Saturday, 21 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 49

"அது ஒரு சுகமான உணர்வு.. வந்தா சந்தோஷமா இருக்கும்... வரலன்ன இன்னும் ரொம்ப சந்தோஷமா இருக்கும்.. ஹஹ்ஹா.." என்று சிரித்தான்..

"ஹஹ்ஹா.. ஒரு விதத்துல நீ சொல்லுறது கரெக்ட் தான்... ஏன் நீ யாரையும் காதலிக்கலையா?" என்றாள்..

"சீரியஸான காதல் எனக்கு இன்னும் யார் மேலயும் வந்ததில்ல.. கூடவே என் இயல்புக்கு அது வருமான்னு தெரியல.. தானா அமையுற விஷயம்தான..!! தீவிரவாதி மாதிரி என்னிக்காவது வந்து தாக்கும்.. அப்போ பார்த்துக்கலாம்.. ஹஹா.."- என்று சிரித்தான் கார்த்திக்....

"ஏன் அப்படி சொல்லுற?.. உன் கிட்ட கண்டிப்பா எந்த ஒரு பொண்ணாவது வந்து ப்ரோப்போஸ் பண்ணி இருப்பாங்களே?.." என்றாள்..

"உஹும்..." - சந்தோஷமாக சிரித்துக்கொண்டே சொன்னான் கார்த்திக்....

"பால்கனியோரம் நின்றுகொண்டு அவளுக்கு பதிலளிக்கும்போது அடிக்கும் காற்றில் அவனுடைய துணி லேசாக ஆடும்போது அதை கவனித்த சஞ்சனாவுக்கு எதோ நியாபகம் வர "கார்த்திக்.. அந்த பாக் எடுத்து குடேன்.. நான் உணக்கொன்னு தரப்போறேன்" என்றாள்..

அந்த பாக் திறந்து அவன் கையில் ஒரு காஸ்ட்லியான பிராண்டட் ஷர்ட்டும், பாண்டும் குடுத்து "இதை ஒரு தடவ போட்டு ட்ரை பண்ணி பாரேன்?.." - என்று ஒரு அண்பு வேண்டுகோள் விடுத்தாள்..


ஒன்றும் புரியாமல் முழித்தான் கார்த்திக்..

"என்ன யோசிக்குற?.." என்றாள்.

"எதுக்கு எனக்கு இது?.." அவள் தருவதை உடனடியாக வாங்க கூச்சப்பட்டான்..

"போன வாரம் ஒரு கடைக்கு போய் இருந்தேன்.. அப்போ இந்த ஷர்ட்டும், பாண்டும் உனக்கு போட்டா நல்லா இருக்கும்ன்னு தோணுச்சி.. பொதுவா எனக்கு க்ளோஸா இருக்குறவங்களுக்கு நான் இதை செய்வேன்.. அதான் உனக்கு வாங்கினேன்.. ஒரு தடவ போட்டு பாரேன்.." - ஆர்வமாய் கேட்டாள் சஞ்சனா..

அவள் அன்பாக குடுப்பதை அவனுக்கு வேண்டாம் என்றுசொல்ல மனமில்லை, அதே சமயம் அதெல்லாம் இவனுக்கு சரி வருமா என்றும் ஒரு குழப்பத்தில் இருந்தான்.. இருந்தாலும் அவள் குடுத்ததை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள அறையினுள் சென்று அவற்றை மாட்டிக்கொண்டு கண்ணாடியில் பார்த்தான்..

பார்த்தவனுக்கு ஒரு நிமிடம் சட்டென அவன் பார்வையே அவனை ஈர்த்தது.. கச்சிதமாய் எந்த ஒரு லூசான ஃபிட்டிங்கும் இல்லாமல் தெளிவாக ஸ்லிம் ஃபிட்டாக ஒரு ஷர்ட்டும், கால்களை எங்கு ஒட்டி பிடிக்க வேண்டுமோ அங்கு ஒட்டிப்பிடித்து எங்கு தார்ந்து இருக்க வேண்டுமோ அங்கு தளர்ந்து இருந்ததை எல்லாம் சுத்தி சுத்தி கண்ணாடியில் அவனை அவனே ஆச்சர்யமாக பார்த்து ரசித்தான்....

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்து சஞ்சனாவின் முன் நின்றான்..

"வாவ்... செமையா இருக்க டா... கார்த்தியா நீ? எங்க ஒழிச்சி வெச்சி இருந்த இவ்வளோ ஸ்மார்டான ஒருத்தன இத்தன நாளா? நான் நினைச்சது 100% கரெக்ட்.. இதைப் பார்கும்போதே நினைச்சேன் உனக்கு சூப்பரா இருக்கும்னு. அதே மாதிரி சூப்பர் ஃபிட்டிங் டா...." - சஞ்சனா தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க கார்த்திக் எதுவும் பேசாமல் அமைதியாய் அவளுடைய உற்சாகத்தையும், சந்தோஷத்தையும் பார்த்தான்..


"அவளுக்கு பிடித்த விதத்தில் அவனைப் பார்க்கணும்னு எண்ணி அவனுக்கு டிரஸ் வாங்கி குடுத்து, அதை அவன் போட்டுப்பார்கையில் கண்ணாடியின் முன் தெரியும் அனைத்தும் அவனது பார்வையையும் கவர்ந்த பொழுது, சஞ்சனா மீது காதிக்குக்கு ஒரு இனம் புரியாத அன்பு ஏற்பட்டது....

"டேய்.. அப்பப்போ ஏண்டா ஆஃப் ஆயிடுற?.... ஏதாவது பேசு டா.. என்ன ஆச்சு?... கொஞ்சம் கூட பிடிக்கலையா?" - லேசான கவலையுடன் கேட்டாள் சஞ்சனா..

"கொஞ்சம் இல்ல சஞ்சு... ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.." என்று கொஞ்சம் எமோஷனலாக கார்த்திக் சொல்வதை அவன் உதடுகள் மறைத்தாலும் கண்கள் சஞ்சனாவுக்கு காட்டிக்குடுத்தது..

"அப்படியே இந்த டிரஸ்லையே கொஞ்ச நேரம் இரு.. இதுலதான் நீ பார்க்க நல்லா இருக்க.. என்றாள் சஞ்சனா.. அப்போது பொறுமையாக வந்து ஒரு ச்சாரில் அமர்ந்தான் கார்த்திக்..

அவனுக்குள் ஏற்பட்ட உணர்வை வெளிப்படுத்த தெரியாமல் ஒரு புறம் அவன் அமைதியாய் அமர்ந்திருக்க.. மற்றொரு புறம் அவள் செய்த விஷயம் அவனுக்கு பிடித்திருக்கிறதென்று சஞ்சனாவுக்கும் புரிந்திருக்க ஒருவருக்கொருவர் கண்களால் பார்த்துக்கொண்டு ஏதும் பேசாமல் அப்படியே அமைதியாய் அமர்ந்திருந்தனர்..

"அந்த சைலன்ஸை உடைக்க கார்த்திக் தன் தொண்டையை "உக்..ஹ்ம்.." என்று கரகரத்துக்கொண்டு ஆரம்பித்தான்..

"காதல் பத்தி நீ என்ன நினைக்குறன்னு சொல்லு.. நான் தெரிஞ்சிக்குறேன்.." என்றான் ஆர்வமாக..

"நீ சொன்ன மாதிரியே அது ரொம்பவும் அழகான ஒரு உணர்வு... ஆனா அதே சமயம் நீ சொன்ன மாதிரி அந்த உணர்வு வராம இருந்தா ரொம்ப சந்தோஷமா இருக்கும்னு எல்லாம் என்னால சொல்ல முடியல.. காரணம் எனக்கு என் சின்ன வயசுல ஏற்பட்ட ஒரு நாடகத்தோட உணர்வுதான் அது.." என்றாள்..

"என்ன நாடகம்..?.." மீண்டும் அதே ஆர்வம் அவனிடம்..

"ஒரு நாட்டோட அரசன் யாராலையும் தோற்கடிக்க முடியாத ரொம்பவும் சக்தி வாய்ந்த வலிமையானவனா இருப்பான்.. அவன் மனசுல ஒரு பொண்ணு மேல காதல் பூக்கும்.. அவளும் அவனை உயிருக்குயிரா காதலிப்பா.. ரெண்டு பேரும் சந்தோஷமா கல்யாணம் செஞ்சிட்டு ஒரு புது வாழ்கைய தொடங்கலாம்னு நினைக்கும்போது அவனுக்கு கடைசியா அவன் வீரத்தை பரிசோதிக்க ஒரு போர் வரும்..

அப்போ அவன் காதல் மனைவி அவன் கிட்ட கெஞ்சுவா... எனக்காக இனிமேற்கொண்டு எந்த போறுக்கும் போகாத.. நீ இல்லன்னா நான் அந்த நாளே இறந்துடுவேன்னு சொல்லி கதறி அழுவா.. அவனுக்கு இவ அழுவுறதை பார்த்து தாங்க முடியாது..

அதே சமயம் அவ கிட்ட "என் வீரத்தை நான் இன்னைக்கி வரைக்கும் நான் யார் கிட்டயும் அடமானம் வெச்ச்சதில்ல.. இது எனக்கு வந்திருக்குற கடைசி சவால்.. ரெண்டுல ஒன்னு பார்த்துட்டு வந்துடுறேன்னு" சொல்லும்போது அவன் உணர்வுகளை புரிஞ்சிகிட்டு தன் முந்தானையால ஒரு சின்ன துண்டை கிழிச்சி அவன் கைல கட்டிட்டு "இந்த துணிய பார்க்கும்போதெல்லாம் நான் உன் கூட இருக்குறேன்னு நினைச்சிக்கோ" அப்படின்னு சொல்லி அவன் காதல் மனைவி அனுப்பி வெப்பா..



"ரொம்பவும் மன திடத்தோடதான் போருக்கு போவான் ஆனாலும் அன்னிக்கி விதி அவன் உயிரை பறிச்சிடும்.. அப்போ அவன் ஆத்மாவை மேல்லோகத்துக்கு எடுத்துட்டு போக ஏஞ்சல்ஸ் வரும்போது அவங்க கிட்ட இவன் ஒரு விஷயம் சொல்லி கெஞ்சுவான்.." - இங்கே சில நொடிகள் நிறுத்தினால் சஞ்சனா..

"என்னன்னு சொல்லி கெஞ்சுவான்.."

"ஒரே ஒரு நாள்... ஒரு 24 மணி நேரம் எனக்கு உயிர் குடுங்க, நான் ஆசையா காதலிச்ச மனைவி நான் திரும்பி வருவேன்னு காத்திட்டு இருப்பா.. அவ கிட்ட நான் எவ்வளோ தூரம் அவளை காதலிக்குறேன்னு வெளிப்படுத்த ஒரே ஒரு நாள் குடுத்தா உங்களுக்காக நான் இன்னும் 1000 தடவ கூட சாகுறதுக்கு தயார்னு சொல்லி கெஞ்சுவான்.."

"அப்போ அந்த நாடகத்தை பார்க்கும்போது நினைப்பேன்.. காதல் அவ்வளோ பவர்ஃபுல் ஃபீலிங்கா ஒரு மனுஷனுக்கு இருக்குமான்னு.. அப்போ சின்ன வயசுல ஏங்கி இருக்கேன்.. எனக்கும் மனசளவுல அப்படி உயிருக்கு உயிரா நேசிக்குரதுக்கு யாராவது கிடைச்சா நல்ல இருக்கும்ன்னு.." - என்று சொல்லும்போது மீண்டும் லேசான கண்ணீர் துளி எட்டியது அவளின் கண்களில்..

"ஹ்ம்ம்.. ஆனா நான் நெனச்சது ஒன்னு.. எனக்கு நடந்தது ஒன்னு.." - என்று லேசாக சலித்துக்கொண்டாள்..

சில நிமிடங்கள் கழித்து "கார்த்திக்.. உன் கிட்ட ஒன்னு கேக்கவா?.." என்று சஞ்சனா கார்த்திக்கிடம் மெதுவாக ஒரு கேள்வியை எழுப்பினாள்..

"என்ன கேளு?.." - அவள் பேசுவது ஒவ்வொன்றையும் ரசித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்..

"நான் கேட்டவங்க எல்லாரும் இன்னிக்கி வரைக்கும் சொன்ன பதில்ல பாதி உண்மை இருந்திருக்கு, பாதி பொய் இருந்திருக்கு.. உண்மைய சொல்லுறாங்களா இல்ல பொய் சொல்லுறாங்களான்னு சொல்லுறவங்க குரல்ல இருக்குற வைப்ரேஷன்ல தெரிஞ்சிடும்.. நீ என்ன சொல்லுறன்னு பார்க்குறேன்.." - என்று சொல்லி கைகளை தேய்த்துக்கொண்டு கேள்வியை கேட்க தயார் ஆனாள் சஞ்சனா..

"ஹ்ம்ம்.. உன் கண்ணை மூடிக்க.." - எக்சைட்மென்டுடன் கேட்க்க ஆரம்பித்தாள் சஞ்சு..

"ஹஹா.. ஓகே.. மூடிட்டேன்.." - என்ன கேள்வியென்று கேட்க ஆர்வமானான் கார்த்திக்..

"அந்த அரசனை மாதிரி உன் வாழ்க்கைல நீ யாருக்காக 1000 தடவ இறக்குறதுக்கும் தயாரா இருப்பன்னு யோசிச்சி சொல்லு? நீ எவ்வளோ நேரம் வேணும்னாலும் யோசிச்சிக்கோ.. ஆனா சொல்லுற பதில் உண்மையா இருக்கணும்.." - என்று சஞ்சனா சொல்லி முடித்தவுடன்.. கார்த்திக் மிகவும் ஆழ்ந்து யோசித்தான்.. முதலில் சில நொடிகள், பிறகு அதுவே பல நிமிடங்கள் ஆனது...

""தூங்கிட்டியாடா. டேய்?" என்று உலுக்கினாள் சஞ்சனா..

"ஆங்.. இல்ல இல்ல.. யோசிச்சிட்டு இருந்தேன்.." - என்றான் மெதுவாக..

"ஹ்ம்ம்.. சரி சொல்லு யார யோசிச்ச?.." - சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா..

"எனக்கு எங்கம்மா தான் நியாபகத்துக்கு வந்தாங்க.." - கொஞ்சம் தொண்டையை விழுங்கிக்கொண்டே சொன்னான் கார்த்திக்..

"ஒஹ்.." - அவன் சொல்வது பொய் என்று உணர்ந்தாள் சஞ்சனா..

"சரி உண்மையா சொல்லு யார் யோசிச்ச?..." - மீண்டும் அவன் கண்களைப் பார்த்து கேள்வி எழுப்பினாள்..

"அதான் சொன்னேனே.. எங்கம்மான்னு.. உண்மையா தான் சொல்லுறேன்.." - என்று சமாளித்தான்..

"ஹஹ்ஹா.. டேய்.. உன் கண்ணு ஒன்னு சொல்லுது, உன் வாய் ஒன்னு சொல்லுது.. ஒழுங்கா உண்மைய சொல்லு.. நீ யார யோசிச்ச?.." - அவள் கண்டுபிடிப்பில் தெளிவாக இருந்தாள் சஞ்சனா..

"செப்பா.. நீ எவ்வளோ தூரம் கேட்டாலும் என் பதில் அதுதான்.. சும்மா சும்மா பொய் சொல்லுறன்னு சொல்லிட்டே இருந்தா அப்புறம் நிஜமாவே பொய் தான் சொல்லுவேன்.." - என்றான்..

"நீ இப்போ சொல்லுறதே பொய்தான்.... அடுத்து சொல்லுறது என்னவா இருந்தா என்ன?.." - என்றாள் காஷுவலாக..

"ஆமா உன்ன நினைச்சேன்.. ஹ ஹ.. போதுமா.." என்றான்..

"சும்மா ஜோக் அடிகாதடா.. உண்மைய சொல்லு.. ப்ளீஸ்.. - என்றாள் காஷுவலாக...

சில வினாடிகள் மௌனம் காத்தான் கார்த்திக்... பிறகு மெதுவாக வாய் திறந்து "சத்தியமா நான் உன்னதான் நினைச்சேன்.. நீ விளையாட்டா இப்படி பேசி ஒரு சந்தர்பத்தை எனக்கு ஏற்படுத்தி குடுத்ததுல இப்போ ஒரு தைரியத்துல சொல்லுறேன்.. தனிப்பட்டு இந்த விஷயத்தை உன் கிட்ட நேரடியா எப்படி சொல்லுறதுன்னு எனக்கு தெரியாது.. நான் முதல்ல சொன்னது பொய் தான்... நான் என் மனசுல 1000 தடவ திரும்பி திரும்பி சாகுறதுக்கு தாயார்னு யாருக்காகவாவது நினைக்க தோனும்னா அது உனக்காக மட்டும்தான் தோணும்...." - என்று மனதில் உள்ளவற்றை பட படவென சொல்லி முடித்தான் கார்த்திக்..

சஞ்சனா இவற்றை கேட்ட பிறகு என்ன பேசுவதென்று தெரியாமல் சில நொடிகள் அப்படியே அமைதியாய் நின்றாள்.... ஒரு நொடி அவளாள் கார்த்திக் சொல்வதை உண்மையாக நம்ப முடியவில்லை.. மற்றொரு புறம் அது நிஜமாக இருந்தாள் இந்த ஜென்மத்தில் அவள் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று எண்ணினாள்..

சில நிமிட மௌனத்துக்கு பிறகு சஞ்சனா கார்த்திகைப் பார்த்து

"ஏன் உன் மனசுல என்ன தோணுச்சி கார்த்திக்?" என்றாள்

"இன்னிக்கி நேத்து இல்ல சஞ்சு.. உன்ன முதல் நாள் பார்த்ததுல இருந்தே உன் மேல ஒரு ஈர்ப்பு இருந்துச்சி.. கூடவே நாம புஃப்பே
சாப்பிடும்போது நீ என் கிட்ட காமிச்ச கவனம், அக்கறை, அது போக மனசுல இருக்குறது எல்லாத்தையும் எந்தவிதமான தயக்கமும் இல்லாம என் கிட்ட பகிர்ந்துக்குற விதம், கூடவே கடந்த ஒரு மாசமா நாம ஒருத்தருக்கொருத்தர் ஃபோன்ல பேசிக்கும்போது எனக்கு மனசளவுல ஏற்படுற ஒரு விதமான ரிலாக்சேஷன்னு, கூடவே இன்னிக்கி உன் வீட்டுல எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள்.. இதயெல்லாம் விட முக்கியமா...." - என்று சொல்லவந்து நிறுத்தினான்..

"முக்கியமா?.. என்ன சொல்லு?" - என்றாள் சஞ்சனா..

"முக்கியமா எனக்கு எந்த மாதிரி டிரஸ் போட்டா நல்லா இருக்கும்னு நினைச்சி இன்னிக்கி நீ என் கிட்ட இப்படி ஒரு மாற்றத்தை பார்க்க நினைச்சதால தான் எனக்கே என்னை இப்படி பார்த்தா பிடிக்கும்னு கூட தெரிஞ்சிக்க முடிஞ்சிது.... உண்மைய சொல்லனும்னா எங்கம்மாவுக்கு அடுத்து ராகவ் என் கிட்ட இப்படியெல்லாம் இருடான்னு சொல்லி கூட கேட்டுகாத என் மனசு இன்னிக்கி நீ என்ன அதையே செய்ய சொல்லி கேட்டபோ என்னால அந்த வார்த்தைகள தட்ட முடியல.. அது ஏன்னு என்னாலையும் சொல்ல முடியல.. என் கிட்ட சில விஷயங்கள கண்ட்ரோல் எடுக்க கூடிய ஒரே ஆள் என் அம்மா மட்டும்தான், அவங்களுக்கு அடுத்து அதை என் கிட்ட செஞ்ச ஒரே ஜீவன் நீ ஒருத்தி மட்டும் தான்.." - ஒவ்வொரு வார்த்தையையும் ஆழ் மனதிலிருந்து நேரடியாக கொட்டினான் கார்த்திக்..


"ரொம்ப தெளிவா சொல்லுறேன் சஞ்சு, இப்படி ஒரு தோழியாவும், கைடாவும், எந்த நேரத்துலயும் வெளிப்படையாவும் உண்மையாவும் நடந்துக்குற உன்ன மாதிரி ஒருத்தி என் வாழ்க்கை முழுக்க என் கூட வந்தா நல்லா இருக்கும்னு சத்தியமா ஆசை படுறேன்.. என்னை ஏத்துக்குவியா?" - என்று கார்த்திக் அவன் கேள்வியை வைக்க, சஞ்சனாவின் கண்களில் கண்ணீர் மல்கியது..

"நான் எதாவது தப்ப சொல்லிட்டேனா?...." - கார்த்திக் அவளின் கண்ணீருக்கான அர்த்தம் புரியாமல் கேட்டான்..

"உ.. உன்ன என் மனசுல ஏத்துக்க முடியல கார்..த்திக்.." - சற்று அழுதுகொண்டே விம்மியபடி பேசினாள் சஞ்சனா....

"ஒஹ்.. புரியுது.. ஏன்னா நான் மத்த ஆம்பளைங்க மாதிரி இல்ல.. அதனாலதான?..." அவன் அப்பாவியாக கேக்க..

"வாய மூடு.. எனக்கு உன்ன ரொம்ப பிடிச்சதே நீ மத்த ஆம்பளைங்க மாதிரி இல்லைங்கற காரனத்தாலதான்.. ஸ்ஷ்".. சற்று மூக்கை உரிந்தபடி பேசினாள்..

"ப்ச்.. ஃபர்ஸ்ட் அழாம பேசு சஞ்சு.. எதுக்காக உன் மனசுல என்ன ஏத்துக்க முடியல? அதுக்கு காரணம் சொல்லு.. ப்ளீஸ்.." என்றான்..

சில நொடிகள் மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்.. "உனக்கு என் விஷயங்கள் எல்லாமே தெரியுமே... எனக்கும் மிதுனுக்கும் நடந்தது.." என்று அவள் சொல்லி முடிப்பதற்குள் குறுக்கிட்டான் கார்த்திக்....

"அது உன்ன அறியாம அவங்க உன் கிட்ட இருந்து எடுத்துகிட்டது.. அதுக்கு நீ என்ன செய்ய முடியும்?... நாய் கடிச்சா தொப்புல சுத்தி ஊசி போடுறதில்லையா?.. அந்த மாதிரி அந்த நாய் கடிச்ச கடிக்கு என்ன ஊசியா நினைச்சிக்கோ.. இவ்வளோ ஏன்?... இந்த விஷயத்துல எனிமி எனிமின்னு நான் சொல்லற என் ராகவ் கிட்ட இருந்தே நான் கத்துகிட்ட ஒரு நல்ல விஷயம் அது.. ஏற்கனவே அண்ணி இன்னொருத்தருடைய மனைவின்னு தெரிஞ்சேதான கல்யாணம் செஞ்சிகிட்டான்?.. அவங்க இப்போ சந்தோஷமா இல்லையா?.." - என்ன ஆனாலும் இவளை இழக்க முடியாதென்கிற தீர்கமான முடிவு கார்த்திக் மனதினுள் தெளிவாக தெரிந்ததால் அனைத்துக்கும் தயாராய் இருந்தான் அவன்..

நீண்ட நேரம் மௌனம் நிலவியது அவர்கள் நிற்கும் இடத்தில்...

"என்ன இருந்தாலும் என்னால உடனடியா ஒரு முடிவை சொல்ல முடியல கார்த்திக்.. என்ன மன்னிச்சிடு.. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்.. நான் நாளைக்கு பேசுறேன்.. ப்ளீஸ்... என்ன புரிஞ்சிக்கோ.." - என்று சொல்லி டைனிங் டேபிள் மீது தலை சாய்த்து படுத்தாள் சஞ்சனா...

அவளிடம் இதற்கும் மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை அவனுக்கு.. "அப்போ நான் கிளம்புறேன்..." என்று சொல்லி அங்கிருந்து விடை பெற்றான்..

மதியம்... சாயுங்காலம்... இரவு.... நடு இரவு... இப்படி நேரம் கடந்து கொண்டே போனது.. ஆனால் சஞ்சனா ஒரு ரோபோவைப் போல அவள் வீட்டினுள்ளேயே சுத்தி சுத்தி வந்து கொண்டிருந்தாள், நேரம் அதிகாலை 4 மணி இருக்கும்.... இதற்கும் மேல் முடியாதென்று எண்ணி கார்த்திக் மொபைலுக்கு கால் செய்தாள் சஞ்சனா..

ஹலோ.. - பரபரப்புடன் ஃபோன் எடுத்தான் கார்த்திக்..

"டேய்.. மணி காலைல 4 ஆகுது, ஒரு ரிங் கூட போய் முடியல அதுக்குள்ள ஃபோன் எடுத்துட்ட?... நீ தூங்கவே இல்லையா?" - என்று மிகவும் ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா..


"முக்கியமான பரீட்சை எழுதிட்டு ரிசல்டுக்காக காத்துட்டு இருக்கேன்.. எப்படி தூக்கம் வரும்?.. அதெல்லாம் சரி.. நீயும் தூங்கலையா?.. இத்தன மணிக்கு ஃபோன் பண்ணுற?" - என்றான் தெம்பாக..

சில நொடி மௌனத்துக்கு பிறகு தொடர்ந்தாள்...." நீ பாட்டுக்கு உன் மனசுல இருக்குறத கொட்டிட்டு போயிட்ட.. எனக்கும் ஒண்ணுமே நாள் முழுக்க ஓடல டா.. எனக்கு இப்போவே உன்ன பார்க்கணும் போல இருக்கு.. கொஞ்சம் வர முடியுமா?.. உன் கிட்ட நிறைய பேசணும்..." - அவள் குரலில் மிகுந்த ஏக்கம் தெரிந்தது அவனுக்கு..

"ஒஹ்.. அப்படியா?... ராத்திரியெல்லாம் ரொம்ப நேரம் தூங்காம இருந்ததால கொஞ்சம் தலை சுத்துது.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பத்து மணிக்கு காண்டீன்ல பொங்கல் சாப்டுட்டு வரேன்.. சரியா?" - என்று கொட்டாவி விட்டுக்கொண்டே ஃபோன் கட் செய்தான் அந்த வாத்து...


