கு தான ப்ரெசெண்டேசன்.. குழம்பினாள்.. அவள்...ம்ம் என்ன பேசினான்.. ஏன் இப்படி சேல்ஸ் டீம் அரண்டு கிடக்குது...அகிலா அவன் அருகில் சென்றாள்...மெள்ள இருவரும் ஹாலை விட்டு வெளியே வந்தனர்..... "என்னடா என்ன ஆச்சு.. என்ன பேசின இப்படி எல்லார் முகமும் இருளடிச்சு போய் உட்காந்து இருக்கிராங்க...." "இல்ல அந்த டாக்ஸ் மேட்டர்...forms கலைட் பன்னனும்ல... நாம எத்தனையே ரிமைண்டர்.. மெயில் அது இதுன்னு அனுப்புச்சோம் ஒருத்தனும் பதில் சொல்லலை... போட்டு உடைச்சிட்டேன்.. 20 கோடி வரா கடன்ங்கிற மாதிரி.. எம்.டி யே அரண்டு போயிட்டார்....முதல்ல அந்த வேலைய செய்யுங்கடான்னு.. சொல்லாமல் சொல்லிட்டார்... அது தான் அவனவன் அப்படியே ஆடி போய் உக்காந்திருக்காங்க....கமிசன் வராது அது கொடுக்காம......ஆப்பு வச்சாச்சு... நல்லா " சொல்லி சிரித்தான்.... "அடப்பாவி இப்படி பட்டவர்த்தன்மா போட்டு உடைச்சிட்ட.... ம்ம்ம்ம் அதுவும் நல்லதுக்கு தான்.. நாளைக்கு நம்மல கேக்க மாட்டாங்க".... அகிலா அவன் கருத்த ஆமோதித்தாள்... எப்படிடா இப்படி நீ மட்டும் குறுக்க சால்ல போற.....இது தாண்டா எனக்கு உன்னிடம் மிகவும் பிடிச்சிருக்கு...பிடிச்சிருக்கு... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... . பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... ... பிடிச்சிருக்கு... மனசில் சொல்லிக் கொண்டவள்...அந்த கடைசி முறை வாய் விட்டு முனுமுனுத்தாள்..... என்ன பிடிச்சிருக்கு அகிலா.... மோகன் கேட்டதும் தடுமாறித்தான் போனாள். "இல்லை.. இந்த ஹோட்டல்.. ஹாஸ்பிட்டாலிட்டி... நல்லா கோ- ஆபரேட் பண்னுராங்க.... அது தான்..".. சமாளித்தாள்... மனசு இடித்தது... ஏன் இப்ப சொல்ல வேண்டியது தானே படுவா உன்னைத்தான் பிடிச்சிருக்குன்னு... குறைந்தா போய் விடுவாய்....சொல்லிடு... சொல்லிடும்ம்மாஆ.. இப்ப இப்ப.....சொல்லிடலாமா.... சொல்ல வாயெடுத்தவள்..... மேடம்.. குரல் கேட்டு திரும்பினாள்... ஹால் சூப்பர் வைசர் தான்... தங்கை உறவு முறை சொன்னவன் சிரித்தபடி ....... அடக்கிக் கொண்டாள்... "நைட் காக்டெயில் இருக்கு... என்ன பண்ணனும்..நாங்க ஹாட் அண்ட் பீர் கொடுக்கலாமா"..... "ம்ம்ம் இல்லை நீங்க பீர் மட்டும் பாத்துக்கங்க.... ஹாட் நாங்க கொண்டு வந்திருக்கோம்.. மோகன் கிட்ட இருக்கு.... ஆள் அனுப்பி எடுத்துக்கங்க.... " சொல்லி விட்டு திரும்பினாள்.. மோகன் அங்கு இல்லை.. ஹாலுக்குள் சென்றிருந்தான்... அந்த இருட்டு பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.. பின்னாள் யாரோ வரும் சத்தம் கேட்டு திரும்பினாள் மோகன் தான்... "என்னடா எங்க என் பின்னாலலயே வார " "ம்ம் உன் பின்னாலயா