Friday, 20 March 2015

சுகன்யா... 63

என் மாமா சிவதாணு என்னடான்னா, வீட்டுக்குள்ள தன் மருமவ சுந்தரி, இத்தினி வருஷம் கழிச்சி வந்ததே பெரிசுன்னு, வாயைப் பொத்திகிட்டு உக்காந்து இருக்காரு..

'சுகன்யா, உனக்கு புடவை பிடிச்சிருக்காம்மா... செயின் பிடிச்சிருக்காம்மான்னு', நாலு பேரு எதிர்ல எட்டுத்தரம் அந்த மெட்ராஸ்காரி மல்லிகா, கேள்வி மேல கேள்வி வேற கேட்டா? சுகன்யாவும் வெள்ளந்தியா... 'அத்தே... நல்லாருக்கு அத்தேன்னு குழையறா..' அறியாத பொண்ணு.. அவளைச் சொல்லி என்ன பிரயோசனம்...

மெட்றாஸ்காரிங்கதானே ரெண்டு பேரும்... நடுக்கூடத்துல உக்காந்துக்கிட்டு, ஆத்தாளும் பொண்ணுமா, நல்லா நடிச்சாளுங்க, ஆக்டிங் குடுக்க சொல்லியாத் தரணும்?

என் வீட்டுக்கு மருமவளா வரவேண்டியவளை, எவளோ ஊர் பேர் தெரியாதவ, இன்னைக்கு கொத்திக்கிட்டுப் போறா... கல்யாணத்துக்கு அப்புறமா சுகன்யாவுக்கு இருக்கற அத்தனை சொத்தையும், மொத்தமா மடியில அள்ளி கட்டிக்கிட்டு வேற போவப் போறா, இதபத்தி சொன்னா என் புருஷனுக்கு என் மேல கோவம் வருது.


சிவதாணு குடும்பமும், எங்க குடும்பமும், ஒண்ணுக்குள்ள ஒண்ணா, பொண்ணு கொடுத்து, பொண்ணு எடுத்துக்கிட்டவங்க; அவரு எங்களுக்கு ஒண்ணுவிட்டா உறவு மொறையா இருந்தாலும், சொத்துக்கு பங்காளியா இருந்தாலும், மொத்தத்துல, ஒரு காலத்துல, சொத்து எங்க ரெண்டு வீட்டுக்கும் பொதுவான பாட்டன் வீட்டுதுதானே? பொது சொத்தை இப்ப நடுவுல வந்த எவனோல்லா அடிச்சிக்கிட்டுப் போறான்.

என் உரிமையை காத்துல பறக்க வெச்சுட்டான் இந்த குமாரு. நானும் வெக்கம் கெட்டுப் போய் எல்லாத்தையும் நேத்து வேடிக்கை பாத்துக்கிட்டு வந்து நிக்கறேன். எனக்கு என் புருஷன் இந்த விஷயத்துல சப்போர்ட் பண்ணாதானே? நான் ஒரு கையால தட்டினா எங்கேயாவது ஓசை வருமா?

எவனோ ஒருத்தன் முந்தாநாள், சுகன்யா கையில மோதிரம் மாட்டிட்டான்... என் புள்ளை, சுகன்யாவுக்கு மொறை மாப்பிள்ளை, அவ கழுத்துல தாலிகட்ட வேண்டியவன், அதை நேத்து நேர்ல பாத்துட்டு, ஏங்கிப் போய் நின்னான். என் புள்ளை மனசுல இருக்கறது, அவனை பெத்த எனக்கு புரியலையா?

அந்த செல்வா, அப்படீ என்ன சம்பாதிக்கறான்? என் புள்ளையை விட கம்மியாத்தான் சம்பாதிக்கறான்... அவங்க வீட்டு நெலைமையும், அப்படி ஒண்ணும் ஒஹோன்னு ஒண்ணும் தெரியலை. என் புள்ளையும் வீட்டுல ஒத்தை புள்ளையாத்தான் இருக்கான்... பிக்கல் பிடுங்கல்ன்னு சுகன்யாவுக்கு என் வீட்டுல என்ன இருக்கு? என் சொத்தும்... என் புருஷன் சொத்தும், மொத்தமா என் புள்ளை சம்பத் ஒருத்தனுக்குத்தானே?

என் புள்ளை அந்த செல்வாவுக்கு எந்தவிதத்துல கொறைஞ்சுப் போயிட்டான்..? என் புள்ளை அந்த செல்வாவை விட கொஞ்சம் நிறத்துல மட்டுதான்... என்னைவிட நெறம் கம்மியா இருந்த என் புருஷனை என் தலையில வலுக்கட்டாயமா கட்டிவெச்சாங்க... ஆரம்பத்துல நான் இதை மனசுல வெச்சிக்கிட்டு, மொரண்டிக்கிட்டுத்தான் இருந்தேன்... அப்புறம் என் புருஷன் குணத்தைப் பாக்க பாக்க என் மனசு மாறிடலயா? ஆயிரம் ஆசை என் மனசுல ஒரு காலத்துல இருந்ததென்னவோ உண்மைதான்... இப்ப என் புருஷன் மூஞ்சி கொஞ்சம் சுருங்கினாலும், என் மனசு நொந்து போய் துடிக்கலையா?

என் புள்ளை ஏதோ கோபத்துல, மூர்க்கனாட்டாம், என்னமோ தப்பா, சுகன்யாவைப் பத்தி அன்னைக்கு பேசிட்டான். யாருமே, காரணமில்லாம ஒரு பொண்ணை தப்பா பேசக்கூடாது. அதை நான் ஒத்துக்கறேன்.

சம்பத்து தப்பு பண்ணான்னு தெரிஞ்சதும், என் மனசு தாங்காம, நானே பளார்ன்னு அவன் கன்னத்துல ஒரு அறை வுட்டேன். என் புள்ளை என்னை எதுத்துப் பேசாம நான் கொடுத்த அடியை வாங்கிக்கிட்டு சும்மாதானே இருக்கான். இப்ப சுகன்யாவை தப்பா பேசிட்டமேன்னு மனசுக்குள்ளவே என் புள்ளை மாய்ஞ்சு மாய்ஞ்சு போறான்.

மூணு மாசமா என் புருஷங்கிட்ட நான் தலை தலையா அடிச்சிக்கிட்டேன்... எங்க மாமா சிவதாணுவை போய் ஒண்ணுக்கு ரெண்டு தரமா, பாத்து பேசுங்க; சுகன்யாவை நம்ம சம்பத்துக்கு கேளுங்கன்னு; இந்த மனுஷன் என் பேச்சைக் கேட்டாரா? ம்ம்ம்... அப்படி கேட்டு இருந்தா இன்னைக்கு நான் ஏன் இப்படி பைத்தியக்காரி மாதிரி மனசுக்குள்ளவே எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு புழுங்கணும்?

என் பேச்சைக் கேக்க வேணாம்; இவர் ஃப்ரெண்ட்தானே அந்த ரகு; ரகுகிட்டவாவது எப்பவாவது மனசு விட்டு பேசி, உன் அக்கா சுந்தரி பெத்த பொண்ணை என் புள்ளைக்கு கட்டிக்கப் போறேன்னு, என் மனசுல இருக்கற ஆசையை வெளிப்படையா சொன்னாரா? அதுவும் இல்லே; துப்புக்கெட்ட மனுஷன், என் புருஷன்.

உன் வீட்டுல சம்பந்தம் பண்றதுக்கு உரிமை உள்ளவ நான்; அசலான் கிட்ட சம்பந்தம் பண்றதுக்கு முன்னாடி என்னை ஒரு வார்த்தை நீ கேட்டியாடா? நீ பண்ணது ஞாயமான்னு, குமாரை நேருக்கு நேர், என்னைக்கு இருந்தாலும் நான் கேக்கத்தான் போறேன். வயசுல என்னை விட ரெண்டு வருஷம் சின்னவன் தானே அவன்? ஒழுங்கு மொறையா எனக்கு அவன் பதில் சொல்லட்டும்.

இவரு சொல்ற மாதிரி, இப்ப இதையெல்லாம் யோசனைப் பண்ணி பண்ணி, என் மனசுக்குள்ளவே புலம்பித்தான் என்ன பிரயோஜனம்...? ஆனா நான் என்னப் பண்றது..? என் மனசு கேக்கமாட்டேங்குதே? ராணியின் மனது இடம் வலமாக, கட்சி கட்டிக் கொண்டு அலைந்தது.

"என்னங்க... அங்கப் பாருங்களேன்...! நம்ம சம்பத் யாருகிட்ட பேசிகிட்டு நிக்கறான்? கூட நிக்கறது சுகன்யா மாதிரில்லா இருக்குது?

"சுகன்யாவேதான்... பக்கத்துல உன் மாமா சிவதாணு பெஞ்சில உக்காந்து இருக்காரு... காலங்காத்தால... அவருகிட்ட உன் பஞ்சாயத்தையெல்லாம் ஆரம்பிச்சிடாதே...!! அவராவது நிம்மதியா இருக்கட்டும்..." நல்லசிவம் தன் மனைவியை எச்சரித்தார்.

"ஆமாம்... நீங்க நாட்டாமையை ஒழுங்காப் பண்ணியிருந்தா, என் புள்ளை, சுகன்யா கழுத்துல இந்நேரம் தாலியைக் கட்டியிருப்பான்." ராணி நொடித்துக்கொண்டாள்.

"ஏன்டீ, ராணி... மாமா பொண்ணைப் வழியிலப் பாத்தான்.. அதுல ஒண்ணும் தப்பு இல்லே.. விஷ் பண்ணாம, ஹாய்ன்னு சொன்னமா, உள்ளப் போய் ஜாகிங் பண்றதை வுட்டுட்டு இந்த கூறுகெட்டவன், இப்ப எதுக்கு சுகன்யா கிட்ட இளிச்சுக்கிட்டு நிக்கறான்? நல்லசிவத்தின் மனசு, தன் மகனின் செயலைக் கண்டு எரிச்சலடைந்தது.

இவன் ஒரு தரம் சுகன்யாகிட்ட அடிச்ச கூத்து பத்தாதா? ஊருக்கு போற இன்னைக்கு, திருப்பியும் எந்த வெனையாவது வெதைச்சிட்டு போனான்னா... அது அறுவடை பண்றது யாரு? அவர் தன் மனதுக்குள் ஆத்திரப்பட்டார்.

"சின்னஞ்சிறுசுங்க ஏதோ சிரிச்சிப் பேசிக்கிட்டு நிக்குதுங்க... இதுக்கு இப்ப நீங்க ஏன் கிடந்து பொலம்பறீங்க..?

மெல்ல நடந்து வந்த நல்லசிவமும், ராணியும், பார்க்கின் நுழைவாயிலை நெருங்கினார்கள். ராணி தன் உதட்டில், புன்னகை வழிய, அவர்கள் ஜோடியாக பக்கம் பக்கம் நின்று பேசிக்கொண்டு இருப்பதை, வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். நல்லசிவம் சிவதாணுவின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். 

"நல்லாயிருக்கியா சுகன்யா?" ராணி சுகன்யாவின் தோளில் தன் கையை போட்டுக்கொண்டாள். 

"ஃபர்ஸ்ட் கிளாஸ் அத்தே... அயாம் ஜஸ்ட் ஃப்ளையிங் இன் த க்ளவுட்ஸ்... நீங்க எப்படீ இருக்கீங்க அத்தே?" மகிழ்ச்சியாக சிரித்தாள் சுகன்யா.

"ம்ம்ம்... எனக்கென்னடா கண்ணு... சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கறதுதான் வேலை.. ஒடம்பு பெருக்குது... அதான் கொஞ்ச தூரம் தினம் நடக்கிறேன்..." ராணியும் சிரித்தாள்.

"டெய்லி நீங்க வாக்கிங் வருவீங்களா? தெரிஞ்சிருந்தா இந்த வாரம் பூரா நானும் பார்க்குக்கு வந்திருப்பேன்... நான் தினமும் ரெயில்வே ஸ்டேஷன் பக்கம் தனியா நடக்கப் போய்கிட்டு இருந்தேன்.."

"வாரத்துல நாலு நாள் கண்டிப்பா இந்த பக்க வருவோம்..."

"ம்ம்ம். நாளைக்கு காலையில அப்பா கூட நான் ஊருக்குப் போறேன்.. அப்புறம் திரும்பவும் தாத்தா வீட்டுக்கு வரும்போது உங்கக்கூட ஜாய்ன் பண்ணிக்கறேன்.." உற்சாகத்துடன் பேசினாள் அவள்.

"இனிமே கல்யாணத்துக்குத்தான் வருவே..." ராணி சிரித்தாள்.

"தெரியலை அத்தே... "அவர்" வீட்டுல கல்யாணம் எங்க வெச்சுக்கலாம்ன்னு பிரியப்படுவாங்களோ? வெட்கத்துடன் பேசினாள், சுகன்யா.

"கரெக்ட்தாம்மா.. நீ சொல்றது..." 

"சுகன்யா... வாட் அபவுட் ஜாகிங்... ஐ விஷ் டு கோ ஃபார் எ ஸ்லோ ரன்.." சம்பத் புன்னகைத்தான்.

"தாத்தா... நான் 'அத்தான்' கூட கொஞ்ச நேரம் ஜாக் பண்ணிட்டு வரட்டுமா? எனக்கும் கொஞ்ச நேரம் டயம் பாஸ் ஆகும்?" சம்பத்தின் உற்சாகம் தனக்கும் தொற்றிக் கொள்ள, தாத்தாவை கெஞ்சலாகப் பார்த்தாள் சுகன்யா. 

"ம்ம்ம்.. சீக்கிரமா வந்து சேரும்மா.. அங்க பாட்டி டிஃபன் செய்து வெச்சுட்டு, உனக்காக காத்துக்கிட்டு இருப்பா..!" சிவதாணு பேசுவதை சற்று நிறுத்தி தொண்டையை செருமிக்கொண்டார். சிவ சிவா என சிவத்தை ஒருமுறை துணைக்கு அழைத்தார். 

"டேய் சம்பத்.. ஒழுங்கா கொழந்தையை வீட்டுல திருப்பி கொண்டாந்து விட்டுட்டு போ; நீ பாட்டுக்கு இவளை அம்போன்னு எங்கயாவது நடு வழியிலே ரோட்ல நிக்கவெச்சுட்டு, 'தம்' அடிக்கப் போயிடாதே..!!" அவனுக்கு உரத்தக்குரலில் உத்திரவு போட்டார், சிவதாணு.

"தாத்த்த்தா.. என்ன தாத்தா சொல்றீங்க...நீங்க.. சம்பத் அத்தான் கோச்சிக்கப் போறாரு..?" சுகன்யா அழகாக தன் விழிகளை சுழற்றி கொஞ்சினாள்.

"சிவ... சிவா... அவன் அம்மா... நான் பாத்து பொறந்தவ... அவ புள்ளை என்னை கோச்சிக்குவானா.... நல்லா இருக்கும்மா நீ சொல்ற கதை...!!" 

"ம்ம்ம்.... ரெண்டு நாளா நான் என் நெஞ்சுக்குள்ள படற வேதனை எனக்குத்தானே தெரியும்... நானாவது... என் சுகன்யாவை நடுவழியிலே விட்டுட்டு போறதாவது..." சரியான புத்திக்கெட்ட கிழம் இது, மனதுக்குள் அங்கலாய்த்துக்கொண்டான், சம்பத்.

"மாமா.. நீங்க பேசறது மட்டும் நல்லாயிருக்கா? சுகன்யா என்ன இன்னும் குழந்தையா? என் புள்ளை சம்பத்தும் அவளுக்கு அசலா என்ன? அவளுக்கு அவன் சொந்த அத்தான்தானே.. அவனுக்குத் தெரியாதா? இதெல்லாம் நீங்க சொல்லணுமா?" ராணி சிவதாணுவின் கையை ஆதுரமாக பிடித்துக்கொண்டாள். 

"சிவ சிவா...! நீ தப்பா நெனைச்சுக்காதேடீ ராணீ... உன் புள்ளையை நான் கொறை சொல்லலை... நீயே எனக்கு கொழந்தைதான்!! சுகன்யா உன் பொண்ணு மாதிரி... அப்படியிருக்கும் போது சுகன்யா என்னைக்கும் எனக்கு கொழந்தைதானே?!"

"மாமா... பசங்க ரெண்டு பேரும் அவங்களா வீட்டுக்கு வந்து சேருவாங்க... இப்படியே எங்க கூடவே வந்து ஒரு கப் காஃபி சாப்பிடுங்களேன்... நீங்க எங்க வீட்டுக்கு வந்து ரொம்ப நாளாச்சே?" நல்லசிவம் அன்புடன் சிவதாணுவை அழைத்தார்.

"சிவ.. சிவா... இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்.. நான் வர்றதுக்கு முன்னாடி காப்பி குடிச்சுட்டுத்தான் வந்தேன். இன்னும் குளிக்கலை.. போய் குளிச்சிட்டுப் பூஜை பண்ணணும்... வர்றேம்மா ராணீ...." சொன்னவர் எழுந்து தன் வீட்டை நோக்கி மெல்ல நடக்க ஆரம்பித்தார். 

"சம்பத்... நாம இப்படியே ரெயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போய்ட்டு வரலாமா?" அவன் முகத்தை சுகன்யா ஆர்வத்துடன் பார்த்தாள்.

சுகன்யா நின்ற இடத்திலேயே ஜாக் பண்ண ஆரம்பித்தாள். குதித்துக்கொண்டிருந்தவளின் மார்பு திரட்சிகள், சீரான ரிதத்தில், மேலும் கீழுமாக அசைய ஆரம்பித்தன. துள்ளும் அந்த கவர்ச்சியை நேராக பார்க்க முடியாமல் தன் தலையை ஒரு நொடி தாழ்த்திக்கொண்டான் சம்பத். 

"ம்ம்ம்.. ஆஸ் யூ விஷ்... அயாம் ரெடி... எந்தப் பக்கம் வேணா போவலாம்... சுகன்யா!" சம்பத்தும் அவளும் மெல்ல ஓட ஆரம்பித்தார்கள்.


சுகன்யாவும், சம்பத்தும், ரயில்வே நிலையத்தை அடையும்வரை, நிதானமாக, சீரான வேகத்தில் ஓடினார்கள்.

"அத்தான்... ஜாகிங்கை நிறுத்திக்கலாமா...? ஏற்கனவே நான் தாத்தா கூட ஒரு அரை மணி நேரம் நடந்துட்டேன்..." சுகன்யாவுக்கு இலேசாக மூச்சிரைக்க ஆரம்பித்திருந்தது.

"சுகா.. நீ ரெகுலரா ஜாகிங் பண்ணுவியா? முழுசா பதினைந்து நிமிஷம், அசால்டா, என் வேகத்துக்கு ஈடு கொடுத்து ஓடி வந்தியே?" சம்பத் தன் கண்கள் விரிய அவளை வியப்புடன் பார்த்தான்.

"யெஸ்... காலேஜ்ல சேர்ந்ததுலேருந்தே, அஞ்சாறு வருஷமா, அயாம் ரெகுலர் இன் வாக்கிங் அண்ட் ஜாகிங்..." சுகன்யா தன் ஆரோக்கியமான ரோஜா நிற ஈறுகளும், வெள்ளைப் பற்களும் தெரிய சிரித்தாள்.

"இப்பத்தான் புரியுது... எனக்கு!!"

"என்னது"

"உன்னோட ஸ்மார்ட் அண்ட் அத்லெடிக் 'பாடியோட' ரகசியம்..." அவனும் தன் வெள்ளைப் பற்கள் தெரிய சிரித்தான்.

'க்க்கூம்.. ச்சும்மா கிண்டல் பண்ணாதீங்க அத்தான்... நான் அப்படி ஒண்ணும் ஸ்மார்ட்ல்லாம் இல்லே! நான் ஒரு சராசரி சுவாமிமலைப் பொண்ணுதான்..." கொஞ்சலாக பேசினாள், சுகன்யா.

சுகன்யா நீ என்னை அத்தான்... அத்தான்னு இவ்வளவு பாசமா, நமக்குள்ள இருக்கற உறவைச் சொல்லி கூப்பிடறயே? ஆனா நான் உன் திருமண வாழ்க்கையில இடைஞ்சலை உண்டு பண்ணப் பாத்தேன்... அது உனக்கு தெரிஞ்சா, என்னைபத்தி நீ என்ன நினைப்பே? சம்பத் தன் மனசுக்குள் வெட்கினான். அவன் உடல் மெல்ல சிலிர்த்தது. நடுங்கியது. சம்பத் கன்யாவுடன் ஸ்டேஷனுக்குள் மவுனமாக நடந்து கொண்டிருந்தான்.

***

ஸ்டேஷனில் வரப்போகும் ரயிலுக்காக ஒரு இளம் ஜோடி, அரச மரத்தின் கீழ் காத்திருந்தது. இருவர் முதுகிலும் லாப்டாப் பை தொங்கிக்கொண்டிருக்க அவர்கள் வெகு நெருக்கமாக நின்று, அவர்களுக்கு மட்டுமே கேட்கும் தொனியில், குசுகுசுவென பேசியவாறு, காலை இளங்காற்றின் குளிர்ச்சியை போக்கிக் கொள்ள, சூடான ஆவி பறக்கும் காஃபியை ருசித்துக் கொண்டிருந்தார்கள்.



அந்த இளைஞன் தன் காதலியிடம் என்ன சொன்னானோ தெரியவில்லை. அவன் முகத்தை தன் விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்த யுவதியின் முகத்தில் வெட்கம் சட்டென படர்ந்தது. அவள் கன்னம் சிவந்தது. கண்களில் சிரிப்புடன், தன் காதலனின் முதுகில் செல்லமாக ஓங்கி அடித்தாள் அவள்.

