Thursday 1 August 2013

காம உணர்வு


ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏற்ப்படுகின்ற காம உணர்வுகளை உணர முடியாது, இனவிருத்தி செய்யமுடியாது. இது கூட ஒரு பிரச்சனையே கிடையாது. உடலுறவு கொள்ளாமல் வாழ முடியாதா என்ன? ஆனால் உறவுகளால், சமுதாயத்தினால் புறக்கணிக்கப்படும் போதுதான், அது தாங்கிக்கொள்ள முடியாத வேதனையை தருகிறது. உறவுகள் இல்லாமல், யாராலும் உயிர் வாழமுடியாது. இவர்களுக்கு மறுவாழ்வு தரமுடியும், ஆறுதல் கூறமுடியும், வீட்டுக்குள் சேர்க்க முடியும் என்றால், அது இதற்க்குமுன் இதே பாதிப்புக்குள்ளான இதே பிரிவினரால் மட்டும்தான் முடிகிறது. வருங்கால மருத்துவ விஞ்ஞானம், கண்டிப்பாக இந்த பிரிவினர் பிறப்பதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும், என்று என்னுகிறேன். அதே சமயம் உதாசினப்படுத்திய உறவுகளே, இவர்களை தேடிச்செல்ல வைப்பதும் என் நோக்கம்தான். கடைசியாக உச்சக்கட்ட பேரவமானத்தை சந்திக்கும் ஒரே பிரிவினர், 3) பெண். பெண்ணிற்க்கு திருமணம் ஆகவில்லை என்றால், மூதேவி. குழந்தை பிறக்கவில்லை என்றால், மலடி. கணவனை இழந்தவள் முண்டச்சி. ஆனால் என்ன நடந்தாலும் ஆண் அவமானப்படுவதே இல்லை. மாறாக, மனைவியை இழந்தவன் புதுமாப்பிள்ளை, திருமணம் ஆகவில்லை என்றால் பிரம்மச்சாரி. திருமணத்தின் போது ஆணைவிட பெண் வயது, வசதி, படிப்பு, அறிவு குறைவாகத்தான் இருக்கனும், தாலி கட்டிக்கனும், நெற்றியில் பொட்டு வைக்கனும், தலை குனிந்துதான் நடக்கனும், அடக்க ஒடுக்கமா இருக்கனும், ஆமாம் யார் இதையேல்லாம் நிர்னயித்தது?

இதையேல்லாம் நம் முன்னோர்கள் மிக துள்ளியமாக வடிவமைத்தார்கள் என்றால், எந்த ஒரு ஆணும், தனக்கு 4 பேரன் பேத்தியை கொண்டவனாக இருந்தாலும், அவனுக்கு திருமணம் ஆனதற்க்கான, எந்த ஒரு அங்க அடையாளமும், அவனிடத்தில் ஏன் காணப்படவில்லை? இதனால் எத்தனையோ பெண்கள் ஏமாற்றப்படுகிறார்களே! அப்போது ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், ஆனால் பெண், எந்த ஒரு ஆணையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்க்காகத்தான், பெண்களின் அங்கத்தில் இத்தனை அடையாளங்களா? எனக்கு கொஞ்ச நாளாகவே ஒரு சந்தேகம் என் மனதை உருத்துகிறது. யாரிடம் கேட்டால் சரியான பதில் சொல்வார்கள், என்று தெரியவில்லை. உங்களுக்கு தெரிந்தால் எனக்கு புரியவையுங்க. pls. அதாவது, சமுதாயம், சமுதாயம் என்று சொல்கிறார்களே! சமூக ஆர்வலர்கள், சமூக வலைதளங்கள், ஜனநாயகம், மக்கள், அரசாங்கம், ஊடகங்கள், என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய இந்த “சமுதாயம்” என்ற வார்த்தைக்கான அர்த்தம் “ஆண்” தானா? ஏனென்றால், 1) சூப்பர் ஸ்டார் சார், ரஜினி