பாட்டில் யார் எடுப்பா, வரச் சொல்லி இருக்கேன் ரூம்ல தான இருக்கு அது தான் ...." பின்னால் திரும்பி பேசியபடி வந்தவள் முன்னால் திரும்பி அடுத்த அடி எடுத்து வைக்க எத்தனிக்க அவள் அந்தரத்தில் மெல்ல தூக்கப்பட்டு தரையை விட்டு ஒரு அடி உயர... அவள் இடுப்பில் மோகன் இரும்புக் கரம்.. இரும்புப் பிடியாக அவளை பின்னால் இருந்து கெத்தாக தூக்கியபடி... "ஏய் .. என்னன்ன்ன்ன்ன்ண்டாஆஆஅ.. ப்ண்ணுர.... " அதிர்ச்சியில் வாய் குழற அலறினாள்... "ஸ்ஸ்ஸ் சத்தம் போடாத அங்க பார்... " அவன் பாதைய காட்ட... புல் தரையில் இருந்து ஒரு பாம்பு மெல்ல நெளிந்து அந்த வழிப்பாதைய கடந்து கொண்டிருந்தது... ஒரு அடி எடுத்து வைத்திருந்தால் அதன் மீது மிதித்திருப்பாள்... கடித்திருக்கும் அந்த பாம்பு.விஷம் உள்ளதோ இல்லாததோ.. ஆனா பாம்பு பாம்பு தானே... அதைப் பார்த்ததும் அப்படியே திரும்பி அவனை இருக கட்டிக் கொண்டாள் அகிலா.. அவள் உடல் மெல்ல நடுங்கியது பயத்தால் ஒரு 1/2 நிமிடம் அசையாமல் ஒருவரை ஒருவர் அணைத்தபடி அவள் முகம் அவன் மார்பில் பதிந்து அவள் இடுப்பில் அவன் கை பதிந்து. பயம் கொஞ்ம் விலக தன் நிலை அவனடன் இணைந்து நின்ற நிலை வெக்கம் வந்து உடல் முழுவதும் ஒருவித நடுக்கம்..பட்டென்று அவனிடம் இருந்து விலகி.. "சாரி கத்திட்டேன்ன்ல..." "பரவாயில்ல பயத்தில் தான் கத்தினீங்க..." "ம்ம்ம் பயந்து போய்ட்டேன்... அது கடிக்குமா.. " "ம்ம் மிதிச்சா கண்டிப்பா கடிக்கும்..." ஒரு நிமிடம் மவுனமாக கழிய... " போங்க போய் இந்த சேலைய மாத்துங்க சுடி போடுங்க." சொல்லிவிட்டு அவன் ரூமுக்கு போனான் மோகன்..... அவன் போனத பாத்துக்கிட்டே ரூம் வாசல் வரை வந்தவள்.... என்ன சொன்னான் சேலைய மாத்த சொன்னான்... அவனுக்கு தோணியிருக்கு எல்லாரும் பாக்கிறத அவனும் விரும்பலை.. அப்ப அவ்வளவு செக்ஸியா இருந்திருக்கிறேமா... அவள் உடல் மெல்ல கூசியது....பின் கனிந்தது... அந்த ஒரு நிமிட அனுப்வம்.... எப்படி தூக்கினான்...உடம்பு வெக்கத்தால் சிலிர்த்தது. ரூமுக்குள் போய் சேலய அவிழ்த்து போட்டு பாவாடை நாடாவை அவிழ்க்கும் போது.. அவன் கை பட்ட இடம் இடுப்பில் அவன் கை பட்ட இடம்... வயிற்றில் கை வைத்து தொப்பிள்ல தொட்டு... இடுப்பு அவன் கைகளில் நசுங்கி... வயிற்றை அவன் இறுக பிடித்த இடம் மெல்ல வலித்தது... ம்ம்ம் தன் கைய வைத்து அங்கு மெள்ள தடவினாள்.. இடுப்பு... வயிறு தொப்புள்... வலி குறைய அந்த சுகம் மெல்ல மனதில் நின்று... கண்ணாடி முன் நின்று பார்த்தாள் சிலிர்த்தது அகிலாவுக்கு... இப்ப இப்படி பாத்தா என்ன பண்ணுவான்... நினப்பே அவளுக்கும் அமிலமாய்.. உடல் எங்கும் எரிந்தது... ம்ம்ம் காலைல தான் பார்த்தான், இப்ப தொட்டுட்டான் இன்னும் என்னடா பண்ணப்போற திரும்பி போறதுக்கு முன்ன என்னை என்ன பாடு படுத்தபோறடா... இதுவே தாங்கலைப்பா.. இன்னும்னா...