அவன் விழிகள் சுடராக பிரகாசித்துக்கொண்டிருக்க முகத்தில் அளவில்லாத ஆனந்தம் பொங்கிக் கொண்டிருந்தது. தன் காதலி கொடுத்த அடியை உதட்டில் சிரிப்புடன், விருப்பத்துடன் வாங்கிக் கொண்டான் அந்த இளைஞன். சுற்றுமுற்றும் பார்த்தவன் தன் அன்புக்குரியவளின் கையைப் பற்றி சட்டென தன் புறம் இழுத்தான். அவனை நெருங்கியவளின் கன்னத்தில் மென்மையாக ஒரு முத்தத்தைப் பதித்தான். முத்தத்தை வாங்கிக் கொண்ட அந்த இளம் பெண்ணின் முகத்தில் எல்லையில்லாத உல்லாசமும், மகிழ்ச்சியும் பொங்கி எழுந்தன.

சுகன்யாவின் பார்வை அவர்கள் மீது ஒரு கணம் தவழ்ந்து நின்றது. அவள் உதட்டில் புன்னகை ஒன்று மலர்ந்தது. 'லெட் தெம் பீ ஹாப்பி' சுகன்யாவின் தாராள மனசு முனகியது. அந்த இளம் ஜோடியை அவள் தன் மனமார வாழ்த்தினாள்.

சுகன்யாவின் பார்வை திரும்பவும் சம்பத்தின் முகத்தில் வந்து நிலைத்தது. அவன் முகத்திலும் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவின் பார்வை போன இடத்தையும், அந்த இளம் ஜோடி நடத்திய காதல் விளையாட்டையும் சம்பத்தும் பார்த்துக் கொண்டே நடந்தான்.

"அத்தான்.. ஜாலியா, சந்தோஷமா இருக்கறவங்களை பாக்கறதே நம்ம மனசுக்கு ரம்மியமா இருக்கு இல்லே?"

"யெஸ்... நான் இதைத்தான் சொல்ல நினைச்சேன்... நீ முந்திக்கிட்டே..!"

"சம்பத்... இப்ப உங்க கிட்ட பைசா எதாவது இருக்கா? வீட்டுக்கு பக்கத்துல இருக்கற பார்க் வரைக்கும்தானே போகப் போறோம்ன்னு நான் பர்ஸை எடுத்துட்டு வரல்லே.." தன் முகம் சற்றே சுருங்கியவளாக குரலில் வெட்க்கத்துடன் கேட்டாள், சுகன்யா.

"சுகா.. இப்ப உனக்கு என்ன வேணும்மா? உன்னை மாதிரி ஒரு அழகான பொண்ணு, எனக்கு இது வேணும்ன்னு கேட்டும், நான் உன் மாமா பிள்ளை, அதை உனக்கு வாங்கிக் குடுக்க முடியலைன்னா, இந்த ஊரும், நம்ம ஒறவு மொறையும் என்னைப் பாத்து சிரிக்கமாட்டாங்களா?" முகத்தில் சிறிய குழப்பத்துடன் பேசினான், சம்பத்.

"ம்ம்ம் அப்புறம்... வேற என்னச் சொல்லப்போறீங்க... அதையும் சீக்கிரமா சொல்லிடுங்க..?" சுகன்யா மனதில் குஷியுடன் சிரித்தாள்.

"ஊர்ல இருக்கறவன் சிரிக்கறதை விடு... என் பேத்தி கேட்டதை நீ வாங்கிக் குடுக்கலையாடான்னு உன் தாத்தா என்னை அடிக்கவே வந்துடுவார்... அவரை நெனைச்சாத்தான் மொதல்ல எனக்கு பயமா இருக்கு...!!"

"சேச்சே.. எங்க தாத்தா எவ்வளவு நல்லவர் தெரியுமா...?" சுகன்யா அவன் பேச்சை வெட்டினாள்.

"சுகன்யா... உனக்கு இந்த ரெயில்வே ஸ்டேஷன் வேணுமா? இல்லே சுவாமிமலையே வேணுமா...? என்ன வேணும் சொல்லு டியர்...! நீ கேட்டா.. நான் என் உயிரையும் உனக்கு குடுக்கறதுக்கு தயார்..." சினிமாவில் வரும் கதாநாயகனைப் போல் வசனம் பேசி சிரித்தான், சம்பத்.

"எனக்கு ஊரும் வேண்டாம்... உங்க உயிரும் வேண்டாம்... இப்ப எனக்கு சூடா ஒரு கப் காஃபி குடிக்கணும்.. அவ்வளவுதான்... அதை மட்டும் நீங்க முடிஞ்சா வாங்கிக் குடுங்க..." சுகன்யாவும் உரத்த குரலில் உற்சாகமாக சிரித்தாள்.

"ப்ஃபூ.. இவ்வளவுதானா?" அவன் சற்றே ஏமாற்றம் படிந்த முகத்துடன், தன் பர்ஸை திறந்தான். ஸ்டாலில் நின்றவனிடம் ஒரு நூறு ரூபாய் தாளை அலட்சியமாக உருவி நீட்டினான். திறந்த ஃபர்ஸில், மாம்பழ நிற நிச்சயதார்த்தப் புடவையில், முகத்தில் சிரிப்புடன், கண்களில் மகிழ்ச்சியுடன் சிரித்துக்கொண்டிருந்தாள், சுகன்யா. 

"அத்தான்.. அந்த போட்டோ என்னோடது மாதிரி இருக்கு. உங்கக்கிட்ட எப்படீ வந்தது? சுகன்யா தன் போட்டோவை அவன் பர்ஸில் பார்த்ததும் ஒரு கணம் திகைத்துப் போனாள்.

"உன்னோட போட்டோதான் சுகா..." சம்பத்தின் முகத்தில் சிறிய வெட்கம் எட்டிப்பார்த்தது.

சுகன்யா, சம்பத்தின் கையிலிருந்த பர்ஸை வாங்கி, அதில் செருகப்பட்டிருந்த தன் போட்டோவைப் பார்த்தாள். சரியான வெளிச்சத்துடன், முழு "டெப்த்" டுன் அந்த புகைப்படம் அழகாக எடுக்கப்பட்டிருந்தது. பாதி உள்ளங்கையளவு இருந்த அந்தப் படத்தில், தன் மார்பளவில், சுகன்யா, தாமரையாக மலர்ந்து, தன் முகம் நிறைய சிரிப்புடன் இருந்தாள்.

"என் நிச்சயதார்த்த படம் மாதிரி இருக்கே...?" சுகன்யா தன் முகத்தில் சிறிது குழுப்பமும், ஆச்சரியமாகவும் பேசினாள்

"சுகா... நான் நேத்து உன்னோட பங்கஷனுக்கு வந்தேன்... என் கிட்டவும் அருமையான கேமிரா இருக்கு... போட்டோகிராஃபி என்னோட ஹாபி... என் மனசுக்கு பிடிச்ச நொடியை, நான் படமா மாத்திட்டேன்..." சம்பத் முகத்தில் புன்னகை மாறாமல் பேசிக்கொண்டிருந்தான்.

"அத்தான்... என் போட்டோவை நீங்க ஏன் உங்க பர்ஸ்ல வெச்சிக்கிட்டு இருக்கீங்க...?" முகத்தில் வியப்புடன், குரலில் சிறிய நடுக்கத்துடன் கேட்டாள், சுகன்யா. தன் கையிலிருந்த போட்டோவை அவனிடம் தயக்கத்துடன் திருப்பிக்கொடுத்தாள்.

"சுகன்யா உன்கிட்ட நான் மனசுவிட்டு ஒரு பத்து நிமிஷம் பேசணும்... ப்ளீஸ்.. அப்படி ஓரமா இருக்கற அந்த பெஞ்சுல உக்காரலாமா? சம்பத்தின் கண்களில் மெல்லியக் கெஞ்சல் தவழ்ந்து கொண்டிருந்தது. சுகன்யாவால் அவன் கேட்டதை தட்ட முடியவில்லை.

இருவரும் காஃபியை வாங்கிக்கொண்டு, ப்ளாட்பாரத்தின் கோடியில், காலியாக கிடந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். ஆவி பறக்கும் காஃபியை, தன் உதடுகளை குவித்து, மெல்ல "ஸ்ஸ்ஸ்" என சத்தமெழுப்பி, சுகன்யா குடிக்கும் அழகை, தன் உள்ளத்தில் எழுந்த உவகையை அடக்க முடியாமல், ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தான், சம்பத்.

"சுகன்யா... அந்த காதல் ஜோடியை நீ பாத்தே இல்லையா?"

"யெஸ்... தே ஆர் வெரி க்யூட்..." மனதில் கள்ளமில்லாமல் பேசினாள் சுகன்யா.

"சூடான ஒரே கப் காஃபியை ரெண்டு பேரும் எவ்வளவு ஜாலியா மாத்தி மாத்தி குடிச்சாங்க. ரியலி... ஐ லைக்ட் தட் மொமென்ட்.. அவங்களைப் பொறுத்த வரைக்கும்... அந்த நொடியில... இந்த உலகமே அவங்களுக்கு இல்லாம போயிருக்கும்..."

ம்ம்ம்... சம்பத் மனசால இவ்வளவு தூரம் வாழ்க்கையின் எளிமையான அழகை ரசிக்கறவனா? இவனால தன் மனசுக்குள்ள ரசிச்சதை, இந்த அளவுக்கு தெளிவா வார்த்தைகளால வெளிக்கொணர முடியுமா? தன் உள்ளத்து உணர்வுகளை இன்னொருத்தருக்கு உணர்த்த முடியுமா? சுகன்யா மனதுக்குள் வியந்து போனாள்.

"சுகா... அந்த நொடியில அவங்க ரெண்டு பேரு மட்டுமே இந்த உலகத்துல வாழ்ந்துகிட்டு இருந்தாங்க.. அப்படீத்தான் நான் நெனைக்கிறேன்... மனசுக்குள்ள எந்தக் கவலையும் இல்லாம, தங்களை மட்டுமே அவர்கள் நினைச்சுக்கிட்டு இருந்தாங்க... அதைத்தான் அவங்க ரெண்டு பேரோட முகத்துல நான் பாத்தேன்... வாட் டூ யூ சே?" இப்போது அவன் முகம் சற்று சீரியஸாக இருந்தது போல் சுகன்யாவுக்கு தோன்றியது.

"ம்ம்ம்... யெஸ்...ஐ அன்டர்ஸ்டேன்ட் தட்..." இயந்திரமாக தன் மனதில் ஓடும் உணர்ச்சிகளை முகத்தில் காட்டாமல் பதிலளித்தாள் சுகன்யா.

சம்பத்தின் நயமான ரசிப்பை, அவனுடைய இயல்பான, யதார்த்தமான பேச்சை அவள் ஒரு புறத்தில் ரசித்தபோதிலும், மறுபுறத்தில் அவள் தன் மனதுக்குள் இன்னொரு விஷயத்தை நினைத்து குழம்பிக்கொண்டிருந்தாள்..

சம்பத் என் போட்டோவை ஏன் அவன் பர்ஸில வெச்சிருக்கான்? இதுக்கு என்ன அர்த்தம்...? அவன் ஏதோ மனசு விட்டு பேசணும்ன்னு சொன்னானே? அவன் எங்கிட்ட என்ன சொல்ல விரும்பறான்..? உடனடியாக அதைத் தெரிந்து கொள்ள அவள் மனம் துடித்தது.

சம்பத் மெல்ல தன் கையிலிருந்த காஃபியை உறிஞ்சி அவசரமில்லாமல் குடிக்க ஆரம்பித்தான். காஃபி நிஜமாகவே சுவையாக இருந்தது. அவன் முகத்தில் ஒரு அசாதாரண அமைதி குடிகொண்டிருக்க, பார்வை தொடுவானத்துக்கும் அப்பால் நிலைத்திருந்தது.

சம்பத் தன் கையிலிருந்த சுகன்யாவின் போட்டோவை ஒரு முறை உற்றுப் பார்த்தவன், திரும்பவும் போட்டோவை வெகு பத்திரமாக, தன் பர்ஸுக்குள் செருகி, அதை தன் ட்ரவுசர் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டான். ஒரு நீளமான பெருமூச்சு அவன் அடிவயிற்றிலிருந்து கிளம்பி வெளிவந்தது.

"சொல்லுங்க சம்பத், என்னமோ முக்கியமான விஷயம் பேசணும்ன்னு சொன்னீங்க...?

"சுகன்யா... என் மனசுல இருக்கறதை சுருக்கமா ஒரு வரியில எப்படி சொல்றதுன்னு எனக்குத் தெரியலை? சம்பத் சுகன்யாவின் முகத்தை ஆழ்ந்து நோக்கினான்.

தன் மனதை, தன் மனதில் உள்ள காதலை ஒரு பெண்ணிடம் சொல்ல எந்த ஆணும், எப்போதும், ஏன் தயங்குகிறான்? பெண் மறுத்துவிடுவாள் என்ற பயமா? மறுப்பை எதிர்கொள்ள தயக்கமா? சம்பத்தும் தன் மனதுக்குள் முதல் முறையாக ஒரு பெண்ணின் முன் பேசமுடியாமல் தவிப்பதை, தன் தயக்கத்தை நினைத்து சிரித்துக்கொண்டான். மனதின் சிரிப்பு உதடுகளிலும் வந்தது.

"அத்தான்... எதுவும் சொல்லாம இப்படீ என்னைப் பாத்து சிரிச்சா அதுக்கு என்ன அர்த்தம்?" சுகன்யா தன் பொறுமையை இழந்து கொண்டிருந்தாள்.

"ஸாரி சுகா... நான் உன்னைப்பாத்து சிரிக்கலை... நான் என்னையே, என் நிலைமையை நெனைச்சு சிரிச்சுக்கறேன்..."



"ப்ளீஸ்... நேரமாவுது... நீங்க சொல்ல நினைக்கறதை சீக்கிரம் சொல்லுங்க.." சுகன்யா சற்றே எரிச்சலைடைந்தாள். அவள் குரலில் அந்த எரிச்சல் லேசாக வெளிவந்துவிட்டது.

"அயாம் சாரி சுகா.. அயாம் பாதரிங்க் யூ... என் பேச்சு உனக்கு வினோதமா படலாம்.. ஆனா நான் சொல்றதெல்லாம் நிஜம்... உண்மை... முழுமையான சத்தியம்... நான் விளையாட்டுக்காக உன் கிட்ட பேசல.." சம்பத் நீண்ட பீடிகையுடன் மெல்லிய குரலில் பேசத் தொடங்கியவன், மீண்டும் தயங்கினான், பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, தொடுவானத்தையும் எதிரில் ஓடிக்கொண்டிருந்த முடிவில்லாத தண்டவாளத்தையும் மவுனமாக மாறி மாறி பார்க்க ஆரம்பித்தான்.

"சம்பத்... நீங்க சொல்ல வந்ததை சொல்லாமா, எதுக்காக இப்ப தண்டாவளத்தை அளந்துகிட்டு இருக்கீங்க...? வீ ஆர் கெட்டிங் டிலேய்ட்...யூ நோ... நீங்களும் இன்னைக்கு பெங்களூருக்கு கிளம்பணும் இல்லையா?"

சுகன்யா தன் கையிலிருந்த பேப்பர் கப்பை மெல்ல கசக்கிக்கொண்டே எழுந்தாள். வாட்சில் நேரத்தைப் பார்த்தாள். மணி காலை எட்டைத் தொட்டிருந்தது. 




Thursday, 19 March 2015

சுகன்யா... 62

"நீங்க மட்டும் இப்ப பழசையெல்லாம் ஏன் நெனைச்சு வருத்தப்படறீங்க.. ப்ளீஸ்...அழாதீங்க.. நீங்க அழறதை என்னால தாங்கமுடியாதுங்க..." சுந்தரியும் உணர்ச்சிவசப்பட்டாள்.

"என்னால இப்ப அழத்தான் முடியுது... அப்படியாவது என் மனசு கொஞ்சம் இலேசாகாதான்னு பாக்கறேன்.."

"ம்ம்ம்... நீங்க இப்ப வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம், நம்ம கொழைந்தையோட போக்குல மாறுதல் வந்திடிசீங்க... அவ முகத்துல நிரந்தரமா இருந்த ஒரு சோகம் போயிடிச்சி... எல்லார்கிட்டவும் சிரிச்சிப் சிரிச்சிப் பேசறா... நல்லாத் தெரிஞ்சவங்க கிட்ட அவ காட்டற சிடுசிடுப்பு, கொஞ்சம் கொறைஞ்சிருக்கு.. போவ போவ அவ பிடிவாதம், அடம் பிடிக்கறது, இந்தப் பழக்கம் எல்லாம் போயிடும்ன்னு நெனைக்கறேன்.."



"ம்ம்ம்... அப்படி நடந்தா ரொம்ப நல்லது..." அவர் குரலில் இருந்த வேதனை இப்போது குறைந்திருந்தது.

"ஆம்பிளை நீங்க அழுதா... என் மனசுல இருக்கற தைரியம் போயிடுங்க..." சுந்தரி அவர் கண்களை துடைத்தாள். அவரை இறுக அனைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

"சரிம்ம்மா..."

"ஒரு விஷயத்தை நீங்க நல்லாப் புரிஞ்சுகோங்க... சுகாவோட அடம் பிடிக்கற குணத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணுங்கறதுக்காக இதெல்லாத்தையும் உங்க கிட்ட சொன்னேன்... உங்களை நான் கொறை சொல்லணும்ங்கற எண்ணத்துல பேசலீங்க..." சுந்தரி, குமாரின் கன்னத்தை ஆசையுடன் வருடினாள்.

"சுந்து... வாழ்க்கையில மனுஷனுக்கு ஓரளவுக்கு பிடிவாதம் இருக்க வேண்டியதுதான்... நம்பளையே எடுத்துக்கோ... நான் குடிச்சுட்டு வந்து பண்ண கூத்துகளை தாங்க முடியாம, கடைசியா நீ என்னை ஒரு நாள் கோபத்துல அடிச்சே.. அதனால என் ஆம்பளை ஈகோ காயமடைஞ்சுது... என் பொண்டாட்டி, பொம்பளை என்னை நீ கை நீட்டி அடிச்சிட்டியேங்கற வெறுப்புல நான் வீம்பா உன் முகத்துல நான் முழிக்கக்கூடாதுன்னு, பிடிவாதத்தோட, ஊரை விட்டே ஓடிப் போனேன்."

"ப்ச்ச்...ப்ச்ச்ச்.."

"ஒரு வைராக்கியத்துல தனியா வாழ்ந்தேன்... வாழ்க்கையில கொஞ்சம் முன்னேறினன். பணம் சம்பாதிச்சேன்... இப்ப திருந்தி, வாழ்க்கையோட அர்த்தம் புரிஞ்சு, நல்ல நிலமையில நான் இருக்கேன்.. ஒருவிதத்துல நான் உன் கூடவே இருந்திருந்தால்... இந்த அளவுக்கு எனக்கு புத்தி வந்திருக்குமா, இந்த நிலைமைக்கு நான் வந்திருப்பேனா... தெரியலை."

"சாரிப்பா...நானும் உங்க கிட்ட இந்த அளவுக்கு பிடிவாதமா இருந்திருக்கக்கூடாது..." சுந்தரியின் குரல் கரகரத்தது.

"நீயும் பிடிவாதமா இருந்தே... நானும் வீம்பா இருந்துட்டேன்... ஒருத்தரை ஒருத்தர் பாக்காம, மனசுக்குள்ளவே ஆசையை வெச்சிக்கிட்டு, பைத்தியக்காரத் தனமா, ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்கறதா நெனைச்சு, ஒருத்தரை ஒருத்தர் ஏமாத்தி, ரெண்டு பேருமே தவிச்சுக்கிட்டு, நம்ம வாழ்க்கையோட இனிமையான, பதினைஞ்சு வருஷத்தை வீணாக்கிட்டோம்..."

"ப்ச்ச்... ஆமாங்க... வயசு ஆக ஆகத்தான் இதெல்லாம் புரியுதுங்க.." சுந்தரி வேதனையுடன் மருகினாள்

"அப்பா அம்மா சொன்னதை கேக்காம, நம்ம விருப்பம்தான் முக்கியம் அப்படீன்னு வீட்டை விட்டு வந்து கல்யாணம் பண்ணிகிட்டோம்... நம்ம ரெண்டு பேரோட அந்த புடிவாதகுணம் எங்கப் போவும், அது சுகாகிட்டவும் இருக்கு... பிடிவாதம் நம்ம பரம்பரை சொத்து... சுகாவை மட்டும் குறை சொல்லி என்னப் பண்றது...?" குமாரசுவாமி தன் மூக்கை உறிஞ்சினார்.

"உண்மைதாங்க... இவளும் எந்த சந்தர்ப்பத்துலயும் நம்பளை மாதிரி தன் வாழ்க்கையில முட்டாள்தனமா, எந்த தப்பும் பண்ணிடக்கூடாதுன்னு நான் பயப்படாத நாளே இல்லை..."

"ஒருத்தருக்கு ஒருத்தர் கொஞ்சம் விட்டுக்குடுத்துப் போனாத்தான், குடும்ப வாழ்க்கையில சந்தோஷமா இருக்கமுடியும்.. சுகன்யா இதை புரிஞ்சிகிட்டா போதும், அவளுக்கு ஒரு குடும்பம், குழந்தைன்னு ஆனா சரியாகிடுவா... அந்த செல்வா நல்லப்பையனாத்தான் தெரியறான்... ஆனா மனசுவிட்டு கலகலப்பா பேசமாட்டேங்கறான்.. சீக்கரத்துல சிரிக்க மாட்டேங்கறான். நீ என்ன நினைக்கறே சுந்து...?

