நான் வேலை பார்க்கும் ஆபீஸில் 6 மாடிகள் உள்ளன. 6வது மாடியில் MD ஆபீஸ். நான் MD ஆபீஸ¤க்கு அடிக்கடி செல்வது கிடையாது. என் பாஸ்தான் MDயுடன் பேசுவார். நான் நேராக MDயுடன் பேசினால் என் பாஸ¤க்கு கோபம் வரும். இன்று என் பாஸ் ஊரில் இல்லாததாலும், அவசரமாக MD கையெழுத்து தேவைப்பட்டதாலும், நானே MD ஆபீஸ் செல்ல நேர்ந்தது. எதற்கும் MD செக்ரடரியிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கலாம் என்று போன் செய்து பார்த்தேன். போனை யாரும் எடுக்கவில்லை.
சரி நேராகச் சென்று பார்க்கலாம். MD பிஸியாக இருந்தால் திரும்ப வந்துவிடலாம் என்று நினைத்து 6வது மாடிக்குச் சென்றேன். செக்யூரிட்டி சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினான். செக்ரெட்டரியை சீட்டில் காணவில்லை. 5 நிமிடம் வெய்ட் செய்தும் வரவில்லை. என்னிடம் இருந்த டாகுமெண்டை உடனடியாக கூரியர் அனுப்பவேண்டும், MD கையெழுத்து போட்டவுடன் அனுப்பவில்லை என்றால் 5 கோடி நஷ்டம் வரும். அதனாலே, செக்ரெட்டரியிடம், “MD இருக்கிறாரா, PA எங்கே?” என்றேன். இருவரும் MD ரூமுக்குள்ளே இருப்பதாகக் கூறினான். தைரியப்படுத்திக் கொண்டு (MD சிடுமூஞ்சி) MD ரூம் கதவைத் தட்டிவிட்டு, மெதுவாக திறந்து கொண்டு உள்ளே நுழைந்தேன். MD தன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். தலையை சீட்டில் சாய்த்துக்கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு பற்களைக் கடித்தவண்ணம் இருந்தார். சரி உண்ட மயக்கத்தில் ரெஸ்ட் எடுக்கிறார் போல என்று நினைத்து அவர் டேபிள் அருகில் சென்றேன். MD தலையை அசைத்தபடி, கண்ணை இன்னமும் இறுக மூடிக் கொண்டு, “உம் உம்” என்று சத்தம் செய்து கொண்டிருந்தார். இன்னும் அருகில் சென்றேன்.
எட்டிப்பார்த்தால் டேபிளின் அடியில் MDயின் PA,
அவர் பேண்டை கீழே இரக்கி, ஜட்டியை விலக்கி, பூலை கையில் பிடித்து கொட்டையையும் பூலையும் மாறி மாறி சப்பிக் கொண்டிருந்தாள். அவளும் தனது கண்களை இறுகமூடிக் கொண்டிருக்க, இருவரும் அனுபவித்துக் கொண்டிருந்தனர். MD தன் கையை அவள் தலையில் வைத்துக்கோதினார். அவள், அவர் தொடைகள் இரண்டையும் நக்கினாள், நடுவில் இருந்த பூலை அவ்வப்போது முத்தமிட்டாள். செங்குத்தாக நின்ற அவர் பூலுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். அவள் முத்தமிட, அவர் கையால் தொடாமல் பூலை மெதுவாக ஆட்ட, அவள் மூக்கை அறுகில் கொண்டுவர, அவர் தன்னால் முடிந்த வரை பூலை நகற்றிக்கொள்ள, ஊடலுடன் கூடிய விளையாடலைக் கண்டு நான் உணர்ச்சிவசம் அடைந்தேன். 60 வயசிலும் அவர் சொல் பேச்சு கேட்கிறது அவருடைய பூல். 19 வயதே ஆயினும், வேலை என்றால் எதையும் செய்யவேண்டும் என்பதற்காக MDயுடன் காமவயமாய் இருக்கும் அந்தப்பெண். ஆபீஸ் என்றால் வீடு, வீடு சம்பந்தப்பட்ட எதையும் நினைக்கக் கூடாது என்று நினைத்து வந்த நான். என்னை மறந்து நான் அங்கு நிற்கையில், பூல் சப்பல் சுவாரசியமாக நடந்து வந்தது. கிட்டத்தட்ட 7 அங்குல நீளமான அவருடைய பூலின் நுனியை மெல்லக் கவ்வினாள். சதையை கைகளால் நகற்றி தன் நாக்கினால் வட்டமிட்டு அதனை முத்தமிட்டாள். அந்த சிறு ஓட்டையினுள்ளே தன் நாக்கினால் நக்கினாள். தண்டின் அடிமுதல் நுனிவறை எச்சிலால் கோலமிட்டாள். தாண்டவமாடிய தண்டை முழுதுமாய் வாயில் போட்டு, குழந்தை லாலிபாப் தின்பது போல சப்பிச்சப்பி சுவைத்தாள். கைகளினாலே கொட்டையை பிழிந்த வண்ணம் விடாது சப்பிக் கொண்டிருந்தாள். திடீரென MD, அவள் தலையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, தன் பற்களை கடித்துக் கொண்டு, வயிற்றை இறுக்கிக் கொண்டு, கண்களை இன்னமும் இறுக்கமாக மூடிக்கொண்டு, தன் உடலை சற்றே சீட்டிலிருந்து உயர்த்திய வண்ணம் ஓரிரு நிமிடங்கள் இருந்த பின்னர் relax ஆனார். அவளும் relax ஆனாள்.
இந்த சம்பவம் நடந்த போது எனக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயது இருக்கும். எனக்கு ஒரு அண்ணன் இருக்கிறான். அவனுக்கு அப்போது கல்யாணமாகி ரெண்டு வருசம் இருக்கும். அவன் ஒரு காமெண்ட பக்டரியில் வேலை செய்கிறான். எனது அம்மாவும் அப்பாவும் கோயில் குளம் அது இது என்று வெளிய10ர் போவதுதான் வழக்கம். நான் ஒரு காலேஜில் படித்துக் கொண்டிருந்தேன்.
எனக்கு அண்ணியை ரொம்ப பிடிக்கும். அவளுக்கும் என்னை பிடிக்கும். அவள் என்னுடைய பெஸ்ட் பிரண்ட் மாதிரி. காலேஜில் நடக்கும் அடாவடிகள் லேடி பிரண்ஸ் அது இது என்று வீட்டில் மனம் விட்டு பேசக் கூடிய ஒரே ஆள் அவள் தான். அவள் நல்ல அழகானவள். நீளமான கறுத்த கூந்தல். எப்போதும் சிரித்த முகம். பளீச் என்ற பற்கள். குளு குளு என்று சிவந்த கன்னம். நல்லா விரிந்த மார்பு. அழகான வயிறு (தொப்புள. அசைந்து செல்லும் வளைந்த இடை. இப்படியே வர்ணித்துக் கொண்டே போகலாம். அவளுடன் பேசும் பொழுதெல்லாம் என் கண்கள் ஒரு தரம் அவள் மார்பை எட்டி பார்த்துவிட்டு பார்க்காதது போல் இருந்து விடுவேன். அண்ணனுக்கு ரெயினிங்குக்காக ஒரு வாரம் பாம்பே போக வேண்டி இருந்தது. அண்ணன் போகும் போது என்னை 1. எக்சாமுக்காக படிக்கச் சொல்லிவிட்டும் 2. பிரெண்ஸ் கூட சுத்திட்டு லேட்டா வரக்கூடாது என்றும் 3. அண்ணிக்கு தொந்தரவு கொடுக்காமல் 4. அண்ணிக்கு உதவி பண்ணச் சொல்லிவிட்டும் சென்றான். நானும் அண்ணியும் அவரை ஸ்டேசனில் வழி அனுப்பி வைத்தோம். என் அம்மாவும் அப்பாவும் ஊரில் இல்லாததால் அண்ணிதான் வீட்டுப் பொறுப்பை கவனித்து வந்தாள். அண்ணி ரொம்ப சந்தோசமாக இருந்தாள். என்னை அண்ணன் வரும் வரை அவள் அறையில் இருந்து படிக்குமாறும் அங்கே தூங்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதனால் நான் என் புத்தகம் பெட் எல்லாத்தையும் அவள் ரூமுக்குள் மாற்றினேன். அன்று அண்ணி டினர் சமைத்து தந்தாள். நாங்கள் இருவரும் சாப்பிட்டவுடன் அவள் தூங்கப் போனாள். நான் என் ஸ்ரடி டேபிளுக்கு போனேன். அன்று சரியான வெப்பமாக இருந்ததால் நான் என் சேட்டையும் பெனியனையும் கழற்றி கதிரையில் போட்டபடி நான் படிக்கத் தொடங்கினேன். அந்த மேசை முன்னால் ஒரு பெரிய சைசில் ஒரு கண்ணாடி மாட்டப் பட்டிருந்தது. அதன் மூலம் அண்ணி அங்கே உடுப்பு மாற்றுவதை பார்க்க முடிந்தது. என் பக்கம் ஒரு முறை திரும்பிப் பார்த்தவாறு அவள் மறு பக்கம் திரும்பிக் கொண்டு அவள் சாறியை கழற்றினாள். அவளது ஜாக்கெட்டுக்கும் பாவாடைக்கும் இடையில் நன்றாக கொழுத்து மடிந்து போன இடுப்பு தெரிந்தது. அவள் பட்டனை மெதுவாக கழற்றியபடி அவள் ஜாக்கெட்டை கழற்றினாள். அவளை பிராவில் பார்த்தது இதுவே முதல் தடவை. அவளது முன்பக்கத்தை பார்க்கா முடியா விட்டாலும் அது என்ன சைஸ் என்பதை ஊகித்துக் கொண்டேன். அவளது ரிரா பட்டி நன்றாக ரைட்டாக இருந்தது. அதிலிருந்து அது ரெண்டும் நல்ல கெவி என்பதை அறிந்து கொண்டேன். அவள் மெல்லியதாய் ஒரு நைட்டியை அணிந்து கொண்டு கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டு பெட்சீட்டால் மூடிக் கொண்டாள். நான் என் பார்வையை புத்தகத்தின் மேல் திருப்பினேன். என்னால் சரியாக கொன்சன்றேற் பண்ண முடியவில்லை. பிராவுடன் இருக்கும் அண்ணியின் உருவம் தான் என் கண்முன்னால் வந்து வந்து போனது. அண்ணிக்கு நான் படிக்கிற மாதிரி காட்டிக் கொண்டு என் கற்பனை உலகில் பறந்தேன். நேரம் அப்போது 12 ராத்திரி இருக்கும். எனக்கு சரியான தூக்கம் வந்தது. நான் டேபிள் லாம்பை அணைத்து விட்டு என் பெட்டுக்கு போனேன். ‘விஜய் என்ன படிச்சி முடிச்சிட்டயா?” என்று அண்ணி கேட்டாள். (இவ்வளவு நேரமும் தூங்காமல் அவள் முழிச்சிட்டு இருந்திருக்கின்றாள. ‘ம்… அண்ணி” என்று கண்ணை கசக்கிக் கொண்டே என் பெட்டுக்கு போனேன். (எந்தன் பெட்டும் அண்ணி ரூமில்தஅண்ணி ரூமில்தான் இருந்தது). நான் பெட் சீட்டால் மூடிக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன். என் மனதில் அண்ணியின் உருவம் வந்தது. அதை நினைக்கையில் என் தம்பி எழுந்து கொண்டான். அவனை தூங்க வைப்பதென்றால் தாலாட்டு பாட்டு ஒன்றும் சரிவராது. எல்லாம் கையாட்டு பாட்டுதான் சரிவரும். என் கண்ணை மூடிக் கொண்டு என் தம்பியை கையில் பிடித்துக் கொண்டு கையில் ஆட்டினேன். என் பெட் சீட் மேலும் கீழும் அசைந்து அசைந்து வந்தது. ‘டேய் விஜய் என்னடா பண்ற” என்று அண்ணியின் குரல் கேட்டது. எனக்கு சரியான வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது. அண்ணி தூங்கி விட்டாள் என்றுதான் நான் நினைந்திருந்தேன். இப்போது கையும் கழவுமாக பிடிபட்டு விட்டேன். ‘வாடா என் கூட வந்து பெட்டுல படு” என்று அண்ணி அழைத்தாள். நான் முதலில் மறுப்பது போல நடித்தேன். பிறகு வந்த சான்சும் போய்விடுமே என்பதால் நான் எழுந்து வந்து அவள் பெட்டில் படுத்துக் கொண்டு அவளது பெட் சீட்hல் மூடிக் கொண்டேன். அண்ணி பெட்சீட்டை நெஞ்சு வரைக்கும் பதித்துவிட்டு பெட் லாம்பை ஒன் பண்ணினாள். அந்த மெல்லிய லைட் வெளிச்சத்தில் அவளமு முலைகள் இரண்டும் அவளது நைட்டிக்கு வெளியால் எட்டிப் பார்த்து ஹாய் சொல்வது போல இருந்தது. அண்ணி என் கையை எடுத்து அவளது நைட்டிக்கு மேலே வைத்து அவள் முலையை மெதுவாக அழுத்தினாள். நான் என்னுடைய லக்கை நம்ப முடியவில்லை. நான் அப்படியே ஒன்றும் பேசாமலும் மறுக்காமலும் கிடந்தேன். ‘என்ன விஜய் வெக்கமா இருக்கா அண்ணியோட செய்யுறத்துக்கு. வேணும்னா லைட்டை ஓவ் பண்றேன்” என்றாள். நான் ம்.. என்றேன். அவள் சிரித்துவிட்டு என் நெஞ்சின் மேலாலே எட்டி பெட்லாம்பை ஓவ் பண்ணினாள். அப்போது அவளது முலைகள் இரண்டும் என் நெஞ்சில் பட்டு நசிந்தது.
அவள் வேண்டும் என்றே கொஞ்சம் அழுத்தமாக நசித்திருக்க வேண்டும். அந்த இருட்டில் எந்தன் வெட்கம் பயம் தயக்கம் எல்லாமே போனது. என் கையை எடுத்து அவளது முலையின் மீது வைத்து இறுக்கமாக கசக்கத் தொடங்கினேன். ‘விஜய் உன்ட கை நல்ல ஸ்ரோங்காக இருக்குடா” என்று சேட்டிபிகேட் தந்துவிட்டு ‘விஜய் என்ட நைட்டியை கழட்டுடா” என்று ஆணையிட்டாள். அவளது நைட்டியை மெதுவாக கழற்றியபடியே அவளது முவைகளை ஒரு தரம் தடாவி விட்டேன். என் கையால் வருடியபடியே அவளது முலையை கன்று பசுவில் பால் குடிப்பதை போல முலையை இடித்து இடித்து பால் குடித்தேன். அவளது நிப்பிள்ஸ் சரியான ஹாடாக இருந்தது. அதை என் பற்களால் கடித்து கடித்தும் எச்சிலால் சூப்பியும் கொஞ்சம் இளக வைத்தேன். என் வாழ்வில் முதல் முறையாக ஒரு பெண்ணின் முலையை சுவைத்துக் கொண்டிருக்கின்றேன். (என் அம்மாவை விடுங்கள. நான் வெறும் லுங்கிமட்டுமே அணிந்து கொண்டிருந்தேன். எனது தம்பி லுங்கிக்குள்ளால் எட்டிப் பார்த்து என்ன நடக்குது என்று அறிய ஆசைப்பட்டான். எனது லுங்கியை மெதுவாக கழற்றி எறிந்துவிட்டு என் தடியை வெளியே எடுத்தேன். அதை எடுத்து அவளது குழியை ஒரு வாறாக கண்டுபிடித்து அதில் வைத்து இடிக்கப் போனேன். ‘கொஞ்சம் பொறு அதுக்குள்ள என்ன அவசரம்” என்று கேட்டு விட்டு என் தடியை அவள் கையில் பிடித்தாள். பிடியென்றால் சும்மா பிடியல்ல உடும்புப் பிடி. எனது தடியின் தலையில் போட்டிருந்த தொப்பியை பின்னால் தள்ளிவிட்டு அதை மெதுவாக நக்கி எச்சிலால் h.ரமாக்கி விட்டு அதை அவள் வாயில் வைத்தாள். அவளது நாக்கும் என் சுண்ணியும் பிடித்த சண்டையில் எனக்கு சொர்க்கமே கையில் வந்தது. ஆஆஆஆ என்று முனகுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யத் தோணவில்லை. அவளது தலை முடியை இறுக்கிப் பிடித்தவாறு அவளது தலையை என் சுண்ணி அருகே பிடித்துக் கொண்டிருந்தேன். அவள் என்னை படுக்கச் சொல்லிவிட்டு என் மீது 69ல் படுத்துக் கொண்டு எனது சுண்ணியை சூப்பத் தொடங்கினாள். அவளது புண்டை என் வாயில் முட்டிக் கொண்டு நின்றது. எனது ஒரு விரலால் அதை மெதுவாக உள்ளே விட்டு சுரண்டியபடி என் நாக்கினால் நக்கத் தொடங்கினேன். நாங்கள் ஒரு ஐந்து நிமிடம் செய்திருப்போம். அவள் எழுந்து கொண்டு என் மார்பின் மீது மார்பை வைத்து என் மீது படுத்துக் கொண்டு என்னை முத்தமிட்டாள். நானும் அவளது சிவந்த உதடுகளை (இருட்டில் எல்லாம் கறுப்புத்தான என் வாயில் அள்ளி கௌவிக் கொண்டேன். சிறிது நேரத்தில் அவள் கீழே சரிந்து கொண்டு என்னை செய்யுமாறு சிக்னல் காட்டினாள். நான் அவளது உடலை ஒரு தடவை வருடிவிட்டு அவளது தொப்புளில் வாயை வைத்து உறிஞ்ச ஆரம்பித்தேன். அதே சமயம் என் ஒரு கை அவளது புண்டை மேட்டில் உள்ள சந்தனக் காட்டில் உலாவிக் கொண்டிருந்தது. அவளது மயிர்கள் என் விரலில் சிக்குப் பட்டு தவிர்த்துக் கொண்டிருந்தது. நான் எழுந்து அவள் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் என் முகத்தை கொண்டு போனேன். அவளது தொடையில் என் முகத்தால் வருடிவிட்டு எனது விரல்களால் அவளது பொந்தை ஆராய்ச்சி பண்ணத் தொடங்கினேன். அவளது வெளி இதழ்கள் 90 வயது கிழவியின் கன்னம் போல சுருண்டு கிடந்தது. அதை விரித்துப் பார்த்தால் உள்ளே சுருக்கமே இல்லாத குமரிப் பெண்ணின் கன்னம் போல இருந்தது. என் நாக்கினால் நக்கியபடி என் பெரு விரலால் அவளது கிளிட்டோரிசை உரசிக் கொண்டிருந்தேன். விரலை அங்கும் இங்கும் விட்டு தேடிப் பார்த்ததில் அவளது பொந்து அகப்பட்டது. எனது விரலை நன்றாக மடித்து அவளது குழியில் வைத்து ப10த்திப் ப10த்தி எடுத்தேன். அவள் அவளது முலைகளை கசக்கிக் கொண்டிருந்தபடியே ஆஆஆ ம்ம்ம்ம் உஊஊ என்று முனகிக் கொண்டிருந்தாள். நான் எழுந்து இம்முறை நான் மேலே 69ல் கிடந்து என் சுண்ணியை அவள் வாயில் வைத்தபடியே செய்யத் தொடங்கினேன். ஒரு சில நிமிடத்தில் என்னை கீழே இறங்கச் சொன்னவள் என்னை படுக்கப் போட்டுவிட்டு என் சுண்ணியை அவள் குழியில் வைத்து என்னை பார்த்த படி என்னை றைட் பண்ணினாள். சிறிது நேரத்தில் சுண்ணியை குழியில் வைத்த வாறே மறு பக்கம் திரும்பி நான் அவள் முதுகை பார்க்கும் படியாக இருந்து கொண்டு றைட் பண்ணத் தொடங்கினாள்.
அவள் எழுந்து என்னருகே வந்து அவள் முலையை என் வாயருகே பிடித்தபடி தாய் குழந்தைக்கு இந்தா கண்ணு பாப்பா குடி என்று செய்வது போல் தந்தாள். நான் அவளது காம்புகளை சுவைத்தேன். அது போதாதென்று அவள் அவளது காம்பை எனது உதடும் பல்லும் சேரும் இடத்தில் வைத்து தேய்த்தாள். நான் அவளை கீழே தள்ளி விட்டு அவளை முட்டி போட்டு நிற்கச் சொல்லிவிட்டு அவளது பின்னால் என் சுண்ணியை வைத்து ஏனல் செக்ஸ் செய்தேன். மீண்டும் அவளை மறுபக்கம் படுக்கச் சொல்லிவிட்டு எனது சுண்ணியை அவள் புண்டைக்குள் வைத்து இடிக்கத் தொடங்கினேன். நான் முதல் செய்த லீலையில் அவளது குழி ஏற்கனவே h.ரமாக இருந்தது. இந்த முறையும் செய்தால் வெள்ளம் தான் வரும். அதற்காக பெட் சீட்டை நிவாரணமாக வைத்திருந்தேன். அவள் என்னை இறுக்கமாக பிடித்து என்னை அசைய விடாமல் பண்ணினாள். நான் என் வேகத்தை அதிகரித்து இழுத்து இழுத்து குத்தினேன். நான் குத்திய குத்தில் குபீர் என்று விந்து பாய்ந்து வந்தது. நாங்கள் ஒரு நிமிடத்துக்கு மௌனமாக கிடந்தோம். அதன் பின்னர் அண்ணி எழுந்து போய் சூடாக ஒரு ரிங் எடுத்து வந்தாள். அதை குடித்த பின் எங்களுடைய களைப்பு எல்லாம் பறந்து போனது. அன்று விடியக் காலை மூன்று மணிவரை நாங்கள் விரும்பிய பொசிசனில் இருந்து கொண்டு செய்து எங்கள் ஆசையை தீர்த்துக் கொண்டோம்.
நான் ஷீலா. சென்னையில் இருக்கும் ஒரு கிறிஸ்டின் காலேஜில் ஹாஸ்டலில் தங்கி பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். எங்கள் ஹாஸ்டல் வழக்கப்படி ஒரு ரூமில் ரெண்டு பெண்கள் தங்க வேண்டும். போன வருடம் என் ரூம் மேட் வனஜா. காலேஜே திறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. இந்த வருடம் என் ரூம் மேட் கலா ராணி. நாங்க அவளை ராணி என்று தான் கூபிடுவோம்.
நான் வேலூர் பக்கத்தில் இருக்கும் ஆம்பூரை சேர்ந்தவள். என் அப்பா ஒரு சுகர் மில்லில் வேலை பார்கிறார். அம்மா பி எஸ் என் எல் இல் வேலை பார்க்கிறாள். எங்க ஊர் பதகில் நல்ல காலேஜே இல்லை என்பதால் இங்கு வந்து படிக்கிறேன்.
பெண்கள் காலேஜே ஹாஸ்டல் சற்று மாறு பட்டு தான் இருக்கும். எங்கேயும் பெண்கள் தான் இருப்பதால், நாங்கள் கொஞ்சம் இப்படி அப்படி இருப்போம். சில சமயம் சூடிதார் டாப் மட்டும் போட்டு கொண்டு இருப்போம். சில சமயம் பாவாடை டி ஷர்ட் போட்டு கொண்டு இருப்போம். சில பெண்கள் ஸ்லீவ்லெஸ் டாப் போட்டுகொண்டு இருப்பார்கள். கிட்டே வந்து பார்த்தால், மார்பு பாதி வெளியே தெரியும். சென்ற வருடம் என் ரூம் மேட் வனஜாவுடன் நான் ரொம்ப நெருங்கி பழகுவேன். நெருங்கி என்றால் நாங்கள் கொஞ்சம் கூட வெக்க படாமல் செக்ஸ் பத்தி பேசுவோம். அவள் பிரென்ட் வீட்டில் ஒரு முறை ப்ளூ பிலிம் கூட பார்த்து இருக்கோம். ரூமில் ரெண்டு பேர் மட்டு இருக்கும்போது பேன்ட்டி பிராவுடன் கூட இருந்து இருக்கோம். சில நாள் குளித்துவிட்டு வெறும் உடம்புடன் வந்து டிரஸ் போட்டு கொண்டும் இருந்து இருக்கோம்.
இந்த வருடம் ராணி வந்தது முதல் அவளுன் இன்னும் நெருங்கி பழகவில்லை. அவளும் எங்க ஊர் அருகில் இருக்கும் காவேரி பாகத்தை சேர்ந்தவள். இந்த வருடம் தான் காலேஜில் சேர்து இருக்கிறாள்.
சுமார் ரெண்டு மாதம் ஆயாச்சு காலேஜே திறந்து. எங்கள் ரூமில் வனஜா வந்து பேசி கொண்டு இருப்பாள். ரொம்பவும் செக்ஸ்யசியாக பேசுவாள். ராணி அதை நன்கு ரசிப்பாள். வனஜா சொல்லுவாள்.
ராணி உனக்கு முலை சுபர்டி. என்னடி உரம் போட்டு வளர்கிறாய் அல்லது டெய்லி மாவு பிசஞ்சு அதை பெர்சியக்கிறாயா. ராணி சிரிப்பாலே தவிர பதில் சொல்ல மாட்டாள். வனஜா மேலும் சொல்லுவாள். நீ மட்டும் என் ரூம் பார்ட்னராக இருந்தால், இந்நேரம் உன் முலையை சப்பி இருப்பேன். அப்ப கூட ராணி சிரிப்பாள். கொஞ்சம் தன் முலையை அட்ஜஸ்ட் பண்ணி கொள்ளுவாள். இன்னும் ஒரு மாதத்தில் நாங்கள் ரெண்டு பேரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்கி வந்தோம். நான் மட்டும் போன வருடம் போல கொஞ்சம் அஜாக்கிரதையாக இருப்பேன். குளித்துவிட்டு ஒரு சின்ன துண்டை சுத்திகொண்டு வந்து அதையும் அவுத்து போட்டு விட்டு நிதானமாக டிரஸ் போட்டு கொள்ளுவேன் . ஆனால் ராணி மட்டும் குளிக்க போகும் போது, தன் டிரெஸ்ஸை எடுத்து கொண்டு போய் வைத்துகொண்டு, குளித்துவிட்டு புல் டிரஸ் போட்டுகொண்டு தான் வருவாள். மற்ற சமயத்தில் கூட பாட்டம் மாட்டும் போது பாத் ரூம் போய் தான் மாற்றி கொண்டு வருவாள். நான் அவளை பார்த்து கிண்டல் அடிப்பேன். உனக்கு வெக்கம் ஜாஸ்திடி. நாளைக்கு கல்யாணம் ஆனல் கூட, உன் கணவனை கண்ணை மூடிக்க சொல்லிவ்ட்டு தாண்டி நீ டிரஸ் போட்டுகொள்வாய் போல இருக்கு. அதற்க்கும் அவள் பதில் சிரிப்புதான்.
ஒரு நாள் நான் வனஜாவுடன் அவள் பிரென்ட் வீட்டுக்கு போய் ஒரு ப்ளூ பிலிம் பார்த்து விட்டு வந்தேன். சுப்பர் படம். அதை பார்த்தது முதல் என் புண்டை அரிப்பு ஆரம்பித்து விட்டது. எதையாவது எடுத்து குத்தி கொள்ள வேண்டும் போல வெறி வந்தது. இரவு படுத்துக்கொண்டு இருக்கும்போது என்னை அறியாமல் ராணி மீது கால் போட்டேன். அவள் அசந்து தூங்கி கொண்டு இருந்தாள். என் உணர்ச்சியை கட்டு படுத்த முடியாமல் அவளை கொஞ்சம் கட்டிக்கொண்டு அவள் முலை மீது கை வைத்து அமுக்கினேன். போன வருடம் கூட இது போல நானும் வனஜாவும் பண்ணி இருக்கோம். அன்று அந்த நீல படம் பார்த்தது என்னை என்னவோ செய்தது. கொஞ்சம் அவள் முலையை விட்டு அவள் கீழே கைவைத்தேன். சற்று வித்யாசமாக பட்டது. என் உணர்ச்சியில் ஒன்றும் புரியவில்லை. அவள் புண்டையில் கொஞ்சம் கை வைத்து கொல்ள்ளலாம் என்று அவள் நைடியை தூக்கி பார்த்தபோது, எனக்கு ஒரு பெரிய ஷாக் அடித்தது. எங்கள் போல அவளுக்கு புண்டை இல்லை. ஆம்பிளை போல ஒரு சுன்னி இருந்தது. அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன் அவள் பெண்ணும் இல்லை ஆணும் இல்லை. ஷி மேல் என்று. என்ன செய்கிறோம் என்று புரியாமல் அவள் சுன்னியை அழுத்தி பிடித்து உருவினேன். அவள் தூக்கி வரி போட்டது போல எழுந்து விட்டாள். என்னடி இந்து என்று கண்ணால் கேட்டேன். அவள் அழுது விட்டாள் . நான் அவள் பக்கத்தில் ஒக்கார்ந்து கொண்டு ஏண்டி அழுகிறாய் என்று கேட்டேன். அவள் சொன்னாள். என்னை பாரு என்று தன் டிரெஸ்ஸை கழட்டி காமிசாள், சுமார் ஆறு இன்ச் நீளத்தில் ரொம்பவும் தடி இல்லாமல் பூள் இருந்தது அவளுக்கு. மேலே முலை. கீழே புண்டைக்கு பதில் சுன்னி. அவள் சொன்னாள். தயவு பண்ணி யாரிடம் சொல்லாதே. என் மானமே போய் விடும். காலேஜில் சேரும் போது கூட பெண் என்று தான் ரிஜிஸ்தர் பண்ணி இருக்கேன். நான் நாலு வரும் முன்பு டாக்டரும் காண்பித்தேன். அவர் ஆபரேசன் பண்ணி சரி பண்ணி விடலாம். ஆனால் அது கொஞ்சம் ரிஸ்க் என்றார். அத்துடன் அதை விட்டு விட்டேன். என் அப்பா அம்மா தவிர யாருக்கும் தெரியாது. எங்கள் வீட்டில் நான் ஒருத்தி மட்டும் தான். தயவு பண்ணி என்னை மாட்டி விடாதே என்று சொல்லி மீண்டும் அழுதா. நான் அவளை அன்புடம் அணைத்துக்கொண்டு சாரிடி ராணி கவலை படாதே. நான் யாரிடம் சொல்ல மாடேன். இன்று உன்னிடம் சொல்ல வில்லை. நானும் வனஜாவும் அவள் பிரென்ட் வீட்டில் ப்ளூ பிலிம் பார்த்தோம். அதன் காரணமாக என்னை கட்டு படுத்த முடியவில்லை. போன வருடம் இதே போல ப்ளூ பார்த்த அன்று இரவு நானும் வனஜாவும் கட்டி பிடித்து கொண்டோம். அவள் என் முலையை சப்பினா. நானும் அவள் பாசியில் வாய் வைத்து நக்கினேன். இருவரும் புண்டைகளில் கை வைத்து அமுக்கி கொண்டோம் . விரல் கூட விட்டு குடைந்தோம். அது போல பண்ணலாம் என்று தாண்டி உன் நைடியை தூக்கினேன். ரொம்ப சாரிடி., என்னை மன்னித்து விடு என்றேன்.
இப்போ ராணி ரொம்ப தெளிவாக பதில் சொன்னாள்.
ஷீலா நீ பண்ணினது கொஞ்சம் கூட தப்பே இல்லைடி. நான் உன் மாதிரி இருந்து இருந்தா இந்நேரம் உன் புண்டையை நக்கி இருப்பேன். நம் உணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். என் நிலைமையை பாரு. நான் கொஞ்சம் படித்து ஒரு வேலைக்கு போய் என் காலில் நிக்க வேண்டும். எனக்கு நிச்சயம் கல்யாணாம் ஆகாது. அந்த சுகம் வேண்டாம். என்னால் உனக்கு சுகம் கிடைக்குமானால், நான் நிச்சயமாக அதை தருகிறேன். நாம் மனித பிறவி எடுத்தது பிறருக்கு உதவி பண்ண தாண்டி. நீ கொஞ்சம் கூட கவலை படாமல், வெக்க படாமல் என்ன வேண்டுமே அதை நீ பண்ணு. ஆனால் தயவு பண்ணி இதை பெரிசு பண்ணி விடாதே. மற்றவர்கள் என்னை கேலி பண்ணுவார்கள். காலேஜில் டிஸ்மிஸ் பண்ணி விடுவார்கள். நான் படித்து டிகிரி வாங்கி வேலைக்கு போக வேண்டும். நீ தான் உதவி பண்ண வேண்டும். இதுக்கு மறு உதவியாக, நீ என்ன சொல்கிறாயோ அதை நான் பண்ணுகிறேன்.
நான் சொன்னேன்: ராணி நீ ரொம்ப உசந்த மனுசிடி. உன்னை போல குணம் யாருக்கும் வராது. உன்னை போல் பெண்களுக்கு ஆண்டவன் ஏன் தான் இந்த கொடுமையை பண்ணினான். சத்தியம் பண்ணி தருகிறேன். நான் யாருக்கும் சொல்ல மாடேன். நீ அனுமதி கொடுத்தா தான் உன்னை தொட கூட செய்வேன். அவள் சொன்னாள்: போடி பைத்தியம். உனக்கு இருக்கும் உணர்ச்சியில் பாதி கூட எனக்கு இருக்கதா. உன்னைப்போல நானும் மற்ற குணங்களில் பெண் தாண்டி. செக்ஸில் நானும் நீயும் ஒன்னு தாண்டி. உனக்கு பூள் தேவை எனக்கு புண்டை தேவை. ராணி இப்படி பேசுவாள் என்று நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. அவள் மேலும் சொன்னாள்: ஒரு பத்து நாட்களுக்கு முன்னால், வனஜா ஓப்பதை பற்றி பேசினபின், நீ வனஜா ரூமுக்கு போன சமயம், நான் கை அடித்து என் ஆசையை போக்கி கொண்டேனடி. அதுனால் நீ கவலை படாமல் என்னை என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ. மேலும் கொஞ்சம் தளர்த்தி கொள்கிறேன். உன்னை பற்றியும் உன் உயிர் தோழி வனஜா பற்றியும் கொஞ்சம் தெரியும். இந்த சமாசாரத்தை உன்னால் வனஜாவிடம் சொல்லாமல் இருக்க முடியாது. நான் உன் நிலைமையில் இருந்தாலும் அப்படிதான். அதனால் நீ வனஜாவிடம் மட்டும் என் நிலைமையை பற்றி சொல்லு. வேறு யாரிடம் சொல்லாதே.
நான் சொன்னேன்: உன் குணத்துக்கு முன்னால் எங்களால் நிக்க கூட முடியாதுடி. என் நிலைமையை நன்கு புரிந்து நீ சொல்லி விட்டாய். நான் வனஜாவிடம் மட்டும் சொல்ல்கிறேன். அவள் யாரிடமும் சொல்ல மாட்டாள் என்று உறுதி சொல்கிறேனடி.இப்படி அவள் கதையை கேட்டதால், என் காஜி போய் விட்டது. அவள் முலை புண்டை நக்கலாம் என்று வெறியுடன் இருந்த நான் இப்போ அடங்கி போனேன். ஆனால் ராணி விட வில்லை. பாவம்டி நீ. ஆசையுடன் என்னை நக்க வந்தாய். நான் போய் உன் மூடை கெடுத்து விட்டேன்.பரவா இல்லை. நீ என்ன பண்ண வேணுமோ, அதை இப்போ நீ பண்ணி என்று சொல்லி நான் எதிர் பார்க்காமலேயே அவள் டிரஸ் பூரா கழட்டி போட்டு விட்டு என் முன்னால் நின்றாள். அவளின் முலை, தண்டையை பார்த்தவுடன் என்னால் என் உணர்சிகளை கட்டு படுத்த முடியவில்லை. நான் அவளிடம் நெருங்கி அவள் முலையை கொஞ்சம் அம்முகிவிட்டு நக்கினேன். ஒரு கையால் அவளின் தடியை பிடித்தேன். நான் பிடித்தவுடன் அது கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபம் எடுத்தது. சுமார் மூணு நிமிடங்களுக்குள் அது இரும்பு தடி போல ஆகி விட்டது. ஒரு கையால் அதை உருவி கொண்டும் மறு கையால் ராணியின் முலையை அமுக்கி கொண்டு இருக்கும்போது அவள் என் முலை மீது கை வச்சு அமுக்கினால். நானும் உடனே என் ஆடைகளை களைந்து அவள் போல நிர்வாணமா இருந்து அவளை பெடில் படுக்க வச்சு அவள் முலைகளை சப்ப தொடங்கினேன். அவளின் தடியோ நட்டுக்கொண்டு இருந்தது. மாலையில் பார்த்தா ப்ளூ பிலிம் நினவுக்கு வந்தவுடன், அவள் முலையை விட்டு விட்டு அவளின் சுன்னியை சப்பினேன். அவளுக்கும் ஒரே ஆனந்தம். இன்னும் நல்ல பண்ணுடி என் குட்டின்னு அவள் மெய் மறந்து சொன்னாள். எங்களைப்போலவே அவளும் தன் சுன்னி பகுதியில் கொஞ்சமாக முடியை விட்டு மத்த இடத்தை க்ளீனாக வைத்துகொண்டு இருந்தாள். இப்போ என் நிலைக்கு வருவோம். சப்ப சுன்னி கிடைத்தவுடன் என் புண்டை பூரித்து விட்டது. எனக்கே ஆர்ச்சர்யம். மாலை நீல படம் பாக்கும்போது கூட என் புண்டையில் தண்ணி ஊரியதே தவிர இந்த அளவுக்கு அது ஒப்ப வில்லை. ராணியின் பூளை பார்த்தவுடன் என் புண்டை ஒப்ப ஆரம்பித்தது. கொஞ்ச நேரம் அவள் பூளை நக்கிய பின், நான் மல்லாக்க படுத்துக்கொண்டு அவளை பண்ண சொன்னேன். அவள் காத்து கொண்டு இருந்தாள். என்ன இருந்தாலும் ஒரு புண்டையை பார்த்தவுடன் அவளுக்கும் வெறி கிளம்பி விட்டது. என் முளையை கொஞ்ச நேரம் சப்பிவிட்டு, என் புண்டையில் நாக்கை விட்டு குடைந்தாள், என்னால் கட்டுபடுத்தமுடியாமல், அவள் தலையை நன்கு என் புண்டையில் வைத்து அழுத்தினேன். அவளும் என் புண்டையை நன்கு விரித்துகொண்டு நாக்கை முழுவதும் உள்ளே விட்டு சுயட்டினாள்.
ஐயோ அம்மா என்று சத்தம் போட்டுகொண்டு என் கூதி சூசை கொட்டினேன் . அவள் அதை கொஞ்சம் கொஞ்சமாக நக்கி எனக்கு முத்தம் கொடுத்து அதை என் வாய்க்கு மாற்றினால் . ராணி போறும்டி என் பொறுமையை சோதித்தது. உன் பூளை என் புண்டையில் விட்டு குத்துடி. என்னால் இனி தாங்க முடியாது என்று சொல்லி அவளின் பூளை பிடித்து என் புண்டையில் அழுத்தினேன். நானும் அவளுக்கு ஏற்றவாறு கால்களை நன்கு விரித்து கொடுத்தேன். அவள் தன் பூளை என் புண்டையில் கொஞ்சம் கொஞ்சமாக சொருகினா. என்ன இருந்தாலும் ஒரு ஆணின் சுன்னி போல் இரும்பு தடி போல் இல்லாமல் ஆனால் கொஞ்சம் விரைப்பகவும் இருந்தது அவள் பூள். மெதுவாக அவள் தன் பூளை என் புண்டையில் இறக்கினாள். என்னை போலவே அவளுக்கும் இது முதல் அனுபவம். கொஞ்சம் பலம் கொண்டு அவள் பூளை என் புண்டையில் குத்தினா. என்ன தான் நன் விரல் விட்டு இருந்தாலும், அவள் சுன்னி போகும் போது என் புண்டை வலித்தது. இந்த மாதிரி ஆறு எழு முறை பண்ணியதும், என் புண்டை கொஞ்சம் விரிந்து கொடுத்தது. இப்போது அவள் சுன்னி என் கூதியில் சுலபமாக போய் வந்தது. இன்னும் நாலு குத்தில், அவள் எக்ஸ்பர்ட் ஆகி விட்டாள்.
ஆண்கள் ஒப்பது போலவே என் புண்டையில் ஒத்து கொண்டு இருந்தாள். இடையில் என் முலைகளை நன்கு கசக்கியும் அழுத்தியும் இன்பம் தந்தாள் . இந்த முறை எனக்கு சீக்கிரமே உச்சம் வந்தது. என் ஜூசால் அவள் சுன்னி உள்ளே போய் வர ஈஸியாக இருந்தது. அவளும் இன்னும் மூணு முறை ஒத்து விட்டு அவள் கஞ்சியை கொட்டினா. ஆனால் கஞ்சி மிக சிறிய அளவே வந்தது. அவள் சொன்னாள் அவளுக்கு கை அடிக்கும்போது கஞ்சி கொஞ்சம் தான் வருமாம். இவர்கள் போல இருப்பவர்கள் எந்த பெண்ணின் கூதியில் ஒத்து கஞ்சியை கொட்டினாலும், ப்ரெக்னன்ட் அக்கா முடியாதம். அலி போன்ற பெண்களின் சுன்னியில் இருந்து வரதும் கஞ்சிக்கு வீரியம் மிகவும் குறைவாம். அவள் சொன்னாள்: இதுவும் கூட ரொம்ப நல்லது ஷீலா. நான் எதனை தடவை உன்னை ஒத்தாலும் , நீ கவலை படவேண்டாம். அவள் கஞ்சியை கொட்டிவிட்டு, பூளை உருவிக்கொண்டு பக்கத்தில் படுத்தாள். பின் நாங்கள் இருவரும் பாத் ரூம் போய் அலம்பி கொண்டு வந்து உடம்பில் துணி இல்லாமல் படுத்தோம்.
மறு நாள் நான், வனஜா, ராணி மூவரும் மதியம் கிளாசுக்கு போக வில்லை. நான் மெதுவாக இந்த டாபிக்கை ஆரம்பித்தேன். வனஜா நான் சொல்லுவதை முழுவதும் கேட்டு விட்டு, ராணி பக்கத்தில் போய் அவளை கட்டி பிடித்து ஒரு முத்தம் கொடுத்து விட்டு, ராணி ரொம்ப சர்ரிடி. நீ வேண்டுமானால் இன்னும் ஒரு முறை வேறு நல்ல டாகரிடம் போய் காண்பி என்றாள். ராணி அதற்க்கு வேலை இல்லை. முடிவு பண்ணிஆகி விட்டது. என் அப்பா அம்மாவுக்கும் கொஞ்சம் வருத்தம். இதில் நாம் என்ன பண்ண முடியும். வெளி உலகத்துக்கு எங்க அப்ப அம்மா எங்க பொண்ணு கல்யாணம் பண்ணிக்க போவதில்லை. எங்களுடன் தான் சேர்ந்து இருக்க போகிறா என்று சொல்லுவார்கள்.
நானும் எப்படியோ காலத்தை தள்ளி விடுவேன் என்று விரக்தியாக சொன்னாள். அதுக்கு வனஜா அப்படி சொல்லாதே ராணி. நாங்கள் உன் பிரென்ட். உனக்கு என்ன தேவையோ அதை தேடி தருகிறோம். எங்களால் ஆனா உதவிகளை செய்வோம் என்றாள். ராணி சொன்னாள் இப்போ ஒரு உதவி தேவை. சிரித்து கொண்டு சொன்னாள் நீங்க ரெண்டு பேரும் உயிர் தோழிகள். நானும் உங்கள் கூட சேர்ந்து கொள்கிறேன். அவள் அப்படி சொன்னவுடன் நாங்கள் ரெண்டு பேரும் அவள் கைகளை பற்றிக்கொண்டு நிச்சயம் என்று சொன்னோம்.
நாங்கள் அன்று மாலை வெளியே சென்றோம். அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்தோம். ராணி வனஜாவிடம் நீ ரூமுக்கு போய் டிரஸ் மாற்றி கொண்டு எங்கள் ரூமுக்கு வா இன்னும் கொஞ்சம் பேசுவோம் என்றாள். நானும் ராணியும் ரூமுக்கு போய் டிரஸ் மாதி, நைடியை போட்டு கொண்டோம். வனஜாவும் உடனே வந்து விட்டாள். அவளும் நைட்டிபோட்டுகொண்டு வந்தாள்.
அப்போ ராணி சொன்னா. நேற்று இரவு ஷீலாவுக்கு கிடைத்தது இன்று வனஜாவுக்கு கிடைக்க வேண்டாமா. நானும் வனஜா புண்டையை பார்க்க வேண்டாமான்னு சொல்லி அவள் முலையில் ஒரு கை, அவள் புண்டையில் ஒரு கையை வைத்து அழுத்தினாள். வணஜவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. ராணியே வனஜாவின் நைடியை கயடினாள். தானும் தன் உடைகளை கயட்டி விட்டு, பேன்ட்டி பிராவுடன் நின்றாள். வனஜாவை பெடில் மல்லாக்க படுக்க வைத்து அவளின் பேன்ட்டி பிராவை ராணி காட்டினா. என்னை பண்ணியதை போலவே மெதுவாக வனஜாவின் முலைகளை அமுக்கி விட்டாள். வனஜாவுக்கு என்னை விட முலைகள் கொஞ்சம் பெரிசு. முலைகளை அமுக்கியும், முலை காம்பி கடித்தும் நாக்கினால். வனஜா ஆனந்த கூச்சல் போட்டாள். உடனே ராணி அவள் புண்டையில் கை வைத்து அமுக்கி புண்டை பிளவில் ஒரு விரலை விட்டு குத்தினா. என்னை போல இல்லாமல், வனஜா புண்டை முடி கிளீன் பண்ணி நாள் ஆச்சு போல் இருக்கு. நன்கு முடி வளர்ந்து இருந்தது. ராணி சொன்னாள். புண்டைக்கு முடி அழகுடி. முடி உள்ள புண்டை தண்டி பெஸ்ட் புண்டை.வனஜாவும் ராணியின் பூளை பிடித்துகொண்டு இருந்தாள். இப்போ ராணி வனஜாவை ஒக்க ரெடியாக இருந்தாள். நான் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தேன். இவர்கள் நிர்வாணமாக இருப்பதாய் பார்த்தவுடன், என் புண்டை சுரக்க தொடங்கியது. என்னை பார்த்து ராணி சொன்னா: டி என்னடி நீ நினச்சு கொண்டு இருக்கே. நாங்க ரெண்டு பேரும் ஒக்க போரம். நீ என்னடான்ன டிரஸ் கூட கயட்டவில்லை. சீக்கிரம் அதை தூக்கி போட்டு விட்டு ராணியின் முலைகளை சப்புடி . அவள் உன் புண்டையில் விரல் போடுவா என்று எனக்கு கட்டளை இட்டா. அவள் சொன்ன அடுத்த நிமிடமே நான் அவள் சொன்ன மாதிரி வனஜா பக்கத்தில் ஒக்கார்ந்து கொண்டு அவள் முலைகளை சப்பினேன். வணஜாவோ கண்களை மூடிக்கொண்டு பினதிநாள். ஆனால் அவள் ரெண்டு விரல்கள் என் புண்டைக்குள் புகுந்து விட்டன. இப்போ ராணி நேற்று இரவு என்னை ஒத்தது போலவே வனஜாவை ஒத்தாள். என்னவோ தெரியவில்லை இன்னிக்கி ராணிக்கு உடனே கஞ்சி வந்து விட்டது. கஞ்சியை கொட்டியவுடன் தன் பூளை உருவினாள். வனஜா அருகில் படுத்து கொண்டு எங்களை அவளின் முலைகளை சப்ப சொன்னாள். நானும் வனஜாவும் ஆளுக்கு ஒரு முலை வீதம் சப்பினோம். வனஜா கொஞ்ச நேரம் கழித்து அவளின் பூளையும் ஊம்பினாள். அன்று இரவு இது போல் இன்னும் ஒரு முறை ஓதோம். ராணி கஞ்சி வரும் போல இருக்குடி பென்ன்களே என்று கூச்சல் போட்டாள். வனஜா அவல் பூளை விடாமல் நன்கு ஆட்டி கொண்டே இருந்தாள். ராணியின் உடம்பு முர்க்கி ஏறி அவள் ஐயோ அம்மா என்று சத்தம் போட்டாள். உடனே அவள் பூளில் இருந்து கஞ்சி பீச்சி அடிச்சது. வனஜா கை, என் கை மற்றும் ராணியின் சுன்னி பகுதியில் கஞ்சி பீச்சி அடிச்சது. அவள் பூள் சுரங்க கொஞ்ச நேரம் ஆச்சு. .
நாங்கள் இப்போது அடிக்கடி ஒக்கறோம். நான் ராணியின் முலைகளை சப்புவேன். வனஜா அவளின் பூளை வாயில் வைத்துகொண்டு ப்ளூட் வாசிப்பால். பின் நான் ஒரு முறை அவள் பூளை ஊம்பி கஞ்சியை கொண்டு வருவேன். ராணியோ எங்கள் இரண்டு பேரையும் பக்கத்தில் படுக்க வச்சு வனஜா புண்டையில் அவள் பூளை சொருகி ஒப்பாள். அப்போது என் புண்டையில் ரெண்டு விரல்களை விட்டு கொடைவா.அல்லது என்னை ஒத்து கொண்டே வனஜாவின் முலைகளை அம்முகுவா. எனக்ளுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போதெல்லாம் ராணி கூச்ச படுவதில்லை. இரவில் பாதி நாள் உடம்பி ஒன்றும் இல்லாமல் படுக்கிறாள். காலையில் பார்த்தல், அவள் பூள் நட்டுக்கொண்டு இருக்கும். அதை செல்லமாக தாடி விட்டுதான் நான் பல் விளக்கவே போவேன். எங்கள் இந்த உறவு இன்னும் தொடர்கிறது.
என் பெயர் வேந்தன், வயது 22. நான் நல்ல உயரம். கிட்டத்தட்ட ஆறடி இருப்பேன். திரையரங்கு ஒன்றில் ஆப்பரேட்டராக வேலை செய்கிறேன். ஆப்பரேட்டர் அறை எப்போதும் சூடாக இருப்பதால், வேலைக்கு வேட்டி, சட்டையில் தான் போவேன். சென்னையில் நடந்த ஒரு வித்தியாசமான சம்பவத்தை பற்றி சொல்கிறேன். நான் சென்ட்ரலில் ஏறி , தாம்பரத்தில் இருக்கும் என் வீட்டுக்கு ரயிலில் தான் போவேன். முக்கால் வாசிப் பெண்கள் மகளிர் மட்டும் பெட்டியில் போவதால், பெண்களை கூட்டத்தில் இடிப்பதும், புட்டங்களைத் தடவுவதும், கவனமாகக் காயடிப்பதும், முடியாமல் போய்விடும். வீட்டுக்குப் போனவுடன், கம்ப்யூட்டரை ஆன் செய்து தளத்தைப் பார்த்து, தினம் தினம் புது பெண்களைப் பார்த்து , கீபோர்டிலேயே கஞ்சியை கக்கிவிடுவேன். ஒரு நாள் ரொம்ப நேரம் வேலை பார்த்துவிட்டு, கிட்டதட்ட ஒம்பது மணிக்கு சென்ட்ரல் ஸ்டேஷனில் ரயிலைப் பிடித்தேன்.
நச நச வென்று ஒரே கூட்டம். விளக்குகள் வேறு சரியாக எரியாமல் சற்று இருட்டாக இருந்த்தால்,மேல் சட்டையில் பர்ஸை அடிக்கடி தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இரண்டு நிறுத்தங்களுக்குப் பிறகு, மேலும் கூட்டமாக ஏற, ரொம்பவும் எரிச்சலாக நின்று, அரைத்
தூக்கம் தூங்க முயன்றேன். சில நிமிடங்கள் கண் அயர்ந்ததும், என் தொடை பகுதியில் யாரோ சூடாக மூச்சு விடுவது போல இருந்த்து. நானோ யாரோ சின்ன பையனோ, பொண்ணோ என்று கண் விழித்துப் பார்த்தால், ஒரு குள்ளமான பெண் கூட்டத்தில் என் அருகே நின்று கொண்டிருந்தாள்.
அவள் வெறும் மூன்றடி, அல்லது அதற்கும் குறைவான உயரம் என்பதால் அவள் முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால், அவள் புடவை அணிந்து தலை முடியை பின்னி இருந்த்ததால் அவள் ஒரு குள்ளச்சி என்பதை புரிந்து கொண்டேன். அவளோ கூட்ட நெரிசலால் வேறு வழியில்லாமல் என் பூலின் அருகே அவள் முகத்தை வைத்து நின்று கொண்டிருந்தாள்.அவள் மூச்சு விட விட என் சாமான் மெல்ல உப்ப ஆரம்பித்தது.என் வேட்டி பெரிதாகி, என் சாமான் அவள் கன்னத்தில் உராய்வதை உணர்ந்தேன். ‘சே, இன்னைக்கு ஜட்டி போடாமல் வந்து இருக்கலாமே’ என்று மனதுக்குள் அங்கலாய்த்துக் கொண்டே, காலகள் சற்று அகலமாக வைத்து, என் சாமானை அவள் முகத்தில் வைத்துத் தேய்த்தேன். அவளோ நான் அவளை உழைப்பெடுப்பதை உணர்ந்து என்னை நிமிர்ந்து பார்த்தாள். அப்போது அரை இருட்டில் அவள் முகம் ஒரு சின்ன பெண்ணைப் போல வட்டமாக, பெரிய கண்களுடன் அழகாகத் தெரிந்தது.
நானோ இதுதான் சாக்கு என்று என் சாமானை வேட்டியோடு அவள் உதட்டின் மேல் வைத்து லேசாக உரசினேன்.என் தம்பி ஜட்டியை கிழித்துக்கொண்டு வெளியே வந்து விடுவான் போல இருந்தது. அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை, அவள் முகத்தை நகர்த்தாமல் என் பூலின் அருகிலேயே வைத்து அவள் வாயை என் வேட்டி மேல் வைத்துக் கொண்டிட்ருந்த்தாள். நான் ஒரு கையால் மேலே கம்பியை (ரயில் கம்பி, ஹிஹி) பிடித்துக்கொண்டு, வலது கையை கீழே போட்டேன். என் கை, அவள் முலைகளை வருடியது. “இதுதான் கடைசி டெஸ்ட், இதற்கும் இவள் கூச்சல் போடவில்லை என்றால், நம் இஷ்டம் போல புகுந்து
விளையாடலாம் “என்று நினைத்துக் கொண்டேன். அவளோ மெல்ல என் கையை தட்டி விட்டாள். நானோ மறுபடி அவள் முலையின் மேல் கையை வைத்தேன். அவள் என் கையை எடுத்து விட முயன்றாள். நானோ என் கையை வலுவோடு அவள் காயின் மேல் வைத்து பிசைய ஆரம்பித்தேன். அவளோ அவள் கையை என் கையின் மேல் வைத்து வலுவில்லாமல் பிடித்துக் கொண்டிருந்தாள். எனக்கு ஏக சந்தோஷம். அவள் முந்தானையை மெல்ல நீக்கி, அவள் ஜாக்கெட்டுக்குள் என் கையை நுழைத்தேன். அப்பா, என்ன ஒரு முலை! அவள் குள்ளமாக இருந்தா
அவள் குள்ளமாக இருந்தாலும் அவள் முலை நல்லா குஷ்பூ இட்லி போல பருத்து இருந்தது. அவள் முலைக் காம்பு மட்டுமே ஒரு அரை இன்ச் இருக்கும் போல தோன்றியது. காயடிப்பதை நிறுத்தி விட்டு, மெல்ல என் வேட்டியை மடித்து, நன்றாக தூக்கி இடுப்புக்கு மேல்
கட்டினேன். மெல்ல ஜட்டியை சட்டென்று கீழே இறக்கி விட்டுக் கொண்டேன். இப்போது அவளுடைய சூடான மூச்சு காற்று என் பூலின் மேல் நேரடியாக வீசத் தொடங்கியது. அவளுடைய வாய்க்குள் என் சுண்ணியை திணிக்க முயன்றேன். அவளோ தன் வாயை மூடிக் கொண்டு முரண்டு பிடித்தாள். என் கையை அவள் கன்னத்தில் மேல் வைத்து லேசாக தடவினேன்.பிறகு என் ஆள் காட்டி விரலையும் நடுவிரலையும் அவள் வாய்க்குள் நுழைத்தேன். இரண்டு விரலையும் அவள் வாய்க்குள்ளே விட்டு நன்றாக விரித்தேன். திறந்த அவள் வாய்க்குள் என் சாமானை நுழைத்தேன். என் சுண்ணி அவள் தொண்டையை
தொட்டது.அவள் என் சுண்ணியை வாய்க்குள் வைத்து நன்றாக உறிஞ்ச தொடங்கினாள்.அவள் நான் மடித்துக் கட்டியிருந்த வேட்டியை கீழே அவிழ்த்து விட்டாள். இப்போது நான்
பழைய படி நான் வேட்டி கட்டி இருக்க, அவள் என் வேட்டிக்குள்ளே புகுந்து கொண்டாள்.