உடல் கொதிநிலை ஏரியது.., பாத்ரூம் நுழைந்தாள் குளித்தாள்.. வேகம் அடங்கியது மாதிரி இருந்தது... மனம் சமம் ஆனது.. சவரின் குளிர்ந்த நீர் அவள் மேனியில் பட்டு தெரித்து உடல் சூட்டையும் மன சூட்டையும் மெதுவாக தணித்தது... குளித்து முடித்தவள் ஒரு காட்டன் சுடிதார் எடுத்தாள்... சிவப்பு நிறத்தில் தங்க சரிகை போட்டு... அதே கலரில்.. ஒரு பாட்டம்....பிராவை சரி செய்து .. கண்ணாடி முன் நின்று பார்த்தாள்.. கதவு தட்டப்படும் சத்தம்.... "யாரது..." "நான் தான் " மோகன் குரல்.... கனிவாய்... "எதுக்கு வந்த.. நானே வருவேன்ல " கதவை திறந்த படி..... " மறுபடியும் பாம்பு மிதிக்கிறீங்களான்னு பாக்க வந்தேன்....." சிரிப்புடன் அதில் சற்று கின்டல் கலந்து..... "அப்படி வந்தால் தான் என்ன அது தான் நீ இருக்கியே..தூக்கி தட்டாமாலை சுத்த...." அவனைப் பார்த்து மெல்லிய குரலில்.... அவனுக்கு கேட்டதா என்று தெரியவில்லை.... "என்ன சொன்னீங்க...." "இல்லை அதுக்கு தான் வந்தியான்னு கேட்டேன்..." "ஆமா.. அந்த ஹால் சூப்பர் வைசர் உன்னை தேடுறான் வாங்க.. உடனே....." ஹால் நோக்கி நடந்து கொண்டே பேசினர்.. இருவரும்..... "ம்ம் மோகன்.. குடிச்சியா நீ......" "ம்ம் இல்லை " "அவனுக கிட்ட என்ன சொன்ன..." "யாரு கிட்ட " "அது தான் அந்த் மொட்டை தலையன் அப்புறம் அந்த சொட்டைத்தலையனுக கிட்ட.. டிரெயின்ல வச்சு அவனுக தன்னி அடிச்சப்ப...". "ஓ அதா நீங்க எனக்கு ஃபுல்லா வாங்கிதறேன்னு சொன்னேன்.. ஏன்...." "நான் சொன்னேனா அப்படி..." "இல்லை சும்மா கொடைன்சாங்க அதுனால அப்படி சொன்னேன்...ஏன் தப்பா.. வாங்கி தர மாட்டீங்களா......... "இல்லை ஏன் உனக்கு வேனுமா என்ன....." "வேனும் தான்.... பார்ப்போம்...." "அத விட பெருசா..தந்தா " ."ஃபுல்லை விட பெருசா என்ன 1 லிட்டர் வாங்கி தரப்போறீங்களா என்ன...".சிரித்தான்.... "போடா உனக்கு எப்பவும் அதே நினைப்பு தான்... அத விட பெருசான்னா... அத விட நல்லதா..உனக்கு பிடிச்சதா..... தந்தா என்ன பன்னுவனு அர்த்தம்...." மனதிற்குள் சொல்லிக் கொன்டாள்... "சரி ஹால் வந்திட்டுது... எல்லாரையும் நல்லா கவனி.. என்ன மோகன்... அப்புறம் பார்கலாம்...." கூட்டத்தில் கலந்து விட்டான் மோகன்.. ஒரே புகை மண்டலம்.. அவனவன் ஊதிக் கொண்டு இருந்தான்.. கையில் வித விதமாய்.... வோட்கா, சிம்ரன்ஃப்... பெக்காடி... டீச்சர்ஸ் ஸ்பெசல்... இன்னும் வித விதமாய்.. அப்புறம் லெகர் பீர்... அது தனி செக்சன்..... சாப்படும் பிரமாதமாக.. வெளியே உள்ள சிட்டவுட்டில்.... பெரிய தோசைக்கல்லை போட்டு மதுரை பரோட்டா..