"இது உண்மையாவே வாத்து மடயந்தான்.. எந்த நேரத்துல எப்படி பேசிட்டு ஃபோன் வெக்குது பாரு?... இவன மதிச்சி ஃபோன் பண்ணதுக்கு என்ன அடிச்சிக்கனும்..." என்று அவள் புலம்பி முடித்த அடுத்த செகண்ட் காலிங் பெல் சத்தம் கேட்டது..

எக்கச்சக்க சந்தோஷத்தில் ஓடிப்போய் கதவைத் திறந்தாள் சஞ்சனா.. வெளியே நம் கார்த்திக் முந்தைய நாள் அணிந்துகொண்டு சென்ற அதே புது பான்ட், ஷர்ட் கூட கழட்டாமல் அதே காஸ்ட்யூமில் அவள் செல்ஃபோனில் அழைத்த அடுத்த கணமே அப்படியே அவள் முன் அதிகாலை 4 மணிக்கு வந்து நின்றான்..

கதவை திறந்து பார்த்த சஞ்சனாவிடமும் ஒரு நீண்ட மௌனம்.. கார்திக்கிடமும் ஒரு நீண்ட மௌனம்.. இருவருடைய வாயும் பேசவில்லையே தவிர்த்து அவர்கள் மனதில் எழும் மௌனம் அதிகமாக பேசிக்கொண்டிருந்தது... அந்த மௌனராகம் அவர்களுகிடையில் எப்படி ரீங்காரமாய் ஒலித்ததென்று அடுத்த பதிவில் காண்போம்.... 



சங்கீதா மேடம் - இடை அழகி 48

"என்ன ஆச்சு? ஏதாவது மறந்து வெச்சிட்டு வந்துட்டியா?.." என்றான்.

"அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. வா நடக்கலாம்.." - சஞ்சனாவின் முகத்திலும் ஒரு சந்தோஷம் தெரிவதை கவனிக்க தவறவில்லை கார்த்திக்..

"லாஸ்ட் ஒரு மாசமா நானும் உன்ன வந்து பார்க்கணும் பார்க்கணும்னு நினைப்பேன்.. ஆனா ஃபோன்ல மட்டும்தான் டெய்லி பேச முடிஞ்சிது...." என்றான்..

"ஹ்ம்ம்.. நானும் இந்த ஒரு மாசமா ராகவ் செய்ய வேண்டிய வேலை எல்லாத்தையும் செய்யுறதால இங்க அங்க கூட நகர முடியல டா.. செப்பா அவன் வேலைங்க இருக்கே....." லேசாக சலித்துக்கொண்டு மேலும் தொடர்ந்தாள்.. "நமக்குன்னு ஒரு வேலை குடுத்து முடிச்சிட்டு போக சொல்லும்போது நிம்மதியா காலைல வந்துட்டு சாயந்திரம் ஜூட் விட்டுடலாம்.. ஆனா இப்படி மத்தவங்கள வெச்சி மேய்ச்சி வேலை வாங்குறதிருக்கே.... அவன்தான் டா அதுக்கு லாயிக்கி.. என்ன சொல்லுற?" என்று சஞ்சனா கார்த்திக்கை பார்த்து சொல்லும்போது..


"இன்னைக்கி காத்து நல்லா அடிக்குதில்ல?... அவ்வளோவா வெயிலும் இல்ல.. நல்ல கிளைமேட்.." - என்று சம்மந்தமே இல்லாமல் அவன் பதில் சொல்லும்போது, நம்மள தவிர வேறெது பற்றியும் பேசுவதில் எனக்கு ஆர்வம் இல்லை என்று அவன் சொல்லாமல் சொல்வதை புரிந்துகொண்டு அவனைப் பார்த்து மெலிதாய் ஒரு புன்னகை தந்தால் சஞ்சனா..

இப்போது பேச்சை மாற்றினால்.. "நான் உன்ன என்னமோ நினைச்சேன் டா.. ஆனா இன்னிக்கி நீ சொன்ன அந்த ரிசஷன் கதை நல்லா இருந்துச்சி.. எதாவது எகனாமிக்ஸ் புக் படிச்சியா?"

"ச்சே ச்சே.. அதையெல்லாம் விட சூப்பர் புக் அது.."

"என்ன புக்.. சொல்லேன் நானும் படிக்குறேன்.." - ஆர்வமாய் கேட்டள் சஞ்சனா..

"ஹஹ்ஹா.. ரொம்பல்லாம் யோசிக்காத... வார கடைசில நியூஸ் பேப்பர் கூட போடுற இலவச இணைப்புல வர்ற குடும்ப மலர்ல படிச்சதுதான் இந்த குட்டி கதை.."

"ஒஹ்... அதுலயா?.." ஆச்சர்யமாய் கேட்டாள் சஞ்சனா..

"என்ன ஒஹ்..?.. அந்த புஸ்தகத்துக்கு என்ன குறைச்சல்? படிக்கிற விஷயம் எங்கிருந்து வேணும்னாலும் இருக்கலாம்.. ஆனா சொல்ல வேண்டிய இடத்துல நச்சுனு சொல்லணும்.. கரெக்டா சஞ்சு?...."

ஏற்கனவே ஒருமுறை கார்த்திக் அவளை சஞ்சு என்றழைத்தது நியாபகம் வந்தது.. அவன் அவளை அப்படி அழைப்பதை உள்ளுக்குள் மிகவும் ரசித்தாள் சஞ்சனா..

"ஹலோ.. மேடம்.. உங்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன்... நான் சொன்னது கரெக்ட் தான..?.."

"ஹ்ம்ம் கரெக்ட் தான்.." அவன் சொன்னது என்னவென்று கூட கவனிக்காமல் அவன் கண்களை கூர்ந்து கவனித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா..

இருவரும் பேசிக்கொண்டே நடக்கையில் அலுவலகத்தில் இருந்து சஞ்சனாவின் வீட்டை அடைந்த தூரத்தை அவர்களுடைய கால்கள் அறியவில்லை..

"ஃபர்ஸ்ட் டைம்...." என்று சொல்லி கார்த்திக்கைப் பார்த்து அதிக மகிழ்ச்சியுடன் "வெல்கம் டூ மை லிட்டில் ஸ்வீட் ஹோம்.." என்று தன் இரு கைகளையும் வாசப்படியை நோக்கி காண்பித்து மனம் முழுக்க சந்தோஷத்துடன் சிரித்தபடி ஒரு எக்சைட்மென்டில் கார்த்தியை உள்ளே வரவேற்றாள் சஞ்சனா..


உள்ளே வந்தவனுக்கு மிகுந்த ஆச்சர்யம்.. எதோ கேரளாவில் உள்ள வீட்டினுள் நுழைந்து விட்டோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அவனுக்கு..

உள்ளே நுழைந்த தருணத்தில் நல்ல சந்தன வாசம் வீசியது.. பெரிதாய் இல்லாமல் சிறிதளவில் ஜன்னல்களும், அதன் வழியே ஒரே நேர் திசையில் வெள்ளை நிற ஸ்க்ரீனை தாண்டி தரையில் விழுந்து கொண்டிருக்கும் சூரிய வெளிச்சமும், அடக்கமான சிறிய வீடாக இருந்தாலும் ஒவ்வொரு மூலையிலும் சின்ன சின்ன தொட்டிகளில் இரண்டடிக்கு வளர்ந்த செடிகள் அந்த சூரிய வெளிச்சத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருப்பதும்.. சின்ன பால்கனியில் மேலிருந்து தொங்கும் சிறிய பூந்தொட்டிகளும், சுவர் முழுக்க மரங்களால் அலங்காரம் செய்யபட்டு நடு நடுவே சிறிய ஃப்ரேமில் நிறைய ப்ளாக் & ஒயிட் ஃபோட்டோக்களில் தெத்துப்பல் தெரிய தன் அப்பாவின் இடுப்பில் அமர்ந்து அழகாய் சிரித்துக்கொண்டிருக்கும் குட்டி சஞ்சனாவையும் பார்த்து, நிற்கும் இடத்திலேயே அவளது வீட்டின் வசீகரத்தில் மனம் லயித்து தன்னையும் மறந்து அனைத்தையும் ஒரு நிமிடம் ரசித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.

"ஹஹ்ஹா... ஹேய்.. என்னடா ஆச்சு?.. அப்படியே ஒரைஞ்சி நிக்குற?.. உட்கார மாட்டியா?" - சஞ்சனா காஷுவலாக கேட்டாள்..

"இல்ல சஞ்சு... இது வந்து.."

"ஹ்ம்ம்... இது வந்து....?"

"ரொம்ப வித்யாசமா இருக்கு.. உள்ள வந்துட்டா திரும்பி வெளிய போக பிடிக்குமான்னு தோனுற அளவுக்கு இருக்கு உன் வீடு.."

"ஹ்ம்ம்.. அப்படி ஒரு ஃபீலிங் குடுத்தாதான் அது வீடு.. இல்லன்னா என்ன பொறுத்த வரைக்கும் அது வெறுங்காடு.."

"ஹ்ம்ம்.. அந்த ஃபீலிங் உனக்கு இருந்தா பரவாயில்ல, வந்து பார்குரவங்களுக்கும் இருந்துட்டா அப்புறம் வெளிய போகவே மாட்டாங்க இல்ல?.."

"ஹஹ்ஹா.. லூசு கிறுக்கா.. என் வீட்டுக்கு யாரும் வர மாட்டாங்க டா.. அதுபோக நானும் யாரையும் கூப்டதில்ல.... கூப்பிட விருப்பமும் கிடையாது.. எப்போவுமே இந்த இடத்துல நான் மட்டும்தான் இருக்கணும்னு விரும்புவேன்...... ஏன்னா எனக்கு தனிமை ரொம்ப பிடிக்கும்.. இன்னைக்கி வரைக்கும் நானாவே ஒரு ஆள கூப்டு என் வீட்ட காமிச்சி இருக்கேன்னா அது நீ ஒருத்தன் மட்டும்தான்.." என்று சொல்லிவிட்டு பின்னால் தொங்கும் முந்தானையை இடுப்பில் சுத்தி சொருகிகொண்டு கூந்தலை இறுக கட்டி ஸ்டைலாக சேவலுக்கு தலையில் நிற்பது போல முடியை குவித்து ஒரு கிளிப் போட்டுக்கொண்டே கிச்சனில் இருவருக்கும் ஜூஸ் கலந்துகொண்டிருந்தாள்..

தன்னைத் தவிர வேறு யாரையும் அவள் இன்று வரை கூப்பிட்டதில்லை என்பதை நினைத்து உள்ளுக்குள் மிகவும் பெருமிதம் கொண்டான்.. காரணம் இன்று வரை அவன் வாழ்கையில் தன் தாயும், நண்பன் ராகவையும் தவிர்த்து யாருமே அவனுக்கு இப்படி முக்கியத்துவம் குடுத்து பேசியதில்லை, இப்போது அவனுடைய சக வயது பெண், அதிலும் சமீபமாய் செல்ஃபோன் உரையாடல்களில் அவனை நன்கு புரிந்து அவன் மனதை சில நாட்களாய் மயக்கத்தில் ஆழ்த்தும் ஒருவள் அவள் வாயால் இப்படி சொல்வதைக் கேட்ததால்தான் அந்த தனி சந்தோஷத்துக்கு காரணம்..

கிச்சனில் விழும் இளம் வெயில் வெளிச்சத்தில் கரு நீல நிற புடவை மற்றும் ப்லவுசில் அளவாக தெரியும் அவளது தங்க நிற முதுகையும், சிக்கனமாக தெரியும் இடுப்பையும் கண்டு காம உணர்வுகள் ஏதும் இன்றி அவளது அழகை மட்டும் மெளனமாக ஆராதித்துக்கொண்டிருந்தான் கார்த்திக்.... அதே நேரம் உள்ளே ஜூஸ் கலக்கும்போது காலையில் அந்த இரு வாயாடிகளும் கார்த்திக்கை "அவ ஆள்" என்று கோவத்தில் இவளிடம் சொன்னதை மீண்டும் மனதுக்குள் ரகசியமாக அசை போட்டுக்கொண்டிருந்தாள் சஞ்சனா....



ஜூஸ் எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது மீண்டும் வீட்டைப் பற்றி பேச தொடங்கினாள் சஞ்சனா..

"ராகவ் கூட இன்னிக்கி வரைக்கும் இங்க வந்ததில்ல.. வரக்கூடாதுன்னு எந்த எண்ணமும் இல்ல, ஆனா வர்றதுக்கு அவனுக்கு சந்தர்ப்பம் அமையல.."

மீண்டும் அவன் எனிமியை பத்தி எதோ ஒரு பேச்சு வருகையில் ஒரு நல்ல சுகத்தில் லயித்து இருந்தவன் அவள் பேசுவதை கவனிக்கவில்லை என்பதுபோல வீட்டில் உள்ள சுவர் அனைத்தையும் அங்கும் இங்கும் பார்த்தான்.. அப்போது அவன் பார்வையை சின்ன சின்ன ஃப்ரேமில் தொங்கிக்கொண்டிருக்கும் சில வாக்கியங்கள் அவன் கவனத்தை ஈர்த்தது..

"ஹஹ்ஹா.... ஆளப்பாரு.. நோட்டம் விட்டது போதும்டா.... அப்படி ஒன்னும் என் வீடு பெரிய பேலஸ் கிடையாது... வந்து உட்காரு வா.." என்றாள் சஞ்சனா..

"இந்த வாக்கியங்க எல்லாம் நல்லா இருக்கே.. நெட்ல கூகிள் பண்ணி எடுத்தியா?... இல்ல எதாவது புக் ஸ்டோர்ல இருந்து சுட்டியா?.." என்றான் நக்கலாக..

"ஹலோ.. நாங்கெல்லாம் சொந்தமா எழுதுவோம்.. ஒவ்வொருத்தருக்கும் இருக்குற விருப்பு, வெறுப்பு, கோவம், தாபம், மட்டற்ற எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்த பல விதங்கள் இருக்கு.. ஆனா நான் வார்த்தைகளா என் எழுத்துல கொட்டி என் மனசை சாந்தி படுதிக்குவேன்.. அப்படி செஞ்சதுதான் இது ஒன்னு ஒன்னும்.." - என்று சஞ்சனா சொல்ல

"ஹ்ம்ம்.. நம்பறா மாதிரி இல்லையே...." அவளை கொஞ்சம் வெருப்பேத்த யோசித்தான் கார்த்திக்..

"ஹ்ம்ம்.. நீ நம்புறதுக்கு என்ன செய்யனும்னு சொல்லு, செஞ்சிடலாம்.." - அவன் கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதிலளித்தாள் சஞ்சனா...

இந்த போர்டுல இருக்குற வாக்கியங்கள படிக்கும்போது எனக்கு எப்படி ஒரு உணர்வு இருந்துச்சோ நீ எதாவது இப்போ புதுசா சொல்லுறதை கேக்கும்போதும் எனக்கு ஏற்படணும்.. அப்போ ஒத்துக்குறேன் இதெல்லாம் எழுதினது நீதான்னு.. எங்க சொல்லு பாப்போம்.. - என்று சொல்லி அவள் முன் ஒரு ச்சார் போட்டு அமர்ந்தான்....

சில நொடிகள் மௌனமாய் இருந்தாள் சஞ்சனா..

"ஹஹா.. என்ன சஞ்சு சைலன்ட் ஆயிட்ட?.. சரக்கில்லையோ?.." - அவள்தான் அனைத்தையும் எழுதி இருக்கிறாள் என்று அவன் மனதில் ஒரு நம்பிக்கை இருந்தாலும், அவளை எதாவது புதியதாய் சொல்ல வைத்து பார்க்க வேண்டுமென்ற எண்ணம்தான் கார்த்திக்கை இப்படி பேச வைத்தது....

கார்த்திக் சிரிப்பதைப் பார்த்துவிட்டு சில நொடிகள் கழித்து மௌனம் களைந்து ஜூஸ் டம்ளரை மெதுவாக கீழே வைத்து தரையைப் பார்த்தபடி மெல்லிய குரலில் பேச தொடங்கினாள் சஞ்சனா..

"கூர்மையான முட்கள் பொதிந்த கூறுகெட்ட சமுதாயமே..
நான் அவ்வப்பொழுது தலைகுனிந்து நிற்பதற்குக் காரணம் நான் ஏன் பெண்ணாக பிறந்தேனோ என்று எனக்குள் நான் வருந்துவதாக எண்ணி விடாதே..
என்னிடம் இருக்கும் கண்ணியம் இறங்கி விடக் கூடாதென்பதற்காக என் கண்களில் தென்படும் கண்ணீர் துளிகளை உன் கண் பார்வையிலிருந்து மறைப்பதற்காகத்தான்...."


என்று அவள் சொல்லி முடிக்கும்போது தரையில் ஒரு துளி கண்ணீர் சிந்தியதை கவனித்தான் கார்த்திக்..


"ஹே சஞ்சு.. என்ன ஆச்சு?... ஐ அம் வெரி சாரி டி... ந...நான்...." - கார்த்திக் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க..

டைனிங் டேபிளில் உள்ள டிஷ்யூ பேப்பர் ஒன்றை எடுத்து மெலிதாய் எட்டிப் பார்த்த கண்ணீர் துளிகளை துடைத்துக்கொண்டாள் சஞ்சனா..

"இந்த வாக்கியத்தை மிதுன் விவகாரம் ஆனாப்போ எழுதினேன்.. ஆனா செவுருல மாட்டிவெக்க தோனல.. காரணம் அந்த நியாபகம்... எ... எனக்....." மன வலியில் சாதாரணமாக தொடர முடியாமல் மீண்டும் நன்கு மூசிழுத்துவிட்டு சுதாரித்துக்கொண்டு பேச தொடங்கினாள்.. "அந்த நியாபகம் திருப்பி வர வேண்டாம்னு நினைச்சிதான் அதை நான் மாட்டி வெக்கல...."

கார்த்திக் அவளை அப்படியே பார்துக்கொண்டே இருந்தான்..

"ஹஹ்ஹா... டேய் லூசு கிறுக்க.. நான் நார்மலாதான் பேசுறேன்.. நீ ஏன் என்ன அப்படியே ஒரைஞ்சி போயி பார்த்துட்டு இருக்க?.."

ஒன்றும் பேசாமல் கார்த்திக் மீண்டும் அப்படியே அவளை சீரியசாக பார்த்தான்..

"டேய் நீ சீரியஸா பார்த்தா சிரிப்பு வருது டா.. சாதாரணமா லூசு மாதிரியே இருடா.. அதுதான் உனக்கு எப்போவுமே எடுப்பா இருக்கும்... என்று சொல்லி சஞ்சனா இப்போது சிரிக்கும்போது உண்மையில் இவள்தானா சில நொடிகளுக்கு முன்னாடி கண்ணுல தண்ணி வெச்சி நம்ம கிட்ட பேசினா?.. என்று கார்த்திக் சத்தியமாகவே ஆச்சர்யப்படும் அளவுக்கு சந்தோஷத்தையும் கஷ்டத்தையும் ஒரு கன நொடியில் எப்படி இவளால மனசளவுல டக்கு டக்குன்னு மாத்திக்க முடியுதுன்னு எண்ணி மீண்டும் ஃப்ரீஸ் ஆனான்..

"டேய்.. வாத்து..." - கொஞ்சம் சத்தமாக கத்தினாள் சஞ்சனா..

"ஆங்.." - என்று இப்போது சுய நினைவுக்கு வந்தான் அந்த வாத்து..!

பார்ர்றா... உன்ன மரியாதையா லூசு கிறுக்கான்னு கூப்டா கூட காதுல கேக்கல.. ஆனா வாத்துன்னா டக்குன்னு திரும்புற?.. ஹா ஹா ஹா.... - நன்கு சத்தம் வர சிரித்தாள் சஞ்சனா..

"இன்னொன்னும் சொல்லுறேன் கேளு..." - என்று தொடர்ந்தாள்..

"வரதட்சனை என்ற பெயரில் அமௌன்ட் கேட்பதும் ஒரு ஆண்..
குடுப்பதும் இன்னொரு ஆண்...
இவற்றுக்கு நடுவில் ஒன்றும் செய்யாமல் அவர்களுடைய கோவத்துக்கு ஆளாகிறேன் நான்..."


அவள் சொன்ன அந்த இரு வாக்கியங்களையும் கேட்டு "நிஜமாவே நீதான் எழுதினன்னு ஒத்துக்குறேன்.. எனக்கு நிரூபிக்குறேன்னு சொல்லி இப்போ எனக்கு சொல்லி காமிச்ச வார்த்தைகளால நீ எதுவும் மனசளவுல கஷ்ட படல இல்ல?..."

கார்த்திக் இப்படி கேட்கும்போது அவன் வார்த்தைகளில் இருக்கும் அக்கறையை ரசித்தாள் சஞ்சனா..

"ஹலோ.. என்ன சொல்லிட்டு இப்போ நீ மட்டும் ஒரைஞ்சி போயி உட்கார்ந்திருக்க?... ஏதாவது பேசு..." - என்றான் கார்த்திக்..

"இல்லடா.. கஷ்டம் எதுவும் இல்ல.. உள்ள இருக்குறதை கொட்டுறதால மனசு லேசாகுது.. நீதான் பாவம் என் கிட்ட மாட்டிக்கிட்டு இதெல்லாம் கேட்டுட்டு இருக்க.." என்று லேசாக நொந்துக்கொண்டாள்..


"ச்சே.. ச்சே.. அப்படியெல்லாம் சொல்லாத.. உன் கூட பேசுறது எனக்கும் ரொம்ப பிடிக்கும்.." - என்று கார்த்திக் மெலிதாய் சிரித்து சொல்ல, சஞ்சனாவிடம் இருந்து வார்த்தைகள் எதுவும் இல்லை.. ஒரு மௌனமான சந்தோஷத்தைத் தவிர..

"நானும் எனக்குள்ள சில விஷயங்கள வெச்சிருக்கேன்... ஆனா அதெல்லாம் நீ எழுதினா மாதிரி வாக்கியங்கள் கிடையாது.." - என்றான் கார்த்திக்..

"வாக்கியங்கள் இல்லன்னா வேறென்னது அது?..." - ஆச்சர்யமாக கேட்டாள் சஞ்சனா..

"கேள்விகள்.."

"ஒஹ்.."

"ஆனா அந்த கேள்விக்கு யாருமே சரியான பதில் சொன்னதில்ல.."

"அப்படி என்ன கேள்வி அதெல்லாம்.. ஹ்ம்ம்.. கேளு கேளு பார்க்கலாம்..? என்று கார்த்திக் அருகே முகத்தை நீட்டி அவனருகில் வந்து சுவாரஸ்யமாக கேட்டாள் சஞ்சனா.."

"ஒரு ஆணுக்கு எது பெஸ்ட் மோதிரம்னு சொல்ல முடியுமா?" - சிரித்துக்கொண்டே புருவங்கள் உயர்த்தி கேள்வி எழுப்பினான் கார்த்திக்..

"ஹ்ம்ம்.. பிளாட்டினம், தங்கம், கல்லு வெச்ச மோதிரம், ராசிக்கல் வெச்ச மோதிரம்".. என்று அவளும் ஒன்று ஒன்றாக சொல்லிக்கொண்டே போனாள்.... ஒன்றும் தென்படவில்லை.. கடைசியாக ஒருவழியாக அவனிடம் சரணடைந்து "நீயே சொல்லிடுடா.. ப்ளீஸ் தெரிஞ்சிக்கலைனா, தலை வெடிச்சிடும்.." என்றாள்..

அவள் கண்களை நேராகப் பார்த்து சொல்ல தொடங்கினான்..

"காதலிச்சி கல்யாணம் பண்ண மனைவியோட கால் மெட்டிய விட ஒரு சிறந்த மோதிரம் இருக்க முடியுமா ஆணுக்கு?" - என்றான்..

கார்த்திக் இதை சொன்னவுடன் முகத்தின் கீழ் கை வைத்து குனிந்து கேட்டுக் கொண்டிருந்தவள் சற்று மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்து ஒரு ஆச்சர்ய சிரிப்புடன் அவனைப் பார்த்தள்....

"இன்னொன்னு சொல்லுறேன்.."

"ஹ்ம்ம்.." எதுவும் பேசாமல் அவன் கண்களையே கூர்ந்து கவனித்து தொண்டையில் இருந்து ஒரு மெல்லிய சத்தம் மட்டும் குடுத்தாள்..


"ஐ லவ் யூ...." - என்று கார்த்திக் ஆரம்பித்தான்..

அதற்குள் சஞ்சனா உடனே ஒரு அதிர்ச்சி பார்வையை குடுத்தாள்..

"ஹஹாஹ்.. பொறு பொறு.. நான் இன்னும் முடிக்கல.. பயப்படாத.." - என்று அவள் பார்வையைக் கண்டு சிரித்தான் கார்த்திக்..

"ஐ லவ் யூ" ங்கறது கேள்வியே கிடையாது.... ஆனாலும் உலகம் முழுக்க இருக்குற காதலர்கள் எல்லாருமே ஒருத்தருக்கு ஒருத்தர் இந்த வார்த்தைய இன்னொருத்தர் கிட்ட சொல்லிட்டு ஏன் பதில் எதிர் பார்க்குறாங்க?.."

"ஹ்ம்ம்.." ஒன்றும் பேசாமல் மௌனமாய் தலை அசைத்தாள்....

"பரவாயில்லையே... உணகுள்ளையும் எதோ இருக்குன்னு சொல்ல வர்ற.. சரி உன் கிட்ட ஒரு கேள்வி... காதல் பத்தி என்ன நினைக்குற?...."



சங்கீதா மேடம் - இடை அழகி 47

சிவப்பு நிற டபுள் டெக்கர் பஸ்சில், மேலே அமர்ந்து இருபுறமும் தெரியும் லண்டன் வீதிகளை பார்த்தபடியே விக்டோரியா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து இங்கிலாந்து ராணியின் பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கி சென்றுகொண்டிருந்தார்கள் சங்கீதாவும் ராகவும்..

ராகவின் கைகளை இறுக கட்டி அனைத்து அவன் தோள் மீது சாய்ந்திருந்தாள் சங்கீதா.. "ஹேய் பொற்கி.. நேத்து ராத்திரி நீ குடுத்த சர்ப்ரைஸ் என்னாலா என்னிக்கும் மறக்கவே முடியாது டா.. நீ செஞ்சதெல்லாம் நினைச்சி நினைச்சி மனசுல ஓட்டி பார்த்துட்டே இருக்கேன்..