"கொஞ்சம் ரிசர்வ்ட் டைப்போன்னு தோணுது? சுந்தரி அவரை ஆமோதித்தாள்.

"எப்படியோ... இன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உசுரா இருக்காங்க; அவங்களுக்குள்ள இப்படியே சந்தோஷமா இருந்தா சரி...!!"

"இவளுக்கு கல்யாணம் நடந்து, போற எடத்துலயும் பொறந்த வீட்டுல நடக்கற மாதிரி, பிடிவாதம் பிடிச்சா, அவ வாழ்க்கையிலேயும் பிரச்சனைகள் வருமேன்னு நெனைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு.. அவ தலையெழுத்துல என்ன எழுதியிருக்கோ.. அந்த சுவாமிமலையானுக்குத்தான் வெளிச்சம்" சுந்தரி தன் கணவனின் அணைப்பிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.

"சுந்து... நல்லதையே நினைப்போம்... அதைத் தவிர நாம வேற என்ன செய்ய முடியும்... "

"குமரு... நான் சொல்றதை கேளுப்பா... சென்னையில நல்ல வீடு கிடைக்கற வரைக்கும் நீயும் சுகாவோடவே இரேம்பா..!! கெஸ்ட் ஹவுஸுல நீ ஏன் தனியா இருக்கணும்? வேணி வீட்டுலதான் ஒரு ஹால் இருக்கு, ஒரு தனி ரூம் இருக்கு... அந்த வீட்டுல நீங்க ரெண்டு பேரும் தாராளமா இருக்கலாம்..."

"ம்ம்ம்... நல்ல யோசனைதான்..."

"இங்கேருந்து நேரா கெஸ்ட் ஹவுஸ் போங்க... சுகாவும் கூட வந்தா அங்க உங்க ரூமை காலி பண்றதுக்கு கூட மாட ஒத்தாசையா இருப்பா... அங்கேயிருக்கற உங்க துணிமணியெல்லாத்ததையும் எடுத்துக்கிட்டு, ஒரே தரமா சுகா ரூமுக்கு போயிடுங்க..."

"ரைட்... அப்படியே செய்யறேன்... கெஸ்ட் ஹவுசுக்கு, காலையில எழுந்ததும் போன் பண்ணிட்டா, பிரச்சனை எதுவும் இருக்காது..."

"தேங்க்ஸ்ங்க... நான் சொன்னதை உடனே கேட்டுடீங்களே?"

"சுந்து... நீயும் என் கூடவே சென்னைக்கு வந்துடும்மா.. இனிமே உன்னை விட்டுட்டு என்னால தனியா இருக்க முடியாது.. தினம் தினம் உன்னைப் பாக்காம, என் உயிரே போயிடும் போல இருக்கு..." சுந்தரியை வலுவாக அணைத்தார் குமார். அவள் உதடுகளில் ஓசையெழுப்பி முத்தமிட்டார்.

"நாளைக்கே உங்க கூட வந்துடுவேங்க... ஆனா நான் வேலை செய்யறது கவர்மெண்ட் ஸ்கூலுங்க; முறைப்படிதானேங்க வேலையையும் விட முடியும்... திங்கக்கிழமை மொத வேலையா நான் ரெஸிக்னேஷன் லெட்டர் எழுதிக் குடுத்துடறேன்.. அதுவே மூணு மாச நோட்டீஸ் ஆயிடும்..."

"மணி என்னாவுதும்மா"

"ம்ம்ம்... பதினொன்னு ஆவுது..."

"ஒரு டீ போட்டுத் தர்றியாம்மா?"

"ஹூக்கும்... இப்ப டீ குடிச்சா அப்புறம் எப்பத் தூங்கறது?

"ப்ளீஸ்... சுந்து... எனக்கு துக்கமா இருந்தாலும் டீ குடிக்கணும்; மகிழ்ச்சியா இருந்தாலும் டீ குடிக்கணும்..."

"குமரு... இப்ப நீ ஹேப்பியா இல்லையா?" சுந்தரி தன் கணவனின் அருகில் சாய்ந்து படுத்தாள். இடது காலைத் தன் கணவனின் இடுப்பில் போட்டுக்கொண்டாள். அவள் அடிவயிறுயும், அந்தரங்கமும், அவர் இடுப்பை அழுத்தமாக உரசின. அவள் உதடுகளில் மீண்டும் ஒரு கள்ளப்புன்னகை குடியேறியிருந்தது.

"ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்..." சுந்தரியை வெறியுடன் இறுக்கி முகமெங்கும் முத்தமிட்டார், குமாரசுவாமி.

"போதுங்க.. கன்னமெல்லாம் எரியுது எனக்கு... வெறி நாய் மாதிரி கடிச்சிக்கிட்டே இருக்கீங்க... விடுங்க என்னை..." அவள் அவர் பிடியில் திமிறினாள். திமிறி திமிறி அவர் மார்பில் தன் முலைகளை அழுத்தி உரசினாள்.

"ப்ஸ்... ப்ஸ்.. இச்ச்.. இச்ச்ச்.."

"இப்ப டீ குடிச்சா உங்களுக்கு தூக்கம் வருமா?" சுந்தரி தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள்.

"மணி பதினொன்னுதானே ஆவுது... இன்னொரு ஷோ ஓட்டிட்டா தன்னால தூக்கம் வந்துடும்..." சுந்தரியின் மார்பில் குமாரின் கை படர்ந்தது. அவள் முலைகளை கொத்தாகப் பற்றி இதமாக அழுத்தியது. உதடுகள் சுந்தரியின் உதடுகளை மீண்டும் மீண்டும் தேடிக் கவ்விக்கொண்டன.

"கையை எடுங்க; நாட்டுல ஏகத்துக்கு பவர் கட் ... அவன் அவன் ஒரு ஷோ ஓட்டறதுக்கே அவஸ்தை படறான்... வேத்து விறுவிறுத்து போயிடுதாம்... உங்களுக்கு செகன்ட் ஷோ கேக்குது..." சுந்தரி கிண்டலாக சிரித்தாள்.

"யார் சொன்னது..." குமார் சுந்தரியின் இடது முலையை தன் வாயில் கவ்வி சுவைக்க ஆரம்பித்தார்.

"உங்களுக்கு எதுக்கு இப்ப அதெல்லாம்..."

"சொல்லுடீ... இப்படித்தான் நீங்க பொம்பளைங்க... பாதி கதையைச் சொல்லி ஆம்பளையை ஏத்திவிடறது... மீதியை சொல்லாம மனுஷனை வெறுப்பேத்தறது... அப்புறம் ஆம்பளை அலையாறன்னு ஊர் பூரா சொல்லிக்கிட்டு திரியறது..." அவர் அவள் முதுகை கிள்ளினார்.

"வீட்டுக்கு வீடு வாசப்படி... என் கூட வேலை செய்யறவளுங்க, அவங்க சோகக் கதையை மதியம் லஞ்ச்ல்ல சொல்லி சொல்லி தங்க ஆத்தாமையை அடுத்தவ தலையில ஏத்தி விடுவாளுங்க... அதைக் கேட்டுட்டு இன்னொருத்தி அவ வீட்டுல போய் ஆடுவா... பொட்டைச்சிங்க பேச்சு அப்படி ருசிக்குது உங்களுக்கு..." சுந்தரி வெட்க்கத்துடன் சிணுங்கினாள். அவரை வலுவாக தன்னிடமிருந்து விலக்கினாள்.

"சுந்து... நாளைக்கு ராத்திரி சுகா இங்க வந்துடுவாடீ...வயசுக்கு வந்த பொண்ணை கூடவே வெச்சிக்கிட்டு உன்னை கொஞ்சறதுக்கு மனசு கஷ்டப்படுதுடீ.." ஏக்கத்துடன் அவர் அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார். மெல்ல தன் கையை, சுந்தரியின் மார்பில் தவழவிட்டார்.

குமாரசுவாமியின் கையை தன் மார்பிலிருந்து விருட்டென விலக்கிய சுந்தரி, கட்டிலில் இருந்து குதித்தாள். தலை முடியை சுருட்டி கொத்தாக முடிந்து கொண்டாள். நைட்டியில் தன்னை நுழைத்துக்கொண்டாள். டீ போடுவதற்காக சமையலறையை நோக்கி வேகமாக நடந்தாள்.

தை மாதம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. அன்று நான்காவது வாரத்தின் முதல் நாள். சுவாமிமலை பின் பனிகாலத்தை எதிர் நோக்கி விரைவாக நகர்ந்து கொண்டிருந்தது. காலை ஆறரை மணிக்கு பின்னும், பனி விலகியும் விலகாமலும், சூரியன் தன்னை பூமிக்கு காட்டியும் காட்டாமலும், கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தான்.

ஜில்லென்ற காற்று உடலை வருடிக்கொண்டு செல்ல, தெருவோர செடிகள் இரவு முழுதும் பனியில் நனைந்து, தங்கள் அழுக்கை நீக்கிக்கொண்டு, இளம் பச்சையில் சிரித்துக்கொண்டிருந்தன.

சிவதாணு தன் பேத்தியுடன், வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்கில், தினமும் நடக்கவேண்டும் என்று மருத்துவரின் அறிவுறுத்தலால், நானும் நடக்கிறேன் என்ற பெயரில், பார்க்கை மெதுவாக நாலு சுற்று சுற்றிவிட்டு, மவுனமாக திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கெழவனும் கெழவியும் இந்த பத்து நாளா ரொம்ப சந்தோஷமா இருந்தோம்..! மருமக இத்தனை வருசம் கழிச்சி, என் மேல இருக்கற கோபத்தையெல்லாம் தூக்கியெறிஞ்சுட்டு, வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா. பட்டுன்னு வீட்டுக் கூடமே வெளக்கேத்தின மாதிரி நெறைஞ்சு போச்சு.

'மாமா...மாமான்னு' அவ பாசமா வாய் நெறையக் கூப்பிடும் போது, மனசுக்குள்ள அப்படி ஒரு தித்திப்பா இருக்கு... கை பதம் சுத்தமா இருக்கு... அவ ஆத்தாகிட்ட ட்ரெய்னிங் எடுத்திருப்பா போல இருக்கு... ஆக்கிப் போடற கூட்டு கொழம்புல அப்படி ஒரு ருசி... உப்பு கம்மி... புளி தூக்கல்... ஹூம்.. ஒரு கொறை சொன்னா, ருசிச்சித் திண்ணஎன் நாக்கு அழுகிப் போயிடும்...

என் மருமவ சுந்தரி கூடவே வீட்டுக்குள்ள நுழைஞ்ச பேத்தி சுகன்யாவும், வரும்போதே, 'தாத்தா... எனக்கு கல்யாணம்' ன்னு மகிழ்ச்சியான சேதியை சொல்லிக்கிட்டே வந்தா. என் பொண்டாட்டிக்கு ஆனந்தம் தாங்கலை.. கண்ணுல தண்ணியோட தன் கையில கழுத்துல கெடந்ததையெல்லாம், கழட்டி மருமவ கழுத்துலயும், பேத்தி கழுத்துலயும் போட்டு அழகு பாத்தா...

சலிச்சிப்போயிருந்த எங்க வாழ்க்கையில சந்தோஷம் சட்டுன்னு தலை காட்டுச்சு. மிச்சம் இருக்கற இந்த வாழ்க்கையில ஏதோ அர்த்தம் இருக்கறதா தோணுச்சு...! நாளைக்கு இந்த நேரத்துக்கு என் கொழந்தை சென்னைக்குப் போய்க்கிட்டே இருப்பா...

வீடே வெறிச்சோடிப் போயிடும். சிவ சிவா...! சிவதாணு பெருமூச்செறிந்தார். சுகன்யா மவுனமாக அவரை ஓரக்கண்ணால் பார்த்தாள். தன் தாத்தாவின் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்களை அவள் உணராமலில்லை.

நானும், கனகாவும் திரும்பவும் ஒருத்தர் மூஞ்சை ஒருத்தர் பாத்துக்கிட்டு செக்குமாடு மாதிரி நாலு சுவத்துக்குள்ள சுத்தி சுத்தித்தான் வர்றணுமா? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி...? அவர் மனதுக்குள் எண்ண அலைகள் இடைவெளியில்லாமல் எழும்பிக்கொண்டிருந்தன.

"போங்க தாத்தா... ஏன் இப்படி எப்பவும் உம்முன்னு இருக்கீங்களோ நீங்க... சிரிக்கவே மாட்டேங்கறீங்க.." சுகன்யா சிணுங்கினாள். சிவதாணு பேத்தியின் விரல்களை பற்றிக்கொண்டு மெல்ல நடந்தார்.

தலையை வகிடெடுக்காமல் பின்புறம் வாரி, முடியை ரப்பர் பேண்டில் இறுக்கியிருந்தாள், சுகன்யா. புருவங்களின் மத்தியில், உற்றுக்கவனித்தால் மட்டுமே தென்படக்கூடிய அளவில், சிறிய நீல நிற ஸ்டிக்கர் பொட்டு. வலது கையில் நீல நிறத்தில் ஸ்ட்ராப்பில் வாட்ச்...உடலில் நீல நிற ட்ராக் சூட், காலில் ஜாகிங் ஷூ, காலை இளம் வெய்யிலில் சுகன்யாவின் முகம் தங்கமாக மின்னிக்கொண்டிருந்தது.

"தாத்தா... எதாவது பேசுங்களேன்.. எனக்கும்தான் உங்ககூடவே இருக்கணும்ன்னு ஆசையா இருக்கு? ஆனா வேலைக்கு போகணுமில்லே" சுகன்யா சிவதாணுவை கொஞ்சினாள்.

ஒரு வாரத்துக்கும் மேலாக, தாத்தா பாட்டியின் அருகாமை தந்த சுகத்தை விட்டுவிட்டு, சென்னைக்கு போகவேண்டியதை நினைத்து, அவளும் தன் மனசுக்குள் காலையில் எழுந்ததிலிருந்தே வெளியில் சொல்லாமல் மருகிக்கொண்டிருந்தாள்.

"ம்ம்ம்... நீதான் என்னை விட்டுட்டு போவப்போறீயேமா? நான் உங்கிட்ட பேசமாட்டேன்.." கரகரத்து உற்சாகமில்லாமல் வந்தது அவர் குரல்.



"தாத்தா... நீங்களும் பாட்டியும் நாளைக்கு என்கூடவே சென்னைக்கு வந்துடுங்க... என் ரூம்ல என் கூட இருங்களேன்... யார் வேணாங்கறது..?" சுகன்யாவும் சுரத்தில்லாமல் சிரித்தாள்.

"அதெல்லாம் சரிப்படாதுடா கண்ணு.. உங்கப்பாவை சீக்கிரமா மெட்றாஸ்ல கொஞ்சம் பெரிசா ஒரு வீடு பாக்கச்சொல்லும்மா.. நீயும் அங்க எங்ககூட வந்துடு..."

"அப்பா வீடு பாத்துக்கிட்டுத்தான் இருக்கார்...தாத்தா..."

"ம்ம்ம்... அவனும்தான் பாக்கறான். பாக்கறான்.. பாத்துக்கிட்டே இருக்கான்.. சிவ சிவா.." முனகினார், சிவதாணு.

அன்றைய காலைப்பொழுது தனக்காக சில ஆச்சரியங்களையும், அதிர்ச்சியையும், தன்னுள் நிறைத்துக்கொண்டு விடிந்திருக்கிறது என்றறியாமல் தாத்தாவுடன் பார்க்கிலிருந்து வெளியில் வந்தாள், சுகன்யா.

பார்க்கின் வாயிலில் நின்ற செடிகளில் பூக்கள் மெல்லியப் பனிப்போர்வை போர்த்திக்கொண்டிருந்தன. குழந்தையின் குதூகலத்துடன் சுகன்யா இலைகளின் மேல் படிந்திருந்த பனிநீரை தன் விரலால் சிட்டிகை போட்டு, அந்தரத்தில் அந்த பனி நீரை எகிறவிட்டு, எகிறிய நீர், மெல்லிய பன்னீர்த் துளிகளாக சிதறி தன் உடலை நனைக்க, அந்த குளிர்ச்சியில், அவள் உடலும், மனமும் சிலிர்த்துக் கொண்டிருந்தாள். 

"ஹாய்..! சுகன்யா...!" முதுகுக்குப் பின்னாலிருந்து வந்த உற்சாக குரல் கேட்டு திரும்பினாள் அவள்.

உடலின் ஒவ்வொரு அங்கத்திலும் இளமை துள்ள, பார்க்கும் பார்வையிலும் தன் ஆண்மை பொங்கி வழிய, உதடுகளின் ஓரத்தில் ஒரு அலட்சியத்துடன், தன் வலுவான தொடைகளை அழுத்திப்பிடிக்கும் கருப்பு ஷார்ட்ஸ், மார்பில் வெள்ளை டீ ஷர்ட், கழுத்தில் மின்னும் மெல்லிய தங்க சங்கிலி, ஜாகிங் ஷூ சகிதமாக பார்க்கினுள் நுழைந்து கொண்டிருந்தான், சம்பத்.

பொழுது விடிவதற்குள்ளாகவே, நீட் அண்ட் க்ளீன் ஆக ஷேவ் செய்திருந்த சம்பத்தின் கழுத்திலும், நெற்றியிலும் ஓரிரு வியர்வை முத்துக்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. அவன் உடலில் ஆங்காங்கு வழியும் வியர்வையைக் கண்டதும், அவன் சற்று நேரமாகவே ஜாகிங் செய்து கொண்டு இருக்க வேண்டுமென எண்ணினாள், சுகன்யா.

அந்த சிறிய வியர்வை முத்துகள் சம்பத்தின் கவர்ச்சியான முகத்துக்கு மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தன. அவன் பளிச்சென்று தன் வெண்ணிறப் பற்கள் தெரிய இனிமையாக சிரித்துக்கொண்டிருந்தான்.

'எந்தப் பொண்ணு இவனைப் பாத்தாலும், திரும்பவும் ஒரு தரம் இவனை ஏறெடுத்து பாக்காம போகமாட்டான்னு' செல்வாவை வெறுப்பத்தறதுக்காக சீனு முந்தாநாள் கமெண்ட் அடிச்சது கரெக்ட்தான். சம்பத்தின் ஆண்மையின் கம்பீரத்தைக் கண்டு மனதுக்குள் ஒரு நொடி சிலாகித்தாள், சுகன்யா.

ம்ம்ம்.. என் மனசுக்குள்ள இந்த மாதிரியான எண்ணங்கள் திடீர்ன்னு ஏன் வருது? சுகன்யா ஒரு நொடி திகைத்தாள். காலேஜ்ல படிச்ச காலத்துலயும் சரி; சென்னைக்குப் போய் வேலையில ஜாய்ன் பண்ணதுக்கு அப்புறமும் சரி; இதுவரைக்கும் எந்த ஆம்பிளையைப் பத்தியும் இப்படியெல்லாம் என் மனசு ஆராய்ஞ்சதே இல்லையே?

வேணிகூட மார்க்கெட், ஷாப்பிங் போவும் போது, வாக்கிங் போகும் போது எங்களை யாராவது பாத்து திருட்டுத்தனமா சிரிச்சா, கமெண்ட் பாஸ் பண்ணா, அவ மூடுல இருந்தா, ஜாலியா எப்பவாவது, பசங்களைப் பாத்து திருப்பி கமெண்ட் அடிப்பா... அவனுங்க பயந்து ஓடற மாதிரி எதாவது பண்ணுவா...

என்னடீ இது வேணீன்னு கேட்டா, எனக்கு கல்யாணம் ஆயிடிச்சிடி... இப்படி ஜாலியா கேலி பண்ண அது ஒரு சுதந்திரம்ன்னு சொல்லி சிரிப்பா.. இது எனக்கு ஒரு ஸ்டேட்டஸ்.. ன்னு சொல்லுவா.. அப்ப அவ சொல்றதை பத்தி அதிகம் கவலைப்பட்டதில்லே... அவளை நான் அவ சொல்றது எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டதுமில்லே..

கல்யாணம் ஆகாத உங்களை மாதிரி விடலைகளை விட நான் ஒரு படி மேலே இருக்கேங்கற தைரியம் எனக்குன்னு அவ சொல்லுவா... என்னை ஈஸியா ஒருத்தன் கவுத்துட முடியாதுன்னு சொல்லுவா; எனக்கு செக்ஸ்ன்னா என்னன்னு தெரியும்; ஆம்பிளைன்னா என்னன்னு தெரியும்ன்னு சொல்லுவா; ஆம்பிளையின் தொடுகை எப்படிப்பட்டதுன்னு எனக்குத் தெரியும்பா; அவன் பாக்கற பார்வையின் அர்த்தம் என்னன்னு தெரியும்ன்னு சொல்லுவா; அவன் என் கிட்ட என்ன எதிர் பார்க்கிறான் இது தெரியும்ன்னு சொல்லுவா; எவனை எது வரைக்கும் அனுமதிக்கலாம்ன்னு எனக்குத் தெரியும்ன்னு சொல்லுவா...