சார், நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவருக்கு துணையாக நடித்தவர், மதிப்பிற்க்குறிய ஸ்ரீவித்யா. அதே சூப்பர் ஸ்டார் சார், ரஜினி சார், நடித்த 135வது படம் தளபதி. அதில் அவருக்கு அம்மாவாக நடித்தவர், அதே மதிப்பிற்க்குறிய ஸ்ரீவித்யா. என்ன கொடுமை சார் இது? திரைத்துறையில் பெண்களுக்கு மட்டும் வயதாகி விடுகிறது. ஆனால், ஆண்களுக்கு மட்டும் வயதாவதில்லையே ஏன்? ஆண்களுக்கு மட்டும்தான், நடிப்பு திறமை இருக்குமா? ஏன் ஆண்கள் மட்டும் 60 வயதானாலும், கதாநாயகனாகவே இருக்கிறார்கள்? பெண்களுக்கு வயதானால் கதாநாயகி, என்ற இடத்திலிருந்து புறக்கணிப்பது ஏன்? 22 2) ஆண்களின் முகம் எவ்வளவு அவலட்சனமாக இருந்தாலும், அவன் கதாநாயகன். அதுவே பெண்கள் முகலட்சனமாக, இளம் குட்டிகளாக இருந்தால் மட்டுமே, கதாநாயகி. பெண்கள் முகம் சற்று கோனலாக இருந்தால், அவர்கள் முகத்திலேயே துப்புகிறார்கள். உதாரணத்திற்க்கு இரு படங்கள், 1) அழகர்சாமியின் குதிரை, 2) ஒரு கல் ஒரு கண்ணாடி. 3) பெண்களை அரைகுறை ஆடையில், படம் பிடிக்க ஆர்வம் கொண்டது சினிமா. முதலில் சுடிதார் போட்டுக்கொண்டு நடனமாட வைத்தனர். பிறகு அந்த துப்பட்டா வேண்டாம் என்றனர். பிறகு பெண்களை, கால்ச்சட்டையை கழட்டிக்கொண்டு ஆட வைத்தனர். அதன் பிறகு, மேல்ச்சட்டையையும் கழட்டிவிட்டு வெறும் ஜட்டி, பாடியுடன் கதாநாயகனுடன் ஆட வைக்கின்றனர். நாளை நிர்வாணமாக ஆட வைப்பார்களோ? 4) பெண்களை அவமானப்படுத்தி, அதை நகைச்சுவை என்று நிரூபிக்கிறது சினிமா. சிறுத்தை படத்தில், கதாநாயகன் பெண்களை ஏமாற்றி அவர்கள் தலையில் பாதி மொட்டையடித்து சென்றுவிடுவார், அவருக்கு பின்னால் வரும் நகைச்சுவை நடிகர், அதே பெண்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, மீதி தலையை மொட்டையடித்து செல்கிறார். இதை நகைச்சுவையாக பார்க்க வேண்டுமாம். இன்றைக்கு பெண்கள் தலையில் மொட்டையடித்தவர்கள், நாளை மூத்திரமும் அடிப்பார்களோ? அதையும் நகைச்சுவை என்பார்களோ? இதையேல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்றால், சமுதாயம் இதைத்தான் பார்த்து, ரசித்து, கைதட்டி, விருது வழங்கி, மகிழ்கிறது என்றால், இந்த சமுதாயம் என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் வேரென்னவோ? 1) பெண்களுக்கு வயதானால், கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு தருவதில்லை. 2) அவலட்சனமான பெண்களை அவமதிப்பது. 3) பெண்களை அரை நிர்வாணமாக நடிக்க கட்டாயப்படுத்துவது. 