கன்றுக்குட்டி பால் குடிப்பது போல் என் பூலை முட்டி முட்டி சப்ப ஆரம்பித்தாள். அதற்குள்
திரிசூலம் ஸ்டேஷன் வந்து விட்டது. அவளோ என் கொட்டைகளை நக்கி நக்கி, ஒவ்வொரு
கொட்டையாக வாயிலே போட்டு சப்பினாள். நானோ என் இரண்டு கைகளயும் மேலே
கம்பிகளை பிடித்த படி, கால்களை விரித்து ஹாயாக நின்று கொண்டிருந்தேன். அவள்
சானடோரியம் ஸ்டேஷன் நெருங்கியதும், வேட்டியிலிருந்து வெளியே வந்தாள். தன்
முந்தானையை சரி செய்து இறங்கும் வழியிலே போய் நின்று கொண்டாள். எனக்கோ
அவளை எப்படியாவது ஓக்க வேண்டும் என்ற வெறியில் என்ன செய்வது என்று புரியாமல்
அவள் பின்னாலேயே போய் நின்றேன்.
அவள் பின்னாலேயே இறங்கி, அவளை பின் தொடர்ந்தேன். அவளோ, ரயிவே ஸ்டேஷனை தாண்டி, ரயில்வே கேட்டை தாண்டி, இருட்டான ஒரு சின்ன ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள். நான் சுற்றும் முற்றும் பார்த்தேன், சாலையில் யாருமே இல்லை. அவள் அருகே நடந்த படி, அவள் பின் புறத்தை சற்றே குனிந்த படி தட்டினேன். அவளோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, “என்ன, என் கூதியில் உன் பூல விட்டு ஆட்டனுமா?” என்று பச்சையாக கேட்டாள். “ஆட்டறது மட்டுமில்ல, உன் புண்டைய ஓத்தே கிழிக்கணும்” என்று பதிலுக்கு நானும் சொன்னேன். அருகிலுள்ள புதருக்கு பின்னே சென்று என் வேட்டிய உருவி, பாயைப் போல கீழே விரித்தேன். “வேட்டிய விரிச்சுட்டேன், பதிலுக்கு படுத்து உன் கூதிய விரிக்கக் கூடாதா?” என்று கேட்டேன். அவளோ, ஒரு தேவடியா மாதிரி சிரிச்ச படி வேட்டி மேல் படுத்து, புடவையை மேலே தூக்கினாள். உள்ளே ஜட்டி போடாமல், அவள் புண்டை நிலா வெளிச்சத்தில் தெரிந்தது. அவள் புண்டையில் சில பூனை முடிகள் மட்டுமே இருந்தன.
ஒரு வேளை இந்த மாதிரி குள்ளமாக இருப்பவர்களுக்கு கூதி மயிர் முளைக்காது
போலும் என்று நினைத்த படி, அவள் புண்டையை ஒரு நாயை போல நன்றாக நக்கினேன். அவள் புண்டை ஈரமாகுவதை உணர்ந்து சட்டென்று அவள் மேல் படுத்து ஓக்க ஆரம்பித்தேன். அவளுடைய புண்டை ரொம்ப சின்னதாகவும், ரொம்ப டைட்டாகவும் இருந்த்தால், உள்ளே விட்டு , அடி அடி என்று அடித்தேன். அவளோ “என் கூதியில கொஞ்சம் கொழுப்பு இருக்கு, அதை அடக்கு” என்று எனக்கு மேலும் வெறியேற்றினாள். ஒரு 12 நிமிடம் ஓத்த பின்பு, அவள், “நாய் மாதிரி நக்கனா மட்டும் போதுமா, நாய் மாதிரி ஓக்க வேண்டாமா” என்று
திரும்பி, முட்டி போட்டு, இரண்டு, கைகளையும், கால்களையும் வைத்து, “ம்ம், இப்ப அடி இந்த குள்ளச்சி கூதிய” என்றாள். நானோ அவள் கூதியை இரண்டு கைகளாலும் விரித்து, என் பூலை ஆழமாக இறக்கினேன். அவளோ “அம்மா, அம்மா” என்று அரற்றினாள். இடிக்க இடிக்க என் பாம்பு விஷத்தை கக்க தயார் ஆனது.அவளோ, “ம்ம் உள்ளேயே, கஞ்சியை ரிலீஸ் பண்ணு, எனக்கு ஒன்னும் ஆகாது” என்று சொல்ல என் தண்டு, புஸ் புஸ் என்று அவள் புண்டையில் சூடாக கஞ்சியை இறக்கினேன். அவள் ” நாளைக்கு எத்தனை மணி ட்ரெயின்ல வருவ” என்று கேட்க, எங்கள் போன் நம்பர்களை பரிமாறிக் கொண்டு, விடை பெற்றோம்.
'கண்ணிழந்தான்.. பெற்றிழந்தான்.. எனவுழந்தான்..' என்கிற கம்பராமாயண வரிகள் கொண்டு.. அசோக்கின் மனநிலையை கொஞ்சமேனும் அளந்திட, அறிந்திட முயலுவோம்..!! கண்பார்வையற்ற மனிதவாழ்வு மிகவும் கொடுமையானதொரு வாழ்வுதானே.. கனவென்ற போலிமகிழ்ச்சி பெறவும் கொடுத்துவைத்திடாத வாழ்வுதானே..?? பிறவியிலிருந்தே பார்வையற்ற ஒருவனின் மனநிலை எப்படி இருக்கும்.. தொடுகிற பொருட்களின் தோற்றம் கண்டிட துடிக்கும் அவனது ஏக்கம் எப்படி இருக்கும்..?? துயரம்தானே..??
அதைவிட பெருந்துயரம் எது தெரியுமா..?? மண்ணில் ஜீவித்த நாள்முதலாய், கண்ணில் ஜீவனன்றி வாழும் ஒருவனுக்கு.. விழிகளில் ஒளி கொடுத்து.. வெளிச்ச வெள்ளத்தில் அவனை நனைத்து.. உலகின் அழகை அவனுக்கு உணர்த்தி.. வண்ணங்களின் அற்புதத்தை அக்கண்களில் வார்த்து.. கண்பார்வையின் அருமையை முழுதாக அறியவைத்து.. பிறந்ததன் பலனை அடைந்துவிட்டதாய் அவன் பறந்து திரிகையில்.. மீண்டும் அவனது பார்வையை பறித்து இருளில் தள்ளினால்.. அவனது மனநிலை எப்படி இருக்கும்..?? முன்பிருந்ததைவிட பெருந்துயரம்தானே..??
காதலும் கூட கண்பார்வை போன்றதுதான்.. அசோக்கின் நிலையும்கூட கிட்டத்தட்ட அத்தனை கொடிதுதான்..!! பெரியவன் ஆனதிலிருந்தே பெண் நட்பு அறியாதவன்.. காதலர்களுக்கு மத்தியிலே காலம் சென்றாலும், அவனுக்கென்று ஒரு காதல் அமையப் பெறாதவன்.. வெளியிலே வெறுப்பென்று நடித்து திரிந்தாலும், உள்ளுக்குள் காதலுக்காக உண்மையாய் ஏங்கியவன்..!! தேடியிருந்த தேவதையாய் மீரா அவன் வாழ்வில் வந்தாள்.. பெண்ணின் ஸ்பரிஸத்தை அவனுக்கு உணர்த்தினாள்.. காதலெனும் உன்னத உணர்வை அவனுக்குள் ஊற்றினாள்.. அந்த உணர்வு தந்த ஆனந்தத்தில் அவன் திளைத்துக் கொண்டிருக்கும்போதே.. கண்ணைப் பிடுங்கிப் போனது மாதிரி.. அவனது காதலைப் பறித்துச் சென்றால்..??
அசோக்கையும் அவன் மனநிலையையும் யாருமே துல்லியமாக புரிந்துகொள்ளவில்லை என்றுதான் சொல்லியாக வேண்டும்..!! அவன் மீராவின் மீது கொண்டிருந்த கண்மூடித்தனமான காதலாலும்.. அவளை அடையமுடியாமல் போய்விடுமோ என்கிற அச்சுறுத்தலாலும்.. மனதளவில் தளர்ந்து போயிருந்தான்.. புத்தியளவில் குழம்பி போயிருந்தான்..!! நம்பிக்கையான வார்த்தைகளையே அவன் மனம் நாடியது.. தெளிவான வழிகாட்டலே அவன் புத்திக்கு தேவையாயிருந்தது..!! ஆனால்.. அவனுக்கு கிடைத்தது என்ன..??
ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. அசோக்கின் நண்பர்களும் சரி.. அவனது குடும்பத்தாரும் சரி.. அவனிடம் அன்பு கொண்டிருந்தார்களே ஒழிய.. அவனது அவசியத்தை அறிந்துகொண்டார்கள் இல்லை..!! அவன் மீதிருந்த அன்பின் காரணமாக.. அவனது நிலையை பார்க்க சகியாமல்.. அவநம்பிக்கையான வார்த்தைகளை சிந்திவிட்டனர்..!! அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மை புரியவில்லை.. அவநம்பிக்கையை ஊட்டுகிற அன்பு எப்போதுமே.. மனித மனதில் மறுதலையான மாற்றத்தையே தோற்றுவிக்க கூடும்..!! அசோக்கின் மனதிலும் அத்தகைய மாற்றமே..!!
பதைபதைப்புடன் படிக்கட்டு ஏறிய பாரதி, மூச்சிரைக்க அசோக்கின் அறையை வந்தடைந்தாள்.. அவரசமாக கதவை திறந்து, அறைக்குள் பார்வையை வீசினாள்..!! உள்ளே அவள் கண்டகாட்சியில்.. ஒருவித நிம்மதியும், குழப்பமும் ஒருசேர அவளுடைய முகத்தில் படர்ந்தன..!! அசோக் சுயநினைவுடன் இருந்ததினால் வந்தது அந்த நிம்மதி.. குழப்பத்துக்கு காரணம் அவன் அமர்ந்திருந்த நிலை..!!
கால்கள் தரையில் பதிந்திருக்க கட்டிலில் அமர்ந்திருந்தான்.. முழங்கைகளை தொடைகளில் ஊன்றி, முகத்தினை உள்ளங்கைகளில் கவிழ்த்திருந்தான்.. மூச்சு விடுவதற்கு சாட்சியாய் அவனது முதுகு விரிந்து சுருங்கிக் கொண்டிருந்தது..!! அடுத்து என்ன செய்வது என்று புரியாத ஒரு சூனிய உணர்வில் ஆழ்ந்திருக்கிறான் என்பதினை.. அவன் அமர்ந்திருந்த தோற்றத்தில் இருந்தே அறிந்துகொள்ள முடிந்தது..!!
பதற்றம் குறையாத பாரதியின் உடல் இன்னும் நடுங்கிக்கொண்டிருக்க.. படியேறி ஓடிவந்ததில் அவளது நெஞ்சுக்கூடு காற்றுக்காக அடித்துக்கொண்டு கிடக்க.. அதற்குள்ளாகவே சப்தம் கேட்டு அசோக் தலையை நிமிர்ந்து பார்த்தான்..!! வாசலில் தாயின் உருவம் கண்டதும்.. அவனது நெற்றியில் உடனடியாய் ஒரு சுருக்கம்..!! அதுவும்.. அவள் வந்து நின்றிருக்கிற கோலம் அவனை சற்றே திகைப்பில் ஆழ்த்தியது..!!
ஒருசில வினாடிகள்தான்.. அசோக்கிற்கு புரிந்து போனது.. வாசலில் அவள் நின்ற கோலமும், வந்திருப்பதற்கான காரணமும்..!! சிறிது தடுமாறியவன், பிறகு பொறுமையாக பக்கவாட்டில் திரும்பினான்.. கையை நீளமாக்கி சற்றே எட்டி அதை எடுத்தான்.. எடுத்ததை பிறகு உள்ளங்கையில் வைத்து அம்மாவிடம் நீட்டினான்.. தூக்க மாத்திரைகள் நிரம்பிய டப்பா..!!
வாசலின் இருபுறமும் கையூன்றி நின்று.. மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கிக்கொண்டிருந்த பாரதி.. இப்போது அறைக்குள் மெல்ல அடியெடுத்து வைத்தாள்..!! மகனை நெருங்கியவள்.. அவன் கையிலிருந்த டப்பாவை கைப்பற்றிக்கொண்டாள்..!! அவளுடைய முகத்தில் இன்னமும் முழுநிம்மதி வந்திருக்கவில்லை.. அச்சம் இன்னும் மிச்சம் இருந்தது..!! அம்மாவின் எண்ண ஓட்டம் அசோக்கிற்கு புரிந்திருக்கவேண்டும்..!!
"சா..சாப்பிடலாம்னுதான் எடுத்துட்டு வந்தேன்.. சாப்பிடல..!!"
தளர்வான குரலில் சொன்னவன்.. தலையை மெல்ல குனிந்துகொண்டான்..!! பாரதி இப்போது மகனின் தாடையை பற்றி.. அவனது முகத்தை நிமிர்த்தினாள்..!! அம்மாவை ஏறிட்டு அவளது கூர்மையான பார்வையை சந்தித்த அசோக்கிற்கு.. தனது வார்த்தைகளில் அவளுக்கு நம்பிக்கையில்லை என்று தோன்றியது..!!
"சாப்பிடல மம்மி.. ப்ராமிஸ்..!!" என்றான் சற்றே சலிப்பாக.பாரதிக்கு இப்போது மகனின் வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது.. அவளிடம் இருந்து ஒரு நிம்மதி பெருமூச்சு வெளிப்பட்டது.. 'என்னாயிற்றோ ஏதாயிற்றோ' என்று பதைபதைப்புடன் ஓடிவந்திருந்ததில், அவளது இருதயம்தான் இன்னும் 'படக் படக்' என துடித்துக்கொண்டிருந்தது..!! படபடப்பை குறைக்கும் பொருட்டு.. பாரதியும் அசோக்கின் அருகாக மெத்தையில் பொத்தென்று அமர்ந்தாள்..!! கையிலிருந்த டப்பாவை அருகிலிருந்த மேஜையில் வைத்துவிட்டு.. கண்களை மூடி.. சுவாசத்தை சீராக்கிக்கொள்ள முயற்சித்தாள்..!!
"ஆ..ஆனா.. கூடிய சீக்கிரத்துல எனக்கு அந்த நெலமை வந்துடுமோன்னு பயமா இருக்கு மம்மி..!!"
அசோக் அவ்வாறு சொன்னதும்.. பாரதி இப்போது தலையை திருப்பி.. பக்கவாட்டில் தெரிந்த மகனின் முகத்தை கலவரமாக பார்த்தாள்..!! அம்மாவை கவனியாத அசோக்.. எங்கேயோ வெறித்து பார்த்தபடி தொடர்ந்து பேசினான்..!!
"ஆளாளுக்கு அவளை மறந்துடு மறந்துடுன்னு சொல்றீங்க..!! எ..என்னால முடியல மம்மி.. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், என்னால அவளை மறக்க முடியும்னு எனக்கு தோணல..!!"
"..............................."
"அவளோட பிரச்சினையை சொல்லி கஷ்டப்படுத்தக்கூட விரும்பாம.. என்னைவிட்டு பிரிஞ்சு போயிருக்கா.. எந்த அளவுக்கு என்னை உண்மையா நேசிச்சிருக்கணும்.. எந்த அளவுக்கு எதையுமே எதிர்பார்க்காம என்மேல அவளுக்கு காதல் வந்திருக்கணும்..?? அந்த மாதிரி ஒருத்தியை எப்படி என்னால மறக்க முடியும் மம்மி..??"
"..............................."
"அவளை மறக்கனும்னா இதுதான் ஒரே வழி.. அதான்..!!"
"..............................."
"ஏ..ஏதோ ஒருவேகத்துல எடுத்துட்டு வந்துட்டேன்.. ஆனா சாப்பிட போறப்போ.. என்னன்னவோ யோசனை மம்மி..!! நீ.. டாடி.. சங்கி.. தாத்தா, பாட்டி.. ஃப்ரண்ட்ஸ்..!! ரொம்ப கஷ்டமா இருந்தது..!!"
"..............................." அமைதியாக மகனின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த பாரதிக்கு, இப்போது கண்களில் முணுக்கென்று கண்ணீர் பூத்தது.
"அ..அவகூடதான் என் லைஃப்னு.. நான் எப்போவோ முழுசா நம்பிட்டேன் மம்மி.. மனசுக்குள்ள என்னல்லாம் ஆசை தெரியுமா..?? இப்போ.. 'அவ இல்லாம ஒரு லைஃப் இருக்குது.. அடம்புடிக்காம வாழ்ந்துபாரு'ன்னு.. நீங்க எல்லாரும் சொல்றப்போ.. என்னால அதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல மம்மி..!! அந்த லைஃப் மேலேயே எனக்கு வெறுப்பா வருது..!!"
அசோக் சொல்ல சொல்ல.. பாரதியின் மூளைக்குள் பலவித யோசனைகள்..!! அவளும் மற்றவர்களும் செய்த தவறு, இப்போது அவளுக்கு தெளிவாக புரிந்தது.. ஆறுதலும், நம்பிக்கையும் நாடியவனுக்கு அவநம்பிக்கையை கொடுத்துவிட்ட தவறு..!! தாங்கள் செய்த அந்த தவறை உடனே சரி செய்தாகவேண்டும் என்று அவளுக்கு தோன்றியது.. இல்லாவிட்டால் ஆசையாக வளர்த்த மகனை அநியாயமாக இழக்க நேரிடும் என்றும் புரிந்தது..!!
அதே நேரம்.. அசோக் செய்த தவறும் அவளுடைய மனதை தைக்காமல் இல்லை.. அதையும் அவனுக்கு சுருக்கென சுட்டிக்காட்ட வேண்டும் என்று நினைத்தாள்..!! இனி இந்த மாதிரி எண்ணம் அவனுக்கு என்றுமே தோன்றக்கூடாது..!! மனதுக்குள்ளேயே ஒரு கணக்கு போட்டவள்.. சற்றே தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. குரலிலும் ஒரு கடுமையை கூட்டிக்கொண்டு.. பட்டென்று சொன்னாள்..!!
"சரி எங்களுக்குத்தான் அறிவு இல்ல.. உனக்கு எங்க போச்சு புத்தி..??"
பாரதி திடீரென அந்தமாதிரி கேட்பாள் என்று அசோக் எதிர்பார்த்திரவில்லை.. பேசிக்கொண்டிருந்தவன் பேச்சை படக்கென நிறுத்தினான்.. முகத்தில் ஒருவித திகைப்புடன் அம்மாவை திரும்பி பார்த்தான்..!! சற்றே தடுமாற்றமான குரலில்..
"எ..என்ன சொல்ற.." என்றான்.
"பின்ன என்ன..?? நாங்க 'மறந்துடு'ன்னு சொன்னா.. 'என்னால மறக்க முடியாது.. உங்க வேலையை பாத்துட்டு போங்க'ன்னு மூஞ்சில அடிச்சமாதிரி நீ சொல்ல வேண்டியதுதான..?? 'அவ கெடைக்க மாட்டா'ன்னு சொன்னா.. 'கண்டுபிடிக்கிறனா இல்லையா பாருங்க'ன்னு சவால் விட வேண்டியதுதான..?? குடிச்சுட்டு கண்டவன் கூட ரோட்ல சண்டை போடுறதுக்கு பதிலா.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு வேற ஏதாவது வழி இருக்கான்னு யோசிச்சிருக்கலாம்ல..??"
பாரதி படபடவென பேசப்பேச.. அசோக்கின் மனதில் ஒரு புதுவித உணர்வு பரவ ஆரம்பித்தது..!! இரண்டு வாரங்களாக இருந்த இறுக்க உணர்வை தளர்த்த ஆரம்பித்த, ஒரு இலகுவான உணர்வு.. தளர்ந்து போயிருந்த அவனது இதயத்திற்கு தைரியமூட்டுகிற மாதிரியான நம்பிக்கை உணர்வு..!! பாரதி தொடர்ந்து பேசினாள்..!!
"அடுத்தவங்க சொல்றதைக்கேட்டு உனக்கா ஒரு வைராக்கியம் வந்திருக்கனும்.. 'இதுக்குலாம் உடைஞ்சு போயிடக்கூடாது.. அவளை தேடிக்கண்டுபிடிச்சு எல்லார் முன்னாடியும் நிறுத்தனும்..!! அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து.. பேரன் பேத்தியை அவங்க கொஞ்சுறப்போ.. ஒருகாலத்துல என்னல்லாம் சொன்னீங்கன்னு கேலி பண்ணனும்..!!' அந்த மாதிரிலாம் உனக்கு வைராக்கியம் வந்திருந்தா.. உனக்கும் புத்தி இருக்குன்னு அர்த்தம்..!!"
..............................."
"அதைலாம் விட்டுட்டு.. இப்படி தம்மடிக்கிறதும், தண்ணியடிக்கிறதும், பொலம்புறதும், சண்டை போடுறதும்.. என்னடா இதெல்லாம்..?? அதெல்லாம் பாக்குறப்போ எங்க மனசு என்னபாடு படும்னு கொஞ்சமாவது நெனச்சு பாத்தியா..?? பத்தாக்கொறைக்கு மாத்திரை டப்பாவை வேற தூக்கிட்டு வந்துட்டான்.. புத்திசாலிப்புள்ள..!!"
பாரதி இகழ்ச்சியாக சொல்ல.. அசோக் தலையை தொங்கப் போட்டுக்கொண்டான்..!! அவனுக்குமே இப்போது அவன் செய்த தவறு தெளிவாக விளங்கிற்று..!! தனக்கிருந்த மன அழுத்தைத்தை அப்பட்டமாக வெளியே காட்டி.. தன்மீது அன்பு வைத்திருந்தவர்களை பயமுறுத்திவிட்டோம் என்று தோன்றியது.. தைரியம் இழந்தது தவறென்று புரிந்தது..!!
"உன் காதல் உண்மையானதுதானடா..??" பாரதி திடீரென கேட்க, அசோக் திகைத்துப் போனான்.
"எ..என்ன மம்மி இப்படி கேக்குற..??"
"ப்ச்.. சொல்லுடா..!! உன் காதல் உண்மையானதுதான..??"
"ஆ..ஆமாம்..!! அதுல என்ன உனக்கு சந்தேகம்..??"
"உன் காதல் மேல உனக்கு நம்பிக்கை இருக்கா..??"
"கா..காதல் மேல நம்பிக்கையா.. அ..அப்படினா..?? என்ன கேக்க வர்றன்னு எனக்கு புரியல..!!"
அசோக் குழப்பமாக அம்மாவின் முகத்தை ஏறிட.. இவள் இப்போது சற்றே நிதானித்தாள்..!! எதைச்சொல்லி மகனுக்கு புரியவைப்பது என்று ஒருசில வினாடிகள் யோசித்தாள்..!! பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய்.. பார்வையை வேறெங்கோ திருப்பிக்கொண்டு.. மெல்லிய குரலில் ஆரம்பித்தாள்..!!
"உன் அப்பாவோட எழுத்தை மட்டுந்தான் நான் அப்போ பாத்திருக்குறேன் அசோக்.. வேற எதுவும் எனக்கு அறிமுகம் இல்ல.. அவரு கருப்பா செவப்பான்னு கூட எனக்கு தெரியாது.. அவரோட குரலை கூட மெட்ராஸ்க்கு கெளம்புறதுக்கு மொதநாள்தான் கேட்டேன்..!! வீட்டுக்கு பின்னாடி இருக்குற ஆத்துக்கு போறதுக்கே அவ்வளவு பயப்படுற பாரதிதான்.. ஐநூறு கிலோமீட்டர் தனியா தாண்டி வந்தேன்..!! உடம்பெல்லாம் ரத்தம் வடிய.. கைல காசு இல்லாம.. கால்ல செருப்பு இல்லாம.. கட்டின பொடவையோட.. முன்னப்பின்ன அறிமுகமே இல்லாத ஊருக்கு..!! எந்த நம்பிக்கைல வந்தேன்னு நெனைக்கிற..??" பாரதி கேட்டுவிட்டு மகனை கூர்மையாக பார்க்க,
"..............................." அவனிடம் எந்த பதிலும் இல்லை.
"காலங்காத்தால நாலு மணிக்குலாம்.. கொஞ்சம் சீக்கிரமாவே.. அந்த ட்ரெயின் மெட்ராஸ் வந்துடுச்சு.. கொட்டுற பனில.. சென்ட்ரல் ஸ்டேஷன்ல தன்னந்தனியா நின்னுட்டு இருந்தேன்..!! யாராரோ வர்றாங்க போறாங்க.. ஒருமாதிரி பாக்குறாங்க.. பேச்சு குடுக்குறாங்க.. அம்மாக்கு ரொம்ப பயமா இருந்துச்சுடா..!!"
"..............................."
"உன் அப்பா வந்து சேர்றதுக்கு அரை மணி நேரம் ஆச்சு..!! அந்த அரைமணி நேரமும்.. 'எப்போடா அவர் வருவாரு.. அவர் நெஞ்சுல சாஞ்சு ஓன்னு அழலாம்..'னு நெனச்சுட்டு இருந்தேனே ஒழிய.. ஒரு செகண்ட் கூட.. 'அவரு வருவரோ வரமாட்டாரோ'ன்னு என் மனசு சந்தேகப்படல அசோக்.. சத்தியமா..!!"
"..............................."
"என் காதல் மேல எனக்கு அவ்வளவு நம்பிக்கைடா.. 'நம்ம காதல் உண்மையானது.. அது நம்மள கஷ்டத்துல தள்ளிடாது'ன்னு ரொம்ப நம்பிக்கை..!! இன்னைக்கு எனக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கெடைச்சிருக்குன்னா.. அதுக்கு காரணம், என் காதல் மேல நான் வச்சிருந்த நம்பிக்கைனாலதான்..!! அந்த நம்பிக்கை உன் காதல் மேல உனக்கு இருக்கா..?? ஒரு நல்ல வாழ்க்கையை அந்தக்காதல் அமைச்சு குடுக்கும்னு.. உன் மனசார நம்புறியா..??"
"..............................." அசோக் அமைதியாகவும், திகைப்பாகவும் பார்த்துக்கொண்டிருக்க, பாரதியே தொடர்ந்தாள்.
"நம்பு.. உன் காதலை முழுசா நம்பு..!! காதலும் கூட கடவுள் மாதிரிதான்டா.. நம்புனவங்களை சோதிக்கும்.. ஆனா கைவிடாது..!! காதலுக்கு உண்மையா இருந்தா மட்டும் பத்தாது.. உண்மையான அந்த காதல் மேல அசைக்கமுடியாத நம்பிக்கையும் வைக்கணும்..!! இது ரெண்டும் இருந்துட்டா.. அந்த காதலே உங்களை சேர்த்து வைக்கும்..!!"
மிக உறுதியான குரலில் சொல்லி முடித்தாள்..!! அசோக் எதுவுமே பேசத்தோன்றாதவனாய் அமர்ந்திருந்தான்.. அம்மா சொன்ன வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தையே, அவன் மனம் அசை போட்டுக்கொண்டிருந்தது..!! அந்த அர்த்தம் புரிய புரிய.. இருண்டு போயிருந்த அவனது இதயத்தில்.. மெலிதாக ஒரு ஒளிக்கீற்று எட்டிப்பார்த்தது..!!
தீவிர யோசனையில் இருக்கும் மகனையே.. பாரதி சிறிது நேரம் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மகனின் மனநிலை இப்போது அவளுக்கு தெளிவாக புரிய.. அவள் மனதில் ஒரு நிம்மதி..!! அந்த நிம்மதி அவளது முகத்திலும் பரவ.. பெருமூச்சொன்றை வெளிப்படுத்தியவாறே.. கட்டிலில் இருந்து எழுந்துகொண்டாள்..!!
"சரிடா.. அம்மா கெளம்புறேன்.. தலைக்கு மேல வேலை இருக்குது.. பாத்திரம்லாம் அப்டியே கெடக்குது.. கழுவி எடுத்து வச்சுட்டு டிபன் ரெடி பண்ணனும்.. மாமா வேற கால்வலின்னாரு.. போய் தைலம் தேச்சு விடனும்.. எந்திரிக்கிறப்போ காபி ரெடியா இல்லைன்னா, உன் தங்கச்சி வேற பேயாட்டம் ஆடுவா..!! ஹ்ம்ம்... நீ குளிச்சுட்டு சீக்கிரம் கீழ வா.. நைட்டு வேற சாப்பிடல.. வயிறுலாம் காஞ்சு போய் கெடக்கும்.. வந்து சுடச்சுட ஒரு பத்து இட்லியாவது இன்னைக்கு சாப்பிடனும்.. சரியா..!!"
மிக இயல்பாக சொல்லிக்கொண்டே அறைவாசலை நோக்கி நடக்கிற அம்மாவை.. அசோக் வித்தியாசமாக பார்த்தான்..!! அடுத்த கணமே.. மேஜை மீதிருந்த தூக்கமாத்திரை டப்பா அவனது கண்களில் படவும்.. அவசரமாக அவளை அழைத்தான்..!!
"ம..மம்மி.."
"ம்ம்..??" பாரதி திரும்பி பார்த்து கேட்டாள்.
"இ..இது.. இ..இந்த டப்பா.." அசோக் இழுத்தான்.
"ஆங்.. அதுக்கென்ன..??"
"இல்ல.. இ..இங்கயே வச்சுட்டு போயிட்ட..??"
"ஹ்ம்ம்.. நல்லாருக்கே..!! நான் என்ன உனக்கு எடுபுடியா..?? நீதான எடுத்துட்டு வந்த.. நீயே போய் எடுத்த எடத்துல வச்சுடு..!!"
கிண்டலான குரலில் சொல்லிவிட்டு பாரதி புன்னகைக்க.. அசோக்காலும் அவனுடைய உதட்டில் கசிந்திட்ட ஒரு புன்முறுவலை கட்டுப்படுத்த முடியவில்லை.. நீண்ட நாட்களுக்கு அப்புறம் அவனது இதழ்களில் பூத்துக்கொண்ட மெலிதான ஒரு புன்னகை அது..!!
"தேங்க்ஸ் மம்மி..!!" என்றான், திரும்பி நடக்கிற பாரதியின் முதுகை பார்த்து.
அசோக்கிடம் ஒருவித அலட்சியத்துடன் பேசிவிட்டு வந்திருந்தாலும்.. பாரதியின் மூளை என்னவோ உள்ளே ஆர்ப்பரித்துக்கொண்டுதான் இருந்தது.. படி இறங்கியவளின் முகத்தில் அப்படி ஒரு சீரியஸ்னஸ்..!! மகனின் நிலை பற்றி பலவிதமான சிந்தனைகள்.. அடுத்து என்னென்ன செய்வது என்பது மாதிரியான கேள்விக்குறிகள்.. அவசர அவசரமாக ஆனால் மிக தெளிவாக எடுக்கப்பட்ட சில முடிவுகள்..!! படியிறங்கி கீழ் தளத்திற்கு வந்த பாரதி..
"பாரதீஈஈ.. அம்மா பாரதீஈஈ..!!"
என்று இன்னமும் ஈனஸ்வரத்தில் முனகிக்கொண்டிருந்த மாமனாரை.. தற்காலிகமாக அலட்சியம் செய்தாள்..!! சுவற்றோடு ஒட்டியிருந்த அந்த டெலிஃபோனைத்தான் முதலில் அணுகினாள்.. டயல் செய்துவிட்டு ரிஸீவரை காதில் பொருத்திக்கொண்டாள்.. அடுத்த முனையில் இருந்து 'ஹலோ' ஒலித்ததும்..
"ஆங்.. பவானி.. அத்தை பேசுறேன்மா..!!" என்றாள்.
அதன்பிறகு வந்த ஒருவாரம்.. பத்து நாட்கள்..!! அசோக் முழுமையாக மாறிப்போனான் என்று சொல்ல இயலாது.. ஆனால் குறிப்பிடத் தகுந்த மாதிரியாக சில மாற்றங்கள் அவனிடம்..!! அவனுடைய நினைவு எப்போதும் மீராவைத்தான் சுற்றி வந்தது.. அவளை இழந்துவிட்ட துக்கம் அவன் மனதில் எப்போதுமே உறைந்து கிடந்தது.. ஆனால்.. முன்பு மாதிரி கழிவிரக்கத்தில் மூழ்கி அவன் சோர்ந்திருக்கவில்லை.. புகையினாலும், மதுவினாலும் அவனது சிந்தனையை சிதைத்துக் கொள்ளவில்லை..!! மாறாக.. உரம் கொண்டதென நெஞ்சினை மாற்றிக்கொள்ள முயன்றான்.. உடைந்து போய்விடக்கூடாதென உறுதியாய் இருந்தான்..!!
மீராவை கண்டுபிடிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று.. திரும்ப திரும்ப யோசித்து பார்த்தான்..!! மீராவுடனான பழைய நினைவுகளை எல்லாம்.. மீண்டும் மீண்டும் அசை போட்டான்.. ஏதாவது வழி தென்பட்டுவிடாதா என ஏங்கினான்..!! எந்த ஒரு வழியும் அவனது புத்திக்கு புலப்படவில்லை.. அதற்காக அவன் தளர்ந்து போய் விடவும் இல்லை.. மறுபடியும் வேறொரு நினைவை அசைபோட்டு.. அவனது முயற்சியை தொடர்ந்துகொண்டே இருந்தான்..!!
அம்மா உதிர்த்த அறிவுரைகள் அவனுக்கு உபயோகமானதாய் இருந்தன..!! அத்தனை நாள் காதலுக்கு உண்மையாய் இருந்தவன்.. அதன்பிறகு .. உண்மையான அந்தக்காதல் மீது உறுதியான நம்பிக்கையும் வைக்க நினைத்தான்..!! வாழ்க்கையில் இடர்பாடுகளை சந்திக்க நேருகிற வறியவர்கள்.. 'எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்' என்று.. கடவுள் மேல் பாரத்தை போடுவது போல.. ஆசைக்காதலியின் அழகுமுகம் காணத்துடித்த அசோக்.. 'எங்க காதல் எங்களை சேர்த்து வைக்கும்' என்பது மாதிரி.. காதல் மேல் தனது பாரத்தை போட்டான்..!!
பாரதி அன்று பேசுகையில்.. 'அவளை கண்டுபிடிச்சு.. அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து..' என்கிற ரீதிரில்.. ஒரு எதிர்கால கனவுடன் அவன் மனதில் நம்பிக்கையூட்ட முயன்றவிதம்.. அசோக்கை பொறுத்தவரையில் மிக சக்தி வாய்ந்ததாக அமைந்தது..!! அவனது மனம் சோர்ந்து போக ஆரம்பிக்கும் போதெல்லாம்.. அம்மா சொன்ன அந்த வார்த்தைகளையே அசோக் நினைவுறுத்திக் கொள்வான்..!! சட்டென்று ஒரு எதிர்கால கனவில் மூழ்க ஆரம்பித்து விடுவான்.. அந்த கனவு முழுக்க மீராவே நிறைந்திருப்பாள்..!!
திடீரென இவன் எதிரே வந்து நிற்பாள்.. திணறிப்போகிற மாதிரி இறுக்கி அணைத்துக் கொள்வாள்.. 'உன்னை பாக்காம என்னால இருக்க முடியலடா' என்று இவன் மார்பில் முகம் புதைத்து அழுவாள்..!! கன்னங்களில் வழிகிற நீர் துடைத்து இவன் கனிவுமொழி பேச.. கண்கள் இரண்டும் திறந்து வைத்து அவள் காதலாக பார்ப்பாள்..!! காதல்க்கதிர்வீச்சு நடத்துகிற அந்த காந்தப்பார்வையில்.. இவன் கசிந்துருகி, கவர்ந்திழுக்கப்பட்டு, கவனம் தடுமாறி நிற்கையில்.. அவள் இமைகளை மூடிக்கொள்வாள்.. இதழ்களை திறந்து வைப்பாள்..!! 'அமுதம் பருகிக்கொள்.. அதனையே பகிர்ந்தும்கொள்..' என.. அசைவேதுமின்றியே அழைப்பு விடுப்பாள்..!!
உதடுகள் உரசிக்கொள்ளும்.. உடனடியாய் ஒரு தீப்பிடிக்கும்..!! உதட்டுவரிப் பள்ளத்தில்.. உமிழ்நீர் என்கிற பெயரினில்.. சுரந்து வடிகிற தேனொன்றே.. சுகமான அத்தீயினை மூட்டியிருக்கும்..!! ஆசை ஏக்கம் அத்தனையும்.. அதரம் சுவைத்தே அடுத்தவருக்கு அறிவித்திட முயல்வர்..!! முத்தம் இவனை முரடனாக்கும்.. காதலனின் வேகம் அவளை கர்வம் கொள்ள வைக்கும்..!! இதழில் நடக்கும் வன்முறைக்கு.. அவளும் இயன்ற அளவு ஒத்துழைப்பாள்..!!
முத்தம் முடிந்து நெடுநேரம் ஆகியும்.. மூடிய இமைகளோடு.. முகமெல்லாம் உணர்ச்சி கொப்பளிக்க நின்றிருப்பாள்..!! அவள் உதட்டில் மினுமினுக்கும் முத்த ஈரத்தினை.. விரலினால் இவன் துடைக்க.. விழிகள் திறந்து கொள்ளும் அவளுக்கு..!! உதட்டினை உடனடியாய் உள்ளே மடித்துக் கொள்வாள்.. எச்சில் மிச்சத்தை நாவால் தடவி சுவை ருசிப்பாள்..!! கண்களில் பளிச்சென ஒரு மின்னல் பிறந்திட.. கன்னங்களில் அழகாய் ஒரு பள்ளம் தோன்றிட.. காதலும் குறும்பும் கலந்த குரலில் கேட்பாள்..!!
"கல்யாணம் பண்ணிக்கலாமா..??"
பட்டு உடலை தொட்டுப் போர்த்திய பட்டுப்புடவையும்.. மலர்ப்பந்து மார்பினில் வந்து புரண்டிடும் மலர்மணமாலையும்.. நடுவகிடு வழியிறங்கி நெற்றி தவழும் சுட்டியும்.. நாசியின் நடுத்தண்டுதனில் தொங்கி மேலுதடு முத்தமிடும் புல்லாக்கும்.. அஞ்சனம் பூசிய வண்டின கண்களும்.. சந்தனம் தடவிய பஞ்சின கன்னங்களுமாய்.. குத்துக்கால் இட்டமர்ந்து.. குனிந்ததலை குனிந்தேயிருக்க.. மணமகளோடு குணமகளுமாக மாறிப்போய்.. மந்திரத்தோடு வாத்தியமும் சேர்ந்தொலித்திட.. மஞ்சளால் ஆனதொரு மங்கலநாணினை வாங்கிக்கொள்வாள்.. மாலைகளை தோள்மாற்றிக்கொண்டு மனைவியும் ஆகிப் போவாள்..!!
அட்சதை தலையில் படிந்திருக்கும்.. ஆசீர்வாதம்பெற தரையில் பரவுவார்கள்.. அத்தையின் காலில் விழுந்து கிடக்கும் அவள்.. அப்பாவின் பாதம் பணிந்திருக்கிற இவனை பார்த்து.. குறும்பாக கண்சிமிட்டி குழிவிழுகிற கன்னத்தோடு சிரிப்பாள்..!!கல்யாணம் முடிந்துவிடும்.. கனவோட்டம் முடிந்திடாது.. முதலிரவு தேனிலவென முடிவிலாமல் முன்னேறும்..!! நெஞ்சத்தில் பூத்திருந்தவள் மஞ்சத்தில் வீற்றிருப்பாள்.. நேரங்காலம் தெரியாமல் வெட்கமுற்று வெறுப்பேற்றுவாள்..!! தாகம் முற்றிப்போன இவன் மாராப்பினை பற்றியிழுக்க.. தளிர்க்கரங்களால் அவள் மலர்க்குவியல்கள் மறைத்திடுவாள்..!! ஆசையெனும் ஆயுதம் ஏந்தி.. நாணமெனும் கோட்டையை தகர்த்து.. ஆடையெனும் பகைவனை வெல்வார்கள்.. உள்ளத்தால் ஒன்றானவர்கள், இப்போது உடலாலும் உறவாடுவார்கள்..!! இவனது வேகம் அவளுக்கு பிடிக்கும்.. அவளது வியர்வையும் இவனுக்கு மணக்கும்..!! நெற்றிக் குங்குமம் ஈரத்தில் கரையும்.. மெத்தை மல்லிகை மோகத்தில் கசங்கும்..!! உஷ்ணம் கொண்டு உடல்கள் தகிக்கும்.. உச்சம் கண்டும் தேடல்கள் தொடரும்..!! பகல்ப்பொழுதுகளே பகையாகிப் போகும்.. இருமனங்களுமே இரவுக்கென ஏங்கும்..!!
"உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. வா..!!"
தனியாக அழைத்து செல்வாள்.. தனது அடிவயிறு திறந்து காட்டுவாள்..!! புரியாமல் இவன் விழிக்க.. 'புத்தூ' என்று தலையில் தட்டுவாள்..!! கருத்தரித்த செய்தியை காதோரமாய் கிசுகிசுப்பாள்..!! ஆனந்தத்தில் இவன் திளைத்துக் கொண்டிருக்க.. அவளும் அதே ஆனந்தத்தில் விழைந்த கண்ணீரோடு..
"தேங்க்ஸ்டா..!!" என்று பைத்தியம் போல் உளறுவாள்.
வயிறு பெரிதாகிப்போக அவள் இடுப்பு பிடித்து நடப்பாள்.. கர்ப்பிணி மனைவிக்கு இவன் கால் அமுக்கி விடுவான்..!! அகம் இருப்பவனை நெஞ்சில் சாய்த்து அவள் தாலாட்டுவாள்.. அடம் பிடிப்பவளை கெஞ்சிக் கூத்தாடி இவன் சாதமூட்டுவான்..!!
"கண்ணு மூக்குலாம் அப்படியே உன்னை மாதிரிதான்..!!"
களைத்துப்போன உடலும், தளர்ந்துபோன குரலுமாய் அவள் சொல்ல.. இவன் கலங்கிப்போன விழிகளுடன், கையிலிருக்கும் குழந்தையை விடுத்து.. மனைவியின் நெற்றியிலேயே முதலில் முத்தம் வைத்திடுவான்..!!
"தேங்க்ஸ்டி..!!" என்று இவன் இப்போது பைத்தியம் போல் உளறுவான்.
ஐந்தே வருடங்கள்.. ஒன்று கழுத்தை பற்றி தொங்கும்.. ஒன்று மீசை பற்றி இழுக்கும்.. ஒன்று தொடையில் விழுந்து கடிக்கும்.. ஒன்று மூக்கில் விரலை நுழைக்கும்.. எல்லாவற்றிற்கும் கடைக்குட்டியோ மடியில் கிடந்துகொண்டு, எட்டி எட்டி இவன் மார்பிலேயே உதைக்கும்..!! ஐந்து குழந்தைகளுடன் இவன் அவஸ்தைப் படுவதை.. அடக்கமுடியா சிரிப்புடன் அவள் பார்த்து ரசிப்பாள்..!!
இந்த மாதிரியாகவே அவனது கனவு நீளும்.. திரும்ப திரும்ப அதே கனவினை காணுவான்.. சற்றேனும் திகட்டிடாது..!!
உறக்கத்தில் காண்கிற கனவு, உறங்கி எழுகையில் உபயோகமில்லாமல் போகலாம்.. விழித்திருக்கையில் காண்கிற கனவு, விழிப்புடனே வைத்திருக்க உதவலாம்..!! அசோக் கண்ட கனவு அவனது மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அடுத்த நாளை நோக்கி அவனது வாழ்க்கையை உந்தித் தள்ளியது.. நனவாக அக்கனவினை மாற்றிட வேண்டுமென.. நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் கொடுத்தது..!!
அசோக்கிடம் மட்டுமில்லாது அவனை சுற்றி இருந்தவர்களிடமும் ஒரு மாற்றத்தை காண முடிந்தது..!! அவனிடம் எதிர்மறையாக பேசுவதை முதலில் விட்டொழித்தார்கள்.. அசோக்கின் மனநிலையை இலகுவாக்குகிற மாதிரியான வார்த்தைகளையே கவனமாக சிந்தினர்.. 'இன்றோ நாளையோ மீரா கிடைத்துவிடப் போகிறாள்' என்பது மாதிரியான கற்பனையை அவர்களுமே மனதுக்குள் வளர்த்துக் கொண்டனர்.. அது அவர்களது பேச்சிலும் வெளிப்பட்டது.. அசோக்கின் மன இறுக்கம் அகல, அது மிக அவசியமாயிருந்தது..!!
"தைரியமா இரு மச்சி.. எங்க போயிட போறா அந்த கோயில்பட்டி வீரலட்சுமி.. புடிச்சிடலாம்..!!" என்று நம்பிக்கையாக சொன்னது, எப்போதும் எதிர்மறையாக பேசுகிற சாலமனேதான்.
எல்லாம் பாரதி இட்ட கட்டளை.. தனது குடும்பத்தாரிடம் மட்டுமில்லாது, அசோக்கின் நண்பர்களிடமும் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தாள்..!! அசோக் தூக்க மாத்திரையை தூக்கி சென்ற விஷயத்தை.. இரண்டு பேரிடம் மட்டுமே பாரதி சொல்லியிருந்தாள்..!! ஒன்று அசோக்கின் அப்பா மணிபாரதியிடம்.. இன்னொன்று கிஷோரின் அக்கா பவானியிடம்..!! பவானியை டெலிஃபோனில் அழைத்த பாரதி.. அன்றே அவளை வீட்டுக்கு வரவழைத்தாள்.. அசோக்கின் நிலையை கவலையுடன் எடுத்துரைத்தாள்..!!
"எப்படி இருந்த எம்புள்ளை இப்படி ஆயிட்டான்.. ஆளாளுக்கு எதை எதையோ சொல்லி அவன் மனசை ரொம்ப நோகடிச்சுட்டோம்..!! அவனை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குது பவானிம்மா..!!" தளர்ந்த குரலில் சொன்ன பாரதிக்கு,
"ப்ச்.. என்னத்தை நீங்க..?? நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா எப்படி..?? ஹ்ம்ம்.. அவனை பத்தி நீங்க இனிமே வொர்ரி பண்ணிக்காதிங்க.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!" பவானி தைரியமூட்டினாள்.
அசோக்கை தனது அரவணைப்புக்குள் எடுத்துக்கொண்டாள் பவானி..!! தனது உறவினன் என்பதை மறந்து.. மனஅழுத்தம் கொண்ட ஒரு பேஷண்ட்டை எப்படி அணுகுவாளோ, அந்த மாதிரி மிக கவனமாக அவனை அணுகினாள்..!! அசோக்கின் நிலை பற்றிய கவலையும், பாரதிக்கு கொடுத்த வாக்குறுதியும் அவள் மனதில் இருந்தன.. ஆனால் அவற்றை எப்போதும் அவளது குரலிலோ, நடவடிக்கையிலோ அவள் காட்டிக்கொண்டது இல்லை..!! இயல்பாக நடந்து கொள்வாள்.. இலகுவான குரலில் பேசுவாள்.. மிக அழகாக அசோக்கின் கவனத்தை திசை திருப்புவாள்.. அவன் அறியாமலே அவன் மனதுக்குள் நம்பிக்கை விதைகளை தூவுவாள்..!! மேற்சொன்ன அசோக்கின் மனமாற்றத்தில் பவானியின் பங்கும் மிக முக்கியமானது..!!
"உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? Stress-ன்றது நம்ம எல்லார்ட்டயுமே இருக்குது அசோக்.. நம்மளோட நார்மல் லைஃப்க்கு அந்த Stress ரொம்ப ரொம்ப essential..!! Stress இல்லாத மனுஷன்னா.. அது ஏதாவது கோமால கெடக்குற பேஷன்ட்தான்..!! என்ன.. அந்த Stress ஒருஅளவுக்கு மேல போறப்போதான் பிரச்னை.. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினா நஞ்சுதான..?? காய்ச்சல் தலைவலி மாதிரிதான் இதுவும்.. கொஞ்சநாள் ட்ரீட்மன்ட் எடுத்துக்கிட்டா எல்லாம் சரியா போய்டும்..!! உன் ஆளு திரும்ப வர்றப்போ.. இப்படியா சீக்குக்கோழி மாதிரி அவ முன்னாடி நிப்ப..?? அப்படியே சிங்கம் மாதிரி நிக்க வேணாம்.. ஹஹா..!! என்ன சொல்ற..??"
"அச்சச்சோ.. அக்காக்கு லேட் ஆயிடுச்சுடா.. உன் பைக்ல என்னை ஹாஸ்பிடல் வரை ட்ராப் பண்றியா..??"
"ம்ம்.. வந்தது வந்துட்ட.. 'Art of Living' class ஆரம்பிக்கப் போகுது.. சும்மா அட்டண்ட் பண்ணி பாக்குறியா..??"
தற்கொலையை முயலாம் என்று அசோக் நினைத்த அன்றே.. அவன் வாழ்தல்கலையை பயிலுமாறு அமைந்து போனது..!! முதல்நாள் அனுபவம் அவனுக்குமே பிடித்திருந்ததால்.. அதன் பிறகு தினமும் அந்த வாழ்தல்கலை வகுப்புக்கு வருகை தர ஆரம்பித்தான்..!! முன்பொருமுறை டாகுமன்ட்ரி எடுப்பதற்காக அங்கே வந்திருந்தபோது அறிமுகமான மும்தாஜ்தான்.. இப்போது அசோக்கிற்கு யோகா பயிற்றுவித்தாள்..!! அசோக்கின் நிலையை பவானியின் மூலமாக மும்தாஜும் ஓரளவு அறிந்திருந்தாள்.. அவளும் அசோக்கிடம் தனிக்கவனம் எடுத்துக் கொண்டாள்..!!
"தலையை மேல கொண்டு போறப்போ மூச்சை நல்லா உள்ள வாங்கணும்.. அப்புறம் தலையை கீழ கொண்டு வர்றப்போ கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணனும்..!!" கண்கள் மூடி அமர்ந்திருந்த அசோக்கின் தாடையை தாங்கியவாறு மும்தாஜ் சொன்னாள்.
"உடம்புன்றது நாம சாப்பிட்ட சாப்பாட்டோட விளைவு.. மனசுன்றது நாம பார்த்த, கேட்ட, படிச்ச விஷயங்களோட விளைவு..!! உடம்பு, மனசு.. இது ரெண்டுமே நாம கெடையாது..!! இது ரெண்டுல இருந்தும் நம்மள நாமளே பிரிச்சு எடுக்குறதுதான் தியானம்..!!" மேடையில் நின்று மும்தாஜ் சொல்ல, தரையில் இன்னும் சிலருடன் அமர்ந்திருந்த அசோக், அதை கவனமாக கேட்டுக்கொண்டான்.
"இந்த உலகத்துல வந்து பொறக்குறதை.. நாம எப்படி முடிவு பண்றது இல்லையோ.. அந்த மாதிரி இந்த உலகத்தை விட்டு போறதையும்.. நாம முடிவு பண்ணக் கூடாது அசோக்..!! அட்வைஸ் பண்றேன்னு நெனச்சுக்காதிங்க.. எனக்கு அந்த அருகதைலாம் இல்ல.. ஹ்ஹ..!! ஏதோ என் மனசுல தோணுனதை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! ம்ம்.. இந்தாங்க..!!" அசோக்கிற்கு தேநீர் கலந்து நீட்டிக்கொண்டே, ஒரு இதமான புன்னகையுடன் மும்தாஜ் சொன்னாள்.
வகுப்பின்போதும்.. வகுப்பு முடிந்து உரையாடுகிறபோதும்.. அசோக்கின் மனக்காயம் ஆறுவதற்கு.. மும்தாஜும் முடிந்த அளவு உபயோகமாக இருந்தாள்..!! மீதி நேரங்களில்.. பவானி தன்னால் இயன்ற அளவுக்கு அசோக்குடன் நேரத்தை செலவழித்து.. அவனது மனமாற்றத்துக்கு பெருவுதவி செய்தாள்..!!
"ஏன் கோவம் வருது..?? உன் மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் இருந்தா.. உனக்கு கோவம் வர்றதுக்கு அவசியமே இல்லையே..?? யாரோ என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு நீ கூலா இரு..!!" - அசோக்குடன் பைக்கில் செல்கையில் பவானி.
"தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுலாம் உனக்கு ஒரு temporary comfort தரலாம் அசோக்.. But.. long termல பாக்குறப்போ.. it's too dangerous..!! உன் ப்ராப்ளத்துக்கு அது சொல்யூஷன் இல்ல..!!" - அலுவலக அறையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கிடம் பவானி.
"ஏண்டா.. அவளுக்கு பிடிக்குமேன்னு ஆசையா வளர்த்தேன்னு சொல்ற.. இப்படியா தண்ணி ஊத்தாம காய விடுறது..?? நாளைக்கு அவ வந்து இதை பாத்தான்னா என்ன நெனைப்பா..?? அவ வர்றவரைக்கும் நீதான் இதை நல்லா கவனிச்சுக்குற.. சரியா..?? மார்னிங், ஈவினிங் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்தணும்.. அவ வந்து பாக்குறப்போ அப்படியே சொக்கிப் போயிடணும்..!!" - வீட்டின் பின்புறமிருந்த மஞ்சள் ரோஜா தோட்டத்தை நோட்டமிட்டவாறே பவானி.
மீராவின் வருகை பற்றி, அசோக் அறியாமல் அவன் மனதில் நம்பிக்கை வளர்ப்பது மட்டுமல்லாமல்.. சில சமயங்கள் நேரிடையாகவே, அசோக்கிடம் மீரா பற்றி பேசி அறிந்துகொள்வாள்..!!
"ஹ்ம்ம்.. தேடுதல் வேட்டை எந்த லெவல்ல இருக்குது..?? ஏதாவது லீட் கெடைச்சதா..?? என்னைக்கு அந்த அழகு மூஞ்சியை என் கண்ணுல காட்டப்போற..??"
"ப்ச்.. எந்த லீடும் கெடைக்கலக்கா.. எல்லாம் அப்படியே ப்ளாங்கா இருக்கு.. ஏதோ இருட்டு ரூமுக்குள்ள குருட்டு பூனை அலையுற மாதிரி இருக்கு..!!"
"ஏண்டா இப்படி பேசுற..?? அவகூட பேசினது பழகினதுலாம் கொஞ்சம் பொறுமையா நெனச்சு பாரு.. ஏதாவது லீட் கெடைக்கும்..!!"