நான் செல்வாவைத் தவிர வேற எவனையும் சரியா நிமிர்ந்து இந்த ஆங்கிள்ல எப்பவும் பாத்ததுகூட கிடையாது. ஆனா என்னையும் அறியாம இன்னைக்கு நான் ஏன் சம்பத்தை இப்படி நிமிர்ந்து பாத்து அணுஅணுவா அவனை ஆராயறேன்? இவன் என் சொந்தக்காரன்... என் அத்தைப்பிள்ளைங்கற உரிமையில, எந்த விதமான பயமும் மனசுல இல்லாம, அவனை நிமிர்ந்து பாக்கறேனா?

எனக்கு நிச்சயதார்த்தம் ஆயிடுச்சி... எனக்கும் சொசைட்டில ஒரு ஸ்தானம் கிடைச்சாச்சு; இது எனக்கு ஒரு சேஃப் ஸ்டேட்டஸ் அப்படீன்னு நெனைக்கிறேனா? இனிமேல் மத்த ஆண்களால் எனக்கு எதுவும் தொந்தரவு இல்லேன்னு நான் நெனைக்கிறேனா? அட் த லீஸ்ட், இவனால எனக்குத் தொந்தரவு வராதுன்னு நான் நினைக்கிறேனா? அவள் தன் தலையை ஒருமுறை வேகமாக ஆட்டிக்கொண்டாள்.

"ஹாய்... வாட் எ சர்ப்ரைஸ்... குட்மார்னிங் சம்பத்...!! சுகன்யா நட்பாய் சிரித்தாள். தன் வலது கையை அவனிடம் நீட்டினாள்.

சம்பத் ஈஸ் மை நியு ஃப்ரெண்ட்.. அண்ட் ஹீ ஈஸ் ரியலி ஹாண்ட்சம்... எப்பவும் டிப்..டாப்பா டிரஸ் பண்ணிக்கிட்டு ஃப்ரெஷ்ஷா இருக்கானே? எப்பவும் உற்சாகமா சிரிச்சிக்கிட்டே இவனால எப்படி இருக்க முடியுது? இவன் கிட்ட இளமையும், ஆண்மையும் என்னமா துள்ளுது...? மேன்லியா இருக்கானே? சுகன்யாவின் மனதுக்குள் இந்த எண்ணங்கள் சட்டென மின்னலிட்டு ஊர்வலம் போக, ஏனோ தெரியவில்லை, ஒரு நொடி உற்சாகத்தில் குதூகலித்தது அவள் மனசு.

"குட்மார்னிங்" கம்பீரமாக அவளை விஷ் செய்து கொண்டே, அவள் கையை இறுக்கமாக பற்றி குலுக்கிய சம்பத்தின் உடல் சிலிர்த்தது. 'சுகன்யா.. ஐ லவ் யூ டியர்...!' காலையில் பூத்த அழகான ரோஜாவாக ... குதூகலத்துடன் நின்ற அவளைத் தனியாக, பார்த்ததில் அவன் மனதுக்குள் சந்தோஷ கூச்சல் கிளம்பியது.

"நீங்க மட்டும்தான் வந்தீங்களா...?" தன் கண்களை சிமிட்டி, உதடுகளை மெல்ல சுழற்றி, நுனி நாக்கை வாய்க்கு வெளியில் நீட்டி, வெகு இயல்பாக சிரித்தாள், சுகன்யா.

"நோ.. நோ... அப்பாவும்...அம்மாவும்... அதோ... பின்னாடி வந்துகிட்டு இருக்காங்க..." அவன் திரும்பி அவர்களைப் பார்த்தான்.

சம்பத்துக்கு இலேசாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தது. சற்றுத் தூரத்திலேயே, சிவதாணுவும், சுகன்யாவும் பார்க் வாசலில் நின்றிருப்பதை அவன் கவனித்துவிட்டான். சுகன்யா அங்கிருந்து கிளம்புவதற்கு முன் அவளைப் பிடித்துவிடவேண்டும் என்ற நோக்கத்திலேயே, தன் பெற்றோர்களை பின்னால் விட்டுவிட்டு, அவன் தான் நடக்கும் வேகத்தை அதிகமாக்கி, வேகமாக ஓட்டமும் நடையுமாக அங்கு வந்திருந்தான். 

சுகன்யாவின் குணத்தை, தானே நேருக்கு நேர் பார்த்து அடையாளம் கண்டு கொண்ட பின், ஒரு பெண்ணுக்கு பெண்ணாக, அவளைப் பற்றி ராணி ஒரு புறம் சந்தோஷப்பட்ட போதிலும், அவளுக்கு அத்தை என்ற முறையில், அவளைத் தான் மருமகளாக, தன் மகனின் மனைவியாக, தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பை, வெகு சுலபமாக தான் இழந்துவிட்டதை நினைக்கும் போது வருத்தமும் ஏற்பட்டது.

இந்த நிச்சயதார்த்ததால், தன் மகனுக்கு சுகன்யா மூலமாக வரவேண்டிய தன்னுடைய பழைய குடும்ப சொத்து கைவிட்டு நழுவிவிடுகிறேதே என்ற உரிமைப் பிரச்சனையும், பெண்ணுக்கே உரிய வயிற்றெரிச்சலும், ஒன்றாக சேர்ந்து, நேற்றிலிருந்து அவள் தன் மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தாள்.

"சம்பத், நீ ஒடற வேகத்துக்கு எங்களால நடக்க முடியாதுடா; நானும் அப்பாவும் மெதுவா பார்க்குக்கு வர்றோம். நீ வேணா முன்னாடிப் போய் பார்க்குல ஜாகிங் பண்ணிக்கிட்டு இரு, நடந்து கொண்டே பேசிய ராணிக்கு மூச்சிறைத்தது.

"சரிம்ம்மா..." சம்பத் தான் நடக்கும் வேகத்தை அதிகமாக்கினான்.

"என்னங்க... நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேக்கறீங்களா?" ராணி மெதுவாக தன் மனதில் அடித்துக் கொண்டிருக்கும் உரிமைப் புயலைப் பற்றி பேச ஆரம்பித்தாள்.

"ம்ம்ம்.. சொல்லு..." கொஞ்ச நேரம் மனசுக்குள்ள ஆண்டவன் பேரை சொல்ல விடமாட்டேங்கறா, மனசுக்குள் அவருக்கு எரிச்சல் கிளம்பியது. அவர் நடக்கும் போது, சிவ நாமத்தை உள்ளத்துக்குள் உச்சரித்துக்கொண்டே நடப்பது வழக்கம்.

"இந்த குமாரும், சுந்தரியும், சுகன்யாவை நம்ப சம்பத்துக்கு தரமாட்டேன்னு சொன்னதுக்கு சரியான காரணத்தை கடைசிவரை சொல்லலீங்க... அவங்க திட்டம் போட்டுத்தான் நம்பளை ஏமாத்தியிருக்காங்க..."

"இப்ப இந்த கதை எதுக்கு உனக்கு....?" அவர் அலுத்துக்கொண்டார்.

"என் வயத்தெரிச்சலை என் மனசுக்குள்ளவே வெச்சிக்கிட்டு இருக்கணுமா? வெளியில கொட்டிட்டா... நான் நிம்மதியா இருப்பேன்... என் பேச்சை உங்களால காது குடுத்து கூட கேட்டுக்க முடியாதா?"

"சரி சொல்லு..."

"குமார் என் கிட்ட என்ன சொன்னான்?"

"ம்ம்ம்.. என்ன சொன்னாரு அவரு?"

"சுகன்யாவுக்கு இப்ப என்ன வயசாகிப் போச்சு? முழுசா இன்னும் இருவத்தி மூணு வயசு கூட ஆவலை... எங்க பொண்ணுக்கு இப்ப நாங்க கல்யாணம் பண்ணப் போறதில்லைன்னு எனக்கு போன்ல காது குத்தினானா?"

"ம்ம்ம்ம்..."

"அதனாலத்தான், சுகன்யா சென்னையிலேருந்து லீவுல வந்திருக்கா; நீ போய் ஒரு தரம் அவளைப் பாத்துட்டு வாடான்னு சம்பத்தை எங்க மாமா வீட்டுக்கு அனுப்புனேன்..."

"அவன் போய், புத்தியில்லாம, அவசரப்பட்டு குட்டையை கொழப்பிட்டு வந்தான்.. நான் அந்த கொழப்பத்தை ரகு கால்ல விழுந்து சரி பண்ணேன்..."

"உங்க கதை ஒரு பக்கம் இருக்கட்டும்... இப்ப நான் சொல்ற கதையை கேளுங்க; குமார் என்னப் பண்ணான்?

"சொல்லிகிட்டே போடீ... என்னால வார்த்தைக்கு வார்த்தை 'ஊம்' கொட்ட முடியாது..?"

'சுகன்யா', அவ கூட வேலை செய்யறவனை ஆசைப்பட்டு இருக்கான்னு தெரியுது... அதனால உடனடியா நிச்சயதார்த்தம் வெச்சுட்டோங்கறான், குமாரு. இதை மொதல்லேயே நம்மகிட்ட நேரடியா சொல்லியிருந்தா நான் ஏன் என் புள்ளையை சிவதாணு வீட்டுக்கு அனுப்பப் போறேன்?"

"ராணீ... முடிஞ்சுப் போன கல்யாணத்துக்கு இப்ப மோளம் என்னா... தாளம் என்னா? இப்ப இந்த கதையை நீ எதுக்கு பெரிசாக்கறே?"

"ஏங்க... என் மனசுல இருக்கறதை நான் யார்கிட்டங்க சொல்லுவேன்? ராணி தன் முகத்தை தூக்கிக்கொண்டாள்.

"சரி சொல்லி முடி உன் கதையை..." கொட்டாவி ஒன்றை வெளியேற்றினார் நல்லசிவம்.

"நம்ம ஒறவு மொறைகிட்ட உக்காந்து பேசாம, யாரையும் என்ன ஏதுன்னு ஒரு தரம் கூட கலந்துக்காம, மூணே நாள்ல காதும் காதும் வெச்சா மாதிரி, குமாரு, தன் பொண்ணுக்கு ஏன் நிச்சயதார்த்தம் முடிச்சான்?"

"சுகன்யா அவன் பெத்த பொண்ணு... குமாருக்கு எந்த சம்பந்தம் புடிக்குதோ, அங்க தானே அவன் சம்பந்தம் பண்ணுவான்.. நீ ஏன் இப்ப உன் மூச்சைப் புடிச்சுக்கிட்டு என் கிட்ட பஞ்சாயத்து வெக்கறே?

"மூஞ்சி தெரியாத வெளியூர்காரன் வீட்டுல இவன் சம்பந்தம் பண்ணியிருக்கானே? நாளைக்கு எதாவது பிரச்சனைன்னு வந்தா, இந்த குமாரு யாருகிட்ட போவான்?

"அதைப்பத்தி உனக்கென்னக் கவலை இப்போ?"

"ம்ம்ம்... முந்தாநாள் பாத்தீங்கல்ல... நம்ம சம்பத்தும், சுகன்யாவும் ஒருத்தர் கையை ஒருத்தர் குலுக்கிட்டு நின்னாங்களே? ஜோடிப்பொருத்தம் என்னமா சூட் ஆச்சு? எனக்குதான் அவளை மருமவளா வெச்சு வாழ குடுப்பினை இல்லே...?"

"ஆண்டவன்தான் சுகன்யா விஷயத்துல உன் புள்ளைக்கு பெயில் மார்க் போட்டுட்டானே? இந்த பேச்சை இத்தோட நிறுத்திக்கம்மா ராணி?"

"முடியலீங்க... மனசு கேக்கலை.... எவளோ மல்லிகாவாம்; மெட்ராஸ்லேருந்து பஸ் வெச்சிக்கிட்டு; ஜம்பமா பத்தாயிரத்துல ஒரு பொடவையை கையில சுருட்டிக்கிட்டு வந்துட்டா; அது என் பொண்ணோட செலக்ஷன்னு வேற பீத்திக்கிட்டா.."

"சரி ஒரு வழியா நீ பொலம்பி முடிச்சுடுடீ.."

"சுகன்யா கழுத்துல நாலு பவுன் தங்கச் செயினை போட்டுட்டா போதுமா? மீதியை கல்யாணத்துல போடுவாளாம்... என்னத்தப் போட போறாளோ?"



"ம்ம்ம்..." நல்லசிவம் இஷ்டமில்லாமல் தன் தலையை ஆட்டிக்கொண்டு நடந்தார்.

"இந்த குமாரு... எல்லாத்துக்கும் தலையை தஞ்சாவூர் பொம்மை மாதிரி அவங்க சொல்றதுக்கு எல்லாம் சரி சரின்னு ஆட்டறான்.. அவன் பொண்டாட்டி சுந்தரி தன் மோவாக்கட்டையை பிடிச்சிக்கிட்டு வாயெல்லாம் பல்லா நிக்கறா?"

"குடுத்து வெச்சவன் குமாரு... அவன் பொண்டாட்டி அவன் சொல்றபடி கேக்கறா..!" மெல்லியக் குரலில் சிரித்தார், நல்லசிவம்.

"ஆமாம்... நீங்கதான் மெச்சிக்கணும் சுந்தரியை... கட்டிக்கிட்ட புருஷனை... பதினைஞ்சு வருஷம் வூட்டு வாசப்படி ஏறவுடலை... என் மாமா புள்ளையை வீட்டைவுட்டு அடிச்சு தொரத்தினவதானே அவ..."

"ராணீம்மா... அடுத்தவங்க வீட்டுக் கதை நமக்கு எதுக்குமா... ஃப்ளீஸ்.." அவர் தன் முகத்தை அழுத்தமாக துடைத்துக்கொண்டார்.

"சரிங்க... நான் உங்கப் பேச்சை எப்பவுமே கேக்காத மாதிரி என்னை குத்திக்காட்டுங்க... ஆனா ஒரு உண்மையை நான் சொன்னா உங்களுக்கு பொறுத்துக்க முடியாதே?" அதற்கு மேல் ராணி அவரிடம் பேசாமல், தன் மனதுக்குள் புலம்ப ஆரம்பித்தாள்.


சுகன்யா... 61

"கரும்பு தின்னக் கூலியா கேக்கப்போறேன்..."

சுந்தரி, தன் கைகளை அகல விரித்து, கண்களிலும், குரலிலும் போதை ஏறியிருக்க, கட்டிலில் தன் உடலை இலேசாக அசைத்து தன் கணவனை உசுப்பேற்றிக்கொண்டிருந்தாள். சுந்தரியின் உடல் அசைவுகளும், நெளிவுகளும், குமாரசுவாமியை சூடேற்றிக்கொண்டிருந்தது. அவர் கண்களில் காதலும், காமமும், கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்க அவர் கட்டிலில் மல்லாந்து கிடந்த சுந்தரியின் இடுப்பை ஆசையாகப்பற்றி அவள் உடலை கட்டிலின் முனை வரை இழுத்தார்.

"என்னப் பண்றீங்க.." கொஞ்சியது குயில்.

"பொறுடிச் செல்லம்.. ஆட்டத்தை சரியா ஆடணுமில்லே..!!" குமாரும் பதிலுக்கு அவளை ஆசையாக கொஞ்சினார்.

சுந்தரியின் கால்கள் தரையைத் தொட்டும் தொடாமலும் அசைந்தாடிக் கொண்டிருந்தன. அவள் கழுத்திலிருந்த தாலிக்கொடி இரு மார்புகளுக்கிடையில் மெல்லிய ஆறாக நெளிந்து கொண்டிருந்தது. கல்லாகியிருந்த முலைக் காம்புகள் நிலைகுத்தி விட்டத்தை வெறித்தன. கண்களில் அவர்கள் நடத்தப்போகும் கலவிக்கான எதிர்பார்ப்பு. உதடுகளில் விஷமச்சிரிப்பு. வயது முதிர்ந்த குழந்தையாக சுந்தரி பிறந்த மேனியில் தங்கமாக ஜொலித்துக் கொண்டிருந்தாள்.


குமாரசுவாமி, சுந்தரியின் குழிந்திருந்த அடிவயிற்றையும், தொப்புளையும், தன் உள்ளங்கையால் பொத்தி மெதுவாகத் தேய்க்க, அவள் மூடிய விழிகளுடன், தன் அடி வயிற்றிலிருந்து 'ஹாங்' நீளமான பெருமூச்சை வெளியேற்றினாள்.

"ப்ப்ப்ப்பா... முடியலைப்பா.. சீக்கிரம் பண்ணுங்களேன்..."

"ஒரு செகன்டுடீச் செல்லம்.."

சுந்தரியின் இடுப்பின் கீழ் ஒரு தலையணையை செருகி, அவளுள் சுலபமாக தான் நுழைய ஏதுவாக்கிக்கொண்டார். தரையில் தன் பாதங்களை அழுந்த ஊன்றி, அவள் பெண்மையில் தன் முகத்தைப் புதைத்து மெல்ல நுனி நாக்கால், அவள் மதன மொட்டை ஒரு முறை அழுத்தமாக வருடினார். நிமிண்டினார். நக்கி நக்கி சுவைத்தார்.

முதல் முறையாக ஒரு ஆடவன் தன் அந்தரங்கத்தை நுகர்ந்தது போல், சுந்தரிக்கு அன்று இனம் தெரியாத ஒரு கூச்சமும், அளவிட முடியாத போதை உணர்ச்சியும் உடலில் பரவ, சட்டென அவள் தன் தொடைகளை இறுக்கிக் கொண்டாள்.

"மூடிக்கிட்டா எப்படிம்மா..?" குமாரசுவாமி, தன் மனைவியின் தொடைகளையும், முடியடர்ந்திருந்த உப்பிய மேட்டையும், அவள் அந்தரங்கத்தையும், மீண்டும் மீண்டும் முத்தமிட்டார். மனசுக்கு அலுக்கவில்லை.

"கூச்சமாயிருக்குப்பா... சிலுத்துப் போவுது எனக்கு ஒடம்பு... சும்மா சும்மா அங்க உன் மூஞ்சை வெச்சுத் தேய்க்கறே?"

"சுந்து, ஏன்டீ இப்படீ உன்னை இறுக்கிக்கறே? அவள் மார்பில் கிடந்த தாலியை ஒரு முறை வருடி, தான் கட்டியத் தாலியை ஆசையுடன் முத்தமிட்டார். உடல் சிலிர்த்தவளின் தொடையை விரித்து, அவள் 'மோக மொட்டை' தன் பருத்த தண்டால் மெல்ல மெல்ல தட்டினார்.

"ஹாப்ப்ப்ப்போ...ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்" சுந்தரி தன் கீழுதட்டை அழுத்திக் கடித்தாள்.

போதையில் முனகிய சுந்தரியின் உதட்டுக்கு நீளமான முத்தமொன்றைத் தந்தார், குமாரசுவாமி. மனைவியின் வாயிலிருந்து வந்த ஏலவாசனையை நீளமாக இழுத்து நெஞ்சை நிறைத்துக்கொண்டார். வாயை அவள் இதழ்களிலிருந்து விலக்காமல், வலது கையால், சுந்தரியின் ஈரம் சொட்டும் பெண்மையில், மேலும் கீழுமாக தன் தண்டை தேய்த்து தேய்த்து, தன் ஆண்மை மொட்டை ஈரமாக்கி, சிவந்து மிணுமிணுத்துக் கொண்டிருக்கும் அவள் 'மோகவாசலில்" இலேசாக அழுத்தினார்.

"எம்மா..." சுந்தரி தன் உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் துடித்தாள். அவர் இடுப்பை தன் கைகளால் வளைத்து தன் புறம் வேகமாக இழுத்தாள். அவள் தன்னை இழுத்த நேரத்தில், குமாரும் துரிதமாக தன் இடுப்பை அசைக்க, வெகு நேரமாக, ஈரம் சுரந்து, கலவிக்குத் தயாராக இருந்த அவள் பெண்மைக்குள் அவருடைய தடி நுழைந்து, நொடியில் காணாமல் போனது.

"குமரு... இன்னைக்கு ரொம்பவே டைட்டா இருக்குப்பா.. கொஞ்சம் மெதுவா பண்ணுப்பா..!!"

சுந்தரி, தன் கணவனின் வேகத்தில், அவருடைய தண்டு வலுவாக தன் பெண்மை சுவர்களை உரசிக்கொண்டு, தன்னுள் முழுவதுமாக புதைந்த விதத்தில், உடலில் தோன்றிய சிலிர்ப்பில், அந்த சிலிர்ப்பு தந்த இன்ப சுகத்தில் துடித்தாள். முனகினாள். விழிகளை மூடிக்கொண்டாள். பேசுவது என்ன என விளங்காமல் இன்பத்தில் உற்சாகமாக முனகினாள், சுந்தரி.

தன் மனைவியின் முனகலில், ஏழு சுவரங்களை கேட்டார் குமாரசுவாமி, தன் பருத்த தடியால், அந்த வீணையை மெல்ல மெல்ல மீட்ட ஆரம்பித்தார்.

"என்னடீ சொல்றே... சுந்து... " மனதில் பெருமிதம் பொங்க புன்னகைத்தார், குமாரசுவாமி.

"ம்ம்ம்.... நிஜம்மாப்பா.. பெருத்துப் போய் இருக்கே... மொத்தமா நீயே என் உள்ள வந்துட்ட மாதிரி இருக்கு.."

தன் இடுப்பை மெல்ல மேல் நோக்கி அசைத்தாள், சுந்தரி. தன் மனைவியின் பேச்சைக் கேட்ட குமார் தன் திண்மையை நினைத்து மனதுக்குள் சிலிர்த்தார். தன் படுக்கையில் அம்மணமாக படுத்து கொண்டிருக்கும் பெண், தனக்கு சுகமளிக்கப் போகிறவள், தன்னை பலசாலி என்று சொல்லும் போது, ஒவ்வொரு ஆண் மகனும் தன் உள்ளத்தில் பெருமையடைகிறான்.