4) பெண்களை அவமானப்படுத்தி அதை நகைச்சுவையாக படம்பிடிப்பது. இவை எல்லாம் தணிக்கை குழுவினர் பார்வைக்கு புலப்படாதது ஏனோ? காந்தி சிலையை அவமதித்தால், நாடே கொந்தளிக்கிறது. ஆனால் காந்தி உயர்வாக நினைத்து போற்றிய பெண்களை, அவமதித்து வெளிவரும் படங்களை ரசிப்பதா? இதை காந்தி ஏற்றுகொள்வாரா? வெள்ளித்திரை மட்டும் அல்ல, சின்னதிரை, பத்திரிக்கைகள், வாரஇதழ்கள், விளம்பரங்கள், என்று எல்லாவித ஊடகங்களும், பெண்களை இழிவுபடுத்தியும் பணம் சம்பாதிக்கின்றது. வானொலியும், நூலக புத்தகங்களும் தான், இதிலிருந்து விலகி நிற்க்கின்றது. [அப்போது இவைகளை எல்லாம், முறையாக தணிக்கை செய்யத் தெரியாத அரசாங்கத்திடம், ஐயா, என் கட்டுரையை தணிக்கை செய்து, அதற்க்கு காப்புரிமை தாருங்கள், என்று கேட்பதை நான் விரும்பவில்லை என்பதனால், நானே அச்சடித்து நேரடியாக வெளியிட்டேன்.] இவர்கள் ஒருபக்கம் இருக்க, பெண்களை விபச்சாரத்தில் தள்ளி பணம் சம்பாதிப்பவர்களும், பலவந்தமாக தன் காம இச்சைகளை தீர்துக்கொள்பவர்களும் ஆண்களே. பாவம் பலகீனமான பெண்களால், ஆண்களை எதிர்த்து ஒன்றும் செய்ய முடிவதில்லை. 23 ஆயினும் தன்னையும் காத்து, ஆணையும் பெற்றெடுப்பவள் பெண், ஆண் பிறந்ததை பெருமையாக கொண்டாடுபவள் பெண், தன் குழந்தைக்கு பசி வரும் முன்னே உணவு அளிப்பவள் பெண், அத்தனை பணிவிடைகளும் செய்து ஆணை வளர்ப்பவள் பெண், ஆண் வீட்டை சுத்தமாகவும், பத்திரமாகவும் பார்த்துக் கொள்பவள் பெண், ஆணின் இச்சைகளை தீர்த்து வைப்பவள் பெண். இப்படி தன் வாழ்நாள் முழுவதும் தன்னை ஆண்களுகே அர்ப்பனிப்பவளாக பெண் இருந்தாலும், பிரபஞ்சத்தின் பொக்கிஷமாக கருதப்பட வேண்டிய பெண்களை, அடிமைப்படுத்தவே விரும்புகிறார்கள் ஆண்கள். பெண்ணுக்குள், ஆயிரமாயிரம் சுகங்கள் கொட்டிக் கிடக்கின்றன. உலகத்திலேயே தாலியை விட, ஒரு கேவலமான அடிமைச் சின்னம் இருக்கவே முடியாது. அதை பெண் கழுத்தில் கட்டி, அத்தனை சுகங்களையும் அனுபவித்து, சுகபோக சுதந்திர வாழ்க்கை வாழ்கிறான் ஆண். இதில் மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால், அந்த தாலியையும் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, ஆண் கால்களில் விழுந்து வணங்குகிறாளே பெண்! ஆண் எப்படி சித்ரவதை செய்தாலும், அவமானப்படுத்தினாலும், அத்தனையையும் தாங்கிக் கொண்டு, உயிர் வாழ்கிறாளே பெண்! மனிதன் அன்றாடம் உபயோகிக்கும் உபகரணங்களை அனைத்தையும் உருவாக்கியவன் ஆணாக இருக்கலாம், வீரத்திலும், விவேகத்திலும், தைரியத்திலும் முன்னோடியாகத் திகழ்பவன் ஆணாக இருக்கலாம், ஆனால் என்ன அறிவு இருந்து என்ன பயன்? தன் அதிகாரபலத்தினால், பலகீனமானவர்களுக்கு எவ்வளவோ அளவில்லாத கொடுமைகளை செய்து வருவதனால், ஆண்களை விட கேடுகெட்ட, கீழ்த்தனமாக வாழும் ஒரு இனம் இந்த பிரபஞ்சத்திலேயே கிடையாது, என்பதைத்தான் உணரமுடிகிறது. இதையெல்லாம் ஏன் பெண்கள் உணர மறுக்கின்றனர்? இதையெல்லாம் ஏன் எதிர்த்து, ஒருமித்த குரல் எழுப்பவில்லை? ஆங்கிலேயர் இந்தியாவில் ஆட்சி