"பிடிச்சி இருந்துதா?.." - சங்கீதாவின் தோள்களை பிடித்து அழுத்தமாய் அணைத்தபடி அமர்ந்திருந்தான் ராகவ்.

"என்னடா கேள்வி இது.. மக்கு?.... இட் வாஸ் கிரேட் டா.. நான் என் லைஃப்ல ரெண்டு புள்ளைங்க பெத்திருந்தாலும், அந்த சுகத்தை நேத்து உன் கிட்ட அனுபவெச்சதுபோல இதுக்கு முன்னாடி ஒரு தடவ கூட அனுபவெச்சதில்ல.. அந்த பெரிய ரூம், அதுக்கு மேல ஒரு டூம், அங்க ஒரு கண்ணாடி.. ஹஹா..கடைசியா அந்த கண்ணாடிய மேல பார்க்கும்போது நீ ஒன்னும் இல்லாம.. ஹஹ்ஹா...ஹீஹி- மேற்கொண்டு சொல்வதற்கு வெட்கப்பட்டாள் சங்கீதா..

"சரி சரி.. ஒரு தடவ நடந்தத மட்டுமே எத்தினி தடவ நினைச்சி பார்த்துட்டே இருப்ப?.." இன்னும் நிறைய வாட்டி புது புது தினுசா ட்ரை பண்ண வேணாமா?.." அவளின் மென்மையான கன்னங்களின் மீது தன் உதடுகள் உரச சொன்னான் ராகவ்..

"ஆத்தி.. நீ ரொம்ப ஆச படுறன்னு சொல்லிதான் உனக்காக இன்னொன்னு பெத்துக்க நான் ஒத்துகிட்டேன்.. அதுக்கும் மேல இன்னொன்னு எல்லாம் எனக்கு தாங்காதுப்பா சாமி.."

"ஊஹும்.. அதெல்லாம் முடியாது..இன்னும் ஒன்னு.. ப்ச்...ப்ச்..."- என்று ராகவ் சங்கீதாவை கொஞ்சும்போது அவன் செல் ஃபோன் சிணுங்கியது.. அதில் உள்ள ரிமைன்டர் "IOFI இன்டெர்வியூ, கால் சஞ்சனா" என்று காண்பித்தது..



"ஹைய்யோ.. இன்னிக்கி சஞ்சனாவுக்கு சில வேலைகள் முக்கியமா சொல்லியாகனும்.. ஒரு நிமிஷம் டா.." என்று சொல்லிவிட்டு அவளுக்கு கால் செய்தான் ராகவ்..

"ஹலோ"

"ஹ்ம்ம்.. ராகவ்.. சொல்லுடா.. என்ன ஆச்சர்யமா திடீர்னு போன்
பண்ணி இருக்க?.. லண்டன்ல நடந்த ஃபேஷன் ஷோல நம்ம பிராண்ட் பத்தியெல்லாம் நல்லா பேசினாங்களா?" - அதிகாலை தூக்கத்தில் மெதுவான குரலில் கேட்டாள் சஞ்சனா..

"ஹ்ம்ம்.. அதெல்லாம் நல்ல படியா முடிஞ்சிது.. கூடவே ஏகப்பட்ட அட்வெஞ்ச்சர்ஸோட முடிஞ்சிது.."

"நீ இருக்குற இடத்துல உன்ன சுத்தி அட்வென்ச்சர்ஸ் நடக்கலன்னா தான் ஆச்சர்யம்.. அது சரி.. அக்காவ பத்திரமா பார்த்துக்கோடா.."

"ஹ்ம்ம்.. அத நீ சொல்லனுமாக்கும்.. அதை விட லண்டன்ல எனகென்ன வேல.. இன்னைக்கி கம்பெனில இன்டெர்வியூ இருக்கு.. அதோட கூட அந்த குரூப் டிஸ்கஷன் மறந்துடாத.."

"இல்ல இல்ல மறக்க மாட்டேன்.. நீ அதெல்லாம் மறந்துட்டு நிம்மதியா அக்கா கூட இருந்துட்டு வாடா.."

"ஹஹா.. தேங்க்ஸ் டா.. சரி அந்த வாத்து உனக்கு உதவியா இருக்குறானா?..:"

"ஹ்ம்ம்.. தேவைப்பட்டா வந்து ஹெல்ப் பண்ணுவான் டா.. பட் மீட் பண்ணிக்குறதே ரொம்ப அபூர்வமா இருக்கு.. அவன் கூட டெய்லி ஃபோன்ல தான் பேசிட்டு இருக்கேன்.. அவன்கிட்ட பேசும்போது டைம் போறதே தெரியல.. ஸ்வீட் பாய்.." - என்று கார்த்திக் பற்றி பேசும்போது படுக்கையில் சாய்ந்திருந்தவள் சற்று உற்சாகமாய் நிமிர்ந்துகொண்டு பேசினாள்....

"ஹ்ம்ம்.. டெய்லி ஃபோன்ல அரட்டை நடக்குதோ... நடத்துங்க நடத்துங்க.. இரு உங்கொக்கா கிட்ட குடுக்குறேன் பேசு.." - என்று அவன் நண்பனையும் சஞ்சனாவையும் நக்கலடித்துவிட்டு சங்கீதாவிடம் ஃபோன் குடுக்கும்போது வேறு ஒரு நம்பரில் இருந்து கால் வருவதை பார்த்து அட்டென்ட் செய்தான் ராகவ்..

Raghav: hello

John: Hey how you doing?.. john here.. did you get to see my mms video clip in your mobile yesterday night?
(தமிழில்: எப்படி இருக்க?.. ஜான் பேசுறேன்.. நேத்து ராத்திரி நான் அனுப்பின எம்.எம்.எஸ். வீடியோ கிளிப் உன் செல் ஃபோன்ல பார்த்தியா?)

Raghav: yeah.. I saw it.. hey john, so did you guys know where sampath is right now?
(தமிழில்: பார்த்தேன்.. இப்போ சம்பத் எங்க இருக்கான்னு சொல்ல முடியுமா?)

John: yeah.. he is just outside of Buckingham Palace. karen is here with me, we just need a plan to execute..
(தமிழில்: பக்கிங்ஹம் அரண்மனைக்கு வெளியிலதான் இருக்கான்.. என் கூட கேரன் இருக்கா.... அவன பிடிக்குறதுக்கு எதாவது ஒரு திட்டம் வேணும்..)

Raghav: okay cool.. let me come there..

கால் கட் செய்தவுடன் அவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் வந்தது.. இறங்கியவுடன் சங்கீதாவிடம் "கொஞ்சம் இங்கயே இரு.. நான் இதோ இப்போ வந்துடுறேன்.." என்று சொல்லிவிட்டு பக்கிங்ஹம் அரண்மனையை நோக்கி விரைந்தான் ராகவ்..


ராகவ் முன்பே ஒருமுறை சொன்ன காஸ்ட்யூம் டீடைல்ஸ் படி கேரன் அந்த இடத்தில் முக்கல்வாசி கால் வழுவழுப்பாக தெரியும்விதம் மிகவும் குட்டையாக ஒரு ஸ்கர்ட் மற்றும், மேலே மார்பகங்கள் விம்மியபடி அழுத்தமாக தெரியும்விதம் ஒரு டி-ஷர்ட் அணிந்து நடந்து செல்லும் டூரிஸ்டுகளில் இளைஞர்களின் பார்வையை ஈர்த்துக்கொண்டிருந்தாள்.. அவள் இடுப்பில் தொப்புள் வளையம் குத்தி, மார்பிடுக்கில் பச்சை குத்தியுள்ள பட்டாம்பூச்சி இவள் சுவாசிக்கும்போது அதுவும் அங்கே சுவாசித்துக்கொண்டிருந்தது.

ராகவ் அவர்கள் இருக்குமிடத்துக்கு அருகில் வந்து ஒரு மறைவான இடத்திலிருந்து அவர்கள் செல்லுக்கு அழைத்து அவன் இருக்குமிடத்துக்கு வரவழைத்தான்.. அங்கே கேரன் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக விளக்கினான்.. இப்போது மூவரும் பிரிந்து கூட்டத்துடன் கூடமாக வெவ்வேறு இடங்களை நோக்கி நகர்ந்தார்கள்.

அரண்மனையின் முன் இருக்கும் பார்க்கில் சம்பத் ஒரு ஓரமாக அவன் சூட்கேசுடன் தலையில் தொப்பியும், கண்ணுக்கு கூலர்ஸ்சும் அணிந்து அமர்ந்திருக்க, அவன் அருகில் நன்கு நெருங்கி சென்று அமர்ந்தாள் கேரன்... அவளது காலழகும், மார்பழகும் எப்பேர்பட்ட ஆணின் பார்வையையும் சுண்டி இழுக்கும். அதற்க்கு சம்பத் ஒன்றும் விதிவிளக்கல்ல..!!

கூடவே கேரன் அவளது ஹான்ட் பாக் ஜிப் சற்று திறந்து வைத்திருந்தாள்.... வேண்டுமென்றே காட்டுகிறேன் என்ற அர்த்தத்தில் இல்லாமல் தான் ஒரு அஜாக்ரதையான பெண் என்பதுபோல தன் உடல்மொழி அவனுக்கு புரியும்விதம் நடந்துகொண்டாள்.. பாதியாய் திறந்த அவளது ஹான்ட் பாகினுள் கட்டு கட்டாக பணம் இருப்பது அவன் கண்ணுக்கு தெரியும் விதம் அவனருகில் வைத்திருந்தாள்....

"ஹாய்ய்.." - வசியமான குரலில் பேசினாள் கேரன்..

"ஹ்ம்ம்.." - சற்று பயத்தில் இறுக்கமாக பேசினான் சம்பத்..

"Are you from India?..." - நேராக பார்த்து மார்பழகு தெரியும்விதம் பேசினாள்..

"yes.." என்று சொல்லி சற்று அவளைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டான்..

"My hubby is too bad.. he is an indian too.." என்றாள்..

"oh.." என்றான்..

"you know something?... but still I love indians.. they are good in everything.."

"nice.."

"oh,, my goodness.. pls have an eye on my bag I will get a candy and come quickly.." - என்று சொல்லி அருகில் உள்ள கடைக்கு சென்றாள் கேரன்..

சம்பத் அவளுடைய ஹான்ட் பாக் மீது ஒரு கண் வைத்திருந்தான், அந்த பாக் மீது கை வைக்க ஆரம்பத்தில் ரொம்பவே தயங்கினான்.. பின் சில நிமிடங்கள் கடந்தும் அவள் திரும்பி வராமல் இருப்பதைப் பார்த்து மெதுவாக அவளது ஹான்ட் பாக் திறந்து எவ்வளவு தேறுமென்று எண்ணினான்..

Candy shop வரை சென்று வருகிறேன் என்று சென்றவளை ஒரு முறை எட்டிப் பார்த்தான்.. இன்னும் அங்கேயே தான் இருந்தாள். அந்த கடையில் பரபரப்பாக எதோ பேரம் பேசி வாங்கிக் கொண்டிருந்தாள்.. 


அப்போது சற்று உஷாராக, மீண்டும் விட்ட இடத்திலிருந்து எவ்வளவு இருக்கிறதென்று அந்த பணத்தை எண்ணினான்.. அப்போது அந்த பணக்கட்டினுள் ஒரு சின்ன காகிதம் இருந்தது.. அதைப் படித்துப் பார்த்தவனுக்கு அதிர்ச்சி.. அதில்: "இந்த பணம் உனக்கு தான்.. ஆனா இதை எடுத்துக்குறதுக்கு முன்னாடி துரை உனக்கு ஒரு விஷயம் சொல்ல சொல்லிருக்கான்.... அதை தெரிஞ்சிக்க அந்த பாக் எடுத்துட்டு சைலண்டா நான் நிக்குற இடத்துக்கு வா.." என்று எழுதி இருந்தது..

அதைப் படித்தவுடன் அவனுக்குள் ஒரு படபடப்பு ஏற்பட்டது உடனே அவளை பார்க்க முயற்சித்தான்.. ஆனால் அந்த Candy shop அருகே அவளை காணவில்லை.. இருக்கும் குளுரிலும் அவனுக்கு இப்போது வியர்க்க தொடங்கியது.. மீண்டும் அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கும் இங்கும் திரும்பி திரும்பி பார்த்தான்.. ஆனால் அவன் பார்வைக்கு அவள் தென்படவில்லை..

அவன் இருக்கும் இடத்தில் இருந்து அந்த candy shop இரண்டு நிமிடமாவது நடந்து செல்ல வேண்டுமென்ற தூரத்தில் இருந்தது.. அப்போது அவன் சூட்கேசுடன் அவளது ஹான்ட் பாகையும் எடுத்து மெதுவாக கூட்டத்துடன் கூட்டமாக நடக்க துவங்கினான்.. அவன் கிட்ட தட்ட மெதுவாக நடந்து அந்த கடை இருக்குமிடம் வறை சென்று விட்டான்..

அவள் எங்கே இருக்கிறாள் என்று அங்கே தேடுகையில் அவனுக்கு பின்னால் இருந்து உரத்த குரலில் ஒரு பெண் "That bastard has taken my hand bag and running away.. please catch him.. please.. he is stealing my bag..somebody please catch him please" என்று அலரி கத்துவது அவன் காதுகளுக்கு கேட்டு அங்கிருந்து ஓடுவதற்குள் டூரிஸ்ட் செக்யூரிட்டி ஆட்கள் அவனை மடக்கி பிடித்தார்கள்..

அப்போது ராகவ் அங்கே என்ன நடந்ததென்று தெரியாதது போல் வந்தான்.. அங்கே உள்ள செக்யூரிட்டி ஆபீசர்கள் இடையே சில நிமிடங்கள் தனியே சென்று சம்பத்தின் IOFI duplicate Identity card காண்பித்து தானும் யார் என்பதை விளக்கி, கேரன் அவனிடம் விளையாட்டாக எதோ செய்த விஷயம் என்றும், அவர்கள் அனைவரும் IOFI ஊழியர்கள்தான் என்று விளக்கி அங்கே சம்பத்தை அவர்களிடமிருந்து விடுவித்து அவனை தனியாக அழைத்து வந்தான்.. அருகே John சம்பத்தின் தோளில் அவனது இரும்பு கைகளை போட்டு அங்கிருக்கும் கூட்டத்துக்கு நண்பர்கள் நடந்துசெல்வதுபோல நடந்து அவன் எங்கும் ஓடாமலிருக்க அவனை ஒட்டி வந்தான்.

நால்வரும் அந்த அரண்மனை வீதியின் ஓரத்தில் இருக்கும் ஒரு பெரிய வேன் ஒன்றில் ஏறி.. அமர்ந்தார்கள்..

உள்ளே இவர்களின் பிடியில் இருக்கும் சம்பத் என்ன செய்வதென்று தெரியாமல் எப்படியாவது எதாவது ஒரு கதவை திறந்து ஓட முயற்சிக்கும்போது ஜான் அவன் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட.. இன்னும் திமுறிக்கொண்டு தப்பிக்க முயற்சித்தான்.. ஆனால் பலன் இல்லை.. என்னதான் காட்டானாக இருந்தாலும், நம்மூர் காட்டான்களுக்கெல்லாம் ஜாம்பவான் போல இருக்கும் ஜானின் பிடியில் அவன் கைகள் பின்புறம் முறுக்கி மடக்கி வைக்கப்பட்டு இருந்தது.. அவன் எவ்வளவு முயற்சி செய்தும் ஒரு இன்ச் கூட அவனுடைய பிடியில் இருந்து நகர முடியவில்லை..

கருப்பு நிற கண்ணாடியை கொண்ட நான்கு கதவுகளும் மூடப்படிருந்ததில் உள்ளே என்ன நடக்கிறதென்று யாருக்கும் தெரியவில்லை.. சம்பத்தின் சத்தமான கூச்சலும் காரின் உள்ளேயே அடங்கியது..

"எதுக்கு என்ன கொல்ல வந்த?" - ராகவ் அவன் கண்களை உத்து பார்த்து கேள்வி எழுப்பினான்..

"அது எனக்கு துரை குடுத்த வேல... அவ்வளோதான்.." - வசமாக மாட்டி இருந்தாலும் மூர்கமான முகத்தோடு திமிரான குரலில்தான் பதில் வந்தது சம்பத்திடமிருந்து....


"ஆஸ்பெத்ரியில குமார எதுக்கு துரை கொல்லனும்?.... அன்னிக்கி ராத்திரி அங்க ஒரு வார்டன் டிரஸ்ல காம்பவுண்ட் சுவர் ஏறி குதிச்சி ஓடினது நீதான?.."

சம்பத்திடம் ஒரு நீண்ட மௌனம்...

ராகவ் ஜானைப் பார்த்து மெதுவாக கண் அசைக்க.. சம்பத்தின் கைகளை கொஞ்சம் அழுத்தமாக முறுக்கினான் ஜான்..

"ஆஹ்ஹ்ஹ்ஹ.." வலியில் கதறினான் சம்பத்..

"சொல்லுறியா?.. இல்ல... உன் கைய முருக்கியே மொத்தமா எடுத்துட சொல்லவா?...."

"சொல்றேன் சொல்றேன்.." என்று வலி தாங்காமல் மேலும் தொடர்ந்தான்.. "துரைக்கு ஆஸ்பெத்ரியில குமாரை கொல்லுறதுக்கு நான் தான் எல்லா ஏற்பாடும் பண்ணி குடுத்தேன்.. ஆனா அவன் எதுக்கு குமாரை கொல்லணும்னு எனக்கு தெரியாது.."

"ஒரு நாள் நடு ராத்திரி என் கார் பின் புற கண்ணாடியில கல் எறிந்சதும் நீதான?.." என்றான் ராகவ்..

"ஆமா.. எதையுமே நான் செய்யல.. என்னை செய்ய வெச்சாங்க.."

"ராகவிடம் ஒரு மௌனம்.. எதோ ஆழ்ந்த சிந்தனையில் இருந்தான்.. சில வினாடிகள் கழித்து.. "எதுக்கு துரை ராத்திரி நேரத்துல குமார கொல்லுறதை நீ ஒழிஞ்சி இருந்து வீடியோ எடுத்து வெச்சிருக்க?"

சம்பத்திடம் ஒரு அதிர்ச்சி.. அந்த வீடியோ பற்றி எப்படி ராகவுக்கு தெரியுமென்று எண்ணி அவன் முகம் வேர்த்தது..

"அதெப்படி உனக்கு தெரியும்?.. எந்த வீடியோ பத்தி பேசுற?.." - என்று மீண்டும் எகிறினான் சம்பத்..

"உன் கைய திரும்பவும் முறிக்க வெக்காத.... சீக்கிரம் சொல்லு.." - என்று ஜானைப் பார்த்து ராகவ் மீண்டும் கண் அசைக்க.. ஜான் ஏதும் செய்வதற்குள் சொல்லிவிடலாம் என்று பேச ஆரம்பித்தான் சம்பத்..

"நான் துரை சொன்ன எந்த ஒரு விஷயத்துக்கும் மாட்டேன்னு சொன்னதில்ல.. ஆனா எனக்கு சரியான கூலி தர்றதா சொல்லி ஏமாத்திட்டான்.. அவன் கிட்ட இருந்து எனக்கு வர வேண்டிய பணத்தை வாங்குறது எப்படின்னு புரியல.. அப்போ அவனை மிரட்டுறதுக்கு எனக்கு ஏதாவது ஒரு விஷயம் தேவைப் பட்டுது.. அதுக்காக எடுத்து வெச்ச வீடியோதான் அது.."

"இன்ட்ரஸ்டிங்.. ஹ்ம்ம்.." - மீண்டும் சற்று ஆழ்ந்து யோசித்தான் ராகவ்..

"அந்த மரத்துன்டு பத்தி உனக்கு எதாவது தெரியுமா?.." - இந்த கேள்விக்கு ரொம்ப ஆர்வமாக சம்பத்திடம் இருந்து பதிலை எதிர்பார்த்தான் ராகவ்..

"அது..." - என்று சம்பத் சொல்ல ஆரம்பிப்பதற்குள் ராகவின் செல்ஃபோன் சிணுங்கியது.. சங்கீதா நீண்ட நேரம் ஆகியும் ராகவ் எங்கிருக்கிறான் என்று தெரிந்துகொள்ள அழைத்திருக்கிறாள்..

"oh.. my goodness.. John.. my wife is coming towards this place.. I dont want her to see me.. so please have this bastard under your custody, I want to take him alive to India soon.. he is very important to me.. got it?" - என்று அவசரமாக சொல்லிவிட்டு ஜானின் கையில் ஒரு தொகையை குடுத்துவிட்டு அங்கிருந்து நழுவி வேறொரு பக்கமாக சென்று சங்கீதாவின் பின்னால் வந்து நின்றான் ராகவ்..


"எங்கடா போயிட்ட பொற்கி.. எவ்வளோ நேரமா தேடிட்டு இருக்கேன்..?.. உனக்கு அக்கறையே இல்ல என் மேல.. போ.." என்று அவள் சிணுங்க.. அப்படியே அவள் உதடில் தன் உதடை பதித்து ப்ச் ப்ச் ப்ச் என்று லிப் கிஸ் செய்து பேசிக்கொண்டே இருந்த அவளது லிப்பை லாக் செய்தான் ராகவ்..

முத்தத்தில் ஆழ்ந்திருக்கும்போது சங்கீதாவின் பின் பக்கம் அந்த வேன் மெல்ல நகர்ந்து செல்வதைப் பார்த்தான்... அப்போது ராகவின் செல்லில் ஒரு எஸ்.எம்.எஸ் வந்தது.. "Dont worry, I will have him with me, come and take him whenever you can - John" என்ற மெசேஜ் பார்த்து சற்று தெம்படைந்து மீண்டும் தன் காதல் மகாராணி சராவுடன் இங்கிலாந்து மகாராணியின் அரண்மனையை சுத்தி பார்க்க பக்கிங்ஹம் பாலஸ் உள்ளே குஷியாக சென்றான் ராகவ்....

(இப்போது அதே நாள்.... லண்டனில் இருந்து நம் தாயகத்துக்கு வருவோம்.. இங்கே நம் வாத்தும் சஞ்சனாவும் என்ன செய்கிறார்களென்று பாப்போம்..)

காலையில் எழுந்த போதிருந்தே கார்த்திக்கின் மனமும் உடலும் பரபரப்பாய் இயங்கியது. மனதில் ஓடிய இளைய ராஜாவின் பாடலை ஹம் செய்து கொண்டே தன் லூசான உடைகளை அணிந்து கண்ணாடியில் பெருமை பொங்க தன் அழகை ரசித்தான்.

வெளியில் கார் ஹாரன் சத்தம் ஒலிக்க, அவசரமாய் கண்ணாடியை பார்த்து தலை வாரிக்கொண்டு, முகத்தை அங்கும் இங்குமாய் திருப்பிப் பார்த்துவிட்டு கடைசியாய் தன்னைப் பார்த்து தானே கண் அடித்து “செமையா இருக்க டா மாப்ள..” என்று கார்த்திக் தன்னைப் பார்த்து சொல்லிக்கொள்ளும் போது ஒரு வேலை அந்த கண்ணாடிக்கு உயிர் இருந்திருந்தால் தன் கண்களை இறுக்க மூடி கூச்சப்படிருக்கும்..!!

தான் அணிந்திருக்கும் பான்டுக்கு பெல்ட் போட்டு, ஷூவுக்குள் இரு கால்களையும் ஏனோ தானோ என்று சொருகிக்கொண்டு அவசரமாய் வண்டியில் ஏறினான்..

கார்த்திக் காரில் ஏறியபோது “பொன் மாலைப் பொழுது... இது ஒரு பொன் மாலைப் பொழுது.. வான மகள் நானுகிறாள், வேறு உடை பூணுகிறாள்..” – என்று IOFI Benz வண்டியில் உள்ள ஸ்பீக்கர்களில் நிழல்கள் பாட்டு ரம்யமாக ஒலிக்க, அதற்கு ஏற்ப விரல்களால் தாளம் போட்டுக்கொண்டே ஒரு புது உற்சாகத்துடன் சஞ்சனாவைப் பார்க்க சென்றுகொண்டிருந்தான் கார்த்திக்.

இன்று கார்த்திக் இவ்வளவு உற்சாகமாக இருப்பதற்கு காரணம் அவன் எனிமி ஊரில் இல்லாத போது சஞ்சனாவுடன் அதிக நேரம் நிம்மதியாய் கடல போடலாமே என்ற சந்தோஷம்தான் வேறென்ன.

“ஏன் தம்பி, கேக்குறேன்னு தப்பா நினைக்க கூடாது.. இந்த சைனீஸ் படங்கள்ல வரா மாதிரி லூசா பான்ட் ஷர்ட் போடுறீங்களே? இது உங்க ஊருல ஃபேஷனா?.. இல்ல நீங்க ஏதாவது ப்ரூஸ்லி ரசிகரா? ஹா ஹா..” – ட்ரைவர் தாத்தா கார்த்திக்கை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்து கிண்டலாய் கேள்வி எழுப்பினார்..

"நீங்க கூட அப்பப்போ சஞ்சனா கிட்ட மொக்கையா கடல போடுறீங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.. அது உங்க வாலிப வயசுக்கேத்த கோளாறா Mr.டாம் க்ரூஸ்?.. ஏன் நீங்க முறைப்படி உங்க மனைவி கிட்ட சொல்லி அவளை பொண்ணு கேக்க கூடாது?.. பாவம் அந்த புள்ளையும் தனியாதான சுத்திட்டு இருக்கு.. என்ன நான் சொல்லுறது கரெக்ட் தான..?" – என்று டிவியில் காம்பியரிங் பண்ணும் பெண்களைப் போல கழுத்தை ஆட்டி ஆட்டி நக்கலாய் பேசினான் கார்த்திக்.

தாத்தா என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கார்த்திக்கைப் பார்த்து முழிக்க..

சிக்னல் போட்டுடாங்க, சீக்கிரம் வண்டி எடுங்க.. ஹ்ம்ம் ரைட் ரைட்.. என்றான் கார்த்திக்..