"தேங்க்ஸ்ம்ம்மா..." குமாரசுவாமி, தன் இடுப்பை உதடுகளில் தவழும் சிரிப்புடன், சீராக அசைக்க ஆரம்பித்தார்.

"அய்ய்யோ....ஹாங் ஹாங்... " சுந்தரி தன் கீழ் உதட்டை பற்களால் கடித்துக் கொண்டு தன் கணவனின் உறுப்பு தந்த உரசல் சுகத்தில், ஓசையெழுப்பி அவள் தவித்தாள்.

சுந்தரியின் பெண்மைக்குள் முழுவதுமாக இறங்கி, ஏற ஆரம்பித்ததும், உள்ளத்திலும், உடலிலும் உண்டான ஆனந்தத்தில், சுந்தரியின் இதழ்களை வெறியுடன் கவ்வி உறிஞ்சத் தொடங்கிய குமாரசுவாமி, அவள் உதடுகளை மெல்ல கடித்துக்கொண்டே, தனது பருத்திருக்கும் தண்டை, உறுவி உறுவி அவள் அந்தரங்கத்தை வலுவாக குத்தத் தொடங்கினார்.

"ஹூம்... ஹூம்...ஹூம்ம்ம்" சுகத்தில் முனகி கொண்டிருந்த சுந்தரி தன் கணவனின் இடுப்பசைவிற்கு ஏற்ப தன் இடுப்பால் அவளும் ஒத்துழைக்க, படிப்படியாக, அவர்களின் மனமொத்த இயக்கத்தின் பலனை இருவரும் உணரத் தொடங்கினார்கள். குமாரசுவாமி, சுந்தரியின் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு, அவள் மார்பில் முழுவதுமாக படுத்தவாறு தன் இடுப்பை அசைத்துக்கொண்டிருந்தார்.

நொடிகள் நகர நகர, குமார் சுந்தரியைப் புணரும் வேகத்தையும், வலுவையும் கூட்டி, அவளை ஓங்கி ஓங்கி இடிக்கத் தொடங்க, பரஸ்பரம் இருவரின் உடல்களிலிருந்து எழுந்த சூடு, குளிருக்கு இதமாக அந்த சூடு தந்த சுகம், இருவரின் தேகத்திலும், சலசலக்கும் ஓடை நீராய் ஓடி, வேகமாய் பாயும் நதியாய் மாறி, காட்டாற்று வெள்ளமாய் பாய்ந்தது.

"சுந்து... வரட்டுமாடீச் செல்லம்..."

"ம்ம்ம்... உள்ளவே வாடீக் கண்ணு... வியர்வையில் தன் மார்புகள் நனைந்திருந்த சுந்தரி ஓசையாக முனகினாள்.

குமாருக்கு முன் மீண்டும் ஒரு முறை தன் உச்சத்தைத் தொட்ட சுந்தரி, தன் கணவனைத் தன் இடுப்பை நோக்கி வேகமாக இழுத்து தன் கால்களால், அவர் இடுப்பை அவள் வளைத்துக்கொள்ள, ஒருவாரமாகத் தன்னுள் தேக்கி வைத்திருந்த, காமத்தை, காதலை, ஆசையை, மோகத்தை, சூடான விந்தாக மாற்றி, அவளுள் வேகமாக பீய்ச்சியடித்தவாறே துவண்டு அவள் மீதே விழுந்தார்.

உணர்ச்சியின் உச்சத்தில் திளைத்துக் கொண்டிருந்த சுந்தரி, தன் சுகத்தின் உச்சத்தை தொட்டுவிட்டு, தன் அந்தரங்கத்தில் துடி துடித்து, தன்னைத் தளர்த்திக்கொண்டு, களைத்து தன் மார்பின் மேல் விழுந்த குமாரைத் தன்னுடன் இறுகத் தழுவிக் கொண்டாள். தன் மேல் அசைவில்லாமல் கிடந்தவனின் கன்னத்தில் ஆசையுடன் தன் உதடுகளைப் பதித்துக்கொண்டாள். 

"ம்ம்ம்.. செல்லம்... குமரு, என் பக்கத்துல படுத்துக்கறீயாப்பா.." கணவனின் காதுகளில் கிசுகிசுத்தாள், சுந்தரி.

சுந்தரியின் மார்பின் மேல் களைத்து விழுந்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்த குமார், மெல்ல கட்டிலில் மனைவியின் அருகில் சரிந்தவர், போர்வையில் நுழைந்து அவளை தன்னுடன் இழுத்து தழுவி, அவள் கழுத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டார்.

"தேங்க்ஸ்டீ சுந்து..." நிறைந்த மனதுடன் தன்னை உடலாலும், உள்ளத்தாலும் மகிழ்வித்த மனைவிக்கு உளமார நன்றி சொன்னார், குமாரசுவாமி.

"ஏங்க இப்படில்லாம் தேங்க்ஸ் சொல்லி என்னை அன்னியப்படுத்தறீங்க?" சுந்தரி, ஒருக்களித்து புரண்டு, தன் வலது கையையும், காலையும் அவர் மேல் போட்டுக்கொண்டாள். மென்மையாக அவர் உதடுகளில் தன் உதட்டை ஒரு முறை ஒற்றி எடுத்தாள்.

குமாரின் கை சுந்தரியின் உடலில் தயக்கத்துடன், அவர் மனம் திருப்தியுறாதது போல், இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தது. குமார் ஒரு முறை உடலால் தன் மனைவியிடம் முழுவதுமாக திருப்தியடைந்தபின், வழக்கமாக சுந்தரியின் இடுப்பை வளைத்துக்கொண்டு, அவள் முதுகோடு தன்னை ஒட்டிக்கொண்டு நிம்மதியாக தூங்கத் தொடங்கிவிடுவார். இளமையிலும் அது அவருடைய வழக்கம். எப்போதுமே ஒரே இரவில் மீண்டும் மீண்டும் அவர் சுந்தரியைத் தொட்டு உடல் சுகத்திற்காக அவளைத் தொந்தரவு செய்வதில்லை.

'இன்னைக்கு என்ன ஆச்சு இவனுக்கு?' சுந்தரி தன் மனதுக்குள் யோசித்து, சற்று வியப்படைந்தாள்

"என்னப்பா குமரு, இன்னொரு தரம் வேணுமா?" கொஞ்சலாக பேசியவள் அவன் மார்பின் மேல் தவழ்ந்து, குமாரின் இதழ்களை கவ்விக்கொண்டாள்.

"நோ... நோ... அதெல்லாம் இல்லம்மா... நான் ரொம்ப ஹாப்பியா இருக்கேன்... என் மனசு திருப்தியா இருக்கு.." மனதின் திருப்தியை வாய் சொன்னபோதிலும் குமாரின் கைகள், சுந்தரியின் பின் மேடுகளில் மெல்ல தவழ்வதை நிறுத்தவில்லை.

"சொல்லுப்பா... நான் வேணா பண்ணவா?"

"உங்கிட்ட எனக்கு என்னம்மா வெக்கம், தயக்கம்... வேணுமின்னா நானே கேக்கமாட்டேனா?" சுந்தரியின் தலையை அன்புடன் வருடினார், குமார்.

"அப்புறம்... என் கிட்ட சொல்லமுடியாத அளவுக்கு அப்படி என்ன யோசனை?"



"ப்ச்ச்ச்... ஒண்ணுமில்லே... சுந்தூ.."

"ஆபீஸ்ல ஏதாவது ப்ராப்ளமாங்க?"

"ம்ம்ம்.. அதெல்லாம் இல்லம்மா..."நீளமாக பெருமூச்செறிந்தார்.

"இப்ப சொல்லப் போறீங்களா... இல்லையா?" சுந்தரி அவர் முகத்தைத் தன்புறம் திருப்பி போலியாக முறைத்தாள்.

"நம்ம சுகாவைப் பத்தித்தான்..."

"இப்ப, இந்த நேரத்துல அவளைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை?" சுந்தரியின் குரல் வியப்பு தோய்ந்து வந்தது.

"செல்வாவுக்கு நான் மோதிரம் போடப்போறேன்... இன்னைக்கு வாங்கித்தான் ஆவணும்... நீங்க வேணாம்ன்னு சொன்னா, என் பணத்துல வாங்குவேன்னு பிடிவாதம் பிடிச்சாளே?"

"ஆமாம்..."

"நீங்க உங்க இஷ்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..? என் கல்யாணத்துல எதுக்காக குடும்ப பழக்கம், வழக்கமுன்னு பேசி, என் ஆசையில ஏன் குறுக்கிடறீங்கன்னு, ரொம்ப கோவமா அவ கேட்டது... நெனைப்புக்கு வந்துச்சு... என் பொண்ணுக்கு இவ்வளவு கோவம் வருமான்னு, சட்டுன்னு மனசு கலங்கிட்டேன்..."

"ம்ம்ம்... இப்பத்தான் ஒரு வளர்ந்த பொண்ணுக்கு அப்பனா, குடும்பத்துல அக்கறை இருக்கற மனுஷனா நீங்க பேசறீங்க..." கிசுகிசுப்பாக பேசினாள் சுந்தரி.

"சுகாவோட மொகம் சிவந்து, குரோதமா இருந்த மாதிரி எனக்குத் தோணுச்சு... உன் பேச்சு சரின்னு எனக்கு தோணினப்பவும், அவளை சாந்தப்படுத்தறதுக்காக ஒரு மோதிரம் வாங்கிடலாம்ன்னு முடிவு பண்ணேன்..." தன் மார்பில் படுத்திருந்த சுந்தரியை புரட்டி, தன்னருகில் கிடத்தி, அவளைத் தன் மார்புடன் சேர்த்துக்கொண்டார்.

"நான் சொன்னா நீங்க நம்பமாட்டீங்க... நீங்களே பாத்தீங்க இல்லையா? இப்ப புரிஞ்சுதா உங்கப் பொண்ணைப்பத்தி? சுந்தரி பேசிய போது, அவள் உதடுகள் குமாரின் கன்னத்தில் உரசிக்கொண்டிருந்தன.

"இல்லே சுந்து... என் பொண்ணை நான் இன்னும் முழுசா புரிஞ்சுக்கணும்... நானே கிட்ட இருந்து.. பாத்து.. அவளையும், அவளுடையத் தேவைகளையும் நான் நல்லாப் புரிஞ்சுக்கணும்..."

"பத்து நாளு அவகூட தனியா இருந்தீங்கன்னா மெள்ள மெள்ள உங்களுக்கு அவ மனசு புரிஞ்சுடும்... ஒரு பொட்டைக் குழந்தையை வளர்க்கறது எவ்வளவு கஷ்டம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சுடும்...?"

"சாரீம்ம்மா... சுந்து... ஒரு பெத்தவனா சுகா கூட இருந்து நான் செய்ய வேண்டியதையெல்லாம், நீயும் ரகுவும்தான் எப்பவும் அவளுக்குச் செஞ்சிருக்கீங்க..."

"அதனால என்னங்க... பெத்தவ நான் என் கடமையைத்தானே செய்தேன்.."

"ப்ச்ச்ச்..., அவளோட எல்லாப் பிரச்சனைகளையும் ஃபேஸ் பண்ணியிருக்கீங்க; அவகிட்ட அவளைப் பெத்த அப்பாங்கற முழு உரிமையோட பேசவே எனக்கு தயக்கமாயிருக்கு..." அவர் குரல் கரகரப்புடன் வந்தது,.

"என்னங்க.. நீங்க இப்டீ பைத்தியமாட்டம் பேசறீங்க... உங்க மேலே அவ உயிரையே வெச்சிருக்கான்னு உங்களுக்குத் தெரியாதா? உங்க மேல அப்படீ ஒரு பாசத்தை மனசுக்குள்ள வெச்சிக்கிட்டு, நீங்க கூட இல்லையேன்னு அவ தவிச்ச தவிப்பு எனக்குத்தாங்க தெரியும்..."

"ப்ச்ச்... உங்களை பாதியில விட்டுட்டு ஓடிவன்தானே நான்... என் கடமையிலேருந்து நான் தவறினது உண்மைதானேம்மா..."

"சும்மா அதையே சொல்லிகிட்டு இருக்காதீங்க..."

"நான் வீட்டைவிட்டு போனது அவளை ரொம்ப பாதிச்சிருக்கு... அதுதான் அவ பிடிவாதத்துக்கெல்லாம் காரணமா?"

"சட்டுன்னு சுகாவைப் பத்தி மொத்தமா ஒரு தப்பான முடிவுக்கும் நீங்க வந்துடாதீங்க..."

"இல்லே... நிச்சயமா இல்லே..."

"நம்ம பொண்ணு புத்திசாலி, பெரியவங்களுக்கு மரியாதை குடுக்கறவ; ரகுகிட்ட அளவில்லதா பாசமும், பயமும் அவளுக்கு இருக்கு... ஒரு வாரத்துல தன் தாத்தா, பாட்டிகிட்ட எப்படீ ஒட்டிக்கிட்டாப் பாத்தீங்களா? என் மேலயும் உயிரை வெச்சிருக்கா; என் கண்ணு கலங்கினா; "ஓ"ன்னு அழுவா... பாசக்கார புள்ளைங்க அது..." சுந்தரியின் தாய்மை பெருமிதத்துடன் பேசியது.

"ம்ம்ம்..."

"குமரு, நம்ம பொண்ணு சுகா, ஒருத்தர் கஷ்டபடறாங்கன்னா, தானா ஓடிப்போய் அவளால முடிஞ்ச உதவியைப் பண்ணுவா..."

"அதான் நடராஜன் சொல்லி சொல்லி நம்மப் பொண்ணை புகழ்ந்தார்.."

"என்னன்னு?"

"செல்வா ஆஸ்பத்திரியில இருக்கும் போது நம்ம சுகா எப்படி ஓடி ஆடி அவனைப் பாத்துகிட்டான்னு..!!"

"செல்வா கேஸ்ல, சுகா அவனோட நட்பா இருந்தா, காதலிச்சா... அதை நாம பெரிசு பண்ணக்கூடாது.."

"ம்ம்ம்... உண்மைதான்..."

"நான் சொல்றது முகம் தெரியாதவங்களுக்கும், அவ ஹெல்ப் பண்ணுவான்னு சொல்றேன்.."

"அப்படியா.." குமார் நெகிழ்ந்து போயிருந்தார்.

"ஆனா அவளுக்கு நாம சொல்ற ஒரு விஷயத்துல புடிப்பு இல்லன்னா; அவ மனசை மாத்தறது கஷ்டம்; அவளை மாத்தறதும், குதிரை கொம்பை தேடிப்புடிக்கறதும் ஒண்ணுதான்... அப்படீ ஒரு வைராக்கியம் புடிச்சவ.. என்னைப் பெத்தவ ஒருத்தி இருந்தாளே... அவளை அப்படியே உரிச்சுக்கிட்டு பொறந்திருக்கா " சுந்தரியின் குரல் தழுதழுத்தது.

"சுந்து... இப்ப எதுக்கும்மா இல்லாத பெரியவங்களைப் பத்தி பேசறே" சுந்தரியை தன்னுடன் இறுக்கிக்கொண்டார், குமாரசுவாமி.

"என் அம்மா ரொம்ப நல்லவ; ஆனா அவ பிடிவாதத்தை என்னால மாத்த முடிஞ்சுதா...? எங்கப்பாவால மாத்த முடிஞ்சுதா... அதைப்பத்தி சொல்றேங்க.. அதே மாதிரிதான் இவளும்... இவ பிடிவாதம் பிடிக்க ஆரம்பிச்சா... நாம அவ எதிர்ல பெயிலாகித்தான் நிக்கணும்ன்னு சொல்றேன்.."

"சுகன்யா, தான் நினைச்சதை சாதிக்கணும்ன்னு எப்பவும் இப்படித்தான் அடம் பிடிப்பாளா?"

தன் செல்ல மகள், ஒரே ஆசை மகள், சுகன்யாவின் மறுபுறத்தை, அவளுடைய இன்னொரு முகத்தை, பிடிவாதம் பண்ணும் சுகன்யாவின் முகத்தை, மீண்டும் ஒரு முறை பார்க்க அவருக்கு விருப்பமில்லை என்பது அவர் பேச்சில் தெளிவாகத் தெரிந்தது.

"அவ நினைச்சது நடக்கற வரைக்கும், உங்ககிட்ட ஒரு வார்த்தை பேச மாட்டா; நீங்களா போய் 'என்னம்மான்னு ஆசையா பேசினாலும்... என்ன வேணும்ன்னு கேட்டாலும்' தன்னோட மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு ஒதுங்கி ஒதுங்கி போவா; 'குழந்தை நம்ம கிட்ட பேசலயேன்னு' நாம பண்றதுதான் தப்போன்னு... உங்களை குற்ற உணர்ச்சியில தவிக்க வெச்சுடுவா.. "

"ம்ம்ம்.."

"அவளுக்கு கொலைப்பசி எடுக்கும்; ஆனா சோறு வேணாம், எனக்கு வயிறு சரியில்லேன்னு எழுந்து போவா... கொழந்தையை விட்டுட்டு நான் எப்படி தனியா சாப்பிடுவேன்...? ஸ்கூல்ல படிக்கும் போது, ஒண்ணுமே இல்லாத விஷயத்துக்கெல்லாம், எத்தனை வாட்டி இப்படி அடம் பிடிச்சு என்னை அழவெச்சிருக்காத் தெரியுமா?"

"ம்ம்ம்..."

"ரெண்டு நாள் கழிச்சு சொல்லுவா... என்னை ஸ்கூல்ல அப்பா இல்லாத பொண்ணுன்னு சொல்றாங்கம்மா... நம்பளை பிடிக்காம அப்பா வீட்டை விட்டு ஓடிப்போயிட்டாருன்னு சொல்றாங்கம்மா... நான் ஸ்கூலுக்கு போக மாட்டேம்மா... என் அப்பா எங்கேம்மா இருக்காருன்னு தேம்பி தேம்பி அழுவா?

"ப்ச்ச்ச்... ஆண்டவா..!! எப்படி எல்லாம் உன்னையும், என் பொண்ணையும், நான் தவிக்கவிட்டுடேன்? அவர் அடி வயிறு கலங்க, தன் தலையில் தன்னுடைய இரு கைகளையும் கோத்துக்கொண்டார், குமாரசுவாமி.

"கொஞ்ச நாள் அவளை மெரட்டி, உருட்டி, பக்குவமா அடக்கிக்கிட்டு இருந்தேன்... போவ போவ என்கிட்ட இருந்த பயம் அவளுக்குச் சுத்தமா போயிடுச்சு; அடிக்கடி அழறதை நிறுத்திட்டா; ஆனா அவ மனசுல இருந்த கோவம், துக்கம், ஏமாத்தம் எல்லாம், பிடிவாதமா மாறிடிச்சி.."

"...."

குமாரசுவாமி பேசாமல் சுந்தரியின் முகத்தை வெறித்துக் கொண்டிருந்தார். அவர் கைகள் தன் ஆசை மனைவியின் வெற்று முதுகை பாசத்துடன் வருடிக்கொண்டிருந்தது.

என் சுந்தரி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு, தனியா குடும்பத்தை நடத்தி, என் பொண்ணை நல்லபடியா வளர்த்து ஆளாக்கி விட்டு இருக்கா? ஓரே சமயத்தில் அவர் மனைவியை நினைத்து தன் மனதில் மகிழ்ச்சியும், தான் வீட்டை விட்டு ஓடியதை நினைத்து வருத்தமும் அடைந்து கொண்டிருந்தார், குமார்.

"சுகா நேரத்துல வயசுக்கு வந்துட்டாங்க...!! நான் அப்படி ஒரு சந்தோஷப்பட்டேன். என் பொண்ணு பெரியவளாயிட்டான்னு... கொஞ்சம் கொஞ்சமா அவளுக்கு உலகம் புரிய ஆரம்பிச்சுது; அவ மேல எனக்கு இருக்கற பாசத்தை அட்வான்டேஜ்ஜா எடுத்துக்கிட்டு; தன் கண்ணை கசக்கி கசக்கி இன்னைக்கும், தன் காரியத்தை சாதிச்சிக்கிறா... நான் சொல்றதை "ப்ப்பூ" ன்னு காத்துல ஊதிட்டு போயிடுவா..."



"சில சமயத்துல ரகுவால கூட அவளை கன்ட்ரோல் பண்ணமுடியாம மனசு வெறுத்து போயிருக்கான்; அவனால ஆனமட்டும் புத்தி சொன்னான்; பிளஸ் டூவுல 98 பர்செண்ட் மார்க் வாங்கியிருக்கேடீ கண்ணு; மெடிக்கலுக்கு அப்ளை பண்ணுடீன்னான்; மாட்டேன்னு அடம் பிடிச்சா..."

"ம்ம்ம்..." சுந்தரியின் இடுப்பில் குமாரின் பிடி இறுகியது. தன் மார்பை அவள் மார்புடன் அழுத்தி ஒரு முறை அவர் உரசினார். கை அவள் இடுப்பை மெல்ல வருடிக்கொண்டிருந்தது. தன் மனதிலிருந்த விரக்தியை, துக்கத்தை, தன் மனைவியின் நெருக்கத்தில், அருகாமையில், தொலைக்கலாம் என அவர் எண்ணினார்.