அமைத்ததற்க்கும், உலகப்போர்கள் நடந்ததற்க்கும், ஆண்கள் ஆட்சியில் இருப்பதற்க்கும், ஒரே காரணம்தான். தன் எதிரியை விட பலம் கொண்ட நபருடன் நட்பை ஏற்ப்படுத்திக் கொண்டால், தன் எதிரியை சுலபத்தில் வீழ்த்திவிட முடியும். அதைப்போலவே, பெண்களும் சம சுதந்திரத்திற்க்காக போரடுவதில்லை. அதிகாரங்களை தக்கவைத்துக் கொள்வதற்க்காகத்தான், போராடுகிறார்கள். தன் மகனை பயன்படுத்தி மருமகளை அடிமைப்படுத்திக்கொள்வதும், தன் கணவனை பயன்படுத்தி மாமியாரை பழிதீர்ப்பதும், பெண்களுக்கு கைவந்த கலை. ஆனால், தங்களின் உண்மையான எதிரி ஆண்கள்தான், என்பதை உணரமுடிவதில்லை. இந்தியா சுதந்திரத்திற்க்கு பிறகு எப்படி நடந்துகொள்கிறது? தன்னை காயப்படுத்திய நாடாக இருந்தாலும், தன்னை காயப்படுத்திக் கொண்டிருக்கும் நாடாக இருந்தாலும், அல்லது வேறெந்த நாடாக இருந்தாலும் சரி, எல்லோரிடமும் நட்பை மட்டுமே விரும்பும் நாடு. தன்னுள் அளவில்லாத ஆற்றலை கொண்டிருந்தாலும், தன் அதிகாரங்களை, மற்ற எந்த நாட்டின் மீதும் ஒரு போதும் துஷ்பிரயோகம் செய்யாத நாடு இந்தியா. நாம் ஆங்கிலேயருக்கு அடிமையாகவே வாழ்ந்திருந்தால், எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. ஆனால் எப்போது நாம் நம்மை நிர்வகித்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டவர்களாக உணர்ந்தோமோ, எப்போது நாம் அடிமைப்பட்டு கிடக்கிறோம் என்பதை உணர்ந்தோமோ, அப்போது இருபக்களிலும் பல உயிர்ச்சேதங்கள். யாருக்கும் நிம்மதியான உறக்கம் இல்லை. அது நாட்டுக்கே தலைவலி. தங்களை உணர்ந்து கொண்டவர்களை அடிமைப்படுத்த முடியாது, என்பதை உணர்ந்த ஆங்கிலேயன் பின்வாங்கிச் சென்றான். 24 ஆனால் இன்று, இது நாம் அடிமையாக வைத்திருந்த நாடு, இது நம்மை அடிமைப் படுத்திய நாடு, என்று மனதில் நினைத்துக்கொண்டு, இரு நாடுகளும் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுகிறதா? இல்லை. இரு நாட்டினரும் வாணிபம் செய்கிறார்கள், வந்து செல்கிறார்கள். நட்புறவோடு பழகுகிறார்கள். உலகம் என்ற குடும்பத்தில் இந்தியாவும் சம அங்கீகாரம் பெற்று வாழ்கிறது. இதுபோல, இந்தியாவிடமிருந்து பல தகவல்களை குறிப்பெடுத்துக் கொள்ளலாம். அதுபோல, பெண்களும் ஆட்டுமந்தையை போல, அடிபணிந்து வாழ்ந்தபோது எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் தன்னையும் வீட்டில் ஒரு நபராக மதிக்கப்பட வேண்டும், தன் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற உரிமை தனக்கு வேண்டும், தானும் இச்சமுதாயத்தில் சமசுதந்திரம் பெற்று வாழவேண்டும், என்று ஒற்றுமையாக போராடியிருந்தால், ஆணும், பெண்ணும் என்றோ சமநிலையை அடைந்திருக்க முடியும். ஆனால் பெண்களின் நோக்கம் அதுவல்ல.