“அந்த பொன்னே பரவாயில்ல போல இருக்கே..” என்று முனு முனுத்துக்கொண்டார் தாத்தா..

ஆடிஷனுக்கு காத்திருக்கும் அறைகுறை மாடர்ன் உடை இளம் பெண்களை பார்த்து ரசித்தபடி IOFI வளாகத்துக்குள் நுழைந்தான் கார்த்திக்..

கொய்யால நம்ம தூக்கத்தை கெடுக்க ஒவ்வொன்னும் தனித்தனியா வித விதமா வளத்து உட்டுருக்கானுக என்று அந்த பெண்களை பெற்ற அப்பன் மார்களை திட்டிக்கொண்டே சஞ்சனா இருக்கும் மீட்டிங் ஹாலுக்கு சென்றான்.

வேர் ஆர் யு என்ற இவனின் எஸ்.எம்.எஸ் க்கு “நான் ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், நீ கொஞ்சம் வெயிட் பண்ணு என்று எஸ்.எம்.எஸ். அனுப்பி இருந்தாள் சஞ்சனா.. அதைப் பார்த்து விட்டு மீட்டிங் நடக்கும் கண்ணாடி அறையின் வெளியே அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் கார்த்திக்..

அந்த அறையினுள், ஒரு பெரிய வெள்ளை போர்டில் உலக அளவிலான ரிசஷன் (Recession) என்ற தலைப்பு தெரிந்தது, கூடவே சுமார் இருவதில் இருந்து இருவத்தைந்து வயதுடைய ஸ்டைலீஷான பெண்களும் முன் புறம் உள்ள சொட்டையை சற்றே ஸ்பைக் ஸ்டைல் என்ற பெயருடன் மறைத்து நாகரீகமாக ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கும் ஆண்களையும் பார்த்து தனக்குத் தானே சிரித்துக்கொண்டிருந்தான். ஆனாலும் அந்த பெண்களில் சஞ்சனா வித்தியாசமாக ஜொலிப்பதை அவனால் உணர முடிந்தது.

ஒரு சில நிமிடங்களில் சஞ்சனா கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்துவிட்டு அனைவரையும் நோக்கி எதோ சொல்ல, ஒவ்வொருவரும் சூடான விவாதத்தில் இறங்கினார்கள்.

சில நிமிடங்கள் கழித்து நான்கு இளைஞர்கள் வேறு அறைக்கு சென்றார்கள். அமர்ந்திருந்த மீதி இளசுகளில் கூர்மையான கண்களும், நீளமான வழு வழு முடியும் கொண்டு திமிரான பார்வையில் ஒரு பெண் சஞ்சனாவிடம் எதோ வாக்குவாதம் நடத்துவது தெரிந்தது... அப்போது சஞ்சனா எதேர்ச்சையாக திரும்பவும் அவளைப் பார்த்து “வந்துட்டேன்” என்று சிக்னல் குடுத்தான் கார்த்திக்..

"ஹேய் கார்த்தி.. அவ்வளோ சீக்கிரம் வந்துட்ட?.. என்ன பண்ற இங்க?.." – உள்ளே இருப்பவர்களிடம் எக்ஸ்யூஸ் கேட்டு கார்திக்கை பார்த்தவுடன் எதோ ஒரு பரவசத்தில் வெளியே வந்து பேசினாள் சஞ்சனா..

"ரூம்ல போர் அடிச்சுது, கூடவே நீயும் இன்னிக்கி உனக்கு கொஞ்சம் வேலை கம்மின்னு சொல்லி இருந்த இல்ல, அதான் என்ன பண்ணுறதுன்னு தெரியாம உன் பாய் ஃபிரன்டுக்கு ஃபோன் பண்ணி என்னை இங்க கூட்டிட்டு வர சொன்னேன்.." என்றான் நக்கலாக..

அவன் பாய் ஃபிரன்டு என்று சொன்னவுடன் எதோ சிந்தனையில் சஞ்சனா லேசாக குழம்பினாள்.. பின் அவனுக்கு பின்னால் நிற்கும் டிரைவர் தாத்தாவைப் பார்த்துவிட்டு மென்மையாக சிரித்தாள்..

“அடங்கவே மாட்ட டா நீ..” – என்னதான் சிரித்த முகமாக பேசினாலும் அவள் முகத்தில் ஒரு டென்ஷன் இருப்பதை உணர்ந்தான் கார்த்திக்..

"ஆமா என்ன நடக்குது உள்ள.. சூடா வாக்கு வாதம் நடக்குறா மாதிரி தெரியுது.. ஏதாவது பிரச்சினையா?"

"ச்சே ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லடா.. உள்ள இருக்குறவங்க பெரிய பெரிய ஃபேஷன் ஸ்கூல்ல இருந்து IOFI ல சேருரதுக்கு இன்டெர்வியூக்கு வந்திருக்காங்க.. ராகவ் எப்போவுமே இந்த மாதிரி புதுசா வர்றவங்களுக்கு பேசுற திறமை எப்படி இருக்குன்னு பார்க்க குரூப் டிஸ்கஷன் வெக்க சொல்லுவான்.. அவன பொறுத்த வரைக்கும் என்னதான் திறமை இருந்தாலும் வாய் ரொம்ப முக்கியம்னு சொல்லுவான் அதுக்குதான் இந்த செஷன்..

"ஹ்ம்ம்.. வாயிலேயே வடசுட்டு CEO ஆனவனாச்சே..!! இல்லன்னா அந்த எனிமி எப்படி இந்த பொசிஷன்ல இருக்க முடியும்..?"

"ஹஹா.. நல்லா பேசுறடா லூசு கிறுக்கா, கொஞ்சம் வெயிட் பண்ணு உள்ள கொஞ்சம் டிஸ்கஷன் முடிச்சிட்டு வந்துடுறேன்.." - என்று சஞ்சனா சிரிக்கையில் அவளது சிரிப்பை அப்பட்டமாக அவளுக்கு தெரியும் விதம் வாய் அகல விரிய பார்த்து ரசித்தான் கார்த்திக்.

"டேய் வாத்து.. மவுத் க்ளோஸ் பண்ணு.. ஈ உள்ள போய்ட போவுது.. ஹஹா.." - என்று கார்த்திக் தன்னைப் பார்த்து ஊத்துவதை உணர்ந்து நக்கலடித்தாள்..

"ச்சே.. ச்சே.. அதெல்லாம் ஒன்னும் இல்லையே.. ந...நான் எதோ உன்ன பார்த்து ஜொள்ளு விடுறேன்னு தப்பா நினைச்சிகாத.." என்று சமாளித்தான்..

"நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே.." – ஓரக்கண்ணால் பார்த்து சிரித்தாள் சஞ்சனா....

"நீ சொல்லலதான்.. இருந்தாலும் அப்படி ஒரு எண்ணம் உனக்கு வந்துட கூடாதுன்னு முன் கூட்டியே நான் உனக்கு சொல்லிட்டேன்." – என்னதான் கார்த்திக் உதடுகள் மெனக்கெட்டு பேசினாலும் அவன் கண்கள் சொல்வது என்னவென்று புரிந்து மெளனமாக அவனை பார்த்து சிரித்துவிட்டு உள்ளே சென்றாள் சஞ்சனா..

சில நிமிடங்கள் கழித்து மூடிய கண்ணாடி அறையை தாண்டியும் சத்தம் சற்று வெளியே கேக்கும்விதம் இருந்தது கார்த்திக்கின் காதுகளுக்கு.

"எக்ஸ்கியூஸ் மீ சஞ்சனா.. எதாவது பிரச்சினையா?" – கதவை லேசாக திறந்து கேட்டான் கார்த்திக்..

"ஒன்னும் இல்ல கார்த்திக் கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணு.. நான் வரேன்.." – என்று சஞ்சனா சொல்வதைக் கேட்டு கார்த்திக் கதவை சாத்துவதற்குள் மீண்டும் அந்த பெண் சற்று குரலை உயர்த்தினாள்.. அதைக் கேட்ட பிறகு அங்கிருந்து செல்ல மனமில்லாமல் உரிமையுடன் மீண்டும் அந்த அறையின் உள்ளேயே வந்து சஞ்சனாவிடம் “என்ன பிரச்சினை சஞ்சனா” என்றான்..

கார்த்திக்கின் அருகே வந்து மெதுவாக பேசினால் சஞ்சனா.. “நடந்த குரூப் டிஸ்கஷன்ல இவங்கள நான் ரிஜக்ட் பண்ணிட்டேன்.. அந்த வெறுப்புல உனக்கு மட்டும் ரிசஷன் டாபிக் பத்தி என்ன பேச தெரியும்?... சும்மா கண் துடைப்புக்கு குரூப் டிஸ்கஷன்னு ஒன்னுத்த வெச்சி யார் யாரை ஏற்கனவே செலக்ட் பண்ணணுமோ அவங்கள மட்டும் செலக்ட் பண்ணிட்டு இந்த ரவுண்ட்ல எங்கள எலிமினேட் பண்ணுறதுதான உங்க பிளான்.. அப்படி.. இப்படின்னு அவ பாட்டுக்கு இஷ்டத்துக்கு கத்திட்டே போறா.. நான் இதுக்கெல்லாம் பதில் பேசினா, IOFI பேருதான் கெடும்....”

"அதுக்காக நீ எதுவும் பேச கூடாதுன்னு அர்த்தம் இல்லையே?" – அந்த பெண்ணை நக்கலாக பார்த்தபடி கார்த்திக் சஞ்சனாவிடம் இதை சொல்ல..


"ஹலோ.. மிஸ்டர்.. வாட் இஸ் யுவர் ப்ராப்லம்?...." என்று கார்த்திக்கையும் நோக்கி பாய்ந்தாள் அந்த பெண்....

"பொறுமை.. பொறுமை.. மிஸ்.மாடர்ன் நீலாம்பரி.." – மீண்டும் அதே நக்கல் சிரிப்புடன் பார்த்தான் கார்த்திக்..

"வாட் தி ஹெல் யூ திங்க் ஆஃப் யூவர்செல்ஃப்?.. ஹொவ் டேர் யூ வில் கால் மீ லைக் தட்?...." - இன்னும் சீறினாள்..

"ஷ்ஷ்ஷ்.. கார்த்திக்.. முட்டாள் மாதிரி அவ கூட கூட பேசாத.. கொஞ்சம் வெளியே இரு.. இவங்கெல்லாம் இன்னைக்கி ஒரு நாள்தான் உள்ளே இருக்க போறாங்க.. இவங்க கிட்டெல்லாம் பேச்சு வெச்சிகிட்டா வெளியே போயி பேர கேடுப்பாங்க.. ஏன் புரிஞ்சிக்காம அவள வம்பிழுக்குற?.. ராகவ் ஊருல இல்லாத வரைக்கும் நான்தான் டா எல்லாத்தையும் இங்க பார்த்துக்கணும்.. அந்த பொறுப்பு எனக்கு இருக்கு.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோ.." – கார்த்திக்கின் கைகளை மெதுவாய் பிடித்து சொன்னால் சஞ்சனா..

"ஹ்ம்ம்.. அந்த பருப்பு ஊற சுத்திகிட்டு உனக்கு பொறுப்பு குடுத்துட்டு போவான்.. அப்போ இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்தா எனக்கு வெறுப்பு மட்டும் வந்துட கூடாது... இல்ல?.."

சற்று சுதாரித்துக்கொண்டு அந்த பெண்ணை நோக்கி “மிஸ்.. உங்களுக்கு அப்ஜக்ஷன் இல்லன்னா அதே ரிசஷன் பத்தி நான் சுருக்கமா சொல்லி காட்டவா?” என்றான்..

அந்த பெண் எதுவும் பேசாமல் சலிப்பு கலந்த பார்வையுடன் கார்த்திக் சஞ்சனா இருவரையும் பார்த்தாள்.. அப்போது கார்த்திக் தொடர்ந்தான்..

"ஒரு பெரிய ஸ்டார் ஹோட்டலுக்கு ஒரு பணக்காரன் தங்குறதுக்கு வந்திருக்கான்.. அப்போ அவன் பர்ஸ்ல இருந்து ஒரு 100 டாலர் பணம் கீழ விழுந்திருக்கு...“

"அந்த ஹோட்டல் மேனேஜர் ஆபத்துக்கு பாவம் இல்லைன்னு சொல்லிட்டு அவன் டிரைவர் கிட்ட வெச்சி இருக்குற 100 டாலர் கடனை குடுத்துடுறான்.."

"அதே 100 டாலரை அந்த டிரைவர் ஒரு விலை மாது கிட்ட குடுத்து அவன் கடனை செட்டில் பண்ணிட்டான்.."

"அந்த விலை மாது அதே 100 டாலரை ஒரு ப்ரோவிஷன் ஷாப்ல குடுத்து அந்த வாரத்துக்கு தேவையான வீட்டு சாமான்களை வாங்கிட்டா."

"அந்த ப்ரோவிஷன் ஷாப் முதலாளி அவருடைய சப்ளையர் கிட்ட அதே 100 டாலரை குடுத்து அவன் கடன் தீர்த்துட்டான்..."

"அந்த சப்ளையர் கடைசியா அந்த ஹோட்டல் மேனேஜர் கிட்ட அதே 100 டாலர் குடுத்து அவர் கிட்ட இருந்த கடனை தீர்த்துட்டான்."

"இப்போ அந்த பணக்காரன் ஹோட்டலுக்கு இரவு நேரம் உள்ள வரும்போது அந்த மேனேஜர் "இது உங்க காசுதான்" னு சொல்லி திருப்பி குடுத்துடுறான்."

"ஒரு சில மணி நேரத்துல ஒருத்தருக்கு ஒருத்தர் கடன் வெச்சி இருந்த பல பேரோட பண பிரச்சினை தீர்ந்துடுச்சி.. ஆனா நடந்ததெல்லாம் என்னென்னா ஒரு 100 டாலர் அந்த பணக்காரன் பர்ஸ்ல இருந்து வெளியேறி மேனேஜர், டிரைவர், விலை மாது, ப்ரோவிஷன் ஷாப் முதலாளி, சப்ளையர்னு சுத்தி கடைசியா அந்த மேனேஜர் கைக்கு வந்து அந்த பணக்காரன் பர்ஸ் உள்ளயே போய் அம்சமா உட்கார்ந்துடுச்சி.."

"இதுல நடுவுல யாராவது ஒருத்தர் கிட்ட அந்த பணம் அடுத்த கட்டத்துக்கு போகாம இருந்திருந்தா அங்க பண வீக்கம் எட்டி பார்த்திருக்கும்.. கரெக்டா?.. என்று சொல்லிவிட்டு சஞ்சனாவை பார்த்து கண் அடித்தான் கார்த்திக்.."


"அவன் சொன்னதைக் கேட்டு ஒரு நிமிடம் ஒன்றும் பேசாமல் அவனையே கவனித்தாள் அந்த பெண்.."

"ஆர் யூ கண்வின்ஸ்ட் மிஸ்..?" – என்று அந்த பெண்னை பார்த்து சிரித்தபடி சொல்லிவிட்டு சஞ்சனாவின் காதுகளில் மெதுவாக "யோசிக்குறாங்கலாம்....ஹிஹி.." என்று அந்த பெண் எதிரிலேயே நக்கலாக சிரித்துவிட்டு வெளியே சென்று அமர்ந்தான் கார்த்திக்..

அவன் முகம் கூட பார்க்காமல் தனது ஹான்ட் பாக் எடுத்துக்கொண்டு அருகில் உள்ள பெண்ணிடம் “இவளுக்கு பேச தெரியுமான்னு கேட்டா எவனோ ஒருத்தன் வந்து பேசறான்....ச்சே"

"ஹேய் யூ?...." - என்று சஞ்சனாவை நோக்கி விடை பெறுவதற்கு முன் எதோ விறைப்பாக சொல்ல அருகில் வந்தாள் அந்த பெண்..

"மை நேம் இஸ் சஞ்சனா.." - பெயர் தெரியாதவளுக்கு சிறிதும் பின் வாங்காமல் நேருக்கு நேர் அவள் கண்களைப் பார்த்து தன் பேரை சொன்னாள் சஞ்சனா....

"என்ன நெனச்சிட்டு இருக்க?.. எங்கள ரிஜக்ட் பண்ணதுக்கு உன்னதான பேசி காமிக்க சொன்னோம்...? உன்னால முடியலைனா உனக்கும் நல்ல கம்யூனிகேஷன் திறமை இல்லன்னுதான் அர்த்தம்... ஆனா நீ உள்ள இருக்க.. நாங்க இல்ல.. அவ்வளோதான் வித்யாசம்.." - என்று அந்த பெண் சற்று உறும, அவள் அருகில் அவளைப்போலவே டென்ஷனாக இருக்கும் மற்றொரு ஜீவன் "விடுடி... அவ ஆளா இருப்பான்.. அதான் திடீர்னு உள்ள பூந்து பேசிட்டு போறான்... ஃபேஷன் கம்பெனில ஜாயின் பண்றதுக்கு IT கம்பெனி மாதிரி குரூப் டிஸ்கஷன் வெக்குறாங்க.. ச்சே" என்று சஞ்சனா காது பட அவர்கள் முணுமுணுத்துக்கொண்டே வெளியேறும்போது சஞ்சனாவின் இயல்புக்கு அவர்கள் சொன்ன வார்த்தைகளால் இயற்கையாக கோவம்தான் வர வேண்டும்.. மாறாக “அவ ஆளா இருப்பான்” என்று மற்றொரு பெண் கார்த்திக்கை குறி வைத்து சொன்னது அவள் மனதுக்குள் எழுந்த கோவத்தையெல்லாம் அணைத்துவிட்டு ஒரு இனம் புரியா சந்தோஷத்தை எட்டிப் பார்க்க வைத்தது....

"ஹலோ.." - கதவை மீண்டும் மெதுவாக திறந்து அந்த இரு ஓய்யாரிகளும் போய்டாங்களா என்று எட்டிப் பார்த்தான் கார்த்திக்..


"ஆங்.. சொல்லுடா.." - கார்த்திக் உள்ளே வந்து சஞ்சனாவை சற்று உலுக்க, எதோ ஒரு இன்ப மயக்கத்தில் இருந்தவள் சுதாரித்துக்கொண்டாள்....

"என்ன ஆச்சு? அப்படியே நிக்குற? திரும்பி எதாவது சொன்னாளா?.. கூப்டு கலாய்கவா?.."

"ஹேய்.. ஒன்னும் சொல்லல டா நீ பேசாம வா.." - உதடில் ஒரு மெல்லிய சிரிப்புடன் சொன்னாள் சஞ்சனா..

இருவரும் IOFI வளாகத்தில் சஞ்சனாவின் வீட்டை நோக்கி நெடும் பாதையில் எதிர் திசையில் ஜில்லென்ற காற்றடிக்க மரங்கள் தரும் நிழலில் நடந்தார்கள்.... அப்போது அவனை ஒரு நிமிடம் உற்று கவனித்தவள் "கார்த்தி, ஒரு நிமிஷம் இரு.." என்று சொல்லிவிட்டு தன் காபினுக்கு சென்றாள்... சற்று நேரம் கழித்து மீண்டும் தனது முதுகில் மாட்டிக்கொள்ளும் பாக் உள்ளே ஏதோ ஒன்றை வைத்து ஜிப் போட்டு மூடியபடி நடந்து வந்தாள்...

அடிக்கும் காத்துக்கு முடிகளை தன் கைகளால் கோதிவிட்டு காலரை சற்று கேஷுவலாக தூக்கி விட்டபடி அவள் வருவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் கார்த்திக்கிடம் ரொம்பவும் பெரிய அளவிலான பர்சனாலிட்டி இல்லையென்றாலும் பார்த்தவுடன் பளிச்சென தென்படும் ஒரு வசீகரத்தை ரசிக்க தவறவில்லை சஞ்சனா..



Friday, 20 November 2015

சங்கீதா மேடம் - இடை அழகி 46

அப்போது சங்கீதா தன் கைகளால் அவளுடைய மார்பகங்களை அழுத்தி காம்புகளை தானே கில்லிக்கொண்டு "ஹ்ம்ம்... ஸ்ஷ்ஹ்ஹா.... ஷ்ஷ்ஷ்.... ஹ்ம்ம்... ஹ்ஹா...." என்று முனகிக்கொண்டு வயிற்றில் அவனது முத்தங்களை அனுபவித்தாள்....

ராகவின் முத்தங்கள் அவளது இடுப்பின் ஓரம் உள்ள வளைவுகளிலும், நடுவிலும் ஒரு இன்ச் விடாமல் பதிந்து கொண்டிருந்தது, அப்படியே மெல்ல மெல்ல அவன் உதடு இன்னும் கீழே இறங்குகையில் அவளது தொப்புள் அருகே அவனது சூடான மூச்சுக்காத்து படுகையில் "ஸ்ஸ்ஹா.....ஹ்ம்ம்ம்.." என்று தன் கை விரலை சற்றே கடித்தவாறு முனகினாள்.


தொப்புள் அருகே மீசை உரசுகையில், அவளுடைய இடுப்பு பகுதி அதிகம் கூசியது, அதை அடக்கிக்கொள்ள ராகவின் தலை முடியை நன்கு அழுத்தி பிடித்து அழுத்தி அவனுக்கு மூச்சு விடுவதற்கு கூட வழி இல்லாமல் தன் தொப்புள் குழியில் புதைக்க முயன்றாள்.... இருப்பினும் சற்றே தலை நிமிர்த்தி மூச்சு வாங்கிக்கொண்டு மீண்டும் அவளது தொப்புள் உள்ளே தன் நாவின் நுனியை எச்சிலால் ஈரப்படுத்தி உள்ளே செலுத்தி துழாவுகையில் சங்கீதாவுக்கு உச்சகட்ட நிலையில் உடல் கூசியது...

"ஸ்ஹாஅஆஆஆ.... ஹம்ம்.....ம்ம்மா.... ராகவ்... ஹாஹாஹா..... கூஸ்....கூசுது டா பொற்கி.. ஸ்ஹாஅஅ....." என்று கண்களை மூடி சிரித்துக்கொண்டே முனகினாள்..

சாதாரணமாக முத்தம் குடுத்துக்கொண்டிருன்தவன்.. இப்போது நாக்கினை இன்னும் முடிந்தவறை தொப்புளின் ஆழத்தை தன் நாவின் நுனியால் அளப்பது போல உள்ளே இறக்கி பாம்பை போல நெளிய செய்தான்.... அப்படியே மேலே சங்கீதாவின் இரு கைகளையும் அவளது மார்பின் மீதிருந்து எடுத்துவிட்டு தன் கை விரல்களின் நுனியால் அவளது காம்பின் நுனியில் இருக்கும் திராட்சையை தடவிக்கொண்டே அவளது தொப்புளை தன் நாவால் வேகமாக நிமின்டினான்....

"ஸ்ஷ்ஹாஆ..... ஸ்ஷ்ஹாஆ..... ஸ்ஷ்ஹாஆ....." சங்கீதாவுக்கு உயிர் போவதுபோல மூச்சு வாங்கியது..

ஹேய்... பொற்கி....

"ச்சப்.... ச்சப்.... ச்சப்...." என்று தொப்புளை சிறிதும் இடைவெளி இன்றி தொப்புள் குழியை ச்சப்பி கொண்டிருந்தவன் மெதுவாக "என்னடி?...." என்று கேட்டுவிட்டு மீண்டும் வேகமாக ச்சப்.... ச்சப்.... ச்சப்.... என்று உறிந்து ச்சப்ப தொடங்கினான்....

ஹாஹ்ஹா.... ஹ்ம்ம்.. ஹேய் பொற்கி....

"ஹ்ம்ம்..." ச்சப்.... ச்சப்.... ச்சப்.... "சொ.." ச்சப்.... ச்சப்.... "சொல்லுடி அம்முகுட்டி...."

"ஹம்ம்ம்ம்...... டேய் பொற்கி புருஷா..."

"டிஸ்டர்ப் பண்ணாத.. " ச்சப்.... ச்சப்.... ச்சப்.... என்று இன்னும் தொப்புளுக்குள் நாக்கின் விளையாட்டு தொடர்ந்துகொண்டிருந்தது.... "என்ன சொல்லணுமோ சொல்லு..." என்று ராகவ் அவளின் முகம் பார்க்காமல் பிசியாக இயங்கிகொண்டிருந்தான்.. அப்போது சங்கீதா...

"ஜல் ஜல் ஜல்" என்று அவன் முதுகில் கோர்த்து வைத்திருக்கும் பாதங்களால் தட்டி சத்தம் எழுப்பினாள்....

ராகவ் அப்போது ஒரு நொடி அவளை சற்று லேசாக நிமிர்ந்து பார்த்து சிரித்து "ஹென்னடி..." என்றான்..

சங்கீதா ஒன்றும் பேசாமல் அவனை பார்த்து மெலிதான ஒரு சந்தோஷ சிரிப்பை குடுத்து அவனுக்கு திருஷ்டி எடுப்பது போல கைகளால் அவன் முகத்தை சுத்தி தன் தலையில் நட்டு உடைத்தாள்.... அவள் எதிர் பார்த்ததுபோல ஒரே ஒரு நட்டு சத்தம்தான் கேட்டது... "ஹாஹ்ஹா..." என்று அவள் மனதுக்கு மட்டும் அதன் அர்த்தம் புரிந்து சிரிக்கையில், அதை கவனிக்காமல் ராகவின் கவணம் மீண்டும் அவளின் தொப்புள் குழியில் புதைந்தது....

இப்போது சங்கீதாவின் தொப்புளில் முத்த மழையை சற்றே குறைத்து அதன் கீழே மிகவும் சிறிய அளவில் உற்று பார்த்தால் மட்டுமே தெரியக்கூடும் ஊசி போன்ற பூனை மயிர்கள் நீலகாம நேர்க்கோட்டில் கீழே அவளுடைய அந்தரங்க பெண் உறுப்பை நோக்கி சென்றது.... அந்த நேர்க்கோட்டில் உள்ள சிறிய முடிகளின் மீது தன் நாவின் நுனியால் தடவியபடி ராகவ் கீழ் நோக்கி பயணிக்க சங்கீதாவின் உடல் முழுக்க புல்லரித்தது..

இப்போது அவளுடைய இடுப்பின் ஓரங்களில் இருக்கும் ஆடையை சற்று லேசாக ராகவ் கீழே இறக்கினான்..