"ஊர்ல இருக்கறவன் எல்லாம் எஞ்சீனியர் ஆயிட்டு வேலை இல்லாம ரோடுல சுத்தறான்... நான் சைக்காலஜிதான் படிக்கப்போறேன்னு, ஒத்தைக்கால்ல நின்னு, தஞ்சாவூர்ல போய் ஆர்ட்ஸ் காலேஜ்ல சேர்ந்தா; கிராஜூவேஷனுக்கு அப்புறம் இங்கிலீஷ் லிட்டரேச்சர் படிப்பேன்னு ஒரே பிடிவாதம் பிடிச்சா... சரின்னு திருச்சிக்கு அனுப்பி வெச்சேன்.. அஞ்சு வருஷமா... மாசம் ஒரு தரம், இங்கேயும் அங்கேயுமா அவ பின்னால நாயா அலைஞ்சேன்.."

"திரும்பவும் சொல்றேன்... சுந்தூ... அயாம் சாரிம்மா செல்லம்... சரியான நேரத்துல நான் குடும்பத்துல உன் கூட இல்லாம போயிட்டேன்..." குமாரசுவாமியின் கண்கள் குளமாகி, அவர் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது. 


Tuesday, 17 March 2015

சுகன்யா... 60

"முத்தம் தானே வேணும்... எங்கல்லாம் வேணும் உனக்கு..." குமார் அவளை வலுவுடன் தன் மார்புடன் அழுத்தி அவள் புட்டத்தில் ஓங்கி தட்டினார்.

"ம்ம்ம்..." சுந்தரி மெல்ல முனகினாள்.

முனகியவளின் உதடுகளை குமார் தன் வாயால் கவ்வி, அவளுக்கு வலிக்காமல் இதமாக மெல்ல ஆரம்பித்தார். தன் கணவனின், பற்களின் அழுத்தத்தை தன் உதடுகளில் உணர்ந்தவள், கணவனின் ஈரமான முத்தத்தை தொடர்ந்து பெற்றுக்கொண்டிருந்தவளின் மனதின் அடி ஆழத்திலிருந்து, வார்த்தையில் விவரிக்க முடியாத, ஒரு நிம்மதிப் பெருமூச்சு நீளமாக கிளம்பியது.

குமாரின் விரல்கள் சுந்தரியின் புட்டபிளவுகளுக்குள் நுழைந்து, அங்கிருந்த வெப்பத்தையும், ஈரக்கசிவையும் கண்டு திகைத்து நின்றன. தன் விரல்களால் அவள் அந்தரங்க ஈரத்தின் குளிர்ச்சியை உணர்ந்தவர், 'இவ்வளவு சீக்கிரமா தயார் ஆகி இருக்காளே' தன் உள்ளம் சிலிர்க்க, குமார் தன் ஈர நாக்கால், அவள் நாவை துழாவி, அவள் நாக்கை முரட்டுத்தனமாக உறிஞ்ச ஆரம்பித்தார்.

"க்ஹூம்...ம்ம்ம்ம்.. குமரு... என் செல்லக் குமரு" மெல்ல முனகினாள், சுந்தரி.



ஆசைவசப்பட்ட, அந்த தம்பதியரின் உடல்களும் ஒன்றை ஒன்று ஆவேசத்துடன் உரசிக்கொண்டிருந்தன. தன் மனதுக்குகந்த ஆணின் உரசல் பிடிக்காத பெண்ணும் இந்த உலகத்தில் இருக்கிறாளா?

"சுந்து...நான் கேட்டதுக்கு பதில் சொல்லலையே நீ..." குமாரின் விரல்கள் அவள் அடிவயிற்றில் நண்டாக ஊர்ந்து வலம் வந்தன.

"என்னப்பா.. கேட்டே...நீ" சுந்தரியின் குரல் குயிலின் கூவலாக மாறியிருந்தது.

"முத்தம் எங்க வேணும்ன்னு.. கேட்டேன்?" குமார் அவள் கன்னத்தை அழுத்தமாக ஒருமுறை கடித்தார்.

சுந்தரியின் கன்னங்களை குமார் முத்தமிட்டுக்கொண்டே, நடுநடுவில் இதமாக கடித்தபோதிலும், அவள் கன்னங்களெங்கும், அவன் பற்களின் பதிவுகள் சிவப்புத் தழும்புகளாக மின்னத் தொடங்கின.

"இன்னைக்கு ரொம்ப ஆசையா இருக்குங்க... எனக்கு முத்தம் 'அங்க' வேணும் குடுக்கறீங்களா?" தன் கணவனின் காது மடல்களை செல்லமாக கடித்தாள், சுந்தரி.

"எங்கம்ம்மா... ?"

சுந்தரியின் தேகம் குமாரின் கரங்களில் துள்ளிக் கொண்டிருந்தது. மனைவியின் மனசிலிருந்த ஆசை அவருக்கு நன்றாகப் புரிந்த பின்னும், அவள் ஆசையை தன் மனைவியின் வாயிலிருந்து கேட்க விரும்பி, குமார் வேணுமென்றே அடம் பிடித்தார்.

"ச்சீய்ய்ய்... எனக்கு வெக்கமா இருக்குங்க... நான் சொல்ல மாட்டேன்." தன் கணவனின் விரிந்த தோள்களில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டாள் அந்தப் பத்தினிப் பெண்.

"நீ சொன்னாத்தான் நான் குடுப்பேன்.." குமாரும் செல்லமாக, விடாமல் முரண்டினான். அவள் இதழ்களை அழுத்தி திருகி மீண்டும் மீண்டும் அவைகளை கடித்து முத்தமிட்டார்.

"ஒரு தரம் சொன்னா புரியாதா? ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிப்பீங்க...நீங்க... எனக்கு 'கீழே'... 'அங்க' நாக்கால நக்கி விடுங்க... தன் கணவனின் கையை தன் தொடை நடுவில் வைத்து அழுத்தினாள், சுந்தரி.

குமாரின் விரல்கள் இதற்காகவே காத்திருந்தது போல், சுந்தரியின் மோகவாசலை பதமாக வருடத்தொடங்கின. குமாரின் விரல்கள், அவள் மோக வாசலில் பூத்திருந்த செம்பருத்தி இதழ்களை மெல்லத் தொட்டன. தடவின. அழுத்தமாக வருடின. வாசலின் மேலும் கீழுமாக அலைந்து விளையாடின. இதழ்களின் மேல் திமிறி எழுந்து நின்று கொண்டிருந்த அவள் மோக மொட்டை இதமாக, பதமாக அழுத்தின.

"அம்ம்ம்மா... ஹய்யோ... ஹய்யோ... உங்க கையை எடுத்துடுங்களேன்... சொல்லிட்டாப் போதுமே... ஒரே வழியா ஆட ஆரம்பிச்சுடுவீங்களே? என்னாலத் தாங்க முடியலீங்க..." சுந்தரியின் குரல் கதறலாக அவள் வாயிலிருந்து வந்தது. அவள் கதறல், குமாரின் காதுகளுக்கு இனிமையான இசையாக ஒலித்தது.

மடியில் கிடந்த சுந்தரியை, கட்டிலில் கிடத்திய குமார், மெல்ல அவள் தொடகளை வருடிக்கொண்டே, அவள் கால்களின் புறம் சரிந்து, அவள் மெல்லிய பூனை முடிகள் மின்னும், செழிப்பான தொடைகளின் நடுவில் தன் முகத்தைப் புதைத்து, அவள் மோக வாசலில் அழுத்தமான ஒரு முத்தம் பதித்தார். மோகவாசலின் சூடும், குளிர்ச்சியும், நசநசப்பும், அவள் அந்தரங்க ஈரத்தின் பிரத்யேக வாசனையும், அவர் நாசியைத் தாக்க, அந்தத் தாக்கத்தின் வேகத்தில், குமாரின் மனமும், உடலும் ஆகாயத்தில் பறக்கத் தொடங்கின.

குமாரின் நாவு, சுந்தரியின் அந்தரங்கத்தில், மேலும் கீழுமாக, இடம் வலமாக, பக்கவாட்டிலும், குறுக்கும் நெடுக்குமாக, அவள் அந்தரங்க உறுப்பின் பிளவுகளில், துள்ளி துள்ளி விளையாட, சுந்தரி தன் இடுப்பை உயர்த்தி, அவர் முகத்தை தன் இருகைகளாலும் பற்றி, தன் அந்தரங்க மொட்டின் மேல், அழுத்தமாக தேய்க்க ஆரம்பித்தாள்.

குமாரின் உதடுகளும், நாவும், அவள் கேட்டதற்கும் மேலாக, அவளுடைய எதிர்பார்ப்புகளுக்கும் அதிகமாக, முத்தங்களை மழையாக சொரிய, சுந்தரி தன் உடல் நடுங்கி, மனம் சிலிர்த்து கட்டிலில் புரளத் துவங்கினாள், புரண்டவளின் உடலெங்கும், மெல்ல மெல்ல, நுண்ணிய அதிர்வலைகள் பரவத் தொடங்கின. அவள் மேனி சிவந்து, தேகமெங்கும், சிறு சிறு சிவப்பு நிற புள்ளிகள் தோன்றி, முலைகள் கனத்து, முலைகளின் காம்புகள் அளவில் பெருத்து, வலுத்து, முழு உடலும், அந்த இன்ப அதிர்வுகளை விருப்பத்துடன் ரசிக்க ஆரம்பித்தது. 

"போதும்பா... என் மேல வந்து படுத்துக்கோயேன்... சுந்தரி, தன் தொடைகளின் நடுவில் முகம் புதைத்து கிடந்த தன் கணவனை, வலுவாக இழுத்து தன் மார்பில் போட்டுக்கொண்டாள். தன் கால்களை விரித்து தன் மார்பில் கிடந்தவனின் இடுப்பை கத்திரியாக இறுக்கினாள். தன் மனதிலிருக்கும் ஆசைகளை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றிக்கொள்ள ஆரம்பித்தாள்.

சுந்தரிக்கு அன்று தன் கணவன் குமார், ஒன்றன் பின் ஒன்றாக, அளித்த அத்தனை முத்தங்களும், அவள் இதயத்தை தொட்டுத் தடவி, அவளை முறை வைத்துக்கொண்டு தவிக்க வைத்தன. ஒவ்வொரு முத்தமும் அவள் உயிரைத் மென்மையாக தொட்டு வருடியது. முத்தங்களின் சூடு அவள் உயிர் நிலை வரை சென்று திரும்பியது. குமாரின் இதழ்களின் உஷ்ணம், அவள் முழு உடலையும் துடிதுடிக்க வைத்தது. உடல் துடிக்க துடிக்க, சுந்தரியின் மனதில், சுகம் தேனாக இனித்தது.

சுந்தரியின் மார்பின் மேல் கிடந்த குமார், அவள் வாயில் மீண்டும் முத்தம் கொடுத்துக்கொண்டே, தன் கையால், அவள் இடது முலைக் காம்பை அழுத்தமாக தொட்டுத் தடவியது அவளுக்கு நிரம்பப் பிடித்தது. மெல்ல அவன் தன் விரலை பின்புறமாக தன் அந்தரங்கத்தில் நுழைத்து, தன் ஈரத்தை உணர்ந்தது பிடித்தது, ஈரத்தை உணர்ந்தவன் தன் உதட்டில் மேலும் மேலும் உடனே அளித்த அந்த முரட்டு முத்தம் பிடித்தது. சுந்தரி பதிலுக்கு அவனை மேலும் மேலும் தன் உடல் வலுவைக் காட்டி கட்டித் தழுவினாள். அவன் முதுகையும், இடுப்பையும், புட்டச்சதைகளையும் வருடிக்கொடுத்தாள்.

குமார் அவளுக்குத் தந்த விதம் விதமான இதழின் ஒற்றுதல்களை, அந்த உதடுகளின் வெப்பமான அழுத்தங்களை, தன் முகத்தில், தன் கண்களில், தன் மூக்கில், தன் கன்னங்களில், தன் காது மடல்களில், மீண்டும் மீண்டும் பெற்றுக் கொள்ளப் பிடித்தது. அவன் தன் இதழோடு இதழை அழுத்தமாக பொருத்தி, தன் இதழமுதத்தைப் உறிஞ்சியது அவளுக்கு மிகவும் பிடித்தது.

குமார் தன் உள்ளத்திலிருந்து கிளம்பிய அன்பின் வெளிப்பாடாக அவள் மார்பில் தன் மார்பை உரசி, முகமெங்கும் கணக்கில்லாமல் முத்தமிட்டது அவளுக்கு வெகுவாகப் பிடித்தது. அவன் உடலின் வெப்பம் தன் உடலில் பரவ, அவன் கைகள் தன் பின்னெழில்களின் கீழ் சென்று அவைகளை இதமாக வருடியது அவளுக்குப் பிடித்தது.

தன்னை, தன் உடலை, தன் உதடுகளால் உரசி உரசியே அன்று, தன் உச்சத்திற்கு கொண்டு செல்லும் தன் கணவனின் உத்தி, அவன் உடல் வலு அவளுக்குப் பிடித்திருந்தது. தன் உடலில் காட்டிய அவன் வலுவுக்கு, தான் சற்றும் சளைத்தவளல்ல என அவனுக்கு காட்ட விரும்பிய சுந்தரி, தன் உடல் வலுவனைத்தையும் காட்டி அவனை முரட்டுத்தனமாக இறுக்கினாள். அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். அவன் தோள்களை மாறி மாறி தன் பற்களால் கடித்தாள்.

குமார் அன்று சுந்தரியின் முரட்டுத்தனமான அணைப்பையும், அவள் உதடுகள் தன் முகத்தில், தோள்களில் காட்டிய வேகத்தையும் கண்டு வியந்தார். சுந்தரிக்கு எப்போதும் மென்மையாக முத்தமிட்டால்தான் பிடிக்கும். குமார் அவளை மென்மையாக முத்தமிட்டால், தென்றலின் மெல்லிய வருடலாக, அவள் அங்கங்களை, தொட்டுத் தடவினால், இதமாக தழுவினால், அவள் துள்ளி துள்ளி பதிலுக்கு அவரை அணைப்பாள்.

ஆனால் தன் மனைவி இன்று புயலின் வேகத்தில், தானாகவே முரட்டுத்தனமான விருப்பத்துடன், தன்னைத் தழுவி, அழுத்தமான, ஆழமான முத்தம், தன் அந்தரங்கத்தில் வேண்டும் என வாய்விட்டு கெஞ்சி கேட்டு கேட்டு அனுபவிக்கிறாளே?

வழக்கமாக என்னுடைய செல்லமான, மென்மையான, சீண்டல்கள்தான் அவளை, அவள் அந்தரங்கத்தை நெகிழவைக்கும், ஆனால் இன்று நான் அவளை தொடும் முன்னரே, அவள் சுரந்து கலவிக்குத் தயாராக இருக்கிறாளே? என்னை இறுகக்கட்டி, அழுத்தமாக, ஆழமாக முத்தம் கொடுடா என அடம்பிடிக்கிறாளே?

நான் அவளை முத்தமிடும் முன்னரே, அவள் இதழ்களை என் இதழ்களால் ஸ்பரிசிக்கும் முன்னரே, என்னை வலுவாக முத்தமிட்டு, தன்னுள் ஈரம் கசிந்து, என் ஆண்மையை அழுத்தமாக வருடி, தன் தொடைக்குள் என் திண்மையை இழுத்து புதைக்கிறாளே? அன்று தன் மனைவி சுந்தரி ஆரம்பித்த காம யுத்தத்தில், அவளுடைய ஆரம்ப தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர் தவித்தார், 'இவளை இன்று நான் எப்படி சமாளிப்பது என வியந்தார்', குமார்.



குமார் தன் மனைவியின் உள்ளத்து ஆசையை உடனடியாக நிறைவேற்ற, அவள் மனதில் இருக்கும், தாபத்தை, ஏக்கத்தைத் தணிக்க, தன் பரந்த மார்புகளுக்கு அடியில் கிடந்தவளின் முலைகளை தன் வலது கையால் இதமாக வருடியவாறு, அவள் முகத்தில், அழுத்தமான, ஒரு நீளமான முத்தத்தை நெற்றி தொடங்கி, இதழ்கள் வரை நிதானமாக கொடுக்க ஆரம்பித்தார்.

சுந்தரியின் உடல் தன் விரல்களுக்கு அனுப்பிய, சூட்டை, அனலை, அவசரமில்லாமல், அவளுள் உண்டாகியிருக்கும் அந்த உணர்வு வெப்பத்தை, அவள் மனதின் ஏக்கத் துடிப்பை, தணிக்க குமார் இப்போது மென்மையாக அவளை முத்தமிட்டுக் கொண்டிருந்தார். அந்த மெல்லிய இதமான முத்தங்கள் வழக்கத்திற்கு மாறாக அன்று சுந்தரியின் உள்ள உணர்வுகளை, மோகத்தை, அவள் மனதில் பதுங்கியிருந்த காதல் உணர்வுகளை, தணிக்காமல், காம உணர்வுகளாக மேலும் மேலும் அதிகரிக்கவே உதவியது.

"நல்லாருக்குப்பா... அப்படித்தான்... ம்ம்ம்... என்னை 'அங்க' திருப்பியும் ஒரு தரம் தடவி வுடுப்பா..." ஓசையாக முனகிய சுந்தரி... தன் தொடைகளைத் திறந்தவள், குமாரின் கையை பற்றி இழுத்து தன் ஈரம் ததும்பி நிற்கும் தொடை இடுக்கில் அழுத்தினாள்.

சுந்தரியின் எண்ணத்தைப் புரிந்து கொண்ட குமார், அவள் அந்தரங்க உதடுகளை தனது விரல்களால் மெல்லப் பிரித்து ஒரு விரலால், அவள் மொட்டை வருடிக்கொண்டே, அடுத்த விரலை, அவள் பெண்மையின் வாசலுக்குள் மென்மையாக நுழைத்த வினாடியில், அவள் அவர் உடலின் முழுபாரத்தையும் சுமந்து கொண்டிருந்தவள், வலுவாக தன் இடுப்பை தூக்கி ஒரு முறை வேகமாகத் துள்ளினாள். அவர் வலது மார்பை, மார்பு காம்பை, தன் பற்களால் வலுவாக கடித்தாள். முனகினாள்.

எங்கே என் உச்சம்... எங்கே என் உச்சம்... என் மோகத்தின் உச்சம்... அந்த உன்னதமான உச்சத்தை, இன்பப் பெருக்கை, உணர்ச்சி சிகரத்தை, அடைய அவள் உடலும், மனமும் ஒன்று சேர்ந்து தவித்தன.

"என்னம்மா...சுந்து... என்னடா வேணும் உனக்கு..." குமார் அவள் முகத்தை உயர்த்தி, அவள் உதடுகளை கவ்வியதும், சுந்தரியின் உடல் உணர்வுகள் விருட்டென முழுவதுமாக உயிர்த்தெழுந்தன. அவள் உடல் நரம்புகள் வெகு வேகமாக விஸ்வரூபம் எடுத்து, அவள் தன் அன்றைய உச்சத்தை, உன்னதமான உச்சத்தை, சட்டெனத் தொட்டாள். மீண்டும் மீண்டும் என, தன் உடல் சுருங்கி, விரிந்து, சுருங்கி, விரிந்து, ஒரே வரிசையில் மூன்று முறை தன் உச்சத்தைத் தொட்டாள். குமாரின் உடல் பாரத்தை தாங்க முடியாமல் இப்போது தவித்தாள். மெல்ல துவண்டாள்.

சுந்தரி அடைந்த உச்சத்தை, அவள் உடலின் இறுக்கத்தில், அவள் விரல் நகங்கள் தன் முதுகில் பதிந்ததில், அவள் இதழ்கள் தன் இதழ்களை கவ்விய வேகத்தில், அவள் பற்கள் தன் உதடுகளை கடித்த வினாடியில், குமார் உணர்ந்தார். சுந்தரி அனுபவித்த ஆனந்தம், அந்த ஆனந்தத்தின் மிச்சம், அவள் விழிகளின் ஓரத்தில் கண்ணீராக மாறி கசிய ஆரம்பித்தது.

தன் ஆசை மனைவி சுந்தரி அடைந்த ஆனந்தப் பெருக்கை உணர்ந்த குமார் தன் உதடுகளை அவள் வாயிலிருந்து மெல்ல விலக்கி, அவள் மார்பிலிருந்து சரிந்து, அவள் அருகில் படுத்தவர், மீண்டும் அவள் வியர்க்கும் முகத்தில், நெற்றியில் என ஆரம்பித்து, அவள் காதுகள், அவள் காது மடல்கள், அவளின் சிவந்த கன்னங்கள், நெரியும் இரு புருவங்கள், மூக்கு நுனி, இதழ்கள், கழுத்து, மார்புகள், வயிறு, தொப்புள், இடுப்பு, தொடைகள், கால்கள், கால் விரல்கள் என வரிசையாக, மெதுவாக அவள் உடலெங்கும், முத்தமிட ஆரம்பித்தார்.

சுந்தரி தன் விழிகள் மூடி, மார்பகங்கள் மேலும் கீழும், சுவாசத்திற்கேற்ப, அசைய, தன் கணவனின் உதடுகள் தந்த சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தாள். 

ஓரே நேரத்தில், தன் உச்சத்தை தொடர்ந்து, மூன்று முறை, ஒன்றன் பின் ஒன்றாக, அனுபவித்த சுந்தரியின் முகம் மலர்ந்த தாமரையாக மாறியிருந்தது. சுந்தரி சுவரில் சாய்ந்து, அவரை நெருங்கி சரிந்த நிலையில், தன் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தாள்.