"எல்லாம் நெனச்சு பாத்துட்டேன்க்கா.. எதுவும் பிடிபடல..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..?? நான் உண்மைன்னு நெனச்சது எல்லாமே.. கடைசில பொய்..!! வரைமொறையே இல்லாம பொய் பொய்யா சொல்லிருக்கா.. சரியான புழுகு மூட்டை..!!" அசோக் சொன்னவிதம் பவானிக்கு சிரிப்பை வரவழைத்தது.
"ஹாஹாஹாஹா..!! ஓகே ஓகே..!! ஹ்ம்ம்... சரி.. அப்போ இப்படி பண்ணு.. கொஞ்சம் உல்ட்டாவா திங்க் பண்ணி பாரு.. ஏதாவது யூஸ்ஃபுல் மேட்டர் கெடைக்குதான்னு பாக்கலாம்..!!"
"உல்ட்டானா.. எப்படி..??"
"ம்ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது.. நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..?? அந்த ஆங்கிள்ல யோசிச்சு பாரு..!!"
"ம்க்கும்.. ஏன்க்கா நீங்க வேற..?? நானே கன்ஃப்யூஸ் ஆகிப்போய் கெடக்குறேன்.. நீங்க காமடி பண்ணிட்டு இருக்குறீங்க..??" அசோக் நொந்துபோன குரலில் சொல்ல,
"ஹாஹாஹாஹா..!! காமடி பண்ணலடா.. சீரியஸா சொல்றேன்..!!" பவானி சிரித்தாள்.
பவானியின் சிரிப்பு அசோக்கின் முகத்திலும் புன்னகையை பூக்க செய்தது..!! இந்த மாதிரி.. அசோக்கின் மனநிலை தேறுவதற்கும்.. ஒரு இதமான சூழ்நிலையை அவனுக்கு உருவாக்கி தருவதற்கும்.. அடுத்த நாளின் மீது அவனுக்கு ஒரு பிடித்தத்தை ஏற்படுத்துவதற்கும்.. பாரதி, பவானி, மும்தாஜ் ஆகிய மூன்று பெண்களுமே.. மிக மிக முக்கியமான பங்காற்றியிருந்தனர்..!!
மும்தாஜுடன் முன்பே இருந்த அறிமுகத்துடன்.. இப்போது வகுப்புக்கு வந்த இந்த பத்து நாட்களில்.. அவளுடனான அசோக்கின் நெருக்கம் நிறையவே அதிகரித்திருந்தது..!! மாலை நேரத்தில் வகுப்பு முடிந்தவுடன்.. மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருந்த சிறிய பூங்காவில்.. விளையாடுகிற குழந்தைகளையும், வாக்கிங் செல்கிற நோயாளிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே.. சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிப் போனது..!! ஆரம்பத்தில் பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டவர்கள்.. பிறகு பர்சனல் விஷயங்களைக்கூட பகிர்ந்து கொண்டனர்கள்..!!"இந்த புக் எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்..!! உங்களுக்கு படிக்கிறதுக்கு டைம் இருக்காதுன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும்.. எனக்காக கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. சரியா..??"
மும்தாஜ் நீட்டிய புத்தகத்தை வாங்கிகொண்டான் அசோக்.. பக்கங்கள் நிறைந்த தடிமனான புத்தகம்..!! புன்னகை படிந்திட்ட உதட்டுடன்.. புத்தகத் தலைப்பின் மீது பார்வையை வீசியவனுக்கு.. ஒரு புதுவித ஆச்சரியம்..!!
"தட்டுங்கள் திறக்கப்படும்..!!"
இயேசு கிறிஸ்துவின் போதனைகளை உள்ளடக்கிய புத்தகம் என்பது.. அந்த தலைப்பை பார்த்ததுமே புரிந்து போனது..!! அட்டையை புரட்டி பொருளடக்க பட்டியல் பார்த்து.. அந்த சந்தேகத்தை உறுதியும் செய்துகொண்டான் அசோக்..!! அப்படியே மும்தாஜை ஏறிட்டு.. மெலிதான ஒரு புன்முறுவலுடன் சொன்னான்..!!
"க்ரேட்..!!!"
"எ..என்ன.. என்ன க்ரேட்..??"
"இல்ல.. ஒரு முஸ்லிம் பொண்ணு.. ஒரு ஹிந்து பையனுக்கு.. கிறிஸ்டியன் புக் படிக்க தர்றீங்களே.. அதை சொன்னேன்..!!"
"ஹஹ.. இதுல என்ன இருக்கு..?? நான் எல்லா மத கொள்கைகளையும் படிப்பேன்.. எனக்கு எல்லா மதங்கள் மேலயும் நம்பிக்கை உண்டு..!!"
"ஓ..!! எனக்கு எந்த மதத்துலயும் நம்பிக்கை இல்லை..!!"
"ம்ம்.. தெரியும்..!! இந்த புக் படிச்சு பாருங்க.. அந்த நம்பிக்கை வர சான்ஸ் இருக்கு..!! மனுஷங்க பண்ற தப்புக்கு மதங்கள் என்ன பண்ணும்னு தோணும்..??"
"அப்படி என்ன ஸ்பெஷல் இந்த புக்ல..??"
"ம்ம்ம்ம்ம்.. எப்படின்னு சொல்ல தெரியல..!! ஜீசஸோட வாழ்க்கை சரிதம்.. அவரோட எண்ணங்கள்.. போதனைகள்.. எல்லாம் படிக்கிறப்போ.. மனசு அப்படியே ப்யூர் ஆகிப்போய்.. ஒருமாதிரி லேசான ஃபீல் கெடைக்கும்..!! புத்தில ஏதாவது குழப்பம் இருந்தா.. அது உடனே சரியாகிடும்..!! படிச்சு பாருங்க.. உங்களுக்கும் புரியும்..!!"
"ஹ்ஹ.. ஓகே.. ட்ரை பண்றேன்..!!"
ஆர்வம் இல்லை என்றாலும்.. மும்தாஜின் மனதை நோகடிக்க விரும்பாதவனாய்.. அந்த புத்தகத்தை தனது பேகுக்குள் திணித்துக் கொண்டான் அசோக்..!! ஒரு சில வினாடிகள் எதையோ யோசித்தவன்.. பிறகு தானும் அவளுடன் ஏதாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்கிற எண்ணத்துடன்..
"நா..நான்.. நெறைய ஹாரர் மூவி கலக்க்ஷன்லாம் வச்சிருக்கேங்க.. உங்களுக்கு எதாவது எடுத்துட்டு வந்து தரட்டுமா.. பார்ப்பிங்களா..??" என்று அப்பாவியாக கேட்டான்.
"ஹாரர் மூவினா.. பேய்ப்படமா..??"
"ம்ம்.. ஆமாம்..!!"
"அய்யோ.. நமக்கு அதுலாம் ஆகாதுங்க.. உவ்வே..!!" - மும்தாஜிடம் ஒரு முகச்சுளிப்பு.
"இ..இல்லைங்க.. இ..இது நீங்க நெனைக்கிற மாதிரி பேய் இல்ல.. வேற மாதிரி இருக்கும்..!!"
"வாட்..?? வேற மாதிரி பேயா..??"
"ம்ம்.. எல்லாம் ஜப்பானீஸ் ஹாரர் மூவிஸ்..!!"
"ஓ.. என்ன வித்தியாசம்..??"
"இந்த ஹாலிவுட் பேயிங்கதான் அசிங்கமா அருவருப்பா இருக்குங்க.. பாத்தாலே பயமா இருக்கும்..!! ஜப்பான் பேயிங்கள்லாம் அப்படி இல்ல.. நல்லா பவுடர், கண்மை, லிப்ஸ்டிக்லாம் போட்டுக்கிட்டு.. அழகா, செமக்யூட்டா இருக்குங்க.." அசோக் சீரியஸாக சொல்லிக்கொண்டே போக,
"ஹாஹாஹாஹாஹாஹா..!!" மும்தாஜுக்கு சிரிப்பை நிறுத்த வெகுநேரம் ஆனது.
______________________________நெடுநாட்களுக்கு அப்புறம் மும்தாஜ் மனம் விட்டு சிரித்ததற்கு மறுநாள்..!!
வடபழனி முனுசாமி சாலையில்.. வாகனத்தை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டிருந்தான் அசோக்.. பைக்கின் பின்சீட்டில் மும்தாஜ்..!! இரண்டு கால்களையும் ஒருபக்கமாக போட்டு அமர்ந்திருந்தாள்.. அசோக்குடைய முதுகை உரசிவிடக்கூடாது என.. மிகவும் பிரயத்தனப்பட்டு உடலை ஒடுக்கிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய அவஸ்தையை புரிந்துகொண்ட அசோக்.. தன் மனதுக்குள்ளேயே சிரித்துக்கொண்டான்..!! இப்படி ஒரு பிரயாணத்துக்கு காரணமே மும்தாஜ்தான்..!!
"எ..என்னாச்சுன்னு தெரில அசோக்.. வ..வண்டி ஸ்டார்ட் ஆக மாட்டேன்னுது..!! எ..என்னை கொஞ்சம் பஸ் ஸ்டாண்ட்ல ட்ராப் பண்ண முடியுமா..??"
சற்றுமுன் அசோக்கிடம் தயங்கி தயங்கி கேட்டதே அவள்தான்..!! அவன் மீதிருந்த நன்மதிப்பில் அவ்வாறு கேட்டுவிட்டாலும்.. இப்போது அருகில் அமர்ந்து பயணிக்கையில், அவளிடம் ஒரு கூச்சம்.. அந்த கூச்சம் தந்த ஒருவித அவஸ்தையுடனே பயணித்துக் கொண்டிருந்தாள்..!!
முனுசாமி சாலையில் இருந்து இடதுபுறம் திரும்புகிற மற்றொரு குறுகிய சாலையில்தான்.. அசோக்குடைய அலுவலகம் இருக்கிறது..!! பேருந்து நிலையத்துக்கும் அந்த குறுகிய சாலை வழியாகத்தான் சென்றாக வேண்டும்..!! சீறிக்கொண்டிருந்த வண்டியின் வேகத்தை குறைத்து.. அலுவலகம் இருக்கிற கட்டிடத்தின் முன்பாக நிறுத்திய அசோக்.. பின்பக்கமாக திரும்பி..
"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க மும்தாஜ்.. வந்துடுறேன்..!!" என்றான்.
மும்தாஜ் இறங்கிக்கொள்ள, வண்டியை சாய்த்து ஸ்டான்ட் இட்டுவிட்டு, அவனும் இறங்கிக்கொண்டான்.
"உங்க ஆபீஸ்க்கு எங்களைலாம் இன்வைட் பண்ண மாட்டிங்களா..??" மும்தாஜ் சற்றே குறும்பாக கேட்க,
"இ..இல்ல.. அ..அதுக்காக இல்ல..!!" அசோக்கிடம் ஒரு தயக்கம்.
"அப்புறம்..??"
"நீ..நீங்க நெனைக்கிற மாதிரிலாம் எங்க ஆபீஸ் இருக்காது..!! ஒரே குப்பையா.. ஒரு கேவலமான ஸ்மெல்லோட.. ரொம்ப கச்சடாவா இருக்கும்..!!"
"ஹாஹா.. அதனால என்ன.. எனக்கு ஓகே..!!" சொல்லிவிட்டு மும்தாஜ் புன்னகைக்க, அசோக் மேலும் ஓரிரு வினாடிகள் தயங்கினான். பிறகு,
"தென்.. இட்ஸ் ஃபைன்..!!"
என்று சொல்லிவிட்டு அவன் முன்னால் நடக்க.. மும்தாஜ் அவனை பின்தொடர்ந்தாள்..!! பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு ஏறி, இருவரும் மேலே சென்றார்கள்.. மூடியிருந்த கதவு திறந்து, அலுவலகத்துக்குள் நுழைந்தார்கள்..!!
இவர்கள் சென்ற நேரத்தில் அசோக்கின் நண்பர்கள் மூவருமே அலுவலகத்தில் இல்லை.. ஏதோ படப்பிடிப்பு சம்பந்தமாக வெளியே சென்றிருந்தனர்..!! அவர்களிடம் வேலை செய்கிற அசிஸ்டன்ட்கள்தான்.. சிஸ்டத்தில் ஏதோ கேம்ஸ் ஆடியபடி ஹாயாக அமர்ந்திருந்தனர்..!!
அசோக் அவர்களிடம் சென்று ஏதோ ஃபைல் பற்றி கேட்க.. அவர்களில் ஒருவன் மேஜை ட்ராவை கைகாட்டினான்..!! மேஜையை அணுகிய அசோக் ட்ராவை திறந்தான்.. உள்ளே கைவிட்டு, அந்த ஃபைல் அடங்கிய மெமரி ஸ்டிக்கை தேடினான்..!!
அதேநேரம்.. கைகளை மார்புக்கு குறுக்காக கட்டியிருந்த மும்தாஜ்.. காத்திருக்கிற நேரத்தில் அந்த அறையை சுற்றும் முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்..!! சுவற்றில் ஒட்டியிருந்த அந்த கவிதை காகிதம் அவளுடைய கண்ணில் பட்டது.. ஒரு ஆர்வத்துடன் அந்தக்கவிதையை வாசிக்க ஆரம்பித்தாள்..!!
அகப்பொருளுல் ஒன்றினை..
முதற்பொருள் செய்த மூடா..!!
உரிப்பொருளுல் ஒன்றானபின்..
இறுதிப்பொருள் செய்த இராட்சசா..!!
உந்துதல் தணிக்கவே..
முகர்ந்தாயோ என் புணர்புழை..??
வெந்து எரியுதடா..
வெட்டி எறிந்திடவோ..??
நரமாமிசத்துக்குட்புறம் நரம்புண்டு..
நரம்புக்குள்ளோடும் உதிரமுண்டு..
உதிரத்துக்குள்ளாடும் உணர்வுமுண்டு..
அறிவாயோ நீ அற்பப்பதரே..??
புறப்பொருள் போதுமோடா..
போகப்பொருள் கசந்தேனோடா..
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!
"ம்ம்.. கவிதை நல்லாருக்கு..!!" மும்தாஜ் திடீரென சொல்ல, மேஜை ட்ராவுக்குள் கவனத்தை தொலைத்திருந்த அசோக், இப்போது தலையை நிமிர்ந்து பார்த்தான்.
"ஓ.. பிடிச்சிருக்கா..??" என்று கேட்டவாறே மெலிதாக புன்னகைத்தான்.
"எஸ்.. ரொம்ப ரொம்ப..!! எழுதினது யார்னு தெரிஞ்சுக்கலாமா..??"
"வேற யாரு.. நான்தான்..!!" அசோக்கின் குரலில் ஒருவித குறும்பு.
"ஹாஹா.. சான்ஸே இல்ல.. சத்தியமா இது நீங்க எழுதினது கெடையாது..!!" மும்தாஜ் உறுதியான குரலில் சொன்னாள்.
"எ..எப்படி சொல்றீங்க..??" அசோக் சற்றே புருவத்தை நெறித்தவாறு கேட்டான்.
"ஒரு பொண்ணோட வலி அப்படியே அப்பட்டமா தெரியுது.. ஒரு ஆம்பளையால இந்த அளவுக்கு அந்த வேதனையை உணர்ந்து எழுதிருக்க முடியாது..!! அந்த வார்த்தைகள்ல தெரியிற கோவமும்.. அந்த அர்த்தத்துல தெறிக்கிற வீரியமும்.. கண்டிப்பா இதை எழுதினது ஒரு பொண்ணாத்தான் இருக்கணும்னு தோணுது..!!"
மும்தாஜ் அந்த மாதிரி சொன்னதுமே.. அசோக்கின் மனதில் ஒரு அதிர்வலை.. அவனது மூளையில் ஒரு மின்னல் வெட்டு..!! ஃபைல் தேடிக்கொண்டிருந்த அவனது கவனம் சிதறி.. வேறொரு யோசனையில் சென்று குவிய ஆரம்பித்தது..!! மும்தாஜ் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!
"கொஞ்ச நாள் முன்னாடி நான்கூட நெறைய கவிதைலாம் எழுதுவேன் அசோக்..!! என்னோட பாஸ்ட்லாம் உங்களுக்கு தெரியும்ல.. நான் அந்த மாதிரி ஒரு கொடுமையான பீரியட்ல இருந்தப்போ.. நெறைய எழுதுவேன்..!! எல்லாம் இந்த மாதிரி கவிதையாத்தான் இருக்கும்.. ஆம்பளைங்க மேல வெறுப்பு.. அப்படியே ஒரு ஆத்திரம்.. அடக்க முடியாம ஒரு பழியுணர்ச்சி..!! மனசுல இருக்குற கோவத்தை எல்லாம்.. இந்த மாதிரி கவிதையாத்தான் கொட்டுவேன்..!!"
மும்தாஜ் சொல்லிக்கொண்டே போக.. அசோக்கின் மூளை இப்போது சுறுசுறுப்பாகியிருந்தது.. மிக தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தது..!! அசோக்கிற்கு அந்த கவிதையின் அர்த்தம் ஓரளவுக்கு தெரியும்.. அகராதி புரட்டி அந்தக்கவிதையின் உள்ளர்த்தத்தை கொஞ்சம் உணர்ந்தே வைத்திருந்தான்..!! 'ஒரு ஆணிடம் ஏமாந்த பெண்ணின் வேதனையை சொல்கிற கவிதை இது' என்கிற அளவிலேதான் அவனது எண்ணம் இருந்ததே ஒழிய.. மீராவுக்கு நிஜத்திலே நடந்த கொடுமையின் பிரதிபலிப்பாக இருக்குமோ என்று.. அவனது மனம் எப்போதும் சந்தேகப்பட்டது இல்லை..!! இப்போது மும்தாஜ் சிந்திய வார்த்தைகளில்.. அவனுக்கு அந்த சந்தேகம் பிறந்திருந்தது..!!
______________________________"உன்னை பாக்குறதுக்கு முன்னாடி.. ஆம்பளைங்கன்னாலே ஒரு வெறுப்புல இருந்தேன் அசோக்.. எந்த ஆம்பளை மேலயுமே எனக்கு நல்ல அபிப்ராயம் இல்ல..!!"
"நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!!"
அவனை விட்டு பிரிந்து செல்கிற அன்று.. கண்களில் நீர் வழிய மீரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவனது சந்தேகம் வலுப்பட ஆரம்பித்தது..!! அந்தப்பக்கம் மும்தாஜ் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.. இந்தப்பக்கம் அசோக், நடந்துமுடிந்த பலசம்பவங்களை பரபரவென நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!! அவனுடைய உணர்வு நரம்புகளில் எல்லாம், சர்சர்ரென ஒரு அதிர்வு மின்சாரம் பாய.. அந்த சம்பவங்கள் அனைத்தும் அவன் மனதில் சரசரவென குழப்பப்படங்களாய் ஓடின..!!
"என் அக்கா சொன்னேன்ல............................. கொஞ்ச நாள் முன்னாடி அவ ஒரு பையனை லவ் பண்ணிட்டு இருந்தா................................. ஒருநாள் அந்தப்பையன் திடீர்னு காணாமப் போயிட்டான்................... நான் யூ.எஸ்ல இருக்கேன்.. இங்கயே செட்டில் ஆகப் போறேன்.. இத்தனை நாளா நான் உன்னை லவ் பண்றதா சொன்னதுலாம் பொய்.. சும்மா நடிச்சேன்.. சும்மா ஜாலிக்காத்தான் உன் கூட பழகினேன்.. நான் இங்க வேற ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. நீயும் நடந்ததை மறந்துட்டு வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கோ.. அப்டின்னு.............." - ஃபுட்கோர்ட்டில் அமர்ந்துகொண்டு, முகத்தை மிக இயல்பாக வைத்தவாறு, அக்காவின் காதல் என்கிற பெயரில் மீரா சொன்னவை.
"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??" - புன்னகையுடன் கேட்டாள் பவானி.
"மொளைக்கிறதுக்கு முன்னாடியே, ஆம்பளை புடிக்கிற வேலையை விட்டுட்டு.. ஒழுங்கா படிச்சு முன்னேர்ற வழியைப் பாரு.. போ..!!" - பூங்காவில் ஒரு பள்ளி மாணவியிடம் வெறுப்பை உமிழ்ந்தாள் மீரா.
"அந்தப்பையனோட ஃபாரீன் காண்டாக்ட் நம்பர் வாங்கி பேசினேன்.. ............... அவனுக்கு கொஞ்ச நேரம் ஒண்ணுமே புரியல..!! திடீர்னு.. சென்னைல இருந்து போலீஸ்ன்னதும்.. என்ன ஏதுன்னு தெரியாம.. பையன் கொஞ்சம் டென்ஷனாயிட்டான்..!!" - புகை வழிகிற வாயுடன் ஸ்ரீனிவாச பிரசாத்.
"எனக்கு விஜய்ன்ற பேரே பிடிக்காது..!!!!" - நடிகர் விஜய் நடித்த சினிமாவிற்கு செல்லலாம் என்று அழைத்தபோது, மீரா முகம் சிவக்க உக்கிரமாக கத்தியது.
"நீ சொன்ன அந்த நம்பர் விஜயசாரதின்ற பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருக்கு..!!" - மீண்டும் புகைமண்டலத்துக்கு நடுவே ஸ்ரீனிவாச பிரசாத்.
அவ்வளவுதான்.. அசோக்கை உடனடியாய் ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது.. அவன் முகத்தில் உச்சபட்சமாய் ஒரு தீவிரம் கொப்பளித்தது..!! உடலின் அத்தனை செல்களிலும் ஒரு பதற்றம் நிறைந்துபோயிருக்க.. நடுங்குகிற கையால் தனது செல்போனை எடுத்தான்.. வெடவெடத்த விரல்களால் ஏதோ ஒரு எண்ணுக்கு டயல் செய்தான்..!! அவனுடைய மாற்றத்தை கவனித்த மும்தாஜ்..
"என்னாச்சு அசோக்..??"
என்று குழப்பமாக கேட்க.. அசோக் அதை அலட்சியம் செய்தான்..!! அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டதும்..
"ஹலோ ஸார்.. நான் அசோக் பேசுறேன்..!!" என்றான்.
"ஆங்.. சொல்லு அசோக்..!!" என்றார் மறுமுனையில் ஸ்ரீனிவாச பிரசாத்.
"ஸார்.. நீங்க அந்த விஜயசாரதின்ற பையன் பத்தி சொன்னிங்கள்ல..??"
"ம்ம்..!!"
"அவன் வெளிநாட்டுல இருக்கான்னு சொன்னிங்க..!!"
"ஆமாம்..!!"
"அந்த வெளிநாடு.. யூ.எஸ்தான..??"
"ஆ..ஆமாம்..!! உனக்கு எப்படி தெரியும்..??"
ஸ்ரீனிவாச பிரசாத் குழப்பமாக கேட்க.. இந்தப்பக்கம் அசோக்கின் மனம் இன்னும் தெளிவு பெற ஆரம்பித்தது.. அவனது சந்தேகம் இப்போது மிகவும் உறுதிப்பட்டுப் போனது.. நெஞ்சில் எழுந்திருந்த நம்பிக்கை மேலும் அதிகரித்தது..!! அவசரமாக ஏதோ யோசித்தவன், உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்து.. ஸ்ரீனிவாச பிரசாத்திடம் கேட்டான்..!!
"ஸார்.. நீங்க இப்போ ஃப்ரீயா..?? எனக்காக கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ண முடியுமா..??"ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள.. அவன் நன்றி சொல்லி காலை கட் செய்தான்..!! உடம்பில் ஒரு பதட்டத்துடன் அந்த அறைவாசலை நோக்கி நகர்ந்தான்..!!
"என்னாச்சு அசோக்..??" மீண்டும் கேட்ட மும்தாஜிடம் திரும்பி,
"ஸாரி மும்தாஜ்.. நீங்க ஏதாவது ஒரு ஆட்டோ பிடிச்சு போயிடுறீங்களா.. எனக்கு அர்ஜண்டா ஒரு வேலை இருக்கு..!!" என்றான்.
மும்தாஜின் பதிலுக்காக கூட காத்திராமல், அலுவலகத்தை விட்டு அவசரமாய் வெளியேறினான்.. தடதடவென படியிறங்கி கீழ் தளத்துக்கு வந்தான்.. பைக்கின் நெற்றியில் சாவி போட்டு திருகி, கிக்கரை படக்கென உதைத்தான்.. ஆக்சிலரேட்டரை முழுவதுமாக முறுக்கி, வண்டியை விர்ரென பறக்க விட்டான்..!!
அடுத்த ஐந்தாவது நிமிடம்.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்தின் முன்பாக அமர்ந்திருந்தான்..!! யாரிடமோ டெலிபோனில் பேசியவர்.. பேசிமுடித்ததும் ரிஸீவரை அதனிடத்தில் வைத்தார்..!! அசோக்கோ பொறுமையற்றவனாய் கேட்டான்..!!
"என்ன ஸார் சொல்றாங்க..??"
"அந்த விஜயசாரதி இந்தியாதான் வந்திருக்கானாம்.. ரெண்டு நாளாச்சு..!! அவனோட இண்டியன் காண்டாக்ட் நம்பர் தெரியலைன்னு சொல்றாங்க..!!"
"ஓ..!! இப்போ என்ன ஸார் பண்றது..??"
"ம்ம்ம்ம்.. அவங்களோட மாதவரம் பங்களா அட்ரஸ் எனக்கு தெரியும்.. அங்கதான் போய் விசாரிக்கணும்..!!"
"அ..அப்போ வாங்க ஸார் இப்போவே கெளம்பலாம்..!!" அசோக் அவசரப்பட்டான். ஸ்ரீனிவாச பிரசாத் நிதானமாகத்தான் இருந்தார்.
"டேய்.. கேக்குறேன்னு தப்பா நெனைக்காத..!! உன் சந்தேகம் சரிதான்னு உனக்கு தோணுதா..??"
"ஹையோ.. நான் ஸ்ட்ராங்கா நம்புறேன் ஸார்..!! இந்த விஜயசாரதிதான் மீராவுக்காக அந்த ஸிம் வாங்கி தந்திருக்கணும்.. அவளை லவ் பண்ற மாதிரி நடிச்சு ஏமாத்திருக்கணும்.. அதனாலதான்.. நீங்க மீராவோட அடையாளம்லாம் சொல்லி அவளை தெரியுமான்னு கேட்டப்போ.. அவன் தெரியாதுன்னு சொல்லி மழுப்பிருக்கனும்..!! அவன்தான் ஸார்.. அவனேதான்.. சந்தேகமே இல்ல..!! அவனை விசாரிச்சா என் மீரா எங்க இருக்கான்னு தெரிஞ்சிடும் ஸார்..!!"
"ஹ்ம்ம்..!! சரி நீ சொல்றது உண்மைனே வச்சுப்போம்..!! இப்போ மட்டும் அவன் வாயை திறப்பான்னு என்ன நிச்சயம்..?? இப்போவும்.. அவளை எனக்கு தெரியவே தெரியாதுன்னு அவன் அடம்பிடிச்சா..??"
"விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா உண்மையை சொல்லுவான் ஸார்..!!"
"டேய்.. அவங்கள்லாம் பெரிய ஆளுங்கடா.. அந்த மாதிரிலாம் அடிச்சு விசாரிக்க முடியாது..!!"
"ஹையோ நானும் அந்த அர்த்ததுல சொல்லல ஸார்..!! அவன்கிட்ட எப்படியாவது, கெஞ்சி கூத்தாடியாவது மீரா பத்தி தெரிஞ்சுக்கணும்.. ப்ளீஸ் ஸார்..!!"
அசோக் கெஞ்சலாக சொல்ல.. ஸ்ரீனிவாச பிரசாத் அவனுடைய முகத்தையே சில வினாடிகள் கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தார்..!! 'காதல் மனிதனை என்னன்ன பாடெல்லாம் படுத்துகிறது?' என்பது மாதிரி இருந்தது அவரது பார்வை..!! பிறகு ஒரு பெருமூச்சுடனே எழுந்து கொண்டவர்..
"சரி வா.. கெளம்பலாம்..!!" என்றார்.
வடபழனி காவல் நிலையத்தில் இருந்து.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் போலீஸ் ஜீப்பில் கிளம்பினார்கள்..!! நூறு அடி சாலையை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் ஜீப்பின் வேகத்தை அதிகரித்தார்..!! அரை மணி நேரமும், ஐந்து நிமிடங்களும் கழிந்த போது.. அந்த மாதவரம் வீட்டை அவர்கள் அடைந்திருந்தனர்..!! ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு முன்பே அறிமுகமாகியிருந்த.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை சந்தித்து பேசினர்..!!
"என்ன ஸார்.. தம்பியை தேடிக்கிட்டு அடிக்கடி வர்றீங்க.. எதுவும் பிரச்சினை இல்லையே..??"
"இல்ல ஸார்.. ஆக்சுவலா இது வேற பிரச்சினை.. மிஸ்டர் விஜயசாரதி மூலமா யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் ஏதாவது கெடைக்குமான்னு பாக்குறோம்.. வேற ஒன்னுல்ல..!!"
"ஹ்ம்ம்.. தம்பி ரெண்டு நாளு முன்னாடிதான் இந்தியாவுக்கே வந்தாப்ல..!!"
"தெரியும் ஸார்.. நீங்க தந்த நம்பருக்கு ட்ரை பண்ணிட்டுத்தான் இங்க வர்றேன்..!!"
"ஓ.. அப்படியா.. சரி சரி..!! ம்ம்ம்.. அவர் இப்போ வீட்ல இல்லிங்களே.. வெளில போயிருக்காரு..!!"
"எங்க போயிருக்காருன்னு தெரிஞ்சுக்கலாமா..??"
"எங்க போயிருப்பாரு.. சனிக்கிழமை சாயந்திரம்.. ஃப்ரண்ட்ஸ் யாரையாவது கூட்டிக்கிட்டு ரெட்ஹில்ஸ்ல இருக்குற கெஸ்ட் ஹவுஸுக்கு போயிருப்பாரு..!!"
"ம்ம்.. அவரை காண்டாக்ட் பண்றதுக்கு எதுவும் நம்பர் இருக்கா..??"
"ஓ எஸ்.. இருக்கே..!!"
அவர் நம்பரை சொல்ல.. அசோக் தனது செல்போனில் சேகரித்துக் கொண்டான்..!! சேகரித்துக் கொண்ட வேகத்திலேயே அந்த எண்ணுக்கு கால் செய்தான்.. என்கேஜ்டாக இருந்தது..!! சிறிது நேரம் காத்திருந்துவிட்டு.. மீண்டும் கால் செய்து பார்க்க.. மீண்டும் என்கேஜ்ட்..!! திரும்பவும் அந்த எண்ணை முயற்சி செய்ய நினைத்த அசோக்கை.. இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் தடுத்தார்..!!
"வேணாம் அசோக்.. விடு..!!"
"ஏன் ஸார்..??"
"இந்த மேட்டரை ஃபோன்ல பேசுறது அவ்வளவு நல்லதில்லன்னு தோணுது.. நேர்லயே போய் பேசிடலாம்..!!" அமர்த்தலாக சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத், எதிரே இருந்த பி.ஏவிடம் திரும்பி,
"ஸார்.. அந்த ரெட்ஹில்ஸ் கெஸ்ட் ஹவுஸோட அட்ரஸ் கொஞ்சம் சொல்றீங்களா..??" என்று கேட்டார்.
அதே நேரம்..
"No 37, தேவன்பு ஸ்ட்ரீட், off G.N.T ரோட், ரெட்ஹில்ஸ்..!!"
கார் ஓட்டிக்கொண்டிருந்த விஜயசாரதி.. காதில் வைத்திருந்த செல்ஃபோனில் அந்த கெஸ்ட் ஹவுஸின் முகவரியை சொல்லிக்கொண்டிருந்தான்..!! அடுத்த முனையில் அதைக் கேட்டுக்கொண்டிருந்தது.. சாட்சாத் நமது மீராவேதான்..!!!!
"நீதான் ஏற்கனவே அந்த வீட்டுக்கு வந்திருக்கல..?? உடம்புல ஒட்டுத்துணி இல்லாம.. நாலு மணி நேரம் அந்த வீட்ல படுத்திருந்த.. ஞாபகம் இல்ல..??" விஜயசாரதியின் குரலில் எள்ளல் தொனித்தது.
"ஏன் இப்படிலாம் பண்ற..??" கேட்ட மீராவின் குரலில் ஒரு மிதமிஞ்சிய ஆத்திரமும், ஆதங்கமும் வெடித்து சிதறியது.
"ஹாஹா.. அப்படி என்ன பண்ணிட்டேன்..??"
"ஏற்கனவே என் வாழ்க்கையை கெடுத்து நாசமாக்கிட்ட.. இன்னும் உனக்கு வெறி அடங்கலையா..??"
"ஹாஹாஹாஹாஹாஹா..!!!" பெரிதாக ஒரு சிரிப்பை வெளிப்படுத்திய விஜயசாரதி தொடர்ந்து பேசினான்.
"என்ன பண்ண சொல்ற டார்லிங்..?? நான் பாட்டுக்கு கம்முனு இருந்தேன்.. உண்மையை சொல்லப்போனா.. என் செல்லத்தை நான் சுத்தமா மறந்தே போயிட்டேன் தெரியுமா..?? ப்ராமிஸ்டா செல்லம்.. என்னை நம்பு..!!"
"...................."
"ஹ்ம்ம்.. சும்மா இருந்தவன்கிட்ட வந்து.. 'நான் இருக்கேன், நான் இருக்கேன்'ன்னு உன்னை நீயே ஞாபகப்படுத்தி விட்டுட்டு.. இப்போ என்னை குத்தம் சொன்னா என்ன நியாயம் டார்லிங்..??"
"நான் என்ன பண்ணினேன்..??"
"என்ன பண்ணுனியா..?? உன்னை யார் போலீஸ்க்குலாம் போக சொன்னது..??"
"எத்தனை தடவை சொல்றது.. நான் போலீஸ்க்கு போகல, போலீஸ்க்கு போகலன்னு..!!"
"அப்புறம் எப்படி அவங்களுக்கு என் நம்பர் தெரிஞ்சது.. உன்னை பத்திலாம் தெரிஞ்சது..??"
"அது வேற பிரச்னை.. சொன்னா உனக்கு புரியாது..!!"
"ஹாஹா.. வாட்டெவர்.. ஐ டோன்ட் கேர்..!! சும்மா இருந்தவன் மனசுல.. அந்த ஆள் கால் பண்ணி உன்னை பத்தி விசாரிச்சதும் ஆசை வந்துடுச்சும்மா..!! உன் உடம்பு.. அந்த ஷேப்.. அந்த ஸ்மெல்.. நீ எனக்கு தந்த சுகம்.. வாவ்...!!! நெனச்சு பாத்ததுமே உடம்புல அப்படியே குப்புனு ஒரு சூடு ஏறிடுச்சு செல்லம்..!! அதான் இன்னும் ரெண்டு வாரத்துல இண்டியா போறோமே.. ரெண்டாவது இன்னிங்ஸ் ஆடிப்பாக்கலாமான்னு ஒரு ஆசை வந்துடுச்சு..!! அந்த ஆசையை அடக்க முடியாமத்தான் அன்னைக்கு உனக்கு கால் பண்ணினேன்..!!"
"ப்ளீஸ் விஜய்.. இது வேணாம்.. என்னை விட்ரு..!!" மீரா திடீரென கெஞ்சினாள்.
"அப்போ அந்த வீடியோ உனக்கு வேணாமா..?? நெட்ல போட்ரலாமா..??"
"நோ..!!!!"
"எனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லப்பா.. என் மூஞ்சி அதுல சுத்தமா தெரியாது..!! உன்னோட லவ்லி ஃபேஸ்தான் அதுல ஹைலைட்டே..!!"
"ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ற.?? ப்ளீஸ்.. அந்த வீடியோவை எங்கிட்ட குடுத்திடு..!!""அப்போ ரெட்ஹில்ஸ் வா.. ஜஸ்ட் இன்னைக்கு நைட் மட்டும்.. சித்திரவதை பண்ண கூப்பிடல.. சந்தோஷமா இருக்கலாம்னுதான் கூப்பிடுறேன்..!! இன்னும் என் செல்ஃபோன்லதான் அந்த வீடியோ இருக்குது.. காலைல நீ போறப்போ என் செல்ஃபோனோட சேர்த்து, அதை உனக்கு காதல்பரிசா குடுத்துடுறேன்.. ஓகே வா..??"
"...................."
"ஹ்ம்ம்.. அன்னைக்கு நீ மயக்கத்துல இருந்ததால.. நெறைய விஷயம் ட்ரை பண்ண முடியலடி செல்லம்.. எனக்கு ரொம்ப வருத்தம் தெரியுமா..?? அதெல்லாத்தையும் இன்னைக்கு பண்ணி பாக்குறோம்.. எல்லாம் உன்னோட சுயநினைவோட.. தெகட்ட தெகட்ட..!! You are going to enjoy this chellam.. I promise..!!"
விஜயசாரதி சொல்லிக்கொண்டிருக்கும்போதே.. அவனது நம்பருக்கு இன்னொரு கால் வருவதை.. 'கீங் கீங்' என்று ஒலியெழுப்பி அவனது செல்ஃபோன் அறிவித்தது..!! உடனே..
"ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுடா செல்லம்.. எனக்கு இன்னொரு கால் வருது.. நான் திரும்ப கூப்பிடுறேன்..!!"
என்றுவிட்டு மீராவுடனான தொடர்பை துண்டித்தான்..!! செல்ஃபோன் டிஸ்ப்ளே பார்த்தவன்.. அன்னோன் நம்பரில் இருந்து மிஸ்ட் கால் வந்திருந்தப்பதை தெரிந்துகொண்டான்.. அசோக்கின் நம்பர் அது..!! அன்னோன் நம்பர் என்று தெரிந்ததும்.. திரும்ப கால் செய்யும் எண்ணத்தை கைவிட்டான்.. மீண்டும் மீராவின் எண்ணை அழைக்க நினைத்தான்..!! அதற்குள்ளாகவே அவனது செல்ஃபோனுக்கு வேறொரு நம்பரில் இருந்து கால் வந்தது..!!
"KASI CALLING..!!!"
என்று பளிச்சிட்டது செல்ஃபோன் டிஸ்ப்ளே..!! காசி.. போதைப்பொருள் விநியோகிப்பவன்.. போலீஸாரால் வலைவீசி தேடப்படுகிறவன்..!! விஜயசாரதி அந்த காலை அட்டண்ட் செய்தான்.. குரலில் ஒரு புது உற்சாகத்துடன் பேசினான்..!!
"சொல்லு மாமு.. எங்க இருக்குற..??"
"அங்கதாண்டா வந்துட்டு இருக்குறேன்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்..!!"
"ஓ.. நானும் இன்னும் ஒரு அஞ்சு நிமிஷத்துல அங்க இருப்பேன்..!! அதுசரி.. சரக்கு ரெடியா..?? அதை சொல்லு மொதல்ல..!!"
"ம்ம்.. ரெடி ரெடி..!! நீ சொன்னதை விட நெறயவே ரெடி..!!"
"வாவ்...!!!!! தேட்ஸ் க்ரேட்..!!!!!" விஜயசாரதி குதுகலிக்க, காசியின் குரலில் ஒரு சீரியஸ்னஸ்.
"மாமு இன்னொரு விஷயம்..!!"
"என்ன..??"
"சொல்றேன்னு தப்பா நினைக்காத.. அமவுன்ட்டு உடனே வேணுண்டா..!!"
"ஏய்.. என்னடா இது.. ஏதோ புது ஆள்ட்ட பேசுற மாதிரி பேசுற..?? நமக்குள்ள பணம்லாம் ஒரு பிரச்சினையா..??"
"அதுக்கு சொல்லல மாமு..!! முன்ன மாதிரி இல்ல.. இப்போலாம் கெடுபுடி ஜாஸ்திடா.. உனக்காக ரொம்ப கஷ்டப்பட்டு அரேஞ்ச் பண்ணிருக்கேன்..!! அதில்லாம.. நானே இப்போ பல பிரச்னைல இருக்கேன்..!! பணம் இல்லாம ஒன்னும் பண்ண முடியாது மாமு..!!"
"ப்ச்.. ஒன்னும் கவலைப்படாத.. உடனே வாங்கிக்கலாம்..!! ஆமாம்.. வேற எதோ பிரச்னைன்னு சொன்னியே.. என்னது..??"
"இப்போ வேணாம்.. எல்லாம் அங்க வந்து விவரமா சொல்றேன்..!!"
"வா வா..!! ரொம்ப நாள் அப்புறம் மீட் பண்றோம்ல.. உனக்கு பணம் மட்டும் இல்ல.. செம்மையா ஒரு விருந்தே ரெடி பண்ணி வச்சிருக்கேன் மாமு..!!"
"விருந்தா.. என்ன விருந்து..??"
"கோழி விருந்து மாமு..!! பொட்டைக் கோழி.. அதுலயும் சக்கையான வெடக்கோழி..!!"
"ஏய்.. என்னடா சொல்ற..??"
"அனுஷ்கா பிடிக்குமா உனக்கு ..??"
"யாரு.. நம்ம அருந்ததி அனுஷ்காவா..??"
"ம்ம்.. அவளேதான்..!!"
"பிடிக்குமே.. ஏன் கேக்குற..??"
"அவள்லாம் இவகிட்ட பிச்சை வாங்கணும்.. அந்த அளவுக்கு இருப்பான்னா பாத்துக்கோ..!!"
"யார்டா அது.. ஐட்டமா..??"
"ஐட்டமா..?? அடப்பாவி.. நானே தேத்துனதுடா..!!"
"நீயே தேத்துனதா.. அப்புறம் என்னையும் கூப்பிடுற.. அந்தபொண்னுக்கு ஓகேவா..??"
"அவகிட்ட பெர்மிஷன்லாம் வேற கேக்கணுமா..?? நாம நில்லுனா நிப்பா.. உக்காருனா உக்காருவா மாமு..!!"
"என்னடா சொல்ற.. எனக்கு ஒன்னும் புரியல..!!"
"அவ மேட்டர் ஒன்னு நம்மகிட்ட மாட்டிருக்குது மாமு.. நாம என்ன சொன்னாலும் அவ கேட்டுத்தான் ஆகணும்..!! என்ன்ன்ன சொன்னாலும்..!!! புரியுதா..??"
"ஓ..!! ஏதாவது பிரச்னையாகிட போகுதுடா..!!"
"ஒரு பிரச்னையும் இல்ல மாமு.. அவளை எனக்கு நல்லா தெரியும்.. சரியான தொடை நடுங்கி.. புள்ளப்பூச்சி மாமு அவ..!! அந்த புள்ளப்பூச்சியை இன்னைக்கு பறக்கவிட்டு பறக்கவிட்டு அடிச்சு நசுக்குறோம்.. புரியுதா..?? சீக்கிரம் வா.. ஒரு பொண்ணுகிட்ட இதெல்லாம் பண்ணிப் பாக்கனும்னு உனக்கு அசிங்கமான ஆசைலாம் இருக்கும்ல.. அதெல்லாம் அவகிட்ட இன்னைக்கு பண்ணிப் பாத்துடலாம்.. வா..!!" குரூரமாக சொல்லிவிட்டு காலை கட் செய்தான் விஜயசாரதி.
அதேநேரம்..
ரெட்ஹில்ஸ் ரோட்டில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த மீரா.. விஜயசாரதியிடம் பேசிமுடித்து கையிலேயே வைத்திருந்த செல்ஃபோனை.. (அசோக்குடன் பழகிய காலத்தில் அவன் அறியாமல் பதுக்கி வைத்திருந்த அந்த செல்ஃபோனை..) இப்போது ஹேண்ட் பேக் திறந்து உள்ளே வைத்தாள்..!! அந்த மாதிரி அவள் உள்ளே வைக்கையில்.. பேகுக்குள் இருந்த அந்த வஸ்து பளிச்சென்று வெளியே தெரிந்தது..!!
அரையடிக்கும் சற்று அதிகமான நீளத்தில்.. பளபளவென மினுமினுத்த ஒரு உலோக கத்தி..!!
"இந்த லெஃப்ட் எடுத்துக்கோங்கண்ணா..!!" ஆட்டோ ட்ரைவரிடம் மிக இயல்பான குரலில் சொன்னாள் மீரா.
அதேநேரம்..
அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் ஜீப்பில் ஏறியிருந்தார்கள்.. ரிஸ்வான் ரோட்டில் மிதமான வேகத்தில் ஜீப் சென்றுகொண்டிருந்தது..!! அசோக்கும் சரி.. ஸ்ரீனிவாச பிரசாத்தும் சரி.. எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.. முகத்தை மிக இறுக்கமாகவே வைத்திருந்தனர்.. அவரவர் மூளைகளில் விழைந்த சிந்தனைகளிலேயே மிக கவனமாக இருந்தனர்..!!
திருமுருகன் நகர் ஜங்கஷனில் எதிர்கொண்ட ட்ராஃபிக்கை சமாளித்து.. ரெட்ஹில்ஸ் வந்து சேர அவர்களுக்கு அரைமணிநேரம் ஆனது..!! பி.ஏவிடம் வாங்கிக்கொண்ட முகவரியை அடைய மேலும் ஐந்து நிமிடங்கள் ஆனது..!!
இளஞ்சிவப்பு நிறத்தில் மிக பளபளப்பாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. அருகில் வேறேதும் வீடுகள் இன்றி தனித்திருந்தது..!! பத்தடி உயரத்திற்கு காம்பவுண்ட் சுவர்.. பச்சை மரங்கள் அந்த காம்பவுண்ட் சுவரை ஒட்டி வளர்ந்து, நீளநீளமாய் வெளியே தலைநீட்டின..!! இரும்பு பட்டைகளாலும் மரத்தகடுகளாலும் ஆன அகலமான வாயிற்கதவு..!! பறவைகளின் சப்தத்தை தவிர.. சுற்றிலும் நிசப்தம்..!!
வாசலில் வாட்ச்மேன் இல்லை.. கேட்டை திறந்த ஸ்ரீனிவாச பிரசாத் உள்ளே நுழைந்தார்.. அசோக் அவரை பின்தொடர்ந்தான்..!! கேட்டிலிருந்து நூறு மீட்டர் தொலைவில் இருந்த வீட்டுக்கு.. இங்கிருந்தே சிமென்ட்டில் சாலை போடப்பட்டிருந்தது.. ஒரே ஒரு கார் மட்டுமே செல்லும் அகலத்திலான குறுகலான சாலைதான்..!! அந்த சிமெண்ட் சாலையின் இருபுறமும்.. பச்சை பச்சையாய் கொத்து கொத்தாய் வளர்ந்திருந்த செடிகள்.. அழகாகவும் கச்சிதமாகவும் முடிவெட்டிக் கொண்டிருந்தன அந்த செடிகள்..!! அசோக் அந்த செடிகளில் விரல்கள் நுழைத்து தடவியவாறே.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பின்னால் சென்றான்..!!
வீட்டை அடைந்ததும்.. ஸ்ரீனிவாச பிரசாத் காலிங் பெல் அழுத்தினார்..!! உள்ளே குருவி கத்துகிற எஃபக்டில் காலிங் பெல் கதறுவது வெளியிலேயே கேட்டது..!! இருந்தாலும் சிறிது நேரத்திற்கு உள்ளிருந்து எந்த எதிர்ச்செயலும் இல்லை..!! மேலும் இரண்டு மூன்று முறை காலிங் பெல் அழுத்தி ஸ்ரீனிவாச பிரசாத் சோர்ந்து போன சமயத்தில்தான்.. அசோக் எதேச்சையாக கதவின் மீது கை வைக்க.. அது கொஞ்சமாய் திறந்து கொண்டது..!! உடனே இருவரது முகத்திலும் ஒரு ஆச்சரியம்.. கொஞ்சம் குழப்பம்..!!
"தெறந்தேதான் இருக்கு ஸார்..!!"
சொல்லிக்கொண்டே அசோக் கதவின் மீது கைவைத்து நன்றாக உள்ளே தள்ள.. அது முழுவதுமாய் திறந்து கொண்டது..!! இயல்பாக உள்ளே நுழைந்து வீட்டுக்குள் பார்வையை வீசிய இருவரையும்.. ஒரு உச்சபட்ச அதிர்ச்சி வந்து தாக்கியது.. இருவரது இருதயங்களும் படக்கென சொடுக்கிவிடப்பட்டு, தறிகெட்டு துடித்தன..!!
உள்ளே.. கருஞ்சிவப்பான ரத்தவெள்ளத்தில்.. இரண்டு மனித உடல்கள் மிதந்து கொண்டு கிடந்தன.. இரண்டுமே ஆணின் உடல்கள்..!! ஒருவன் சோபாவில் சரிந்திருந்தான்.. ஒருவன் தரையில் வீழ்ந்திருந்தான்..!! தலை, மூக்கு, மார்பு, தொடை என.. உடலின் எல்லா பாகங்களில் இருந்தும் சராமாரியாக குருதி வெளிப்பட்டு வெளியே வடிந்திருந்தது..!! ரத்தத்தில் நனைந்த கண்ணபிரானின் உலோக சிலை வேறு.. அவர்களுடன் சேர்ந்து தரைவிரிப்பில் வீழ்ந்து கிடந்தது..!! இருவரும் நூறு சதவீதம் இறந்துவிட்டார்கள் என்பது.. பார்க்கையிலேயே தெரிந்தது..!!
ஸ்ரீனிவாச பிரசாத்தாவது பரவாயில்லை.. அசோக் அந்த மாதிரி ஒரு அதிர்ச்சியை தன் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை.. கண்களில் கண்ட காட்சியில் அப்படியே வெலவெலத்துப்போய் நின்றிருந்தான்..!! ஸ்ரீனிவாச பிரசாத்-தான் முதலில் சுதாரித்துக் கொண்டார்.. எங்கிருந்து வந்தது என்றே தெரியாமல், படக்கென அவருடைய வலதுகையில் அந்த பிஸ்டல் முளைத்தது.. அதன் மேற்புறத்தை பிடித்து இழுத்து, சேஃப்டி கேட்சை விடுவித்துக் கொண்டவர்.. தடதடவென வீட்டுக்குள் ஓடினார்..!! அசோக் என்ன செய்வதென்றே தெரியாமல்.. இறந்து கிடந்த பிணங்களை பார்த்தவாறு அசையாமல் நின்றிருந்தான்..!!
உள்ளே ஓடிய ஸ்ரீனிவாச பிரசாத்.. கையில் விறைப்பாக பிடிக்கப்பட்ட துப்பாக்கியுடன்.. ஒவ்வொரு அறையாக சென்று அலசினார்.. ஒருவரும் அகப்படவில்லை..!! பின்பு வீட்டுக்கு பின்புறமாக ஓடினார்.. பின்புற வாசல் திறந்தே கிடந்தது..!! வீட்டுக்கு பின்புறம் காம்பவுண்ட் சுவர் இல்லை.. பெரிய பரப்பிலான காலியிடம்.. குட்டையும், நெட்டையுமாய் ஆங்காங்கே செடிகள்..!! கண்ணுக்கு எட்டிய தூரம் வரை.. ஆள்நடமாட்டம் ஏதும் இல்லை..!!
ஸ்ரீனிவாச பிரசாத் சிறிது நேரம் அங்கேயே நின்று சுற்று முற்றும் பார்த்தார்.. உபயோகமாக எதுவுமில்லை என்று அறிந்தபிறகு, 'ச்சே' என்ற சலிப்புடன் மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்..!! அவர் வீட்டுக்குள் புகுந்த சில வினாடிகளில்.. வீட்டு சுவற்றை ஒட்டியிருந்த புதருக்குள் இருந்து.. மீரா வெளிப்பட்டாள்..!!!! அவளுடைய முகம் வியர்த்து வடிந்தது.. செடிகளுக்கு மத்தியில் நீளமாக சென்ற அந்த ஒத்தையடிப்பாதையில் நுழைந்து.. புயல்வேகத்துடன் ஓடினாள்..!!
ஹாலுக்குள் நுழைந்த ஸ்ரீனிவாச பிரசாத்.. பிஸ்டலின் சேஃப்டி கேட்சை போட்டு.. இடுப்பில் செருகிக்கொண்டார்..!! பிரம்மை பிடித்தவன் மாதிரி நின்றிருந்த அசோக்கிடம்..
"உள்ள யாரும் இல்ல அசோக்..!! உசுரு இருக்குதான்னு பாத்தியா..??" என்று கேட்டார்.
அவனிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவே.. அவரே ரத்தவெள்ளத்தில் மிதந்தவர்களிடம் பார்வையை திருப்பினார்.. அதில்.. சோபாவில் சரிந்திருந்தவனின் முகத்தை சற்றே உன்னிப்பாக கவனித்ததும்.. நெற்றியை சுருக்கினார்..!!
"இவன் நெற்குன்றம் காசில..?? இவன் எப்படி இங்க..??" என்று குழப்பமாக முணுமுணுத்தார்.
விழுந்து கிடந்தவர்களிடம் குனிந்து.. அவர்களது மூச்சையும், நாடித்துடிப்பையும் சோதனை செய்து பார்த்தார்..!! ஒருசிலவினாடிகள்.. பிறகு எழுந்துகொண்டவாறே.. அசோக்கிடம் சொன்னார்.!!
"உசுரு இருக்குற மாதிரி தெரியல அசோக்.. எதுக்கும் நான் ஆம்புலன்ஸ்க்கு கால் பண்றேன்..!! நீ அப்படியே அசையாம நில்லு.. இங்க இருக்குற எதையும் தொட்டுறாத.. சரியா..??"
பதட்டமான குரலிலேயே சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத்.. பாக்கெட்டில் இருந்து செல்ஃபோன் எடுத்தார்.. 'பட் பட்'டென அந்த செல்ஃபோனை அழுத்தியவர்.. பிறகு..
"ஆங்.. கனகு.." என்றவாறே வாசலை நோக்கி நடந்து வெளியே சென்றார்.
அசோக் வீட்டுக்குள்ளேயே அசையாமல் நின்றிருந்தான்.. இதயத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து இன்னுமே அவனால் மீளமுடியவில்லை.. உண்டான படபடப்பு அடங்க சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு..!! கொஞ்சம் கொஞ்சமாய் அவன் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும்போதுதான்.. அவனுடைய கவனத்தை அந்தப்பொருள் ஈர்த்தது..!! உடனே அவனுடைய முகத்தில் ஒரு சீரியஸ்னஸ்.. கண்களில் ஒரு கூர்மை..!! நின்ற இடத்தில் இருந்து மெல்ல அடியெடுத்து வைத்தான்.. தரையில் விழுந்து கிடந்தவனை அடைந்ததும்.. சற்றே குனிந்து.. கீழே கிடந்தவனின் காலுக்கடியில் கிடந்த அதை கையில் எடுத்தான்..!!
கோல்ட் கலரினால் ஆன.. ஹார்ட் ஷேப்பினால் ஆன.. பளபளப்பான அந்த குட்டி பென்டன்ட்..!! மீராவின் ப்ரேஸ்லட்டில் மினுமினுப்புடன் தொங்குமே.. அதே பென்டன்ட்..!!அதைப் பார்த்ததுமே அசோக்கிற்கு சுரீர் என்றது.. அவனுடைய புத்தி சரமாரியாய் எதை எதையோ யோசிக்க ஆரம்பித்தது..!! 'அப்படியானால்.. அப்படியானால்.. மீராதான் இதையெல்லாம் செய்ததா..?? காதலித்து ஏமாற்றியவனை கத்தியெடுத்து பழி தீர்த்துக் கொண்டாளா..??' ஆமாம் என்றது அவனது மூளை.. நம்ப மறுத்தது அவனது மனம்..!!
கருப்பொருள் ஒன்றிருக்குதடா..
காவுக்காய் காத்திருக்குதடா..!!
மீரா எழுதிய கவிதையின் கடைசி வரிகள் அவனது காதுக்குள் க்றீச்சிட்டன..!! வியர்த்துப் போனது அவனுக்கு இப்போது.. உடம்பெல்லாம் வெடவெடக்க ஆரம்பித்தது.. இருதயம் இன்னும் வேகமாய் படபடக்க ஆரம்பித்தது..!!