அப்போது "ஹாஹ்ஹா....ஹென்ன...பன்ற" என்று முகத்தை ஒரு பக்கம் திருப்பிக்கொண்டு கண்களை மூடி விரலை வாயில் கடித்தவாறு சிரித்துக்கொண்டே வெட்கத்தில் முனகினாள்..

"எடுக்கணும்..."

"உஹூம்...." கண்களை மூடி சிரித்துக்கொண்டே தலையசைத்தாள்..


"எடுக்கத்தான் போறேன்..." என்று ராகவ் சொல்லும்போது தன் வலது கையை மடக்கி தலைக்கு பின்னால் வைத்து சற்று நிமிர்ந்து ராகவை ஓரக்கண்ணால் பார்த்து "எடுக்கக்கூடாது...." என்று சொல்லிவிட்டு அவன் குழம்பி முழிக்கும் முகத்தை பார்த்து ரசித்தாள்.... பின் சற்று நேரத்துக்கெல்லாம் அவள் ஃப்ளைட்டில் குடுத்த விளக்கம் நியாபகத்துக்கு வந்தது ராகவ்க்கு....

"கூடாதுன்னா ஆமாம்னு அர்த்தம் ஆச்சே...." என்று சொல்லி சிரித்துக்கொண்டே சங்கீதா சற்றும் எதிர்பார்க்காத நேரம் கீழ் இடுப்பருகே பின்புறம் முதுகின் பகுதியில் அந்த துணியில் இருக்கும் முடிச்சை இழுத்து விட்டான் ராகவ்....

"ஹேய்ய்ய்ய்.... பொற்கி....ச்சீசீ .... என்று சொல்ல.. அவளது இரு கைகளையும் பிடித்து கட்டிலில் இருந்து எழுப்பி நிற்க வைத்தான்...

எதிரில் உள்ள கண்ணாடியில் மெழுகுவத்தி வெளிச்சத்தில் சங்கீதா தன் உடலை ஒரு நொடி பார்த்தாள்.. மார்பின் ஒரு சில இடங்களில் ராகவின் பர்தடங்கள் இருப்பதைக் கண்டு தனக்குத் தானே சிரித்துக்கொண்டு, அருகே ராகவ் கீழே முட்டிக்கால் போட்டு கண்கொட்டாமல் தன்னை கூர்ந்து கவனித்து அமர்ந்திருப்பதையும் பார்த்து வெட்கத்தில் முகத்தை திருப்பிக்கொண்டாள்....

பின்புறம் முதுகின் கீழ் பகுதியில் முடிச்சி அவிழப்பட்டு அவளது ஆடை சற்று தளர்ந்து இறங்கி இருந்தது, அதில் அவளுடைய கொழுத்த மென்மையான புட்டத்தின் மேற்புற சருமம் அந்த மஞ்சள் வெளிச்சத்தில் வெளிப்பட்டது....

முன்புறம் ரொம்பவும் அப்பாவியாக இடுப்பின் வளைவுகள் தரும் ஆதரவால் அந்த துணி நின்று கொண்டிருந்தது, அது போக சங்கீதா கொஞ்சம் அதிகப்படியான வெட்கத்தில் தன் இரு தொடைகளின் உட்புறத்திலும் அவை கீழே விழாமல் இருக்க அழுத்தி பிடித்திருந்தாள்....

அப்போது ராகவ் ஒரு நொடி எழுந்து நின்று அருகில் உள்ள ஒரு மேழுகுவத்தியை தன் கையில் எடுத்து அவளது தலையில் இருந்து பாதம் வறை மெதுவாக கண்களால் அளந்து பார்த்தான்.. கழுத்தின் அழகு, மார்பழகு, இடுப்பின் வளைவு, பாதியாய் தெரியும் செழுமையான தொடையின் அழகு, முட்டிக்குப்பின்புரம் உள்ள கால் இடுக்கில் இருந்து லேசாக வழியும் வியர்வையோடு தெரியும் முழங்கால்களும் பாதத்தில் உள்ள கொலுசின் ஆசாகயும் சேர்த்து ரசித்து அதற்கும் மேல் பொருக்க முடியாமல் வத்தியை ஒரு ஓரத்தில் வைத்து விட்டு இடுப்பின் இரு முனைகளில் இருக்கும் துணியைப் பிடித்து ஒரே இழு இழுக்கையில்..

"அச்ச்சோ.....ஹ்ஹ்ஹா...."என்று மெதுவாக முனகியபடி இனியும் இவனை அடக்க முடியாது என்று மென்மையாக சிரித்து வெட்கத்துடன் புரிந்துகொண்டு தன் இறுகிய தொடையின் உட்புறத்தை சற்று தலித்தி நின்றாள்... அப்போது அந்த பிடியில் இருந்த துணி தொப்பென்று கீழே விழகயில் IOFI brand three lace ஜட்டியை அவள் அணிந்திருப்பது ராகவுக்கு தெரிந்தது...

கீழே மீண்டும் முட்டிக்கால் போட்டு இடுப்பருகே முகம் வைத்து அமர்ந்து சங்கீதாவை மேல் நோக்கி பார்த்தான்.. நல்ல உயரமான உடலையும், தங்கம் போன்ற மென்மையான மேனியையும், வளைவான அகலமான இடுப்பையும், அவளுடைய கொழுத்த புட்டத்தின் மேற்புற மென்மையான சருமத்தயும், அதன் இடுக்கில் உள்ள பள்ளத்தாக்கில் ஒழிந்து மறைந்திருக்கும் ஜட்டியின் ஒரு லேசும், முன்புறம் பார்க்க சற்று அவளுடைய இடுப்பின் முனைகளில் கை வைத்து திருப்புகையில்..

"ஸ்ஸ்ஸ்ஹ்ம்ம்..." அவன் கைகள் தொடுவதை உணர்ந்து முனகிக்கொண்டே அவன் பக்கம் திரும்பினாள்..

இப்போது ராகவின் கண்களுக்கு அவளுடைய அழகான இடையும், இன்னும் ஈரமாக இருக்கும் அவளது தொப்புளும், அதன் அடியில் ஒட்ட வெட்டப்பட்ட அவளது பூஞ்சை மயிர்களும், அழுத்தி ஓட்டி வைக்கப்பட்டிருக்கும் கொழுத்த வலைவாழ செழுமையான இரு தொடைகளும், அந்த இரு தொடைகளின் மேற்புற இடுக்கில் மறைந்திருக்கும் அவளது அந்தரங்க பெண் உறுப்பின் நடுவில் உள்ள பிளவின் ஆரம்ப பகுதியும் அதனுள் முன்புறம் அருனாகயிர் போன்ற 3 lace ஜட்டியில் இருந்து ஒரு திக்கான லேஸ் நூல் அந்த அந்தரங்க பெண் உறுப்பின் பிளவுக்குள் புதைந்து மறைந்திருப்பதும் அவன் கண்களுக்கு தென்பட்டது..

இவை அனைத்தையும் ராகவின் கண்கள் மேய்வதை மேலிருந்து பார்த்து உள்ளுக்குள் ரகசியமாக வெட்கத்துடன் ரசித்துக்கொண்டிருந்தாள் சரா..

மெதுவாக தன் இருகைகளையும் பின் புறம் அவளுடைய முதுகுப்பகுதிக்கு கொண்டு சென்று இடுப்பின் பின் புற வளைவான பகுதியை உள்ளங்கையால் தடவினான்....

அப்போது சங்கீதா தன் இரு கைகளையும் தூக்கி நெத்தியில் ஆரம்பித்து தன் தலை முடியை பின் நோக்கி வருடியவாறு இருக்கி வைத்துக்கொண்டு முகத்தை சற்றே ஒரு பக்கம் திருப்பி கண்களை இருக்கி மூடி உதடுகளை உள்ளுக்குள் இழுத்து கடித்துக்கொண்டு ராகவின் கைகள் அவளது முதுகில் செய்யும் உரசல்களை "ஹ்ம்ம்ம்...." என்று முனகிக்கொண்டே ரசித்தாள்..

ராகவ் அவன் கண்களுக்கு தெரிகின்ற வறை அவளுடைய இரு தொடைகளுக்கும் இடையில் உள்ள அவளது அந்தரங்க பெண் உறுப்பின் தொடக்கத்தில் மிருதுவாக அவனது உதடுகளை வைத்து "ப்ச் ப்ச் ப்ச்...." என்று முத்தம் குடுத்துகொண்டே பின் புறம் தன் கைகளை முதுகில் இருந்து இறக்கி அவளுடைய மென்மையான கொழுத்த புட்டங்களின் சருமத்தின் மீது கொண்டு வந்து அழுத்தி தடவி தேய்க்கயில்...


"ஹ்ம்ம்.. ஸ்ஹா..ஸ்ஸ்ஹா...ஸ்ஸ்ஸ்ஸ்ஹா...." என்று சற்று முனகல் அதிகரித்துக்கொண்டே போகும்போது தன் முகத்தை பின்னோக்கி காற்றில் சாய்த்து மெதுவாக திருப்பிக்கொண்டே உயர்த்தி வைத்திருக்கும் ஒரு கையின் மீதிருந்து மற்றொரு கையின் மீது முகத்தைத் தேய்த்துக்கொண்டாள்....

"ப்ச் ப்ச் ப்ச்...." என்று அவளது பெண் உறுப்பில் மேர்புரம் பூஞ்சை மயிர்கள் மீது மிதமான அழுத்தத்துடன் முத்தம் குடுத்துக்கொண்டிருக்கையில், பின்புறம் அவளது கொழுத்த புட்டங்களின் சதைகளை அழுத்தி பிசைந்து கொண்டு இருக்கையில், அவளுக்கு பின்புறம் உள்ள கண்ணாடியில் ராகவுக்கு அவன் சங்கீதாவின் புட்டத்தில் என்ன செய்கிறானோ அதை பார்த்து ரசிக்க முடிந்தது... அவளுடைய வெண்மையான புட்டத்தின் சருமத்தின் மீது சற்று அதிகமாக அழுத்தம் குடுத்து பிசைந்து குடுக்கும் ஒவ்வொரு முறையும் தன் கைகளின் அழுத்தத்தால் அந்த இடம் சிவப்பாக மாறுவதை அந்த கண்ணாடியின் பின்பத்தில் பார்க்க பார்க்க இன்னும் அதிகமாக அழுத்திக்கொண்டே முன்புறம் சற்று நிமிர்ந்து அவளை மிகவும் அருகில் இழுத்து தன் உதடு அவளின் பெண் உறுப்பின் மீது பதியுமாறு வைத்து கீழிருந்து மேல் நோக்கி அவளுடைய முன் புற உடலை பார்த்தான்.. அப்போது அவளுடைய இடுப்பையும், தொப்புளையும், செழுமையான கொழுத்த மார்புகளையும், இன்னும் விறைப்பு அடங்காமல் எழுந்து நிற்கும் காம்புகளையும், வியர்வை வழியும் கழுத்தையும், வழு வழுப்பன ஈரமான அக்குளையும், கண்களை மூடி உதடுகளை உள்ளுக்குள் இழுத்து வைத்து கடித்து "ஹம்ம்.. ஹ்ஹா.." என்று உடல் கொதிக்க அவள் முனகுவதையும் பார்த்துக்கொண்டிருந்தவன் அவளது பெண் உறுப்பின் மேல் மெதுவாக தன் நாக்கின் நுனியால் அங்குள்ள பிளவின் மேற்பகுதியில் லேசாக நிமிண்டிவிட...

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹாஅஅஅஅஅ......" என்று ஒரு பெரிய முனகலுடன்... கீழே குனிந்து அவனைப்பார்த்து "பொற்கி.." என்று குழந்தை குரலில் வெட்கத்துடன் சொல்லும்போது, இதுவரை இறுக்கமாக அழுத்தி ஓட்டி வைத்திருக்கும் அவளது இரு தொடைகளையும் சற்றே தளர்த்தி நின்றாள்... அப்போது ராகவின் கண்களின் பார்வைக்கு அவளுடைய மேற்புற தொடைகளின் இடுக்கில் ஒழிந்திருந்த அவளுடைய அந்தரங்க பெண் உறுப்பின் அடி பாகம் வறை விருந்தானது.. அப்போது தன் வலது கையின் ஆள்காட்டி விரலால் அந்த பிளவுக்குள் கை வைக்க அவன் நெருங்கும்போது அந்த இடத்தில் சற்று ஈரம கசிந்திருப்பதை உணர்ந்தான்..

அவள் கண் எதிரிலேயே இடுப்பின் இரு முனைகளிலும் உள்ள 3 lace ஜட்டியின் முடிச்சிகளை தன் கை விரல்களால் சரக் என்று இழுத்து விட்டான்.... அதைக்கண்டு "ஹா ஹா.. ஹேய்ய்ய்ய்....ச்சீசீ..போடா.." என்று வெட்கப்பட்டு முகத்தை மூடி அங்கிருந்து சற்று விலகி கட்டில் பக்கம் வேகமாக நகருகையில் ராகவின் கையில் அவளுடைய ஜட்டியின் நுனிகள் இருப்பதை அவள் கண்டு கொள்ளவில்லை....

அப்போது அவள் கொஞ்சம் வேகமாக நகர்ந்து செல்லும்போது அவளுடைய அந்தரங்க உறுப்பின் உட்புற இடுக்கினுள் சொருகி இருந்த எலாஸ்டிக் லேஸ் ராகவின் பிடியால் இழுத்துக்கொண்டு இருக்கையில் "ச்சக்...." என்ற சத்தத்துடன் ராகவின் கைக்கு மொத்தமாய் வந்து சேர்ந்தது.... ஈரத்தை உறுஞ்சும் தன்மை உடைய அந்த அப்சார்பிங் லேஸ் அவன் கைக்கு கிடைத்தபோது அதில் சற்று ஈரத்தை உணர்ந்தான்.... அதைப்பார்த்த சங்கீதா... "ச்சீசீ... கீழ போடு...." என்று வெட்கத்துடன் சொல்ல...

அவளின் முதுகுப்பக்கம் பிடித்து அப்படியே கட்டிலின் மீது தள்ளினான்.....

"ஹேய்ய்ய்...." என்று சற்று கத்திக்கொண்டே கட்டிலின் மீது விழுகையில், சங்கீதாவின் பாதங்கள் கட்டிலின் சுவர் அருகே உள்ள "டூம் ஸ்விட்ச்" மீது பட... இது வறை அந்த கண்ணாடி மேல் மூடி இருந்த டூம் ஷீல்ட் இப்போது சடாரென திறக்கையில், நிலாவின் வெளிச்சம் ஒரு பெரிய வட்டமாக ஓட்டு துணி இல்லாமல் சங்கீதாவின் வியர்த்துக்கொட்டிய முழு நிர்வாண உடம்பின் மீது தலை முதல் கால் வறை படர்ந்து ராகவின் கண்களுக்கு ஒரு சொர்க்க தரிசனம் தந்தது....

அறை முழுதும் எரியும் மெழுகுவத்தியின் மஞ்சள் வெளிச்சத்தின் நடுவே வெள்ளை நிற சில்க் துணியில் தலைமுடி படர்ந்து இருப்பதையும், நெத்தியில் நெத்திச்சுட்டியும், கைகளில் கண்ணாடி வளையல்களும், கழுத்தில் தாலியும், அழகான தொப்புளையும், ஒரு தொடையை மெதுவாக மற்றொரு தொடையின் மீது மடக்கி வைத்து உடலின் ஒரு பக்கத்தை நிர்வாணமாய் முழுதும் காண்பித்து கைகள் இரண்டையும் நேராக கீழே நீட்டி தொடைகளின் இடுக்கில் வைத்து அவளது அந்தரங்க உறுப்பை மறைத்து கொழுத்த மார்புகளை, நீட்டியுள்ள கைகளின் இடையே குவித்து வைத்து அதன் நடுவில் குழந்தைபோல ஒரு பார்வையைக் குடுத்து ராகவிடம் புருவங்களை உயர்த்தி "என்ன பார்குற?..... பொற்கி... பார்வைய பாரு.....என்ன எடுத்துக்கோடா மை ஸ்வீட் பொற்கி புருஷா...." என்று அவள் சொல்லும்போது அவள் மேலே அப்படியே பாய்ந்தான்...

இருவரும் ஒன்றாக சேர்ந்து கட்டிலில் ஒரு முறை பவுன்ஸ் ஆனார்கள்...

சங்கீதாவின் அழகிய நிர்வாண உடல் ஒரு பக்கம் முழுதும் பளிச்சென ராகவின் கண்களுக்கு தெரிய, இடுப்பின் வளைவில் தொடங்கி, தொப்புளின் கீழே வறை மெதுவாக தன் உள்ளங்கையை வைத்து தடவி கீழே எடுத்து செல்லும்போது..

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..ஹ்ஹ்ஹாஅஅஅஅஅஅ......" - என்று முனகிக்கொண்டே தன்னையும் அறியாமல் தன் தொடைகளை லேசாக தளர்த்தி மெதுவாக விரித்தாள் சரா.. அப்போது நிலாவின் வெளிச்சத்தில் அவளுடைய வெண்மையான கொழுத்த தொடைகளின் உட்புறத்தைப் பார்த்து உடனே அவளின் இடது புற காலை மொத்தமாக மேல்நோக்கி நீளமாக வைத்து அவளின் பாதங்கள் தொடங்கி அவளின் கால் கட்டை விரலை மென்மையாக கடித்து, ப்ச் ப்ச் ப்ச் ப்ச்... என்று மெதுவாக முத்தங்கள் கொடுத்துக்கொண்டே முழங்காலின் வழுவழுப்பான பின்புறத்தில் சற்று லேசாக பற்களால் கடித்து முத்தம் குடுத்து உதடால் பயணிக்கையில் முட்டியின் பின்புறத்தில் தனது நாவின் நுனியை வைத்து லேசாக நிமிண்ட..

"ஸ்ஸ்ஸ்ஹேய்ய்ய்ய்.... கூசுதுடா....ஹாஹாஹ்ஹா...." என்று மென்மையாக சிரித்து முனகினாள்....


ராகவ் மேலும் தொடர்ந்து கீழ்நோக்கி அவளுடைய வெண்மையான கொழுத்த தொடையின் பின்புறத்திலும், உட்புறத்திலும் மாற்றி மாற்றி ப்ச் ப்ச் ப்ச் ப்ச்.... என்று முத்தங்கள் பதித்தான்.. அப்போது அவன் உதடுகளின் உறசல்களையும், முத்தங்களையும், உள்ளங்கையின் உறசல்களையும் தன் தொடை முழுதும் உணருகையில் "ஸ்ஸ்ஸ்ஸ்..ஹா..ம்ம்ம்..ஹ்ஹா" என்று முனகிக்கொண்டே கட்டிலின் பின்புறம் உள்ள கம்பிகளை அழுத்திப் பிடித்துக்கொண்டாள். அவளது அசைவுகளை ரசித்துக்கொண்டே தொடையின் உச்சியில் அவளது அந்தரங்க பெண் உறுப்பின் பக்கவாட்டில் சற்று ச்சாக்லேட் நிறம் கொண்ட உட்புற சதையில் தன் உதடுகளை வைத்து அழுத்தி ப்ச் ப்ச் ப்ச் ப்ச்.... என்று முத்தங்கள் குடுத்து உதடுகளால் கவ்வி உறிந்து இழுத்து தடுகளுக்குள் மென்மையாக பற்களால் கடித்து "ச்சப்...." என்ற சத்தத்துடன் அவளது தொடையின் உட்புறத்தை வாயிலிருந்து விடுவிக்கையில், அந்த கொழுத்த சதை பகுதி சற்று மேலும் கீழுமாய் குலுங்கி அமைதியானது.. அப்போது நிலாவின் வெளிச்சத்தில் அவன் ச்சப்பி விட்ட தொடையின் உட்புற பகுதியில் அவன் எச்சில் ஈரம் படர்ந்திரருந்தது.... கூடவே தன் பற்தடங்களும் அந்த சதையின் மீது அழுந்தி இருந்தது.. தான் ச்சப்பி எடுத்த தொடை பகுதியில் மீண்டும் மிருதுவான முத்தங்களை குடுகையில் அவனது மூச்சுக்காத்து அந்த இடுக்கு பகுதியில் படரும்போது..

"ஹ்ம்ம்ம்மாஆஆ..... ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹா...." என்று சங்கீதாவின் முனகல் சத்தம் கொஞ்சம் அதிகரித்தது... அப்போது கீழே நீட்டி வைத்துள்ள மற்றொரு காலை கட்டிலில் தட்டி பாதங்களால் "ஜல் ஜல் ஜல்" என்று சத்தத்தை நன்கு பலமாக எழுப்பி ராகவின் தலை முடியை பிடித்து தொடையின் உட்புற உச்சத்தில் இறுக்கியபடி அவன் குடுக்கும் சுகங்களை கண்கள் மூடி அனுபவித்தாள்..

இப்போது மெதுவாக தன் ஈரமான நாவின் நுனியால் சங்கீதாவின் அந்தரங்க பெண் உறுப்பின் பிளவுக்கு இருபுரமும் சற்றே லேசாக உப்பி இருக்கும் சிறிய சதையின் மீது ட்ரீம் செய்த ஊசி போன்ற முடிகள் மேலிருந்து கீழே உள்ள கொழுத்த புட்டங்களின் இடுக்கு வறை படர்ந்திருந்தது... அவற்றை நிலாவின் வெளிச்சத்தில் குனிந்து உற்று பார்த்து ரசிக்கையில், அந்த இடத்தில் ராகவின் மூச்சுக்காத்தின் வெப்பம் படர்ந்து அந்த இடத்தை கூச வைத்தது.., அது சங்கீதாவின் உடல் முழுதும் புல்லரிக்க செய்தது....

அப்போது இரு பெருந்தொடைகளுக்கும் கீழே தனது இரு உள்ளங்கைகளையும் செலுத்தி அவளது மென்மையான புட்டங்களை அடியில் தடவியவாறு மெதுவாக தூக்கி தன் முகத்தின் அருகே இழுத்து தன் இரு கைகளிலும் உள்ள கட்டை விரலின் நுனியால் அவளது கொழுத்த புட்டங்களின் இடுக்கில் வைத்து இரு புறமாய் உட்புற சதைகளை மெதுவாக பிரித்து பார்க்கையில் நிலாவின் வெளிச்சத்தில் சற்று சாக்லேட் நிறத்தில் சிறிய வட்டமுடன், சின்ன சின்னதாய் அதனை சுத்தி ஊசி மயிர்கள் சூழ்ந்திருக்க அதிகமாக இல்லாமல் அளவான சுருக்கங்களை கொண்டு அழகாய் காட்சி அளித்தது அவளது பின் புற புட்டத்தின் துவாரம். அதன் அழகை ராகவ் உற்று பார்த்து "ப்ச்....ப்ச்....ப்ச்...." என்று அதன் மீது தன் மீசை உரச மென்மையான முத்தங்கள் குடுத்தான்....

"ச்சீசீசீ.... ஹேய்ய்ய்ய்ய்....நாஸ்டி புருஷா... உன் நாக்கு பட்ட உடனே ச்சில்லுனு இருக்குடா பொற்கி....ஹஹஹா..ஹாஹ்ஹா.... டேய் உன் மீச கூசுதுடா.... ஹாஹ்ஹா...." - என்று மென்மையாக சிரித்து தொடைகள் இரண்டையும் மேலே தூக்கி மடக்கி தன் பாதங்களை ராகவின் தலை மீது வைத்து அவளது புட்டத்தின் இடுக்கில் அழுத்தியவாறு வைத்திருந்தாள்.. அப்போது மெதுவாக தன் பாதங்களை இறக்கி அவனது முதுகில் "ஜல் ஜல் ஜல்" என்று தட்டி ஓசை எழுப்பி ஓரக்கண்ணால் அவனைப்பார்த்து சிரித்தாள் சங்கீதா....

பின்பு தன் ஈரமான நாவினை மொத்தமாக அந்த சுருக்கங்கள் உடைய துவாரத்தின் மீது வைத்து வட்டமிட்டு தடவி ஈரப்படுத்தி தன் உதடுகளால் லேசாக "ச்சப்...." என்ற சத்தத்துடன் ச்சப்பி இழுத்து விடுகையில் அந்த துவாரத்தின் ஓரத்தில் உள்ள மிகச்சிறிய சுருள் முடிகள் ராகவின் நாவின் ஈரத்தால் நனைந்து ஒன்றோடோன்று ஓட்டி இருந்தன.... அப்போது தன் நாவின் நுனியால் துவாரத்தின் நடுவே லேசாக பதித்து நிமிண்டுகையில்....

"ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹேய்ய்ய்ய்...... ஹ்ம்ம்... ஆஆஹ்ஹ்ஹ்ஹ்.... ச்சீசீசீய்ய்ய்ய்...." என்று சொல்லிக்கொண்டே மென்மையான சுருக்கங்கள் உள்ளுக்குள் இழுக்கப்படும் விதம் புட்டத்தின் துவாரத்தை இருக்கிக்கொண்டாள் சங்கீதா....

இப்போது மெதுவாக அவளது தொடையின் இடுக்கில் உள்ள அந்தரங்க உறுப்பின் பிளவுக்குள் தன் ஈரமான நாவின் நுனியை மேலே வைத்தான்...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹாஅஅஅஅ.... என்று முனகிக்கொண்டே கட்டிலின் கம்பியை வலது கையால் இன்னும் இறுகி பிடித்து.... இடது கையால் ராகவின் தலை மீது தன் கை விரல்களுக்கு சிக்கிய வறை அவனது முடியைப்பிடித்து தன் உறுப்பின் மீது அழுத்தினாள்..

ராகவுக்கு அவளது பெண் உறுப்பின் மீது இருக்கும் சிறிய முடிகள் அவனது மூக்கையுயம், உதடுகளையும் மென்மையாக குத்தி உரசியது... சங்கீதாவுக்கு ராகவின் மூக்கு நுனியும் அவனது ஈர உதடுகளும் அங்கே உரசுவதை உணர்ந்து ரசிப்பதை கட்டிலில் உள்ள கம்பிகளின் மீது அவள் காட்டும் அதீத அழுத்தத்தில் ராகவுக்கு புரிந்துகொள்ள முடிந்தது....