தன்னை அடிமைப்படுத்திய ஆண்களை, தான் ஆட்சி செய்யவேண்டும், தன் வார்த்தைக்கு கீழ்ப்படியச் செய்யவேண்டும், தன்னை இழிவுபடுத்தியவர்களை, தான் அவமதித்து, அவர்களை தன் காலடியில் விழவைப்பதற்க்கான போராட்டம்தான், சுதந்திர போராட்டம், என்று எண்ணிக் கொண்டிருப்பவர்கள் பெண்கள். பெண்களுக்கு எதிலிருந்து விடுதலை தேவை? ஆணிடமிருந்து?, பெண்ணிடமிருந்து?, பிறவியிலிருந்து? இவை எல்லாவற்றையும் விட அறியாமை எனும் பிடியிலிருந்துதான், முதலில் பெண்களுக்கு விடுதலை தேவை. ஆண்களை எப்படி வெற்றிகொள்வது, என்று வழி தெரியாத பெண்களுக்கு, எப்படி பழிவாங்க வேண்டும் என்று தெரியும். தன்னிடம் உள்ள ஒரே ஒரு ஆயுதம் சிற்றின்பம் மட்டும்தான், என்று நினைத்துக் கொள்கிறாள். இதை தரமறுத்தாலே, ஆண் துவண்டுவிடுவான். இந்த ஒரு தண்டனையை மட்டும்தான், ஆண்களுக்கு தரமுடிகிறது. ஆண்களுக்கு இதில் ஏற்ப்படும் ஏமாற்றமும், வெறுப்பும்தான், தன்னை சுகப்படுத்திக் கொள்ள வேறு ஏதாவது ஒன்றை தேடிச்செல்ல வைக்கிறது. முதலில் சிகரெட், பிறகு பீர், பிறகு hot. தன் காயப்பட்ட மனதிற்க்கு மருந்தாக, ஒரு விலைமகளையும் தேடிச்செல்ல வைக்கிறது. இப்படி காமத்தை முழுமையாக கடக்க முடியாதவன்தான், காமக்குற்றவாளி ஆகிறான். ஆண் மது மீது கொண்ட விருப்பத்திற்க்கு காரணம், மாது மீது கொண்ட வெறுப்பே. இப்படி கணவனும், மனைவியும் போடுகின்ற சண்டையில், குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தகாத வார்த்தைகளினால் தங்களை மட்டுமல்ல, சில நேரங்களில், குழந்தைகளையும் திட்டி விடுகின்றனர். இதனால் குழந்தைகளினால், கல்வியில் கவனம் செலுத்த முடியாமல் போகிறது. தங்களுடைய வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்வதற்க்கான, சரியான வழி காட்டுதல் இல்லாமல் போவதால், மாறுபட்ட கலாச்சாரங்கள் உருவாகின்றன. உதாரணத்திற்க்கு, சிறு வயதிலேயே போதை பழக்கங்களுக்கு அடிமையாவது, ஓரினச்சேர்க்கை, விலங்குகளுடன் உடலுறவு, குழந்தைகளுடன் உடலுறவு, கல்லக்காதல், பாலியல் குற்றங்கள், பிரம்மச்சர்யம், துறவு வாழ்க்கை. ஒருபக்கம் குழந்தைகளின் வாழ்க்கை அழிவுப்பாதையை நோக்கிச் செல்கிறது. மறுபக்கம் முதியவர்களின் வாழ்க்கை அவமதிப்பிற்க்கு உள்ளாகிறது. நடுத்தர வயதினர் வாழ்க்கையோ, செய்வதறியாது கேள்விக்குறியாக நிற்க்கிறது. இதிலிருந்து மீண்டு எல்லோருக்கும் சமச்சீரான வாழ்க்கையை எப்படி உருவாக்குவது?..................

No comments:

Post a Comment