அப்போதுதான் அவனது மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல் கீற்று..!! 'மீரா இங்கே வந்து சென்றிருக்கிறாள் என்றால்.. ஒருவேளை.. நான் இந்த விஜயசாரதிக்கு கால் செய்தபோது என்கேஜ்டாக இருந்ததே.. அந்த நேரத்தில் இவன் மீராவுடன் பேசிக்கொண்டிருந்திருப்பானோ..?? அப்படியானால்.. இவனது செல்ஃபோனில் மீராவின் தொடர்பு எண் பதிவாகியிருக்க வேண்டும் அல்லவா..??'
அந்த எண்ணம் மனதில் உதயமானதும் அசோக் மீண்டும் பரபரப்பானான்..!! 'எதையும் தொட்டுறாத' என்று எச்சரித்து விட்டு சென்றிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் வார்த்தைகளை அலட்சியம் செய்தான்..!! செங்குருதியில் நனைந்துபோய் கிடந்த விஜயசாரதியிடம் குனிந்தான்.. அவனுடைய சட்டை, பேன்ட் பாக்கெட் எல்லாம் தடவி.. அவனது செல்ஃபோனுக்காக துழாவினான்.. கிடைக்கவில்லை..!! அருகில் இருந்த மேஜை, டீப்பாய், அலமாரி எல்லாம் அவசரமாக தேடினான்.. எங்கேயும் செல்ஃபோனை காணவில்லை..!!
உடனடியாக ஒரு முடிவுக்கு வந்தவன்.. தனது செல்ஃபோன் எடுத்து.. சேகரித்து வைத்திருந்த விஜயசாரதியின் எண்ணுக்கு கால் செய்தான்.. கால் செய்ததுமே.. ரிங்டோன் சத்தம் எங்கிருந்தாவது வருகிறதா என்று.. காதுகளை கூர்மையாக்கி கொண்டான்..!!
ரிங்டோன் சத்தம் வரவில்லை.. மறுமுனையில் இருந்து டயல்டோன் சத்தம்தான் காதில் ஒலித்தது..!! 'கால் செல்கிறது.. ரிங்டோன்சப்தம் வரவில்லையே..' என்று அசோக் குழப்பமாக விழித்துக் கொண்டிருக்கையிலேயே.. அடுத்த முனையில் கால் பிக்கப் செய்யப்பட்டது..!! அடுத்த நொடியே.. ஆதங்கமும், கோவமும் நிறைந்த மாதிரியாக மீராவின் குரலும்..!!
"பைத்தியக்காரன் மாதிரி பண்ணிட்டு இருக்காத அசோக்.. நீ நெனைக்கிறதுலாம் எப்போவும் நடக்காது.. புரிஞ்சுக்க..!!" சூடாக சொன்னாள் மீரா.
அசோக்கால் நம்பவே முடியவில்லை..!! 'நிஜம்தானா..?? மீராதானா இது..?? என் மீராதான் இப்போது என்னுடன் பேசுவதா..?? நிஜமாகவே அவளுடைய குரல்தான் இப்போது என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறதா..??' உள்ளத்தில் ஆச்சரியம் பீறிட.. உடனே ஒரு பதற்றமும் அவனை வந்து தொற்றிக்கொள்ள..
"மீ..மீரா.. மீரா.." என்றான் தவிப்பாக.
"ஏண்டா இப்படி பண்ற..?? போய்த் தொலையுறா சனியன்னு விட்டு தொலைக்க வேண்டியதுதான..?? எதுக்கு இன்னமும் என்னை தேடிட்டு இருக்குற..??" மீரா சீற, அசோக்கின் கண்களில் முணுக்கென்று கண்ணீர்.
"எ..என்ன மீரா பேசுற.. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்.. நீ எனக்கு வேணும் மீரா..!! ப்ளீஸ் மீரா.. எங்கிட்ட வந்துடு...!!"
"இல்ல அசோக்.. என்னால அது முடியாது.. சொன்னா புரிஞ்சுக்கோ..!!"
"இன்னும் என்ன புரிஞ்சுக்கணும்.. எனக்கு உன்னை பத்தி எல்லாம் தெரிஞ்சு போச்சு மீரா..!! இதுக்காகத்தான நீ ஓடி ஒளிஞ்ச.. இப்போ எனக்கு எல்லாம் தெரிஞ்சு போச்சு..!! உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!! நீ இப்போ எங்க இருக்குறன்னு சொல்லு.. நான் மட்டும் தனியா வர்றேன்.. நாம பேசி ஒரு முடிவுக்கு வரலாம்..!! நான் உன்மேல எந்த அளவுக்கு லவ் வச்சிருக்கேன்னு கொஞ்சமாவது புரிஞ்சுக்கோ மீரா.. ப்ளீஸ்..!!"
"ஐயோ.. உன் லவ்வை பத்தி நான் நல்லா புரிஞ்சு வச்சிருக்கேன்டா.. நீதான் என் மனசை புரிஞ்சுக்க மாட்டேன்ற..!! இந்த விஷயம் தெரிஞ்சா நீ என்னை ஏத்துக்க மாட்டேன்னு நெனச்சா.. நான் உன்னை விட்டு விலகுனேன்னு நெனைக்கிற..?? சொன்னா கேளுடா.. நான் உனக்கு வேணாம்.. இந்தப்பாவி உனக்கு வேணவே வேணாம்..!!" மீராவின் குரல் இப்போது அழுகையாக ஒலித்தது.
"இல்ல.. நீதான் எனக்கு வேணும்..!! நீ எனக்கு சொந்தமானவ மீரா.. நீ என் லைஃப்ல வந்ததுக்கு காரணம் இருக்கு.. என்கூட பழகுனதுக்கு காரணம் இருக்கு.. என்னை விட்டு பிரிஞ்சதுக்கு காரணம் இருக்கு..!! இப்போ என்கூட ஃபோன்ல பேசிட்டு இருக்குறதுக்கு கூட காரணம் இருக்கு மீரா..!!"
"எ..என்ன சொல்ற நீ..??"
"நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்க எடுத்துக்கிட்ட முயற்சிதான் இதெல்லாம்..!! அந்த காதல்தான் இப்போ உன்னையும் என்னையும் பேச வச்சிருக்கு..!! புரிஞ்சுக்கோ மீரா.. நீயும் நானும் சேரணும்.. அதுதான் விதி..!!"
அசோக் சொல்ல.. அடுத்த முனையில் மீரா சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! அவளுடைய அமைதி அசோக்கை பதற்றம் கொள்ள செய்தது..!!
"மீ..மீரா.. என்னாச்சு மீரா.. ஏதாவது பேசு மீரா..!!"
"ஓ.. நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்குமா..??" மீராவின் குரலில் ஒருவித இறுக்கம்.
"ஆ..ஆமாம்..!!" அசோக்கின் குரலில் ஒருவித தடுமாற்றம்.
"சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!! இப்போ கட் பண்றேன்.." படபடவென பேசிய மீரா ஒருகணம் நிறுத்தி..
"ஐ லவ் யூ..!!" என்று தழதழக்கிற குரலில் சொல்லிவிட்டு, பட்டென்று இணைப்பை துண்டித்தாள்.
"மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!"
என்று பதட்டத்துடன் கதறிக்கொண்டிருந்த அசோக்கிற்கு.. இணைப்பு துண்டிக்கப்பட்ட ஓசையே கேட்க கிடைத்தது..!! மீண்டும் அந்த எண்ணுக்கு அவன் கால் செய்ய.. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது..!!
என்ன செய்வதென்று புரியாத அசோக்.. அப்படியே தலையை பிடித்துக்கொண்டான்.. தலை எல்லாம் வின்வின்னென்று வலிப்பது போல ஒரு உணர்வு..!! சோர்ந்து போய் தரையில் மண்டியிட்டு அமர்ந்தான்..!! அவனுடைய இதயமெல்லாம் தாங்க முடியாத மாதிரி ஒரு வலி..!! கண்களில் கண்ணீர் பூத்து..கன்னம் நனைந்து ஓட ஆரம்பித்தது..!!
"பேசிட்டேன் அசோக்.. வந்துட்டு இருக்காங்க..!!"
சொல்லிக்கொண்டே ஸ்ரீனிவாச பிரசாத் வீட்டுக்குள் நுழைய.. அசோக் அவசரமாக கண்களை துடைத்துக்கொண்டு எழுந்தான்..!! கையிலிருந்த பென்டன்ட்டை.. அவர் அறியாமல் தனது பாக்கெட்டுக்குள் திணித்து மறைத்தான்..!! அவர் பக்கமாய் திரும்பி.. மிக இயல்பாக ஒரு பார்வை பார்த்தான்..!!
இருட்டுக்குள் இப்போது மிக பிரகாசமாக நின்றிருந்தது அந்த விருந்தினர் மாளிகை.. கூரையில் இருந்து கீழ்தொங்கிய மின்விளக்குகள் வீட்டுக்குள்ளே வெளிச்சத்தை கிளப்பின என்றால்.. தரையில் இருந்து மேற்கிளம்பிய குமிழ்விளக்கு கம்பங்கள் வீட்டுக்கு வெளியே ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன..!! வாயிற்கதவுக்கருகே ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்போடு சேர்த்து.. இப்போது மேலும் இரண்டு போலீஸ் ஜீப்புகள், ஒரு ஒழுங்கற்ற கோணங்களில் நிறுத்தப்பட்டிருந்தன.. அதில் ஒரு ஜீப்பின் நெற்றியில், சிவப்பு விளக்கு இன்னும் ஒளிர்ந்து கொண்டிருந்தது..!! விஷயம் கேள்விப்பட்டு வீட்டுக்கு வெளியே குழுமியிருந்த ஜனங்களின் கண்களில்.. ஒருவித ஆர்வமும், மிரட்சியும் ஒருசேர காணக்கிடைத்தன..!! வீட்டை சுற்றி வளர்ந்திருந்த மரங்கள்.. சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்து.. அசையக்கூட மனமின்றி அப்படியே உறைந்து போயிருந்தன..!!
வீட்டுக்குள்ளே.. காவல்துறையை சேர்ந்த கைரேகை மற்றும் தடவியல் குழுவினர் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்..!! அவர்களிடம், ரெட்ஹில்ஸ் இன்ஸ்பெக்டர் மலரவன் ஏதேதோ கேள்விகள் கேட்டுக்கொண்டும், உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டும்.. குற்றம் நடந்திருந்த இடத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தார்..!! ஆதாரங்கள் என்ற பெயரில் வீட்டிலிருந்த சில பொருட்கள் சேகரிக்கப்பட்டன.. ரத்தத்தில் நனைந்திருந்த மாய கிருஷ்ணனின் சிலை, பாலித்தீன் கவருக்குள் பத்திரமாக்கப்பட்டது..!! அறையின் ஒருமூலையில்.. எச்சில் வடிகிற நாக்கை நீளமாக தொங்கப் போட்டுக்கொண்டு அந்த மோப்ப நாய்.. வீட்டுக்குள் நுழைந்ததுமே வீராவேசமாக பின்பக்கம் ஓடி.. ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு சீறிப்பாய்ந்து.. பிறகு ஒரு புதரைக் கண்டதும் சிறுநீர் பெய்துவிட்டு.. மீண்டும் வீட்டுக்குள் வந்து ஓரமாக செட்டில் ஆகியிருந்தது..!!
உயிரற்ற உடல்கள் பிரேத பரிசோதனைக்கென மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்க.. அவை விழுந்து கிடந்த இடங்கள் சாக்பீஸால் மார்க் செய்யப்பட்டிருந்தன..!! எப்போதோ உறைந்து போயிருந்த கருஞ்சிவப்பு ரத்தச்சேற்றில்.. இப்போது ஈக்கள் ரீங்காரமிட்டபடி வந்தமர்ந்து, மொய்க்க ஆரம்பித்திருந்தன..!! காற்றில்கூட குருதியின் நெடி கலந்துபோய்.. சுவாசிப்பவர்களின் முகத்தை சற்றே சுளிக்க வைத்தது..!!
வீட்டுக்கு வெளியே.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த காவல்த்துறை வாகனத்தின் மீது சாய்ந்திருந்தனர்.. அவர்களை சுற்றிலும் ஒரு மெலிதான புகை மூட்டம்.. அவர்களுடைய ஒரு கையில் பாதி காலியான டீ க்ளாஸ்.. இன்னொரு கையில் பாதி கரைந்திருந்த சிகரெட்..!! ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகம் ஒருமாதிரி இறுகிப் போயிருக்க.. அசோக்கின் முகமோ ஒருவித கவலையில் தத்தளித்துக் கொண்டிருந்தது..!! அவனது பாக்கெட்டில் கிடந்த பென்டன்ட் தொடையை உறுத்த.. பலவித குழப்ப எண்ணங்கள் அவனது மூளையை உறுத்திக் கொண்டிருந்தன..!!
'மீரா ஒரு குற்றவாளி.. கொலைக்குற்றம் செய்திருக்கிறாள்.. அவள் செய்த குற்றத்துக்கு சட்டப்படி தண்டனை உண்டு..!! அப்படியிருக்கையில்.. அவளுடன் உனது வாழ்க்கையை பங்குபோட்டுக் கொள்ள நினைப்பது அறிவுள்ள செயலா..?' என்று.. அவனது புத்தி கிடந்து பதறியது..!! அதையெல்லாம் அவனுடைய காதல்மனம் அப்படியே புறந்தள்ளியது..!!
'குற்றம் செய்த எல்லோரும் தண்டனையை அனுபவித்துதான் ஆகவேண்டுமா..? நம்நாட்டு அரசியல்வாதிகளும், செல்வந்தர்களும் இதைக்கேட்டால்.. விழுந்து விழுந்து சிரிக்க மாட்டார்களா..? பணமும், பதவியும் படைத்தவர்கள் எல்லாம் சட்டத்தை ஏய்த்து சந்தோஷமாக திரிகையில்.. பாவப்பட்ட என் மீரா மட்டும் எதற்காக தண்டனை அனுபவிக்க வேண்டும்.. அதுவும் இரு கொடியவர்களை கொன்று முடித்ததற்காக..? அவசியமே இல்லை..!! அவள் சிக்குவது என்னிடமாக இருக்கவேண்டுமே ஒழிய.. போலீஸின் வசம் அல்ல..!! அவள் வாழ வேண்டியது என் மனச்சிறையில்தானே ஒழிய.. மத்திய சிறையில் அல்ல..!!' என்பது மாதிரி இருந்தது அவனது இதயத்தில் எழுந்த எண்ணம்..!!
காதலியை கண்டுபிடிக்கிற காரியத்துக்கு.. காவல்துறையை ஒரு கருவியாகத்தான் இத்தனை நாள் அசோக் கருதியிருந்தான்.. இனி அப்படி கருதுவதற்கு வாய்ப்பில்லை என்று இப்போது அவனுக்கு தெளிவாக புரிந்தது..!! சற்று ஒதுங்கியிருப்பதுதான் நல்லது.. இனி மீராவைப்பற்றி போலீஸிடம் என்ன பேசினாலும்.. அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும் என்று தோன்றியது..!! ஏற்கனவே ஸ்ரீனிவாச பிரசாத்திடம் பேசிய சில விஷயங்களே.. மீராவுக்கு சிக்கல்களை உருவாக்கக் கூடியவைகளாக இருந்தன..!!
"கைல ஒரு ப்ரேஸ்லட் போட்ருப்பா ஸார்.. அதுல ஹார்ட் ஷேப்ல ஒரு கோல்ட் பென்டன்ட் தொங்கும்..!!"
மீராவின் அங்க அடையாளங்களை பற்றி ஸ்ரீனிவாச பிரசாத்திடம் முன்பு சொன்னபோது.. அந்த பதக்கத்தைப் பற்றியும் அசோக் குறிப்பிட்டிருந்தான்..!! அசோக்கின் கண்ணில்பட்ட அந்த பதக்கம் மட்டும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் பார்வையில் சிக்கியிருந்தால்.. ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது மாதிரி காவல்த்துறையின் வேலை மிக எளிதாக முடிந்து போயிருக்கும்..!! அந்த பதக்கம் தனது கண்ணில் பட்டதற்காக, அசோக் இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டான்..!! காவல்த்துறையின் பிடியில் இருந்து மீராவை காப்பாற்றிவிட்டது போன்றொரு திருப்தி அவனுக்குள்..!!
அதேநேரம்.. போலீஸின் உதவியில்லாமல் மீராவை எப்படி தேடிக் கண்டுபிடிக்கப் போகிறோம் என்ற கேள்வியும்.. அவன் மனதில் எழாமல் இல்லை..!! ஒருசில யோசனைகள் அவன் மூளையில் உதித்தாலும்.. அவை யாவுமே வலுவான யோசனைகளாய் அவனுக்கு படவில்லை..!! இருந்தபோதிலும்.. எத்தனை கஷ்டப்பட நேர்ந்திட்டாலும்.. இனி போலீஸின் உதவியை மட்டும் நாடக்கூடாது என்று மட்டும், மனதுக்குள் ஒரு உறுதியான முடிவெடுத்துக் கொண்டான்..!!
'நானே தனியா அவளை தேடிக் கண்டுபுடிக்கணும்.. போலீஸ்ட்ட மட்டும் அவ பிடிபட்டுட கூடாது..!!'
"ஹ்ம்ம்.. அதுலாம் அவளை புடிச்சுடலாம்.. எங்க எஸ்கேப் ஆயிட போறா..!!"
ஸ்ரீனிவாச பிரசாத் திடீரென அவ்வாறு சொன்னதும்.. அசோக் சற்றே பதறிப்போய் அவரை திரும்பிப் பார்த்தான்.. அவன் முகத்தில் ஒருவித திகைப்பு..!! ஸ்ரீனிவாச பிரசாத்தோ.. ஒரு மெலிதான புன்முறுவலுடன் இவனையே பார்த்துக் கொண்டிருந்தார்..!!
"எ..என்ன ஸார் சொல்றீங்க..??" அசோக்கின் குரல் தடுமாற்றமாக ஒலித்தது.
"இல்லடா.. அந்த விஜயசாரதிட்ட இருந்து, உன் ஆள் பத்தி ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைக்கும்னு நெனச்சோம்.. அவன் என்னடான்னா இங்க செத்துப்போய் கெடக்குறான்..!! அவளை கண்டுபிடிக்க இருந்த ஒரே சான்ஸும், இப்படி ஆயிருச்சேன்னு நெனச்சு நீ வொர்ரி பண்ணிக்காத.. கூடிய சீக்கிரம் எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடலாம்னு சொன்னேன்.. புரியுதா..??"
அசோக்கின் தடுமாற்றத்தை கவனியாமல், ஸ்ரீனிவாச பிரசாத் அவனுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சொன்னார். அவர் அவ்வாறு சொன்னதும்தான், அவ்வளவு நேரம் நின்று போயிருந்த அசோக்கின் மூச்சு இப்போது நிம்மதியாக வெளிப்பட்டது.
"ம்ம்.. பு..புரியுது ஸார்..!!" என்றான் உலர்ந்த குரலில். ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது அசோக்கின் தடுமாற்றத்தை கண்டுகொண்டார்.
"எ..என்னடா ஆச்சு.. கண்டுபிடிச்சுடலாம் சொல்றேன்.. உன் மூஞ்சில ஒரு எக்ஸ்ப்ரஸனே காணோமே..??"
"ஒ..ஒன்னும்.. ஒன்னுல்ல ஸார்..!!" என்ன பதில் சொல்வதென்று திணறிய அசோக்கிற்கு,
"ஹ்ம்ம்.. ரத்தத்தை பார்த்த ஷாக் இன்னும் போகலையா..??" ஸ்ரீனிவாச பிரசாத்தே உதவி செய்தார்.
"ஆ..ஆமாம்..!!"
"ஹ்ஹ.. இட்ஸ் ஓகே.. நைட் தூங்கி எந்திரிச்சா, காலைல எல்லாம் சரியா போயிடும்..!! உனக்கு ஃபர்ஸ்ட் டைம்ல.. அதான்..!! எனக்கு இதுலாம் பழகிப் போச்சு..!!"
ஸ்ரீனிவாச பிரசாத் அவ்வாறு அமர்த்தலாக சொன்னதும்.. அசோக் சிறிது நேரம் அமைதியாக இருந்தான்..!! புகை உள்ளிழுத்து குபுகுபுவென வெளியிட்டவாறே.. எதையோ தீவிரமாக யோசித்தான்..!! பிறகு மனதில் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.. ஸ்ரீனிவாச பிரசாத்தை ஆழம் பார்ப்பது மாதிரி.. மெல்லிய குரலில் அந்த கேள்வியை கேட்டான்..!!
"யா..யாரு இதை பண்ணிருப்பாங்க ஸார்..??"
"எதை..??"
"இ..இந்தக் கொலையை..!!" அசோக் அந்த மாதிரி தயக்கமாக சொன்னதும், ஸ்ரீனிவாச பிரசாத் பட்டென சிரித்துவிட்டார்.
"ஹாஹா..!! டேய்.. என்னை என்ன மந்திரவாதின்னு நெனச்சுட்டியா.. இங்க்-க வெத்தலைல தடவி பட்டுன்னு சொல்றதுக்கு..?? எல்லாம் இன்வெஸ்டிகேட் பண்ணித்தான் கண்டுபிடிக்கணும்..!! ஹ்ம்ம்.. அதுவும்கூட இப்போ என் வேலை கெடையாது.. எல்லாம் ரெட்ஹில்ஸ் போலீஸ் பாத்துப்பாங்க.. கொலை செஞ்சது யாருன்னு அவங்க கண்டுபிடிப்பாங்க..!!"
"தெ..தெரியும் ஸார்.. சும்மா கேட்டேன்..!!"மெலிதான புன்னகையுடன் சொல்லிவிட்டு அசோக் அமைதியானான். இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் எதையோ நினைத்துக்கொண்டு புருவத்தை நெறித்தார். ஒரு திடீர் யோசனை தோன்றியவராய் அசோக்கிடம் திரும்பி சொன்னார்.
"அ..அசோக்.. நான் ஒன்னு சொல்லவா..??"
"என்ன ஸார்..??"
"உன் ஆள் பத்தி ரெட்ஹில்ஸ் போலீஸ்ட்ட சொல்லலாமா..??" ஸ்ரீனிவாச பிரசாத் கேட்கும்போதே, அசோக்கின் உடலில் சுரீர் என்றொரு மின்சாரம் பாய்ந்தது.
"மீ..மீரா பத்தியா..??"
"ம்ம்..!!"
"எ..என்ன சொல்லலாம்னு சொல்றீங்க..??"
"அதான்டா.. இந்த விஜயசாரதி உன் ஆளை லவ் பண்ற மாதிரி நடிச்சது.. அவளை அனுபவிச்சுட்டு அப்புறம் ஏமாத்தினது.. அதனால ஆம்பளைங்கன்னாலே உன் ஆளுக்கு ஒரு வெறுப்பு இருந்தது.." ஸ்ரீனிவாச பிரசாத் சொல்லிக்கொண்டு போக, அசோக் இடையில் புகுந்து அவரை தடுத்தான்.
"ஹையோ ஸார்.. அ..அதுலாம் ஜஸ்ட் என்னோட அஸம்ப்ஷன்தான..?? உ..உண்மையா இருக்கனும்னு ஒன்னும் அவசியம் இல்லையே..??"
"ஆமான்டா.. உன்னோட அஸம்ப்ஷன்தான்..!! அதைத்தான் இவங்கட்ட சொல்லலாம்னு சொல்றேன்..!!"
"அதை எதுக்கு இவங்கட்ட..??"
"புரியலையா..?? இந்த கொலையை பண்றதுக்கு உன் ஆளுக்கு ஸ்ட்ராங் மோட்டிவ் இருக்குன்னு இவங்கட்ட சொல்லலாம்.. ஐ மீன்.. அவங்க நம்புற மாதிரி பொய் சொல்லலாம்..!!"
"அ..அதனால என்ன யூஸ்..??"
"ரெட்டை கொலைடா..!! அதுல ஒருத்தன், சென்னைலயே முக்கியமான பிக் ஷாட்டோட பையன்..!! இன்வெஸ்டிகேஷன் ரொம்ப ரொம்ப சீரியஸா இருக்கும்..!! உன் ஆளுக்கு மோட்டிவ் இருக்குன்னு மட்டும் இவங்க நம்பிட்டாங்கன்னு வச்சுக்கோ.. சும்மா விடமாட்டாங்க.. எப்படியாவது அவளை கண்டுபிடிச்சுடுவாங்க..!!"
"ஓ..!!"
"அவளை கண்டுபிடிச்சுடுறாங்கன்னு வச்சுக்கோ.. அப்புறம் அவகிட்ட என்கொய்ரி பண்றப்போ.. அவளுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தம் இல்லன்னு இவங்களுக்கே தெரிஞ்சிடும்.. விட்டுடுவாங்க..!! அப்புறம் என்ன.. இவங்க மூலமா உனக்கு உன் ஆளு கெடைச்சுடுவா.. எல்லாம் சுபம்..!! சிம்பிளா சொல்லப்போனா.. இந்த மர்டர் சம்பந்தமான இன்வெஸ்டிகேஷனை.. உன் ஆளை தேடிக் கண்டுபிடிக்கிறதுக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு சொல்றேன்.. இப்போ புரியுதா..??"
"புரியுது ஸார்.. ஆ..ஆனா.."
"என்ன ஆனா..??"
"அ..அந்த மாதிரி பண்ணுனா.. மீரா பத்தின விஷயம் ந்யூஸ்பேப்பர்ல-லாம் வரும்ல..??" அசோக் கேட்க, ஸ்ரீனிவாச பிரசாத் நெற்றியை சுருக்கினார்.
"ஆ..ஆமாம்..!!"
"எ..எல்லாம் என்னோட அஸம்ப்ஷன்தான்.. இருந்தாலும்.. ஒ..ஒருவேளை.. ஒருவேளை அது உண்மையா இருந்தா.. அவ வாழ்க்கைல நடந்த அந்த அசிங்கம்.. அப்புறம் ஊருக்கே தெரிஞ்சு போயிடும்.. இல்ல..??"
"ம்ம்..!!" அசோக் எங்கே வருகிறான் என்று ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு இப்போது தெளிவாக புரிந்தது.
"வேணாம் ஸார்.. எனக்கு அதுல விருப்பம் இல்ல..!!""இ..இல்லடா.. கொஞ்சம் யோசி.. அவளை கண்டுபிடிக்கிறதுக்கு இது ஒரு.."
"அவளை கண்டுபிடிக்கிறது எனக்கு முக்கியந்தான் ஸார்.. ஆனா அதை விட.. அவளுக்கு எந்த களங்கமும் வராம பாத்துக்குறது ரொம்ப ரொம்ப முக்கியம்..!! அவளை என் உயிரைவிட அதிகமா நேசிக்கிறேன்.. என்மூலமா அவளுக்கு ஒரு கெடுதல் நடந்துச்சுனா.. சத்தியமா அதை என்னால தாங்கிக்கவே முடியாது ஸார்..!! அவ எனக்கு கெடைக்காட்டா கூட பரவால.. இந்த மாதிரி ஊருக்கே அந்த விஷயம் தெரிஞ்சு, அவ அசிங்கப்பட கூடாது..!! ப்ளீஸ் ஸார்.. தயவு செஞ்சு மீரா பத்தி எந்த விஷயமும் இவங்கட்ட சொல்லிராதிங்க.. நான் சொன்னதெல்லாம் உங்க மனசோடவே இருக்கட்டும்.. ப்ளீஸ் ஸார்.. உங்களை கெஞ்சிக் கேட்டுக்குறேன்.. ப்ளீஸ்..!!"
அழுதுவிடுகிற குரலில் படபடவென அசோக் கெஞ்சலாக சொல்ல, ஸ்ரீனிவாச பிரசாத் அவனையே திகைப்பாக பார்த்தார். அந்தப்பார்வையில் 'ஏமாற்றி சென்றவள் மீதுதான் இவனுக்கு எத்தனை காதல்..?' என்பது மாதிரியான பிரமிப்பும் கலந்திருந்தது. முழுதும் கரைந்துபோன சிகரெட் இப்போது அவருடைய விரலை சுட, கையை உதறி அதனை விசிறினார். தலையை மெலிதாக உலுக்கிக்கொண்டவர், வேறுபக்கமாக பார்வையை வீசினார். தூரத்தில் கேட்டுக்கருகே தெரிந்த மனித கும்பலை வெறித்தவாறே, எதையோ யோசிக்க ஆரம்பித்தார்.அவ்வளவு நேரம் அவரிடம் அப்பாவியாக, பரிதாபமாக ஒரு முகத்தை காட்டிக்கொண்டிருந்த அசோக்.. இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் அந்த முகத்தை மாற்றிக் கொண்டான்..!! அவனுடைய முகம் இப்போது பாறை போல இறுக ஆரம்பித்தது..!! அப்படியே தலையை மெல்ல திருப்பி.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஓரக்கண்ணால் பார்த்தான்..!! அவருடைய முகத்தில் தெரிந்த குழப்பத்தை பார்த்ததும்.. அசோக்கின் மனதுக்குள் ஒருவித நிம்மதியும், திருப்தியும் ஒருசேர பரவின.. அவனது உதட்டோரத்தில் ஒரு குறும்புன்னகை மெலிதாக கசிந்தது..!!
'மீரா பற்றிய பேச்சினை இவரே ஆரம்பித்தது, மிக வசதியாக போயிற்று.. இவர் ஆரம்பித்ததை மீராவுக்கு சாதகமாக திருப்பியாயிற்று..!! குற்றத்தை புலனாய்வு செய்யப் போகிறவர்களிடம்.. மீரா பற்றிய விஷயங்களை இவர் சொன்னால்.. நிச்சயம் அது அவளுக்கு ஆபத்தாகவே முடியும்..!! அவர்களுடைய சந்தேகப்பார்வை மீரா இருக்கிற திசைக்கே திரும்பக்கூடாது.. அதற்கு.. மீரா பற்றி இவர் அவர்களிடம் வாயை திறக்கவே கூடாது..!! என் மீது இவருக்கு அன்பிருக்கிறது.. என் கெஞ்சலை இவர் நம்பிவிட்டார்.. இப்போது குழப்பத்தில் இருக்கிறார்.. சொல்வதா வேண்டாமா என்று..!! இவரை மேலும் குழப்ப வேண்டும்.. இவருக்கு என் மீதிருக்கும் அன்பினை, மீராவுக்கு சாதகமாக உபயோகித்துக் கொள்ளவேண்டும்..!!'
மனதில் அந்த மாதிரி எண்ணம் ஓடவும்.. அசோக் இப்போது மீண்டும் தனது முகத்தை அப்பாவித்தனமாக மாற்றிக் கொண்டான்..!! மேலும் சில சென்டிமன்டான டயலாக்குகளை அவசரமாக யோசித்துக் கொண்டவன்.. அவற்றை ஸ்ரீனிவாச பிரசாத்திடம் சொல்வதற்காக வாயை திறந்தபோதுதான்..
"என்ன ஸார்.. இங்க வந்து தனியா நின்னுட்டிங்க..??"
அவர்களுக்கு பின்னால் இருந்து அந்த சப்தம் கேட்டது.. உடனே இருவரும் திரும்பி பார்த்தார்கள்..!! தடித்த மீசைமயிர்களுடனும்.. கனத்த கன்னக்கதுப்புகளுடனும்.. இரவு நேரத்திலும் அணிந்த குளிர்கண்ணாடியுமாக.. இன்ஸ்பெக்டர் மலரவன் இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அவரிடம்,
"ஒன்னுல்ல ஸார்.. உங்க வேலையை டிஸ்டர்ப் பண்ண வேணாம்னுதான்..!!" என்றார் மெலிதான புன்னகையுடன்.
"அதனால என்ன ஸார்.. பரவால..!!" சொன்ன மலரவன் அவரை நெருங்கி,
"Can I borrow a cigarette..??" என்று கேட்டார் ஆங்கில இளிப்புடன்.
உடனே ஸ்ரீனிவாச பிரசாத் சிறு பதற்றத்துடன், சிகரெட் பாக்கெட் எடுத்து அவசரமாக அவரிடம் நீட்ட.. மலரவன் அதிலிருந்து ஒரு சிகரெட்டை உருவி உதட்டில் பொருத்திக் கொண்டார்..!! ஸ்ரீனிவாச பிரசாத் நெருப்பு பற்றவைக்க.. மலரவன் புகையிழுத்து வெளியே ஊதி, வளிமண்டலத்தை மாசுபடுத்த ஆரம்பித்தார்..!!
"வெப்பன் கெடைச்சதா ஸார்..??" கேட்டார் ஸ்ரீனிவாச பிரசாத்.
"எங்க..??? எவ்வளவு தேடியும் கெடைக்கலை..!! Knife மாதிரி எதோ ஷார்ப்பான வெப்பன்தான் ஸார்.. உடம்பு பூரா அப்படியே பஞ்சர் பண்ணிருக்காங்க..!! அந்த மூர்த்தி ஸார் பையனோட பின்னந்தலைல.. இந்த எடத்துல.. செமத்தியா ஒரு அடி விழுந்திருக்கு.. அனேகமா அந்த கிருஷ்ணன் சிலையை வச்சுத்தான் அடிச்சிருக்கனும்னு தோணுது..!! ஹ்ஹ்ம்ம்ம்.. அதுதான் இப்போதைக்கு கெடைச்சிருக்குற ஒரே வெப்பன்..!!" பதில் சொன்னார் மலரவன்.
"ம்ம்.. மூர்த்தி ஸார்க்கு இன்ஃபார்ம் பண்ணியாச்சா..??"
"பண்ணியாச்சு..!! மனுஷன் மலேசியால இருக்காரு போல.. மேட்டரை சொல்றேன், பெருசா அவர்ட்ட ஷாக்கே இல்ல ஸார்..!! சொன்னதெல்லாம் 'ம்ம்.. ம்ம்..'ன்னு பொறுமையா கேட்டுக்கிட்டாரு.. உடனே கெளம்புறேன்னு மட்டும் சொன்னாரு.. காலைல இங்க இருப்பாருன்னு நெனைக்கிறேன்..!! ஹ்ம்ம்... அப்புறம்.. இன்னொரு விஷயம் ஸார்.."
"என்ன..??"
"உள்ள எங்களுக்கு நெறைய ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் கெடைச்சிருக்கு..!! உங்க ரெண்டு பேரோட ஃபிங்கர் ப்ரின்ட்ஸ் கூட எங்களுக்கு வேணும்.. எலிமினேட் பண்றதுக்கு..!!"
"ஷ்யூர்.. அதனால என்ன.. குடுத்திடலாம்..!!"
"தேங்க்ஸ்..!! இப்போ வேணாம்.. நாளைக்கு பாத்துக்கலாம்.. சரியா..?? ம்ம்ம்ம்ம்ம்.. அப்புறம்.. உங்களை இன்னொன்னு கேக்கனும்னு நெனச்சேன்.."
"கேளுங்க..!!"
"நீ..நீங்க எப்படி.. இ..இந்த நேரத்துக்கு.. கரெக்டா இங்க..??"
நெற்றியை சுருக்கியவாறு மலரவன் அந்தமாதிரி கேட்க.. அத்தனை நேரம் அமைதியாக நின்றிருந்த அசோக்கின் மனதுக்குள்.. இப்போது திடீரென ஒரு கலக்கம்..!! படக்கென பக்கவாட்டில் திரும்பி ஸ்ரீனிவாச பிரசாத்தின் முகத்தை ஏறிட்டான்.. அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று.. பதற்றம் அப்பிய முகத்துடன் அவரையே பார்த்தான்..!! அவரும் தனது முகத்தை திருப்பி, அசோக்கை ஒரு சலனமற்ற பார்வை பார்த்தார்.. பிறகு மலரவனிடம் திரும்பி..
"நாங்க.. ஒரு ஃப்ராட் பொண்ணை ட்ரேஸ் பண்ணிட்டு இருக்கோம் ஸார்..!!" என்றார்.
"ஓகே..!!"
"அந்தப்பொண்ணு யூஸ் பண்ணின மொபைல் நம்பர்.. இந்த விஜயசாரதியோட பேர்ல ரெஜிஸ்டர் ஆகி இருந்தது.. அது சம்பந்தமா விசாரிக்கத்தான் வந்தோம்..!!"
"ஓ..!! ம்ம்... அப்போ அந்தப்பொண்ணுக்கும் இந்த பையனுக்கும்..??" மலரவன் கேள்வியாக பார்க்க,
"இல்ல.. எந்த சம்பந்தமும் இல்ல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் அழுத்தம் திருத்தமாக சொன்னார். சொன்னவர் கோர்வையாக மேலும் தொடர்ந்தார்.
"ரெண்டு வாரம் முன்னாடியே.. விஜயசாரதி கூட நான் ஃபோன்ல பேசினேன்.. அப்போவே தெளிவா சொல்லிட்டான்.. இவனுக்கும் அவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு..!! ஆக்சுவலா.. இவன் யூ.எஸ் போறதுக்கு முன்னாடியே.. இவனோட செல்ஃபோனை எங்கயோ தொலைச்சிருக்கான்.. அது அந்தப்பொண்ணு கைல சிக்கிருக்கு.. அவ அதே நம்பரை அவளோட ஃப்ராட் வேலைக்கு யூஸ் பண்ணிருக்கா.. தேட்ஸ் ஆல்..!!"
"ஹ்ஹ.. ஓகே ஓகே..!! ஹ்ம்ம்.. அப்படி என்ன ஃப்ராட் பண்ணினா அந்தப்பொண்ணு..??"
"பேங்க்ல லோன் வாங்கி தர்றதா சொல்லி.. ஒரு நாலஞ்சு பேர்ட்ட, பத்து லட்ச ரூபாக்கு மேல ஆட்டையை போட்டுட்டு.. ஆள் எஸ்கேப் ஆகிட்டா..!! ஒருமாசமா அலையுறோம்.. அவளை ட்ரேஸ் பண்ணவே முடியல..!!"
"ம்ம்ம்... செம கேடியா இருப்பா போல..??"
"சந்தேகமே வேணாம் ஸார்.. பயங்கர கேடி..!!" சொன்ன ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி,
"என்ன அசோக்.. சரிதான..??" என்று சற்றே கிண்டலான குரலில் கேட்டார்.
"ஆ..ஆமாம்..!!" அசோக் தடுமாற்றமாக சொன்னான்.
"ஹ்ம்ம்.. So.. What's your next move..??" மலரவன் அவ்வாறு கேட்க,
"Next move-னா..?? புரியல..!!" ஸ்ரீனிவாச பிரசாத் புரிந்தும் புரியாதவர் போல திரும்ப கேட்டார்.
"இல்ல.. இ..இப்போ இந்த விஜயசாரதியும் இல்ல.. அந்தப்பொண்ணை எப்படி கண்டு பிடிக்கப் போறீங்கன்னு கேட்டேன்..!!"
"ஹாஹா.. அது என் தலைவலி ஸார்.. உங்களுக்கு எதுக்கு..??"
அந்த விஷயத்தை பற்றி, அதற்கு மேலும் பேச தனக்கு விருப்பம் இல்லை என்பதை.. ஒரு சிரிப்புடன் ஸ்ரீனிவாச பிரசாத் நாசுக்காக சொன்னார்..!! மலரவனுக்கும் அது புரியாமல் இல்லை.. பதிலுக்கு புன்னகைத்தவர்..
"ஹாஹா.. ஆமாமாம்.. உங்க தலைவலி எனக்கெதுக்கு..?? எனக்குத்தான் ஏற்கனவே ரெட்டைத்தலைவலி வந்துடுச்சே.. அதைப்போய் என்னன்னு பாக்குறேன்..!!"
என்று சிரிப்புடனே சொல்லிவிட்டு.. சிகரெட்டை கீழே போட்டு காலால் மிதித்து நசுக்கிவிட்டு.. அங்கிருந்து நகன்றார்..!! இப்போது ஸ்ரீனிவாச பிரசாத் அசோக்கிடம் திரும்பி.. 'என்னடா.. திருப்தியா..?' என்பது போன்ற பார்வையுடன் புன்னகைத்தார்..!! அசோக்கும்.. அவர் மலரவனிடம் பேசிய விதத்தில் விளைந்திருந்த ஒருவகை நிம்மதியுடன்..
"தேங்க்ஸ் ஸார்..!!" என்றான் மெலிதாக.அசோக்கிற்கு வந்திருந்த அந்த நிம்மதி.. அதேசமயம் தனது படுக்கையறை மெத்தையில் வீழ்ந்து கிடந்த மீராவிடம்.. துளியும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்..!! உள்ளம் முழுக்க அழுத்தத்துடன் வீடு நுழைந்தவளுக்கு.. உடைகளை மாற்றிக் கொள்கிற எண்ணம் கூட வரவில்லை..!! மூளைக்குள் குடைச்சலுடன் படுக்கையில் சரிந்தவள்.. முதுகு குலுங்க விம்மி விம்மி அழ ஆரம்பித்திருந்தாள்..!! அவளுடைய கண்களில் இருந்து வழிந்த நீர்த்துளிகள்.. கைக்குள் அகப்பட்டிருந்த அசோக்கின் புகைப்படத்தில் பட்டு தெறித்தன..!! அழுகையினூடே.. அவ்வப்போது அந்த புகைப்படத்துக்கு.. தனது சிவந்த உதடுகளால் முத்தங்களும் வைத்தாள்..!!
விஜயசாரதியின் விருந்தினர் மாளிகையில் வைத்து.. அசோக்கை காணநேரிடும் என்று அவள் சற்றும் எதிர்பார்த்திரவில்லை.. அதுவும் அந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்..!! செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தவளுக்கு.. தூரத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருடன் நடந்துவந்த அவளது காதலன் காணக்கிடைத்தான்..!! ஒருகணம் என்ன செய்வதென்றே அவளுக்கு எதுவும் புரியவில்லை.. நீண்ட நாட்களுக்கப்புறம் பார்ப்பதற்கு வாய்த்த அந்த ஆசைமுகம்.. அவனுக்கு இணையாக நடந்து வந்த அந்த காவல்துறை அதிகாரி.. குருதியிலே குளித்து முடித்த மாதிரி வீட்டுக்குள்ளே இரட்டைப் பிணங்கள்..!!
தடுமாறினாள்.. மூளை சிந்திக்க மறுத்து சிக்கிக்கொண்டது.. கால்கள் நகர மறுத்து பிண்ணிக்கொண்டன..!! எப்படியோ ஒருவழியாக சமாளித்து சுதாரித்துக் கொண்டாள்.. அவசரமாய் யோசித்து ஒரு முடிவெடுத்தவள்.. அப்படியே பின்னால் நகர்ந்து வீட்டின் பின்புறம் ஓடினாள்..!!
அந்த காவல்துறை அதிகாரியின் கண்ணில் சிக்காமல் தப்பித்து.. கல்லிலும் முள்ளிலும் கால்கள் வதையுற ஓடிக்களைத்து.. சீற்றமாக எதிரே வந்த ஆட்டோவை கையசைத்து நிறுத்தி.. 'சிந்தாதிரிப்பேட்டை போகணும்' என்றபடி ஏறியமர்ந்தபோதுதான்.. கையிலிருந்த அந்த செல்ஃபோன் சப்தம் எழுப்பியது..!! பதற்றத்துடனேதான் செல்ஃபோன் டிஸ்ப்ளேயில் பார்வையை வீசினாள்.. பார்த்ததுமே அவளுடைய நெஞ்சுக்குள் ஒரு பனிச்சிதறல்..!!
எத்தனை நாட்கள் அந்த எண்களின் வரிசையை ஏக்கமாக பார்த்திருப்பாள்.. எவ்வளவு ஆசையாக அந்த எண்களை அவளது கட்டை விரல் டயல் செய்யும்..?? கண்ணில் விழுந்ததுமே காதலனின் தொடர்பு எண்கள் என்று பளிச்சென அவளுக்கு தெரிந்து போனது..!! பேசலாமா வேண்டாமா என மிகுந்த மனப் போராட்டத்துக்கு பிறகுதான்.. காலை பிக்கப் செய்து அவனுடன் பேசினாள்..!!
நேரில் அசோக்கின் முகத்தை பார்த்ததிலும், ஃபோனில் அவனது குரலை கேட்டதிலும்.. சிறிது நாட்களாக இறுகிப் போயிருந்த மீராவின் இதயம்.. இப்போது மீண்டும் இளக்கம் கொடுக்க ஆரம்பித்திருந்தது..!! அவளும்.. காதலுக்கும் கழிவிரக்கத்துக்கும் இடையில் சிக்குண்டு.. சிதையுற ஆரம்பித்திருந்தாள்..!!
'மீ..மீரா.. ப்ளீஸ் மீரா.. கட் பண்ணிடாத மீரா..!!'
அசோக் சற்றுமுன் ஃபோனில் தவிப்புடன் கதறியது.. இப்போது மீராவின் காதுக்குள் மீண்டும் ஒலிக்க.. அவளது அழுகை ஒலியின் டெசிபல் மேலும் அதிகமாகவே செய்தது..!! அழுதவாறே 'ஸாரிடா அசோக்' என்று வாய்க்குள்ளேயே முணுமுணுத்தாள்.. புகைப்படத்தில் படிந்திருந்த கண்ணீர் துளிகளை, கட்டைவிரலால் துடைத்தெடுத்தாள்..!!
'நம்ம காதல் உண்மையானது மீரா.. அது நம்மளை சேர்த்து வைக்கும்..!!'
அவளுக்குள் மீண்டும் அசோக்கின் குரல்..!! உடனே.. 'அப்படி ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்து விடமாட்டோமா..??' என்றொரு ஏக்கமான உணர்வு.. மீராவின் மனதுக்குள் பரவியது..!! வேதனையில் பொசுங்கிக் கொண்டிருந்த அவளது இதயத்தை.. மெல்லிய மயிலிறகால் வருடிச் சென்றது அந்த உணர்வு..!!
'உன்னோட பழைய வாழ்க்கை பத்தி எனக்கு எந்த கவலையும் இல்ல மீரா.. நீ எனக்கு வேணும்.. அவ்வளவுதான்..!!'
'என்மீதுதான் அவனுக்கு எத்தனை அப்பழுக்கற்ற காதல்..?? விலகிச் சென்றாலும் விட மறுக்கிறானே..?? களங்கம் பொருட்டல்ல கலந்திடலாம் வா என்றழைக்கிறானே..?? கலந்திடலாமா.. காற்றென இப்போதே கிளம்பி சென்று, காதலனின் நெஞ்சில் சாய்ந்து கவலைதீர அழலாமா..??'
ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொண்டு மார்பில் முகம் புதைத்துக் கொள்வது மாதிரி.. அவள் மனதுக்குள் ஒரு கற்பனை ஓட.. அந்த நொடியில்.. அவளுடைய மனதை இறுக்கிக்கொண்டிருந்த அழுத்தம் மொத்தமும்.. இலவம்பஞ்சென மாறிச்சிதறி அவளை விட்டகன்று.. அவளுக்கும் அப்படியே காற்றில் பறப்பது போலொரு இலகுவான உணர்வு..!! ஆனால் அடுத்த நொடியே.. அந்த மாதிரி நினைத்ததற்காக தன்னைத்தானே அவள் கடிந்து கொண்டாள்..!!
'ச்ச்சே.. ஏனடி பைத்தியம் இப்படி எல்லாம் மனதை அலைபாய விடுகிறாய்..?? 'உடலை இன்னொருவனுடன் பகிர்ந்துகொண்டவள் என்கிற உண்மையறிந்தும்.. உன்னுடனே வாழ்வினை பகிர்ந்துகொள்வதில் அவன் உறுதியாக இருக்கிறான்..' என்பதினால் உருவாகிட்ட உவகையோ..?? அவனுக்குத்தான் உன்மீது பித்து என்றால்.. உனக்கெங்கே போயிற்று புத்தி..?? அவனுடைய காதல் அழுத்தமானதுதான்.. ஆனால் அத்தகைய காதலுக்கு நீ பொருத்தமானவளா..?? யோசி..!!!!'
என்பது மாதிரி ஒரு எண்ணம் இப்போது அவளுக்குள் தோன்ற.. மீண்டும் கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்..!! அவளது உதடுகள் துடிக்க.. மூக்கு விசும்பிக் கொண்டது..!!
'வேண்டாத நினைப்பெல்லாம் வெட்டி எறிந்துவிடு.. எடுத்த முடிவில் எப்போதும் உறுதியாக இரு..!! அவனுக்கு நீ வேண்டாம்.. அவனுடைய நல்ல மனதிற்கு தகுதியான ஒருத்தியுடன்தான், அவனது இல்வாழ்க்கை அமைந்திட வேண்டும்.. அதை என்றும் மனதில் நிறுத்திக்கொள்..!!'
திரும்ப திரும்ப அந்த மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருநிலையில் நிறுத்தி வைக்க முயன்றாள்..!! ஆனால்.. அந்த முயற்சியில் அவளால் வெற்றி பெற முடியவில்லை..!! புள்ளிமானாய் துள்ளியோடிய மனதை கட்டிப்போட.. காய்ந்தகொடியாய் துவண்டிருந்த மீராவால் சற்றும் முடியவில்லை..!!
'கற்பென்பது உடல்ரீதியானதா.. மனரீதியானதா..??' - மனதின் ஓரத்தில் ஒரு பட்டிமன்றம்.
'அவன் மீது உனக்கு அளவிலா காதல் உள்ளது.. அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாவதற்கு, அந்தக்காதலை தவிர வேறென்ன தகுதி வேண்டிக் கிடக்கிறது..??' - நறுக்கென்று கேள்வி கேட்டது நல்ல மனதொன்று.
'உண்மையை சொல்லி காதலைப் பெற்றவர்களுக்குத்தான் அதெல்லாம் பொருந்தும்..!! அவனது கண்மூடித்தனமான காதலை உனக்கு சாதகமாய் உபயோகித்துக்கொள்ள.. இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறாயே.. வெக்கமாயில்லை உனக்கு..??' - பரிகாசம் செய்து பார்த்து ரசித்தது இன்னொரு மனது.
'இன்னும் ஐந்தே நாட்கள்தான்.. அப்புறம் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை..!! அதுவரை பொறுமையாக இரு.. தெளிவாக சிந்தி.. குழப்பத்திற்கு இடம் தராதே..!!' - தெளிவாகவே குழப்பியது அடுத்தொரு மனது.
அப்படியும் இப்படியுமாய் அல்லாடிய எண்ணங்கள்.. பிறகு வேறொரு நினைவு வந்ததும், ஒரு நிதான நிலையை அடைந்தது..!! சற்றுமுன் அசோக்கிடம் ஃபோனில் பேசிய கடைசி வார்த்தைகளின் நினைவுதான் அது..!!
'சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!!'
அந்த நினைவு வந்த பிறகு.. அவள் சிந்திய வார்த்தைகளை அவளே சற்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த பிறகு.. அத்தனை நேரம் குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த மனதில் ஒருவித நிம்மதி பரவுவதை அவளால் உணர முடிந்தது..!! அவள் இருந்த நிலைமையில் அந்த முடிவுதான் சரியென அவளுக்கு தோன்றியது.. அசோக்கை போலவே அவளும் காதலின் மீது பாரத்தை போட முடிவு செய்தாள்..!!
'பார்க்கலாம்.. நானாக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.. அப்படியே எடுத்தாலும், அது அவனை விட்டு விலகிப் போகிற முயற்சியாகவே இருக்கும்..!! உண்மையிலேயே எங்கள் காதலுக்கு சக்தி இருந்தால்.. எனது முயற்சியையும் மீறி, அந்த காதல் அவனுடன் என்னை சேர்த்து வைக்கட்டும்..!! இன்னும் ஐந்து நாட்கள்.. ஐந்தே ஐந்து நாட்கள்.. அதன்பிறகு அவனை விட்டு நான் வெகுதூரம் சென்று விடுவேன்.. அப்புறம் அவன் என்னை தேடிக்கண்டுபிடிப்பது நடவாத காரியம்..!! எங்களுடைய காதல் உண்மையானதாக இருந்தால்.. அந்தக் காதலுக்கென்று ஒரு வலிமை இருந்தால்.. நானும் அவனும்தான் கரம் கோர்க்கவேண்டும் என்பது விதியாக இருந்தால்.. இன்னும் ஐந்து நாட்களுக்குள், எனது இருப்பிடம் அறிந்து அவனே என் எதிர் வந்து நிற்கட்டும்.. அவனும் நானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளுமாறு ஆகட்டும்..!! பார்க்கலாம்.. எங்கள் காதலுக்கு எத்தனை ஆற்றல் உள்ளதென்று..!!'
அலைபாய்ந்த மனது இப்போது அமைதியாகிப் போய்விட.. அத்தனை நேரம் உறக்கம் இல்லாமல் உருகிக் கொண்டிருந்த கண்களும், மெல்ல மெல்ல மூடிக் கொண்டன..!! எப்போது உறங்க ஆரம்பித்தோம் என்ற உணர்வே இல்லாமல்.. மீரா நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்து போனாள்..!!
இரவு நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்ததால்.. காலையிலும் அவள் எழுந்து கொள்ள தாமதமானது..!! சுள்ளென்று கன்னத்தில் வெயில் அடித்த போதிலும்.. சுரணையற்று சுருண்டு கிடந்தாள்..!! கடிகாரத்தின் சின்ன முள் ஒன்பதை தொட்ட சமயத்திலும்.. கடைவாயில் நீரொழுக தலையணை நனைத்து கிடந்தாள்..!!
பிறகு.. அவளுக்கு அருகே குப்புற கிடந்த செல்ஃபோன்.. 'விர்ர்ர்ர்ர்.. விர்ர்ர்ர்ர்...' என்று பதறி துடித்ததும்.. உடலும், தலையும் சிலிர்த்துக்கொண்டு உறக்கம் கலைந்தாள்..!! இமைகளை பிரித்து ஓரிரு வினாடிகள் மலங்க மலங்க விழித்தவள்.. அப்புறம் குப்புறக் கிடந்தவாறே துள்ளிய அந்த செல்ஃபோனை கையில் எடுத்தாள்..!! புதியதொரு எண்ணிலிருந்து வந்திருந்த அழைப்பு அது..!! ஓரிரு வினாடிகள் குழம்பியவள்.. பிறகு கால் பிக்கப் செய்து.. தூக்கம் நிறைந்த குரலிலேயே சொன்னாள்..!!
"ஹ்..ஹலோ..!!"
"மேடம்.. நான் ஹீசுலியா ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன்..!!"
"ம்ம்.. சொல்லுங்க..!!"
"உங்க ஃப்ளைட் டிக்கெட்ஸ் ரெடி..!! அட்ரஸ் சொன்னிங்கன்னா.. வந்து டெலிவர் பண்ணிடுவோம்..!!"
கரகர குரலில் கேட்டவனுக்கு.. மீரா தனது வீட்டின் முகவரியை சொன்னாள்..!! எப்போ டெலிவர் பண்ணுவிங்க என்று இவள் கேட்க.. இன்னைக்கு ஈவினிங்கே என்று அந்த கரகர குரல் சொல்ல.. தேங்க்ஸ் என்று திருப்தியானாள்..!! காலை கட் செய்து.. செல்ஃபோனை மெத்தையின் ஓரமாய் தூக்கி போட்டாள்..!!
அவளுடைய முகம் உறங்கி வழிந்தாலும், மனம் இப்போது மிக தெளிவாக இருந்தது.. நேற்று இரவு இறுதியாய் எடுத்த முடிவினால் வந்திருந்த தெளிவு அது..!! இரவு மார்போடு அணைத்தபடி படுத்திருந்த அசோக்கின் புகைப்படத்தை இப்போது கையில் எடுத்தாள்.. காதலாக ஒரு பார்வை பார்த்தாள்.. இதமாக ஒரு புன்னகையை சிந்தினாள்.. ஈரமாக ஒரு முத்தம் வைத்தாள்..!! அருகிலிருந்த டேபிளில் புகைப்படத்தை வைத்துவிட்டு.. படுக்கையில் இருந்து எழுந்தாள்..!!
பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டாள்.. ப்ரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டாள்.. வாய்க்குள் ப்ரஷுடன் வாசலுக்கு வந்தாள்.. கீழே கிடந்த தினமலரை கையில் எடுத்தாள்..!! முதல் பக்கத்திலேயே.. கீழ்ப்புற கால்வாசி பரப்பை அடைத்திருந்தது அந்த செய்தி.. ரெட்ஹில்ஸ் ரெட்டைக்கொலை செய்தி..!! ந்யூஸ் பேப்பரை விரித்து வைத்து.. ஒரு கையை இப்படியும் அப்படியுமாய் அசைத்து பல் துலக்கிக்கொண்டே.. அந்த செய்தியின் ஒவ்வொரு எழுத்தையும் மிக கவனமாக வாசித்தாள்..!!
பல் துலக்கி முடித்ததும் ஏதோ நினைவுக்கு வந்தவளாய், சமயலறைக்கு சென்று.. அந்த பிளாஸ்டிக் கேனை கையில் எடுத்தாள்.. அப்படியே அந்த பெரிய சைஸ் சமையலறை தீப்பெட்டியையும்..!! படுக்கையறைக்கு வந்து விஜயசாரதியின் செல்ஃபோனை கையகப்படுத்தினாள்.. வீட்டுக்கு பின்புறம் சென்றாள்.. சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்து, யாரும் தென்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டாள்..!! செல்ஃபோனை கீழே விசிறி.. கேனில் இருந்த திரவ எரிபொருளை அதன் மீது ஊற்றி.. தீக்குச்சி கிழித்து விட்டெறிய.. குப்பென்று பற்றிக்கொண்டது நெருப்பு..!!
கொழுந்து விட்டெரிகிற தீஜுவாலையை பார்த்தவாறே சிறிது நேரம் சலனமில்லாமல் நின்றிருந்தாள்.. பிறகு சாம்பல் மிச்சத்தை அள்ளிக்கொண்டு மீண்டும் பாத்ரூம் சென்றாள்.. டாய்லட் சின்க்குக்குள் கொட்டி தண்ணீர் திறந்துவிட்டாள்..!! நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டாள்..!!
அப்படியே ஷவருக்கு அடியில் சென்று நின்று.. ஜில்லென்று சிதறிய நீரில் நனைந்தாள்.. குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டாள்..!! வேறு உடை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றாள்.. சீப்பு எடுத்து கேசம் வாரியபோதுதான் அதை கவனித்தாள்.. ப்ரேஸ்லட்டில் தொங்குகிற பென்டன்டை காணவில்லை..!!!!
'ப்ச்' என்று ஒரு சலிப்பை உதிர்த்தாள்.. 'எங்கே விழுந்திருக்கும்..' என்று நெற்றியை கீறினாள்.. 'ஒருவேளை அங்கே..??' என்பது மாதிரி ஒரு எண்ணம் தோன்றவும் உடல் சிலிர்த்துக் கொண்டது..!! 'சேச்சே.. அப்டிலாம் இருக்காது.. வேற எங்கயாவது விழுந்திருக்கும்..' என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்..!!
படுக்கையறையில் தேடிப் பார்க்கலாம் என்று அவள் திரும்பிய போதுதான்.. திடீரென..
“கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்...!!!!”
என்று காலிங்பெல் சப்தம் எழுப்பியது..!! அந்த சப்தத்தை கேட்டதுமே, மீரா அப்படியே ப்ரேக் போட்ட மாதிரி டக்கென்று நின்றாள்.. கண்களில் மெலிதான ஒரு மிரட்சியுடன் திரும்பி, வாசற்கதவை வெறித்தாள்..!! அவளுடைய உடலில் ஒருவித பதற்றம் ஊற்றெடுக்க.. உதடுகள் சன்னமான குரலில் முணுமுணுத்தன..!!
"போலீஸ்..!!!!"மீராவின் பென்டன்டை கைப்பற்றியதிலும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தை பேச விடாமல் தடுத்ததிலும்.. அசோக் மிகுந்த திருப்தியுற்றிருந்தான்..!! போலீசின் கவனத்தை மீராவின் பக்கம் இருந்து திருப்பியாயிற்று.. அவர்கள் அவளை நெருங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்தான்..!! அவன் செய்த விஷயங்கள் மீராவுக்கு மிகவும் சாதகமான விஷயங்களாக அமைந்த போதிலும்.. போலீஸ் மீராவை நெருங்குவதை தவிர்க்கும் அளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை..!!
அந்தவகையில் அசோக்கை விட மீரா மிகவும் கூர்மையாக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! விஜயசாரதியை பார்ப்பதற்கு கிளம்பும்போது, சமையலறை சென்று அந்த கத்தியை எடுத்து தனது கைப்பைக்குள் திணித்தாளே.. அந்த நொடியே.. அடுத்தநாள் தன் வீட்டு வாசலில் வந்து போலீஸ் நிற்கும் என்பதை தெளிவாக அறிந்தே வைத்திருந்தாள்..!! அதனால்தான்.. இப்போது கதவை திறந்ததும்.. எதிர்ப்பட்ட இரண்டு காக்கி உடுப்புகளை பார்த்து.. அவளால்..
"எஸ்..!!" என்று இயல்பாக சொல்ல முடிந்தது..!!
கான்ஸ்டபிள்கள் இருவர் மீராவின் வீட்டை அணுகியிருந்த அதே சமயத்தில்.. அசோக் ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில்தான் இருந்தான்.. அவனுடன் ஸ்ரீனிவாச பிரசாத்தும் இருந்தார்..!! இருவரும் சேர்ந்து.. முதல்நாள் நடந்த சம்பவத்தினைப் பற்றி.. ஒரு ஃபார்மல் ஸ்டேட்மன்ட் எழுதி தர வேண்டி இருந்தது..!! அப்புறம்.. முதல்நாள் மலரவன் கேட்டுக்கொண்ட மாதிரி.. இருவரது கைரேகை பிரதிகளையும் ரெட்ஹில்ஸ் போலீஸ் வசம் ஒப்படைத்தனர்..!! மலரவன் மேலும் சில கேள்விகளுடன் தயாராக இருந்தார்.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை திருப்தி செய்தனர்..!!
"விஜய சாரதியோட செல்ஃபோன் இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்நம்பர் வச்சு.. அவருக்கு நேத்து வந்த கால்லாம் ட்ரேஸ் பண்ணினோம்.. லாஸ்டா உங்க நம்பர்ல இருந்துதான் அந்த நம்பருக்கு கால் போயிருக்கு.. ஐ மீன்.. கொலை நடந்த கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்..!!” மலரவன் சொல்லிவிட்டு அசோக்கை கூர்மையாக பார்த்தார்.
"ஓ..!!" அசோக் திகைப்பது போல நடித்தான். அவசரமாய் தன் செல்ஃபோன் எடுத்து பார்த்தான்.
“அந்த காலை யாரோ அட்டண்ட் பண்ணிருக்காங்க.. ஒருநிமிஷம் வரை அந்த கால் போயிருக்கு..!!"
"தெ..தெரியல ஸார்..!! என் மொபைல பேன்ட் பாக்கெட்ல வச்சிருந்தேன்.. தானா டயல் ஆகி இருக்கும்ன்னு நெனைக்கிறேன்.. நிச்சயமா நானா பண்ணல..!!"
"கொலை பண்ணினவங்கதான் செல்ஃபோனை எடுத்துட்டு போயிருக்கனும்.. அவங்கதான் அந்த காலையும் அட்டன்ட் பண்ணிருக்கணும்..!!"
"இருக்கலாம் ஸார்..!! நான் ஆக்சிடண்டா டயல் பண்ணின மாதிரி.. அவங்களும் ஆக்சிடண்டா கால் பிக்கப் பண்ணிருக்கலாம்..!! தெரியல ஸார்.. ஐம் நாட் ஷ்யூர்..!!"
அசோக்கின் சமாளிப்பை நம்புவதை தவிர மலரவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. அசோக்கிற்கு பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லை என்று அவர் உறுதியாக நம்பியதால்.. அவன் சொன்ன அந்த ஆக்சிடன்ட் டயல் லாஜிக்கை ஒரு பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டார்..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட சில பொதுவான கேள்விகளுக்கும்.. மலரவன் பதிலளித்தார்..!!
"மூர்த்தி ஸார் வந்தாச்சா..??"
"ம்ம்.. காலைலேயே வந்துட்டார்..!!"
"இன்வெஸ்டிகேஷன்ல ஏதாவது இம்ப்ரூவ்மன்ட்..??"
"ப்ச்.. எதுவும் இல்ல ஸார்..!! என்ன மோட்டிவ்னு கூட இன்னும் தெரியல..!! பட்.. இன்வெஸ்டிகேஷன் புல் ஃஸ்விங்ல ஸ்டார்ட் பண்ணிருக்கோம்.. ரெண்டு ஆங்கிள்ல இன்வெஸ்டிகேஷன் மூவ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!"
"ஓ.. என்ன ஆங்கிள்ஸ்..??"
"ஒன்னு.. மூர்த்தி ஸாரோட பிஸினஸ் எதிரிங்க யாராவது, அவர் மேல இருக்குற பகைல.. அவரோட ஒரே பையனை தீர்த்து கட்டிருக்காங்களான்னு..!! இன்னொன்னு.. அந்த காசிப்பயலோட ட்ரக் பெட்லிங் கேங்ல யாராவது.. அவன் மேல இருக்குற பகைல இதைப் பண்ணிருக்கலாமான்னு..!!"
"ஓகே ஓகே.. குட்..!!"
எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் அங்கிருந்து கிளம்ப.. ஒருமணி நேரத்துக்கும் மேலாகிப் போனது..!!
"ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம் தம்பி.. கேஸ் கோர்ட்டுக்கு வர்றப்போ.. நீ வர்ற மாதிரி இருக்கும்..!! உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??" கிளம்புகிற சமயத்தில் மலரவன் அசோக்கிடம் கேட்க,
"இ..இல்ல ஸார்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!" அவன் புன்னகையுடன் சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.
அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் மலரவனின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.. வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்பில் ஏறிக் கொண்டனர்..!! சாவி திருகி ஜீப்பை கிளப்பினார் ஸ்ரீனிவாச பிரசாத்.. ஆக்சிலரேட்டரை மிதித்து வேகம் கூட்டினார்..!! அந்த ஜீப்.. காவல்நிலைய வளாகத்தின் நுழைவாயிலை தாண்டியபோது.. எதிர்ப்பக்கம் இருந்து இன்னொரு ஜீப் க்ராஸ் செய்து, காவல் நிலையத்துக்குள் நுழைந்தது..!! அந்த ஜீப்பில்.. பின் சீட்டில்.. அமர்ந்திருந்தாள்.. மீரா..!!!ஒரு ஜீப்பில்.. 'அடுத்து என்ன செய்யப் போகிறோம்?' என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்..!! அடுத்த ஜீப்பில்.. எதைப் பற்றிய அக்கறையும் இல்லாமல்.. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மீரா..!! இரண்டு ஜீப்புகளும் ஒன்றை ஒன்று எதிரும் புதிருமாய் க்ராஸ் செய்து கொண்டன.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை..!! இருவரையும் சந்தித்துக்கொள்ள வைத்து.. அவர்களது காதலுக்கு உதவி செய்கிற மாதிரி ஒரு எண்ணம்.. பாழாய்ப்போன அந்த விதிக்கும் வரவில்லை..!!
அடுத்த ஐந்தாவது நிமிடம்.. மீரா மலரவனின் முன்பு அமர்ந்திருந்தாள்..!! அவளுடைய இதயத்தின் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாயிருந்தது.. ஆனால் அந்த பதற்றத்தை தனது முகத்தில் காட்டாமல், மிக லாவகமாக மறைத்திருந்தாள்..!! சில வினாடிகள் அவளை ஏற இறங்க பார்த்த மலரவன்.. பிறகு மிக இயல்பாகவே தன் விசாரணையை ஆரம்பித்தார்..!!
"இது ஜஸ்ட்.. ஒரு ஃபார்மல் என்கொய்ரிதான்..!! நீங்க எதுவும் நெர்வஸ் ஆகிக்க தேவை இல்ல..!!"
"இ..இல்ல ஸார்.. ஆகல.. சொல்லுங்க..!!"
"ஹ்ம்ம்.. ந்யூஸ் பேப்பர் பாத்திருப்பிங்கன்னு நெனைக்கிறேன்....??"
"ம்ம்.. பார்த்தேன் ஸார்.. பாத்ததுக்கு அப்புறந்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது.. அப்படியே.. I was shocked..!! எப்படி சொல்றதுன்னு தெரியல.. I.. I just.. I couldn't believe that..!!"
பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து.. அழுதுவிடுகிற குரலில் சொன்னாள் மீரா..!! மிக திறமையாகவே நடித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. முணுக்கென்று அவளுடைய கண்களில் ஒருதுளி கண்ணீர் பூத்தது.. அதை அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்..!! அவளுடைய நடிப்பை மலரவன் அப்படியே நம்பிவிட்டார் போல தோன்றியது.. அவளது அழுகை அவரிடம் ஒரு பதற்றத்தை கொடுத்திருந்தது..!!
"ப்ளீஸ் மிஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..!!"
என்றார் கனிவான குரலில். உடனே மீரா ஒருமுறை மூக்கை விசும்பிக் கொண்டாள். விசும்பிக்கொண்டவள், ஒருவித குசும்புடன் கேட்டாள்.
"யா..யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிச்சாச்சா ஸார்..??"
"இன்னும் இல்ல.. இப்போத்தான் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிச்சிருக்கோம்.. கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்..!!"
"ம்ம்..!!
"ஆக்சுவலி.. விஜய சாரதியோட செல்ஃபோன் எங்களுக்கு இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்லுக்கு வந்த கால்லாம் எங்களால கண்டு பிடிக்க முடிஞ்சது.. அது மூலமாத்தான் உங்க நம்பர் எங்களுக்கு கெடைச்சது..!!"
"ம்ம்.. புரியுது ஸார்..!!"
"அவர் இந்தியா வந்து ரெண்டு நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள அஞ்சாறு தடவை உங்களுக்கு கால் பண்ணி பேசிருக்காரு.. இல்லையா..??"
"எஸ்..!!
"ஹ்ம்ம்.. நேத்து ஈவினிங் நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா..??"
மலரவன் அந்த மாதிரி கேட்டதும், மீரா படக்கென உஷாரானாள். நேற்று இறுதியாக விஜயசாரதியுடன் ஃபோனில் பேசியபோது, தான் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தது எந்த இடம் என்று அவசரமாக யோசித்தாள். யோசித்தவள்,
"அண்ணாநகர்ல ஷாப்பிங் போயிருந்தேன்.. மத்தபடி என் வீட்லதான் இருந்தேன்..!!" என்றாள் இயல்பான குரலில்.
"உங்க வீடு சிந்தாதிரிப்பேட்டைல..??"
"எஸ்..!!"
"உங்களுக்கும் விஜயசாரதிக்கும் எப்படி பழக்கம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"
தானும் விஜயசாரதியும் முதன் முதலாக சந்தித்துக்கொண்ட அந்த சம்பவத்தை.. மீரா இப்போது நினைவுக்கு கொண்டுவந்தாள்..!! அந்த நினைவு எப்போதும் அவளுக்கு வேதனையையே தரும்.. இன்றும் தந்தது..!! ஆனால் அந்த வேதனையை தனது முகத்தில் காட்டிக்கொள்ளாமல்.. சலனமற்ற முகபாவத்துடனே சொன்னாள்..!!
"I'm a nurse..!! வியாசர்பாடில.. மூர்த்தி சார்க்கு சொந்தமான ஒரு ஹாஸ்பிடல் இருக்குது.. அங்கதான் நான் வொர்க் பண்ணினேன்..!! மொதலாளின்ற முறைல விஜய் அந்த ஹாஸ்பிடல்க்கு அப்பப்போ வருவாரு..!! எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.. ஒருதடவை ஃப்ரண்ட்ஸோட வந்திருந்தாரு.. அவரோட ஃப்ரண்ட் யாருக்கோ மெடிக்கல் சர்ட்டிஃபிகேட் வேணும்னு வந்திருந்தாரு..!! அன்னைக்குத்தான் நாங்க முதமுதலா மீட் பண்ணிக்கிட்டோம்..!!"
"ம்ம்..!!"
"நான் ஹாஸ்பிடல் ரெஸ்டாரன்ட்ல தனியா உக்காந்து சாப்பிட்டு இருந்தேன்.. அவர் எதிரே உக்காந்து சாப்பிட்டாரு.. அவரே தானா வந்து எங்கிட்ட பேசினார்.. ஃப்ரண்ட்ஷிப் வச்சுக்கிட்டாரு..!!" என்பதுவரை உண்மையை சொன்ன மீரா, அப்புறம் குரலை மாற்றாமலே ஒருசில பொய்களை சொன்னாள்.
"ரொம்ப நல்ல டைப்.. பணக்காரர்ன்ற பந்தா கெடையாது.. ரொம்ப டீசண்டா, கண்ணியமா நடந்துப்பாரு.. எனக்கும் அவரை ரொம்ப பிடிச்சு போச்சு..!! வீ ஆர் வெரி குட் ப்ரண்ட்ஸ்..!!!" மீரா அப்படி சொன்னதுக்கு மலரவன் மெலிதாக புன்னகைத்தார். அதை கவனித்த அவள்,
"எ..என்ன ஸார்.. சிரிக்கிறீங்க..??" என்று கேட்டாள்.
"ஒன்னுல்ல.. அந்த விஜயசாரதியை இவ்வளவு புகழ்றீங்களேன்னு பார்த்தேன்..!!"
"ஆ..ஆமாம்.. ஏன்..??"
"இல்ல.. இதுவரை நான் விசாரிச்ச வரைக்கும்.. அவரை பத்தி வேற மாதிரிதான் கேள்விப்பட்டேன்..!! ஹ்ம்ம்ம்ம்.. எனிவே.. அது அவங்க அவங்க வ்யூ..!! ஹ்ம்ம்.. உங்ககிட்ட இன்னொரு விஷயம் சொல்லணும்..!!"
"ம்ம்.. சொல்லுங்க..!!"
"விஜயசாரதி இறந்து போறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடி.. கடைசியா அவர் பேசுனது ரெண்டு பேர்ட்டதான்..!! ஒன்னு.. அவர் கூடவே இறந்து போன அந்த காசி.. இன்னொன்னு நீங்க..!!" மலரவன் சொல்லிவிட்டு மீராவின் கண்களையே கூர்மையாக பார்க்க, அவளோ
"ஓ.. இஸ் இட்..??" என்று ஆச்சரியப்பட்டு அவரை குழப்பினாள்.
"எ..எஸ்.. நேத்து ஈவினிங் உங்ககிட்ட அவர் பேசின ஒரு அரை மணி நேரத்துலதான்.. மர்டர் நடந்திருக்கு..!!"
"ஓகே..!! எ..எனக்கு அது தெரியாது..!!"
"ஹ்ம்ம்.. லாஸ்டா அவர்கிட்ட நீங்க என்ன பேசுனிங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??"
"ரெண்டு பேரும் நேர்ல மீட் பண்ணிக்கிறது பத்தித்தான் பேசிக்கிட்டோம்..!! அவரை பாத்து ஒரு வருஷத்துக்கும் மேல ஆச்சு.. இவ்வளவு நாளா அவர் யூ.எஸ்ல இருந்தாரு.. இப்போ.. இன்னும் ஃபைவ் டேஸ்ல நான் கல்ஃப் கெளம்புறேன்.. அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சுத்தான் திரும்ப வருவேன்..!! அதான்.. இந்த அஞ்சு நாள் விட்டா.. அப்புறம் ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கவே முடியாதுன்னு.. அதுக்கு நடுவுல ஒருநாள் மீட் பண்ணிக்க நெனச்சோம்..!! ஆக்சுவலா.. இன்னைக்கு மீட் பண்றதா இருந்தது.. அ..அதுக்குள்ள.. அதுக்குள்ள இப்படி.."
சொன்னதை முடிக்காமலே மீரா போலியாக விசும்ப ஆரம்பித்தாள்.. மலரவன் மீண்டும் தலையை சொறிந்துகொண்டார்.. அழுகிறவளை அவரே மறுபடியும் சமாதானம் செய்யுமாறு ஆகிப் போனது..!!
அதன்பிறகும் மலரவன் மீராவை பல கேள்விகள் கேட்டார்.. எல்லாமே விஜயசாரதி பற்றியும், அவனுக்கும் மீராவுக்கும் இருந்த நட்பு பற்றியுமான கேள்விகளாகவே இருந்தன..!! எல்லா கேள்விகளுக்கும் மீரா மிக இயல்பாக, புத்திசாலித்தனமாக, எந்த சந்தேகத்திற்கும் இடம் கொடுக்க முடியாத வகையில் பதில் சொன்னாள்..!! ஒரு கட்டத்தில் மலரவன் சலிப்படைந்து போனார்.. ஆரம்பத்தில் மீரா மீது இருந்த சிறிய சந்தேகமும் இப்போது அவருக்கு இல்லாமல் போயிருந்தது..!!
இருந்தாலும்.. அவளை சந்தேக லிஸ்டில் இருந்து முழுமையாக நீக்குவதற்கு முன்பு.. இன்னும் ஒரு காரியம் செய்ய நினைத்தார்.. அவளுடைய கைரேகையை கலெக்ட் செய்துகொள்வதுதான் அது..!! அதை அவளிடம் நேரடியாக கேட்டு பெறுவதற்கும் அவருக்கு மனமில்லை.. அவள் பெண் என்பதும், அதிலும் அழகான பெண் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.. அவள் அறியாமலே அதை செய்யவேண்டும் என்று நினைத்தார்..!!
"வந்துமே கேட்ருக்கணும்.. ஏதோ ஞாபகத்துல மறந்துடுச்சு..!! ஏதாவது சாப்பிடுறீங்களா..?? காபி, டீ, ஜூஸ்..!!" என்று திடீரென கேட்டார்.
"இ..இல்ல ஸார்.. அதுலாம் வேணாம்..!!" மீரா தயங்கினாள்.
"பரவால.. சாப்பிடுங்க..!!"
"நோ ஸார்.. நீங்க மொதல்ல கேட்டு முடிங்க.. அப்புறமா.."
"கேக்க வேண்டியதுலாம் கேட்டு முடிச்சாச்சு.. அவ்வளவுதான்..!! ஏதாவது சாப்பிட்டு நீங்க வீட்டுக்கு கெளம்பலாம்..!!"
"ஓ..!!"
"சொல்லுங்க.. என்ன சாப்பிடுறீங்க..??"
"இ..இல்ல ஸார்.. ஒன்னும் வேணாம்..!!"
"நோ நோ.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. எங்க இன்வெஸ்டிகேஷனுக்கு ஹெல்ப் பண்றதுக்காக இவ்ளோ தூரம் வந்திருக்கீங்க.. யு லுக் ஸோ டயர்ட் ஆல்ஸோ.. கண்டிப்பா ஏதாவது சாப்பிடனும்..!! சொல்லுங்க..!!" அவர் மிகவும் வற்புறுத்தவும்,
"ஓகே.. ஜூஸ்..!!" என்று மீரா ஒத்துக் கொண்டாள்.
மலரவன் ஒரு கான்ஸ்டபிளை அழைத்து ஜூஸ் கொண்டுவருமாறு சொன்னார்.. அப்படி சொல்கையிலே கண்ணை சிமிட்டி அந்த கான்ஸ்டபிளுக்கு ஒரு சிக்னல் கொடுத்தார்..!! கைரேகை சேகரிப்பதற்கான யுக்தி அது என்பதை.. அந்த கான்ஸ்டபிளும் புரிந்துகொண்டு ஜூஸ் எடுத்துவர நகர்ந்தார்..!!
மீரா உஷாராக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. மலரவன் அந்த கான்ஸ்டபிளுக்கு கண்ணால் கொடுத்த சிக்னலை.. அவள் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.. தனது கைரேகையை சேகரிக்கத்தான் இந்த கரிசன நாடகம் எல்லாம் என்பது.. அவளுக்கும் விளங்காமல் இல்லை..!!
விஜயசாரதியின் வீட்டில் இருந்து செல்ஃபோனை எடுத்துக் கொண்டு கிளம்புகையில்.. அந்த வீட்டுக்குள் தனது கைரேகை படிந்திருக்க வாய்ப்பிருக்கிற இடங்களை எல்லாம்.. கைக்குட்டையால் துடைத்து முடித்து அவள் கிளம்பிய காட்சி.. இப்போது அவளது மனத்திரையில் பளிச்சிட்டது..!! மலரவனின் சிறுபிள்ளைத்தனமான இந்த முயற்சியை நினைத்து, அவளுக்கு மெலிதாக சிரிப்பு வந்தது.. அதை மிக எளிதாக அடக்கிக் கொண்டாள்..!!
இரண்டே நிமிடங்களில்.. மஞ்சள் நிறத்திலான பழச்சாறு நிறைந்த ஒரு கண்ணாடி டம்ளர்.. மீராவுக்கு முன்பாக கொண்டு வந்து வைக்கப்பட்டது..!! அவள் எந்த தயக்கமும் இல்லாமல் அந்த டம்ளரை பற்றி.. கையில் எடுத்து உயர்த்தி.. அப்படியே தொண்டைக்குள் சரித்து.. மடக் மடக்கென முழுதும் குடித்து முடித்தாள்..!! கைக்குட்டையால் உதட்டை ஒற்றிக்கொண்டாள்..!! காலி டம்ளரை டேபிளில் வைக்காமல்.. மலரவன் முன்பாக உயர்த்தி பிடித்து காட்டியவாறே.. கொஞ்சம் கேலி கலந்த குரலில் அவரிடம் கேட்டாள்..!!
"இப்போ திருப்தியா ஸார்..??"
"வாட்..??" மலரவன் புருவத்தை சுருக்கினார்.
"இல்ல.. குடிச்சே ஆகணும்னு கம்ப்பெல் பண்ணுனிங்களே.. குடிச்சு முடிச்சாச்சு.. இப்போ திருப்தியான்னு கேட்டேன்..!!" கேட்டுவிட்டு மீரா புன்னகைக்க,
"ஹாஹா.. எ..எஸ் எஸ்.. திருப்தி..!!" மலரவன் ஒரு அசட்டு புன்னகையை சிந்தினார்.
"ம்ம்.. அப்போ நான் கெளம்புறேன் ஸார்..!!"
இயல்பான குரலில் சொன்ன மீரா.. டம்ளரை டேபிளில் வைத்துவிட்டு.. மலரவனின் பதிலுக்கு கூட காத்திராமல்.. சேரிலிருந்து எழுந்து.. திரும்பி விடுவிடுவென நடந்து.. ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளியேறினாள்..!!அன்று மாலை ஐந்து மணி.. கிழக்கு கடற்கரை சாலையில் சோழிங்கநல்லூர் அருகே அமைந்திருக்கிற ISKCON ராதாகிருஷ்ணா திருக்கோயில்..!! வழக்கத்தைவிட அதிகமாகவே கோவில் வளாகத்துக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது..!! ஆடல்கோலத்தில் அழகுற வீற்றிருக்கும் ராதையையும் கிருஷ்ணனையும் தரிசிக்க.. ஆலயத்தின் வாயிலிலிருந்தே பக்தர்கள் நெருக்கியடித்தவாறு வரிசையில் நின்றிருந்தனர்..!! கோயிலின் சின்னஞ்சிறு மூலை முடுக்குகளில் கூட.. ஒரேயொரு மந்திரம் மட்டும் தெய்வீகமாக ஒலித்துக்கொண்டே இருந்தது..!!
"ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா..
கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே..!!
ஹரே ராமா ஹரே ராமா..
ராமா ராமா ஹரே ஹரே..!!"
அசோக்கும் பாரதியும் அப்போதுதான் தரிசனம் முடித்துவிட்டிருந்தனர்.. மார்பிள் பதிக்கப்பட்ட தரையில் அமர்ந்து தற்போது இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.. அவர்களுக்கு அருகிலேயே வாழைப்பழங்கள் எட்டிப்பார்க்கிற அர்ச்சனை பாத்திரம்..!! இருவரது கையிலும் இலையால் வேயப்பட்ட ஒரு கிண்ணம்.. அதில் நெய்யின் செறிவு நிறைந்து போயிருந்த பருப்புசாத பிரசாதம்..!! இருவருமே ஏதோ யோசனையாய் இருந்தனர்.. அவ்வப்போது பிரசாதத்தை விண்டு வாயில் போட்டுக் கொண்டனர்..!!
இரண்டு நாட்களாக நடந்த விஷயங்களை எல்லாம்.. ஒன்று கூட ஒளிவு மறைவு இல்லாமல்.. அசோக் தன் அம்மாவிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டிருந்தான்..!! மீராவுக்கு நடந்திருந்த கொடுமையையும்.. அசோக்கின் கவலையான மனநிலையையும்.. அவர்களது காதலுக்கு தற்போது ஏற்பட்டிருக்கிற சிக்கலையும்.. பாரதி நன்றாகவே புரிந்து வைத்திருந்தாள்..!! ஆறுதல் வார்த்தைகளை சொல்லி.. நேற்றே மகனை தேற்றியும் வைத்திருந்தாள்..!!
இந்தமாதிரி கோயிலுக்கு வருவதெல்லாம் அசோக்கின் வழக்கம் கிடையாது.. இன்று ஏனோ அம்மா அழைத்தபோது அவனால் மறுக்க இயலவில்லை..!! கவலையும் குழப்பமும் அவனுடைய மனதில் நிறைந்து போயிருக்க.. கடவுளின் சந்நிதானத்தில் அதற்கான நிம்மதி கிடைக்கும் என்று நினைத்தானோ என்னவோ..!! கவலைக்கு காரணம் மீராவை தேடிக்கண்டுபிடிக்க முடியுமா முடியாதா என்பது.. குழப்பத்திற்கு காரணம் இரண்டு நாட்களாய் அவன் செய்த வேலைகள் எல்லாம் சரியா தவறா என்பது..!! அரிக்கிற குழப்பத்தை அடக்க முடியாமல்.. அசோக் இப்போது அம்மாவிடம் மெலிதான குரலில் சொன்னான்..!!
"நான் பண்றதெல்லாம் சரிதானான்னு சந்தேகமா இருக்கு மம்மி..!!"
"எ..எதை சொல்ற..??" பாரதி மகனின் பக்கமாய் முகத்தை திருப்பி கேட்டாள்.
"அதான் மம்மி.. அந்த பென்டன்ட்டை மறைச்சது.. எஸ்.பி ஸாரை பேச விடாம தடுத்தது.. போலீஸ்ட்ட பொய் சொன்னது..!!"
"ம்ம்.. அதுல என்ன சந்தேகம் உனக்கு..?? நீ செஞ்சதுல எந்த தப்பும் இல்ல அசோக்.. எல்லாம் சரிதான்..!!"
"இல்ல மம்மி.. நம்ம வசதிக்காக சட்டத்தை ஏமாத்துறது தப்பு இல்லையா..?? நமக்கு வேணா மீரா நல்லவளா தெரியலாம்.. ஆனா.. சட்டத்தோட பார்வைல அவ குற்றவாளிதான..??"
அசோக் அவ்வாறு கேட்கவும்.. பாரதி மகனின் கண்களையே கூர்மையாக ஒரு பார்வை பார்த்தாள்..!! அவனுக்கு பதில் ஏதும் சொல்லாமல்.. சிலவினாடிகள் அமைதியாக இருந்தாள்..!! பிறகு ஒரு நீண்ட பெருமூச்சை வெளிப்படுத்தியவள்.. அந்த பேச்சை மாற்றும் விதமாக அவனிடம் கேட்டாள்..!!
"அந்த பையனோட செல்ஃபோனை மீரா தூக்கிட்டு போயிட்டான்னு சொன்னேல..??"
"ம்ம்.. ஆமாம்..!!"
"அதை ஏன் அவ எடுத்துட்டு போனான்னு ஏதாவது யோசிச்சியா..??"
"யோசிச்சேன் மம்மி.. பட்.. எதுவும் புரியல..!!"
"ப்ச்.. என்னடா நீ.. இந்தக் காலத்து புள்ளையா இருந்துட்டு இப்படி சொல்ற..?? டெயிலி ந்யூஸ் பேப்பர்லாம் படிக்கிறியா, இல்லையா..?? 'செல்ஃபோனில் படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டல்..' னு எத்தனை ந்யூஸ் வருது..!!" பாரதி சொல்ல வருவது, இப்போது அசோக்கிற்கு புரிய ஆரம்பிக்க,
"................" அவன் அம்மாவையே யோசனையாக பார்த்தான்."மீராவை லவ் பண்ற மாதிரி நடிச்சு அவன் ஏமாத்திருக்கான்னு சொல்ற.. அமெரிக்கா போனவன் ரெண்டு நாள் முன்னாடிதான் இந்தியா வந்தான்னு சொல்ற.. வந்த ரெண்டாவது நாளே இப்படி நடந்திருக்கு..!! ஏமாத்திட்டு ஓடிப்போனவன் இந்தியா வந்தது இவளுக்கு எப்படி தெரியும்..?? நிச்சயமா அவன்தான் இவளை ஃபோன் பண்ணி வரவச்சிருக்கணும்..!! ரெண்டு பேரை இப்படி கொலை பண்ணி போட்ருக்கான்னா.. அவ்வளவு வெறி வர்ற அளவுக்கு அவனுக அவளை என்ன டார்ச்சர் பண்ணிருக்கணும்..?? அந்த செல்ஃபோனை கரெக்டா எடுத்துட்டு போயிருக்கான்னா.. அதுல ஏதோ விஷயம் இருக்கனுமா இல்லையா..??"
"இ..இருக்கணும் மம்மி..!!"
"கண்டிப்பா இருக்கணும்..!! அவளை அசிங்கமா படம் எடுத்து வச்சுட்டு அவங்க மிரட்டிருக்கனும்.. அதான் அவனுகள கொன்னுபோட்டுட்டு அந்த செல்ஃபோனை எடுத்துட்டு ஓடிருக்கா..!!"
"ம்ம்.. எனக்கும் அப்படித்தான் தோணுது..!!"
"சட்டம் வேற, தர்மம் வேற அசோக்.. சரி தப்புன்றதும் ரெண்டுக்கும் வேற வேற..!!" மகன் முதலில் கேட்ட கேள்விக்கு, பாரதி இப்போது திடீரென வந்தாள்.
"எ..என்ன மம்மி சொல்ற..??" சுருங்கிய புருவத்துடன் அசோக் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
"பொண்ணுகளை கிள்ளுக்கீரையா, வெளையாட்டு பொம்மையா, வெறும் போகப்பொருளா நெனைக்கிற ரெண்டு அரக்கனுகளை கொன்னது.. சட்டத்துக்கு வேணா தப்பா தெரியலாம் அசோக்.. ஆனா தர்மப்படி அது தப்பே இல்லடா..!!" தீர்க்கமான குரலில் சொன்ன அம்மாவை, அசோக் திகைப்பாக பார்த்தான்.
"மம்மி.."
"சட்டம்ன்றது மனுஷங்களா வச்சுக்கிட்டதுதான்டா மகனே..!! ஆனா.. தர்மம்ன்றது அந்த ஆண்டவன் விதிச்சது..!! காலகட்டத்துக்கு தகுந்த மாதிரி சட்டதிட்டம் மாறும்.. தர்மம் எப்போவும் மாறாது..!! உலகம் பொறந்த நாள்ல இருந்து தர்மம்ன்றது எப்போவும் ஒண்ணுதான்..!!"
"................"
"அதர்மம் தலை எடுக்குறப்போலாம் நானே அவதாரம் எடுத்து வருவேன்னு.. கீதைல கிருஷ்ண பரமாத்மா சொல்லிருக்காரு..!! மீரா ரெண்டு அரக்கனுகளை கொன்னுருக்கான்னா.. அவளை ஏன் நாம ஒரு அவதார பொறப்பா நெனைக்க கூடாது..??"
"................"
"அந்த ஆண்டவனோட சன்னிதானத்துல இருந்துதான் இதை சொல்றேன் அசோக்.. சொல்றப்போ எனக்கு கொஞ்சம் கூட மனசு உறுத்தல..!!"
அம்மா சொல்ல.. அசோக் இப்போது சற்றே தலையை திருப்பி பின்னால் பார்த்தான்.. தூரத்தில் புல்லாங்குழலுடன் சிரித்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் கண்ணில் பட்டார்..!! விஜயசாரதியின் வீட்டில் பார்த்த ரத்தத்தில் தோய்ந்த கிருஷ்ணனின் சிலை இப்போது அவனுடைய நினைவுக்கு வர.. மனதில் இருக்கிற குழப்பம் மெல்ல விலகுவது போல ஒரு உணர்வு..!! கூடவே.. விஜயசாரதி என்கிற பெயர் கூட கிருஷ்ணனைத்தான் குறிக்கும் என்கிற யோசனையும் வர.. அவனது உதட்டில் மெலிதான ஒரு புன்னகை பரவியது..!!
பாரதி தோடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!
"நம்ம கைல எதுவும் இல்ல அசோக்.. நடக்குறதுக்குலாம் ஏதோ காரணம் இருக்கு..!! அந்த நேரத்துக்கு நீ எதுக்கு சரியா அந்த எடத்துக்கு போகணும்..?? அந்த பெண்டன்ட் எதுக்கு கரெக்டா உன் கண்ணுல மட்டும் படணும்..?? அந்த எஸ்.பிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.. அவர் எதுக்கு உனக்கு ஹெல்ப் பண்ணனும்.. மீரா பத்தின விஷயத்தை போலீஸ்ட்ட இருந்து அவர் மறைக்கணும்..?? நல்லா யோசிச்சு பாரு.. எல்லாத்துக்கு ஏதோ காரணம் இருக்குற மாதிரி தெரியல..??"
"ம்ம்..!!"
"மீராவுக்கு தண்டனை கெடைக்கனுமா இல்லையான்றத முடிவு பண்ண வேண்டியது நீயோ, நானோ, போலீஸோ இல்லடா.. அந்த ஆண்டவன்..!! தேவையில்லாததை எல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காம.. அடுத்து என்ன பண்றதுன்னு யோசி..!! போலீஸ் உதவி இல்லாம மீராவை எப்படி கண்டு பிடிக்கிறதுன்னு எதாச்சும் யோசிச்சியா..??"
அம்மா பேசிய வார்த்தைகளில் பொதிந்திருந்த அர்த்தத்தினை தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த அசோக்.. பாரதி அந்த மாதிரி கேட்டதும் அந்த யோசனையில் இருந்து விடுபட்டான்..!! பதிலேதும் சொல்லாமல் அம்மாவின் முகத்தையே அமைதியாக பார்த்தான்..!! நேற்று இரவு.. கொலையான வீட்டில் இருந்து கிளம்புவதற்கு முன்பு.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவை தனியாக அழைத்து.. அவரிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தது, இப்போது அவனது நினைவுக்கு வந்தது..!! கேஷுவலாக சில கேள்விகளை கேட்டு.. விஜயசாரதியை பற்றி சில விஷயங்களை.. அவர் மூலம் அறிந்து கொண்டிருந்தான் அசோக்..!!
"இல்ல.. ஸ்கூல் மட்டுந்தான் சென்னைல படிச்சாரு.. டிக்ரி படிச்சதுலாம் ஹைதராபாத்ல..!!" அவர் அந்த மாதிரி சொன்னதும் அசோக்கிற்கு சுருக்கென்று இருந்தது.
"பொறந்தது காரைக்குடில.. செட்டிலானது சென்னைல.. படிச்சது ஹைதராபாத்ல..!!" என்று மீரா எப்போதோ சொன்னது திடீரென ஞாபகத்துக்கு வந்தது.மீரா ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாள் என்று ஆரம்பத்தில் அவன் நம்பியிருந்தான். அவள் சரளமாக தெலுங்கு பேசியதும் அவனது நம்பிக்கைக்கு வலு சேர்த்திருந்தது. பிறகு ஃபுட்கோர்ட் விளம்பர போர்டை பார்த்ததும், அது பொய்யென்று நினைத்தான். இப்போது கே.கே.மூர்த்தியின் பி.ஏ இப்படி சொன்னதும், மீண்டும் 'மீராவும் ஹைதராபாத்தில்தான் படித்திருப்பாளோ.. அங்குதான் அவளுக்கும் இந்த விஜயசாரதிக்கும் அறிமுகம் ஏற்பட்டிருக்குமோ..?' என்கிற ரீதியில் அவனுக்குள் எண்ணங்கள் ஓட ஆரம்பித்தன.
"நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..??"
கிஷோரின் அக்கா பவானி சொன்னது வேறு மூளையில் பளிச்சிட, அவன் மேலும் குழம்பிப் போனான். அவனுடைய புத்தி மெல்ல மெல்ல, தவறான புரிதலின் ஆழத்துக்கு செல்ல ஆரம்பித்தது. அந்த தவறான புரிதலுடன்தான்..
"மீரா டிக்ரி படிச்சது ஹைதராபாத்தா இருக்கும்னு நெனைக்கிறேன் மம்மி..!!" என்று இப்போது பாரதியிடம் சொன்னான்.
"ஓ.. எப்படி சொல்ற..??"
அசோக் தனது அனுமானத்தை அம்மாவிடம் விளக்கி கூறினான்.. கே.கே.மூர்த்தியின் பி.ஏவிடம் பேசியது பற்றி.. மீரா முன்பு தன்னிடம் குறிப்பிட்டது பற்றி.. எல்லாம் அவளிடம் பொறுமையாக எடுத்துரைத்தான்..!!
"ரெண்டு பேரும் ஒரே காலேஜ்லதான் படிச்சிருப்பாங்கன்னு நெனைக்கிறேன்.. அங்கதான் அவங்க ரெண்டு பேருக்கும் பழக்கம் ஆகிருக்கணும்..!! அந்த காலேஜ்ல போய் விசாரிச்சா.. கண்டிப்பா மீரா பத்தி ஏதாவது லீட் கெடைக்கும் மம்மி..!!"
"ஹ்ம்ம்.. அந்த காலேஜ் பேரு, அந்தப் பையன் எந்த வருஷம் படிச்சு முடிச்சான்.. அதுலாம் அவர்ட்ட விசாரிச்சியா..??"
"ம்ம்.. எல்லாம் விசாரிச்சு வச்சிருக்கேன்..!!"
"அப்புறம் என்னடா.. உடனே கெளம்ப வேண்டியதுதான.. இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்குற..??"
"இன்னைக்கு நைட் கெளம்புறேன் மம்மி.. கிஷோரும் கூட வர்றேன்னு சொல்லிருக்கான்..!!"
"ம்ம்.. நல்லது..!! உடனே கெளம்பு.. அந்த காலேஜ்ல போய் விசாரி.. ஏதாவது தகவல் கெடைக்கும்.. எல்லாம் நல்லபடியா நடக்கும்..!!"
"மீரா எனக்கு கெடைப்பாளா மம்மி..??" அசோக் திடீரென அந்த மாதிரி ஏக்கமாக கேட்கவும், பாரதி புன்னகைத்தாள்.
"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!" நம்பிக்கையாக சொல்லிவிட்டு, மகனின் தலைமுடியை கோதிவிட்டாள்.
அன்று இரவே அசோக்கும் கிஷோரும் ஜெட் ஏர்வேஸில் ஹைதராபாத் கிளம்பினார்கள்.. ஒரு மணி நேர பயணத்தின்பின் ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் வந்து இறங்கினார்கள்.. பஞ்சாரா ஹில்ஸ் சென்று, அவர்களது கல்லூரி நண்பன் பரணியின் வாடகை வீட்டு காலிங்பெல்லை அழுத்தினார்கள்..!! தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜகன்னாத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிகிறான் பரணி..!!
"இதுதான் மச்சி என் பேரு..!!" சமீபத்தில் பூரி ஜகன்னாத் இயக்கி ஹிட்டடித்த ஒரு தெலுங்கு படத்தின் டைட்டில் கார்டில்.. அடுக்கடுக்காக காணப்பட்ட ஜாங்கிரி வரிசையில்.. நான்காவது வரியை சுட்டிக்காட்டி பல்லிளித்த பரணியை.. அசோக்கும் கிஷோரும் வெறுப்புடன் பார்த்தார்கள்..!!
"கூடிய சீக்கிரம் தமிழ்ல என் பேரு வரும்டா.. அதுவும் தனியா..!!"
கான்ஃபிடன்ட்டாக சொன்ன பரணியை கடுப்புடன் முறைத்தவாறே.. அவன் வாங்கிவைத்திருந்த ஹைதராபாத்தி சிக்கனை எடுத்து கடித்தார்கள்..!! இவர்கள் விழித்திருக்கிறார்கள் என்கிற நம்பிக்கையில்.. பரணி தனது டாலிவுட் அனுபவங்களை சொல்லிக்கொண்டிருக்க.. இருட்டுக்குள் அவனை தனியாக புலம்பவிட்டு.. இவர்கள் குறட்டை இல்லாமல் உறங்கினார்கள்..!!அடுத்தநாள் காலையே அசோக்கும், கிஷோரும் இப்ராஹிம் பாக்கில் இருக்கும் வாசவி இஞ்சினியரிங் கல்லூரிக்கு சென்றார்கள்..!! எப்படி ஆரம்பிப்பது என்றே இருவருக்கும் ஆரம்பத்தில் படுகுழப்பம்..!! விஜயசாரதி கொலையாகியிருந்த விஷயம் அவனது கல்லூரிக்கு இன்னும் பரவியிருக்கவில்லை.. இவர்களும் அந்த விஷயத்தை யாருக்கும் தெரிவிக்கவில்லை..!! கல்லூரி பேராசிரியர்கள் சிலரை சந்தித்து பேசினார்கள்.. விஜயசாரதி அந்த கல்லூரியில் படித்து முடித்து ஐந்து வருடங்கள் ஆகியிருந்தன.. நிறைய பேராசிரியர்கள் மாறியிருந்தனர்.. ஒருசில பழையவர்கள் விஜயசாரதியை நினைவு கூர்ந்தாலும், 'ரோக்' என்று அவனை திட்டியதை தவிர, அவர்களால் உருப்படியான தகவல் எதையும் தர முடியவில்லை..!! பிறகு.. கல்லூரிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடையில்.. காசில்லாமல் சிகரெட் மறுக்கப்பட்ட அவனை பிடித்தனர்.. அந்த கல்லூரியில் ஆபீஸ் அசிஸ்டன்டாக பணிபுரிபவன்..!! அவனிடம் சில கரன்ஸிகளை அள்ளி தெளித்து.. அவன் மூலமாக அந்தக் கல்லூரியில் அவர்கள் குறிப்பிட்ட காலகட்டத்தில் படித்த மாணவர்களின் தகவல்களை ஒரு குறுந்தட்டில் கிடைக்கப் பெற்றனர்..!! மாணவர்களுடைய புகைப்படங்களும் அந்த குறுந்தகட்டில் இடம்பெற்றிருந்தன..!!
அந்த புகைப்படங்களை கவனமாக ஆராய்ந்து.. விஜயசாரதி அந்த கல்லூரியில் பயின்ற காலத்தில் மீரா அங்கு பயிலவில்லை என்ற உண்மையை கண்டறிந்தனர்..!! 'சரி.. ஹைதராபாத்திலேயே வேறு கல்லூரியாக இருக்கும்..' என்று மீண்டும் ஒரு தவறான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டனர்..!! குறுந்தகட்டில் கிடைத்த தகவல் மூலம்.. ஹைதராபாத்தில் விஜயசாரதி தங்கியிருந்த வீட்டிற்கு சென்று முதலில் விசாரித்தனர்..!! அவர்கள் மூலம் இன்னொருவர்.. அவர் மூலம் வேறொருவர்.. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம்.. அந்த இடத்திலிருந்து அடுத்த இடம் என்று.. அவர்களது விசாரணை அடுத்தடுத்த நாட்கள் தொடர்ந்துகொண்டே இருந்தது..!! விஜயசாரதியின் புகைப்படத்தை காட்டி அவனை நினைவுறுத்துவது.. பிறகு மீராவின் அடையாளங்களை சொல்லி அந்த மாதிரி யாராவது ஒரு பெண்ணை அந்த விஜயசாரதி காதலித்தானா என கேட்பது.. என்கிற மாதிரிதான் அவர்களது விசாரணை பொதுவாக அமைந்திருந்தது..!!
விஜயசாரதியை பற்றி விசாரிக்க விசாரிக்க.. அவனது தீய குணங்களும், கெட்ட சகவாசங்களும்.. மேலும் மேலும் அவர்களுக்கு தெரியவந்தன..!!
பேகும்பேட்டில் ஒரு விபச்சார விடுதி..
"இவளுக எல்லாம் அவன் காதலிச்சவளுகதான்.. ஒவ்வொருநா ராத்திரிக்கும் ஒவ்வொருத்தி..!!" - தன்னிடமிருந்த பெண்களை கைகாட்டி பேசினாள், அந்த விடுதியின் தலைவி.
ஹைடெக் சிட்டியில் ஒரு பார்..
"என்ன ஸார்.. விஜயோட ஃப்ரண்டுன்றீங்க.. டோப் இருக்கானு கேட்டா இல்லைன்றீங்க..??" - மிதமிஞ்சிய போதையில் வாய்குழற சொன்னான், விஜயசாரதியுடன் கல்லூரியில் படித்த ஒருவன்.
துமுகுன்ட்டாவில் ஒரு சேரிப்பகுதி..
"அவன்ட்ட சொல்லி வைங்க.. என்னைக்கா இருந்தாலும் என் கையாலதான் அவனுக்கு சாவு.. அண்ணா அடுத்த மாசம் வெளில வர்றாரு..!!" - விஜயசாரதி இறந்துபோன விஷயம் தெரியாமல் கறுவினான், ஒற்றை கையை இழந்துபோயிருந்த ஒரு ரவுடி.
எர்ரகடாவில் ஒரு ஓபன் கார்டன் ரெஸ்டாரன்ட்..
"அதெல்லாம் ஒரு கனவா நெனச்சு மறந்துட்டு.. இப்போ நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்கேன் ஸார்..!! தயவு செஞ்சு.. என் வீட்டுக்காரர்ட்ட மட்டும் இந்த விஷயத்தை சொல்லிடாதிங்க.. உங்களை கையெடுத்து கும்பிடுறேன்..!!" - கையில் ஒருவயது குழந்தையுடன் கெஞ்சினாள், விஜயசாரதியிடம் காதலென்ற பெயரில் கற்பிழந்த இன்னுமொரு பெண்.
அசோக் ஹைதராபாத்தில் விஜயசாரதி பற்றி விசாரித்து அலைந்து கொண்டிருந்த சமயத்தில்.. மீரா சென்னையில் வளைகுடா பயணத்தின் விசா பிரச்சினைக்கு அலைந்து கொண்டிருந்தாள்..!! வேலைக்கு ஏற்பாடு செய்திருந்த கன்சல்டன்ஸிக்கு சென்று மேனஜரை சந்தித்து பேசினாள்.. வெளிநாட்டில் தான் தங்குவதற்கான ஏற்பாட்டை பற்றி விவாதித்தாள்..!! முதல் மாச சம்பளம் வரும்வரை செலவுக்கு தேவையென.. தனது செயின், ப்ரேஸ்லட்டை எல்லாம் விற்று காசாக்கினாள்..!! அந்தக்காசின் கணிசமான தொகையை.. ஐயாயிரம் சவூதி ரியாலாக மாற்றி.. தனது ஹேண்ட் பேகுக்குள் திணித்தாள்..!!
"எந்த நாட்டுக்கு போறேன்னு கூட சொல்ல மாட்டியா..??" கேட்ட மனோகரிடம்,
"எனக்கு சொல்ல விருப்பம் இல்ல..!! இன்னும் ரெண்டே நாள்.. அப்புறம் நீங்க யாரோ நான் யாரோ..!!" என்று வெடுக்கென சொன்னாள்.
"ஹ்ம்ம்.. எதுக்கு இந்த கஷ்டம்லாம்..?? இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல.. நீ மட்டும் கொஞ்சம் உன் பிடிவாதத்தை விட்டுட்டேன்னு வச்சுக்கோ.. ராணி மாதிரி வாழலாம்..!!" பல்லிளித்தவனிடம்,
"செருப்பு பிஞ்சுடும்..!!!!" கண்களில் கோபக்கனலுடன் எச்சரித்தாள்.இரண்டு நாட்களுக்கு முன்பே.. வெளிநாட்டு பயணத்திற்கான பேக்கிங் வேலைகளை ஆரம்பித்திருந்தாள்.. ஒரு பெரிய பெட்டியில் தனது உடைகளை எல்லாம் அடுக்கி வைத்தாள்.. மறவாமல் அந்த உடைகளுக்கு நடுவே அசோக்கின் புகைப்படத்தை செருகினாள்..!!
இன்னொரு பக்கம்.. கொலையாளியை கண்டுபிடிக்கிற முயற்சியில் மலரவன் மிகத் தீவிரமாக இறங்கியிருந்தார்..!! உயர் அதிகாரியிடம் டெலிஃபோனில் பேசியவர்.. 'கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சுடுவேன் ஸார்' என்று நம்பிக்கையாக சொன்னார்..!! கொலை நடந்த இடத்தில் கிடைத்த கைரேகை பிரதிகளை கவனமாக ஆராய்ந்தார்.. பிரேதப் பரிசோதனை அறிக்கையை ஒரு வரி விடாமல் கூர்ந்து வாசித்தார்..!! விஜயசாரதியிடமும், காசியிடமும் சமீபகாலமாக மொபைலில் பேசியவர்களை ஒவ்வொருவராக விசாரித்து முடித்தார்..!! தண்டையார்பேட்டை ஸ்லம் ஏரியாவில்.. சேறு நிறைந்த ஒரு சாலையில் நடந்து சென்று.. ஒருவாரம் முன்பு ஜெயிலில் இருந்து ரிலீசான ஒரு ரவுடியின் வீட்டு கதவை தட்டினார்..!! ஒரு நாளுக்கு நான்கு மணி நேரங்கள் மட்டுமே ஓய்வெடுத்துக்கொண்டு.. மிச்ச நேரங்களில் தனது ஜீப்பில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்..!!
மூன்று நாட்கள் ஹைதராபாத்தில் கழித்துவிட்டு.. நான்காம் நாள் காலை.. அசோக் வெறுங்கையுடன் சென்னை திரும்பினான்..!! மீராவும் அன்று மாலை வெளிநாட்டுப் பயணத்திற்கு தன்வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தாள்..!! மூன்று நாட்கள் அலைச்சல்.. திரும்ப வருகையில் ரயில் பயணம்.. களைப்படைந்து போயிருந்தான் அசோக்.. வந்ததுமே தனது அறைக்கு சென்று படுக்கையில் வீழ்ந்தவன்.. அடித்துப் போட்டாற்போல உறங்கிப் போனான்..!!
மகன் தூங்கட்டும் என்று விட்டுவிட்டிருந்த பாரதி.. மதியம் ஆனதும் ஒரு காபியுடன் சென்று அவனை எழுப்பினாள்..!! பல்துலக்கிவிட்டு அந்த காபியை அவன் உறிஞ்ச.. அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தவள், மெல்ல ஆரம்பித்தாள்..!!
"என்னடா.. என்னாச்சு.. உபயோகமா ஏதாவது தெரிஞ்சதா..??"
அம்மா கேட்கவும், ஹைதராபாத்தில் நடந்த விஷயங்களை அசோக் சுருக்கமாக அவளுக்கு எடுத்துரைத்தான். அவன் சொன்னதை எல்லாம் அவளும் கவனமாக கேட்டுக் கொண்டாள்.
"அவன் ஏமாத்தின இன்னும் ரெண்டு மூணு பொண்ணுகளை பத்தித்தான் தகவல் கெடைச்சது மம்மி.. மீரா பத்தி எந்த தகவலும் கெடைக்கல..!!"
"ம்ம்.. அப்போ அலைச்சல்தான் மிச்சமா..??"