ராகவுக்கு அவளுடைய அந்தரங்க பெண் உறுப்பின் இடுக்கில் இருந்து வரும் இயற்கையான வாசம் இன்னும் அதிக வெறி ஏத்தியது, நிலாவின் வெளிச்சத்தில் அந்த பிளவுக்குள் இருந்து அவளுடைய உஷ்ண நீர் கசிந்து அடியில் அவளுடைய மென்மையான கொழுத்த புட்டத்தின் இடுக்கில் லேசாக வழிந்தோடுவதை கண்டு உணர்ச்சி பொங்க உஷ்ணமடைந்து அவளது பென்னுருப்பின் பிளவை தனது இரு கைகளின் கட்டை விரலாலும் அழுத்தி இருபுறமாக லேசாக பிரித்து பார்க்கும்போது உட்புறத்தில் உள்ள பிங்க் நிற சென்சிடிவ் சதைகளும், அதன் உச்சத்தில் அவன் கண்ணுக்கு அவளுடைய பெண்குறிக் காம்பு (clit) சிறிய முத்துப்போல் காட்சியளித்ததை கண்டு வெறியடைந்தான் ராகவ்....

இரு விரல்களால் விரித்து வைக்கப்பட்ட சங்கீதாவின் அந்தரங்க பென்னுருப்பின் உட்புற சதைகளில் அவனது மூச்சுக்காத்து சற்று உஷ்ணமாக படரும்போது சங்கீதாவுக்கு சற்று லேசாக மூச்சு திணற ஆரம்பித்தது..

"ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஅஅஅ... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா..அஅஅஅ...." என்று முனகிக்கொண்டே கட்டிலின் பின் புற கம்பிகளை இன்னும் இருக்கி பிடித்துக்கொண்டாள்.

இப்போது ராகவ் அவளது பென்னுருப்பின் உட்புற மென்மையான பிங்க் நிற சதைகளின் மீது தன் ஈரமான நாவினை வைத்து அழுத்தி கீழிருந்து மேல்நோக்கி தேய்க்க ஆரம்பிக்க...

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹா...அஅஅஹ்ஹ்ஹ்ஹா... ஹ்ம்ம்ம்...அஅஅஹ்.... திஸ் இஸ் க்ரேட் டா...ஹ்ம்ம்..ஆஅஹ்ஹ்ஹ்ஹ்....." - உயிர் போவது போல மூச்சிரைக்க கழுத்தை உயர்த்தி கண்கள் சொருகி தலையை பின்புறம் சாய்த்து ஒரு முனகல் சத்தத்தை தந்தாள் சங்கீதா..

அதைக்கண்டு ரசித்துக்கொண்டே தன் நாவினால் அவளது அந்தரங்க உறுப்பின் இடுக்கில் உள்ள உட்புற சதைகளை இன்னும் அழுத்தி வேகமாய் மேலும் கீழும் தேய்க்க ஆரம்பித்தான்.... அப்போது அவளுடைய பென்குறிக் காம்பை தன் நாவின் நுனியால் சற்று மிதமாய் அழுத்தி, லேசாக அதை உருட்டி உருட்டி "ச்ப்... ச்ப்... ச்ப்... ச்ப்..." என்று முத்தங்கள் குடுக்கும்போது....

"வ்வ்வ்வாஅஅஅஅவ்வ்வ்வ்வ்..... ஸ்ஸ்ஸ்ஹா...... செல்லம்..... ஸ்ஸ்ஸ்ஹாஆ.... இட்ஸ் க்ரேஏஏஏட்ட் டா..... ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஆஆ...........யேஸ்..கமான் டூ இட் டா .... ஐ வான்ட் மோர்.... ப்ளீளீளீளீளீளீஸ் ஐ வான்ட் மோர்..... ஹ்ம்ம்ம்... ஆஆஹ்ஹ்ஹ்ஹ்...." என்று அவளது பெண்குறி காம்பின் மீது ராகவின் நாவு உரசுகையில் சங்கீதாவின் உடல் முழுதும் உச்சந்தலையில் இருந்து கீழ் பாதம் வறை உள்ளுக்குள் எக்கச்சக்கமாக வெறித்தனமாக நிகழும் ரத்தஓட்டம் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்து கொண்டிருப்பதற்கு இணையாக இருந்தது....

சங்கீதாவின் முனகல் சத்தத்தை கேட்டு ராகவ் இன்னும் அவனது நாவின் வேகத்தை அசுரத்தனமாக அதிகரித்து மேலும் கீழும் அவளது பெண்குறி காம்பை நிமிண்டி உரசி ஈரப்படுத்தி சிறியதாய் தன் உதடுகளில் உறிஞ்சி இழுத்து "ச்சப்...." என்ற சத்தத்துடன் ச்சப்பி சுவைத்து இன்னும் அதிகமாக நாக்கின் நுனியால் உரசி உரசி இடை விடாது சில நிமிடம் நிமிண்டிக்கொண்டிருந்தான். அப்போது.. தன்னையும் அறியாமல் தன் புட்டங்களை மேலே எக்கி ராகவின் நாவினில் அவன் குடுக்கும் வேகத்துக்கும் மேல் இன்னும் வேகம் வேண்டும் என்கிற வகையில்.... தன் அந்தரங்க பெண் உறுப்பின் காம்பு அவன் உதடில் குத்தி உரசுமாறு இடுப்பை தூக்கியும் இறக்கியும் அசைக்க, அதைப்புரிந்து கொண்டு ராகவ் அடிப்பக்கம் அவளது மென்மையான கொழுத்த புட்டங்களின் சதைகளை தன் கைகளால் அழுத்தி இருக்கி பிடித்துகொண்டு தன் நாவினை அவளது பெண்குறி காம்பின் மீது நன்கு அழுத்தி வசப்படுத்தி மிக மிக வேகமாக நிமிண்ட ஆரம்பித்தான்....

"ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா...." - ஆரம்பத்தில் சாதாரண முனகல் சத்தம் ஆரம்பித்து..
"ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா....ஸ்ஸ்ஹா...." - கண்கள் இருக்கி மூடி சற்றே குழந்தை குரலில் கொஞ்சம் வேகமாக மாறியது அந்த முனகல் சத்தம்......

இன்னும் சில நொடிகள் கழித்து "ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... யூ ஆர் க்ரேஏஏஏட் டா ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... வ்வ்வ்வாஅஅஅஅவ்வ்வ்வ்வ்..... ஷ்ஷ்ஷ்ஷ் யூ ஆர் அமேசிங் டா ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஐ லவ்வ்வ்வ்வ்வ் திஸ் டா மை ஸ்வீட் பொருக்கி புருஷா...... டோன்ட் ஸ்டாப்.... ப்ளீஸ் டோன்ட் ஸ்டாப் ப்ளீஸ்.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... யூ ஆர் சோ டெர்ர்ர்ர்ரிஃபிக் டா செல்லம்... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா...." எக்கச்சக்கமாக மூச்சு வாங்க கண்களை இன்னும் அழுத்தி இருக்கி மூடி வைத்து சற்றும் இடைவெளி இன்றி மிக மிக வேகமாய் அடித்தொண்டையில் இருந்து கீச்சு குரலாய் மாறியது சங்கீதாவின் அந்த இன்பமான முனகல் சத்தம்....

இன்பத்தின் உச்சத்தில் கண்கள் சொருகி மயக்கத்தில் தலை சாய்த்தவாறு "ஸ்ஸ்ஹா... ஸ்ஸ்ஹா..." என்று இடை விடாது மூச்சு வாங்கிக்கொண்டிருன்தவளின் வியர்த்து ஒழுகும் நெத்தியையும், கழுத்தையும், ஈரமான கொழுத்த மார்பையும், தொப்புளின் அழகையும் நிலாவின் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டிருக்கையில், அவளது கடைசியான கீச்சு குரலில் செய்த முனகல் சத்தம் ராகவின் காம வெறியை உச்சம் அடைய செய்தது... இப்போது அவள் எதிரில் அப்படியே கட்டிலின் மீது நின்று அவன் கன் முன்னே தன் இடுப்பில் இருந்து ஜட்டியை உருவி எடுத்து விசிறி அடிக்க சற்று நேரத்திற்கு முன்பு அவிழ்த்து எறியப்பட்ட சங்கீதாவின் அப்சார்பிங் லேஸ் ஜட்டியின் மேல் ஜோடி சேர்ந்து விழுந்தது.... ராகவின் முழு நிர்வாண உடலை கண்டு ஒரு நொடி "ச்சீசீ...." என்று சொல்லி வெட்கத்தில் கண்களை மூடிக்கொண்டாள் சங்கீதா....

இப்போது கட்டிலின் மேல் முட்டிக்கால் போட்டு அமர்ந்து சங்கீதாவின் கால்களை தன் தோள்களின் மீது போட்டு விரைப்பின் உச்சகட்டத்தை அடைந்த தன் ஆணுறுப்பை சற்றே ஈரப்படுத்திக்கொள்ள சங்கீதாவின் இதழினுள் திணித்து தன் இரு விரல்களை அவளது எச்சிலால் ஈரமாக்கி அதை தன் உறுப்பின் மீது படரவைத்து, கணமாகவும், திடமாகவும், உறுதியாகவும் தயார் நிலையில் இருக்கும் தன் உறுப்பை சங்கீதாவின் பெண் உறுப்பினுள் ஆரம்பத்தில் சற்று லேசாக சிரமப்பட்டு நுழைக்கும்போது....

"ஸ்ஸ்ஸ்ஸ்ஹா....." என்று கண்கள் மூடி லேசாக இருக்கிகொண்டே லேசான வலியில் முனக ஆரம்பித்தாள்....

இப்போது மீண்டும் சற்று அழுத்தி உள்ளே நுழைக்க... சங்கீதாவின் உறுப்பில் வலி சற்று மிதமாக தான் இருந்தது... சில நொடிகளில் ராகவ் முழுவதுமாய் ப்ரெஷர் குடுத்து உள்ளே தள்ளியதும்.... "ஸ்ஸ்ஸ்ஹாஆஆஆஆ....." என்று சற்றே உரத்த குரலில் முனகிக்கொண்டு வலியை நன்கு உணர்ந்தாள் சங்கீதா....

தன் இடுப்பின் வளைவில் ராகவின் உள்ளங்கையின் அழுத்தத்தை உணர்ந்துகொண்டே அவனது உச்சகட்ட நிலையை அடைந்த உருப்பினால் மிதமான வேகத்துடன் அவன் உள்ளே தள்ளி மெல்ல பாதியளவு வெளியே எடுத்து பின் மீண்டும் உள்ளே தள்ளுவதை கண்கள் மூடி...."ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.." என்று மிதமான வலியுடனும், கொஞ்சம் அதை விட அதிக சுகத்துடனும் ரசித்து கண்களை மூடி பின்னாடி கட்டிலின் கம்பியைப் பிடித்துகொண்டே ரசித்தாள்...

சில நொடிகளுக்குப்பிறகு இன்னும் கொஞ்சம் வேகமாக ராகவ் செயல் பட " ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. வலிக்குதுடா... ஆனாலும் ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. ஸ்ஹா.. நல்லாயிருக்கு செல்லம்...." ராகவ் அவளின் பார்வையைப் பார்த்து ஏதாவது பிரச்சினையா என்று கேள்வி எழுப்பும் விதம் பார்க்கயில் அதற்கு முனகிக்கொண்டே கண்களை மூடி அவன் குடுக்கும் சுகத்தை அனுபவித்துக்கொண்டே பதில் சொன்னாள்....

இப்போது இன்னும் கொஞ்சம் வேகம் அதிகரித்து.... ராகவ் தன் வயிற்று பகுதியால் சங்கீதாவின் பின் புற கொழுத்த புட்டங்களின் சதைகளை டப் டப் என்று சத்தம் வரும்விதம் செயல்படுகையில்.. "ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹா....ஹ்ம்ம்ம்...ஹாஆஆஆஅ... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஹ்ம்ம்ம்... டூ இட்.. டூ இட்...டூ இட்... டூ இட்.... ஐ வான்ட் திஸ் மோர் டா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.. ஹ்ம்ம் திஸ் இஸ் கிரேஏஏஏட்... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா..ஹ்ம்ம்ம்." - முனகல் கொஞ்சம் அதிகரித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தி, வலியில் கொஞ்சம் துடிப்பதை அவள் கண்கள் சற்று லேசாக ஈரமாவதில் தெரிந்தது....

சங்கீதாவின் பென்னுருப்பின் உட்புற சதைகள் ராகவின் ஆணுறுப்பின் மேல் அவன் வேகமாய் இயங்கும்போது உரசுகையில் உள்ளுக்குள் உருவான உஷ்ணம் ராகவ் தன் உணர்ச்சியின் உச்சகட்ட நிலையை அடைய தூண்டுதலாய் அமைந்தது.. இப்போது அதி வேகமாக அசுரத்தனமான அசைவுகளுடன் டப் டப் டப் டப்... என்று தன் இடுப்பை சங்கீதாவின் புட்டத்தின் மென்மையான சதைகளில் இடிக்கும் விதம் ராகவ் செயல் படுகையில்.... "ஸ்ஸ்ஸ்ஸ்ஹா..... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா..... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா..... ஹம்ம்ம்மா..... ஹம்ம்ம்மா..... ஹம்ம்ம்மா..... ஹம்ம்ம்மா.....ஹ்ம்ம் ஆஆஆ..... திஸ் இஸ் தீ மோஸ்ட் ப்ரஷ்ஷியஸ் டே இன் மை லைஃப்... ஹம்ம்ம்மா..... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ராகவ்... வலிக்குதுடா... ஆனா... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா....நிறுத்தாத.. ப்ளீஸ்... டூ இட்..டூ இட்..டூ இட்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஐ லவ் யூ டா.... யூ ஆர் சோ க்ரேட்... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா....ஹம்ம்ம்ம்...."


ராகவ் இப்போது வேகமாய் செயல் படும்போது தன் விரல் நுனியால் நாவினில் ஈரப்படுத்திகொண்டு அதன் நுனியால் சங்கீதாவின் பெண்குறி காம்பை நிமிண்டிக்கொண்டே இன்னும் வேகமாய் தன் உரிப்பினை அவளுக்குள் செலுத்தி செயல்படும்போது...

"ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா....... வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆவ்வ்வ்வ்...... ராகவ்... பொற்கி ஹாஆஆ..... ஹ்ம்ம்ம்... ஹாஆஆஅ.... ஐ ஃபீல் கிரேஏஏஏட்ட் டா...." என்று முனகிக்கொண்டு உச்சகட்ட உணர்ச்சியின் வெறியில் கைகளை கட்டிலில் வேகமாய் அடித்து பின் மீண்டும் பின்புற கம்பிகளை வேகமாய் பிடிக்க, ஒன்றிரண்டு கண்ணாடி வளையல்கள் கட்டிலின் கம்பியில் இடித்து தூள் தூளாக படுக்கையில் சிதற.... அதை சிறிதும் கண்டுகொள்ளாமல் சுகத்தின் உச்சியில் " ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஸ்ஸ்ஹா...." என்று சங்கீதா முனகிக்கொண்டிருக்க, அதைப்பார்த்து இன்னும் அதிகமாக வேகம் குடுத்து ராகவ் இயங்கிக்கொண்டிருக்கும்போது சங்கீதாவின் குலுங்கும் மார்பகங்களை தன் இரு கைகளாலும் இறுக்கிப்பிடித்து அழுத்தி பிசைந்தான்... அப்போது..

"வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆவ்வ்வ்வ்.... தட்ஸ் க்ரேஏஏஎட்.... தட் ஃபீல்ஸ் க்ரேஏஏஏட்... ஹ்ம்ம்ம் டூ இட்...." என்று சங்கீதா முனகும்போது ராகவ் அவளின் முகத்தை கழுத்தில் இருந்து தடவி தன் பக்கம் திருப்பி வைத்து "மேல பார்..." என்று கண்களால் செய்கை காமித்து கட்டில் அருகே உள்ள டூம் ஷீல்ட் பட்டனை அழுத்த சங்கீதா இவ்வளவு நேரம் கவனிக்காத ஒரு விஷயத்தை இப்போது கவனித்தாள்....

டூம் ஷீல்ட் மேலே உள்ள டூமை மூடியவுடன் அதில் ஒரு கண்ணாடியைப் பார்த்தாள் சங்கீதா... இவர்கள் இருவரும் இணைந்து இருட்டில் மெழுகுவத்தியில் உள்ள வெளிச்சத்தில் கீழே படுக்கையில் தன் ஆடையில்லா உடல் மீது ராகவ் நிர்வாணமாய் படுத்து அவன் உறுப்பை தனக்குள் செலுத்தி அதிவேகமாய் இயங்கிக்கொண்டிருப்பதை மேலே தெரியும் கண்ணாடியின் பின்பத்தில் " வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆவ்வ்வ்வ்..... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹாஆஆ...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹாஆஆ...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹாஆஆ...... ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹாஆஆ...... யூ ஆர் மார்வெலஸ் டா.... ஹ்ம்ம்.... ஆஆஹ்ஹ்ஹ்..." என்று முனகிக்கொண்டே பார்க்கும்போது அவள் மனதில் ராகவ் மீதிருக்கும் காம வெறி இன்னும் அதிகரித்து உச்சநிலை அடைந்தது...."

ராகவ் கிட்டத்தட்ட உச்சகட்ட நிலையின் உச்சத்தை அடையும் தருவாயில் சங்கீதாவின் பின் பக்க தலைமுடியை பிடித்து சற்று இழுத்து இன்னும் எக்கச்சக்கமாக அவளது உறுப்பினுள் வேகம் குடுத்து இயங்குகையில்...."ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா.... ஸ்ஸ்ஹா...." முனகல் குரல் யாவும் அடித்தொண்டையில் இருந்து கீச்சு குரலில் ஏகத்துக்கும் அதிவேகத்தில் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.. அப்போது கண்களில் தண்ணீர் வரும்விதம் இருக்கி மூடி உதடுகளை உள்ளுக்குள் இழுத்து கடித்துக்கொண்டே தன் உறுப்பினுள் ராகவின் உறுப்பு சற்று வழக்கத்தை விட நொடிக்குநொடி அதிகம் பெருசாகி மீண்டும் குறைந்து, மீண்டும் பெருசாகி மீண்டும் குறைந்து..... இதே தொடர்ந்து சில நொடிகள் நிகழ்ந்து முடிந்த பிறகு ராகவ் அவளது முகத்தின் மீது "ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஹாஆஆஆஆ......" என்று ஒரு பெருமூச்சு விட்டு அவனது நெத்தியில் உள்ள வியர்வை துளிகள் அவளது நெத்தியில் விழுந்து கலந்து வழிந்தது.. அப்போது ராகவ் சங்கீதாவின் கண்களைப் பார்த்து மென்மையாய் சிரித்துக்கொண்டே "வெத போட்டாச்சு....." என்று சொல்லும்போது சங்கீதா அவளின் கால்கள் இரண்டையும் அவனது முதுகில் கோர்த்து வைத்து "ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல் ஜல்" என்று இடை விடாது சத்தம் வரும்விதம் அவளது பாதங்களால் அடித்தாள்....


"ஸ்ஸ்ஹா.... வலிக்குதுடி..... எதுக்கு இப்போ அடிச்ச?....." என்று கேட்க்கும்போது சங்கீதாவின் கண்களில் கண்ணீர் குளமாக இருப்பதைக்கண்டு சற்று பயந்தான் ராகவ்..

"ஏய்ய் செல்லம்.. என்ன ஆச்சுடா?... வலிச்சுதா? ரொம்ப வலி குடுத்துடேனா?.. எதாவ...." ராகவ் பேசி முடிப்பதற்குள் "பட்டார்...."
என்று அவன் கண்ணத்தில் சற்று ஒங்காமல் அதே சமயம் கொஞ்சம் லேசாக ஓங்கி ஒரு அறை வைத்தாள் சங்கீதா..

"இப்போ எதுக்கு அடிச்ச?...." - ராகவ் குழப்பத்தில் கேட்கும்போது இன்னும் கண்களில் உள்ள குளமான கண்ணீருடன் அவன் குழப்பத்தில் இருக்கும் முகத்தைப் பார்த்து மெலிதாக ரசித்து சிரித்தாள்....

வெயிட்.. நீ எதுக்கு இத்தன ஜல் ஜல் கொலுசு சத்தம் குடுத்தன்னு இப்போ சொல்லவா?.... - என்று புத்திசாலிபோல சொடக்கு போட்டு அவன் பேசும்போது அவன் முகத்தை இன்னும் அதே மென்மையான சிரிப்புடன் பார்த்து தன் மார்பின் மீதிருக்கும் வியர்வை துளியில் ம......க்.....கு.... என்று எழுதிகாமித்தாள்

"என்னது?... மக்கா... நானா?..." - என்று அவன் சிரித்து கேட்க.. ஆமாம் என்று வாயால் சொல்லாமல் கண்களால் சிரித்து பதில் சொன்னாள்..

"ஹ்ம்ம்.. கொழுப்புடி... இப்போ சொல்லுறேன் பாரு...." - மீசையை முறுக்கிக்கொண்டு ராகவ் பேசும்போது

இன்னும் கொஞ்சம் அதிகமாக சிரித்து "சொல்லு...." என்று ஜாடை காமித்தாள் சங்கீதா....

"நான் கடைசியா பண்ணது உனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்துச்சி... அதனால மூணு தடவ சத்தம் குடுக்குறதுக்கு பதிலா கணக்கே இல்லாம சத்தம் குடுத்த.... கரெக்ட்?...." என்று சங்கீதாவின் கண்களைப் பார்த்து சிரிக்க...

அப்போது சங்கீதா தன் கண்களை ஒரு நொடி மூடி ஆமாம் என்பதுபோல் முகபாவனை செய்கையில் அவளது கண்களின் இரு ஓரங்களிலும் குளமாக இருந்த கண்ணீர் துளி வழிய, உதடுகள் அழகாய் ராகவைப் பார்த்து சிரித்தது....

"ஐ லவ் மை ஒய்ஃப் சரா..... அம்முகுட்டி.... ஐ லவ் யூ சோ மச் டா ...." சங்கீதாவின் கண்களைப் பார்த்துக்கொண்டே பேசினான்..

தன் உள்ளங்கையால் ராகவின் தலை முடியை அழுத்தி பிடித்து தன் நெஞ்சோடு அழுத்தி படுக்க வைத்துக்கொண்டு "ஐ லவ் யூ பொற்கி...." என்று அவன் காதில் மெதுவாக சொன்னாள் சங்கீதா....

சங்கீதாவின் பக்கத்தில் படுக்க ராகவ் சற்று எந்திரிக்க நேரும்போது, "வெளிய எடுக்காத..... உள்ளயே இருக்கட்டும்...." என்று அவன் கண்களைப் பார்த்து மென்மையாக சிரித்து மேற்புரம் உள்ள டூமின் கண்ணாடியில் ராகவின் வியர்த்துகொட்டிய முதுகில் தன் கைகளை வைத்து மெதுவாக தடவி பின் இறுக்கமாக கட்டி அனைத்து தன் தோளில் சாய்த்து அவன் தலை முடியை தடவிக்குடுத்து தூங்க வைத்தாள்....
கொஞ்ச நேரத்திற்கு பிறகு ராகவின் காதுகளுக்கு "ஜல் ஜல் ஜல்" என்று சத்தம் கேட்டது....

சங்கீதா நன்றாக அசதியில் தூங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது... மீண்டும் "ஜல் ஜல் ஜல்" என்று ஒலிக்க தன் செல் ஃபோன் அருகே எழுந்து சென்று பார்த்தான்.... அதில் "John calling" என்று தெரிந்தது...


"ஹலோ..."

John: "john here...."
ஜான்: கணீர் குரலில் "ஜான் பேசுறேன்" என்று குரல் ஒலித்தது..

Raghav: found anything fishy with him?..
ராகவ்: அவன் கிட்ட இருந்து ஏதாவது சந்தேகப்படுறா மாதிரி கண்டுபுடிச்சியா?..

John: "hacked his laptop and got a video.... u could check if that could help u...."
ஜான்: அவன் கம்ப்யூட்டர்ல இருந்து ஒரு வீடியோ கிடைச்சி இருக்கு... ஒரு வேல அது உனக்கு உதவலாம்...

Raghav: please send that as mms to me... lemme check it..
ராகவ்: எனக்கு அந்த வீடியோவை ஃபோன்ல மெசேஜ் அனுப்பி வெய், நான் பார்க்குறேன்....

john: sent, I'll catch you tomorrow morning...
ஜான்: அனுப்பிட்டேன், நான் நாளைக்கு உன் கிட்ட பேசுறேன்....

Raghav: Thanks...sure..
ராகவ்: நன்றி....

ஃபோன் கட் செய்தவுடன், பீப் பீப் என்று மெசேஜ் சத்தம் ஒலிக்க அந்த வீடியோவை தனது செல்ஃபோனில் ப்ளே செய்தான் ராகவ்..

அதில்:

ஆஸ்பெத்திரியின் வார்டு கதவைத் திறந்துகொண்டு உள்ளே ஒரு உருவம் கருப்பு நிற கோட், பான்ட், மற்றும் கண்ணில் ஒரு பெரிய கருப்பு கண்ணாடி அணிந்து முகத்துக்கு வெள்ளை நிற மாஸ்க் போட்டு நுழைய....

அந்த உருவத்தைப் பார்த்து படுக்கையில் தலையில் கட்டுடன் இருக்கும் குமார் "வா துரை...." என்று சிரித்து உற்சாகமாய் வரவேற்கிறான்....



சங்கீதா மேடம் - இடை அழகி 45

"வாவ்.." என்று சொன்னவள் மேலும் ஒன்றும் பேசாமல் அப்படியே பார்த்தபடி நின்றாள்.. நான்கு மூலைகளிலும் இருள் சூழ்ந்திருக்க ஒவ்வொரு இரண்டடிக்கும் இடையில் லாவண்டர் நறுமணம் கொண்ட சென்ட்டட் மெழுகு வத்திகள் கீழிருந்து மேற்புறம் வெளிச்சம் குடுத்து எரிந்து கொண்டிருந்தன.. அறை முழுதும் நிரம்பி இருந்த வாசம், மற்றும் மெழுகு வத்தியில் இருந்து வரும் வெளிச்சத்தின் மத்தியில் எதிரில் உள்ள ஒரு ஓவல் கண்ணாடியின் முன் தனது உருவம் முழுவதும் தெரியும் வண்ணம் நின்றபடி அதே கண்ணாடியின் பின்பத்தில் கலைந்த தலைமுடிகளுடன் அமர்ந்திருக்கும் ராகவின் முகத்தையும், அவனது திரண்ட தோள்களையும், பறந்து விரிந்த திடமான மார்பையும் கண்டு சில நொடிகள் தன்னையும் மறந்து .ராகவின் ஆண்மையில் ஈர்க்கப்படிருந்தாள் சங்கீதா....