முட்டை பரோட்டா, கொத்துன்னு ஒரு பக்கம் சுட சுட இட்லி மட்டன் குழம்புடன்.....எல்லா வித்திலும் அசத்தி..ஒருபக்கம் மதுரைஅயிர மீன் குழம்பு... விரால் மீன் வருவல் என்று மதுரை அயிட்ட்ம் போட்டு தாக்கி இருந்தனர்... பாதி பேர் வட இந்தியா என்றாலும் மிகவும் ருசித்து சாப்பிட்டனர்...வித்தியாசமான் சுவையில்... அங்கிருந்து அந்த இருட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் விளக்கொளியில் மின்ன ஆங்காங்கே மின்மினியாய் விளக்குக்ள் தெரிய மதுரை ஜொலித்தது எம் . டி வந்தார் நேராக அகிலாவை கூப்பிட்டார்..". ம்ம்ம் சூப்பர்ரான சாப்பாடு வித விதமா... அப்படியே மதுரை ட்ரட்டீஸனல்...நான் கூட இப்படி சாப்பிட்டது இல்லை... நல்லா அரேஞ்ச் பண்ணிருக்கம்மா.... என்னமோ நினச்சேன் பாத்தவுடன் .. ஆனா சூப்பர் டேஸ்ட்..." "இல்லை சார் மோகன் தான் இப்படி இருந்தா நல்லா இருக்கும்னு ஐடியா கொடுத்தான் நான் ஜஸ்ட் இம்பிளிமெண்டேசன் அவ்வளவு தான் சார்...." "என்னம்மா இது உன்ன ஏதும் சொன்னால் அவனை சொல்லுற அவனை ஏதும் சொன்னால் உன்ன சொல்லுறான்.. ம்ம்ம்ம் குட் அண்டர்ஸ்டாண்டிங்க் குட் கீப் இட் அப்... சொல்லிட்டு " போயிட்டார்....அகிலாக்கு வானத்தில் பறப்பது போல் இருந்தது....மோதிரகையால் குட்டு...ம்ம்ம் எம் டி வாயில் இருந்து வார்த்தைபிடுங்குவது கடினம். அதுவும் அவரா வந்து.... சொன்னது.. மோகன் என்னடா இது இதுக்கு நான் என்ன பண்ண போகிறேன் உனக்கு...சொல்லுடா..உனக்கு என்ன வேனும்...நீயா கேட்க மாட்டாயா.. ம்ம்ம் நானா எப்படி சொல்லுறது உன் கிட்ட.. ம்ம்ம்ம்ம் நான் பெண் எனக்குன்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு.. அதை உடைக்க சொல்லுறாயாடா.... மண்டு... சொல்லு... மனது அடம் பிடித்தது.. பார்டி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் அவளும் கொஞ்சம் கொறித்து விட்டு ஒரு 8.30 மணிக்கெல்லாம் கிளம்பினாள்... மோகனைப் பார்த்தாள் அவன் பிசி.. சரி .. எல்லாரும் நல்ல போதையில்.. ம்ம்ம் பார்த்தாள் கிளம்பிவிட்டாள் ....அவள் போவதை மோகன் அறிந்து சைகை செய்தான் .. பார்த்துப் போ.. என்பது மாதிரி.. ம்ம்ம் தலைய மெல்ல அவனுக்கு மட்டும் புரியுமாறு முகத்தில் விழுந்த முடியை சரி செய்வது போல சரி செய்து.. அவனுக்கு டாட்டா காட்டி கை அசைத்தாள் அகிலா.... எல்லாவற்றையும் சரி செய்து விருந்தினர்களை அனுப்பிவிட்டு மோகன் ரூமுக்கு வரும் போது மணி 10.00 வாசலில் அகிலா.. நின்று கொண்டிருந்தாள்... ஒரு துண்டை தன் நைட்டியின் மீது போட்டபடி.... "என்ன இன்னும் தூங்கலையாங்க.... " மோகன் கேட்டான்..... "ம்ம் இல்லை " ( வரலடா பாவி மனசை கெடுத்தவனே )......