"அப்படியும் சொல்லிட முடியாது..!! அந்த விஜயசாரதி பத்தி நெறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது..!! அப்புறம்.. இங்க சென்னைல அவனோட க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் ரெண்டு பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சது.. அவங்களுக்கு கண்டிப்பா மீரா பத்தி தெரிஞ்சிருக்கும்னு நம்புறேன்.. அவங்களை பத்தின டீடெயில் கலக்ட் பண்ணிட்டு வந்திருக்கேன்..!! ஆனா.. இப்போ உடனே அவங்களை போய் விசாரிக்க முடியாது.. கொலை நடந்திருக்குற இந்த சமயத்துல நான் போய் விசாரிச்சா.. தேவையில்லாத சந்தேகம் வரும்..!! அதனால.. இதை கொஞ்சநாள் ஆறப்போட்டு.. அப்புறம் அவங்களை விசாரிக்கலாம்னு நெனைச்சிருக்கேன்..!! அதுவரை மீராவுக்கு மட்டும் எதுவும் ஆகிடக்கூடாது மம்மி..!!" அசோக் கவலையாக சொல்ல,
"ஹ்ம்ம்.. அவளுக்கு எதுவும் ஆகாது.. நீ தேவையில்லாம கவலைப்படாத..!! அவ கண்டிப்பா உனக்கு கெடைப்பா.. நீங்க ரெண்டு பேரும் நூறு வருஷம் சேர்ந்து வாழப் போறீங்க.. அம்மாவுக்கு அதுல எந்த சந்தேகமும் இல்ல..!!" பாரதி அவனுக்கு நம்பிக்கையூட்டினாள்.
"தேங்க்ஸ் மம்மி..!!"
"அம்மா கீழ போறேன்டா.. இன்னும் அரைமணி நேரத்துல சாப்பாடு ரெடியாயிடும்..!! காலைல வேற நீ சாப்பிடல.. குளிச்சுட்டு கீழ வா.. மொதல்ல வந்து நல்லா வயிறாற சாப்பிடு.. என்ன பண்ணலாம்னு அப்புறமா யோசிச்சுக்கலாம்..!! சரியா..??" சொல்லிவிட்டு பாரதி அந்த அறையினின்று வெளியேறினாள்.குளித்து முடித்து வேறு உடை மாற்றி கீழே செல்ல.. அசோக் முழுதாக ஒருமணி நேரம் எடுத்துக் கொண்டான்..!! படியிறங்கி கீழே வந்தவன், நேராக ஹாலுக்குத்தான் சென்றான்..!! ஹாலில் இருந்த டிவியில் ஜஸ்டின் டிம்பர்லேக் அலறிக்கொண்டிருந்தார்..!!
"Aren't you something to admire..?
'Cause your shine is something like a mirror..!!"
டிவிக்கு முன்னால் கிடந்த சோபாவில் சங்கீதா அமர்ந்திருந்தாள்.. ஆனால் டிவியில் ஓடிய பாடலுக்கு காதுகொடாமல்.. கையில் விரித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தில் தன் கவனத்தை செலுத்தியிருந்தாள்..!! அசோக் வந்ததும் புத்தகத்திலிருந்து முகத்தை திருப்பி.. அண்ணனை ஏறிட்டு புன்னகைத்தாள்..!! அசோக்கும் பதிலுக்கு புன்னகைத்து.. அவளுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டான்..!! சங்கீதா உடனே ரிமோட்டை எட்டி எடுத்து சேனல் மாற்றினாள்.. ஒவ்வொரு சேனலாக மாற்றிக்கொண்டு சென்றவள்.. ஒரு சேனலில் விளம்பரம் ஓடியதை பார்த்ததும்.. அதிலேயே வைத்துவிட்டு அசோக்கிடம் திரும்பி கேலியாக சொன்னாள்..!!
"ஹ்ம்ம்.. நீங்கதான் டிவில அட்வர்டைஸ்மன்ட் மட்டுந்தான பார்ப்பிங்க.. பாருங்க..!!"
"ஹஹா.. லூஸு..!!"
தங்கையின் கிண்டலுக்கு அசோக் மெலிதாக சிரித்தான்..!! அவளும் சிரித்துவிட்டு மீண்டும் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்க.. இவன் டிவியை பார்க்காமல்.. டீப்பாயில் இருந்த செய்தித்தாளை கையில் எடுத்துக் கொண்டான்..!! ரெட்ஹில்ஸ் கொலை கேஸ் புலன் விசாரணையில்.. சமீபத்தைய முன்னேற்றத்தை வாசித்து தெரிந்துகொள்ள ஆரம்பித்தான்..!!
"சங்கீஈஈஈ..!!!!" சமையலறையில் இருந்து பாரதி அலறினாள்.
"என்ன மம்மி..??"
"இங்க கொஞ்சம் வாடி..!!"
"என்னன்னு சொல்லு..!!"
"ப்ச்.. வாடின்னு சொல்றேன்ல.. வா..!!!" பாரதியின் குரல் அவ்வாறு கோபமாக ஒலிக்க.. சங்கீதா இப்போது எரிச்சலானாள்..!! அந்த எரிச்சலை பதிலுக்கு கத்துவதில் காட்டாமல்.. பக்கத்தில் இருந்த அண்ணனிடம் குறைபட்டுக் கொண்டாள்..!!
"ஹ்ம்ம்.. பாருடா இந்த மம்மியை.. நிம்மதியா ஒரு புக் கூட படிக்க விடமாட்டேன்றாங்க..!! ச்சே..!!"
சலிப்பாக சொன்னவள், கையிலிருந்த புத்தகத்தை மடக்கி, டம்மென்று டீப்பாய் மீது வைத்தாள். அசோக்கின் பார்வை இப்போது எதேச்சையாக அந்த புத்தகத்தின் மீது விழுந்தது. அந்த புத்தகத்தை பார்த்ததும், அவனுடைய நெற்றி நெருக்கமாய் சுருங்கிக் கொண்டது. அது.. மும்தாஜ் இவனிடம் படிக்க சொல்லி கொடுத்த அந்த புத்தகம்.. கிறித்தவ மத போதனைகளை உள்ளடக்கிய புத்தகம்.. ஆர்வமில்லாமல் இவன் இத்தனை நாட்களாய் படிக்காமலே வைத்திருந்த புத்தகம்..!!
"ஹேய்.. சங்கி.. இ..இது.. இது என்னோட.." அசோக் முடிக்கும் முன்பே,
"ம்ம்.. ஆமாம்.. உன் பேக்ல இருந்த புக்தான்.. போரடிக்குதுன்னு நான்தான் எடுத்துட்டு வந்து படிச்சுட்டு இருந்தேன்..!! சும்மா சொல்லக் கூடாது.. ஜீசஸோட லைஃப் ஹிஸ்டரி.. படிக்கிறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு..!!"
சங்கீதா சிந்திய வார்த்தைகளில் உண்மையான ஒரு உற்சாகம் பொங்கியது..!! அசோக் இப்போது மீண்டும் அந்த புத்தகத்தின் மீது பார்வையை வீசினான்.. புத்தக முகப்பில் பெரிதாக எழுதப்பட்டிருந்த அந்த தலைப்பை கண்களாலேயே வாசித்தான்..!!
"தட்டுங்கள் திறக்கப்படும்..!!"
அதை வாசித்த அந்த நொடியிலேயே...
"மனம் போலே எல்லாம் நடக்கும்..!!" டிவியில் பாண்ட்ஸ் விளம்பர பாடல் ஓடியது.
"போடா.. போய் தேடு..!! தேடுனாத்தான் எதுவும் கெடைக்கும்.. தட்டினாத்தான் எதுவும் திறக்கும்..!!"
என்று.. பாரதி மூன்று நாட்களுக்கு முன்னால், கிருஷ்ண பகவான் கோவிலில் வைத்து அவனிடம் சொன்னதும் நினைவுக்கு வர.. அவனது உடலில் ஒரு இனம்புரியாத சிலிர்ப்பு எழுந்து அடங்கியது..!! அந்த புத்தகத்தை எடுப்பதற்காக மெல்ல கையை நீட்டினான்.. புத்தகத்தை பற்றி டீப்பாயில் இருந்து எடுத்தான்..!! அதே நேரத்தில்.. சங்கீதா அம்மாவின் அழைப்பிற்காக சோபாவில் இருந்து அவசரமாய் எழ.. ஆக்சிடன்டலாக அண்ணனின் கையை தட்டிவிட்டாள்..!!
அந்த புத்தகம் அசோக்கின் கையிலிருந்து விடுபட்டு.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! சங்கீதா 'ஓவ்' என்று ஓசை எழுப்பிக்கொண்டே.. அந்த புத்தகத்தை கீழே விழாமல் பிடிப்பதற்காக.. கைநீட்டியவாறே திடீர் பரபரப்புடன் நகர்ந்தாள்..!! அந்த புத்தகத்தில் இருந்து விடுபட்ட அது மட்டும்.. காற்றில் மிதந்து.. பறந்தவாறே கீழிறங்கி.. அசோக்கின் மடியில் வந்து மெல்ல அமர்ந்தது..!!
அது.. ஒரு புகைப்படம்.. ஒரு பெண்ணின் புகைப்படம்..!! அந்தப் பெண்ணின் முகம் மட்டுமே பிரதானமாக தெரியுமாறு.. படம்பிடிக்கப்பட்ட புகைப்படம்..!! அந்த முகம் கூட முழுதாக தெரியவில்லை.. அந்தப்பெண் தனது துப்பட்டாவால் பாதி முகத்தை மூடி சுற்றியிருக்க.. அவளது கண்கள் மட்டுமே தெளிவாக பிரகாசித்தன..!!
அசோக் அந்த புகைப்படத்தை கையில் எடுத்து பார்த்தான்..!! பார்த்ததுமே அவனது விழிகள் படக்கென விரிந்து கொண்டன.. இருதயம் வெடுக்கென சுண்டி விடப்பட்டு துடித்தது.. நாடிநரம்பெல்லாம் ஜிவ்வென்று ஒரு அதிர்வலை.. நாளங்களிலெல்லாம் ரத்தம் புது வேகத்துடன் பீய்ச்சியடித்தது..!!
எத்தனை நாட்கள் அந்த கண்களை மணிக்கணக்கில் பார்த்தவாறு அமர்ந்திருப்பான்..?? எத்தனை காதலுடன் அந்த விழிகளின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் பார்த்து ரசித்திருப்பான்..?? அந்த கண்கள்தானே அவனுடைய படுக்கையறை சுவற்றை முழுதாக ஆக்கிரமித்திருக்கின்றன.. அந்த பார்வைதானே அவனது விழிவழி பாய்ந்து, இதயத்தை சூழ்ந்து பிசைந்தது..!! புகைப்படத்தை பார்த்த அந்த நொடியே அவனால் கண்டுகொள்ள முடிந்தது..அவனையும் அறியாமல் அவனது உதடுகள் முணுமுணுத்தன..!!
"மீரா..!!!!!"
அசோக் சோபாவில் இருந்து எழுந்து, அந்த புகைப்படத்தையே திகைப்பாக பார்த்துக் கொண்டிருக்க.. சங்கீதா கீழே விழுந்த புத்தகத்தை, கையால் அள்ளி வாரி எடுக்க.. டிவியில் அந்த வாசகத்துடன் பாண்ட்ஸ் விளம்பரம் நிறைவு பெற்றது..!!
"இப்போ வந்ததுல லவ் ஸ்டோரில ட்விஸ்ட்..??"காதலியின் புகைப்படத்தை கையில் ஏந்தியிருந்த அசோக்.. இதயத்தை ஆட்கொண்ட அந்த இன்ப அதிர்ச்சியில்.. சில வினாடிகள் சிலை போலவே உறைந்திருந்தான்..!! வெகுதூரம் ஓடிக்களைத்தவன் போல அவனுக்கு மூச்சிரைப்பு ஏற்பட்டது.. வெடவெடத்த விரல்களால் புகைப்படத்தை பற்ற கடினமாயிருந்தது..!! உடலெல்லாம் ஜிலீரென்று ஒரு சிலிர்ப்பு.. உள்ளமெல்லாம் ஜிவ்வென்று ஒரு பூரிப்பு..!! சில வினாடிகள்தான்.. உடனடியாய் அவனை ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது..!!
"மம்மிஈஈஈஈ..!!" என்று கத்திக்கொண்டே உள்ளறைக்கு ஓடினான்.
"என்னடா..??" பாரதி கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.
"மீ..மீரா.. மீரா மம்மி..!!" நடுநடுங்கிய கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டினான்.
"மீ..மீராவா..??" புகைப்படத்தை கையில் வாங்கிப் பார்த்த பாரதிக்கு எதுவும் புரியவில்லை.
"இ..இந்த ஃபோட்டோ.. இ..இது.. இது மீரா மம்மி.. இ..இது.. எ..என் மீராதான்.. ச..சந்தேகமே இல்ல..!!" உள்ளத்தில் இருந்த தவிப்பில் உதடுகள் படபடக்க, வார்த்தைகள் தெளிவாக வெளிவர மறுத்தன.
"ஓ..!! இ..இது.. இது எப்படி..??" பாரதி சந்தோஷமும், குழப்பமுமாய் மகனை ஏறிட்டாள்.
"நா..நான்.. நான் உன்கிட்ட சொல்லிருக்கேன்ல.. அ..அந்தப்பொண்ணு.."
"எந்தப்பொண்ணு..??"
"அ..அதான் மம்மி.. அந்த மும்தாஜ்.. எ..எனக்கு யோகா சொல்லி தந்த பொண்ணு..!!"
"ஆமாம்..!!"
"அ..அந்தப்பொண்ணுதான்.. அ..அவ... அவங்க.. படிக்கிறதுக்கு எனக்கு ஒரு புக் தந்தாங்க மம்மி.. அ..அந்த புக்குக்குள்ளதான் இந்த ஃபோட்டோ இருந்தது..!!"
"அ..அப்படினா..??"
"ஆமாம் மம்மி..!!! அ..அந்த மும்தாஜ்க்கு மீரா பத்தி தெரிஞ்சிருக்கணும்.. அவங்கட்ட விசாரிச்சா மீராவை எப்டியாவது கண்டுபுடிச்சுடலாம்..!! யெஸ்.. யெஸ்.. யெஸ்..!!!!"
இப்போது பதற்றம் சற்றே குறைந்து நம்பிக்கை தெறிக்கிற குரலில் அசோக் உற்சாகமாக சொன்னான். அவனது உற்சாகம் அவனுடைய அம்மாவிற்கும் தொற்றிக்கொண்டது.
"நெ..நெஜமாத்தான் சொல்றியாடா.. எ..என்னால நம்பவே.."
ஆச்சரியத்தில் பேச்சு வராமல் பாரதியும் தடுமாறினாள்..!! அசோக்கும் அவளுடைய பேச்சுக்கு காது கொடுக்கிற நிலையில் இல்லை.. அவசரமாக அடுத்த அறைக்கு ஓடினான்.. சார்ஜரை பிடுங்கி எறிந்து தனது செல்ஃபோனை தனியே பிரித்தெடுத்தான்.. பதற்றத்தில் நடுங்கிய விரல்களுடன் மும்தாஜின் தொடர்பு எண்ணை தேடினான்..!!
இவர்களது பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த அசோக்கின் குடும்பத்தினர் அனைவரும்.. இப்போது ஹாலில் ஒன்றாக குழுமியிருந்தனர்..!! நடந்த விஷயத்தை பாரதியே அவர்களுக்கு விளக்கி சொல்ல.. எல்லோருடைய முகத்திலுமே அப்படி ஒரு ஆச்சரியமும் மலர்ச்சியும்..!! அவள்தான் வேண்டும் என்று அசோக் ஒற்றைக்காலில் நின்றதற்கு.. இப்போது நல்லதொரு பலன் கிடைத்திருப்பதாக அனைவருக்குமே ஒரு திருப்தி..!!
அவ்வாறு அவர்கள் பூரிப்பில் திளைத்திருந்தபோதே..
"ச்சே..!!" அசோக் சலிப்பான குரலுடன் ஹாலுக்குள் பிரவேசித்தான்.
"என்னடா ஆச்சு..??" மகனை கேட்டாள் பாரதி.
"ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வச்சிருக்காங்க மம்மி.. யோகா க்ளாஸ்ல இருப்பாங்கன்னு நெனைக்கிறேன்..!!"
"ஓ..!! கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணிப் பாரேன்..!!"
"இல்ல மம்மி.. நான் உடனே கெளம்புறேன்.. நேர்லயே போய் அவங்களை பாத்து பேசிடுறேன்..!!" பரபரப்பு குறையாதவனாய் பைக் சாவி எடுக்க கிளம்பியவன்,
"இ..இது அண்ணிதானாடா.. நல்லா தெரியுமா..?? கண்ணு மட்டுந்தான் தெரியுது..??"
என்று ஃபோட்டோவை பார்த்தபடியே சங்கீதா சந்தேகக்குரல் எழுப்பியதும் அப்படியே நின்றான். தங்கைக்கு அசோக் பதில் சொல்ல வாயெடுக்கும் முன்பே, அவனுடைய தாத்தா அவனது உதவிக்கு வந்தார்.
"ப்ச்.. காதலிக்கிறவன் அவன் சொல்றான்.. கரெக்டாத்தான் இருக்கும்..!! கண்ணை பார்த்து கண்டுபிடிக்கிறது என்ன கஷ்டமா.. நான்லாம் காத்துல வர்ற வாசனையை வச்சே இவளை கண்டுபிடிச்சுடுவேன்..!!" நாராயணசாமி அவ்வாறு சிரிப்புடன் சொல்ல,
"ச்சீய்.. போங்க..!!"
அசோக்கின் பாட்டி அழகாக வெட்கப்பட்டாள். அந்த வெட்கத்தில் ஒருவித பெருமிதமும் ஏராளமாய் கலந்திருந்தது. அவளது வெட்கத்தை பார்த்து, 'ஹாஹாஹா' என்று அனைவருமே இப்போது அடக்கமுடியாத ஒரு சிரிப்பினை உதிர்த்தனர். அசோக்குமே தனது பதற்றம் தணிந்து மெலிதாக ஒரு புன்னகையை வெளிப்படுத்தினான். இப்போது மணிபாரதி சற்றே நகர்ந்து அசோக்கை நெருங்கினார். மகனுடைய தோளில் கைபோட்டவர், இதமான குரலில் சொன்னார்.
"போடா.. போய் என் மருமகளை கூட்டிட்டு வா.. போ..!!"
தங்கையின் கையிலிருந்த புகைப்படத்தை பிடுங்கிய அசோக், பைக் சாவி எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.. வாசலுக்கு வந்த அவனது குடும்பத்தினர் அனைவரும், அவன் கிளம்புவதையே எதிர்பார்ப்பும் சந்தோஷமுமாய் பார்த்தனர்..!! பைக்கை கிளப்பிய அசோக் ஆக்சிலரேட்டரை முறுக்கி பறக்க ஆரம்பித்தான்..!! தொலைந்துபோன காதலியை காணப்போகிற அவனது வேகத்தை.. அவனுடைய பைக்குக்கும் சரியாக புரிந்து கொண்டிருந்தது.. சாலையில் சர்ர்ர்ரென சீறிப் பாய்ந்தது..!!
பத்தே நிமிடத்தில்.. அந்த தற்கொலை தடுப்பு ஆலோசனை மைய வளாகத்தின் முன்பாக வந்து நின்றது அசோக்கின் பைக்..!! வண்டியில் இருந்து இறங்கியவன், வராண்டாவை அடைந்து வேகமாக நடைபோட்டான்.. நீளமான காரிடாரின் கடைசி அறைக்குள் புயலென புகுந்தான்..!! மார்பிள் பதித்த தரையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பத்துப் பேரும்.. அவர்களுக்கு எதிர்ப்புறம் அதே தோற்றநிலையில், தனியாக அமர்ந்திருந்த மும்தாஜும் காணக்கிடைத்தனர்.. அனைவருமே ஆழ்ந்ததொரு தியானத்தில் திளைத்திருந்தனர்..!!
அங்கு நிலவிய அமைதியை குலைக்க அசோக் சற்றும் தயங்கவில்லை..!!
"மும்தாஜ்..!!!"
என்று சத்தமிட்டுக்கொண்டேதான் அந்த அறைக்குள் நுழைந்தான்..!! படக்கென விழிகள் திறந்து அனைவரும் அசோக்கை குழப்பமாய் பார்க்க.. மும்தாஜோ முகத்தில் ஒரு திகைப்புடன் அவனை ஏறிட்டாள்..!!
"அசோக்..!!"
அசோக் மும்தாஜை நெருங்கி அவளது புஜத்தை பற்றினான்.. தரையில் இருந்து எழுப்பினான்..
"எ..என்னாச்சு அசோக்..??"
"வாங்க சொல்றேன்..!!"
எதுவும் புரியாமல் விழித்த மும்தாஜை, அந்த அறைக்கு வெளியே இழுத்து வந்தான்.. அவளது புஜத்தை விடுவித்தவன், கையிலிருந்த புகைப்படத்தை அவளிடம் நீட்டி, பதற்றமும் பரிதவிப்பும் கலந்த குரலில் கேட்டான்..!!
"இ..இது.. இது யாரு மும்தாஜ்..??"
இப்போது அந்த புகைப்படத்தின் மீது பார்வையை வீசிய மும்தாஜ், உடனே நெற்றியை சுருக்கினாள்.
"இ..இது.. இ..இந்த ஃபோட்டோ எப்படி உங்கட்ட..??"
"நீங்க எனக்கு ஒரு புக் தந்திங்கல்ல.. அதுக்குள்ள இருந்தது..!!"
"ஓ..!! இ..இது.. ஆனந்த விகடன் ஃபோட்டோக்ராஃபி கான்டஸ்ட்க்காக நான் எடுத்த ஃபோட்டோ..!! ஆல்பத்துல வச்சிருந்தேன்.. இ..இது எப்படி அந்த புக்குக்குள்ள.."
"ஹையோ.. அதை விடுங்க மும்தாஜ்..!! இ..இந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க..!!"
"எ..எனக்கு தெரிஞ்ச பொண்ணுதான்.. எதுக்கு கேக்குறீங்க..??"
"தெ..தெரிஞ்ச பொண்ணுனா..??"
"இ..இங்க கவுன்சிலிங் வந்த பொண்ணு..!! என்னை மாதிரிதான் இவளும்.. சூஸயிட் அட்டம்ப்ட் பண்ணி.. இங்க கவுன்சிலிங் வந்து.. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி..!! நான்தான் இவளுக்கு யோகாலாம் சொல்லி தந்தேன்.. கொஞ்சநாள் இங்க ஆர்ட் ஆஃப் லிவிங் ட்யூட்டரா கூட வொர்க் பண்ணினா.. அப்டித்தான் எங்களுக்குள்ள பழக்கம்..!!"
மும்தாஜ் சொன்ன விஷயங்கள்.. அசோக்கிற்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஒருசேர அளித்தன..!! அவனுடைய முகம் ஒருவித திகைப்பு சாயம் பூசிக்கொண்டது..!!"இ..இப்போவும் இங்க வொர்க் பண்றாளா..??"
"இல்ல.. இப்போ கொஞ்ச நாளா வர்றது இல்ல..!!"
"ஓ..!!"
"எ..எனக்கு எதுவும் புரியல அசோக்.. எதுக்கு இதெல்லாம் கேக்குறீங்க..??"
மும்தாஜ் இப்போது பொறுமையில்லாமல் கேட்டுவிட்டாள். அவளுடைய கேள்விக்கு அசோக் ஒரு பெருமூச்சை வெளிப்படுத்திவிட்டு பதில் சொன்னான்.
"நான் மீரா மீரான்னு சொல்வேனே.. அது இவதான் மும்தாஜ்..!! நான் லவ் பண்றவ.. என் மனசு பூரா நெறைஞ்சிருக்குறவ.. என்ன ஏதுன்னு எதுவுமே சொல்லாம என்னைவிட்டு பிரிஞ்சு போனவ..!! இத்தனை நாளா இவளை தேடிக்கண்டுபிடிக்கத்தான் பைத்தியம் மாதிரி அலைஞ்சிட்டு இருக்குறேன் மும்தாஜ்.. நான் இங்க கவுன்சிலிங் வர்ற மாதிரியான நெலமைக்கு காரணமே இவதான்..!!" ஆதங்கத்துடன் அசோக் சொல்ல, மும்தாஜ் அப்படியே ஆச்சரியப்பட்டு போனாள்.
"இ..இவளா.. இவளா உங்க மீரா..?? எ..என்னால நம்பவே முடியல அசோக்..!!"
"சொல்லுங்க மும்தாஜ்.. இ..இவளை எப்டி பாக்கலாம்.. எப்டி கான்டாக்ட் பண்றது..?? இ..இவ அட்ரஸ்.. ஃபோன் நம்பர் ஏதாவது..??" அசோக்கின் குரலில் அடக்கமுடியாத ஒரு தவிப்பு.
"டோன்ட் வொர்ரி அசோக்.. இவ ரெகார்ட்ஸ் கண்டிப்பா இங்க இருக்கும்..!! நாம பவானி அக்காவை போய் பாக்கலாம்.. வாங்க..!!"
சொன்ன மும்தாஜ்.. அசோக்கின் பதற்றத்தை தனக்குள் வாங்கியவளாய்.. அவசரமாய் திரும்பி அந்த காரிடாரில் நடக்க ஆரம்பித்தாள்..!! ஓரிரு வினாடிகள் கழித்துதான்.. அசோக் புரிந்துகொண்டு அவளை பின்தொடர ஆரம்பித்தான்..!! நடக்க ஆரம்பித்தவனுக்கு திடீரென ஏதோ ஞாபகம் வர..
"மும்தாஜ்..!!" என்று அழைத்தான்.
"ம்ம்..??" மும்தாஜ் திரும்பி பார்த்தாள்.
"இ..இவ.. இவ பேர் என்ன மும்தாஜ்..??"
அசோக் அந்தமாதிரி ஏக்கமான குரலில் கேட்க.. மும்தாஜ் ஒருகணம் திகைத்துப் போனாள்..!! உள்ளம் நிறைய இவனுக்கு அவள் மீது காதல் இருந்தாலும்.. உயிரையும் அவள் இல்லாத ஏக்கத்தில் விட துணிந்திருந்தாலும்.. அவளது உண்மையான பேர் இவனுக்கு தெரியாது என்கிற நிதர்சனம்.. உடனடியாய் மும்தாஜுக்கு உறைக்க மறந்ததால் வந்த திகைப்பு அது..!! பிறகு அந்த உண்மை உறைத்ததும்.. உதடுகளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை கொடுத்தவள்..
"நித்தி..!!!!" என்று உங்களது நீண்டகால கேள்விக்கான பதிலை உச்சரித்தாள்.
இருவரும் பவானியின் பிரத்தியேக அறைக்கு சென்று அவளை சந்தித்தனர்.. விஷயத்தை இருவரும் அவளுக்கு விளக்கி சொல்ல, அவள் மும்தாஜை விட பலமடங்கு ஆச்சரியத்திற்கு உள்ளானாள்..!!
"இவளா..?? இவளா நீ சொன்ன மீரா..?? ஐ கான்ட் பிலீவ் திஸ்..!!! இவளையா இத்தனை நாளா நீ உருகி உருகி லவ் பண்ணிட்டு இருந்த..??" - நம்பமுடியாதவளாய் அசோக்கை திரும்ப திரும்ப கேட்டாள்.
"பாரு மும்தாஜ்.. கடைசில.. இவனை இத்தனைநாளா சுத்தல்ல விட்டது நம்ம நித்திப்பொண்ணு..!!" - மும்தாஜிடம் ஆச்சரியத்தை பகிர்ந்துகொண்டாள்.
பிறகு அசோக்கின் அவசரத் தூண்டுதலால்.. தனது அலுவலகக் கணிணியை இயக்கியவள்.. மீரா (அலையாஸ்) நித்தியின் தொடர்பு விவரங்களை.. வெண்திரையில் வெளிக்கொணர்ந்தாள்..!! அதில் தரப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு.. தனது செல்ஃபோனில் இருந்து பவானி டயல் செய்ய.. அசோக் அவளை அவசரமாக தடுத்தான்..!!
"வேணாம்க்கா.. ஃபோன் பண்ண வேணாம்.. அட்ரஸ் இருக்குல.. நேர்லயே போயிறலாம்..!!"
"ஏன்டா..??"
"எவ்வளவுதான் அவ விலகி போனாலும்.. எங்களோட லவ், எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கும்னு நான் அவகிட்ட சொன்னேன்..!! அந்த லவ்வுக்கு சக்தி இருந்தா எங்களை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்னு.. அவ பதிலுக்கு சவால் விட்டா..!! இப்போ.. திடீர்னு அவ முன்னாடி போய் நிக்கனும்னு எனக்கு ஆசையா இருக்குக்கா.. சர்ப்ரைஸா..!!!! அ..அதும் இல்லாம.. அவளோட கான்டாக்ட் டீடெயில்ஸ நான் கண்டுபிடிச்சுட்டேன்னு தெரிஞ்சா.. அவ எங்கயாவது எஸ்கேப் ஆகி ஓடுறதுக்கு கூட சான்ஸ் இருக்கு..!! I don't want to miss her again..!!" அசோக் சொன்னதை கேட்டு பவானி மெலிதாக புன்னகைத்தாள்.
இரண்டே நிமிடங்களில் அசோக்கும் பவானியும் அங்கிருந்து காரில் கிளம்பினார்கள்.. பவானியுடைய கார்தான் அது..!! அவளே கார் ஓட்டினாள்.. அருகிலிருந்த இருக்கையில் அசோக் அமர்ந்திருந்தான்..!!
பவானி காரை மிதமான வேகத்தில் செலுத்திக்கொண்டே.. மீராவின் குடும்ப சூழ்நிலை பற்றியும்.. தற்கொலைக்கு அவள் தள்ளப்பட்ட கதையினையும்.. பிறகு தங்களது மனோதத்துவ சிகிச்சையால் அவள் மனதைரியம் பெற்றதையும்.. அசோக்கிற்கு சுருக்கமாக எடுத்துரைத்தாள்..!! எல்லாவற்றையும் அமைதியாக கேட்டுக்கொண்ட அசோக்கிற்கு.. இதயத்தில் ஒரு இனம்புரியாத வலி..!! மீராவுக்கு வேதனையான ஒரு பின்புலம் இருக்கும் என்று, ஏற்கனவே அவன் கணித்திருந்தான்.. ஆனால் அந்த பின்புலத்தில் வேதனை தவிர வேறேதும் இருக்காது என்று அவன் நினைத்தேயிரவில்லை..!! காதலி அனுபவித்த கடுந்துயரினை கேட்க கேட்க.. கண்களில் அவனுக்கு நீர் முட்டிக்கொண்டு வந்தது.. கஷ்டப்பட்டு அதை கட்டுப்படுத்திக் கொண்டான்..!!ஆர்காட் ரோட்டில் அந்தக்கார் விரைந்துகொண்டிருந்த அதே சமயத்தில்.. சிந்தாதிரிப்பேட்டையில்.. மீரா தனது வீட்டு ஹாலின் மையத்தில் நின்றிருந்தாள்..!! துடைத்து எடுக்கப்பட்டது போல வீடு வெறுமையாக இருந்தது.. வீட்டு சுவர்களையே வெறித்துக் கொண்டிருந்த மீராவுடைய பார்வையிலும் ஒரு வெறுமை..!! அவள் பிறந்து வளர்ந்த வீடு.. தவழ்ந்து ஓடிய வீடு.. தாயுருவில் நீலப்ரபா என்ற தெய்வம் வாழ்ந்த வீடு.. மனம் விட்டு இருவரும் அழுவதற்கு, மறைவாக நான்கு சுவர்களைத் தந்த வீடு..!! இனி இந்த வீடு அவளுடைய வாழ்வில் இல்லை..!!
மீராவின் முகத்தில் தெரிந்த இறுக்கத்திற்கு காரணம்.. பிறந்த வீட்டை பிரிந்து செல்கிற சோகம் மட்டும் அல்ல.. அசோக்கின் நினைவுகள் அவளுக்கு அளித்த வேதனையும்தான்..!! ஏதாவது ஒரு அதிசயம் நடந்து.. அவனுடன் இணைந்துவிட மாட்டோமா என்று.. ஐந்து நாட்களாக அவளுமே ஏங்கியிருந்தாள்..!! இந்த நொடி வரை எதுவும் நடக்கவில்லை.. இனி நடப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றே அவளது மனம் அவளுக்கு உரைத்தது..!! அசோக் இனி அவளது வாழ்வில் இல்லை என்கிற நினைவுதான்.. அவளுக்கு அதிகப்படியான வேதனையை அளிப்பதாக இருந்தது..!!
"ரொம்ப ஏக்கமா இருந்தா.. இங்கயே இருந்திடவேண்டியதுதான..??"சப்தம் கேட்டு மீரா திரும்பிப் பார்த்தாள். மனோகர் பல்லிளித்தவாறு நின்றிருந்தான். அவனுடைய கண்களில் டன் டன்னாய் காமம். மீரா அவனுடைய முகத்தை ஏறிட்டு முறைத்தாள். அவனது இளிப்பிற்கு பதில் ஏதும் சொல்லாமல், தனது கையில் இருந்த வீட்டுச்சாவியை அவன் கையில் திணித்தாள். தோளில் அணிந்த பேகுடன், விடுவிடுவென வீட்டு வாசலை நோக்கி நடந்தாள்.
"நீ எப்போவேணா திரும்ப வரலாம் நித்தி.. நானும் ரெடியா இருப்பேன்.. இந்த வீடும் ரெடியா இருக்கும்..!!"
மனோகரின் பேச்சை கண்டுகொள்ளாமல், மீரா வீட்டை விட்டு வெளியே வந்தாள். தயாராக இருந்த டாக்ஸியில் ஏறிக்கொண்டாள். கதவை அறைந்து சாத்தினாள்.
"கெளம்பலாமா மேடம்..??" என்று கேட்ட ட்ரைவருக்கு,
"ம்ம்..!!" என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.
டாக்ஸி சீரான வேகத்துடன் அண்ணாசாலையில் ஊர்ந்து கொண்டிருந்தது.. மீராவின் மனநிலையோ சீரற்றுப்போய் ஒருவித இனம்புரியாத அழுத்தத்தில் சிக்கி தத்தளிக்க ஆரம்பித்திருந்தது.. இறுகிப்போன முகத்துடனே சாலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..!!
தேனாம்பேட்டை சிக்னலை அடைந்தபோது பலத்த போக்குவரத்து நெரிசலில் டாக்ஸி சிக்கிக்கொண்டது..!! வாகனங்களுக்கு மத்தியில் அந்த டாக்ஸி அசையாமல் நின்றிருந்த நேரத்தில்.. எதிர்ப்புறம் இருந்து அந்த கார் மெல்ல மெல்ல நகர்ந்து.. மீராவின் டாக்ஸிக்கருகே பக்கவாட்டில் வந்து நின்றது.. அந்தக்காருக்குள் அமர்ந்திருந்தான் அசோக்..!!!!
இருவரில் ஒருவர் தலையை திருப்பி பார்த்தால் கூட.. அடுத்தவர் முகத்தை கண்டுகொள்கிற மாதிரியான நெருக்கமான நிலை..!! ஆனால்.. இருவருக்கும் ஏனோ அச்சமயத்தில் முகம் திருப்ப தோன்றவில்லை..!! மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்து டென்ஷனான மீராவின் கவனமோ.. போக்குவரத்து விளக்குகளின் மீதே படிந்திருந்தது..!! அவளுக்கு ஒரு மீட்டர் தொலைவில் அமர்ந்திருந்த அசோக்கோ.. அருகிலிருந்த பவானியிடம் தவிப்பான குரலில் பேசிக்கொண்டிருந்தான்..!!
"சிந்தாதிரிப்பேட்டைல ஒரு வீடு விடாம சலிச்சு எடுத்தாச்சுக்கா.. இவ வீடு மட்டும் எப்படி மிஸ் ஆச்சுன்னு தெரியல..!!"
"ம்ம்..!! போய் பாக்கலாம் அசோக்.. பொறுமையா இரு..!!"
"வேடிக்கையை பாரேன்.. கம்ப்யூட்டர் க்ளாஸ் அட்டண்ட் பண்றதுக்காக, அவ டெயிலி வடபழனி வந்துபோயிட்டு இருக்கான்னு நான் நெனச்சுட்டு இருந்தேன்.. அவ என்னடான்னா.. உங்க சென்டர்ல ஆர்ட் ஆஃப் லிவிங் க்ளாஸ் எடுக்குறதுக்காக வந்துபோயிட்டு இருந்திருக்கா..!!"
"ம்ம்.. எங்ககிட்ட கவுன்சிலிங் வந்தப்புறம், அவளுக்கு யோகால ரொம்ப ஈடுபாடு வந்திருச்சு அசோக்.. எங்க சென்டர்ல அவளுக்கு ஏதோ ஒரு அமைதி கெடைச்சிருக்கனும்..!! அவளே வாலன்டியரா வந்து ட்யூட்டரா இருக்க ஆசைப்படுறேன்னு சொன்னா.. ரொம்ப நாள் ரெகுலராவும் வந்துட்டு இருந்தா..!! இப்போ கொஞ்ச நாளாத்தான் வர்றது இல்ல.. அவ அம்மா இறந்ததுல இருந்து..!!"
"அ..அவங்க எப்போ இறந்தாங்க..??"
அசோக்கின் கேள்விக்கான பதிலை பவானி தோராயமாக சொல்ல.. சிறு யோசனைக்கு பிறகு அவனால் அந்த காலகட்டத்தை கண்டறிந்துகொள்ள முடிந்தது..!! முன்பொருநாள் பாரில்.. மூச்சுமுட்ட குடித்துவிட்டு மீரா உளறியவையெல்லாம் இப்போது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தன..!!
"ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!"
"என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??"
"தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!"
அன்றே.. தனியறையில் அவள் தவிப்பும் ஏக்கமுமாக சொன்னதும் இப்போது நினைவுக்கு வந்தது..!!
"என்னை பத்தி கவலைப்பட யாரும் இல்ல.. என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!"
அந்த நினைவு வந்ததுமே அசோக்கின் மனதை ஒரு இனம்புரியாத உணர்வு அழுத்தி பிசைந்தது..!!'ஆறுதலுக்கென்று இருந்த அம்மாவையும் தொலைத்துவிட்ட அவள்.. அன்று எவ்வளவு வேதனையான ஒரு மனநிலையில் இருந்திருப்பாள்..?? அத்தனையும் மனதிலேயே போட்டு புதைத்துக்கொள்ள எப்படி முடிந்தது அவளால்..?? சரியான நெஞ்சழுத்தக்காரி..!!'
இவனுடைய மனநிலை அறியாத பவானி தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்..!!
"அம்மான்னா அவளுக்கு அவ்ளோ பிடிக்கும்.. உலகத்துல அவளுக்குன்னு இருந்த ஒரே ஜீவன் அவ அம்மா மட்டுந்தான்.. அவங்களும் இல்லைன்னதும் ரொம்ப உடைஞ்சு போயிட்டா..!!"
"..................."
"அவளை ஏமாத்திட்டுப்போன அந்தப்பையனை பத்தி நாங்க எவ்ளோ கேட்ருப்போம் தெரியுமா.. எதுவுமே அவ சொன்னது இல்ல..!! ஏமாந்துட்டமேன்றதுக்காக கூட அவ சூசயிட் அட்டம்ப்ட் பண்ணிக்கல அசோக்.. 'தன்னோட நெலமை தன் மகளுக்கும் வந்திருச்சே'ன்னு அவ அம்மா பட்ட வேதனையை தாங்கிக்க முடியாமத்தான்.. அந்த ஸ்ட்ரெஸ் அதிகமாகித்தான்.. கத்தியால கை நரம்பை கட் பண்ணிக்கிட்டா..!! இதோ.. இந்த எடத்துல.. இப்படி..!!"
பவானி சொல்ல.. அசோக்கின் மனதுக்குள் பளிச்சென்று ஒரு மின்னல்..!! முன்பொருமுறை மீராவுடன் ஃபுட்கோர்ட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது.. தனது கற்பனை அப்பாவின் காதல் வெறுப்பினைப்பற்றி அவள் கதையடித்ததுக்கு இடையில்..
"நான் செகண்ட் இயர் படிக்கிறப்போ.. ஒருதடவை அப்பா என்னை பாக்குறதுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாரு.. அந்த நேரம் பார்த்து நான் என் க்ளாஸ்மேட் பையன் ஒருத்தன்ட்ட சப்ஜக்ட் பத்தி சந்தேகம் கேட்டுட்டு இருந்தேன்.. நாங்க பேசிட்டு இருக்குறதை அப்பா பாத்துட்டாரு..!! அன்னைக்கு நைட்டு அப்பா என் கைல போட்ட சூடுதான் இது..!!"
இடது கையில் இருந்த தழும்பை காட்டி.. அவள் அப்போது அப்பாவியாக சொன்னது.. இப்போது அசோக்கின் நினைவுக்கு வர.. அவன் தலையை பிடித்துக் கொண்டான்..!! 'இன்னும் என்னவெல்லாம் புதிர் ஒளித்து வைத்திருக்கிறாயடி பிசாசே..??' என்பது மாதிரியான சலிப்புடன்.. பிடித்த தலையை பிசைந்து விட்டுக் கொண்டான்..!!
போக்குவரத்து நெரிசல் சற்றே குறைய.. இரண்டு கார்களும் மெல்ல மெல்ல நகர.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமலே.. எதிரெதிர்த்திசையில் பயணிக்க ஆரம்பித்தினர்..!!
அசோக்கும் பவானியும் சிந்தாதிரிப்பேட்டை வீட்டை சென்றடைய மேலும் இருபது நிமிடங்கள் ஆயின..!! வீட்டை பார்த்ததுமே அசோக்கால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.. அவனது தேடுதல் வேட்டையின் முதல் வீடே அதுதானே..??
'அப்படியானால்.. அன்று கண்ணாடியில் நான் கண்ட பிம்பம் என் மீராவுடையதுதானா..?? வீட்டுக்குள் ஒளிந்துகொண்டேதான் இல்லையென்று சொல்ல சொல்லியிருந்தாளா..?? இரக்கமற்ற இராட்சசி..!!!'
ஒருபக்கம் மீராவின்மீது அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தாலும்.. இன்னொரு பக்கம், இப்போது அவளை நேரிலேயே காணப்போகிற சந்தோஷமும் அவனுக்குள் எக்கச்சக்கமாய் ஏறிப்போயிருந்தது..!! அவர்களுக்கு முன்பாக தோன்றி மனோகர் சொன்ன செய்தி.. அத்தனை சந்தோஷத்தையும் மொத்தமாய் வடிந்து போக வைத்தது..!!
"ஹேய்.. நீ.. அந்த நித்தி வளைச்சுப்போட்ட பையன்ல..?? என்ன இந்தப்பக்கம்..??"
மனோகரின் ஆரம்பமே அசோக்கின் கோபத்தை கிளறிவிடுவதாய் இருந்தது.. அதை கட்டுப்படுத்திக்கொண்டுதான் அவன் மீரா பற்றி விசாரித்தான்..!! மனோகரோ அலட்சியமாகவே அவனுக்கு பதில் சொன்னான்..!!
"எந்த நாட்டுக்கு போறா.. எத்தனை மணிக்கு ஃப்ளைட்.. எத்தனை வருஷம் இருக்கப் போறா.. எப்போ திரும்பி வருவா.. எதுவும் எனக்கு தெரியாது..!!"
அவனுடைய பதிலில் அசோக் நொந்துபோனான்.. அவனுடைய மனதில் மெலிதாக ஒரு பதற்றம் பரவ ஆரம்பித்தது..!!
"அ..அக்கா.. அவ நம்பருக்கு கால் பண்ணிப் பாருக்கா..!!"
பதற்றத்துடனே அசோக் சொன்னதும்.. பவானி தனது எண்ணிலிருந்து மீராவின் மொபைல் நம்பருக்கு கால் செய்தாள்..!! இரண்டு மூன்று முறை முயற்சி செய்து பார்த்தவள்.. பிறகு அசோக்கிடம் திரும்பி சலிப்பாக சொன்னாள்..!!
"ரிங் போகுது அசோக்.. எடுக்க மாட்டேன்றா..!! ட்ராவல்ல இருக்குறா.. கவனிக்கல போல..!!"
"ப்ச்..!!"
அசோக்கின் பதற்றம் இப்போது இன்னும் அதிகமாயிருந்தது..!! 'மீண்டும் அவளை மிஸ் செய்துவிடுவோமோ..?' என்பது மாதிரி அவனுக்குள் ஒரு கிலி கிளம்ப ஆரம்பித்தது..!! மனோகரிடம் திரும்பி கெஞ்சலாக கேட்டான்..!!
"ஸார்.. ப்ளீஸ் ஸார்..!! நான் எப்படியாவது அவளை மீட் பண்ணியாகணும்.. ஃப்ளைட் ஏர்றதுக்குள்ள அவளை புடிச்சாகனும்..!! உங்களுக்கு ஏதாவது யூஸ்ஃபுல் இன்ஃபர்மேஷன் தெரிஞ்சா சொல்லுங்க.. ப்ளீஸ்..!!""ப்ச்.. நான்தான் எனக்கு எதுவும் தெரியாதுன்னு சொல்றேன்ல..?? வேலை விஷயமா வெளிநாட்டுக்கு போறாளா.. இல்ல.. வேற ஏதும் தொழில் பண்ணப் போறாளான்னு கூட எனக்கு தெரியாது..!!"
மனோகரின் வக்கிரமான வார்த்தைகள் அசோக்கை உக்கிரமாக்கின.. சட்டென அவனுக்குள் ஆத்திரம் பீறிட்டு கிளம்ப, 'ஏய்ய்..!!' என்று கத்தியவாறு மனோகருடைய சட்டையை கொத்தாகப் பிடித்தான்..!! பதிலுக்கு மனோகரும் 'ஹேய்.. என்ன..?' என்று சூடாக.. பவானிதான் இடையில் புகுந்து அசோக்கை தடுத்தாள்..!!
"விடு அசோக்.. விடுன்றேன்ல..!! சொன்னா கேளு.. இப்போ இதுக்குலாம் நேரம் இல்ல..!! இந்தா.. நீ உடனே கெளம்பு.. ஏர்ப்போர்ட் போய் அவளை ஸ்டாப் பண்ணு.. போ..!!"
என்றவாறு கையில் இருந்த கார்ச்சாவியை அசோக்கிடம் நீட்டினாள்..!! அசோக் இன்னும் ஆத்திரம் தணியாதவனாய், மனோகரை முறைத்தவாறே ஒரு சில வினாடிகள் யோசித்தான்.. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன், கார்ச்சாவியை கையில் வாங்கிக்கொண்டான்.. பவானியுடைய செல்போனையும் அவளிடமிருந்து பிடுங்கிக்கொண்டான்.. பதற்றத்தில் துடிக்கிற மனதுடன், கேட் திறந்து வெளியேறினான்..!!
அசோக்கின் அவசரத்துக்கு, தான் இடையூறாக இருப்போம் என்று கருதியே.. பவானி அவனை தனியாக கிளம்ப சொன்னாள்..!! காரில் ஏறி அமர்ந்த அவனும்.. வண்டியை கிளப்பியதுமே சர்ரென்று புயல் வேகத்தில் பறந்தான்..!!
கார் காற்றைக் கிழித்துக்கொண்டு அண்ணாசாலையில் சீறியது..!! பயமும் தவிப்புமாய்.. 'படக் படக்' என அடித்துக்கொள்கிற இருதயமுமாய்.. உச்சபட்ச வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அசோக்..!! 'கீய்ங்.. கீய்ங்..' என்று ஹார்ன் ஒலியெழுப்பி முன்னால் சென்ற வாகனங்களை முந்திச்சென்றான்.. பவானியின் செல்ஃபோனில் இருந்து மீராவின் எண்ணுக்கு அவ்வப்போது கால் செய்து பார்த்து, 'ப்ச்' என்று சலிப்பை உதிர்த்தான்.. சிக்னலிலோ, ட்ராஃபிக்கிலோ மாட்டிக்கொள்ள நேர்ந்தபோது, 'ஷிட்' என்று ஸ்டியரிங்கை குத்தினான்..!!
கத்திப்பாரா ஜங்க்ஷனை கடந்து இடது புறம் திரும்பியதுமே.. தூரத்தில் அந்த ஆள் தெரிந்தான்..!! கொள்ளைகொள்ளையாய் தாடிமயிர்களும்.. கொழுகொழுவென்ற சதைப்பிதுக்கங்களும்.. கோணிப்பை மாதிரியான கால்ச்சட்டையும்.. கோழிமுட்டை கண்ணுக்கு கண்ணாடியுமாக..!! ப்ரேக்டவுன் ஆகிப்போன ஆல்ட்டோவுக்கு அருகே.. முதுகில் பெரிய மூட்டையுடன் நின்றிருந்தான்..!! கையை இவனது காருக்கு குறுக்கே காட்டி..
"லிஃப்ட்.. லிஃப்ட்.. ப்ளீஸ்..!!"
என அந்த ஆள் பரிதாபமாக கத்தியது அசோக்கின் காதில் விழவே செய்தது.. அவனுக்கு உதவவேண்டும் என்கிற எண்ணம் கூட அசோக்கிற்கு தோன்றியது..!! இருந்தாலும் இது சமயமில்லை என்ற எண்ணத்துடன்.. அந்த ஆளின் கதறலை அசோக் அலட்சியம் செய்தான்.. காரின் வேகத்தை சற்றும் குறைக்காமல் 'விஷ்க்க்' என கடந்து சென்றான்..!!
அடுத்த பத்தாவது நிமிடம்.. மீனம்பாக்கம் இன்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இருந்தான் அசோக்..!! பார்க்கிங் ஏரியாவில் காரை விட்டவன்.. பரபரப்பாக ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸுக்குள் நுழைந்தான்..!! மீரா எங்காவது தென்படுகிறாளா என்று.. தவிப்புடன் தலையை திருப்பி திருப்பி பார்த்தான்..!! விமான பயணச்சீட்டு இல்லாமல்.. பயணிகள் அமர்ந்திருக்கிற பகுதிக்கு அனுமதிக்க முடியாது என்று.. அசோக்கை தடுத்தார் ஏர்போர்ட் செக்யூரிட்டி ஒருவர்..!! அசோக் அவரிடம் கெஞ்சினான்..!!
"ப்ளீஸ் ஸார்.. என்னை உள்ள அலவ் பண்ணுங்க.. அவளை நான் பார்த்தே ஆகணும்.. இது என் லைஃப் பிரச்சினை ஸார்.. கொஞ்சம் புரிஞ்சுக்கங்க.. ப்ளீஸ்..!!"
"உன்னை உள்ளவிட்டா என் வேலை போய்டும்பா.. எனக்கும் இது லைஃப் பிரச்சினைதான்.. நீ கொஞ்சம் புரிஞ்சுக்கோ.. ப்ளீஸ்..!!"
அசோக்கின் நிலையை ஓரளவு புரிந்துகொண்ட அந்த செக்யூரிட்டி.. மிஞ்சுவதற்கு பதிலாக கெஞ்சலாய் சொல்ல.. அதற்கு மேலும் என்ன செய்வது என்று புரியாமல், அசோக் நெற்றியைப் பற்றி பிசைந்தான்..!! மீரா தென்படுகிறாளா என்று மீண்டும் ஒருமுறை அவன் தலையை திருப்பி பார்க்க.. அவனுக்கு பின்பக்கமாக அந்த ஆள் வந்து 'பொத்'தென்று மோதினான்..!! சற்றுமுன் சாலையில் லிஃப்ட் கேட்ட அந்த கொழுகொழு ஆசாமி..!!
"ஹலோ கண்ணு தெரியாதா உங்களுக்கு..??" ஆளை அடையாளம் கண்டுகொண்டும், அசோக் எரிச்சலாகவே எகிறினான்.
"ஸாரி ஸார்.. ஸாரி..!! ஃப்ளைட்க்கு லேட் ஆய்டுச்சு.. அதான்..!! ஸாரி ஸாரி ஸாரி..!!"
ஸாரிக்களை மானாவாரியாக இறைத்தவாறு.. அந்த ஆள் நிற்கக்கூட நேரமின்றி அவசரமாக உள்ளே ஓடினான்..!! ஒருசில வினாடிகள் செயலற்றுப் போய் நின்றிருந்த அசோக்.. பிறகு, 'போர்டிங் ஏரியா தவிர வேறு எங்காவது மீரா இருந்தால், அவளை பிடிக்கலாமே..' என்பது மாதிரியான எண்ணத்துடன்.. விசிட்டர்கள் ஏரியா பக்கமாக ஓடினான்..!!அதே நேரம்..
போர்டிங் ஏரியாவுக்குள்.. இரண்டாவது மாடியில் இருந்த அந்த புக் ஸ்டாலில்.. மீரா நின்றுகொண்டிருந்தாள்..!! ட்ராவல் பேகை அவள் செக்கின் செய்திருக்க.. தோளில் மட்டும் அந்த சிறிய பேக்..!! ஃப்ளைட்டில் அனுமதிக்கப்பட இன்னும் சிறிது நேரமே இருக்கிற நிலைமையில்.. திடீர் யோசனை தோன்றியவளாய் அந்த புக் ஸ்டாலுக்கு வந்திருந்தாள்..!! சவூதி அரேபியா பற்றிய உபயோகமான தகவல்கள் அடங்கிய அந்தப் புத்தகத்தை வாங்கியிருந்தாள்..!! பில்லுக்கு பணம் எடுத்து கொடுத்துவிட்டு.. புத்தகத்தை பேகுக்குள் திணித்தபோதுதான்.. அவளுடைய கவனத்தை அது ஈர்த்தது.. பேகுக்குள் கிடந்த அவளுடைய செல்ஃபோன்..!!
எதேச்சையாக எடுத்துப் பார்த்தவள்.. பவானியின் நம்பரில் இருந்து ஏகப்பட்ட மிஸ்ட் கால்ஸ் வந்திருப்பதை கவனித்தாள்..!! 'இவர்கள் எதற்கு இந்த நேரத்தில்?' என ஓரிரு வினாடிகள் குழம்பினாள்.. புக் ஸ்டாலை விட்டு அவசரமாக வெளியே வந்தாள்.. வெளியே வந்ததுமே பவானியின் நம்பருக்கு கால் செய்தாள்..!!
அதே நேரம்.. விசிட்டர் ஏரியாவில்..
ஏக்கமும் தவிப்புமாய் மீராவை தேடிக்கொண்டிருந்த அசோக்கின் கையில் இருந்த செல்ஃபோனுக்கு.. அவளிடமிருந்தே கால் வர.. அந்த நொடியில் அவன் அடைந்த மகிழ்ச்சியை அளவிடவே முடியாது..!! அவனது முகம் பட்டென பரவசத்துக்கு செல்ல.. காலை உடனே பிக்கப் செய்து காதில் வைத்தான்..!!
"ம்ம்.. சொல்லுங்கக்கா.. கால் பண்ணிருந்தீங்களா..??"
எதிர்முனையில் மீராவின் குரல்.. அந்தக்குரலை கேட்டதும் அசோக்கின் உள்ளத்தில் பலவகை உணர்ச்சி அலைகள்..!!
"மீ..மீரா.. மீரா.."
வார்த்தைகள் வெளிவராமல் தவித்தான்.. அவளுடைய உண்மையான பெயர் நித்தி என்று மூளைக்கு தெரிந்திருந்தும்.. அவனுடைய மனம் என்னவோ 'மீரா மீரா' என்றே இன்னும் அலறியது..!! அடுத்த முனையில் அவனுடைய குரலை கேட்ட மீராவும்.. பலத்த அதிர்ச்சிக்கும், ஆச்சரியத்துக்கும் உள்ளானாள்.. அவளும் வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கியவளாய் தடுமாறினாள்..!!
"அ..அசோக்.. அசோக் நீயா..??"
"நா..நான்.. நான்தான் மீரா..!!"
"அசோக்.. நீ.. நீ எப்படி..??"
"எ..எங்க.. நீ எங்க மீரா இருக்குற..??"
"நா..நான்.. நான் உன்னை விட்டு தூரமா போறேன் அசோக்.. இன்னும் பத்து நிமிஷத்துல.. எனக்கு.."