குமார் அவளருகில் படுத்த வாக்கிலேயே, தனது முகத்தை அவள் மார்பில் அழுத்தி, இன்னும் விரைப்பை இழக்காமலிருந்த அவளது இடது முலைக் காம்பை தன் இதழ்களால் நிதானமாக சுவைத்துக்கொண்டிருந்தார். அவருடைய வலது கரம், சுந்தரியின் இடுப்பை சுற்றிக்கிடந்தது.

தன் மார்பை, தன் ஆசைக்கணவனிடம், சுவைக்க கொடுத்திருந்த சுந்தரி, தன் வலது கையால் அவரது ஆண்மையை இதமாக வருடிக்கொண்டிருந்தாள். அவள் விழிகள் தன் முலைக்காம்பை ஒரு குழந்தையைப் போல் ஓசையெழுப்பி சப்பிச் சுவைத்துக் கொண்டிருக்கும், தன் கணவனின் முகத்தில் ஆசையுடன் குவிந்திருந்தன. அவன் தன் மார்பு காம்பில், தன் வாயால் எழுப்பிய ஓசை அவள் காதுகளில் தேனாகப் பாய்ந்து, அவளை கிளர்ச்சியுற செய்து கொண்டிருந்தது.

'எனக்கு இன்னைக்கு நல்ல சுகத்தை, என் மனசு விரும்பின அளவுக்கும் மேலே, என் புருஷன் குடுத்துட்டான். எனக்கு இப்ப ஒடம்பு சுகம் திகட்டிப்போயிருக்கு. இவனை நான் மகிழ்விக்கணும்...'

சுந்தரி தன் மனதுக்குள் யோசித்துக்கொண்டே, தன் கணவனின் உதடுகள் தன் மார்க்காம்பை உறிஞ்சுவதால், தனக்குள் அவை மீண்டும் உண்டாக்கிக் கொண்டிருக்கும் மெல்லிய அதிர்வுகளை விழிமூடி அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய அடிவயிறு அதிர்ந்து கொண்டிருந்ததது. தொடையின் உட்புறங்களில் சூடு பிடித்து அணல் தகித்துக்கொண்டிருந்தது.

சுந்தரி, குமாரை மெல்ல தொட்டு வருட வருட, குமாரின் ஆண்மை வளர்ந்து கொண்டேயிருந்தது. மற்ற நாட்களை விட அவருடைய தண்டு அன்று நீளத்திலும் தடிமனிலும் கூடுதலாக வளர்ந்திருப்பதை, அவள் மனதாலும், தன் கையாலும் உணர்ந்ததும், அவள் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

'சுந்து.. ஏன் சிரிக்கறேடீ?"

"உங்கப் 'பையன்' எழுந்துக்கற வேகத்தைப் பாத்தா, என்னை இன்னைக்கு அவன் கிழிக்காம விடமாட்டான் போல இருக்கே..." களுக்கென சிரித்தாள், சுந்தரி. அவள் கையின் அழுத்தம் குமாரின் தடியில் கூடிக்கொண்டிருந்தது.

"பயமா இருக்காடீ அவனைப் பாத்தா?" அர்த்தமில்லாமல் ஒரு கேள்வியை எழுப்பிய குமாரின் மனதில் சுந்தரியை பரபரப்பில்லாமல் நிதானமாக புணரும் ஆசை உருவாகிக்கொண்டிருந்தது.

"இன்னைக்குத்தான் அவனை மொதல் தரமா, நான் பாக்கிறேனா?" அவள் குரலில் கேலியும் கிண்டலும் சற்றே கலந்திருந்தது. சுந்தரி தன் கணவனுடைய தண்டின் விரைப்பைக் கண்டு தன் மனதுக்குள் மகிழ்ந்தாள். இவன் முழுசா எழுந்தாதான், இடிக்கறவனுக்கும் சந்தோஷம்; இடியை வாங்கப் போற எனக்கும் முழு சந்தோஷம் கிடைக்கும்.."

"என்னை சந்தோஷப்படுத்தினவனை, நானும் முழுசா சந்தோஷப்படுத்த வேண்டாமா... தன் கணவனின் சுகத்தை மனதுக்குள் நினைத்த சுந்தரி, மீண்டும் தன் அந்தரங்கத்தில் கிணற்று ஊற்றாக ஈரம் ஊறுவதை உணரத் தொடங்கினாள்.

குமாரின் முகத்தை தன் மார்பிலிருந்து விலக்கி, அவன் தொடைகளின் மேல் சரிந்து, அவரின் உள் தொடைகளில் முத்தமிட்டாள், சுந்தரி. அவனுடைய விதைகளை ஆசையுடன் தடவி முகர்ந்தாள். சட்டென தன் நுனி நாக்கால், தன் கணவனின் விரைப்பை வருடினாள். உதடுகளைக் குவித்து அழுத்தமாக முத்தமிட்டாள். அவன் விரைப்பை, விரைப்பின் நுனியை தன் மார்புகளால் அழுத்தினாள்.

'ப்ஸ்ஸ்...." கட்டிலில் மல்லாந்து கிடந்த குமாரின் முனகல் அதிகமாகத் தொடங்கியது. முனகலைத் தொடர்ந்து உடல் இலேசாக நடுங்கியது.

"என்னப்பா... வந்துடப் போறயா என்ன...? அவன் தடியை சுற்றியிருந்த தன் விரல்களின் அழுத்தத்தை சட்டெனக் குறைத்தாள் சுந்தரி.

"மஜாவா இருக்குடீ..." குமார் அவள் முதுகில் முத்தமிட்டார்.

அப்ப தாங்குவேல்லா.. கொஞ்ச நேரம்... என் வாய்ல 'அவனை' வெச்சுக்கவா...?" அவள் வெட்கத்துடன் கேட்டாள்.

"ம்ம்ம்..." தனது கண்களில் ஏக்கத்துடன், குரலில் தாபத்துடன், முனகினார், குமார்.

சுந்தரி குமாரின் ஆண்மையை, விரல்களால் பற்றி வருடிக்கொண்டே, தனது உதடுகளால் கவ்வி, அதன் மொட்டை நாவால் ஈரமாக்கினாள். தன் ஈர நாவால் அவன் திண்மையை சுழற்றி சுழற்றி, தண்டின் நாலாபுறத்திலும் லேசாக அழுத்தினாள். 

கணவனின் எழுச்சி, அதன் பருமன், அதன் நீளம், அதன் திண்மை இவற்றை தன் வாயில் உணர்ந்த, சுந்தரியின் மனதிலும், கிளுகிளுப்பு கிளம்பியது. தன் கணவனை ஈரப்படுத்திக் கொண்டிருந்த சுந்தரியின் மார் காம்புகள் மீண்டும் விறைத்து நிமிர்ந்தன. குமாரைச் சுவைத்துக்கொண்டே, தினவெடுக்கத் தொடங்கிய தனது மார்புகளை ஒரு முறை அழுத்தமாக தடவிக்கொண்டாள். 

சுந்தரி குமாரின் தண்டை தன் உதடுகளால் வருடி, வாயில் கவ்வி, மொட்டை இதமாக சப்பி, நாவால் விருப்பத்துடன் நக்கி சுவைக்க, அவள் நாவின் மென்மையை, மென்மை தந்த குளிர்ச்சியை, அந்த குளிர்ச்சி மெல்ல மெல்ல வெப்பமாக மாறும் விந்தையை, மனதில் நினைத்து, உடலால் உணர்ந்து, மீண்டும் மீண்டும் சிலிர்த்து போனார். தன் உடலின் சிலிர்ப்பை தாங்கமுடியாமல், முனக ஆரம்பித்தார். 

குமாரின் முனகல்லிருந்து, அவன் தன் நாவு அளிக்கும் சுகத்தை அனுபவிக்கிறான் என்று புரிந்ததும், சுந்தரி, அவன் திரட்சியை, ஆரம்பத்தில் மென்மையாய் வருடி நக்கி, சப்பினாலும், பின் இறுக தன் நாவால் உருட்டி பிடித்து, தண்டை தன் நாக்கால் ஒன்றாக பிணைத்தவாறு அழுத்தி சப்ப, குமாருக்கு அது இன்பமாய் இனித்தது.

சுந்தரியின் நாக்கு, குமாரின் தண்டின் மேல் இலகுவாக வளைந்து வளைந்து நடனமாடியது. குழைவாக குமாரின் எழுச்சியை பற்றியது. குழைந்து, நெகிழ்ந்து, துவண்டு, தளர்ந்து, பின் கெட்டியாக, இறுக்கிக் கவ்வியது. குமாரசுவாமி தன் நிலையிழந்து துடித்தார். முனகினார். கண் மூடி, தன் மனையாள் தந்த சுகத்தை உளமாற சுகித்துக்கொண்டிருந்தார். 

சுந்தரியின் உதடுகளும், ஈர நாக்கும், குவிந்த இதழ்கள் அவர் தடியில் உண்டாக்கிய அழுத்தமும், அந்த அழுத்தம் ஏற்படுத்திய சூடும், குமாரை அவனுடைய உச்சத்துக்கு கூட்டிச்சென்றது. சுந்தரி அன்று, தன் கணவனின் மகிழ்ச்சியை மட்டுமே தன் மனதில் வைத்து, மிகத் திறமையாக தன் நாவை சுழற்றி சுழற்றி விளையாடி, அவன் உடலை, உள்ளத்தை, தன் நாக்கால் அடித்து அடித்து, சுக்கு நூறாக்கிக்கொண்டிருந்தாள்.

"சுந்து... ஒரு செகண்ட் நிறுத்துடி... வர்ற மாதிரி இருக்குடீ..." தான் பெற்ற சுகத்தை மேலும், தொடர்ந்து சுகிக்கமுடியாமல் கதறினார், குமார். சுந்தரியின் தலையைப் பிடித்து, அவசரமாக தன் உறுப்பிலிருந்து அவள் வாயை விலக்கினார். 

"குமரு... திருப்தியாடீச் செல்லம்.. எப்படீ என் வேலை?" கண்களில் குறும்புடன் சிரித்தாள், சுந்து என்னும் சுந்தரி.

"போதும்டீயம்மா... சுகம் திகட்டுதுடி... " துடிக்கும் தன் தடியை அழுத்திப் பிடித்துக்கொண்டு முகத்தில் தவிப்புடன் பேசினார், குமார். 

குமாருக்கு மேலும் கீழுமாக மூச்சிறைத்துக் கொண்டிருந்தது. தன் தொடைகளின் மேல் தலை வைத்துப் படுத்திருந்த சுந்தரியை தன் புறம் இழுத்து, மார்புடன் சேர்த்து, அவள் இதழ்களை கவ்வி மெல்ல முத்தமிட்டார். காதோரங்களில் நரைத்து, அந்த நரைத்த முடிகளை மறைக்க முயற்சிக்காமல், வயது தரும் முதிர்ச்சியை, கம்பீரத்தை, விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளும் திறந்த மனம் கொண்ட தன் கணவனின் மேல் சுந்தரிக்கு ஆசை வெள்ளமாகப் பொங்கியது. 

உடலில் அனாவசிய சதை பிடிக்காமல், தொப்பை இல்லாமல், உயரத்திற்கேற்ற பருமனுடன், மாநிறத்தில், அம்மணமாக, விறைத்துக் கொண்டிருக்கும் தன் குறியைக் கையில் பிடித்துக்கொண்டு, குழந்தையைப் போல் கட்டிலில் கிடந்த தன் கணவனின் கம்பீரமான அழகை மனதுக்குள் ரசித்தாள். அள்ளித் தரும் முத்தங்களை தன் இதழ்களில் சேகரித்துக் கொண்டிருந்த சுந்தரி, இன்னும் கட்டுக்குலையாத அவன் மார்பை மெல்ல தடவிவிட்டுக் கொண்டிருந்தாள். 



ஏனோ தெரியவில்லை. சுந்தரிக்கு அன்று, முழு நிர்வாணத்தில் தன் கணவன் மிகவும் அழகாய் இருப்பதாகத் தோன்றியது. மனம் நிறைந்த சந்தோஷத்தில் சுந்தரி மெல்ல அவனைக் கட்டிகொண்டாள். தன் நுனி நாவால் அவன் கன்னத்தில் கோலமிட்டாள். அவள் உள்ளமும் உடலும், அவனைத் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்ளத் துடித்துக்கொண்டிருந்தன. 


"குமரு... என் செல்லம்.. உள்ளே வர்றயாப்பா?" சுந்தரி கண்களில் மின்னும் பாசத்துடன் குமாரை அழத்தாள். அவன் மார்பில் கிடந்த தன் இடதுகையால், அவனைத் தன்புறம் திருப்பி அவன் இதழ்களை கவ்வி முத்தமிட்டாள். 


சுகன்யா... 59

தெருக்கதவை மூடி தாளிட்ட சுந்தரி சத்தமெழுப்பாமல் தங்கள் படுக்கையறைக்குள் நுழைந்தாள். குமாரசுவாமி படுக்கையில் சப்பணமிட்டு உட்க்கார்ந்தவாறு யாரிடமோ செல்லில் தன் அலுவலக வேலைகளைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்.

சுகன்யாவின் நிச்சயதார்த்தம் அன்று காலை நல்லபடியாக நடந்து முடிந்து, வந்த விருந்தினர்கள், மனதில் பூரண திருப்தியுடன் அவரவர்கள் வீடு திரும்பியதில், இரண்டு மூன்று நாட்களாக இருந்த பதட்டமும், பரபரப்பும் நீங்கி, அவள் உள்ளத்தில் இனம் புரியாத ஒரு சந்தோஷ அமைதி வந்திருந்தது. மனதில் சந்தோஷம் பொங்கும் போது, அவள் உடலும் தனக்கு சுகத்தை வேண்டி, தன்னை நேசிப்பவனின் அருகாமைக்கு அலைபாயத் தொடங்கியது.



சுந்தரியும், தன் கணவனுடன் தனிமையில், அவன் வலுவான கரங்களின் அணைப்பில், தழுவலில், அவன் உடல் தரும் இதமான வெப்பத்தையும், அந்த வெப்பம் தரும் சுகத்தை அனுபவிக்கப் போகும் தருணத்தை, பகலிலிருந்தே வெகுவாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

என் மக சுகன்யா கல்யாணம் நல்லபடியா நடக்கணும்ன்னு ஆண்டவனை எப்பவும் வேண்டிக்கிட்டு இருந்தேன். என் புருஷன் குமரு, என் கூட இல்லேயேன்னு, என் மனசுக்குள்ளவே, என் ஏக்கத்தை, வெளியே சொல்லாம அழுது பொலம்பிகிட்டு இருந்தேன். யார் பண்ண புண்ணியமோ, நல்ல நேரத்துல அவனாவே வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டான். நேரம் வந்தா எல்லாம் நல்லபடியா நடக்குமின்னு சொல்றாங்களே, அது இதுதான் போல இருக்கு. இப்ப வீட்டுக்காரியங்கள் எல்லாம் ஸ்மூத்தா நடந்துகிட்டு இருக்கு. சுந்தரி மனதுக்குள் சுவாமிமலை முருகனுக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து, பட்டு வேட்டி சட்டையும், தோளில் அங்கவஸ்திரத்துடன், ஓரிடத்தில் நிற்காமல், அங்கும் இங்கும் ஓடி, வந்த விருந்தினர்களை அன்புடன் உபசரித்து கொண்டிருந்த தன் கணவனை அவ்வப்போது பெருமிதத்துடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள், சுந்தரி.

'நிச்சயதார்த்த ஏற்பாடுகள் எல்லாமே என் மச்சினனோடது; ஃபங்கஷன் சிறப்பா நடந்ததுன்னு நீங்க சொல்றதுக்கு காரணமே அவர்தான் - நான் அவருக்கு ரொம்பக் கடன் பட்டிருக்கேன்னு பெருந்தன்மையா சொல்லி' - என் தம்பி ரகுவை, வந்தவங்க முன்னாடி - என் புருஷன் பெருமைப்படுத்தினான்; கவுரவப்படுத்தினான், என் குமரு.

யாருக்கு வரும் இப்படிப்பட்ட தாராள மனசு; அந்த நேரம் என் தலையில ஐஸ் தண்ணியை ஊத்தின மாதிரி நான் குளுந்துப் போயிட்டேன். என் கண்ணுல மகிழ்ச்சியில தண்ணியே வந்துடுச்சு. என் மனசை குளிர வெச்ச இவனுக்கு, என் வயித்துல பாதாம்கீரா தித்திப்பை ஊத்தினவனுக்கு, பதிலுக்கு நான் எதாவது குடுத்துத்தானே ஆகணும்?

'அடியே சுந்தரி... என்னடி குடுக்கப் போறே?' மனம் எழுந்து குதித்தது.

'என் கிட்ட இருக்கறதெல்லாம் அவனுக்குத்தான். ஆசையா அவனை கட்டி புடிச்சி என் மார்ல சாய்ச்சு அவனுக்கு திகட்டிப் போற அளவுக்கு முத்தம் குடுப்பேன்.. அவன் கிட்டேருந்து முத்தம் வாங்கிப்பேன்..' தன் கணவன் குமார் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறானா என அவள் ஒரு நொடி திரும்பிப்பார்த்தாள். தான் கட்டியிருந்த பட்டுப்புடவையை அவிழ்க்க ஆரம்பித்தாள்.

'என்னடி இருக்கு அப்படி உன் கிட்ட?'

'அவனை பைத்தியமா அடிக்கற அளவுக்கு, என்கிட்ட அழகு இன்னும் பாக்கியிருக்கு... வலுவான ஒடம்பு இருக்கு... மனசு இன்னும் இளமையா இருக்கு, அவன் போதும் போதும்ன்னு சொல்ற அளவுக்கு அவனை மகிழ்விக்க என் ஒடம்புல தெம்பு இருக்கு; இதுக்கு மேல தன் புருஷனை குஷியா வெச்சக்க ஒரு பொம்பளைக்கு என்ன வேணும்..?

'அந்த தருணமே தன் கணவனை கட்டிக்கொள்ள சுந்தரியின் மனம் தவித்தது - என் மனசுல இருக்கற ஆசையைப் புரிஞ்சுக்காம, இப்பத்தான் யாருக்கிட்டவோ நிளமாப் பேசிக்கிட்டு இருக்கான் இவன்.. சற்றே எரிச்சலுற்றது சுந்தரியின் மனம்.

'அப்புறம்...'

'அப்புறம் என் மனசு நிறைய இருக்கற ஆசையும் அன்பையும் இவனுக்கு அள்ளி அள்ளி குடுக்கப் போறேன். என் வேலையை சீக்கிரமே விட்டுட்டு, அவன் கூடவே சென்னைக்குப் போய், அவனுக்குப் பிடிச்சதை வாய்க்கு ருசியா ஆக்கிப்போடப்போறேன்.." அவள் உள்ளம் குஷியாக குதியாட்டம் போட்டது.

'ம்ம்ம்.. அப்புறம் இன்னைக்கு என்னப் பண்ணப்போறே?'

'இன்னைக்கு இவனை என் ஆசை தீர சந்தோஷப்படுத்தி, நானும் சந்தோஷமடையப் போறேன்.' நின்ற இடத்திலிருந்தே திரும்பிப்பார்த்தாள். சுந்தரியின் உதடுகளில் குறும் புன்னகை பூத்தது. 

வெற்று மார்புடன் இடுப்பில் லுங்கியுடன் கட்டிலில் உட்க்கார்ந்திருந்த தன் துணைவனைக் கண்டதும், சுந்தரியின் உள்ளத்தில் குபீரென அடக்கமுடியாத ஆசை பொங்கி எழுந்தது. சட்டுன்னு பேசி முடிச்சான்னா, பரவாயில்லே... அவன் ஆபீஸ் வேலையில கவனமா இருக்கப்ப, அவனை டிஸ்ட்ர்ப் பண்ணக்கூடாது... அவன் மூடு அவுட் ஆயிடுவான்.... சுந்தரி தன் கணவனின் ஆதுரமான அணைப்பிற்கும், அவன் உடல் சூட்டிற்கும், நெருக்கத்திற்கும், தவித்துக்கொண்டிருந்தாள்.

"நீங்க சின்ன சின்ன வேலைக்கெல்லாம், ரூட்டீன் வேலைக்கு எல்லாம், எனக்காக ஏன் வெய்ட் பண்றீங்க..? இதெல்லாம் உங்க லெவெல்ல முடிவெடுக்கணுமில்லையா? நான் தான் லீவுலே இருக்கேன்... இது உங்களுக்கு தெரியுமில்லே? உங்கள்ல யாராவது கையெழுத்துப் போட்டு விஷயத்தை செட்டில் பண்ணியிருக்க வேண்டாமா?" குமாரசுவாமி தன் அஸிஸ்டென்ட் மேனேஜரிடம் சற்றே எரிச்சலுடன் பேசிக்கொண்டிருந்தார்.

சுந்தரி தன் உடலிலிருந்த சேலையை உருவி, சுருக்கங்களை தன் நகத்தால் நீவி சீராக மடித்துக் கொண்டிருந்தாள். வெள்ளை நிறப்பாவாடையில், கருப்பு நிற ரவிக்கையில் மாங்காய்கள் ஜரிகையில் மின்னிக்கொண்டிருக்க, அந்த ஜாக்கெட் வாளிப்பான அவள் உடலையும், தோள்களையும், மார்பகங்களையும் இறுக்கிப் பிடித்திருக்க, ப்ளவுசின் உள்ளிருந்த சரும நிற பிராவின் மெல்லிய பட்டைகள், கச்சிதமான அவள் முலைகளை தூக்கிப்பிடித்து, அவள் முன்னழகை மேலும் மேலும் கவர்ச்சியாக காட்டிக்கொண்டிருந்தன.