"அப்பவே வந்திட்டீங்க......" "ஆமா ( அது என்ன மரியாதை விடுடா அதை ) "சாப்பிட்டீங்களா.... " "ம்ம்ம் நீங்க " ( இது என்ன மரியாதை அதா வருது எனக்கு ) "இல்லை இனிதான் .... நான் குளிக்க போறேன்... ஸ்விம்மிங்க் போறேன் " "இந்த நேரத்திலா.".( வேனாம்டா குளிரும் ) "ஏன் நல்லா இருக்கும் குளிராது வெது வெதுன்னு இருக்கும்....நீங்களும் வரீங்களா...". "ம்ம்ம்ம் இல்லை " ( ஆசை தான் உனக்கு ) "ஏன் சுவிம் தெரியாதா...." ம்ம்ம் தலையை ஆட்டினாள் ( ஏன் கத்து தர போறியா ம்ம்ம் அப்ப என் இடுப்ப தொடுவியா அப்ப தொட்ட மாதிரி ம்ம்ம்ம் சொல்லுடா) "சரி துண்டு கொடுங்களேன்.. இதுக்காக ரூம தொறக்கனும்..." அவள் அவளிடம் இருந்த துண்டை அவனிடம் கொடுக்க. துண்டு இல்லாமல் அவளின் மார்பக குவியல் அவனது கண்னைக் கட்டியது...ம்ம் நான் பிடித்தேனா.. அப்போது.. இந்த இடத்தில்... அவன் பார்வை போகும் இடத்தை பார்ததவள் கைகளால்.. தன் மார்பின் மீது கட்டியபடி அவனை முறைத்தாள்.....தோள்களை குலுக்கியபடி துண்டை தோளில் போட்டு கொண்டு போனான்... துண்டில் இருந்த அவள் மணம் வீசியது... குளித்து துவட்டி இருப்பாள் போல.. அதை அப்படியே மோந்து பார்த்தான்...சுகந்தமாய்...மெல்ல திரும்பி அவளைப் பார்த்தான்... அவன் போவதை அதுவரை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் திரும்பியதும் எங்கேயோ பார்பது போல் பார்க்க.. அவன் மீண்டும் திரும்பி ஸ்விமிங்க் பூல் நோக்கி நடந்தான்... அவன் துண்டை மோந்து பார்த்து அவளையே.. அப்போது கட்டிப் பிடித்து தூக்கிய போது அவள் கழுத்து அருகில் அவன் அனல் மூச்சு பட்டதே... அது நினவு வந்து மெல்ல அசசெளரியமாக உணர்ந்தாள்.. கால்களை மெல்ல ஓன்றுடன் ஒன்று பின்னிக் கொன்டாள் அகிலா.. அவள் மூச்சில் அனல் தெரித்தது... என்னடா உன்னைப் பார்த்தாலே இப்ப எல்லாம் தடுமாறுது...ம்ம்ம் என்ன சொக்குப் பொடி போட்டாய் என் காதலா ம்ம்ம்ம்ம்ம் நினைவே இனிப்பாய்....இது தான் காதலா....என் காதலா...

No comments:

Post a Comment