"தெரியும் மீரா.. நீ ஏர்ப்போர்ட்ல இருக்குறன்னு எனக்கு தெரியும்.. நானும் இப்போ ஏர்ப்போர்ட்லதான் இருக்குறேன்..!! ஏர்ப்போர்ட்குள்ள எங்க இருக்குறன்னு சொல்லு மீரா.. நான் உன்னை பாக்கணும்.. உன்கூட பேசணும்..!! ப்ளீஸ் மீரா.. போயிடாத.. மறுபடியும் என்னை தவிக்கவிட்டுட்டு போயிடாத.. என்கிட்ட வந்துடு.. ப்ளீஸ்..!!"
அசோக்கின் குரல் தழதழத்துப் போய் ஒலிக்க.. அடுத்த முனையில் அதைக்கேட்ட மீரா அப்படியே உருகிப்போனாள்..!! 'தன்மீது எத்தனை காதல் இருந்தால்.. தன்னை தேடிக்கண்டுபிடிக்க இவன் இத்தனை முயற்சிகள் எடுத்துக் கொண்டிருப்பான்..?' என்பது மாதிரியான எண்ணம் அவளுக்குள் தோன்ற.. உள்ளத்தில் அசோக்கின்மீது பீறிட்டு கிளம்பிய காதல் ஊற்றினை.. அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை..!! கண்களுக்குள் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. உதடுகளை பற்களால் அழுந்த கடிக்கவும்.. இமைகளை பொத்துக்கொண்டு கண்ணீர் வெளிச்சிந்தியது..!!
இந்தப்பக்கம் இவளது உணர்சிகளை, அந்தப்பக்கம் அறியாத அசோக்.. அவளது அமைதியை மட்டும் தவறாக அர்த்தம் எடுத்துக்கொண்டு.. பதற்றம் கொப்பளிக்கிற குரலில் மீராவை கெஞ்சினான்..!!
"ப்ளீஸ் மீரா.. ஏதாவது பேசு.. ஃபோனை மட்டும் கட் பண்ணிடாத.. ப்ளீஸ்..!! எ..என்னை.. என்னை விட்டு போயிடாத மீரா.. என்னால தாங்கிக்கவே முடியாது.. ப்ளீஸ் மீரா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!!"
கரகரத்த குரலில் அசோக் அவ்வாறு கெஞ்ச.. முன்பொருமுறை தனது மடியில் மடியில் சரிந்து மயங்கிப் போவதற்கு முன்பாக.. அவன் கெஞ்சிய வார்த்தைகள் மீராவின் காதுக்குள் இப்போது மீண்டும் ஒலித்தன..!!
"போ..போகாத மீரா..!! எ..எனக்கு நீ வேணும் மீரா..!!"
அவ்வளவுதான்..!! அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய உணர்சிகளை மீராவால் அடக்கிக்கொள்ள முடியவில்லை.. இதற்கு மேலும் இவனை தவிக்க விடுவது தவறென்று உணர்ந்துகொண்டாள்..!!
'இல்ல அசோக்.. உன்னை விட்டு போக மாட்டேன்டா.. எப்போவும் போக மாட்டேன்..!!' என்று கத்துவதற்காக அவள் வாயெடுத்தபோதுதான்.. அவள் மீது தொம்மென்று வந்து இடித்தான் அந்த ஆள்.. சற்றுமுன் அசோக்கை இடித்த, அதற்குமுன் அசோக்கிடம் லிஃப்ட் கேட்ட அதே கனத்ததேக ஆசாமி..!! அவன் இடித்த வேகத்தில்.. மீராவின் கையிலிருந்த செல்ஃபோன் எகிறி.. எங்கோ அந்தரத்தில் பறந்தது..!! இரண்டாவது மாடியிலிருந்து கீழ்நோக்கி நழுவி.. தரைத்தளத்தில் சென்று ஜிலீரென மோதி.. இரண்டு மூன்று பாகங்களால தெறித்து.. மூலைக்கொன்றாக சிதறி ஓடியது..!!
"ஸாரி மேடம்.. ஸாரி ஸாரி ஸாரி.. ஐ'ம் இன் எ ஹர்ரி... ஸாரி..!!"
வழக்கமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு.. தனது பின்புற சதைகள் குலுங்க குலுங்க.. அந்த ஆள் எங்கேயோ ஓட ஆரம்பித்தான்..!!அவனுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிற மனநிலையில் மீரா இல்லை.. காதலும், ஏக்கமும், தவிப்பும் அவள் நெஞ்சை கொள்ளை கொள்ளையாய் அடைத்திருந்தன.. படக்கென ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டவளாய் படிக்கட்டு நோக்கி ஓடினாள்.. கால்கள் ரெண்டும் பிண்ணிக்கொள்ள, தடதடவென படியிறங்கினாள்.. இறங்குகையிலேயே, கீழே விழுந்த செல்ஃபோன் கண்ணில் தட்டுப்படுகிறதா என்று தவிப்பாக பார்த்தாள்..!!
இவளுடைய நிலையை அறியாத அசோக்.. மீராதான் காலை கட் செய்துவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான்..!! நடுங்கிய விரல்களுடன் மீண்டும் கால் செய்து பார்க்க.. ஸ்விட்ச் ஆஃப் என்று வர..
"ஷிட்..!!!"
என்று கத்தியவன்.. ஏதோ ஒரு வேகத்தில் செல்ஃபோனை தரையில் ஓங்கி அடித்து விசிறினான்..!! தேங்காய் உடைத்தது போல.. பவானியின் செல்ஃபோன் சில்லு சில்லாக சிதறி ஓடியது..!!
'இன்னும் பத்து நிமிடங்கள்தான் உள்ளன.. எங்கே என்றே தெரியாத ஒரு வெளிநாட்டுக்கு, என்னருமைக்காதலி தப்பிச்செல்லப் போகிறாள்.. செல்ஃபோனை வேறு ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.. எப்படியாவது அவளை தடுத்தாக வேண்டும்.. என்ன செய்வது இப்போது..??'
எதுவும் புரியாமல் அசோக் நெற்றியை பிசைந்துகொண்டான்..!! எதேச்சையாக அவன் திரும்புகையில்தான்.. அந்த விளம்பரம் அவனுடைய பார்வையில் விழுந்தது..!! அதை பார்த்ததுமே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு யோசனை..!! செய்யலாமா வேண்டாமா என்று சிந்திக்கக்கூட அவகாசம் ஒதுக்காமல்.. செய்துவிடவேண்டும் என்கிற உறுதியான முடிவுடன்.. தலையை சுழற்றி சுழற்றி எதையோ தேடினான்..!! அவன் தேடியது கிடைக்காமல் போகவும்.. அவசரமாக ஏர்போர்ட் என்ட்ரன்சை விட்டு வெளியே வந்தான்..!! வெளியே ஓடிய சிமெண்ட் சாலைக்கு அந்தப்பக்கமாக அவன் தேடியது காட்சியளித்தது.. அந்த கண்ணாடிக்கூண்டு.. பப்ளிக் டெலிஃபோன் பூத்..!!
அதே நேரத்தில்.. ஏர்ப்போட்டுக்குள்ளே.. உடலின் அத்தனை உறுப்புகளிலும் பதற்றம் தொற்றிக்கொண்டவளாய் மீரா தனது செல்ஃபோனை தேடிக்கொண்டிருந்தாள்..!! அவளுடைய கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.. புறங்கையால் அந்தக் கண்ணீரை அவ்வப்போது துடைத்துக் கொண்டாள்.. உதடுகள் அடிக்கடி 'அசோக்.. அசோக்..' என்று உச்சரித்துக் கொண்டிருந்தன..!! கீழ்த்தளத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகள், இண்டு இடுக்குகள் எல்லாம்.. தரையில் அமர்ந்து குனிந்து குனிந்து தேடினாள்..!!
"என்னம்மா.. என்ன தேடுறீங்க..??" அவளை கவனித்த ஒரு செக்யூரிட்டி வந்து கேட்டார்.
"எ..என் செல்ஃபோன்.. என் செல்ஃபோன் மேல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"
மீராவுக்கு அந்த செக்யூரிட்டி உதவி செய்தார்.. அவளுடன் சேர்ந்து அவரும் செல்ஃபோன் தேட ஆரம்பித்தார்..!! சிதறிப்போன செல்ஃபோன் பாகங்களை.. இருவருமாக தேடிக்கண்டுபிடித்து ஒன்றிணைக்க.. ஐந்து நிமிடங்கள் ஆகிப் போயின..!!
"சென்னையிலிருந்து ரியாத்துக்கு செல்கிற ஏர்-இண்டியா விமானத்தின் பயணிகள்.. உடனடியாக ட்ரான்ஸ்போர்ட் டெஸ்கை அணுகவும்..!!"
மீரா பயணிக்கவிருந்த விமானம் புறப்பட தயார் நிலையில் இருக்கிற விஷயம்.. ஒலிப்பெருக்கியில் அறிவிக்கப்பட்டது..!! அதைக் கண்டுகொள்ளாமல்.. அவசரமாக பவானியின் எண்ணுக்கு கால் செய்த மீராவுக்கு.. ஏமாற்றமே பரிசாக கிடைத்தது.. செல்ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதாக செய்தி..!!
"ப்ளீஸ் அசோக்.. பிக்கப்.. பிக்கப்..!!!!"
தவிப்பும் பதற்றமுமாய் அழுகையுடன் கதறிய மீரா.. திரும்ப திரும்ப அந்த எண்ணுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் திடீரென..
"கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்.. கீய்ங்க்..!!!!!"
என ஏர்ப்போர்ட்டுக்குள் எமர்ஜன்ஸி அலார்ம் அடித்தது.. ஆங்காங்கே சிவப்பு விளக்குகள் பளிச் பளிச்சென்று மின்னின.. அனைவரையும் உடனே ஏர்ப்போர்ட்டை விட்டு வெளியேற அறிவுறுத்திய அவசரகால அறிவிப்பு..!!
"ஏதோ பிரச்சினைன்னு நேனைக்கிறேன்மா.. வா வெளில போயிடலாம்..!!" மீராவுக்கு உதவிய அந்த செக்யூரிட்டி பதற்றமாக சொன்ன அதே நேரத்தில்..
"ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்களாம்.. இன்னும் அஞ்சு நிமிஷத்துல வெடிக்கப் போகுதாம்.. எல்லாரும் ஓடுங்க.. ஓடுங்க..!!"
வெளியில் கசிந்த விஷயத்தை அறிந்துகொண்ட யாரோ.. டப்பிங் பட டயலாக் எஃபக்டில் கத்தினார்கள்..!!
அவ்வளவுதான்..!! அத்தனை நேரம் தேகத்தில் மழை பெய்த எருமை மாடுகளாய், அங்குமிங்கும் ஊர்ந்துகொண்டிருந்த மனிதர்கள்.. பட்டென வாலில் தீப்பிடித்துக்கொண்ட குரங்குகளாக மாறிப்போயினர்.. ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ் நோக்கி திமுதிமுவென ஓடினர்..!! அத்தனை பேரின் மனதிலும் ஒரு உயிர்ப்பயம்.. அனைவரது முகத்திலும் ஒரு மரணபீதி..!! பயம்.. குழப்பம்.. அவசரம்.. இடைஞ்சல்.. நெரிசல்.. தள்ளுமுள்ளு..!!
எதுவும் புரியாமல் திகைத்தவாறு நின்றிருந்த மீராவை, அந்த செக்யூரிட்டியே..
"வாம்மா..!!" என்றவாறு கைபிடித்து இழுத்து சென்றார்.ஏர்ப்போர்ட் என்ட்ரன்ஸ்க்கு வெளியே.. அசோக் டெலிஃபோன் பூத்துக்கு அருகாகவே நின்று காத்திருந்தான்..!! எந்த நேரமும் வாசலை கிழித்துக்கொண்டு மனிதக்கும்பல் வெளிப்படும் என்று எதிர்பார்த்திருந்தான்..!!
"அஞ்சு நிமிஷத்துல பாம் வெடிக்கப் போகுது.. ஏர்ப்போர்ட் மொத்தமும் இடிஞ்சு தரைமட்டம் ஆகப்போகுது.. எத்தனை பேரை காப்பாத்த முடியுமோ அத்தனை பேரை காப்பாத்திக்கோங்க..!! எங்களை பகைச்சுக்குற வரைக்கும் இந்தியாவுக்கு இதே நெலமைதான்..!!"
பப்ளிக் டெலிஃபோன் பூத்தில் இருந்து.. ஏர்ப்போர்ட் அத்தாரிட்டிக்கு வடஇந்தியரின் ஸ்லாங்கில் அவன் விடுத்த எச்சரிக்கை.. நிச்சயம் பலனளிக்கும் என்றே அவன் எதிர்பாத்திருந்தான்..!! அவனுடைய எதிர்பார்ப்பு சற்றும் வீணாகவில்லை.. புற்றில் இருந்து புறப்பட்ட ஈசல்களாய்.. அந்த சிறிய நுழைவாயிலில் இருந்து புசுபுசுவென மனிதர்கள் வெளிப்பட்டு.. இவனை நோக்கி ஓடிவந்தனர்..!!
ஆனால்.. ஒருவகையில் அசோக்கிற்கு ஏமாற்றம்தான்..!! அமைதியாய் இயங்கிக்கொண்டிருந்த அந்த ஏர்ப்போர்ட்டுக்குள்.. அத்தனை மனிதர்கள் அடங்கியிருப்பார்கள் என்று அவன் கொஞ்சமும் நினைத்திரவில்லை..!! ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும்.. அடுத்தடுத்து.. வரிசையாகவும் வேகமாகவும் வெளிப்பட.. அவர்களுக்குள் மீராவின் முகத்தை தேடிக்கண்டுபிடிப்பது அவனுக்கு சிரமமாக இருந்தது..!! கருவிழிகளை அப்படியும் இப்படியுமாய் அசைத்து.. காதலியின் அழகுமுகத்தை அந்த மனிதத் தலைகளுக்குள் காணத்துடித்தான்..!!
ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிக்கொண்டு பயணிகள் அங்குமிங்கும் ஓடினர்.. அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய செக்யூரிட்டி கார்ட்களும் அவர்களுடன் சேர்ந்து ஓடினர்..!! இடையில் இருந்த சாலையில்.. பாம்ஸ்குவாட் வாகனங்கள்.. தலையில் ஒளிர்ந்த சிவப்பு விளக்குகளுடன்.. 'வீல்.. வீல்..' என்று அலறிக்கொண்டு.. எதிர்ப்புறம் சர்ர் சர்ர்ரென விரைந்தன..!!
அப்போதுதான்.. இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் நகர்ந்து வெளியே வந்த மீராவின் முகம்.. அசோக்கின் பார்வையில் விழுந்தது..!! அவளை கண்டுகொண்டதுமே அசோக்கிற்கு அப்படியொரு சந்தோஷம்..!!
"மீரா...!!!!!"
என்று கத்தியே விட்டான். அவன் கத்தியதை மீரா கவனிக்கவில்லை.
"மீரா...!!!!!"
மீண்டும் பெருங்குரலில் கத்தினான்.. இப்போது மீராவின் காதுகளில் இவனது சப்தம் கேட்டுவிட்டது.. உடனே திரும்பி பார்த்தாள்.. அசோக்கின் முகத்தை கண்டதும் அவளுக்குள் ஒரு திகைப்பு கலந்த பூரிப்பு..!!
"அசோக்...!!!!!"
அவளும் பதிலுக்கு அந்தப்பக்கம் இருந்து கத்தினாள்..!! குழப்பத்துடன் முண்டியடித்த ஜனங்களை விலக்கிக்கொண்டு.. அசோக்கின் பக்கமாக வரமுனைந்தாள்..!! ஆனால்.. அசோக்கிற்குத்தான் சற்றும் பொறுமை இல்லை.. உடனே அவளிடம் சென்று, அவளை தன்வசப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பது மாதிரியாக அவனுக்குள் ஒரு உந்துதல்..!!
போக்குவரத்து தடுப்பை தடுப்பை தாண்டி குதித்தான்.. 'மீரா...!!' என்று கத்திக்கொண்டே சாலையின் குறுக்காக, மீராவை நோக்கி ஓடினான்.. விர்ரென்று சீறிக்கொண்டு வந்த அந்த கருநீல நிற வாகனத்தை கவனிக்க மறந்தான்..!! படுவேகத்தில் வந்த அந்த ஜீப் அசோக் மீது பலமாக மோதியது.. மோதியவேகத்தில் 'கிர்ர்ர்ர்ர்ர்ர்' என்று பிரேக்கடித்து நின்றது..!! ஆகாயத்தில் அசோக் தூக்கி எறியப்பட்டான்.. அவனுடைய தலை தரையில் சென்று நச்சென்று அடித்தது.. முகம் சிமெண்ட் சாலையில் உரசி உராய்ந்தது.. உடல் கடகடவென உருண்டு ஓடியது..!!
"அசோக்..!!!"
பார்த்த காட்சியில் பதறிப்போன மீரா.. அலறிக்கொண்டே அவள்பக்கம் இருந்த போக்குவரத்து தடுப்பில் ஏறி குதிக்கவும்.. அம்பு தைத்த பறவையாய், அவளுடைய காலடியில் சென்று அசோக் சொத்தென்று விழுவதற்கும்.. சரியாக இருந்தது..!!
"அசோக்..!!!"
மீரா அவசரமாய் குனிந்து அசோக்கை கையில் அள்ளிக்கொண்டாள்.. அவனுடைய முகத்தில் சிராய்ப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே தோல் பெயர்ந்து வெளிறிப் போயிருந்தது.. நெற்றியில் அடிப்பட்ட இடத்திலிருந்து சிவப்பாய் ரத்தம் வழிந்தது.. அவனுடைய கண்கள் பாதி செருகிப் போயிருந்தன.. மார்புகள் படக் படக்கென காற்றுக்காக அடித்துக்கொண்டன..!! அத்தனை வேதனையிலும் அவனுடைய முகத்தில் மட்டும் ஒரு அசாத்திய நிம்மதி.. நினைத்ததை சாதித்துவிட்ட நிம்மதி..!!
"ஐயோ.. ரத்தம்..!!!!" மீரா அழுகுரலில் அலறினாள்.
"எ..என்னடா இது.. ஏன்டா இப்படிலாம் பண்ற..??" புலம்பி அரற்றினாள்.
பாதி செருகிய விழிகளுடனும்.. படபடக்கிற உதடுகளுடனும்.. அசோக் இப்போது திக்கி திணறி பேசினான்..!!
"நா..நான்.. நான்தான் சொன்னேன்ல.. ந..நம்ம காதல் நம்மள சேர்த்து வைக்கும்னு..!! ந..நம்மள.. நேருக்கு நேர்.. மீட் பண்ண வச்சிருச்சு பாத்தியா..??"
"ஐயோ.. அசோக்..!!!!" அலறிய மீரா அசோக்கை தன் மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டாள்.
"போ..போயிடாத மீரா.. எ..என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்..!!" கெஞ்சலாக கேட்டுக்கொண்டே.. அசோக் கொஞ்சம் கொஞ்சமாக மயக்கத்துக்கு சென்றான்..!!
"இல்லடா.. போகமாட்டேன்.. உன்னை விட்டு எங்கயும் போகமாட்டேன்..!!"
அவனது தலையை தாங்கிப் பிடித்திருந்த மீராவின் உள்ளங்கையில்.. ஈரமாய் எதுவோ பிசுபிசுக்க.. கையை வெளியே எடுத்து பார்த்தாள்..!! ரத்தம்..!!! அவனுக்கு பின்னந்தலையிலும் அடிபட்டிருக்கிறது என்று மீராவுக்கு புரிய.. நெஞ்சுக்குள் அடைத்த துக்கத்துடன் 'ஓ' வென்று கத்தினாள்..!!!
"யாராவது ஹெல்ப் பண்ணுங்களேன்.. ப்ளீஸ்..!!!"
அங்குமிங்கும் அவசரமாக ஓடிக்கொண்டிருந்த மக்களைப் பார்த்து மீரா கெஞ்சலாக அலற.. அவளுடைய குரல்கேட்டு முதல் ஆளாக உதவிக்கு ஓடிவந்தான் அவன்.. அசோக்கையும் மீராவையும் ஆக்சிடன்டலாக இடித்து தள்ளிய அதே குண்டு ஆசாமி..!!
ஆழ்ந்த மயக்கத்தில் அசோக் இருந்திருந்தாலும்.. அந்த மயக்கம் முழுவதையும் மீராவே நிறைத்திருக்க வேண்டும்..!! அவள் தன்னுடன் இருப்பாளா.. இல்லை விட்டுச் சென்றுவிடுவாளா என்கிற ஏக்கம் அந்த மயக்கமும் முழுவதிலும் விரவிக் கிடந்திருக்க வேண்டும்..!! அதனால்த்தான்.. மயக்கத்தில் இருந்து விடுபட்டதுமே..
"மீரா..!!!"
என்று பதறியடித்துக்கொண்டே எழுந்தான்.. எழுந்ததுமே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.. எதிரே கவலையாக அமர்ந்திருந்த பாரதியும், மணிபாரதியும் காணக்கிடைத்தார்கள்.. ஆனால் அவனுடைய கண்களோ மீராவையே பரிதவிப்புடன் தேடின..!!
"மீ..மீரா.. மீரா எங்க மம்மி.. மீரா.. மீரா..!!"
அவனுடைய பார்வை அங்குமிங்கும் அலைபாய்ந்தது..!! திடீரென எழுந்ததுமே மகன் இவ்வாறு தவிக்கிற தவிப்பை பார்த்ததும்.. பெற்றோர்கள் இருவருக்கும் ஒருவகை திகைப்பு.. அவர்கள் பேச வாயெடுக்கும் முன்பாகவே..
"நா..நான் இங்க இருக்குறேன்..!!"
அசோக்கின் பின்புறமிருந்து மீராவின் குரல் கேட்டது.. எழுந்ததுமே அவளை எதிரே தேடினானே ஒழிய, தனது தலைக்கருகே அவள் அமர்ந்திருக்கிறாள் என்பதை அவன் கவனிக்கவில்லை.. இப்போது அவளது குரல் கேட்டதும், படக்கென திரும்பி பார்த்தான்..!! மீரா தன்னை விட்டுச்செல்லவில்லை, தன்னுடன்தான் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்ததும்.. அவனுடைய முகத்தில் ஒருவித நிம்மதியும் பரவசமும் ஒரே நேரத்தில் பரவின..!!
மீராவோ காதலும், கருணையும், ஏக்கமுமாய் இவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.. அத்தனை உணர்சிகளும் கலந்துகட்டி அவளுடைய முகத்தில் கொப்பளித்தன..!! இரண்டடி நகர்ந்து முன்னால் வந்தவள்.. அசோக்கின் பெற்றோர்கள் அங்கிருக்கிறார்கள் என்பதைக்கூட மறந்துபோய்.. அவனை அப்படியே இறுக்கி அணைத்துக் கொண்டாள்..!! அசோக்கும் அந்த நொடிக்காகத்தான் காத்திருந்தவன் போல.. தனது கரங்களுக்குள் வைத்து அவளை பூட்டிக் கொண்டான்..!!
இணைந்துவிட்ட இளங்காதலர்கள் இருவரையும்.. முதிர்ந்த காதலர்கள் இருவரும் ஓரிரு வினாடிகள் பெருமிதமாக பார்த்தனர்..!! பிறகு முகத்தை திருப்பி ஒருவரை ஒருவர் பார்த்து மெலிதாக புன்னகைத்துக் கொண்டனர்..!! இருவருக்கும் இப்போது ஒரு முழு நிம்மதி வந்திருக்க.. 'இடத்தை காலி செய்வது நல்லது' என்று புரிந்துகொண்டு.. அந்த அறையை விட்டு வெளியேறினர்..!!
அசோக்கும் மீராவும் பேசிக்கொள்ளவே இல்லை.. இறுக்கி அணைத்துக் கொண்டவர்கள், அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தனர்..!! ஒருவருடைய கைவிரல்கள் அடுத்தவரின் முதுகைப் பற்றி பிசைந்தன.. ஒருவருடைய மார்புத்துடிப்பை அடுத்தவரின் மார்புகொண்டு உணர முடிந்தது.. ஒருவருடைய சுவாசத்தில் அடுத்தவருடைய மூச்சுக்காற்று கலந்திருந்தது..!! செயலற்றுப்போய் அவர்கள் அவ்வாறு அமர்ந்திருந்தாலும்.. அவர்களுடைய உதடுகள் மட்டும் ஒரே வாக்கியத்தை திரும்ப திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தன..!!
"ஐ லவ் யூடா.. ஐ லவ் யூ..!!"
நீண்ட நேரத்திற்கு பிறகு.. மகனும் மருமகளும் ஓரளவு பேசி ஓய்ந்திருப்பார்கள் என்கிற நம்பிக்கையுடன், பாரதி அந்த அறைக்குள் மீண்டும் நுழைந்தாள்..!! அவர்களோ இன்னும் அதே நிலையில் அமர்ந்திருக்க.. ஒருகணம் திகைத்துப் போனாள்.. பிறகு..
"ம்க்கும்..!!" என்று சப்தமெழுப்பி அவர்களை இந்த உலகுக்கு இழுத்து வந்தாள்..!!அணைத்திருந்தவர்கள் உடனே விலகிக் கொண்டனர்.. அசோக் அசட்டுத்தனமாய் ஒரு புன்னகையை சிந்தினான்.. மீரா வெட்கப்பட்டு தலையை குனிந்துகொண்டாள்..!!
"அவனுக்கு சாப்பிட குடுக்கலாம்னு சொல்லிட்டாங்கம்மா.. அதான் சாதம் கலந்து எடுத்துட்டு வந்தேன்..!!"
"எங்கிட்ட குடுங்க அத்தை.. நான் பாத்துக்குறேன்..!!"
சொன்ன மீரா.. பாரதியின் கையிலிருந்த பவ்லை வாங்கிக்கொண்டாள்..!! 'தனக்கப்புறம்.. தன் மகனுக்கு.. தன்னிடத்தில் இன்னொருத்தி..' என்பது மாதிரியான உணர்வு பாரதிக்கு தோன்ற.. ஸ்னேஹமான ஒரு புன்னகையுடன் மீராவின் கேசத்தை வருடிக் கொடுத்தாள்..!! இருவரையும் மீண்டும் தனிமையில் விட்டு.. அந்த அறையினின்றும் அகன்றாள்..!!
பருப்புடன் சேர்த்து கூழ் மாதிரி கரைக்கப்பட்டிருந்த சாதம்.. அதை ஸ்பூனில் அள்ளி மீரா நீட்ட, அசோக் ஆசையாக வாய் திறந்து வாங்கிக்கொண்டான்.. மீராவின் முகத்தை காதலாக பார்த்துக்கொண்டே வாயை அசைபோட்டான்..!! அவனுடைய தலையில் போடப்பட்டிருந்த கட்டு.. நெற்றி, கன்னம், கை, முழங்கால் என்று ஆங்காங்கே பஞ்சு வைத்து ஒட்டப்பட்டிருந்த ப்ளாஸ்டர்கள்.. எதையும் கவனிக்கிற நிலையில் அவன் இல்லை.. அவனது கவனம் முழுதும் மீராவை ஆசையும், ஏக்கமுமாக பார்ப்பதிலேயே இருந்தது..!!
"ரொம்ப பயந்துட்டேன் மீரா.. எங்க மறுபடியும் உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு..!!"
"ம்ம்.. தெரிஞ்சது..!! ஜீப் வர்றதுகூட கண்ணு தெரியாம அப்படியே தாண்டி குதிச்சு ஓடி வர்றான்.. லூசு..!!"
"ஹ்ஹாஹ்..!!"
"சிரிக்காத..!! அப்படி என்ன அவசரம்..?? உன்னை அந்தக்கோலத்துல பாத்தப்போ எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா..?? கொஞ்ச நேரம் என் உசுரே எங்கிட்ட இல்ல அசோக்..!! அழுறேன்.. அலர்றேன்.. என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல..!! நல்லவேளை.. ஒரு நல்ல மனுஷன் ஹெல்ப் பண்ணாரு.. உடனே உன்னை ஹாஸ்பிடல்ல சேர்க்க முடிஞ்சது..!! பவானி அக்கா ஆபீஸ்க்கு கால் பண்ணினேன்.. எல்லாரும் உடனே கெளம்பி வந்துட்டாங்க..!! இப்போ வெளில இருக்காங்க..!!"
"ம்ம்..!!"
"அவ்வளவு பிடிக்குமாடா என்னை..??" மீரா ஏக்கமாக கேட்க,
"ம்ம்.. ரொம்ப ரொம்ப பிடிக்கும்..!!" அசோக்கின் குரல் காதலாக ஒலித்தது.
"நெனச்சதை சாதிச்சுட்டேல நீ..?? சொன்ன மாதிரியே என் எதிர வந்து நின்னுட்டல..?? எப்படியோ கஷ்டப்பட்டு என்னை தேடிக் கண்டுபிடிச்சுட்ட..!!"
"நான் கண்டுபிடிக்கல.. நம்ம காதல்தான் உன்னை காட்டிக் குடுத்துடுச்சு..!! உன் மேல இருக்குற காதலாலதான், உன் கண்ணை வச்சே உன்னை.."
"ம்ம்.. அத்தை எல்லாம் சொன்னாங்க..!! எப்படிலாம் என்னை தேடின.. என்னல்லாம் கஷ்டப்பட்டேன்னு..!! தூக்க மாத்திரை டப்பாலாம் தூக்கிட்டு போனியாம்..??"
"ஓ.. அதையும் சொல்லிட்டாங்களா..??"
"அப்படியே அறையணும்..!!"
"அறைஞ்சுக்கோ..!!"
அசோக் கூலாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மீரா பாய்ந்து சென்று அவனது உதடுகளை கவ்விக் கொண்டாள்..!! அவன் சற்றும் எதிர்பார்த்திராத வகையில்.. ஒரு அழுத்தமான, ஆவேசமான முத்தம்..!! அவனுக்கு மூச்சுத் திணறிப் போகிற மாதிரி.. அவனது உதட்டு ஈரத்தை அப்படியே உறிஞ்சி எடுத்தாள்..!! ஆரம்பத்தில் திகைத்த அசோக்.. அப்புறம் தனது உதடுகளை அவளுக்கு சுவைக்க கொடுத்துவிட்டு.. அதில் விழைந்த இனிப்பினையும், இன்பத்தினையும் மட்டும் அமைதியாக ரசித்துக் கொண்டிருந்தான்..!!
அரை நிமிடம் கழித்துத்தான் அவர்களது உதடுகள் தனித்தனியே பிரிந்தன..!! மீரா அசோக்கின் முகத்தையே இன்னும் காதலாக பார்த்துக்கொண்டிருக்க.. அவன் தனது உதடுகளை மடித்து நாக்கினால் சுவைத்து பார்த்து.. கண்ணிமையை சிமிட்டி குறும்பாக சொன்னான்..!!
"ச்சோ.. ச்ச்வீட்..!!"
"ச்சீய்.. போடா..!!"
தனது பழைய டயலாக்கை அசோக் நினைவுபடுத்த.. மீராவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து போயின..!! இருவரும் இறுக்கம் தளர்ந்து சிரித்துக் கொண்டார்கள்..!!
"ம்ம்.. இதுதான் உங்க ஊர்ல அறையுறதா..??" அசோக் கேலியாக கேட்க,
"ஹ்ம்ம்ம்ம்... ஆ..மாம்..!!" மீராவும் குறும்பாகவே சொன்னாள்.
"வாவ்..!! இந்த மாதிரி உன்கிட்ட நெறைய அறை வாங்கணும் போல இருக்கே..??"
சொல்லிக்கொண்டே அசோக் உதடுகளை குவித்து மீராவை நெருங்க, அவள் அவனது நெஞ்சில் கைவைத்து அவனுடைய முன்னேற்றத்தை தடுத்தாள்.
"நோ நோ..!! கல்யாணம் ஆகுற வரை.. ஒரு நாளைக்கு ஒரு அறைதான்.. இன்னைக்கு கோட்டா ஓவர்..!!" மீரா கறாராக சொல்ல,
"ம்ஹ்ம் ம்ஹ்ம் ம்ஹ்ம்..!!" அசோக் சிறுபிள்ளையாக சிணுங்கினான்.
அவன் அவ்வாறு சிணுங்கிக் கொண்டிருந்தபோதே..
"இன்று மாலை, சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக, மர்ம நபர் ஒருவர்..."
அறைக்குள் இருந்த டிவியில் ந்யூஸ் வாசிக்கப்பட... இருவரும் கவனம் கலைந்து, டிவியை திரும்பி பார்த்தார்கள்..!! அசோக்தான் கேஷுவலான குரலில் ஆரம்பித்தான்..!!
"இவங்களுக்கு இதே வேலையா போச்சுல மீரா.. யாராவது ஃபோன் பண்ணி எதையாவது சொன்னா.. அதை அப்படியே நம்பிடவேண்டியது.. ஆர்ப்பாட்டம் பண்ணவேண்டியது..!! பாரு.. எல்லாரையும் என்ன பாடு படுத்திருக்காங்கன்னு..!!"
"அதுக்காக.. அந்த காலை அப்டியே கண்டுக்காம விட்ருக்கனும்னு சொல்றியா..?? ஏற்கனவே.. சென்னைல டெரரிஸ்ட் அட்டாக் பண்ண ப்ளான் பண்ணிருக்காங்கன்னு.. இண்டெலிஜண்ட் ரிப்போர்ட் வேற வந்திருக்கு..!! இப்படிப்பட்ட நேரத்துல இந்த மாதிரி ஃபோன் கால்லாம் எப்படி கேஷுவலா எடுத்துக்குறது..?? ஏர்ப்போர்ட் அத்தாரிட்டி பண்ணினது சரிதான்..!!"
இயல்பான குரலில் சொல்லிவிட்டு மீரா சாதம் எடுத்து ஸ்பூனில் நீட்ட.. அசோக் வாயை திறக்காமல் இவளையே குறுகுறுவென பார்த்துக்கொண்டிருந்தான்.. அவனுடைய உதடுகளில் வேறு ஒரு குறும்புப் புன்னகை வழிந்தது..!! அவனது செய்கைகளின் அர்த்தம்.. ஆரம்பத்தில் மீராவுக்கு புரியவில்லை.. அசோக்கையே குழப்பமாக பார்த்தாள்..!! அப்புறம் அதன் அர்த்தம் புரிந்ததும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒரு திகைப்பு.. அவளது உதடுகள் 'ஓ'வென்று குவிந்துகொண்டன..!!
"ஏய்ய்ய்.. ஏர்ப்போர்ட்ல பாம் வச்சிருக்காங்கனு கால் பண்ணது நீதானா..??"
"ஹேய்ய்ய்.. சத்தம் போடாத..!! போலீஸ்க்கு தெரிஞ்சதுன்னா.. அப்புறம் என்னை புடிச்சுட்டு போய்டுவாங்க..!!"
"அடப்பாவி..!!! ஏண்டா அப்படி பண்ணின..??" மீரா இப்போது குரலை தாழ்த்திக் கொண்டாள்.
"பின்ன என்ன பண்றது.. நீ பாட்டுக்கு பத்து நிமிஷத்துல ஃப்ளைட்டுன்னு போனை கட் பண்ணிட்ட..!!"
"ப்ச்.. நான் ஃபோனலாம் கட் பண்ணல.. எருமை மாடு மாதிரி ஒருத்தன், என்மேல வந்து இடிச்சுட்டான்.. செல்ஃபோன் செகண்ட் ஃப்ளோர்ல இருந்து கீழ விழுந்துடுச்சு..!!"
"ஓ..!! எனக்கு எப்படி அதுலாம் தெரியும்.. எப்போவும் போல இப்போவும் நீ எஸ்கேப் ஆக நெனைக்கிறேன்னு நான் நெனச்சுட்டேன்..!! கொஞ்சநேரம் என்ன பண்றதுனே எதுவும் புரியல.. அப்புறந்தான் அந்த அட்வர்டைஸ்மன்ட் கண்ணுல பட்டுச்சு..!!"
"என்ன அட்வர்டைஸ்மன்ட்..??"
"அவசர தேவைக்கு அணுகவும்னு ஏர்ப்போர்ட் அத்தாரிட்டியோட அட்வர்டைஸ்மன்ட்..!! உடனே அணுகிட்டேன்..!!" அசோக் அப்பாவியாக சொல்ல, மீராவுக்கு சிரிப்பு வந்தது.
"ஹஹாஹா..!!! லூசு..!!!!"
"ஆமாம்.. உன் மேல..!!"
அசோக் அவ்வாறு பட்டென சொல்லவும்.. சிரித்துக்கொண்டிருந்த மீரா அமைதியானாள்..!! அவனுடைய முகத்தையே ஆசையாகவும், காதலாகவும் பார்த்தாள்.. அசோக்கும் மீராவை அதே மாதிரி ஒரு பார்வை பார்த்தான்..!! ஒருசில வினாடிகள்.. அப்புறம் அசோக் திடீரென கேட்டான்..!!
"நித்தியா உன் பேரு..??"
"ம்ம்..!! அம்மாவுக்கு சின்னு.. மத்தவங்களுக்கு நித்தி.. முழுப்பேர் ஸ்ரீநித்தி..!!"
"ஸ்ரீநித்தியா..?? ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கு..!!"
"ஹாஹா.. யெஸ்..!!"
மெலிதாக சிரித்த மீரா, பிறகு அசோக்கின் கண்களை ஒருமாதிரி குறுகுறுவென பார்த்தவாறே,
"எனக்கு இன்னொரு பேரு கூட இருக்கு..!!" என்றாள் பாட்ஷா ரஜினி ஸ்டைலில்.
"இன்னொரு பேரா.. என்னா அது..??"
"உனக்கு ரொம்ப பழக்கப்பட்ட பேர்தான்..!!"
"என்னன்னு சொல்லு..!!"
"ஸ்ரீனி..!!"
"ஸ்ரீனியா..??" அசோக் இப்போது குழப்பமாக நெற்றியை சுருக்கினான்.
"யெஸ்.. ஸ்ரீனி..!! ஸ்ட்ரைக் ஆகுதா..??"
மீரா கேட்டுவிட்டு கண்சிமிட்ட.. அசோக் இப்போது சற்றே நிதானித்தான்..!! புத்தியை கூர்மையாக்கி தீவிரமாக யோசித்தான்.. ஒரு சில வினாடிகளிலேயே அவனுடைய மூளையில் பளிச்சென்று ஒரு மின்னல்..!!
"ஹேய்.. என் டாடியை திட்டி லெட்டர் அனுப்புற அந்த.. அந்த லவ் பெயிலியர் ஃபேன்.. அது.. அந்த ஸ்ரீனியா..??"
"ஹாஹா.. எக்ஸாக்ட்லி..!!" மீரா கலகலவென சிரிக்க, அசோக் அதிசயித்துப் போனான்.
"அடிப்பாவி..!! அப்படினா.. அந்த லெட்டர்ல.."
"யெஸ்.. என் வீட்டு அட்ரஸ் இருக்கும்..!!"
அசோக் தலையை பிடித்துக்கொண்டான்..!! 'இவளுடைய முகவரி இத்தனை நாளாய் என் வீட்டு அலமாரியிலேயே இருந்திருக்கிறது.. அது புரியாமல் நான் உலகம் முழுக்க இவளை சல்லடை போட்டு தேடிக்கொண்டிருந்திருக்கிறேன்..!! இப்படியும் நடக்குமா..??' அசோக்கிடம் இப்போது ஒருவகை சலிப்பும், மீரா மீதான செல்லக்கோவமும்..!! அந்த செல்லக்கோவத்துடனே அவளை திட்டினான்..!!
"ராட்சசி.. ராட்சசிடி நீ..!!!"
"ஹாஹாஹாஹா..!!!" மீரா அழகாக சிரித்தாள்.சென்ற அத்தியாத்திலேயே கதை முடிந்துவிட்டது..!! அறுசுவை விருந்தை பருகி முடித்த பின்பும்.. இறுதியில் கொஞ்சம் இனிப்பு சுவைக்க விரும்புவர்களுக்காக மட்டுமே இந்த அத்தியாயம்..!!
அடுத்தநாளே அசோக் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டான்..!! 'பின்னந்தலையில் அடிபட்டு அதிகப்படியான ரத்தம் வெளியானதால், ஒரு நீண்ட மயக்கம்..!! காயத்திற்கு கட்டு போட்டாயிற்று.. சிராய்ப்புகளுக்கு மருந்து பூசியாயிற்று..!! ஊடு கதிர்ப்படம் ஆராய்ந்து.. உட்காயம் ஏதுமில்லையென உறுதியும் செய்தாயிற்று..!! இனி அச்சப்படுவதற்கு அவசியம் ஒன்றும் இல்லை.. இரண்டு நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார்..!!' என்று சிகிச்சையளித்த மருத்துவர் தெளிவாகவே சொல்லிவிட்டார்..!!
சவூதியில் வேலைக்கான தனது ஒப்பந்தத்தை.. முறித்துக்கொள்வதாக மீரா முடிவெடுத்தாள்..!! அவளுக்கு வேலையும் விசாவும் ஏற்பாடு செய்திருந்த கன்ஸல்டன்ஸிக்கு.. நஷ்ட ஈடாக ஒரு கணிசமான தொகையை அழவேண்டி இருந்தது..!! கன்ஸல்டன்ஸியின் வாயை அடைக்கிற பணியை.. மீராவுக்கு அதிக சிரமம் தராமல், மணிபாரதியே கவனித்துக் கொண்டார்..!!
சவூதியில் உபயோகமாகும் என்று கருதி, மீரா வாங்கிய அந்த புத்தகம்.. திறக்கப்படாமல் மூடியே இருந்தது..!! செக்கின் செய்யப்பட்ட அவளுடைய ட்ராவல் பேக் மட்டும்.. ரியாத் வரை பயணித்து.. விமான நிலையத்தின் பொருள் பாதுகாப்பு அறையை நன்றாக சுற்றிப்பார்த்துவிட்டு.. ஒருவாரம் ஆனதும் வேறொரு ஃப்ளைட் பிடித்து சென்னை திரும்பியது..!!
மீராவின் வீடு அபகரிக்கப்பட்டதால்.. அசோக்கின் வீட்டிலேயே அவள் தங்கிக்கொள்ளுமாறு ஆகிப்போனது..!! சங்கீதாவின் அறையிலேயே அவளுக்கென்று ஒரு எக்ஸ்ட்ரா படுக்கை..!! மீரா அசோக்கிடம் சொன்ன நான்கு பெயர்களுடன்.. மீரா என்பதுமே அவளுக்கு ஐந்தாவது பெயராக மாறிப் போனது..!! அசோக்கின் குடும்பத்தினர்.. நித்தி என்று அழைப்பதைவிட.. மீரா என்றே பெரும்பாலும் அழைத்தனர்..!!
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
அசோக்கின் வீட்டில்.. மீராவை எல்லோரும் உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..!! அசோக்கிற்கு தான் பொருத்தமானவள் இல்லை என்று அவளுக்கு ஒரு நினைப்பிருந்தது அல்லவா..?? அந்த நினைப்பினை அவள் அறியாமலே தவிடுபொடியாக்க வேண்டும் என்பதுதான் அவர்களது திட்டமாக இருந்தது..!! சிற்சிறு உரையாடல்கள்.. சிற்சிறு நடவடிக்கைகள்.. சிற்சிறு அணுகுமுறைகள் என.. எல்லாவற்றின் மூலமாகவும்.. 'அசோக்கிற்கு மிகப் பொருத்தமானவள் அவள்தான்..' என்பதை அவளுக்கு உணர்த்திக்கொண்டே இருந்தனர்..!!
"உன்னை மாதிரி அகம் புடிச்ச கழுதைக்குலாம் மீரா மாதிரி ஆளுதான் சரி.. அவதான் பதிலுக்கு பதில் திருப்பி குடுப்பா..!!" - பாரதி மகனை செல்லமாக கடிந்துகொள்வாள்.
"இது உனக்கு சொந்தமானது மீராக்கண்ணு.. உன் கைல இருக்கனும்ன்றதுதான் விதி.. இனி எப்போவும் இதை கழட்டக் கூடாது.. சரியா..??" - அசோக்கின் பாட்டி அந்த பரம்பரை மோதிரத்தை, மீராவின் விரலிலேயே மீண்டும் மாட்டிவிட்டாள்.
"இது நான் எழுதுன லேட்டஸ்ட் நாவல்மா.. படிச்சு பாரு..!! ஹ்ம்ம்ம்ம்.. பிடிக்கலன்னா பிடிக்கலன்னு டீசண்டா சொல்லி பழகனும்.. கன்னாபின்னான்னு திட்டலாம் கூடாது.. மாமா பாவம்ல..!! ஹாஹா..!!" - சிரிப்புடனே மருமகளின் கையில் புத்தகத்தை திணித்து செல்வார் மணிபாரதி.
"எல்லாம்.. மீரா இந்த வீட்டுல அடி எடுத்து வச்ச நேரந்தான்..!!" - காதல் நாய்களுக்கு வாரிசு பிறந்தது முதல்.. காவிரி அணையில் தண்ணீர் திறந்தது வரை.. நடக்கிற நல்ல காரியங்கள் எல்லாவற்றையும்.. மீராவின் வருகையுடன் முடிச்சு போட்டார் அசோக்கின் தாத்தா..!!
அவர்களுடைய மாசற்ற அன்பு மீராவின் மனதை வெகுவாக மாற்றியது..!! தான் வாழவேண்டிய இடம் இதுதான் என்பதை.. அவளுடைய உள்ளமே மெல்ல மெல்ல நம்ப ஆரம்பித்தது.. இந்த இன்பம் என்றும் வேண்டும் என்று ஏங்க ஆரம்பித்தது..!! அசோக்கை விட்டு பிரிந்து செல்ல நினைத்தது, எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று.. அவளே விரைவில் புரிந்துகொண்டாள்..!!
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
கிஷோரின் பெற்றோர் அசோக்கின் வீட்டுக்கு வருகை தந்திருந்தனர்..!! 'இந்த வீட்டுக்கு மருமகன்னா.. எங்களுக்கு நீ மக மாதிரிதான்..' மீராவின் கன்னத்தை பற்றி அன்பை பொழிந்தாள் கிஷோரின் அம்மா..!! வந்தவர்கள் உண்டுமுடித்து கல்யாணப் பேச்சை எடுத்தபோது..
"எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்.. நான் டைரக்டரா ஆனப்புறந்தான் எல்லாம்..!!" அசோக் திடீரென குண்டை தூக்கிப் போட்டான்.
"ஆமாம்..!! நானும் ஒரு படம் தனியா சினிமாட்டோக்ராஃபி பண்ணப்புறந்தான் கல்யாணம் பண்ணிப்பேன்..!!" - அசோக்குடன் இணைந்துகொண்டான் அருமைத்தோழன் கிஷோர்.
இருவரையும் சமாதானம் செய்ய முயன்று.. இரண்டு குடும்பத்தினரும் தோற்றுப் போயினர்..!! வேறு வழியில்லாமல்.. 'எப்படியும் போங்க' என்று.. அவர்களுடைய எண்ணம்போலவே விட்டுவிட்டனர்..!!பிறகு.. வேறொரு சந்தர்ப்பத்தில்.. தனிமையில் இருக்கையில்.. அசோக்கின் இடுப்பை இறுக்கிக்கொண்டு மீரா பெருமிதமாக சொன்னாள்..!!
"ஆமால்ல.. டைரக்டர் ஆகணும்ன்றது உன் கனவுல.. உன் லட்சியம்ல..?? நீ சொன்னது சரிதான் அசோக்.. உன் லட்சியத்துக்கு என்னால எந்த டிஸ்டர்பன்ஸும் இருக்கக்கூடாது..!! நீ டைரக்டர் ஆகுற வரை நான் வெயிட் பண்றேன்டா..!!"
"ஐயையே..!! லட்சியம், கனவு.. அதுலாம் ஒரு எழவும் இல்ல..!!" அசோக்கோ முகத்தை சுளித்தான்.
"எ..என்ன சொல்ற நீ..?? அ..அப்புறம்.. அப்புறம் எதுக்கு அத்தை, மாமாட்ட அப்படி சொன்ன..??"
"உடனே கல்யாணம் வேணாம்னு தோணுச்சு.. அதான்..!!"
"அதான் ஏன்னு கேக்குறேன்..??"
"எப்படி சொல்றது.. ம்ம்ம்ம்ம்... நாம இதுவரை சரியாவே லவ் பண்ணல மீரா.. நாம பழகுன காலத்துலலாம், எப்பப்பாரு உன்கிட்ட அடியும் திட்டும்தான் வாங்கிட்டு இருந்திருக்கேன்.. ரொமான்ஸ்ன்றது சுத்தமா இல்ல..!! இப்போத்தான் நீ அந்த ரொமான்ஸ் மூட்க்கே வந்திருக்குற.. இப்போப்போய் உடனே கல்யாணம்னா..?? அதான்.. கொஞ்சநாள் இப்படியே ஜாலியா ரொமான்ஸ் பண்ணிட்டு.. அப்புறமா மேரேஜ் பண்ணிக்கலாம்.. என்ன சொல்ற..??"
அசோக் இளிப்புடன் கேட்க.. மீரா அவனை உர்ரென்று முறைத்தாள்..!! சற்றுமுன் ஆசையாக தனது தோள் மீது எடுத்துப் போட்டிருந்த அவனது கையை.. இப்போது வெடுக்கென்று விசிறியடித்தாள்..!!
"சங்கீதா சொல்றது கரெக்ட்தான்டா.. சரியான கேடிப்பயடா நீ..!!"
"ச்சேச்சே.. அப்டிலாம் இல்ல மீரா..!!"
"ஹ்ம்ம்.. அந்தவகைல கிஷோர் அண்ணாவாவது லட்சியம், கனவுன்னு ஒரு குறிக்கோளோட இருக்குறார்..!!"
"ஹாஹா.. யார் சொன்னா..?? அவனுக்கும் அதுலாம் ஒன்னும் கெடையாது..!!"
"ஓ..!! அப்புறம் எதுக்கு அவரும் மேரேஜை தள்ளிப்போட்டாரு..??"
"பின்ன..?? மேரேஜ் ஆறதுக்கு முன்னாடியே.. இவ அவனைப்போட்டு இந்த காய்ச்சு காய்ச்சுறா.. மேரேஜ் மட்டும் ஆகிட்டா கேக்கவே வேணாம்..!! எவ்வளவுநாள் தள்ளிப் போகுதோ அவ்வளவுநாள் அவன் தலை தப்பிச்சது..!! அதான் பையனும் எனக்கு ஜால்ரா போட்டான்..!!"
"அடப்பாவிங்களா..!!!!!" மீரா வாயை பிளந்தாள்.
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
சங்கீதாவின் அறை மீராவின் அறையுமாகவும் ஆகிப்போனது என்று சொன்னேன் அல்லவா..?? சில சமயங்களில்.. அசோக் வந்து தங்கையின் அறைக்கதவை தட்டுவான்..!! கதவு திறக்கிற சங்கீதா கடுப்புடன் அண்ணனை முறைப்பாள்..!!
"என்ன வேணும்..??"
"மீரா இருக்குறாளா சங்கு..??" அசோக் குழைவான்.
"அண்ணி தூங்குறாங்க..!!"
"கொஞ்சம் எழுப்பேன்..!!"
"எதுக்குன்னு சொல்லு..!!"
"பேசணும்..!!"
"நைட் பதினோரு மணிக்கு என்ன பேச்சு வேண்டி கெடக்கு..?? காலைல பேசிக்கலாம்.. ரூமுக்கு போ..!!"
"கொஞ்ச நேரம் சங்கு..!!"
"ப்ச்.. சொல்றேன்ல..?? நைட் பத்து மணிக்கு மேல உன்னை அண்ணி பக்கத்துல விடக்கூடாதுன்னு மம்மியோட ஆர்டர்..!! போ போ.. எல்லாம் காலைல பேசிக்கலாம்..!!"
"ப்ளீஸ்டி..!!"
"இப்போ போறியா இல்லையா..??"
"ஹேய்.. கொஞ்ச நேரம்..!!"
"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் புள்ளைய..!!"
சங்கீதா அந்தமாதிரி சப்தம் எழுப்பியதும்.. அசோக் அலறியடித்துக்கொண்டு படிக்கட்டை நோக்கி ஓடுவான்..!! கதவை மூடிவிட்டு சங்கீதா படுக்கையில் சரிகையில்.. பக்கத்தில் படுத்திருக்கும் மீரா அவளுடைய புஜத்தை சொறிவாள்..!!
"சொல்லுங்க அண்ணி..!!"
"உங்க அண்ணனை பாத்தா பாவமா இருக்கு சங்கி..!!"
"அதுக்கு..??"
"நான்வேணா கொஞ்சநேரம் போய் பேசிட்டு வரனே..??"
மீரா ஏக்கமாக கேட்க, சங்கீதா அவளையும் ஒரிரு வினாடிகள் முறைப்பாள்.. பிறகு காட்டு கத்தலாக கத்துவாள்..!!
"மம்மீஈஈஈ...!! இங்க வந்து பாரு உன் மருமகள.!!"
அவ்வளவுதான்.. மீரா போர்வையை இழுத்து போர்த்திக்கொண்டு சுருங்கிப் போவாள்..!!
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
அசோக்கும் மீராவும் ஒன்றிணைந்து ஒருவாரம் கழித்து..
அப்போதுதான் ரெட்ஹில்ஸ் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வீடு திரும்பியிருந்த அசோக்.. வந்ததுமே அலமாரியை துழாவி அன்றைய நாளிதழை வெளியே எடுத்தான்..!! காலையிலேயே வாசிக்காமல் விட்டதற்காக தன்னைத்தானே கடிந்துகொண்டு.. கவனமுடன் இப்போது அந்தச்செய்தியை வரிவரியாக வாசித்தான்..!!
"அப்படி என்ன இன்ட்ரஸ்டிங் ந்யூஸ்..??"
பின்பக்கம் இருந்து மீராவின் குரல் கேட்டதும்.. அசோக் பதறிப் போனான்..!! அவசரமாக அந்த நாளிதழை தனது முதுகுப்புறமாக மறைத்தவன்.. மீராவை ஏறிட்டு திணறலும், குழறலுமாய் சொன்னான்..!!
"ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல மீரா..!!"
அவனுடைய திருட்டு முழியே, ஏதோ விஷயம் இருக்கிறது என்று மீராவுக்கு காட்டி கொடுத்துவிட்டது. குழப்பமாக புருவத்தை நெறித்தாள்.
"எ..என்னாச்சு.. ஏன் ந்யூஸ் பேப்பரை மறைக்கிற..??"
"நா..நான் எங்க மறைச்சேன்.. நா..நான் சும்மா.."
"இல்ல.. பொய் சொல்ற.. எதையோ மறைக்கிற.. ந்யூஸ் பேப்பரை குடு..!!"
"ப்ச்.. அதான் ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"
"ம்ஹூம்.. ஏதோ இருக்கு.. குடு அதை..!!"
"இல்ல மீரா..!!"
"ப்ச்.. குடுன்றேன்ல.. குடு..!!"
அசோக்கின் கையிலிருந்து அந்த நாளிதழை மீரா வலுக்கட்டாயமாக பிடுங்கினாள். முதல் பக்கத்திலேயே வெளியாகிருந்த அந்த செய்தியின் மீது பார்வையை வீசினாள்.
"ரெட்ஹில்ஸ் ரெட்டைக் கொலை வழக்கில் துப்பு துலங்கியது..!! கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகள் போலீசாரால் கைது..!!"
செய்தித் தலைப்புக்கு அருகிலேயே.. கைது செய்யப்பட்ட அந்த ஐந்து பேர்களின் பாஸ்ப்போர்ட் அளவு புகைப்படங்களும் அச்சிடப் பட்டிருந்தன..!! மீரா முணுமுணுப்பான குரலில் விரிவான செய்தியை மேலும் வாசித்தாள்..!!