சுந்தரி தன் கூந்தலைத் தளர்த்த, முடிக்கற்றைகள் விரிந்து அலை அலையாக, பேன் காற்றில் பறந்து கொண்டிருக்க, தன் சுருக்கமில்லாத வழவழப்பான முதுகையும், பின் தோள்களின் செழிப்பையும், இடுப்பு வெண்மையும், பாவாடையின் இறுக்கத்தில் பிதுங்கிக் கொண்டிருக்கும் எடுப்பான பின்னெழில்களையும், தன் கணவனின் கண்களில் படுமாறு, தன் உடலை மெல்ல அசைத்து அவனை சீண்டிக்கொண்டிருந்தாள்.

இரவு விளக்கின் வெளிச்சத்தில் தேவதையாக நிற்கும் தன் துணையைக் கண்ட குமாரசுவாமிக்கு - ஆஃபீசுமாச்சு, அந்த சேட்டு குடுக்கற சம்பளமும் மயிராப் போச்சு - என்ற எண்ணம் சட்டென எழுந்தது.

தினம் தினம், காலையில எழுந்ததுலேருந்து ராத்திரி தூங்கற வரைக்கும், அட்வான்ஸ் டாக்ஸ், சேல்ஸ் டாக்ஸ், க்வார்ட்டலி ரிட்டர்ன்ஸ், மன்த்லி ரிட்ரன்ஸ்... உயிர் போய் உயிர் வருது; இந்த சனியனையெல்லாத்தையும் சுத்தமா தலையைச் சுத்தி தூக்கி எறிஞ்சுடணும்..

உடம்புல பொட்டுத் துணியில்லாம, எல்லாத்தையும் அவுத்துப் போட்டுட்டு, பொறந்த மேனிக்கு, குளிருக்கு இதமா, போர்வையைப் போத்திக்கிட்டு, போர்வைக்குள்ள என் சுந்துவை இறுக்கி அணைச்சு, அவ பின்னங்கழுத்தில முத்தம் கொடுத்து, அவ ஒடம்பு வாசத்தை முகரணும்... குமாரின் மனதுக்குள் தீடிரென ஆசை வெறி ஏகத்திற்கு கிளம்பியது.

அண்ணாச்சி, என்னையும் கொஞ்சம் கவனிக்கணும்ன்னு ஆசைபடுங்க, அவருடைய 'வேலாயுதம்', லுங்கிக்குள் சட்டென எழுந்து கொள்ள ஆரம்பித்தான்.

"எனிவே... சண்டே மதியம் நான் சென்னையில இருப்பேன்... அப்ப இந்த விஷயத்தை செட்டில் பண்ணிக்கலாம்.... அப்புறம் வேற எதாவது அர்ஜெண்ட் இஸ்யூ இருக்கா... பிரகாஷ்?" அவசர அவசரமாக நடுவிலேயே ஆஃபீஸ் பேச்சை முடித்தார் குமார்.

சுந்தரி தன் கையிலிருந்த மடித்தப் புடவையை பக்கத்திலிருந்த சேரின் கைப்பிடியில் போட்டவள், தன் ரவிக்கை கொக்கிகளை ஒவ்வொன்றாக அவிழ்க்க ஆரம்பித்தாள். கொக்கியை அவிழ்த்துக் கொண்ட்டே, தன் ஓரக்கண்ணால் திரும்பி தன் ஆசைக்கணவனைப் பார்க்க, அவன் கண்கள் விரிய, தன் மேனி அழகைப் பருகிக்கொண்டிருந்ததைக் கண்டதும், அவள் மனம் கிளுகிளுக்க, அவிழ்த்த தன் ரவிக்கையை உதறி 'டார்லிங்க் கேச் இட்' என குதுகலமாக கூவி, அவர் முகத்தை நோக்கி வீசி எறிந்தாள். களுக் களுக் என சிரித்தாள்.

தன் உதவியாளருடன் பேசிக்கொண்டிருந்த குமார் தன் மனதில் பொங்கிய ஆசையை அடக்கமுடியாமல், தன் தொடைகலின் நடுவில் லுங்கிக்குள் உண்டாகும் புடைப்பை அழுத்திக்கொண்டு நெளிய ஆரம்பித்தார்.

"ஓ.கே.. பிரகாஷ்... குட் நைட் தென்..." அவசரமாக செல்லை அணைத்தார், குமாரசுவாமி.

இடுப்பில் வெள்ளைப் பாவாடையும், இறுக்கமான பிராவுக்குள் தன் செழிப்பான முலைகள் இரண்டும் அடங்காமல், பிதுங்கி பிதுங்கி வெளிவரத் துடித்துக்கொண்டிருக்க, சுந்தரி தன் நாக்கை சுழற்றி, தன் கணவனை நோக்கி சிரித்தாள்.. 'கிட்ட வாங்களேன்... எவ்வளவு நேரமா உங்களுக்குக்காக காத்துக்கிட்டிருகேன்..' அவனை கண்களில் உல்லாச சிரிப்புடன் அவனை அழைத்தாள்.

"சுந்து.. கிட்ட வாடீச் செல்லம்... கொல்லாதடீ என்னை..!" குமார் தன் கைகளை நீட்டி அவளை வேகமாக தன்புறம் இழுத்தார். சுந்தரி வேறருந்த மரமாய் அவர் மார்பில் போய் விழுந்தாள். தன் கைகளிரண்டால் அவர் கழுத்தை வளைத்து, 'ம்ம்ம்...' மனதில் பொங்கும் ஆசையுடன் முனகிக்கொண்டே, அவர் நெற்றியில் வெறியுடன் முத்தமிட்டாள். 



சுந்தரி தன் இதழ்கள் துடிக்க, உள்ளத்தில் பொங்கும் ஆசையுடன் தன் கணவனை வெறியுடன் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள். குமாரின் கைகள் தன் மனைவியின் முதுகில் பரவி, விரல்கள், அவள் பிராவின் ஹூக்குகளை தேடி அவிழ்த்துக்கொண்டிருந்தன.

"சட்டுன்னு அவுந்தாதானே சனியன்..." முனகிய குமாரின் உதடுகளும், பற்களும், சுந்தரியின் பிரா கப்புகளில் அடங்காமல் திமிறிக்கொண்டிருந்த வெண்மையான மார்பு சதைகளை, மென்மையாக வருடி இதமாக கடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

"பிரா புதுசுப்பா... இன்னைக்குத்தான் மொதல் தரமா போட்டுக்கிட்டேன்; கொக்கிங்க கொஞ்சம் டைட்டாத்தான் இருக்கும்... சும்மா வருமாப்பா சுகம்... இன்னும் உங்களுக்கு அவுக்கக்கூட சொல்லித்தரணுமா...?"

சுந்தரி கேலியாக அவனைக் கொஞ்சியவள், தன் கணவனின் முகத்தை தன் மார்புகளிலிருந்து நிமிர்த்தி, முரட்டுத்தனமாக அவன் இதழ்களை கவ்வி சுவைக்கத் தொடங்கினாள். தன் பிரா ஹூக்கை தானே விலக்கி, தன் மார்பு கச்சையை, அவிழ்த்து அதன் உள்பக்கத்தால், தன் கணவனின் முகத்தில் ஒற்றினாள்.

"ம்ம்ம்ம்... அம்ம்மா..."

காலையிலிருந்து அந்த பிராவை அவள் அணிந்திருந்தாள். சுந்தரியின் வியர்வை வாசம், புதுத் துணியின் வாசம் என, இரண்டும் சேர்ந்து, குமாரின் நாசியைத் கனமாகத் துளைக்க, அவர் அதே கணத்தில், முழுமையாக விறைத்தார். விறைத்து எழுந்த குமாரின் ஆண்மை, அவர் மடியில் கிடந்த சுந்தரியின் தொப்புளை குத்தி இடிக்க ஆரம்பித்தது. தன் இடுப்பிலும், அடிவயிற்றிலும், இடித்த குமாரின் தண்டை, லுங்கியுடன் சேர்த்து சுந்தரி அழுத்தி வருட ஆரம்பித்தாள்.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...மெதுவாடீ செல்லம்ம்ம்.." குமார் முனகினார்.

"நல்லாருக்க்கா..." சுந்தரி கொஞ்சிக்கொண்டே தன் விரல்களில் அழுத்தத்தை அதிகப்படுத்தினாள்.

"கண்ணு... லுங்கியை அவுத்துட்டு தடவும்ம்மா..." குமார் தன் பங்குக்கு ஓசையாக முனகினார். தனது இடுப்பிலிருந்த லுங்கியை அவிழ்த்து தலை வழியாக உருவி அறையின் மூலையில் வீசீனார்.

'எப்பா.. என்னாச்சு இவளுக்கு... என் தங்கம் சுந்து ... ரொம்பவே மூடுல இருக்கா இன்னைக்கு...'

இதுவரை குமார் தன் தாம்பத்ய உறவில், இப்படி ஒரு முரட்டுத்தனமான, ஈரம் சொட்டும் முத்தத்தை, தன் மனைவி சுந்தரியிடமிருந்து எப்போதுமே பெற்றதில்லை. முத்தம் கொடுத்தவ, தன் வலுவான முத்தத்தோடு நிறுத்திக்காம், என் 'பையனை' இந்த அழுத்து அழுத்தறாளே? அவர் தன் மனதுக்குள் ஜில்லிட்டுப் போனார். உள்ளத்தில் வியப்புடன், குமாரின் கைகள் சுந்தரியின் பாவாடை முடிச்சை அவசர அவசரமாக தேடி அவிழ்க்க ஆரம்பித்தன.

"குமரு... ஏன் அவசரப்படறே? என் வாய்ல ஒரு கிஸ் குடேன்.."

தன் உள்ளதிலிருக்கும் ஆசையை, தன் கணவனிடம் முனகலாக, கிசுகிசுப்பாக வெளியிட்டாள், சுந்தரி. அவன் முகத்தை தன் மார்பில் வெறியுடன் அழுத்திக் கொண்டாள். தன் இடது முலைக் காம்பை அவன் உதட்டில் அழுத்தித் தேய்த்தாள்.

"நீதான் அவசரப்படறேடீ... உன் மார்ல முத்தம் குடுத்துக்கிட்டுத்தானே இருக்கேன்... எனக்கு பிடிச்ச அயிட்டத்தை மொதல்ல கவனிச்சிடறேனே..!!" சுந்தரியின் கச்சிதமான முலைகளை அழுத்திப் பிசைந்து கொண்டே உரக்கச் சிரித்தார், குமார்.

தன்னை நோக்கி அழகாகச் சிரித்துக்கொண்டிருக்கும் குமாரின் இதழ்களை சுந்தரி மீண்டும் ஒரு முறை வெறியுடன் கவ்வி, தன் நாக்கால் அவர் வாயைத் திறக்க முயன்றாள். அன்று தன் மனதில் கிளம்பிய ஆசை வெறியை, தன் உடலின் தவிப்பை, உள்ளத்தின் ஏக்கத்தை, அவளால் அடக்கமுடியாமல், ஒரு முத்த யுத்தத்தை, வலுவான இதழ்களின் தாக்குதலை, உடலுறவுக்கான ஆரம்பத் தாக்குதலை, தன் கணவனிடம் நடத்திக்கொண்டிருந்தாள், அவள்.

உதடுகளால் குமாரின் இதழ்களுடன் போரிட்டுக்கொண்டிருந்த சுந்தரி, தன் மென்மையான கையால், கணவனின் ஆண்மையை தொட்டுத் தடவி, மறுமுனைத் தாக்குதலையும், இரக்கமில்லாமல் அவனிடம் நடத்திக் கொண்டிருந்தாள். தன் மனைவியின் இரக்கமற்ற தாக்குதலால், மலைத்துப் போய் உட்க்கார்ந்திருந்தார், குமாரசுவாமி.

"என்னடாச் செல்லம்... இன்னைக்கு இப்படி 'தூள்' கிளப்பறே நீ?"

"ஏன்னு தெரியலைங்க... உங்க மேல இன்னைக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு... காலையில விசேஷத்துல பட்டு வேட்டி சட்டையில சூப்பரா இருந்தீங்க... அப்பத்துலேருந்து பொங்கி பொங்கி மனசு ஆலாப் பறக்குது. எனக்கு அப்படியே உங்களை கடிச்சுத் திண்ணணும் போல இருக்கு...!!"

'சுந்தரி... பதினைஞ்சு வருஷமா பட்டினி கிடக்கிறேயேடீ.. அதான் உன் புருஷன் குமார் வந்துட்டான்ல்லா... அடக்கி வெச்ச ஆசைகள்ல்லாம், சந்தர்ப்பம் கிடைச்சதும், பொங்கி பொங்கி வெளியில வருது போல இருக்கு... குமார் இன்னும் ஒரு நாள்தான் இங்க உன் கூட இருப்பான்... அப்புறம் சுகன்யாவை அழைச்சிக்கிட்டு சென்னைக்கு போயிடுவான்.

அதுக்கப்புறம், ஒரு வாரமோ... பத்து நாளோ எப்ப திரும்பவும் கும்பகோணம் வருவான்னு தெரியாது.. இன்னைக்கு கிடைச்ச சான்ஸை விட்டுட்டாதேடி.. அவனை கட்டிப்புடிச்சி, ராத்திரி ஒரு தடவை, விடிகாலம் ஒரு தடவைன்னு, ஒரு தரத்துக்கு ரெண்டு தரமா, உன் ஆசையைத் தீத்துக்கோடி... இதுல என்ன வெக்கம்? அவள் மனம் அவளுக்கு சமாதானம் சொன்னது. 

சுந்தரி தன் இதழ்கள் துடிக்க, உள்ளத்தில் பொங்கும் ஆசையுடன் தன் கணவனை வெறியுடன் முத்தமிட்டுக்கொண்டிருந்தாள். குமாரின் கைகள் தன் மனைவியின் முதுகில் பரவி, விரல்கள், அவள் பிராவின் ஹூக்குகளை தேடி அவிழ்த்துக்கொண்டிருந்தன.

"சட்டுன்னு அவுந்தாதானே சனியன்..." முனகிய குமாரின் உதடுகளும், பற்களும், சுந்தரியின் பிரா கப்புகளில் அடங்காமல் திமிறிக்கொண்டிருந்த வெண்மையான மார்பு சதைகளை, மென்மையாக வருடி இதமாக கடித்து முத்தமிட்டுக் கொண்டிருந்தன.

"பிரா புதுசுப்பா... இன்னைக்குத்தான் மொதல் தரமா போட்டுக்கிட்டேன்; கொக்கிங்க கொஞ்சம் டைட்டாத்தான் இருக்கும்... சும்மா வருமாப்பா சுகம்... இன்னும் உங்களுக்கு அவுக்கக்கூட சொல்லித்தரணுமா...?"

சுந்தரி கேலியாக அவனைக் கொஞ்சியவள், தன் கணவனின் முகத்தை தன் மார்புகளிலிருந்து நிமிர்த்தி, முரட்டுத்தனமாக அவன் இதழ்களை கவ்வி சுவைக்கத் தொடங்கினாள். தன் பிரா ஹூக்கை தானே விலக்கி, தன் மார்பு கச்சையை, அவிழ்த்து அதன் உள்பக்கத்தால், தன் கணவனின் முகத்தில் ஒற்றினாள்.

"ம்ம்ம்ம்... அம்ம்மா..."

காலையிலிருந்து அந்த பிராவை அவள் அணிந்திருந்தாள். சுந்தரியின் வியர்வை வாசம், புதுத் துணியின் வாசம் என, இரண்டும் சேர்ந்து, குமாரின் நாசியைத் கனமாகத் துளைக்க, அவர் அதே கணத்தில், முழுமையாக விறைத்தார். விறைத்து எழுந்த குமாரின் ஆண்மை, அவர் மடியில் கிடந்த சுந்தரியின் தொப்புளை குத்தி இடிக்க ஆரம்பித்தது. தன் இடுப்பிலும், அடிவயிற்றிலும், இடித்த குமாரின் தண்டை, லுங்கியுடன் சேர்த்து சுந்தரி அழுத்தி வருட ஆரம்பித்தாள்.

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...மெதுவாடீ செல்லம்ம்ம்.." குமார் முனகினார்.

"நல்லாருக்க்கா..." சுந்தரி கொஞ்சிக்கொண்டே தன் விரல்களில் அழுத்தத்தை அதிகப்படுத்தினாள்.

"கண்ணு... லுங்கியை அவுத்துட்டு தடவும்ம்மா..." குமார் தன் பங்குக்கு ஓசையாக முனகினார். தனது இடுப்பிலிருந்த லுங்கியை அவிழ்த்து தலை வழியாக உருவி அறையின் மூலையில் வீசீனார்.

'எப்பா.. என்னாச்சு இவளுக்கு... என் தங்கம் சுந்து ... ரொம்பவே மூடுல இருக்கா இன்னைக்கு...'

இதுவரை குமார் தன் தாம்பத்ய உறவில், இப்படி ஒரு முரட்டுத்தனமான, ஈரம் சொட்டும் முத்தத்தை, தன் மனைவி சுந்தரியிடமிருந்து எப்போதுமே பெற்றதில்லை. முத்தம் கொடுத்தவ, தன் வலுவான முத்தத்தோடு நிறுத்திக்காம், என் 'பையனை' இந்த அழுத்து அழுத்தறாளே? அவர் தன் மனதுக்குள் ஜில்லிட்டுப் போனார். உள்ளத்தில் வியப்புடன், குமாரின் கைகள் சுந்தரியின் பாவாடை முடிச்சை அவசர அவசரமாக தேடி அவிழ்க்க ஆரம்பித்தன.

"குமரு... ஏன் அவசரப்படறே? என் வாய்ல ஒரு கிஸ் குடேன்.."

தன் உள்ளதிலிருக்கும் ஆசையை, தன் கணவனிடம் முனகலாக, கிசுகிசுப்பாக வெளியிட்டாள், சுந்தரி. அவன் முகத்தை தன் மார்பில் வெறியுடன் அழுத்திக் கொண்டாள். தன் இடது முலைக் காம்பை அவன் உதட்டில் அழுத்தித் தேய்த்தாள்.

"நீதான் அவசரப்படறேடீ... உன் மார்ல முத்தம் குடுத்துக்கிட்டுத்தானே இருக்கேன்... எனக்கு பிடிச்ச அயிட்டத்தை மொதல்ல கவனிச்சிடறேனே..!!" சுந்தரியின் கச்சிதமான முலைகளை அழுத்திப் பிசைந்து கொண்டே உரக்கச் சிரித்தார், குமார்.

தன்னை நோக்கி அழகாகச் சிரித்துக்கொண்டிருக்கும் குமாரின் இதழ்களை சுந்தரி மீண்டும் ஒரு முறை வெறியுடன் கவ்வி, தன் நாக்கால் அவர் வாயைத் திறக்க முயன்றாள். அன்று தன் மனதில் கிளம்பிய ஆசை வெறியை, தன் உடலின் தவிப்பை, உள்ளத்தின் ஏக்கத்தை, அவளால் அடக்கமுடியாமல், ஒரு முத்த யுத்தத்தை, வலுவான இதழ்களின் தாக்குதலை, உடலுறவுக்கான ஆரம்பத் தாக்குதலை, தன் கணவனிடம் நடத்திக்கொண்டிருந்தாள், அவள்.

உதடுகளால் குமாரின் இதழ்களுடன் போரிட்டுக்கொண்டிருந்த சுந்தரி, தன் மென்மையான கையால், கணவனின் ஆண்மையை தொட்டுத் தடவி, மறுமுனைத் தாக்குதலையும், இரக்கமில்லாமல் அவனிடம் நடத்திக் கொண்டிருந்தாள். தன் மனைவியின் இரக்கமற்ற தாக்குதலால், மலைத்துப் போய் உட்க்கார்ந்திருந்தார், குமாரசுவாமி.



"என்னடாச் செல்லம்... இன்னைக்கு இப்படி 'தூள்' கிளப்பறே நீ?"

"ஏன்னு தெரியலைங்க... உங்க மேல இன்னைக்கு எனக்கு ரொம்ப ரொம்ப ஆசையா இருக்கு... காலையில விசேஷத்துல பட்டு வேட்டி சட்டையில சூப்பரா இருந்தீங்க... அப்பத்துலேருந்து பொங்கி பொங்கி மனசு ஆலாப் பறக்குது. எனக்கு அப்படியே உங்களை கடிச்சுத் திண்ணணும் போல இருக்கு...!!"

'சுந்தரி... பதினைஞ்சு வருஷமா பட்டினி கிடக்கிறேயேடீ.. அதான் உன் புருஷன் குமார் வந்துட்டான்ல்லா... அடக்கி வெச்ச ஆசைகள்ல்லாம், சந்தர்ப்பம் கிடைச்சதும், பொங்கி பொங்கி வெளியில வருது போல இருக்கு... குமார் இன்னும் ஒரு நாள்தான் இங்க உன் கூட இருப்பான்... அப்புறம் சுகன்யாவை அழைச்சிக்கிட்டு சென்னைக்கு போயிடுவான்.

அதுக்கப்புறம், ஒரு வாரமோ... பத்து நாளோ எப்ப திரும்பவும் கும்பகோணம் வருவான்னு தெரியாது.. இன்னைக்கு கிடைச்ச சான்ஸை விட்டுட்டாதேடி.. அவனை கட்டிப்புடிச்சி, ராத்திரி ஒரு தடவை, விடிகாலம் ஒரு தடவைன்னு, ஒரு தரத்துக்கு ரெண்டு தரமா, உன் ஆசையைத் தீத்துக்கோடி... இதுல என்ன வெக்கம்? அவள் மனம் அவளுக்கு சமாதானம் சொன்னது.