என்னடி?... பார்த்துட்டு ஒன்னும் சொல்லாம நிக்குற?.... - கண்களை மூடியபடியே அவளின் கொலுசு சத்தத்தை கேட்டு பேசினான் ராகவ்..

"பேச முடியாதபடி பண்ணி வெச்சி இருக்க.. இப்போ மெதுவா கண்ண தொறந்து என்ன பார்க்குறதுக்கு பதிலா உன் முன்னாடி இருக்குற கண்ணாடிய பாரு.." என்றாள் சரா..

ஒரு நொடி கண்ணைத்திறந்து கண்ணாடியைப் பார்த்தான் ராகவ்.. தலையில் நெத்திச்சுட்டி, கண்களுக்கு அழகிய மை, அம்பைப் போன்ற புருவங்கள், புருவத்தின் மேலே இரு ஓரங்களிலும் சிறிய கருப்பு புள்ளிகள்.. மூக்கில் சிறியதாய் மின்னும் வைர மூக்குத்தி, காதுகளில் சிறியதாய் தொங்கும் முத்தால் செய்த கம்பல்கள், கழுத்தில் இரண்டு பட்டைகளை கொண்ட முத்து மாலை தொப்புளுக்கு இரண்டு இன்ச் மேலே வறை தொங்கி இருந்தது, மார்பினில் ஒரு வெள்ளை நிற துணியால் "அரண்மனையில் இளவரசிகள்" அணிந்திருக்கும் விதத்தில் முன் புறம் மார்பை மூடி, பின்புற முதுகில் முடிச்சி போடப்பட்டிருந்தது..

நல்ல வளைவுகளைக்கொண்ட பெரிய மார்பகங்கள் அதிக அழுத்தம் பெற்றதால் அந்த துணியின் உள்ளே அதிகமாய் இருக்க இடமின்றி விம்மிக்கொண்டு திம்மென்று அந்த துணியின் மேற்ப்புறம் நின்றது...

இடுப்பில் உள்ள துணி தொப்புளுக்குக் கீழ் கிட்டத்தட்ட ஒரு மூன்று இன்ச் அளவுக்கு நன்றாகவே இறக்கிக் கட்டப்பட்டு இருந்தது..

சங்கீதாவின் உயரத்துக்கு அவளது மார்புக்கு கீழ் பகுதியில் இருந்து இடுப்பில் உள்ள துணி வரையிலான இடைவெளி மிக நீளமாக இருந்தது.

இடுப்பின் அருகே இரு முனைகளில் இருந்தும் துணிகள் சற்றே இறங்கியவண்ணம் "டீப் v" வடிவில் இருந்தது. தொப்புளின் கீழிருந்து ஒரு நீளமான துணி இரு பக்கமும் நன்கு திரண்ட அதே சமயம் ஒரு பெண்னின் உடல் இலக்கணத்துக்கு ஏற்ப சரியான வளைவு நெளிவுகளை கொண்ட வெண்மையான அவளது தொடைகளை மூடி இருந்த துணிகளுக்கு இடையில் இருந்து பின்புறம் சென்று அவளது முதுகுக்குக்கீழ் பகுதியில் மறைந்தது.

தொடைகள் முழுவதுமாக மறைக்கப்படாமல் பாதியாய் மூடி இருந்தது. பாதி தொடையில் இருந்து பாதம் வறை துணிகள் ஏதும் அவளது முழங்காலின் அழகை மறைக்காமல் அப்படியே ராகவ் கண்களுக்கு விருந்தளித்தன.... கால் நகங்களில் நெயில் பாலிஷும் அழகான ஜல் ஜல் சத்தம் குடுக்கும் கொலுசும், அவளது பாதங்களை இன்னும் அழகாக்கியது..

கைகளில் கண்ணாடி வளையல்கள், விரல் நகங்களில் அழகிய நெயில் பாலிஷ், தோள்களுக்கு சற்று இறக்கத்தில் வம்கி, வளைவான இடுப்பை சுத்தி தொப்புள் அருகே சிறிய முத்தை கொண்ட இடுப்பு செயினும், தோள்கள் அருகே கை இடுக்குகளின் ஓரத்தில் மிதமாக அக்குள் வியர்வை படர்ந்திருப்பதையும், தலையில் நெத்திச்சுட்டியின் மீதிருந்து "இருந்தும் இல்லாதது" போல இருக்கும் ஒரு மெல்லிய வென் துணியால் பின்புறம் முதுகை மறைத்தபடி, மார்பழகை காட்டிய வண்ணம் அந்த துணியின் இரு நுனிகளையும் தன் இரு கரங்களில் உள்ள அழகிய விரல்களால் பிடித்து சற்று லேசாய் சாய்ந்த வண்ணம் முகத்தை வைத்து ஓரப்பார்வையால் ராகவை ஏகத்துக்கும் அவள் கண்னங்கள் சிவக்கும் விதம் வெட்கத்தில் பார்ப்பதை கண்ணாடியில் ராகவ் பார்க்கும்போது உண்மையில் பேச்சு வராமல் இப்போது தன் கண்கள் காண்பது ஒரு கனவா இல்லை நிஜமா என்று சங்கீதாவின் அபரிமிதமான அழகில் அவனாலேயே நம்ப முடியாமல் உறைந்து நின்றான்.

அதை விடவும், மெழுகு வத்தியின் வெளிச்சத்தில், சங்கீதாவின் மார்பின் அடிப்பாகம் அவளது வயிற்றின் மீது இரண்டு "U" எழுத்து வடிவில் நிழலாய் விழுந்திருந்ததையும், இடுப்பில் தொப்புள் குழி அருகே அதே "u" என்ற எழுத்து சிறிய வடிவில் கீழ்நோக்கி விழுவதையும், இடுப்பின் ஒரு பக்கத்தில் உள்ள வளைவில் ஒரு சொட்டு வியர்வை துளி மெதுவாக கீழ்நோக்கி வளைவான பாதையில் ஊர்ந்து வந்து இடுப்பின் அருகே உள்ள துணியில் ஈர்க்கப்படுவதையும், அந்த ஒரு சொட்டு வியர்வை துளியில் மெழுகு வத்தியின் வெளிச்சம் படுகையில் அத்துளியின் ஓரம் வைரம் போல் மின்னுவதையும் கண்டு முகம் சிவக்க உடல் முழுக்க ரத்த ஓட்டம் அதிகரித்து அவன் காதல் மனைவி சராவின் மீது காம தாகம் அதிகம் ஆனது ராகவுக்கு.

ஸ்தம்பித்து நின்றவன், அவளையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு வார்த்தைகள் எதுவும் பேசாமல் மெதுவாக அவளது பின்புறம் வந்து நின்று, இரு புறமும் தன் கரங்களால் தலையில் இருந்து வரும் துணியின் நுனிகளைப் பிடித்திருந்த சராவின் கரங்களைப் பிடித்து இறக்கி, முன்பக்கம் அவளது இடுப்பை சுத்தி கட்டி அணைத்தபடி அவளது கழுத்தில் ப்ச் ப்ச் ப்ச்... என்று முத்தமிட்டான்..


"ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹா...." என்று முனகி நெளியும்போது அவள் கை வளையல்கள் தரும் ஓசை ராகவை கிறங்கடித்தது..

இனி இந்த உடல் சுகத்தை அனுபவிக்க தடுப்பதற்கோ தடை போடவோ காரணம் ஏதும் இல்லை என்பதை நினைக்கும்போதே சங்கீதாவின் ஆழ்மனது சந்தோஷத்தின் உச்சத்துக்கு சென்றது..

சராவை அணைத்தபடியே அவளது இடுப்பு முழுவதும் தடவி அவள் தொப்புளை வருடிக்கொண்டே அருகில் உள்ள மியூசிக் சிஸ்டமில் ப்ளே அழுத்தினான் ராகவ்..

சில நொடிகளில் நறுமுகையே பாடல் அறை முழுதும் எக்கோவுடன் ஒலித்தது... அப்போது மெழுகு வத்தியின் வெளிச்சத்தில் எதிரில் உள்ள கண்ணாடியில் இருவரும் ஒருவருக்கொருவர் அவர்களுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே சுகமாக இருவருடைய உடலும் உரச மெதுவாய் ஆடத் தொடங்கினார்கள்..

"நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய்..
செங்கணி ஊறிய வாய் திறந்து நீ ஒரு திருமொழி சொல்லாய்.." - என்ற ஆரம்ப வரிகளுக்கு கட்டி அணைத்தபடியே மெதுவாக உடலை அசைத்தபடி கண்ணாடியில் ஒருவருக்கொருவர் தங்கள் முகங்களைப் பார்க்கையில் ராகவ், சராவின் அகலமான மென்மையான இடுப்பின் சதைகளை நடு மார்புக்குக் கீழிருந்து தொடங்கி தனது உள்ளங்கையால் தடவிக்கொண்டே சற்று இடுப்பின் ஓரங்களில் மிதமாக அழுத்தி பிசைந்து மீண்டும் அவளது தொப்புள் குழி அருகே வந்து தன் இடது கை விரல்களால் நிமிண்டிக்கொண்டே தடவினான்.. அப்போது சங்கீதா கூச்சத்தில் "ஸ்ஸ்ஸ்ஹ்ஹா" என்று முனகிய சத்தத்தை ரசித்துக்கொண்டே கண்ணாடியில் அவளது மென்மையான கழுத்தின் ஓரத்தை பார்த்துக்கொண்டே முத்தமிட்டு அவளது பார்வையை கூர்ந்து பார்த்து ரசித்தான்....

"திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகை பாராய்..
வெண்ணிற புறவியில் வந்தவனே, வேல்விழி மொழிகள் கேளாய்" - என்ற வரிகளை கேட்கையில் அவள் கழுத்தின் ஓரத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் ராகவின் கண்களைப் பார்த்து வெட்கப்படுவது போல பாவனை செய்து சிரித்தாள்.. கழுத்தின் ஓரத்தில் முத்தமிட்டபடி தொப்புளையும் இடுப்பையும் கூசிக்கொண்டிருந்தவனின் தலை முடிகளை அழுத்தமாய் இருக்கி பிடித்து அவன் குடுக்கும் சுகத்தை ரசித்தாள்..

பாடலில் வரும் இசைக்கு ஏற்ப தன்னுடன் ஆடுவதற்கு அவள் இடுப்பில் இருந்து கைகளை எடுத்து தன் பக்கம் திருப்பி அவளது முதுகினை அழுத்தி பிடித்து அணைத்தவாறு இடது புறமும் வலது புறமும் இருவரும் ஒருசேர பாதங்களை எடுத்து வைத்து ஆடும்போது இருவருடைய பார்வையும் ஒன்றோடொன்று ஓட்டி இருந்தது..

அப்போது கண்ணாடியில் சங்கீதாவின் பின்புற அழகை பார்த்தான்.. முதுகில் இருந்து இடுப்பு வறை உள்ள வளைவுகளையும், இடுப்பின் கீழ் தொடங்கும் செழுமையான கொழுத்த புட்டங்களின் வளைவுகளையும், அதன் கீழ் வியர்வை துளிகள் படர்ந்த பின்புற வெண்மையான இரு தொடையையும் பார்த்து சூடாகிக்கொண்டே மெழுகு வத்தியின் மஞ்சள் வெளிச்சத்தில் ராகவின் கைகள் அவளுடைய இடுப்பின் வழு வழுபான ஸ்பரிசத்தை இடது கைகளால் தடவிக்கொண்டு ரசிக்க....

ராகவின் முதுகையும் அவனுடைய உருண்ட வியர்வை படர்ந்த தோள்களையும் தன் கைகளால் தடவி விரல் நுனிகளால் அழுத்தி தன் இடுப்பில் இருக்கும் அவனது உள்ளங்கையின் மென்மையான உரசலை "ஸ்ஹ்ம்ம்..." என்று முனகிக்கொண்டே ரசித்தாள் சரா....

இருவரும் ஒருவருக்கொருவரின் கைகளின் தீண்டலாலும், உடலின் உரசல்களாலும், இருக்கி அனைத்து ஆடும்போது தங்களின் தேக வாசத்தையும், மூச்சுக்காற்றின் வெப்பத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்ததைத் தொடர்ந்து.. கண்ணாடியில் அறை அந்தரங்கமாக தெரியும் இருவருடைய உடலையும் ஒருவருக்கொருவர் காண்கையில் காமத்தீயின் சூடு ஆழ்மனதில் இன்னும் அதிகம் ஆனது..

பாடல் வரிகளுக்கு இடையே வரும் இசைக்கு ஏற்ப ஆடும்போழுது ராகவின் இடது கை சங்கீதாவின் இடுப்பை தாங்கி பிடிக்க சற்று கீழே இறக்கினான்.. அப்போது அவளது முதுகின் நடுவில் உள்ள முடிச்சியில் தொங்கும் துணியை தன் கையில் பிடித்துக்கொண்டான்.. அப்போது அவன் கையில் இருந்து எழுந்தரிக்கும்போது தன் முதுகில் உள்ள முடிச்சி அவிழப்பட்டதை வெட்கத்துடன் உணர்ந்தாள் சரா.. அந்த நேரம் அவனிடம் இருந்து ஒரு நொடி தள்ளி நின்று வெட்கத்தில் அவனைப் பார்த்து சிரித்தாள்....

அந்த சிரிப்பை ராகவ் மிகவும் ரசித்து சங்கீதாவின் உதட்டில் முத்தம் குடுக்க நெருங்கும்போது.. "மங்கை மான்விழி அம்புகள் என் மார்துளைத்ததென்ன...." என்ற வரி எதிர்பாராமல் எதேச்சையாய் அந்த நேரம் பார்த்து வந்ததை கேட்டு சங்கீதாவும் ராகவும் ஒரு நொடி ஒருவருக்கு ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டார்கள்..


ராகவ் நெருங்கி வந்து அவளுடைய தோள்களில் முத்தம் குடுக்க அவனது மீசையின் உரசலை அவளது தோள்களில் ரசித்தாள் சரா.. அப்போது ராகவ் அவளது காதருகே "நான் எது செஞ்சாலும் பிடிச்சிருக்கு, பிடிக்கலைன்னு வெக்க படாம சொல்லணும்... அத நான் உன் வாயால கேக்கணும்... சரியா?..." என்று சொல்லும்போது..

"ஜல் ஜல் ஜல்..." என்று மூன்று முறை சத்தம் குடுத்தாள் சங்கீதா..

ராகவ் ஒன்றும் புரியாமல் முழிக்க.. "ஹா ஹாஹ்ஹா.. மக்கு புருஷா.." என்று சொல்லி சிரித்தாள்..

நான் மக்குதான்.. நீயே சொல்லு எதுக்கு இப்போ மூணுதடவ கொலுசுல சத்தம் குடுத்த..? என்றான்..

"எனக்கு ஏதாவது ரொம்ப ரொம்ப பிடிச்சி இருந்தா என் கால் கொலுசுல மூணு தடவ ஜல் ஜல் ஜல்னு சத்தம் குடுப்பேன்.. நீ புரிஞ்சிக்கனும்.. ஓரளவுக்கு பிடிச்சி இருந்தா வலயளால ரெண்டு தடவ சத்தம் குடுப்பேன்.... ஆனா வாய தொறந்து பேச மாட்டேன்..ஹா ஹா.."

"வாவ்.. சூப்பர்.. இது புதுசா இருக்கே.. ஐ லவ் தட்.." என்று சொல்லி அவளை ஆர்வமாய் இருக்கி கட்டி அணைத்தான் ராகவ்.

"அப்போ பிடிக்கலைனா எப்படி பண்ணுவ என்றான் ஆர்வத்தோடு.....ஆனால் சரா அவன் வாயை தன் கைகளால் மூடி..."ப்ளீஸ் அப்படி சொல்லாதடா எனக்கு நீ என்ன பண்ணினாலும் பிடிக்கும்டா" என்றாள்.... இருந்தாலும் ஏதாவது உருத்துசின்னா வலயளால சத்தம் குடுக்குறேன்.. நீயே புரிஞ்சிக்கோ..." என்றாள்..

அவன் கண்களுக்கு அவளுடைய மென்மையான தோள்களும் புடைத்துக்கொண்டிருக்கும் மார்பும், கழுத்தின் நடுவில் இருந்து வழியும் வியர்வைத்துளிகள் மார்பின் இடுக்கில் சென்று மறைவதையும் பார்த்தவனுக்கு பொருக்க முடியவில்லை.

அப்படியே அவளின் இடுப்பை சுற்றி வளைத்து கட்டில் அருகே நகர்த்தி சென்றான்.. அவளின் நெத்திச்சுட்டியில் இருக்கும் துணியை மெதுவாக எடுத்துவிட அது கீழே விழுந்தது..

இப்போது கண்ணாடியின் முன்பு சங்கீதாவை நிற்க வைத்து அவளுடைய கைகளை உயர்த்தி மேலே அவளின் கை விரல்களில் ஆரம்பித்து கண்ணாடி வளையல்களை தடவியபடி கைமுட்டிகளுக்கும் கீழ் நோக்கி மெதுவாக தடவிக்கொண்டு வருகையில் ராகவ் விரல்களின் அழுத்தம் கொஞ்சம் அதிகரித்தது.. அப்படியே அவன் கை விரல்கள் அவள் தோள்கள் மீது பயணித்து மெதுவாக அவளுடைய அக்குள் பகுதிக்குள் சென்று தடவும்போது "ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹா" என்று கூச்சத்தில் முனகிக்கொண்டே பின்புறம் தலை சாய்த்து கண்களை மூடி ராகவின் நெஞ்சின் மீது சாய்ந்து தன் கைகளை இன்னும் தூக்கியவாறே வைத்து ராகவின் தலைமுடியை கொத்தாக பிடித்துக்கொண்டாள்....

ராகவ் தன் வலது கையால் சங்கீதாவின் வலது பக்கம் அவளது அக்குள் பகுதியை தொடர்ந்து பக்கவாட்டில் மெதுவாக தடவுகயில் அவளுடைய உடல் கூசுகிறதென்பதை வயிற்றுப் பகுதி சற்றே உள்ளுக்குள் சென்று மீண்டும் வெளியே வந்து புரிய வைத்தது.. அவனது வலது கை இன்னும் கீழறங்கி வலது பக்கம் உள்ள வளைவான இடுப்பின் ஓரத்தில் பயணித்து செல்லும்போது அவனுடைய இடது கை சங்கீதாவின் முதுகுக்குப்பின்னால் சென்று ஏற்கனவே முதுகுக்கு மத்தியில் அவிழ்ந்திருக்கும் முடிச்சை பிடித்து மொத்தமாய் அவிழ்த்தான். அப்போது வலது கை வைத்து இடுப்பின் ஓரத்தில் இருந்து மெதுவாக நடுவில் சென்று அவளுடைய தொப்புளின் உள்ளே ஆள்காட்டி விரல் நுனியை வைத்து மெதுவாக தடவினான்..

"ஆஆவ்வ்..ஸ்ஸ்ஹா.." ஜல் ஜல் ஜல் "ஹ்ஹா...ஹாஹா" என்று தன் கால் கொலுசில் சத்தம் குடுத்து கண்ணாடியில் ராகவைப் பார்த்து சிரித்தாள் சரா....

அவள் வெட்கமும் கூச்சமும் கலந்து குடுத்த சிரிப்பின் சத்தம் ராகவுக்கு இன்னும் உஷ்ணத்தை அதிகரித்தது.... அவளுடைய முட்டிக்கு கீழ் இருக்கும் கால்கள் வழு வழுப்பாகவும் கொலுசுடன் பார்க்கையில் இன்னும் அழகாக தெரிவதையும் பார்த்தவனுக்கு அவள் மீதிருக்கும் பசி வெறித்தனமாய் அதிகமானது..

முதுகில் உள்ள முடிச்சி மொத்தமாய் அவிழ்ந்து இருப்பதை கவனித்த சரா அவளது இடது கையை இறக்கி அந்த பாவப்பட்ட துணி கீழே விழாமல் இருக்க பிடித்துக்கொண்டாள்.. வலது கையை உயர்த்தியவாறு இடது கையை மார்பின் மீது துணியால் அழுத்தி மூடி தொப்புளும், பாதி தொடையும், முழங்கால் ஒன்றோடொன்று உரசி வலது பாதத்தின் கட்டை விரல் நகம் இடது பாதத்தின் மீது வெட்கத்தின் உச்சத்தில் அழுத்தி உரசிக்கொண்டிருப்பதை எதிரில் உள்ள கண்ணாடி மெழுகு வாத்தியின் மஞ்சள் வெளிச்சத்தில் மிதமாக வியர்வை படர்ந்த சங்கீதாவின் உடல் அழகை காட்டி ஏகத்துக்கும் காமத்தீயை கொழுந்து விட்டு எரியச்செய்தது ராகவுக்கு.. அவளை அப்படியே கட்டி அணைத்த படி கட்டிலில் விழுந்தான்...

"ப்ச் ப்ச் ப்ச் ப்ச்.... ஐ லவ் மை சரா... ஐ லவ் ஹர் சோ மச்... ப்ச் ப்ச்... யூ ஆர் மை செக்ஸ்ஸி ஒயிஃப்....." என்று அவளின் கழுத்தில் முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் மாற்றி மாற்றி முத்தமிட்டான்..

"ஸ்ஸ்ஸ்..ஹ்ஹா..மீ டூ டா.... ஐ லவ் யூ டா மை ஒன் அண்ட் ஒன்லி பொறுக்கி புருஷா....ஆஹ்ஹ்.." ராகவின் உதடு தன் கழுத்தையும் நெஞ்சின் நடு பாகத்தையும் முத்த மழையால் அவன் மீசை உரச மேய்வதை கண்கள் மூடி அனுபவித்தாள்....



சங்கீதாவின் முதுகுக்குப்பின்னால் இருக்கும் துணியை லாவகமாக எடுக்கும்போது வசதியாக ஒத்துழைத்து முதுகை படுக்கையின் மீது இரு புறமும் மெதுவாக அசைத்துகுடுத்து அதை வெளியே எடுக்க வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே உதவி செய்தாள்....

இப்போது சங்கீதாவின் மார்பின் மீது இருக்கும் இரு கைகளையும் மெதுவாக தூக்கி அவளது தலையின் பின் வைத்தான்.. ஒரு நிமிடம் அவளது படர்ந்த தலை முடியையும், வியர்வை படர்ந்த மார்பையும், ரோமங்கள் நீக்கிய சற்றே ஈரமான அக்குள் மீதிருந்து வரும் இயற்கையான வாசத்தையும் நுகர்ந்து அனுபவித்துக்கொண்டே மார்பின் மீதிருக்கும் துணியின் ஒரு பக்க நுனியை தன் கையில் பிடித்துக்கொண்டு "எடுக்கட்டா?... எடுத்துடவா?...." என்று ராகவ் சிரித்துக்கொண்டே கேட்க....

அவள் தன் தலையை பக்கவாட்டில் திருப்பி...சிரித்தவாறு ஜல் ஜல் ஜல் என்று கால் கொலுசால் சத்தம் குடுத்து வெட்கத்துடன் தூக்கி வைத்திருக்கும் இரு கைகளையும் மேலே இணைத்தபடி கண்களின் மீது வைத்து மூடிக்கொண்டாள்.. அவள் முகத்தில் இப்போது மூக்கும் உதடும்தான் தெரிந்தது... வைர மூக்குத்தி மின்னிக்கொண்டிருக்க அவள் உதடுகளை உள்ளுக்குள் இழுத்து வைத்து அடக்க முடியாத வெட்கத்தில் ராகவைப் பார்க்க முடியாமல் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்

அனைத்தும் எனக்கே என்ற சிறு கர்வத்துடன் தன் கண் முன் இருக்கும் அழகு தேவதையின் மார்பில் உள்ள துணியை மெதுவாக ஒரு பக்கத்தில் தன் முன் பற்களால் பிடித்து இழுக்க அவள் மார்பின் ஸ்பரிசத்தை லேசாக உரசிக்கொண்டே அந்த துணி அவளது மார்பழகை ராகவின் கண்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மஞ்சள் வெளிச்சத்தில் கொண்டு வந்தது.. அந்த துணியை மொத்தமாக உருவியவன் அவளது வெண்மையான கொழுத்த மார்பழகயும், அதன் நுனியில் சற்றே பெரிய வட்டங்கள் கொண்ட காம்பு நுனியையும் அதை சுற்றி ஆங்காங்கே உள்ள மிகச்சிறிய ரோமங்களையும் பார்த்து பித்து பிடித்தவன் போல அப்படியே உறைந்தான்..

எதையும் பார்க்காமல் கண்களை மூடி இருந்த சங்கீதாவுக்கு தன் மார்பின் காம்பு நுனியின் மீது ராகவின் உஷ்ணமான மூச்சுக்காத்து படுவதை உணரும்போதுதான் அவள் மார்பு அவளுடைய செல்ல பொருக்கிக்கு முழுவதுமாய் தரிசனம் குடுத்துக்கொண்டிருப்பதை வெட்கத்துடன் "க்ஹ்ஹ்ம்" என்று சத்தம் வராமல் காற்றில் முனகிக்கொண்டே உணர்ந்தாள்....

திம்மென்று இருக்கும் அவளது கொழுத்த மார்பகங்களை மிக மிக அருகில் உற்று பார்த்து ரசித்தான்.. அவற்றின் அடிப்பாகத்தில் விழும் மஞ்சள் வெளிச்சம் அந்த இடுக்கில் ஒளிந்திருக்கும் ஒரு சிறிய மச்சத்தை கூட அவன் பார்வைக்கு காட்டிக்குடுத்தது.. அவள் மார்பின் மேல் இருக்கும் காம்பின் அழகை அவன் ரசிக்கையில் அவனது மூச்சுகாத்து பட்டபோது இதுவரை மென்மையாக இருந்த காம்பின் சதைகள் அவன் கண் முன்னே சில நொடிகளுக்குள் சுருக்கங்கள் உருவாகி இறுக்கம் அடைவதையும் அதன் நுனி இறுக்கத்தில் எழும்பி நிற்பதையும் கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான்..