"சென்னை நெற்குன்றத்தை சேர்ந்தவர் காசி (வயது 31). தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கல்லூரி மாணவர்களுக்கும், பணக்கார இளைஞர்களுக்கும் சட்ட விரோதமாக விநியோகிப்பதை தொழிலாக கொண்டவர். பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்தவர். கடந்த மாதம் 28-ந்தேதி, காசியும் அவரது நண்பர் விஜயசாரதி (வயது 27) என்பவரும், ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு விருந்தினர் மாளிகையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர். இது தொடர்பாக ரெட்ஹில்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர். தீவிரமாக நடத்தப்பட்ட புலன்விசாரணையில் இரண்டு வாரங்களுக்கு பிறகு துப்பு துலங்கியிருக்கிறது. கொடைக்கானலில் பதுங்கியிருந்த கொலையாளிகளும் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.”
"கைது செய்யப்பட்டவர்களில் முக்கிய குற்றவாளியான அல்ஃபோன்ஸ்தான், வழக்கமாக காசிக்கு போதை மருந்து சப்ளை செய்பவர். இருவருக்கும் சில மாதங்களாகவே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்திருக்கிறது. காசி தனக்கு நாற்பது லட்ச ரூபாய் பணம் தர வேண்டி இருந்ததாகவும், அதைத்தராமல் அவர் நீண்ட நாட்களாக ஏமாற்றி வந்ததாகவும், அந்த ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து காசியை கொலை செய்ததாகவும் அல்ஃபோன்ஸ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இந்தப் பிரச்சினையில் சற்றும் சம்பந்தம் இல்லாத விஜயசாரதியும், காசியை கொலை செய்ய வந்தவர்களிடம் சிக்கி தானும் கொலையானதுதான் மிகவும் பரிதாபகரமான.." வாசித்தது போதுமென்று இடையில் நிறுத்திய மீரா,
"ஹ்ம்ம்.. இப்போவாவது ஒருவழியா கண்டுபிடிச்சாங்களே.. இந்தப் பிரச்சினையில தேவை இல்லாம நான் மாட்டிப்பனோன்னு ரொம்பவே பயந்துட்டேன் அசோக்..!! என் பக்கம் மட்டும் சந்தேகம் திரும்பி இருந்துச்சுன்னு வச்சுக்கோ.. அவ்வளவுதான் நான்.. காலி..!!" என்று நிம்மதியான குரலில் சொன்னாள்.
"ஏன் அப்டி சொல்ற..??"
"பின்ன என்ன..?? நான் கொலை பண்ணலைன்னு உன்னை நம்பவைக்கவே அவ்வளவு கஷ்டப்பட்டேன்.. போலீஸ்ட்ட என்னத்த சொல்லி நம்ப வைக்கிறது..??"
"என்ன பண்ண சொல்ற.. அந்த எடத்துல உன் பென்டன்ட் பாத்ததும் எனக்கு அப்படித்தான் தோணுச்சு..!!"
"எப்படி.. நான்தான் ரெண்டு பேரையும் கொலை பண்ணிருப்பேன்னா..??"
"ஆமாம்..!!"
"ஹ்ம்ம்.. ஆக்சுவலா அதுதான் நடந்திருக்கும்.. அந்தப்பொறுக்கியை போட்டுத்தள்ற ப்ளான்லதான் அங்க போனேன்.. அவ்ளோ ஆத்திரம் எனக்கு..!! ஆனா.. ஒரு அஞ்சு நிமிஷ கேப்புல.. எனக்கு முன்னாடி இவனுக முந்திக்கிட்டானுக..!! வீட்டுக்குள்ள நுழையுறேன்.. அந்தப்பொறுக்கி அப்படியே ரத்த வெள்ளத்துல கெடக்குறான்.. கூடவே இந்த காசி வேற.. செம ஷாக் எனக்கு..!!”
"ம்ம்..!!"
“சரி வந்ததுதான் வந்தோம்.. செல்ஃபோனை மட்டும் எடுத்துட்டு எஸ்கேப் ஆகலாம்னு வெளிய வந்தா.. உன் கன்ஃப்யூசன் வேற..!!"
"என் கன்ஃப்யூசனா..??"
"ஆமாம்.. அந்த எஸ்.பியும் நீயும் ஜோடி போட்டு நடந்து வர்றீங்க..!! எனக்கு கொஞ்ச நேரம் என்ன பண்றதுன்னே புரியல..!! அப்புறம் பட்டுன்னு சுதாரிச்சு.. பின்பக்கமா ஓடி எஸ்கேப் ஆனேன்..!! செமையா கொழப்பி விட்டுட்ட என்னை..!!"
"ம்க்கும்..!! நீ என்னை கொழப்பி விட்டதை விடவா..??"
"ஹாஹா..!! ஆனா ஒன்னு.. நீ பண்ணுன கொழப்பத்துல ஒரே ஒரு நல்ல காரியம் நடந்திருக்கு..!!"
"என்ன..??"
"ஹ்ம்ம்.. தங்கம் விக்கிற வெலைல.. ஆறு கிராம் இப்படி அநியாயமா தொலைஞ்சு போச்சேன்னு ரொம்ப கவலைல இருந்தேன்.. உன் மூலமா அது என்கிட்டயே திரும்ப வந்து சேர்ந்துடுச்சு..!!"
புன்னகையுடன் சொன்ன மீரா.. தனது வலது கையை உயர்த்தி அசைத்துக்காட்ட.. அந்தக்கையை தழுவியிருந்த புதியதொரு ப்ரேஸ்லட்டில்.. அந்த இதயவடிவ பென்டன்ட் ஊசலாடியது..!! அவள் சொன்னதைக்கேட்டு அசோக் சிரிக்க.. அவனுடன் சேர்ந்து மீராவும் சிரித்தாள்..!! ஒருசில வினாடிகள் மத்தாப்பு சிதறலாய் சிரித்தவள்.. திடீரென ஞாபகம் வந்து கேட்டாள்..!!
"அதுசரி.. இதுக்கெதுக்கு நீ ந்யூஸ் பேப்பரை மறைச்ச..??"
"ஒ..ஒன்னும் இல்ல..!!" அசோக்கிடம் மீண்டும் அதே திருட்டுமுழி.
"ஹேய்.. சொல்லுடா..!!"
"ஒன்னும் இல்லன்னு சொல்றேன்ல..!!"
"இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!!"
"ம்ம்ம்ம்ம்.. சொல்றேன்.. ஆனா.. நீ என்னை கிண்டல் பண்ணக்கூடாது..!!"
"என்ன.. ஓவரா பில்டப்லாம் குடுக்குற..!!"
"பண்ணமாட்டேன்னு சொல்லு..!!"
"சரி..!! பண்ணமாட்டேன்..!!"
"ப்ராமிஸ்..??"
"ப்ராமிஸ்டா..!! சொல்லு..!!"
அசோக் இப்போது சற்றே தயக்கத்துடன்.. அந்த நாளிதழை விரித்து மீராவிடம் காட்டினான்..!! அதில் அச்சிடப்பட்டிருந்த அந்த கொலையாளிகளின் புகைப்படங்களை சுட்டிக்காட்டி அவளிடம் கேட்டான்..!!
"இந்த மூஞ்சிகளை எல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா..??"
அவன் அவ்வாறு கேட்டதும், மீராவின் முகத்தில் ஒரு குழப்பம்.
"இ..இல்லையே.. யார் இவங்க..??"
"ஹ்ம்ம்.. நீ வேணா மறந்திருக்கலாம்.. என்னால ஜென்மத்துக்கும் இந்த அழகு மூஞ்சிகளை மறக்கவே முடியாது..!!"
"நான் வேணா மறந்திருக்கலாமா..?? நா..நான் பாத்திருக்கேனா இவங்கள..??"
"ம்ம்.. ஆமாம்..!! ஒருதடவை KFCல வச்சு.. இவங்கள பாத்து.. 'நீங்க தேடிட்டு இருக்குற ஆள் இவன்தான்.. இவன்தான்'ன்னு கத்துனியே..!! ஞாபகம் இருக்கா..??" அசோக் அவ்வாறு சொன்னதும், இப்போது மீராவுக்கு பட்டென அந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது.
"ஹேய்ய்ய்.. அ..அது.. அவங்க.. நான் உன்கிட்ட குடுத்த தப்பான மொபைல் நம்பருக்கு கால் பண்ணி.. அதுல பிரச்சினையாகி.. உன்னை போட்டு தள்றதுக்காக ஒரு க்ரூப்.. டாடா சுமோல அலையுதுன்னு சொல்வியே.. அவங்கதான..??"
"ம்ம்ம்..!! ஆனா.. அவங்க என்னை போட்டு தள்றதுக்காக அலையலை..!!"
"அப்புறம்..??"
"இந்த காசியை போட்டு தள்றதுக்காகத்தான் அப்போ இருந்தே அலைஞ்சிருக்காங்க.. எனக்கே இன்னைக்குத்தான் தெரியும்..!!"
"எ..என்ன சொல்ற நீ..?? எனக்கு புரியல..!! உன்னை ஃபோன்ல மிரட்டுனாங்கன்னு.."
"ஆமாம் மீரா..!! ஃபோன்ல என்னை மிரட்டினது உண்மைதான்..!! ஆனா.. ஃபோன்ல மிரட்டினது வேற க்ரூப்பு.. டாடா சுமோல விரட்டினது வேற க்ரூப்பு..!! ஃபோன்ல பேசி முடிச்சதும், பக்கத்துல அந்த டாடா சுமோ வந்து நிக்கவும்.. ரெண்டும் ஒரே க்ரூப்புதான்னு நெனச்சு நான்தான் கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகிட்டேன்..!! ரொம்ப நாளா அவனுகள பாக்குறப்போலாம் பம்மிட்டு இருந்தேன்..!!"அசோக் பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்க, மீராவால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வயிறை பிடித்துக்கொண்டு, வாயை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள்.
"ஹாஹாஹாஹாஹாஹா..!!"
மீராவின் சிரிப்பு அசோக்கின் முகத்தை பட்டென சுருங்கிப் போக வைத்தது.
"ஹேய்... சி..சிரிக்காத மீரா.. ப்ளீஸ்..!!"
"ஹாஹா..!!! ஹையோ.. என் அறிவுக்கொழுந்தே.. முடியலடா..!! எவனோ எவனையோ கொலை பண்ண வெரட்டிருக்கான்.. நீ என்னடான்னா அவனுகளுக்கு பயந்துக்கிட்டு.. உன்னோட சிம் கார்ட்லாம் மாத்தி.. சிவன் கோயில்ல அங்க பிரதட்சணம்லாம் பண்ணி.. எந்த நேரமும் ஒரு மரண பீதியோடவே திரிஞ்சிருக்குற..!! எடுத்த கவாஸாகி ஆட்ல அந்த எஃபக்ட்லாம் வேற..!! ஹ்ம்ம்... வடிவேலை தூக்கி சாப்பிட்டுட்ட நீ..!! செம்ம காமடி போ..!! ஹாஹாஹாஹாஹா..!!" மீரா இடைவிடாமல் தொடர்ந்து சிரிக்க, எரிச்சலான அசோக்
"ப்ச்..!! பாத்தியா.. இதுக்குத்தான் உன்கிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னேன்..!! போடீ..!!" கடுப்புடன் சொன்னவாறு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.
"டேய் டேய்.. ஸாரிடா.. ஸாரிஈஈ..!! என் செல்லம்ல.. என் அம்முல..??" கொஞ்சிக்கொண்டே அவனை சமாதானம் செய்ய பின்னால் ஓடினாள் மீரா.
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
மீராவிடம் அன்று பல்பு வாங்கியிருந்தாலும்.. மலரவனிடம் அசோக் பாராட்டு வாங்கியிருந்தான்..!! ரெட்ஹில்ஸ் கொலை வழக்கில் அவனுடைய ஒத்துழைப்பை குறிப்பிட்டு.. காவல்த்துறை அவனுக்கு கடமைப்பட்டிருப்பதாக நன்றியுரைத்தார்..!!
அதன்பிறகும் இரண்டு மூன்று முறை.. அசோக் ஸ்ரீனிவாச பிரசாத்துடன் சென்று மலரவனை சந்திக்க நேர்ந்தது..!! விரைவிலேயே.. ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. மலரவனும் அசோக்குக்கு நட்பாகிப் போனார்..!! மூவருக்குள்ளும் எந்த மாதிரி நட்பென்று சொல்லவேண்டுமானால்..
மாதவரத்தில் உள்ள ஒரு போலீஸ் குவார்டர்ஸில்.. மலரவனுக்கென்று அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட அப்பார்ட்மன்டில்.. மதுரையில் அழகர் ஆற்றில் இறங்குவதைக்காண மனைவியை அவர் அனுப்பி வைத்திருந்த சமயத்தில்.. இவர்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து விஸ்கி சுவைக்கிற அளவுக்கு..!! சரக்கடித்து மட்டையாக நினைத்தவர்கள்.. தொட்டுக்கொள்ள ஊறுகாய் வேண்டுமென்று.. மணலி வரை சென்று மனோகரை பிக்கப் செய்துகொள்ளும் அளவிற்கு..!!
டீப்பாயில் இருந்த டீச்சர்ஸ் பாட்டில் பாதிக்கும் மேல் காலியாகி இருந்தது.. அருகிலேயே மூன்று கண்ணாடி டம்ளர்களும், மூடி திறக்கப்பட்ட ஐஸ் பெட்டியும்..!! டீப்பாயை சுற்றிக்கிடந்த மூன்று சோபாக்களில் டீச்சர்சை உள்ளே தள்ளிவிட்டு.. உச்சிவரை ஏறிய போதையுடன்.. உல்லாச நிலையில் அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும், மலரவனும்..!! மனோகர் மட்டும் தரையில் ஜட்டியுடன் அமர்ந்திருந்தான்.. அவனுடைய முகம் அடியும், குத்தும், மிதியும் வாங்கி.. சிற்றெரும்பு புற்றுக்குள் தலையைவிட்ட குரங்கின் முகத்தைப்போல.. கோணல்மாணலாக வீங்கி சிவந்து கிடந்தது..!!
"இனி தண்ணி அடிக்கிறப்போலாம் இவனை இழுத்துட்டு வந்துரலாம் ஸார்.. செம்ம மஸாவா இருக்கு..!!"
மலவரன் குழறலாக சொன்னார். மனோகர் அவரை பரிதாபமாக பார்த்தான்.
"டேய்.. இது ரெண்டுல ஒன்னை தொடு..!!"
ஸ்ரீனிவாச பிரசாத்தும் வாய்க்குழறலோடு தனது வலதுகை விரல்களை மனோகரிடம் நீட்டினார். அவனும் தயங்கி தயங்கி ஒரு விரலை தொட்டுக்காட்ட, ஸ்ரீனிவாச பிரசாத் இப்போது மலரவனிடம் திரும்பி சொன்னார்.
"ம்ம்.. அவனே சொல்லிட்டான் ஸார்.. இவனை ப்ராத்தல் கேஸ்ல புக் பண்ணிற வேண்டியதுதான்..!! பொண்ணுகளை வச்சு பிசினஸ் பண்ணினான்.. ப்ரோக்கர் வேலை பாத்தான்னு சொல்லி ஒரு செட்டப் பண்ணி.. உள்ள தூக்கி போட்ருவோம்..!! 'மாமாப்பய.. மாமாப்பய..'ன்னு எல்லாரும் இவனை கூப்பிடனும்.. இவன் நாக்கை புடுங்கிட்டு சாவனும்..!!"
"ஐயையே.. அதுலாம் வேலைக்காவாது ஸார்.. அந்த மாதிரி செட்டப் பண்றதுலாம் ரொம்ப கஷ்டம்..!! பேசாம.. அந்தக்காசிப்பய மாதிரி இவனும் கஞ்சாப்பொட்டலம் வித்தான்னு சொல்லி செட்டப் பண்ணிரலாம்.. அதுதான் ரொம்ப ஈஸி..!! நார்கோடிக்ஸ் டிப்பார்ட்மண்ட்லதான் உங்களுக்கு தெரிஞ்ச ஆளுங்க நெறைய இருக்காங்களே.. வேலை ரொம்ப ஈசியா முடிஞ்சிடும்..!! எனக்கு புழல் ஜெயில்ல நெறைய ஆளுங்க இருக்காங்க.. நம்ம பையன் உள்ள இருக்குற ஒவ்வொரு நாளையும் மறக்க முடியாத மாதிரி பண்ணிருவோம்.. வெளில வர்றப்போ எல்லாம் சூம்பி சுருங்கிப் போய்தான் வருவான்..!! என்ன சொல்றீங்க..??"
"இல்ல ஸார்.. ப்ராத்தல் கேஸ்தான் ரொம்ப கேவலமான கேஸ்.. அதுலதான் இவனை உள்ள போடுறோம்.. நான் டிஸைட் பண்ணிட்டேன்..!!"
"இல்ல ஸார்.. கஞ்சா கேஸ்தான்..!!"
எந்த கேஸில் தன்னை உள்ளே தூக்கிப் போடுவது என்று.. இரண்டு இன்ஸ்பெக்டர்களும் சண்டையிட்டுக் கொண்டிருக்க.. மனோகரோ மிரண்டு போய் அவர்களை பார்த்தான்..!!"ஸார் ஸார்.. அப்டிலாம் பண்ணிராதிங்க ஸார்.. இனி நான் எந்த தப்பும் பண்ண மாட்டேன்.. ப்ளீஸ் ஸார்..!!"
என்று கெஞ்சினான்.. கையெடுத்து அவர்களை கும்பிட்டான்..!! அவனுடைய கண்களில் கண்ணீர் அரும்ப, ஸ்ரீனிவாச பிரசாத்துக்கு அவன் மீது சற்றே இறக்கம் வந்தது..!! இறக்கம் வந்தும்..
"நம்பலாமா..??" என்று முறைப்பாகவே கேட்டார்.
"நம்பலாம் ஸார்.. சத்தியமா இனிமே நல்ல புள்ளையா நடந்துக்குறேன்..!!"
"ம்ம்ம்ம்.. தட்டிக்கேட்க ஆளு இல்லன்னா, சேட்டை பண்ண தோணுது உங்களுக்குலாம்.. இல்ல..?? இனிமே எந்தப் பொண்ணுட்டயாவது வாலாட்டுனன்னு தெரிஞ்சுச்சு.. அப்புறம் மவனே ஆட்டுறதுக்கு எதுவுமே இருக்காது உன்கிட்ட..!! புரியுதா..??" ஸ்ரீனிவாச பிரசாத் நாக்கை துருத்தி எச்சரித்தார்.
"புரியுது ஸார்..!!"
"அப்படியே பிதுக்கிப்புடுவேன் பிதுக்கி..!! அடுத்த ரவுண்டு ஊத்து..!!"
ஸ்ரீனிவாச பிரசாத் ஆர்டர் போட.. மனோகர் அதற்காகத்தான் காத்திருந்தவன் போல.. விஸ்கி பாட்டில் திறந்து.. க்ளாஸில் ஊற்றி.. ஐஸ்க்யூப்ஸ் அள்ளிப்போட்டு.. பவ்யமாக அவரிடம் நீட்டினான்..!! நீட்டியவன்.. அப்படியே முகத்தை திருப்பி.. அசோக்கை ஓரக்கண்ணால் ஒரு பார்வை பார்த்தான்..!! அசோக்கோ.. அங்கு நடக்கும் சம்பவங்களுக்கும் அவனுக்கும் சற்றுகூட சம்பந்தம் இல்லாதவன் மாதிரி.. வாங்கி வந்திருந்த சிப்ஸை வாய் நிறைய போட்டு அரைத்துக் கொண்டிருந்தான்..!!
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
தி.நகரில் நகைக்கடை வைத்திருக்கிற மாணிக்சந்த் சேட்டிற்கு.. கருப்புப்பணத்தின் வைத்திருப்பு அதிகமாகிப் போய்.. பெருத்த அவஸ்தையில் இருந்தார்..!! எப்படியாவது அவற்றை வெள்ளைப்பணமாக மாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன்.. அவருடைய ஜ்வல்லரி ஷாப் விளம்பரத்தை, ஸ்னேஹாவை வைத்து முடித்துக் கொடுத்ததன் மூலம் நட்பாகியிருந்த மோகன்ராஜிடம்.. அடுத்த விளம்பரத்திற்கு அனுஷ்காதான் என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு.. அவருடைய அவஸ்தைக்கான ஆலோசனையும் கேட்டார்..!! அவருக்கு ஆலோசனை சொன்ன மோகன்ராஜ்..
"எனக்கு தெரிஞ்ச ஒரு பையன் இருக்குறான்.. நாளைக்கு அவனை அனுப்பி வைக்கவா..??" என்று கேட்டார்.
அடுத்த நாள் காலையே.. மாணிக்சந்த்தின் அலுவலக அறையில்.. அசோக் அவருக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தான்..!!
"செனைப்பன்னிங்க மாதிரி ரெண்டு பேரு ஸார்.. ஒவ்வொருத்தனும் ஒரு முன்னூறு கிலோ இருப்பானுகன்னு வச்சுகோங்க.. வயிறுலாம் அப்படியே வாட்டர் டேங்க் மாதிரி இருக்கு.. கைலாம் கர்லா கட்டை மாதிரி இருக்கு.. காட்டெருமைங்க நாட்டுக்குள்ள தப்பிச்சு வந்தா எப்டி இருக்கும்.. அந்த மாதிரி..!! ரெண்டு பேரும் ஒரே நேரத்துல கையை மடக்கி.. நம்ம ஹீரோ மூஞ்சில ஓங்கி ஒரு குத்து விடுறானுக..!! அவ்வளவுதான்.. நம்ம ஹீரோ அப்படியே ஏர்ல பாஸாகி வந்து.. ஹீரோயின் இருக்குற டேபிள்ளயே டமால்னு விழுறான்..!! ஹீரோயின் சீக்ரட்டா சிரிக்குறா.. அந்த செனைப்பன்னிங்க ரெண்டும் முறைக்குதுங்க..!!" அசோக் ஆக்ஷனுடன் காட்சியை விவரிக்க..
"ஹாஹாஹா.. மஸா ஹே.. பஹுத் மஸா ஆ ரஹா ஹே..!! ஹாஹாஹா..!!" மாணிக்சந்த் தனது தொப்பை குலுங்க சிரித்துக் கொண்டிருந்தார்.
"இப்போ அந்த காட்டுப்பன்னிங்க ரெண்டு பேரும்.." அசோக் மேலும் ஆர்வமாக ஆரம்பிக்க,
"ஆங்.. ஆவ் பேட்டா ஆவ்..!!"
மாணிக்சந்த் அவனுக்கு பின்புறமாக பார்த்து சொன்னார்.. உடனே அசோக்கும் பின்னால் திரும்பி பார்த்தான்.. பார்த்தவன் அப்படியே பக்கென மிரண்டு போனான்..!! அங்கே.. அவர்கள்.. அந்த அண்டர்டேக்கரும், ஜான் ஸீனாவும்.. மீராவின் சில்மிஷத்தால், அசோக்கின் முகத்தில் நிஜமாகவே பஞ்ச் விட்டவர்கள்.. இப்போது இவனை எரித்துவிடுவதுபோல முறைத்துக் கொண்டிருந்தனர்..!!
'இவர்களா..?? இவர்கள்தான் இந்த மாணிக்சந்த் பெற்றெடுத்த பேட்டாக்களா..??' அசோக் திருதிருவென விழித்தான்..!!
இவ்வளவு நேரமும் அசோக் அவர்களைப் பற்றி வர்ணித்ததை எல்லாம்.. அவர்களும் கேட்டுக் கொண்டுதான் இருந்திருப்பார்கள் போல.. நடந்துவரும்போதே அசோக்கை உர்ரென முறைத்துக்கொண்டேதான் வந்தார்கள்..!! அசோக் அவர்களைப் பார்த்து 'ஹிஹி..' என்று அசட்டுத்தனமாய் இளிக்க.. அவர்கள் அப்பாவை நெருங்கி ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்துகொண்டார்கள்..!!
"இவுருதான் நம்ப டைரக்ட்டர்.. பேரு அசோக்..!!" மகன்களுக்கு அசோக்கை அறிமுகப்படுத்தினார் மாணிக்சந்த்.
"இது நம்ப பெருசு பையன் பிரேம்சந்த்.. இது நம்ப சிறுசு பையன் தீப் சந்த்.. !! பிரேம்சந்த்தான் நம்ப பட்துகூ எக்ஸிக்யூட்டிவ் ப்ரொட்யூசர்..!!" அசோக்கிற்கும் அவர்களை அறிமுகம் செய்துவைத்தார்.
"ம்ம்.. ஸ்டோரியை கண்டின்யூ பண்ணுங்கோ..!!" கடுப்புடனே அசோக்கிடம் சொன்னான் பிரேம்சந்த்.
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------அசோக் சொன்ன கதை.. மாணிக்சந்த்திற்கும் அவரது மகன்கள்சந்த்திற்கும் மிகவுமே பிடித்துப் போனது.. அந்தக்கதையை படமாக்கலாம் என்று மகிழ்வுடன் முடிவெடுத்தார்கள்..!! அன்றே அக்ரிமன்ட்டும் போட்டு.. அட்வான்ஸ் செக்கையும் அசோக்கின் கையில் திணித்தார்கள்..!! நடிகர், நடிகைகளை தாங்களே முடிவு செய்வதாக சொன்னவர்கள்.. டெக்னிகல் டீமை மட்டும் அசோக்கே தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்..!! அவனுடைய டெக்னிகல் டீமில் முதல் ஆளாய் சேர்ந்தவன் கிஷோர்தான்.. தனி ஒளிப்பதிவாளனாய்..!!
அந்தவாரத்தின் இறுதியிலே ஒருநாள்.. படத்திற்கான டைட்டில் குறிப்பிடப்படாமலே.. வடபழனி வாஹினி ஸ்டுடியோவில் படத்திற்கு பூஜையும் போடப்பட்டது..!! அத்தனை நாளாய் வீட்டிற்கு டிமிக்கி கொடுத்த அசோக்காலும், கிஷோராலும்.. அதன்பிறகும் தப்பிக்க இயலவில்லை..!! 'அதான் இப்போ ரெண்டு பேர் நெனச்சதும் நடந்துடுசுல.. அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சிர வேண்டியதுதான்..!!' என்று ஆளாளுக்கு பேசி.. அவர்கள் இருவரையும் கோழியை அமுக்குவதுபோல அமுக்கினர்..!!
இயக்குனராக ஒப்பந்தமான இரண்டே வாரங்களில்.. வளசரவாக்கத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில்.. மங்கள வாத்திய மேளம் முழங்கியது.. ஒரே மேடையில் இரு ஜோடிகளுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..!! அசோக், கிஷோரின் குடும்பத்தினர் தவிர்த்து.. அசோக்கின் நண்பர்கள், மும்தாஜ், ஸ்ரீனிவாச பிரசாத், மலரவன், மாணிக்சந்த், மோகன்ராஜ் என.. அனைவருமே திருமணத்திற்கு வருகை தந்திருந்தனர்.. அடுத்தடுத்து முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்..!!
"கெட்டி மேளம்.. கெட்டி மேளம்..!!"ஐயர் கத்தினார்.. மங்கள மேளம் ஒலித்தது..!! மலர்மாலைகள் தாங்கிய தோள்களுடன்.. அசோக் மீராவின் கழுத்தில் தாலி கட்டினான்.. கிஷோர் சங்கீதாவின் கழுத்தில் மாங்கல்யம் பூட்டினான்..!! வந்திருந்தவர்களின் அட்சதை ஆசீர்வாதத்தில்.. மணமேடையில் பூமழை பொழிந்தது..!!
-----------------------------XXXXXXXXXXXXX-----------------------------
அசோக்கிற்கும் மீராவுக்கும் திருமணம் முடிந்த மூன்றாம் நாள்..
'கீழை நாடுகளின் வெனிஸ் நகரம்' என்று அழைக்கப்படுகிற.. கேரளா மாநிலத்தை சேர்ந்த எழில்மிகு ஆலப்புழா..!! சூரியனின் ஆட்சிக்காலம் முடிந்துபோய்.. சந்திரன் தன் ஆளுமையை இவ்வுலகில் செலுத்த ஆரம்பித்திருந்த சமயம்..!! இந்தியாவின் மிக நீளமான ஏரியான வெம்பநாடு ஏரி.. இப்போது இருளில் நனைந்த நீரினால் நிரம்பியிருந்தது..!!
கருநீல நிறத்தில் தழும்பிய காயல் நீரில்.. வெண்ணிலாவின் வெளிச்சம் சிதறி தகதகத்தது..!! கரி அப்பிக்கொண்டு ஏரியின் ஓரத்தில் அணிவகுத்திருந்த தென்னை மரங்கள்.. காற்றுக்கு தங்களது கிளைக்கைகளை அசைத்துக் கொண்டிருந்தன..!! காற்றில் சம்பா மலர்களின் வாசனை..!! ஏரியிலிருந்து வெளிக்கிளம்பி மொட்டையாக நின்ற கட்டை மரமொன்றில்.. ஏறியமர்ந்து தலைசிலுப்பிய கரிச்சான் குருவியொன்று.. 'கீச்.. கீச்.. கீச்..' என்று ஒலி கிளப்பியது..!!
இருண்டுபோன ஏரியின் மையத்தில்.. பளிச்சென்ற வெளிச்சத்துடன் மிதந்து கொண்டிருந்தது அந்த படகுவீடு..!! கெட்டு வள்ளம் என்று அழைக்கப்படுகிற நீளமான, அகலமான மரப்படகு.. அதன்மீது மூங்கிலாலும், பனை ஓலையாலும் கூரை வேயப்பட்ட அழகுவீடு..!! உட்புறம் ஒளிர்ந்த விளக்குகள் அந்த படகுவீட்டை பிரகாசமாக்கியிருந்தன.. வெளிப்புறம் கசிந்த மஞ்சள் வெளிச்சம் அப்பகுதியின் இருள் போக்க உதவியிருந்தது..!! தண்ணீருக்குள் தங்கத்தேர் என சுருக்கமாக அவ்வீட்டை வர்ணிக்கலாம்..!!
படகின் முற்பகுதி.. பக்கவாட்டில் தடுப்பற்று விடப்பட்டிருந்தது.. பிரம்பு நாற்காலிகள், மர மேஜைகளுடன் உணவு உண்ணுவதற்கான வசதியுடன் வடிவமைக்கப்பட்டிருந்தது..!! கூரையில் தொங்கிய குழல் விளக்குகள்.. படகு விளிம்பை ஒட்டிக்கிடந்த வெல்வெட் சோபாக்கள்..!! அதைக்கடந்து.. எதிர்ப்படும் மூங்கில்க்கதவை திறந்தால்.. வீட்டுக்குள் பிரவேசிக்கலாம்..!! உள்ளே.. பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு அறைகள்.. நடுவே நீளமாய் சிவப்புக் கம்பள விரிப்பு..!!
இடதுபுறம் இருக்கிற அறைக்குள் நுழைந்தோமானால்..
அறையின் மையத்தில் கிடந்த அந்த மெத்தையில்.. அசமஞ்சமான ஒரு வெளிச்சத்தில்.. அரைநிர்வாண நிலையில்.. அமாவாசையிரவு பாம்புகளாய்.. இரண்டு மனித உடல்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து நெளிந்து கொண்டிருந்தன..!! அவர்களுக்கு அருகே சென்று உற்றுப்பார்த்தோமானால்..
ஸாரி.. தப்பான ரூமுக்குள்ள வந்துட்டோம் போல இருக்கு.. இது கிஷோரும், சங்கீதாவும்..!! அப்படியே ட்ராலி பேக்வேர்ட் போங்கப்பா..!! ஹிஹி..!!
அறைக்கு வெளியே வந்து.. அப்படியே ஒரு யூ டர்ன் அடித்து.. எதிரே தெரிகிற கதவை திறந்து.. சப்தமிடாமல் உள்ளே நுழைந்தோமானால்..மல்லிகை மலர்கள் தூவிய மஞ்சத்தில்.. மதமதப்புடன் வீற்றிருந்த மீரா பார்வைக்கு வந்தாள்..!! மஞ்சள் நிறத்தில் புடவையும் ரவிக்கையும் அணிந்திருந்தாள்.. கழுத்திலும், காதிலும், கைகளிலும் பொன் நகைகள்..!! கூந்தல் நீளமாக பின்னப்பட்டு.. இறுதியில் குஞ்சம் சேர்க்கப்பட்டிருந்தது..!! மெத்தையில் உதிரியாய் சிதறிக்கிடந்த மல்லிகை.. அவளது கூந்தலில் கொத்துக் கொத்தாய்.. சரம் சரமாய்..!! பக்கவாட்டில் இருந்த மின்விசிறி காற்றெழுப்ப.. அந்தக்காற்றுக்கு அவளுடைய புடவை மேற்கிளம்பி.. ஒற்றைப்பக்க மார்பினையும், வளைவுகுழைவான இடுப்பினையும்.. வஞ்சனையில்லாமல் வெளிக்காட்டியது.. புடவையை இறக்கி தொப்புள் தெரிய கட்டியிருக்கிறாள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது..!! அழகுற வீற்றிருந்தவள்.. அவ்வப்போது பக்கவாட்டில் திரும்பி எரிச்சலாக பார்த்தாள்..!!
அவளுடைய பார்வை சென்ற இடத்தில்.. ஒரு பிரம்பு நாற்காலியில் அசோக் அமர்ந்திருந்தான்.. அவன் முன்பாக இருந்த மரமேஜையில் அவனுடைய லேப்டாப் விரித்து வைக்கப்பட்டிருந்தது.. இரவு விளக்கு குனிந்து ஒளி கிளப்பிக் கொண்டிருந்தது..!! அசோக் தனது இமைகளை மூடியிருந்தான்.. தலையை 45 டிக்ரி கோணத்திற்கு டேப்பராக திருப்பியிருந்தான்.. ஏதோ கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தவன் போல காணப்பட்டான்..!! உதட்டை அசைத்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டான்.. உடலை அவ்வப்போது வெடுக்வெடுக்கென சிலிர்த்துக் கொண்டான்..!! வெட்கத்தில் சிவந்தும் பூரித்தும் போன முகத்துடன்.. தனக்கு முன்பிருந்த இரவு விளக்கை இரு கையாளும் அணைத்துக்கொண்டு.. உதடுகள் குவித்து அந்த விளக்கின் தலையில் முத்தமும் வைத்தான்..!!
அவ்வளவு நேரமும் அவனையே கடுப்புடன் முறைத்துக் கொண்டிருந்த மீரா.. இப்போது பொறுமை இழந்து போனாள்..!! தனது தலையில் சூடியிருந்த மல்லிகைச்சரத்தில்.. கொஞ்சமாய் ஒரு கொத்தை பிய்த்து.. அசோக்கை நோக்கி சரக்கென விட்டெறிந்தாள்..!! அந்த மல்லிகை கொத்தும்.. அவனது முகத்தை சென்று 'சத்'தென்று அறைந்தது..!! அசோக் உடனே உறக்கத்தில் இருந்து விழித்தவன் போல.. படக்கென தனது இமைகள் திறந்தான்.. பக்கவாட்டில் திரும்பி மீராவை முறைத்தான்..!!
"ஏய்..!!"
"என்னடா பண்ணிட்டு இருக்குற.. லூஸு..!!" மீரா எரிச்சலாக கேட்டாள்.
"ஸீன் யோசிச்சுட்டு இருக்கேன்டி.. டிஸ்டர்ப் பண்ணாத..!!"
"ஸ்க்ரிப்ட் எல்லாம் பக்காவா ரெடின்னு சொன்ன.. இன்னும் என்ன ஸீன் யோசிக்கிற நீ..??"
"ஹஹ.. இது ஃபைனல் ஸீன்..!! லாஸ்ட்டா.. அப்டியே ரொமாண்டிக்கா.. ஒரே கிளுகிளுப்பா.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் ஃபர்ஸ்ட் நைட் ஸீன்..!! அதைத்தான் அப்டியே இன்வால்வ் ஆகி யோசிச்சுட்டு இருக்கேன்..!!" அசோக் இளிப்புடன் சொன்னான்.
"ஓஹோ..??" மீராவின் முறைப்பு மேலும் கடுமையானது.
"ஆக்சுவலா.. நாம ஆலப்பே வந்ததுக்கு காரணமே அதுதான் மீரா..!! இதே மாதிரி ஒரு நைட் எஃபக்ட்ல.. இதே மாதிரி ஒரு போட்-ஹவுஸ்லதான்.. ஹீரோக்கும் ஹீரோயினுக்கும் நான் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணிருக்கேன்..!! ஆலப்பேலதான் அந்த ஸீன் ஷூட் பண்ணப்போறோம்.. நாம இங்க லொகேஷன் பாக்க வந்ததே அதுக்குத்தான்..!!"
"ஒய்.. என்ன.. லொகேஷன் பாக்க வந்தோம்னு எங்களையும் உங்க கூட சேர்த்துக்குற..?? நாங்கல்லாம் இங்க லொகேஷன் பாக்க வரல..!!"
"சரி விடு.. தெரியாம சொல்லிட்டேன்..!!"
"ச்சை.. சரியான கஞ்சப் பிசினாரிங்கடா ரெண்டு பேரும்..!!"
"யாரை சொல்ற..??"
"உன்னையும் கிஷோரையும்தான்..!!"
"ஏன்..??"
"பின்ன என்ன..?? ஹனிமூனுக்கு செலவாகும்னு.. ப்ரொட்யூசர் காசுல.. லொகேஷன் பாக்கப் போறோம்ன்ற பேர்ல.. ஹனிமூன் காசை மிச்சம் பண்ணிட்டிங்கல்ல ரெண்டு பேரும்..??"
"ஹாஹா.. இதைத்தான் தமிழ்ல 'புத்தியுள்ளவன் பலவான்'ன்னு சொல்வாங்க மீரா..!!"
"ம்ம்..?? இதைத்தான் தெலுங்குல தெங்கனா கொடுக்கான்னு சொல்வாங்க..!!"
"தெங்கனாவா..?? தெலுங்கானா தெரியும்.. அதென்னா தெங்கனா..??"
"தெரியலைல.. விட்ரு..!!"
"சொல்ல மாட்டியா.. சரி போ..!! ம்ம்ம்ம்ம்... எனக்கு வேலை இருக்கு மீரா.. இந்த ஸீன் எழுதி முடிக்கணும்.. உனக்கு தூக்கம் வந்தா நீ தூங்கு..!! காலைல மாணிக்சந்த்தோட பையன் வந்திருவாரு.. அவர் வர்றப்போ ஸ்க்ரிப்ட் பக்காவா ரெடியாயிருக்கணும்..!!"
"ம்க்கும்.. பேரைப் பாரு.. மாணிக்சந்த்தாம் மாணிக்சந்த்..!! பையன் பேர் என்ன.. பான்பராக்கா..??" மீரா கிண்டலாக கேட்க, அசோக் சிரித்துவிட்டான்.
"ஹாஹா..!! பான்பராக்லாம் இல்ல.. அவர் பேர் பிரேம்சந்த்..!! நீ அவரை பாத்தது இல்லைல.. நாளைக்கு பாரு.. உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு..!!"
"என்ன சர்ப்ரைஸ்..??"
"நாளைக்கு அவரை பாத்து தெரிஞ்சுக்கோ..!!"
"ம்ம்..!! அந்த ஆளு எதுக்கு திடீர்னு இங்க வர்றான்..??"
"லொகேஷன் பாக்கத்தான்..!!"
"ஏன்.. நீங்க பாக்குறது பத்தாதா..??"
"அப்டி இல்ல..!! ஆக்சுவலா.. இந்த ஃபர்ஸ்ட் நைட் ஸீன் மட்டுந்தான் மொதல்ல இங்க ப்ளான் பண்ணிருந்தோம்..!! இப்போ அதோட சேர்த்து.. இன்னொரு டூயட் சாங் கூட இங்கயே ஷூட் பண்ணலாம்னு அவர் அபிப்ராயப் படுறாரு..!! 'தேன் குடிச்ச நிலவு.. விழி மயங்கும் இரவிது.. தினம்தோறும் திருவோணம்தான்..' அந்த ஸ்டைல்ல..!! அதான்.. அவரே நேர்ல லொகேஷன் பாக்க வர்றாரு..!!"
"குத்துப்பாட்டா...??" மீரா முகத்தை சுளித்தவாறு கேட்டாள்.
"எஸ்..!!" அசோக் இளிப்பாக பதில் சொன்னான்.
"எப்புடி.. அந்த கொலை ஸீன் முடிஞ்சதும்.. நீயும் நானும் கனவுல குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடுறமா..??"
"ஐயையே.. தப்பா புரிஞ்சுக்கிட்ட.. நீயும் நானும் இல்ல..!!"
"அப்புறம்..??"
"நானும் மும்தாஜும்..!!" அசோக் கூலாக சொல்ல,
"என்னது..????" மீரா உக்கிரமாக அவனை முறைத்தாள். அசோக் உடனே பம்மினான்.
"அமலா பாலோட ரசிகர்களை திருப்தி படுத்துறதுக்காக-மா..!! படத்துல கொஞ்சம் தூக்கலா.. சும்மா நச்சுனு காமிக்க நெனைச்சிருக்கோம்..!! ஐ மீன்.. அந்த மும்தாஜ் கேரக்டரை..!!"
"ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்..!! அப்படி ஏதாவது டூயட் சாங் எடுக்கணும்னா.. அந்த இத்துப்போன இலியானாவோடவே எடுத்து தொலை..!!"
"ஒய்.. என்ன..?? நான் டைரெக்டரா.. நீ டைரெக்டரா.. உன் இஷ்டத்துக்கு ஸ்க்ரிப்டை மாத்துற..??"
"செருப்பு பிஞ்சுடும் ராஸ்கல்..!!" மீரா கத்த,
"என்னது..???" அசோக் வெலவெலத்து போனான்.
"பின்ன என்ன..?? உன்னோட டர்ட்டி ஆசையலாம்.. இந்த மாதிரி படமா எடுத்து தீத்துக்கலாம்னு பாக்குறியா.. பிச்சுப்புடுவேன் பிச்சு..!!!"
"ஐயையே.. இதுல என் ஆசைலாம் எதுவும் இல்ல மீரா.. எல்லாம் ப்ரொட்யூசரோட விருப்பம்..!!"
"அந்தாளுக்கும் செருப்பு பிஞ்சுடும்னு சொல்லி வையி..!! என் ஸ்டோரியை படமா எடுத்து காசு சம்பாதிக்கப் போறீங்க.. எந்த டேமெஜும் பண்ணாம உள்ளதை உள்ளபடி எடுக்கணும் சொல்லிப்புட்டேன்..!!"
"என்ன மீரா..??" அசோக் உடனடியாய் குழைய,
"என்ன.. நொன்ன மீரா..??" மீரா எரிச்சலாக சொன்னாள்.
அப்போதுதான்.. 'ஆஆஆவ்வ்வ்..' என்று பக்கத்து அறையில் இருந்து சங்கீதா எழுப்பிய சத்தம்.. இந்த அறைக்குள் சன்னமாக ஒலித்தது..!! அந்த சத்தத்தில் இருவரும் கவனம் கலைந்து போனார்கள்..!! அந்த சத்தத்தின் அர்த்தத்தை மீரா உடனடியாய் புரிந்துகொண்டாள்.. அசோக்குக்குத்தான் அதன் அர்த்தமும் புரியவில்லை.. அதை எழுப்பியவள் தன் தங்கைதான் என்பதும் புரியவில்லை..!!
"என்னமோ சத்தம் கேட்ட மாதிரி இருந்ததுல..??" என்றவாறு ஜன்னல் கதவை திறந்து வெளியே எட்டி எட்டி பார்த்தான்.
"ப்ச்.. ஒன்னும் இல்லடா.. விடு..!!" மீரா அதட்டியதும்தான் தேடுவதை கைவிட்டு திரும்பினான். அவன் திரும்பவும்,
"ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்....!!" திடீரென நீளமாக பெருமூச்சு விட்டாள் மீரா.
"என்னாச்சு... ஏன் பெருமூச்சு..??" அசோக் புரியாமல் கேட்டான்.
"என்னதான் இருந்தாலும்.. சங்கி குடுத்து வச்சவதான்..!!" மீரா குறும்பாக சொன்னாள்.
"ஹாஹா..!! சங்கி மட்டுமா.. கிஷோரும் குடுத்து வச்சவன்தான்..!! என் தங்கச்சி மாதிரி ஒரு பொண்ணு கெடைக்க.. அவன் நெஜமாவே ரொம்ப குடுத்து வச்சிருக்கணும்..!!" அசோக் அப்பாவியாக சொல்ல, மீரா கடுப்பானாள்.
"அடச்சீ.. தத்திலயும் தத்தி, உன்னை மாதிரி தட்டுக்கெட்ட தத்திய நான் பாத்ததே இல்ல..!!"
"ஒய்.. எதுக்கு இப்போ திட்டுற..?? நான் ஒன்னும் தத்திலாம் இல்ல..!!"
"ம்க்கும்..!! லட்டு மாதிரி நான் இங்க ஒருத்தி உக்காந்திருக்கேன்.. நீ நைட் லேம்போட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்குற.. உன்னை தத்தின்னு சொல்லாம வேற என்ன சொல்றது..??மீரா அவ்வாறு சொன்னதும், அசோக் இப்போது சற்றே நிதானித்தான்.. அவனுடைய முகத்தில் பட்டென ஒரு காதல் உணர்வு.. மீராவின் முகத்தை ஏறிட்டு, ஏக்கமாக ஒரு பார்வை பார்த்தான்..!!
"ஹ்ம்ம்.. என்ன பண்ண சொல்ற..?? எனக்கு மட்டும் ஆசை இல்லையா..?? அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள எவ்ளோ ஆசையா வந்தேன் தெரியுமா..?? நீதான் வீட்டுக்கு தூரம்னு ஓரமா போய் உக்காந்துக்கிட்ட..!! நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!!"
"என்ன சொன்ன.. என்ன சொன்ன..??"
"அன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள.."
"அது இல்ல.. லாஸ்டா என்ன சொன்ன..??"
"நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்னு சொன்னேன்..!!"
"இன்னொரு தடவை சொல்லு..!!"
"நானும் நாலு நாளா ஆசையை அப்படியே அடக்கி வச்சுக்கிட்டு இருக்குறேன்..!! எதுக்கு திரும்ப திரும்ப அதையே சொல்ல சொல்ற..??"
"நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்..??"
"என்ன அர்த்தம்..??"
"ம்ம்..??? மூணு நாள் முடிஞ்சு போச்சுடா முண்டம்னு அர்த்தம்..!!"
அவ்வளவுதான்.. பல்பு போட்ட மாதிரி அசோக்கின் முகம் பட்டென பிரகாசமானது.. 'வாவ்' என்று வாயை திறந்தான்.. படக்கென சேரில் இருந்து எழுந்தான்..!! உடலுக்குள் புது ரத்தம் பாய்ந்தவனாக,
"மீராஆஆ..!!" என்று உற்சாகமாக கத்தினான்.
"ம்ம்..!!" மீராவுக்கோ உடனடியாய் ஒரு வெட்கம். அவளும் மெத்தையில் இருந்து எழுந்துகொண்டாள்.
"அப்படினா.. இன்னைக்கு உண்டா..??"
"ஆ..ஆமாம்..!!"
"இன்னைக்குத்தான் நமக்கு ஃபர்ஸ்ட் நைட்டா...??"
"யெஸ்..!! நான் ரெடியாகி உக்காந்திருக்குறதை பாத்தாலே உனக்கு புரியலையா..??"
"ச்ச.. இவ்வளவு முக்கியமான விஷயத்தை எப்படி நான் மிஸ் பண்ணினேன்..??" தன்னைத்தானே நொந்துகொண்ட அசோக்கால்,
"ஐ.க்யு லெவல் கம்மியா இருந்தா இதெல்லாம் சகஜம்தான் அசோக்.. விடு..!!" மீராவின் கிண்டலை புரிந்துகொள்ள முடியவில்லை.
இருவரும் ஒருவரை ஒருவர் நெருங்கினார்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் ஆசையும் ஏக்கமுமாக பார்த்தார்கள்..!! மீராவுடைய விருப்பத்துடனோ, விருப்பம் இல்லாமலோ அவளுடைய புடவைத்தலைப்பு கீழே நழுவியது.. அதை தடுத்து நிறுத்தி மேலே போர்த்திக் கொள்கிற எண்ணம்கூட இல்லாதவளாய் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்..!! மஞ்சள்நிற ரவிக்கைக்குள் மாங்கனிகள் ரெண்டு விம்மிக்கொண்டிருந்தன.. முகத்தை ரசித்துக்கொண்டிருந்த அசோக்கின் விழிகள், இப்போது சற்றே கீழிறங்கி அந்த மாங்கனிகளை மேய்ந்தன..!!
மனைவியின் மார்பழகை சிலவினாடிகள் வெறித்துப் பார்த்த அசோக்.. இப்போது கைகள் இரண்டையும் உயர்த்தி.. அவளுடைய கன்னங்களை பற்றிக்கொண்டான்..!! அவன் அவ்வாறு பற்றிக்கொண்டதும்.. மீரா தனது இமைகளை மெல்ல மூடிக்கொண்டாள்.. தித்தித்திடுகிற ஒரு முத்தச்சுவைக்கு உடனடியாய் தயாரானாள்.. எந்த நொடியும் கணவனின் இதழ்கள், தனது இதழ்களை வந்து கவ்வலாம் என்று ஆசையாக காத்திருந்தாள்..!!
"ஆனா.. நான் ஸ்க்ரிப்டை முடிக்கணுமே..??"
அசோக் முத்தமிடாமல் அவ்வாறு கவலையாக சொன்னதும்.. மீரா எரிச்சலாகிப்போய் படக்கென இமைகள் திறந்தாள்..!! அந்த எரிச்சலுடனே..
"எல்லாம் காலைல எழுதிக்கலாம்டா..!!" என்றாள்.
"காலைல நான் நல்லா தூங்குவனே..??"
"கவலையே படாத.. உன் டிக்கிலயே நாலு மிதி மிதிச்சு.. நான் உன்னை எழுப்பி விடுறேன்..!!"
"ப்ச்.. அந்தாளு ஆறு மணிக்குலாம் வந்துடுவான் மீரா..!!"
"ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!!"காலநேரம் தெரியாமல் கடுப்படிக்கும் கணவனை.. மீரா உர்ரென்று முறைத்தாள்..!! 'இனியும் வெக்கப்பட்டால் வேலைக்காவாது' என்பதை உணர்ந்தவள்.. உடனடியாய் ஒரு முடிவுக்கு வந்தாள்..!! பாய்ந்து சென்று.. இவளே அவனது உதடுகளை கவ்விக்கொண்டாள்..!!
"மீராஆஆஹ்க்க்....!!!!!"
ஆரம்பத்தில் பதறிய அசோக், அப்புறம் அப்படியே அடங்கிப் போனான்..!! தனது பிடரி மயிரினைப் அழுத்தமாக பற்றியிழுத்து.. தனது இதழ்களை ஆவேசமாக கவ்வியுறிஞ்சுகிற மீராவுக்கு.. அவனால் என்ன எதிர்ப்பு காட்டிவிட முடியும்..?? கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கிப்போய்.. அவளுடைய இடுப்பினை பிடிமானமாக பற்றிக்கொண்டான்..!! வாய்வழியே அவனுக்கு அமுதூட்டி.. தனது நாக்கினை அவனுடையதில் தடவவிட்டு.. நீண்டநேர எச்சில் வர்த்தகம் செய்து முடித்து.. மெல்ல மெல்ல மீரா தனது உதடுகளை பிரித்தெடுத்தபோது.. அசோக் விழிகள் செருக நின்றிருந்தான்.. சுர்ரென்று ஏறிய முத்தபோதையில் கிர்ரென்று கிறங்கிப் போயிருந்தான்..!! அந்த கிறக்கத்துடனே..
"லா..லாஸ்ட் ஸீன்.. இ..இன்னும் மிச்சம் இருக்கு மீரா.." என்று திணறலாக சொன்னான்.
"நீ வாடி செல்லம்.. நான் உனக்கு லாஸ்ட் ஸீன் காட்டுறேன்..!!"
குறும்பாக சொன்ன மீரா.. அப்படியே அசோக்கின் மீது சாய்ந்தாள்..!! பேலன்ஸ் இழந்த அசோக் பொத்தென்று மெத்தை மீது வீழ்ந்தான்.. அவன் கூடவே சரிந்த மீரா அவன் மீதே வீழ்ந்தாள்..!! வீழ்ந்த வேகத்தில் அவளது மார்புக்கலசங்கள் ரெண்டும்.. அசோக்கின் நெஞ்சில் சென்று நச்சென்று மோதின.. மெத்தென்று இருந்தது அவனுக்கு..!! சுருக்கென்று ஒரு அதிர்வலை அவனது நாடிநரம்பெல்லாம் பாய்ந்து.. படக்கென அவனுடைய ஆண்மையை விழித்தெழ செய்தது..!! அவ்வாறு எழுந்த ஆண்மையை அவன்மீது படர்ந்திருந்த மீராவின் பெண்மை அழுத்தி அடக்கியது..!!
அசோக் அணிந்திருந்த சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் விடுபட்டுப் போயிருக்க.. அதன் வழியே அவனது இடதுபுற மார்புக்காம்பு பழுப்பு நிறத்தில் பளிச்சென வெளித்தெரிந்தது.. மீராவுடைய கவனமும் அந்தக் காம்பிலேதான் நிலைத்திருந்தது.. தனது உதட்டாலே அந்த மார்புக்காம்பினை குறிபார்த்தாள்..!!
"ஹேய்.. நம்ம படத்துக்கு டைட்டில் டிஸைட் பண்ணியாச்சு தெரியுமா..??" அசோக் இன்னும் ஸ்க்ரிப்ட் நினைவாகவே இருந்தான்.
"என்ன டைட்டில்..?? ஆயிரம் உதைவாங்கிய அசோக்கு சிந்தாமணியா..??" மீராவிடமும் கேலி குறையவில்லை.
"ச்சேச்சே.. அ..அப்டிலாமா பேர் வைப்பாங்க..?? இது ஆக்சுவலா நானே.." அசோக் திணறலாக சொல்ல,
"ப்ச்.. கொஞ்ச நேரம் வாயை மூடிக்கிட்டு கம்முனு இருக்கியா..??" அவனுடைய தொடையை தனது தொடையால் அழுத்தி நசுக்கிக்கொண்டே மீரா சொன்னாள்.
"இதை மட்டும் சொல்லிக்கி.."
அசோக் சொல்லி முடிப்பதற்கு முன்பே.. மீரா தான் குறிவைத்ததை தனது உதடுகளால் கவ்வியிருந்தாள்.. அவனது மார்புக்காம்பினை அவ்வுதடுகளால் அழுத்தமாக மூடி, சர்ரென உறிஞ்சினாள்..!! அவ்வளவுதான்.. அசோக் சப்த நாடியும் ஒடுங்கிப் போனான்.. சப்தமே எழுப்பாமல் மீராவுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தான்..!! அவனது இடது கை.. மீராவின் இடுப்பை விட்டு கீழிறங்கி.. அவளது பின்புறத்தை தடவியது..!! அவனது இன்னொரு கை.. மீராவின் இடுப்புக்கு மேலே சென்று.. அவளது ஒருபக்க மார்பினை பற்றிக் கொண்டது..!! இதயத்தால் ஒன்றிணைந்த இருவரும்.. இப்போது தங்களது உடல்களையும் ஒன்றிணைக்கிற உத்வேகத்தில்.. அதற்கான செயல்முறையில் ஈடுபட ஆரம்பித்திருந்தனர்..!!
மரமேஜையில் திறந்து வைக்கப்பட்டிருந்த அசோக்கின் லேப்டாப்.. இன்னும் வெள்ளை நிறத்தில் வெளிச்சத்தை சிந்திக்கொண்டிருந்தது..!! திரையில் காட்சியளித்த அவன் எழுதிக்கொண்டிருந்த ஸ்க்ரிப்டின் உச்சியில்.. பச்சை நிறத்தில் அந்த டைட்டில் அட்டகாசமாய் பளிச்சிட்டது..!!
"அன்புள்ள ராட்சசி..!!"