தன் விரல் நுனி ஒன்றை எழும்பி நிற்கும் காம்பின் நுனியில் வைத்தான்...
"ஸ்ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹாஹாஹா......." என்று முனகிக்கொண்டே ஜல் ஜல் ஜல் என்று காலில் சத்தம் குடுத்து "க்ஹாஹ்ஹா..." என்று சத்தம் வராமல் காற்றில் சிரித்தாள் சரா

அந்த கொலுசின் சத்தம் கேட்டவுடன் ராகவ் அவளது தூக்கி வைத்த கைகளில் முத்தம் குடுத்துக்கொண்டே அவனது வலது கையால் அவளது இடுப்பில் தடவி தொப்புள் குழியில் தன் விரல் வைத்து லேசாக நிமின்டினான்...
ஹ்ம்ம்..ஸ்ஸ்ஸ் என்று முனகிக்கொண்டே ஜல் ஜல் ஜல் என்று மீண்டும் சத்தம் குடுத்தாள்..

கைகளில் முத்தம் குடுத்துக்கொண்டே வருகையில் அவளுடைய அக்குள் பகுதியில் ஷ்ஷ்ஷ் என்று அவளின் இயற்கையான வாசத்தை நுகர்ந்து தன் உதடுகளால் அழுத்தி ப்ச் ப்ச் ப்ச் என்று முத்தங்கள் குடுத்து உதடுகளால் தன் மீசை உரச தடவினான்....

"ஹ்ஹ்ஹ்ம்ம்.." சராவுக்கு உடல் அதிகமாக கூசியது..

தன் ஈரமான நாவினை அவளது அக்குளின் மென்மையான உட்பகுதியில் பதித்து தடவியபடி மெதுவாக உறிஞ்சி இழுத்து பற்களால் சற்று மென்மையாக கடித்து இழுக்கையில் "ச்சப்" என்ற சத்தத்துடன் தன் வாயிலிருந்து அவளது வழுவழுப்பான அக்குள் சதையை விடுவித்தான்... அவன் மென்மையாக சப்பி இழுத்துவிட்ட இடத்தில் அவனது உதட்டின் வடிவம் அவன் எச்சிலால் வரையப்பட்டிருந்தது.. அதன் மீது ப்ச் ப்ச் ப்ச் ப்ச் என்று தொடர்ந்து சில நொடிகள் முத்த மழை பொழிந்தான்..

"ச்சீசீசீ... ச்சீசீ.. ச்சீ.. நாஸ்டி ஃபெலோ... ஹாஹ்ஹா..." என்று அவள் முனகும்போது ஜல் ஜல் ஜல்... என்ற சத்தம் தவறாமல் அவள் காலில் இருந்து வந்தது..

அப்படியே சங்கீதாவின் அக்குளின் கீழ்பகுதியில் தொடங்கி பக்கவாட்டில் தன் ஈரமான நாவின் நுனியால் ஒரு பெயிண்ட் ப்ரஷ் வைத்து வரைவது போல தடவிக்கொண்டே ப்ச் ப்ச் ப்ச் என்று முத்தம் குடுக்கும்போது அவளது மார்பின் ஓரம் ராகவின் கன்னங்களை மென்மையாக உரசியது...

உடலின் பக்கவாட்டில் ராகவின் முத்தங்களும், அவனது உதடுகளின் உரசல்களும் சங்கீதாவுக்கு ஏகத்துக்கும் கூச வைத்தது... அப்போது கைகளை தூக்கி வைத்தவாறு மல்லாக்க படுத்திருக்கும் சங்கீதா... படுக்கையின் மீது ஒரு பாம்பை போல் மெதுவாக மேல் நோக்கி நெளிந்து நகர்ந்தாள்....


மார்பின் மென்மையான சதை ராகவின் கன்னங்களை மென்மையாக உரசியபோது அதன் மீது மென்மையாக முத்தம் குடுத்து மெதுவாக அதன் அடிபாகத்தின் இடுக்கில் தன் நாவின் நுனியை நுழைத்து தடவுகயில் அவளுடைய மார்பின் அடிபாகத்தில் உள்ள உஷ்ணத்தை உணர்ந்தான்.. கூடவே அங்கிருந்து வரும் வியர்வையின் வாசம் அவனுக்குள் இன்னும் வெறியேற்றியது..

அப்போது அவளது முதுகுப்பக்கம் அடியில் இடது கை விட்டு மேற்ப்புரம் உள்ள வழுவழுப்பான பரந்த அகலமான இடுப்பை தன் வலது உள்ளங்கையால் தடவியவாறு, இரு கைகளையும் கோர்த்து அவளை இருக்கி தன் பக்கம் அணைத்தபடி வியர்வையுடைய கொழுத்த மார்பகதின் மீது காம்பின் வட்டத்தை சுத்தி ப்ச் ப்ச் ப்ச் ப்ச்.... என்று மிருதுவாக முத்தமிட்டான்..

"ஸ்ஸ்ஹ்ஹா....ஹ்ம்ம்.." என்று மீண்டும் உதடுகளை உள்ளுக்குள் இழுத்து கடித்துக்கொண்டிருக்க "ஜல் ஜல் ஜல்" என்றது அவளது பாதங்கள்..

வலதுபக்க மார்புக் காம்பை சுத்தியவாறு வட்டங்களை வரைந்து கொண்டிருந்த ஈரமான நாவின் நுனியால் மெல்ல மெல்ல அந்த வட்டத்தை சுருக்கிக்கொண்டு வர, ராகவ் அவளது காம்பு மீது தன் நாவின் நுனியால் சற்றே அழுத்தியவாறு வட்டமிட தொடங்கினான்..

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அஹ்ஹ்...ஹ்ம்ம்.. ஸ்ஹ்ஹ்ஹாஹா...." என்று வாயில் முனகல் சத்தம் வர, தூக்கி வைத்த கைகளால் கண்களை மூடி இருந்தவள். சட்டென்று முகத்தை ஒரு புறம் திருப்பி தன் கைகளை மெதுவாக தானே கடித்துக்கொண்டாள்.... அவள் உள்ளுக்குள் அனுபவிக்கும் சுகத்தை வாயால் சொல்ல வந்து நிறுத்தி.. மீண்டும் "ஜல் ஜல் ஜல்" என்று அவள் பாதங்கள் சத்தம் எழுப்பியது... சற்றே பலமாக..!!

"ஹா ஹா.. சத்தம் கொஞ்சம் அதிகமா இருக்கு" என்று சொல்லிக்கொண்டே அவளது காம்பினை இப்போது முழுவதுமாக தன் உதடுகளால் கவ்வி நாவின் நுனியால் எழும்பி நிற்கும் அவளது காம்பின் நுனியை மென்மையாக வருடினான்....

"ஸ்ஸ்ஸ்...ஹ்ஹாஹா...ஹ்ம்ம்... ஸ்ஷ்ஷ்ஷ் ஹ்ஹா...." என்று அவள் முனகும் சத்தம் அவளது மார்புக்காம்பின் மீது ராகவின் நாவின் நுனி உரசல்களுக்கு ஏற்ப வெளிப்பட்டுக்கொண்டிருந்தது..

காம்பின் நுனியை மட்டும் குறி வைத்து வேகமாய் தன் நாவின் நுனியால் உரசியவன் இப்போது அவளது முழு காம்பையும் மொத்தமாய் தன் உதடுகளால் உறிஞ்சி இழுத்து மிருதுவாக சப்ப துவங்கி "ச்சப்.... ச்சப்...." என்ற சத்தத்துடன் உறிஞ்சி இழுத்த காம்பை வாயில் இருந்து விடுவித்து பின் மீண்டும் உறிஞ்சி "ச்சப்...." என்ற சத்தத்துடன் திரும்பி விடுவித்து.. அவள் காம்புடன் இந்த உறிஞ்சி இழுக்கும் விளையாட்டை அவன் வாயால் சில நிமிடங்கள் அவளது காம்பு சிவக்கும் வறை செய்தான்....

"ஹா... ஹம்ம்ம்மா... ஹ்ம்ம்... ஸ்ஸ்ஸ்ஹ்ஹா...." என்று தன் முழங்காலை ஒன்றோடொன்று அழுத்தி உரசியவாறு ராகவ் உதடுகள் தன் காம்பை ருசித்து ச்சப்புவதை கண்கள் மூடி முனகிக்கொண்டே சுகமாய் ரசித்துக்கொண்டிருந்தாள் சங்கீதா.. அப்போது அவள் பாதங்களில் இருந்து எந்த சத்தமும் வராமல் இருக்க ராகவ் அவளிடம் மெதுவாக....."பிடிக்கலையா?.." என்றான்..

கண்களை மூடி இருக்கும் கைகளில் ஒரு கையை மெதுவாக விளக்கி அவன் குடுக்கும் சுகங்களில் சொக்கி இருக்கும் பார்வையால் அவனைப் பார்த்து சத்தமே இல்லாமல் காற்று கலந்த குரலில் "ப்ப்பொருக்க்க்கிகிகி......" என்று சொல்லிக்கொண்டே "ஜல் ஜல் ஜல்" என்று தன் முழங்கால் ஒன்றை அவன் கால்கள் மீது போட்டு பாதங்களால் தட்டி சத்தம் குடுத்துவிட்டு அவனைப் பார்த்த வெட்கத்தில் அவள் உதடுகள் குடுத்த சிரிப்பை ஏக உஷ்ணத்துடன் ரசித்தான் ராகவ்....

உணர்ச்சிபொங்க அவளது காம்பை மீண்டும் தன் வாயால் கவ்வி ச்சப்பி உறிந்தபடி மார்பகத்தின் அடியில் உள்ள இடுக்கில் கை வைத்து முழுவதுமாய் பற்றி இரு கைகளாலும் வசதியாய் அழுத்தி பிடித்து மேய்ந்து கொண்டிருக்கையில் மற்றொரு காம்பின் நுனியில் தன் வாயில் சற்றே ஈரப்படுத்திய விரல் நுனியை வைத்து தடவிக்கொண்டிருந்தான்.. 


"ஹ்ம்ம்..வூஹ்ஹ்....ம்ஹ்ஹா...ம்மஹா...." என்று அவள் முனகுகையில் அவளுடைய முனகல் சத்தம் ராகவின் வேகத்தை கூட்டியது..

ஒரு பக்கமுள்ள மார்பின் காம்பை இடைவிடாமல் ச்சப்பிக்கொண்டிருக்க மற்றொரு காம்பின் மீது விரல் நுனியால் தடவிக்கொண்டிருந்தவன், தன் வாயில் இருந்து கொஞ்சம் எச்சில் எடுத்து உள்ளங்கையை இன்னும் சற்றே ஈரப்படுத்திக்கொண்டு மற்றொரு கொழுத்த மார்பகத்தின் மீது நன்றாக அழுத்தி பிசைந்தவாறு காம்பின் மீது கட்டைவிரலையும் ஆள்காட்டிவிரலையும் வைத்து உச்சி நுனியில் எழுந்து நிற்கும் காம்பை சற்று மெதுவாக திருகி கில்லியவாறு மேல்நோக்கி இழுத்து தொப்பென்று கீழே விட்டான்..

அவன் கிள்ளி இழுக்கும்போது.."ஸ்ஸ்ஸ்ஸ்...அம்ம்ம்ஹா..ஹ்ம்ம்.. ஸ்ஸ்ஹாஅஅ..." என்று முனகிக்கொண்டே தன் முகம் மீதிருக்கும் கையை தன் பற்களால் சற்றே கடித்துக்கொண்டு, முழங்கால்கள் ஒன்றோடொன்று தன் பாதங்களால் உரசியவிதம் கட்டிலில் நெளிந்தாள்..

விரைத்துக்கொண்டு இருக்கும் இரு காம்புகளையும் கொழுத்த மார்பகங்களையும் மொத்தமாக தன் வாயால் மேய தொடங்கும்போது ராகவின் கண்களுக்கு அருகேயுள்ள மேஜையில் ப்ரேக்ஃபாஸ்ட் ட்ரேயின் மீது இருக்கும் பட்டர் க்யூப் கண்களில் சிக்கியது...

அவள் மீதிருந்து எழுந்து அருகே சென்றவனை மெதுவாக ஓரக்கண்ணால் பார்த்து அவன் என்ன செய்யபோகிறான் என்பதை அறிந்து வயிற்றில் கிச்சுகிச்சு ஏற்படும் வண்ணம் கைகளால் முகத்தை மூடியவாறே சத்தமின்றி சிரித்துக்கொண்டிருந்தாள்..

அந்த சிறிய வெண்ணை பாக்கெட்டை பிரித்து அவளைப்பார்த்த படி அதை தன் வாயினுள் போட்டு சிரித்துக்கொண்டே அவளை நெருங்கினான்..

"ச்சீ... நாஸ்டி புருஷா.. புத்தி எப்படியெல்லாம் போகுது பாரு...."

ஹா ஹா.. புசு புசுன்னு இருக்குற அந்த ரெண்டு பட்டர் பியூட்டி மேலயும் பட்டர் போட்டு சாப்பிட போறேன்.. ஹாஹ்ஹா....

"சிரிக்க்க்காதடா ராஸ்கல்..... ஹ்ம்ம்ம்..." கழுத்தில் இருந்து அடிவயிறு வறை கைகளை உயர்த்தியவாறு அறை நிர்வாணமாக அந்த மெழுகு வத்தி வெளிச்சத்தில் வியர்வையுடன் அவன் முன் தான் படுத்திருப்பதை நீண்ட நேரம் கழித்து இப்போதுதான் தன் கண்களால் பார்க்கிறாள் சங்கீதா... அப்போது ஒரு நொடி பிடுங்கித் தின்னும் வெட்கத்தில் நெளிந்துகொண்டே தன் முகத்தை ராகவின் பார்வையில் இருந்து திருப்பிக்கொண்டு மென்மையாக சிரித்தவாறு கண்களை இருக்க மூடிக்கொண்டாள்...

ராகவின் உடல் உஷ்ணத்தில் வாயில் உள்ள வெண்ணை சில நொடிகளிளெல்லாம் உருகி இருந்தது..

கண்களை மூடி இருந்தவளுக்கு ராகவ் தன் pant பெல்டின் பக்கிள் நீக்கப்படும் சத்தம் கேட்டு ஒரு நொடி திரும்பிப் பார்த்தாள்....

ப்ரீஃப் அணிந்தபடி, கழட்டிய pantடை ஒரு ஓரமாய் விசிறி எறிந்துவிட்டு படுக்கையில் அவளின் மேல் இடுப்பருகே இருபுறமும் கால் போட்டு அவளின் திறந்த மார்பகங்கள் மீது மூடிய உதடுகளுடன் ஒரு பக்க மார்புக்காம்பின் மீது வாய் வைத்து லேசாக தன் உதடுகளை விரிக்க, உள்ளுக்குள் உருகி இருந்த வெண்னையின் மிதமான உஷ்ணத்தையும் அவைகள் தன் மார்பு காம்பின் நுனியில் இருந்து பக்க வாட்டிலும், இரு மார்புகளின் பிளவிலும், அடியில் உள்ள இடுக்கிலும் வழிந்தோடுவதை கண்களால் பார்த்து "ஹ்ஹாஹ்ஹா...ச்சீய்........ ஹேய் பொற்கி..........நல்ல ரசிகண்டா நீ.........என் செல்ல புருஷா......ஐ லஃவ் யூ டா.... ஐ லஃவ் யூ சோ மச்........ஈட் மீ டா..." என்று தன் கொழுத்த மார்பின் காம்புகளில் ராகவ் செய்யும் காம சேஷ்டைகளை ரசித்தபடி அவனை கொஞ்சினாள் சரா..

சங்கீதாவின் இரு மார்பகங்களின் மேல் ஏற்கனவே உள்ள வியர்வையும், உருகிய வெண்ணையும், ராகவின் எச்சிலும் கலந்து அபிஷேகம் செய்தது போல படர்ந்து இருக்க தன் முகத்தை அப்படியே இரு மார்புகளுக்கும் இடையில் புதைத்து தன் மூக்காலும், உதடுகளாலும், கழுத்துவறை மேல்நோக்கி அழுத்தி தேய்த்து ப்ச் ப்ச் ப்ச் ப்ச்.... என்று முத்தங்கள் பொழிந்து கழுத்தின் நடுவிலும், இரு முனைகளிலும் லேசாக கடித்தவாறு ப்ச் ப்ச் ப்ச் ப்ச் என்று முத்தங்கள் ராகவின் உதடுகளில் இருந்து சரமாரியாக விழுகையில் சங்கீதாவுக்கு சற்று அதிகமாகவே மூச்சு வாங்கியது.. காரணம் கழுத்தில் முத்தமிட்டால் அவளது உணர்ச்சிகள் தலைக்கேறும் என்பதை உணர்ந்துதான் அதை அதிகம் செய்தான் ராகவ்.. இப்போது சங்கீதாவின் மேல் முழுவதுமாய் படுத்திருந்தான்..

இதுவரை கைகளை மேலே வைத்து கண்ணை மூடியபடி இருந்தவள், இப்போது கண்ட்ரோல் இழந்து தன் இரு கைகளாலும் ராகவின் தலை முடியை இருக்கி பிடித்தாள்...."ஸ்ஸ்ஸ்....வாவ்... இட்ஸ் அமேசிங் டா.... ஹ்ம்ம்... ஹ்ஹ்ஹா.... ஐ லஃவ் யூ டா நாஸ்டி புருஷா.... ஹ்ம்ம்ம்...ஹ்ஹா." என்று சொல்லி மென்மையாக சிரித்தபடி தன் இரண்டு முழங்கால்களையும் அவன் மேல் கோர்த்து வைத்தபடி "ஜல் ஜல் ஜல்.." என்று சத்தம் எழுப்பினாள்.... 

அப்போது ராகவின் வயிற்றில் சங்கீதாவின் வயிறு ஓட்டி இருந்ததை இருவருக்கும் அங்கே உருவான அதீத உஷ்ணம் புரியவைத்தது....

இருவருக்கும் அங்கே படர்ந்து இருந்த வியர்வை அவர்களுடைய வயிறை ஓட்டி வைத்திருக்கயில் அவ்வபோது உடல் அசைவுகளால் ஒன்றி இருக்கும் அவர்களுடைய வயிறு பிரியும்போது சங்கீதாவின் தொப்புள் அருகே சிறிய அளவில் "ச்சப்...." என்று அவளின் தொப்புள் குழியில் அமுங்கி இருக்கும் சிறிய காற்று வெளியேறும்போது செக்ஸ்ஸியான சத்தம் குடுத்தது ராகவுக்கு..

சங்கீதாவின் இடைவிடாத முனகல் சத்தம் ராகவின் காதுகளுக்கு சூடான ஸ்வரங்களாய் அமைந்தது.. அதை ரசித்துக்கொண்டே சங்கீதாவின் கழுத்திலும், தோள்களிலும், மார்பின் மேற்பகுதியிலும் மாறி மாறி இடைவிடாது சில நிமிடங்கள் மூச்சிரைக்க ப்ச் ப்ச் ப்ச் ப்ச் என்று முத்தங்கள் குடுத்துக்கொண்டிருந்தான் ராகவ்....

இரு தோள்களிலும், கழுத்துக்கு நடுவிலும், மார்பின் மேற்புற கொழுத்த மிருதுவான சருமத்திலும், மார்புக்கு நடுவிலும், விறைத்து நிற்கும் காம்புகளின் மீதும் தன் முகத்தை வைத்து சற்று அழுத்தி தடவியவாறு "ப்ச்.... ப்ச்.... ப்ச்...." என்று முத்தங்கள் குடுக்கையில்.... "திஸ் இஸ் க்ரேட் டா.....ஹ்ம்ம்ம்...." என்று முனகிக்கொண்டே அவனது மீசை முடியின் மென்மையான உறசல்களை கண்கள் மூடி அவன் தலை முடியை இருக்கி பிடித்து ரசித்தாள்....

ராகவின் முத்தங்களுக்கு ஏற்ப மெத்தை மீது சங்கீதாவின் தோள்கள் "ஸ்ஸ்ஸ்ஹ்ஹ்ஹாஅஅ...." என்று முனகிக்கொண்டே நளினமான அசைவுகளை குடுத்தது.... அப்போது ஒரு நிமிடம் சங்கீதாவின் முகத்தைப் பார்த்தான் ராகவ்.... நெத்தியின் மீதும், படுக்கையிலும் படர்ந்து இருந்த கூந்தலும், இரு புருவங்களுக்கு இடையில் வியர்வையோடு களைந்து ஒழுகும் குங்குமமும், உதட்டின் ஓரத்தில் உள்ள மச்சமும், வாயில் இருந்து கழுத்தின் அடிபாகம் வறை வழியும் வியர்வைத் துளிகளும், தோள்களின் மீது உள்ள வியர்வையில் ஓட்டி இருக்கும் கூந்தலின் முடியையும் மெழுகு வத்தியின் மஞ்சள் வெளிச்சத்தில் பார்க்கும்போது ராகவுக்கு முகம் சிவக்கும் விதம் உடல் முழுதும் ரத்த ஓட்டம் அதிகரித்தது.. சங்கீதா அவன் பார்க்கும் பார்வையிலேயே தன்னை அணுஅணுவாய் பிச்சி தின்னுவதை உணர்ந்தாள்..

என்ன ஆனதோ தெரியவில்லை, கழுத்தில் இருந்து கொழுத்த மார்புகளையும், அதன் பிளவுகளையும், ஈரத்தில் பளபளக்கும் காம்புகளையும் பார்த்தவனுக்கு ஆழ் மனதில் இருந்து ஒரு வெறி கிளம்பியது.... சடாரென அவளின் நெஞ்சில் முகத்தை ஏகத்துக்கும் அழுத்தி ப்ச் ப்ச் ப்ச் என்று முத்தம் குடுத்துக்கொண்டே மார்புகளுக்கு மேல் இடமிருந்து வளமும், பின் வடதிலிருந்து இடதுபுறமும், மாறி மாறி வேகமாய் தன் முகத்தை தேய்த்து இரு மார்புகளையும் தன் இரு கைகளால் அழுத்தி தூக்கி வைத்து அதன் அடியில் உள்ள இடுக்குகளில் முத்தங்கள் குடுத்து அடிபாகத்தில் மச்சம் உள்ள இடத்தை தன் வாயில் கவ்வி இழுத்து ச்சப்பி விளையாடி மேர்ப்புரம் காம்பை தன் உதடுகளால் ஏகத்துக்கும் அழுத்தி உரிந்தபடி ச்சப்பி இழுக்கையில் ஏற்கனவே படர்ந்த வென்னையால் அவனது உதடுகளில் இருந்து சங்கீதாவின் மார்க்காம்புகள் வழுக்கிக்கொண்டு "ச்சப்... ச்சப்..."என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது... ராகவும் விடாமல் "என் வாயா இல்ல அந்த காம்பா" என்று போட்டிப்போட்டுக் கொண்டு மீண்டும் மீண்டும் உறிந்தான்.... அப்போது வழுக்கிக்கொண்டு விழும் காம்பின் நுனியை தன் பற்களால் சற்று அழுத்தி கடிக்கையில்...

"ஸ்ஆஹ்...." என்ற சிறிய சத்தத்துடன், "கிளிங்....கிளிங்...." என்று வளயலால் சத்தம் குடுத்தாள் சங்கீதா...

ராகவ் ஒரு நொடி அவளைப் பார்த்தான்...

"பிடிக்கலையா?.." - குழப்பமான கேள்வியில் கேட்டான்..

"ஜல் ஜல்..." - கால்களால் மெதுவாக ஓசை எழுப்பினாள்..

"ஹ்ம்ம்.. பிடிச்சிருக்கு.. ஆனா..." - ராகவ் சீரியஸாக யோசித்தான்..


"ஹாஹ்ஹா ...." - மென்மையாக சிரித்துக்கொண்டே அவன் கன்னத்தை தன் உள்ளங்கையால் தடவி அவன் யோசிக்கும் அழகை ரசித்தாள் சங்கீதா..

"ஆங்.. கண்டு பிடிச்சிட்டேன்..."

"கிளிங்....கிளிங்...." என்று வளயலால் சத்தம் குடுத்து, புருவங்கள் உயர்த்தி மென்மையாக சிரித்தவாறு கேள்வி எழுப்பினாள் சங்கீதா..

அது வந்து.... பிடிச்சிருக்கு... ஆனா உனக்கு நான் கடிச்சது கொஞ்சமா வலிக்குது... கரெக்ட்டா?....

நல்லாவே கடிச்சிட்டு அவன் "கொஞ்சம் என்று கண்கள் இருக்கி சொன்ன விதத்தை ரசித்து சிரித்துக்கொண்டே "ஜல் ஜல் ஜல்" என்று அவன் மீது பாதங்களை தட்டி சத்தம் எழுப்பினாள் சரா..

அவள் சிரித்துக்கொண்டே கொலுசில் குடுத்த ஜல் ஜல் சத்தம் கேட்டு மீண்டும் அவளது கொழுத்த மார்பின் மீது முகம் வைத்து அழுத்தி அதிகம் கடிக்காமல் மென்மையாக அவளது மார்புகளின் காம்பின் ஸ்பரிசத்தை சற்றும் சலிக்காமல் மாற்றி மாற்றி தன் உதடுகளால் கவ்வி நாவினில் ரசித்து "ச்சப்.... ச்சப்...." என்று மெலிதாய் சத்தம் வரும் விதம் ச்சப்பி ரசிக்கையில் அவளுடைய வியர்வையும் வெண்ணையும் கலந்த சுவையை தன் நாவினில் உணர்ந்தான் ராகவ்......

அப்படியே நெஞ்சின் அடியில் ஆரம்பித்து மெல்ல மெல்ல கீழே பயணித்து தன் ஈர நாவினால் மிதமாக தேய்த்து பறந்து விரிந்த அகலமான இடுப்பின் நடுவே உள்ள மென்மையான சதைப் பிரதேசத்தின் மீது "ப்ச் ப்ச் ப்ச் ப்ச்" என்று மிருதுவாக மீசை குத்த முத்தமிட்டான்....